External Gatherings
வேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்வரலாறு என்பது மனித இனம் வளர்ந்த வகைகளையும், அவற்றின் கலை, பண்பாடு, நாகரிகம் பற்றிய செய்திகளையும் தொகுத்து இனிவரும் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு உதவும் வகையில் அளிக்கும் செயற்பாடாகும். கள்ளர் குல வரலாற்று செய்திகளை ஆய்ந்தறிந்து தொகுத்து பாதுகாத்திடல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும். கள்ளர் இனம் பற்றிய இத்தகைய வரலாற்று விவரங்கள், பழைய ஆவணங்கள், சாசனச்சன்றுகள் மற்றும் தாங்கள் அறிந்த, படித்த, செவிவழிச் செய்திகளை சர்வதேச கள்ளர் பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். குலப்பெருமையும் உணராமல், இன உணர்வும் இல்லாமல், ஒற்றுமையுமின்றி மாற்றானுக்கு கொடிபிடித்தே மாயும் நம் இளைஞர்களை காத்திட உதவுங்கள். நம் குல பண்பாட்டையும், நாகரிகத்தையும் விளைநிலங்களான மாணவர்களின் மனவயலில் விதைப்பது நன்று.
என்றும் உரிமையுடன் உறவைத்தேடும்
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்
சர்வதேச கள்ளர் பேரவை
IMPORTANT
நம் முன்னோர்களான மன்னராக இருக்கட்டும். ராஜாவாக, குறுநில மன்னராக, இருக்கட்டும். அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது. தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள்.
உங்கள் அறிவின் மூலம், உங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றிகளைப் பார்த்து உங்கள் சிந்தனையில் வெறி வந்து விடக்கூடாது. ஓலமாய் முடிந்து போன நம்வர்களின் வாழ்க்கை எதை உணர்த்துகிறது?
கள்ளர் குலத்தில் வீரம் என்பது எவருடனும் ஓப்பிட முடியாது. எதையும் சாதிக்கும் மன உறுதி உடையது. மற்ற எந்த இனத்தையும் விட அதிகமாக வீரம் இருந்தது கள்ளர் குலத்தில் மட்டுமே. வரலாற்று சான்றுகள் அத்தனையும் இவ்வாறு தான் நமக்கு இன்று வரையிலும் பாடமாக பட்டயமாக காட்சியளித்துக்கொண்டு இருக்கிறது.
ஆனால் தொடக்கத்தில் கள்ளர் குல முன்னோர்கள் வீரத்தின் மூலம் தன்னுடைய ஆளுமையை, ஆண்மையை நிலைநாட்டினார்கள். இன்று கள்ளர் குலம் தன்னுடைய தனி மனித உழைப்பின் மூலம் நிலை நாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
வீரம் என்பது அவர்களின் முரட்டுத்தனத்தின் குறியீடுஅல்ல. முட்டாள்காளாக வாழ்ந்து விவேகமற்ற செயல்களும் செய்தவர்கள் அல்ல. இன்று கள்ளர் குல ஆளுமை சுருங்கி இருக்கிறதே தவிர அவர்களின் எண்ணங்களில் இன்றைய ஆளும் தலைவர்கள் போல் எந்த சுருக்கமும் இல்லை.
இறை நம்பிக்கைகளுக்கும், தங்களுடைய அடிப்படை கடமைகளுக்கும் என்ன வித்தியாசங்கள் என்று தெரியாமலேயே ஆட்சியாளர்களும் வாழ்கின்றனர். ஆட்சியில் மக்களும் வாழ்கின்றனர்
அடுத்தவரிடம் "அன்பு செலுத்தி" தன்னை நிலைநாட்டுவதற்கு பதில் " கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, புனிதம்,புண்ணியம் என்ற ஆள்பவர்களின் வார்த்தைகள் புரியாத புதிராக வாழ்ந்து கொண்டு மக்கள் இருக்கின்றனர். முடிந்தும் போயினர்.
" ஆண்டவனே " உங்கள் பாதம் பட்டதால் இந்த இடமே புனிதமாகி விட்டது."
"வாழ்த்த வயதில்லை. உங்களை வணங்குகிறோம். "என்று வாழ்ந்தவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிர்கதிக்கு அழைத்துக் கொண்டு சென்ற போதிலும் எவருக்கும் மாற்றம் தேவையாய் இல்லை. முன்னேற்றம் என்பது விதிப்பலனுக்குள் என்று பார்த்துக்கொண்டவர்களுக்கும் பெரிதான ஆசைகளும் இல்லை.
அடுக்கு மொழி, சிலேடை மொழி, சிருங்கார மொழி, தேன் மொழி, பேதி மொழி என்று அத்தனை நடையிலும் பேசிப்பேசி ஆட்சிக்கட்டிலை பிடித்த தலைவர்களின் அக்கப்போர் அறிக்கைகளும், திடுக்கிடக்கூடிய வார்த்தை அலங்காரங்களும் எதை உணர்த்திக்கொண்டு இருக்கிறது? சொல்லிக் கொடுத்தவர்கள், வழிகாட்டியவர்கள், அவர்கள் மட்டும் தெளிவாக வாழ்ந்தார்கள், வளர்ந்தார்கள்.
இவர்களை தொடர்ந்தவர்களின் நம் குலவர்க்கத்தின் வாழ்க்கை மட்டும் அன்றும் இன்றும் என்றும் நிர்மூலமாகிக் கொண்டு இருக்கிறது. வாழ்ந்தவர்கள் நெஞ்சில் சுமந்த லட்சியங்கள் இல்லாமல் பின் தொடர்ந்து வந்த வழிதோன்றல்களையும் அவ்வாறே பாதை காட்டி மறைந்தனர். நாடு நல்ல
சூழ்நிலையில் இருந்தாலும் நயவஞ்சகத்தால் நல்லதைத் தவிர அத்தனையும் செய்ய முடிகின்ற தலைவர்களால் நம் இனத்தின் வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்ப முடியும்?
இன்று பெரிய வெற்றிடம். காரணம் இன உணர்வும் இல்லை. உணர்வு ஊட்ட வந்தவர்களும்
உண்மையானவர்களாக இல்லை.
மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் இன்று வரையிலும் நமக்கு போதை ஊட்டிக்கொண்டுருப்பவர்கள் ஒன்று ஊட்டியில் ஓய்வெடுக்கிறார்கள். இல்லையேல் குத்தீட்டி வரிகளால் குத்திக்கிழிக்கிறார்கள். ஒவ்வொரு தலைவரின் பங்களிப்பும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உலகத்தில் இருக்கும்
கள்ள ர்களின் பாதிப்பு இன்று வரையிலும் ஏன் ஓலமாய் நம் காதில் வந்து ஒலிக்கின்றது?
காலம் போட்ட அவசர கோலத்தில் இன்று வீரமென்ற சொல்லை விவேகம் என்ற சொல்லுக்குள் அடக்கி சகிப்புத்தன்மையாக மாற்றிவிட்டுள்ளது. கத்தி, வாளை தூக்க முடியாதவர்கள் இன்று புத்தியை மட்டும் சுமந்து கொண்டு கடல் கடந்து சென்று கொண்டுருக்கிறார்கள்.
கடல் கடந்து சென்றவர்கள் இன்று வரைக்கும் எதற்கும் கண்கலங்குவது இல்லை. காரணம் அவர்களே தெரியாத அத்தனை உழைப்பும் , ஆளுமையும் அங்கு தான் இனம் கண்டு கொள்கிறார்கள்.
இன்றும் என்றும் எந்தக் கொடுமையான சூழ்நிலையிலும் கொண்டு போய் தன்னை பொருத்திக் கொண்டாலும் கள்ளர் குல மறவன் என்பவனால் மற்றவர்களைக் காட்டிலும் பல மடங்கு தன்னுடைய ஆளுமை தன்மையை நிலை நாட்டி விட முடியும்.
அன்று வனத்தில் வாழ்க்கை அமைந்த முன்னோர்கள் நறுமணங்களையும் சுவாசித்து சுகமாகவும் வாழ்ந்தார்கள். சுகாதாரமாகவும் வாழ்ந்தார்கள். இன்று வனமும் அழிந்து கொண்டே வருகின்றது.
மனமும் இருண்டு கொண்டே தொடர்கின்றது.
அன்று ஆளுமை புரிந்தவர்களின் மேதா விலாசங்கள் எதையும் இன்று வரையிலும் சரியாக புரிந்து கொள்ளப் படாவிட்டாலும் கள்ளர் குல மறவன் தன்னுடைய தகுதியை புரிந்தவன். தலையில் உள்ள அறிவை உண்ர்ந்தவன்.
இது வரலாற்று உண்மை.எப்போது புரியும்?
To be fixed in Propoer Heading
நம்நாட்டின் தொன்மை வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் தொல்லியல் சான்றுகளில் ஒன்று கல்வெட்டுகள் ஆகும். கோவில் முதலிய பொதுக் கட்டிட்ங்களின் சுவர்களிலும், பாறைகள் மீதும், கல்தூண்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம். இக் கல்வெட்டு எழுத்துக்களை அறிந்து அவற்றின் பொருளை விளக்கும் கலையே கல்வெட்டியல் எனப்படும். நம்நாட்டில் கல்வெட்டுகளைப் படித்தறிந்து, வரலாற்றுச் சான்றுகளாக அவற்றை உருவாக்கிய பெருமை மேலைநாட்டவரையே சாரும். அவர்களில் முக்கியமானவர்கள்
ஜேம்ஸ் பிரின்செப் 1837 இந்தியாவில் கல்வெட்டாய்வு ஆரம்பிக்கப்படுவதற்கு இவரே முக்கிய காரணம் ஆவார்
அலெக்சாந்தர் கன்னிங்காம் 1871 முதல் 1885 வரை அசோகர் காலத்து கல்வெட்டுகள் என்ற தனித் தொகுப்பை வெளியிட்டார்
டாக்டர் யூஜின் ஹால்ட்ஸ் (1857 - 1906) தென்னிந்திய கல்வெட்டுகளின் முதல் தொகுப்பினை 1903 ல் வெளியிட்டார். மேலும் ராபர்ட் சிவல் (1868 - 1894) டாக்டர்கில்ஹார்ன்,
டாக்டர் ஜார்ஜ் பூலர் (1837 - 1898) ஜான் பிளீட் (1874 - 1917) ஜேம்ஸ் பர்கஸ் ( 1822 - 1917)
டாக்டர் ப்ர்னல், காலின் போன்றோர்களின் ஊக்கமும் உழைப்பும் ஆர்வமும் இல்லை எனில் நமது வரலாற்றினை அறிந்திருக்க வாய்புகள் குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இவர்கள் தவிர கோபிநாத்ராவ், வெங்கையா, சுப்ரமணிய ஐயர், கிருஸ்ணசாஸ்திரி இந்திய கல்வெட்டாய்வுக்கு பெரும் துணை புரிந்துள்ளனர். 1861 முதல் இதுவரையில் சுமார் எழுபத்தைந்தாயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்படாமல் உள்ளன.
சோழர்: (சரித்திரத்திற் குட்படாதவர் - முற்காலத்தவர்) :
சூரியன் ,
மனு ,
இக்குவாகு ,
ககுத்தன் ,
புலியும்மானும் ஒரு துறையுண்ண ஆண்டவன்,
மாந்தாதா,
முசுகுந்தன் ,
தேவர்க் கமுதமளித்தவன்,
வல்லபன்,
சிபி ,
சுராதிராசன் ,
சோளன்,
இராசசேகரி,
பரகேசரி,
காலனிடத்தில் வழக்குரைத்தோன்,
காந்தன்,
காகந்தி ,
அனைத்துலகும் வென்றோன்,
வேந்தனைக் கொடியாக வைத்தோன்,
ஒருகடலில் மற்றொரு கடலைப்புக விட்டோன்,
தன் குருதியை உண்ணவளித்தோன்,
காற்றைப்பணிகொண்டோன்,
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செப்பியன்,
வானவூர்தி செலுத்தினோன்,
அரசர் சூளாமணி ,
வீரவாதித்தன் ,
சூரவாதித்தன் முதலியோர் மனுவுக்கு முன்னிருந்த சோழ மன்னவர் கணக்கற்றவர். அவர் பெயர் திட்டமாய்த் தெரியவில்லை.
சோழர், திருவாரூர் சீகாழி உறையூர் புகார் தஞ்சை செயங்கொண்ட சோழபுரம் முதலிய பல நகரங்களைப் பல சமையங்களில் தலைநகராகக் கொண்டிருந்தனர்.
சரித்திரத்திற்கு பிற்கலத்தவர் :
உருவப் பஃறேர். இளஞ்சேட் சென்னி ,
கரிகாலன் ,
கிள்ளிவளவன் ,
தித்தன் ,
பெருங்கிள்ளி ,
நல்லுத்தரன் ,
கோப்பெருஞ் சோழன் ,
கோச்செங்கட் சோழன் முதலியோர்.
இவருள் கரிகால் வளவன் பனிமலையிற் புலியைப் பொறித்து நாவலந்தேசம் முழுதும் தன் ஆணையைச் செலுத்தினான்.
கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை சோழநாட்டின் வடபாகமான தொண்டைநாடும், ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை சோழநாடு முழுவதும் பல்லவராட்சிக்குட்பட்டிருந்தது.
சரித்திரத்திற் குட்பட்டோர்
விஜயாலயனும் முதலாம் ஆதித்தனும் (850 - 907),
முதலாம் பராந்தகன் ( 907 ),
இராஜாதித்தன் (947 ) ,
கண்டராதித்தன் மதுராந்தகன் அரிஞ்சயன் 2ஆம் பராந்தகன் 2ஆம் ஆதித்தன் முதலியோர் (970 - 985 ), முதலாம் ராஜராஜன் (985 - 1014 ),
ராஜேந்திர சோழதேவன் ( 1012 ),
ராஜாதிராஜன் ( 1018 ),
விஜயராஜேந்திரதேவன் (1052 ),
ராஜ மகேந்திரனும் வீரராஜேந்திரனும் அதிராஜேந்திரனும் (1055- 1070 ),
முதலாம் குலோதுங்கன் ( 1070 ),
விக்கிரமச்சோழன் ( 1118 ),
இரண்டாம் குலோதுங்கனும் இரண்டாம் இராஜராஜனும் இரண்டாம் ராஜாதிராஜனும் (1143 - 78 ),
3ஆம் குலோத்துங்கன் ( 1178),
மூன்றாம் இராஜராஜன் ( 1216 ),
மூன்றாம் இராஜேந்திரன் ( 1246 ).
இவருள், ராஜேந்திர சோழதேவன் குமரியிலிருந்து கங்கைவரை தன்னடிபடுத்தி ஈழம் (இலங்கை ), கடாரம்
( பர்மா ), முதலிய நாடுகளையும் கைப்பற்றினான்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் Posted by: on Feb 4, 2012
பண்டைய தமிழகத்தின் கடற்கரை 1500 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்திருந்தது. இதனால் தமிழர்கள் தொல்பழங்காலத்திலேயே வெளிநாடுகளோடு வணிகத் தொடர்பும் கலாசார தொடர்பும் கொண்டிருந்தனர்.
