வரலாற்று நோக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்
சசிதா குமாரதேவன்
விரிவுரையாளர்,
வரலாற்றுத் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
யாழ்ப்பாண அரசு தொடர்பாக தோன்றிய தமிழ் இலக்கியங்கள் சோழர் வருகையுடன் கதிரமலையைத் தலைநகராகக் கொண்ட அரசின் தலைநகர் சிங்கை நகருக்கு இடம்மாறியதை சூசகமாக தெரிவிக்கின்றன. இவ் இலக்கியங்கள் தமிழகத்தில் சோழர் ஆட்சி மறைந்து ஏறத்தாழ 700 ஆண்டுகளின் பின்னர் தோன்றியிருந்தாலும் தமிழ் இராசதானி தோன்றிய வரலாற்றோடு சோழரின் வருகையை முன்னிலைப்படுத்தியிருப்பது இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் அவர்களின் வகிபாகத்தை புறக்கணித்துவிட முடியாதென்பதைக் காட்டுகின்றது.
முதலியார் இராசநாயகம் கதிரமலையை வலி. மேற்கில் உள்ள கந்தரோடை என அடையாளப்படுத்தி, அதுவே நாக நாட்டில் தோன்றிய முதலாவது தமிழ் அரசு எனவும் அவ்வரசின் தலைநகர் சிங்கை நகருக்கு இடம்மாறியதற்கு சோழர் வருகையே காரணம் எனவும் குறிப்பிடுகின்றார். இவரின் கருத்தை ஆமோதிக்கும் சுவாமி ஞானப்பிரகாசர் இவ்வரசின் தோற்ற காலத்தை கி.பி. 8ஆம் நூற்றாண்டு என குறிப்பிடுகின்றார்.
ஏறத்தாழ இதே காலப்பகுதியில் கதிர மலையிலிருந்து ஆட்சி புரிந்த உக்கிரசிங்க மன்னன் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலை தோற்றுவித்த சோழ இளவரசியான மாருதப்புரவல்லியை பட்டத்தரசியாக்கி அக்கோயிலின் வளர்ச்சிக்கு பல பணிகளை செய்தான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.
யாழ்ப்பாண வைபவமாலையில் இடம்பெறும் பல வரலாற்றுச் சம்பவங்கள் பாளி இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள ஐதீகங்களின் மாற்று வடிவமாக உள்ளன. இருப்பினும் யாழ்ப்பாணத்தின் தொன்மை பற்றி இவ்விரு நூல்களிலும் கூறப்படும் வரலாற்றுச் செய்திகளில் சில உண்மைகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு வலிகாமத்தின் மேற்கு பகுதியில் கிடைத்து வரும் தொல்லியல் சான்றுகள் முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றன.
1917 இல் கந்தரோடையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட போல் பீரீஸ் அநுராதபுரத்தை அடுத்து இலங்கையில் தோன்றிய புராதன நகரமாகக் கந்தரோடையைக் குறிப்பிடுவது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அதன் காரணமாகத்தான் பாளி நூல்களில் இலங்கையின் தனித்துவம் வாய்ந்த பிரதேசமாக யாழ்ப்பாணத்தை அடையாளப்படுத்தி கூறுகின்றன என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும். இது பாளி இலக்கியங்களில் நாகதீபம் எனவும், வல்லிபுரத்தில் கிடைத்த பொற்சாசனத்தில் நாகதீவ எனவும், தமிழகத்தில் எழுந்த இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் நாகநாடு எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இங்கு அநுராதபுரத்திற்கு சமமான காலத்தில் இருந்து சிற்றரசர்களின் ஆட்சி இருந்ததை ஆனைக் கோட்டை, கந்தரோடையில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன. இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் பாளி இலக்கியங்கள் இங்கு ஆட்சியில் இருந்த நாக அரசு பற்றிக் கூறுகின்றன. கி.பி 1ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம் ஒன்று இங்கு ஆட்சி புரிந்த நாக மன்னன் தீபராஜா என்ற விருதுப் பெயருடன் ஆட்சி புரிந்ததாக கூறுகின்றது.
இவ்வாறு தனியொரு பிராந்தியமாக சிற்றரசின் ஆட்சிக்குட்பட்ட யாழ்ப்பாணத்தில் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆகம மரபிற்கு உட்படாத வழிபாட்டு மரபுகளும் தமிழ்ப் பௌத்தமும் நிலவியதாக தெரிகின்றது. ஆயினும் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கமும் பல்லவ அரசின் எழுச்சியும் யாழ்ப்பாணத்தில் அதிலும் சிறப்பாக வட இலங்கையில் பல்லவர் கால அரசியல், சமய ஆதிக்கம் நிலவக் காரணமாகியது.
அக்காலத்தில் இருந்தே ஆகம மரபில் கற்களைக் கொண்டு இந்து ஆலயங்கள் அமைக்கும் மரபு இலங்கையில் தோற்றம் பெற்றது. இதைத் தமிழகத்திற்கு அடுத்த நிலையில் இலங்கையில் இருந்த திருக்கோணேஸ்வரமும், திருக்கேதீஸ்வரமும் நாயன்மார்களால் போற்றிப்பாடக் காரணமாகியது. இக்காலத்தில் இருந்து வட இலங்கை தமிழகப் படையெடுப்பாளருக்கும் தென்னிலங்கையில் அரசுரிமையை இழந்த சிங்கள மன்னர்களிற்கும் பாதுகாப்பு வழங்கும் இடமாக மாறியது. கி.பி 7ஆம் நூற்றாண்டில் அரசுரிமையை இழந்த மாணா என்ற சிங்கள மன்னன் அநுராதபுர மன்னனுக்கு பயந்து நாகதீபத்தில் அடைக்கலம் பெற்றான் என சூளவம்சம் கூறுகின்றது.
இதே காலப்பகுதியில் பல்லவ மன்னன் நாக நாட்டு இளவரசியை மணந்தான் என பல்லவச் செப்பேடு கூறுகிறது. கி.பி 8 ஆம் நூற்றாண்டில் அநுராதபுர அரசிற்கு எதிராக நாகதீபத்தில் இருந்து ஸ்ரீநாக என்ற தலைவன் படையெடுத்த செய்தி கூறப்படுகின்றது. கி.பி 835 இல் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறஸ்ரீவல்லபன் வடஇலங்கையில் வந்திறங்கிய போது இங்கிருந்த தமிழர்கள் அவனுடன் இணைந்து அநுராதபுர அரசை வெற்றி கொண்டதாக சூளவம்சம் கூறுகின்றது. இச்சம்பவங்கள் எல்லாம் நாகதீபம் அநுராதபுர நாகரிக வட்டத்திற்குள் உட்படாது தனியொரு ஆதிக்கம் நிறைந்த பிராந்தியமாக திகழ்ந்ததைக் காட்டுகின்றது.
இவ்வாறான காலப் பகுதியில் தான் சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழன் கி.பி 10 ஆம் நூற்றாண்டளவில் வட இலங்கை மீது படையெடுத்தான். இப்படையெடுப்பு நாகதீபத்தில் நடந்ததாக கூறும் சூளவம்சம் இப்படையெடுப்பால் அநுராதபுர அரசிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறுகின்றது.
அதேவேளை இப்படையெடுப்பை பெரும் வெற்றியாக சோழச் சாசனங்கள் கூறுகின்றன. இதற்காக முதலாம் பராந்தக சோழன் ஈழமும் மதுரையும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் என்ற விருதுப் பெயரைப் பெற்றதாக அவன் காலக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. வரலாற்று அறிஞர்கள் சோழரது ஆதிக்கம் அநுராதபுரத்தில் ஏற்பட முன்னர் நாகதீபத்தில் ஏற்பட்டதையே கூறுகின்றன. இதற்கு சோழர் ஆட்சி தொடர்பான கோயில்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், அதிகளவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டதை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
இங்கே கதிரமலை அரசின் வீழ்ச்சியை சோழர் வருகையுடன் தொடர்புபடுத்தும் தமிழ் இலக்கியங்கள் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் தோற்றத்தை சோழ வம்சத்து அரசி மாருதப்புரவல்லியுடன் தொடர்புபடுத்துவதை நோக்கலாம். சோழர் ஆட்சியில் மாவிட்டபுரம் அமைந்த வலிகாமம் அவர்களின் அரசியல், பண்பாட்டு செல்வாக்கிற்கு உட்பட்டதாகவும், இலக்கியங்களில் ஒன்றான மகாவம்சம் தமிழக யாழ்ப்பாண (நாகதீபம்) உறவில் இப்பிராந்தியத்தில் உள்ள ஜம்புகோளத் துறைமுகம் பெற்ற வரலாற்றுச் சிறப்பை குறிப்பிடுகின்றது.
இத் துறைமுகம் அமைந்த இடத்தைச் சிலர் தற்காலத் திருவடிநிலை எனவும், வேறு சிலர் காங்கேசன்துறை எனவும் குறிப்பிடுகின்றனர். ஆயினும் இவ்விரு இடங்களின் அமைவிடம் கடல் வழித் தொடர்பிற்கு சாதகமாக தமிழகத்திற்கு அண்மையில் அமைந்திருந்தமை தமிழக பண்பாடு முதலில் இங்கு பரவுவதற்குச் சாதகமாக அமைந்தது.
