Page 2
கொல்லத்தரையன், கொங்கரையன், கொல்லமுண்டார்.
கொல்லம் என்பது சேரநட்டின் ஒரு பகுதியாகும். இராசராச சோழன் படை எடுத்து கொல்லத்தை வென்றான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய மரபினர்களுக்கு அளித்த பட்டமே கொல்லத்தரையன், கொல்லமுண்டார் என்பதாகும். இராசமகேந்திரசோழன் கொல்லத்தரையன் என்னும் சிறப்புப் பட்டத்தை பெற்றிருந்தான் என்று கல்வெட்டுகள் உரைக்கிறன. இப் பட்டமுடைய கள்ளர்கள் திருவையாறு திருசென்னம்பூண்டி, தஞ்சை மாவட்டம் உஜ்ஜினி, உடுமலைப்பேட்டை காரத்தொழுவு முதலிய ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்
கொன்னமுண்டான்
கொடும்பன்
கொடும்பையன்
கொடும்பைராயன்
கொடும்பையரையன்
கொடும்பைப்பிரியன்
கொடும்புலியன்
கொடுப்புலியன்
கொடும்பிரியன்
கொத்தப்பராயன்
கோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கோபாலன்
கோனேரிகொண்டான்
கோனேரிப்பிரியன்
கோதண்டப்பிரியன்
கோட்டைசுருட்டி
கோட்டைமீட்டான்
கோழியன், கோழயன்.
அண்டசோழன் மரபில் வந்த மன்னன் வீரவாதித்த சோழன். உறையூரை இராசதானியாகக் கொண்டவன். இவன் திருவுலாப் போகும் போது தான் ஏறியிருந்த யானையை தெய்வத்தன்மை பொருந்திய ஒரு கோழி போர் செய்து வென்ற காரணத்தினால் இவனுக்கு கோழியர்கோன், கோழிவேந்தன், கோழியன் என்ற பெயர்களும், அந்நகருக்கு கோழியூர், கோழிநகர் என்னும் பெயர்களும், அந்நகர திருக்கோயிலுக்கு குக்குடேசரம், முக்கீச்சரம் என்னும் பெயர்களும் வழங்கலாயிற்று. இவன் காலம் முதல் சோழர்களுக்கு கோழியன், கோழியர்கோன், கோழிவேந்தன் என்னும்பெயர்களும் வழ்ங்கின. இவ்வரசன் காலமுதல் சோழர்களின் நாணயங்களில் கோழியின் உருவம் பொரிக்கப்பட்டது.இவன் மரபோர் கோழியன், கோழயன் என்ற பட்டங்களை பெற்றனர்.
கோட்டரையன், கோட்டையாண்டான், கொட்டையாண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கோட்டமன். கோட்டைபட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கோட்டைராயன், கோட்டரையன், கோட்டைப்பிரியன், கோட்டையாண்டான், கோட்டைகொண்டான் எனவும்வழங்கப்பட்டது. கோட்டூர், கோட்டாறு என்னும் தேவார சிவதலங்களையும், கோட்டுக்காடு, கோட்டைப்பத்து, கோட்டுக்கா, கோட்டுச்சேரி, கோட்டாக்குடி என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் கோட்டரையன், கோட்டையாண்டான், கொட்டையாண்டான் என்னும் பட்டங்கள் பெற்றனர்.
ச வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சக்கரநாட்டான், சக்கரன், சக்கரை, சக்கரராயன், சக்கராயன், சக்கரநாடன், சக்கரையப்பநாடாள்வான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சக்கரமன். சக்கரப்பள்ளி என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சக்கரராயன், சக்கரநாடன் எனவும் வழங்கும். சகரப்பேட்டை, சக்கரமங்கலம், சக்கரக்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் சக்கரன், சக்கரை, சக்கரராயன், சக்கராயன், சக்கரநாடன், சக்கரையப்பநாடாள்வான் எனும் பட்டங்களை கொண்டனர்.
சந்திரங்கொண்டான், சந்திரதேவன், சம்பிரதேவன், சந்திரப்பிரியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் சந்திரசோழன். சந்திரப்பாடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சந்திரங்கொண்டான், சந்திரதேவன், சந்திரப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. சந்திரலோக்கைப் பெருந்துறை (செந்தலை) என்னும் சிவதலத்தையும், சந்திரநதி என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் சந்திரங்கொண்டான், சந்திரதேவன், சம்பிரதேவன், சந்திரப்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
சம்பிரதி
சங்கரன்
சங்கராசன்
சங்கரதேவன்
சங்கத்தியன்
சயங்கொண்டான்
சனகராயன்
சமயன், சமயதேவன், சமயாளி, சவுளி, சவுட்டி, சமட்டி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சமயன். சமயபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். சமயனூர், சமயன் குடிகாடு என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் சமயன், சமயதேவன், சமயாளி, சவுளி, சவுட்டி, சமட்டி எனும் பட்டங்களை கொண்டனர்.
சா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சாத்தயன், சாதகன், சாத்தரையன், சாமுத்தரையன், சாமுத்திரியன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சாத்தமன். இவன் பெயர் சாத்தயன், சாத்தரையன் எனவும் வழங்கும். சாத்தமங்கை (சாத்தமங்கலம்) என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். சாத்தனூர், சாத்தூர்,சாத்தங்குடி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் சாத்தயன், சாதகன், சாத்தரையன், சாமுத்தரையன், சாமுத்திரியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
சாணன்
சாணரையன்
சாணை
சாளுக்கியன்
சாளுவன், சாளுவராயன்.
சோழ மரபில் வந்த மன்னன் சாளுவசோழன். சாளுக்கிய வம்சத்தவராகவும் இருத்தல் கூடும். விஜயநகர அரசர்களின் காலத்தில் தென்நாட்டில் அவர்களின் பிரதிநிதியாக திருமலைராயர் சாளுவர் என்பார் இருந்தார் என்று சீரங்கத்தில் கிடைத்த சிலாசானம் குறிப்பிடுகிறது (இலக்கிய வரலாறுபாகம் 2 பக்கம் 369.கா.சு.பிள்ளை) சாளுவநாயக்கன் பட்டினம் சோழநாட்டு துறைமுகங்களுள் ஒன்றாகும். சாளுவன் பேட்டை, சாளுவனாறு என்பன இப்பட்டங்களின் அடிப்படையில் தோன்றியதாகும்.
சி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சித்தாட்சி, சிற்றாட்சி, சிட்டாச்சி.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் சித்தசோழன். சித்தலபாடிஎன்னும்நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சித்தாட்சி எனவும் வழங்கும். சித்தாறு என்னும் சிற்றாற்றையும், சித்தாமூர் (சித்தாம்பூர்) என்னும் விநாயக தலத்தையும், சித்தூர், சித்தாற்றூர், சித்தலூர்,சித்தரகுடி, சித்தகாடு, சித்தபத்து என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் சித்தாட்சி, சிற்றாட்சி, சிட்டாச்சி என்னும் பட்டங்களை கொண்டனர்.
சிந்துராயன்
சிங்களராயன்
சிங்களான்
சிங்களப்பிரியன்
சிங்களப்பிலியன்
சிங்கப்பிலியன்
சிங்களாளி
சிங்காரிக்கன்
சிறுராயன், சிறுநாட்டுராயன், சிறுநாடன், சிறுமாடன், சிறுப்பிரியன், சிலுப்பி, சிலம்பன், சிலுப்பன், செருமாடன், சிலுக்கியன்,
சிறுகிள்ளிசோழன், சிறுகோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சிறுராயன், சிருநாடன், சிறுப்பிரியன் எனவும் வழங்கலாயிற்று. சிறுகுடி, சிற்றேமம் என்னும் தேவார சிவ தலங்களையும், சிற்றம்பலம் என்னும் சிவ தலத்தையும், சிறுமங்கலம்,சிறுபாமணி, சிறுகளத்தூர், சிறுவயல், சிறுவனூர், சிறுவளூர் என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் சிறுராயன், சிறுநாட்டுராயன், சிறுநாடன், சிறுமாடன், சிறுப்பிரியன், சிலுப்பி, சிலம்பன், சிலுப்பன், செருமாடன், சிலுக்கியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
சீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சீனத்தரையன்
சு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சுந்தரராயன்
சுந்தன்
சுன்றையன்
சுக்கிரன்
சூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சூரியன்
சூரக்கோட்டையன், சுரக்குடையன், சுரக்குடியான், சூரக்குடையன், சூரக்கொடையன், சூரப்பிலியன், சூரப்பிரியன், சுரப்பிடுங்கியன், சுரைப்பிடுங்கியான்,
சூரவாதித்தசோழன், சூரக்கோட்டை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியகக் கொண்டவன். இவன் பெயர் சூரக்கோட்டையன், சூரங்கொண்டான், சூரமாண்டான், சூரப்பிரியன், சூரமுடையான், சூரமாளி எனவும் வழங்கும். சூரமங்கலம், சூரக்குடி (சுரக்குடி) சூரனூர், சூரயூர், சூரப்பள்ளம், என்னும் ஊர்களையும், கோளாலி என்னும் சிவ தலத்தையும், சூரனார்கோவில் என்னும் நவக்கிரக தலத்தையும் உருவாக்கி அரசு புரிந்தவன். ஆதிசேடன் மகள் காந்திமதியை மணந்தவன். தளவழிக்குகையி னிற்பொழி பிலத்த்ன்வழியே தனிந்ந்துரகர் த்ங்கண்மனி கொண்டவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. இவன் மரபோர் சூரக்கோட்டையன், சுரக்குடையன், சுரக்குடியான், சூரக்குடையன், சூரக்கொடையன், சூரப்பிலியன், சூரப்பிரியன்,சுரப்பிடுங்கியன், சுரைப்பிடுங்கியான், என்னும் பட்டங்கள் பெற்றன
செ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
செம்மைக்காரன்
செய்ஞலாளி
செம்மைகொண்டான்
செட்டி
செம்பியன், செம்பன், செம்பியரையன், செம்பரையன், செம்படையன், செம்பியத்தரையன், செம்பியமுத்தரையன், செம்பியமுத்தரசு, செம்பியமுத்திரியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த சிபி சக்ரவர்த்தி. செம்பியபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். முதல் ஏழு வள்ளல்களில் ஒருவன். புறாவுக்காக பருந்துக்கு தன் சதையை கொடுத்தவன். கலிங்கத்துப் பரணியிலும், அகநானூறிலும் பாடப் பெற்றவன். செம்பியரையன், செம்பியத்தரையன் எனவும் அழைக்கப் பட்டவன். செம்பியன்பள்ளி (செம்பொன்பள்ளி), செம்பியங்குடி (செம்பன்குடி) என்னும் தேவார சிவதலங்களையும், செம்பியன்மங்கலம், செம்பியங்களர் எனும் ஊர்களையும் உருவாக்கி சம நீதி தர்மத்துடன் ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் செம்பியன், செம்பன், செம்பியரையன், செம்பரையன், செம்படையன், செம்பியத்தரையன், செம்பியமுத்தரையன், செம்பியமுத்தரசு, செம்பியமுத்திரியன்
எனும் பட்டங்களை சுமந்தனர்.
செனவராயன்
சென்னண்டான்
சென்னாடான்
சே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சேய்ஞலாண்டான், சேய்ஞலாளன், சேய்ஞலாளி, சேய்ஞலாட்சி, சேய்ப்பிளன்
சேய்ஞற்கொண்டான் (செம்மைகொண்டான்) சேய்ஞலரையன் (செம்மைக்காரன்) சேய்ஞற்பிரியன் (சேப்பிளன்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சேய்ஞன். சேய்ஞலூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சேய்ஞற்கொண்டான், சேய்ஞலரையன், சேய்ஞற்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. சேயாறு என்ற ஆற்றையும், சேய்குடி, சேயூர், சேய்மங்கலம் என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் செம்மைகொண்டான், செம்மைக்காரன், சேப்பிளன் எனும் பட்டங்களை பெற்றனர்.
சேணன், சேண்டப்பிரியன், சேண்ராயன், செனவராயன், சேணரையன், சன்னவராயன், சனகராயன், சாணரையன், சாணன், சாணையன், சேண்கொண்டான், சேணாடன், சேனக்கொண்டான், சேனைகொண்டான், சேணாண்டான், சேனைநாடன், சேனைநாட்டான், சேண்பிரியன், சேனைகொண்டான், சென்னாடான். சென்னண்டான், சாணூரான்.
நலங்கிள்ளி சேட்சென்னி சோழன், சேண்டாகோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சேண்ராயன், சேணரையன், சேண்கொண்டான்,சேணாண்டான், சேண்பிரியன், சேணாடன் எனவும் வழங்கும். மிக்க வீரமும் கொடையுமுடையவன், நீர்வாவி சூழ்ந்த சோலையில் துயின்ற காரணத்தினால் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளிசேட் சென்னி என்று பெயர் பெற்றவன். இவன் காலமுதல் சோழர்களுக்கு சென்னி என்ற பெயரும், சோழநாட்டிற்கு சென்னிநாடு என்னும் பெயரும் வழங்கலாயிற்று. இச் சோழ மன்னன் கோனாட்டு எறிச்சிலூர் மாடவன் மதுரைக்குமரனார் என்னும் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல் புறநானூற்றில் 61ம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இவன் மரபோர் சேண்ராயன், செனவராயன், சேணரையன், சன்னவராயன், சனகராயன், சாணரையன், சாணன், சாணையன், சேண்கொண்டான், சேனக்கொண்டான், சேனைகொண்டான், சேணாண்டான், சேணாடன், சேனைநாடன், சேனைநாட்டான், சேண்பிரியன், சேனைகொண்டான், சென்னாடான். சென்னண்டான், சாணூரான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
சேந்தராயன், சிந்துராயன்
சேந்தசோழன் அழிசிசோழனின் மகன், உறையூரை இராசதானியாகக் கொண்டவன். அழகிலும், வீரத்திலும்,கொடையிலும் சிறந்து விளங்கியபடியால் உருவப்பேரிளஞ்சேட் சென்னி என்று பெயர் கொண்டவன்.அழுந்தூர் வேளிர்குல மகளை மணந்தவன். கரிகால் பெருவளத்தான் சோழன் இவன் மகனாவான். பாணர், பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர் பெருமக்கள் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப் பாடல்கள் புறநானூற்றில் 4, 261ம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன.இவன் மரபோர் சேந்தராயன், சிந்துராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
சேந்தமுடையான்
சேந்தமடையான்
சேங்கொண்டான்
சேதிராயன்
சேதிரான்
சேதுரான்
சேதிநாடன்
சேதுநாடன்
சேனைத்தலைவன்
சேனைத்தலையன்
சேனாதிபதி
சேனாபதி
சேனாதி
சேனாதிபன்
சேரவரையர், சேரர்பிரியர், சேர்வைக்காரர், சேர்வை
சேர அரச மரபினர்.சேரவரையர் (சேர அரசர்) என்பது காலப் போக்கில் உருமாறி சேரர்பிரியர், சேர்வைக்காரர், சேர்வை என வழங்களாயிற்று. சேரலர், சேரல், சேரமான் என்பன இவர்களின் சிறப்புப் பெயர்களாகும். இவர்கள் ஆண்ட நாட்டின் தலைநகரம் வஞ்சிமாநகர் என்றும், துறைமுக பட்டினமாக முசிறியும்,தொண்டியும் இருந்துள்ளன. கடல் சார் நிலமான சேரநாட்டை தொல் தமிழில் சேர்ப்பென்றும் அதனை ஆண்ட மன்னர்களை சேர்ப்பரென்றும் கூறுவது தமிழ் நூல் வழக்கு. சேர்ப்பர் சேரவரையராகி, சேரராகி அவர்களை சார்ந்து அரியணைகாக்கவும், நாட்டு விரிவாக்கத்திற்கும் பாடுபட்டவர்கள் சேரர்பிரியராகி இன்று சேர்வைக்காரர், சேர்வை என்றும் அறியப்படுகின்றனர்.இவர்களின் மூதாதரையர்கள் வானவரம்பன், வானவன், குட்டுவன், குடக்கோ என்போராவர். இவர்களின் கொடி விற்கொடியாகும், இப்பட்டமுடையோர் தஞ்சை காசாநாட்டு தென் பகுதியில் அதிகமாக வாழ்ந்துள்ளனர்.
