Additional Information
கள்ளர், மறவார் கனத்த அகமுடையோர்,
மெல்ல மெல்ல வள்ளளானார்
என்பது இன்று
கள்ளர், மறவர் கணத்த அகம்படியர்,
மெல்ல மெல்ல வெள்ளாளரானார்
என்று கூறப்படுகிறது
கள்ளர் பட்டங்களும் ஊர் பெயர்களும்
ஆய்குடி
ஆரமுண்டான்பட்டி
உலகங்காத்தான்
உலகங்காத்தான்பட்டி
ஓமாம்புலியூர்
ஓசையன்பட்டி
ஏத்தொண்டான்பட்டி
பட்டுக்கோட்டை
பட்டு மழவராயர் என்ற குறுநில மன்னர்கள் கட்டிய கோட்டைகள் பல இடங்களில் உள்ளதால் பட்டுக்கோட்டை எனற பெயரினை பெற்றது.
பத்தாளன்கோட்டை
பல்லவராயன்பேட்டை
பாப்பரையன்பட்டி
பாலாண்டான்பட்டி
பாண்டுராயன்பட்டி
பொய்யுண்டார் கோட்டை
பொய்யுண்டார் குடிகாடு
கச்சிராயன்
கச்சியராயன்மங்கலம் (கச்சமங்கலம்)
கலியராயன்பட்டி
கங்கைகொண்டான்
கண்டர்கோட்டை
கண்டியங்காடு
கண்டியூர்
கண்டியன்பட்டி
கரமுண்டான் கோட்டை
கல்விராயன்பட்டி
காடவராயன்பட்டி
காடுவெட்டி விடுதி
காங்கேயன்பட்டி
காளிங்கராயன் ஓடை
கொங்கராயநல்லூர்
கோனெரிராஜபுரம்
மழவராய நல்லூர்
மலைராயன்பட்டி
மழவன் கோட்டை
மழவந்தாங்கல்
மழ்வராயணேந்தல்
மழவராயனத்தம்
மழவங்க்ரனை
மணவாளநல்லூர்
மணவாளம்பேட்டை
மாதைராயன்பட்டி
முத்துவீரக்கண்டியன்பட்டி
நல்லவன்னியன் குடிகாடு
நரங்கியன்பட்டி
நாய்க்கர்பாளைம் (சாவடி நாயக்கர் கிராமம்)
திராணிபட்டி
துண்டுராயன்பட்டி
துரையுண்டார் கோட்டை
தென்கொண்டானிருப்பு
தேவர்கண்டநல்லூர்
தொண்டைமான்பட்டி
தொண்டைமான்நல்லூர்
தொண்டைமானூர்
தொண்டைமாந்துளசி
தொண்டைமானந்தம்
தொண்டைமான் ஏந்தல்
தொண்டைமாங்கணம்
தொண்டைமாங்குலம்
தொண்டைமான்
சாதகன்பட்டி
சாளுவன்பேட்டை
சாணூரன்பட்டி
சாலுவன்பேட்டை
சுரக்குடிப்பட்டி (சுரக்குடியார் பட்டி)
செம்பியன்களர்
செம்பியன்மாதேவி
செம்பின் மணக்குடி
சேர்வைக்கட்டளை
சேர்வைக்காரங்கட்டளை
சேதிராயன்குடிகாடு
சேதுவராயகுப்பம்
சேதுவராயன் ஏந்தல்
சேதிராயன்பட்டி
சேதுராயபுதூர்
சேதுராயநத்தம்
சோழகன்பட்டி
வன்னியன்பட்டி
வல்லாண்டான்பட்டி
வாலியன்பட்டி
வாணராயன்பட்டினம்
வாண்டையாரிருப்பு
வில்லவராயன்பட்டி
வெங்கராயனுக்கடை
ராயமுண்டான்பட்டி
கள்ளர்கள் தொன்று தொட்டு ஆட்சி நடாத்தி வந்த வகுப்பினர் என்பதை எவரும் மறுத்தற்கில்லை. இற்றைக்கும் இவ்வகுப்பினரில் ஒரே தமிழ் வேந்தராகிய புதுக்கோட்டை மன்னர் அரசாண்டு வருகின்றனர். ஜமீன்தாரும், பெருநிலக்காரரும் மிகுதியாக இருக்கின்றனர். சென்னை அரசாங்கத்தினரால் ஏற்படுத்தப் பெற்றுள்ள ஓர்சட்டத்திலிருந்தே இவ்வுண்மை அறியலாகும். சென்னை இராஜதானியைச் சேர்ந்த ஜமீன் நிலங்களைக் கூடியவரையில் பாதுகாக்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் சென்னை அரசாங்கத்தினரால் 1903-ஆம் வருடத்தில் ஓர் சட்டம் இயற்றப்பட்டது. இக்கொள்கையை நிலை நறுத்துதற்காகப் பின்பு சென்னபட்டினத்து 1903-ஆம் வருடத்து4-வது மசோதா சட்டமும் தோன்றிற்று. இச்சட்டத்தின் பெயர் ‘பங்கிடக்கூடாத நிலச் சொத்துக்களைக் குறித்த சென்னபட்டினம் 1903-ஆம் வருடத்து மசோதா சட்டம்’ (The Madras Impartible Estates Bill, 1903) என்பது. இதன் எல்லைக்குள் (ஷெடியூலுக்குள்) அகப்பட்ட ஜமீன்களில் தஞ்சையில் உள்ளவை: கண்டர்கோட்டை, கல்லாக்கோட்டை, கோனூர், சில்லத்தூர், பாலையவனம், பாப்பாநாடு, சிங்கவனம், மதுக்கூர், நெடுவாசல், சேந்தங்குடி, அத்திவெட்டி என்னும் பதினொன்றுமாம். இவற்றுள் கோனூர், அத்திவெட்டி என்னும் இரண்டு தவிர மற்றையவெல்லாம் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவை. அவ்விரண்டுங்கூட ஆதியில்கள்ளர் ஜமீன்களைச் சேர்ந்திருந்தனவே. மற்றும் பாளையக் காரர்களைப்போன்றோ சிறிது ஏற்றத் தாழ்வாகவோ செல்லமும், செல்வாக்குமுடையோர் பலர் இவ்வகுப்பில் இருந்திருக்கின்றனர். இவ்வகுப்பினைக்குறித்துஎழுதினோர் யாரும் இவைகளைச் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை. இக்காரணத்தாலேயே கள்ளர் சரித்திரம் என்னம் இவ்வுரை நூல் எழுதுமாறு நேர்ந்தது.
இதனைப் படிக்கும் அறிஞர்கள் சில கற்பனைக் கதைபோலன்றி உண்மையாராச்சியுடன் கூடிய சரித்திரமாக எழுதுதற்குப்பொரிதும் முயன்றுளேன் என்பதனையும், ஒருவகுப்பினைப் பெருமைப் படுத்துதற்காக ஏனை வகுப்புக்களை இழித்துரைக்கும் குறுகிய மனப்பான்மையடையாரக்கு இஃது அறிவு கொள்ளத்தக் உடையதாம் என்பதனயும் இதிலுள்ள செய்திகள் பெரும்பாலனவும் தமிழ் மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டியனவாம். தமிழ் நாட்டின் வரலாற்றில இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகளை இந்நூலின் ஐந்தாம் அதிகாரத்திற் காணலாகும்
பேராசிரியர் பி. விருத்தாசலம் 1940 -2010
தன் வரலாற்றுக் குறிப்புகள்.
தென்காவேரி என்பது என்னை ஈன்று புறந்தந்த தாயின் பெயர். பொ.பிச்சையா நாட்டார் என்னைச் சான்றோன் ஆக்கிய என் தந்தையின் பெயர். என் பிறந்தநாள் 22-05-1940. ஆனாலும் நான் நான்கு வயதுச் சிறுவனாக இருந்த போது என் அண்ணன் பள்ளிக்கூடம் போவதைப் பார்த்து நானும் பள்ளிக்கூடம் போவேன் என்று அடம்பிடித்து, நடுத்தெருவில், புழுதிமண்ணில் கிடந்து புரண்டு அழுது, ஆர்ப்பாட்டம் செய்த என் தொல்லை பொறுக்கமாட்டாமல், என் தாய் எனக்கு போட்டுவிடக் கால்சட்டையோ மேல் சட்டையோ இல்லாத நிலையில், என் தந்தையின் துண்டு ஒன்றை இடுப்பில் சுற்றிவிட்டு என்னைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்.
எப்படியோ காலம் விரைந்து ப்றந்தோடி விட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள என் பிறந்த ஊரான மேலத்திருப்பூந்துருத்தியில் எட்டாம் வகுப்புவரை படித்துத் தேர்ச்சிபெற்றேன். திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப்பள்ளி, பூண்டி திரு புட்பம் கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து படித்தேன். தமிழில் வித்துவான் பட்டம் பெற்றேன். சென்னையில் தமிழாசிரியராக பணிபுரிந்துகொண்டே தனியாகப் படித்து பி.ஏ. பட்டம் பெற்றேன். கரந்தைப் புலவர் கல்லுரியில் 25-06-1969 இல் பணியில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டே தனியாகப் படித்துத் தேர்வெழுதி எம்.ஏ பட்டம் பெற்றேன். இது படித்துப் பட்டம் பெற்ற வரலாறு.
என் ஊனிலும் உயிரிலும் கலந்து என்னை இயக்கி வரும் இலக்கிய வரிகள்
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
2. பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
3. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக
4. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
5. அறிவை விரிவு செய்; அகண்டம் ஆக்கு. விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
இனியும் என் தொண்டுகள் தொடரும்
நாடுவாழ நான் வாழ்வேன்
பி. விருத்தாசலம்
தங்கச் சாலையில் உள்ள தொண்டை மண்டல துளுவ வேளாளர் மேனிலைப் பள்ளியிலும், சென்னைப் பெரம்பூரில் உள்ள சமாலியா மேல்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்தவர்.
தஞ்சையருகே உள்ள கரந்தையில் உள்ள உமாமகேசுவரனார் கலைக்கல்லூரியில் 28 ஆண்டுகள் பணிபுரிந்தவர். இதில் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்து பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். எளிய நிலையில் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் உணர்வு செறிந்த மாணவர்களுக்கும் இவர் தந்தையராகவும் காப்பாளராகவும் இருந்து உதவியவர்.
சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஆட்சிக்குழு, கல்விக்குழு உறுப்பினராக இருந்து பணிபுரிந்தவர். இங்கெல்லாம் தமிழுக்கு ஆக்கமான நிலையில் குரல்கொடுத்தவர்.
தமிழகத்துக் கல்லூரிகள் பலவும் பிலிட் என்னும் இளங்கலைத் தமிழ் இலக்கிய வகுப்புகளில் ஆங்கிலப் பாடம் இணைத்துப் பயிற்றுவிக்கத் துணிந்தபொழுது தஞ்சாவூரில் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியை உருவாக்கிப் பல்லாயிரம் மாணவர்கள் தமிழ் பயில வாய்ப்பமைத்தவர்.
சிலப்பதிகாரத்திலும் பாவேந்தர் படைப்புகளிலும் பழந்தமிழ் நூல்களிலும் பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.
'கெடல் எங்கே தமிழின் நலம்,அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க'.
என்னும் பாடல் அடிகளுக்கேற்ப வாழ்ந்து வந்தவர் பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள்.
தனித்தமிழ் மீது பற்றுக்கொண்ட இவர் தமிழியக்கம் தழைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு நிறைவேற்றியுள்ளார்கள். குறிப்பாக, சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராக இருந்தபோது சென்னைப் பல்கலைக்கழக அடையாளச் சின்னத்தில் இருந்த
"DOCTRINA VIM PROMOVET INSITAM"
என்னும் குறிக்கோள் மொழியைத் தமிழில் மாற்ற வேண்டுமென 8.11.1976, 30.3. 1977, 30.11.1977
ஆகிய நாள்களில் நடைபெற்ற மூன்று பேரவைக் கூட்டங்களில் தீர்மானங்கள் தந்து போராடியதன் விளைவாக சென்னைப் பல்கலைக்கழ அடையாளச் சின்னத்தில்
கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும்
என மாற்றியதையும்,சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பெறும் பட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் வழங்கப்பெற்றதை, தமிழிலும் வழங்க வேண்டும் கூறி மாற்றியதையும் கூறலாம்.
தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தின் அருகில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி என்னும் சிற்றூரில்
திருவாட்டி தென்காவேரியம்மையாருக்கும்,திருவாளர் பொ.பிச்சை நாட்டார் என்பாருக்கும்அருமை மகவாய் 22-5-1940-இல் தோன்றினார்.
இவர் திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப் பள்ளி,பூண்டி திரு.புட்பம் கல்லூரி,திருவையாறு அரசர் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்களில் பயின்று,தங்கசாலையில் உள்ள தொண்ட மண்டல துளுவ வேளாளர் மேனிலைப் பள்ளியிலும், சென்னை பெரம்பூரில் உள்ள சமாலியா மேனிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்து,பின்பு தஞ்சையருகே யுள்ள உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில் 28 ஆண்டுகளில் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்து பணிபுரிந்து சிறப்பித்துள்ளார்கள்.