சோழ சாசனம் ஒன்று வட இலங்கையில் வலிகாமத்தை வெற்றி கொண்டு அங்கிருந்து பெருமளவு யானைகளை தமிழகம் கொண்டு சென்றதாகக் கூறுகின்றது. மாவிட்டபுரம் அமைந்த சுற்றாடலில் காணப்படும் வளவர்கோன் பள்ளம் காங்கேசன்துறை சோழக் கல்வெட்டுக்களில் அதிலும் குறிப்பாக பராந்தக சோழன் காலக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்படும் பெயராகும். இவற்றை நோக்கும் போது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் தோற்றத்தை சோழருடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தெரிகின்றது.
ஆயினும் கி.பி16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையால் யாழ்ப்பாணத்தில் 500 ற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாக இருக்கலாம்.
தற்போது நாம் காணும் கந்தசுவாமி கோயில் 1782 இல் குமாரசாமிக் குருக்களால் கட்டப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் மத சுதந்திரம் அழிக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாலயமும் மீளக் கட்டப்பட்டதைக் காட்டுகின்றது. ஆயினும் இதற்கு தொன்மையான வரலாறு இருக்கலாம் என்பதை நாகதீபம் பற்றிய வரலாற்றுச் சம்பவங்கள் தெரிவிக்கின்றன.
222222
தமிழக அரசர்களின் வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் அறிவதற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் துணைபுகின்றன.சங்க நூல்களில் மூவேந்தர்கள் பற்றியும் (சேரர்கள்20, சோழர்கள் 18,பாண்டியர்கள் 14) குறுநில மன்னர்கள், படைத்தலைவர்கள் (ஏறத்தாழ 150 பேர்) பற்றியும் அயல் நிலங்களில் வாழ்ந்த அரசர்கள் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன (மேற்கோள்,சங்க கால மன்னர்களின் காலநிலை, தொகுதி1,ப.1). புலவர்கள் அகத்துறை, புறத்துறை சார்ந்த பாடல்களை இயற்றும்பொழுது உவமை வழியாகவும்,சில புலவர்கள் நேரடியாகவும் பண்டைத் தமிழக அரசர்கள் பற்றியும்,பிற தேயத்து அரசர்கள் பற்றியும் குறிப்புகளைத் தந்துள்ளனர்.இவ்வாறு குறிப்புகள் காணப்பட்டாலும் இன்னாருக்குப் பின்னர் இன்னார் அரசாண்டார்கள் என்று உறுதிபடக் கூறுவதற்குச் சான்றுகள் குறைவாக உள்ளன. அவ்வாறு காணப்படும் சான்றுகளைக் கொண்டு முடிந்த முடிபாக வரலாற்றைப் பதிய முடியாமல் அறிஞருலகம் கருத்துவேறுபட்டு நிற்கின்றது.அவ்வகையில் கரிகாற் சோழன் வரலாறும் அறிஞர்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டைக் கொண்டுள்ளது.
கரிகாலன் தந்தை
கரிகாலன் வரலாற்றை ஆராய்வதற்கு நமக்குப் புறநானூறு,அகநானூறு, பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை,சிலப்பதிகாரம்,மணிமேகலை உள்ளிட்ட நூல்கள் பெருந்துணைபுரிகின்றன. இவற்றுள் பொருநராற்றுப்படையில் இடம்பெறும் அரசன் கரிகாலன் எனவும் பட்டினப் பாலையில் இடம்பெறும் அரசன் திருமாவளவன் எனவும் அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. இவ்வாறு குறிப்பிடப்படும் இருவரும் ஒருவரா,வேறானவர்களா எனவும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு.மயிலை சீனி.வேங்கடசாமி,தி.வை.சதாசிவ பண்டாரத்தார், புலவர் கோவிந்தன்,அறிஞர் பே.க.வேலாயுதம் உள்ளிட்டவர்களின் கருத்தை எடுத்துரைத்துக் கரிகாலன் வரலாற்றை இக்கட்டுரை ஆராய முனைகிறது.
கரிகாலனின் சிறப்பை நாம் முழுமையாக அறிவதற்குக் கலிங்கத்தை ஆண்ட காரவேலனின் கல்வெட்டு நமக்கு உதவுகிறது.காரவேலன்(கி.மு 176-163) என்பவன் கலிங்கத்தை 13 ஆண்டுகள் ஆண்டவன்.அவன் 11 ஆம் ஆட்சியாண்டில்(அதாவது கி.மு.165 இல்) தமிழகத்தை வென்றுள்ளான்.அவனின் அத்திகும்பா கல்வெட்டில்" இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியத் "திரமிள சங்காத்தம்"(தமிழர் கூட்டணியை) உடைத்தேன் என்று குறிப்பு உள்ளது.இதனைப் பொருநராற்றுப்படையாலும் உணரலாம்.
முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில்
"முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல"
என மூவேந்தரும் கூடியிருந்த காட்சி பேசப்படுகிறது.எனவே கரிகாலன் அவையில் இக்கூட்டணி உருவானது என்று உணரலாம்.
கலிங்கநாட்டிற்கு மேற்கே வடுகர் நாட்டைத் தமிழர்கள் ஆண்டுள்ளனர்.113 ஆண்டுகள் கூட்டணியாக இருந்து தமிழர்கள் வடபுலம்வரை ஆண்டதால் கலிங்கர்களால் தமிழர்களை வெல்லமுடியவில்லை.பின்னாளில் இந்தப் பகுதியை இரேணாட்டுச் சோழர்கள் ஆண்டனர்.
கி.மு.278 இல் வடக்கிலிருந்து ஒரு படையெடுப்புத் தமிழகத்தின் மேல் நடக்கிறது(கி.மு.300 இல் மௌரியர் படையெடுப்பு நடந்துள்ளதையும் இங்குக் கவனிக்க வேண்டும். சந்திரகுப்த மௌரியன் எடுத்த மோவூர் படையெடுப்பு இதுவாகும்)கி.மு.278 இல் சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரன் என்பவன் படையெடுத்தபொழுது தமிழர்கள் ஒன்றுகூடி எதிர்த்தனர்.வடக்கே 16 அரசர்களை எதிர்த்து, பாடலிபுத்திரம் திரும்பினான்.சந்திரகுப்தன் படையெடுப்பு வடுகர் நாட்டின் வழியாக நடந்தபொழுது வடுகர்களும் படையுடன் சேர்ந்து தமிழகம் வந்தனர். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க வடுகர்நாட்டை வென்று 113 ஆண்டுகள் தமிழர் கூட்டணி ஆண்டது.இவ்வாறு தமிழர் கூட்டணியான திரமிள சங்கார்த்தம் உருவாக அடிப்படைக் காரணமாக விளங்கியவன் கரிகாலனே ஆவான்(கி.மு.278).இவன்தான் கூட்டணிக்கு முதன்மை தந்திருக்க வேண்டும்.ஏனெனில் வடநாட்டுப் படையெடுப்பால் முதலில் பாதிக்கப்படுவது சோழநாடே ஆகும்.எனவே சோழ அரசன் கரிகாலன் தலைமையில் படை அமைக்கப்பட்டிருக் கலாம்.
கரிகாலன் காலத்தில் சோழநாட்டுக்கு இரண்டு தலைநகரங்கள் இருந்துள்ளன.உறையூரைத் தலைநகராகக்கொண்டு தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் அரசாண்டான். கழுமலத்தைத் (சீர்காழி) தலைநகராகக் கொண்டு கரிகாலனின் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி அரசாண்டான்.இளஞ்சேட்சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தான். உடன் பிறப்பு இவனுக்கு இல்லை. இரும்பிடர்த்தலையார் என்ற புலவரால் வளர்க்கப் பெற்றவன். பொருநராற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் இவன்.இவன் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகும்.கழுமலத்திலிருந்து பின்னாளில் நெய்தலங்கானல் தலைநகரானது. நெய்தலங்கானல் என்பது இன்று பூம்புகாருக்கு மேற்கே ஐந்துகல் தொலைவில் நெய்தல்வாசல் எனப்படுகிறது.
