16. விக்கிரம சோழன் (கி.பி.1118-1136)
கி.பி.1118இல் இளவரசுப் பட்டமேற்ற முதற்குலோத்துங்கனின் மகனான விக்கிரமசோழன், ஏறத்தாழ கி.பி.1120இல் தன் தந்தையின் மறைவுக்குப் பின்பு பரகேசரி என்ற பட்டத்துடன் பேரரசனாக முடி சூடிக்கொண்டான். வேங்கி நாடும், கங்கபாடியும் இவனது ஆளுகையின்கீழ் வந்தன. சிறந்த நல்லாட்சி செய்த
இப்பெருவேந்தன், தில்லைத்திருக்கோயில் திருப்பணிகள் பல புரிந்து பெரும்புகழ் எய்தினான். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இவனது புகழை 'விக்கிரம சோழனுலா' எனும் நூலாகப்
பாடியுள்ளார்.
17. இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி.1133-1150)
கி.பி.1133இல் இளவரசுப் பட்டமேற்ற இரண்டாம் குலோத்துங்கன் விக்கிரம சோழனின் மகனாவான். கி.பி.1135இல் விக்கிரமசோழன் இறந்தபிறகு பேரரசனானான். இவனது ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க வெளிநாட்டுப் போர்கள் ஏற்படவில்லை. சோழநாடு வளமோடும், அமைதியோடும்
திகழ்ந்தது. அரசன் தில்லைப்பெருங்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்து புகழ்பெற்றான். பல்கலைப் புலமை பெற்ற இவ்வேந்தன், எல்லாச் சமயங்களிடத்தும் அன்புடன் திகழ்ந்தான். இவனது மதியமைச்சராகத் திகழ்ந்த சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணத்தையும், அவைக்களப்புலவரான ஒட்டக்கூத்தர் குலோத்துங்கசோழன் உலா எனும் நூலையும் எழுதி,
சமயத்திற்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்தனர். கி.பி.1150இல் மறைந்த இப்பெருவேந்தனுக்கு 'அநபாயன்' என்ற சிறப்புப்பெயர் ஒன்றுண்டு. இரண்டாம் குலோத்துங்கனைத் தம் உரிமைத் திருமகனாக அவனுடைய தகப்பனார் விக்கிரம சோழன் கி.பி. 1133ம் ஆண்டு மே மாதத்திற்கும் ஜூன் இடையில் முடிவு செய்திருக்க வேண்டும். இந்தத் தேதி தான் அவனுடைய ஆட்சியின் தொடக்கமாக அவன் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு விக்கிரம சோழனின் ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது. அவனுடைய கல்வெட்டுக்களின் மெய்க்கீர்த்திகளில் பலவகை வாசகங்கள் உள்ளன.
சிதம்பரத்தில் மன்னனின் பணிகள்
ஒரு கல்வெட்டில், 'தில்லை நகருக்கு ஒளியூட்டும் வகையில் தன் முடியினை அணிந்து கொண்ட அரசன்' என்று இம்மன்னன் புகழப்படுகிறான். 'இரண்டாம் குலோத்துங்கன்' தில்லையம்பலத்தில் முடிசூட்டிக் கொண்டான் என்று இது பொருள்படக்கூடும். அல்லது இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சியில் தில்லை மாநகரம் புதுக்கியும் விரித்தும் அழகுபடுத்தப்பட்டது என்பதுவும் பொருளாக இருக்கலாம்.
தில்லைத் திருப்பணி தேவர்கள் இருக்கின்ற வீதிகளே கண்டு நாணுமாறு நாற்பெருந்தெருக்கள் அமைத்தும் பற்பல மண்டபங்கள் கட்டுவித்தும் அந்நகரைச் சிறப்பித்தான் குலோத்துங்கன் என குலோத்துங்கன் உலாவில் கூத்தர் பாடுகின்றார். மேலும் தில்லையில் குலோத்துங்கன் செய்துவித்த பணிகளை பின்வருமாறு கூறுகின்றார்.
சிற்றம்பலத்தை பொன்னாலும் பற்பல மணிகளாலும் அலங்கரித்தான். பேரம்பலத்தையும் உள் கோபுரத்தையும் பொன் மாமேரு போலப் பொன் மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்கள் எடுப்பித்தான். உமா தேவியார் தாம் பிறந்த இமய வெற்பை மறக்கும் படி சிவகாம கோட்டம் அமைத்தான். அவ்வம்மையார் விழா நாளில் உலா வருவதற்குப் பொன்னாலும் மணியாலும் அழகுறுத்தப் பெற்ற தேரொன்று செய்தளித்தான். திருக்கோயிலில் பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான். நாற்புறமும் கூடங்களோடு திகழும் திருக்குளம் ஒன்று கட்டினான்.
