திருவானைக்கா
ஆலய பிரகாரம் - ஒரு தோற்றம்
திருவானைக்கா, அல்லது திருஆனைக்கா எனப்படும்திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும்சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர்,திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம்என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இது அறுபதாவதாக அமைந்துள்ளது.
தல வரலாறு
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.
சிவ பக்தர்களாக யானையும் சிலந்தியும்சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.
கோச்செங்கட் சோழன்சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.
திருநீறு தங்கமான எம்பிரானின் திருவிளையாடல்இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.
தலச் சிறப்புகள்
பஞ்சபூத தலம் - நீர்த்தலம்
அம்பிகை வழிப்பட்ட லிங்கம்
இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.
குபேர லிங்கம்மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிப்பட்டததால் தான் சிவன் அருள் பெற்று செல்வேந்தன் ஆனான் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்களில் ஒன்றாக குபேர லிங்க சந்னதியும் ஆகிப்போனது.
சிற்பங்கள்பல அரிய சிற்பங்களும் இத்தளத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னதிக்கு இடது புரம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தூண்களில் இந்த சிற்பம் காணக் கிடைக்கின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சந்ததிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.
அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மி்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்திரூபமாக செதுக்கப்பட்டுள்ளாள்.
திருவானைக்கா, அல்லது திருஆனைக்கா எனப்படும்திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும்சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர்,திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம்என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இது அறுபதாவதாக அமைந்துள்ளது.
தல வரலாறு
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.
சிவ பக்தர்களாக யானையும் சிலந்தியும்சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.
கோச்செங்கட் சோழன்சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.
திருநீறு தங்கமான எம்பிரானின் திருவிளையாடல்இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.
தலச் சிறப்புகள்
பஞ்சபூத தலம் - நீர்த்தலம்
- திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும்.வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
- திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும்அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.
- திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.
- அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
- அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
அம்பிகை வழிப்பட்ட லிங்கம்
இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.
குபேர லிங்கம்மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிப்பட்டததால் தான் சிவன் அருள் பெற்று செல்வேந்தன் ஆனான் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்களில் ஒன்றாக குபேர லிங்க சந்னதியும் ஆகிப்போனது.
சிற்பங்கள்பல அரிய சிற்பங்களும் இத்தளத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னதிக்கு இடது புரம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தூண்களில் இந்த சிற்பம் காணக் கிடைக்கின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சந்ததிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.
அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மி்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்திரூபமாக செதுக்கப்பட்டுள்ளாள்.
திருவானைக்கா
ஆலய பிரகாரம் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழி
வரலாற்றுச் சிறப்புகள்
கல்வெட்டுகள் பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இதுவரை இங்கு கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிக தொன்மையானவை.
அரசர்/ சான்றோர் திருத்தொண்டுஇத்தலப் பெருமை அறிந்து தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ பாண்டியர்கள் மட்டும் அன்றி, போசளப் பேரரசர்கள்,விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் போன்றோரும் ஆற்றிய திருப்பணிகளை சுமார் நூற்று ஐம்பத்து நான்குகல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.
திருவானைக்கா நாயன்மார்கள் மற்றும் தாயுமானவரின் பாடல் பெற்ற ஒரு தலம். திருநாவுக்கரசர் அருளிய ஒரு தேவாரப் பதிகம் கீழே:
துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.
காவேரி நதியோடு சென்று விட்ட சோழனின் மணியாரம், திருமஞ்சனக் குடத்தில் சிக்கிக் கொண்டு எம்பிரானுக்கு ஆபரணமாக விளைந்த அற்புதத்தை சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வாறு வடிக்கிறார்:
தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து
நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே
ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்
எனவும் , திருஞானசம்பந்தப்பெருமான்
ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே
சைவ ஆகமமாம் பெரிய புராணத்தில் ஏயர்கோன் கலிக்காமநாயனார் வரலாற்றினில், சேக்கிழார் தலத்தின் பெருமையை இவ்வாறு உரைக்கிறார்:
வளவர் பெருமான் திருவாரஞ் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்
கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற
அளவில் திருமஞ் சனக்குடத்தி லதுபுக்காட்ட வணிந்தருளி
தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்
தலப் பெருமையைப் பறைசாற்றும் பழந்தமிழ்ப் பாடலொன்று:
மேதகைய பயன்விழைவோர் ஞானதலத் துறைகுவது மேவாதாயின்
ஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே லுரைப்பக்கேட்க
காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங் கடந்துமேலாம்
போதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை பொலங்கொம்பன்னாய்
கோயில் பற்றிய சிறு விபரங்கள்
மூலவர்: ஜம்புகேஸ்வரர்
பிறபெயர்கள்: திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர்
அம்மன்: அகிலாண்டேஸ்வரி
தல மரம்: வெண்நாவல்
தீர்த்தம்: காவிரி, இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம்
தொன்மை: 1000-2000 வருடங்களுக்கு முன்
சிறப்பு: நாயன்மார்கள் மற்றும் சேக்கிழார் பெருமான் போன்றோரின் பாடல்கள் பெற்ற தலம்
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு
வரலாற்றுச் சிறப்புகள்
கல்வெட்டுகள் பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இதுவரை இங்கு கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிக தொன்மையானவை.
