அழகர் மலையின் பழமைச் சிறப்பு
"அழகர் மலை" என்பது மதுரைக்கு வடக்கே 21 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இதில்அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது. இதற்குத் திருமாலிருஞ் சோலை,
உத்யான சைலம்,
சோலைமலை,
மாலிருங்குன்றம்,
இருங்குன்றம்,
வனகிரி,
விருஷ பாத்திரி
இடபகரி
முதலிய பல பெயர்கள் உண்டு. இது கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோயில் இருக்கிறது. இம் மலையில் பலவகை மரங்களும் ,செடிகளும் , கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியைத் தந்து நிற்கின்றன. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதைச் சோலைமலை, திருமாலிருஞ் சோலை, வனகிரி, முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள்.
இச்சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகிப் கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டுகிறது
இங்கு கோயில் கொண்டு உறைகின்ற இறைவன் "அழகர் " என்று போற்றப்படுகிறார். இவரே வடமொழியில் "சுந்தர ராஜன்" என்று சொல்லப்படுவர். திருமாலுக்கும் அவருடைய அவதாரமாகிய இராமபிரான் முதலானவர்களுக்கும் அழகர் என்னும் பழைய தமிழ் நூல்களிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. அழகர் என்பதற்கு அழகுடையவர், அழகானவர் என்று பொருள் மதுரை நகரத்தில் உள்ள பழைய திருமால் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்திக்கும் கூடலகர் என்னும் பெயர் ஏற்பட்டிருப்பதும் இதனால் தான். இன்னும் பல திருத்தலங்களிலும் எம் பெருமானுக்கு அழகர் என்றும் சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள் உண்டு. 108 திவ்ய தேசங்களில் அன்பில் என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் திருநாகை ( நாகப்பட்டினம் ) என்றதிருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் மற்றும் கூடல் ( மதுரை ) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
கள்ளழகர் திருத்தலம் மிகவும் பழமையானது. இது எப்பொழுது தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது .மிகவும் பழைய தமிழ் நூல்களிலும் வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை பேசப்பட்டிருக்கிறது. இங்கே உள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகியவை பற்றி
வராக புராணம்,
பிரம்மாண்டமான புராணம்,
வாமன புராணம்,
ஆக் நேய புராணம்
முதலியவற்றில் மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
மூலவர்-பரமஸ்வாமி
உற்சவர்-சுந்தர்ராஜப் பெருமாள்( ரிஷபத்ரிநாதர்),கல்யாணசுந்தர வல்லி
தாயார்-ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம்-ஜோதி விருட்சம், சந்தனமரம்
தீர்த்தம்-நூபுர கங்கை
பழமை-1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்-திருமாலிருஞ்சோலை
ஊர்-அழகர்கோவில்
மாவட்டம்-மதுரை
மாநிலம்-தமிழ்நாடு
அழகர் மலை)என்னும் இம்மலை 7 மலைகளை கொண்டது.
திருவிழாக்கள்
சி்த்திரைத் திருவிழா - 10 நாட்கள்.
ஆடிப் பெருந்திருவிழா - 13 நாள்.
ஐப்பசி தலை அருவி உற்சவம் - 3 நாள்.
இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி,பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வாரத்தின் சனி ஞாயிற்று கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது
இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி, அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாகச் செலுத்துவார்கள்.
காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி, அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.
நூபுர கங்கை என்னும் சிலம்பாறு - ராக்காயி (அம்மன் கோயில்)அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது.
பெருமாள் சப்தரிஷிகள், சப்த கன்னிகள், பிரம்மா, விகனேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார்.
6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம்
சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.
புத்தம், சமணம், இசுலாம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதற்காக சரித்திர சான்றுகள் உள்ளன.வைணவம், சைவம் என்ற பேதமில்லாமல் இக்கோயிலில் ஆராதனை நடைபெறுவது மற்றொரு சிறப்பு.
மூலவருக்கு, அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
பாடியவர்கள்:
பெரியாழ்வார்,
ஆண்டாள்,
பேயாழ்வார்,
திருமங்கையாழ்வார்,
பூதத்தாழ்வார்,
நம்மாழ்வார். மங்களாசாஸனம்
இரண்டு அழகர் தலங்களை அழகர் மலை கொண்டுள்ளது. ஒரு அழகன் அடிவாரத்தில் இருக்கும் பெருமாள் அழகர்(கள்ளழகர்). மற்றொருவர் மலைமீது குடிகொண்டுள்ள தமிழ் அழகன் முருகன். ஆம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை(சுட்ட பழம்) அழகர் மலையில் உள்ளது.அழகர் கோவில் மற்றும் மலையை சுற்றி இருந்த ஊர் அழகாபுரி என்ற பெயரைக்கொண்டு இருந்தது.அழகர் கோவில் அழகாபுரி கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் மிஞ்சிய பாகங்களை இன்றும் கோவிலைச்சுற்றிக் காணலாம். இங்கே மூலவராக இருக்கும் பெருமாளின் மற்றொரு பெயர் பரமஸ்வாமி என்னும் சிவனின் பெயர். மத ஒற்றுமைக்காக இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிரசாதமாக அழகர் கோவில் புகழ் தோசை தருகிறார்கள். இங்கே இருக்கும் விநாயகரின் பெயர் தும்பிக்கை ஆழ்வார். இங்கே ஆண்டாளின் சன்னதிகூட உண்டு. ஆண்டாள் இங்கே பெரியாழ்வாருடன் வந்ததாக வரலாறு உண்டு. கள்ளழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் திருத் தலங்களிலேயே ராஜகோபுரத்தில் தங்கக் கலசம் கொண்ட ஒரே கோவில். கோபுரம் முழுவதும் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது.
மலை மீது சென்றால் பழமுதிர்சோலையையும் முருகன் சந்நிதானத்தையும் காணலாம். மிக அழகான அமைதியான ஒரு இடமாகும். பழமுதிர்சோலையை அடுத்து ஒரு மூலிகை வனம் உண்டு. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த வனத்தில் பல அரிய மூலிகைகளை பராமரித்து வருகிறார்கள். இங்கே மரக்கன்றுகளை வாங்கலாம். இன்னும் சிறிது தூரம் சென்றால் அழகர் தீர்த்தம் என்றழைக்கப்படும் நூபுர கங்கை இருக்கிறது. என்றும் வற்றாத இந்த நீரானது கங்கை நீரை விட புனிதமானதாகக் கருதப்படுகிறது. மலைகளின் வழியாக வருவதால் பல்வேறு மூலிகை கடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவத்தன்மை உடையது என்று நம்பப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் குளிப்பதற்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கே ராக்காயி அம்மன் கோவில் உள்ளது.
மதுரை என்றால் நினைவில் கொள்ள வேண்டியது
1. தமிழ்ச் சங்கம் இருந்த இடம் சங்கப் புலவர்கள் வாழ்ந்த இடம்,
2.சிவபெரு மான் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்த இடம்,
3. மதுரைக் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளம், ஆலவாய் இறைவன் சொக்கநாதரின் கட்டளைப்படி
சங்கப் புலவர்களுக்கு இருப்பிடமாக, சங்கப்பலகை தாங்கியிருந்தது.
4.நக்கீரரின் திரு முருகாற்றுப்படை தோன்றிய இடம்,
5.முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம்,
6. முருக னின் ஆறுபடை வீடுகளில் மற்றொன்றான பழமுதிர்சோலை,
7.வைஷ்ணவ திவ்ய தேசங்கள் 108இல் ஒன்றான அழகர் கோயில் உள்ள இடம்
8. திருக்குறள் அரங்கேறிய இடம்,
9. மணிமேகலை காப்பியம் தோன்றிய இடம்,
10. திருவாசகம் தந்த மணிவாசகர் வாழ்ந்த இடம்,
11.சைவ சமயத்தின் பெருமையைத் திருஞானசம்பந்தர் நிலைநிறுத்திய இடம்,
12.சைவத் திருமுறைகளில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் இடம்,
13.பெரியாழ்வார் "பல்லாண்டு பாசுரம்' பாடிய இடம்,
14. பெரிய புராணம் குறிப்பிடும் 63 நாயன்மார்களில் நான்கு பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 1. மங்கையர்க்கரசியார், 2.நின்றசீர் நெடுமாறன், 3.குலச்சிறையார், 4. மூர்த்தி நாயனார்;
15.திருவிளையாடல் புராணம் பிறந்த இடம்,
16. குமரகுருபரர் "மீனாட்சி பிள்ளைத் தமிழ்' பாடிய இடம்,
17. சைவ சமய ஆச்சாரியரான குருஞானசம்பந்தர் "சொக்கநாத வெண்பா' பாடிய இடம்,
18. மீனாட்சி சந்நதி பிராகாரத்தில் "கூடல் குமரன்' முருகன் எழுந்தருளியுள்ளார். இவரைப் பற்றிய பாடல்
அருணகிரிநாதரின் திருப்புகழில் இடம் பெற்றிருக்கிறது. இவ்விதம், தமிழ் இலக்கியங்களில் முதலிடம்
பெற்ற இடம் மாமதுரை மூதூர். "மூதூர்' என்ற சொல்லுக்கு, "பழைய ஊர்' என்றுதான் பொருள். ஆனால்
தமிழ் இலக்கியங்களில், "மூதூர்' என்றால் அது மதுரைத் திருத்தலத்தை மட்டும்தான் குறிக்கும்.
கரிகாலன் கட்டிய சிவாலயம்
கரிகால் சோழனின் பெருமையை இன்றும் தமிழ்நாட்டில் பறை சாற்றிக்
கொண்டிருக்கும் அற்புதமான வரலாற்றுச் சான்றாக ஒரு சிவாலயம் திகழ்கின்றது.http://www.dinamani.com/Images/article/2010/7/1/shrilordsivasiva.jpg
திருச்சிக்கு அருகே உள்ள கிராமம், சர்க்கார் பாளையம். திருச்சி சத்திரம்
பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வூர்.
இங்குதான் கரிகாலன் கட்டிய சிவாலயம் உள்ளது.
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர், காசி விஸ்வநாதர். இறைவி,
விசாலாட்சி அம்மன்.
இந்த ஆலயத்தின் வரலாறு என்ன?
கரிகாலன் உறையூரை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட நேரமது. காவிரி
அன்னை தன் விருப்பம் போல் பரந்து விரிந்து, ஊரெங்கும் பாய்ந்து
கொண்டிருந்தாள்.