கடல் கொண்ட திருமால் இவ்வாறு இவன் இத் திருப்பணிகளை எல்லாம் மிக விரிவாக செய்யத் தொடங்கியபோது தில்லை சிற்றம்பலத்திற்கு இடம் போதாதவாறு போனதால் திருமுற்றத்தின்கண் இருந்த திருமால் மூர்த்தத்தைப் பெயர்தெடுத்து அலைகடலில் கிடத்தும்படி செய்து அதனால் இடத்தைப் பெருக்கி கொண்டு, திருப்பணிகளை நிறைவேற்றினான் என்று ஆசிரியர் ஒட்டக்கூத்தர் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவனால் தில்லையம்பல மூன்றில் நிருவம்ப்பெற்று அந்நாள் முதல் நிலை பெற்றிருந்த திருமால் பெரிதும் புண்படுத்தி விட்டது. மூர்த்ததைப் கடலில் எறிந்த இவன் செயல் வைணவர் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி பகைவர் ஆயினர் எனலாம். ஆனால் உண்மையில் திருமால் சமையத்தில் வெறுப்பு உடையவனாக இருந்திருப்பின் அவன் தன் ஆட்சிக்குட்ப்பட்ட அனைத்து திருமால் கோயில்களுக்கும் இடையுறு செய்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் தில்லையில் மட்டுமே அவன் இவ்வாறாக செய்திருக்கின்றான். தில்லைநாதன் மேல் கொண்ட பற்றினால் அக்கோவிலைப் பெரிதாக அமைக்க முர்ப்பட்டதிற்கு கோவிந்தராசனை வழிப்பட்டு வந்த அந்தணர்கள் இடையுறு விளைவித்தனர். இதனால் சினம் கொண்ட சோழன் பள்ளிக் கொண்டிருந்த திருமாலை அவனது இருப்பிடமான பழைய கடலுக்கே அனுப்பி விட்டான் என தக்கையாப் பரணியில் கூததன் கூறுகின்றார்.
ராமானுஜர்
குலோத்துங்கனின் சரித்திரத்தினை பற்றி அறிந்துக் கொள்ளும் பொது அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய உண்மை ராமானுஜர் மற்றும் குலோத்துங்கனின் இடையே ஏற்பட்ட பிரச்சனையே. இது ஒரு தனிப் பிரச்சனையாக இல்லமால் ஒரு சமூகப் பிரச்சனையாகவே மாறியது.
சைவத்தின் மீது தீராப் பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கும் வைனவத்தினைப் பரப்ப பிறந்த ராமனுஜனுக்கும் ஏற்ப்பட சாடல்கள் வரலாற்று உண்மை வாய்ந்ததே. ராமானுஜர் வைணவத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்டிருந்ததால் தில்லையில் விஷ்ணுப் பெருமாள் அகற்றப் படுவதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சிவனின் மீது பற்றுக் கொண்ட குலோத்துங்கனுக்கு தில்லையில் சிவ ஸ்தலமாக உள்ள இடத்தில் விஷ்ணு சிலை இருப்பது சிவ ஸ்தலம் முழுமை அடைந்ததாக தெரியவில்லை. அங்கே சிவன் மட்டும்மே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆதலால் பக்தி மேலோங்க விஷ்ணு சிலை தனை அகற்ற முடிவு செய்தனன். இவனது செயலை எதிர்த்தார் ராமானுஜர்.
விஷ்ணு சிலைதனை அகற்றுவது கோவிலின் லக்ஷ்மி கடாட்சம் அகன்று விடும் என்றும் விஷ்ணுவே உயர்ந்த கடவுள் அவனது சிலை தனை அகற்றக் கூடாது என்று வேண்டிக் கொண்டார். குலோதுங்கனுக்கோ அங்கே சிவன் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. விஷ்ணுவின் புகழ் பாடிய ராமனுஜநிற்கு துணையாக கூரத்தாழ்வார் மற்றும் ஆண்டான் இருந்தனர். தில்லையில் நிகழும் நிகழ்வுகளினால் புண் பட்ட குருநாதர் மனதினை குளிர்விக்க குலோத்துங்கனின் அவைக்கு சென்றனர். அங்கே விஷ்ணுவின் பெருமைகளை எடுத்து உரைத்து சிவனை விட பெரியவன் விஷ்ணு தான் என்று வாதமிட்டனர். இதனை ஏற்றுக் கொள்ள இயலாத குலோத்துங்கன் ஆழ்வானையும் ஆண்டானையும் அவையை விட்டு உடனே விலகுமாறுக் உத்தரவிட்டான் ஆனால் அதையும் கேளாமல் விஷ்ணுவைப் பற்றி பாடிய ஆழ்வான் மற்றும் ஆண்டின் கண்களை சிதைக்குமாறு உத்தரவிட்டான். சிவனே உயர்ந்தவன் என்பதை ஒத்துக்கொள்ளாத ராமனுஜநிற்கு சோழ தேசத்தில் இருக்க இடம் கிடையாது என்று உத்தரவிட்டான் சோழன். இத்தனை உணர்ந்த ராமானுஜர் தனது அடிகளார்கள் உடன் ஹோய்சால தேசம் சென்றான்.
ராமானுஜர் ஸ்ரீரங்கத்தினை விட்டு அகன்றார், சோழனும் தில்லையில் இருந்த விஷ்ணு சிலைதனை தில்லை கோவிலில் இருந்து அகற்றினார்.