பின் குறிப்பு
மதுரையை சார்ந்த பிரமலைக் கள்ளரில் ஒருபிரிவினர் சேருவார் என்றும் சேர்வை என்றும் அறியப்படுகின்றனர். இவர்களுக்கும் சேரர் பரம்பரையை சார்ந்த சேரவரையர், சேரர்பிரியர், சேர்வைக்காரர், சேர்வை என்பவர்களுக்கும் எதுவித குருதித் தொடர்புகளும் இல்லை.
சொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சொக்கராயன்
சோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சோணையன், சோணாடுகொண்டான், சோணாருண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சோணைமன். சோணாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சோணையன், சோணாடுகொண்டான் எனவும் வழங்கப்பட்டது. இவன் மரபினர் சோணையன், சோணாடுகொண்டான், சோணாருண்டாண் எனும் பட்டங்களை பெற்றனர்.
சோழன், சோழவன், சோழரையன், சோழராசன், சோதிரையன், சோமராசன், சோழநாயகன், சோமநாயக்கன், சோமணநாயக்கன், சோழாட்சி, சோமாசி,
சோழங்கொண்டான், சோழபாண்டியன், சோழகங்கன், சோழங்கன், சோழகங்கதேவன்
சோழங்கதேவன், சோழகங்கநாடன், சோழகங்கநாடான், சோழகனகராசன்
சோழதரையன், சோழதிரியன், சோநாயகன், சோழதேவன், சோமதேவன், சோழகோன், சோழகன், சோழப்பிரியன், சோழநாடன், சோமநாடான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த சக்ரவர்த்தி சுராதிராசசோழன். சோழபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். தன்னுடைய ஆளுகையில் அடங்கிய பூமிக்கு சோழ மண்டலம் என்று பெயரிட்டவன். பிராமணர், வேளாளர், இடையர் போன்ற சில வகுப்பினர்களுக்கு சோழியர் என்ற பட்டத்தையும் வழங்கியவன். தன் மூத்த மகனுக்கு இராசகேசரி என்றும் இளைய மகனுக்கு பரகேசரி எனவும் பெயரிட்டவன். இதன் பின் அரியாசனம் ஏறிய சோழ மன்னர்கள் மாறிமாறி இராசகேசரி, பரகேசரி என்னும் பட்டந்தரித்தனர். (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது) சோழமங்கலம், சோழனூர், சோழன்பேட்டை, சோழன்பட்டி, சோழங்குடி, சோழன் குடிகாடு, சோழாட்சி(சோமாசி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டான். இவன் மரபினர் சோழன், சோழவன், சோழரையன், சோழதரையன்,சோழதிரியன்,சோதிரையன், சோழராசன், சோமராசன், சோநாயகன், சோழாட்சி, சோமாசி, சோழதேவன், சோமதேவன், சோழகோன், சோழகன், சோழப்பிரியன், சோழநாடன், சோமநாடான் என்ற பட்டங்களை பெற்றனர்.
ஞ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஞா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
த வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தலையன், தலைராயன், தனராயன், தலைசைராயன், தனசைராயன்.
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் தலைமன், தலையாலங்காடு, தலைச்சங்காடு, தலைஞாயிறு, தலைக்காடு, தலையூர், தலைக்குடி, தலைச்சேரி, தலையமங்கலம், முதலிகுத்தே போன்ற நகர்களை உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் மேற் கூரிய பட்டங்களை கொண்டனர்.
தளியன்
தளிராயன்
தளியுடையான்
தளியாண்டான்
தளியாளன்
தளியாளி
தளியாட்சி
தளிப்பிரியன்
தளிகொண்டான்
தளிநாடன்
தக்கோலன், தக்கோலாக்கியன், தாக்கலக்கி,
தக்கோலசோழன், தக்கோலம் என்னும் தேவார சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன்.தக்களூர், தகட்டூர் என்னும் தேவார சிவ தலங்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் தக்கோலன், தக்கோலாக்கியன்,தாக்கலக்கி, என்னும் பட்டங்ககளை கொண்டனர்.
தஞ்சைராயன்
தஞ்சிராயன்
தண்டநாயகன்
தண்டத்தலைவன்
தண்டத்தலையன்
தா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தாளியன்
தாளிதியன்
தானைத்தலைவன்
தானைத்தலையன்
தானாதிபதி
தானாபதி
தானாதி
தானாதிபன்
தாக்கலக்கி
தி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
திருப்பூட்சி
தின்னாப்பிரியன்
திண்ணாப்பிரியன்
திராணி
திருக்கட்டியன்
திருக்காட்டியன்
தில்லைராயன், தில்லையாண்டான், தில்லைபிரியன், தில்லையாளி,தில்லைகொண்டான்.
செம்பியன் சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் தில்லைமன். தில்லை (சிதம்பரம்) என்னும் தேவார சிவதல நகரையுண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். தில்லைவிடங்கன், தில்லையாளிநல்லூர், தில்லைவளகம், தில்லையம்பூர் எனும் ஊர்களையும் உண்டாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபோர் தில்லைராயன், தில்லையாண்டான், தில்லைபிரியன், தில்லையாளி,தில்லைகொண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.
து வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
துறையாண்டான், துறவாண்டான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் துறைமன். துறைக்கோட்டை, துறையாண்டான்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் துறையாண்டான் எனவும் வழங்கும். துறையூர் என்ற தேவார சிவதலத்தையும், துறைப்பூண்டி எனும் சிவதலத்தையும் துறைமங்கலம், துறைக்குடி, துறைப்பட்டி, துறைக்குரிச்சி (துவரைக்குரிச்சி) துறையாண்டான்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் துறையாண்டான், துறவாண்டான் என்ற பட்டங்களை பெற்றனர்.
துண்டராயன், துண்டுராயன், துண்டயன், தொண்டயன், துண்டன், தொண்டன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் துண்டீரன். துண்டுராயன்பாடி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் துண்டராயன், துண்டயன், துண்டன் எனவும் வழங்கும். துண்டுராயன்பட்டு, துண்டுராயன்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் துண்டராயன், துண்டுராயன், துண்டயன், தொண்டயன், துண்டன், தொண்டன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
தெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தென்னவராயன், தென்னரையன், தென்னன், தென்கொண்டன், தெங்கொண்டான், தெங்கண்டான், தெங்கிண்டான், தென்னப்பிரியன், தின்னாப்பிரியன், திண்ணாப்பிரியன், தென்னன்
செம்பியன் மரபில் வந்த செங்கண் சோழன், சோழ மன்னன் சுபதேவனுக்கும் கமலவதி என்பாளுக்கும் பிறந்தவன். கமலவதி பிரசவ வேதனை கண்டபோது சோதிட வல்லுனர்கள் இன்னும் ஒரு நாளிகை கழித்து குழந்தை பிறக்குமானால் மூவுலகத்தையும் ஆளக்கூடிய மன்னனாவான் என்று கூறிய படியால் தன்னை கால் மேலாகவும் தலை கீழாகவும் இருக்கும்படி கட்டி ஒரு நாளிகை கடந்தபினர் கட்டை அவிழ்த்து விடும்படிகூறி குழந்தையை மாசி மாதம் சதய நட்சத்திரத்தில் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்த போது கண்கள் சிவந்து பிறந்தபடியால் செங்கணானென்று பெயரும் இட்டு தாய் மடிந்தாள். இக்குழ்ந்தையே பெயர் பெற்ற கோச்செங்கணாவான்.இவன் சங்ககால சோழ அரசர்களில் ஒருவன். கிள்ளி வளவனுக்கு பின்னர் ஆண்ட மன்னர்களில் மக்கள் மனதில் அழியா இடம்பெற்றவன்.
தென்னூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். கடைச்சங்கால இறுதியில் வாழ்ந்தவன், அறுபத்துமூன்று நாயன் மார்களில் ஒருவனாவான். ஈசனுக்கு 70 மாடக்கோயில்களை காவிரிகரை ஓரத்தில் கட்டி அரசாண்டதாக திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.
இவன் கட்டிய ஆனைபுகாக்(மாட) கோயில்களிள் ஆனைக்கா, பெண்ணாகடம், சாய்க்காடு,மண்ணிப்படிக்கரை, செம்பிருப்பு, செம்பொன்பள்ளி, வடதலைச்சங்காடு, தெந்தலைச்சங்காடு, ஆக்கூர், பெருமுளை, தேரழுந்தூர், வைகல், நரையூர் (மணிமாடம்) துற்காட்சி, நாலூர், ஆவூர், பசுபதிமங்கை, மாத்தூர், குடவயில், இங்கண், மருகல்,அம்பர், நன்னிலம், பாம்புரம், மாதூர், கீழ்வேளூர், தேவூர், சிக்கல், களப்பாள், இராசசேரிபுரம், கீழைவழி, தண்டலை, நீணேறி, வலிவலம், கீழையிலரன், பழையாறுவடதளி, பழையாறுதென்றளி, பழையாறுகீழ்த்தளி, பெருவேளூர், நாகைமலையீச்சரம், இராமனதீச்சரம், பெரும்கடம்பனூர், சேய்ஞலூர், நாகை மேலைக்காயரோகணம், வீழிமிழலை, பனையூர், என்னும் 47 கோயில்கள் புலப்பட்டன. மற்ற 23 கோயில்கள் புலப்படவில்லை.
இவனுக்கு நல்லடிக்கோன் என்ற மகனும் இருந்தான். புறநானூறு, களவழிநாற்பது என்ற சங்கனூல்களிலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், திருமங்கை ஆழ்வார் ஆகியோறாலும் பாடப்பற்றவன் செங்கணான்
சேரமன்னன் கணைக்கால் இருபொறையைச் சிறைபிடித்துக் குடவாயில் கோட்டத்து சிறையில் வைத்தான், பின்பு பொய்கையார் என்னும் புலவர் பாடிய களவழிநாற்பது படலைக் கேட்டு சேரமன்னன் சிறை நீக்கி அரசுரிமை அளித்தான்
கோச்செங்கனானுக்கு தென்னவராயன், தென்னரையன்,தென்கொண்டான், தென்னாண்டான்,தென்னப்பிரியன், தென்னுடையான், தென்னாளி, என்ற பெயர்களும் உண்டு. இவன் தென்னவராய நல்லூர், தென்னவநாடு, தென்னங்குடி, தென்னம்புலம், தென்குடி, தென்பரை, தென்பாதி, தென்னங்குளம், தென்னவராயன் பேட்டை என்னும் ஊர்களை உருவாக்கி ஆட்சிபுரிந்தவன்
இவன் பெயர் தென்னவராயன், தென்னரையன், தென்கொண்டான், தென்னாண்டான், தென்னப்பிரியன், தென்னுடையன், தென்னாளி, எனவும் வழங்கலாயிற்று.
இவன் மரபினர் தென்னவராயன்,தென்கொண்டான், தென்னரையன், தென்னன், தென்னப்பிரியன், தென்னுடையான், தென்னாளி, தெங்கிண்டான், தின்னாப்பிரியன், தெங்கண்டான், என்னும் பட்டங்களை கொண்டனர்.
தெத்துவெண்டான்
தெலிங்கராயன், தெலிங்கதேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் தெலிங்கமன். தெலிங்காபுரி என்னும்நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் தெலிங்கராயன், தெலிங்கதேவன் என்வும் வழங்கழாயிற்று. இவன் மரபோர் தெலிங்கராயன், தெலிங்கதேவன் எனும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டங்கள் இராசராச சோழனுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இராசராசனின் தெலுங்க வெற்றியை சிறப்பிக்கும் வகையில் தெலுங்க குலகாலன் என்ற பட்டமும் வழங்கிவந்தது. இப்பட்டமுடையோர் ஒரத்தநாடு,தெலுங்கன்குடிகாடு முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.
தே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தேவராயன், தேசிராயன், தேவாண்டான், தேவண்டன், தேவன்
மனுசக்ரவர்தியின் மகனாகிய இக்குவாகு தேவூரெனும் (தேவாரம் பெற்ற சிவம் நகரத்தை உருவாக்கி அரசு புரிந்தான். இதன் மூலம் இவனை தேவராயன், தேவாண்டான், தேவன் என்றும் அழைக்கப்பட்டான். இவன் உருவாக்கிய ஊர்கள் தேவன்குடி, தேவனூர், தேமங்கலம், தேவராயன் பேட்டை, தேவராயநல்லூர், தேவதானமென்பனவாகும். இக்குவாகு மரபு வழி வந்தோர் மேற்கூரிய
தேவராயன், தேசிராயன், தேவாண்டான், தேவண்டன், தேவன் என்ற
பட்டங்களை கொண்டனர்.