காவிரியைக் கட்டுப்படுத்த துணை வாய்க்கால்களோ, அணைகளோ கிடையாது. இதனால்
வெள்ளம் வரும் போதெல்லாம் ஊருக்குள் தண்ணீர் புகுந்து, குடியிருப்பு
மற்றும் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தி வந்தது.
மக்கள் பரிதவித்தனர்.
"இதற்கு என்னதான் முடிவு?"
என்று, மக்கள் மன்னனிடம் சென்றனர்; தாங்கள் படும் இன்னல்களையும்,
துயரங்களையும் அவனிடம் எடுத்துக் கூறினர்.
"உரிய நடவடிக்கை எடுக்கிறேன்" என்று கூறி அவர்களை அனுப்பிய மன்னன்,
யோசிக்கத் தொடங்கினான்.
என்ன செய்வது?
காவிரியில் ஒரு அணையைக் கட்டுவதுதான் இதற்கு உரிய நிவாரணம் என்று உணர்ந்த
மன்னன், தனது பரிவாரங்களுடனும் படைவீரர்களுடனும் அணை கட்ட உரிய இடத்தைத்
தேர்வு செய்யப் புறப்பட்டான்.
அவன் சென்ற வழியில் இருந்தது சர்க்கார் பாளையம் என்ற கிராமம். (அந்தக்
காலத்தில் இவ்வூரின் பெயர் வேறானதாக இருக்க வேண்டும்).
மன்னனும், படைவீரர்களும் அந்தக் கிராமத்தின் அருகே வந்தபோது, காவிரியில்
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் உடைப்பு
ஏற்பட்டு, கிராமத்திற்குள் தண்ணீர் பாய்ந்தது. இதனால் மன்னனும், படை
வீரர்களும் மேலே செல்ல இயலவில்லை. அவர்கள் பயணம் தடைபட்டது. காவிரியின்
உடைப்பை அடைக்க படை வீரர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது.
செய்வதறியாது தவித்து நின்றான் கரிகாலன். அவன் மனம் இறைவனை நோக்கிப்
பிரார்த்தனை செய்தது.
இறைவா? இந்தத் துயரிலிருந்து நான் மீள முடியாதா?
என் மக்களை நான் காப்பாற்ற முடியாதா?
என்று மனமுருக வேண்டினான்.
அப்போது ஒரு அசரீரி திடீரென்று ஒலித்தது. "மன்னா! இந்த இடத்தில் நீ ஒரு
கோயில் கட்டு. உடைப்பு நிற்கும்'' என்றது அந்தக் குரல்.
மனம் சிலிர்த்தான் மன்னன்.
கண்கள் கலங்கினான்.
கரங்கூப்பி விண்ணைப் பார்த்தான். "அப்படியே செய்கிறேன்'' என்றான்
நெகிழ்ந்த மனதோடு.
வெள்ளம் வடியத் தொடங்கியது.
மன்னன் தன் படை வீரர்களைக் கொண்டு அந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டத்
தொடங்கினான். அந்தக் கோயில்தான் சர்க்கார் பாளையத்தில் உள்ள அருள்மிகு
காசி விஸ்வநாதர் ஆலயம்.
பின் அங்கிருந்து 11 கி.மீ. தொலைவில் காவிரியில் ஓர் அணையையும் கட்டத்
தொடங்கினான் மன்னன் கரிகாலன்.
அதுதான் கல்லணை!
"கோயிலைக் கட்ட முடிவு செய்த மன்னன், சிலரை காசிக்கு அனுப்பி ஒரு
சிவலிங்கம் கொண்டு வரும்படி கூறினானாம். அவர்களும் புறப்பட்டுச்
சென்றுள்ளனர். அதற்குள் இங்கே கோயில் திருப்பணிகள் விறுவிறுவென
நடந்தேறியுள்ளன. கும்பாபிஷேக நாளும் குறிக்கப்பட்டது. ஆனால், காசிக்குச்
சென்றவர்கள் திரும்பி வரவில்லை. கோயில் விஷயங்களில் தேர்ந்தவர்களைக்
கலந்து ஆலோசித்தான் மன்னன்.
குறிப்பிட்ட நாளில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடிப்பதே நல்லது என அவர்கள்
அறிவுரை கூறினர். வேறு ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துவிடலாம் என்றும்
அவர்கள் கூறினர்.
உடனே சிற்பிகளால் ஒரு சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில்
அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகத்தையும் நல்ல முறையில்
நடத்தினான் கரிகாலன். சில நாட்கள் கடந்த பின், காசிக்குச் சென்றவர்கள்
தங்களுடன் ஒரு சிவலிங்கத்துடன் திரும்பி வந்தனர்.
"புதிய சிவலிங்கத்தை என்ன செய்வது?"
என்று யோசித்தான் மன்னன்.
அந்த சிவலிங்கத்தை அலட்சியப்படுத்தாத அவன், அதனை அருகே இருந்த தல
விருட்சமான வில்வ மரத்தடியில் பிரதிஷ்டை செய்தான். அந்தக்
காசிலிங்கத்திற்கும் மூலவருக்கு நடைபெறும் ஆராதனைகளும், அபிஷேகங்களும்
நடைபெற ஏற்பாடு செய்தான்" என்று இப்பகுதியில் இக்கோயில் கட்டப்பட்ட விதம்
பற்றிய கர்ண பரம்பரைச் செய்தி உலவுகிறது.
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்ததும் எதிரே சற்றே உயர்ந்த மகாமண்டபம் இருக்கின்றது. வலது
புறம் அன்னை காசி விசாலாட்சி, நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி
அருள்பாலிக்கிறாள். எதிரே பலிபீடமும், நந்தியும் இருக்க, அர்த்த மண்டப
வாயிலில் துவார பாலகர்களின் திருமேனிகள் கருங்கற்களில்
வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலே கஜலட்சுமியின் சிற்பம் உள்ளது.
அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன் காசி விஸ்வநாதர்,
லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலயத்தின்
தெற்குப் பிரகாரத்தில், காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட "காசிலிங்கம்"
தனி மண்டபத்தில் பிரதிஷ்டை ஆகியுள்ளது. எதிரே நந்தி பகவான் அருள்பாலிக்க,
இறைவனின் பின்புறம் தல விருட்சமான வில்வ மரம் உள்ளது. வடகிழக்கு
மூலையில் நவக்கிரக நாயகர்களுக்கு தனி மண்டபம் உள்ளது.
இறைவனின் சந்நிதியின் முன் உள்ள மகாமண்டபத்தின் உச்சியில் 12 இராசிகளின்
உருவங்களும் கருங்கற்களில் செதுக்கப்பட்டு பொறிக்கப்பட்டுள்ளது இந்த
ஆலயத்தில் உள்ள சிறப்புகளில் ஒன்றாகும்.
இந்த ஆலயம் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. காலை 7 முதல் 11 மணி வரையிலும்,
மாலை 5 1/2 முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றும் திருவிழா, இங்கு மிகவும் சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திரத்தன்று பால் குடம், அலகு காவடி, தீ மிதி என்று இந்த ஆலயம்
திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
ஆடி, தை வெள்ளிகளில் இங்கு திருவிளக்குப் பூஜை நடைபெறுகின்றது. ஏராளமான
பெண்கள் கலந்து கொள்கின்றனர். சிவராத்திரி அன்று ஐந்து கால பூஜையும்,
பிரதோஷம், சோமவாரம், தை, சித்திரை மாதப் பிறப்புகள், நவராத்திரி,
சிவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
ஆலயத்தின் அருகே காவிரி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுவே இந்த
ஆலயத்தின் தீர்த்தமும் கூட. பழமையான இக்கோயிலில் தற்போது சில
திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சியிலிருந்து இந்த ஆலயம் செல்ல
நிறைய நகரப் பேருந்துகள் உள்ளன. கல்லணை செல்லும் நகரப் பேருந்துகள் சில
இந்த ஆலயம் வழியே செல்கின்றன. ஆட்டோ, கால் டாக்ஸியிலும் வரலாம்.
காசிக்குப் போய் காசி விஸ்வநாதரைத் தரிசிப்பதால் பெறும் பலனை இங்கு
அருள்பாலிக்கும் இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் பெறலாம் என
நம்புகின்றனர் சுற்று வட்டாரத்திலுள்ள பக்தர்கள். காசிக்குப் போக வசதி,
வாய்ப்பு இல்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து ஈசனின் அருள் பெற்று
மகிழலாமே!
ஆதித்ய சோழன் பள்ளிப்படை
கண்ணப்ப நாயனார் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட புண்ணியத்தலம் காளஹஸ்தி அதன் அருகில் உள்ளது தொண்டைமான் ஆற்றூர் என்ற ஊர். இப்பொழுது ஆந்திர தேசத்தில் இருக்கிறது சோழர்காலத்தில் கட்டிய கோதண்ட ராமேச்வரம் என்னும் ஆதித்தேச்வரர் கோயில் அவ்வூரில் இருக்கிறது. வரலாறு படைத்த ஒரு மிகப்பெரிய சோழப் பேரரசனுடய கோயில் இது. இதன் வரலாறு மிகவும் சுவயானது.
தமிழ்நாட்டின் வடபகுதியை மிகப் பெரும் பேரரசாக 500 ஆண்டுகள் ஆண்டவர்கள் பல்லவர்கள். அந்தப் பல்லவப் பேரரசுக்கு இன்றைக்கு சரியாக 1100 ஆண்டுகளுக்கு முன்னர் முற்றுப்புள்ளி வைத்தவன் அந்த சோழப் பேரரசன். அவனுக்கு ஆதித்த சோழன் என்று பெயர். அவன் ஏறக்குறைய கி.பி. 887ல் பல்லவ அரசன் அபராஜிதன் என்பவனை சண்டையில் வீழ்த்தி தொண்டை நாட்டை அதாவது காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு முதலிய பகுதிகளைக் கைப்பற்றினான். அதனால் அவன் "தொண்டை நாடு பாவிய சோழன்" என்று பட்டம் பூண்டான். அதோடு தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சி முடிந்துவிட்டது.
ஆதித்த சோழன் கொங்கு நாட்டையும் வென்று அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்கு பொன் வேய்ந்தான். சோழ சாம்ராஜ்யத்தை தோற்றிவித்த விஜயாலய சோழனுடைய அருமை மைந்தன் அவன். சிறந்த சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயிலை சிவபெருமானுக்கு எடுத்தவன். அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில் இருக்கின்றன. அவன் காலத்து சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் உன்னதக்கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன் தொண்டைமானாற்றூரில் இறந்து போனான்.