அமைதியான ஆட்சி
குலோத்துங்கனின் ஆட்சி அமைதியாகவும் நல்ல நிர்வாகத்துடனும் வளமாகவும் இருந்ததாகத் தெரிகிறது. எந்தவிதமான போரும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை. சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கோவில் புதுப்பிப்பு பணிகளுக்க இடம் மற்றும் போது வைணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாகவும், பின் குலோத்துங்கன் வற்புறுத்தி மரமாத்து பார்த்ததாக தெரிகிறது. பின் வந்த வைணவர்கள், இதை குலோத்துங்கன் கோவிந்தராஜர் சிலையை கோவிலில் இருந்து அகற்றையதாக திரிததுள்ளது ஒட்டக்கூத்தர் எழுதிய குலோத்துங்க சோழ உலா மூலம் அறியலாம். பேரரசின் நிலப்பரப்பு், விக்கிரம சோழனின் ஆட்சியின் இறுதியில் இருந்தவாரே நிலைநாட்டப்பட்டது.இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், சுங்கம் தவிர்த்த சோழன் என இவன் அழைக்கப்பட்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன
18. இரண்டாம் இராசராசசோழன் (கி.பி.1146-1163)
இரண்டாம் குலோத்துங்கனின் மகனான இரண்டாம் இராசராசன் கி.பி.1146இல் இளவரசுப் பட்டத்தைப்பெற்றான்; கி.பி.1150இல் தந்தையின் மறைவுக்குப் பிறகு பேரரசனாகச் சோழநாட்டு அரியணையில் பரகேசரி எனும் பட்டத்துடன் அமர்ந்தான். மலையமலைக்குப் பக்கத்தில் காவிரி அடைப்புண்டு நீர் வரத்துச் சுருங்கியபோது, தன் வீரர்கள் துணையுடன் அம்மலையை வெட்டி காவிரிக்கு வழிகண்டான். இவனது ஆட்சிக்காலத்தில் போர்கள் இல்லாமல் நாடு அமைதியுடன் திகழ்ந்தது. குடந்தைக்கு அருகில் (தாராசுரம் எனும் ஊரில்) இராஜராஜேச்சரம் எனும் பெருங்கோயிலை எடுத்துப் புகழ்
பெற்றான். இவனது புகழை ஒட்டக்கூத்தர் 'இராசராச சோழனுலா' எனும் பெயரில் நூலாக யாத்துள்ளார்.
இராசராசசோழனின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த அவர் தக்கயாகப்பரணி எனும் பெருநூலைப் பாடித் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார்.
19. இரண்டாம் இராசாதிராசசோழன் (கி.பி.1163-1178)
இரண்டாம் இராசராசசோழனால் கி.பி.1163இல் இளவரசுப்
பட்டம் கட்டப்பெற்ற இராசாதிராசன், விக்கிரமசோழனின் பெயரனும், நெறியுடைப்பெருமாள் என்பானின் புதல்வனுமாவான்.கி.பி.1166இல் பேரரசனாக 'இராசகேசரி' எனும் பட்டத்துடன் முடிசூட்டப்பெற்றான். பாண்டி நாட்டுப்போர், ஈழத்துப்போர் ஆகியவற்றில் பங்குகொண்டான். இரண்டாம் இராசராசனின் மகன்
சிறுவனாய் இருந்தமையால் இராசாதிராசன் சோழ சக்கரவர்த்தியாக முடிசூடும் சூழல் ஏற்பட்டது.
20. மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178-1218)
இரண்டாம் இராசராசனின் மகனான மூன்றாம் குலோத்துங்கன் கி.பி.1178இல் பரகேசரி என்ற பட்டத்துடன் சோழ சக்கரவர்த்தியாக முடிபுனைந்துகொண்டான். இவனது ஆட்சி கி.பி.1218 வரை நீடித்தது. இவன் மும்முறை பாண்டிய நாட்டோடு போர் தொடுத்தவன். ஈழம், மற்றும் வட புல நாடுகள் சிலவற்றையும் வென்று தனது ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்தினான். திரிபுவனம் எனும் ஊரினை நிர்மாணம் செய்து
திரிபுவனவீரேச்சுரம் எனும் பெருங்கோயிலையும் எடுப்பித்தான். மிகச்சிறந்த ஆட்சி செய்த சோழ மன்னர்கள் வரிசையில் இவனும் குறிப்பிடத்தக்கவனாவான். மூன்றாம் குலேத்துங்கனுக்குப்
பிறகு சோழர் வலிமை குன்றலாயிற்று.
21. மூன்றாம் இராசராசசோழன் (கி.பி.1216-1256)
கி.பி.1216இல் இளவரசனாக முடிசூடிய மூன்றாம் இராசராசன், தன் தந்தை குலோத்துங்கனின் மறைவிற்குப் பிறகு, கி.பி.1218இல்பேரரசனாக அரியணையில் அமர்ந்தான். பரகேசரி என்ற பட்டத்துடன் விளங்கிய இவனது ஆட்சிக்காலத்தில் தெற்கில் சுந்தரபாண்டியனும், வடக்கே காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கனும், வடமேற்கே ஹொய்சள அரசும் மிக வலிமையுடன் திகழ்ந்ததால் இவனது வலிமை குன்றியது.