தேவாளன்
தேவாளி
தேவாட்சி
தேவப்பிரியன்
தேவுடையன்
தேவுகொண்டான்
தொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தொண்டைமான், தொண்டையன், தொண்டைப்பிரியன், தொண்டாப்பிரியன், தொண்டமார், தொண்டாயன், தொண்டைமான் கிளையர், தொண்டையன், தொண்டன்
கரிகால் சோழன் வழி வந்தவன் கிள்ளிவளவன். இவனுக்கு நெடுமுடிகிள்ளி, மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி என்ற பெயர்களும் உண்டு. கிள்ளிவளவன் த்ன் இளமைக்காலத்தில் கடல் கடந்து நாகர்களின் நாடாகிய நாகர் நாட்டை அடைந்தான். நாகர் நாட்டு மன்னன் வளைவணன் மகளாகிய பீலிவளை என்னும் இளவரசி நாக கன்னிகையை மணம் புரிந்தான். நாகர் மகளுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் பிறந்த இளம்குமரன் தொண்டை கொடியை அடையாளமாக அணிந்து கடலில் மிதந்து சோழநாட்டின் கிழக்கு கரையை அடைகிறான். சோழ ராஜ புத்திரனை கடலின் திரை (அலைகள்) கொண்டு வந்தமையால் திரையன் என்று பெயரிடப்படுகிறான். மேலும் தொண்டைக் கொடியை அடையாளமாக அணிந்து வந்தமையால் தொண்டைமான் இளந்திரையன் என்று அழைக்கப்பட்டான். சோழ இளவரசனாக மகுடம் சூடியபின்னர் சோழநாடு இரண்டாகப்பிரிக்கப் பட்டு கிழக்கே கடலும்,மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கடமும் தெற்கே பெண்ணையாற்றையும் எல்லைகளாக கொண்டு தொண்டை மண்டலம் உருவாக்கப்பட்டு காஞ்சிமாநகரை தலைநகராக கொண்டு தொண்டைமான் இளந்திரையன் அரசுபுரிந்தான். சிறந்த வீரமும் கொடைநலமும் உடையவன். கவி பாடுவதிலும் வல்லவன் இளந்திரையம் எனும் நூலையும் இயற்றியுள்ளான். இவன் பாடிய பாடல்கள் பல புறநானூற்றிலும், நற்றிணையிலும் கானப்படுகின்றன. சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படை இவனைப் பற்றி புலவர் கடிலூர் உருத்திரங் கண்ணனார் பாடியதாகும். குறும்பர்களின் கொட்டத்தை அடக்கி, காடுகளை வெட்டி, நிலத்தை திருத்தி, வளம் பெருக்கி தொண்டை நாட்டை வலிமைமிக்க நாடாக்கினான். இவன் ஆட்சியில் தொண்டைநாடு சான்றோருடைத்து என்று ஔவையால் புகழப்பட்டது. இளந்திரையன் நாகநாட்டில் இருந்து சோழநாட்டு கிழக்குக்கரையில் ஒதுங்கிய இடமே நாகர்பட்டினம் என்றழைக்கப்பட்டு இந்நாளில் நாகப்படினம் என்றழைக்கப்படுகிறது. தொண்டைமான் இளந்திரையன் பின் நாளில் ஆத்தொண்டை சக்கரவர்த்தி என்றும் அழைக்கப்பட்டான். இவன் வழி வந்தவர்களே தொண்டைமான், தொண்டையன், தொண்டைப்பிரியன், தொண்டாப்பிரியன், தொண்டமார், தொண்டாயன், தொண்டைமான் கிளையர், தொண்டையன், தொண்டன் என்னும் பட்டங்களை கொண்ட கள்ளர் குலத்தவராவர். இப்பட்டம் கி.பி முதல் நூற்றாண்டில் இருந்து வழக்கத்தில் வருவதும் ஒரு வரலாராகும். காஞ்சி மாநகரம் (இன்றைய காஞ்சிப்புரம்) 181 பெரும் திருக்கோயில்களை கொண்டு மாமதிற்கச்சி எனவும் கோயில் மலிந்த காஞ்சி எனவும் அழைக்கப்ப்டுவதும் வரலாராகும்.
தோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ந வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நன்னியன், நயினியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நன்னிமன். நன்னிபள்ளி என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் நன்னியன் என்றும் அழைக்கப்பட்டான். நன்னிலம் என்னும் தேவார சிவதலத்தையும், நன்னிமங்கலம், நன்னிகுடி, நன்னி (நயினான்)என்னும் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் நன்னியன், நயினியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
நள்ளிப்பிரியன், நல்லிப்பிரியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நல்லி. நள்ளிக்கோட்டை (நல்லிக்கோட்டை) என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். நள்ளாறு என்னும் தேவார சிவதலத்தையும், நள்ளி என்னும் ஊரையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினன். இவனை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர். நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம். இவன் மரபு வம்சத்தினர் நள்ளிப்பிரியன், நல்லிப்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
நரசிங்கன், நரங்கியன், நரசிங்கப்பிரியன், நரங்கிப்பிலியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நரசிங்கன். நரசிங்கபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். நரசிங்கமங்கலம், நரசிங்கம்பேட்டை என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் நரசிங்கன், நரங்கியன், நரசிங்கப்பிரியன், நரங்கிப்பிலியன் எனும் பட்டங்களை சுமந்தனர்.
நந்தியன், நந்தியர், நந்தன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நந்தியன். நந்திபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். நந்திமாகுடி, நந்தனூர், நந்திமங்கலம், நந்திவனம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் நந்தியன், நந்தன் என்ற பட்டங்களை பெற்றனர்.இவர்கள் பல்லவ குலத்தினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் அறியப்படுகிறது. பல்லவரின் இலச்சினை நந்தியாகும், பல்லவர் கொடிகளிலும், காசுகளிலும் நந்தியின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. பல்லவ அரசர்களும் முதலாம் நந்திவர்மன், இரண்டாம் நந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் என்ற பெயர்களில அழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இப்பட்டமுடையார் சோழர் மற்றும் பல்லவர் மரபினரென்றும் அறிய முடிகிறது. இப்பட்டமுடையோர் பொன்னாப்பூர், தும்பத்திக்கோட்டை, தென்னமநாடு, காட்டுக்குறிச்சி, தலையாமங்கலம், பட்டவெளி, கண்டகிரயம், நல்லிச்சேரி முதலிய ஊர்களில் மிகுதியாக வாழுகின்றனர்.
நா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நாகன்
நாயக்கன்
நாகராயன்
நாகுடையான்
நாகாண்டான்
நாகாளன்
நாக்காடி, நாவிளங்கி, நாகாளி.
மாந்தாதா மரபில் வந்த மன்னன் நாகமன், நாகபட்டினம் என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நாகாளி என்றும் வழங்கப்பட்டான். சிவராத்திரி முதல் யாமத்தில் திருக்குடந்தையிலும், இரண்டாம் யாமத்தில் திருநாகேச்சரத்திலும், மூன்றாம் யாமத்தில் திருப்பாப்புரத்திலும், நான்காம் யாமத்தில் திருநாகூரிலும் திருக்கோயிலமைத்து சிவலிங்கபூசை செய்த பெருமை படைத்தவன். நாகேச்சுரம், நாகன்பாடி, நாகன்குடி, நாகலூர், நாகலாபுரம், நாகமங்கலம், நாகபட்டினம், நாகளூர், நாகன்பேட்டை என்ற நகரங்களையும் ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
நாகாட்சி
நாகப்பிரியன்
நாகங்கொண்டான்
நாகநாடன்
நாகதேவன்
நாணசேவன், நாணசிவன்,ஞானசெவன்,ஞானியர், நானசேவர்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நாணசேவன். நாணலூர், நாணமங்கலம் (நாரணமங்கலம்) முதலிய ஊர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் நாணசேவன், நாணசிவன்,ஞானசெவன்,ஞானியர், நானசேவர் என்ற பட்டங்களையும் பெற்றனர்.
நார்த்தேவன், நார்த்தவான், நாரத்ேத்வன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நார்த்தேவன். நாரையூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நார்த்தேவன்குடி (நார்த்தாங்குடி) நார்த்தேவன்மங்கலம் (நாரமங்கலம்) என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் நார்த்தேவன், நார்த்தவான் எனும் பட்டங்களை கொண்டனர்.
நாடன்
நாடான்
நாடாள்வான்
நாட்டரையன்
நாட்டரசன்
நாட்டான்
நீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நிலங்கொண்டான், நெறிமுண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நீலமன். நீலப்பாடி நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நீலப்பிரியன், நீலங்கொண்டான் எனவும் அழைக்கப்பட்டவன். நீலக்குடி என்னும் தேவார சிவதலத்தையும், நீலவெளி என்னும் சிவதலத்தையும், நீலநல்லூர் (நீலத்தநல்லூர்) நீலமங்கலம் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் நிலங்கொண்டான், நெறிமுண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.
நெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நெல்லியன், நெல்லிராயன், நெல்லியுடையான், நெல்லியாண்டான், நெல்லியாளன்,
நெல்லியாளி, நெல்லியாட்சி, நெல்லிப்பிரியன், நெல்லிகொண்டான், நெல்லிதேவன்
நல்லிப்பிரியன்.
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் நெல்லிமன். நெல்லிக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.நெல்மலி, நெல்லூர், நெல்லி, நெல்லிச்சேரி, மற்றும் தேவாரத் தலங்கள் நெல்வாயில் (சிவபுரி) நெல்வாயிலாத்துறை, நெல்வெண்ணெய், நெல்லிக்கா மற்றும் மேலநெல்வேலி (மீனவல்லி) என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் நெல்லிப்பிரியன், நல்லிப்பிரியன். எனும் பட்டங்களை பெற்றனர்.
நெடுவாண்டான், நெடுவண்டான், நெடுங்கொண்டான், நெறிமுண்டான், நெடுவாளி, நெடுங்காளி, நெடுந்தரையன், நெடுத்தார், நெடுமுண்டான்
நெடுங்கிள்ளிசோழன், நெடுவாக்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் நெடுவாண்டான், நெடுங்கொண்டான், நெடும்பிரியன், நெடுவாளி, நெடுந்தரையன் என்வும் வழங்கும். நெடுங்களம், நெடுவாயில் என்னும் தேவார சிவ தலங்களையும், நெடுங்காடு, நெடுங்குளம் என்னும் சிவ தலங்களையும், நெடுவூர், நெடுங்குடி, நெடுமங்கலம், நெடும்புலம், நெடுங்கரை, நெடுவயல், நெடும்பட்டி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் நெடுவாண்டான், நெடுவண்டான், நெடுங்கொண்டான், நெறிமுண்டான், நெடுவாளி, நெடுங்காளி, நெடுந்தரையன், நெடுத்தார் என்னும் பட்டங்களை பெற்றனர்.இப் பட்டங்கள் கொண்ட கள்ளர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நெடுவாக்கோட்டையில் பெருமளவில் உள்ளார்கள்.
ப வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பத்தாளன், பத்தாட்சி, பெத்தாச்சி, பத்தாண்டான், பத்தாளி, பத்துடையான், பத்துகொண்டான்.
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் பத்தாளன். பத்தாளன்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பத்தூரென்னும் தேவார சிவதலத்தையும் பத்தமங்கலம், பத்தகுடி, பத்தாளன்பட்டி என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் பத்தாளன், பத்தாட்சி, பெத்தாச்சி பத்தாண்டான், பத்தாளி, பத்துடையான், பத்துகொண்டான்.
எனும் பட்டங்களை பெற்றனர்.
பனையன், பன்னையன், பனைகொண்டான், பன்னிகொண்டான், பன்னைராயன்,
பண்ணிகொண்டான், பன்றிகொண்டான், பண்ணிமுண்டான், பணிகொண்டான், பணிபூண்டான், பனையுடையான், பனையாண்டான், பனையாளன், பனையாளி,
பனையாட்சி, பனைநாடன், பனையதேவன், பனைப்பிரியன், தாளியன், தாளிதியன்,
முசுகுந்த சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பனையமன், பனையக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் தாளியன், பனை கொண்டான் என்றும் வழங்கப்பட்டான். பனந்தாள், பனங்காடு, பனங்காட்டூர், பனையூர் என்னும் சிவ தலங்களையும், பனையப்பட்டி, பனங்காடி, பனம்பாக்கம், பனங்குளம், பனமங்கலம்,பனம்பட்டி என்ற ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
பருதியன், பருதிராயன், பருதியுடையான், பருதியாண்டான், பருதியாளன், பருதியாளி
பருதியாட்சி, பருதிப்பிரியன், பருதிகொண்டான், பருத்திகொண்டான், பருதிநாடன்
பருதிதேவர்,
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் பருதிமன், பருதி(பருத்தி) கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பருதிகொண்டான், பருதியாண்டான், பருதிப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். பருதீச்சரம் (பருதியப்பர் கோவில்),மிகைச்சூர் எனும் சிவ தலங்களையும், பருத்திக்கோட்டை, பருத்திகுடி, பருத்தியூர், பருத்திச்சேரி, பருத்திமங்கலம், பருத்திப்பள்ளம் என்னும் ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூறிய பட்டங்களை பெற்றனர்.
பழையாற்றரையன், பழைசையுடையன், பழைசையாண்டான், பழைசையாளன், பழைசையாளி, பழைசையாட்சி, பழைசைப்பிரியன், பழைசைகொண்டான், பழைசைநாடன், பழையாறுகொண்டான், பழையாற்றான், பழந்தான், மாம்பழத்தான், பழங்கொண்டான், பழங்கண்டான், பழையாறுகொண்டான், பழையாற்றான், பழந்தான், மாம்பழத்தான், பழங்கொண்டான், பழங்கண்டான், பழையாற்றரையன்.
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் பழையன், பழையாறு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பழையாறு கொண்டான், பழையாற்றரையன் என்றும் இவன் அழைக்கப்பட்டான். பழையாற்றுவடதளி, பழையாற்றுத்தென்றளி, பழையாற்றுமேற்றழி, பழையாற்றுக்கீழ்த்தளி, பழையங்குடி, பழனம், பழையபுரம், பழையவலம், பழையாறு, பழையனூர், பழமங்கலம், பழங்களத்தூர், பழவனக்குடி எனும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய பட்டங்களை கொண்டனர்.
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் பழையன், பழையாறு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பழையாறு கொண்டான், பழையாற்றரையன் என்றும் இவன் அழைக்கப்பட்டான். பழையாற்றுவடதளி, பழையாற்றுத்தென்றளி, பழையாற்றுமேற்றழி, பழையாற்றுக்கீழ்த்தளி, பழையங்குடி, பழனம், பழையபுரம், பழையவலம், பழையாறு, பழையனூர், பழமங்கலம், பழங்களத்தூர், பழவனக்குடி எனும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய பட்டங்களை கொண்டனர்.
பழங்கொண்டான்
பழனங்கொண்டான்
பட்டுராயன், பவட்டுரான், பட்டுகொண்டான், பட்டுப்பிரியன், பட்டாட்சி, பட்டாளி, பட்டாளன், பட்டாண்டான், பட்டுடையன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பட்டிமன். பட்டுக்கோட்டை எனும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பட்டீச்சரம் என்னும் தேவார சிவதலத்தையும் பட்டம், பட்டவெளி, பட்டுராயன்பட்டி, பவட்டுரான்பட்டி, பட்டிமங்கலம் போன்ற நகரங்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். பட்டுகொண்டான், பட்டாண்டான், பட்டுராயன், பட்டாளி, பட்டுப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். இவன் வழி வந்தவர்கள் பட்டுராயன், பவட்டுரான் என்ற பட்டங்களை பெற்றனர்.
பசுபதி, பசும்படி, பசும்பிடி.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் பசுபோகசோழன். ஆவூர் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பசுபதி என்றும் வழங்கலாயிற்று. ஆவடுதுறை, ஆப்பாடி, பசுபதிமங்கை (பசுபதிகோயில்) என்னுமூர்களையும், பசுபோக ஆறுஎன்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசு புரிந்தான். இவன் மரபினர் பசுபதி, பசும்படி, பசும்பிடி என்னும் பட்டங்களை கொண்டனர்.
பரங்கிலிராயன், பரங்கிராயன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பரங்கிமன். பரகலக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பரங்கிராயன் என்வும் வழங்கலாயிற்று. பரங்கிமலை, பரங்கிப்பேட்டை, பரங்கிவெட்டிகாடு, பரம்பைக்குடி, பரமந்தூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பரங்கிராயன் எனும் பட்டம் கொண்டனர்.
பயற்றுராயன், பதுங்கரான், பதுங்கிரான், பதுங்கியான், பதங்கன், பைதுங்கன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பயற்றமன். பயிற்றூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பயற்றங்குடி, பயற்றஞ்சேரி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பயற்றுராயன், பதுங்கரான், பதுங்கிரான், பதுங்கியான், பதங்கன், பைதுங்கன் எனும்
பட்டங்களை கொண்டனர்.