அந்த ஆதித்த சோழனுக்கு எடுக்கப்பட்ட சமாதிக கோயில்தான் இது. அக்காலத்தில் சாமாதிக் கோயிலை "பள்ளிப்படை" என்று கூறுவர். அரசர் இறந்தால் அவரை ஈமத்தீயிலோ அல்லது குழியிலோ இடுதலை பள்ளிப் படுத்தல் என்று கூறுவர். ஆதலின் அங்கு எடுத்த கோயிலை பள்ளிப்படை என்பார்கள். ஆதித்த சோழனுடைய சமாதிலிங்கத்தை இக்கோயில் கருப்ப கிருஹத்தில் இன்றும் காண்கிறோம். ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில் உள்ளது. அதிலிருந்து இக்கோயிலைப் பற்றி பல செய்திகளை அறிகிறோம்.
ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு இக்கோயிலில் ஏற்பாடு செய்யபட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம் அன்று ஒரு நாள் விழா நடத்த வகை செய்யப்பட்டது. கி.பி. 940ல் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது இந்த கோயில் வாகீஸ்வரபண்டிதர் என்பவரின் பார்வையிலிருந்தது. அவர் ஒரு மகாவிரதி. அவர் தான் இந்த விழா நடத்த 105 கழஞ்சு பொன்னும் 4000 காடி நெல்லும் கொடுத்தார். இதிலிருந்து வரும் வட்டியாக ஆண்டுதோறும் ஆயிரம் காடி நெல் இக்கோயிலுக்கு அளக்கவேண்டும். இதை கொண்டு இந்த ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்கவேண்டும். இந்த ஆயிரம் பேரில் 500 பேர் எல்லா சமயத்தையும் சேர்ந்த அடியார்களாக இருக்கவேண்டும். "பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. பிராமணர் 300 பேரும் மற்ற 200 பேர் தபஸ்விகளாகவும் இருக்கவேண்டும். "தபஸ்விகளில் மகாவிரதிகள் உட்பட ஆறுசமயத்து தபஸ்விகள் இருநூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. ஆறு சமயத்து தபஸ்விகள் என்பது சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளைக் குறிக்கும். இவற்றை அகச் சமயம் ஆறு என நம் பண்டைய நூல்கள் கூறும். சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஆறு சமயம் என்று கல்வெட்டு கூறுவதால் அன்றே இவ்வகைச் சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்று அறிகிறோம்.
இக் கல்வெட்டின் மூலம் மேலும் பல செய்திகள் அறியமுடிகிறது. இவ்விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் முதலியோருக்கு நெல் அளந்தனர்.
இவ்வூரில் இந்திர விழா நடத்தப்பட்டது. இங்கு ஒரு கல்விச்சாலையும் இருந்தது. அதற்கு நெல் ஆண்டுதோறும் அளந்தனர். இக்கோயிலில் நாட்டிய அரங்கம் இருந்தது. அதற்கு உடனுக்குடன் வேண்டும்போது பழுது பார்க்க தச்சனுக்கு நெல் கொடுத்தனர். இந்த அரங்கத்தில் இவ்விழாவை ஒட்டி நாட்டிய நாடகங்கள் கூத்துகள் நடத்தப்பட்டன. இங்கு கூத்தாடினார்க்கும் பாடினார்க்கும் நெல் கொடுக்கப்பட்டது.
இந்த தர்மத்தை இக்கோயிலில் இருந்த மகாவிரதிகளும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்களும் காத்துத் தரவேண்டும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் மகாவிரதிகள் கீழ் இருந்தது. இது சமாதிக் கோயில் ஆதலால் மகாவிரதிகள் இங்கு இருந்திருக்கிறார்கள்.
சைவ சமயக் கோயில் ஆனாலும் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த 500 பக்தர்களுக்கு திருவிழா ஏழு நாட்களுக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்னும் கட்டளை அன்றைய பரந்த சமய நோக்கை குறிக்கிறதல்லவா?
இப்போழுதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அது கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. இறந்து போனவர்களுக்கு கோயில் கட்டும் வழக்கம் நம் நாட்டில் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பதற்கு இக்கோயிலே சான்று. விமானம் கோபுரம் லிங்கம் நந்தி முதலிய எல்லாம் நிறைந்த பெருங்கோயிலாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் இது வழிபாட்டில் இருக்கிறது. ஏன் தெரியுமா? நம் முன்னோர் இறந்திடில் தெய்வத்தோடு ஒன்றி தெய்வமாகவே நிற்பர் என்பது நமது தத்துவம். நம்பிக்கையும் கூட. இறந்து ஆயிரத்து நூறு ஆண்டுகளாகியும் என்றும் தெய்வமாக இங்கு நிற்கிறான் தமிழகத்தில் வரலாறு படைத்த பெரும் சோழச் சக்கரவர்த்தி. ஆதித்த சோழன் இறந்தும் இறந்திலான்.
குந்தவை
சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம்இராஜராஜனின் தமைக்கையும், ஆதித்த கரிகாலனின் தங்கையும், சுந்தர சோழரின் மகளுமாவாள். சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும் வாணர் குலத்து குறுநில மன்னனுமான வல்லவரையன் வந்தியத்தேவனை மணமுடித்தவள். இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் மதிப்புடன் இருந்ததாகவும் பல தானங்கள் தருமங்கள் செய்திருக்கிறாள் என்றும் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது
கல்வெட்டு ஆதாரங்கள்.
இராஜராஜனின் தந்தையின் பெயரால் அமைக்கப்பட்ட "சுந்தர சோழ விண்ணகர்" என்னும் விஷ்ணு கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்து வந்துள்ளது, அந்த மருத்துவமனைக்கு குந்தவை பிராட்டி பல தானங்கள் வழங்கியிருக்கிறார் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. இராஜராஜனின் 17-ம் ஆண்டில்(கி.பி. 1002ல்) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்றும் அதன்படி பிரமதேயங்களிலுள்ள நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல்லோரும் தங்களுடைய நிலங்களை விற்றுவிட வேண்டும் என்றும் இந்த கட்டளைக்கு நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போர் மட்டும் விதிவிலக்கென்று கொண்டுவரப்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. இப்படி இராஜகேசரி சதுர்வேதி மங்களத்தில் விற்கப்பட்ட நிலங்களை அரசனின் தமக்கை குந்தவை தேவியாரே வாங்கி, அவ்வூர்க் கோயிலுக்குத் தானமாக அளித்தார் என்றும் தெரியவருகிறது.
இப்பொழுது 'தாராசுரம்' என வழங்கும் இராஜராஜபுரத்தில் குந்தவை தேவி, பெருமாளுக்கு ஒரு கோயிலும், சிவனுக்கு ஒரு கோயிலும், ஜீனருக்கு ஒரு கோயிலுமாக மூன்று கோயில்களை ஓரிடத்திலேயே கட்டினாள். இம்மூன்று தேவாலங்களுக்கும் அவள் வழங்கிய கொடைகளை அங்கிருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகிறது. குந்தவை தேவி அளித்த நகைகளின் பட்டியல்களில் தங்கத்தால் ஆனதும், வைணவர்கள் நெற்றியும் இட்டுக் கொள்ளும் சின்னமாகிய 'நாமம்' என்னும் இறுதிச் சொல்லுடன் முடிவடையும் நகைகளின் பெயர்களும் உள்ளன. இப்படி பல தானங்களைக் கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்யும் வலமிக்கவராக முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் குந்தவை தேவியார் இருந்திருக்கிறார்.
அதே போல் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்குகுந்தவை தேவி, 10,000 கழஞ்சு எடையுள்ள தங்கத்தையும் 18,000 கழஞ்சு மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்து சிறப்பித்திருக்கிறார் என்று, பெரிய கோவில் சுவர்களும் தூண்களும் சொல்லுகின்றன. சமணர்களுக்கான ஒரு சமணர் கோயிலைதிருச்சிராய்ப்பள்ளி மாவட்டம் திருமழபாடியில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
எமது வரலாறுகளை மீளாய்வு செய்து தவறுகள் இருப்பின் இதயசுத்தியுடன் வேண்டிய திருத்தங்களைச் செய்வதும் எமது கடமையாகும் . இதிலிருந்து தவறுபவர்கள் தமிழ்மீது பற்றுள்ளவர்களாக இருக்கமுடியாது . அந்தவகையில் தமிழக உறவான சொப்னாவின் பதிவு இந்தக்கருத்துக்களத்தில் ஆரம்பப் புள்ளியாக இருக்கின்றது . பதிவை இணைத்தமைக்கு சொப்னாவிற்கு மிக்க நன்றிகள் .
காலத்தால் மூத்த கல்லணை .
நீர்ப்பாசன பொறியியல் துறையில் உலகுக்கே தமிழர் முன்னோடி என்ற உண்மையை கரிகாலன் கட்டிய கல்லணை பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறது.அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் கட்டுரையை இங்கே காண்போம்.(உண்மை ஜனவரி 1631/2010 இதழில் முனைவர் பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் எழுதிய கட்டுரையை நன்றியுடன் இங்கே அறியத்தருகிறோம்.)சங்க காலத்திய முடியுடை மூவேந்தர்களில் சோழ மன்னர்களில் தலை சிறந்தவர் கரிகாற்சோழன். கரிகாலனைப் பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை முதலிய பத்துப்பாட்டு நூல்கள் புகழ்ந்து உரைக்கின்றன.
கரிகாற் சோழனின் பெருமைக்கு இன்றும் சான்றாய் விளங்குவது அவன் கட்டிய கல்லணை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் தமிழனின் பொறியியல் ஆற்றலுக்குப் புகழ்ப் பரணி பாடிக்கொண்டிருப்பது காவிரியில் கரிகாலன் கட்டிய கல்லணை. பொங்கிச் சிரிக்கும் தஞ்சையாகச் சோழப்பெருநாடு, பொய்யாச் சிறப்பின் வளம் பெற்ற மண்ணாகச் சோழநாடு சோறுடைத்து என்று பெருமை பெறக் காரணமான காவிரிப் பெண்ணுக்குக் கால்கட்டாகக் கல்லணையைக் கட்டிப் பெருமை பெற்றான் இந்தச் சோழ வேந்தன் . இந்தக் காவிரிப் பெண் எங்கு பிறந்து, எங்குத் தவழ்ந்து வருகிறாள் என்று கொஞ்சம் மேற்கே திரும்பிப் பார்ப்போம்.
