புறநானூற்றின் சோழ மன்னர்கள்
பெருங்கிள்ளி
சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி,
மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி
வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின்
ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று
மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம்.
தேவலோகம் போன்ற இந்த நாடு உன்னால் ஆளப்பட்டாலும் சரி, உன் பகைவரிடம்
சென்றாலும் சரி, உண்மையில் அது துறவிகளுக்கு உரிமையானது. பிராமணர்களக்கு நீ
தண்ணீரும் பூவும் பொன்னும் தருவாயாக; மிளிரும் நகைகளை அணிந்த வேலைக்காரப்
பெண்கள் தங்கக் குவளைகளில் தரும் மதுவை அருந்தி மகிழ்வாயாக; அந்த
மகிழ்ச்சியில் தேவைப்பட்டவர்களுக்கு எளியவர்களுக்கு பரிசுகளை அள்ளி
வழங்குவாயாக. அறச்செயல்கள் தாமே இறுதி நாளில் உன்னைத் துணை நிற்கும்;
வெண்கொற்றக் குடைகளும் வீரத் தேர்களும் உடைய அரசர்களே நீவர் நீடு வாழ்க!
(புறம். 367)
பெருங்கிள்ளிக்கும், சேரமன்னன் மாஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த
போரில், தேர் வண்மலையான் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாகப் போரிட்டதாக
கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று
அறுதியிட்டு கூறமுடியாது.
சோழ மன்னர்கள். தலை நகரம் உறையூர், சின்னம் – புலி , மாலை – ஆத்தி
புறநானூற்றில் குறிக்கப்பட்ட சோழ மன்னர்கள் – பாடிய புலவரின் பெயர் – பாடல் எண்
சோழ மன்னர்கள்.
1. சோழன் உருவப் ப·றேர் இளஞ்சேட் சென்னி – பரணர் 4, பெருங்குன்றூர் கிழார் 266
1. சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி – ஊன்பொதி பசுங்குடையார் 203
1. சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி – ஊன்பொதி பசுங்குடையார் 370, 378
1. சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி – ஊன் பொதி பசுங் குடையார் 10
2. சோழன் கரிகாற் பெருவளத்தான் – கருங்குழல் ஆதனார் 7, 224 வெண்ணிக் குயத்தியார் 66
3. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 13
4. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி – பாண்டரங் கண்ணனார் 16, உலோச்சனார் 377
5. சோழன் நலங்கிள்ளி – உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 27, 28, 29, 30 கோவூர்கிழார் 31, 32, 33, 68, 382, 400 – சோழன் நலங்கிள்ளி (the king is the poet in 73, 75) ஆலத்தூர் கிழார் 225
5. சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி – கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார் 61
6. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் – ஆலத்தூர் கிழார் 34, 36, 68, 69, 225 – வெள்ளைக்குடி நாகனார் 35 – மாறோக்கத்து நப்பசலையார் 37, 39, 226 – ஆவூர் மூலங் கிழார் 38, 40
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் (king sang 173 for சிறுகுடி கிழான் பண்ணன்), கோவூர்கிழார் 41, 46, 70, 373, 386- நல்லிறையனார் 393 – எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் 397 இடைக்காடனார் 42 - ஆடுதுறை மாசாத்தனார் 227 – ஐயூர் முடவனார் 228
7. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் – தாமப்பல் கண்ணனார் 43
8. சோழன் நெடுங்கிள்ளி - கோவூர் கிழார் 44
8. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி – கோவூர் கிழார் 47
9. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன் – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 58- உறையூர் மருத்துவன் தாமோதரனார் 60 – கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 197
10. சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி – பரணர் 62, 63
11. சோழன் கோப்பெருஞ் சோழன் – பிசிராந்தையார் 67, 212 புல்லாற்றூர் எயிற்றியனார் 213 – கோப்பெருஞ் சோழன் (king sang 214,215,216) – பொத்தியார் – 217 கண்ணகனார் நத்தத்தனார் 218
பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார் 219 – பொத்தியார் 220, 221, 222, 223
12. சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி – சாத்தந்தையார் 80, 81, 82 பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் 83, 84, 85
13. சோழன் நல்லுருத்திரன் (king sang 190)
புறநானூறு 10, சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி, பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்
வழிபடு வோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,
நெய்தருங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!
புறநானூறு 66, சோழன் கரிகாற் பெருவளத்தான்,
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்.
சேரமான் பெருஞ்சேரலாதன்
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!
புறநானூறு 67 – கோப்பெருஞ் சோழன், பாடியவர்: பிசிராந்தையார்
அன்னச் சேவல் ! அன்னச் சேவல் !