அரசர்/ சான்றோர் திருத்தொண்டுஇத்தலப் பெருமை அறிந்து தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ பாண்டியர்கள் மட்டும் அன்றி, போசளப் பேரரசர்கள்,விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் போன்றோரும் ஆற்றிய திருப்பணிகளை சுமார் நூற்று ஐம்பத்து நான்குகல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.
- ஐந்து பிரகாரங்களைக் கொண்ட இத்திருத்தலத்தின் முதலாம் பிராகாரத்திலான துவார பாலகர் திருவுருக்களை செய்வித்தவர் இளைய நயினார் மகனார் தெய்வங்கள் பெருமாள்.
- நீலகண்ட நாயக்கர் நான்காம் பிராகாரத்தில் அகிலாண்டநாயகியின் முன் உள்ள பசுபதீஸ்வரம் உடையாரை எழுந்தருளுச செய்தார்.
- சதாசிவ வரஜப்பைய யாஜி தீட்சிதராயர் இக்கோயிலின் உற்சவ மண்டபத்தை உருவாக்கினார்.
- முதற் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள எடுத் தருளிய ஷ்ரீபாதீஸ்வரம் உடைய நாயனார் கோயிலைக் கட்டியவர், திருஞானசம்பந்தர்.
- சந்தபேந்திரன் நான்காவது பிராகாரத்திலுள்ள மேலக்கோபுரத்தினை எழுப்பியருளினார்.
- வலம்புரி விநாயகரையும், சுப்பிரமணியரையும் எழுப்பியருளியவர் மும்முடி திம்மரசர்.
- விபூதி பிராகாரத்து மதிற்சுவரைத் தோற்றுவித்தவன் திருநீற்றுச் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான். எம்பிரானின் திருவிளையாடல்களில் ஒன்றான திருநீறு தங்கமாக மாறிய அற்புதம் காலமும் இதுவேயாகும்.
- பெரும் சிவனடியாரான வீரசோம ஈசுவரன் என்னும் ஹொய்சால மன்னன் இத்திருத்தலத்தில் கிழக்கில் ஒரு ஏழுநிலைக் கோபுரத்தை எழுப்பினான்.
- பாண்டிய அரசர்களான மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் தமது பிறந்த நாளை ஒட்டி இத்திருத்தலத்திற்கு நிபந்தங்களை வழங்கியுள்ளனர்.
- திருபுவனச் சக்கரவர்த்தி என்னும் சிறப்புற்ற இராஜேந்திர சோழன் (கங்கை கொண்ட சோழன்) இருபத்தைந்து வேலி நிலத்தை இத்திருத்தலத்திற்கு இறையிலியாக அளித்தான்.
திருவானைக்கா நாயன்மார்கள் மற்றும் தாயுமானவரின் பாடல் பெற்ற ஒரு தலம். திருநாவுக்கரசர் அருளிய ஒரு தேவாரப் பதிகம் கீழே:
துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே.
