முக்குல மனனர்கள்
மூவேந்தரும் ஒரே குடிவழியினர் பழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய மன்னர் மரபு பாண்டிய மரபு ஒன்றே. பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது. தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை மாறன் வழுதி மாறன் திரையன் மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர் தமிழ்மூ வரசிவர் தாமா வாரே (ந.வே.வ.பாயிரம்)
மாறன் திரையன் மரபில் வந்தோர் சோழராயினர் இவர்கள் அலைகடலில் நெடுந்தொலைவு
ஆழ்கடலில் பயணம் செய்ததால் திரையர் எனப்பட்டனர். கடல் கடந்த தொலைவிடங்களிலிருந்து நெற்பயிர் கொண்டு வந்து பயிர் செய்ததால் சொல் - சொல்லர் -
சோலர் - சோழர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என கருதப் படுகிறது.
மாறன் வழுதி மரபினர் தொடர்ந்து பாண்டியராகவே நீடித்தனர்.
சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு. சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு, பாண்டிமண்டலம், வையைநாடு என பெயர்களுண்டு. அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம், மலை நாடு, சேரன் நாடு என பெயர்களுண்டு. சோழர் நாடுகளின் ஊர் பெயர்கள் கோட்டை என்றும், பாண்டியர் நாடுகளின் ஊர் பெயர்கள் பட்டி என்றும், சேரன் நாடுகளின் ஊர் பெயர்கள் பாளையம் என்று முடிவடைவதையும் காணலாம். மேலும் சோழமண்டலம் தஞ்சை, கச்சி என்ற கூறையுடையது. பாண்டிமண்டலம் கொற்கை, கூடல் எனும் கூறையும், சேரமண்டலம் கொங்கு, கேரளம் எனும் கூறையும் உடையன.
சந்திர மரபினர் பெயர்கள் உசிதன், கவுரியன், கூடற்கோமான், கொற்கைவேந்தன், செழியன், தென்னவன், பஞ்சவன், பாண்டியன், மாறன், மீனவன், வழுதி, வையைத்துறைவன் என்பன.
அக்கினி மரபினர் பெயர்கள் உதியன், குடகன், குடக்கோன், கேரளன், கொங்கன், சேரலன், சேரலாதன், மலையமான், முத்தரையன், வஞ்சிவேந்தன், வானவரம்பன், வானவன், வில்லவன், பூலியன், பனந்தாரகன், பொறையன், கொல்லிவெற்பன், குட்டுவன் என்பன
சூரிய மரபினர் பெயர்கள் மனு, இக்குவாகு, நல்லுத்தரன், புறஞ்சயன், மாந்தாதா, நாகன், மறையன், இராயன், முசுகுந்தன், வாளமரன், விசலன், நன்னி, ஓரி, காரி, கண்டியன், அம்பன், கள்ளியன், சோழன், மறவசோழன், வில்லியன், நன்னி என்பன
சூரிய மரபினர்களே பெரும்பான்மையும் சக்கரவர்த்திகளாக இருந்தனர் என்று சுந்தரபாண்டியன், திருக்களர், பத்தூர் முதலாய கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
பதிற்றுப்பத்து எட்டு சேர மன்னர்களின் வரலாற்றை அவர்கள் ஆட்சி புரிந்த ஆண்டுக் காலக் குறிப்போடு தெளிவாலக் கூறுகிறது. கா.சு. பிள்ளை அவர்கள் இந்த ஆட்சிக் காலத்தைக கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் முறைப்படி கணித்திருக்கிறார்.
1920 ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நற்குடி வேளாளர் வரலாறு என்னும் 1035 செய்யுள் கொண்ட பாண்டியர் குடிமரபு கூறும் நூல் பாண்டியர்களின் 201 தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது.