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்,
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனையக்,
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழ நன்னாட்டுப் படினே, கோழி
உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ,
வாயில் விடாது கோயில் புக்கு, எம்
பெருங் கோக் கிள்ளி கேட்க, இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத், தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.
சோழ மன்னர்கள் பாடிய பாடல்கள்
1. புறநானூறு
சோழன் நலங்கிள்ளி - 73, 75
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் - 173
சோழன் கோப்பெருஞ் சோழன் - 214,215,216
சோழன் நல்லுருத்திரன் - 190
குறு நில மன்னர் தொண்டைமான் இளந்திரையன் – 185
2. குறுந்தொகை
சோழன் கோப்பெருஞ் சோழன் – 20, 53, 129, 147
குறுந்தொகை 20. பாலை திணை – கோப்பெருஞ்சோழன், தலைவி தோழியிடம் சொன்னது
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
குறுந்தொகை 53. மருதம் திணை – கோப்பெருஞ் சோழன், தோழி தலைவனிடம் சொன்னது
எம் அணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேர் இறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோடு உற்ற சூளே.
குறுந்தொகை 129. குறிஞ்சி திணை – -கோப்பெருஞ்சோழன், தலைவன் தன் நண்பனிடம் சொன்னது
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளா யத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே.
குறுந்தொகை 147. பாலை திணை, -கோப்பெருஞ் சோழன் – தலைவன் சொன்னது
வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
இன்றுயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே.
புறநானூறு 75, பாடியவன்: சோழன் நலங்கிள்ளி
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்,
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே-மையற்று,
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே.
புறநானூறு 173.
பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்.
யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர் ! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே.
புறநானூறு 185
பாடியவர்: குறு நில மன்னர் தொண்டைமான் இளந்திரையன்
கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
பகைக்கூழ் அள்ளற் பட்டு,
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.
புறநானூறு 190.
பாடியவர்: சோழன் நல்லுருத்திரன்
விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்,
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து,
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையடு
இயைந்த வைகல் உளவா கியரோ!
புறநானூறு 214. நல்வினையே செய்வோம்! பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
`செய்குவம் கொல்லோ நல்வினை!’எனவே
ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,
தொய்யா உலகத்து உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே.
புறநானூறு 215 - பாடியவர்: பிசிராந்தையர்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதொரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே;
செல்வக் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன் மன்னே.
புறநானூறு 216
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்.
“கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய,
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல் என்று
ஐயம் கொள்ளன்மின், ஆரறி வாளிர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;
புன்பெயர் கிளக்கும் காலை, ‘என் பெயர்
பேதைச் சோழன்’ என்னும், சிறந்த
காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை,
இன்னதோர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!
கடை ஏழு வள்ளல்கள்.
பேகன் (வையாவிக் கோப்பெரும் பேகன்)
பாரி ( வேள் பாரி)
காரி (மலையன் திருமுடி காரி),
ஆய் (ஆய் அண்டிரன்) ,
அதிகன் (அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி),
நள்ளி (கண்டீரக் கோப் பெருநள்ளி),
ஓரி (வல்வில் ஓரி)
கடையெழு வள்ளல்களின் சிறப்பு
1. பேகன்
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் [84-87]
கருத்துரை
மழை ஓயாது பெய்யும் வளமிக்க மலைச் சாரலில், காட்டில் திரிந்த மயிலுக்குப் போர்வையைக் கொடுத்தவனும், ஆற்றலும் அழகும் நிறைந்தவனும், ஆவியர் குடியில் தோன்றியவனும், பெரிய மலை நாட்டுக்குத் தலைவனுமாகிய பேகனும்.
சொற்பொருள் விளக்கம்
வானம் – மழை, வாய்த்த – நன்கமைதல், வளமலைக்கவான் – வளமானமலை அடிவாரம், வளமான மலைச்சாரல், கானமஞ்ஞைக்கு – காட்டிலுள்ள மயிலுக்கு, கலிங்கம் – ஆடை, நல்கிய – கொடுத்த, அருந்திறல் – அரிய ஆற்றல், அணங்கின் – அழகினையும் உடைய, ஆவியர் – வேளாளர், வேடர், பெருங்கல் நாடன் – பெரிய மலைநாட்டுக்குத் தலைவன்.
2. பாரி
சுரும்பு உண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும்; [87 – 91]
கருத்துரை
வண்டுகள் வந்து தேனை உண்ணுமாறு மணம் வீசும் மலர்களை உதிர்க்கின்ற புன்னை மரங்கள் நிறைந்த நெடிய வழியில், சிறிய பூக்களைப் பூக்கின்ற முல்லைக் கொடிக்குத் தனது பெரிய தேரைக் கொடுத்தவனும், ஒலிக்கின்ற அருவி வீழும் மலைச் சாரலில் அமைந்துள்ள பறம்புமலைக்கு அரசனுமாகிய பாரியும்.