பேராசிரியராக இருந்த காலத்து மாணக்கருக்கு பாடம் சொல்லும் திறம் அனைவனரும் விரும்பத்தக்கதாக இருந்தது தெளிவான குரல்,ஆழமான கருத்து,ஓசை நயத்த்தோடு செய்யுளை எடுத்துரைக்கும் முறை,பழம்
நூல்களின் தோய்வு காரணமாக பல மேற்கோள்கள்,நகைச்சுவையோடு கூடிய உலகியல் பார்வை, சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த அகன்ற நுட்பமான பார்வை உடையதால் இசையோடும் நயத்தோடும் விளக்கும் திறன் என இவருடைய கற்பிக்கும் முறையால் தமிழ் வகுப்புக்கள் மாணவர்களால் பெரிதும் விரும்பப் பெற்றன.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1976,1977,1978 ஆகிய மூன்று ஆண்டுகள் பேரவை(senate) உறுப்பினராகவும்,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1982 முதல் பேரவை உறுப்பின்னராகவும்,ஆட்சிகுழு உறுப்பினராகவும் (syndicate) கல்விப் பேரவையிலும்(standing committee for Academic affair)
பாடத்திட்டக் குழுக்களிலும், பல்கலைக்கழகத் திட்ட குழுக்களிலும் உறுப்பினராக இருந்து தமிழியக்கம் தழைக்க பல தீர்மானங்கள் கொண்டு வந்து அதில் 120 தீர்மானங்களை நிறைவேற்றி சிறப்பாக செயலாற்றியுள்ளார்கள்.
நாவலர் ந.மு. வேங்கடசாமி ஐயா அவர்கள் தமிழகத்து மாந்தரனைவரும் தாய்மொழி வழி
ஒரு தலையாகக் கல்வி கற்று மேன்மையனைய வேண்டும் என்ற விருப்பினால் 1921 ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் திருகாட்டுப்பள்ளிக்கு அருகே திருவருள் கல்லூரி ஒன்று நிறுவக் கருதி , அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அம் முயற்சியைப் பாராட்டி தந்தை பெரியார் நன்கொடையாக உரூபா
ஐம்பது தந்துள்ளார் என்பது குறிப்பிடப்பக்கது. ஆனால் இம் முயற்சி வெற்றி பெறவில்லை.
பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள் பணி ஓய்வு பெற்ற பின்பு ந.மு.வே.ஐயாவினுடைய
எண்ணத்தை நிறைவேற்றும் வகையில்,தஞ்சையருகே வெண்ணாற்றங்கரை கபிலர் நகரில் இயற்கை சூழலோடு கூடிய இடத்தில் 14-10-1992 ஆம் ஆண்டு திருவருள் கல்லூரி என்னும் பெயருடன் நாட்டாரையா அவர்களுடைய பெயரையும் இணைத்து ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் புலவர் கல்லூரி நிறுவி மேலாண்மை அறங்காவலராக இருந்து சிறப்புடன் வழிநடத்தி வந்துள்ளார்
பேராசிரியர் பி. விருத்தாசலம் தனது இறுதி மூச்சு வரை தமிழுக்காகவும், தமிழின அவலத்தைப் போக்கவும் போராடியவர். இன உணர்வாளர், தமிழ்ப் பண்பாளர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தனித் தமிழ்ப் புலவர் படிப்பை கடந்த 19 ஆண்டுகளாக நடத்தி வந்தவர். தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். தமிழ் வழிக் கல்விக்காகப் பல மாநாடுகள் நடத்தியவர். தமிழக அரசு உருவாக்கியுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவையில், இந்திய தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உறுப்பினராக பணிபுரிந்தார். .
.
மாணவப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது பற்றுக் கொண்டிருந்தார். புகழ்பெற்ற கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராக 28 ஆண்டுகள் அவர் பணிபுரிந்தபோது ஆயிரக்கணக்கில் உணர்வுள்ள தமிழாசிரியர்களை உருவாக்கினார். 1982 முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேரவை ஆட்சிக் குழு, பாடத் திட்டக் குழுக்களில் இடம்பெற்று பல அரிய பணிகள் செய்தார்.
தமிழ், தமிழர் எழுச்சிக்காக “என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்' என்ற நூலை வெளியிட்டார். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்தியவர். இவரின் படைப்புக்கள் தமிழ் மண் பதிப்பகம் மூலம் 26 தொகுதிகளாக வந்துள்ளது. உலக நாடுகள் மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் சங்க இலக்கியம் பற்றி ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார்.
இவரது தமிழ் வாழ்வைப் போற்றி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினை வழங்கிக் கௌரவித்தது. இவரது தமிழ்ச் சேவையைப் போற்றி 2009ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற சதய திருவிழாவில் இராசராசன் விருது வழங்கப்பட்டது.
தமிழின் உயர்விற்காக, தமிழனின் உயர்ந்த வாழ்வுக்காக, தமிழ் வழிக் கல்விக்காக, தமிழ் படித்தோர் வேலைவாய்ப்புக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.
பேராசிரியர் பி. விருத்தாசலம் அவர்கள் தனது இறுதி மூச்சு வரை தமிழுக்காகவும், தமிழருக்காகவும் அயராது போராடியவர் ஆவார். தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவராகப் பணியாற்றி தமிழ் வழிக் கல்விக்காக பல மாநாடுகளை நடத்தியவர்.
1982ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு, பேரவை, பாடத்திட்டக் குழுக்களில் இடம்பெற்று அரிய தொண்டுகள் பல செய்தார். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார். உலக நாடுகள் மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் சங்க இலக்கியம் குறித்து சிறப்பான ஆய்வுரைகள் நிகழ்த்தியுள்ளார்.
இவரது தமிழ்த்தொண்டினைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினை வழங்கியது. இவரின் தமிழ்ப் பணியைப் போற்றி 2009 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற சதயத் திருவிழாவில் இராசராசன் விருது வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு சனவரியில் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட்டின் போது இவருக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டது.
வாழ்நாள் முழுவதிலும் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது கடமையாகக் கொண்டு வாழ்ந்த உலகப் பெருந்தமிழர் பி. விருத்தாசலனார்
பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே என்ற தமிழ்ப் பாட்டன் கணியன் பூங்குன்றனாரின் வரிகளை மேடை தோறும் முலங்கிய பெருமையும் ஐயா விருத்தாசல நாட்டாரையே சாரும். தான் அமைத்த திருவருள் கல்லூரியில் கபிலர் இலக்கிய கழகம்,இமயவரம்பன் உடற்பயிற்சிக்கழகம் என வளாகத்தில் தமிழ் மணம் கொஞ்சுவதுடன் கல்லூரி அமைவிடத்தையும் கபிலர் நகர் என்றே பெயரும் இட்டு உயர்வுஸ் சிறப்பும் பெற்றார். இன்றளவும் நாட்டார் கல்லூரி வளாகம் த்மிழுணர்வாளர்கள் சங்கமிக்கும் வேடந்தாங்கலாகவே திகழ்கிறது. இக்கல்லூரியின் வகுப்பறைகளில் இலக்கணம் வழுவா இலக்கியம் கற்பிப்பதோடு கெடல் எங்கே த்மிழன் நலம் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க என தமிழ் போராட்ட உணர்வுகளையும் ஊட்டியுள்ளார்.
வெண்ணாற்றங்கரையிலமைந்துள்ள நாவலர் நாட்டார் கல்லூரி உலகப்புகழ் எய்த வேண்டும். இத்தகு தமிழ் ஆர்வலர், உணர்வாளர், சாதனையாளர் தொடங்கிய இக்கல்லூரி நின்று நிலைத்து வளர்ந்து வாகை சூடிட நம்மால் முடிந்தனைத்தும் செய்திடல் கள்ளர்களின் நம் கடமையாகும்.
பேராசிரியர் பி.விருத்தாசலனார் நூல்கள்
சான்றோர் சிந்தனைகள்
காவிரிக்கரை வேங்கடம்
தமிழ்வேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டாரையாவும்
கண்ணகி சிலம்பீந்த காரணம்
மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும்
என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்
சிந்தனைச் சுடர்
வில்வையா சாம்பசிவம் மன்னையார் 1880 - 1953
மருத்துவ அகராதி என்ற கலைக்களஞ்சியத்தைத் தனியொருவராக உருவாக்கிக் காட்டிய சாம்பசிவம் மன்னையாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிய முடியவில்லை. இன்று கிடைக்கப்பெறும் குறைந்த அளவு தகவல்களுக்கும் நாம் அவருடைய தம்பி மகனாகிய திரு அ. ராஜபூஷணம் மன்னையார் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம்.
ஒரு பெரும் மருத்துவக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கக்கூடிய திறனையும் ஆற்றலையும் உழைப்பையும் வெளிக்காட்டாத சராசரியான வாழ்க்கையினையே சாம்பசிவம் மன்னையாரின் வரலாறு காட்டுகிறது.
சாம்பசிவ மன்னையாரின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள கம்மந்தங்குடி ஆகும். ஆயினும் இவர் பிறந்தது பெங்களூரில் (1880இல்). இவருடைய தாயார் மனோன்மணி அம்மாள்; தந்தையார் வில்வையா மன்னையார். இவர் படித்ததும் பெங்களூரில். பள்ளி இறுதிக்கு மேல் இவர் படிப்புச் செல்லவில்லை. 1899இல் பெங்களூரில் ஏற்பட்ட பிளேக் கொள்ளை நோயால் வெளியேறித் தஞ்சைக்கே (அம்மாப்பேட்டை) இவருடைய குடும்பம் குடியேறியது.
சென்னை நகரக் காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்கமர்ந்த சாம்பசிவம், 1903இல் துரைக்கண்ணு அம்மையாரை மணம் செய்து கொண்டார். 1907இல் துணை ஆய்வாளராக்கப் பட்டார்.
துரைக்கண்ணு அம்மையாரின் தாய்மாமன் சென்னை நகரப் போலீஸ் துணை ஆணையாளராக விளங்கிய முதல் இந்தியரும் தமிழ் அறிஞருமான ச. பவானந்தம் ஆவார். (பாரதியின் 'இந்தியா' பத்திரிகைக்கு எதிரான வழக்கையும் விசாரணையையும் நடத்தியவர் இவர்.)
1914இல் முதல் மனைவி துரைக்கண்ணு அம்மையார் இறந்த பிறகு, 1916இல் அம்மணி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். அவரும் தலைப்பிரசவத்தில் அடுத்த ஆண்டே காலமானார். இதன் பிறகு சாம்பசிவம் மன்னையார் மணம் செய்துகொள்ளவில்லை. நேர் வாரிசும் இல்லை. இது மருத்துவ அகராதியின் பதிப்பு வரலாற்றையும் பாதித்தது. 1935இல் இவர் காவல் துறை ஆய்வாளராகப் பணி ஓய்வு பெற்றார்.
தமது பாட்டனார் எழுதிவைத்திருந்த சில பழம் மருத்துவச் சுவடிகளே தமது அகராதிக்கு வித்தாக இருந்ததென, 1931இல் அவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையின் முன்னுரையில் சாம்பசிவம் குறித்துள்ளார்.
தமது குடும்பத்தில் எவருக்கும் முறையான வைத்தியப் பயிற்சி இருந்ததாகத் தெரியவில்லை என்று
ராஜபூஷணம் மன்னையார் குறிப்பிடுகிறார். இந்நிலையில் தம்முடைய விரிவான மருத்துவப் பயிற்சியைச் சாம்பசிவம் எங்கு பெற்றார் என்பதே புலப்படவில்லை. பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே படித்தவரின் ஆங்கில மொழி ஆற்றலும் வியப்பைத் தருகிறது.
1931இல் இவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையில் எழுதிய சுருங்கிய முன்னுரையும் (1931), முதல் தொகுதிக்கு (உயிரெழுத்துகள்) எழுதிய மிக விரிவான முன்னுரையும் - இரண்டுமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை - சில போக்குகளை உணர்த்துகின்றன. (மொத்தத் தொகுதிகளும் வெளிவந்த பிறகே முன்னுரை எழுத எண்ணியிருந்ததாகவும் அகராதியைச் சரியாகப் பயன்கொள்ளும் வகையைத் தெளிவுபடுத்த வேண்டியே முதல் தொகுதியிலே முன்னுரை எழுத வேண்டியதானதென்றும் கூறியுள்ளார். அவர் மறைந்த கால் நூற்றாண்டுக்குப் பிறகே நூல் முழுவதும் அச்சாயிற்று என்னும்போது இதை நல்லூழ் என்றே மகிழ வேண்டும்).
நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட சாம்பசிவம் பிள்ளையின் முன்னுரை தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனையின் தாக்கத்தைக் காட்டுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சங்க நூல்களும் அதன்வழிக் கட்டமைக்கப்பட்ட தமிழின் மேன்மை, தனித்தியங்கும் ஆற்றல், வளம் ஆகிய கருத்துகளும் திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கமும் அவருடைய கருத்துலகை வடிவமைத்துள்ளமை தெரிகிறது.
இதன் ஒரு பகுதியாகவே சித்த மருத்துவத்தைத் தமிழ் மரபின் சிறப்பான ஒரு பகுதியாக அவர் காண்கிறார். நாகரிகத்தின் கொடுமுடியைத் தமிழர்கள் தொட்டதன் ஓர் அடையாளமாகத் தமிழ் மருத்துவத்தை அவர் பார்த்திருக்கிறார். நவீன மேலை மருத்துவத்தோடு ஒப்பிடவும் இது முழுமையுடையதாக அவர் கருதியிருக்கிறார். சித்தர்கள் தம் மருத்துவச் சாதனைகளை நிகழ்த்திய காலத்து ஐரோப்பா அறியாமையிலும் காட்டு மிராண்டித்தனத்திலும் மூழ்கியிருந்ததாக அவர் சொல்கிறார். நவீனக் காலத்திற்கேற்ப சித்த மருத்துவத்தை மீட்டுப் புத்துயிரளிக்காவிட்டால் அது அழிந்தும் மறந்தும் போகும் எனவும் அவர் அஞ்சியிருக்கிறார். அகராதி இந்த அச்சத்தின் வெளிப்பாடாகும்.
இந்தக் கருத்தியல் ஓர்மையே சாம்பசிவம் பிள்ளையின் பெருமுயற்சியின் பின்னணியில் தொழிற்பட்டிருக்கின்றது. தமிழ்ச் சித்த மருத்துவ நூல்களில் ஆளப்பட்டிருக்கும் ஏராளமான கலைச்சொற்களும் குழுக்குறிகளும் அவற்றின் உண்மையான பொருளை அறியத் தடையாக இருப்பதை உணர்ந்த சாம்பசிவம் பிள்ளை இதனைச் சீர்செய்ய முயன்றார்.
இந்தப் பணியினை அவர் எப்பொழுது தொடங்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 1938 கடைசியில் எழுதிய முன்னுரையில் கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட உழைப்பு எனக் குறித்துள்ளதிலிருந்து, 1910களின் தொடக்கத்தில், அவரது 30ஆம் அகவையை ஒட்டி, தம் ஆய்வுகளை அவர் தொடங்கியிருக்கலாம் எனக் கணிக்க முடியும்.
தக்க துணை நூல்கள் இல்லாமல் சாம்பசிவம் பிள்ளை தத்தளித்திருக்கிறார். கடுமையான காவல்துறைப் பணிச் சுமைகளுக்கிடையே அவர் ஆய்வு தொடர்ந்திருக்கிறது. இதில் அவருக்கு யாரேனும் துணை நின்றார்களா என்பதும் தெரியவில்லை. கலந்து பேசுவதற்கேனும் எவரேனும் இருந்தனரா எனவும் தெரியவில்லை. அவரைப் பற்றிய இரங்கலுரைகளோ நினைவுக் குறிப்புகளோ கிடைக்காதிருப்பதிலிருந்து அவர் பலரோடும் கலந்துகொள்ளாதவராக, தனித்தே செயல்படக்கூடியவராக இருந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது.
இவ்வாறு டி.வி. சாம்பசிவம் பிள்ளை அரிதின் முயன்று தொகுத்த அகராதியை முதலில் ஒரு சிறு சஞ்சிகையாக, 40 பக்க அளவில் வெள்ளோட்டம் விட்டிருக்கிறார். இது 1931இல் வெளிவந்திருக்கலாம். 'அ' முதல் 'அக்கினினிர்ம மந்தினி' வரை அமைந்த இந்தச் சஞ்சிகையில் 4 பக்க ஆங்கிலப் பொருளடைவும் உண்டு. இதனையே பல அறிஞர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முதலில் அவர் அனுப்பியிருக்கிறார் எனத் தெரிகிறது. பொருள் ஆதரவு வேண்டி இதனைச் செய்தாரா, கருத்தறிவதற்காக அனுப்பினாரா, விளம்பரத்திற்காக அனுப்பினாரா என்று தெரியவில்லை.
இச்சஞ்சிகையைப் படித்து ஆர்க்காடு லட்சுமணசாமி முதலியார், உ.வே. சாமிநாதையர், வையாபுரிப் பிள்ளை, கா.சு. பிள்ளை, அனவரதவிநாயகம் பிள்ளை, டி.எஸ். திருமூர்த்தி முதலானோர் அளித்த கருத்துரைகளை ஆங்கிலத்தில் 'Opinions' என்ற தலைப்பில் அச்சிட்டு அதனையும் 8 பக்க அளவில் இணைத்துள்ளார்.
இதன் பிறகு 1931இல் 'அ' முதல் 'அமுத' வரைத் தலைச்சொற்கள் கொண்ட 200 பக்க சஞ்சிகையை சாம்பசிவம் பிள்ளை வெளியிட்டிருக்கிறார். இவை இரண்டும் The Research Institute of Siddhar's Science, Madras என்ற பெயரில் வெளிவந்துள்ளன. இது சாம்பசிவம் பிள்ளையே ஏற்படுத்திக்கொண்ட பெயரளவிலான நிறுவனம் என்பதில் ஐயமில்லை.
இதன் முன்னுரையில் இது ஒரு மாதிரி (Specimen) என்றே அவர் குறித்திருக்கிறார். மொத்தம் நான்கு தொகுதிகளாக, ஒவ்வொன்றும் 500 பக்க அளவில் அமையும் என்றும் அவர் எழுதியுள்ளார். ஆனால் அவர் காலமான பின்பே முழுமை பெற்ற இந்த அகராதி 4000 பக்கத்தை எட்டிவிட்டது.
கடைசியில் இந்த அகராதியின் முதல் தொகுதி 1938இல்தான் வந்தது. (ஆனால் பலர் தவறாக 1931 என்றே குறிப்பிடுகின்றனர். இதற்கான காரணம் இந்த அகராதியின் பதிப்பு வரலாற்றில் ஏற்பட்ட குழப்பங்களே ஆகும். அவற்றைப் பின்னர் காண்போம்.)
சாம்பசிவம் பிள்ளை இவ்வகராதி வெளியீட்டுக்காகத் தம் பூர்வீகச் சொத்தான இரண்டு வேலி நிலத்தை விற்றதோடு, ஓய்வூதியத்தையும் முன்னரே பெற்று 12,000 ரூபாவுக்கு மேல் செலவு செய்திருக்கிறார். (வ. சுப்பையா பிள்ளை, அ. ராஜபூஷணம் மன்னையார் ஆகியோர் தரும் தகவல் இது.) முதல் இரண்டு தொகுதிகள் அடுத்தடுத்து 1938ஆம் ஆண்டளவில் வெளிவந்ததாகத் தெரிகிறது.
1949இல் சென்னை மாநில அரசு அவருக்கு ஐயாயிரம் ரூபாய் உதவித்தொகை அளித்ததோடு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருணாசல நாயக்கர் தெருவில் ஒரு வீட்டையும் கொடுத்திருக்கிறது. இதுவும் அ. ராஜ பூஷணம் மன்னையார் தரும் தகவல். இந்த உதவியளித்தலுக்குப் பின்னே இருந்தவர்கள் யாரெனத் தெரியவில்லை. ஆனால் இந்த அரசு உதவியே அகராதிக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது.
மூன்றாம் தொகுதி பாதி அச்சான நிலையில், 1953இல் டி.வி. சாம்பசிவம் பிள்ளை காலமானார். வாரிசில்லாத நிலையில், சென்னை தாசில்தார் அவர் இருந்த வீட்டைப் பூட்டிவிட்டதோடு, வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தையும் எடுத்துச்சென்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்துப் பூட்டிவிட்டார். இது நடந்து ஒரு பத்தாண்டுகளுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர்களில் ஒருவரும் மறைமலையடிகள் நூல்நிலையத்தைத் தோற்றுவித்தவருமான வ. சுப்பையா பிள்ளை (1966இல்) முயற்சி எடுத்து, சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் தேடியிருக்கிறார்.
அங்கு ஒரு கள்ளிப்பெட்டி நிறைய மருத்துவ நூல்களும் நிகண்டுகளும் செல்லரிப்புண்ட நிலையில் இருந்திருக்கின்றன. அதன் பக்கத்தில் ஒரு அடுக்கிலே அகராதியின் கையெழுத்துப் படிகளும் அச்சிட்ட படிவங்களும் இருந்திருக்கின்றன. மூன்றாம் பாகத்தின் 2174 பக்க எண்ணோடு முடியும் படிவத்தையும் அவர் கண்ணுற்றிருக்கிறார். (அங்கே இருந்த ஒரு பள்ளியிறுதிச் சான்றி தழிலிருந்து சாம்பசிவம் பிள்ளையின் தம்பி டி.வி. அண்ணாமலைப் பிள்ளையின் முகவரியைப் பெற்று, அவர் வழியாகச் சாம்பசிவம் பிள்ளையின் பணி அடையாள அட்டையிலிருந்த படத்தை வ. சுப்பையா பிள்ளை பெற்றிருக்கிறார். இன்று கிடைக்கப்பெறும் சாம்பசிவம் பிள்ளையின் ஒரே படம் இதுவேயாகும்.)
வ. சுப்பையா பிள்ளையின் இடையீட்டுக்குப் பிறகு, அகராதியின் கையெழுத்துப்படிகளும் அரைகுறையாக இருந்த அச்சுப்படிகளும் சென்னை அண்ணா நகர் சித்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதென அவர் 1972இல் குறித்துள்ளார்.
அங்கு அரசின் மானிய உதவியுடன் மூன்றாம் பகுதியின் பிற்பகுதி அச்சிடப் பெற்று பழைய படிவங்களோடு சேர்த்துக் கட்டப்பட்டு, வெளியிடப்பெற்றிருக்கிறது. இதில் அதன் இயக்குநர் டாக்டர் பு.மு. வேணு கோபால் முன்னின்றதாகத் தெரிகிறது. இவ்வெளியீடு 1972-1977க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். இப்பொழுது பார்க்கக் கிடைக்கும் முதல் மூன்று தொகுதிகளின் முதற்பதிப்புகளும் இச்சமயத்தில் கட்டப்பட்டதாகவே தெரிகின்றது.
இவ்வேளையில் கோவையின் விந்தை மனிதர் ஜி.டி. நாயுடுவை இந்த மருத்துவ அகராதி கவர்ந்திருக்கிறது. அவருடைய முயற்சியில் அடுத்த இரண்டு பாகங்கள் அச்சிடப்படலாயின. ஆனால் அவை வெளிவரும் முன் அவரும் காலமாகிவிட்டார். கடைசியில் 1977இலும் 1978இலுமாக சாம்பசிவம் பிள்ளையின் பேரகராதியின் நான்காம் ஐந்தாம் தொகுதிகள் வெளியாயின. 1931இல் தொடங்கிய மருத்துவ அகராதியின் அச்சுவாகனப் பயணம் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவு பெற்றது.
இவ்வாறு கடைசி மூன்று தொகுதிகளும் அச்சிட்டு, கட்டப்பட்டு முற்றுப்பெற்றபோது சில பதிப்புக் குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. நான் பார்த்த பிரதிகளெல்லாம் பழைய படிவங்களோடு புதிதாக அச்சிட்ட படிவங்களும் சேர்த்துக் கட்டடம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. தலைப்புப் பக்கமும் புதிதாக அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது தெரிகிறது. (சாம்பசிவம் பிள்ளையின் காலத்தில் முழுவதுமாக அச்சிடப்பட்டு, கட்டப்பட்ட பிரதிகளை நான் கண்ணுற இயலவில்லை.)
இந்தப் பிரதிகளில், வெள்ளோட்டமாக அச்சிடப்பட்ட சஞ்சிகையின் முகப்பை மாதிரியாகக் கொண்டு, 1931 எனப் பதிப்பு ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது. இது பிழை. 1938இல்தான் முதல் இரு தொகுதிகள் அணியமாயின என்பதை முன்னரே கண்டோ ம். மேலும் நான் பார்வையிட்ட ஓர் இரண்டாம் தொகுதியில் 930 முதல் 1488 பக்கம் வரை சாம்பசிவம் பிள்ளை காலத்து அச்சுப்படிவங்களும் 1489 முதல் 1752 பக்கம் வரை (ஜி.டி. நாயுடு அறக்கட்டளையால்) நான்காம், ஐந்தாம் தொகுதிகள் அச்சிடப்பட்ட அதே அச்சகத்தில் அதே தாளில் அச்சிடப்பட்டுள்ளது தெரிகிறது. இதிலிருந்து, சாம்பசிவம் பிள்ளை மறைந்தபொழுது பல அச்சுப் படிவங்கள் கட்டப்படாமல் இருந்திருக்கும் என எண்ண இடமுண்டு.
தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் அரிய பதிப்புகளெல்லாம் பெரும் அலைக்கழிப்புகளுக்குப் பின்னரே வெளிவந்திருக்கின்றன. தீயூழாக, இந்த முயற்சிகள் பற்றிய போதுமான பதிவுகள்கூட இல்லை. இவ்வளவு அரிய அகராதியைப் பற்றி 'சொல்பொருள்' என்ற 900 பக்க அளவில் அமைந்த சிறப்பான தமிழ் அகராதி வரலாறுகூட இரண்டு இடங்களில் பெயரளவில் மட்டுமே சுட்டுகிறது. 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மொழி அகராதி தயாரிக்கப்பட்ட அனுபவத்தை விளக்கும் சிறு நூலை பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தமிழ்ப் பதிப்பகம் வெளியிடும் (Emile Littre, How I Made My Dictionary, Cre-A, 1992) சூழ்நிலையில் டி.வி. சாம்பசிவம் பிள்ளை போன்ற அறிஞர்கள் போற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?
இத்துணை வளமும் செழுமையும் கொண்ட கலைக் களஞ்சியத்தை டி.வி. சாம்பசிவம் பிள்ளை உருவாக்கி, பாதி வெளியிட்டு, அவர் காலமான பின் நிறைவு பெற்றதை இனிக் காண்போம்.
பின்குறிப்பு
பல்லாண்டுகளாகக் கிடைக்கப்பெறாமல் இருந்த இந்த அகராதியைத் தமிழக அரசு 1990களில் மறுபதிப்பிட்டுள்ளது. எப்படி நூல் வெளியிடக் கூடாது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும். முதல் பதிப்பின் ஐந்து தொகுதிகளும் ஒரே சீராக ராயல் அளவில் தொடர் பக்க எண்களோடு நேர்த்தியாக அச்சிடப்பட்டவையாகும். புதிய 'பதிப்'போ ஆறு பகுதிகளாக வெவ்வேறு அளவில் அச்சிடப்பட்டுள்ளது. முதல் தொகுதி டெம்மிக்கும் குறைந்த அளவில் 1742 பக்கங்களில் புதிதாகப் பல பிழைகளோடு அச்சுக் கோக்கப்பட்டு ஒரே நூலாகச் செங்கல்போல் அமைந்துள்ளது. இரண்டாம் தொகுதி 'ஆப்செட்' முறையில் பழைய பதிப்பு அப்படியே படம்பிடித்து வெளியிடப்பட்டுள்ளது - நல்லவேளையாக! ஆனால் இது 929ஆம் பக்கத்தில் தொடங்கி 1752ஆம் பக்கத்தில் முடிகிறது! மூன்றாம் தொகுதியும் இதே 'ஆப்செட்' முறையில் 1753ஆம் பக்கம் தொடங்கி 2224ஆம் பக்கத்தில் முடிகிறது.
நான்காம் தொகுதி இரண்டு பாகங்களாகப் புதிதாக அச்சுக் கோத்து அச்சிடப்பட்டுள்ளது. காரணம் விளக்கப்படவில்லை. இதன் முதல் பாகம் 1ஆம் பக்க மெனப் புதிதாக இலக்கமிடப்பட்டு 1020ஆம் பக்கம்வரை உள்ளது. இரண்டாம் பாகம் இதன் தொடர்ச்சியாக 2000 பக்கம்வரை உள்ளது. ஐந்தாம் தொகுதி மட்டும் ராயல் அளவில் புதிதாக அச்சுக்கோத்து, 1 முதல் 1291 பக்கம் வரை எண்ணிடப்பட்டுள்ளது. அச்சுப் பிழைகள், வடிவமைப்பு, நேர்த்தி முதலானவை பற்றிச் சொல்லாமலிருத்தல் நலம். சாம்பசிவம் அகராதி தொடர்ந்து அச்சில் உள்ளது என்பதைத் தவிர இதில் மகிழ்வதற்கு ஏதுமில்லை.
துணைநூல்கள்
1. டி.வி. சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதிப் பதிப்புகள்.
2. டி.வி. சாம்பசிவம் பிள்ளை வெளியிட்ட மருத்துவ அகராதியின் மாதிரி சஞ்சிகைகள்.
3. அ. ராஜபூஷணம் மன்னையார், சித்த மருத்துவ மேதை டி.வி. சாம்பசிவம் பிள்ளை, குருவருள் பதிப்பகம், சென்னை, 2002.
4. வ. சுப்பையா, 'படந்தொகுத்தலிற் பட்டறிவு' (2), செந்தமிழ்ச் செல்வி, சூலை 1972.
கல்வி வள்ளல் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார்
1991 முதல் 1996 வரை தஞ்சாவூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார் அவர்கள். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒருநாள் தவறாமல் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு உயர்கல்வியில் ஒரு மாபெரும் யுகப்புரட்சியை நடத்தியவர். ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு கல்வி வழங்கியவர். இலவசமாக உணவும் உறைவிடமும் அளித்து கல்வியில் சாதனை படைத்தவர் துளசிஐயா வாண்டையார்.
எவரிடமும் நன்கொடை பெறாமல், குறிப்பாக மாணவர்களிடம் எதுவும் பெறாமல் கல்லூரியை நடத்த முடியும் என்று நடத்திக் காட்டி வரும் சாதனையாளர்களில் இவரும் ஒருவர் . அத்துடன் ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் தன் சொந்தப் பொறுப்பில் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்கும் கல்வி வள்ளல் இவர்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், ஐம்பதுகளைக் கடந்த பட்டதாரிகளை, ''எங்கே படித்தீர்கள்?'' என்று கேட்டால், அவர்களின் பெருவாரியான பதில், 'பூண்டி கல்லூரி’ என்பதாகத்தான் இருக்கும்.
'நாக்’ அமைப்பின் நான்கு நட்சத்திர அங்கீகாரத்தோடு, தன்னாட்சிக் கல்லூரியாக இயங்கும் திருபுட்பம் கல்லூரி, கல்வித் துறையில் தனியார் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணம். சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை, குறைந்த கல்விக் கட்டணம் என்று கிட்டத்தட்ட ஓர் அரசுக் கல்லூரிபோலவே மாணவர்களுக்குச் சலுகை காட்டுகிறார்கள் என்கிறார்கள் முன்னாள், இன்னாள் மாணவர்கள்.
இப்போது 7,000 மாணவ - மாணவிகள் படிக்கிறார்கள். ஆண்டுதோறும் 200 மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. கல்லூரி வளாகத்திலேயே, அரசுப் பதிவு பெற்ற சித்த - ஆங்கில மருத்துவ மையம் இயங்குகிறது. மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிகிச்சை இங்கே இலவசம்.
நூலகத்துக்கு என்றே தனி வளாகம். நாட்டின் சிறந்த 300 நூலகங்களில் ஒன்று என்ற பெருமையுடன் கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த நூலகத்தில், லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. ''இந்த நூலகமும் கல்லூரியின் முகப்பில் உள்ள பிரமாண்ட தியான மண்டபமும் ஒவ்வொரு மாணவரும் தவறாமல் தினமும் வந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு கட்டப்பட்டவை. கல்லூரியைச் சுற்றி உள்ள தோட்டங்களில் நெல்லும், காய்கறிகளும் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில் இருந்துதான் விடுதி மாணவர்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. 'முதலில் ஒழுக்கம், அடுத்துதான் கல்வி’ என்பது கல்லூரியின் தாளாளர் துளசி அய்யா வாண்டையாரின் கொள்கை. இயற்கை வேளாண்மையின் முக்கியம் மாணவர்களுக்கு பயன்பாட்டின் அடிப்படையில் தெரிய வேண்டும் என்பார் அவர். பூண்டிக் கல்லூரி தன் மாணவர்களுக்குத் தர விரும்புவதும் இதைத்தான்''
திருமதி. இராசமோகன் களத்தில் வென்றார்அனந்தநாயகி. 1929 - 2001
நடராஜ வாண்டையாரின் திருமகளாய் தஞ்சை குமரலிங்கத்தில் 18/06/1929ல் பிறந்து சென்னையில் வாழ்ந்தார். பாபநாசத்தில் பள்ளிக்கல்வியும் இராணி மேரி கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உயர்கல்வியும் கற்றார். இவர் 1946 ம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராகவும் இரு முறை சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் இருந்தவர். படிக்கும்போதே துடிப்புடன் சொற்பொழிவுகள் ஆற்றியவர். பொதுநல தொண்டுகள் புரிவதில் வல்லவர். வழக்கறிஞர் பட்டமும் பெற்று வாதத்திறமையுடன் நீத்மன்றங்ககளில் வாதிட்டு பிற்படுத்தப்பட்டோர் நலனுக்குகாக பாடுபட்டவர்.திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில் கிராமத்தில் திரு இராசமோகன் களத்தில் வெண்றாரை கரம்பிடித்தார்.
ஒரு சிறந்த அரசியல்வாதி, சமூக சேவகர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மூன்றுமுறை - 1957, 1962 மற்றும் 1971ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ்தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் அருந்தொண்டுகள் ஆற்றியவர். உற்றார்,உறவினர் மற்றும் சுற்றத்தினர் அனைவருக்கும் பாகுபாடின்றி உதவிகள் பல செய்தவர். பண்புடன் பழகும் பண்பினை பெற்றவர். அழகு தமிழ் மேடைப் பேசுகளில் காங்கிரஸ் அவைகளை அலங்கரித பெருமை கொண்டவர். சட்டப்படிப்பு முடியும் முன்பே சென்னை மாநகராட்சியில் உறுப்பினராகி காங்கிரஸ் கட்சியை வலுப்பெற செய்த பெருமைமிக்கவர். மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினாராகி மக்களுக்கு அரும் பணியாற்றி மகிழ்வுற்றவர்.
வீரத்தமிழருக்கு ஆவேச கடிதங்கள் என்ற கவிஞர் சுத்தானந்த பாரதியின் நூலில் 70 ஆண்டுகளுக்கு முன்பே அனந்தனாயகி இடம்பெற்றார். தன் தகுதிக்கும் உழைப்புக்கும் உகந்த எந்தப் பதவியும் எதிபாரமலும் அடையாமலும் உண்மையான தியாகியாகவே இறுதிவரை காங்கிரஸ் கட்சிக்கு உழைத்து வாழ்ந்து வந்தவர். 1975ல் நெருக்கடி காலத்தில் அவசரகோலத்தில் காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோது மனம் தளர்ந்து காங்கிரஸ்சில் இருந்து சிறிது ஒதுங்கி இருந்தார். இக்கால கட்டத்தில் தேவர் பேரவை தலைமைப் பொறுப்பு இவரைத் தேடி வந்தது. தேசிய பாரம்பரியத்தின் உணர்வோடு தேசிய இயக்கத்தை வளர்ந்த அம்மையாரால் சாதிய உணர்வுகளையும் அதன் உட்பூசல்களையும் சகிக்க முடியாமல் அப்பதவியை உதறினார். நாடும் சமுதாயமும் தான் வளர்த்த காங்கிரஸ் இயக்கமும் நலிந்து வருவதை கண்டு கவலையுற்று தானும் நலிந்து இறுதிக்காலத்தை தன் இல்லத்துக்குள்ளேயே முடித்துக்கொண்டார். தான் சார்ந்த இயக்கத்துக்கும் நாட்டுக்காகவும் உழைத்தாரே தவிர அந்த இயக்கத்தால் எந்த ஒரு பயனும் அடையாத புடம் போட்ட தியாகியாகவே வாழ்ந்து மறைந்தார்.
மொழி,நாடு, இயக்கம், இனம் என்ற பந்தங்களுக்கு குந்தகம் வராமல் பார்புகழ் மங்கையாக, தேசியவாதியாக இறுதிவரை வாழ்ந்து மறைந்த நம் குல செல்வியை எண்ணி நாம் பெருமையும் பாடங்களும் கற்றுக்கொள்ள வேண்டும். அறிவிற் சிறந்தோர், ஆற்றல்மிகு பெரியோராகிய அனந்தநாயகி என்னும் அற்புத மங்கையின் புகழ் விண்ணும் மண்ணும் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.
எதிரிகளுக்கும் உதவி செய்து சர்வகட்சித்தோழர் என்று புகழப்பட்டவர். ஒன்றியப்பெருந் தலைவர், மாவட்டச்செயலாளர், அமைச்சர் என் எந்த நிலையிலும் பிறந்த சமுதாயத்தை மறவாத இனப்பற்றாளர். கலைஞர் கருனாநியின் சட்டமன்ற நுழைவுக்கு 1957ல் குளித்தலை தொகுதியை வாயிலாக்கிய நாள் முதல் இறுதிமூச்சுவரை பிறருக்கு உதவி செய்தே புரவலர் எனப் போற்றப்பட்டவர்.