சோழ அரசுக்குக் கட்டுப்பட்டுத் திகழ்ந்த மகத நாட்டு வாணகோவரையர், திருமுனைப்பாடி நாட்டுக் காடவராயர் போன்றோர் இராசராசனுடன் பகைமை கொண்டனர். கி.பி.1219இல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்து வெற்றி கண்டு, தலைநகரங்களை அழித்து எரியூட்டினான். துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த போசளர்கள் (ஹொய்சளர்) இராசராசனுக்கு உதவ முன் வரவே, சுந்தரபாண்டியன் சோழப்பேரரசை மீண்டும் சோழனுக்கே திருப்பி
அளித்தான். பின்னர் கி.பி.1231இல் இரண்டாம் முறையாக, சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படை எடுத்து வெற்றிகண்டான். தோல்வியுற்ற இராசராசன் உதவிகோரி குந்தளநாடு நோக்கிச் சென்றபோது வழியில் காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கனால் சிறைபிடிக்கப்பட்டான். இச்செய்தி அறிந்த
போசள மன்னன் வீரநரசிம்மன் பெரும்படையுடன் வந்து சேந்தமங்கலம் சிறையிலிருந்த சோழனை மீட்டு, மீண்டும் சோழ சிம்மாசனத்தில் அமருமாறு செய்தான். சோழ நாட்டில் கலகங்களும், துரோகச்செயல்கள் பலவும் நிகழ்ந்தன. கி.பி.1256 வரை கடும் சோதனைகளுக்கிடையே இவனது ஆட்சி தொடர்ந்தது. கி.பி.1246இல் தன் மகன் மூன்றாம் இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினான்.
22. மூன்றாம் இராசேந்திரசோழன் (கி.பி.1246-1279)
மூன்றாம் இராசராசனின் புதல்வனான மூன்றாம் இராசேந்திரன் கி.பி.1246இல் இளவரசுப் பட்டம் ஏற்றுப் பின்பு தன் தந்தையின் ஆட்சிக்குப் பிறகு, 'பரகேசரி' என்ற பட்டத்துடன் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவன் தந்தை காலத்தில் இழந்திருந்த செல்வாக்கைத் தன் வீரத்தால் மீண்டும் நிலைநிறுத்த முயன்றான். பாண்டிய மன்னன் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனை வென்று, தனக்குக் கப்பம் செலுத்துமாறு செய்தான். இவனுக்குப் போசள மன்னன் வீரசோமேஸ்வரனுடன் மாறிமாறி நட்பும் பகைமையும்
ஏற்பட்டன. தெலுங்கச் சோழர்களின் உதவி இவனுக்கு பலமளித்தது. போசள மன்னன் வீரராமநாதன் இவனது நாட்டின் ஒரு பகுதியான கண்ணனூரில் தங்கி ஆட்சி புரியத் தொடங்கினான். கி.பி.1257இல் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் எழுச்சியால் இவன் பாண்டியனுக்குக் கப்பம்
செலுத்தும் அவல நிலை ஏற்பட்டது. கி.பி.1279இல் இவனதுமரணத்தோடு சோழராட்சி முடிவுற்றது.
மூன்றாம் இராஜராஜனின் ஆட்சியின் இறுதியில் முக்கியமாக 34ம் ஆட்சி ஆண்டிற்குப் பிறகு, வட ஆற்காடு நெல்லூர் மாவட்டங்களில் மட்டுமே அவனுடைய கல்வெட்டுக்கள் உள்ளன. மொத்தத்தில் அவனுடைய கல்வெட்டுகள் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுருங்கின. அதே காலத்தில் இராஜேந்திரன் கல்வெட்டுகள் ஏராளமாகவும் சோழ நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
இவன் திருக்கொள்ளம்பூதூர் அ/மி ஸ்ரீ சௌந்தராம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ வில்வவனேசுரர் சுவாமி திருக்கோவிலுக்கு பணிவிடை செய்ததான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருவெண்ணை நல்லூருக்கு பெருந்தொண்டு செய்ததாக கூறப்படுகிறது.இவன் இறக்கும் வரையில் ஓர் சிவபக்தனாகவே காணப்பட்டான்.
இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி வரலாற்று நிகழ்ச்சிகளை அவை நடந்த வரிசைப்படி சொல்லுகிறதா என்பது ஐயப்பாட்டிற்குரியதாகும். மெய்க்கீர்த்தி இராஜேந்திரனின் 7ம் ஆண்டில் கி.பி 1253ல் ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். அது மூன்றாம் இராஜராஜன் உயிரோடிருந்த காலம். பட்டத்திற்கு உரியவனாக ஏற்கப்பட்ட சில ஆண்டுகளில் இராஜேந்திரன் சில காரியங்களைச் சாதித்தான் என்று முடிவு செய்யலாம். ஹொய்சாளக் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு இவன் கி.பி 1246லேயே சில சாதனைகளைச் செய்துவிட்டான் என்று நிலைநாட்டலாம்.