சொற்பொருள் விளக்கம்
சுரும்பு – வண்டுகள், உண – உண்ண, நறுவீ – மணம் வீசும் மலர்கள், உறைக்கும் – உதிர்க்கும், நாக – புன்னை மரங்கள், நெடுவழி – நெடிய வழியில், சிறுவீ – சிறிய மலர், முல்லைக்கு – முல்லைக் கொடிக்கு, பெருந்தேர் – பெரிய தேரினை, நல்கிய –கொடுத்த, பிறங்கு – ஒலிக்கும், வெள்ளருவி – வெண்மையான அருவி நீர், வீழும் – விழுகின்ற, சாரல் – மலைச்சாரல், பறம்பின் கோமான் பாரியும் – பறம்பு மலைக்குத் தலைவனாகிய பாரியும்,
3. காரி
கறங்குமணி
வால்உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கை காரியும் [91-95]
கருத்துரை
தன்னை நாடி வந்த இரவலருக்கு, ஒலிக்கின்ற மணியும் வெண்மையான தலையாட்டமும் அணிந்த குதிரையோடு, உலகத்தவர் கேட்டு வியக்க அன்பு நிறைந்த சொற்களையும் கொடுத்தவன். பகைவர் கண்டு அஞ்சுகின்ற சினத்தீ விளங்கும் ஒளி வீசும் நீண்ட வேலினை உடையவன். வீரக்கழலும், வளையும் அணிந்துள்ள பெரிய கைகளை உடையவனுமாகிய காரியும்,
சொற்பொருள் விளக்கம்
கறங்குமணி, வால்உளை – வெண்மையான தலையாட்டம், புரவியொடு – குதிரையொடு, வையகம் மருள – உலகத்தவர் கேட்டு வியக்க, ஈர நல்மொழி – அன்புடை நல்ல சொற்கள், இரவலர்க்கு – யாசிப்பவர்க்கு, ஈந்த – வழங்கிய, அழல் – சினத்தீ, திகழ்ந்து – விளங்கி, இமைக்கும் – ஒளிவீசும், அஞ்சுவரு – அஞ்சத்தக்க, நெடுவேல் – நீண்டவேல், கழல்தொடி – காலிலே அணியக்கூடிய வீரக்கழலும், கையிலே அணிந்துள்ள தொடியும் (வளை), தடக்கை – பெருமை பொருந்திய கை.
4and 5 Already Pasted to Kuru Nla Mannargal
6. நள்ளி
கரவாது
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும்; [103-107]
கருத்துரை
தன்னிடம் இருக்கும் பொருளை மறைக்காது அன்பு காட்டுவோர் மனம் மகிழுமாறு, அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கான பொருளைக் குறைவின்றிக் கொடுத்தவன். போர் செய்வதில் வல்லவன். மழை விழுவதற்குக் காரணமான, காற்று தங்குகின்ற நெடிய குவடுகளைக் கொண்ட பெருமை பொருந்திய மலைநாட்டுக்குத் தலைவனாகிய நள்ளியும்,
சொற்பொருள் விளக்கம்
கரவாது – மறைக்காது, நட்டோர் – அன்பு காட்டுவோர், உவப்ப – மகிழ, நடைப்பரிகாரம் – வாழ்க்கை நடத்துவதற்கான பொருள், மட்டாது – குறைவிலாது, கொடுத்த – வழங்கிய, முனை விளங்கு தடக்கை – போர் செய்கின்ற பெருமை பொருந்திய கைகள், துளிமழை பொழியும் – மழைத்துளி விழுவதற்குக் காரணமான, வளிதுஞ்சு – காற்று தங்கும், நெடுங்கோட்டு – நீண்டகுவடுகள், நளிமலை நாடன் நள்ளியும் – பெருமை பொருந்திய மலைநாட்டுக்குத் தலைவனாகிய நள்ளியும்,
7. ஓரி
நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக்குதிரை ஓரியும் [107-111]
கருத்துரை
நெருக்கமான கிளைகளில், நறுமணம் வீசும் அரும்புகளைக் கொண்டுள்ள இளமையான உயர்ந்த புன்னை மரங்களையுடைய சிறிய மலைகளைக் கொண்ட நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்கு அளித்தவன். காரி என்னும் குதிரையில் ஏறிவரும் காரி என்ற வள்ளலோடு போரிட்டவன். பிடரிமயிர் அமைந்த குதிரையினை உடையவன். இத்தகைய ஓரியும்,
சொற்பொருள் விளக்கம்
நளிசினை – நெருக்கமான கிளை, நறும்போது – நறுமணம் வீசும் அரும்பு, கஞலிய – விளங்கிய, நாகு – இளமை, முதிர் – உயர்ந்த, நாகத்து – புன்னை மரத்தை, குறும்பொறை – சிறிய மலை, நல்நாடு – நல்லநாடு, கோடியர்க்கு – கூத்தருக்கு, ஈந்த – வழங்கிய, காரக்குதிரை – காரி என்னும் குதிரையினையுடைய, காரியொடு – காரி என்ற வள்ளலொடு, மலைந்த – போரிட்ட, ஓரிக் குதிரை – பிடரிமயிரினையுடைய குதிரை,
என ஆங்கு
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள் [111-112]
கருத்துரை
என்று பிறருக்குக் கொடுக்கும் தன்மையில் சிறப்பாகச் சொல்லப்பட்ட ஏழு வள்ளல்களும், தமக்கு எதிராக எழுகின்ற போரினை வென்ற கணைய மரத்தை ஒத்த தோளமைந்தவர்கள்.