கர்நாடக மாநிலத்தின் பிரம்மகிரி குன்றில் தலைக்காவிரி என்று பெயரிடப்பட்ட இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4400 அடி உயரத்தில் காவிரி உற்பத்தியாகி 384 கி. மீ. தூரம் பயணம் செய்து தமிழகத்தின் மேட்டூரை அடையும் காவிரி ஓர் இடத்தில் ஆடு தாண்டும் அளவுக்குத் தன்னை ஒடுக்கிக்கொள்கிறது. இந்த இடத்திற்குப்பெயரே மேக் தாட்டு (ஆடு தாண்டி).
ஒகேனக்கல்லிலிருந்து பவானி வரை காவிரி தெற்குத் திசையில் ஓடுகிறது. உதகைக்குத் தென்மேற்கே நீலகிரி மலையில் கடல் மட்டத்துக்குத மேல் 8000 அடி உயரத்தில் பிறக்கும் பவானி ஆறு. பவானி ஊருக்கு தேற்கே காவிரியில் கலக்கிறது. பவானியும், காவிரியும் கூடுமிடம் மேட்டூர் அணைக்கு 80 மைல் தெற்கே இருக்கிறது.
இதன் பின், காவிரி கிழக்குத் திசையில் நொய்யலும், அமராவதியும் காவிரியில் சேர்கின்றன. கோவை மாவட்டத்தில் நொய்யலும், மூணாறு பகுதியிலிருந்து அமராவதியும் உருவாகின்றன. இப்பொழுது காவிரி நன்கு விரிந்து அகன்ற காவிரியாகிறது.இப்படி வெள்ளத்தை மட்டுமல்லாமல், நம் உள்ளத்தையும் அள்ளிக்கொண்டு ஆழ்ந்து அகன்று வரும் காவிரிக்கு அன்று அணை கட்டிய அற்புதத்தைச் செய்தவன் சோழ நாட்டுத்தமிழ்த் தலைவன் கரிகாலன்.வெள்ளம் கொள்ளுமிடம் போதாமல் திருச்சிக்கு மேற்கே பத்து மைல் தொலைவில் எலமனூறுக்கு அருகில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது.பிரிந்து போகும் கொள்ளிடம், மீண்டும் காவிரியுடன் கலக்கும் நோக்கத்துடன், திருச்சிக்குக் கிழக்கே கல்லணைக்கருகில் காவிரியின் அருகே வருகிறது.
கல்லணையில் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையே ஒரு வித இணைப்பு ஏற்படுகிறது.
ஆனால் தாழ்ந்து உள்ள கொள்ளிடமும், உயர்ந்து விட்ட காவிரியும் இயற்கை விதியின் படியே ஒன்றாக முடிவதில்லை. இந்தக் காவிரி, கொள்ளிடம் ஆகியவற்றின் ஊடலின் பின் நிகழ்ந்த கூடலில் பிறந்ததுதான் திருவால்கமும், திருஆனைக்காவும் அமைந்திருக்கும் திருவால் கத்தே.திருவால்கத்தின் மேல் முனையில் காவிரியும், கொள்ளிடமும் பிரியுமிடத்தில் மேலணை இருக்கிறது. மேலணை என்பது உண்மையில் அணையேயல்ல. நீரொழுங்கி என அழைக்கப்படும் ரெகுலேட்டார் தான். வெள்ளம் வரும் போது மேலணை ரெகுலேட்டரைத் திறந்து வெள்ளத்தை கொள்ளிடத்திற்குள் வடித்து விடுவார்கள்.
அப்படியானால், அணை என்பது அன்று கரிகாலன் கட்டினானே அந்தக் கல்லணைதான் இது. திருச்சிக்குக் கிழக்கே எட்டாவது மைலில் கரிகாலன் கட்டிய புகழ் பெற்ற அணையாகும். காவிரியின் கல்லணை இருக்கும் இடத்தில் காவிரியின் பக்கத்திலேயே கொள்ளிடமும் ஓடுகிறது.
காவிரி உயர் மட்டம், கொள்ளிடம் பள்ளம், கரிகாலன் கல்லணை கட்டுவதற்கு முன், காவிரி தன் வடகரையை உடைத்துக்கொண்டு கொள்ளிடத்திற்கு வழிந்து விடுவதும், வெள்ளம் வடிந்தபின் உழவர்கள் உடைந்த கரையைச் செப்பனிடுவதும், அடுத்த வெள்ளத்தில் கரை மீண்டும் உடைந்து விடுவதும் மிகச் சாதாரணமாக நடந்து கொண்டுஇருந்திருக்க வேண்டும்.இவற்றையெல்லாம் நீக்குவிக்கும் நோக்கத்துடன் கரிகாலன் திட்டமிட்டுக் கல்லணையை அமைத்த பொறியியல் ஆற்றல் வியப்பை ஏற்படுத்துகிறது.காவிரிக் கரை வழக்கமாக உடையும் இடத்தில் ஏற்பட்டிருந்த வடிகாலுக்குக் குறுக்கே மாபெரும் கற்களைக் கொண்டு மணல் அடித்தளத்தின் மேலேயே அணையை அமைத்தான். அக்கற்கள் உள்ளளவும் காவிரி உள்ளளவும் நிலைத்திருக்கும் படி அணையைக் கட்டினான்.
கீழே காவிரியிலும் அதனின்று பிரியும் வெண்ணாற்றிலும் பாசனத் தண்ணீரை எளிதில் தள்ளுவதற்கு வேண்டிய உயரத்துக்கு அணையை எழுப்பியுள்ளான் கரிகாலன்.
ஆற்றைத் தோண்டி, பாறையைக் கண்டு அதன்மேல் அணையை கட்டுவது போல் அன்று மணலையே அடித்தளமாகக் கொண்டு அணை கட்டுவது அதற்குத் தனித் திறமை வேண்டும். மேல் நாட்டவருக்குக் கூட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்வரை இதில் அதிக அனுபவம் கிடையாது. கல்லணை கட்டுவதற்கு இருந்திருக்கக் கூடிய பொறியியல் திறனை எண்ணி இன்றும் பல நாட்டுப் பொறியாளர்கள் மெச்சுகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில், காவிரித் தலைப்பிலும் “”நீரொழுங்கி” மதகுகள் அமைத்தார்கள். இதனால் காவிரியிலும், வெண்ணாற்றிலும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண்டாயிற்று.
கரிகாலன் அமைத்த கற்களின் மேலேயே கல்லணைக்கு ஒரு நீரொழுங்கி கட்டினார்கள்.
கல்லணை ஓரத்தில் மணற் போக்கிகளும் அமைத்தார்கள். இவ்வமைப்புகளால், காவிரியிலும் வெள்ளாற்றிலும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண் டாயிற்று. கொள்ளிடத்தில் உள்ள அணைக்கரையில் பாசனத்துக்கு கல்லணை மணற் போக்கிகள் வழியாக தண்ணீரை அனுப்பவும் முடிகிறது. வெள்ளத்தை மீண்டும் ஒரு முறை கொள்ளிடத்திற்குள் வடிப்பதும் இயலுகிறது.
பின்னர், 1934ல் மேட்டூர் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்திய பொழுது, புதிய கல்லணைக் கால்வாய் தலை மதகுக்காக வெண்ணாற்றுத் தலைமதகுக்கு அதன் தெற்கில் ஒரு நீரொழுங்கி அமைத்தனர். இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளாக விரிவுஅடைந்துள்ள கல்லணை அமைப்புகள் தாம் தஞ்சைப்பாசனத்திற்கு வழிவகுத்த தலைவாசலாக அமைந்துள்ளன.
கல்லணையிலிருந்து சுமார் 20 மைல் வரை, காவிரியும் கொள்ளிடமும் அருகருகே ஓடுகின்றன.
கீழே போகப் போகக் காவிரி மீண்டும் குடமுருட்டி, அரசலாறு, மன்னியாறு, வீரசோழனாறு என்று பிரிந்து கொண்டே போகிறது.
கல்லணையிலேயே பிரிந்து வெண்ணாறும், வடவாறும், வெட்டாறு, வெள்ளையாறு, கோவையாறு, பாமினியாறு, முள்ளியாறு என்று பிரிந்து கொண்டே போகிறது. சுமார் 3ஆயிரம் சதுர மைல் பகுதியை செழிக்கச் செய்து விட்டு கிளைகளில் சில மீண்டும் ஒன்று சேர்கின்றன: சேர்ந்து இனி பயன்படுத்த முடியாது என்றுள்ள கடைக்கோடி கழிவு நீரையும் மழை தண்ணீரையும் சுமந்து கொண்டு கடலில் கலந்து விடுகின்றன.
கல்லணைக்கு வேண்டிய பெரிய கற்களை எல்லாம் திருவெறும்பூர் பகுதியில் இருந்து கரிகாலன் கொண்டுவந்து கட்டினான் என்று கூறுகின்றனர்.
77777777777777777777777777777777777777777777777777
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு அருகில் உள்ளது.
இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.
கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
777777777777777777777
உலகில் கட்டப்பட்ட பழமையான நீர்பாசன அணைகளுள் ஒன்றுகல்லணை. இந்த அணை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலச் சோழன்என்னும் மன்னனால் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பெரியபாறை கற்களைக் கொண்டு மிக வலுவாக கட்டப்பட்டுள்ளது இந்த அணை.
இந்த அணை கட்டப்பட்டதன் முக்கிய நோக்கம் காவேரி அணையின்தண்ணீரை தடுத்து, விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதிபெறச் செய்வது ஆகும்.இத்தகைய திட்டமிடலுடன் கட்டப்பட்ட இந்த அணை இன்றளவும் வலுவானநிலையில் உள்ளது. 1080 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டு இவ்வணைகட்டப்பட்டது.
கல்லணையின் சிறப்புக்கு மற்றுமொரு காரணம் இவ்வணை கட்டபயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். பெரும் பாறைகளைக் கொண்டுவந்துஒன்றன் மீது மற்றொன்றை போட்டு அவற்றை தரையில் ஆழமாக ஊன்றச்செய்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கட்டப்படும் பல பாசன அணை கட்டுமானங்களுக்கு,கல்லணை ஒரு சிறந்த மாதிரியாக விளங்குகிறது. ஆங்கிலேய பொறியாளரானசர். ஆர்தர் காட்டன் கொள்ளிடம் அணையைக் கட்டுவதற்கு முன் இந்தகல்லணையை நன்றாக ஆராய்ந்த பிறகே கட்டினார்.