சோழ அரசுக்கு ஏற்பட்ட இழிவினை இராஜேந்திரன் நீக்கிவிட்டான் என்று மூன்றாம் ஆண்டுக் காலத்துக்கு இராஜராஜன் இரண்டு முடிகளைச் சூட்டிக் கொள்ளும் அளவுக்கு இராஜேந்திரன் தன்னுடைய ஆற்றலைக் காட்டினான் என்று மெய்க்கீர்த்தி சொல்கிறது. முடியோடு இருந்த பாண்டியனின் தலையை வெட்டுவதில் இராஜேந்திரன் வல்லவன் என்றும் அது குறிப்பிடுகிறது. திருப்புராந்தகம் கல்வெட்டு 15ம் ஆண்டில் இதை இன்னும் நிதானமாகச் சொல்கிறது 'இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளின' என்பது வாசகம்.
இராஜேந்திரன் பாண்டிய நாட்டைக் கொள்ளையடித்ததாயும் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாம் இராஜேந்திரன் சில வெற்றிகளை அடைந்தான் என்பது உண்மையே. சோழ மன்னனுக்கு அவன் அணிவித்த இரண்டாம் முடி பாண்டியனுடைய முடியே. பாண்டியர்கள் இருபதாண்டு காலத்தில் இரண்டு முறை சோழ நாட்டில் படையெடுத்தும் தீவைத்தும் உள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் கலகம் செய்து இராஜராஜனைச் சிறை வைத்ததற்கும் பாண்டியரே காரணம்.
எனில் மூன்றாம் இராஜேந்திரனிடம் தோற்ற பாண்டிய மன்னர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. வல்லமை படைத்த முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு எதிராக மூன்றாம் இராஜேந்திரன் எதையும் செய்துவிடவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவன் இறந்த பிறகும் கி.பி 1251ல் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பட்டத்திற்கு வரும் முன்னரும் பாண்டிய நாட்டில் சரியான அரசர்கள் இல்லை. எனவே சோழரின் மேலாதிக்கத்தைத் தற்காலிகமாக ஏற்ற அரசன் இரண்டாம் மாறவர்மன் சுந்தரப் பாண்டியன்(பட்டம் 1238) இருக்க வேண்டும்.
மூன்றாம் ராஜேந்திர சோழன்
"இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகாராசதிராச நரபதி" என்று பாராட்டப்படும் மூன்றாம் ராஜேந்திர சோழன், சோழர்களுக்கே உடைய குணங்களுடன் சோழ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் திடமும் கொண்டிருந்தான். மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திருக்கு பின்பு ராஜ ராஜ சோழனின் காலத்தில் பெரிதும் நலிவடைந்தது சோழர் குலம், நலிவடைந்த தனது குலத்தின் பெருமையை நிலை நாட்டும் எண்ணமும், வீரமும் கொண்ட மன்னனாக விளங்கினான் மூன்றாம் ராஜேந்திர சோழன்.
முதலாம் பாண்டிய போர்
தனது தந்தைக் காலத்தே சோழ தேசம் இழந்த மானத்தினை மீட்கும் பொருட்டு பெரும் படை ஒன்றினை திரட்டினான் குலோத்துங்கன் ராஜேந்திரன் என்று அழைக்கப் படும் மூன்றாம் ராஜேந்திரன். தனது பாட்டனின் செயர்குனங்கள் மனத்தினை கவர்ந்தாலும், அவரைப் போல் சோழ தேசத்தினை நிலை பெற செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாலும் தனது பாட்டின் பெயரினை தன் பெயருடன் இணைத்துக் கொண்டான் ராஜேந்திரன். தந்தையின் காலத்தில் நிகழ்ந்த அவக்கேடினை நீக்கும் பொருட்டு, தனது படையை தயார் செய்து பாண்டியர்களுடன் போர் புரிந்தான். முதல் மாரவர்மல் சுந்தரபாண்டியன் இயற்கை எய்தியதால் அவனக்கு பின் ஆட்சிக்கு வந்த ஏறண்டான் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய படையுடன் ராஜேந்திரனை எதிர்க்கொண்டான்.
ராஜேந்திரனின் வேட்கையும் அவனது ஆற்றலும் சோழ தேசத்தினை வெற்றி பெற செய்தது. இதனால பாண்டியன் சோழர்களுக்கு மீண்டும் கப்பம் கட்டும் படி ஆனான். ராஜேந்திர சோழன், சோழ தேசத்திற்கு நேர்ந்து துன்பங்களுக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் படை எடுத்து சென்றமையால், அங்கே இருந்த பாண்டிய தேச அரண்மனைகள் மாளிகைகள் நாசம் ஆயின, பயிர் நாசம், படை நாசம், செல்வம் என பாண்டியர்களின் வாசம் இருந்தவைகள் நாசம் ஆயின.