தமிழக கடற்கரையில் வாழ்ந்த மக்கள் சிறந்த கடலாடிகளாக இருந்தார்கள். குறிப்பாகக் கப்பல் கட்டும் கலையிலும் அலைகடலில் கப்பலைச் செலுத்தும் கலையிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதன் காரணமாக தென்கிழக்காசிய நாடுகளுக்கு வணிகம் மற்றும் மதப்பிரசாரம் ஆகியவற்றுக்காகத் தமிழர்கள் சென்றார்கள். பிறகு அந்நாடுகளில் குடியேறினர். இத்தகைய குடியேற்றங்கள் கி.பி.முதலாம் நூற்றாண்டில் தொடங்கி சில காலத்திற்கு நடைபெற்றது. மியான்மர், சீனம், கம்போடியா முதலிய நாடுகளிலும் சுமத்திரா, சாவகம், போர்னியோ, பிலிப்பைன்ஸ் தீவுக் கூட்டங்களிலும் அவர்கள் குடியேறினார்கள்.
தாம் குடியேறி வாழ்ந்த இடங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார்கள். இதன் விளைவாக இந்த நாடுகளில் பண்டைக்காலச் சின்னங்கள், தமிழகத்தில் கிடைத்துள்ள அதே அளவுக்கு தென்கிழக்காசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரும்பாலான சூலங்கள், வேலின் அலகும் மலேசியாவில் கிடாவிலும் சுமத்திராவிலும் பிலிப்பைன்சிலும் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள தாய்த் தெய்வம் போன்றவை தென்கிழக்காசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன.
சங்க பழங்கால சூதபவழம் போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள மணிகள், வளையல்கள் போன்றவை தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சியின்போது குவியல்குவியலாகக் கிடைத்துள்ளன. இதைப்போன்ற மணிகளும் வளையல்களும் காம்போசம், பிலிப்பைன்சிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
போருக்குப் பயன்படும் ஈட்டி, வேல், வாள், அரிவாள், கோடாலி போன்ற பலவகைக் கருவிகள் தமிழ்நாட்டிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் ஒரேமாதிரியாகக் கிடைத்துள்ளன.
முருக வழிபாட்டுக்குரிய வேல், சேவல், காவடி போன்ற பொருட்கள் ஆதிச்சநல்லூர், பிலிப்பைன்ஸ் தீவுகளில் கிடைத்துள்ளன.
தென்கிழக்காசிய நாடுகளில் பரவியுள்ள பழைய பெருங்கற்காலப் பண்பாடு, சோழ மண்டலக் கடற்கரையிலிருந்து அந்நாடுகளுக்குச் சென்று பரவியிருக்க வேண்டுமென அறிஞர்கள் கருதுகிறார்கள். சாவகம், சுமத்திரா, பாலி, போர்னியோ, பிலிப்பைன்ஸ் தீவுகளிலேயே முதல் காலகட்ட பெருங்கல் பண்பாட்டுச் சின்னங்கள் ஏராளமான அளவில் கிடைத்துள்ளன. சோழ மண்டலக் கடற்கரைக்கு நேராக அமைந்துள்ள தீவுகளாக இவை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சங்ககாலத்திற்கு முன்பிலிருந்து கடைச்சங்க காலம் முடிவு வரை கி.பி.350 வரை தமிழகத்தில் வீசிய பண்பாட்டு அலை மியான்மர், சாம்பா, காம்போசம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் சுமத்திரா, சாவகம் முதலிய தீவுகளிலும் பரவியிருக்க வேண்டும். சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய நடுகற்கள் அமைக்கும் வழக்கம் மேற்கண்ட நாடுகளிலும் காணப்படுவதே இதற்குப் போதிய சான்றாகும்.
மன்னர் குலம்
தென்கிழக்காசிய நாடுகளை ஆண்ட பல்வேறு மன்னர் குலங்களுக்கும் தமிழக மன்னர் குலங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருப்பதற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. பல்லவ, சோழ, பாண்டிய மன்னர் குலங்களைச் சேர்ந்தவர்களே தென்கிழக்காசிய நாடுகளின் அரச பரம்பரைகளைத் தோற்றுவித்தவர்கள் என்றும் கருதப்படுகிறது.
தமிழக மன்னர் குலங்களுக்குரிய குடிப்பெயர்களை தென்கிழக்காசிய மன்னர்கள் தங்களுக்கும் சூட்டிக் கொண்டார்கள். மணவினை உறவும் இவர்களுக்குள் இருந்தது. சமய, பண்பாடு ரீதியான தொடர்புகளும் அந்நாடுகளுக்கும் தமிழர்களுக்குமிடையே நெருக்கமாக இருந்தது.
வர்மன் என்னும் குடிப்பெயரை கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ அரச மரபினர் தங்கள் பெயரோடு சேர்த்து வழங்கினர். இந்த வர்மன் என்னும் பெயரைத் தம்முடைய சிறப்புப் பெயராகத் தென்கிழக்காசிய நாடுகளை ஆண்ட பல்வேறு மன்னர் குலங்களைச் சேர்ந்தவர்கள் தத்தம் பெயர்களோடு சேர்த்துப் பயன்படுத்தியுள்ளனர்.
மியான்மரைச் சேர்ந்த மோன் பழங்குடி மன்னர்கள் விக்கிரவர்மன், பிரபுவர்மன் என்னும் பெயர்களை உடையவர்களாகத் திகழ்ந்தனர்.
பியூனானை ஆண்ட அரசன் ஒருவர் குணவர்மன் என்று குறிப்பிடப்படுகிறான்.
சம்பாவின் புகழ்மிக்க அரசன் பத்திரவர்மன் ஆவான். காம்போசத்தை ஆண்ட முதல் அரச மரபைச் சேர்ந்தவன் உருத்திரவர்மன் ஆவான்.
மலேயாவை ஆண்ட மன்னர்கள் சிலரும் வர்மன் என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டனர். அவர்களில் விஷ்ணுவர்மன் முக்கியமானவன். சாவகத்தை ஆண்ட மன்னர்களுள் தேவவர்மன், பூர்ணவர்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். போர்னியோவை அசுவவர்மன் என்னும் மன்னன் ஆண்டான்.
இந்த வர்மன் என்னும் குடிப்பெயரை முதலில் சூட்டிக்கொண்ட பியூனான், சம்பா, காம்போச அரசர்கள் பல்லவ அரசர்களுடன் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையவர்களாக இருந்திருக்கவேண்டும். மாறன் என்னும் பெயருடைய அரசன் ஒருவன் சம்பாவை ஆண்டுள்ளான். அவன் பாண்டிய அரச மரபினைச் சேர்ந்தவன் என்பது அறிஞர் பிலியோசாயின் கருத்தாகும்.
இராசாதிராசன் என்னும் பட்டப்பெயரை 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயினவுங்கு என்னும் அரசன் சூட்டிக்கொண்டுள்ளான். இப்பெயர் இராசேந்திர சோழனின் மூத்த மகனின் பெயராகும். இதே பட்டப்பெயரை காம்போசத்தை ஆண்ட சூரியவம்ச இராம மகாதரன் என்பவனும் சூட்டிக்கொண்டுள்ளான். பிற்காலச் சோழ மன்னர்கள் பயன்படுத்திய திரிபுவன சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை மியான்மரை 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கியாசித்தன் பயன்படுத்தியுள்ளான்.
12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சாவகத்தை ஆண்ட சைலேந்திர அரசன் ஒருவன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியன் என்னும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டுள்ளான். இவன் பாண்டிய குலத்தோடு தொடர்பு கொண்டவனாகத் தோன்றுகிறது.
திருமுறை இலக்கியம்
தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ் நாகரிகம், பண்பாடு, சமயம் ஆகியவை கடல் கடந்து தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியிருந்தன. தாய்லாந்து நாட்டில் நடைபெறும் மன்னருக்கு முடிசூட்டும் விழாவில் திருமுறைகள் ஓதப்பட்டன. திருஞானசம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதல் பதிகமும், சுந்தரரின் பித்தா பிறைசூடி பெருமானே என்ற முதல் பதிகமும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும் தென்னாட்டுக்குரிய கிரந்த எழுத்தில் எழுதப்பெற்று இன்றும் தாய்லாந்து நாட்டின் அரச விழாக்களில் பாடப்பட்டு வருகின்றன.
காம்போசம், தாய்லாந்து, வியட்நாம் முதலிய நாடுகளில் காரைக்கால் அம்மையாரின் கோயில்கள் காணப்படுகின்றன. எனவே, தமிழர்களின் திருமுறைகள் தென்கிழக்காசிய நாடுகளில் பல்லவர், சோழர் காலங்களில் பரவியிருக்கவேண்டும்.
தமிழ்க்காப்பியமான மணிமேகலை கதைத்தலைவி மணிமேகலை சாவகத்துக்குச் சென்று தருமசாவகனைச் சந்தித்து வந்ததைப் பற்றிய செய்தி குறிப்பிடத்தக்கதாகும். சிலப்பதிகாரத்தால் சுட்டப்படும் மணிமேகலை என்னும் கடல் தெய்வம் தாய்லாந்து மக்களால் வழிபாடு செய்யப்பட்டது. மணிமேகலை வரலாற்றைக் கூறும் கதைப் பாடல்களும் அம்மானைப் பாடல்களும் இன்னும் தாய்லாந்தில் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
சமயம்
தென்கிழக்காசிய நாடுகளில் புத்த சமயம் மட்டுமல்ல சைவ சமயமும் பரவியிருந்தது. இந்நாடுகளில் அகத்தியர் வழிபாடு இருந்தது என்பதைத் தொல்பொருள் சின்னங்கள் புலப்படுத்துகின்றன. காம்போசம், மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகளில் அகத்தியரின் சிலைகள் கிடைத்துள்ளன.
அதைப்போலவே காரைக்கால் அம்மையாரின் செப்புச் சிலைகள் காம்போசம், பினிசியா போன்ற நாடுகளில் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டு வணிகர்கள் தங்களின் குலதெய்வமான காரைக்கால் அம்மையாரைத் தாங்கள் செல்லும் இடமெல்லாம் எடுத்துச்சென்றிருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
நடராசர் வழிபாடு
தமிழர்களுக்கே உரியதும் சோழர் காலத்ததுமான நடராசர் வழிபாடு தாய்லாந்து, காம்போசம், இந்தோ னேசியா போன்ற நாடுகளில் பரவி இருப்பதற்கான சான்றுகள் கிடைத் துள்ளன. இந்நாடுகளில் உள்ள கோயில் சிற்பங்களில் நடராசர் உருவமும் காரைக்கால் அம்மையார் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. கல்லாலும் செம்பாலும் செய்யப் பட்டுள்ள இந்தச் சிலைகள் இன்ன மும் அந்த நாடுகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன.
பல்லவ நாட்டுத் தலை நகரமாக விளங்கிய காஞ்சிபுரம் புத்த மதத்தின் தலையாய இடமாக ஒரு காலகட்டத்தில் விளங்கிற்று. இந்த காஞ்சியிலிருந்து 6ஆம் நூற்றாண்டில் போதிதர்மன் என்ற புத்தத் துறவி சாவகத்தின் வழியாக சீனா சென்றார். மாபெரும் தத்துவஞானியாக விளங்கிய தருமபாலர் தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று வந்தார். 10ஆம் நூற்றாண்டு முடிவுவரை காஞ்சியைச் சேர்ந்த தமிழ் புத்தத் துறவிகள் தென்கிழக்காசிய நாடுகளில் புத்த சமயப் பரப்புரையில் ஈடுபட்டனர்.
மன்னர் நில உறவுகள்
தென்கிழக்காசிய நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டியிருக்கிறார்கள். சம்பா என்னும் நாட்டின் பெயர் காவிரிப் பூம்பட்டினத்தின் சிறப்புப் பெயரான சம்பாபதியின் திரிபாகும். மலேயாவின் இக்காலப் பெயர் முதலாம் இராசேந்திரனின் காலத்தில் மலையூர் என விளங்கியது. சிங்கப்பூரின் பழங்காலப் பெயர் சிங்கபுரம் என்பதாகும். இந்தோனேசியாவில் சிறப்புற்று விளங்கிய மதுரா பாண்டியரின் தலைநகரமான மதுரையோடு கொண்டிருந்த தொடர்பைப் புலப்படுத்துகிறது.
தென்கிழக்காசிய நாடுகளில் அரசோச்சிய மன்னர்கள் தமிழ்நாட்டிலிருந்த பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்கள். மியான்மரின் அரசர்கள் பல்லவ அரசர்களோடு தொடர்பு கொண்டிருந்தனர். பியூனான் அரச மரபின் தோற்றம் பற்றிய கதை பல்லவரின் அரச குடியின் தோற்றம் பற்றிய செப்பேடு செய்திகளோடு பெரிதும் ஒத்திருக்கிறது.
சம்பாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின் மூலம் அந்நாட்டு அரச மரபு பல்லவரோடு கொண்டிருந்த உறவு வெளிப்படுகிறது.
காம்போச இளவரசி ரெங்கபதாகையை இரண்டாம் நரசிம்ம பல்லவன் மணந்து கொண்ட வரலாறு குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாம் நரசிம்மன் என அழைக்கப்பட்ட இராசசிம்மனின் ஆட்சிக்கு தீவாந்திர பிரதேசத் தீவுகள் உட்பட்டிருந்ததை வரலாறு எடுத்துக்காட்டுகிறது. இரண்டாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன் காம்போசத்திலிருந்து அழைத்துவரப்பட்டு தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசனாக முடிசூட்டப்பட்டான்.
சுமத்திராவை ஆண்ட சைலேந்திர மன்னர்கள் பல்லவ குலத்தோடு தொடர்புடையவர்கள்.
மலேசியாவில் கங்க, பல்லவர் அரச குடிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சிசெய்துள்ளனர்.
கி.பி.9ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சோழப் பேரரசு எழுச்சிபெற்றபோது தென்கிழக்காசிய நாடுகள் சோழர்களோடு நெருக்கமான அரசியல் உறவு கொண்டிருந்தன.
மியான்மரை ஆண்ட கியாசிந்தன் என்னும் அரசன் சோழ இளவரசியை மணம் செய்து கொண்டான்.
மாமன்னன் இராசராசன் ஆட்சி காலத்தில் சைலேந்திர அரசரின் முயற்சியால் நாகைப்பட்டினத்தில் சூளாமணி பெளத்த விகாரம் கட்டப்பட்டது. சைலேந்திர அரசரின் மகளைச் சோழப் பேரரசன் இராசேந்திரன் திருமணம் செய்து கொண்டதாக மரபுவழிச் செய்தி ஒன்றுண்டு. நாகப்பட்டினத்தில் எழுப்பப்பட்ட சூளாமணி விகாரத்திற்காக ஆனைமங்கலம் என்னும் ஊரையே இராசேந்திரசோழன் தானமாக அளித்தான்.