காவேரி நதியோடு சென்று விட்ட சோழனின் மணியாரம், திருமஞ்சனக் குடத்தில் சிக்கிக் கொண்டு எம்பிரானுக்கு ஆபரணமாக விளைந்த அற்புதத்தை சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வாறு வடிக்கிறார்:
தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து
நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே
ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்
எனவும் , திருஞானசம்பந்தப்பெருமான்
ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே
சைவ ஆகமமாம் பெரிய புராணத்தில் ஏயர்கோன் கலிக்காமநாயனார் வரலாற்றினில், சேக்கிழார் தலத்தின் பெருமையை இவ்வாறு உரைக்கிறார்:
வளவர் பெருமான் திருவாரஞ் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்
கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற
அளவில் திருமஞ் சனக்குடத்தி லதுபுக்காட்ட வணிந்தருளி
தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்
தலப் பெருமையைப் பறைசாற்றும் பழந்தமிழ்ப் பாடலொன்று:
மேதகைய பயன்விழைவோர் ஞானதலத் துறைகுவது மேவாதாயின்
ஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே லுரைப்பக்கேட்க
காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங் கடந்துமேலாம்
போதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை பொலங்கொம்பன்னாய்
கோயில் பற்றிய சிறு விபரங்கள்
மூலவர்: ஜம்புகேஸ்வரர்
பிறபெயர்கள்: திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர்
அம்மன்: அகிலாண்டேஸ்வரி
தல மரம்: வெண்நாவல்
தீர்த்தம்: காவிரி, இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம்
தொன்மை: 1000-2000 வருடங்களுக்கு முன்
சிறப்பு: நாயன்மார்கள் மற்றும் சேக்கிழார் பெருமான் போன்றோரின் பாடல்கள் பெற்ற தலம்
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு
சேர நாட்டில் சோழன் கட்டிய சிவன் கோவில்
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த பழம்பெருமை கொண்ட குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஒழுகினசேரி, வடசேரி, கிருஷ்ணன்கோவில் என்ற பெயருள்ள இன்றைய நகரப் பகுதிகள் அனைத்தும் கோட்டாறு என்ற ஒரே பெயரில் அமையப் பெற்றிருந்ததாயும், நாகராஜா கோவில் நகரின் நடுப்பகுதியில் அமைந்த பின்னர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் நாகர் கோவில் என்ற பெயர் பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.நாகர்கோவில் நகரத்தின் நுழைவாயிலாக அமைந்து புகழ் சேர்க்கும் பழையாறு ஆற்றங்கரையருகில் அரவ நீள்சடையான் என்ற பெயரில் சிவபெருமான் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நாகர்கோவில் நகரின் கிழக்கு எல்லையில் பழையாற்றின் கரைக்கு மேற்குக் கரையை ஒட்டி அமைந்துள்ள ஒழுகினசேரி என்ற பெயரில் உள்ள ஊரில் கிழக்குப்பார்த்து இக்கோயில் அமைந்துள்ளது.
இது முற்காலத்தில் உலகமுழுதுடையான் சேரி என்று அழைக்கப்பட்டுள்ளது.
பெயர்க்காரணம்: கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்தின் பகுதிகள் சேர மன்னரின் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தை ஆண்ட ராஜராஜ சோழனின் பேரனும், ராஜேந்திர சோழனின் மகனுமான ராஜேந்திர சோழீஸ்வரன் சேர நாட்டைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தஞ்சையிலிருந்து படைகளுடன் சென்று நாகர்கோவிலில் தங்கியுள்ளான்.
அன்று மன்னனின் கனவில் இறைவன் தோன்றி, அங்கு ஒரு கோவில் எழுப்பும்படி கூறி மறைந்தார்.
இறைவனின் ஆணைக்குட்பட்டு, மன்னன் உடனடியாக ஏற்பாடுகள் செய்து, தஞ்சைப் பெரிய கோவிலின் சாயலில் சிறிய அளவில் சிறப்பாகக் கட்டி முடித்தான்.
இக்கோவிலில் சிவபெருமான் அரவ நீள்சடையான் என்ற பெயரில் சற்று உயரமாக லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
இக்கோவிலில் சிவன் அருள்பாலித்து வந்தாலும் சோழ மன்னன் உருவாக்கம் செய்ததால் சோழ ராஜகோவில் என்ற பெயரிலேயே பிரசித்தமாகி உள்ளது.
இக்கோவில் அமைந்துள்ள சுற்றுப்புறத் தெருக்களும் சோழராஜ கோவில் தெரு என்ற பெயரில் அமைந்துள்ளன.
தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தின் சாயலில் சிறிய அளவில் விமானமும், நான்கு பக்கக் கற்சுவர்களும், மேல் கூரையில் நான்கு மூலைகளிலும் நந்தியின் சிலைகளும் அமைந்துள்ளன.
இறைவன் கருவறையில் மூன்றடி உயரத்திலும், நிலத்தினடியில் பதினெட்டடி புதைக்கப்பட்ட நிலையிலும் லிங்க வடிவில் கிழக்குப்பார்த்து அருள்பாலித்து வருகிறார்.
மனம் நிறைந்த தூய உள்ளத்தால் பக்திப்பரவசம் கொண்டு லிங்க உருவில் அற்புதமாக அமைந்துள்ள இறைவன் அரவ நீள்சடையானை ஓம் நமசிவாய என்று இருகரம் கூப்பி வணங்கினால், லிங்க உருவில் இல்லாது, ஈசனே நேரில் வந்து நின்று அருள்பாலிப்பது போன்ற உணர்வு கிடைக்கும்.
பூமிக்கடியில் இருந்தும் இறைவன் அருள் செய்வதால், இக்கோவிலில் அமர்ந்து ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபட்டால் இறையுணர்வை அதிர்வலைகளால் உணரமுடியும் எனறும், நினைத்ததை வேண்டிப் பெறலாம் என்றும் சொல்லப் படுகிறது.
கருவறையின் முன்பக்கமுள்ள அர்த்த மண்டபத்தில் இறைவனை நோக்கி நந்திசிலை அமைந்துள்ளது. பிரதோஷ பூசை இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
இறைவன் சன்னதியைச் சுற்றிக் கோவிலுக்குள் சுற்றுப்பாதை உள்ளது. கோவிலுக்குள் நுழைந்தவுடன், வலது பக்கமுள்ள மண்டபத்தில் வடகிழக்கில் அன்னையின் சன்னதி தெற்குப்பார்த்து உள்ளது.