நெடிய பாண்டியர் மரபை நற்குடிவேளாளர் வரலாறு குறிப்பிடுவது, நெடிய மூவேந்தர் வரலாற்றை மீட்டமைப்பதற்கு ஓரளவு துணை செய்கிறது. இந்நூலில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனை 87 ஆவது பாண்டியனாகவும், வெற்றிவேள்செழியனை 88 ஆவது பாண்டியனாகவும் குறித்திருப்பது ஏனைய சேர, சோழ வரலாற்றுக் காலத்தோடு நன்கு பொருந்தி வருகிறது. இந்நூலில் கண்ட குறிப்புகளின் வண்ணம் விடுபட்ட பாண்டியன் பெயர்களையும் சேர்த்தால் கி.மு. 500 முதல் கி.பி. 500 வரை 1000 ஆண்டுக் கால பாண்டியர் தலைமுறைகளைக் கண்டறிய முடிகிறது.
1000 ஆண்டுகளில் 40 தலைமுறை குறிப்பிடப்படுகிறது. ஒரு தலைமுறைக்குச் சராசரி 25 ஆண்டுகள் என்பது இயல்பான நிகழ்ச்சி ஆகும். இவர்களுள் கடைக் கழக நூல்களில் 20 பாண்டியர் பெயர்கள் மட்டும் உள்ளன.
ஏனையவற்றுள் பிற சான்றுகள் வாயிலாகக் கிடைத்த பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடைக்கழக இலக்கியங்களின் வாயிலாக அறியப்படும் முதுகுடுமிப் பெரு வழுதி, கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி ஆகிய இருவரும் முறையே 66 ஆவது, 67 ஆவது பாண்டிய மரபிரராக அறிய முடிகிறது.
இமயவரம்பனும், பல்யானச் செல்கெழு குட்டுவனும் வாழ்ந்த கி.மு. 350 - 300 கால அளவில் 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆட்டி புரிந்ததாக நற்குடி வேளாளர் வரலாறு கூறுகிறது.
பாண்டியரின் கிளை மரபாகிய இருங்கோவேள் மரபு கி.மு. 2283 கூன் பாண்டியனில் தொடங்குகிறது.
மேற் சொன்ன செய்திகள் முனைவர் இரா. மதிவாணனின் கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும் எனற நூலில் இருந்து தட்டச்சு செய்யப்பட்டது.
வரலாற்றுக் காலப் பாண்டியர்கள்
முடத்திருமாறன் - 6ஆவது பாண்டியன். கி.மு. 2082
மாறன் வழுதி - 10 ஆவது பாண்டியன். கி.மு.1932
திருவழுதி - 45 ஆவது பாண்டியன். கி.மு. 1002 - 960
வீர பாண்டியன் - 49 ஆவது பாண்டியன். கி.மு. 910 - 854
திருவின்பாண்டியன் - 50 ஆவது பாண்டியன் கி.மு. 884 -832
பல்சாலை முதுகுடுமி பெரு வழுதி - 66 ஆவது பாண்டியன் கி.மு. 500 - 450
கருங்கை யொளைவாட் பெரும் பெயர் வழுதி 67 ஆவது பாண்டியன் கி.மு. 450 - 400
போர்வல் வழுதி - 68 ஆவது பாண்டியன் கி.மு. 400 - 380
கொற்கை வழுதி நற்றேர் வழுதி - 69 ஆவது பாண்டியன் கி.மு. 380 - 340
தேவ பாண்டியன் - 70 ஆவது பாண்டியன் கி.மு. 340 - 302
செய புஞ்சன் - 71 ஆவது கி.மு. பாண்டியன் 302 - 270
பசும் பூண்பாண்டியன் - 72 ஆவது பாண்டியன் கி.மு. 270 - 245
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் - 73 ஆவது பாண்டியன் கி.மு. 245 - 220
பாண்டியன் நன்மாறன் - 74 ஆவது பாண்டியன் கி.மு. 220 - 200