முதலாம் இராசராசன் காலத்தில் சைலேந்திரர்களுக்கும் சோழப் பேரரசுக்குமிடையே நெருக்கமான நட்புறவு நிலவியது. ஆனால் இராசேந்திர சோழன் காலத்தில் அவனுடைய படைகள் cவிசய அரசைத் தாக்கி அதன் அரசனைச் சிறைப்படுத்திச் சென்றதாக வரலாறு கூறுகிறது. கி.பி.1025இல் நடைபெற்ற இந்த படையெடுப்பில் சுமத்திராவில் உள்ள பண்ணை, மலையூர் ஆகியவற்றையும் மலேயாவில் இருந்த மாயிருமங்கம், இலாமுரி தேசம் ஆகியவற்றையும் நிக்கோபார் என இன்று வழங்கும் நக்காவரம் தீவினையும் சோழர் படை கைப்பற்றிக்கொண்டு தமிழகம் திரும்பியது.
கி.பி.1068இல் விசய அரச குடும்பத்தினரிடையே போர்ப்பூசல் உண்டாயின. அவர்களுக்குள் ஒரு குழுவினர் சோழப் பேரரசனான வீரராசேந்திர சோழனிடம் உதவியை நாடினர். அந்த வேந்தனும் தனது கடற்படையை அனுப்பி கடாரத்தை வென்று உரியவனிடம் அதைக் கொடுத்து அரசனாக்கினான்.
சுமத்திராவிலுள்ள ஒரு கல்வெட்டு நானா தேசத்துத் திசை ஆயிரத்து ஐநூற்றுவர் என்று தமிழகத்து வணிகர் குழாம் ஒன்றைப்பற்றிக் குறிப்பிடுகிறது.
பண்டைய மன்னர்களுக்கும் சுமத்திராவை ஆண்ட சைலேந்திரனுக்கும் நெருக்கமான உறவு இருந்து வந்தது. மாறன் என்னும் குடிப்பெயர் கொண்ட மன்னர்கள் சாவகத்தை ஆண்டுள்ளனர். இம்மன்னர்கள் பாண்டியர்களுக்குரிய இரட்டைக்கயல் சின்னத்தைத் தங்கள் இலச்சினையாகக் கொண்டிருந்தனர். சாவக மன்னன் ஒருவனின் பெயர் பாண்டியன் விக்கிரமதுங்கன் என்பதாகும்.
மணவினை உறவுகள்
தமிழ்நாட்டின் பல்வேறு அரச குடிகளைச் சேர்ந்த பெண்களைத் தென்கிழக்காசிய நாடுகளின் அரசர்கள் மணந்த வரலாறு குறிப்பிடத்தக்கதாகும்.
பழக்கவழக்கங்கள்
தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வியலில் இடம்பெற்ற பல பழக்கவழக்கங்கள் தமிழர்களிடமிருந்து பெறப்பட்டவையாகும். திருமண விழா, சடங்குகள், இறந்தவரை அடக்கம் செய்தல், திருவிழாக்கள் போன்ற பல்வேறு பழக்கவழக்கங்களைத் தமிழர்களிடமிருந்து அவர்கள் பெற்றார்கள்.
பியூனான் திருமணச் சடங்குகளும் விருந்தோம்பலும் தமிழர்களின் பழக்கவழக்கங்களைப் பெரிதும் ஒத்துள்ளன. வேட்டி, சேலை அணியும் பழக்கமும் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கவேண்டும்.
காம்போசத்தில் திருமண விழாவில் பரிசம் போடுதல், குழந்தை பிறந்த 9ஆம் நாள் சடங்கு செய்தல் ஆகியவை தமிழ்நாட்டோடு நெருக்கமான தொடர்புடையன.
உணவு முறையில் அப்பம், கொழுக்கட்டை போன்றவற்றை கெமருகள் செய்து முன்நின்றனர். கெமருகளின் நாட்டியக்கலை தமிழக நாட்டிய வழித்தோன்றலே ஆகும்.
தாய்லாந்தில் குழந்தையைத் தொட்டிலில் இடுதல், 3 ஆண்டுகளுக்குப் பின் மொட்டை அடித்துக் காது குத்துதல் ஆகியவை இன்னமும் வழக்கத்தில் உள்ளன.
திருவிழாக் காலங்களில் அன்னதானம் தாய்லாந்தில் காணப்படுகிறது.
திருவிழாத் தொடக்கத்தில் கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் ஆகிய பழக்கவழக்கங்கள் உள்ளன. இறைவழிபாட்டின்போது பழங்களைப் படைப்பதும், பூக்களால் வழிபடுவதும் நடைமுறையில் இருக்கின்றன.
திருப்பாவை, திருவெம்பாவை விழாவினை மார்கழி மாதக் கடைசியில் தாய்லாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மலேசியாவில் நன்னிகழ்ச்சிகளில் மலர், வெற்றிலை-பாக்கு கொடுத்தல் செய்யப்படுகிறது.
சிங்கப்பூரில் விருந்தினர்களை வழியனுப்பும்போதும், பெரியோரிடம் பேசிவிட்டுத் திரும்பும்போதும் ஏழு அடி பின்சென்று திரும்புகின்றனர். மன்னரை வாழ்த்தும் மரபு சிங்கப்பூரில் தமிழர்களின் வழக்கத்தைப் போலவே அமைந்திருக்கிறது.
மலாய் மக்களின் திருமணச் சடங்கில் ஓம் என்னும் மந்திரம் ஓதப்படுகிறது. மலாக்காவில் தீமிதித்தல் திருவிழா நடைபெறுகிறது.
பாலித் தீவில் பொங்கலைப் போன்று அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
போர்னியோவில் தமிழ் மாதங்களின் பெயர்களே வழக்கில் இருந்து வருகின்றன.
பியூனானில் இறந்தவரை அடக்கம் செய்தலில் தமிழர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றிவருகின்றனர்.
காம்போசத்தில் இறப்பு நிகழுமாயின் 15 நாட்கள் துக்கம் காத்தல் வழக்கத்தில் உள்ளது. 16.ஆம் நாள் தலை மழித்தல் சடங்கும் நடத்தப்படுகிறது.
சம்பாவில் இறந்தவருக்காக உறவினர், பங்காளிகள் தலையை மழித்துக் கொள்கின்றனர். தாய்லாந்தில் ஈமச்சடங்குகள் தமிழர்களின் சடங்குகளைப் போலவே நடைபெறுகின்றன.
பாலியில் சவ அடக்கத்தில் எலும்புகளைப் பானையிலிட்டு கடலில் விடுவது வழக்கமாக இருக்கிறது.
போர்னியோவில் புருனா என்னும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில் தமிழ்நாட்டு சைவசமயச் சித்தாந்தக் குறிப்புகள் கிடைத்துள்ளன. பாலியில் பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்கள் தமிழர்களுடையவை போன்றே உள்ளன. தாலாட்டுப் பாடல் பாடுவதும், பொன்னால் செய்யப்பட்ட தாலியைக் கட்டுவதும் அங்கே உள்ளது.
குழந்தைகளுக்கு பெயரிடுதல், தொட்டிலில் இடும் சடங்கு முதலியன தமிழ்நாட்டைப் போன்றவையாக அமைந்திருக்கின்றன.
மியான்மர் எழுத்துக்களில் 33 உயிர் எழுத்துகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான எழுத்துகள் அப்படியே தமிழ் எழுத்துகளால் குறிக்கப்படுகின்றன. 33 மியான்மர் உயிர் எழுத்துக்களும் தமிழ் உயிர் எழுத்துகளின் ஒலியையே கொண்டிருக்கின்றன.
சங்கத் தொகை நூல்களில் வெற்றிலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பிற்கால நூல்களில் வெற்றிலை பற்றிய குறிப்புகள் உண்டு. மலாய் தீபகற்பத்தில் இருந்தவர்கள், மலாய் தீவுகளில் இருந்தவர்கள்தான் வெற்றிலையைத் தமிழ்நாட்டுக்கு முதலில் கொண்டு வந்தார்கள் எனக் கருதப்படுகிறது.
சுமத்திராவில் வாழும் மக்களிடையே காணப்படும் பழங்குடிப் பெயர்கள் தமிழகத்தினைப் பின்பற்றியவை ஆகும். சோழியன், பாண்டியன், பல்லவன், தக்கன் முதலிய பெயர்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை.
கள்ளர்
கள்ளர் எனப்படுவோர் தமிழகத்திலே தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் குறிக்கும். இப்பொழுது இக்குழுவினரில் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
கள்ளர் குலப் பட்டங்கள்
சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன. இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது. சோழர் சாம்ராஜ்யத்தில் ஈச நாட்டுக் கள்ளர்கள் வகித்து வந்த பதவிகள் மற்றும் போர்களில் அவர்கள் செயலபட்ட விதத்தைக் கொண்டு அவர்களைச் சிறப்பு பட்டப் பெயர்கள் கொண்டு அழைக்கிறார்கள். உதராணமாக தொண்டைமான், பல்லவராயர், வில்லவராயர், களத்தில் வென்றார், நாட்டாள்வார், வாண்டையார், காடவராயர் என்பவை கள்ளர் குலத்தில் உள்ள சில பட்டப் பெயர்கள் ஆகும். அமரர் கல்கி தனது பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில் இத்தகைய பட்டப் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார்.
1. பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே சூடிக்கொண்ட பட்டங்கள். இராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.
2. பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம் உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள். கடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.
3. பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள். காலிங்கராயன், சேதிராயன், மழவராயன், நாடாள்வான் போன்றவை.
4. பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம் சார்பற்ற) வழங்கிய பட்டங்கள். கற்றளிப்பிச்சன். தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.
கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.
அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன் ), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை. தமிழகத்தில் தஞ்சை கள்ளர் குலத்தின் 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்:
கள்ளர் குலப் பட்டங்கள் பட்டியல்
சேர மன்னர்கள்
சங்ககாலம் என்பது தமிழ்நாட்டின் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தரும் வாழ்ந்த காலமாகும். சேரர்களை வானவரம்பன், வானவன், குட்டுவன், குடக்கோ,பொறையன், இரும்பொறை, கடுங்கோ, கோதை, சேரல், சேரலர்,சேரமான் என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைப்பதுண்டு.
பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.
சேரமன்னனான பெருஞ்சோற்றுதியன் சேரலாதனின் ஆட்சிச் சிறப்பைப் பாட முற்பட்ட முர்ஞ்சியூர் முடிநாகனார், மன்னனின் சிறப்புகளாகக் கூறும் பண்புகள் பொதுவாக ஓர் ஆட்சியாளர் கைக்கொள்ள வேண்டிய பண்புகளாகவே உள்ளன. நிலம், நீர், ஆகாயம், காற்று, தீ ஆகிய பஞ்சபூதங்களின் தன்மைகளைக் கொண்டு சேரமான் பெருஞ்சோற்றுதியன் ஆட்சி புரிகின்றானாம்.
'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை'
என்று நம்மைக் கீறி இகழ்பவரையும் இந்த நிலம் தாங்கி நிற்கும். இந்த நிலத்தைப் போலவே இகழ்பவரையும் பொறுத்தல் மனிதர்க்குத் தலையாய பண்பு எங்கிறது உலகப் பொதுமறை. சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் அகழ்வாரைத் தாங்கும் நிலத்தினுடைய பண்பினைக் கொண்டிருக்கிறான் என்கிறார் முடிநாகனார். பகைவர் பிழை செய்தால் அப்பிழையைப் பொறுப்பதால், அகழ்வாரைத் தாங்கும் நிலத்தின் பண்பினைக் கொண்டுள்ளானாம் மன்னன் பெருஞ்சோற்றுதியன். மேலும், அவன் பகைவன் செய்த பிழைகள் பொறுக்குமளவு அல்லவாயின் பகைவனை அழித்தற்குச் செய்யும் சூழ்ச்சித் திறன் வானத்தைப் போல எல்லையில்லாமல் கொண்டுள்ளானாம். காற்றினைப் போலப் பகைவரை அழித்தற்கேற்ற மனவலிமையும் சதுரங்க வலிமையும் கொண்டுள்ளானாம் சேரலாதன்.
அனைத்தையும் எரித்து அழிக்கும் நெருப்பின் திறம், அவன் பகைவரை எதிர்கொண்டு அழித்து ஒழிக்கும் போது வெளிப்படுகிறதாம். அதே நிலையில், பகைவர்கள் தன்னைச் சரணடைந்து வணங்குவார்கள் ஆயின், அவர்களுக்குத் தண்ணீரைப் போல அருள் செய்ய வல்லவனாகப் பெருஞ்சோற்றுதியன் விளங்குகின்றானாம். மொத்தத்தில் அவன் பகைவர் செய்த பிழைகளைப் பொறுத்துக் கொள்ளும்போது 'நிலத்தைப் போலவும், எல்லையின்றிப் பொறுக்க முடியாத அளவுக்குப் பிழைகள் செய்வார்களாயின் அகன்று விரிந்து எல்லையற்ற அவனுடைய சூழ்ச்சித்திறன் வானத்தப் போலவும் அவனுடைய மன வலிமை எத்திசையிலும் சென்று தாக்கக்கூடிய திறன் காற்றைப் போலவும், பகைவரை அழிப்பதில் நெருப்பினைப் போலவும், பகைவரே பணிந்து நிற்பாராயின், அவர்களுக்கு அருள் செய்யும் நிலையால் தண்ணீரைப் போலவும் சேரமான் பெருஞ்சோற்றுதியன் விளங்குகின்றானாம். மொத்தத்தில் பஞ்ச பூதங்களின் தன்மைகளைக் கொண்டு அவன் ஆட்சி செய்கின்றான் என்கிறார் புலவர்.
மண்திணிந்த நீலனும்
நீலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கைபோல
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்கியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய் என சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனை விளிக்கின்றார் புலவர் முரஞ்சியூர் முடி நாகனார்.
இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன்
பல்யானைச் செல்கெழு குட்டுவன்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
செல்வக் கடுங்கோ வாழியாதன்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ
யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சேரமான் வஞ்சன்
சேரமான் மாவண்கோ
சேரமான் குட்டுவன் கோதை
சேரமான் கணைக்கால் இரும்பொறை
இந்நூலின் ஆக்கத்துக்குத் துணை வந்த நூல்கள்
பல்லவ மன்னர்கள்
பாண்டியர்கள் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டுவரும் தொல்குடியினர் என்பது சன்றோர் குறிப்பு.
கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு (கி.மு.300 - கி.பி.300) முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுயுள்ளார்.கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது. இவனுடைய அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. இவ்வரசன் தலைச்சங்கத்தின் இறுதியில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. முதல் இரு தமிழ்ச் சங்கங்கள் இருந்ததற்கான உறுதி பயக்கும் சான்றுகள் அதிகம் இல்லை. இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் முதல் இரு சங்கங்கள் இருந்ததாகக் கருதப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் வரும் சிறு குறிப்புகளும், இறையனார் அகப்பொருளில் வரும் விரிவான குறிப்புமே இவ்விலக்கிய சான்றுகள்.
இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. ஒரு புறநானூற்றுப் பாடல் நெடியோன் என்னும் இவ்வரசனைப் பற்றிய பாடலில் இவனை வாழ்த்தும் ஒரு செய்தியில்
“ "முன்னீர் விழவின் நெடியோன்"
"நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"
” —(புறம்-9)
என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.
“ "நிலந்தந்த பேருதவிப்"
"பொலந்தார் மார்பின்"
"நெடியோன் உம்பல்"
” —(60-61)
என மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைச்சங்க காலத்து இறுதி அரசனாக இருந்திருப்பான் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது.மூத்த குடியினன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடுமி என்பது குடுமியான்மலை. இவ்வூரில் இவன் யூபம் நட்டு வேள்வி செய்தான். எனக் கொள்வது வரலாற்று நெறி. வேள்விக்குடிச் செப்பேட்டில்.
“ "கொல்யானை பலஓட்டிக்
கூடாமன்னர் குழாந்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி"
” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில்
“ "பல்சாலை முதுகுடுமித்
தொல்ஆணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால்
சிறப்பின்"
” —(759,61,62)
இவனைப் பற்றிப் புறநானூற்றில் "முதுகுடுமிப் பெருவழுதி ஆற்றல் மிக்க படையோன்;அரசர் பலரையும் புறங்கண்டவன்;புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்துச் சிறந்தவன்;இரவலர்க்கு இல்லையெனாது ஈயும் பெருங்கொடையான்;வேள்வி பல செய்து புகழ் பெற்றவன்;சிவ பெருமானிடத்து பேரன்பு உடையோன்;பெரியோர்களை மதிப்பவன்" (புறம்-6,9,12,15,64)
காரிக்கிழார் பெருவழுதியைப் பற்றிப் பாடுகையில்
“ "தண்டா ஈகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவும்,தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய பெரும! நீ நிலமிசையானே!"
” —(புறம்-6)
நெட்டிமையார் இவனைப் பற்றிப் பாடுகையில்
“ "எம்கோ வாழிய குடுமி-தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்!"
” —(புறம்-9)
மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு "விறல் மாண்குடுமி பிறர் மண்கொண்டு பாணர்க்குப் பொன் தாமரையும்,புலவர்க்கு யானையும்,தேரும் பரிசாக நல்கினான்" எனப் புறம்-12 கூறுகின்றது.
நால்வேதங்கூறியாங்கு "வியாச் சிறப்பின் வேள்ளி முற்றச் செய்தான்" எனப் புறம்-15 இல் நெட்டிமையார் கூறுகின்றார். இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் காரிக்கிழார், பெண்பாற் புலவர் நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் முதலியோர் இவ்வரசனைப் பாடியுள்ளார்கள்.
இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்:
“ "ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்க்டன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என"
"அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே"
கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள்
பாண்டியன் முடத்திருமாறன்
முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிக்கோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை.
பாண்டியன் மதிவாணன்
மதிவாணன் கி.பி. 60 முதல் 85 வரை முடத்திருமாறனுக்குப் பின்னர் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் சிறந்த தமிழ் நூல்களினை இயற்றவைத்தும் கல்வி,கேள்விகளில் வல்லவனாகவும் நாடகத் தமிழில் ஈடுபாடு கொண்டவனாவும் விளங்கினான். நாடகத்தமிழ் நூல் ஒன்றினை இயற்றி அதற்கு மதிவாணன் மதிவாணர் நாடகத் தமிழர் எனப் பெயரிட்டான். மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இந்நூலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடக நூல் தந்த மதிவாணன் நான்மாடக் கூடல் நாயகனாக இருந்தான்.
பெரும்பெயர் வழுதி
பெரும்பெயர் வழுதி கி.பி. 90 முதல் 120 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் கரிகாலன் காலத்தில் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றான். கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்ற பட்டத்தினையும் பெற்ற இம்மன்னனை கரிகாலனின் நண்பனாகவிருந்த இரும்பிடர்த்தலையர் "கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியே!நிலம் பெயர்ந்தாலும்,நீ சொல் பெயராய்! விலங்கு அகன்ற வியல்மார்பனே!உன்னை விரும்பி இரவலர் வருவர்!உன்ன மரத்தின் சகுனம் பொய்க்கநீ ஈவாய்!தவிரா ஈகை,கவுரியர் மருமகனே! ஏமமுரசும் இழுமென முழங்க வெண்குடை மண்ணகம் நிழற்ற வாழ்பவனே!" என்று (புறம்-3) இல் போற்றுகின்றார்.
பொற்கைப்பாண்டியன்
பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான்.
பொற்கை பெற்ற வரலாறு மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் "வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்" எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள். வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக்கூறிச் சென்றான். இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான். அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஐயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எண்ணி அவ்வீதியில் அமைந்திருந்த அனைத்து வீட்டுக் கதவுகளினையும் தட்டினான் பாண்டியன்.
மறுநாள் அரசவையில் அத்தெரு மக்கள் முறையிட்டனர். அமைச்சர், மடைத்தலைவர், புலவர் அனைவரும் அமர்ந்திருந்தனர். எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிய திருடன் கையை வெட்ட வேண்டும் என்றும் கூறினர் அம்மக்கள். அரசனும் வாளொன்றைக் கொண்டு வரச்சொல்லி தன் கையையே வெட்டிக் கொண்டான். வியந்த அனைவரிடமும் தானே கதவைத் தட்டியதாகக் கூறியதனைக் கேட்டு மக்கள் வியந்து நின்றனர். பாண்டியனும் பொற்கை ஒன்றினை வைத்துக் கொண்டான் அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என்ற பெயரைப் பெற்றான் அப்பாண்டிய மன்னன். இவ்வாறு சிலப்பதிகாரத்தில் கண்ணகியிடம் தெய்வம் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி
பாண்டியன் அறிவுடை நம்பி
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
பாண்டியன் ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
பாண்டியன் கானப்போர் கடந்த உக்கிரப் பெருவழுதி
கருங்கையொள்வாட் பெரும்பெயர்வழுதி
பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி
நல்வழுதி
கூடகாரத்து துஞ்சிய மாறன்வழுதி
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
குறுவழுதி
நம்பி நெடுஞ்செழியன்
பாண்டிய மன்னர்கள் (பல்லவர் காலம் கி.பி. 575 - 900)
பாண்டியன் கடுங்கோன் கி.பி. 575 - 600
கடுங்கோன் தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்பட்ட களப்பிரர் ஆட்சிக்காலமான கி.பி. (300-700) இருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவான்.கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான்.பாண்டிய நாடு முழுவதனையும் தன் ஆட்சிக்குள் கொண்டும் வந்தான்.இவனைப் பற்றிய செய்திகள் பலவற்றையும் வேள்விக்குடி செப்பேடுகள் சிறப்பித்துக் கூறுகின்றன அவையாவன:-
“ களப்பிரன் என்னும் கலியரசன் கைக்கொண்டதனை
இறக்கியபின் படுகடன் முளைத்த பருதிபோல்
பாண்டியாதிராசன் வெளிப்பட்டு
விடுகதிர் அவிரொளி விலக வீற்றிருந்து
வேலை சூழ்ந்த வியலிடத்துக்
கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச்
செங்கோல் ஓச்சி வெண்குடை நீழல்
தங்கொளி நிறைந்த தரணிமங்கையைப்
பிறர்பால் உரிமை திறவிதின்நீக்கித்
தன்பால் உரிமை நன்கனம் அமைத்த
மானம்போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்னர் ஒளிநகரழித்த
கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன்
”
இப்பாடல் வரிகள் களப்பிரன் பாண்டிய நாட்டைக் கைக்கொண்டான்,கதிரவன் போன்ற பாண்டியன் ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்றும்,கதிர்வேல் தென்னன் என்றும்,செங்கோல் ஓச்சியவன் என்றும் உலகப் பெண் உரிமையைத் தனதாக்கிக் கொண்டவன் என்றும் சிறப்பிக்கப்படுகின்றான்.வீரத்தால் களப்பிரரை வென்றான் புகழால் தமிழை நிலைபெற வைத்தான் எனவும் மெய்ச்சப்படுகின்றான்.
மாற்வர்மன் அவனி சூளாமணி கி.பி. 600 - 625
சடையவர்மன் செழியன் சேந்தன் கி.பி. 625 - 640
மாறவர்மன் அரிகேசரி கி.பி. 640 - 680
இவனை சுந்தரபாண்டியன் எனவும் கூன்பாண்டியன் எனவும் திருவிளையாடற் புராணம் கூறாந்ற்கும். முதலில் சமண மதப்பற்றுடையவனாய்யிருந்து பின்பு சமய குறவர் திருஞானசம்பந்தமூர்திகளாற் சைவனாக்கப்பட்டான். இவன் முன்னிலையில் தான் திருஞானசம்பந்தமூர்திக்கும் சமன முனிவர்களுக்கும் அனல் வாதமும் புனல்வாதம் நிகழ்ந்தன. இவ்வேந்தன் ஆட்சியில் பாண்டியநாடு உயர்நிலை அடைந்தது. சோழர்களையும், சேரர்களையும்,பரவரையும்,குறுநில மன்னர்கள் சிலரையும் வெற்றிகொண்டான். மணிமுடிசசோழனை உறையூரில் வெற்றி கண்டு அவ்வேந்தன் மகள் மங்கையர்க்கரசியை திருமணம் செய்துகொண்டான். இக்காலகட்டத்தில் பாண்டியநாட்டில் அமைச்சராயிருந்தவர் குலச்சிறையார் என்பவர். மாறவர்மனரிகேசரி, மங்கையர்க்கரசி,குலச்சிறையார் மூவரும் சிவனடியாராகி அறுபத்துமூவருள் சேர்க்கப்பட்டனர்.இவர்கள் வரலாற்றைப் பெரிய புராணத்தில் காணலாம்.
கோச்சடையான் ரணதீரன் கி.பி. 680 - 710
மாறவர்மன் அரிகேசரி பாராங்குசன் - இராசசிமன். கி.பி. 710 - 765
நெடுஞ்சடையான் பராந்தகன் கி.பி. 765 - 790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 - 800
வரகுண மகாராசன் கி.பி. 800 - 830
ஸ்ரீ மாரன் ஸ்ரீ வல்லபன் கி.பி. 830 - 862
வரகுணவர்மன் கி.பி 862 - 880
பராந்தக பாண்டியன் கி.பி. 880 - 900
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900 - 920
வீரபாண்டியன் கி.பி. 946 - 966
என்றும் உரிமையுடன் உறவைத்தேடும்
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்
சர்வதேச கள்ளர் பேரவை
IMPORTANT
நம் முன்னோர்களான மன்னராக இருக்கட்டும். ராஜாவாக, குறுநில மன்னராக, இருக்கட்டும். அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது. தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள்.
உங்கள் அறிவின் மூலம், உங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றிகளைப் பார்த்து உங்கள் சிந்தனையில் வெறி வந்து விடக்கூடாது. ஓலமாய் முடிந்து போன நம்வர்களின் வாழ்க்கை எதை உணர்த்துகிறது?
கள்ளர் குலத்தில் வீரம் என்பது எவருடனும் ஓப்பிட முடியாது. எதையும் சாதிக்கும் மன உறுதி உடையது. மற்ற எந்த இனத்தையும் விட அதிகமாக வீரம் இருந்தது கள்ளர் குலத்தில் மட்டுமே. வரலாற்று சான்றுகள் அத்தனையும் இவ்வாறு தான் நமக்கு இன்று வரையிலும் பாடமாக பட்டயமாக காட்சியளித்துக்கொண்டு இருக்கிறது.
ஆனால் தொடக்கத்தில் கள்ளர் குல முன்னோர்கள் வீரத்தின் மூலம் தன்னுடைய ஆளுமையை, ஆண்மையை நிலைநாட்டினார்கள். இன்று கள்ளர் குலம் தன்னுடைய தனி மனித உழைப்பின் மூலம் நிலை நாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
வீரம் என்பது அவர்களின் முரட்டுத்தனத்தின் குறியீடுஅல்ல. முட்டாள்காளாக வாழ்ந்து விவேகமற்ற செயல்களும் செய்தவர்கள் அல்ல. இன்று கள்ளர் குல ஆளுமை சுருங்கி இருக்கிறதே தவிர அவர்களின் எண்ணங்களில் இன்றைய ஆளும் தலைவர்கள் போல் எந்த சுருக்கமும் இல்லை.
இறை நம்பிக்கைகளுக்கும், தங்களுடைய அடிப்படை கடமைகளுக்கும் என்ன வித்தியாசங்கள் என்று தெரியாமலேயே ஆட்சியாளர்களும் வாழ்கின்றனர். ஆட்சியில் மக்களும் வாழ்கின்றனர்
அடுத்தவரிடம் "அன்பு செலுத்தி" தன்னை நிலைநாட்டுவதற்கு பதில் " கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, புனிதம்,புண்ணியம் என்ற ஆள்பவர்களின் வார்த்தைகள் புரியாத புதிராக வாழ்ந்து கொண்டு மக்கள் இருக்கின்றனர். முடிந்தும் போயினர்.
" ஆண்டவனே " உங்கள் பாதம் பட்டதால் இந்த இடமே புனிதமாகி விட்டது."
"வாழ்த்த வயதில்லை. உங்களை வணங்குகிறோம். "என்று வாழ்ந்தவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிர்கதிக்கு அழைத்துக் கொண்டு சென்ற போதிலும் எவருக்கும் மாற்றம் தேவையாய் இல்லை. முன்னேற்றம் என்பது விதிப்பலனுக்குள் என்று பார்த்துக்கொண்டவர்களுக்கும் பெரிதான ஆசைகளும் இல்லை.
அடுக்கு மொழி, சிலேடை மொழி, சிருங்கார மொழி, தேன் மொழி, பேதி மொழி என்று அத்தனை நடையிலும் பேசிப்பேசி ஆட்சிக்கட்டிலை பிடித்த தலைவர்களின் அக்கப்போர் அறிக்கைகளும், திடுக்கிடக்கூடிய வார்த்தை அலங்காரங்களும் எதை உணர்த்திக்கொண்டு இருக்கிறது? சொல்லிக் கொடுத்தவர்கள், வழிகாட்டியவர்கள், அவர்கள் மட்டும் தெளிவாக வாழ்ந்தார்கள், வளர்ந்தார்கள்.
