கல்லணை
கல்லணை
கரிகாலனின்கல்லணை
உலகில் கட்டப்பட்ட பழமையான நீர்பாசன அணைகளுள் ஒன்றுகல்லணை. இந்த அணை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலச் சோழன்என்னும் மன்னனால் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பெரியபாறை கற்களைக் கொண்டு மிக வலுவாக கட்டப்பட்டுள்ளது இந்த அணை.
இந்த அணை கட்டப்பட்டதன் முக்கிய நோக்கம் காவேரி அணையின்தண்ணீரை தடுத்து, விவசாய நிலங்கள்
நீர்ப்பாசன வசதிபெறச் செய்வது ஆகும்.இத்தகைய திட்டமிடலுடன் கட்டப்பட்ட இந்த அணை இன்றளவும்
வலுவானநிலையில் உள்ளது. 1080 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டு இவ்வணைகட்டப்பட்டது.
கல்லணையின் சிறப்புக்கு மற்றுமொரு காரணம் இவ்வணை கட்டபயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்
ஆகும். பெரும் பாறைகளைக் கொண்டுவந்துஒன்றன் மீது மற்றொன்றை போட்டு அவற்றை தரையில்
ஆழமாக ஊன்றச்செய்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கட்டப்படும் பல பாசன அணை கட்டுமானங்களுக்கு,கல்லணை ஒரு சிறந்த மாதிரியாக
விளங்குகிறது. ஆங்கிலேய பொறியாளரானசர். ஆர்தர் காட்டன் கொள்ளிடம் அணையைக் கட்டுவதற்கு
முன் இந்தகல்லணையை நன்றாக ஆராய்ந்த பிறகே கட்டினார்.
திருமாவளவன் நெய்தலங்கானத்திலிருந்து ஆட்சி செய்த இளஞ்சேட் சென்னியின் மகனாவான். மாவளத்தான் என்று இளமையில் அழைக்கப்பட்டான்.பின்னர்த் திருமாவளவன் எனப்பட்டான். திருமாவளவனின் அண்ணன் நலங்கிள்ளியாவான். நலங்கிள்ளிக்குப் பிறகு அவன் மகன் நலங்கிள்ளி சேட்சென்னி என்பவன் சில காலம் அரசாண்டான்.பின்னர் இறந்துபட்டான். அதன் பிறகு திருமாவளவன் அரசேறினான். உடன் இருந்த மன்னர்களை வென்றதுடன் வடநாட்டு மன்னரையும் இலங்கை மன்னரையும் இவன் வென்றான். காவிரிக்குக் கரையமைத்ததும், உறையூரிலிருந்து தலைநகரைப் பூம்புகாருக்கு மாற்றியதும் இவனே. காவிரியை இவன் கி.மு.11 ஆம் ஆண்டு பார்வையிட்டான் எனப் பே.க.வேலாயுதம் குறிப்பார்(பக்கம் 12).பட்டினப்பாலை இவன் மீது பாடப்பட்ட நூலாகும்.அதனைப் பாடிய கடியலூர் உருத்திருங்கண்ணனார் அவர்களுக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான். இவனுக்குக் கரிகாலன் என்ற பெயரும் உண்டு என்பதை மணிமேகலை வழியாக அறியமுடிகிறது.
உலகில் கட்டப்பட்ட பழமையான நீர்பாசன அணைகளுள் ஒன்றுகல்லணை. இந்த அணை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலச் சோழன்என்னும் மன்னனால் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பெரியபாறை கற்களைக் கொண்டு மிக வலுவாக கட்டப்பட்டுள்ளது இந்த அணை.
இந்த அணை கட்டப்பட்டதன் முக்கிய நோக்கம் காவேரி அணையின்தண்ணீரை தடுத்து, விவசாய நிலங்கள்
நீர்ப்பாசன வசதிபெறச் செய்வது ஆகும்.இத்தகைய திட்டமிடலுடன் கட்டப்பட்ட இந்த அணை இன்றளவும்
வலுவானநிலையில் உள்ளது. 1080 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டு இவ்வணைகட்டப்பட்டது.
கல்லணையின் சிறப்புக்கு மற்றுமொரு காரணம் இவ்வணை கட்டபயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்
ஆகும். பெரும் பாறைகளைக் கொண்டுவந்துஒன்றன் மீது மற்றொன்றை போட்டு அவற்றை தரையில்
ஆழமாக ஊன்றச்செய்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கட்டப்படும் பல பாசன அணை கட்டுமானங்களுக்கு,கல்லணை ஒரு சிறந்த மாதிரியாக
விளங்குகிறது. ஆங்கிலேய பொறியாளரானசர். ஆர்தர் காட்டன் கொள்ளிடம் அணையைக் கட்டுவதற்கு
முன் இந்தகல்லணையை நன்றாக ஆராய்ந்த பிறகே கட்டினார்.
திருமாவளவன் நெய்தலங்கானத்திலிருந்து ஆட்சி செய்த இளஞ்சேட் சென்னியின் மகனாவான். மாவளத்தான் என்று இளமையில் அழைக்கப்பட்டான்.பின்னர்த் திருமாவளவன் எனப்பட்டான். திருமாவளவனின் அண்ணன் நலங்கிள்ளியாவான். நலங்கிள்ளிக்குப் பிறகு அவன் மகன் நலங்கிள்ளி சேட்சென்னி என்பவன் சில காலம் அரசாண்டான்.பின்னர் இறந்துபட்டான். அதன் பிறகு திருமாவளவன் அரசேறினான். உடன் இருந்த மன்னர்களை வென்றதுடன் வடநாட்டு மன்னரையும் இலங்கை மன்னரையும் இவன் வென்றான். காவிரிக்குக் கரையமைத்ததும், உறையூரிலிருந்து தலைநகரைப் பூம்புகாருக்கு மாற்றியதும் இவனே. காவிரியை இவன் கி.மு.11 ஆம் ஆண்டு பார்வையிட்டான் எனப் பே.க.வேலாயுதம் குறிப்பார்(பக்கம் 12).பட்டினப்பாலை இவன் மீது பாடப்பட்ட நூலாகும்.அதனைப் பாடிய கடியலூர் உருத்திருங்கண்ணனார் அவர்களுக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான். இவனுக்குக் கரிகாலன் என்ற பெயரும் உண்டு என்பதை மணிமேகலை வழியாக அறியமுடிகிறது.