சொற்பொருள் விளக்கம்
என ஆங்கு – என அக்காலத்து (சிறப்பாகச் சொல்லப்பட்ட) எழுசமம் – எதிராக எழுகின்ற போர், கடந்த – வென்ற, எழு – கணைய மரம், கடந்த – வென்ற, எழு – கணை மரம், உறழ் – ஏத்த, திணி தோள் – திண்ணிய தோள்.
புறநானூறு
வேள் பாரி – கபிலர் 105 – 111, 113 – 120, 236
வேள் பாரியின் பெண்கள் – 112
ஆய் அரண்டின் – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 127 – 135, 374, 375 துறையூர் ஓடை கிழார் 136 குட்டுவன் கீரனார் 240 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 241
வையாவிக் கோப்பெரும் பேகன் – பரணர் 141, 142, 144, 145 கபிலர் 143 அரிசில் கிழார் 146 பெருங்குன்றூர் கிழார் 147
கண்டீரக் கோப் பெருநள்ளி – வன்பரணர் 148-150
வல்வில் ஓரி – வண்பரணர் 152, 153, கழைதின் யானையார் 204
புறநானூறு 105. தேனாறும் கானாறும்!
பாடியவர்: கபிலர்
பாடப்பட்டோன்: வேள் பாரி
சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும், பெய்யா தாயினும், அருவி
கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட,
மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.
புறநானூறு 106. பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே.
புறநானூறு 107. பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி
‘பாரி பாரி’ என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்:
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே.
புறநானூறு 108. பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு,
பாரியும், பரிசிலர் இரப்பின்,
‘வாரேன்’ என்னான், அவர் வரை யன்னே.
புறநானூறு 118 – பாடியவர் : கபிலர்
அறையும் பொறையும் மணந்த தலைய,
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்
தெண் ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ-
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரி தண் பறம்பு நாடே!
புறநானூறு 142 – பாடியவர் பரணர் – வையாவிக் கோப்பெரும் பேகன்
அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும்,
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரி போலக்,
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது,
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே.
புறநானூறு 144 – பாடியவர் பரணர் – வையாவிக் கோப்பெரும் பேகன்
அருளா யாகலோ கொடிதே; இருள்வரச்,
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின்
கார்எதிர் கானம் பாடினே மாக,
நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண்அகம் நனைப்ப,
இனைதல் ஆனா ளாக, ‘இளையோய்!
கிளையை மன், எம் கேள்வெய் யோற்கு?’என,
யாம்தன் தொழுதனம் வினவக், காந்தள்
முகைபுரை விரலின் கண்ணீர் துடையா,
‘யாம், அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள்,இனி;
எம்போல் ஒருத்தி நலன்நயந்து, என்றும்,
வரூஉம் என்ப; வயங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு,
முல்லை வேலி, நல்லூ ரானே!’
புறநானூறு 145 - பாடியவர் பரணர் – வையாவிக் கோப்பெரும் பேகன்
‘மடத்தகை மாமயில் பனிக்கும்’ என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்,
கடாஅ யானைக் கலிமான் பேக!
பசித்தும் வாரோம்; பாரமும் இலமே ;
களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி,
‘அறம்செய் தீமோ, அருள்வெய் யோய்!’ என,
இ·தியாம் இரந்த பரிசில்: அ·து இருளின்,
இனமணி நெடுந்தேர் ஏறி,
இன்னாது உறைவி அரும்படர் களைமே!
