கற்றவை, பெற்றவை, கேட்டவை, படித்தவை, அறிந்தவை
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்
வரலாற்று சான்றுகளை படிப்பதன் மூலமே நாட்டின் பழமையையும் குலத்தின் பெருமையையும்
அறியமுடியும்.
வீழ்வது கர்வம்
வெல்வது நியாயம்
கோபம் நம்பவைத்து ஏமாற்றுவது, ஒரு தற்காலிக பைதியம்
பொறாமை பொங்கிவரும் அவலங்களின் பெருமூச்சு
வெறுப்புணர்ச்சி தாங்கும் சக்தி இல்லாத மன நிலை
பேராசை பெறமுடியாத குறிக்கோலின் ஆணிவேர்
தற்பெருமை தன்னையே நம்பாத தாரக மந்திரம்
அவமதிப்பு துயரின் ஒட்டுமொத்த மறு அவதாரம்
அதிகாரபோதை கோபத்தின் பங்காளி
அகந்தை முன்னால் செல்லும் அவமானம் பின் தொடரும்
அகந்தையும் அறியாமையும் கை கோர்த்து வரும்
வறுமைக்கு தாய்வீடு சோம்பல்
இகழ்ச்சி முன்னால் செல்லும்,
புகழ் பின்னால் செல்லும்.
நல்லது நத்தை வேகத்தில் வரும்.
தீமை சிறகடித்துப் பறக்கும்.
வாழ்த்துபவர்களை விட வீழ்த்துபவர்களே அதிகம்
போற்றுபவர்களை விட தூற்றுபவர்களேஅதிகம்
போதிப்பவர்களை விட சாதிப்பவர்களே அதிகம்
புகழ்பவர்களை விட இகழ்பவர்களே அதிகம்
சேர்த்து வைப்பவர்களை விட பிரித்து வேடிக்கைபார்பவர்களே அதிகம்
சிரிக்க வைப்பவர்களை விட அழ வைப்பவர்களே அதிகம்
ஜெயித்தவர்களை விட தோற்றவர்களே அதிகம்
கடன் துன்பங்களின் தாய், வறுமையின் முதற்குழந்தை, வலையில் சிக்கிய பூச்சி.
நம்மை ஒருவர் கேட்காதவரையில் நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.
வேகமாக விவேகத்துடன் செயல்பட வேண்டும், அவசரம் தேவை இல்லை.
நம்பிக்கையும், அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால். இவ்விரண்டையும் பெறாவிட்டால் ஆற்றல் முற்றிலுமாக அழிந்து போகும்.
முயச்சிகளுக்கு எல்லைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் மிகப்பெரிய காரியங்களை சாதிக்கமுடியும்.
தடைகள் ஏற்படும் போதெல்லாம் துணிவு இருந்தால் மட்டுமே செயல்படமுடியும்.
தீய ஒழுக்கம், தரித்திரம், தொந்தரவு எனும் பெரும் தீமைகளில் இருந்து நம்மை காக்கும் ஒரே ஆயுதம் உளைப்பு மட்டுமே
மனிதனுக்கு பிரச்சினைகள் இல்லை என்றால், கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.
உங்கள் உள்ளம் உறுதியாய் இருக்கும் வரை, உங்கள் முயற்சி எதிலுமே தோல்வி அடையாது.
பிடிக்கப்படாத மீனுக்காக பேரம் பேச மாட்டான் புத்திசாலி.
உங்களை உயர்திக்கொள்ள விரும்பினால் வேறொருவரை உயர்திவிடுங்கள், நீங்கள் உயர்ந்து விடுவீர்கள்
சந்தர்ப்பம் நிறைய பேரை கைத் தூக்கிவிட சத்தமிட்டு அழைக்கிறது,
பலர் தூக்கம் கலைகின்றனர்
சிலர் எழுந்து நிற்கிறனர்,
ஒருசிலர் நடந்து வருகின்றனர்,
ஒருசிலர் ஓடிவருகின்றனர்,
மிகச்சிலர் மிகவேகமாக தன்னம்பிக்கையுடன் ஓடிவந்து உயர்கின்றனர்.
புதிய சவால்கள் நம்பலவீனங்களை அறிந்து நம்மைப் பலப்படுத்திக்கொள்ள கருவியாக அமைகிறது.
காலத்தின் மதிப்பு உங்களுக்கு தெறியுமானால் உங்கள் வாழ்வின் மதிப்பு உங்களுக்கு தெரிந்துவிடும்.
சிறிய நற்செயல்களுக்கு நீங்கள் காரனமாக இருந்தால், பெரிய செயல்களுக்கு நீங்கள் அதிகாரியாகலாம்.
மணிக்கணக்கில் பேசுவதை காட்டிலும் குறைந்த அளவு நற்காரியங்களைச் செய்வது மேலானது.
ஒழுக்கமும், தன்னம்பிக்கையுடன் கூடிய செயல் ஆற்றலும் பெரும் முதலீடுகளாகும்.
வாழ்க்கையில் தைரியமாகவும், தனம்பிக்கையுடன் செயல் ஆற்ற முடியாதவர்கள், அவர்கள் விரும்பிய எதையுமே அடையமுடிவதில்லை.
வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்கள் எதையுமே செய்வதில்லை.தாங்கள் செய்வதையே விதியாசமாக செய்கின்றனர்.
இன்பம் வரும்போது அதனை பற்றி சிந்தனை செய்யாதே, போகும்போது சிந்தனை செய்தால் தக்க வைதுக்கொள்ள உதவியாக இருக்கும்
உயர்ந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்தினால் பெருஞ்செயல்களாக மாற்றம் பெரும்.
இருளும் இரவும் சிந்தனையின் தாய், ஆரம்பிக்கும் போது முடிவினை சிந்தனை செய். செயலில் இறங்கியபின் சிந்தனை செய்யாதே
இருப்பது தெரியாமலும், இல்லாதது தெரியாமலும் இருப்பவனே செல்வந்தன்
தரித்திரம் சோம்பலுக்கு கிடைக்கும் கூலி.
செயல் மறக்கப்படுகிறது, அதன் பயன்கள் நிலைத்திருக்கின்றன.
ஏழைகள் உணவை தேடுகின்றனர்.
செல்வந்தர்கள் பசியை தேடுகின்றனர்.