பஞ்சநதரையன், பஞ்சரையன், காவிரிவெட்டி, காவெட்டி
காங்கமசோழ சக்ரவர்த்தி மரபில் வந்த பஞ்சநதிசோழ சக்ரவர்த்தி. பஞ்சநதிக்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். காவிரி, கபிலை,பவானி, நொய்யல்,ஆன்பொருனை என்னும் ஐந்து ஆறுகளையும் ஒன்று சேர்த்து புகார் பட்டினத்தில் கடலிற் சேர்த்து பொன்னி என்று பெயரிட்டவன் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்) இவன் பெயர் காவிரிச்சோழன், காவிரிகண்டசோழன், காவிரி வெட்டியசோழன், பஞ்சநதரையன், பஞ்சநதிகொண்டான், பஞ்சநதியாண்டான், பஞ்சநதிபிரியன், பஞ்சநதியாளி எனவும் வழங்கிற்று. இவன் காலமுதல் சோழநாடு காவிரி நாடு, பொன்னிநாடு, புனனாடு என்னும் பெயர்களும், காவிரியின் வடபுறமுள்ள சோழ நாடு வடகரைநாடு என்றும் தென் புறமுள்ள சோழநாடு தென் கரைநாடு என்றும் பெயர் பெற்றது. சோழர்களுக்கு காவிரிநாடன், பொன்னிநாடன், பொன்னித்துறைவன், புனனாடன் என்னும்பெயர்களும் வழங்கழாயிற்று. ஐயாறு(பஞ்சநதீச்சரம்) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தையும், பஞ்சநதிக்குளம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசுபுரிந்தான்.இவன் மரபோருக்கு பஞ்சநதரையன், பஞ்சரையன், காவிரிவெட்டி, காவெட்டி என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டது.
பம்பாளி, பாம்பாளி, வம்பாளி,
பெரும்பற்றசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி பாம்பசோழன். பாம்புரம் என்ற தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாம்பு கொண்டான், பாம்பாண்டான், பாம்புடையன், பாம்புப்பிரியன், பாம்பாளி எனவும் வழங்கப்பட்டது. சோழ நாட்டிற்கும் சிங்களதீவுக்கும் கப்பல் வணிகம் நடைபெரும் பொருட்டு பாம்பன் கால்வாய் அமைத்து வங்காளக் குடாக்கடலையும் இனைத்து அதன் கரையில் பாம்பன் என்னும் நகரத்தையும் உண்டு பன்னியவன் இவன். புணரியொன்றிடை யொன்றுபுக விட்டவவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. பாம்புணியாறு என்னும் பேராற்றையும், பாம்பாறு என்னும் காட்டாறையும், பாம்புணி, பாம்பணி என்னும் தேவார சிவ தலங்களையும், பாம்பூர் முதலிய ஊர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபோர் பாம்பாளி, பம்பாளி, வம்பாளி என்ற பட்டங்களை பெற்றனர்.
பல்லவர், பல்லவராயர், பல்லவரையர், பல்லவாண்டார், பல்லவவாண்டார். பல்லமடையார்.
பல்லவ சக்ரவர்திகளின் மரபினர். பல்லவர் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 9ஆம் நூற்றாண்டு வரையில் காஞ்சியை தலைநகரமாக கொண்டு தமிழகத்தை அரசாண்டவர்கள். இவர்களின் பூர்வீகம் இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவ தீவு (காரைத்தீவு) என்றும், மணி பல்லவமுடையார் என்ற பட்டம் திரிந்து பல்லமடையார் என்று ஆகி பின்பு பல்லவர் என்று வழங்கலாயிற்று என்று கூறுவதுண்டு. புகழ் பெற்ற மாமல்லபுரம் (மகாபலிபுரம்) சிற்பங்களையும், சித்தன்னவாசல் ஓவியங்களையும் உருவாக்கியவர்கள் பல்லவர்களே. பல்லவராயன் என்ற பட்டமுடைய குறுநில மன்னர்களும் அரசியலதிகாரிகளும் பிற்கால சோழப் பேரரசில் பெரும்புகளோடு விளங்கியுள்ளனர். ஈராயிரவன் பல்லவரையன் ஆகிய மும்முடிச்சோழபோசான், இவன் அரசூரில் வாழ்ந்தவன், இராசராச சோழனின் பெருந்தரத்து அதிகாரிகளிள் ஒருவன். இராசராசனுக்கு திருமந்திர ஓலை நாயகமாகவும் இருந்துள்ளான். இராஜேந்திர சோழன் காலத்திலும் பெரும் பதவிகளை வகித்துள்ளான். தண்டநாயகன் வெண்காடன் சங்கரனாகிய இராசாதிராசப் பல்லவராயன், இவன் உத்தம சோழ நல்லூரைச் சேர்ந்தவன். இராசாதிராசனின் படைத்தலைவன். கருணாகர சுந்தரத் தோளுடையயான் ஆகிய வளவன் பல்லவதரையன், இவன் விக்கிரம சோழனால் வளவன் பல்லவராயன் என்ற பட்டம் பெற்ற அதிகாரியாவான். பல்லவராயர்களில் கோனேரிப் பல்லவராயன், மஞ்சோலை பல்லவராயன், அச்சுத்ப்ப பல்லவராயன், இளையபெருமாள் பல்லவராயன், ஆவுடையப்ப பல்லவராயன், கந்தப்பப் பல்லவராயன், மல்லப்ப பல்லவராயன், சிவந்தெழுந்த பல்லவராயன் என்ற கிளைகளும் காணப்படுகின்றன. பல்லவராயர்கள் புதுக்கோட்டை பிலாவிடுதி, மருதன் கோவில் விடுதி, காயம்பட்டி (திருமயம்) தஞ்சாவூர் மாவட்டம் சின்ன பொன்னாப்பூர், கண்ணுகுடி, தென்னமநாடு, மூவாநல்லூர், செயங்கொண்டசோழபுரம், ரெங்கநாதபுரம் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர். பல்லவாண்டான் என்னும் பட்டமுடைய தலைவர்கள் இடைக்கால சோழர் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர். பல்லவர் என்னும் பட்டங்களின் ஒற்றுமை கண்டு இவர்கள் பல்லவர்களின் வழித் தோன்றல்கள் எனக்கொள்ள முடிகிறது.
படைத்தலைவன்
படைத்தலையன்
படையாட்சி
படையெழுச்சி
பருங்கைராயன்
பா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பார்புரட்டியார், பாப்பரையன், பாப்படையன், பாப்பிரியன், பாப்புவெட்டி, பாப்புரெட்டி.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பாப்பனசோழன். பாப்புநகரம் என்ற நகரத்தை உருவாக்கி தெற்குக்கோட்டை, வடக்குக்கோட்டை என்று இரு பகுதிகளாக பிரித்து இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பார்புரட்டியான், பாப்பரையன், பாப்புடையன், பாப்பிரியன், பாப்புவெட்டி எனவும் வழங்கும். பாப்புமங்கலம், பாப்பனசேரி, பாப்பாகோயில், பாப்பாகுடி, பாப்பூர், பாப்பரையன்பட்டி, பாப்புடையன்பட்டி, என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் பாப்பரையன், பாப்படையன், பாப்பிரியன், பாப்புவெட்டி, பாப்புரெட்டி என்னும் பட்டங்களை பெற்றனர். வேலூருக்கு அருகில் உள்ள பாப்புரெட்டிப்பட்டி, தருமபுரிக்கு அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊர்கள் இப்பட்டங்களின் அடியாகத் தோன்றியவைகளாகும்.இவர்களின் பட்டங்கள் பார்புரட்டியார் என்ற பட்டபெயரில் இருந்து திரிந்து பல்வேறு திரிபு பெயர்களை கொண்டுள்ளது. பார்புரட்டியார் என்றால் தம் வீரத்தால் பகைவரை தலைகீழாக புரட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்று பொருள் படும். இப்பட்டம் உடையவர்கள் திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, இளங்காடு, வானரங்குடி, திருச்சி, தஞ்சாவூர் முதலிய ஊர்களில் வாழுகின்றனர்.
பாச்சிலாளி, பிச்சாடி, பிச்சாளி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பாச்சில்மன். பாச்சிற்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். பாச்சிலாச்சிராமம், பாசூர் (பாச்சூர்) என்னும் தேவார சிவதலங்களையும்உண்டு பண்ணி அரசாண்டவன். இவன் பாச்சிலாண்டான், பாச்சிற்பிரியன், பாச்சிலாளி, பிச்சாளி என்னும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் பாச்சிலாளி, பிச்சாடி எனும் பட்டங்களை கொண்டனர்.
பாண்டராயன். பாண்டுராயன். பாண்டுரார்
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் பாண்டுசோழன். பஞ்சநதிகோட்டயை இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாண்டராயன் என்று வழங்கழாயிற்று. பாண்டவாய் என்னும் ஆற்றையும், பாண்டூர் என்னும் சிவதலத்தையும், பாண்டுகுடி, பாண்டுமங்கலம் (பாண்டமங்கலம்) பாண்டராயன்பட்டி என்னும் ஊர்களையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் பாண்டுராயன், பாண்டாராயன், பாண்டுரார் என்னும் பட்டங்களில் அழைக்கப்படுகிறனர்.
பாலையன்
பாலியன்
பாலையுடையான்
பாலுடையன்
பாலையன், பாலியன், பாலைராயன், பால்ராயன்,பாலையாண்டான், பாலாண்டான், பாலையுடையன், பாலுடையான், பாவுடையான், பாலைநாடன், பானாடன், பாலைநாட்டான், பானாட்டான். பாலையுடையான், பாலுடையன்
பாலையசோழன், பாலையக்கோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாலையன், பாலைராயன், பாலையாண்டான், பாலைகொண்டான், பலையுடையவன், பாலைப்பிரியன், பாலைநாடன், பாலைநாட்டான், பாலையாளி என்வும் வழங்கலாயிற்று. பழைய பாலாறு, பாலாறு என்னும் பேராறுகளையும், பாலைத்துறை, பாற்றுறை (பால்துறை) எனும் தேவார சிவ தலங்களையும், பாலையூர்,பாலைக்குடி, பாலைக்குரிச்சி, பாலைக்காடு, பாலைப்பட்டி, பாலைப்பட்டு, பாலாகுடி, பாலைவாய்,பாலாண்டான்பட்டி என்னும் ஊர்கலை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் பாலையன், பாலியன், பாலைராயன், பால்ராயன்,பாலையாண்டான், பாலாண்டான், பாலையுடையன், பாலுடையான், பாவுடையான், பாலைநாடன், பானாடன், பாலைநாட்டான், பானாட்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
பாண்டியன், பாண்டியராயன்
சோழ மன்னர்களுக்கும் பாண்டியமன்னர்களுக்கும் சோழப் பேரரசு தொடக்கம் முதல் இறுதி வரை பகைமை இருந்து கொண்டே இருந்தது. பாண்டியர்களோடு போரிடாத சோழ மன்னர்களே இல்லை என்ற அளவிற்கு அடிக்கடி போர் நடந்துள்ளது. இராசராச சோழன் தனது ஆட்சியில் படையெடுத்து பாண்டிய மன்னன் அமரபுயங்கனை வென்று பாண்டிய நாட்டை தன் ஆட்சிக்குட்படுத்தி தனக்கு பாண்டியன் என்ற பட்ட்த்தையும் சூட்டிக்கொண்டான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய மரபினர்களுக்கு அளித்த பட்டமே பாண்டியன்,பாண்டியராயன் என்பதாகும். இப் பட்டங்கள் பாண்டிய நாட்டு வெற்றி தொடர்புடையன. இப் பட்டங்களை உடைய கள்ளர்கள் தஞ்சையிலும், சித்தமல்லி, புதுக்கோட்டை வடவாளம், இராயப்பட்டி, கும்பகுடி, அவ்வையார்பட்டி, திருச்சி அல்லூர் முதலிய ஊர்களிலும் உள்ளனர்.
பி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பிசலண்டான்
பிசலுண்டான்
பிச்சயன்
பிச்சாளி
பிரமன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பிரமன். பிரமபுரம் (சீகாழி) என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். பிரம்பில் என்னும் தேவார சிவதல நகரத்தையும், பிரம்பூர் என்னும் சுப்ரமணிய தலத்தையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பிரமன் எனும் பட்டம் கொண்டனர்.
பிலிமுண்டான்
பின்னுண்டான்
பு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான்.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் புத்திகழிச்சசோழன்( அறிவு மிகுந்தசோழன்) புத்திகழிச்சான்கோட்டை என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் புத்திகழிந்தான் எனவும் வழங்கும். புத்தூர் என்னும் தேவார சிவ தலத்தையும், புத்தபுரம், புத்தகுடி, புத்தமங்கலம், புத்தங்கோட்டம் என்னும் ஊர்களையும் புத்தாறு என்னும் சிற்றாற்றையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான் என்னும் பட்டங்களை கொண்டனர்.
புலிராயன், புலிகொண்டான், பிலிமுண்டான், பிலிராயன், புலிக்கொடியன், புலிக்குட்டியன். புலிக்கொடியோன்
அண்டசோழன் மரபில் வந்த பெரும்பற்றசோழ சக்ரவர்த்தி. பெரும்பற்ற புலியூர் (சிதம்பரம்) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இந்திரனை தன் கொடியில் புலி என்று வைத்தவன். இதன் மூலம் புலிராயன், புலிக்கொடியன், புலிகொண்டான் என்வும் வழங்கப்பட்டான். இவன் கால முதல் சோழர்களுக்கு புலிக்கொடியும், புலிக்கொடியோன் என்ற பெயருமுண்டாயிற்று. பெரும்புலியூர், புலிவலம், புலிவனம் என்னும் தேவார சிவ தலங்களையும், புலிமங்கலம், புலிகுடி என்னுமூர்களையும் உண்டாக்கி அரசாண்டான். இன்றைய சித்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியும், கர்நாடகத்தின் ஒரு பகுதியும் இணைந்த புலி நாட்டையும் வெற்றி கொண்டு அரசாண்ட மன்னனும் இவனே.
புலியெனக்கொடியி லிந்திரனை வைத்தவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. இவன் மரபோர் புலிராயன், புலிகொண்டான், பிலிமுண்டான், பிலிராயன், புலிக்கொடியன், புலிக்குட்டியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
புன்னைகொண்டான், புன்னாகன், புண்ணாக்கன், புன்னையன்,புனையன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் புன்னாகமன். புன்னையூர் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் புன்னையன் எனவும் வழங்கப்பட்டது. புன்கூர் என்னும் தேவார சிவதல நகரத்தையும், புன்னைவாயில், புன்னைத்தூர், புன்னையூர், புன்னைக்குடி, புன்னாக்கன்குடி, புன்னைமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் புன்னாகன், புண்ணாக்கன், புன்னையன், புனையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
புள்ளராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் புள்ளமன். புள்ளன்பாடி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். புள்ளராயன் எனவும் அழைக்கப் பட்டவன். புள்ளமங்கை என்னும் தேவார சிவதலத்தையும், புள்ளமங்கலம், புள்ளங்குடி, புள்ளம்பட்டி, புள்ளராயன்பட்டி, புள்ளராயன் குடிகாடு என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் புள்ளராயன் எனும் பட்டத்தையும் சுமந்தனர். போருக்குச் செல்லும்முன் வெற்றி தோல்வியை அறிவதற்காக புள் சகுனம் பார்த்து செல்வதுண்டு. இச் செயலுக்கு புள்ளுவம் என்ற பெயருண்டு. புள்ளுவம் பார்பதில் வல்லமை கொண்டவர்கள் இப் பட்டங்களுக்கு உரிமை உடையவர்கள். இப்படம் உடையவர்கள் புள்ளவராயன்குடிகாடு, நெடுவாக்கோட்டை, காரக்கோட்டை, வடுவூர், ஒரத்தநாடு, தென்னமநாடு முதலிய ஊர்களில் அதிகமாக வாழுகின்றனர்.