திருமாவளவன் நெய்தலங்கானத்திலிருந்து ஆட்சி செய்த இளஞ்சேட் சென்னியின் மகனாவான். மாவளத்தான் என்று இளமையில் அழைக்கப்பட்டான்.பின்னர்த் திருமாவளவன் எனப்பட்டான்.திருமாவளவனின் அண்ணன் நலங்கிள்ளியாவான்.நலங்கிள்ளிக்குப் பிறகு அவன் மகன் நலங்கிள்ளிசேட்சென்னி என்பவன் சில காலம் அரசாண்டான்.பின்னர் இறந்துபட்டான். அதன் பிறகு திருமாவளவன் அரசேறினான். உடன் இருந்த மன்னர்களை வென்றதுடன் வடநாட்டு மன்னரையும் இலங்கை மன்னரையும் இவன் வென்றான்.காவிரிக்குக் கரையமைத்ததும், உறையூரிலிருந்து தலைநகரைப் பூம்புகாருக்கு மாற்றியதும் இவனே. காவிரியை இவன் கி.மு.11 ஆம் ஆண்டு பார்வையிட்டான் எனப் பே.க.வேலாயுதம் குறிப்பார்(பக்கம் 12).பட்டினப்பாலை இவன் மீது பாடப்பட்ட நூலாகும்.அதனைப் பாடிய கடியலூர் உருத்திருங்கண்ணனார் அவர்களுக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான். இவனுக்குக் கரிகாலன் என்ற பெயரும் உண்டு என்பதை மணிமேகலை வழியாக அறியமுடிகிறது.
திருமாவளவனின் காலத்தில் தொண்டைநாட்டை ஆண்டவன் தொண்டைமான் இளந்திரையன் ஆவான்.திருமாவளவனின் மகன் செங்கணான் ஆவான். இவன் காலத்தில் சேரநாட்டை ஆண்டவன் கணைக்கால் இரும்பொறை.சோழநாட்டின் மேல் படையெடுத்துத் தோற்றவன். செங்கணானின் படை வலிமை பற்றி குறிப்பிடும் அயல்நாட்டுப் பயணியான பிளைனி,"இந்த நாட்டில் மற்றொரு நகரமும் இருக்கிறது.அதன் பெயர் கதுமுலா என்பதாகும்.அந்நகரம் கடற்கரையில் உள்ள பட்டினமாக விளங்குவதோடு,பல நாட்டு மக்கள் வணிகம் செய்யும் இடமாகவும் விளங்குகிறது.மற்றும்,ஐந்து நதிகள் ஒன்றுகூடிக் கடலில் விழும் இடத்தில் உள்ளது.அதன் அரசினிடம் வலிமை வாய்ந்த 1600 யானைப் படைகள் உள்ளன.150 ஆயிரம் காலாட்படைகளும்,5000 குதிரைகளும் உள்ளன" என்று குறிப்பிடும் பிளைனியின் காலம் கி.பி.23-79 ஆகும்.இங்குக் குறிப்பிடப்படும் கதுமலா என்பது கழுமலமாகிய சீர்காழியைக் குறிக்கும்.
வலிமை வாய்ந்த படையுடைய செங்கணானுடன் கழுமலம் என்ற ஊரில் கணைக்கால் இரும்பொறை பொருது தோற்றவன்.
கோப்பெருஞ்சோழனுக்கு இரு மகன் இருந்தனர்.மூத்தவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்;இளையவன் இளஞ்சேட் சென்னி.
காரவேலன் கி.மு 165 இல் படையெடுத்து வந்தான்.11 ஆண்டுகள் படைதிரட்டித் தமிழகத்தை நோக்கி வந்தான். திருக்கோவிலூருக்கு அருகில் காரவேலன் படையும்,குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் படையும் பொருதன.திருமுடிக்காரியின் முள்ளூர்மலையில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஒளிந்தான்.உறையூர் காரவேலன் வசமானது.அங்கிருந்து பெரும்படையுடன் மதுரைக்கு வந்தான்.
காரவேலன் படை மதுரை சென்று திரும்பியபொழுது சோழர் படைதிருப்பித் தாக்கக் காரவேலன் படை தோற்றது.காரவேலன் படையினர் தோற்றதுடன் பாழி என்ற ஊரில் வீரர்கள் சிலர் ஒளிந்துகொண்டனர்."குடித்தம் ஆதலின் பாழி" என்னும் குறிப்பு இதனை உறுதிப் படுத்தும்.
உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தவன்.எனவே தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தி என்ற தொடர் உறுதிப்படுத்தும்.கரிகாலன் பொறுப்பில் வடுகர் நாடு ஆளப்பட்டது.இவன் ஆணை பெற்று இரேணாட்டுச்சோழர்கள் ஆட்சி செய்தனர். இரேணாட்டுச் சோழர்கள் என்பவர்கள் கரிகாலன் மரபினர் என்பர்.
கரிகாலனின் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி ஆவான். இவன் கழுமலத்தைத் (சீர்காழி) தலைநகராகக் கொண்டவன்.இவன் காலத்தில் சேரநாட்டில் உதியஞ்சேரலும், அந்துவஞ்சேரலும் ஆட்சிபுரிந்துள்ளனர்.மேலும் பாண்டியநாட்டில் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி ஆட்சி செய்தவன்.வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியுள்ளார். உறையூரிலிருந்து ஆட்சி செய்தவன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியாவான்.உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தவன்.கரிகாலனின் காலம் புலவர் மாமூலனார் காலமான கி.மு.325- கி.மு.278 ஆகும்.இவன் மீது சேரன் பெருஞ்சேரலாதனும் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் பதினொரு வேளிரும் கூடிப் படையெடுத்தனர். வெண்ணியில் போர் நடந்தது.சேரன் புறப்புண் நாணி உயிர்விட்டான். பாண்டியன் கொல்லப்பட்டான்.
கரிகாலனைப் பாண்டிய நாட்டுக் கருங்குளவாதனார் பாடியுள்ளார்.அவர் பிறந்த கருங்குளம், "கரிகால சோழ நல்லூரான கருங்குளம்" எனக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.எனவே கருங்குளம் உள்ளிட்ட பகுதிகள் கரிகாலனுக்கு உரிமையுடையதாக இருந்தது.
கரிகாலனுக்கு ஆண் வாரிசில்லை.ஒரே மகள் ஆதி மந்தி ஆட்டனத்தியை மணந்தாள்.எனவே கரிகாலனுக்குப் பிறகு அவன் மரபு இல்லாமல் போனது என்று அறிஞர் பே.க.வேலாயுதம் குறிப்பர்(சங்க கால மன்னர் வரிசை)
கரிகாலனைப் பொருநராற்றுப்படை ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் பின்வருமாறு புகழ்ந்துரைக்கிறார்.
வென்ற வேலினையும்,அழகிய தேர்களையும் உடைய இளஞ்சேட்சென்னியின் மகன் எனவும் முருகனது சீற்றத்தைப் போலச் சீற்றத்தையும்,பகைவருக்கு அச்சத்தையும் தரும் தலைவன் கரிகாலன்.தாயின் வயிற்றிலிருக்கும்பொழுதே அரச உரிமையைப் பெற்றவன்.தன் பகைவர்கள் தன் வலியறிந்து ஏவல் செய்யவும்,அவ்வாறு ஏவல் செய்ய மறுத்த பகைவர்களின் நாடுகள் கவலைகொள்ளவும் அரசாட்சி செய்தவன்.கடல்மேல் தோன்றும் கதிரவன்ஒளிவீசியவாறு விண்ணில் உலா வருவது போல் பிறந்த நாள்தொட்டு தம் ஆட்சியைச் சிறப்புறச்செய்தவன். யாளியின் குட்டி,பால் உண்டலை மறவாத இளம் பருவத்திலேயே ஆண் யானையைக் கொன்றதுபோல்,பனம்பூவை அணிந்த சேரனையும்,வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனையும் வெண்ணிப் போரில் வென்றவன்,ஆத்திமாலை அணிந்தவன்,கரிகால் பெயருடையவன் என்று குறிப்பிடுகிறது.
"வென் வேல்
உருவப் பல்தேர் இளையோன் சிறுவன், 130
முருகற் சீற்றத்து உரு கெழு குருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப,
பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி, 135
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன்
நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,
ஆளி நல் மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி 140
முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென,
தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு,
இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை
அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்,
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த 145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள்,
கண் ஆர் கண்ணி, கரிகால் வளவன்"(பொருநர்.129-148)
என்னும் பாடலடிகள் கரிகாலனின் வரலாறு உணர்த்துகின்றன.
கரிகாலன் பற்றி மாமூலனார்(கி.மு.325-250) பாடிய அகநானூற்றுப்பாடலில்
"கனவ ஒண் படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென" (அகம் 55,9-13)
(ஒளிபொருந்திய படையுடைய கரிகாலனுடன் வெண்ணிப் போர்க்களத்தில் போரிட்டபோது புறப்புண்ணிற்குப் பெரிதும் நாணிய சேரலாதன் தான் தோல்வியடைந்த போர்க்களத்திலேயே வாள்ஏந்திய கையுடன் உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்தான் என்ற குறிப்பு காணப்படுகிறது). எனவே கரிகாலனின் வெண்ணிப்போர் பற்றி அறியமுடிகிறது.
கரிகாலன் பற்றி பரணர்(கி.மு.325-கி.மு.250) கூறும் கருத்துகள்
கரிகாலன் பற்றி பரணர் அகநானூற்றில் பல குறிப்புகளைத் தருகின்றார்.
"விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
பீடு இல் மன்னர்" (அகம்,125,16-21)
விரிந்த தலையாட்டம் கொண்ட விரைவாக ஓடும் குதிரைப்படையுடன் கூடிய பகைவருக்கு அச்சம் தரும் பெரிய வாளுடைய கரிகால் வளவன் முன்பாக நிற்க ஆற்றல் அற்றவரகளாக வாகைப்பறந்தலை என்ற ஊரில் கரிகாலன் வெற்றிபெற, அவனை எதிர்த்தொன்பது மன்னர்களும் ஒன்பது குடைகளைப் பகற்பொழுதில் விட்டுவிட்டுச் சென்றனர்.
அகநானூற்றின் (246)பாடலில் மேலும் சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.
"காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்,
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய,
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
மொய் வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே" (அகம்.246,9-14)
சினமும் பேராற்றலும்,பெரும் புகழும் வாய்த்த கரிகால் வளவன் வெண்ணிவாயில் என்னும் இடத்தில் பகையரசர்களை அவர்களின் பேரொலி எழுப்பும் வீரமுரசு போர்க்களத்தே கிடக்க, வேளிர் பதினொருவர்,இருபெரு வேந்தர்களை நிலைகெட்டுப் போகும்படி அவர்களின் படையாற்றலை அழித்தான்.அந்த நாளில் அவனின் தாய் பிறந்த அழுந்தூரில் மகிழ்ச்சி ஆர்ப்பு எழுந்தது.
கரிகாலன் கழார் என்னும் ஊரில் பெரிய சுற்றத்துடன் இருந்து புனலாட்டைக் கண்டு மகிழ்ந்த பொழுது,சிறந்த வேலைப்பாடு அமைந்த வீரக்கழல் காலில் புரள,கரிய கச்சணிந்து அடிவயிற்றில் மணியும் கட்டிக்கொண்டு, கஞ்சத்தாளம் ஒலிக்கப் புனலாடலை விரும்பி ஆடும் ஆட்டனத்தியின் அழகை விரும்பிக் காவிரியாறு அவனைக் கவர்ந்துகொண்டது.ஆட்டனத்தி ஆதி மந்தியின் கணவன் ஆவான்.கணவனை இழந்த பிறகு ஆதிமந்தியுடன் வாரிசு இல்லாமல் கரிகாலனின் ஆட்சிக்குப் பிறகு அவன் மரபு இல்லாமல் ஆகியிருக்கும்.
இதனை,
"கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தௌ¤ர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
காவிரி கொண்டு ஒளித்தாங்கு"(அகம்.376)
என்னும் பாடலால் அறியலாம்.
கரிகாலன் பற்றி கழாத்தலையார் பாடியது
"உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்"(புறம்.65)
சேரமான் பெருஞ்சேரலாதான் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தி இப்பாடலில் பதிவாகியுள்ளது.
கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் பாடியது
"நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால்வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
5 வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?"(புறம் 66)
கரிகாலனைப் பழந்தமிழ் நூல்கள் பாடியுள்ளதுடன் பிற்கால நூல்களும் பாடியுள்ளன.அவற்றுள் விக்கிரமசோழன் உலா,குலோத்துங்க சோழன் உலா,குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப் பரணி உள்ளிட்ட நூல்களில் வரும் குறிப்புகள் சிறப்பாகச் சுட்டத்தக்கன.
"தெள்ளருவிச்
சென்னிப் புலியேறு இருத்திக் கிரிதிரித்துப்
பொன்னி கரை கண்ட பூபதி" விக்கிரம சோழன் உலா
"தலையேறு
மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்
கண்கொண்ட சென்னிக் கரிகாலன்" -குலோத்துங்க சோழன் உலா
முழுகுல நதிக்கரசர் முடிகொடு வகுத்தகரை
முகில்தொட அமைத்தது அறிவோம்
இருபுறமும் ஒக்க நினது ஒருபுலி பொறித்த வட
இமகிரி திரித்தது அறிவோம்"- குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
"தொழுது மன்னரே கரைசெய் பொன்னி"
- கலிங்கத்துப் பரணி
"செண்டுகொண்டு கரிகாலன் ஒருகாலின் இமயச்
சிமயமால்வரை திரித்து அருளி,மீள அதனைப்
பண்டு நின்றபடி நிற்க இது'என்று முதுவில்
பாய்புலிக் குறிபொறித்து அது மறித்த பொழுதே"- கலிங்கத்துப் பரணி
"தத்துநீர் வரால் குறிமி வென்றதும்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொடு அறுநூறு ஆயிரம் பெறப்
பண்டு பட்டினப்பாலை கொண்டதும்"-கலிங்கத்துப்பரணி
பிற்கால நூல்களும் உரையாசிரியர்களும் கரிகாலனையும் திருமாவளவனையும் ஒன்றாகவே கருதும் போக்கைக் காணமுடிகிறது.அதுபோல் இருவரின் போர்வெற்றி,சிறப்புகளையும் மயங்கியே கூறுகின்றன.
33333333333333333
மாமன்னர் கரிகால சோழரின் கற்படிமம் காஞ்சிபுரம் ஏகம்பெரேஸ்வரர் கோவிலின் முதல் பிரகார வாசலுக்கு இடது புறம் நிறுவப்பட்டுள்ளது .இதன் காலம் அறிய இயலவில்லை.வேறு எங்கும் இதனைப்போலகரிகாலசோழரின் கற்படிமம் கிடைக்கவில்லை .இக்கற்படிமம் தமிழ் கூறும் நல்லுலகின் மாமன்னர் பெருவளத்தான், திருமாவளவன் ,கரிகால சோழரின் உண்மை உருவாக இருக்கும்.
கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர்இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன்,மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.
கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன,எனக்கூறி அவரது வரலாற்றை மறைக்க முயல்கின்றனர் பல வரலாற்று ஆசிரியர்கள்,அனால் உண்மைச்சுவடுகள் அழிவதில்லை .
சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.
ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர்.
புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு பின் சிறைக்காவலரரைக் கொன்று தப்பி,பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.
தெலுங்குச் சோட அரசர்கள் எல்லோரும் தங்களைச் சோடர்கள் எனச் சொல்லிக் கொண்டார்கள். இவர்கள் ரேநாட்டுச் சோழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர்
மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தம்மை விருத்தராஜா முத்தரைசர் என்று அழைத்துக் கொண்டார்கள். இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக் குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்-முத்தரசர் என்று கூறிக்கொண்டனர் எனக் கண்டோம் .கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்பொழுது அவனது காலைத் தீ சுட்டதால் கரிகாலன் எனப் பெயர் பெற்றான் என்று பண்டைய தமிழ் வரலாறு கூறும். இத் தமிழ் மரபைக் கங்கர்களது செப்பேடுகள் உறுதி செய்கின்றன.
கங்க அரசன் துர்விநீதனுக்கு மகன் வயிற்று மகன் (பெயரன்) ஸ்ரீ விக்ரமன் என்று ஒருவன் இருந்தான். அவனும் பின்னர் கங்க அரியணை ஏறினான். அவனும் சோழ இளவரசியை மணந்தான். அவளைக் கூறும்போது கங்கர் செப்பேடு "காவிரிக்குக் கரை கட்டிய கரிகால சோழனின் குலத்து உதித்தவள்" என்று "காரித காவேரீதீர கரிகால சோழ குலவம்ச சோழ நிருபதி புத்ரீ" எனப் புகழ்கிறது. கங்கர்கள் தம்மைக் கரிகால சோழ குலப் பெண் வழி வந்தவர்கள் என்று கூறிப் பெருமைப்படுகிறார்கள்.
கல்லணை
உலகில் கட்டப்பட்ட பழமையான நீர்பாசன அணைகளுள் ஒன்றுகல்லணை. இந்த அணை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலச் சோழன்என்னும் மன்னனால் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பெரியபாறை கற்களைக் கொண்டு மிக வலுவாக கட்டப்பட்டுள்ளது இந்த அணை.
இந்த அணை கட்டப்பட்டதன் முக்கிய நோக்கம் காவேரி அணையின்தண்ணீரை தடுத்து, விவசாய நிலங்கள்
நீர்ப்பாசன வசதிபெறச் செய்வது ஆகும்.இத்தகைய திட்டமிடலுடன் கட்டப்பட்ட இந்த அணை இன்றளவும்
வலுவானநிலையில் உள்ளது. 1080 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டு இவ்வணைகட்டப்பட்டது.
கல்லணையின் சிறப்புக்கு மற்றுமொரு காரணம் இவ்வணை கட்டபயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்
ஆகும். பெரும் பாறைகளைக் கொண்டுவந்துஒன்றன் மீது மற்றொன்றை போட்டு அவற்றை தரையில்
ஆழமாக ஊன்றச்செய்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கட்டப்படும் பல பாசன அணை கட்டுமானங்களுக்கு,கல்லணை ஒரு சிறந்த மாதிரியாக
விளங்குகிறது. ஆங்கிலேய பொறியாளரானசர். ஆர்தர் காட்டன் கொள்ளிடம் அணையைக் கட்டுவதற்கு
முன் இந்தகல்லணையை நன்றாக ஆராய்ந்த பிறகே கட்டினார்.