போசள மன்னனின் சூழ்ச்சியும் பாண்டிய தேச இழப்பும்
வீர நரசிம்மன், சோழர்களின் உற்ற துணைவனாக இருந்து எப்போதும் உதவி வந்தான். அவனது மரணத்திற்கு பின்பு அவனது மகன் வீர சொமேச்வரன் என்பான் அரச பதவியை அடைந்தான். போசள தேசம் சோழர்களுடன் பெண் உறவு கொண்டிருந்தது போலவே பாண்டியர்களுடனும் பெண் உறவு கொண்டிருந்தனர், ஆதலால் இரண்டு தேசங்களுக்கும் உதவி புரிந்து சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால் ராஜ ராஜ சோழனுடன் கொண்டிருந்த உறவுக்கு பின்பு போசளர்கள் குலசேகர பாண்டியனுடன் உறவு கொண்டிருந்ததால் பாண்டியர்களுக்கு உதவ வேண்டி இருந்தது. குலசேகர பாண்டியன் சோழர்களிடம் தேசத்தினை இழந்த பின்பு சொமேஸ்வரனிடம் சரண் அடைந்தான். இதன் பொருட்டு சொமேச்வரன் போசள படைத்தனை சோழ தேசம் நோக்கி அனுப்பினான். பாண்டிய தேசத்தினை அப்போது தான் வென்றிருந்த சோழர்கள், தங்கள் தேசம் திரும்பும் போதே போசளர்கள் சோழர்களின் பின்னே வந்து ஆக்கிரமிப்பு இடங்களை கைப் பற்றி பாண்டியர்களுக்கு கொடுத்தனர். இவ்வாறு போசளர்கள் சோழர்கள் வாசம் இருந்த புதுகை, மதுரை வரையிலான இடங்களை பாண்டியர்களுக்கு மீது கொடுத்தனர்.
தெலுங்கு சோழர்களுடன் நட்பு
மூன்றாம் ராஜ ராஜ சோழனின் காலத்திலேயே சோழர்களுடன் நெருங்கிய உறவுக் கொண்டிருந்தனர் தெலுகு சோழர்கள். இவர்கள் இரண்டாம் ராஜாதி ராஜ சோழனின் பரம்பரையாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு, ஏனெனில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றப் பின்பு இரண்டாம் ராஜாதி ராஜன் தெலுங்கு தேசம் நகர்ந்தான் என்று சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இவன் சோழரின் நேரடி வாரிசு அல்லாததால் தன் பரம்பரையை தெலுங்கு சோழர்கள் என்று விச்தரித்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.
தெலுகு சோழ மன்னனாகிய கோபாலன் என்பவன் மூன்றாம் ராஜேந்திர சோழநிடத்தே நெருகிய அன்புக் கொண்டு உற்ற தோழனாக இருந்து வந்தான். சோழனின் படை எடுப்புக்கு உதவி செய்தும், போரினால் பங்கு கொண்டும் பெரும்பணி செய்தான். இவ்வாறு தனக்கு உதவி செய்த நண்பனுக்கு பெருமை செய்யும் வண்ணம் காஞ்சி நகரினை ஆளும் பணியை ஒப்படைத்தான். ஆதலால் தெலுங்கு சோழர்கள் வடக்கே நெல்லூர் முதற் கொண்டு தெற்கே செங்கர்பட்டு ஜில்லா வரை ஆட்சி புரிந்தனர்.
போசளர்கள் சோழர்களுடன் நட்பு கொண்டமை
குலசேகர பாண்டியனுக்கு பின்பு, இரண்டாம் மாரவர்ம் சுந்தர பாண்டியன் அரியணை ஏறினான். இவனும் சோழர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசனாகவும் பின்பு போசலனின் உதவியால் சுதந்திர அரசனாகவும் இருந்தான். அவனுக்கு பின்பு சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் அரச பதவியை அடைந்தான். இவன் பாண்டிய மன்னர்கள் பரம்பரையில் மிகவும் வலிமை வாய்ந்தவனாகவும், பெரும் ஆற்றல் கொண்ட வீரனாகவும் இருந்தான். இவனது எண்ணங்களை அறிந்த போசலன், இப்பாண்டியனை வளர விட்டால் தனது ஆட்சிக்கு வீம்பு நேரிடும் என்பதனை அறிந்து ராஜேந்திர சோழன் பக்கம் நட்புக் கரம் நீட்டினான். போசலனின் நட்பினை ஏற்றுக்கொண்ட சோழன், வீர நரசிம்மனின் மைந்தன் வீர ராமநாதன் என்பவனை சோழ தேசத்திலேயே இருந்து கண்ணனூர் என்ற இடத்தினை ஆட்சி புரியும்படி அழைத்தனன். இவ்வாறு சோழன் சொன்னமைக்கு காரணம், பாண்டியன் படை எடுக்க நேர்ந்தால் கண்ணனூர் கடந்தே சோழ தேசம் நுழைய வேண்டும், அவ்வாறு அவன் கண்ணனூர் நுழையும் நேரத்தே இதனைத் தடுக்க போசளர்கள் சோழர்களுடன் இணைந்து பாண்டியனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான்.