இவர்களை தொடர்ந்தவர்களின் நம் குலவர்க்கத்தின் வாழ்க்கை மட்டும் அன்றும் இன்றும் என்றும் நிர்மூலமாகிக் கொண்டு இருக்கிறது. வாழ்ந்தவர்கள் நெஞ்சில் சுமந்த லட்சியங்கள் இல்லாமல் பின் தொடர்ந்து வந்த வழிதோன்றல்களையும் அவ்வாறே பாதை காட்டி மறைந்தனர். நாடு நல்ல
சூழ்நிலையில் இருந்தாலும் நயவஞ்சகத்தால் நல்லதைத் தவிர அத்தனையும் செய்ய முடிகின்ற தலைவர்களால் நம் இனத்தின் வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்ப முடியும்?
இன்று பெரிய வெற்றிடம். காரணம் இன உணர்வும் இல்லை. உணர்வு ஊட்ட வந்தவர்களும்
உண்மையானவர்களாக இல்லை.
மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் இன்று வரையிலும் நமக்கு போதை ஊட்டிக்கொண்டுருப்பவர்கள் ஒன்று ஊட்டியில் ஓய்வெடுக்கிறார்கள். இல்லையேல் குத்தீட்டி வரிகளால் குத்திக்கிழிக்கிறார்கள். ஒவ்வொரு தலைவரின் பங்களிப்பும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் உலகத்தில் இருக்கும்
கள்ள ர்களின் பாதிப்பு இன்று வரையிலும் ஏன் ஓலமாய் நம் காதில் வந்து ஒலிக்கின்றது?
காலம் போட்ட அவசர கோலத்தில் இன்று வீரமென்ற சொல்லை விவேகம் என்ற சொல்லுக்குள் அடக்கி சகிப்புத்தன்மையாக மாற்றிவிட்டுள்ளது. கத்தி, வாளை தூக்க முடியாதவர்கள் இன்று புத்தியை மட்டும் சுமந்து கொண்டு கடல் கடந்து சென்று கொண்டுருக்கிறார்கள்.
கடல் கடந்து சென்றவர்கள் இன்று வரைக்கும் எதற்கும் கண்கலங்குவது இல்லை. காரணம் அவர்களே தெரியாத அத்தனை உழைப்பும் , ஆளுமையும் அங்கு தான் இனம் கண்டு கொள்கிறார்கள்.
இன்றும் என்றும் எந்தக் கொடுமையான சூழ்நிலையிலும் கொண்டு போய் தன்னை பொருத்திக் கொண்டாலும் கள்ளர் குல மறவன் என்பவனால் மற்றவர்களைக் காட்டிலும் பல மடங்கு தன்னுடைய ஆளுமை தன்மையை நிலை நாட்டி விட முடியும்.
அன்று வனத்தில் வாழ்க்கை அமைந்த முன்னோர்கள் நறுமணங்களையும் சுவாசித்து சுகமாகவும் வாழ்ந்தார்கள். சுகாதாரமாகவும் வாழ்ந்தார்கள். இன்று வனமும் அழிந்து கொண்டே வருகின்றது.
மனமும் இருண்டு கொண்டே தொடர்கின்றது.
அன்று ஆளுமை புரிந்தவர்களின் மேதா விலாசங்கள் எதையும் இன்று வரையிலும் சரியாக புரிந்து கொள்ளப் படாவிட்டாலும் கள்ளர் குல மறவன் தன்னுடைய தகுதியை புரிந்தவன். தலையில் உள்ள அறிவை உண்ர்ந்தவன்.
இது வரலாற்று உண்மை.எப்போது புரியும்?
To be fixed in Propoer Heading
நம்நாட்டின் தொன்மை வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் தொல்லியல் சான்றுகளில் ஒன்று கல்வெட்டுகள் ஆகும். கோவில் முதலிய பொதுக் கட்டிட்ங்களின் சுவர்களிலும், பாறைகள் மீதும், கல்தூண்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம். இக் கல்வெட்டு எழுத்துக்களை அறிந்து அவற்றின் பொருளை விளக்கும் கலையே கல்வெட்டியல் எனப்படும். நம்நாட்டில் கல்வெட்டுகளைப் படித்தறிந்து, வரலாற்றுச் சான்றுகளாக அவற்றை உருவாக்கிய பெருமை மேலைநாட்டவரையே சாரும். அவர்களில் முக்கியமானவர்கள்
ஜேம்ஸ் பிரின்செப் 1837 இந்தியாவில் கல்வெட்டாய்வு ஆரம்பிக்கப்படுவதற்கு இவரே முக்கிய காரணம் ஆவார்
அலெக்சாந்தர் கன்னிங்காம் 1871 முதல் 1885 வரை அசோகர் காலத்து கல்வெட்டுகள் என்ற தனித் தொகுப்பை வெளியிட்டார்
டாக்டர் யூஜின் ஹால்ட்ஸ் (1857 - 1906) தென்னிந்திய கல்வெட்டுகளின் முதல் தொகுப்பினை 1903 ல் வெளியிட்டார். மேலும் ராபர்ட் சிவல் (1868 - 1894) டாக்டர்கில்ஹார்ன்,
டாக்டர் ஜார்ஜ் பூலர் (1837 - 1898) ஜான் பிளீட் (1874 - 1917) ஜேம்ஸ் பர்கஸ் ( 1822 - 1917)
டாக்டர் ப்ர்னல், காலின் போன்றோர்களின் ஊக்கமும் உழைப்பும் ஆர்வமும் இல்லை எனில் நமது வரலாற்றினை அறிந்திருக்க வாய்புகள் குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இவர்கள் தவிர கோபிநாத்ராவ், வெங்கையா, சுப்ரமணிய ஐயர், கிருஸ்ணசாஸ்திரி இந்திய கல்வெட்டாய்வுக்கு பெரும் துணை புரிந்துள்ளனர். 1861 முதல் இதுவரையில் சுமார் எழுபத்தைந்தாயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்படாமல் உள்ளன.
சோழர்: (சரித்திரத்திற் குட்படாதவர் - முற்காலத்தவர்) :
சூரியன் ,
மனு ,
இக்குவாகு ,
ககுத்தன் ,
புலியும்மானும் ஒரு துறையுண்ண ஆண்டவன்,
மாந்தாதா,
முசுகுந்தன் ,
தேவர்க் கமுதமளித்தவன்,
வல்லபன்,
சிபி ,
சுராதிராசன் ,
சோளன்,
இராசசேகரி,
பரகேசரி,
காலனிடத்தில் வழக்குரைத்தோன்,
காந்தன்,
காகந்தி ,
அனைத்துலகும் வென்றோன்,
வேந்தனைக் கொடியாக வைத்தோன்,
ஒருகடலில் மற்றொரு கடலைப்புக விட்டோன்,
தன் குருதியை உண்ணவளித்தோன்,
காற்றைப்பணிகொண்டோன்,
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செப்பியன்,
வானவூர்தி செலுத்தினோன்,
அரசர் சூளாமணி ,
வீரவாதித்தன் ,
சூரவாதித்தன் முதலியோர் மனுவுக்கு முன்னிருந்த சோழ மன்னவர் கணக்கற்றவர். அவர் பெயர் திட்டமாய்த் தெரியவில்லை.
சோழர், திருவாரூர் சீகாழி உறையூர் புகார் தஞ்சை செயங்கொண்ட சோழபுரம் முதலிய பல நகரங்களைப் பல சமையங்களில் தலைநகராகக் கொண்டிருந்தனர்.
சரித்திரத்திற்கு பிற்கலத்தவர் :
உருவப் பஃறேர். இளஞ்சேட் சென்னி ,
கரிகாலன் ,
கிள்ளிவளவன் ,
தித்தன் ,
பெருங்கிள்ளி ,
நல்லுத்தரன் ,
கோப்பெருஞ் சோழன் ,
கோச்செங்கட் சோழன் முதலியோர்.
இவருள் கரிகால் வளவன் பனிமலையிற் புலியைப் பொறித்து நாவலந்தேசம் முழுதும் தன் ஆணையைச் செலுத்தினான்.
கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை சோழநாட்டின் வடபாகமான தொண்டைநாடும், ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை சோழநாடு முழுவதும் பல்லவராட்சிக்குட்பட்டிருந்தது.
சரித்திரத்திற் குட்பட்டோர்
விஜயாலயனும் முதலாம் ஆதித்தனும் (850 - 907),
முதலாம் பராந்தகன் ( 907 ),
இராஜாதித்தன் (947 ) ,
கண்டராதித்தன் மதுராந்தகன் அரிஞ்சயன் 2ஆம் பராந்தகன் 2ஆம் ஆதித்தன் முதலியோர் (970 - 985 ), முதலாம் ராஜராஜன் (985 - 1014 ),
ராஜேந்திர சோழதேவன் ( 1012 ),
ராஜாதிராஜன் ( 1018 ),
விஜயராஜேந்திரதேவன் (1052 ),
ராஜ மகேந்திரனும் வீரராஜேந்திரனும் அதிராஜேந்திரனும் (1055- 1070 ),
முதலாம் குலோதுங்கன் ( 1070 ),
விக்கிரமச்சோழன் ( 1118 ),
இரண்டாம் குலோதுங்கனும் இரண்டாம் இராஜராஜனும் இரண்டாம் ராஜாதிராஜனும் (1143 - 78 ),
3ஆம் குலோத்துங்கன் ( 1178),
மூன்றாம் இராஜராஜன் ( 1216 ),
மூன்றாம் இராஜேந்திரன் ( 1246 ).
இவருள், ராஜேந்திர சோழதேவன் குமரியிலிருந்து கங்கைவரை தன்னடிபடுத்தி ஈழம் (இலங்கை ), கடாரம்
( பர்மா ), முதலிய நாடுகளையும் கைப்பற்றினான்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் Posted by: on Feb 4, 2012
பண்டைய தமிழகத்தின் கடற்கரை 1500 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்திருந்தது. இதனால் தமிழர்கள் தொல்பழங்காலத்திலேயே வெளிநாடுகளோடு வணிகத் தொடர்பும் கலாசார தொடர்பும் கொண்டிருந்தனர்.
தமிழக கடற்கரையில் வாழ்ந்த மக்கள் சிறந்த கடலாடிகளாக இருந்தார்கள். குறிப்பாகக் கப்பல் கட்டும் கலையிலும் அலைகடலில் கப்பலைச் செலுத்தும் கலையிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதன் காரணமாக தென்கிழக்காசிய நாடுகளுக்கு வணிகம் மற்றும் மதப்பிரசாரம் ஆகியவற்றுக்காகத் தமிழர்கள் சென்றார்கள். பிறகு அந்நாடுகளில் குடியேறினர். இத்தகைய குடியேற்றங்கள் கி.பி.முதலாம் நூற்றாண்டில் தொடங்கி சில காலத்திற்கு நடைபெற்றது. மியான்மர், சீனம், கம்போடியா முதலிய நாடுகளிலும் சுமத்திரா, சாவகம், போர்னியோ, பிலிப்பைன்ஸ் தீவுக் கூட்டங்களிலும் அவர்கள் குடியேறினார்கள்.
தாம் குடியேறி வாழ்ந்த இடங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார்கள். இதன் விளைவாக இந்த நாடுகளில் பண்டைக்காலச் சின்னங்கள், தமிழகத்தில் கிடைத்துள்ள அதே அளவுக்கு தென்கிழக்காசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரும்பாலான சூலங்கள், வேலின் அலகும் மலேசியாவில் கிடாவிலும் சுமத்திராவிலும் பிலிப்பைன்சிலும் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள தாய்த் தெய்வம் போன்றவை தென்கிழக்காசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன.
சங்க பழங்கால சூதபவழம் போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள மணிகள், வளையல்கள் போன்றவை தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சியின்போது குவியல்குவியலாகக் கிடைத்துள்ளன. இதைப்போன்ற மணிகளும் வளையல்களும் காம்போசம், பிலிப்பைன்சிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
போருக்குப் பயன்படும் ஈட்டி, வேல், வாள், அரிவாள், கோடாலி போன்ற பலவகைக் கருவிகள் தமிழ்நாட்டிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் ஒரேமாதிரியாகக் கிடைத்துள்ளன.
முருக வழிபாட்டுக்குரிய வேல், சேவல், காவடி போன்ற பொருட்கள் ஆதிச்சநல்லூர், பிலிப்பைன்ஸ் தீவுகளில் கிடைத்துள்ளன.
தென்கிழக்காசிய நாடுகளில் பரவியுள்ள பழைய பெருங்கற்காலப் பண்பாடு, சோழ மண்டலக் கடற்கரையிலிருந்து அந்நாடுகளுக்குச் சென்று பரவியிருக்க வேண்டுமென அறிஞர்கள் கருதுகிறார்கள். சாவகம், சுமத்திரா, பாலி, போர்னியோ, பிலிப்பைன்ஸ் தீவுகளிலேயே முதல் காலகட்ட பெருங்கல் பண்பாட்டுச் சின்னங்கள் ஏராளமான அளவில் கிடைத்துள்ளன. சோழ மண்டலக் கடற்கரைக்கு நேராக அமைந்துள்ள தீவுகளாக இவை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சங்ககாலத்திற்கு முன்பிலிருந்து கடைச்சங்க காலம் முடிவு வரை கி.பி.350 வரை தமிழகத்தில் வீசிய பண்பாட்டு அலை மியான்மர், சாம்பா, காம்போசம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் சுமத்திரா, சாவகம் முதலிய தீவுகளிலும் பரவியிருக்க வேண்டும். சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய நடுகற்கள் அமைக்கும் வழக்கம் மேற்கண்ட நாடுகளிலும் காணப்படுவதே இதற்குப் போதிய சான்றாகும்.
மன்னர் குலம்
தென்கிழக்காசிய நாடுகளை ஆண்ட பல்வேறு மன்னர் குலங்களுக்கும் தமிழக மன்னர் குலங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருப்பதற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. பல்லவ, சோழ, பாண்டிய மன்னர் குலங்களைச் சேர்ந்தவர்களே தென்கிழக்காசிய நாடுகளின் அரச பரம்பரைகளைத் தோற்றுவித்தவர்கள் என்றும் கருதப்படுகிறது.
தமிழக மன்னர் குலங்களுக்குரிய குடிப்பெயர்களை தென்கிழக்காசிய மன்னர்கள் தங்களுக்கும் சூட்டிக் கொண்டார்கள். மணவினை உறவும் இவர்களுக்குள் இருந்தது. சமய, பண்பாடு ரீதியான தொடர்புகளும் அந்நாடுகளுக்கும் தமிழர்களுக்குமிடையே நெருக்கமாக இருந்தது.
