கள்ளர் வரலாற்று திறவு கோல் தேடு தளம்
அலை அலையாய்ச் சோதனைகள் அடுக்கிவரும் வேளையிலும்
மலையெனவே நின்றெதிர்க்கும் மாண்பு கொண்ட கள்ளரினமே! பாராண்ட பரம்பரையில் திறங்கொண்டு போர் கண்டு தெள்ளுதமிழ் இசைபாடி மறங்கொண்ட இனமே! பாய்ந்துவரும் புலியும், நீந்தி வரும் மீனும் சீறி வரும் வில்லும் எமதே என பெருமை கொண்ட இனமே! சிந்தனையில் உமையேந்தி நாள்தோறும் நினைவில் கொள்வேம்!. முக்குலத்தின் தாய்க்குலம் முதிர்ந்த கள்ளரினமே! நம்மவர் நலம்பேண அகிலமெல்லாம் அமைத்திடுவேம் ஓர் பேரவை அகில உலக கள்ளர் பேரவை என பெயரும் வைத்திடுவோம் உறங்கிடும் நம் இனத்தை உசுப்புவதே அதன் வேலை எங்கெல்லாம் பரவி நிற்கும் நம் இனத்தை ஒருங்கினைத்து செயலாற்ற வைத்திடுவோம்! மீட்டெப்போம் நம் பெருமைதனை கூடுங்கள், இனமக்களை கூட்டுங்கள் குலப் பெருமையயை காத்திடுவேம் பாரரண்ட பரம்பரை அடிமைப்படலாமா! அஞ்சுவதென்பதே அறியாத நம்மினம்! நெஞ்சம் நிமிர்த்தி வீறுநடை போட்டிடுவேம்! அன்று சீர்பெற்ற சமுதாயம் இன்றுபடும் துயர் போக்கிட உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கிறது அகில உலக கள்ளர் பேரவை வாருங்கள் வளமாய் வாழ்ந்து வளர்ந்திட வழிகள் பல அமைத்திடுவோம் தேடுங்கள், தேடிக்கொண்டே இருங்கள், தேடுவேம், தேடிக்கொண்டே இருப்போம், நிச்சியமாக ஒருநாள் நம்மில் பலர் காய்சின வழுதியாகவும், பெருவழுதியாகவும், வானவரம்பனாகவும், செங்குட்டுவனாகவும், பெருவளர்த்தான் கம்பீர கரிகாலனாகவும், ராசராச சோழனாகவும், ராஜேந்திர சோழனாகவும் உருவெடுப்பார்கள். முன்னாள் இந்’நாள் ஆவதும் இந்’நாள் முன்னாள் ஆவதும் வரலாறு நிகழ்த்தும் விந்தைகளில் இதுவும் ஒன்று இல்லையெனில் சரித்திரம் திரும்பும் என்ற மெய்யுரையும் பொய்த்து விடும். உலகெலாம் பரவிக் கிடக்கும் கள்ளர்களை ஒருங்கினைத்து கள்ளர் குல பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றும் ஒரு பெரு முயற்சியில் 3/08/2009 முதல் அகில உலக கள்ளர் பேரவை இயங்கி வருகிறது. உலககின் மூத்த இனமும் முதல் இனமும் கள்ளர் இனமே. இதனை போல் வரலாற்றை முறைப்படி எழுதி பதிவு செய்து வைக்காத இனங்களுள் முதல் இனமும் நம் கள்ளர் இனமே. தந்தையும், தனயனும், வம்சவாரிசுகளும் தந்து சென்ற தளர்விலா இனமானத்தையும், எம் குல பட்டங்களையும் வந்தனை செய்து வணங்கிப் போற்றி வையகமே வியந்து வாழ்த்தும் நாள் மிக அருகில் வரவேண்டும். நம்குலத்தை மலடாக்கத் துடிக்கும் தீயசக்திகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள விழிப்புணர்வு பெற்ற கள்ளர் குல பெருங்கடல் இயக்கம் ஒன்று உருவாக வேண்டும். கள்ளர் குல வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை. புதினமோ புராணமோ இல்லை அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு உண்மை சம்பவங்களின் வரைபடம் கள்ளர் இனம் பழம் பெருமை பேசுவதென்பதும், கள்ளர் பழமையைப் போற்றுவதென்பதும், கள்ளர் இன பரம்பரை புகழைப் பாராட்டிப் பறப்புவதென்பதும் கள்ளர் குல பண்பாடு, அது ஒரு கலாச்சாரம், அது ஒரு வரலாற்று பெருமை. பழம் பெருமை பேசாத கள்ளர் எவரும் தன் மூத்தோர், முன்னொர் புகழ் பாடாத கள்ளர் எவரும் தன்னைப் பற்றி கள்ளர் இனம் பெருமையாக பேசும்படியான எந்தச் செயலையும் செய்து விட முடியாது. நாம் செழுமை மிக்க பாரம்பரிய பண்பாடுகளை கொண்ட வலிமை மிக்க உயிர்துடிப்புள்ள ஒரு குலத்தின் சொந்தக்காரர்கள். நம் குலத்திற்கு புதிய வலிமை தேடவோ, புதிய இலக்கணம் படைக்கவோ, செறிவைக் கூட்டவோ முயலவில்லை. எம் முயற்சி எல்லாம் எம் குலத்தின் தொன்மையை ஆராய்ந்து அதன் வயதையும் கணித்து எம் முன்னோர்களுடைய செழுமை மிகு எண்ணங்களை எடுத்துறைக்க வேண்டுமென்பதே. கள்ளர் குலம் பற்றி நடக்கும் ஆய்வுகளையும் முடிவுகளையும் நம் குல வளர்ச்சிக்கு மட்டுமே பயன் படுத்தி உயர்வோம். ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும். தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான். கள்ளர் குல மக்களுக்கு கள்ளர் இன பெருமைகளைஅடிக்கடி நினைவு படுத்த வேண்டி இருக்கிறது. கள்ளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடுவோம் கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள். கள்ளர் இனமே தயங்காதே, மயங்காதே. அனைத்தும் முடியும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்து. தீர்வு காணத் தெரியாதவர்கள் தீர்ப்பு கோரி புலம்பாதீர்கள். தீர்வு காணும் முயற்சிகளின் எண்ணிக்கயை அதிகமாக்குங்கள். முயற்சிகளின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. முயற்சி தான் தன்மானத்தின் உச்ச நிலை என்பதனை நீங்கள் உணரும்போது தீர்வு தானாக உங்களை நாடி வரும். இல்லை எனில், அநியாயமாக ஒருவரை நீதிபதி ஆக்கிவிட்ட அவமானம் உங்களைக் குடையும். உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ? உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ? உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ? விடை கண்டு உயர்வு அடையுங்கள். கள்ளர் குல பன்னாட்டு அறிஞர்கள் தங்களது ஆய்வுகளைப் பதிவு செய்யவும், படைப்புகளையும், தெரிந்தவை மற்றும் அறிந்த குல செய்திகளையும் பதிவு செய்ய களம் ஒதுக்கித் தர வேண்டிய கடமையும் சர்வ தேச பேரவைக்கு உண்டு. நம் முன்ணோர்கள் ஊட்டிய இனமான உணர்வும், பண்பாடு, கலைகாக்கும் உணர்வுகளுடன் திடமான துரித நடவடிக்கை மற்றும் திடமான செயல்பாட்டை நோக்கி நடை பயிளுங்கள். ஆரோக்யமான கள்ளர் சமுதாய வளர்ச்சி உங்கள் கைகளில் என்பதனை கவனியுங்கள். ஆண்ட பரம்பரை அடிமைப் படலாமா? வந்த பாதையை நாம் மறந்து விட்டால் போகும் பாதை நமக்கு புரியாமல் போய்விடும். கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள். இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவோம். வாருங்கள்! வரலாறு நடந்த வழியில் ஓர் ஆர்வமுள்ள வழிப்போக்கனாக நடக்கமுயன்றுள்ளேன். நான் நடந்த வழித்தடத்தில் என்னால் முடிந்தளவு தேடியுள்ளேன், தேடிக்கொண்டிருக்கிறேன், தேடிக்கொண்டே இருப்பேன். சில பதிவுகள் தப்பாகவும் ஆதாரமற்றவையாகவும் சிலருக்கு தெரியலாம். திருத்திக்கொள்ள ஆதாரங்களுடன் உதவுங்கள். சொந்தங்களே கள்ளர் வரலாறு பற்றிய ஆர்வம் உங்களுக்கும் இருக்குமானால் களத்துக்கு வாருங்கள். உங்கள் கண்களால் தேடப்படும் வரலாறும், கைகளால் எழுதப்படும் வரலாறும் தான் தலைமுறைகளை அடையாலப்படுத்தும். தங்கள் தேடல்களின் முடிவுகளையும் தாங்கள் அறிந்தவை, கேட்டவை, தெரிந்தவைகளையும் அகில உலக கள்ளர் பேரவையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கள்ளர் குல வரலாற்றுக்கு இவை பெரிதும் உதவிடும் நன்றி. சிரமேற்குடி ராஜகண்டியர் ஜெயராம். அகில உலக கள்ளர் பேரவை. கெவின் கார்டன். லண்டன், இங்கிலாந்து தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - [email protected] |
|