சோழர் கால தொல் சீர் தமிழ் மொழி
சோழர் கால தொல் சீர் தமிழ் மொழி
சோழராட்சியில் நிர்வாக முறைகளை கோயில் நிருவாகம், ஊரவை நிருவாகம், அரசு நிருவாகம் என் மூன்றாகப் படுத்தினர். கோயிலை வழிப்பாட்டிற்குரிய தலமாக மட்டும் கருதாமல், ஊரவை நிருவாகத்தின் செயலகமாகவும் கருதினர். கோயிலுள் இருக்கும் மண்டபத்தை திருலோக்கம் எனவும், கோயிலுள் இருக்கும் சபையை மன்று அல்லது அம்பலம் என்றும், அரண்மனையில் உள்ள இராசசபையை உள்ளாலை என்றும், கோயிலிலமைந்த மருத்துவ மனையை ஆதுலர் சாலை என்றும் அழைத்தனர்.
கோயிலில் ஆடுபவர்கள், மற்றும் பாடுபவர்கள் - பதியிலார்
பூசை வழி படைக்கும் பண்டங்கள் - அமுது படி
உணவு - அடிசில்
அரசசபையில் அடங்கிய பெருந்தரத்து அதிகாரிகள் - மன்றாடிகள்
சேனைத் தலைமை ஏற்று நடதிய அதிகாரிகள் - படைமுதலி
காலாட்படையினர் - கைகோளப் பெரும் படை
அமைச்சர்களுக்கு ஒத்த அதிகாரம் படைத்தவர்கள் - உடங்கூட்டம்
மன்னர்களுக்கு நெருங்கிய தொண்டாற்றிய ஆடவர் மற்றும் பெண்டிர் - அணுக்கமார் மற்றும் அணுக்கியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்
1. உத்திர மந்திரி
2. பெருந்தர அதிகாரிகள்
3. திருமந்திர ஓலை
4. திருமந்திர ஓலை நாயகம்
5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி
6. வரியிலிடு
7. காடுவெட்டி
8. உடன் கூட்டத்து அதிகாரி
9. அனுக்கத் தொண்டன்
10. நடுவிருக்கை
11. விடையில் அதிகாரி
12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
13. புரவரித் திணைக்களம்
14. புரவரி திணைக்களத்து நாயகம்
15. வரிப் பொத்தகம்
16. முகவெட்டி
17. வரிப்பொத்தகக் கணக்கு
18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
19. கடமை எழுதுவோன்
20. பட்டோலை
21. ஸ்ராகாரிய ஆராய்ச்சி
பெண் அதிகாரிகள்
அரசியின் ஆணையை நிரவேற்றிய பெண் அதிகாரி ”அதிகாரிச்சி” என்று அழைக்கப் பட்டாள்
சபைக்குரிய அலுவலர்கள்
பிணக்கறுப்பான் (அ) நடுநிலையாளன்
கிராமசபை நடைபெறும்போது உதவி செய்வதோடு அங்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நடுநிலையாக இருந்து தீர்ப்பவனாவான்.
கணக்கன்
சபைக்குரிய கணக்கை எழுதுபவன் ஆவான். சபை விரும்பும்போது கணக்கை அவ்வப்போது காட்டுவதோடு ஆண்டு இறுதியில் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
கீழ்க்கணக்கன். கணக்கனுக்கு உதவி செய்பவன்.
பாடி காப்பான்
கலகம், திருட்டு முதலான குற்றங்கள் ஊரில் நிகழாவண்ணம் காப்பவன்.
தண்டுவான்
கிராம மக்கள் அரசிற்கும், ஊர்ச்சபைக்கும் கொடுக்க வேண்டிய வரிகளை வலிப்பவனாவான்.
அடிக்கீழ் நிற்பான்
ஊர்ச் சபையாருக்குக் குற்றவேல் புரிபவன்.
சோழர் காலத்தில் மக்களுக்கு இடப்பட்ட வரிகள்
மக்களின் தேவைகள் மகேசனின் தேவைகள், அதை நிறைவேற்ற அரசுக்கு பொருள் வேண்டாமா?
இதோ அரசின் வருவாய்க்காண வரிகள்.
1. அங்காடிப் பட்டம்
2. இடப்பாட்டம்
3. இலைக் கூலம்
4. இரவுவரி
5. இறை
6. ஈழம்
7. உல்கு
8. ஊரிடுவரி
9. எச்சோறு
10. ஏரிப்பாட்டம்
11. ஓடக்கூலி
12. கண்ணாலக்காணம்
13. காவேரிக்கரை வினியோகம்
14. குசக்காணம்
15. குடிமை
16. சபாவினியோகம்
17. சித்தாயம்
18. சில்லிறை
19. சில்வரி
20. செக்கிறை
21. தட்டார்ப் பாட்டம்
22. தரகு
23. தறியிறை
24. நாடுகாவல்
25. நீர்க்கூலி
26. பாடிகாவல்
27. பூட்சி
28. போர்வரி
29. மரமஞ்சாடி
30. மரவிறை
31. மனை இறை
32. மீன் பாட்டம்
33. வண்ணாரப்பாறை
சோழர்கால கப்பல்கள்.
கடல் கடந்து வாணிகத்திலும், ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும் கப்பலின் பெயர்கள்.
1. வங்கம்
2. பாடை
3. தோணி
4. யானம்
5. தங்கு
6. மதலை
7. திமில்
8. பாறு
9. அம்பி
10. பாரி
11. சதா
12. பாரதி
13. நௌ
14. போதன்
15. தொள்ளை
16. நாவாய்
உலகளந்தான் கோல்
சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறைச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.
எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.
உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்
24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்
33” ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.
கல்வெட்டுகளில் காணப்படும் கலைச் சொற்கள்.
ஆணத்தி - அரச ஆணையை செயல் படுத்தும் அதிகாரி
ஒற்றி - அடமானம் வைத்தல்
கற்பகம் - நானூற்று முப்பதிரண்டு கோடி ஆண்டுகள்
கொட்ட காரம் - நெல் முதலிய பண்டங்கள் வைக்கும் அறை
சக்திமுகம் - அரசனது ஆணைப் பத்திரம்
தம்மி - தாமரை
திருமுகம் - அரச சாசனம்
பட்டோலை - அரசன் ஆணையை அறிவிக்கும் கருவி
பண்டார வாடை - குடிபாத்தியமான ஊர்
பார்த்திபர் - அரசர்கள்
புனற்பதி - வாழ்விடம்
மால்களிற்றின் நாயகம் - கருமையான யானைக்குத் தலைவன்
வட்டி நாழி - வாங்குகின்ற வட்டியின் மீது இடப்படும் வரி
வெள்ளாட்டி - பணிப்பெண்
வென் கண்ட - வெற்றி கண்ட