பாண்டியனின் எழுச்சயும் சோழனின் வீழ்ச்சியும்
பெரும் ஆற்றல், படை ஆளும் திறம், ராஜ தந்திரம், வீரம், இவற்றை செவ்வண்ணம் தன்னகத்தே கொண்டிருந்தான் சடையவர்மன் சுந்தர பாண்டியன். பாண்டியர்களின் பறைதனை உலகுக்கு அறிவிக்க வழிக் கொண்டு எழுந்தவன் இப்பாண்டியன். ராஜேந்திர சோழனின் 37 ம ஆட்சி ஆண்டில், சோழர்கள் மீது படை எடுத்து வந்தான் சுந்தர பாண்டியன். இவனது ஆற்றலையும், வீரத்திற்கும் பணிந்தான் ராஜேந்திர சோழன். ஆகா, மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டிய மன்னனுக்கு கப்பம் கட்டும் சிற்றரசன் ஆனான். ராஜேந்திர மட்டும் அடக்கினால், இவன் மீண்டும் தன்னுடன் போர் புரிய வருவான் என்பதனை அறிந்த சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு உதவும் போசளர்களை, தெலுங்கு சோழர்களையும் வென்றான். வீர சொமேஸ்வரனைக் கொன்று, அவன புதல்வன் வீர ராமநாதனை விரட்டி, தெலுகு சோழர் மன்னன் கோபாலனை கொன்று தென்னகத்தே தனது வெற்றிக் கோடியை நாடினான் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
சோழர் கால வேளாண் நிலங்கள்
சோழர் காலகட்டத்தில் தொடர்ச்சியாக புதிய வேளாண் நிலங்கள் உருவாக்கப்பட்டன. இன்றைய தமிழகத்தின் நஞ்சைநிலங்களில் பெரும்பகுதி அப்போது உருவானதே.
தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் சோழர் காலத்தில், ராஜராஜனின் பாட்டாவான இராதித்த சோழனால் வெட்டப்பட்டது தான். வீரநாராயண மங்கலம் ஏரி என்பது அதன் பெயர். இந்த ஏரி அக்காலத்தில் இருபது கி.மீ நீளமும் ஐந்து கீ.மீ அகலமும் கொண்டது. ஐம்பதாண்டுகளாக அதை தூர்வாரவே நம் ஜனநாயக அரசுகளிடம் நிதி இல்லை என்கிறார்கள். அதை நம்பியே இன்றும் சென்னைகூட வாழ்கிறது. அது எப்பேர்ப்பட்ட வைப்புநிதி என்பதை நாம் யோசிப்பதேயில்லை. இன்று அதன் மதிப்பு பல்லாயிரம்கோடி ரூபாய்! எத்தனை கோடி வரிப்பணம், எவ்வளவு உழைப்பு!
குமரி மாவட்டத்தில் மட்டும் சோழர்கள் வெட்டிய ஏரிகள் இருபதுக்கும் மேல். தமிழகத்தில் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்பட்டிருக்கலாம். இன்றைய தமிழகத்தின் ஆகப்பெரிய பாரம்பரியச் சொத்தே இந்த ஏரிகள்தான். இவை இல்லையேல் நாம் பாலைவன மக்கள். ஆயிரம் வருடங்களாக நாம் குடிப்பது சோழன் அளித்த குடிநீரை. உண்பது அவர்கள் உருவாக்கிய விளைநிலங்களின் சோற்றை.அதை நாம் மறக்கக் கூடாது.
தமிழக சரித்திரத்திலேயே மிகப்பிரம்மாண்டமான மக்கள் நலத்திட்டங்கள் சோழர்காலகட்டங்களில் தான் செய்யப்பட்டன. இன்று நம் நலம் நாடும் ஜனநாயக அரசுகள்கூட அதற்கிணையான மக்கள் நலத்திட்டங்களை செய்யவில்லை .தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான ஏரிகள் சோழர் காலத்தில் வெட்டப்பட்டவை. காவேரியின் கிளைகள்கூட அவர்களால் கட்டியமைக்கப்பட்டவை. தமிழகத்தின் பாசன நிலங்களில் பெரும்பகுதி விரிவான வாய்க்கால் அமைப்புகள் மூலம் சோழர்காலத்தில் தான் விவசாயத்துக்கு வந்தது. ஆயிரம் வருடங்களாக தமிழ்நாட்டின் சொத்தாக இருக்கும் தஞ்சை நெல்வயல்கள் அவர்களால் உருவாக்கப்பட்டவை. மைய அரசு உருவாகி அதன் மூலம் திரட்டப்பட்ட பெருமூலதனமே அதை சாத்தியமாக்கியது.
"வேளார் என்பதும், வேளாளர் என்பதும் வெவ்வேறு இனத்தவரின் குடிப்பெயர்கள்.
வேளார் உழுவித்து உண்பவர்-அரச பரம்பையினர்.
வேளாளர் உழுது உண்பவர்- உழவர்.
உழுபவருக்கு வேளாண் என்ற குடிப்பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியது. வேளாண் என்பதற்கு உபகாரி என்று பொருள். "வேளாண் வாயில் வெப்பக்கூறி"
ஆதாரம்.
01.சங்ககால வேளிர்கள். க.சண்முகசுந்தரம்
02.தொல்காப்பியம்..
03. தொல்காப்பியம், பொருளதிகார உரை, இளம்பூரணர்.
04. தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியர்.
05. சேந்தன் திவாகரம்
06. சூளாமணி நிகண்டு
07. பிங்கல நிகண்டு
08. வடமலை நிகண்டு
09. பாரதிதீபம்
10. சதுரகராதி
11. கதிரைவேற்பிள்ளை அகராதி.