அழகும், அமைதியும் நிறைந்து, ஐஸ்வர்ய சொரூபியாய், அழைத்த குரலுக்கு ஓடிவந்து கேட்ட வரம் தரும் அன்னை, இறைவனை நோக்கிச் சற்றுத் தலைசரிந்து கோலவார் குழலாள் ஈஸ்வரி என்ற பெயர் தாங்கித் தெற்குப் பார்த்து அருள் பாலித்து வருகிறாள்.
கன்னிப்பெண்கள் திருமணம் வேண்டி வாரத்தில் ஒருநாள் என ஒன்பது வாரங்கள் அர்ச்சனை செய்து அம்பாளைத் தரிசித்து மனமுருகி வேண்டிக் கொண்டால், அம்பாளின் அருளால் திருமணம் விரைவில் கைகூடும் என்று கூறப்படுகிறது.
கோவிலின் சுற்றுப் பகுதியில் தென்மேற்குப் பகுதியில் விநாயகப்பெருமானும், வடமேற்குப் பகுதியில் சுப்பிரமணியரும் கிழக்குப்பார்த்துத் தனித்தனிச் சன்னதிகளில் அமைந்து அருள்புரிந்து வருகின்றனர். அம்பாள் சன்னதிக்கு மேல்பக்கம் புனித நீர் எடுக்க ஒரு கிணறு உள்ளது.
இக்கோவிலின் தல விருட்சம் வில்வமரம். அருகில் உள்ள கொன்றை மரத்துடன் சேர்த்துப் பூசிக்கப் படுகிறது. பங்குனி, சித்திரை மாதங்களில் மாத்திரமே பூக்கிற இயல்புள்ள கொன்றை மரம் இக்கோவிலில் எல்லா மாதங்களிலும் பூத்துக் குலுங்குவது இக்கோவிலின் சிறப்பு.
கோவிலின் வெளிப்பக்கம் பெரிய அளவில் தற்போது சுற்றுச்சுவரும், தென்பகுதியில் ஒரு கலையரங்கமும், கோவில் நுழைவாசலுக்கு வடபக்கம் நவக்கிரக சன்னதியும் அமைக்கப் பட்டுள்ளன. தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின் கீழ் இக்கோவில் நிர்வகிக்கப் படுகிறது.
இக்கோவிலின் வடக்குச் சுவரில் அதிகமான கல்வெட்டுக்கள் உள்ளன. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் இக்கோவில் சுந்தரசோழ மன்னர் ஆட்சிக்காலத்தில் ராஜேந்திரசோழ ஈஸ்வரமுடையார் கோவில் என்ற பெயரில் இருந்தது என்றும், சோழமாராயர் என்பவர் கோவிலுக்கு விளக்கெரிக்க நன்கொடை கொடுத்தார் என்றும் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் பழுதுபார்க்கப் பட்டது என்றும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
ராஜராஜ சோழன் கட்டிய மலைக்கோயில்
ராஜ ராஜ சோழன் காலத்தில் தமிழகம் மட்டுமின்றி, தென்னிந்தியா முழுவதும் அவனது ஆட்சியின் கீழ் இருந்தது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை எழுப்பி சாதனை படைத்த அருளாளன் ராஜராஜன், அவனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் சிவாலயம் எழுப்பினான். அதில் ஒன்று, தொண்டை நாட்டில் செய்யாறை அடுத்துள்ள வேளியநல்லூர் கிராமத்தில் உள்ள மகாதேவேஸ்வரர் கோயில். இது ஒரு குன்றின் மீது கட்டப்பட்ட மலைக்கோயில். முற்றிலும் கற்றளி கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நிமிடத்தில் ஏறி விடக்கூடிய சிறிய குன்று தான். ஏறுவதற்கு எளிதான மலைப்பாதை உள்ளது. மலை மீதுள்ள கோயிலில் மதில்கள், கருங்கல், தூண்களுடன் முன் மண்டபம், பிராகாரம், மூலவர் சன்னதி எல்லாம் உள்ளது. கோயிலில் உள்ள கல்வெட்டுகளைக் கொண்டு இது ராஜராஜன் காலத்தியது என்பதை அறிய முடிகிறது. இக்கோயில் 1012 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது. மலைக்கோயிலின் வெளிச்சுற்றில் ஓர் அழகிய சுனை உள்ளது. கோடைக்காலத்திலும் இதில் நீர் வற்றாதாம். சுனையில் அல்லி மலர்வது ஓர் அதிசயம். காமதேனு சிவலிங்கத்திற்குப் பால் சொரிந்து அபிஷேகம் செய்வதுபோல் அமைந்துள்ள புடைப்புச் சிற்பம், ஒரு காலத்தில் இக்கோயிலில் பல அழகிய சிற்பங்கள் இருந்துள்ளதற்குச் சான்று. கோயில் இறைவியின் பெயர் திரிபுரசுந்தரி. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற இங்கு சென்று
கேடிலியப்பர் கோவில், கீழ்வேளூர்
சிலந்திச் சோழன் என்று பெயர் பெற்ற கோச்செங்கட் சோழன் கட்டிய அநேக மாடக்கோயில்களில் கீழ்வேளூர் ஆலயமும் ஒன்றாகும். ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயம் ஒரு பெரியகோயில். கோவிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. கோபுரத்திற்கு எதிரில் முருகப்பெருமான் உண்டாக்கியதாக கூறப்படும் சரவண தீர்த்தம் உள்ளது. கோவிலின் உள்ளே வசந்த மண்டபம் காணப்படுகிறது. இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர் சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் லிங்க உருவில் காட்சி தருகிறார். ஆலயத்தின் விமானத்தில் தென்புறம் இருப்பது சோமாஸ்கந்த விமானம், வடபுறமிருப்பது கேடிலியப்பர் விமானம். தலவிநாயகர் பத்ரி விநாயகர். அத்துடன் சுந்தர விநாயகரும் உள்ளார்.