விரிவுரையாளர்,
வரலாற்றுத் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
யாழ்ப்பாண அரசு தொடர்பாக தோன்றிய தமிழ் இலக்கியங்கள் சோழர் வருகையுடன் கதிரமலையைத் தலைநகராகக் கொண்ட அரசின் தலைநகர் சிங்கை நகருக்கு இடம்மாறியதை சூசகமாக தெரிவிக்கின்றன. இவ் இலக்கியங்கள் தமிழகத்தில் சோழர் ஆட்சி மறைந்து ஏறத்தாழ 700 ஆண்டுகளின் பின்னர் தோன்றியிருந்தாலும் தமிழ் இராசதானி தோன்றிய வரலாற்றோடு சோழரின் வருகையை முன்னிலைப்படுத்தியிருப்பது இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் அவர்களின் வகிபாகத்தை புறக்கணித்துவிட முடியாதென்பதைக் காட்டுகின்றது.
முதலியார் இராசநாயகம் கதிரமலையை வலி. மேற்கில் உள்ள கந்தரோடை என அடையாளப்படுத்தி, அதுவே நாக நாட்டில் தோன்றிய முதலாவது தமிழ் அரசு எனவும் அவ்வரசின் தலைநகர் சிங்கை நகருக்கு இடம்மாறியதற்கு சோழர் வருகையே காரணம் எனவும் குறிப்பிடுகின்றார். இவரின் கருத்தை ஆமோதிக்கும் சுவாமி ஞானப்பிரகாசர் இவ்வரசின் தோற்ற காலத்தை கி.பி. 8ஆம் நூற்றாண்டு என குறிப்பிடுகின்றார்.
ஏறத்தாழ இதே காலப்பகுதியில் கதிர மலையிலிருந்து ஆட்சி புரிந்த உக்கிரசிங்க மன்னன் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலை தோற்றுவித்த சோழ இளவரசியான மாருதப்புரவல்லியை பட்டத்தரசியாக்கி அக்கோயிலின் வளர்ச்சிக்கு பல பணிகளை செய்தான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.
யாழ்ப்பாண வைபவமாலையில் இடம்பெறும் பல வரலாற்றுச் சம்பவங்கள் பாளி இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள ஐதீகங்களின் மாற்று வடிவமாக உள்ளன. இருப்பினும் யாழ்ப்பாணத்தின் தொன்மை பற்றி இவ்விரு நூல்களிலும் கூறப்படும் வரலாற்றுச் செய்திகளில் சில உண்மைகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு வலிகாமத்தின் மேற்கு பகுதியில் கிடைத்து வரும் தொல்லியல் சான்றுகள் முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றன.
1917 இல் கந்தரோடையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட போல் பீரீஸ் அநுராதபுரத்தை அடுத்து இலங்கையில் தோன்றிய புராதன நகரமாகக் கந்தரோடையைக் குறிப்பிடுவது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அதன் காரணமாகத்தான் பாளி நூல்களில் இலங்கையின் தனித்துவம் வாய்ந்த பிரதேசமாக யாழ்ப்பாணத்தை அடையாளப்படுத்தி கூறுகின்றன என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும். இது பாளி இலக்கியங்களில் நாகதீபம் எனவும், வல்லிபுரத்தில் கிடைத்த பொற்சாசனத்தில் நாகதீவ எனவும், தமிழகத்தில் எழுந்த இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் நாகநாடு எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இங்கு அநுராதபுரத்திற்கு சமமான காலத்தில் இருந்து சிற்றரசர்களின் ஆட்சி இருந்ததை ஆனைக் கோட்டை, கந்தரோடையில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன. இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் பாளி இலக்கியங்கள் இங்கு ஆட்சியில் இருந்த நாக அரசு பற்றிக் கூறுகின்றன. கி.பி 1ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம் ஒன்று இங்கு ஆட்சி புரிந்த நாக மன்னன் தீபராஜா என்ற விருதுப் பெயருடன் ஆட்சி புரிந்ததாக கூறுகின்றது.
இவ்வாறு தனியொரு பிராந்தியமாக சிற்றரசின் ஆட்சிக்குட்பட்ட யாழ்ப்பாணத்தில் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆகம மரபிற்கு உட்படாத வழிபாட்டு மரபுகளும் தமிழ்ப் பௌத்தமும் நிலவியதாக தெரிகின்றது. ஆயினும் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கமும் பல்லவ அரசின் எழுச்சியும் யாழ்ப்பாணத்தில் அதிலும் சிறப்பாக வட இலங்கையில் பல்லவர் கால அரசியல், சமய ஆதிக்கம் நிலவக் காரணமாகியது.
அக்காலத்தில் இருந்தே ஆகம மரபில் கற்களைக் கொண்டு இந்து ஆலயங்கள் அமைக்கும் மரபு இலங்கையில் தோற்றம் பெற்றது. இதைத் தமிழகத்திற்கு அடுத்த நிலையில் இலங்கையில் இருந்த திருக்கோணேஸ்வரமும், திருக்கேதீஸ்வரமும் நாயன்மார்களால் போற்றிப்பாடக் காரணமாகியது. இக்காலத்தில் இருந்து வட இலங்கை தமிழகப் படையெடுப்பாளருக்கும் தென்னிலங்கையில் அரசுரிமையை இழந்த சிங்கள மன்னர்களிற்கும் பாதுகாப்பு வழங்கும் இடமாக மாறியது. கி.பி 7ஆம் நூற்றாண்டில் அரசுரிமையை இழந்த மாணா என்ற சிங்கள மன்னன் அநுராதபுர மன்னனுக்கு பயந்து நாகதீபத்தில் அடைக்கலம் பெற்றான் என சூளவம்சம் கூறுகின்றது.
இதே காலப்பகுதியில் பல்லவ மன்னன் நாக நாட்டு இளவரசியை மணந்தான் என பல்லவச் செப்பேடு கூறுகிறது. கி.பி 8 ஆம் நூற்றாண்டில் அநுராதபுர அரசிற்கு எதிராக நாகதீபத்தில் இருந்து ஸ்ரீநாக என்ற தலைவன் படையெடுத்த செய்தி கூறப்படுகின்றது. கி.பி 835 இல் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறஸ்ரீவல்லபன் வடஇலங்கையில் வந்திறங்கிய போது இங்கிருந்த தமிழர்கள் அவனுடன் இணைந்து அநுராதபுர அரசை வெற்றி கொண்டதாக சூளவம்சம் கூறுகின்றது. இச்சம்பவங்கள் எல்லாம் நாகதீபம் அநுராதபுர நாகரிக வட்டத்திற்குள் உட்படாது தனியொரு ஆதிக்கம் நிறைந்த பிராந்தியமாக திகழ்ந்ததைக் காட்டுகின்றது.
இவ்வாறான காலப் பகுதியில் தான் சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழன் கி.பி 10 ஆம் நூற்றாண்டளவில் வட இலங்கை மீது படையெடுத்தான். இப்படையெடுப்பு நாகதீபத்தில் நடந்ததாக கூறும் சூளவம்சம் இப்படையெடுப்பால் அநுராதபுர அரசிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறுகின்றது.
அதேவேளை இப்படையெடுப்பை பெரும் வெற்றியாக சோழச் சாசனங்கள் கூறுகின்றன. இதற்காக முதலாம் பராந்தக சோழன் ஈழமும் மதுரையும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் என்ற விருதுப் பெயரைப் பெற்றதாக அவன் காலக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. வரலாற்று அறிஞர்கள் சோழரது ஆதிக்கம் அநுராதபுரத்தில் ஏற்பட முன்னர் நாகதீபத்தில் ஏற்பட்டதையே கூறுகின்றன. இதற்கு சோழர் ஆட்சி தொடர்பான கோயில்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், அதிகளவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டதை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
இங்கே கதிரமலை அரசின் வீழ்ச்சியை சோழர் வருகையுடன் தொடர்புபடுத்தும் தமிழ் இலக்கியங்கள் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் தோற்றத்தை சோழ வம்சத்து அரசி மாருதப்புரவல்லியுடன் தொடர்புபடுத்துவதை நோக்கலாம். சோழர் ஆட்சியில் மாவிட்டபுரம் அமைந்த வலிகாமம் அவர்களின் அரசியல், பண்பாட்டு செல்வாக்கிற்கு உட்பட்டதாகவும், இலக்கியங்களில் ஒன்றான மகாவம்சம் தமிழக யாழ்ப்பாண (நாகதீபம்) உறவில் இப்பிராந்தியத்தில் உள்ள ஜம்புகோளத் துறைமுகம் பெற்ற வரலாற்றுச் சிறப்பை குறிப்பிடுகின்றது.
இத் துறைமுகம் அமைந்த இடத்தைச் சிலர் தற்காலத் திருவடிநிலை எனவும், வேறு சிலர் காங்கேசன்துறை எனவும் குறிப்பிடுகின்றனர். ஆயினும் இவ்விரு இடங்களின் அமைவிடம் கடல் வழித் தொடர்பிற்கு சாதகமாக தமிழகத்திற்கு அண்மையில் அமைந்திருந்தமை தமிழக பண்பாடு முதலில் இங்கு பரவுவதற்குச் சாதகமாக அமைந்தது.