புறநானூறு 153 – பாடியவர் வண்பரணர், வல்வில் ஓரி
மழையணி குன்றத்துக் கிழவன், நாளும்,
இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்,
சுடர்விடு பசும்பூண், சூர்ப்பு அமை முன்கை,
அடுபோர் ஆனா, ஆதன் ஓரி
மாரி வண்கொடை காணிய, நன்றும்
சென்றது மன், எம் கண்ணுளங் கடும்பே;
பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,
யானை இனத்தொடு பெற்றனர்; நீங்கிப்,
பசியார் ஆகல் மாறுகொல்; விசிபிணிக்
கூடுகொள் இன்னியம் கறங்க,
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே?
158. புறநானூறு, பாடியவர்; பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன் : குமணன்
கடை ஏழு வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் இந்த பாடலில் உள்ளன
முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்,
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;
காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப்போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரைக், கூர்வேல்,
கூவிளங் கண்ணிக், கொடும்பூண், எழினியும்;
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை,
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்,
பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்,
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்,
கொள்ளார் ஓட்டிய, நள்ளையும்; என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கென, விரைந்து இவண்
உள்ளி வந்தனென், யானே; விசும்புஉறக்
கழைவளர் சிலம்பின் வழையடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!
இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!
இசைமேந் தோன்றிய வண்மையடு,
பகைமேம் படுக, நீ ஏந்திய வேலே!
புறநானூறு 240 பாடியவர்: குட்டுவன் கீரனார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும் ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடுஏந்து அல்குல், குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப,
மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்,
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை,
‘சுட்டுக் குவி’ எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி,
ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது;
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்
வாடிய பசியர் ஆகிப், பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர், இனியே.
புறநானூறு 241 பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்
‘திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார்
அண்டிரன் வரூஉம்’ என்ன, ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசும் கறங்க,
ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே.
11. சோழன் நெய்தலங்கனால் இளங்சேட் சென்னி
செய்யுள் 10சோழன் நெய்தலங்கனால் இளங்சேட் சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது
வழிபடுவோலைர வல் அறிதீயே,
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே
நீ மெய் கண்ட தீமை காணின்.
ஒப்படி நா டி, அத் தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே -
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசைஇல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ்,
நெய்தலங்கானல், நெடியோய்! –
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!”
பொருள்
நெய்தலங்கனால் என்ற ஊரை வென்ற புகழ்மிக்க சோழன் இளஞ்சேட் சென்னியே! உன்னை வழிபடுவோரைத் தீர அறியும் குணமுடையோனே! பிறர் மீது பழி சொல்வோரின் பேச்சை நம்பமாட்டாய், தீயவை செய்தவர் என்று ஆராய்ந்து அறிந்தால் அத்தீயவர்களுக்கு உரிய தண்டை வழங்கத் தவறமாட்டாய். அத்தீயவன் தன் தவற்றை உணர்ந்து உன்னைப் பணிந்து மன்னிப்புக் கேட்டல், அவனை மன்னித்து முன்னை விட அவன் மிது அன்பு செலுத்துவாய். உண்ண, உண்ண மேலும் ஆவல் கொள்ளும் அமிர்தம் போன்ற நல்லுணவை வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாது வழங்கும் வசைச் சொல் கோளாத வாழ்வு உடையவன். நின் தேவியர் மள்ளத்தியரைத் தழுவி இன்பம் அடைதல் அல்லாது பகை மள்ள அரசர் தொடாத மாலையணிந்த வலிமையான மார்பை உடைய மள்ளன் நீ, எந்தக் காரியத்தையும் நிதானமாகத் தவறில்லாமல், செம்மையுடன் செய்து, நின் புகழ் பரவி வாழுகின்ற சோழனே, உன் புகழ் மிக்க பண்புகளை முழுவதும் பாராட்டிப் போன்றுகின்றோம்.
தலைச்சங்கம்(பாண்டியநாட்டின்தலைநகரம்தென்மதுரை) கி.மு.400 - கி.மு. 200
இடைச்சங்கம்(பாண்டிய நாட்டின் தலைநகரம் கபாடபுரம்). கி.மு. 200 - கி.பி.100
கடைச்சங்கம்(பாண்டிய நாட்டின் தலைநகரம் வடமதுரை) கி.பி.100 - கி.பி.300
சங்க காலம் ( பாண்டிய நாட்டின் தலைநகரம் மதுரை ) கி.மு,400 - கி.பி.300
(கி.மு,400 முதல் கி.பி.300 வரை உள்ள காலப்பகுதி சங்க காலம் எனப்படும்)