வறியவன் உணவு தேடி ஓடுகிறான்,
செல்வந்தன் செரிமானம் தேடி ஓடுகிறான்
பசியைத் தேடி அலைவதைவிட உணவைத் தேடி அலைவதே மேல்
செல்வம் யாத்திரிகனப்போல் வந்து, விருந்தாளியாகி முடிவில் எஜமானனாகிவிடும்.
திறமை என்பது முடிவில்லாத ஒரு பயணம், கால மாற்றங்களுக்கு ஏற்ப நம் திறமைகளைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். எதிர்பார்ப்புகள் கடுமையாக இருக்கும் போது அமைதியான மனப்பான்மை அவசியம், அப்போது தான் தெளிவாக யோசிக்கமுடியும், சரியாகவும் திட்டமிட்டு முன்னேறவும் முடியும். தோல்வி நெருங்குவதுபோல் தெரிந்தாலும் பதற்றப்படாமல் அந்த நிலைமையை எப்படிச்சாமாளிப்பது என்பதைப் பற்றி மட்டும் யோசியுங்கள். புகழ் பெற்ற ஒருவரை குறை கூறி பழிப்பதன் மூலம் நீங்கள் புகழ் பெற முடியாது. உங்களின் அறிவற்ற செயலை விளம்பரம் செய்ய மட்டுமே அது உதவும். தோல்வியில் இருந்து பாடம் கற்று முன்னேறுவது போல் வெற்றிகளையும் அலசி ஆராய்ந்து தவறுகளை திருத்திக்கொள்ளுங்கள். முங்கூட்டியே யோசியுங்கள் முன்னேற்றம் பிரகாசமாகி பொங்கிப்பெருகும். இறுதியாக நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது, புத்திசாலியாகவும் இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்
சந்தோசமாக தெரியுமிடத்தில் வாழ நினைபதை விட நீ வாழும் இடத்தை சந்தோசமாக மாற்றிவிடு.
பார்வை எல்லோருக்கும் உண்டு ஆனால் தீர்கதரிசனம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
எல்லாம் நல்லதாக நடக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதுதான் மனிதனின் இயல்பு, நடப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குபவன்தான் தலைவன்.
நம்மை மதிப்பவர்களை, நம்முடைய நலங்களுக்காக உண்மையாக உழைப்பவர்களை தேடுங்கள்.
சுமையாக இருந்தாலும் சுமந்து பாருங்கள். சுமந்ததற்குச் சுமைகூலிகூட மிஞ்சவில்லை என்றாலும் கிடைத்த அனுபவத்தை எடை போடுங்கள்.
முயற்சி இருந்தால் வறுமை என்னும் தடையை திறமை என்னும் ஓட்டத்தால் கடந்து முன்னேற முடியும்.
ஆசை வந்தால் மனம் குரங்காய் மாறிவிடும், ஆசையை அடக்காவிட்டால் ஆபத்துகள் தேடிவரும்.
தன்னடக்கம்தான் நம்மை பெரும்வெற்றிக்கு கொண்டு செல்லும் படிக்கல்
புதிய விசயங்களை கற்றுக் கொள்ளும்போது இளமை தோற்றம் பெருகிறது. மன உளைச்சல் மறைந்து விடுகிறது.
நீ சிரித்துப் பார் உன் முகம் உனக்குப் பிடிக்கும்.
மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்.உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.
நம்மை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை என்பது பொய்.
மற்றவர்களை ஜெயிக்க நாம் பிறந்திருக்கிறோம் என்பது மெய்
முடியும் என்றால் முயற்சி செய்
முடியாது என்றால் பயிச்சி செய்
மரம் வெட்டி களைத்துப் போன மனிதன் தேடினான் மரத்தின் நிழலை.
பிறர் மீது அன்பு செலுத்துவதும், காட்டும் கருணையும், உதவி செய்வதும், நாம் ஏதோ சாதனை படைத்து விட்டதாக நினைக்கிறோம். மகிழ்ச்சியை கொடுப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், உதவி பெற்றவர்கள் முகம் மலரும்போது நமக்குளே வாட்டும் கவலைகள் மறந்தும், மறைந்தும் போகின்றன. அதனால் கொடுப்பதன் மூலம் மகிழ்வை நாம்பெருகிறோம் என்பதே மெய்.
சோதனைகளையும் வேதனைகளையும் கண்டு பயந்தால் சாதனைகளை படைத்திட முடியாது.
கொள்கைகள், கோட்பாடுகள், தோற்றங்கள் எனவும். செய்முறை, நடைமுறை, பயன்பாடு எனவும் அறிவியல் இரண்டு பகுதிகளை கொண்டது
கோள் சொல்லிய வாய், சுவர் ஏறிய கால், கையூட்டு வாங்கிய கை சும்மா இருக்காது.
பெண்ணுக்கு இயற்கை தரும் முதல் பரிசு அழகு.
முதல் திருப்பி எடுத்துக்கொள்ளும் பரிசும் அதேதான்.
மன்னிப்பும் நன்றியும் மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்புகள். கடற் பாசியை போல, நன்றி எப்போதும் ஈரமிக்கதாகவும், நிசப்தமாகவும் தன் இருப்பைக் காட்டிக் கொள்வதாகவே இருக்க வேண்டும்.
அறிவுள்ள மனிதன் சுயசோகம் நினைத்து அழக்கூடாது.
எந்த ஒரு விஷயத்தையும் காதலி பேசித் தெரிந்து கொள்கிறாள்
மனைவி பேசாமலே தெரிந்து கொள்கிறாள்
நண்பன் நினைக்கும் முன்பே தெரிந்து கொள்கிறான்
தாய்?
கடவுளுக்கும் மனிதருக்கும் என்ன வித்தியாசம்?
கடவுளை நரகத்திற்கு அனுப்பினால் கூட அங்கேயும் ஆனந்தமாக இருப்பார்.
மனிதனை சொர்கத்திற்கு அனுப்பினால் கூட அங்கேயும் அவன் துக்கமாகவே இருப்பான்.
கஷ்டப்படறவங்க முகத்துல சிரிப்பு இருக்காது
சிரிக்கறவங்க முகத்துல கஷ்டம் இருக்காது
ஆனா கஷ்டத்துலயும் சிரிக்கிறவங்ககிட்ட தேல்வி இருக்காது.