வர்மன் என்னும் குடிப்பெயரை கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ அரச மரபினர் தங்கள் பெயரோடு சேர்த்து வழங்கினர். இந்த வர்மன் என்னும் பெயரைத் தம்முடைய சிறப்புப் பெயராகத் தென்கிழக்காசிய நாடுகளை ஆண்ட பல்வேறு மன்னர் குலங்களைச் சேர்ந்தவர்கள் தத்தம் பெயர்களோடு சேர்த்துப் பயன்படுத்தியுள்ளனர்.
மியான்மரைச் சேர்ந்த மோன் பழங்குடி மன்னர்கள் விக்கிரவர்மன், பிரபுவர்மன் என்னும் பெயர்களை உடையவர்களாகத் திகழ்ந்தனர்.
பியூனானை ஆண்ட அரசன் ஒருவர் குணவர்மன் என்று குறிப்பிடப்படுகிறான்.
சம்பாவின் புகழ்மிக்க அரசன் பத்திரவர்மன் ஆவான். காம்போசத்தை ஆண்ட முதல் அரச மரபைச் சேர்ந்தவன் உருத்திரவர்மன் ஆவான்.
மலேயாவை ஆண்ட மன்னர்கள் சிலரும் வர்மன் என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டனர். அவர்களில் விஷ்ணுவர்மன் முக்கியமானவன். சாவகத்தை ஆண்ட மன்னர்களுள் தேவவர்மன், பூர்ணவர்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். போர்னியோவை அசுவவர்மன் என்னும் மன்னன் ஆண்டான்.
இந்த வர்மன் என்னும் குடிப்பெயரை முதலில் சூட்டிக்கொண்ட பியூனான், சம்பா, காம்போச அரசர்கள் பல்லவ அரசர்களுடன் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையவர்களாக இருந்திருக்கவேண்டும். மாறன் என்னும் பெயருடைய அரசன் ஒருவன் சம்பாவை ஆண்டுள்ளான். அவன் பாண்டிய அரச மரபினைச் சேர்ந்தவன் என்பது அறிஞர் பிலியோசாயின் கருத்தாகும்.
இராசாதிராசன் என்னும் பட்டப்பெயரை 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயினவுங்கு என்னும் அரசன் சூட்டிக்கொண்டுள்ளான். இப்பெயர் இராசேந்திர சோழனின் மூத்த மகனின் பெயராகும். இதே பட்டப்பெயரை காம்போசத்தை ஆண்ட சூரியவம்ச இராம மகாதரன் என்பவனும் சூட்டிக்கொண்டுள்ளான். பிற்காலச் சோழ மன்னர்கள் பயன்படுத்திய திரிபுவன சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை மியான்மரை 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கியாசித்தன் பயன்படுத்தியுள்ளான்.
12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சாவகத்தை ஆண்ட சைலேந்திர அரசன் ஒருவன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியன் என்னும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டுள்ளான். இவன் பாண்டிய குலத்தோடு தொடர்பு கொண்டவனாகத் தோன்றுகிறது.
திருமுறை இலக்கியம்
தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ் நாகரிகம், பண்பாடு, சமயம் ஆகியவை கடல் கடந்து தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியிருந்தன. தாய்லாந்து நாட்டில் நடைபெறும் மன்னருக்கு முடிசூட்டும் விழாவில் திருமுறைகள் ஓதப்பட்டன. திருஞானசம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதல் பதிகமும், சுந்தரரின் பித்தா பிறைசூடி பெருமானே என்ற முதல் பதிகமும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும் தென்னாட்டுக்குரிய கிரந்த எழுத்தில் எழுதப்பெற்று இன்றும் தாய்லாந்து நாட்டின் அரச விழாக்களில் பாடப்பட்டு வருகின்றன.
காம்போசம், தாய்லாந்து, வியட்நாம் முதலிய நாடுகளில் காரைக்கால் அம்மையாரின் கோயில்கள் காணப்படுகின்றன. எனவே, தமிழர்களின் திருமுறைகள் தென்கிழக்காசிய நாடுகளில் பல்லவர், சோழர் காலங்களில் பரவியிருக்கவேண்டும்.
தமிழ்க்காப்பியமான மணிமேகலை கதைத்தலைவி மணிமேகலை சாவகத்துக்குச் சென்று தருமசாவகனைச் சந்தித்து வந்ததைப் பற்றிய செய்தி குறிப்பிடத்தக்கதாகும். சிலப்பதிகாரத்தால் சுட்டப்படும் மணிமேகலை என்னும் கடல் தெய்வம் தாய்லாந்து மக்களால் வழிபாடு செய்யப்பட்டது. மணிமேகலை வரலாற்றைக் கூறும் கதைப் பாடல்களும் அம்மானைப் பாடல்களும் இன்னும் தாய்லாந்தில் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
சமயம்
தென்கிழக்காசிய நாடுகளில் புத்த சமயம் மட்டுமல்ல சைவ சமயமும் பரவியிருந்தது. இந்நாடுகளில் அகத்தியர் வழிபாடு இருந்தது என்பதைத் தொல்பொருள் சின்னங்கள் புலப்படுத்துகின்றன. காம்போசம், மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகளில் அகத்தியரின் சிலைகள் கிடைத்துள்ளன.
அதைப்போலவே காரைக்கால் அம்மையாரின் செப்புச் சிலைகள் காம்போசம், பினிசியா போன்ற நாடுகளில் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டு வணிகர்கள் தங்களின் குலதெய்வமான காரைக்கால் அம்மையாரைத் தாங்கள் செல்லும் இடமெல்லாம் எடுத்துச்சென்றிருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
நடராசர் வழிபாடு
தமிழர்களுக்கே உரியதும் சோழர் காலத்ததுமான நடராசர் வழிபாடு தாய்லாந்து, காம்போசம், இந்தோ னேசியா போன்ற நாடுகளில் பரவி இருப்பதற்கான சான்றுகள் கிடைத் துள்ளன. இந்நாடுகளில் உள்ள கோயில் சிற்பங்களில் நடராசர் உருவமும் காரைக்கால் அம்மையார் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. கல்லாலும் செம்பாலும் செய்யப் பட்டுள்ள இந்தச் சிலைகள் இன்ன மும் அந்த நாடுகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன.
பல்லவ நாட்டுத் தலை நகரமாக விளங்கிய காஞ்சிபுரம் புத்த மதத்தின் தலையாய இடமாக ஒரு காலகட்டத்தில் விளங்கிற்று. இந்த காஞ்சியிலிருந்து 6ஆம் நூற்றாண்டில் போதிதர்மன் என்ற புத்தத் துறவி சாவகத்தின் வழியாக சீனா சென்றார். மாபெரும் தத்துவஞானியாக விளங்கிய தருமபாலர் தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று வந்தார். 10ஆம் நூற்றாண்டு முடிவுவரை காஞ்சியைச் சேர்ந்த தமிழ் புத்தத் துறவிகள் தென்கிழக்காசிய நாடுகளில் புத்த சமயப் பரப்புரையில் ஈடுபட்டனர்.
மன்னர் நில உறவுகள்
தென்கிழக்காசிய நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டியிருக்கிறார்கள். சம்பா என்னும் நாட்டின் பெயர் காவிரிப் பூம்பட்டினத்தின் சிறப்புப் பெயரான சம்பாபதியின் திரிபாகும். மலேயாவின் இக்காலப் பெயர் முதலாம் இராசேந்திரனின் காலத்தில் மலையூர் என விளங்கியது. சிங்கப்பூரின் பழங்காலப் பெயர் சிங்கபுரம் என்பதாகும். இந்தோனேசியாவில் சிறப்புற்று விளங்கிய மதுரா பாண்டியரின் தலைநகரமான மதுரையோடு கொண்டிருந்த தொடர்பைப் புலப்படுத்துகிறது.
தென்கிழக்காசிய நாடுகளில் அரசோச்சிய மன்னர்கள் தமிழ்நாட்டிலிருந்த பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்கள். மியான்மரின் அரசர்கள் பல்லவ அரசர்களோடு தொடர்பு கொண்டிருந்தனர். பியூனான் அரச மரபின் தோற்றம் பற்றிய கதை பல்லவரின் அரச குடியின் தோற்றம் பற்றிய செப்பேடு செய்திகளோடு பெரிதும் ஒத்திருக்கிறது.
சம்பாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின் மூலம் அந்நாட்டு அரச மரபு பல்லவரோடு கொண்டிருந்த உறவு வெளிப்படுகிறது.
காம்போச இளவரசி ரெங்கபதாகையை இரண்டாம் நரசிம்ம பல்லவன் மணந்து கொண்ட வரலாறு குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாம் நரசிம்மன் என அழைக்கப்பட்ட இராசசிம்மனின் ஆட்சிக்கு தீவாந்திர பிரதேசத் தீவுகள் உட்பட்டிருந்ததை வரலாறு எடுத்துக்காட்டுகிறது. இரண்டாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன் காம்போசத்திலிருந்து அழைத்துவரப்பட்டு தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசனாக முடிசூட்டப்பட்டான்.
சுமத்திராவை ஆண்ட சைலேந்திர மன்னர்கள் பல்லவ குலத்தோடு தொடர்புடையவர்கள்.
மலேசியாவில் கங்க, பல்லவர் அரச குடிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சிசெய்துள்ளனர்.
கி.பி.9ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சோழப் பேரரசு எழுச்சிபெற்றபோது தென்கிழக்காசிய நாடுகள் சோழர்களோடு நெருக்கமான அரசியல் உறவு கொண்டிருந்தன.
மியான்மரை ஆண்ட கியாசிந்தன் என்னும் அரசன் சோழ இளவரசியை மணம் செய்து கொண்டான்.
மாமன்னன் இராசராசன் ஆட்சி காலத்தில் சைலேந்திர அரசரின் முயற்சியால் நாகைப்பட்டினத்தில் சூளாமணி பெளத்த விகாரம் கட்டப்பட்டது. சைலேந்திர அரசரின் மகளைச் சோழப் பேரரசன் இராசேந்திரன் திருமணம் செய்து கொண்டதாக மரபுவழிச் செய்தி ஒன்றுண்டு. நாகப்பட்டினத்தில் எழுப்பப்பட்ட சூளாமணி விகாரத்திற்காக ஆனைமங்கலம் என்னும் ஊரையே இராசேந்திரசோழன் தானமாக அளித்தான்.
முதலாம் இராசராசன் காலத்தில் சைலேந்திரர்களுக்கும் சோழப் பேரரசுக்குமிடையே நெருக்கமான நட்புறவு நிலவியது. ஆனால் இராசேந்திர சோழன் காலத்தில் அவனுடைய படைகள் cவிசய அரசைத் தாக்கி அதன் அரசனைச் சிறைப்படுத்திச் சென்றதாக வரலாறு கூறுகிறது. கி.பி.1025இல் நடைபெற்ற இந்த படையெடுப்பில் சுமத்திராவில் உள்ள பண்ணை, மலையூர் ஆகியவற்றையும் மலேயாவில் இருந்த மாயிருமங்கம், இலாமுரி தேசம் ஆகியவற்றையும் நிக்கோபார் என இன்று வழங்கும் நக்காவரம் தீவினையும் சோழர் படை கைப்பற்றிக்கொண்டு தமிழகம் திரும்பியது.
கி.பி.1068இல் விசய அரச குடும்பத்தினரிடையே போர்ப்பூசல் உண்டாயின. அவர்களுக்குள் ஒரு குழுவினர் சோழப் பேரரசனான வீரராசேந்திர சோழனிடம் உதவியை நாடினர். அந்த வேந்தனும் தனது கடற்படையை அனுப்பி கடாரத்தை வென்று உரியவனிடம் அதைக் கொடுத்து அரசனாக்கினான்.
சுமத்திராவிலுள்ள ஒரு கல்வெட்டு நானா தேசத்துத் திசை ஆயிரத்து ஐநூற்றுவர் என்று தமிழகத்து வணிகர் குழாம் ஒன்றைப்பற்றிக் குறிப்பிடுகிறது.
பண்டைய மன்னர்களுக்கும் சுமத்திராவை ஆண்ட சைலேந்திரனுக்கும் நெருக்கமான உறவு இருந்து வந்தது. மாறன் என்னும் குடிப்பெயர் கொண்ட மன்னர்கள் சாவகத்தை ஆண்டுள்ளனர். இம்மன்னர்கள் பாண்டியர்களுக்குரிய இரட்டைக்கயல் சின்னத்தைத் தங்கள் இலச்சினையாகக் கொண்டிருந்தனர். சாவக மன்னன் ஒருவனின் பெயர் பாண்டியன் விக்கிரமதுங்கன் என்பதாகும்.
மணவினை உறவுகள்
தமிழ்நாட்டின் பல்வேறு அரச குடிகளைச் சேர்ந்த பெண்களைத் தென்கிழக்காசிய நாடுகளின் அரசர்கள் மணந்த வரலாறு குறிப்பிடத்தக்கதாகும்.
பழக்கவழக்கங்கள்
தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வியலில் இடம்பெற்ற பல பழக்கவழக்கங்கள் தமிழர்களிடமிருந்து பெறப்பட்டவையாகும். திருமண விழா, சடங்குகள், இறந்தவரை அடக்கம் செய்தல், திருவிழாக்கள் போன்ற பல்வேறு பழக்கவழக்கங்களைத் தமிழர்களிடமிருந்து அவர்கள் பெற்றார்கள்.
பியூனான் திருமணச் சடங்குகளும் விருந்தோம்பலும் தமிழர்களின் பழக்கவழக்கங்களைப் பெரிதும் ஒத்துள்ளன. வேட்டி, சேலை அணியும் பழக்கமும் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கவேண்டும்.
காம்போசத்தில் திருமண விழாவில் பரிசம் போடுதல், குழந்தை பிறந்த 9ஆம் நாள் சடங்கு செய்தல் ஆகியவை தமிழ்நாட்டோடு நெருக்கமான தொடர்புடையன.
உணவு முறையில் அப்பம், கொழுக்கட்டை போன்றவற்றை கெமருகள் செய்து முன்நின்றனர். கெமருகளின் நாட்டியக்கலை தமிழக நாட்டிய வழித்தோன்றலே ஆகும்.
தாய்லாந்தில் குழந்தையைத் தொட்டிலில் இடுதல், 3 ஆண்டுகளுக்குப் பின் மொட்டை அடித்துக் காது குத்துதல் ஆகியவை இன்னமும் வழக்கத்தில் உள்ளன.
திருவிழாக் காலங்களில் அன்னதானம் தாய்லாந்தில் காணப்படுகிறது.
திருவிழாத் தொடக்கத்தில் கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் ஆகிய பழக்கவழக்கங்கள் உள்ளன. இறைவழிபாட்டின்போது பழங்களைப் படைப்பதும், பூக்களால் வழிபடுவதும் நடைமுறையில் இருக்கின்றன.
திருப்பாவை, திருவெம்பாவை விழாவினை மார்கழி மாதக் கடைசியில் தாய்லாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மலேசியாவில் நன்னிகழ்ச்சிகளில் மலர், வெற்றிலை-பாக்கு கொடுத்தல் செய்யப்படுகிறது.