கட்டுமலை மீதுள்ள சந்நிதியில் வலது பாத நடராஜர் தரிசனம் தருகிறார். அகத்தியருக்கு நடராஜப் பெருமான் தனது வலதுபாத தரிசனம் தந்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். அடுத்து சோமஸ்கந்தர் திருச்சந்நிதி. தட்சிணாமூர்த்தி, பதரி விநாயகர், அறுபத்துமூவர், ஜுரதேவர், அகஸ்தீஸ்வரர், விஸ்வநாதர், நவக்கிரகங்கள் ஆகியோரையும் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், மகாலட்சுமி, சிவ ஆஞ்சநேயர் ஆகியோரையும் தரிசிக்கலாம். அடுத்து அம்பிகை சுந்தரகுஜாம்பிகையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். முருகப்பெருமானின் பூசைக்கும் தவத்துக்கும் கெடுதி உண்டாகாதவாறு இறைவி சுந்தர குசாம்பிகை துர்க்கையின் அம்சமாகக் காவல் புரிந்த அஞ்சு வட்டத்து அம்மையின் சந்நிதி முதல் பிராகாரத்தில் முருகன் சந்நிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் இருக்கின்றது. இவற்றைத் தவிர பஞ்சபூத லிங்கங்களும் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். இத்தல முக்குறுணி விநாயகப் பெருமான் (ஸ்ரீ சுந்தர விநாயகர்) மிகவும் சக்தி வாய்ந்தவர். தட்சிணாமூர்த்தி மிகப் பழமையான திருமேனி. இத்தலத்திலுள்ள ஏகபாதமூர்த்தி திருஉருவம் தனிச்சிறப்புடையது. காளி உருவம் சுதையாலானது. சுதையால் ஆன இத்திருமேனிக்குப் புனுகுசட்டம், சாம்பிராணித் தைலம் சார்த்தப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
இறைவனின் திருப்பெயர் கேடிலியப்பர். இப்பெயர் திருநாவுக்கரசரின் ஆளான அடியவர்க்கு அன்பன்தன்னை என்று தொடங்கும் இவ்வூர்த் திருத்தாண்டகத்துள் எடுத்தாளப்பட்டுள்ளது. பாடல் தோறும் கிழ்வேளூர் இறைவன் கேடிலியை நாடுபவர்கள் தன் வாழ்வில் கேடில்லாமல் இருப்பர் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். வனமுலைநாயகி என்று இறைவியின் பெயரை திருஞானசம்பந்தர் தனது மின் உலாவிய சடையினர் என்று தொடங்கும் இவ்வூர்ப் பதிகம் இரண்டாம் திருப்பாட்டில் "வாருலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்திருக்கோயிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் பல பாடல்களில் ஞானசம்பந்தர் கூறியுள்ளார். எனவே இத்தலத்தின் இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் இவைகள் எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையனவாகும்.
கீழ்வேளூர் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்குள்ள் முருகப்பெருமான் பாலசுப்பிரமணியராய் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வடக்கு நோக்கி பிரம்மச்சாரி கோலத்தில் எழுந்தருளியுள்ளார். திருச்செந்தூர் முருகன், இத்தல முருகன் இருவரின் திருமேனிகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டதாகும்.
தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங்களையும் போக்கி கேடில்லா வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரும், வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் அன்னை சுந்தரகுஜாம்பிகையும் அருளாட்சி புரியும் கீழ்வேளூர் தலத்திற்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
கோயில் பற்றிய சிறு விபரங்கள்
சிவஸ்தலம் பெயர்: கீழ்வேளூர் (தற்போது கீவளூர் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்: கேடிலியப்பர், அக்ஷய லிங்கேஸ்வரர்
இறைவி பெயர்: வனமுலை நாயகி, சுந்தர குசாம்பிகை
பதிகம்: திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது: திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து வழியில் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டித்திலிருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன . நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவில் சிக்கல் தலத்தை அடுத்து இத்தலம் உள்ளது.
ஆலய முகவரி: அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோவில்
கீவளூர் அஞ்சல்
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 611104
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
நாகர்கோவில் நகரின் கிழக்கு எல்லையில் பழையாற்றின் கரைக்கு மேற்குக் கரையை ஒட்டி அமைந்துள்ள ஒழுகினசேரி என்ற பெயரில் உள்ள ஊரில் கிழக்குப்பார்த்து இக்கோயில் அமைந்துள்ளது.
இது முற்காலத்தில் உலகமுழுதுடையான் சேரி என்று அழைக்கப்பட்டுள்ளது.
பெயர்க்காரணம்: கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்தின் பகுதிகள் சேர மன்னரின் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தை ஆண்ட ராஜராஜ சோழனின் பேரனும், ராஜேந்திர சோழனின் மகனுமான ராஜேந்திர சோழீஸ்வரன் சேர நாட்டைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தஞ்சையிலிருந்து படைகளுடன் சென்று நாகர்கோவிலில் தங்கியுள்ளான்.
அன்று மன்னனின் கனவில் இறைவன் தோன்றி, அங்கு ஒரு கோவில் எழுப்பும்படி கூறி மறைந்தார்.
இறைவனின் ஆணைக்குட்பட்டு, மன்னன் உடனடியாக ஏற்பாடுகள் செய்து, தஞ்சைப் பெரிய கோவிலின் சாயலில் சிறிய அளவில் சிறப்பாகக் கட்டி முடித்தான்.
இக்கோவிலில் சிவபெருமான் அரவ நீள்சடையான் என்ற பெயரில் சற்று உயரமாக லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
இக்கோவிலில் சிவன் அருள்பாலித்து வந்தாலும் சோழ மன்னன் உருவாக்கம் செய்ததால் சோழ ராஜகோவில் என்ற பெயரிலேயே பிரசித்தமாகி உள்ளது.
இக்கோவில் அமைந்துள்ள சுற்றுப்புறத் தெருக்களும் சோழராஜ கோவில் தெரு என்ற பெயரில் அமைந்துள்ளன.
தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தின் சாயலில் சிறிய அளவில் விமானமும், நான்கு பக்கக் கற்சுவர்களும், மேல் கூரையில் நான்கு மூலைகளிலும் நந்தியின் சிலைகளும் அமைந்துள்ளன.
இறைவன் கருவறையில் மூன்றடி உயரத்திலும், நிலத்தினடியில் பதினெட்டடி புதைக்கப்பட்ட நிலையிலும் லிங்க வடிவில் கிழக்குப்பார்த்து அருள்பாலித்து வருகிறார்.
மனம் நிறைந்த தூய உள்ளத்தால் பக்திப்பரவசம் கொண்டு லிங்க உருவில் அற்புதமாக அமைந்துள்ள இறைவன் அரவ நீள்சடையானை ஓம் நமசிவாய என்று இருகரம் கூப்பி வணங்கினால், லிங்க உருவில் இல்லாது, ஈசனே நேரில் வந்து நின்று அருள்பாலிப்பது போன்ற உணர்வு கிடைக்கும்.
பூமிக்கடியில் இருந்தும் இறைவன் அருள் செய்வதால், இக்கோவிலில் அமர்ந்து ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபட்டால் இறையுணர்வை அதிர்வலைகளால் உணரமுடியும் எனறும், நினைத்ததை வேண்டிப் பெறலாம் என்றும் சொல்லப் படுகிறது.
கருவறையின் முன்பக்கமுள்ள அர்த்த மண்டபத்தில் இறைவனை நோக்கி நந்திசிலை அமைந்துள்ளது. பிரதோஷ பூசை இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
இறைவன் சன்னதியைச் சுற்றிக் கோவிலுக்குள் சுற்றுப்பாதை உள்ளது. கோவிலுக்குள் நுழைந்தவுடன், வலது பக்கமுள்ள மண்டபத்தில் வடகிழக்கில் அன்னையின் சன்னதி தெற்குப்பார்த்து உள்ளது.
அழகும், அமைதியும் நிறைந்து, ஐஸ்வர்ய சொரூபியாய், அழைத்த குரலுக்கு ஓடிவந்து கேட்ட வரம் தரும் அன்னை, இறைவனை நோக்கிச் சற்றுத் தலைசரிந்து கோலவார் குழலாள் ஈஸ்வரி என்ற பெயர் தாங்கித் தெற்குப் பார்த்து அருள் பாலித்து வருகிறாள்.