மற்றவறோடு உன்னை நீ ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறாயா?
அப்படியானால் உன்னை நீயே அவமதிதுக் கொள்கிறாய்.
அளவுக்கு மீறின சுகங்களையும் அளவுக்கு மீறின வசதிகளையும் சேர்க்கும்போது அதை அனுபவிக்கும் தன்மையையே உடலும் மனமும் இழந்துவிடுகிறது. எதை அடையவேண்டும் என்று நினைக்கிறோமோ அதை அடைந்து விடுகின்றோம். ஆனால் எதற்காக அடையவேண்டும் என்று வாழ்வை துவங்கியிருப்போமோ அதை அடைந்திருக்க மாட்டோம். அதன் விளைவுகள் தான் நிம்மதியின்மை, வெறுமைத்தன்மை, மந்தத்தன்மை என்பன.
நாம் எப்போதும் வாழ்வதற்குத் தயாராகிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் வாழ்வதில்லை.
குளியல் சோப்பை ஆற்றுக்குள் வீசிய குழந்தை அம்மாவிடம் சொன்னது, ஆறும் குளிக்கட்டும்மா அழுக்கா இருக்குல்லே
உண்ண எதுவும் கிடைக்காதபோது உண்ணாமல் இருந்தால் பட்டினி.
உண்ணுவதற்கு இருந்தும் உண்ணாமல் இருந்தால் விரதம்.
வீழுகிற போது கைகொட்டிச் சிரிக்கிறவரிடையே தூக்கிவிட நீட்டும் கைகள் தான் இனத்தின் கரங்கள்
எழுகிற போதெல்லாம் தலையில் குட்டுகிறவர்களை காட்டிலும் தோளை தட்டிகொடுப்பவர்கள்தான் குலம் காப்பவர்கள்
சிறியதோ, பெறியதோ சாதனைகளல்ல முக்கியம். சாதிக்க நினைக்கிற முயற்சிகள் தான் முக்கியம், (சாதனைகள் முக்கியமல்ல.)
எண்ணங்களே மாற்றங்களை விதைக்கும் நல்முத்துக்கள், இனம் கண்டு வாழ்த்துங்கள், வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள் வாழ்க்கை வாழ்ந்து முடிந்த பிறகும்.
வராத மதிபெண்களுக்காக வார்த்தைகளை இறைப்பதை விட வாங்க வேண்டிய மதிபெண்களுக்காக அரவணைப்பது அர்த்தமுள்ளது.
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது
எதெது எங்கெங்கு இருக்க வேண்டுமோ, அதது அங்கங்கே இருப்பது தான் அழகு. மாளிகைக்கும் மண்குடிசைக்கும் பொருந்தும் இவ்வாக்கியங்களை ஊரளவில், உலகளவில் சிந்தித்துப் பாருங்கள். இனம் என்பது அன்றும், இன்றும், என்றும் ஒரு ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கான கட்டுப்பாடே என்பது புலனாகும்.
பணமும் பட்டமும் பதவியும் மக்களால் விரும்பப்படுகின்றன என்பதற்காக தீமையின் துனைகொண்டு அவற்றை தேடிக்கொள்ளாதே!
வறுமையும் தாழ்வும் பட்டணியும் மனிதர்களால் வெறுக்கப்படுகின்றன என்பதற்காக தீமையின் துனைகொண்டு அவற்றை போக்கிக்கொள்ளாதே!
கொண்ட கொள்கையில் உறுதியும், சாதனைகளை சாதிப்பதில் சாமர்த்தியமும் வேண்டும்.
சுதந்திரமானவனுக்கு சுமை தெரியாது.
விருப்பமுடன் சுமந்து பார் சுமை தெரியாது.
தேவைகள் அதிகமானபோது தேடல்களும் விரிவடைந்தன. சேமித்த குப்பைகளை அகற்றுகையில் சேமிப்பும் கரைந்தது நம்மை அறியாமல்.
முயன்றவன் முன்னேருவான். முடியாது என்பவன் முடங்கிடுவான்.
ஓட்டுறவன் இளிச்சவாயன்னா மாடும் மச்சான் போடுமாம்
ஒளியும் ஓசையும் ஒன்னா வராது
முரண்டு பிடிக்கும்முன் யோசியுங்கள், லட்சியங்களை நோக்கி நகருங்கள்.
பொருமையில்லாமல் செய்யும் காரியங்கள் வெறுமையில்முடியும்.
அறிவுத் துணையுடன் செயல்பட்டு கானமல் போனவர்கள் ஏராளம்.உங்கள் இதயமும் உள்ளுணர்வும் உங்களை வழிநடத்தட்டும்,
உங்கள் வாழ்க்கை மிகச்சிறியது. உங்களுக்காவே அதனை வாழுங்கள். துருபிடித்த சித்தாந்தங்களுக்காக வாழ்க்கையை வீணாக்காதீர்கள். அடுத்தவர்களின் கருத்துச்சத்தங்கள் உங்கள் உள்ளுணர்வின் சத்தத்தை நீர்த்துப்போகச் செய்ய அனுமதிக்காதீர்கள்.
தேவையானதை மட்டும் பேசுங்கள், அநாவசிய சுற்றிவளைத்தல் வேன்டாம்
தொலை நோக்குப் பார்வை அவசியம்
எதையும் அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள்
வேலைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுங்கள்
எதிலும் சமநிலை இருக்கட்டும் ஒரு விஷயத்துக்காக மற்றொன்றை இழக்காதீர்கள்
தொடர்ந்து முன்னேற்றம் அவசியம், மாணவர்களாக்வே இருங்கள்.
முடிவெடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
செயலில் இறங்குங்கள்
சமவாய்ப்புக் கொடுங்கள்
வன்முறையை மறந்து விடுங்கள்
கட்டுப்பாடு, அதிகாரம்
கேள்விகேட்க பழகுங்கள்
ஆடம்பரத்தை ஒழியுங்கள்
உண்மை உங்கள் முகவரி என்பதனை பதிவு செய்யுங்கள்
உடற்பயிற்சி செய்கிறீர்களா? கூடவே மனப் பயிற்சியும் செய்யுங்கள் கலப்படம் இல்லாத சந்தோசம் பெறுவீர்கள்.