"அழகர் மலை" என்பது மதுரைக்கு வடக்கே 21 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இதில்அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது. இதற்குத் திருமாலிருஞ் சோலை,
உத்யான சைலம்,
சோலைமலை,
மாலிருங்குன்றம்,
இருங்குன்றம்,
வனகிரி,
விருஷ பாத்திரி
இடபகரி
முதலிய பல பெயர்கள் உண்டு. இது கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோயில் இருக்கிறது. இம் மலையில் பலவகை மரங்களும் ,செடிகளும் , கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சியைத் தந்து நிற்கின்றன. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதைச் சோலைமலை, திருமாலிருஞ் சோலை, வனகிரி, முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள்.
இச்சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகிப் கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டுகிறது
இங்கு கோயில் கொண்டு உறைகின்ற இறைவன் "அழகர் " என்று போற்றப்படுகிறார். இவரே வடமொழியில் "சுந்தர ராஜன்" என்று சொல்லப்படுவர். திருமாலுக்கும் அவருடைய அவதாரமாகிய இராமபிரான் முதலானவர்களுக்கும் அழகர் என்னும் பழைய தமிழ் நூல்களிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. அழகர் என்பதற்கு அழகுடையவர், அழகானவர் என்று பொருள் மதுரை நகரத்தில் உள்ள பழைய திருமால் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்திக்கும் கூடலகர் என்னும் பெயர் ஏற்பட்டிருப்பதும் இதனால் தான். இன்னும் பல திருத்தலங்களிலும் எம் பெருமானுக்கு அழகர் என்றும் சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள் உண்டு. 108 திவ்ய தேசங்களில் அன்பில் என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் திருநாகை ( நாகப்பட்டினம் ) என்றதிருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் மற்றும் கூடல் ( மதுரை ) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
கள்ளழகர் திருத்தலம் மிகவும் பழமையானது. இது எப்பொழுது தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது .மிகவும் பழைய தமிழ் நூல்களிலும் வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை பேசப்பட்டிருக்கிறது. இங்கே உள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகியவை பற்றி
வராக புராணம்,
பிரம்மாண்டமான புராணம்,
வாமன புராணம்,
ஆக் நேய புராணம்
முதலியவற்றில் மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
மூலவர்-பரமஸ்வாமி
உற்சவர்-சுந்தர்ராஜப் பெருமாள்( ரிஷபத்ரிநாதர்),கல்யாணசுந்தர வல்லி
தாயார்-ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம்-ஜோதி விருட்சம், சந்தனமரம்
தீர்த்தம்-நூபுர கங்கை
பழமை-1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்-திருமாலிருஞ்சோலை
ஊர்-அழகர்கோவில்
மாவட்டம்-மதுரை
மாநிலம்-தமிழ்நாடு
அழகர் மலை)என்னும் இம்மலை 7 மலைகளை கொண்டது.
திருவிழாக்கள்
சி்த்திரைத் திருவிழா - 10 நாட்கள்.
ஆடிப் பெருந்திருவிழா - 13 நாள்.
ஐப்பசி தலை அருவி உற்சவம் - 3 நாள்.
இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி,பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர். வாரத்தின் சனி ஞாயிற்று கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது
இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி, அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாகச் செலுத்துவார்கள்.
காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி, அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.
நூபுர கங்கை என்னும் சிலம்பாறு - ராக்காயி (அம்மன் கோயில்)அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது.
பெருமாள் சப்தரிஷிகள், சப்த கன்னிகள், பிரம்மா, விகனேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார்.
6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம்
சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.
புத்தம், சமணம், இசுலாம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதற்காக சரித்திர சான்றுகள் உள்ளன.வைணவம், சைவம் என்ற பேதமில்லாமல் இக்கோயிலில் ஆராதனை நடைபெறுவது மற்றொரு சிறப்பு.
மூலவருக்கு, அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
பாடியவர்கள்:
பெரியாழ்வார்,
ஆண்டாள்,
பேயாழ்வார்,
திருமங்கையாழ்வார்,
பூதத்தாழ்வார்,
நம்மாழ்வார். மங்களாசாஸனம்
இரண்டு அழகர் தலங்களை அழகர் மலை கொண்டுள்ளது. ஒரு அழகன் அடிவாரத்தில் இருக்கும் பெருமாள் அழகர்(கள்ளழகர்). மற்றொருவர் மலைமீது குடிகொண்டுள்ள தமிழ் அழகன் முருகன். ஆம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை(சுட்ட பழம்) அழகர் மலையில் உள்ளது.அழகர் கோவில் மற்றும் மலையை சுற்றி இருந்த ஊர் அழகாபுரி என்ற பெயரைக்கொண்டு இருந்தது.அழகர் கோவில் அழகாபுரி கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் மிஞ்சிய பாகங்களை இன்றும் கோவிலைச்சுற்றிக் காணலாம். இங்கே மூலவராக இருக்கும் பெருமாளின் மற்றொரு பெயர் பரமஸ்வாமி என்னும் சிவனின் பெயர். மத ஒற்றுமைக்காக இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிரசாதமாக அழகர் கோவில் புகழ் தோசை தருகிறார்கள். இங்கே இருக்கும் விநாயகரின் பெயர் தும்பிக்கை ஆழ்வார். இங்கே ஆண்டாளின் சன்னதிகூட உண்டு. ஆண்டாள் இங்கே பெரியாழ்வாருடன் வந்ததாக வரலாறு உண்டு. கள்ளழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் திருத் தலங்களிலேயே ராஜகோபுரத்தில் தங்கக் கலசம் கொண்ட ஒரே கோவில். கோபுரம் முழுவதும் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது.
மலை மீது சென்றால் பழமுதிர்சோலையையும் முருகன் சந்நிதானத்தையும் காணலாம். மிக அழகான அமைதியான ஒரு இடமாகும். பழமுதிர்சோலையை அடுத்து ஒரு மூலிகை வனம் உண்டு. அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த வனத்தில் பல அரிய மூலிகைகளை பராமரித்து வருகிறார்கள். இங்கே மரக்கன்றுகளை வாங்கலாம். இன்னும் சிறிது தூரம் சென்றால் அழகர் தீர்த்தம் என்றழைக்கப்படும் நூபுர கங்கை இருக்கிறது. என்றும் வற்றாத இந்த நீரானது கங்கை நீரை விட புனிதமானதாகக் கருதப்படுகிறது. மலைகளின் வழியாக வருவதால் பல்வேறு மூலிகை கடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவத்தன்மை உடையது என்று நம்பப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் குளிப்பதற்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கே ராக்காயி அம்மன் கோவில் உள்ளது.
மதுரை என்றால் நினைவில் கொள்ள வேண்டியது
1. தமிழ்ச் சங்கம் இருந்த இடம் சங்கப் புலவர்கள் வாழ்ந்த இடம்,
2.சிவபெரு மான் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்த இடம்,
3. மதுரைக் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளம், ஆலவாய் இறைவன் சொக்கநாதரின் கட்டளைப்படி
சங்கப் புலவர்களுக்கு இருப்பிடமாக, சங்கப்பலகை தாங்கியிருந்தது.
4.நக்கீரரின் திரு முருகாற்றுப்படை தோன்றிய இடம்,
5.முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம்,
6. முருக னின் ஆறுபடை வீடுகளில் மற்றொன்றான பழமுதிர்சோலை,
7.வைஷ்ணவ திவ்ய தேசங்கள் 108இல் ஒன்றான அழகர் கோயில் உள்ள இடம்
8. திருக்குறள் அரங்கேறிய இடம்,
9. மணிமேகலை காப்பியம் தோன்றிய இடம்,
10. திருவாசகம் தந்த மணிவாசகர் வாழ்ந்த இடம்,
11.சைவ சமயத்தின் பெருமையைத் திருஞானசம்பந்தர் நிலைநிறுத்திய இடம்,
12.சைவத் திருமுறைகளில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் இடம்,
13.பெரியாழ்வார் "பல்லாண்டு பாசுரம்' பாடிய இடம்,
14. பெரிய புராணம் குறிப்பிடும் 63 நாயன்மார்களில் நான்கு பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 1. மங்கையர்க்கரசியார், 2.நின்றசீர் நெடுமாறன், 3.குலச்சிறையார், 4. மூர்த்தி நாயனார்;
15.திருவிளையாடல் புராணம் பிறந்த இடம்,
16. குமரகுருபரர் "மீனாட்சி பிள்ளைத் தமிழ்' பாடிய இடம்,
17. சைவ சமய ஆச்சாரியரான குருஞானசம்பந்தர் "சொக்கநாத வெண்பா' பாடிய இடம்,
18. மீனாட்சி சந்நதி பிராகாரத்தில் "கூடல் குமரன்' முருகன் எழுந்தருளியுள்ளார். இவரைப் பற்றிய பாடல்
அருணகிரிநாதரின் திருப்புகழில் இடம் பெற்றிருக்கிறது. இவ்விதம், தமிழ் இலக்கியங்களில் முதலிடம்
பெற்ற இடம் மாமதுரை மூதூர். "மூதூர்' என்ற சொல்லுக்கு, "பழைய ஊர்' என்றுதான் பொருள். ஆனால்
தமிழ் இலக்கியங்களில், "மூதூர்' என்றால் அது மதுரைத் திருத்தலத்தை மட்டும்தான் குறிக்கும்.
கரிகாலன் கட்டிய சிவாலயம்
கரிகால் சோழனின் பெருமையை இன்றும் தமிழ்நாட்டில் பறை சாற்றிக்
கொண்டிருக்கும் அற்புதமான வரலாற்றுச் சான்றாக ஒரு சிவாலயம் திகழ்கின்றது.http://www.dinamani.com/Images/article/2010/7/1/shrilordsivasiva.jpg
திருச்சிக்கு அருகே உள்ள கிராமம், சர்க்கார் பாளையம். திருச்சி சத்திரம்
பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வூர்.
இங்குதான் கரிகாலன் கட்டிய சிவாலயம் உள்ளது.
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர், காசி விஸ்வநாதர். இறைவி,
விசாலாட்சி அம்மன்.
இந்த ஆலயத்தின் வரலாறு என்ன?
கரிகாலன் உறையூரை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட நேரமது. காவிரி
அன்னை தன் விருப்பம் போல் பரந்து விரிந்து, ஊரெங்கும் பாய்ந்து
கொண்டிருந்தாள்.