சிங்கப்பூரில் விருந்தினர்களை வழியனுப்பும்போதும், பெரியோரிடம் பேசிவிட்டுத் திரும்பும்போதும் ஏழு அடி பின்சென்று திரும்புகின்றனர். மன்னரை வாழ்த்தும் மரபு சிங்கப்பூரில் தமிழர்களின் வழக்கத்தைப் போலவே அமைந்திருக்கிறது.
மலாய் மக்களின் திருமணச் சடங்கில் ஓம் என்னும் மந்திரம் ஓதப்படுகிறது. மலாக்காவில் தீமிதித்தல் திருவிழா நடைபெறுகிறது.
பாலித் தீவில் பொங்கலைப் போன்று அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
போர்னியோவில் தமிழ் மாதங்களின் பெயர்களே வழக்கில் இருந்து வருகின்றன.
பியூனானில் இறந்தவரை அடக்கம் செய்தலில் தமிழர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றிவருகின்றனர்.
காம்போசத்தில் இறப்பு நிகழுமாயின் 15 நாட்கள் துக்கம் காத்தல் வழக்கத்தில் உள்ளது. 16.ஆம் நாள் தலை மழித்தல் சடங்கும் நடத்தப்படுகிறது.
சம்பாவில் இறந்தவருக்காக உறவினர், பங்காளிகள் தலையை மழித்துக் கொள்கின்றனர். தாய்லாந்தில் ஈமச்சடங்குகள் தமிழர்களின் சடங்குகளைப் போலவே நடைபெறுகின்றன.
பாலியில் சவ அடக்கத்தில் எலும்புகளைப் பானையிலிட்டு கடலில் விடுவது வழக்கமாக இருக்கிறது.
போர்னியோவில் புருனா என்னும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில் தமிழ்நாட்டு சைவசமயச் சித்தாந்தக் குறிப்புகள் கிடைத்துள்ளன. பாலியில் பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்கள் தமிழர்களுடையவை போன்றே உள்ளன. தாலாட்டுப் பாடல் பாடுவதும், பொன்னால் செய்யப்பட்ட தாலியைக் கட்டுவதும் அங்கே உள்ளது.
குழந்தைகளுக்கு பெயரிடுதல், தொட்டிலில் இடும் சடங்கு முதலியன தமிழ்நாட்டைப் போன்றவையாக அமைந்திருக்கின்றன.
மியான்மர் எழுத்துக்களில் 33 உயிர் எழுத்துகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான எழுத்துகள் அப்படியே தமிழ் எழுத்துகளால் குறிக்கப்படுகின்றன. 33 மியான்மர் உயிர் எழுத்துக்களும் தமிழ் உயிர் எழுத்துகளின் ஒலியையே கொண்டிருக்கின்றன.
சங்கத் தொகை நூல்களில் வெற்றிலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பிற்கால நூல்களில் வெற்றிலை பற்றிய குறிப்புகள் உண்டு. மலாய் தீபகற்பத்தில் இருந்தவர்கள், மலாய் தீவுகளில் இருந்தவர்கள்தான் வெற்றிலையைத் தமிழ்நாட்டுக்கு முதலில் கொண்டு வந்தார்கள் எனக் கருதப்படுகிறது.
சுமத்திராவில் வாழும் மக்களிடையே காணப்படும் பழங்குடிப் பெயர்கள் தமிழகத்தினைப் பின்பற்றியவை ஆகும். சோழியன், பாண்டியன், பல்லவன், தக்கன் முதலிய பெயர்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை.
கள்ளர்
கள்ளர் எனப்படுவோர் தமிழகத்திலே தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் குறிக்கும். இப்பொழுது இக்குழுவினரில் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
கள்ளர் குலப் பட்டங்கள்
சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன. இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது. சோழர் சாம்ராஜ்யத்தில் ஈச நாட்டுக் கள்ளர்கள் வகித்து வந்த பதவிகள் மற்றும் போர்களில் அவர்கள் செயலபட்ட விதத்தைக் கொண்டு அவர்களைச் சிறப்பு பட்டப் பெயர்கள் கொண்டு அழைக்கிறார்கள். உதராணமாக தொண்டைமான், பல்லவராயர், வில்லவராயர், களத்தில் வென்றார், நாட்டாள்வார், வாண்டையார், காடவராயர் என்பவை கள்ளர் குலத்தில் உள்ள சில பட்டப் பெயர்கள் ஆகும். அமரர் கல்கி தனது பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில் இத்தகைய பட்டப் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார்.
1. பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே சூடிக்கொண்ட பட்டங்கள். இராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.
2. பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம் உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள். கடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.
3. பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள். காலிங்கராயன், சேதிராயன், மழவராயன், நாடாள்வான் போன்றவை.
4. பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம் சார்பற்ற) வழங்கிய பட்டங்கள். கற்றளிப்பிச்சன். தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.
கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.
அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன் ), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை. தமிழகத்தில் தஞ்சை கள்ளர் குலத்தின் 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்:
கள்ளர் குலப் பட்டங்கள் பட்டியல்
- பாண்டியராயர்
- பல்லவதரையர்
- பல்லவராயர்
- சேதிராயர் (சோழனின் கிளைக்குடி)
- பழுவேட்டரையர்(சோழன் பெண் எடுத்த சேரன் குலம்)
- தஞ்சைராயர்
- பழையாற்றரையர்(பறையாறு சோழர்களின் தலைநகரம்)
- கொடும்பாளுர்ராயர் (மாமன்னன் ராஜராஜன் மனைவியின் குலம், ராஜேந்திர சோழன் தாய்)
- வல்லத்தரையர்
- முத்தரையர்
- கொல்லத்தரையர்
- கலிங்கராயர்
- கொங்குராயர்
- செம்பியதரையர்
- கேரளராயர்
- ஈழ்த்தரையர்
- கச்சியராயர்
- காடவராயர்
- கடாரத்தரையர்
- கச்சைராயர்
- கோழிராயர் (கூழி என்றால் கரிகாலன் தலைநகர் உறையூரை குறிக்கும்)
- கலிங்கராயதேவர்
- களப்பாளராயர்
- குறும்பராயர்
- சோழகன்னகுச்சிராயர்
- காலிங்கராயர்
- செம்பியமுத்தரையர்
- சம்புராயர்
- சோழரையர்
- சேதுராயர்
- செம்பியரையர்
- சோழதரையர்
- சீனத்தரயைர்
- சோழதிரையர்
- சிங்களராயர்
- தஞ்சிராயர்
- செழியதரையர்
- சிந்துராபாண்டிராயர்யர்
- தேவராயர்
- தமிழுதரையர்
- தெலிங்கராயர்
- தென்னதிரையர்
- தென்னரையர்
- தென்னறையர்
- தென்னவராயர்
- பாண்டுராயர்
- மூவரையர்
- மூவேந்த்ரையர்
- மானமுத்தரையர்
- மீனவராயர்மலைராயர்
- மலையராயர்
- மழவராயர்
- முனைதரையர்
- மலையராயர்
- மலையரையர்
- வங்கத்தரையர்
- வங்கராயர்
- வடுகராயர்
- நாகராயர்
- வாணாதிராயர்
- வல்லவராயர்
- வில்லவதரையனார்
- வில்லவராயர்
- வெங்கிராயர்
- வாணரையர்
- வாண்டராயர்
- வண்டைராயர்
- வேங்கைராயர்
- வெங்கிராயர்
- அங்கராயர்
- ஆக்காட்டரையர்
- அன்கராயர்
- ஆற்காட்டரையர்
- அனகராயர்
- அங்கதராயர்
- ஆச்சராயர்
- ஆச்சாண்டார்
- உழுவாண்டார்
- அச்சிராயர்
- அச்சுதராயர்
- உமத்தரையர்
- அத்திராயர்
- அத்தியரையர்
- ஆலத்தரையர்
- அமராண்டார்
- அம்பராண்டார்
- ஆற்க்காடுராயர்
- அம்மையத்தரையர்
- இராதராயர்
- இராமலிங்கராயதேவர்
- இராலிங்கராயதேவர்
- ஓந்திரையர்
- ஓந்தரையர்
- ஓமாந்தரையர்
- ஓமாமரையர்
- இருப்பரையர்
- அண்ணவசல்ராயர
- கொங்கரையர்
- கொங்ககரையர்
- கொங்குதிரையர்
- கொடிராயர்
- காசிராயர்
- கொடிக்கிராயர்
- கொடிக்கவிராயர்
- கஞ்சராயர்
- கொடும்பராயர்,
- கொடும்பைராயர்
- கடம்பராயர்
- கொடும்புராயர்
- கடம்பைராயர்
- கொடும்மளுர்ராயர்
- கொடும்பிராயர்
- கொடும்பையரையர்
- கார்யோகராயர்
- கட்டராயர்
- கொழுந்தராயர்
- கொற்றப்பராயர்
- கொத்தப்பராயர்
- கொற்றரையர்
- கண்டராயர்
- கண்டவராயர்
- கோட்டரையர்
- கோட்டையரையர்
- கண்ணரையர்
- கரம்பராயர்
- கீழரையர்
- கைலாயராயர்
- கையராயர்
- கரும்பராயர்
- குச்சராயர்
- குச்சிராயர்
- குச்சியராயர்
- குமதராயர்
- கலிராயர்
- குருகுலராயர்
- குழந்தைராயர்
- கொழந்தைராயர்
- கொழந்தராயர்
- கொழுந்தைராயர்
- களப்பாள்ராயர்
- கனகராயர்
- கூத்தப்பராயர்
- கன்னகொண்டார்
- கொத்தப்பராயர்
- கன்னக்குச்சிராயர்
- கன்னராயர்
- கன்னிராயர்
- கேளராயர்
- சக்கரையர்
- சாக்கரையர்
- சக்கராயர்
- செம்பரையர்
- சக்காராயர்
- சங்கரராயர்
- சோழுதிரையர்
- சோதிரையர்
- செல்லரையர்
- செனவராயர்
- சன்னவராயர்
- சனகராயர்
- சன்னராயர்
- சென்னிராயர்
- சன்னவராயர்
- சாணரையர்
- சாத்தரையர்
- சாமுத்தரையர்
- சாமுத்திரையர்
- சேண்ராயர்
- செனவராயர்
- சிங்கராயர்
- சேந்தராயர்
- சிந்துராயர்
- சிறுநாட்டுராயர்
- சிறுராயர்
- சேறைராயர்
- சேற்றூரரையர்
- சுக்கிராயர்
- சுக்கிரபராயர்
- சுக்கிரியராயர்
- சுந்தரராயர்
- சொரப்பரையர்
- சோதிரையர்
- தேசுராயர்
- தனஞ்சராயர்
- திருக்காட்டுராயர்
- தம்பிராயர்
- தனராயர்
- தோப்பைராயர்
- தலைசைராயர்
- துண்டராயர்
- தனசைராயர்
- துண்டுராயர்
- துண்டீரராயர்
- தனிராயர்
- நண்டல்ராயர்
- நந்திராயர்
- நந்தியராயர்
- நாட்டரையர்
- நாட்டறையர்
- நரசிங்கராயர்
- நெடுந்தரையர்
- நன்னிராயர்
- நெல்லிராயர்
- பகட்டுராயர்
- பூழிராயர்
- பூவனையரையர்
- பங்களராயர்
- பாச்சிராயர்
- பேரரையர்,
- பேதரையர்
- பாண்டராயர்
- பஞ்சராயர்
- பஞ்சந்தரையர்
- பஞ்சநதரையர்
- பாப்பரையர்
- பொய்ந்தராயர்
- போய்ந்தராயர்
- போய்ந்தரராயர்
- பட்டுராயர்
- பொன்னவராயர்
- பாலைராயர்
- பால்ராயர்
- பிச்சராயர்
- பதுங்கராயர்
- பதுங்கரார்
- பிரமராயர்
- பிலியராயர்
- பயிற்றுராயர்
- பரங்கிலிராயர்
- பரங்கிராயர்
- பருதிராயர்
- புள்ளராயர்
- பிள்ளைராயர்
- போதரையர்
- பூராயர்
- பனைராயர்
- மாதராயர்
- மாதைராயர்
- மாதுராயர்
- மாத்துராயர்
- மங்கலராயர்
- மாதவராயர்
- மாந்தராயர்
- மாந்தையரையர்
- மாந்தரையர்
- மட்டைராயர்
- மேனாட்டரையர்
- மணிராயர்
- மண்டலராயர்
- மண்டராயர்
- மாவாளியார்
- மண்ணிராயர்
- மணிக்கராயர்
- மாளுவராயர்
- மானத்தரையர்
- மருங்கராயர்
- பருங்கைராயர்
- கைராயர்
- விக்கிரமத்தரையர்
- விசயராயர்
- வங்கனராயர்
- விசையராயர்
- வங்காரமுத்தரையர்
- விசராயர்
- விசுவராயர்
- வங்கானமுத்திரையர்
- விசுவரார்
- வஞ்சிராயர்
- வாஞ்சிராயர்
- விஞ்சிராயர்
- விஞ்சைராயர்
- வடுராயர்
- விசலராயர்
- வடுராயர்
- விசுவராயர்
- வல்லவரையர்
- விண்டுராயர்
- வீண்டுராயர்
- விருதுளார்
- விலாடத்தரையர்
- வில்லவதரையர்
- வில்வராயர்
- விழுப்பாதராயர்
- விற்பன்னராயர்
- வீணதரையர்
- வெட்டுவராயர்
- வணதரையர்
- வாணதிரையர்
- வாணாதரையர்
- வீணாதரையர்
- வீனைதிரையர்
- வெங்கிராயர்
- வாலிராயர்
- வேம்பராயர்
- வாளுவராயர்
- வேள்ராயர்
- வாள்ராயர்
- வைகராயர்
- வையராயர்
- வைராயர்
- வயிராயர்
- பிள்ளைராயர்
- கழுத்திரையர்
- செட்டரையர்
- தழிஞ்சிராயர்
சேர மன்னர்கள்
சங்ககாலம் என்பது தமிழ்நாட்டின் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தரும் வாழ்ந்த காலமாகும். சேரர்களை வானவரம்பன், வானவன், குட்டுவன், குடக்கோ,பொறையன், இரும்பொறை, கடுங்கோ, கோதை, சேரல், சேரலர்,சேரமான் என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைப்பதுண்டு.
பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.
சேரமன்னனான பெருஞ்சோற்றுதியன் சேரலாதனின் ஆட்சிச் சிறப்பைப் பாட முற்பட்ட முர்ஞ்சியூர் முடிநாகனார், மன்னனின் சிறப்புகளாகக் கூறும் பண்புகள் பொதுவாக ஓர் ஆட்சியாளர் கைக்கொள்ள வேண்டிய பண்புகளாகவே உள்ளன. நிலம், நீர், ஆகாயம், காற்று, தீ ஆகிய பஞ்சபூதங்களின் தன்மைகளைக் கொண்டு சேரமான் பெருஞ்சோற்றுதியன் ஆட்சி புரிகின்றானாம்.