எந்த அறிவியல் படைப்பும் நம்மை ஆளக்கூடாது, நாம் தான் அதனை ஆளவேண்டும்.
உனக்கென்று ஒரு தனிப்பாதையை உருவாக்கிக்கொள்.
பிடித்ததைச் செய்,
மனதில் உள்ளதைப் பேசு,
நினைத்தவர்களுக்கு எல்லாம் உதவி செய்,
இஷ்டம் போல் வாழ்.
உலகம் என்ன சொல்லும்!
அது அப்படித்தான், தறுதல, யார் பேச்சையும் கேக்காது.
சலிப்படைந்தால் சாதனைகள் இல்லை
சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்
உபதேசம் தவிர்த்து உதாரணமாக இருப்போம்
ஓடாதே! திரும்பிப்பார்
எட்டி நடை போட்டு விடு
முடியும் அது உன்னாலே
வெற்றி உனைத் தேடிவரும்.
வழியில் பல பள்ளம் வரும்
வா! வா! வந்து அதை தாண்டி விடு
எல்லாம் வரும் தன்னாலே உன் முன்னாலே.
ரகசியமாய் ரசித்த கனவுகள் நனவாகும்
மனதிற்குள் தேக்கி வைத்த ஆசைகள் நிறைவேறும்
அத்தனையும் பூர்த்தியாகும் நேரமிது
நீங்கள் விரும்பும் வெற்றி எது என்று தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். பணம் படைப்பது மட்டுமே வெற்றியாகிவிடாது.
உங்கள் வெற்றி தோல்வி இரண்டுமே நீங்கள் எடுக்கும் முடிவுகளில் தான் இருக்கிறது. அதிர்ஷ்டத்தாலோ, துரதிருஷ்டத்தாலோ இல்லை.
வெற்றிக்கு சில பழக்கங்கள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் அவசியம். ஜெயித்தவர்ளை அடையாளம் கண்டு கற்றுக்கொள்ளுங்கள்.
சிறிய உதவிகள் செய்தவர்களுக்குக்கூட நன்றி சொல்லப் பழகுங்கள்.
திறமை உள்ளவர்களுக்கு மரியாதை கொடுங்கள். அகம்பாவம் வேண்டாம்.
சில நேரங்களில் ஒன்றை பெருவதற்கு இன்னொன்றை இழக்க வேண்டிவரும். எது முக்கியம் என்று யோசித்து முடிவெடுங்கள்
தோல்வியே இல்லாத வாழ்க்கை பாடமாகாது. தோற்கலாம் தப்பிலை. அவ்வப்போது தோல்வியையும் திடமனதுடன் சந்தியுங்கள். வெற்றி உங்களை தேடிவரும்.
நீங்கள் எவ்வளவு ஜெயித்தாலும், எத்தனை உயரம் சென்றாலும் மனித நேயத்தை உங்களுடன் வளர்த்துக்கொள்ளுங்கள்.
வெற்றிக்காக கொள்கைகளையும் நடந்து வந்த பாதையும் மறந்து விடாதீர்கள்.
தெரியாது என்கிற தாழ்வு மனப்பான்மையை அகற்றுங்கள். வளர்ச்சி பெரும் வாய்ப்பு உண்டு என்ற நம்பிகையுடன் செயல் படுங்கள். நமக்கு மேலே நம்மை தாண்டி ஒரு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கையில் செயல் படுங்கள்.
மற்றவர்களிடம் உள்ள குறைகளைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே கவனியுங்கள்.அப்போது தான் நீங்கள் சந்தோஷமாக இருக்கமுடியும். எல்லேரிடமும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் நாம் பார்த்துக் கற்றுக்கொண்டால் சண்டையோ, சச்சரவோ, பொறாமையோ, போட்டியோ, எரிச்சலோ நம்மை நெருங்குமா என்ன?
அழகென்ன, அறிவென்ன, மனமென்ன, குணமென்ன, கோபம் வரலாமா?
காய்ந்த மரம் தான் கல்லடி படும்
இயற்கையின் பேரழிவுக்கு நாம் போராடும் போது இயற்கையோடு இனைந்த வாழ்க்கை எப்போது எப்படி கிடைக்கும் ?
கற்களை சிற்பமாக்கியவன் சுவாசத்திற்க்கு போராடி இயற்கையை வென்று விட்டதாய் ஆர்ப்பரிக்கிறான்.
சோகத்திலும் சுகம் காண துடிக்கிறோம்,
காயத்தையும் சோகத்தையும் சுமந்து புன்னகைத்து வாழ வேண்டிய அவலம்
விரும்பிய வாழ்வு அமையவில்லை, இருண்டு கிடந்த சமூகத்தின் கூக்குரலும், சின்னச்சின்ன ஆசைகளும் சிம்மாசமிட்ட போது விதியின் விருப்பம் என்கிறோம்.
உலகில் ஏழாயிரம் மொழிகள் பேசப்பட்டதாகவும், காலப்போக்கில் பலமொழிகள் வழக்கழிந்து போனதாகவும் மொழியியல் ஆய்வாளர்கள்,வள்ளுனர்கள், அறிஞர்கள் கூறுகின்றனர். இவற்றுள் ஆறு மொழிகளே தொல்சீர் மொழியாகவும், செம்மொழிகள் எனவும் உயர்வாக போற்றப்படுகின்றன.
1. லத்தீன்
2. சமஸ்கிருதம்
3. கிரேக்கம்
4. ஹீப்ரு
5. சீனம்
6. தமிழ். ஆகியவையே அந்த உயர்ந்த பெருமைக்கு உரியவை.
தற்காலத்தில் லத்தீன் பேச்சுவழக்கில் இல்லை.
சமஸ்கிருதம் தேவமொழி என்று பார்பணர்களால் அலங்கரிக்கப்பட்டு மனிதர்களால் பேசமுடியாமல் அழிந்து மரித்துப்போனது.
கிரேக்கம் வழக்கழிந்து மீண்டும் மறு அவதாரம் பெற்றுள்ளது.
ஹீப்ரு தன் உருமாறி இவ்ரித் என்ற பெயருடன் இஸ்ரேலியர்களால் பேசப்படுகிறது.
சீனமும் தமிழும் மட்டுமே இடையறாமல் இன்று வரை மக்கள் நாவில் நடனமிடுகின்றன.