கள்ளர், மறவார் கனத்த அகமுடையோர்,
மெல்ல மெல்ல வள்ளளானார்
என்பது இன்று
கள்ளர், மறவர் கணத்த அகம்படியர்,
மெல்ல மெல்ல வெள்ளாளரானார்
என்று கூறப்படுகிறது
கள்ளர் பட்டங்களும் ஊர் பெயர்களும்
ஆய்குடி
ஆரமுண்டான்பட்டி
உலகங்காத்தான்
உலகங்காத்தான்பட்டி
ஓமாம்புலியூர்
ஓசையன்பட்டி
ஏத்தொண்டான்பட்டி
பட்டுக்கோட்டை
பட்டு மழவராயர் என்ற குறுநில மன்னர்கள் கட்டிய கோட்டைகள் பல இடங்களில் உள்ளதால் பட்டுக்கோட்டை எனற பெயரினை பெற்றது.
பத்தாளன்கோட்டை
பல்லவராயன்பேட்டை
பாப்பரையன்பட்டி
பாலாண்டான்பட்டி
பாண்டுராயன்பட்டி
பொய்யுண்டார் கோட்டை
பொய்யுண்டார் குடிகாடு
கச்சிராயன்
கச்சியராயன்மங்கலம் (கச்சமங்கலம்)
கலியராயன்பட்டி
கங்கைகொண்டான்
கண்டர்கோட்டை
கண்டியங்காடு
கண்டியூர்
கண்டியன்பட்டி
கரமுண்டான் கோட்டை
கல்விராயன்பட்டி
காடவராயன்பட்டி
காடுவெட்டி விடுதி
காங்கேயன்பட்டி
காளிங்கராயன் ஓடை
கொங்கராயநல்லூர்
கோனெரிராஜபுரம்
மழவராய நல்லூர்
மலைராயன்பட்டி
மழவன் கோட்டை
மழவந்தாங்கல்
மழ்வராயணேந்தல்
மழவராயனத்தம்
மழவங்க்ரனை
மணவாளநல்லூர்
மணவாளம்பேட்டை
மாதைராயன்பட்டி
முத்துவீரக்கண்டியன்பட்டி
நல்லவன்னியன் குடிகாடு
நரங்கியன்பட்டி
நாய்க்கர்பாளைம் (சாவடி நாயக்கர் கிராமம்)
திராணிபட்டி
துண்டுராயன்பட்டி
துரையுண்டார் கோட்டை
தென்கொண்டானிருப்பு
தேவர்கண்டநல்லூர்
தொண்டைமான்பட்டி
தொண்டைமான்நல்லூர்
தொண்டைமானூர்
தொண்டைமாந்துளசி
தொண்டைமானந்தம்
தொண்டைமான் ஏந்தல்
தொண்டைமாங்கணம்
தொண்டைமாங்குலம்
தொண்டைமான்
சாதகன்பட்டி
சாளுவன்பேட்டை
சாணூரன்பட்டி
சாலுவன்பேட்டை
சுரக்குடிப்பட்டி (சுரக்குடியார் பட்டி)
செம்பியன்களர்
செம்பியன்மாதேவி
செம்பின் மணக்குடி
சேர்வைக்கட்டளை
சேர்வைக்காரங்கட்டளை
சேதிராயன்குடிகாடு
சேதுவராயகுப்பம்
சேதுவராயன் ஏந்தல்
சேதிராயன்பட்டி
சேதுராயபுதூர்
சேதுராயநத்தம்
சோழகன்பட்டி
வன்னியன்பட்டி
வல்லாண்டான்பட்டி
வாலியன்பட்டி
வாணராயன்பட்டினம்
வாண்டையாரிருப்பு
வில்லவராயன்பட்டி
வெங்கராயனுக்கடை
ராயமுண்டான்பட்டி
கள்ளர்கள் தொன்று தொட்டு ஆட்சி நடாத்தி வந்த வகுப்பினர் என்பதை எவரும் மறுத்தற்கில்லை. இற்றைக்கும் இவ்வகுப்பினரில் ஒரே தமிழ் வேந்தராகிய புதுக்கோட்டை மன்னர் அரசாண்டு வருகின்றனர். ஜமீன்தாரும், பெருநிலக்காரரும் மிகுதியாக இருக்கின்றனர். சென்னை அரசாங்கத்தினரால் ஏற்படுத்தப் பெற்றுள்ள ஓர்சட்டத்திலிருந்தே இவ்வுண்மை அறியலாகும். சென்னை இராஜதானியைச் சேர்ந்த ஜமீன் நிலங்களைக் கூடியவரையில் பாதுகாக்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் சென்னை அரசாங்கத்தினரால் 1903-ஆம் வருடத்தில் ஓர் சட்டம் இயற்றப்பட்டது. இக்கொள்கையை நிலை நறுத்துதற்காகப் பின்பு சென்னபட்டினத்து 1903-ஆம் வருடத்து4-வது மசோதா சட்டமும் தோன்றிற்று. இச்சட்டத்தின் பெயர் ‘பங்கிடக்கூடாத நிலச் சொத்துக்களைக் குறித்த சென்னபட்டினம் 1903-ஆம் வருடத்து மசோதா சட்டம்’ (The Madras Impartible Estates Bill, 1903) என்பது. இதன் எல்லைக்குள் (ஷெடியூலுக்குள்) அகப்பட்ட ஜமீன்களில் தஞ்சையில் உள்ளவை: கண்டர்கோட்டை, கல்லாக்கோட்டை, கோனூர், சில்லத்தூர், பாலையவனம், பாப்பாநாடு, சிங்கவனம், மதுக்கூர், நெடுவாசல், சேந்தங்குடி, அத்திவெட்டி என்னும் பதினொன்றுமாம். இவற்றுள் கோனூர், அத்திவெட்டி என்னும் இரண்டு தவிர மற்றையவெல்லாம் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவை. அவ்விரண்டுங்கூட ஆதியில்கள்ளர் ஜமீன்களைச் சேர்ந்திருந்தனவே. மற்றும் பாளையக் காரர்களைப்போன்றோ சிறிது ஏற்றத் தாழ்வாகவோ செல்லமும், செல்வாக்குமுடையோர் பலர் இவ்வகுப்பில் இருந்திருக்கின்றனர். இவ்வகுப்பினைக்குறித்துஎழுதினோர் யாரும் இவைகளைச் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை. இக்காரணத்தாலேயே கள்ளர் சரித்திரம் என்னம் இவ்வுரை நூல் எழுதுமாறு நேர்ந்தது.
இதனைப் படிக்கும் அறிஞர்கள் சில கற்பனைக் கதைபோலன்றி உண்மையாராச்சியுடன் கூடிய சரித்திரமாக எழுதுதற்குப்பொரிதும் முயன்றுளேன் என்பதனையும், ஒருவகுப்பினைப் பெருமைப் படுத்துதற்காக ஏனை வகுப்புக்களை இழித்துரைக்கும் குறுகிய மனப்பான்மையடையாரக்கு இஃது அறிவு கொள்ளத்தக் உடையதாம் என்பதனயும் இதிலுள்ள செய்திகள் பெரும்பாலனவும் தமிழ் மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டியனவாம். தமிழ் நாட்டின் வரலாற்றில இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகளை இந்நூலின் ஐந்தாம் அதிகாரத்திற் காணலாகும்
பேராசிரியர் பி. விருத்தாசலம் 1940 -2010
தன் வரலாற்றுக் குறிப்புகள்.
தென்காவேரி என்பது என்னை ஈன்று புறந்தந்த தாயின் பெயர். பொ.பிச்சையா நாட்டார் என்னைச் சான்றோன் ஆக்கிய என் தந்தையின் பெயர். என் பிறந்தநாள் 22-05-1940. ஆனாலும் நான் நான்கு வயதுச் சிறுவனாக இருந்த போது என் அண்ணன் பள்ளிக்கூடம் போவதைப் பார்த்து நானும் பள்ளிக்கூடம் போவேன் என்று அடம்பிடித்து, நடுத்தெருவில், புழுதிமண்ணில் கிடந்து புரண்டு அழுது, ஆர்ப்பாட்டம் செய்த என் தொல்லை பொறுக்கமாட்டாமல், என் தாய் எனக்கு போட்டுவிடக் கால்சட்டையோ மேல் சட்டையோ இல்லாத நிலையில், என் தந்தையின் துண்டு ஒன்றை இடுப்பில் சுற்றிவிட்டு என்னைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்.
எப்படியோ காலம் விரைந்து ப்றந்தோடி விட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள என் பிறந்த ஊரான மேலத்திருப்பூந்துருத்தியில் எட்டாம் வகுப்புவரை படித்துத் தேர்ச்சிபெற்றேன். திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப்பள்ளி, பூண்டி திரு புட்பம் கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து படித்தேன். தமிழில் வித்துவான் பட்டம் பெற்றேன். சென்னையில் தமிழாசிரியராக பணிபுரிந்துகொண்டே தனியாகப் படித்து பி.ஏ. பட்டம் பெற்றேன். கரந்தைப் புலவர் கல்லுரியில் 25-06-1969 இல் பணியில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டே தனியாகப் படித்துத் தேர்வெழுதி எம்.ஏ பட்டம் பெற்றேன். இது படித்துப் பட்டம் பெற்ற வரலாறு.
என் ஊனிலும் உயிரிலும் கலந்து என்னை இயக்கி வரும் இலக்கிய வரிகள்
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
2. பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
3. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக
4. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
5. அறிவை விரிவு செய்; அகண்டம் ஆக்கு. விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
இனியும் என் தொண்டுகள் தொடரும்
நாடுவாழ நான் வாழ்வேன்
பி. விருத்தாசலம்
தங்கச் சாலையில் உள்ள தொண்டை மண்டல துளுவ வேளாளர் மேனிலைப் பள்ளியிலும், சென்னைப் பெரம்பூரில் உள்ள சமாலியா மேல்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்தவர்.
தஞ்சையருகே உள்ள கரந்தையில் உள்ள உமாமகேசுவரனார் கலைக்கல்லூரியில் 28 ஆண்டுகள் பணிபுரிந்தவர். இதில் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்து பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். எளிய நிலையில் படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் உணர்வு செறிந்த மாணவர்களுக்கும் இவர் தந்தையராகவும் காப்பாளராகவும் இருந்து உதவியவர்.
சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஆட்சிக்குழு, கல்விக்குழு உறுப்பினராக இருந்து பணிபுரிந்தவர். இங்கெல்லாம் தமிழுக்கு ஆக்கமான நிலையில் குரல்கொடுத்தவர்.
தமிழகத்துக் கல்லூரிகள் பலவும் பிலிட் என்னும் இளங்கலைத் தமிழ் இலக்கிய வகுப்புகளில் ஆங்கிலப் பாடம் இணைத்துப் பயிற்றுவிக்கத் துணிந்தபொழுது தஞ்சாவூரில் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியை உருவாக்கிப் பல்லாயிரம் மாணவர்கள் தமிழ் பயில வாய்ப்பமைத்தவர்.
சிலப்பதிகாரத்திலும் பாவேந்தர் படைப்புகளிலும் பழந்தமிழ் நூல்களிலும் பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.
'கெடல் எங்கே தமிழின் நலம்,அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க'.
என்னும் பாடல் அடிகளுக்கேற்ப வாழ்ந்து வந்தவர் பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள்.
தனித்தமிழ் மீது பற்றுக்கொண்ட இவர் தமிழியக்கம் தழைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு நிறைவேற்றியுள்ளார்கள். குறிப்பாக, சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராக இருந்தபோது சென்னைப் பல்கலைக்கழக அடையாளச் சின்னத்தில் இருந்த
"DOCTRINA VIM PROMOVET INSITAM"
என்னும் குறிக்கோள் மொழியைத் தமிழில் மாற்ற வேண்டுமென 8.11.1976, 30.3. 1977, 30.11.1977
ஆகிய நாள்களில் நடைபெற்ற மூன்று பேரவைக் கூட்டங்களில் தீர்மானங்கள் தந்து போராடியதன் விளைவாக சென்னைப் பல்கலைக்கழ அடையாளச் சின்னத்தில்
கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும்
என மாற்றியதையும்,சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பெறும் பட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் வழங்கப்பெற்றதை, தமிழிலும் வழங்க வேண்டும் கூறி மாற்றியதையும் கூறலாம்.
தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தின் அருகில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி என்னும் சிற்றூரில்
திருவாட்டி தென்காவேரியம்மையாருக்கும்,திருவாளர் பொ.பிச்சை நாட்டார் என்பாருக்கும்அருமை மகவாய் 22-5-1940-இல் தோன்றினார்.
இவர் திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப் பள்ளி,பூண்டி திரு.புட்பம் கல்லூரி,திருவையாறு அரசர் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்களில் பயின்று,தங்கசாலையில் உள்ள தொண்ட மண்டல துளுவ வேளாளர் மேனிலைப் பள்ளியிலும், சென்னை பெரம்பூரில் உள்ள சமாலியா மேனிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்து,பின்பு தஞ்சையருகே யுள்ள உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில் 28 ஆண்டுகளில் 24 ஆண்டுகள் முதல்வராக இருந்து பணிபுரிந்து சிறப்பித்துள்ளார்கள்.