இந்த நூல்களின் நம்பகத்தன்மை வினாக்குரியது என்றால் தமிழ் வரலாறே வினாக்குரியது என்று பொருள் என்பதை தமிழ்கூறு நல்லுலகம் அறியும்.
அரசகுலத்தினர் பெயர்களில் அமைக்கப்பட்ட சோழர் கால வாய்க்கால்கள்
1.அருள்மொழித் தேவ வாய்க்கால்
2. அறிஞ்சிகை வாய்க்கால்
3. இராசகேசரி வாய்க்கால்
4. இராசேந்திர சோழ வாய்க்கால்
5. இராசதிராச சோழ வாய்க்கால்
6. உத்தமசீலி வாய்க்கால்
7. உத்தம சோழ வாய்க்கால்
8. கங்கைகொண்ட சோழ வாய்க்கால்
9. கேரளமாதேவி வாய்க்கால்
10. கொதண்டராம வாய்க்கால்
11. சீபூதி வாய்க்கால்
12. சுங்கந்தவித்த வாய்க்கால்
13. சுந்தரசோழ வாய்க்கால்
14. செம்பியன் மாதேவி வாய்க்கால்
15. செனநாத வாய்க்கால்
16. சோழகுல வாய்க்கால்
17. சோழ சூளாமணி வாய்க்கால்
18. நித்தவிணோதன் வாய்க்கால்
19. பரசக்கரதட்ட வாய்க்கால்
20. பரமேஸ்வர வாய்க்கால்
21. மாதேவன் வாய்க்கால்
22. மாதேவி வாய்க்கால்
23. முடிகொண்ட சோழ வாய்க்கால்
24. வானவன் மாதேவி வாய்க்கால்
25. விமலாதித்த வாய்க்கால்
26. வீர நாரயண வாய்க்கால்
27. ஜெயங்கொண்டசோழ வாய்க்கால்
28. ஸ்ரீ அறிஞ்சிகை வாய்க்கால்
29. ஸ்ரீகண்ட வாய்க்கால்
30. ஸ்ரீகண்டராதித்த வாய்க்கால்
31.ஸ்ரீ செம்பியன்மாதேவி வாய்க்கால்
சோழர் கால வடிகால்கள்.
1. அமநி நாரயண வடி
2. ஆதித்த வடி
3. இராசகேசரி வடி
4. கண்டருள் கண்ட வடி
5. கண்ணர வடி
6. கிடாரங்கொண்ட வடி
7. குலோத்துங்க சோழ வடி
8. சோழகுலவல்ல வடி
9. சோழமாதேவி வடி
10. திரிபுவன மாதேவி வடி
11. நரதொங்க வடி
12. பஞ்சவன் மாதேவி வடி
13. பரமேஸ்வர வடி
14. பராக்கிரம வடி
15. மதுராந்தக வடி
16. மாதேவடிகள் வடி
17. மும்முடிசசோழ வடி
18. வயிரமேக வடி
19. வானவன் வடி
20. விடேல்விடுகு வடி
21. வீரநாராயண வடி
22. ஆயன நாத வடி
23. ஸ்ரீ கண்டராத்தித்த வடி
24. ஸ்ரீ கொண்டக மாதேவி வடி
25. ஸ்ரீ செம்பியன் மாதேவி வடி
26. ஸ்ரீ இராசகேசரி வடி
27. ஸ்ரீ வானவன்மாதேவி வடி
28. ஸ்ரீ வீரநாராயண வடி
29. கவுசல வடி
30. காமதேவ வடி
31. சங்கர வடி
32. திருசிற்றம்பலேச வடி
33. திருவரங்க வடி
34. ஸ்ரீதர வடி
35. பெருமாள் வடி
36. ஸ்ரீதேவி வடி
37. ஸ்ரீகாமுக வடி
38. ஸ்ரீவீரமுக வடி
சோழர் காலச் செப்பேடுகள்
1. உதயேந்திரம் செப்பேடு. பராந்தக சோழன் காலத்தில் கங்க மன்னன் பிருத்விபதி வெளியிட்டது.
2. வேளஞ்சேரி செப்பேடு. பராந்தக சோழன் வெளியிட்டது
3. அன்பில் செப்பேடு. சுந்தர சோழன் வெளியிட்டது
4. சென்னை அருங்காட்சியகச் செப்பேடு. உத்தம சோழன் வெளியிட்டது
5. லெய்டன் பெரிய செப்பேடு. முதலாம் இராஜராஜ சோழன் வெளியிட்டது
6. கரந்தைச் செப்பேடு. முதலாம் இராஜேந்திர சோழன் வெளியிட்டது
7. திருவலங்காட்டுச் செப்பேடு. முதலாம் இராஜேந்திர சோழன் வெளியிட்டது
8. திருக்களர் செப்பேடு. முதலாம் இராஜேந்திர சோழன் வெளியிட்டது
9. எசலாம் செப்பேடு. முதலாம் இராஜேந்திர சோழன் வெளியிட்டது
10. திரு இந்தளூர் செப்பேடு. முதலாம் இராஜேந்திர சோழன் வெளியிட்டது
11. லெய்டன் சிரிய செப்பேடு. முதலாம் குலோத்துங்க சோழன் வெளியிட்டது