கொல்லத்தரையன், கொங்கரையன், கொல்லமுண்டார்.
கொல்லம் என்பது சேரநட்டின் ஒரு பகுதியாகும். இராசராச சோழன் படை எடுத்து கொல்லத்தை வென்றான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய மரபினர்களுக்கு அளித்த பட்டமே கொல்லத்தரையன், கொல்லமுண்டார் என்பதாகும். இராசமகேந்திரசோழன் கொல்லத்தரையன் என்னும் சிறப்புப் பட்டத்தை பெற்றிருந்தான் என்று கல்வெட்டுகள் உரைக்கிறன. இப் பட்டமுடைய கள்ளர்கள் திருவையாறு திருசென்னம்பூண்டி, தஞ்சை மாவட்டம் உஜ்ஜினி, உடுமலைப்பேட்டை காரத்தொழுவு முதலிய ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்
கொன்னமுண்டான்
கொடும்பன்
கொடும்பையன்
கொடும்பைராயன்
கொடும்பையரையன்
கொடும்பைப்பிரியன்
கொடும்புலியன்
கொடுப்புலியன்
கொடும்பிரியன்
கொத்தப்பராயன்
கோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கோபாலன்
கோனேரிகொண்டான்
கோனேரிப்பிரியன்
கோதண்டப்பிரியன்
கோட்டைசுருட்டி
கோட்டைமீட்டான்
கோழியன், கோழயன்.
அண்டசோழன் மரபில் வந்த மன்னன் வீரவாதித்த சோழன். உறையூரை இராசதானியாகக் கொண்டவன். இவன் திருவுலாப் போகும் போது தான் ஏறியிருந்த யானையை தெய்வத்தன்மை பொருந்திய ஒரு கோழி போர் செய்து வென்ற காரணத்தினால் இவனுக்கு கோழியர்கோன், கோழிவேந்தன், கோழியன் என்ற பெயர்களும், அந்நகருக்கு கோழியூர், கோழிநகர் என்னும் பெயர்களும், அந்நகர திருக்கோயிலுக்கு குக்குடேசரம், முக்கீச்சரம் என்னும் பெயர்களும் வழங்கலாயிற்று. இவன் காலம் முதல் சோழர்களுக்கு கோழியன், கோழியர்கோன், கோழிவேந்தன் என்னும்பெயர்களும் வழ்ங்கின. இவ்வரசன் காலமுதல் சோழர்களின் நாணயங்களில் கோழியின் உருவம் பொரிக்கப்பட்டது.இவன் மரபோர் கோழியன், கோழயன் என்ற பட்டங்களை பெற்றனர்.
கோட்டரையன், கோட்டையாண்டான், கொட்டையாண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கோட்டமன். கோட்டைபட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கோட்டைராயன், கோட்டரையன், கோட்டைப்பிரியன், கோட்டையாண்டான், கோட்டைகொண்டான் எனவும்வழங்கப்பட்டது. கோட்டூர், கோட்டாறு என்னும் தேவார சிவதலங்களையும், கோட்டுக்காடு, கோட்டைப்பத்து, கோட்டுக்கா, கோட்டுச்சேரி, கோட்டாக்குடி என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் கோட்டரையன், கோட்டையாண்டான், கொட்டையாண்டான் என்னும் பட்டங்கள் பெற்றனர்.
ச வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சக்கரநாட்டான், சக்கரன், சக்கரை, சக்கரராயன், சக்கராயன், சக்கரநாடன், சக்கரையப்பநாடாள்வான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சக்கரமன். சக்கரப்பள்ளி என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சக்கரராயன், சக்கரநாடன் எனவும் வழங்கும். சகரப்பேட்டை, சக்கரமங்கலம், சக்கரக்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் சக்கரன், சக்கரை, சக்கரராயன், சக்கராயன், சக்கரநாடன், சக்கரையப்பநாடாள்வான் எனும் பட்டங்களை கொண்டனர்.
சந்திரங்கொண்டான், சந்திரதேவன், சம்பிரதேவன், சந்திரப்பிரியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் சந்திரசோழன். சந்திரப்பாடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சந்திரங்கொண்டான், சந்திரதேவன், சந்திரப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. சந்திரலோக்கைப் பெருந்துறை (செந்தலை) என்னும் சிவதலத்தையும், சந்திரநதி என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் சந்திரங்கொண்டான், சந்திரதேவன், சம்பிரதேவன், சந்திரப்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
சம்பிரதி
சங்கரன்
சங்கராசன்
சங்கரதேவன்
சங்கத்தியன்
சயங்கொண்டான்
சனகராயன்
சமயன், சமயதேவன், சமயாளி, சவுளி, சவுட்டி, சமட்டி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சமயன். சமயபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். சமயனூர், சமயன் குடிகாடு என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் சமயன், சமயதேவன், சமயாளி, சவுளி, சவுட்டி, சமட்டி எனும் பட்டங்களை கொண்டனர்.
சா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சாத்தயன், சாதகன், சாத்தரையன், சாமுத்தரையன், சாமுத்திரியன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சாத்தமன். இவன் பெயர் சாத்தயன், சாத்தரையன் எனவும் வழங்கும். சாத்தமங்கை (சாத்தமங்கலம்) என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். சாத்தனூர், சாத்தூர்,சாத்தங்குடி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் சாத்தயன், சாதகன், சாத்தரையன், சாமுத்தரையன், சாமுத்திரியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
சாணன்
சாணரையன்
சாணை
சாளுக்கியன்
சாளுவன், சாளுவராயன்.
சோழ மரபில் வந்த மன்னன் சாளுவசோழன். சாளுக்கிய வம்சத்தவராகவும் இருத்தல் கூடும். விஜயநகர அரசர்களின் காலத்தில் தென்நாட்டில் அவர்களின் பிரதிநிதியாக திருமலைராயர் சாளுவர் என்பார் இருந்தார் என்று சீரங்கத்தில் கிடைத்த சிலாசானம் குறிப்பிடுகிறது (இலக்கிய வரலாறுபாகம் 2 பக்கம் 369.கா.சு.பிள்ளை) சாளுவநாயக்கன் பட்டினம் சோழநாட்டு துறைமுகங்களுள் ஒன்றாகும். சாளுவன் பேட்டை, சாளுவனாறு என்பன இப்பட்டங்களின் அடிப்படையில் தோன்றியதாகும்.
சி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சித்தாட்சி, சிற்றாட்சி, சிட்டாச்சி.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் சித்தசோழன். சித்தலபாடிஎன்னும்நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சித்தாட்சி எனவும் வழங்கும். சித்தாறு என்னும் சிற்றாற்றையும், சித்தாமூர் (சித்தாம்பூர்) என்னும் விநாயக தலத்தையும், சித்தூர், சித்தாற்றூர், சித்தலூர்,சித்தரகுடி, சித்தகாடு, சித்தபத்து என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் சித்தாட்சி, சிற்றாட்சி, சிட்டாச்சி என்னும் பட்டங்களை கொண்டனர்.
சிந்துராயன்
சிங்களராயன்
சிங்களான்
சிங்களப்பிரியன்
சிங்களப்பிலியன்
சிங்கப்பிலியன்
சிங்களாளி
சிங்காரிக்கன்
சிறுராயன், சிறுநாட்டுராயன், சிறுநாடன், சிறுமாடன், சிறுப்பிரியன், சிலுப்பி, சிலம்பன், சிலுப்பன், செருமாடன், சிலுக்கியன்,
சிறுகிள்ளிசோழன், சிறுகோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சிறுராயன், சிருநாடன், சிறுப்பிரியன் எனவும் வழங்கலாயிற்று. சிறுகுடி, சிற்றேமம் என்னும் தேவார சிவ தலங்களையும், சிற்றம்பலம் என்னும் சிவ தலத்தையும், சிறுமங்கலம்,சிறுபாமணி, சிறுகளத்தூர், சிறுவயல், சிறுவனூர், சிறுவளூர் என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் சிறுராயன், சிறுநாட்டுராயன், சிறுநாடன், சிறுமாடன், சிறுப்பிரியன், சிலுப்பி, சிலம்பன், சிலுப்பன், செருமாடன், சிலுக்கியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
சீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சீனத்தரையன்
சு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சுந்தரராயன்
சுந்தன்
சுன்றையன்
சுக்கிரன்
சூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சூரியன்
சூரக்கோட்டையன், சுரக்குடையன், சுரக்குடியான், சூரக்குடையன், சூரக்கொடையன், சூரப்பிலியன், சூரப்பிரியன், சுரப்பிடுங்கியன், சுரைப்பிடுங்கியான்,
சூரவாதித்தசோழன், சூரக்கோட்டை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியகக் கொண்டவன். இவன் பெயர் சூரக்கோட்டையன், சூரங்கொண்டான், சூரமாண்டான், சூரப்பிரியன், சூரமுடையான், சூரமாளி எனவும் வழங்கும். சூரமங்கலம், சூரக்குடி (சுரக்குடி) சூரனூர், சூரயூர், சூரப்பள்ளம், என்னும் ஊர்களையும், கோளாலி என்னும் சிவ தலத்தையும், சூரனார்கோவில் என்னும் நவக்கிரக தலத்தையும் உருவாக்கி அரசு புரிந்தவன். ஆதிசேடன் மகள் காந்திமதியை மணந்தவன். தளவழிக்குகையி னிற்பொழி பிலத்த்ன்வழியே தனிந்ந்துரகர் த்ங்கண்மனி கொண்டவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. இவன் மரபோர் சூரக்கோட்டையன், சுரக்குடையன், சுரக்குடியான், சூரக்குடையன், சூரக்கொடையன், சூரப்பிலியன், சூரப்பிரியன்,சுரப்பிடுங்கியன், சுரைப்பிடுங்கியான், என்னும் பட்டங்கள் பெற்றன
செ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
செம்மைக்காரன்
செய்ஞலாளி
செம்மைகொண்டான்
செட்டி
செம்பியன், செம்பன், செம்பியரையன், செம்பரையன், செம்படையன், செம்பியத்தரையன், செம்பியமுத்தரையன், செம்பியமுத்தரசு, செம்பியமுத்திரியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த சிபி சக்ரவர்த்தி. செம்பியபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். முதல் ஏழு வள்ளல்களில் ஒருவன். புறாவுக்காக பருந்துக்கு தன் சதையை கொடுத்தவன். கலிங்கத்துப் பரணியிலும், அகநானூறிலும் பாடப் பெற்றவன். செம்பியரையன், செம்பியத்தரையன் எனவும் அழைக்கப் பட்டவன். செம்பியன்பள்ளி (செம்பொன்பள்ளி), செம்பியங்குடி (செம்பன்குடி) என்னும் தேவார சிவதலங்களையும், செம்பியன்மங்கலம், செம்பியங்களர் எனும் ஊர்களையும் உருவாக்கி சம நீதி தர்மத்துடன் ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் செம்பியன், செம்பன், செம்பியரையன், செம்பரையன், செம்படையன், செம்பியத்தரையன், செம்பியமுத்தரையன், செம்பியமுத்தரசு, செம்பியமுத்திரியன்
எனும் பட்டங்களை சுமந்தனர்.
செனவராயன்
சென்னண்டான்
சென்னாடான்
சே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சேய்ஞலாண்டான், சேய்ஞலாளன், சேய்ஞலாளி, சேய்ஞலாட்சி, சேய்ப்பிளன்
சேய்ஞற்கொண்டான் (செம்மைகொண்டான்) சேய்ஞலரையன் (செம்மைக்காரன்) சேய்ஞற்பிரியன் (சேப்பிளன்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சேய்ஞன். சேய்ஞலூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சேய்ஞற்கொண்டான், சேய்ஞலரையன், சேய்ஞற்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. சேயாறு என்ற ஆற்றையும், சேய்குடி, சேயூர், சேய்மங்கலம் என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் செம்மைகொண்டான், செம்மைக்காரன், சேப்பிளன் எனும் பட்டங்களை பெற்றனர்.
சேணன், சேண்டப்பிரியன், சேண்ராயன், செனவராயன், சேணரையன், சன்னவராயன், சனகராயன், சாணரையன், சாணன், சாணையன், சேண்கொண்டான், சேணாடன், சேனக்கொண்டான், சேனைகொண்டான், சேணாண்டான், சேனைநாடன், சேனைநாட்டான், சேண்பிரியன், சேனைகொண்டான், சென்னாடான். சென்னண்டான், சாணூரான்.
நலங்கிள்ளி சேட்சென்னி சோழன், சேண்டாகோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சேண்ராயன், சேணரையன், சேண்கொண்டான்,சேணாண்டான், சேண்பிரியன், சேணாடன் எனவும் வழங்கும். மிக்க வீரமும் கொடையுமுடையவன், நீர்வாவி சூழ்ந்த சோலையில் துயின்ற காரணத்தினால் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளிசேட் சென்னி என்று பெயர் பெற்றவன். இவன் காலமுதல் சோழர்களுக்கு சென்னி என்ற பெயரும், சோழநாட்டிற்கு சென்னிநாடு என்னும் பெயரும் வழங்கலாயிற்று. இச் சோழ மன்னன் கோனாட்டு எறிச்சிலூர் மாடவன் மதுரைக்குமரனார் என்னும் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல் புறநானூற்றில் 61ம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இவன் மரபோர் சேண்ராயன், செனவராயன், சேணரையன், சன்னவராயன், சனகராயன், சாணரையன், சாணன், சாணையன், சேண்கொண்டான், சேனக்கொண்டான், சேனைகொண்டான், சேணாண்டான், சேணாடன், சேனைநாடன், சேனைநாட்டான், சேண்பிரியன், சேனைகொண்டான், சென்னாடான். சென்னண்டான், சாணூரான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
சேந்தராயன், சிந்துராயன்
சேந்தசோழன் அழிசிசோழனின் மகன், உறையூரை இராசதானியாகக் கொண்டவன். அழகிலும், வீரத்திலும்,கொடையிலும் சிறந்து விளங்கியபடியால் உருவப்பேரிளஞ்சேட் சென்னி என்று பெயர் கொண்டவன்.அழுந்தூர் வேளிர்குல மகளை மணந்தவன். கரிகால் பெருவளத்தான் சோழன் இவன் மகனாவான். பாணர், பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர் பெருமக்கள் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப் பாடல்கள் புறநானூற்றில் 4, 261ம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன.இவன் மரபோர் சேந்தராயன், சிந்துராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
சேந்தமுடையான்
சேந்தமடையான்
சேங்கொண்டான்
சேதிராயன்
சேதிரான்
சேதுரான்
சேதிநாடன்
சேதுநாடன்
சேனைத்தலைவன்
சேனைத்தலையன்
சேனாதிபதி
சேனாபதி
சேனாதி
சேனாதிபன்
சேரவரையர், சேரர்பிரியர், சேர்வைக்காரர், சேர்வை
சேர அரச மரபினர்.சேரவரையர் (சேர அரசர்) என்பது காலப் போக்கில் உருமாறி சேரர்பிரியர், சேர்வைக்காரர், சேர்வை என வழங்களாயிற்று. சேரலர், சேரல், சேரமான் என்பன இவர்களின் சிறப்புப் பெயர்களாகும். இவர்கள் ஆண்ட நாட்டின் தலைநகரம் வஞ்சிமாநகர் என்றும், துறைமுக பட்டினமாக முசிறியும்,தொண்டியும் இருந்துள்ளன. கடல் சார் நிலமான சேரநாட்டை தொல் தமிழில் சேர்ப்பென்றும் அதனை ஆண்ட மன்னர்களை சேர்ப்பரென்றும் கூறுவது தமிழ் நூல் வழக்கு. சேர்ப்பர் சேரவரையராகி, சேரராகி அவர்களை சார்ந்து அரியணைகாக்கவும், நாட்டு விரிவாக்கத்திற்கும் பாடுபட்டவர்கள் சேரர்பிரியராகி இன்று சேர்வைக்காரர், சேர்வை என்றும் அறியப்படுகின்றனர்.இவர்களின் மூதாதரையர்கள் வானவரம்பன், வானவன், குட்டுவன், குடக்கோ என்போராவர். இவர்களின் கொடி விற்கொடியாகும், இப்பட்டமுடையோர் தஞ்சை காசாநாட்டு தென் பகுதியில் அதிகமாக வாழ்ந்துள்ளனர்.