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்
வரலாற்று சான்றுகளை படிப்பதன் மூலமே நாட்டின் பழமையையும் குலத்தின் பெருமையையும்
அறியமுடியும்.
வீழ்வது கர்வம்
வெல்வது நியாயம்
கோபம் நம்பவைத்து ஏமாற்றுவது, ஒரு தற்காலிக பைதியம்
பொறாமை பொங்கிவரும் அவலங்களின் பெருமூச்சு
வெறுப்புணர்ச்சி தாங்கும் சக்தி இல்லாத மன நிலை
பேராசை பெறமுடியாத குறிக்கோலின் ஆணிவேர்
தற்பெருமை தன்னையே நம்பாத தாரக மந்திரம்
அவமதிப்பு துயரின் ஒட்டுமொத்த மறு அவதாரம்
அதிகாரபோதை கோபத்தின் பங்காளி
அகந்தை முன்னால் செல்லும் அவமானம் பின் தொடரும்
அகந்தையும் அறியாமையும் கை கோர்த்து வரும்
வறுமைக்கு தாய்வீடு சோம்பல்
இகழ்ச்சி முன்னால் செல்லும்,
புகழ் பின்னால் செல்லும்.
நல்லது நத்தை வேகத்தில் வரும்.
தீமை சிறகடித்துப் பறக்கும்.
வாழ்த்துபவர்களை விட வீழ்த்துபவர்களே அதிகம்
போற்றுபவர்களை விட தூற்றுபவர்களேஅதிகம்
போதிப்பவர்களை விட சாதிப்பவர்களே அதிகம்
புகழ்பவர்களை விட இகழ்பவர்களே அதிகம்
சேர்த்து வைப்பவர்களை விட பிரித்து வேடிக்கைபார்பவர்களே அதிகம்
சிரிக்க வைப்பவர்களை விட அழ வைப்பவர்களே அதிகம்
ஜெயித்தவர்களை விட தோற்றவர்களே அதிகம்
கடன் துன்பங்களின் தாய், வறுமையின் முதற்குழந்தை, வலையில் சிக்கிய பூச்சி.
நம்மை ஒருவர் கேட்காதவரையில் நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.
வேகமாக விவேகத்துடன் செயல்பட வேண்டும், அவசரம் தேவை இல்லை.
நம்பிக்கையும், அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால். இவ்விரண்டையும் பெறாவிட்டால் ஆற்றல் முற்றிலுமாக அழிந்து போகும்.
முயச்சிகளுக்கு எல்லைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் மிகப்பெரிய காரியங்களை சாதிக்கமுடியும்.
தடைகள் ஏற்படும் போதெல்லாம் துணிவு இருந்தால் மட்டுமே செயல்படமுடியும்.
தீய ஒழுக்கம், தரித்திரம், தொந்தரவு எனும் பெரும் தீமைகளில் இருந்து நம்மை காக்கும் ஒரே ஆயுதம் உளைப்பு மட்டுமே
மனிதனுக்கு பிரச்சினைகள் இல்லை என்றால், கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.
உங்கள் உள்ளம் உறுதியாய் இருக்கும் வரை, உங்கள் முயற்சி எதிலுமே தோல்வி அடையாது.
பிடிக்கப்படாத மீனுக்காக பேரம் பேச மாட்டான் புத்திசாலி.
உங்களை உயர்திக்கொள்ள விரும்பினால் வேறொருவரை உயர்திவிடுங்கள், நீங்கள் உயர்ந்து விடுவீர்கள்
சந்தர்ப்பம் நிறைய பேரை கைத் தூக்கிவிட சத்தமிட்டு அழைக்கிறது,
பலர் தூக்கம் கலைகின்றனர்
சிலர் எழுந்து நிற்கிறனர்,
ஒருசிலர் நடந்து வருகின்றனர்,
ஒருசிலர் ஓடிவருகின்றனர்,
மிகச்சிலர் மிகவேகமாக தன்னம்பிக்கையுடன் ஓடிவந்து உயர்கின்றனர்.
புதிய சவால்கள் நம்பலவீனங்களை அறிந்து நம்மைப் பலப்படுத்திக்கொள்ள கருவியாக அமைகிறது.
காலத்தின் மதிப்பு உங்களுக்கு தெறியுமானால் உங்கள் வாழ்வின் மதிப்பு உங்களுக்கு தெரிந்துவிடும்.
சிறிய நற்செயல்களுக்கு நீங்கள் காரனமாக இருந்தால், பெரிய செயல்களுக்கு நீங்கள் அதிகாரியாகலாம்.
மணிக்கணக்கில் பேசுவதை காட்டிலும் குறைந்த அளவு நற்காரியங்களைச் செய்வது மேலானது.
ஒழுக்கமும், தன்னம்பிக்கையுடன் கூடிய செயல் ஆற்றலும் பெரும் முதலீடுகளாகும்.
வாழ்க்கையில் தைரியமாகவும், தனம்பிக்கையுடன் செயல் ஆற்ற முடியாதவர்கள், அவர்கள் விரும்பிய எதையுமே அடையமுடிவதில்லை.
வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்கள் எதையுமே செய்வதில்லை.தாங்கள் செய்வதையே விதியாசமாக செய்கின்றனர்.
இன்பம் வரும்போது அதனை பற்றி சிந்தனை செய்யாதே, போகும்போது சிந்தனை செய்தால் தக்க வைதுக்கொள்ள உதவியாக இருக்கும்
உயர்ந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்தினால் பெருஞ்செயல்களாக மாற்றம் பெரும்.
இருளும் இரவும் சிந்தனையின் தாய், ஆரம்பிக்கும் போது முடிவினை சிந்தனை செய். செயலில் இறங்கியபின் சிந்தனை செய்யாதே
இருப்பது தெரியாமலும், இல்லாதது தெரியாமலும் இருப்பவனே செல்வந்தன்
தரித்திரம் சோம்பலுக்கு கிடைக்கும் கூலி.
செயல் மறக்கப்படுகிறது, அதன் பயன்கள் நிலைத்திருக்கின்றன.
ஏழைகள் உணவை தேடுகின்றனர்.
செல்வந்தர்கள் பசியை தேடுகின்றனர்.