சோழ சாசனம் ஒன்று வட இலங்கையில் வலிகாமத்தை வெற்றி கொண்டு அங்கிருந்து பெருமளவு யானைகளை தமிழகம் கொண்டு சென்றதாகக் கூறுகின்றது. மாவிட்டபுரம் அமைந்த சுற்றாடலில் காணப்படும் வளவர்கோன் பள்ளம் காங்கேசன்துறை சோழக் கல்வெட்டுக்களில் அதிலும் குறிப்பாக பராந்தக சோழன் காலக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்படும் பெயராகும். இவற்றை நோக்கும் போது மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலின் தோற்றத்தை சோழருடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தெரிகின்றது.
ஆயினும் கி.பி16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையால் யாழ்ப்பாணத்தில் 500 ற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டன. அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் ஒன்றாக இருக்கலாம்.
தற்போது நாம் காணும் கந்தசுவாமி கோயில் 1782 இல் குமாரசாமிக் குருக்களால் கட்டப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் மத சுதந்திரம் அழிக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாலயமும் மீளக் கட்டப்பட்டதைக் காட்டுகின்றது. ஆயினும் இதற்கு தொன்மையான வரலாறு இருக்கலாம் என்பதை நாகதீபம் பற்றிய வரலாற்றுச் சம்பவங்கள் தெரிவிக்கின்றன.
222222
தமிழக அரசர்களின் வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் அறிவதற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் துணைபுகின்றன.சங்க நூல்களில் மூவேந்தர்கள் பற்றியும் (சேரர்கள்20, சோழர்கள் 18,பாண்டியர்கள் 14) குறுநில மன்னர்கள், படைத்தலைவர்கள் (ஏறத்தாழ 150 பேர்) பற்றியும் அயல் நிலங்களில் வாழ்ந்த அரசர்கள் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன (மேற்கோள்,சங்க கால மன்னர்களின் காலநிலை, தொகுதி1,ப.1). புலவர்கள் அகத்துறை, புறத்துறை சார்ந்த பாடல்களை இயற்றும்பொழுது உவமை வழியாகவும்,சில புலவர்கள் நேரடியாகவும் பண்டைத் தமிழக அரசர்கள் பற்றியும்,பிற தேயத்து அரசர்கள் பற்றியும் குறிப்புகளைத் தந்துள்ளனர்.இவ்வாறு குறிப்புகள் காணப்பட்டாலும் இன்னாருக்குப் பின்னர் இன்னார் அரசாண்டார்கள் என்று உறுதிபடக் கூறுவதற்குச் சான்றுகள் குறைவாக உள்ளன. அவ்வாறு காணப்படும் சான்றுகளைக் கொண்டு முடிந்த முடிபாக வரலாற்றைப் பதிய முடியாமல் அறிஞருலகம் கருத்துவேறுபட்டு நிற்கின்றது.அவ்வகையில் கரிகாற் சோழன் வரலாறும் அறிஞர்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டைக் கொண்டுள்ளது.
கரிகாலன் தந்தை
கரிகாலன் வரலாற்றை ஆராய்வதற்கு நமக்குப் புறநானூறு,அகநானூறு, பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை,சிலப்பதிகாரம்,மணிமேகலை உள்ளிட்ட நூல்கள் பெருந்துணைபுரிகின்றன. இவற்றுள் பொருநராற்றுப்படையில் இடம்பெறும் அரசன் கரிகாலன் எனவும் பட்டினப் பாலையில் இடம்பெறும் அரசன் திருமாவளவன் எனவும் அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. இவ்வாறு குறிப்பிடப்படும் இருவரும் ஒருவரா,வேறானவர்களா எனவும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு.மயிலை சீனி.வேங்கடசாமி,தி.வை.சதாசிவ பண்டாரத்தார், புலவர் கோவிந்தன்,அறிஞர் பே.க.வேலாயுதம் உள்ளிட்டவர்களின் கருத்தை எடுத்துரைத்துக் கரிகாலன் வரலாற்றை இக்கட்டுரை ஆராய முனைகிறது.
கரிகாலனின் சிறப்பை நாம் முழுமையாக அறிவதற்குக் கலிங்கத்தை ஆண்ட காரவேலனின் கல்வெட்டு நமக்கு உதவுகிறது.காரவேலன்(கி.மு 176-163) என்பவன் கலிங்கத்தை 13 ஆண்டுகள் ஆண்டவன்.அவன் 11 ஆம் ஆட்சியாண்டில்(அதாவது கி.மு.165 இல்) தமிழகத்தை வென்றுள்ளான்.அவனின் அத்திகும்பா கல்வெட்டில்" இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியத் "திரமிள சங்காத்தம்"(தமிழர் கூட்டணியை) உடைத்தேன் என்று குறிப்பு உள்ளது.இதனைப் பொருநராற்றுப்படையாலும் உணரலாம்.
முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில்
"முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல"
என மூவேந்தரும் கூடியிருந்த காட்சி பேசப்படுகிறது.எனவே கரிகாலன் அவையில் இக்கூட்டணி உருவானது என்று உணரலாம்.
கலிங்கநாட்டிற்கு மேற்கே வடுகர் நாட்டைத் தமிழர்கள் ஆண்டுள்ளனர்.113 ஆண்டுகள் கூட்டணியாக இருந்து தமிழர்கள் வடபுலம்வரை ஆண்டதால் கலிங்கர்களால் தமிழர்களை வெல்லமுடியவில்லை.பின்னாளில் இந்தப் பகுதியை இரேணாட்டுச் சோழர்கள் ஆண்டனர்.
கி.மு.278 இல் வடக்கிலிருந்து ஒரு படையெடுப்புத் தமிழகத்தின் மேல் நடக்கிறது(கி.மு.300 இல் மௌரியர் படையெடுப்பு நடந்துள்ளதையும் இங்குக் கவனிக்க வேண்டும். சந்திரகுப்த மௌரியன் எடுத்த மோவூர் படையெடுப்பு இதுவாகும்)கி.மு.278 இல் சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரன் என்பவன் படையெடுத்தபொழுது தமிழர்கள் ஒன்றுகூடி எதிர்த்தனர்.வடக்கே 16 அரசர்களை எதிர்த்து, பாடலிபுத்திரம் திரும்பினான்.சந்திரகுப்தன் படையெடுப்பு வடுகர் நாட்டின் வழியாக நடந்தபொழுது வடுகர்களும் படையுடன் சேர்ந்து தமிழகம் வந்தனர். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க வடுகர்நாட்டை வென்று 113 ஆண்டுகள் தமிழர் கூட்டணி ஆண்டது.இவ்வாறு தமிழர் கூட்டணியான திரமிள சங்கார்த்தம் உருவாக அடிப்படைக் காரணமாக விளங்கியவன் கரிகாலனே ஆவான்(கி.மு.278).இவன்தான் கூட்டணிக்கு முதன்மை தந்திருக்க வேண்டும்.ஏனெனில் வடநாட்டுப் படையெடுப்பால் முதலில் பாதிக்கப்படுவது சோழநாடே ஆகும்.எனவே சோழ அரசன் கரிகாலன் தலைமையில் படை அமைக்கப்பட்டிருக் கலாம்.
கரிகாலன் காலத்தில் சோழநாட்டுக்கு இரண்டு தலைநகரங்கள் இருந்துள்ளன.உறையூரைத் தலைநகராகக்கொண்டு தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் அரசாண்டான். கழுமலத்தைத் (சீர்காழி) தலைநகராகக் கொண்டு கரிகாலனின் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி அரசாண்டான்.இளஞ்சேட்சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தான். உடன் பிறப்பு இவனுக்கு இல்லை. இரும்பிடர்த்தலையார் என்ற புலவரால் வளர்க்கப் பெற்றவன். பொருநராற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் இவன்.இவன் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகும்.கழுமலத்திலிருந்து பின்னாளில் நெய்தலங்கானல் தலைநகரானது. நெய்தலங்கானல் என்பது இன்று பூம்புகாருக்கு மேற்கே ஐந்துகல் தொலைவில் நெய்தல்வாசல் எனப்படுகிறது.