பின் குறிப்பு
மதுரையை சார்ந்த பிரமலைக் கள்ளரில் ஒருபிரிவினர் சேருவார் என்றும் சேர்வை என்றும் அறியப்படுகின்றனர். இவர்களுக்கும் சேரர் பரம்பரையை சார்ந்த சேரவரையர், சேரர்பிரியர், சேர்வைக்காரர், சேர்வை என்பவர்களுக்கும் எதுவித குருதித் தொடர்புகளும் இல்லை.
சொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சொக்கராயன்
சோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சோணையன், சோணாடுகொண்டான், சோணாருண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சோணைமன். சோணாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சோணையன், சோணாடுகொண்டான் எனவும் வழங்கப்பட்டது. இவன் மரபினர் சோணையன், சோணாடுகொண்டான், சோணாருண்டாண் எனும் பட்டங்களை பெற்றனர்.
சோழன், சோழவன், சோழரையன், சோழராசன், சோதிரையன், சோமராசன், சோழநாயகன், சோமநாயக்கன், சோமணநாயக்கன், சோழாட்சி, சோமாசி,
சோழங்கொண்டான், சோழபாண்டியன், சோழகங்கன், சோழங்கன், சோழகங்கதேவன்
சோழங்கதேவன், சோழகங்கநாடன், சோழகங்கநாடான், சோழகனகராசன்
சோழதரையன், சோழதிரியன், சோநாயகன், சோழதேவன், சோமதேவன், சோழகோன், சோழகன், சோழப்பிரியன், சோழநாடன், சோமநாடான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த சக்ரவர்த்தி சுராதிராசசோழன். சோழபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். தன்னுடைய ஆளுகையில் அடங்கிய பூமிக்கு சோழ மண்டலம் என்று பெயரிட்டவன். பிராமணர், வேளாளர், இடையர் போன்ற சில வகுப்பினர்களுக்கு சோழியர் என்ற பட்டத்தையும் வழங்கியவன். தன் மூத்த மகனுக்கு இராசகேசரி என்றும் இளைய மகனுக்கு பரகேசரி எனவும் பெயரிட்டவன். இதன் பின் அரியாசனம் ஏறிய சோழ மன்னர்கள் மாறிமாறி இராசகேசரி, பரகேசரி என்னும் பட்டந்தரித்தனர். (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது) சோழமங்கலம், சோழனூர், சோழன்பேட்டை, சோழன்பட்டி, சோழங்குடி, சோழன் குடிகாடு, சோழாட்சி(சோமாசி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டான். இவன் மரபினர் சோழன், சோழவன், சோழரையன், சோழதரையன்,சோழதிரியன்,சோதிரையன், சோழராசன், சோமராசன், சோநாயகன், சோழாட்சி, சோமாசி, சோழதேவன், சோமதேவன், சோழகோன், சோழகன், சோழப்பிரியன், சோழநாடன், சோமநாடான் என்ற பட்டங்களை பெற்றனர்.
ஞ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஞா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
த வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தலையன், தலைராயன், தனராயன், தலைசைராயன், தனசைராயன்.
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் தலைமன், தலையாலங்காடு, தலைச்சங்காடு, தலைஞாயிறு, தலைக்காடு, தலையூர், தலைக்குடி, தலைச்சேரி, தலையமங்கலம், முதலிகுத்தே போன்ற நகர்களை உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் மேற் கூரிய பட்டங்களை கொண்டனர்.
தளியன்
தளிராயன்
தளியுடையான்
தளியாண்டான்
தளியாளன்
தளியாளி
தளியாட்சி
தளிப்பிரியன்
தளிகொண்டான்
தளிநாடன்
தக்கோலன், தக்கோலாக்கியன், தாக்கலக்கி,
தக்கோலசோழன், தக்கோலம் என்னும் தேவார சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன்.தக்களூர், தகட்டூர் என்னும் தேவார சிவ தலங்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் தக்கோலன், தக்கோலாக்கியன்,தாக்கலக்கி, என்னும் பட்டங்ககளை கொண்டனர்.
தஞ்சைராயன்
தஞ்சிராயன்
தண்டநாயகன்
தண்டத்தலைவன்
தண்டத்தலையன்
தா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தாளியன்
தாளிதியன்
தானைத்தலைவன்
தானைத்தலையன்
தானாதிபதி
தானாபதி
தானாதி
தானாதிபன்
தாக்கலக்கி
தி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
திருப்பூட்சி
தின்னாப்பிரியன்
திண்ணாப்பிரியன்
திராணி
திருக்கட்டியன்
திருக்காட்டியன்
தில்லைராயன், தில்லையாண்டான், தில்லைபிரியன், தில்லையாளி,தில்லைகொண்டான்.
செம்பியன் சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் தில்லைமன். தில்லை (சிதம்பரம்) என்னும் தேவார சிவதல நகரையுண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். தில்லைவிடங்கன், தில்லையாளிநல்லூர், தில்லைவளகம், தில்லையம்பூர் எனும் ஊர்களையும் உண்டாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபோர் தில்லைராயன், தில்லையாண்டான், தில்லைபிரியன், தில்லையாளி,தில்லைகொண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.
து வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
துறையாண்டான், துறவாண்டான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் துறைமன். துறைக்கோட்டை, துறையாண்டான்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் துறையாண்டான் எனவும் வழங்கும். துறையூர் என்ற தேவார சிவதலத்தையும், துறைப்பூண்டி எனும் சிவதலத்தையும் துறைமங்கலம், துறைக்குடி, துறைப்பட்டி, துறைக்குரிச்சி (துவரைக்குரிச்சி) துறையாண்டான்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் துறையாண்டான், துறவாண்டான் என்ற பட்டங்களை பெற்றனர்.
துண்டராயன், துண்டுராயன், துண்டயன், தொண்டயன், துண்டன், தொண்டன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் துண்டீரன். துண்டுராயன்பாடி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் துண்டராயன், துண்டயன், துண்டன் எனவும் வழங்கும். துண்டுராயன்பட்டு, துண்டுராயன்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் துண்டராயன், துண்டுராயன், துண்டயன், தொண்டயன், துண்டன், தொண்டன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
தெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தென்னவராயன், தென்னரையன், தென்னன், தென்கொண்டன், தெங்கொண்டான், தெங்கண்டான், தெங்கிண்டான், தென்னப்பிரியன், தின்னாப்பிரியன், திண்ணாப்பிரியன், தென்னன்
செம்பியன் மரபில் வந்த செங்கண் சோழன், சோழ மன்னன் சுபதேவனுக்கும் கமலவதி என்பாளுக்கும் பிறந்தவன். கமலவதி பிரசவ வேதனை கண்டபோது சோதிட வல்லுனர்கள் இன்னும் ஒரு நாளிகை கழித்து குழந்தை பிறக்குமானால் மூவுலகத்தையும் ஆளக்கூடிய மன்னனாவான் என்று கூறிய படியால் தன்னை கால் மேலாகவும் தலை கீழாகவும் இருக்கும்படி கட்டி ஒரு நாளிகை கடந்தபினர் கட்டை அவிழ்த்து விடும்படிகூறி குழந்தையை மாசி மாதம் சதய நட்சத்திரத்தில் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்த போது கண்கள் சிவந்து பிறந்தபடியால் செங்கணானென்று பெயரும் இட்டு தாய் மடிந்தாள். இக்குழ்ந்தையே பெயர் பெற்ற கோச்செங்கணாவான்.இவன் சங்ககால சோழ அரசர்களில் ஒருவன். கிள்ளி வளவனுக்கு பின்னர் ஆண்ட மன்னர்களில் மக்கள் மனதில் அழியா இடம்பெற்றவன்.
தென்னூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். கடைச்சங்கால இறுதியில் வாழ்ந்தவன், அறுபத்துமூன்று நாயன் மார்களில் ஒருவனாவான். ஈசனுக்கு 70 மாடக்கோயில்களை காவிரிகரை ஓரத்தில் கட்டி அரசாண்டதாக திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.
இவன் கட்டிய ஆனைபுகாக்(மாட) கோயில்களிள் ஆனைக்கா, பெண்ணாகடம், சாய்க்காடு,மண்ணிப்படிக்கரை, செம்பிருப்பு, செம்பொன்பள்ளி, வடதலைச்சங்காடு, தெந்தலைச்சங்காடு, ஆக்கூர், பெருமுளை, தேரழுந்தூர், வைகல், நரையூர் (மணிமாடம்) துற்காட்சி, நாலூர், ஆவூர், பசுபதிமங்கை, மாத்தூர், குடவயில், இங்கண், மருகல்,அம்பர், நன்னிலம், பாம்புரம், மாதூர், கீழ்வேளூர், தேவூர், சிக்கல், களப்பாள், இராசசேரிபுரம், கீழைவழி, தண்டலை, நீணேறி, வலிவலம், கீழையிலரன், பழையாறுவடதளி, பழையாறுதென்றளி, பழையாறுகீழ்த்தளி, பெருவேளூர், நாகைமலையீச்சரம், இராமனதீச்சரம், பெரும்கடம்பனூர், சேய்ஞலூர், நாகை மேலைக்காயரோகணம், வீழிமிழலை, பனையூர், என்னும் 47 கோயில்கள் புலப்பட்டன. மற்ற 23 கோயில்கள் புலப்படவில்லை.
இவனுக்கு நல்லடிக்கோன் என்ற மகனும் இருந்தான். புறநானூறு, களவழிநாற்பது என்ற சங்கனூல்களிலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், திருமங்கை ஆழ்வார் ஆகியோறாலும் பாடப்பற்றவன் செங்கணான்
சேரமன்னன் கணைக்கால் இருபொறையைச் சிறைபிடித்துக் குடவாயில் கோட்டத்து சிறையில் வைத்தான், பின்பு பொய்கையார் என்னும் புலவர் பாடிய களவழிநாற்பது படலைக் கேட்டு சேரமன்னன் சிறை நீக்கி அரசுரிமை அளித்தான்
கோச்செங்கனானுக்கு தென்னவராயன், தென்னரையன்,தென்கொண்டான், தென்னாண்டான்,தென்னப்பிரியன், தென்னுடையான், தென்னாளி, என்ற பெயர்களும் உண்டு. இவன் தென்னவராய நல்லூர், தென்னவநாடு, தென்னங்குடி, தென்னம்புலம், தென்குடி, தென்பரை, தென்பாதி, தென்னங்குளம், தென்னவராயன் பேட்டை என்னும் ஊர்களை உருவாக்கி ஆட்சிபுரிந்தவன்
இவன் பெயர் தென்னவராயன், தென்னரையன், தென்கொண்டான், தென்னாண்டான், தென்னப்பிரியன், தென்னுடையன், தென்னாளி, எனவும் வழங்கலாயிற்று.
இவன் மரபினர் தென்னவராயன்,தென்கொண்டான், தென்னரையன், தென்னன், தென்னப்பிரியன், தென்னுடையான், தென்னாளி, தெங்கிண்டான், தின்னாப்பிரியன், தெங்கண்டான், என்னும் பட்டங்களை கொண்டனர்.
தெத்துவெண்டான்
தெலிங்கராயன், தெலிங்கதேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் தெலிங்கமன். தெலிங்காபுரி என்னும்நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் தெலிங்கராயன், தெலிங்கதேவன் என்வும் வழங்கழாயிற்று. இவன் மரபோர் தெலிங்கராயன், தெலிங்கதேவன் எனும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டங்கள் இராசராச சோழனுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இராசராசனின் தெலுங்க வெற்றியை சிறப்பிக்கும் வகையில் தெலுங்க குலகாலன் என்ற பட்டமும் வழங்கிவந்தது. இப்பட்டமுடையோர் ஒரத்தநாடு,தெலுங்கன்குடிகாடு முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.
தே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தேவராயன், தேசிராயன், தேவாண்டான், தேவண்டன், தேவன்
மனுசக்ரவர்தியின் மகனாகிய இக்குவாகு தேவூரெனும் (தேவாரம் பெற்ற சிவம் நகரத்தை உருவாக்கி அரசு புரிந்தான். இதன் மூலம் இவனை தேவராயன், தேவாண்டான், தேவன் என்றும் அழைக்கப்பட்டான். இவன் உருவாக்கிய ஊர்கள் தேவன்குடி, தேவனூர், தேமங்கலம், தேவராயன் பேட்டை, தேவராயநல்லூர், தேவதானமென்பனவாகும். இக்குவாகு மரபு வழி வந்தோர் மேற்கூரிய
தேவராயன், தேசிராயன், தேவாண்டான், தேவண்டன், தேவன் என்ற
பட்டங்களை கொண்டனர்.