வறியவன் உணவு தேடி ஓடுகிறான்,
செல்வந்தன் செரிமானம் தேடி ஓடுகிறான்
பசியைத் தேடி அலைவதைவிட உணவைத் தேடி அலைவதே மேல்
செல்வம் யாத்திரிகனப்போல் வந்து, விருந்தாளியாகி முடிவில் எஜமானனாகிவிடும்.
திறமை என்பது முடிவில்லாத ஒரு பயணம், கால மாற்றங்களுக்கு ஏற்ப நம் திறமைகளைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். எதிர்பார்ப்புகள் கடுமையாக இருக்கும் போது அமைதியான மனப்பான்மை அவசியம், அப்போது தான் தெளிவாக யோசிக்கமுடியும், சரியாகவும் திட்டமிட்டு முன்னேறவும் முடியும். தோல்வி நெருங்குவதுபோல் தெரிந்தாலும் பதற்றப்படாமல் அந்த நிலைமையை எப்படிச்சாமாளிப்பது என்பதைப் பற்றி மட்டும் யோசியுங்கள். புகழ் பெற்ற ஒருவரை குறை கூறி பழிப்பதன் மூலம் நீங்கள் புகழ் பெற முடியாது. உங்களின் அறிவற்ற செயலை விளம்பரம் செய்ய மட்டுமே அது உதவும். தோல்வியில் இருந்து பாடம் கற்று முன்னேறுவது போல் வெற்றிகளையும் அலசி ஆராய்ந்து தவறுகளை திருத்திக்கொள்ளுங்கள். முங்கூட்டியே யோசியுங்கள் முன்னேற்றம் பிரகாசமாகி பொங்கிப்பெருகும். இறுதியாக நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது, புத்திசாலியாகவும் இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்
சந்தோசமாக தெரியுமிடத்தில் வாழ நினைபதை விட நீ வாழும் இடத்தை சந்தோசமாக மாற்றிவிடு.
பார்வை எல்லோருக்கும் உண்டு ஆனால் தீர்கதரிசனம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
எல்லாம் நல்லதாக நடக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதுதான் மனிதனின் இயல்பு, நடப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குபவன்தான் தலைவன்.
நம்மை மதிப்பவர்களை, நம்முடைய நலங்களுக்காக உண்மையாக உழைப்பவர்களை தேடுங்கள்.
சுமையாக இருந்தாலும் சுமந்து பாருங்கள். சுமந்ததற்குச் சுமைகூலிகூட மிஞ்சவில்லை என்றாலும் கிடைத்த அனுபவத்தை எடை போடுங்கள்.
முயற்சி இருந்தால் வறுமை என்னும் தடையை திறமை என்னும் ஓட்டத்தால் கடந்து முன்னேற முடியும்.
ஆசை வந்தால் மனம் குரங்காய் மாறிவிடும், ஆசையை அடக்காவிட்டால் ஆபத்துகள் தேடிவரும்.
தன்னடக்கம்தான் நம்மை பெரும்வெற்றிக்கு கொண்டு செல்லும் படிக்கல்
புதிய விசயங்களை கற்றுக் கொள்ளும்போது இளமை தோற்றம் பெருகிறது. மன உளைச்சல் மறைந்து விடுகிறது.
நீ சிரித்துப் பார் உன் முகம் உனக்குப் பிடிக்கும்.
மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்.உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.
நம்மை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை என்பது பொய்.
மற்றவர்களை ஜெயிக்க நாம் பிறந்திருக்கிறோம் என்பது மெய்
முடியும் என்றால் முயற்சி செய்
முடியாது என்றால் பயிச்சி செய்
மரம் வெட்டி களைத்துப் போன மனிதன் தேடினான் மரத்தின் நிழலை.
பிறர் மீது அன்பு செலுத்துவதும், காட்டும் கருணையும், உதவி செய்வதும், நாம் ஏதோ சாதனை படைத்து விட்டதாக நினைக்கிறோம். மகிழ்ச்சியை கொடுப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், உதவி பெற்றவர்கள் முகம் மலரும்போது நமக்குளே வாட்டும் கவலைகள் மறந்தும், மறைந்தும் போகின்றன. அதனால் கொடுப்பதன் மூலம் மகிழ்வை நாம்பெருகிறோம் என்பதே மெய்.
சோதனைகளையும் வேதனைகளையும் கண்டு பயந்தால் சாதனைகளை படைத்திட முடியாது.
கொள்கைகள், கோட்பாடுகள், தோற்றங்கள் எனவும். செய்முறை, நடைமுறை, பயன்பாடு எனவும் அறிவியல் இரண்டு பகுதிகளை கொண்டது
கோள் சொல்லிய வாய், சுவர் ஏறிய கால், கையூட்டு வாங்கிய கை சும்மா இருக்காது.
பெண்ணுக்கு இயற்கை தரும் முதல் பரிசு அழகு.
முதல் திருப்பி எடுத்துக்கொள்ளும் பரிசும் அதேதான்.
மன்னிப்பும் நன்றியும் மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்புகள். கடற் பாசியை போல, நன்றி எப்போதும் ஈரமிக்கதாகவும், நிசப்தமாகவும் தன் இருப்பைக் காட்டிக் கொள்வதாகவே இருக்க வேண்டும்.
அறிவுள்ள மனிதன் சுயசோகம் நினைத்து அழக்கூடாது.
எந்த ஒரு விஷயத்தையும் காதலி பேசித் தெரிந்து கொள்கிறாள்
மனைவி பேசாமலே தெரிந்து கொள்கிறாள்
நண்பன் நினைக்கும் முன்பே தெரிந்து கொள்கிறான்
தாய்?
கடவுளுக்கும் மனிதருக்கும் என்ன வித்தியாசம்?
கடவுளை நரகத்திற்கு அனுப்பினால் கூட அங்கேயும் ஆனந்தமாக இருப்பார்.
மனிதனை சொர்கத்திற்கு அனுப்பினால் கூட அங்கேயும் அவன் துக்கமாகவே இருப்பான்.
கஷ்டப்படறவங்க முகத்துல சிரிப்பு இருக்காது
சிரிக்கறவங்க முகத்துல கஷ்டம் இருக்காது
ஆனா கஷ்டத்துலயும் சிரிக்கிறவங்ககிட்ட தேல்வி இருக்காது.