காவிரியைக் கட்டுப்படுத்த துணை வாய்க்கால்களோ, அணைகளோ கிடையாது. இதனால்
வெள்ளம் வரும் போதெல்லாம் ஊருக்குள் தண்ணீர் புகுந்து, குடியிருப்பு
மற்றும் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தி வந்தது.
மக்கள் பரிதவித்தனர்.
"இதற்கு என்னதான் முடிவு?"
என்று, மக்கள் மன்னனிடம் சென்றனர்; தாங்கள் படும் இன்னல்களையும்,
துயரங்களையும் அவனிடம் எடுத்துக் கூறினர்.
"உரிய நடவடிக்கை எடுக்கிறேன்" என்று கூறி அவர்களை அனுப்பிய மன்னன்,
யோசிக்கத் தொடங்கினான்.
என்ன செய்வது?
காவிரியில் ஒரு அணையைக் கட்டுவதுதான் இதற்கு உரிய நிவாரணம் என்று உணர்ந்த
மன்னன், தனது பரிவாரங்களுடனும் படைவீரர்களுடனும் அணை கட்ட உரிய இடத்தைத்
தேர்வு செய்யப் புறப்பட்டான்.
அவன் சென்ற வழியில் இருந்தது சர்க்கார் பாளையம் என்ற கிராமம். (அந்தக்
காலத்தில் இவ்வூரின் பெயர் வேறானதாக இருக்க வேண்டும்).
மன்னனும், படைவீரர்களும் அந்தக் கிராமத்தின் அருகே வந்தபோது, காவிரியில்
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் உடைப்பு
ஏற்பட்டு, கிராமத்திற்குள் தண்ணீர் பாய்ந்தது. இதனால் மன்னனும், படை
வீரர்களும் மேலே செல்ல இயலவில்லை. அவர்கள் பயணம் தடைபட்டது. காவிரியின்
உடைப்பை அடைக்க படை வீரர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது.
செய்வதறியாது தவித்து நின்றான் கரிகாலன். அவன் மனம் இறைவனை நோக்கிப்
பிரார்த்தனை செய்தது.
இறைவா? இந்தத் துயரிலிருந்து நான் மீள முடியாதா?
என் மக்களை நான் காப்பாற்ற முடியாதா?
என்று மனமுருக வேண்டினான்.
அப்போது ஒரு அசரீரி திடீரென்று ஒலித்தது. "மன்னா! இந்த இடத்தில் நீ ஒரு
கோயில் கட்டு. உடைப்பு நிற்கும்'' என்றது அந்தக் குரல்.
மனம் சிலிர்த்தான் மன்னன்.
கண்கள் கலங்கினான்.
கரங்கூப்பி விண்ணைப் பார்த்தான். "அப்படியே செய்கிறேன்'' என்றான்
நெகிழ்ந்த மனதோடு.
வெள்ளம் வடியத் தொடங்கியது.
மன்னன் தன் படை வீரர்களைக் கொண்டு அந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டத்
தொடங்கினான். அந்தக் கோயில்தான் சர்க்கார் பாளையத்தில் உள்ள அருள்மிகு
காசி விஸ்வநாதர் ஆலயம்.
பின் அங்கிருந்து 11 கி.மீ. தொலைவில் காவிரியில் ஓர் அணையையும் கட்டத்
தொடங்கினான் மன்னன் கரிகாலன்.
அதுதான் கல்லணை!
"கோயிலைக் கட்ட முடிவு செய்த மன்னன், சிலரை காசிக்கு அனுப்பி ஒரு
சிவலிங்கம் கொண்டு வரும்படி கூறினானாம். அவர்களும் புறப்பட்டுச்
சென்றுள்ளனர். அதற்குள் இங்கே கோயில் திருப்பணிகள் விறுவிறுவென
நடந்தேறியுள்ளன. கும்பாபிஷேக நாளும் குறிக்கப்பட்டது. ஆனால், காசிக்குச்
சென்றவர்கள் திரும்பி வரவில்லை. கோயில் விஷயங்களில் தேர்ந்தவர்களைக்
கலந்து ஆலோசித்தான் மன்னன்.
குறிப்பிட்ட நாளில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடிப்பதே நல்லது என அவர்கள்
அறிவுரை கூறினர். வேறு ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துவிடலாம் என்றும்
அவர்கள் கூறினர்.
உடனே சிற்பிகளால் ஒரு சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில்
அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகத்தையும் நல்ல முறையில்
நடத்தினான் கரிகாலன். சில நாட்கள் கடந்த பின், காசிக்குச் சென்றவர்கள்
தங்களுடன் ஒரு சிவலிங்கத்துடன் திரும்பி வந்தனர்.
"புதிய சிவலிங்கத்தை என்ன செய்வது?"
என்று யோசித்தான் மன்னன்.
அந்த சிவலிங்கத்தை அலட்சியப்படுத்தாத அவன், அதனை அருகே இருந்த தல
விருட்சமான வில்வ மரத்தடியில் பிரதிஷ்டை செய்தான். அந்தக்
காசிலிங்கத்திற்கும் மூலவருக்கு நடைபெறும் ஆராதனைகளும், அபிஷேகங்களும்
நடைபெற ஏற்பாடு செய்தான்" என்று இப்பகுதியில் இக்கோயில் கட்டப்பட்ட விதம்
பற்றிய கர்ண பரம்பரைச் செய்தி உலவுகிறது.
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்ததும் எதிரே சற்றே உயர்ந்த மகாமண்டபம் இருக்கின்றது. வலது
புறம் அன்னை காசி விசாலாட்சி, நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி
அருள்பாலிக்கிறாள். எதிரே பலிபீடமும், நந்தியும் இருக்க, அர்த்த மண்டப
வாயிலில் துவார பாலகர்களின் திருமேனிகள் கருங்கற்களில்
வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலே கஜலட்சுமியின் சிற்பம் உள்ளது.
அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன் காசி விஸ்வநாதர்,
லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலயத்தின்
தெற்குப் பிரகாரத்தில், காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட "காசிலிங்கம்"
தனி மண்டபத்தில் பிரதிஷ்டை ஆகியுள்ளது. எதிரே நந்தி பகவான் அருள்பாலிக்க,
இறைவனின் பின்புறம் தல விருட்சமான வில்வ மரம் உள்ளது. வடகிழக்கு
மூலையில் நவக்கிரக நாயகர்களுக்கு தனி மண்டபம் உள்ளது.
இறைவனின் சந்நிதியின் முன் உள்ள மகாமண்டபத்தின் உச்சியில் 12 இராசிகளின்
உருவங்களும் கருங்கற்களில் செதுக்கப்பட்டு பொறிக்கப்பட்டுள்ளது இந்த
ஆலயத்தில் உள்ள சிறப்புகளில் ஒன்றாகும்.
இந்த ஆலயம் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. காலை 7 முதல் 11 மணி வரையிலும்,
மாலை 5 1/2 முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றும் திருவிழா, இங்கு மிகவும் சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திரத்தன்று பால் குடம், அலகு காவடி, தீ மிதி என்று இந்த ஆலயம்
திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
ஆடி, தை வெள்ளிகளில் இங்கு திருவிளக்குப் பூஜை நடைபெறுகின்றது. ஏராளமான
பெண்கள் கலந்து கொள்கின்றனர். சிவராத்திரி அன்று ஐந்து கால பூஜையும்,
பிரதோஷம், சோமவாரம், தை, சித்திரை மாதப் பிறப்புகள், நவராத்திரி,
சிவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
ஆலயத்தின் அருகே காவிரி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுவே இந்த
ஆலயத்தின் தீர்த்தமும் கூட. பழமையான இக்கோயிலில் தற்போது சில
திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சியிலிருந்து இந்த ஆலயம் செல்ல
நிறைய நகரப் பேருந்துகள் உள்ளன. கல்லணை செல்லும் நகரப் பேருந்துகள் சில
இந்த ஆலயம் வழியே செல்கின்றன. ஆட்டோ, கால் டாக்ஸியிலும் வரலாம்.
காசிக்குப் போய் காசி விஸ்வநாதரைத் தரிசிப்பதால் பெறும் பலனை இங்கு
அருள்பாலிக்கும் இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் பெறலாம் என
நம்புகின்றனர் சுற்று வட்டாரத்திலுள்ள பக்தர்கள். காசிக்குப் போக வசதி,
வாய்ப்பு இல்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து ஈசனின் அருள் பெற்று
மகிழலாமே!
ஆதித்ய சோழன் பள்ளிப்படை
கண்ணப்ப நாயனார் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட புண்ணியத்தலம் காளஹஸ்தி அதன் அருகில் உள்ளது தொண்டைமான் ஆற்றூர் என்ற ஊர். இப்பொழுது ஆந்திர தேசத்தில் இருக்கிறது சோழர்காலத்தில் கட்டிய கோதண்ட ராமேச்வரம் என்னும் ஆதித்தேச்வரர் கோயில் அவ்வூரில் இருக்கிறது. வரலாறு படைத்த ஒரு மிகப்பெரிய சோழப் பேரரசனுடய கோயில் இது. இதன் வரலாறு மிகவும் சுவயானது.
தமிழ்நாட்டின் வடபகுதியை மிகப் பெரும் பேரரசாக 500 ஆண்டுகள் ஆண்டவர்கள் பல்லவர்கள். அந்தப் பல்லவப் பேரரசுக்கு இன்றைக்கு சரியாக 1100 ஆண்டுகளுக்கு முன்னர் முற்றுப்புள்ளி வைத்தவன் அந்த சோழப் பேரரசன். அவனுக்கு ஆதித்த சோழன் என்று பெயர். அவன் ஏறக்குறைய கி.பி. 887ல் பல்லவ அரசன் அபராஜிதன் என்பவனை சண்டையில் வீழ்த்தி தொண்டை நாட்டை அதாவது காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு முதலிய பகுதிகளைக் கைப்பற்றினான். அதனால் அவன் "தொண்டை நாடு பாவிய சோழன்" என்று பட்டம் பூண்டான். அதோடு தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சி முடிந்துவிட்டது.
ஆதித்த சோழன் கொங்கு நாட்டையும் வென்று அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்கு பொன் வேய்ந்தான். சோழ சாம்ராஜ்யத்தை தோற்றிவித்த விஜயாலய சோழனுடைய அருமை மைந்தன் அவன். சிறந்த சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயிலை சிவபெருமானுக்கு எடுத்தவன். அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில் இருக்கின்றன. அவன் காலத்து சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் உன்னதக்கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன் தொண்டைமானாற்றூரில் இறந்து போனான்.