தேவாளன்
தேவாளி
தேவாட்சி
தேவப்பிரியன்
தேவுடையன்
தேவுகொண்டான்
தொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தொண்டைமான், தொண்டையன், தொண்டைப்பிரியன், தொண்டாப்பிரியன், தொண்டமார், தொண்டாயன், தொண்டைமான் கிளையர், தொண்டையன், தொண்டன்
கரிகால் சோழன் வழி வந்தவன் கிள்ளிவளவன். இவனுக்கு நெடுமுடிகிள்ளி, மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி என்ற பெயர்களும் உண்டு. கிள்ளிவளவன் த்ன் இளமைக்காலத்தில் கடல் கடந்து நாகர்களின் நாடாகிய நாகர் நாட்டை அடைந்தான். நாகர் நாட்டு மன்னன் வளைவணன் மகளாகிய பீலிவளை என்னும் இளவரசி நாக கன்னிகையை மணம் புரிந்தான். நாகர் மகளுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் பிறந்த இளம்குமரன் தொண்டை கொடியை அடையாளமாக அணிந்து கடலில் மிதந்து சோழநாட்டின் கிழக்கு கரையை அடைகிறான். சோழ ராஜ புத்திரனை கடலின் திரை (அலைகள்) கொண்டு வந்தமையால் திரையன் என்று பெயரிடப்படுகிறான். மேலும் தொண்டைக் கொடியை அடையாளமாக அணிந்து வந்தமையால் தொண்டைமான் இளந்திரையன் என்று அழைக்கப்பட்டான். சோழ இளவரசனாக மகுடம் சூடியபின்னர் சோழநாடு இரண்டாகப்பிரிக்கப் பட்டு கிழக்கே கடலும்,மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கடமும் தெற்கே பெண்ணையாற்றையும் எல்லைகளாக கொண்டு தொண்டை மண்டலம் உருவாக்கப்பட்டு காஞ்சிமாநகரை தலைநகராக கொண்டு தொண்டைமான் இளந்திரையன் அரசுபுரிந்தான். சிறந்த வீரமும் கொடைநலமும் உடையவன். கவி பாடுவதிலும் வல்லவன் இளந்திரையம் எனும் நூலையும் இயற்றியுள்ளான். இவன் பாடிய பாடல்கள் பல புறநானூற்றிலும், நற்றிணையிலும் கானப்படுகின்றன. சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படை இவனைப் பற்றி புலவர் கடிலூர் உருத்திரங் கண்ணனார் பாடியதாகும். குறும்பர்களின் கொட்டத்தை அடக்கி, காடுகளை வெட்டி, நிலத்தை திருத்தி, வளம் பெருக்கி தொண்டை நாட்டை வலிமைமிக்க நாடாக்கினான். இவன் ஆட்சியில் தொண்டைநாடு சான்றோருடைத்து என்று ஔவையால் புகழப்பட்டது. இளந்திரையன் நாகநாட்டில் இருந்து சோழநாட்டு கிழக்குக்கரையில் ஒதுங்கிய இடமே நாகர்பட்டினம் என்றழைக்கப்பட்டு இந்நாளில் நாகப்படினம் என்றழைக்கப்படுகிறது. தொண்டைமான் இளந்திரையன் பின் நாளில் ஆத்தொண்டை சக்கரவர்த்தி என்றும் அழைக்கப்பட்டான். இவன் வழி வந்தவர்களே தொண்டைமான், தொண்டையன், தொண்டைப்பிரியன், தொண்டாப்பிரியன், தொண்டமார், தொண்டாயன், தொண்டைமான் கிளையர், தொண்டையன், தொண்டன் என்னும் பட்டங்களை கொண்ட கள்ளர் குலத்தவராவர். இப்பட்டம் கி.பி முதல் நூற்றாண்டில் இருந்து வழக்கத்தில் வருவதும் ஒரு வரலாராகும். காஞ்சி மாநகரம் (இன்றைய காஞ்சிப்புரம்) 181 பெரும் திருக்கோயில்களை கொண்டு மாமதிற்கச்சி எனவும் கோயில் மலிந்த காஞ்சி எனவும் அழைக்கப்ப்டுவதும் வரலாராகும்.
தோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ந வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நன்னியன், நயினியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நன்னிமன். நன்னிபள்ளி என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் நன்னியன் என்றும் அழைக்கப்பட்டான். நன்னிலம் என்னும் தேவார சிவதலத்தையும், நன்னிமங்கலம், நன்னிகுடி, நன்னி (நயினான்)என்னும் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் நன்னியன், நயினியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
நள்ளிப்பிரியன், நல்லிப்பிரியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நல்லி. நள்ளிக்கோட்டை (நல்லிக்கோட்டை) என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். நள்ளாறு என்னும் தேவார சிவதலத்தையும், நள்ளி என்னும் ஊரையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினன். இவனை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர். நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம். இவன் மரபு வம்சத்தினர் நள்ளிப்பிரியன், நல்லிப்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
நரசிங்கன், நரங்கியன், நரசிங்கப்பிரியன், நரங்கிப்பிலியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நரசிங்கன். நரசிங்கபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். நரசிங்கமங்கலம், நரசிங்கம்பேட்டை என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் நரசிங்கன், நரங்கியன், நரசிங்கப்பிரியன், நரங்கிப்பிலியன் எனும் பட்டங்களை சுமந்தனர்.
நந்தியன், நந்தியர், நந்தன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நந்தியன். நந்திபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். நந்திமாகுடி, நந்தனூர், நந்திமங்கலம், நந்திவனம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் நந்தியன், நந்தன் என்ற பட்டங்களை பெற்றனர்.இவர்கள் பல்லவ குலத்தினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் அறியப்படுகிறது. பல்லவரின் இலச்சினை நந்தியாகும், பல்லவர் கொடிகளிலும், காசுகளிலும் நந்தியின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. பல்லவ அரசர்களும் முதலாம் நந்திவர்மன், இரண்டாம் நந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் என்ற பெயர்களில அழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இப்பட்டமுடையார் சோழர் மற்றும் பல்லவர் மரபினரென்றும் அறிய முடிகிறது. இப்பட்டமுடையோர் பொன்னாப்பூர், தும்பத்திக்கோட்டை, தென்னமநாடு, காட்டுக்குறிச்சி, தலையாமங்கலம், பட்டவெளி, கண்டகிரயம், நல்லிச்சேரி முதலிய ஊர்களில் மிகுதியாக வாழுகின்றனர்.
நா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நாகன்
நாயக்கன்
நாகராயன்
நாகுடையான்
நாகாண்டான்
நாகாளன்
நாக்காடி, நாவிளங்கி, நாகாளி.
மாந்தாதா மரபில் வந்த மன்னன் நாகமன், நாகபட்டினம் என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நாகாளி என்றும் வழங்கப்பட்டான். சிவராத்திரி முதல் யாமத்தில் திருக்குடந்தையிலும், இரண்டாம் யாமத்தில் திருநாகேச்சரத்திலும், மூன்றாம் யாமத்தில் திருப்பாப்புரத்திலும், நான்காம் யாமத்தில் திருநாகூரிலும் திருக்கோயிலமைத்து சிவலிங்கபூசை செய்த பெருமை படைத்தவன். நாகேச்சுரம், நாகன்பாடி, நாகன்குடி, நாகலூர், நாகலாபுரம், நாகமங்கலம், நாகபட்டினம், நாகளூர், நாகன்பேட்டை என்ற நகரங்களையும் ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
நாகாட்சி
நாகப்பிரியன்
நாகங்கொண்டான்
நாகநாடன்
நாகதேவன்
நாணசேவன், நாணசிவன்,ஞானசெவன்,ஞானியர், நானசேவர்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நாணசேவன். நாணலூர், நாணமங்கலம் (நாரணமங்கலம்) முதலிய ஊர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் நாணசேவன், நாணசிவன்,ஞானசெவன்,ஞானியர், நானசேவர் என்ற பட்டங்களையும் பெற்றனர்.
நார்த்தேவன், நார்த்தவான், நாரத்ேத்வன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நார்த்தேவன். நாரையூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நார்த்தேவன்குடி (நார்த்தாங்குடி) நார்த்தேவன்மங்கலம் (நாரமங்கலம்) என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் நார்த்தேவன், நார்த்தவான் எனும் பட்டங்களை கொண்டனர்.
நாடன்
நாடான்
நாடாள்வான்
நாட்டரையன்
நாட்டரசன்
நாட்டான்
நீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நிலங்கொண்டான், நெறிமுண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நீலமன். நீலப்பாடி நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நீலப்பிரியன், நீலங்கொண்டான் எனவும் அழைக்கப்பட்டவன். நீலக்குடி என்னும் தேவார சிவதலத்தையும், நீலவெளி என்னும் சிவதலத்தையும், நீலநல்லூர் (நீலத்தநல்லூர்) நீலமங்கலம் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் நிலங்கொண்டான், நெறிமுண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.
நெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நெல்லியன், நெல்லிராயன், நெல்லியுடையான், நெல்லியாண்டான், நெல்லியாளன்,
நெல்லியாளி, நெல்லியாட்சி, நெல்லிப்பிரியன், நெல்லிகொண்டான், நெல்லிதேவன்
நல்லிப்பிரியன்.
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் நெல்லிமன். நெல்லிக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.நெல்மலி, நெல்லூர், நெல்லி, நெல்லிச்சேரி, மற்றும் தேவாரத் தலங்கள் நெல்வாயில் (சிவபுரி) நெல்வாயிலாத்துறை, நெல்வெண்ணெய், நெல்லிக்கா மற்றும் மேலநெல்வேலி (மீனவல்லி) என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் நெல்லிப்பிரியன், நல்லிப்பிரியன். எனும் பட்டங்களை பெற்றனர்.
நெடுவாண்டான், நெடுவண்டான், நெடுங்கொண்டான், நெறிமுண்டான், நெடுவாளி, நெடுங்காளி, நெடுந்தரையன், நெடுத்தார், நெடுமுண்டான்
நெடுங்கிள்ளிசோழன், நெடுவாக்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் நெடுவாண்டான், நெடுங்கொண்டான், நெடும்பிரியன், நெடுவாளி, நெடுந்தரையன் என்வும் வழங்கும். நெடுங்களம், நெடுவாயில் என்னும் தேவார சிவ தலங்களையும், நெடுங்காடு, நெடுங்குளம் என்னும் சிவ தலங்களையும், நெடுவூர், நெடுங்குடி, நெடுமங்கலம், நெடும்புலம், நெடுங்கரை, நெடுவயல், நெடும்பட்டி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் நெடுவாண்டான், நெடுவண்டான், நெடுங்கொண்டான், நெறிமுண்டான், நெடுவாளி, நெடுங்காளி, நெடுந்தரையன், நெடுத்தார் என்னும் பட்டங்களை பெற்றனர்.இப் பட்டங்கள் கொண்ட கள்ளர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நெடுவாக்கோட்டையில் பெருமளவில் உள்ளார்கள்.
ப வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பத்தாளன், பத்தாட்சி, பெத்தாச்சி, பத்தாண்டான், பத்தாளி, பத்துடையான், பத்துகொண்டான்.
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் பத்தாளன். பத்தாளன்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பத்தூரென்னும் தேவார சிவதலத்தையும் பத்தமங்கலம், பத்தகுடி, பத்தாளன்பட்டி என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் பத்தாளன், பத்தாட்சி, பெத்தாச்சி பத்தாண்டான், பத்தாளி, பத்துடையான், பத்துகொண்டான்.
எனும் பட்டங்களை பெற்றனர்.
பனையன், பன்னையன், பனைகொண்டான், பன்னிகொண்டான், பன்னைராயன்,
பண்ணிகொண்டான், பன்றிகொண்டான், பண்ணிமுண்டான், பணிகொண்டான், பணிபூண்டான், பனையுடையான், பனையாண்டான், பனையாளன், பனையாளி,
பனையாட்சி, பனைநாடன், பனையதேவன், பனைப்பிரியன், தாளியன், தாளிதியன்,
முசுகுந்த சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பனையமன், பனையக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் தாளியன், பனை கொண்டான் என்றும் வழங்கப்பட்டான். பனந்தாள், பனங்காடு, பனங்காட்டூர், பனையூர் என்னும் சிவ தலங்களையும், பனையப்பட்டி, பனங்காடி, பனம்பாக்கம், பனங்குளம், பனமங்கலம்,பனம்பட்டி என்ற ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
பருதியன், பருதிராயன், பருதியுடையான், பருதியாண்டான், பருதியாளன், பருதியாளி
பருதியாட்சி, பருதிப்பிரியன், பருதிகொண்டான், பருத்திகொண்டான், பருதிநாடன்
பருதிதேவர்,
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் பருதிமன், பருதி(பருத்தி) கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பருதிகொண்டான், பருதியாண்டான், பருதிப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். பருதீச்சரம் (பருதியப்பர் கோவில்),மிகைச்சூர் எனும் சிவ தலங்களையும், பருத்திக்கோட்டை, பருத்திகுடி, பருத்தியூர், பருத்திச்சேரி, பருத்திமங்கலம், பருத்திப்பள்ளம் என்னும் ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூறிய பட்டங்களை பெற்றனர்.
பழையாற்றரையன், பழைசையுடையன், பழைசையாண்டான், பழைசையாளன், பழைசையாளி, பழைசையாட்சி, பழைசைப்பிரியன், பழைசைகொண்டான், பழைசைநாடன், பழையாறுகொண்டான், பழையாற்றான், பழந்தான், மாம்பழத்தான், பழங்கொண்டான், பழங்கண்டான், பழையாறுகொண்டான், பழையாற்றான், பழந்தான், மாம்பழத்தான், பழங்கொண்டான், பழங்கண்டான், பழையாற்றரையன்.
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் பழையன், பழையாறு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பழையாறு கொண்டான், பழையாற்றரையன் என்றும் இவன் அழைக்கப்பட்டான். பழையாற்றுவடதளி, பழையாற்றுத்தென்றளி, பழையாற்றுமேற்றழி, பழையாற்றுக்கீழ்த்தளி, பழையங்குடி, பழனம், பழையபுரம், பழையவலம், பழையாறு, பழையனூர், பழமங்கலம், பழங்களத்தூர், பழவனக்குடி எனும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய பட்டங்களை கொண்டனர்.
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் பழையன், பழையாறு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பழையாறு கொண்டான், பழையாற்றரையன் என்றும் இவன் அழைக்கப்பட்டான். பழையாற்றுவடதளி, பழையாற்றுத்தென்றளி, பழையாற்றுமேற்றழி, பழையாற்றுக்கீழ்த்தளி, பழையங்குடி, பழனம், பழையபுரம், பழையவலம், பழையாறு, பழையனூர், பழமங்கலம், பழங்களத்தூர், பழவனக்குடி எனும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய பட்டங்களை கொண்டனர்.
பழங்கொண்டான்
பழனங்கொண்டான்
பட்டுராயன், பவட்டுரான், பட்டுகொண்டான், பட்டுப்பிரியன், பட்டாட்சி, பட்டாளி, பட்டாளன், பட்டாண்டான், பட்டுடையன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பட்டிமன். பட்டுக்கோட்டை எனும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பட்டீச்சரம் என்னும் தேவார சிவதலத்தையும் பட்டம், பட்டவெளி, பட்டுராயன்பட்டி, பவட்டுரான்பட்டி, பட்டிமங்கலம் போன்ற நகரங்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். பட்டுகொண்டான், பட்டாண்டான், பட்டுராயன், பட்டாளி, பட்டுப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். இவன் வழி வந்தவர்கள் பட்டுராயன், பவட்டுரான் என்ற பட்டங்களை பெற்றனர்.
பசுபதி, பசும்படி, பசும்பிடி.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் பசுபோகசோழன். ஆவூர் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பசுபதி என்றும் வழங்கலாயிற்று. ஆவடுதுறை, ஆப்பாடி, பசுபதிமங்கை (பசுபதிகோயில்) என்னுமூர்களையும், பசுபோக ஆறுஎன்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசு புரிந்தான். இவன் மரபினர் பசுபதி, பசும்படி, பசும்பிடி என்னும் பட்டங்களை கொண்டனர்.
பரங்கிலிராயன், பரங்கிராயன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பரங்கிமன். பரகலக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பரங்கிராயன் என்வும் வழங்கலாயிற்று. பரங்கிமலை, பரங்கிப்பேட்டை, பரங்கிவெட்டிகாடு, பரம்பைக்குடி, பரமந்தூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பரங்கிராயன் எனும் பட்டம் கொண்டனர்.
பயற்றுராயன், பதுங்கரான், பதுங்கிரான், பதுங்கியான், பதங்கன், பைதுங்கன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பயற்றமன். பயிற்றூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பயற்றங்குடி, பயற்றஞ்சேரி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பயற்றுராயன், பதுங்கரான், பதுங்கிரான், பதுங்கியான், பதங்கன், பைதுங்கன் எனும்
பட்டங்களை கொண்டனர்.