'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை'
என்று நம்மைக் கீறி இகழ்பவரையும் இந்த நிலம் தாங்கி நிற்கும். இந்த நிலத்தைப் போலவே இகழ்பவரையும் பொறுத்தல் மனிதர்க்குத் தலையாய பண்பு எங்கிறது உலகப் பொதுமறை. சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் அகழ்வாரைத் தாங்கும் நிலத்தினுடைய பண்பினைக் கொண்டிருக்கிறான் என்கிறார் முடிநாகனார். பகைவர் பிழை செய்தால் அப்பிழையைப் பொறுப்பதால், அகழ்வாரைத் தாங்கும் நிலத்தின் பண்பினைக் கொண்டுள்ளானாம் மன்னன் பெருஞ்சோற்றுதியன். மேலும், அவன் பகைவன் செய்த பிழைகள் பொறுக்குமளவு அல்லவாயின் பகைவனை அழித்தற்குச் செய்யும் சூழ்ச்சித் திறன் வானத்தைப் போல எல்லையில்லாமல் கொண்டுள்ளானாம். காற்றினைப் போலப் பகைவரை அழித்தற்கேற்ற மனவலிமையும் சதுரங்க வலிமையும் கொண்டுள்ளானாம் சேரலாதன்.
அனைத்தையும் எரித்து அழிக்கும் நெருப்பின் திறம், அவன் பகைவரை எதிர்கொண்டு அழித்து ஒழிக்கும் போது வெளிப்படுகிறதாம். அதே நிலையில், பகைவர்கள் தன்னைச் சரணடைந்து வணங்குவார்கள் ஆயின், அவர்களுக்குத் தண்ணீரைப் போல அருள் செய்ய வல்லவனாகப் பெருஞ்சோற்றுதியன் விளங்குகின்றானாம். மொத்தத்தில் அவன் பகைவர் செய்த பிழைகளைப் பொறுத்துக் கொள்ளும்போது 'நிலத்தைப் போலவும், எல்லையின்றிப் பொறுக்க முடியாத அளவுக்குப் பிழைகள் செய்வார்களாயின் அகன்று விரிந்து எல்லையற்ற அவனுடைய சூழ்ச்சித்திறன் வானத்தப் போலவும் அவனுடைய மன வலிமை எத்திசையிலும் சென்று தாக்கக்கூடிய திறன் காற்றைப் போலவும், பகைவரை அழிப்பதில் நெருப்பினைப் போலவும், பகைவரே பணிந்து நிற்பாராயின், அவர்களுக்கு அருள் செய்யும் நிலையால் தண்ணீரைப் போலவும் சேரமான் பெருஞ்சோற்றுதியன் விளங்குகின்றானாம். மொத்தத்தில் பஞ்ச பூதங்களின் தன்மைகளைக் கொண்டு அவன் ஆட்சி செய்கின்றான் என்கிறார் புலவர்.
மண்திணிந்த நீலனும்
நீலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கைபோல
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்கியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய் என சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனை விளிக்கின்றார் புலவர் முரஞ்சியூர் முடி நாகனார்.
இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன்
பல்யானைச் செல்கெழு குட்டுவன்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
செல்வக் கடுங்கோ வாழியாதன்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ
யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சேரமான் வஞ்சன்
சேரமான் மாவண்கோ
சேரமான் குட்டுவன் கோதை
சேரமான் கணைக்கால் இரும்பொறை
இந்நூலின் ஆக்கத்துக்குத் துணை வந்த நூல்கள்
பல்லவ மன்னர்கள்
பாண்டியர்கள் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டுவரும் தொல்குடியினர் என்பது சன்றோர் குறிப்பு.
கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு (கி.மு.300 - கி.பி.300) முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுயுள்ளார்.கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது. இவனுடைய அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. இவ்வரசன் தலைச்சங்கத்தின் இறுதியில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. முதல் இரு தமிழ்ச் சங்கங்கள் இருந்ததற்கான உறுதி பயக்கும் சான்றுகள் அதிகம் இல்லை. இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் முதல் இரு சங்கங்கள் இருந்ததாகக் கருதப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் வரும் சிறு குறிப்புகளும், இறையனார் அகப்பொருளில் வரும் விரிவான குறிப்புமே இவ்விலக்கிய சான்றுகள்.
இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. ஒரு புறநானூற்றுப் பாடல் நெடியோன் என்னும் இவ்வரசனைப் பற்றிய பாடலில் இவனை வாழ்த்தும் ஒரு செய்தியில்
“ "முன்னீர் விழவின் நெடியோன்"
"நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"
” —(புறம்-9)
என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.
“ "நிலந்தந்த பேருதவிப்"
"பொலந்தார் மார்பின்"
"நெடியோன் உம்பல்"
” —(60-61)
என மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைச்சங்க காலத்து இறுதி அரசனாக இருந்திருப்பான் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது.மூத்த குடியினன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடுமி என்பது குடுமியான்மலை. இவ்வூரில் இவன் யூபம் நட்டு வேள்வி செய்தான். எனக் கொள்வது வரலாற்று நெறி. வேள்விக்குடிச் செப்பேட்டில்.
“ "கொல்யானை பலஓட்டிக்
கூடாமன்னர் குழாந்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி"
” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில்
“ "பல்சாலை முதுகுடுமித்
தொல்ஆணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால்
சிறப்பின்"
” —(759,61,62)
இவனைப் பற்றிப் புறநானூற்றில் "முதுகுடுமிப் பெருவழுதி ஆற்றல் மிக்க படையோன்;அரசர் பலரையும் புறங்கண்டவன்;புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்துச் சிறந்தவன்;இரவலர்க்கு இல்லையெனாது ஈயும் பெருங்கொடையான்;வேள்வி பல செய்து புகழ் பெற்றவன்;சிவ பெருமானிடத்து பேரன்பு உடையோன்;பெரியோர்களை மதிப்பவன்" (புறம்-6,9,12,15,64)
காரிக்கிழார் பெருவழுதியைப் பற்றிப் பாடுகையில்
“ "தண்டா ஈகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவும்,தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய பெரும! நீ நிலமிசையானே!"
” —(புறம்-6)
நெட்டிமையார் இவனைப் பற்றிப் பாடுகையில்
“ "எம்கோ வாழிய குடுமி-தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்!"
” —(புறம்-9)
மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு "விறல் மாண்குடுமி பிறர் மண்கொண்டு பாணர்க்குப் பொன் தாமரையும்,புலவர்க்கு யானையும்,தேரும் பரிசாக நல்கினான்" எனப் புறம்-12 கூறுகின்றது.
நால்வேதங்கூறியாங்கு "வியாச் சிறப்பின் வேள்ளி முற்றச் செய்தான்" எனப் புறம்-15 இல் நெட்டிமையார் கூறுகின்றார். இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் காரிக்கிழார், பெண்பாற் புலவர் நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் முதலியோர் இவ்வரசனைப் பாடியுள்ளார்கள்.
இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்:
“ "ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்க்டன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என"
"அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே"
கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள்
பாண்டியன் முடத்திருமாறன்
முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிக்கோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை.
- குறிப்பு
பாண்டியன் மதிவாணன்
மதிவாணன் கி.பி. 60 முதல் 85 வரை முடத்திருமாறனுக்குப் பின்னர் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் சிறந்த தமிழ் நூல்களினை இயற்றவைத்தும் கல்வி,கேள்விகளில் வல்லவனாகவும் நாடகத் தமிழில் ஈடுபாடு கொண்டவனாவும் விளங்கினான். நாடகத்தமிழ் நூல் ஒன்றினை இயற்றி அதற்கு மதிவாணன் மதிவாணர் நாடகத் தமிழர் எனப் பெயரிட்டான். மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இந்நூலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடக நூல் தந்த மதிவாணன் நான்மாடக் கூடல் நாயகனாக இருந்தான்.
பெரும்பெயர் வழுதி
பெரும்பெயர் வழுதி கி.பி. 90 முதல் 120 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் கரிகாலன் காலத்தில் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றான். கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்ற பட்டத்தினையும் பெற்ற இம்மன்னனை கரிகாலனின் நண்பனாகவிருந்த இரும்பிடர்த்தலையர் "கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியே!நிலம் பெயர்ந்தாலும்,நீ சொல் பெயராய்! விலங்கு அகன்ற வியல்மார்பனே!உன்னை விரும்பி இரவலர் வருவர்!உன்ன மரத்தின் சகுனம் பொய்க்கநீ ஈவாய்!தவிரா ஈகை,கவுரியர் மருமகனே! ஏமமுரசும் இழுமென முழங்க வெண்குடை மண்ணகம் நிழற்ற வாழ்பவனே!" என்று (புறம்-3) இல் போற்றுகின்றார்.
பொற்கைப்பாண்டியன்
பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான்.
பொற்கை பெற்ற வரலாறு மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் "வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்" எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள். வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக்கூறிச் சென்றான். இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான். அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஐயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எண்ணி அவ்வீதியில் அமைந்திருந்த அனைத்து வீட்டுக் கதவுகளினையும் தட்டினான் பாண்டியன்.
மறுநாள் அரசவையில் அத்தெரு மக்கள் முறையிட்டனர். அமைச்சர், மடைத்தலைவர், புலவர் அனைவரும் அமர்ந்திருந்தனர். எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிய திருடன் கையை வெட்ட வேண்டும் என்றும் கூறினர் அம்மக்கள். அரசனும் வாளொன்றைக் கொண்டு வரச்சொல்லி தன் கையையே வெட்டிக் கொண்டான். வியந்த அனைவரிடமும் தானே கதவைத் தட்டியதாகக் கூறியதனைக் கேட்டு மக்கள் வியந்து நின்றனர். பாண்டியனும் பொற்கை ஒன்றினை வைத்துக் கொண்டான் அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என்ற பெயரைப் பெற்றான் அப்பாண்டிய மன்னன். இவ்வாறு சிலப்பதிகாரத்தில் கண்ணகியிடம் தெய்வம் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி
பாண்டியன் அறிவுடை நம்பி
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
பாண்டியன் ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
பாண்டியன் கானப்போர் கடந்த உக்கிரப் பெருவழுதி
கருங்கையொள்வாட் பெரும்பெயர்வழுதி
பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி
நல்வழுதி
கூடகாரத்து துஞ்சிய மாறன்வழுதி
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
குறுவழுதி
நம்பி நெடுஞ்செழியன்
பாண்டிய மன்னர்கள் (பல்லவர் காலம் கி.பி. 575 - 900)
பாண்டியன் கடுங்கோன் கி.பி. 575 - 600
கடுங்கோன் தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்பட்ட களப்பிரர் ஆட்சிக்காலமான கி.பி. (300-700) இருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவான்.கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான்.பாண்டிய நாடு முழுவதனையும் தன் ஆட்சிக்குள் கொண்டும் வந்தான்.இவனைப் பற்றிய செய்திகள் பலவற்றையும் வேள்விக்குடி செப்பேடுகள் சிறப்பித்துக் கூறுகின்றன அவையாவன:-
“ களப்பிரன் என்னும் கலியரசன் கைக்கொண்டதனை
இறக்கியபின் படுகடன் முளைத்த பருதிபோல்
பாண்டியாதிராசன் வெளிப்பட்டு
விடுகதிர் அவிரொளி விலக வீற்றிருந்து
வேலை சூழ்ந்த வியலிடத்துக்
கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச்
செங்கோல் ஓச்சி வெண்குடை நீழல்
தங்கொளி நிறைந்த தரணிமங்கையைப்
பிறர்பால் உரிமை திறவிதின்நீக்கித்
தன்பால் உரிமை நன்கனம் அமைத்த
மானம்போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்னர் ஒளிநகரழித்த
கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன்
”
இப்பாடல் வரிகள் களப்பிரன் பாண்டிய நாட்டைக் கைக்கொண்டான்,கதிரவன் போன்ற பாண்டியன் ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்றும்,கதிர்வேல் தென்னன் என்றும்,செங்கோல் ஓச்சியவன் என்றும் உலகப் பெண் உரிமையைத் தனதாக்கிக் கொண்டவன் என்றும் சிறப்பிக்கப்படுகின்றான்.வீரத்தால் களப்பிரரை வென்றான் புகழால் தமிழை நிலைபெற வைத்தான் எனவும் மெய்ச்சப்படுகின்றான்.
மாற்வர்மன் அவனி சூளாமணி கி.பி. 600 - 625
சடையவர்மன் செழியன் சேந்தன் கி.பி. 625 - 640
மாறவர்மன் அரிகேசரி கி.பி. 640 - 680
இவனை சுந்தரபாண்டியன் எனவும் கூன்பாண்டியன் எனவும் திருவிளையாடற் புராணம் கூறாந்ற்கும். முதலில் சமண மதப்பற்றுடையவனாய்யிருந்து பின்பு சமய குறவர் திருஞானசம்பந்தமூர்திகளாற் சைவனாக்கப்பட்டான். இவன் முன்னிலையில் தான் திருஞானசம்பந்தமூர்திக்கும் சமன முனிவர்களுக்கும் அனல் வாதமும் புனல்வாதம் நிகழ்ந்தன. இவ்வேந்தன் ஆட்சியில் பாண்டியநாடு உயர்நிலை அடைந்தது. சோழர்களையும், சேரர்களையும்,பரவரையும்,குறுநில மன்னர்கள் சிலரையும் வெற்றிகொண்டான். மணிமுடிசசோழனை உறையூரில் வெற்றி கண்டு அவ்வேந்தன் மகள் மங்கையர்க்கரசியை திருமணம் செய்துகொண்டான். இக்காலகட்டத்தில் பாண்டியநாட்டில் அமைச்சராயிருந்தவர் குலச்சிறையார் என்பவர். மாறவர்மனரிகேசரி, மங்கையர்க்கரசி,குலச்சிறையார் மூவரும் சிவனடியாராகி அறுபத்துமூவருள் சேர்க்கப்பட்டனர்.இவர்கள் வரலாற்றைப் பெரிய புராணத்தில் காணலாம்.
கோச்சடையான் ரணதீரன் கி.பி. 680 - 710
மாறவர்மன் அரிகேசரி பாராங்குசன் - இராசசிமன். கி.பி. 710 - 765
நெடுஞ்சடையான் பராந்தகன் கி.பி. 765 - 790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 - 800
வரகுண மகாராசன் கி.பி. 800 - 830
ஸ்ரீ மாரன் ஸ்ரீ வல்லபன் கி.பி. 830 - 862
வரகுணவர்மன் கி.பி 862 - 880
பராந்தக பாண்டியன் கி.பி. 880 - 900
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900 - 920
வீரபாண்டியன் கி.பி. 946 - 966