அந்த ஆதித்த சோழனுக்கு எடுக்கப்பட்ட சமாதிக கோயில்தான் இது. அக்காலத்தில் சாமாதிக் கோயிலை "பள்ளிப்படை" என்று கூறுவர். அரசர் இறந்தால் அவரை ஈமத்தீயிலோ அல்லது குழியிலோ இடுதலை பள்ளிப் படுத்தல் என்று கூறுவர். ஆதலின் அங்கு எடுத்த கோயிலை பள்ளிப்படை என்பார்கள். ஆதித்த சோழனுடைய சமாதிலிங்கத்தை இக்கோயில் கருப்ப கிருஹத்தில் இன்றும் காண்கிறோம். ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில் உள்ளது. அதிலிருந்து இக்கோயிலைப் பற்றி பல செய்திகளை அறிகிறோம்.
ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு இக்கோயிலில் ஏற்பாடு செய்யபட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம் அன்று ஒரு நாள் விழா நடத்த வகை செய்யப்பட்டது. கி.பி. 940ல் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது இந்த கோயில் வாகீஸ்வரபண்டிதர் என்பவரின் பார்வையிலிருந்தது. அவர் ஒரு மகாவிரதி. அவர் தான் இந்த விழா நடத்த 105 கழஞ்சு பொன்னும் 4000 காடி நெல்லும் கொடுத்தார். இதிலிருந்து வரும் வட்டியாக ஆண்டுதோறும் ஆயிரம் காடி நெல் இக்கோயிலுக்கு அளக்கவேண்டும். இதை கொண்டு இந்த ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்கவேண்டும். இந்த ஆயிரம் பேரில் 500 பேர் எல்லா சமயத்தையும் சேர்ந்த அடியார்களாக இருக்கவேண்டும். "பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. பிராமணர் 300 பேரும் மற்ற 200 பேர் தபஸ்விகளாகவும் இருக்கவேண்டும். "தபஸ்விகளில் மகாவிரதிகள் உட்பட ஆறுசமயத்து தபஸ்விகள் இருநூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. ஆறு சமயத்து தபஸ்விகள் என்பது சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளைக் குறிக்கும். இவற்றை அகச் சமயம் ஆறு என நம் பண்டைய நூல்கள் கூறும். சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஆறு சமயம் என்று கல்வெட்டு கூறுவதால் அன்றே இவ்வகைச் சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்று அறிகிறோம்.
இக் கல்வெட்டின் மூலம் மேலும் பல செய்திகள் அறியமுடிகிறது. இவ்விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் முதலியோருக்கு நெல் அளந்தனர்.
இவ்வூரில் இந்திர விழா நடத்தப்பட்டது. இங்கு ஒரு கல்விச்சாலையும் இருந்தது. அதற்கு நெல் ஆண்டுதோறும் அளந்தனர். இக்கோயிலில் நாட்டிய அரங்கம் இருந்தது. அதற்கு உடனுக்குடன் வேண்டும்போது பழுது பார்க்க தச்சனுக்கு நெல் கொடுத்தனர். இந்த அரங்கத்தில் இவ்விழாவை ஒட்டி நாட்டிய நாடகங்கள் கூத்துகள் நடத்தப்பட்டன. இங்கு கூத்தாடினார்க்கும் பாடினார்க்கும் நெல் கொடுக்கப்பட்டது.
இந்த தர்மத்தை இக்கோயிலில் இருந்த மகாவிரதிகளும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்களும் காத்துத் தரவேண்டும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் மகாவிரதிகள் கீழ் இருந்தது. இது சமாதிக் கோயில் ஆதலால் மகாவிரதிகள் இங்கு இருந்திருக்கிறார்கள்.
சைவ சமயக் கோயில் ஆனாலும் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த 500 பக்தர்களுக்கு திருவிழா ஏழு நாட்களுக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்னும் கட்டளை அன்றைய பரந்த சமய நோக்கை குறிக்கிறதல்லவா?
இப்போழுதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அது கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. இறந்து போனவர்களுக்கு கோயில் கட்டும் வழக்கம் நம் நாட்டில் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பதற்கு இக்கோயிலே சான்று. விமானம் கோபுரம் லிங்கம் நந்தி முதலிய எல்லாம் நிறைந்த பெருங்கோயிலாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் இது வழிபாட்டில் இருக்கிறது. ஏன் தெரியுமா? நம் முன்னோர் இறந்திடில் தெய்வத்தோடு ஒன்றி தெய்வமாகவே நிற்பர் என்பது நமது தத்துவம். நம்பிக்கையும் கூட. இறந்து ஆயிரத்து நூறு ஆண்டுகளாகியும் என்றும் தெய்வமாக இங்கு நிற்கிறான் தமிழகத்தில் வரலாறு படைத்த பெரும் சோழச் சக்கரவர்த்தி. ஆதித்த சோழன் இறந்தும் இறந்திலான்.
குந்தவை
சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம்இராஜராஜனின் தமைக்கையும், ஆதித்த கரிகாலனின் தங்கையும், சுந்தர சோழரின் மகளுமாவாள். சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும் வாணர் குலத்து குறுநில மன்னனுமான வல்லவரையன் வந்தியத்தேவனை மணமுடித்தவள். இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் மதிப்புடன் இருந்ததாகவும் பல தானங்கள் தருமங்கள் செய்திருக்கிறாள் என்றும் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது
கல்வெட்டு ஆதாரங்கள்.
இராஜராஜனின் தந்தையின் பெயரால் அமைக்கப்பட்ட "சுந்தர சோழ விண்ணகர்" என்னும் விஷ்ணு கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்து வந்துள்ளது, அந்த மருத்துவமனைக்கு குந்தவை பிராட்டி பல தானங்கள் வழங்கியிருக்கிறார் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. இராஜராஜனின் 17-ம் ஆண்டில்(கி.பி. 1002ல்) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்றும் அதன்படி பிரமதேயங்களிலுள்ள நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல்லோரும் தங்களுடைய நிலங்களை விற்றுவிட வேண்டும் என்றும் இந்த கட்டளைக்கு நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போர் மட்டும் விதிவிலக்கென்று கொண்டுவரப்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. இப்படி இராஜகேசரி சதுர்வேதி மங்களத்தில் விற்கப்பட்ட நிலங்களை அரசனின் தமக்கை குந்தவை தேவியாரே வாங்கி, அவ்வூர்க் கோயிலுக்குத் தானமாக அளித்தார் என்றும் தெரியவருகிறது.
இப்பொழுது 'தாராசுரம்' என வழங்கும் இராஜராஜபுரத்தில் குந்தவை தேவி, பெருமாளுக்கு ஒரு கோயிலும், சிவனுக்கு ஒரு கோயிலும், ஜீனருக்கு ஒரு கோயிலுமாக மூன்று கோயில்களை ஓரிடத்திலேயே கட்டினாள். இம்மூன்று தேவாலங்களுக்கும் அவள் வழங்கிய கொடைகளை அங்கிருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகிறது. குந்தவை தேவி அளித்த நகைகளின் பட்டியல்களில் தங்கத்தால் ஆனதும், வைணவர்கள் நெற்றியும் இட்டுக் கொள்ளும் சின்னமாகிய 'நாமம்' என்னும் இறுதிச் சொல்லுடன் முடிவடையும் நகைகளின் பெயர்களும் உள்ளன. இப்படி பல தானங்களைக் கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்யும் வலமிக்கவராக முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் குந்தவை தேவியார் இருந்திருக்கிறார்.
அதே போல் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்குகுந்தவை தேவி, 10,000 கழஞ்சு எடையுள்ள தங்கத்தையும் 18,000 கழஞ்சு மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்து சிறப்பித்திருக்கிறார் என்று, பெரிய கோவில் சுவர்களும் தூண்களும் சொல்லுகின்றன. சமணர்களுக்கான ஒரு சமணர் கோயிலைதிருச்சிராய்ப்பள்ளி மாவட்டம் திருமழபாடியில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
எமது வரலாறுகளை மீளாய்வு செய்து தவறுகள் இருப்பின் இதயசுத்தியுடன் வேண்டிய திருத்தங்களைச் செய்வதும் எமது கடமையாகும் . இதிலிருந்து தவறுபவர்கள் தமிழ்மீது பற்றுள்ளவர்களாக இருக்கமுடியாது . அந்தவகையில் தமிழக உறவான சொப்னாவின் பதிவு இந்தக்கருத்துக்களத்தில் ஆரம்பப் புள்ளியாக இருக்கின்றது . பதிவை இணைத்தமைக்கு சொப்னாவிற்கு மிக்க நன்றிகள் .
காலத்தால் மூத்த கல்லணை .
நீர்ப்பாசன பொறியியல் துறையில் உலகுக்கே தமிழர் முன்னோடி என்ற உண்மையை கரிகாலன் கட்டிய கல்லணை பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறது.அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் கட்டுரையை இங்கே காண்போம்.(உண்மை ஜனவரி 1631/2010 இதழில் முனைவர் பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் எழுதிய கட்டுரையை நன்றியுடன் இங்கே அறியத்தருகிறோம்.)சங்க காலத்திய முடியுடை மூவேந்தர்களில் சோழ மன்னர்களில் தலை சிறந்தவர் கரிகாற்சோழன். கரிகாலனைப் பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை முதலிய பத்துப்பாட்டு நூல்கள் புகழ்ந்து உரைக்கின்றன.
கரிகாற் சோழனின் பெருமைக்கு இன்றும் சான்றாய் விளங்குவது அவன் கட்டிய கல்லணை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் தமிழனின் பொறியியல் ஆற்றலுக்குப் புகழ்ப் பரணி பாடிக்கொண்டிருப்பது காவிரியில் கரிகாலன் கட்டிய கல்லணை. பொங்கிச் சிரிக்கும் தஞ்சையாகச் சோழப்பெருநாடு, பொய்யாச் சிறப்பின் வளம் பெற்ற மண்ணாகச் சோழநாடு சோறுடைத்து என்று பெருமை பெறக் காரணமான காவிரிப் பெண்ணுக்குக் கால்கட்டாகக் கல்லணையைக் கட்டிப் பெருமை பெற்றான் இந்தச் சோழ வேந்தன் . இந்தக் காவிரிப் பெண் எங்கு பிறந்து, எங்குத் தவழ்ந்து வருகிறாள் என்று கொஞ்சம் மேற்கே திரும்பிப் பார்ப்போம்.