மற்றவறோடு உன்னை நீ ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறாயா?
அப்படியானால் உன்னை நீயே அவமதிதுக் கொள்கிறாய்.
அளவுக்கு மீறின சுகங்களையும் அளவுக்கு மீறின வசதிகளையும் சேர்க்கும்போது அதை அனுபவிக்கும் தன்மையையே உடலும் மனமும் இழந்துவிடுகிறது. எதை அடையவேண்டும் என்று நினைக்கிறோமோ அதை அடைந்து விடுகின்றோம். ஆனால் எதற்காக அடையவேண்டும் என்று வாழ்வை துவங்கியிருப்போமோ அதை அடைந்திருக்க மாட்டோம். அதன் விளைவுகள் தான் நிம்மதியின்மை, வெறுமைத்தன்மை, மந்தத்தன்மை என்பன.
நாம் எப்போதும் வாழ்வதற்குத் தயாராகிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் வாழ்வதில்லை.
குளியல் சோப்பை ஆற்றுக்குள் வீசிய குழந்தை அம்மாவிடம் சொன்னது, ஆறும் குளிக்கட்டும்மா அழுக்கா இருக்குல்லே
உண்ண எதுவும் கிடைக்காதபோது உண்ணாமல் இருந்தால் பட்டினி.
உண்ணுவதற்கு இருந்தும் உண்ணாமல் இருந்தால் விரதம்.
வீழுகிற போது கைகொட்டிச் சிரிக்கிறவரிடையே தூக்கிவிட நீட்டும் கைகள் தான் இனத்தின் கரங்கள்
எழுகிற போதெல்லாம் தலையில் குட்டுகிறவர்களை காட்டிலும் தோளை தட்டிகொடுப்பவர்கள்தான் குலம் காப்பவர்கள்
சிறியதோ, பெறியதோ சாதனைகளல்ல முக்கியம். சாதிக்க நினைக்கிற முயற்சிகள் தான் முக்கியம், (சாதனைகள் முக்கியமல்ல.)
எண்ணங்களே மாற்றங்களை விதைக்கும் நல்முத்துக்கள், இனம் கண்டு வாழ்த்துங்கள், வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள் வாழ்க்கை வாழ்ந்து முடிந்த பிறகும்.
வராத மதிபெண்களுக்காக வார்த்தைகளை இறைப்பதை விட வாங்க வேண்டிய மதிபெண்களுக்காக அரவணைப்பது அர்த்தமுள்ளது.
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது
எதெது எங்கெங்கு இருக்க வேண்டுமோ, அதது அங்கங்கே இருப்பது தான் அழகு. மாளிகைக்கும் மண்குடிசைக்கும் பொருந்தும் இவ்வாக்கியங்களை ஊரளவில், உலகளவில் சிந்தித்துப் பாருங்கள். இனம் என்பது அன்றும், இன்றும், என்றும் ஒரு ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கான கட்டுப்பாடே என்பது புலனாகும்.
பணமும் பட்டமும் பதவியும் மக்களால் விரும்பப்படுகின்றன என்பதற்காக தீமையின் துனைகொண்டு அவற்றை தேடிக்கொள்ளாதே!
வறுமையும் தாழ்வும் பட்டணியும் மனிதர்களால் வெறுக்கப்படுகின்றன என்பதற்காக தீமையின் துனைகொண்டு அவற்றை போக்கிக்கொள்ளாதே!
கொண்ட கொள்கையில் உறுதியும், சாதனைகளை சாதிப்பதில் சாமர்த்தியமும் வேண்டும்.
சுதந்திரமானவனுக்கு சுமை தெரியாது.
விருப்பமுடன் சுமந்து பார் சுமை தெரியாது.
தேவைகள் அதிகமானபோது தேடல்களும் விரிவடைந்தன. சேமித்த குப்பைகளை அகற்றுகையில் சேமிப்பும் கரைந்தது நம்மை அறியாமல்.
முயன்றவன் முன்னேருவான். முடியாது என்பவன் முடங்கிடுவான்.
ஓட்டுறவன் இளிச்சவாயன்னா மாடும் மச்சான் போடுமாம்
ஒளியும் ஓசையும் ஒன்னா வராது
முரண்டு பிடிக்கும்முன் யோசியுங்கள், லட்சியங்களை நோக்கி நகருங்கள்.
பொருமையில்லாமல் செய்யும் காரியங்கள் வெறுமையில்முடியும்.
அறிவுத் துணையுடன் செயல்பட்டு கானமல் போனவர்கள் ஏராளம்.உங்கள் இதயமும் உள்ளுணர்வும் உங்களை வழிநடத்தட்டும்,
உங்கள் வாழ்க்கை மிகச்சிறியது. உங்களுக்காவே அதனை வாழுங்கள். துருபிடித்த சித்தாந்தங்களுக்காக வாழ்க்கையை வீணாக்காதீர்கள். அடுத்தவர்களின் கருத்துச்சத்தங்கள் உங்கள் உள்ளுணர்வின் சத்தத்தை நீர்த்துப்போகச் செய்ய அனுமதிக்காதீர்கள்.
தேவையானதை மட்டும் பேசுங்கள், அநாவசிய சுற்றிவளைத்தல் வேன்டாம்
தொலை நோக்குப் பார்வை அவசியம்
எதையும் அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள்
வேலைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுங்கள்
எதிலும் சமநிலை இருக்கட்டும் ஒரு விஷயத்துக்காக மற்றொன்றை இழக்காதீர்கள்
தொடர்ந்து முன்னேற்றம் அவசியம், மாணவர்களாக்வே இருங்கள்.
முடிவெடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
செயலில் இறங்குங்கள்
சமவாய்ப்புக் கொடுங்கள்
வன்முறையை மறந்து விடுங்கள்
கட்டுப்பாடு, அதிகாரம்
கேள்விகேட்க பழகுங்கள்
ஆடம்பரத்தை ஒழியுங்கள்
உண்மை உங்கள் முகவரி என்பதனை பதிவு செய்யுங்கள்
உடற்பயிற்சி செய்கிறீர்களா? கூடவே மனப் பயிற்சியும் செய்யுங்கள் கலப்படம் இல்லாத சந்தோசம் பெறுவீர்கள்.
