சங்கத் தமிழ் இலக்கியம்
சங்கத் தமிழ் இலக்கியத்தில் கபிலரும் பரணரும் இரட்டைப் புலவர்கள் போலக் கருதப்படுகிறார்கள். இவ்விருவரும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. கபிலர், பாட்டு எண்ணிக்கையால் (205 பாடல்கள்) முதலிடம் பெறுகிறார். பரணரோவெனில், பாடல்களில் அளிக்கும் வரலாற்றுச் செய்திகளால் முதலிடம் பெறுகிறார். பரணரை தமிழ் கூறு நல்லுலகத்தின் முதல் வரலாற்று ஆசிரியர் என்றால் மிகையாகாது. தேதியையும் ஆண்டையும் குறிக்கவில்லை என்றாலும் ஏராளமான நிகழ்ச்சிகளை இவர் கூறுவது பழந் தமிழகத்தை நம் கண் முன் நிறுத்துகிறது.
பரணர் கூறும் எல்லா செய்திகளும் நற் செய்திகள் என்று கூறமுடியாது, ஆனால் உண்மைச் செய்திகள் என்பதில் ஐயமில்லை. பொய் அடிமை இல்லாத புலவர் வரிசையில் முன்னிலையில் நிற்பவர்.
கடை எழு வள்ளல்களில் பேகன், ஆய், அஞ்சி, காரி, ஓரி ஆகியோரைப் பாடுகிறார். அவர் பாடிய 85 பாடல்களிலும் உவமை வாயிலாகவோ நேரடிக் குறிப்பு மூலமாகவோ ஏதேனும் ஒரு புதிய செய்தியைக் கூறுவார். எதிர்காலத்தில் வாழ்வோருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே நன்கு உணர்ந்து ஒவ்வொரு செய்தியாக அவிழ்த்து விடுகிறார்.
அவரால் பாடப் பட்டோரின் பட்டியல் சிலர்
1. சோழன் உருவப்பஃற்றேர் இளஞ்சேட்சென்னி
2. சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிரற்கிள்ளி
3. சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன்
4. சேரன் செங்குட்டுவன்
5. பேகன்
6. ஊனூர் தழும்பன்
7. உறந்தை வெளியன் தித்தன்
8. மோகூர்ப் பழையன்
9. அறுகை
10. மலையமான் திருமுடிக் காரி
11. ஆய் அண்டிரன்
12. அதியமான் நெடுமான் அஞ்சி
13. கண்டீரக் கோப்பெருநள்ளி
14. வல் வில் ஓரி
15. கரிகாலன்
16. ஆட்டனத்தி
17. ஆதிமந்தி
18. நன்னன்
19.அன்னி மிஞிலி
20. அகுதை
21. ஆய் எயினன்
22.பாணன்
23. கட்டி
24. பொருநன்
25. கணையன்
26. பசும்பூட் பாண்டியன் (தலை ஆலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
27. அதிகன்
28. எவ்வி
29. மத்தி
30. கழுவுள்
31. அழிசி
32. பெரும்பூட் பொறையன்
33. தழும்பன்
34. விரான்
35.விச்சியர் பெருமகன்
36. பழையன்
37. வல்லங் கிழவன்
38. பொதியில் திதியன்
39. வன் பரணர்
40. வெள்ளிவீதியார்
41. மருதி
42. உதியஞ் சேரல் (செங்குட்டுவனின் மகனான உதியன் சேரல் பரணரிடம் பாடம் கற்றான்)
சங்கத் தமிழ் இலக்கியத்தில் கபிலரும் பரணரும் இரட்டைப் புலவர்கள் போலக் கருதப்படுகிறார்கள். இவ்விருவரும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. கபிலர், பாட்டு எண்ணிக்கையால் (205 பாடல்கள்) முதலிடம் பெறுகிறார். பரணரோவெனில், பாடல்களில் அளிக்கும் வரலாற்றுச் செய்திகளால் முதலிடம் பெறுகிறார். பரணரை தமிழ் கூறு நல்லுலகத்தின் முதல் வரலாற்று ஆசிரியர் என்றால் மிகையாகாது. தேதியையும் ஆண்டையும் குறிக்கவில்லை என்றாலும் ஏராளமான நிகழ்ச்சிகளை இவர் கூறுவது பழந் தமிழகத்தை நம் கண் முன் நிறுத்துகிறது.
பரணர் கூறும் எல்லா செய்திகளும் நற் செய்திகள் என்று கூறமுடியாது, ஆனால் உண்மைச் செய்திகள் என்பதில் ஐயமில்லை. பொய் அடிமை இல்லாத புலவர் வரிசையில் முன்னிலையில் நிற்பவர்.
கடை எழு வள்ளல்களில் பேகன், ஆய், அஞ்சி, காரி, ஓரி ஆகியோரைப் பாடுகிறார். அவர் பாடிய 85 பாடல்களிலும் உவமை வாயிலாகவோ நேரடிக் குறிப்பு மூலமாகவோ ஏதேனும் ஒரு புதிய செய்தியைக் கூறுவார். எதிர்காலத்தில் வாழ்வோருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே நன்கு உணர்ந்து ஒவ்வொரு செய்தியாக அவிழ்த்து விடுகிறார்.
அவரால் பாடப் பட்டோரின் பட்டியல் சிலர்
1. சோழன் உருவப்பஃற்றேர் இளஞ்சேட்சென்னி
2. சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிரற்கிள்ளி
3. சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன்
4. சேரன் செங்குட்டுவன்
5. பேகன்
6. ஊனூர் தழும்பன்
7. உறந்தை வெளியன் தித்தன்
8. மோகூர்ப் பழையன்
9. அறுகை
10. மலையமான் திருமுடிக் காரி
11. ஆய் அண்டிரன்
12. அதியமான் நெடுமான் அஞ்சி
13. கண்டீரக் கோப்பெருநள்ளி
14. வல் வில் ஓரி
15. கரிகாலன்
16. ஆட்டனத்தி
17. ஆதிமந்தி
18. நன்னன்
19.அன்னி மிஞிலி
20. அகுதை
21. ஆய் எயினன்
22.பாணன்
23. கட்டி
24. பொருநன்
25. கணையன்
26. பசும்பூட் பாண்டியன் (தலை ஆலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
27. அதிகன்
28. எவ்வி
29. மத்தி
30. கழுவுள்
31. அழிசி
32. பெரும்பூட் பொறையன்
33. தழும்பன்
34. விரான்
35.விச்சியர் பெருமகன்
36. பழையன்
37. வல்லங் கிழவன்
38. பொதியில் திதியன்
39. வன் பரணர்
40. வெள்ளிவீதியார்
41. மருதி
42. உதியஞ் சேரல் (செங்குட்டுவனின் மகனான உதியன் சேரல் பரணரிடம் பாடம் கற்றான்)