பஞ்சநதரையன், பஞ்சரையன், காவிரிவெட்டி, காவெட்டி
காங்கமசோழ சக்ரவர்த்தி மரபில் வந்த பஞ்சநதிசோழ சக்ரவர்த்தி. பஞ்சநதிக்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். காவிரி, கபிலை,பவானி, நொய்யல்,ஆன்பொருனை என்னும் ஐந்து ஆறுகளையும் ஒன்று சேர்த்து புகார் பட்டினத்தில் கடலிற் சேர்த்து பொன்னி என்று பெயரிட்டவன் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்) இவன் பெயர் காவிரிச்சோழன், காவிரிகண்டசோழன், காவிரி வெட்டியசோழன், பஞ்சநதரையன், பஞ்சநதிகொண்டான், பஞ்சநதியாண்டான், பஞ்சநதிபிரியன், பஞ்சநதியாளி எனவும் வழங்கிற்று. இவன் காலமுதல் சோழநாடு காவிரி நாடு, பொன்னிநாடு, புனனாடு என்னும் பெயர்களும், காவிரியின் வடபுறமுள்ள சோழ நாடு வடகரைநாடு என்றும் தென் புறமுள்ள சோழநாடு தென் கரைநாடு என்றும் பெயர் பெற்றது. சோழர்களுக்கு காவிரிநாடன், பொன்னிநாடன், பொன்னித்துறைவன், புனனாடன் என்னும்பெயர்களும் வழங்கழாயிற்று. ஐயாறு(பஞ்சநதீச்சரம்) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தையும், பஞ்சநதிக்குளம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசுபுரிந்தான்.இவன் மரபோருக்கு பஞ்சநதரையன், பஞ்சரையன், காவிரிவெட்டி, காவெட்டி என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டது.
பம்பாளி, பாம்பாளி, வம்பாளி,
பெரும்பற்றசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி பாம்பசோழன். பாம்புரம் என்ற தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாம்பு கொண்டான், பாம்பாண்டான், பாம்புடையன், பாம்புப்பிரியன், பாம்பாளி எனவும் வழங்கப்பட்டது. சோழ நாட்டிற்கும் சிங்களதீவுக்கும் கப்பல் வணிகம் நடைபெரும் பொருட்டு பாம்பன் கால்வாய் அமைத்து வங்காளக் குடாக்கடலையும் இனைத்து அதன் கரையில் பாம்பன் என்னும் நகரத்தையும் உண்டு பன்னியவன் இவன். புணரியொன்றிடை யொன்றுபுக விட்டவவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. பாம்புணியாறு என்னும் பேராற்றையும், பாம்பாறு என்னும் காட்டாறையும், பாம்புணி, பாம்பணி என்னும் தேவார சிவ தலங்களையும், பாம்பூர் முதலிய ஊர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபோர் பாம்பாளி, பம்பாளி, வம்பாளி என்ற பட்டங்களை பெற்றனர்.
பல்லவர், பல்லவராயர், பல்லவரையர், பல்லவாண்டார், பல்லவவாண்டார். பல்லமடையார்.
பல்லவ சக்ரவர்திகளின் மரபினர். பல்லவர் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 9ஆம் நூற்றாண்டு வரையில் காஞ்சியை தலைநகரமாக கொண்டு தமிழகத்தை அரசாண்டவர்கள். இவர்களின் பூர்வீகம் இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவ தீவு (காரைத்தீவு) என்றும், மணி பல்லவமுடையார் என்ற பட்டம் திரிந்து பல்லமடையார் என்று ஆகி பின்பு பல்லவர் என்று வழங்கலாயிற்று என்று கூறுவதுண்டு. புகழ் பெற்ற மாமல்லபுரம் (மகாபலிபுரம்) சிற்பங்களையும், சித்தன்னவாசல் ஓவியங்களையும் உருவாக்கியவர்கள் பல்லவர்களே. பல்லவராயன் என்ற பட்டமுடைய குறுநில மன்னர்களும் அரசியலதிகாரிகளும் பிற்கால சோழப் பேரரசில் பெரும்புகளோடு விளங்கியுள்ளனர். ஈராயிரவன் பல்லவரையன் ஆகிய மும்முடிச்சோழபோசான், இவன் அரசூரில் வாழ்ந்தவன், இராசராச சோழனின் பெருந்தரத்து அதிகாரிகளிள் ஒருவன். இராசராசனுக்கு திருமந்திர ஓலை நாயகமாகவும் இருந்துள்ளான். இராஜேந்திர சோழன் காலத்திலும் பெரும் பதவிகளை வகித்துள்ளான். தண்டநாயகன் வெண்காடன் சங்கரனாகிய இராசாதிராசப் பல்லவராயன், இவன் உத்தம சோழ நல்லூரைச் சேர்ந்தவன். இராசாதிராசனின் படைத்தலைவன். கருணாகர சுந்தரத் தோளுடையயான் ஆகிய வளவன் பல்லவதரையன், இவன் விக்கிரம சோழனால் வளவன் பல்லவராயன் என்ற பட்டம் பெற்ற அதிகாரியாவான். பல்லவராயர்களில் கோனேரிப் பல்லவராயன், மஞ்சோலை பல்லவராயன், அச்சுத்ப்ப பல்லவராயன், இளையபெருமாள் பல்லவராயன், ஆவுடையப்ப பல்லவராயன், கந்தப்பப் பல்லவராயன், மல்லப்ப பல்லவராயன், சிவந்தெழுந்த பல்லவராயன் என்ற கிளைகளும் காணப்படுகின்றன. பல்லவராயர்கள் புதுக்கோட்டை பிலாவிடுதி, மருதன் கோவில் விடுதி, காயம்பட்டி (திருமயம்) தஞ்சாவூர் மாவட்டம் சின்ன பொன்னாப்பூர், கண்ணுகுடி, தென்னமநாடு, மூவாநல்லூர், செயங்கொண்டசோழபுரம், ரெங்கநாதபுரம் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர். பல்லவாண்டான் என்னும் பட்டமுடைய தலைவர்கள் இடைக்கால சோழர் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர். பல்லவர் என்னும் பட்டங்களின் ஒற்றுமை கண்டு இவர்கள் பல்லவர்களின் வழித் தோன்றல்கள் எனக்கொள்ள முடிகிறது.
படைத்தலைவன்
படைத்தலையன்
படையாட்சி
படையெழுச்சி
பருங்கைராயன்
பா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பார்புரட்டியார், பாப்பரையன், பாப்படையன், பாப்பிரியன், பாப்புவெட்டி, பாப்புரெட்டி.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பாப்பனசோழன். பாப்புநகரம் என்ற நகரத்தை உருவாக்கி தெற்குக்கோட்டை, வடக்குக்கோட்டை என்று இரு பகுதிகளாக பிரித்து இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பார்புரட்டியான், பாப்பரையன், பாப்புடையன், பாப்பிரியன், பாப்புவெட்டி எனவும் வழங்கும். பாப்புமங்கலம், பாப்பனசேரி, பாப்பாகோயில், பாப்பாகுடி, பாப்பூர், பாப்பரையன்பட்டி, பாப்புடையன்பட்டி, என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் பாப்பரையன், பாப்படையன், பாப்பிரியன், பாப்புவெட்டி, பாப்புரெட்டி என்னும் பட்டங்களை பெற்றனர். வேலூருக்கு அருகில் உள்ள பாப்புரெட்டிப்பட்டி, தருமபுரிக்கு அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊர்கள் இப்பட்டங்களின் அடியாகத் தோன்றியவைகளாகும்.இவர்களின் பட்டங்கள் பார்புரட்டியார் என்ற பட்டபெயரில் இருந்து திரிந்து பல்வேறு திரிபு பெயர்களை கொண்டுள்ளது. பார்புரட்டியார் என்றால் தம் வீரத்தால் பகைவரை தலைகீழாக புரட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்று பொருள் படும். இப்பட்டம் உடையவர்கள் திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, இளங்காடு, வானரங்குடி, திருச்சி, தஞ்சாவூர் முதலிய ஊர்களில் வாழுகின்றனர்.
பாச்சிலாளி, பிச்சாடி, பிச்சாளி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பாச்சில்மன். பாச்சிற்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். பாச்சிலாச்சிராமம், பாசூர் (பாச்சூர்) என்னும் தேவார சிவதலங்களையும்உண்டு பண்ணி அரசாண்டவன். இவன் பாச்சிலாண்டான், பாச்சிற்பிரியன், பாச்சிலாளி, பிச்சாளி என்னும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் பாச்சிலாளி, பிச்சாடி எனும் பட்டங்களை கொண்டனர்.
பாண்டராயன். பாண்டுராயன். பாண்டுரார்
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் பாண்டுசோழன். பஞ்சநதிகோட்டயை இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாண்டராயன் என்று வழங்கழாயிற்று. பாண்டவாய் என்னும் ஆற்றையும், பாண்டூர் என்னும் சிவதலத்தையும், பாண்டுகுடி, பாண்டுமங்கலம் (பாண்டமங்கலம்) பாண்டராயன்பட்டி என்னும் ஊர்களையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் பாண்டுராயன், பாண்டாராயன், பாண்டுரார் என்னும் பட்டங்களில் அழைக்கப்படுகிறனர்.
பாலையன்
பாலியன்
பாலையுடையான்
பாலுடையன்
பாலையன், பாலியன், பாலைராயன், பால்ராயன்,பாலையாண்டான், பாலாண்டான், பாலையுடையன், பாலுடையான், பாவுடையான், பாலைநாடன், பானாடன், பாலைநாட்டான், பானாட்டான். பாலையுடையான், பாலுடையன்
பாலையசோழன், பாலையக்கோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாலையன், பாலைராயன், பாலையாண்டான், பாலைகொண்டான், பலையுடையவன், பாலைப்பிரியன், பாலைநாடன், பாலைநாட்டான், பாலையாளி என்வும் வழங்கலாயிற்று. பழைய பாலாறு, பாலாறு என்னும் பேராறுகளையும், பாலைத்துறை, பாற்றுறை (பால்துறை) எனும் தேவார சிவ தலங்களையும், பாலையூர்,பாலைக்குடி, பாலைக்குரிச்சி, பாலைக்காடு, பாலைப்பட்டி, பாலைப்பட்டு, பாலாகுடி, பாலைவாய்,பாலாண்டான்பட்டி என்னும் ஊர்கலை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் பாலையன், பாலியன், பாலைராயன், பால்ராயன்,பாலையாண்டான், பாலாண்டான், பாலையுடையன், பாலுடையான், பாவுடையான், பாலைநாடன், பானாடன், பாலைநாட்டான், பானாட்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
பாண்டியன், பாண்டியராயன்
சோழ மன்னர்களுக்கும் பாண்டியமன்னர்களுக்கும் சோழப் பேரரசு தொடக்கம் முதல் இறுதி வரை பகைமை இருந்து கொண்டே இருந்தது. பாண்டியர்களோடு போரிடாத சோழ மன்னர்களே இல்லை என்ற அளவிற்கு அடிக்கடி போர் நடந்துள்ளது. இராசராச சோழன் தனது ஆட்சியில் படையெடுத்து பாண்டிய மன்னன் அமரபுயங்கனை வென்று பாண்டிய நாட்டை தன் ஆட்சிக்குட்படுத்தி தனக்கு பாண்டியன் என்ற பட்ட்த்தையும் சூட்டிக்கொண்டான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய மரபினர்களுக்கு அளித்த பட்டமே பாண்டியன்,பாண்டியராயன் என்பதாகும். இப் பட்டங்கள் பாண்டிய நாட்டு வெற்றி தொடர்புடையன. இப் பட்டங்களை உடைய கள்ளர்கள் தஞ்சையிலும், சித்தமல்லி, புதுக்கோட்டை வடவாளம், இராயப்பட்டி, கும்பகுடி, அவ்வையார்பட்டி, திருச்சி அல்லூர் முதலிய ஊர்களிலும் உள்ளனர்.
பி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பிசலண்டான்
பிசலுண்டான்
பிச்சயன்
பிச்சாளி
பிரமன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பிரமன். பிரமபுரம் (சீகாழி) என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். பிரம்பில் என்னும் தேவார சிவதல நகரத்தையும், பிரம்பூர் என்னும் சுப்ரமணிய தலத்தையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பிரமன் எனும் பட்டம் கொண்டனர்.
பிலிமுண்டான்
பின்னுண்டான்
பு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான்.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் புத்திகழிச்சசோழன்( அறிவு மிகுந்தசோழன்) புத்திகழிச்சான்கோட்டை என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் புத்திகழிந்தான் எனவும் வழங்கும். புத்தூர் என்னும் தேவார சிவ தலத்தையும், புத்தபுரம், புத்தகுடி, புத்தமங்கலம், புத்தங்கோட்டம் என்னும் ஊர்களையும் புத்தாறு என்னும் சிற்றாற்றையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான் என்னும் பட்டங்களை கொண்டனர்.
புலிராயன், புலிகொண்டான், பிலிமுண்டான், பிலிராயன், புலிக்கொடியன், புலிக்குட்டியன். புலிக்கொடியோன்
அண்டசோழன் மரபில் வந்த பெரும்பற்றசோழ சக்ரவர்த்தி. பெரும்பற்ற புலியூர் (சிதம்பரம்) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இந்திரனை தன் கொடியில் புலி என்று வைத்தவன். இதன் மூலம் புலிராயன், புலிக்கொடியன், புலிகொண்டான் என்வும் வழங்கப்பட்டான். இவன் கால முதல் சோழர்களுக்கு புலிக்கொடியும், புலிக்கொடியோன் என்ற பெயருமுண்டாயிற்று. பெரும்புலியூர், புலிவலம், புலிவனம் என்னும் தேவார சிவ தலங்களையும், புலிமங்கலம், புலிகுடி என்னுமூர்களையும் உண்டாக்கி அரசாண்டான். இன்றைய சித்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியும், கர்நாடகத்தின் ஒரு பகுதியும் இணைந்த புலி நாட்டையும் வெற்றி கொண்டு அரசாண்ட மன்னனும் இவனே.
புலியெனக்கொடியி லிந்திரனை வைத்தவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. இவன் மரபோர் புலிராயன், புலிகொண்டான், பிலிமுண்டான், பிலிராயன், புலிக்கொடியன், புலிக்குட்டியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
புன்னைகொண்டான், புன்னாகன், புண்ணாக்கன், புன்னையன்,புனையன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் புன்னாகமன். புன்னையூர் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் புன்னையன் எனவும் வழங்கப்பட்டது. புன்கூர் என்னும் தேவார சிவதல நகரத்தையும், புன்னைவாயில், புன்னைத்தூர், புன்னையூர், புன்னைக்குடி, புன்னாக்கன்குடி, புன்னைமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் புன்னாகன், புண்ணாக்கன், புன்னையன், புனையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
புள்ளராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் புள்ளமன். புள்ளன்பாடி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். புள்ளராயன் எனவும் அழைக்கப் பட்டவன். புள்ளமங்கை என்னும் தேவார சிவதலத்தையும், புள்ளமங்கலம், புள்ளங்குடி, புள்ளம்பட்டி, புள்ளராயன்பட்டி, புள்ளராயன் குடிகாடு என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் புள்ளராயன் எனும் பட்டத்தையும் சுமந்தனர். போருக்குச் செல்லும்முன் வெற்றி தோல்வியை அறிவதற்காக புள் சகுனம் பார்த்து செல்வதுண்டு. இச் செயலுக்கு புள்ளுவம் என்ற பெயருண்டு. புள்ளுவம் பார்பதில் வல்லமை கொண்டவர்கள் இப் பட்டங்களுக்கு உரிமை உடையவர்கள். இப்படம் உடையவர்கள் புள்ளவராயன்குடிகாடு, நெடுவாக்கோட்டை, காரக்கோட்டை, வடுவூர், ஒரத்தநாடு, தென்னமநாடு முதலிய ஊர்களில் அதிகமாக வாழுகின்றனர்.