திருமாவளவன் நெய்தலங்கானத்திலிருந்து ஆட்சி செய்த இளஞ்சேட் சென்னியின் மகனாவான். மாவளத்தான் என்று இளமையில் அழைக்கப்பட்டான்.பின்னர்த் திருமாவளவன் எனப்பட்டான்.திருமாவளவனின் அண்ணன் நலங்கிள்ளியாவான்.நலங்கிள்ளிக்குப் பிறகு அவன் மகன் நலங்கிள்ளிசேட்சென்னி என்பவன் சில காலம் அரசாண்டான்.பின்னர் இறந்துபட்டான். அதன் பிறகு திருமாவளவன் அரசேறினான். உடன் இருந்த மன்னர்களை வென்றதுடன் வடநாட்டு மன்னரையும் இலங்கை மன்னரையும் இவன் வென்றான்.காவிரிக்குக் கரையமைத்ததும், உறையூரிலிருந்து தலைநகரைப் பூம்புகாருக்கு மாற்றியதும் இவனே. காவிரியை இவன் கி.மு.11 ஆம் ஆண்டு பார்வையிட்டான் எனப் பே.க.வேலாயுதம் குறிப்பார்(பக்கம் 12).பட்டினப்பாலை இவன் மீது பாடப்பட்ட நூலாகும்.அதனைப் பாடிய கடியலூர் உருத்திருங்கண்ணனார் அவர்களுக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான். இவனுக்குக் கரிகாலன் என்ற பெயரும் உண்டு என்பதை மணிமேகலை வழியாக அறியமுடிகிறது.
திருமாவளவனின் காலத்தில் தொண்டைநாட்டை ஆண்டவன் தொண்டைமான் இளந்திரையன் ஆவான்.திருமாவளவனின் மகன் செங்கணான் ஆவான். இவன் காலத்தில் சேரநாட்டை ஆண்டவன் கணைக்கால் இரும்பொறை.சோழநாட்டின் மேல் படையெடுத்துத் தோற்றவன். செங்கணானின் படை வலிமை பற்றி குறிப்பிடும் அயல்நாட்டுப் பயணியான பிளைனி,"இந்த நாட்டில் மற்றொரு நகரமும் இருக்கிறது.அதன் பெயர் கதுமுலா என்பதாகும்.அந்நகரம் கடற்கரையில் உள்ள பட்டினமாக விளங்குவதோடு,பல நாட்டு மக்கள் வணிகம் செய்யும் இடமாகவும் விளங்குகிறது.மற்றும்,ஐந்து நதிகள் ஒன்றுகூடிக் கடலில் விழும் இடத்தில் உள்ளது.அதன் அரசினிடம் வலிமை வாய்ந்த 1600 யானைப் படைகள் உள்ளன.150 ஆயிரம் காலாட்படைகளும்,5000 குதிரைகளும் உள்ளன" என்று குறிப்பிடும் பிளைனியின் காலம் கி.பி.23-79 ஆகும்.இங்குக் குறிப்பிடப்படும் கதுமலா என்பது கழுமலமாகிய சீர்காழியைக் குறிக்கும்.
வலிமை வாய்ந்த படையுடைய செங்கணானுடன் கழுமலம் என்ற ஊரில் கணைக்கால் இரும்பொறை பொருது தோற்றவன்.
கோப்பெருஞ்சோழனுக்கு இரு மகன் இருந்தனர்.மூத்தவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்;இளையவன் இளஞ்சேட் சென்னி.
காரவேலன் கி.மு 165 இல் படையெடுத்து வந்தான்.11 ஆண்டுகள் படைதிரட்டித் தமிழகத்தை நோக்கி வந்தான். திருக்கோவிலூருக்கு அருகில் காரவேலன் படையும்,குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் படையும் பொருதன.திருமுடிக்காரியின் முள்ளூர்மலையில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஒளிந்தான்.உறையூர் காரவேலன் வசமானது.அங்கிருந்து பெரும்படையுடன் மதுரைக்கு வந்தான்.
காரவேலன் படை மதுரை சென்று திரும்பியபொழுது சோழர் படைதிருப்பித் தாக்கக் காரவேலன் படை தோற்றது.காரவேலன் படையினர் தோற்றதுடன் பாழி என்ற ஊரில் வீரர்கள் சிலர் ஒளிந்துகொண்டனர்."குடித்தம் ஆதலின் பாழி" என்னும் குறிப்பு இதனை உறுதிப் படுத்தும்.
உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தவன்.எனவே தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தி என்ற தொடர் உறுதிப்படுத்தும்.கரிகாலன் பொறுப்பில் வடுகர் நாடு ஆளப்பட்டது.இவன் ஆணை பெற்று இரேணாட்டுச்சோழர்கள் ஆட்சி செய்தனர். இரேணாட்டுச் சோழர்கள் என்பவர்கள் கரிகாலன் மரபினர் என்பர்.
கரிகாலனின் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி ஆவான். இவன் கழுமலத்தைத் (சீர்காழி) தலைநகராகக் கொண்டவன்.இவன் காலத்தில் சேரநாட்டில் உதியஞ்சேரலும், அந்துவஞ்சேரலும் ஆட்சிபுரிந்துள்ளனர்.மேலும் பாண்டியநாட்டில் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி ஆட்சி செய்தவன்.வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியுள்ளார். உறையூரிலிருந்து ஆட்சி செய்தவன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியாவான்.உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தவன்.கரிகாலனின் காலம் புலவர் மாமூலனார் காலமான கி.மு.325- கி.மு.278 ஆகும்.இவன் மீது சேரன் பெருஞ்சேரலாதனும் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் பதினொரு வேளிரும் கூடிப் படையெடுத்தனர். வெண்ணியில் போர் நடந்தது.சேரன் புறப்புண் நாணி உயிர்விட்டான். பாண்டியன் கொல்லப்பட்டான்.
கரிகாலனைப் பாண்டிய நாட்டுக் கருங்குளவாதனார் பாடியுள்ளார்.அவர் பிறந்த கருங்குளம், "கரிகால சோழ நல்லூரான கருங்குளம்" எனக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.எனவே கருங்குளம் உள்ளிட்ட பகுதிகள் கரிகாலனுக்கு உரிமையுடையதாக இருந்தது.
கரிகாலனுக்கு ஆண் வாரிசில்லை.ஒரே மகள் ஆதி மந்தி ஆட்டனத்தியை மணந்தாள்.எனவே கரிகாலனுக்குப் பிறகு அவன் மரபு இல்லாமல் போனது என்று அறிஞர் பே.க.வேலாயுதம் குறிப்பர்(சங்க கால மன்னர் வரிசை)
கரிகாலனைப் பொருநராற்றுப்படை ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் பின்வருமாறு புகழ்ந்துரைக்கிறார்.
வென்ற வேலினையும்,அழகிய தேர்களையும் உடைய இளஞ்சேட்சென்னியின் மகன் எனவும் முருகனது சீற்றத்தைப் போலச் சீற்றத்தையும்,பகைவருக்கு அச்சத்தையும் தரும் தலைவன் கரிகாலன்.தாயின் வயிற்றிலிருக்கும்பொழுதே அரச உரிமையைப் பெற்றவன்.தன் பகைவர்கள் தன் வலியறிந்து ஏவல் செய்யவும்,அவ்வாறு ஏவல் செய்ய மறுத்த பகைவர்களின் நாடுகள் கவலைகொள்ளவும் அரசாட்சி செய்தவன்.கடல்மேல் தோன்றும் கதிரவன்ஒளிவீசியவாறு விண்ணில் உலா வருவது போல் பிறந்த நாள்தொட்டு தம் ஆட்சியைச் சிறப்புறச்செய்தவன். யாளியின் குட்டி,பால் உண்டலை மறவாத இளம் பருவத்திலேயே ஆண் யானையைக் கொன்றதுபோல்,பனம்பூவை அணிந்த சேரனையும்,வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனையும் வெண்ணிப் போரில் வென்றவன்,ஆத்திமாலை அணிந்தவன்,கரிகால் பெயருடையவன் என்று குறிப்பிடுகிறது.
"வென் வேல்
உருவப் பல்தேர் இளையோன் சிறுவன், 130
முருகற் சீற்றத்து உரு கெழு குருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப,
பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி, 135
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன்
நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,
ஆளி நல் மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி 140
முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென,
தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு,
இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை
அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்,
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த 145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள்,
கண் ஆர் கண்ணி, கரிகால் வளவன்"(பொருநர்.129-148)
என்னும் பாடலடிகள் கரிகாலனின் வரலாறு உணர்த்துகின்றன.
கரிகாலன் பற்றி மாமூலனார்(கி.மு.325-250) பாடிய அகநானூற்றுப்பாடலில்
"கனவ ஒண் படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென" (அகம் 55,9-13)
(ஒளிபொருந்திய படையுடைய கரிகாலனுடன் வெண்ணிப் போர்க்களத்தில் போரிட்டபோது புறப்புண்ணிற்குப் பெரிதும் நாணிய சேரலாதன் தான் தோல்வியடைந்த போர்க்களத்திலேயே வாள்ஏந்திய கையுடன் உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்தான் என்ற குறிப்பு காணப்படுகிறது). எனவே கரிகாலனின் வெண்ணிப்போர் பற்றி அறியமுடிகிறது.
கரிகாலன் பற்றி பரணர்(கி.மு.325-கி.மு.250) கூறும் கருத்துகள்
கரிகாலன் பற்றி பரணர் அகநானூற்றில் பல குறிப்புகளைத் தருகின்றார்.
"விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
பீடு இல் மன்னர்" (அகம்,125,16-21)
விரிந்த தலையாட்டம் கொண்ட விரைவாக ஓடும் குதிரைப்படையுடன் கூடிய பகைவருக்கு அச்சம் தரும் பெரிய வாளுடைய கரிகால் வளவன் முன்பாக நிற்க ஆற்றல் அற்றவரகளாக வாகைப்பறந்தலை என்ற ஊரில் கரிகாலன் வெற்றிபெற, அவனை எதிர்த்தொன்பது மன்னர்களும் ஒன்பது குடைகளைப் பகற்பொழுதில் விட்டுவிட்டுச் சென்றனர்.
அகநானூற்றின் (246)பாடலில் மேலும் சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.
"காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்,
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய,
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
மொய் வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே" (அகம்.246,9-14)
சினமும் பேராற்றலும்,பெரும் புகழும் வாய்த்த கரிகால் வளவன் வெண்ணிவாயில் என்னும் இடத்தில் பகையரசர்களை அவர்களின் பேரொலி எழுப்பும் வீரமுரசு போர்க்களத்தே கிடக்க, வேளிர் பதினொருவர்,இருபெரு வேந்தர்களை நிலைகெட்டுப் போகும்படி அவர்களின் படையாற்றலை அழித்தான்.அந்த நாளில் அவனின் தாய் பிறந்த அழுந்தூரில் மகிழ்ச்சி ஆர்ப்பு எழுந்தது.
கரிகாலன் கழார் என்னும் ஊரில் பெரிய சுற்றத்துடன் இருந்து புனலாட்டைக் கண்டு மகிழ்ந்த பொழுது,சிறந்த வேலைப்பாடு அமைந்த வீரக்கழல் காலில் புரள,கரிய கச்சணிந்து அடிவயிற்றில் மணியும் கட்டிக்கொண்டு, கஞ்சத்தாளம் ஒலிக்கப் புனலாடலை விரும்பி ஆடும் ஆட்டனத்தியின் அழகை விரும்பிக் காவிரியாறு அவனைக் கவர்ந்துகொண்டது.ஆட்டனத்தி ஆதி மந்தியின் கணவன் ஆவான்.கணவனை இழந்த பிறகு ஆதிமந்தியுடன் வாரிசு இல்லாமல் கரிகாலனின் ஆட்சிக்குப் பிறகு அவன் மரபு இல்லாமல் ஆகியிருக்கும்.
இதனை,
"கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தௌ¤ர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
காவிரி கொண்டு ஒளித்தாங்கு"(அகம்.376)
என்னும் பாடலால் அறியலாம்.
கரிகாலன் பற்றி கழாத்தலையார் பாடியது
"உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்"(புறம்.65)
சேரமான் பெருஞ்சேரலாதான் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தி இப்பாடலில் பதிவாகியுள்ளது.
கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் பாடியது
"நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால்வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
5 வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?"(புறம் 66)
கரிகாலனைப் பழந்தமிழ் நூல்கள் பாடியுள்ளதுடன் பிற்கால நூல்களும் பாடியுள்ளன.அவற்றுள் விக்கிரமசோழன் உலா,குலோத்துங்க சோழன் உலா,குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப் பரணி உள்ளிட்ட நூல்களில் வரும் குறிப்புகள் சிறப்பாகச் சுட்டத்தக்கன.
"தெள்ளருவிச்
சென்னிப் புலியேறு இருத்திக் கிரிதிரித்துப்
பொன்னி கரை கண்ட பூபதி" விக்கிரம சோழன் உலா
"தலையேறு
மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்
கண்கொண்ட சென்னிக் கரிகாலன்" -குலோத்துங்க சோழன் உலா
முழுகுல நதிக்கரசர் முடிகொடு வகுத்தகரை
முகில்தொட அமைத்தது அறிவோம்
இருபுறமும் ஒக்க நினது ஒருபுலி பொறித்த வட
இமகிரி திரித்தது அறிவோம்"- குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
"தொழுது மன்னரே கரைசெய் பொன்னி"
- கலிங்கத்துப் பரணி
"செண்டுகொண்டு கரிகாலன் ஒருகாலின் இமயச்
சிமயமால்வரை திரித்து அருளி,மீள அதனைப்
பண்டு நின்றபடி நிற்க இது'என்று முதுவில்
பாய்புலிக் குறிபொறித்து அது மறித்த பொழுதே"- கலிங்கத்துப் பரணி
"தத்துநீர் வரால் குறிமி வென்றதும்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொடு அறுநூறு ஆயிரம் பெறப்
பண்டு பட்டினப்பாலை கொண்டதும்"-கலிங்கத்துப்பரணி
பிற்கால நூல்களும் உரையாசிரியர்களும் கரிகாலனையும் திருமாவளவனையும் ஒன்றாகவே கருதும் போக்கைக் காணமுடிகிறது.அதுபோல் இருவரின் போர்வெற்றி,சிறப்புகளையும் மயங்கியே கூறுகின்றன.
33333333333333333
மாமன்னர் கரிகால சோழரின் கற்படிமம் காஞ்சிபுரம் ஏகம்பெரேஸ்வரர் கோவிலின் முதல் பிரகார வாசலுக்கு இடது புறம் நிறுவப்பட்டுள்ளது .இதன் காலம் அறிய இயலவில்லை.வேறு எங்கும் இதனைப்போலகரிகாலசோழரின் கற்படிமம் கிடைக்கவில்லை .இக்கற்படிமம் தமிழ் கூறும் நல்லுலகின் மாமன்னர் பெருவளத்தான், திருமாவளவன் ,கரிகால சோழரின் உண்மை உருவாக இருக்கும்.
கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர்இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன்,மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.
கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன,எனக்கூறி அவரது வரலாற்றை மறைக்க முயல்கின்றனர் பல வரலாற்று ஆசிரியர்கள்,அனால் உண்மைச்சுவடுகள் அழிவதில்லை .
சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.
ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர்.
புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு பின் சிறைக்காவலரரைக் கொன்று தப்பி,பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.
தெலுங்குச் சோட அரசர்கள் எல்லோரும் தங்களைச் சோடர்கள் எனச் சொல்லிக் கொண்டார்கள். இவர்கள் ரேநாட்டுச் சோழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர்
மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தம்மை விருத்தராஜா முத்தரைசர் என்று அழைத்துக் கொண்டார்கள். இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக் குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்-முத்தரசர் என்று கூறிக்கொண்டனர் எனக் கண்டோம் .கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்பொழுது அவனது காலைத் தீ சுட்டதால் கரிகாலன் எனப் பெயர் பெற்றான் என்று பண்டைய தமிழ் வரலாறு கூறும். இத் தமிழ் மரபைக் கங்கர்களது செப்பேடுகள் உறுதி செய்கின்றன.
கங்க அரசன் துர்விநீதனுக்கு மகன் வயிற்று மகன் (பெயரன்) ஸ்ரீ விக்ரமன் என்று ஒருவன் இருந்தான். அவனும் பின்னர் கங்க அரியணை ஏறினான். அவனும் சோழ இளவரசியை மணந்தான். அவளைக் கூறும்போது கங்கர் செப்பேடு "காவிரிக்குக் கரை கட்டிய கரிகால சோழனின் குலத்து உதித்தவள்" என்று "காரித காவேரீதீர கரிகால சோழ குலவம்ச சோழ நிருபதி புத்ரீ" எனப் புகழ்கிறது. கங்கர்கள் தம்மைக் கரிகால சோழ குலப் பெண் வழி வந்தவர்கள் என்று கூறிப் பெருமைப்படுகிறார்கள்.
கல்லணை
உலகில் கட்டப்பட்ட பழமையான நீர்பாசன அணைகளுள் ஒன்றுகல்லணை. இந்த அணை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலச் சோழன்என்னும் மன்னனால் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பெரியபாறை கற்களைக் கொண்டு மிக வலுவாக கட்டப்பட்டுள்ளது இந்த அணை.
இந்த அணை கட்டப்பட்டதன் முக்கிய நோக்கம் காவேரி அணையின்தண்ணீரை தடுத்து, விவசாய நிலங்கள்
நீர்ப்பாசன வசதிபெறச் செய்வது ஆகும்.இத்தகைய திட்டமிடலுடன் கட்டப்பட்ட இந்த அணை இன்றளவும்
வலுவானநிலையில் உள்ளது. 1080 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டு இவ்வணைகட்டப்பட்டது.
கல்லணையின் சிறப்புக்கு மற்றுமொரு காரணம் இவ்வணை கட்டபயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்
ஆகும். பெரும் பாறைகளைக் கொண்டுவந்துஒன்றன் மீது மற்றொன்றை போட்டு அவற்றை தரையில்
ஆழமாக ஊன்றச்செய்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கட்டப்படும் பல பாசன அணை கட்டுமானங்களுக்கு,கல்லணை ஒரு சிறந்த மாதிரியாக
விளங்குகிறது. ஆங்கிலேய பொறியாளரானசர். ஆர்தர் காட்டன் கொள்ளிடம் அணையைக் கட்டுவதற்கு
முன் இந்தகல்லணையை நன்றாக ஆராய்ந்த பிறகே கட்டினார்.