கன்னிப்பெண்கள் திருமணம் வேண்டி வாரத்தில் ஒருநாள் என ஒன்பது வாரங்கள் அர்ச்சனை செய்து அம்பாளைத் தரிசித்து மனமுருகி வேண்டிக் கொண்டால், அம்பாளின் அருளால் திருமணம் விரைவில் கைகூடும் என்று கூறப்படுகிறது.
கோவிலின் சுற்றுப் பகுதியில் தென்மேற்குப் பகுதியில் விநாயகப்பெருமானும், வடமேற்குப் பகுதியில் சுப்பிரமணியரும் கிழக்குப்பார்த்துத் தனித்தனிச் சன்னதிகளில் அமைந்து அருள்புரிந்து வருகின்றனர். அம்பாள் சன்னதிக்கு மேல்பக்கம் புனித நீர் எடுக்க ஒரு கிணறு உள்ளது.
இக்கோவிலின் தல விருட்சம் வில்வமரம். அருகில் உள்ள கொன்றை மரத்துடன் சேர்த்துப் பூசிக்கப் படுகிறது. பங்குனி, சித்திரை மாதங்களில் மாத்திரமே பூக்கிற இயல்புள்ள கொன்றை மரம் இக்கோவிலில் எல்லா மாதங்களிலும் பூத்துக் குலுங்குவது இக்கோவிலின் சிறப்பு.
கோவிலின் வெளிப்பக்கம் பெரிய அளவில் தற்போது சுற்றுச்சுவரும், தென்பகுதியில் ஒரு கலையரங்கமும், கோவில் நுழைவாசலுக்கு வடபக்கம் நவக்கிரக சன்னதியும் அமைக்கப் பட்டுள்ளன. தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின் கீழ் இக்கோவில் நிர்வகிக்கப் படுகிறது.
இக்கோவிலின் வடக்குச் சுவரில் அதிகமான கல்வெட்டுக்கள் உள்ளன. கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் இக்கோவில் சுந்தரசோழ மன்னர் ஆட்சிக்காலத்தில் ராஜேந்திரசோழ ஈஸ்வரமுடையார் கோவில் என்ற பெயரில் இருந்தது என்றும், சோழமாராயர் என்பவர் கோவிலுக்கு விளக்கெரிக்க நன்கொடை கொடுத்தார் என்றும் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்காலத்தில் இக்கோவில் பழுதுபார்க்கப் பட்டது என்றும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
ராஜராஜ சோழன் கட்டிய மலைக்கோயில்
ராஜ ராஜ சோழன் காலத்தில் தமிழகம் மட்டுமின்றி, தென்னிந்தியா முழுவதும் அவனது ஆட்சியின் கீழ் இருந்தது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை எழுப்பி சாதனை படைத்த அருளாளன் ராஜராஜன், அவனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் சிவாலயம் எழுப்பினான். அதில் ஒன்று, தொண்டை நாட்டில் செய்யாறை அடுத்துள்ள வேளியநல்லூர் கிராமத்தில் உள்ள மகாதேவேஸ்வரர் கோயில். இது ஒரு குன்றின் மீது கட்டப்பட்ட மலைக்கோயில். முற்றிலும் கற்றளி கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நிமிடத்தில் ஏறி விடக்கூடிய சிறிய குன்று தான். ஏறுவதற்கு எளிதான மலைப்பாதை உள்ளது. மலை மீதுள்ள கோயிலில் மதில்கள், கருங்கல், தூண்களுடன் முன் மண்டபம், பிராகாரம், மூலவர் சன்னதி எல்லாம் உள்ளது. கோயிலில் உள்ள கல்வெட்டுகளைக் கொண்டு இது ராஜராஜன் காலத்தியது என்பதை அறிய முடிகிறது. இக்கோயில் 1012 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது. மலைக்கோயிலின் வெளிச்சுற்றில் ஓர் அழகிய சுனை உள்ளது. கோடைக்காலத்திலும் இதில் நீர் வற்றாதாம். சுனையில் அல்லி மலர்வது ஓர் அதிசயம். காமதேனு சிவலிங்கத்திற்குப் பால் சொரிந்து அபிஷேகம் செய்வதுபோல் அமைந்துள்ள புடைப்புச் சிற்பம், ஒரு காலத்தில் இக்கோயிலில் பல அழகிய சிற்பங்கள் இருந்துள்ளதற்குச் சான்று. கோயில் இறைவியின் பெயர் திரிபுரசுந்தரி. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற இங்கு சென்று
கேடிலியப்பர் கோவில், கீழ்வேளூர்
சிலந்திச் சோழன் என்று பெயர் பெற்ற கோச்செங்கட் சோழன் கட்டிய அநேக மாடக்கோயில்களில் கீழ்வேளூர் ஆலயமும் ஒன்றாகும். ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயம் ஒரு பெரியகோயில். கோவிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. கோபுரத்திற்கு எதிரில் முருகப்பெருமான் உண்டாக்கியதாக கூறப்படும் சரவண தீர்த்தம் உள்ளது. கோவிலின் உள்ளே வசந்த மண்டபம் காணப்படுகிறது. இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர் சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் லிங்க உருவில் காட்சி தருகிறார். ஆலயத்தின் விமானத்தில் தென்புறம் இருப்பது சோமாஸ்கந்த விமானம், வடபுறமிருப்பது கேடிலியப்பர் விமானம். தலவிநாயகர் பத்ரி விநாயகர். அத்துடன் சுந்தர விநாயகரும் உள்ளார்.