எந்த அறிவியல் படைப்பும் நம்மை ஆளக்கூடாது, நாம் தான் அதனை ஆளவேண்டும்.
உனக்கென்று ஒரு தனிப்பாதையை உருவாக்கிக்கொள்.
பிடித்ததைச் செய்,
மனதில் உள்ளதைப் பேசு,
நினைத்தவர்களுக்கு எல்லாம் உதவி செய்,
இஷ்டம் போல் வாழ்.
உலகம் என்ன சொல்லும்!
அது அப்படித்தான், தறுதல, யார் பேச்சையும் கேக்காது.
சலிப்படைந்தால் சாதனைகள் இல்லை
சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்
உபதேசம் தவிர்த்து உதாரணமாக இருப்போம்
ஓடாதே! திரும்பிப்பார்
எட்டி நடை போட்டு விடு
முடியும் அது உன்னாலே
வெற்றி உனைத் தேடிவரும்.
வழியில் பல பள்ளம் வரும்
வா! வா! வந்து அதை தாண்டி விடு
எல்லாம் வரும் தன்னாலே உன் முன்னாலே.
ரகசியமாய் ரசித்த கனவுகள் நனவாகும்
மனதிற்குள் தேக்கி வைத்த ஆசைகள் நிறைவேறும்
அத்தனையும் பூர்த்தியாகும் நேரமிது
நீங்கள் விரும்பும் வெற்றி எது என்று தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். பணம் படைப்பது மட்டுமே வெற்றியாகிவிடாது.
உங்கள் வெற்றி தோல்வி இரண்டுமே நீங்கள் எடுக்கும் முடிவுகளில் தான் இருக்கிறது. அதிர்ஷ்டத்தாலோ, துரதிருஷ்டத்தாலோ இல்லை.
வெற்றிக்கு சில பழக்கங்கள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் அவசியம். ஜெயித்தவர்ளை அடையாளம் கண்டு கற்றுக்கொள்ளுங்கள்.
சிறிய உதவிகள் செய்தவர்களுக்குக்கூட நன்றி சொல்லப் பழகுங்கள்.
திறமை உள்ளவர்களுக்கு மரியாதை கொடுங்கள். அகம்பாவம் வேண்டாம்.
சில நேரங்களில் ஒன்றை பெருவதற்கு இன்னொன்றை இழக்க வேண்டிவரும். எது முக்கியம் என்று யோசித்து முடிவெடுங்கள்
தோல்வியே இல்லாத வாழ்க்கை பாடமாகாது. தோற்கலாம் தப்பிலை. அவ்வப்போது தோல்வியையும் திடமனதுடன் சந்தியுங்கள். வெற்றி உங்களை தேடிவரும்.
நீங்கள் எவ்வளவு ஜெயித்தாலும், எத்தனை உயரம் சென்றாலும் மனித நேயத்தை உங்களுடன் வளர்த்துக்கொள்ளுங்கள்.
வெற்றிக்காக கொள்கைகளையும் நடந்து வந்த பாதையும் மறந்து விடாதீர்கள்.
தெரியாது என்கிற தாழ்வு மனப்பான்மையை அகற்றுங்கள். வளர்ச்சி பெரும் வாய்ப்பு உண்டு என்ற நம்பிகையுடன் செயல் படுங்கள். நமக்கு மேலே நம்மை தாண்டி ஒரு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கையில் செயல் படுங்கள்.
மற்றவர்களிடம் உள்ள குறைகளைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே கவனியுங்கள்.அப்போது தான் நீங்கள் சந்தோஷமாக இருக்கமுடியும். எல்லேரிடமும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் நாம் பார்த்துக் கற்றுக்கொண்டால் சண்டையோ, சச்சரவோ, பொறாமையோ, போட்டியோ, எரிச்சலோ நம்மை நெருங்குமா என்ன?
அழகென்ன, அறிவென்ன, மனமென்ன, குணமென்ன, கோபம் வரலாமா?
காய்ந்த மரம் தான் கல்லடி படும்
இயற்கையின் பேரழிவுக்கு நாம் போராடும் போது இயற்கையோடு இனைந்த வாழ்க்கை எப்போது எப்படி கிடைக்கும் ?
கற்களை சிற்பமாக்கியவன் சுவாசத்திற்க்கு போராடி இயற்கையை வென்று விட்டதாய் ஆர்ப்பரிக்கிறான்.
சோகத்திலும் சுகம் காண துடிக்கிறோம்,
காயத்தையும் சோகத்தையும் சுமந்து புன்னகைத்து வாழ வேண்டிய அவலம்
விரும்பிய வாழ்வு அமையவில்லை, இருண்டு கிடந்த சமூகத்தின் கூக்குரலும், சின்னச்சின்ன ஆசைகளும் சிம்மாசமிட்ட போது விதியின் விருப்பம் என்கிறோம்.
உலகில் ஏழாயிரம் மொழிகள் பேசப்பட்டதாகவும், காலப்போக்கில் பலமொழிகள் வழக்கழிந்து போனதாகவும் மொழியியல் ஆய்வாளர்கள்,வள்ளுனர்கள், அறிஞர்கள் கூறுகின்றனர். இவற்றுள் ஆறு மொழிகளே தொல்சீர் மொழியாகவும், செம்மொழிகள் எனவும் உயர்வாக போற்றப்படுகின்றன.
1. லத்தீன்
2. சமஸ்கிருதம்
3. கிரேக்கம்
4. ஹீப்ரு
5. சீனம்
6. தமிழ். ஆகியவையே அந்த உயர்ந்த பெருமைக்கு உரியவை.
தற்காலத்தில் லத்தீன் பேச்சுவழக்கில் இல்லை.
சமஸ்கிருதம் தேவமொழி என்று பார்பணர்களால் அலங்கரிக்கப்பட்டு மனிதர்களால் பேசமுடியாமல் அழிந்து மரித்துப்போனது.
கிரேக்கம் வழக்கழிந்து மீண்டும் மறு அவதாரம் பெற்றுள்ளது.
ஹீப்ரு தன் உருமாறி இவ்ரித் என்ற பெயருடன் இஸ்ரேலியர்களால் பேசப்படுகிறது.
சீனமும் தமிழும் மட்டுமே இடையறாமல் இன்று வரை மக்கள் நாவில் நடனமிடுகின்றன.