பேராசிரியராக இருந்த காலத்து மாணக்கருக்கு பாடம் சொல்லும் திறம் அனைவனரும் விரும்பத்தக்கதாக இருந்தது தெளிவான குரல்,ஆழமான கருத்து,ஓசை நயத்த்தோடு செய்யுளை எடுத்துரைக்கும் முறை,பழம்
நூல்களின் தோய்வு காரணமாக பல மேற்கோள்கள்,நகைச்சுவையோடு கூடிய உலகியல் பார்வை, சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த அகன்ற நுட்பமான பார்வை உடையதால் இசையோடும் நயத்தோடும் விளக்கும் திறன் என இவருடைய கற்பிக்கும் முறையால் தமிழ் வகுப்புக்கள் மாணவர்களால் பெரிதும் விரும்பப் பெற்றன.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1976,1977,1978 ஆகிய மூன்று ஆண்டுகள் பேரவை(senate) உறுப்பினராகவும்,பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1982 முதல் பேரவை உறுப்பின்னராகவும்,ஆட்சிகுழு உறுப்பினராகவும் (syndicate) கல்விப் பேரவையிலும்(standing committee for Academic affair)
பாடத்திட்டக் குழுக்களிலும், பல்கலைக்கழகத் திட்ட குழுக்களிலும் உறுப்பினராக இருந்து தமிழியக்கம் தழைக்க பல தீர்மானங்கள் கொண்டு வந்து அதில் 120 தீர்மானங்களை நிறைவேற்றி சிறப்பாக செயலாற்றியுள்ளார்கள்.
நாவலர் ந.மு. வேங்கடசாமி ஐயா அவர்கள் தமிழகத்து மாந்தரனைவரும் தாய்மொழி வழி
ஒரு தலையாகக் கல்வி கற்று மேன்மையனைய வேண்டும் என்ற விருப்பினால் 1921 ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் திருகாட்டுப்பள்ளிக்கு அருகே திருவருள் கல்லூரி ஒன்று நிறுவக் கருதி , அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அம் முயற்சியைப் பாராட்டி தந்தை பெரியார் நன்கொடையாக உரூபா
ஐம்பது தந்துள்ளார் என்பது குறிப்பிடப்பக்கது. ஆனால் இம் முயற்சி வெற்றி பெறவில்லை.
பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள் பணி ஓய்வு பெற்ற பின்பு ந.மு.வே.ஐயாவினுடைய
எண்ணத்தை நிறைவேற்றும் வகையில்,தஞ்சையருகே வெண்ணாற்றங்கரை கபிலர் நகரில் இயற்கை சூழலோடு கூடிய இடத்தில் 14-10-1992 ஆம் ஆண்டு திருவருள் கல்லூரி என்னும் பெயருடன் நாட்டாரையா அவர்களுடைய பெயரையும் இணைத்து ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் புலவர் கல்லூரி நிறுவி மேலாண்மை அறங்காவலராக இருந்து சிறப்புடன் வழிநடத்தி வந்துள்ளார்
பேராசிரியர் பி. விருத்தாசலம் தனது இறுதி மூச்சு வரை தமிழுக்காகவும், தமிழின அவலத்தைப் போக்கவும் போராடியவர். இன உணர்வாளர், தமிழ்ப் பண்பாளர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தனித் தமிழ்ப் புலவர் படிப்பை கடந்த 19 ஆண்டுகளாக நடத்தி வந்தவர். தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். தமிழ் வழிக் கல்விக்காகப் பல மாநாடுகள் நடத்தியவர். தமிழக அரசு உருவாக்கியுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவையில், இந்திய தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உறுப்பினராக பணிபுரிந்தார். .
.
மாணவப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது பற்றுக் கொண்டிருந்தார். புகழ்பெற்ற கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராக 28 ஆண்டுகள் அவர் பணிபுரிந்தபோது ஆயிரக்கணக்கில் உணர்வுள்ள தமிழாசிரியர்களை உருவாக்கினார். 1982 முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேரவை ஆட்சிக் குழு, பாடத் திட்டக் குழுக்களில் இடம்பெற்று பல அரிய பணிகள் செய்தார்.
தமிழ், தமிழர் எழுச்சிக்காக “என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்' என்ற நூலை வெளியிட்டார். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்தியவர். இவரின் படைப்புக்கள் தமிழ் மண் பதிப்பகம் மூலம் 26 தொகுதிகளாக வந்துள்ளது. உலக நாடுகள் மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் சங்க இலக்கியம் பற்றி ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார்.
இவரது தமிழ் வாழ்வைப் போற்றி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினை வழங்கிக் கௌரவித்தது. இவரது தமிழ்ச் சேவையைப் போற்றி 2009ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற சதய திருவிழாவில் இராசராசன் விருது வழங்கப்பட்டது.
தமிழின் உயர்விற்காக, தமிழனின் உயர்ந்த வாழ்வுக்காக, தமிழ் வழிக் கல்விக்காக, தமிழ் படித்தோர் வேலைவாய்ப்புக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.
பேராசிரியர் பி. விருத்தாசலம் அவர்கள் தனது இறுதி மூச்சு வரை தமிழுக்காகவும், தமிழருக்காகவும் அயராது போராடியவர் ஆவார். தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவராகப் பணியாற்றி தமிழ் வழிக் கல்விக்காக பல மாநாடுகளை நடத்தியவர்.
1982ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு, பேரவை, பாடத்திட்டக் குழுக்களில் இடம்பெற்று அரிய தொண்டுகள் பல செய்தார். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார். உலக நாடுகள் மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் சங்க இலக்கியம் குறித்து சிறப்பான ஆய்வுரைகள் நிகழ்த்தியுள்ளார்.
இவரது தமிழ்த்தொண்டினைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதினை வழங்கியது. இவரின் தமிழ்ப் பணியைப் போற்றி 2009 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற சதயத் திருவிழாவில் இராசராசன் விருது வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு சனவரியில் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவு மாநாட்டின் போது இவருக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டது.
வாழ்நாள் முழுவதிலும் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது கடமையாகக் கொண்டு வாழ்ந்த உலகப் பெருந்தமிழர் பி. விருத்தாசலனார்
பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே என்ற தமிழ்ப் பாட்டன் கணியன் பூங்குன்றனாரின் வரிகளை மேடை தோறும் முலங்கிய பெருமையும் ஐயா விருத்தாசல நாட்டாரையே சாரும். தான் அமைத்த திருவருள் கல்லூரியில் கபிலர் இலக்கிய கழகம்,இமயவரம்பன் உடற்பயிற்சிக்கழகம் என வளாகத்தில் தமிழ் மணம் கொஞ்சுவதுடன் கல்லூரி அமைவிடத்தையும் கபிலர் நகர் என்றே பெயரும் இட்டு உயர்வுஸ் சிறப்பும் பெற்றார். இன்றளவும் நாட்டார் கல்லூரி வளாகம் த்மிழுணர்வாளர்கள் சங்கமிக்கும் வேடந்தாங்கலாகவே திகழ்கிறது. இக்கல்லூரியின் வகுப்பறைகளில் இலக்கணம் வழுவா இலக்கியம் கற்பிப்பதோடு கெடல் எங்கே த்மிழன் நலம் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க என தமிழ் போராட்ட உணர்வுகளையும் ஊட்டியுள்ளார்.
வெண்ணாற்றங்கரையிலமைந்துள்ள நாவலர் நாட்டார் கல்லூரி உலகப்புகழ் எய்த வேண்டும். இத்தகு தமிழ் ஆர்வலர், உணர்வாளர், சாதனையாளர் தொடங்கிய இக்கல்லூரி நின்று நிலைத்து வளர்ந்து வாகை சூடிட நம்மால் முடிந்தனைத்தும் செய்திடல் கள்ளர்களின் நம் கடமையாகும்.
பேராசிரியர் பி.விருத்தாசலனார் நூல்கள்
சான்றோர் சிந்தனைகள்
காவிரிக்கரை வேங்கடம்
தமிழ்வேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டாரையாவும்
கண்ணகி சிலம்பீந்த காரணம்
மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும்
என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்
சிந்தனைச் சுடர்
வில்வையா சாம்பசிவம் மன்னையார் 1880 - 1953
மருத்துவ அகராதி என்ற கலைக்களஞ்சியத்தைத் தனியொருவராக உருவாக்கிக் காட்டிய சாம்பசிவம் மன்னையாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறிய முடியவில்லை. இன்று கிடைக்கப்பெறும் குறைந்த அளவு தகவல்களுக்கும் நாம் அவருடைய தம்பி மகனாகிய திரு அ. ராஜபூஷணம் மன்னையார் அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம்.
ஒரு பெரும் மருத்துவக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கக்கூடிய திறனையும் ஆற்றலையும் உழைப்பையும் வெளிக்காட்டாத சராசரியான வாழ்க்கையினையே சாம்பசிவம் மன்னையாரின் வரலாறு காட்டுகிறது.
சாம்பசிவ மன்னையாரின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள கம்மந்தங்குடி ஆகும். ஆயினும் இவர் பிறந்தது பெங்களூரில் (1880இல்). இவருடைய தாயார் மனோன்மணி அம்மாள்; தந்தையார் வில்வையா மன்னையார். இவர் படித்ததும் பெங்களூரில். பள்ளி இறுதிக்கு மேல் இவர் படிப்புச் செல்லவில்லை. 1899இல் பெங்களூரில் ஏற்பட்ட பிளேக் கொள்ளை நோயால் வெளியேறித் தஞ்சைக்கே (அம்மாப்பேட்டை) இவருடைய குடும்பம் குடியேறியது.
சென்னை நகரக் காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்கமர்ந்த சாம்பசிவம், 1903இல் துரைக்கண்ணு அம்மையாரை மணம் செய்து கொண்டார். 1907இல் துணை ஆய்வாளராக்கப் பட்டார்.
துரைக்கண்ணு அம்மையாரின் தாய்மாமன் சென்னை நகரப் போலீஸ் துணை ஆணையாளராக விளங்கிய முதல் இந்தியரும் தமிழ் அறிஞருமான ச. பவானந்தம் ஆவார். (பாரதியின் 'இந்தியா' பத்திரிகைக்கு எதிரான வழக்கையும் விசாரணையையும் நடத்தியவர் இவர்.)
1914இல் முதல் மனைவி துரைக்கண்ணு அம்மையார் இறந்த பிறகு, 1916இல் அம்மணி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். அவரும் தலைப்பிரசவத்தில் அடுத்த ஆண்டே காலமானார். இதன் பிறகு சாம்பசிவம் மன்னையார் மணம் செய்துகொள்ளவில்லை. நேர் வாரிசும் இல்லை. இது மருத்துவ அகராதியின் பதிப்பு வரலாற்றையும் பாதித்தது. 1935இல் இவர் காவல் துறை ஆய்வாளராகப் பணி ஓய்வு பெற்றார்.
தமது பாட்டனார் எழுதிவைத்திருந்த சில பழம் மருத்துவச் சுவடிகளே தமது அகராதிக்கு வித்தாக இருந்ததென, 1931இல் அவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையின் முன்னுரையில் சாம்பசிவம் குறித்துள்ளார்.
தமது குடும்பத்தில் எவருக்கும் முறையான வைத்தியப் பயிற்சி இருந்ததாகத் தெரியவில்லை என்று
ராஜபூஷணம் மன்னையார் குறிப்பிடுகிறார். இந்நிலையில் தம்முடைய விரிவான மருத்துவப் பயிற்சியைச் சாம்பசிவம் எங்கு பெற்றார் என்பதே புலப்படவில்லை. பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே படித்தவரின் ஆங்கில மொழி ஆற்றலும் வியப்பைத் தருகிறது.
1931இல் இவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையில் எழுதிய சுருங்கிய முன்னுரையும் (1931), முதல் தொகுதிக்கு (உயிரெழுத்துகள்) எழுதிய மிக விரிவான முன்னுரையும் - இரண்டுமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை - சில போக்குகளை உணர்த்துகின்றன. (மொத்தத் தொகுதிகளும் வெளிவந்த பிறகே முன்னுரை எழுத எண்ணியிருந்ததாகவும் அகராதியைச் சரியாகப் பயன்கொள்ளும் வகையைத் தெளிவுபடுத்த வேண்டியே முதல் தொகுதியிலே முன்னுரை எழுத வேண்டியதானதென்றும் கூறியுள்ளார். அவர் மறைந்த கால் நூற்றாண்டுக்குப் பிறகே நூல் முழுவதும் அச்சாயிற்று என்னும்போது இதை நல்லூழ் என்றே மகிழ வேண்டும்).
நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட சாம்பசிவம் பிள்ளையின் முன்னுரை தமிழ் மறுமலர்ச்சிச் சிந்தனையின் தாக்கத்தைக் காட்டுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சங்க நூல்களும் அதன்வழிக் கட்டமைக்கப்பட்ட தமிழின் மேன்மை, தனித்தியங்கும் ஆற்றல், வளம் ஆகிய கருத்துகளும் திராவிட மொழிக் குடும்பம் என்ற கருத்தாக்கமும் அவருடைய கருத்துலகை வடிவமைத்துள்ளமை தெரிகிறது.
இதன் ஒரு பகுதியாகவே சித்த மருத்துவத்தைத் தமிழ் மரபின் சிறப்பான ஒரு பகுதியாக அவர் காண்கிறார். நாகரிகத்தின் கொடுமுடியைத் தமிழர்கள் தொட்டதன் ஓர் அடையாளமாகத் தமிழ் மருத்துவத்தை அவர் பார்த்திருக்கிறார். நவீன மேலை மருத்துவத்தோடு ஒப்பிடவும் இது முழுமையுடையதாக அவர் கருதியிருக்கிறார். சித்தர்கள் தம் மருத்துவச் சாதனைகளை நிகழ்த்திய காலத்து ஐரோப்பா அறியாமையிலும் காட்டு மிராண்டித்தனத்திலும் மூழ்கியிருந்ததாக அவர் சொல்கிறார். நவீனக் காலத்திற்கேற்ப சித்த மருத்துவத்தை மீட்டுப் புத்துயிரளிக்காவிட்டால் அது அழிந்தும் மறந்தும் போகும் எனவும் அவர் அஞ்சியிருக்கிறார். அகராதி இந்த அச்சத்தின் வெளிப்பாடாகும்.
இந்தக் கருத்தியல் ஓர்மையே சாம்பசிவம் பிள்ளையின் பெருமுயற்சியின் பின்னணியில் தொழிற்பட்டிருக்கின்றது. தமிழ்ச் சித்த மருத்துவ நூல்களில் ஆளப்பட்டிருக்கும் ஏராளமான கலைச்சொற்களும் குழுக்குறிகளும் அவற்றின் உண்மையான பொருளை அறியத் தடையாக இருப்பதை உணர்ந்த சாம்பசிவம் பிள்ளை இதனைச் சீர்செய்ய முயன்றார்.
இந்தப் பணியினை அவர் எப்பொழுது தொடங்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 1938 கடைசியில் எழுதிய முன்னுரையில் கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட உழைப்பு எனக் குறித்துள்ளதிலிருந்து, 1910களின் தொடக்கத்தில், அவரது 30ஆம் அகவையை ஒட்டி, தம் ஆய்வுகளை அவர் தொடங்கியிருக்கலாம் எனக் கணிக்க முடியும்.
தக்க துணை நூல்கள் இல்லாமல் சாம்பசிவம் பிள்ளை தத்தளித்திருக்கிறார். கடுமையான காவல்துறைப் பணிச் சுமைகளுக்கிடையே அவர் ஆய்வு தொடர்ந்திருக்கிறது. இதில் அவருக்கு யாரேனும் துணை நின்றார்களா என்பதும் தெரியவில்லை. கலந்து பேசுவதற்கேனும் எவரேனும் இருந்தனரா எனவும் தெரியவில்லை. அவரைப் பற்றிய இரங்கலுரைகளோ நினைவுக் குறிப்புகளோ கிடைக்காதிருப்பதிலிருந்து அவர் பலரோடும் கலந்துகொள்ளாதவராக, தனித்தே செயல்படக்கூடியவராக இருந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது.
இவ்வாறு டி.வி. சாம்பசிவம் பிள்ளை அரிதின் முயன்று தொகுத்த அகராதியை முதலில் ஒரு சிறு சஞ்சிகையாக, 40 பக்க அளவில் வெள்ளோட்டம் விட்டிருக்கிறார். இது 1931இல் வெளிவந்திருக்கலாம். 'அ' முதல் 'அக்கினினிர்ம மந்தினி' வரை அமைந்த இந்தச் சஞ்சிகையில் 4 பக்க ஆங்கிலப் பொருளடைவும் உண்டு. இதனையே பல அறிஞர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முதலில் அவர் அனுப்பியிருக்கிறார் எனத் தெரிகிறது. பொருள் ஆதரவு வேண்டி இதனைச் செய்தாரா, கருத்தறிவதற்காக அனுப்பினாரா, விளம்பரத்திற்காக அனுப்பினாரா என்று தெரியவில்லை.
இச்சஞ்சிகையைப் படித்து ஆர்க்காடு லட்சுமணசாமி முதலியார், உ.வே. சாமிநாதையர், வையாபுரிப் பிள்ளை, கா.சு. பிள்ளை, அனவரதவிநாயகம் பிள்ளை, டி.எஸ். திருமூர்த்தி முதலானோர் அளித்த கருத்துரைகளை ஆங்கிலத்தில் 'Opinions' என்ற தலைப்பில் அச்சிட்டு அதனையும் 8 பக்க அளவில் இணைத்துள்ளார்.
இதன் பிறகு 1931இல் 'அ' முதல் 'அமுத' வரைத் தலைச்சொற்கள் கொண்ட 200 பக்க சஞ்சிகையை சாம்பசிவம் பிள்ளை வெளியிட்டிருக்கிறார். இவை இரண்டும் The Research Institute of Siddhar's Science, Madras என்ற பெயரில் வெளிவந்துள்ளன. இது சாம்பசிவம் பிள்ளையே ஏற்படுத்திக்கொண்ட பெயரளவிலான நிறுவனம் என்பதில் ஐயமில்லை.
இதன் முன்னுரையில் இது ஒரு மாதிரி (Specimen) என்றே அவர் குறித்திருக்கிறார். மொத்தம் நான்கு தொகுதிகளாக, ஒவ்வொன்றும் 500 பக்க அளவில் அமையும் என்றும் அவர் எழுதியுள்ளார். ஆனால் அவர் காலமான பின்பே முழுமை பெற்ற இந்த அகராதி 4000 பக்கத்தை எட்டிவிட்டது.
கடைசியில் இந்த அகராதியின் முதல் தொகுதி 1938இல்தான் வந்தது. (ஆனால் பலர் தவறாக 1931 என்றே குறிப்பிடுகின்றனர். இதற்கான காரணம் இந்த அகராதியின் பதிப்பு வரலாற்றில் ஏற்பட்ட குழப்பங்களே ஆகும். அவற்றைப் பின்னர் காண்போம்.)
சாம்பசிவம் பிள்ளை இவ்வகராதி வெளியீட்டுக்காகத் தம் பூர்வீகச் சொத்தான இரண்டு வேலி நிலத்தை விற்றதோடு, ஓய்வூதியத்தையும் முன்னரே பெற்று 12,000 ரூபாவுக்கு மேல் செலவு செய்திருக்கிறார். (வ. சுப்பையா பிள்ளை, அ. ராஜபூஷணம் மன்னையார் ஆகியோர் தரும் தகவல் இது.) முதல் இரண்டு தொகுதிகள் அடுத்தடுத்து 1938ஆம் ஆண்டளவில் வெளிவந்ததாகத் தெரிகிறது.
1949இல் சென்னை மாநில அரசு அவருக்கு ஐயாயிரம் ரூபாய் உதவித்தொகை அளித்ததோடு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருணாசல நாயக்கர் தெருவில் ஒரு வீட்டையும் கொடுத்திருக்கிறது. இதுவும் அ. ராஜ பூஷணம் மன்னையார் தரும் தகவல். இந்த உதவியளித்தலுக்குப் பின்னே இருந்தவர்கள் யாரெனத் தெரியவில்லை. ஆனால் இந்த அரசு உதவியே அகராதிக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது.
மூன்றாம் தொகுதி பாதி அச்சான நிலையில், 1953இல் டி.வி. சாம்பசிவம் பிள்ளை காலமானார். வாரிசில்லாத நிலையில், சென்னை தாசில்தார் அவர் இருந்த வீட்டைப் பூட்டிவிட்டதோடு, வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தையும் எடுத்துச்சென்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்துப் பூட்டிவிட்டார். இது நடந்து ஒரு பத்தாண்டுகளுக்குப் பிறகு இதைக் கேள்விப்பட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிறுவனர்களில் ஒருவரும் மறைமலையடிகள் நூல்நிலையத்தைத் தோற்றுவித்தவருமான வ. சுப்பையா பிள்ளை (1966இல்) முயற்சி எடுத்து, சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் தேடியிருக்கிறார்.
அங்கு ஒரு கள்ளிப்பெட்டி நிறைய மருத்துவ நூல்களும் நிகண்டுகளும் செல்லரிப்புண்ட நிலையில் இருந்திருக்கின்றன. அதன் பக்கத்தில் ஒரு அடுக்கிலே அகராதியின் கையெழுத்துப் படிகளும் அச்சிட்ட படிவங்களும் இருந்திருக்கின்றன. மூன்றாம் பாகத்தின் 2174 பக்க எண்ணோடு முடியும் படிவத்தையும் அவர் கண்ணுற்றிருக்கிறார். (அங்கே இருந்த ஒரு பள்ளியிறுதிச் சான்றி தழிலிருந்து சாம்பசிவம் பிள்ளையின் தம்பி டி.வி. அண்ணாமலைப் பிள்ளையின் முகவரியைப் பெற்று, அவர் வழியாகச் சாம்பசிவம் பிள்ளையின் பணி அடையாள அட்டையிலிருந்த படத்தை வ. சுப்பையா பிள்ளை பெற்றிருக்கிறார். இன்று கிடைக்கப்பெறும் சாம்பசிவம் பிள்ளையின் ஒரே படம் இதுவேயாகும்.)
வ. சுப்பையா பிள்ளையின் இடையீட்டுக்குப் பிறகு, அகராதியின் கையெழுத்துப்படிகளும் அரைகுறையாக இருந்த அச்சுப்படிகளும் சென்னை அண்ணா நகர் சித்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதென அவர் 1972இல் குறித்துள்ளார்.
அங்கு அரசின் மானிய உதவியுடன் மூன்றாம் பகுதியின் பிற்பகுதி அச்சிடப் பெற்று பழைய படிவங்களோடு சேர்த்துக் கட்டப்பட்டு, வெளியிடப்பெற்றிருக்கிறது. இதில் அதன் இயக்குநர் டாக்டர் பு.மு. வேணு கோபால் முன்னின்றதாகத் தெரிகிறது. இவ்வெளியீடு 1972-1977க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். இப்பொழுது பார்க்கக் கிடைக்கும் முதல் மூன்று தொகுதிகளின் முதற்பதிப்புகளும் இச்சமயத்தில் கட்டப்பட்டதாகவே தெரிகின்றது.
இவ்வேளையில் கோவையின் விந்தை மனிதர் ஜி.டி. நாயுடுவை இந்த மருத்துவ அகராதி கவர்ந்திருக்கிறது. அவருடைய முயற்சியில் அடுத்த இரண்டு பாகங்கள் அச்சிடப்படலாயின. ஆனால் அவை வெளிவரும் முன் அவரும் காலமாகிவிட்டார். கடைசியில் 1977இலும் 1978இலுமாக சாம்பசிவம் பிள்ளையின் பேரகராதியின் நான்காம் ஐந்தாம் தொகுதிகள் வெளியாயின. 1931இல் தொடங்கிய மருத்துவ அகராதியின் அச்சுவாகனப் பயணம் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவு பெற்றது.
இவ்வாறு கடைசி மூன்று தொகுதிகளும் அச்சிட்டு, கட்டப்பட்டு முற்றுப்பெற்றபோது சில பதிப்புக் குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. நான் பார்த்த பிரதிகளெல்லாம் பழைய படிவங்களோடு புதிதாக அச்சிட்ட படிவங்களும் சேர்த்துக் கட்டடம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. தலைப்புப் பக்கமும் புதிதாக அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது தெரிகிறது. (சாம்பசிவம் பிள்ளையின் காலத்தில் முழுவதுமாக அச்சிடப்பட்டு, கட்டப்பட்ட பிரதிகளை நான் கண்ணுற இயலவில்லை.)
இந்தப் பிரதிகளில், வெள்ளோட்டமாக அச்சிடப்பட்ட சஞ்சிகையின் முகப்பை மாதிரியாகக் கொண்டு, 1931 எனப் பதிப்பு ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது. இது பிழை. 1938இல்தான் முதல் இரு தொகுதிகள் அணியமாயின என்பதை முன்னரே கண்டோ ம். மேலும் நான் பார்வையிட்ட ஓர் இரண்டாம் தொகுதியில் 930 முதல் 1488 பக்கம் வரை சாம்பசிவம் பிள்ளை காலத்து அச்சுப்படிவங்களும் 1489 முதல் 1752 பக்கம் வரை (ஜி.டி. நாயுடு அறக்கட்டளையால்) நான்காம், ஐந்தாம் தொகுதிகள் அச்சிடப்பட்ட அதே அச்சகத்தில் அதே தாளில் அச்சிடப்பட்டுள்ளது தெரிகிறது. இதிலிருந்து, சாம்பசிவம் பிள்ளை மறைந்தபொழுது பல அச்சுப் படிவங்கள் கட்டப்படாமல் இருந்திருக்கும் என எண்ண இடமுண்டு.
தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் அரிய பதிப்புகளெல்லாம் பெரும் அலைக்கழிப்புகளுக்குப் பின்னரே வெளிவந்திருக்கின்றன. தீயூழாக, இந்த முயற்சிகள் பற்றிய போதுமான பதிவுகள்கூட இல்லை. இவ்வளவு அரிய அகராதியைப் பற்றி 'சொல்பொருள்' என்ற 900 பக்க அளவில் அமைந்த சிறப்பான தமிழ் அகராதி வரலாறுகூட இரண்டு இடங்களில் பெயரளவில் மட்டுமே சுட்டுகிறது. 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மொழி அகராதி தயாரிக்கப்பட்ட அனுபவத்தை விளக்கும் சிறு நூலை பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தமிழ்ப் பதிப்பகம் வெளியிடும் (Emile Littre, How I Made My Dictionary, Cre-A, 1992) சூழ்நிலையில் டி.வி. சாம்பசிவம் பிள்ளை போன்ற அறிஞர்கள் போற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?
இத்துணை வளமும் செழுமையும் கொண்ட கலைக் களஞ்சியத்தை டி.வி. சாம்பசிவம் பிள்ளை உருவாக்கி, பாதி வெளியிட்டு, அவர் காலமான பின் நிறைவு பெற்றதை இனிக் காண்போம்.
பின்குறிப்பு
பல்லாண்டுகளாகக் கிடைக்கப்பெறாமல் இருந்த இந்த அகராதியைத் தமிழக அரசு 1990களில் மறுபதிப்பிட்டுள்ளது. எப்படி நூல் வெளியிடக் கூடாது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும். முதல் பதிப்பின் ஐந்து தொகுதிகளும் ஒரே சீராக ராயல் அளவில் தொடர் பக்க எண்களோடு நேர்த்தியாக அச்சிடப்பட்டவையாகும். புதிய 'பதிப்'போ ஆறு பகுதிகளாக வெவ்வேறு அளவில் அச்சிடப்பட்டுள்ளது. முதல் தொகுதி டெம்மிக்கும் குறைந்த அளவில் 1742 பக்கங்களில் புதிதாகப் பல பிழைகளோடு அச்சுக் கோக்கப்பட்டு ஒரே நூலாகச் செங்கல்போல் அமைந்துள்ளது. இரண்டாம் தொகுதி 'ஆப்செட்' முறையில் பழைய பதிப்பு அப்படியே படம்பிடித்து வெளியிடப்பட்டுள்ளது - நல்லவேளையாக! ஆனால் இது 929ஆம் பக்கத்தில் தொடங்கி 1752ஆம் பக்கத்தில் முடிகிறது! மூன்றாம் தொகுதியும் இதே 'ஆப்செட்' முறையில் 1753ஆம் பக்கம் தொடங்கி 2224ஆம் பக்கத்தில் முடிகிறது.
நான்காம் தொகுதி இரண்டு பாகங்களாகப் புதிதாக அச்சுக் கோத்து அச்சிடப்பட்டுள்ளது. காரணம் விளக்கப்படவில்லை. இதன் முதல் பாகம் 1ஆம் பக்க மெனப் புதிதாக இலக்கமிடப்பட்டு 1020ஆம் பக்கம்வரை உள்ளது. இரண்டாம் பாகம் இதன் தொடர்ச்சியாக 2000 பக்கம்வரை உள்ளது. ஐந்தாம் தொகுதி மட்டும் ராயல் அளவில் புதிதாக அச்சுக்கோத்து, 1 முதல் 1291 பக்கம் வரை எண்ணிடப்பட்டுள்ளது. அச்சுப் பிழைகள், வடிவமைப்பு, நேர்த்தி முதலானவை பற்றிச் சொல்லாமலிருத்தல் நலம். சாம்பசிவம் அகராதி தொடர்ந்து அச்சில் உள்ளது என்பதைத் தவிர இதில் மகிழ்வதற்கு ஏதுமில்லை.
துணைநூல்கள்
1. டி.வி. சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகராதிப் பதிப்புகள்.
2. டி.வி. சாம்பசிவம் பிள்ளை வெளியிட்ட மருத்துவ அகராதியின் மாதிரி சஞ்சிகைகள்.
3. அ. ராஜபூஷணம் மன்னையார், சித்த மருத்துவ மேதை டி.வி. சாம்பசிவம் பிள்ளை, குருவருள் பதிப்பகம், சென்னை, 2002.
4. வ. சுப்பையா, 'படந்தொகுத்தலிற் பட்டறிவு' (2), செந்தமிழ்ச் செல்வி, சூலை 1972.
கல்வி வள்ளல் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார்
1991 முதல் 1996 வரை தஞ்சாவூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார் அவர்கள். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒருநாள் தவறாமல் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு உயர்கல்வியில் ஒரு மாபெரும் யுகப்புரட்சியை நடத்தியவர். ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு கல்வி வழங்கியவர். இலவசமாக உணவும் உறைவிடமும் அளித்து கல்வியில் சாதனை படைத்தவர் துளசிஐயா வாண்டையார்.
எவரிடமும் நன்கொடை பெறாமல், குறிப்பாக மாணவர்களிடம் எதுவும் பெறாமல் கல்லூரியை நடத்த முடியும் என்று நடத்திக் காட்டி வரும் சாதனையாளர்களில் இவரும் ஒருவர் . அத்துடன் ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் தன் சொந்தப் பொறுப்பில் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்கும் கல்வி வள்ளல் இவர்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், ஐம்பதுகளைக் கடந்த பட்டதாரிகளை, ''எங்கே படித்தீர்கள்?'' என்று கேட்டால், அவர்களின் பெருவாரியான பதில், 'பூண்டி கல்லூரி’ என்பதாகத்தான் இருக்கும்.
'நாக்’ அமைப்பின் நான்கு நட்சத்திர அங்கீகாரத்தோடு, தன்னாட்சிக் கல்லூரியாக இயங்கும் திருபுட்பம் கல்லூரி, கல்வித் துறையில் தனியார் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணம். சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை, குறைந்த கல்விக் கட்டணம் என்று கிட்டத்தட்ட ஓர் அரசுக் கல்லூரிபோலவே மாணவர்களுக்குச் சலுகை காட்டுகிறார்கள் என்கிறார்கள் முன்னாள், இன்னாள் மாணவர்கள்.
இப்போது 7,000 மாணவ - மாணவிகள் படிக்கிறார்கள். ஆண்டுதோறும் 200 மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. கல்லூரி வளாகத்திலேயே, அரசுப் பதிவு பெற்ற சித்த - ஆங்கில மருத்துவ மையம் இயங்குகிறது. மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிகிச்சை இங்கே இலவசம்.
நூலகத்துக்கு என்றே தனி வளாகம். நாட்டின் சிறந்த 300 நூலகங்களில் ஒன்று என்ற பெருமையுடன் கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த நூலகத்தில், லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. ''இந்த நூலகமும் கல்லூரியின் முகப்பில் உள்ள பிரமாண்ட தியான மண்டபமும் ஒவ்வொரு மாணவரும் தவறாமல் தினமும் வந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு கட்டப்பட்டவை. கல்லூரியைச் சுற்றி உள்ள தோட்டங்களில் நெல்லும், காய்கறிகளும் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில் இருந்துதான் விடுதி மாணவர்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. 'முதலில் ஒழுக்கம், அடுத்துதான் கல்வி’ என்பது கல்லூரியின் தாளாளர் துளசி அய்யா வாண்டையாரின் கொள்கை. இயற்கை வேளாண்மையின் முக்கியம் மாணவர்களுக்கு பயன்பாட்டின் அடிப்படையில் தெரிய வேண்டும் என்பார் அவர். பூண்டிக் கல்லூரி தன் மாணவர்களுக்குத் தர விரும்புவதும் இதைத்தான்''
திருமதி. இராசமோகன் களத்தில் வென்றார்அனந்தநாயகி. 1929 - 2001
நடராஜ வாண்டையாரின் திருமகளாய் தஞ்சை குமரலிங்கத்தில் 18/06/1929ல் பிறந்து சென்னையில் வாழ்ந்தார். பாபநாசத்தில் பள்ளிக்கல்வியும் இராணி மேரி கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உயர்கல்வியும் கற்றார். இவர் 1946 ம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராகவும் இரு முறை சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் இருந்தவர். படிக்கும்போதே துடிப்புடன் சொற்பொழிவுகள் ஆற்றியவர். பொதுநல தொண்டுகள் புரிவதில் வல்லவர். வழக்கறிஞர் பட்டமும் பெற்று வாதத்திறமையுடன் நீத்மன்றங்ககளில் வாதிட்டு பிற்படுத்தப்பட்டோர் நலனுக்குகாக பாடுபட்டவர்.திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில் கிராமத்தில் திரு இராசமோகன் களத்தில் வெண்றாரை கரம்பிடித்தார்.
ஒரு சிறந்த அரசியல்வாதி, சமூக சேவகர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மூன்றுமுறை - 1957, 1962 மற்றும் 1971ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ்தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் அருந்தொண்டுகள் ஆற்றியவர். உற்றார்,உறவினர் மற்றும் சுற்றத்தினர் அனைவருக்கும் பாகுபாடின்றி உதவிகள் பல செய்தவர். பண்புடன் பழகும் பண்பினை பெற்றவர். அழகு தமிழ் மேடைப் பேசுகளில் காங்கிரஸ் அவைகளை அலங்கரித பெருமை கொண்டவர். சட்டப்படிப்பு முடியும் முன்பே சென்னை மாநகராட்சியில் உறுப்பினராகி காங்கிரஸ் கட்சியை வலுப்பெற செய்த பெருமைமிக்கவர். மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினாராகி மக்களுக்கு அரும் பணியாற்றி மகிழ்வுற்றவர்.
வீரத்தமிழருக்கு ஆவேச கடிதங்கள் என்ற கவிஞர் சுத்தானந்த பாரதியின் நூலில் 70 ஆண்டுகளுக்கு முன்பே அனந்தனாயகி இடம்பெற்றார். தன் தகுதிக்கும் உழைப்புக்கும் உகந்த எந்தப் பதவியும் எதிபாரமலும் அடையாமலும் உண்மையான தியாகியாகவே இறுதிவரை காங்கிரஸ் கட்சிக்கு உழைத்து வாழ்ந்து வந்தவர். 1975ல் நெருக்கடி காலத்தில் அவசரகோலத்தில் காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோது மனம் தளர்ந்து காங்கிரஸ்சில் இருந்து சிறிது ஒதுங்கி இருந்தார். இக்கால கட்டத்தில் தேவர் பேரவை தலைமைப் பொறுப்பு இவரைத் தேடி வந்தது. தேசிய பாரம்பரியத்தின் உணர்வோடு தேசிய இயக்கத்தை வளர்ந்த அம்மையாரால் சாதிய உணர்வுகளையும் அதன் உட்பூசல்களையும் சகிக்க முடியாமல் அப்பதவியை உதறினார். நாடும் சமுதாயமும் தான் வளர்த்த காங்கிரஸ் இயக்கமும் நலிந்து வருவதை கண்டு கவலையுற்று தானும் நலிந்து இறுதிக்காலத்தை தன் இல்லத்துக்குள்ளேயே முடித்துக்கொண்டார். தான் சார்ந்த இயக்கத்துக்கும் நாட்டுக்காகவும் உழைத்தாரே தவிர அந்த இயக்கத்தால் எந்த ஒரு பயனும் அடையாத புடம் போட்ட தியாகியாகவே வாழ்ந்து மறைந்தார்.
மொழி,நாடு, இயக்கம், இனம் என்ற பந்தங்களுக்கு குந்தகம் வராமல் பார்புகழ் மங்கையாக, தேசியவாதியாக இறுதிவரை வாழ்ந்து மறைந்த நம் குல செல்வியை எண்ணி நாம் பெருமையும் பாடங்களும் கற்றுக்கொள்ள வேண்டும். அறிவிற் சிறந்தோர், ஆற்றல்மிகு பெரியோராகிய அனந்தநாயகி என்னும் அற்புத மங்கையின் புகழ் விண்ணும் மண்ணும் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.
எதிரிகளுக்கும் உதவி செய்து சர்வகட்சித்தோழர் என்று புகழப்பட்டவர். ஒன்றியப்பெருந் தலைவர், மாவட்டச்செயலாளர், அமைச்சர் என் எந்த நிலையிலும் பிறந்த சமுதாயத்தை மறவாத இனப்பற்றாளர். கலைஞர் கருனாநியின் சட்டமன்ற நுழைவுக்கு 1957ல் குளித்தலை தொகுதியை வாயிலாக்கிய நாள் முதல் இறுதிமூச்சுவரை பிறருக்கு உதவி செய்தே புரவலர் எனப் போற்றப்பட்டவர்.