கட்டுமலை மீதுள்ள சந்நிதியில் வலது பாத நடராஜர் தரிசனம் தருகிறார். அகத்தியருக்கு நடராஜப் பெருமான் தனது வலதுபாத தரிசனம் தந்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். அடுத்து சோமஸ்கந்தர் திருச்சந்நிதி. தட்சிணாமூர்த்தி, பதரி விநாயகர், அறுபத்துமூவர், ஜுரதேவர், அகஸ்தீஸ்வரர், விஸ்வநாதர், நவக்கிரகங்கள் ஆகியோரையும் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், மகாலட்சுமி, சிவ ஆஞ்சநேயர் ஆகியோரையும் தரிசிக்கலாம். அடுத்து அம்பிகை சுந்தரகுஜாம்பிகையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். முருகப்பெருமானின் பூசைக்கும் தவத்துக்கும் கெடுதி உண்டாகாதவாறு இறைவி சுந்தர குசாம்பிகை துர்க்கையின் அம்சமாகக் காவல் புரிந்த அஞ்சு வட்டத்து அம்மையின் சந்நிதி முதல் பிராகாரத்தில் முருகன் சந்நிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் இருக்கின்றது. இவற்றைத் தவிர பஞ்சபூத லிங்கங்களும் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். இத்தல முக்குறுணி விநாயகப் பெருமான் (ஸ்ரீ சுந்தர விநாயகர்) மிகவும் சக்தி வாய்ந்தவர். தட்சிணாமூர்த்தி மிகப் பழமையான திருமேனி. இத்தலத்திலுள்ள ஏகபாதமூர்த்தி திருஉருவம் தனிச்சிறப்புடையது. காளி உருவம் சுதையாலானது. சுதையால் ஆன இத்திருமேனிக்குப் புனுகுசட்டம், சாம்பிராணித் தைலம் சார்த்தப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
இறைவனின் திருப்பெயர் கேடிலியப்பர். இப்பெயர் திருநாவுக்கரசரின் ஆளான அடியவர்க்கு அன்பன்தன்னை என்று தொடங்கும் இவ்வூர்த் திருத்தாண்டகத்துள் எடுத்தாளப்பட்டுள்ளது. பாடல் தோறும் கிழ்வேளூர் இறைவன் கேடிலியை நாடுபவர்கள் தன் வாழ்வில் கேடில்லாமல் இருப்பர் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். வனமுலைநாயகி என்று இறைவியின் பெயரை திருஞானசம்பந்தர் தனது மின் உலாவிய சடையினர் என்று தொடங்கும் இவ்வூர்ப் பதிகம் இரண்டாம் திருப்பாட்டில் "வாருலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்திருக்கோயிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் பல பாடல்களில் ஞானசம்பந்தர் கூறியுள்ளார். எனவே இத்தலத்தின் இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் இவைகள் எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையனவாகும்.
கீழ்வேளூர் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்குள்ள் முருகப்பெருமான் பாலசுப்பிரமணியராய் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வடக்கு நோக்கி பிரம்மச்சாரி கோலத்தில் எழுந்தருளியுள்ளார். திருச்செந்தூர் முருகன், இத்தல முருகன் இருவரின் திருமேனிகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டதாகும்.
தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங்களையும் போக்கி கேடில்லா வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரும், வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் அன்னை சுந்தரகுஜாம்பிகையும் அருளாட்சி புரியும் கீழ்வேளூர் தலத்திற்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
கோயில் பற்றிய சிறு விபரங்கள்
சிவஸ்தலம் பெயர்: கீழ்வேளூர் (தற்போது கீவளூர் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்: கேடிலியப்பர், அக்ஷய லிங்கேஸ்வரர்
இறைவி பெயர்: வனமுலை நாயகி, சுந்தர குசாம்பிகை
பதிகம்: திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது: திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து வழியில் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டித்திலிருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன . நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவில் சிக்கல் தலத்தை அடுத்து இத்தலம் உள்ளது.
ஆலய முகவரி: அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோவில்
கீவளூர் அஞ்சல்
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 611104
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.