கர்நாடக மாநிலத்தின் பிரம்மகிரி குன்றில் தலைக்காவிரி என்று பெயரிடப்பட்ட இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 4400 அடி உயரத்தில் காவிரி உற்பத்தியாகி 384 கி. மீ. தூரம் பயணம் செய்து தமிழகத்தின் மேட்டூரை அடையும் காவிரி ஓர் இடத்தில் ஆடு தாண்டும் அளவுக்குத் தன்னை ஒடுக்கிக்கொள்கிறது. இந்த இடத்திற்குப்பெயரே மேக் தாட்டு (ஆடு தாண்டி).
ஒகேனக்கல்லிலிருந்து பவானி வரை காவிரி தெற்குத் திசையில் ஓடுகிறது. உதகைக்குத் தென்மேற்கே நீலகிரி மலையில் கடல் மட்டத்துக்குத மேல் 8000 அடி உயரத்தில் பிறக்கும் பவானி ஆறு. பவானி ஊருக்கு தேற்கே காவிரியில் கலக்கிறது. பவானியும், காவிரியும் கூடுமிடம் மேட்டூர் அணைக்கு 80 மைல் தெற்கே இருக்கிறது.
இதன் பின், காவிரி கிழக்குத் திசையில் நொய்யலும், அமராவதியும் காவிரியில் சேர்கின்றன. கோவை மாவட்டத்தில் நொய்யலும், மூணாறு பகுதியிலிருந்து அமராவதியும் உருவாகின்றன. இப்பொழுது காவிரி நன்கு விரிந்து அகன்ற காவிரியாகிறது.இப்படி வெள்ளத்தை மட்டுமல்லாமல், நம் உள்ளத்தையும் அள்ளிக்கொண்டு ஆழ்ந்து அகன்று வரும் காவிரிக்கு அன்று அணை கட்டிய அற்புதத்தைச் செய்தவன் சோழ நாட்டுத்தமிழ்த் தலைவன் கரிகாலன்.வெள்ளம் கொள்ளுமிடம் போதாமல் திருச்சிக்கு மேற்கே பத்து மைல் தொலைவில் எலமனூறுக்கு அருகில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது.பிரிந்து போகும் கொள்ளிடம், மீண்டும் காவிரியுடன் கலக்கும் நோக்கத்துடன், திருச்சிக்குக் கிழக்கே கல்லணைக்கருகில் காவிரியின் அருகே வருகிறது.
கல்லணையில் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையே ஒரு வித இணைப்பு ஏற்படுகிறது.
ஆனால் தாழ்ந்து உள்ள கொள்ளிடமும், உயர்ந்து விட்ட காவிரியும் இயற்கை விதியின் படியே ஒன்றாக முடிவதில்லை. இந்தக் காவிரி, கொள்ளிடம் ஆகியவற்றின் ஊடலின் பின் நிகழ்ந்த கூடலில் பிறந்ததுதான் திருவால்கமும், திருஆனைக்காவும் அமைந்திருக்கும் திருவால் கத்தே.திருவால்கத்தின் மேல் முனையில் காவிரியும், கொள்ளிடமும் பிரியுமிடத்தில் மேலணை இருக்கிறது. மேலணை என்பது உண்மையில் அணையேயல்ல. நீரொழுங்கி என அழைக்கப்படும் ரெகுலேட்டார் தான். வெள்ளம் வரும் போது மேலணை ரெகுலேட்டரைத் திறந்து வெள்ளத்தை கொள்ளிடத்திற்குள் வடித்து விடுவார்கள்.
அப்படியானால், அணை என்பது அன்று கரிகாலன் கட்டினானே அந்தக் கல்லணைதான் இது. திருச்சிக்குக் கிழக்கே எட்டாவது மைலில் கரிகாலன் கட்டிய புகழ் பெற்ற அணையாகும். காவிரியின் கல்லணை இருக்கும் இடத்தில் காவிரியின் பக்கத்திலேயே கொள்ளிடமும் ஓடுகிறது.
காவிரி உயர் மட்டம், கொள்ளிடம் பள்ளம், கரிகாலன் கல்லணை கட்டுவதற்கு முன், காவிரி தன் வடகரையை உடைத்துக்கொண்டு கொள்ளிடத்திற்கு வழிந்து விடுவதும், வெள்ளம் வடிந்தபின் உழவர்கள் உடைந்த கரையைச் செப்பனிடுவதும், அடுத்த வெள்ளத்தில் கரை மீண்டும் உடைந்து விடுவதும் மிகச் சாதாரணமாக நடந்து கொண்டுஇருந்திருக்க வேண்டும்.இவற்றையெல்லாம் நீக்குவிக்கும் நோக்கத்துடன் கரிகாலன் திட்டமிட்டுக் கல்லணையை அமைத்த பொறியியல் ஆற்றல் வியப்பை ஏற்படுத்துகிறது.காவிரிக் கரை வழக்கமாக உடையும் இடத்தில் ஏற்பட்டிருந்த வடிகாலுக்குக் குறுக்கே மாபெரும் கற்களைக் கொண்டு மணல் அடித்தளத்தின் மேலேயே அணையை அமைத்தான். அக்கற்கள் உள்ளளவும் காவிரி உள்ளளவும் நிலைத்திருக்கும் படி அணையைக் கட்டினான்.
கீழே காவிரியிலும் அதனின்று பிரியும் வெண்ணாற்றிலும் பாசனத் தண்ணீரை எளிதில் தள்ளுவதற்கு வேண்டிய உயரத்துக்கு அணையை எழுப்பியுள்ளான் கரிகாலன்.
ஆற்றைத் தோண்டி, பாறையைக் கண்டு அதன்மேல் அணையை கட்டுவது போல் அன்று மணலையே அடித்தளமாகக் கொண்டு அணை கட்டுவது அதற்குத் தனித் திறமை வேண்டும். மேல் நாட்டவருக்குக் கூட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்வரை இதில் அதிக அனுபவம் கிடையாது. கல்லணை கட்டுவதற்கு இருந்திருக்கக் கூடிய பொறியியல் திறனை எண்ணி இன்றும் பல நாட்டுப் பொறியாளர்கள் மெச்சுகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில், காவிரித் தலைப்பிலும் “”நீரொழுங்கி” மதகுகள் அமைத்தார்கள். இதனால் காவிரியிலும், வெண்ணாற்றிலும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண்டாயிற்று.
கரிகாலன் அமைத்த கற்களின் மேலேயே கல்லணைக்கு ஒரு நீரொழுங்கி கட்டினார்கள்.
கல்லணை ஓரத்தில் மணற் போக்கிகளும் அமைத்தார்கள். இவ்வமைப்புகளால், காவிரியிலும் வெள்ளாற்றிலும் தண்ணீரை வேண்டிய அளவு அனுப்ப வழியுண் டாயிற்று. கொள்ளிடத்தில் உள்ள அணைக்கரையில் பாசனத்துக்கு கல்லணை மணற் போக்கிகள் வழியாக தண்ணீரை அனுப்பவும் முடிகிறது. வெள்ளத்தை மீண்டும் ஒரு முறை கொள்ளிடத்திற்குள் வடிப்பதும் இயலுகிறது.
பின்னர், 1934ல் மேட்டூர் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்திய பொழுது, புதிய கல்லணைக் கால்வாய் தலை மதகுக்காக வெண்ணாற்றுத் தலைமதகுக்கு அதன் தெற்கில் ஒரு நீரொழுங்கி அமைத்தனர். இப்படி இரண்டாயிரம் ஆண்டுகளாக விரிவுஅடைந்துள்ள கல்லணை அமைப்புகள் தாம் தஞ்சைப்பாசனத்திற்கு வழிவகுத்த தலைவாசலாக அமைந்துள்ளன.
கல்லணையிலிருந்து சுமார் 20 மைல் வரை, காவிரியும் கொள்ளிடமும் அருகருகே ஓடுகின்றன.
கீழே போகப் போகக் காவிரி மீண்டும் குடமுருட்டி, அரசலாறு, மன்னியாறு, வீரசோழனாறு என்று பிரிந்து கொண்டே போகிறது.
கல்லணையிலேயே பிரிந்து வெண்ணாறும், வடவாறும், வெட்டாறு, வெள்ளையாறு, கோவையாறு, பாமினியாறு, முள்ளியாறு என்று பிரிந்து கொண்டே போகிறது. சுமார் 3ஆயிரம் சதுர மைல் பகுதியை செழிக்கச் செய்து விட்டு கிளைகளில் சில மீண்டும் ஒன்று சேர்கின்றன: சேர்ந்து இனி பயன்படுத்த முடியாது என்றுள்ள கடைக்கோடி கழிவு நீரையும் மழை தண்ணீரையும் சுமந்து கொண்டு கடலில் கலந்து விடுகின்றன.
கல்லணைக்கு வேண்டிய பெரிய கற்களை எல்லாம் திருவெறும்பூர் பகுதியில் இருந்து கரிகாலன் கொண்டுவந்து கட்டினான் என்று கூறுகின்றனர்.
77777777777777777777777777777777777777777777777777
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு அருகில் உள்ளது.
இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.
கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
777777777777777777777
உலகில் கட்டப்பட்ட பழமையான நீர்பாசன அணைகளுள் ஒன்றுகல்லணை. இந்த அணை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலச் சோழன்என்னும் மன்னனால் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பெரியபாறை கற்களைக் கொண்டு மிக வலுவாக கட்டப்பட்டுள்ளது இந்த அணை.
இந்த அணை கட்டப்பட்டதன் முக்கிய நோக்கம் காவேரி அணையின்தண்ணீரை தடுத்து, விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதிபெறச் செய்வது ஆகும்.இத்தகைய திட்டமிடலுடன் கட்டப்பட்ட இந்த அணை இன்றளவும் வலுவானநிலையில் உள்ளது. 1080 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டு இவ்வணைகட்டப்பட்டது.
கல்லணையின் சிறப்புக்கு மற்றுமொரு காரணம் இவ்வணை கட்டபயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். பெரும் பாறைகளைக் கொண்டுவந்துஒன்றன் மீது மற்றொன்றை போட்டு அவற்றை தரையில் ஆழமாக ஊன்றச்செய்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கட்டப்படும் பல பாசன அணை கட்டுமானங்களுக்கு,கல்லணை ஒரு சிறந்த மாதிரியாக விளங்குகிறது. ஆங்கிலேய பொறியாளரானசர். ஆர்தர் காட்டன் கொள்ளிடம் அணையைக் கட்டுவதற்கு முன் இந்தகல்லணையை நன்றாக ஆராய்ந்த பிறகே கட்டினார்.