கடலன் வழுதி - நெடுஞ்செழியன் - 75 ஆவது பாண்டியன் கி.மு. 200 - 180
மருங்கை வழுதி - 76 ஆவது பாண்டியன் கி.மு. 180 - 160
பாண்டியன் இத்தமன் -- புலிமான் வழுதி - 77ஆவது பாண்டியன் கி.மு. 160 - 150
பாண்டியன் கீரன் சாத்தன் - 78 ஆவது பாண்டியன் கி.மு. 150 - 140
கலிமான் வழுதி (அண்டர் மகன் குறுவழுதி) - 79 ஆவது பாண்டியன் கி.மு. 140 - 120
பாண்டியன் ஏனாதி (நெடுங் கண்ணன்) - 80 ஆவது பாண்டியன் கி.மு. 120 - 100
கொற்கை வழுதி(பசும்பூண்பாண்டியன் II) - 81ஆவது பாண்டியன் கி.மு. 100 - 87
தேவபூடணன்(இலவந்திகை தூஞ்சிய நன்மாறன் - 82ஆவது பாண்டியன் கி.மு. 87 - 62
தலை. கான. செரு. நெடுஞ்செழியன் - 83ஆவது பாண்டியன் கி.மு. 62 - 42
கானப்பேரெயில் கட உக்கி பெருவழுதி - 84 ஆவது பாண்டியன் கி.மு. 42 - 1
பாண்டியன் அறிவுடைநம்பி புற 184 - 85ஆவது பாண்டியன் கி.மு. 1 - 30
வெள்ளிநம்பலத்து துஞ்சிய பெருவழுதி - 86 ஆவது பாண்டியன் கி.பி. 30 - 60
ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் - 87 ஆவது பாண்டியன் கி.பி. 60 - 117
வெற்றிவேற் செழியன் - 88 ஆவது பாண்டியன் கி.பி. 117 - 160
நெடுஞ்செழியன் II - 89 ஆவது பாண்டியன் கி.பி. 160 - 198
சித்ர மாட துஞ் நன்மாறன்/ உக்கிரமாறன் - 90 ஆவது பாண்டியன் கி.பி. 198 - 220
பன்னாடு தந்த மாறன் வழுதி - 91 ஆவது பாண்டியன் கி.பி. 220 - 250
கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி - 92 ஆவது பாண்டியன் கி.பி.250 - 270
தென்னவன் கோ - 93 ஆவது பாண்டியன் கி.பி. 270 - 297
பராக்கிரமபாகு (மானாபரணன்) - 94 ஆவது பாண்டியன் கி.பி. 298 - 310
நல்வழுதி கலியன் கூத்தன் - 95 ஆவது பாண்டியன்
கடலன் வழுதி (கழுகு மலை கல்வெட்டு - 96 ஆவது பாண்டியன்
பொற்கைப் பாண்டியன் புற -18 - 97ஆவது பாண்டியன் ஆவது
பாண்டியன் மதிவாணன் 98 ஆவது பாண்டியன் முதல் 102 வரை
கடுங்கோன் - 103 ஆவது பாண்டியன்கி.பி. 475 -490
உக்கிரபாண்டியன் - 104 ஆவது பாண்டியன்கி.பி. 498
சோம சுந்தர பாண்டியன் - 105 ஆவது பாண்டியன்கி.பி. 498 - 540
பதிற்றுப்பத்து எட்டு சேர மன்னர்களின் வரலாற்றை அவர்கள் ஆட்சி புரிந்த ஆண்டுக் காலக் குறிப்போடு தெளிவாலக் கூறுகிறது. கா.சு. பிள்ளை அவர்கள் இந்த ஆட்சிக் காலத்தைக கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் முறைப்படி கணித்திருக்கிறார்.
பெயர் - காலம் - (ஆட்சி ஆண்டுகள் )
வானவன் (அ) வானவரம்பன். கி.மு. 430-350 (20)
(குட்டுவன்) உதியஞ் சேரலாதன் கி.மு. 350 - 328 ( 22 )
இமயவர நெடு சேரலாதன் கி.மு.329 - 270 (58)
பல்யானை செல்கெழு குட்டுவன்கி.மு. 270-245 (25)
களங்காய்கண்ணி நார்முடிச்சேரல் கி.மு. 245- 220 (25)
பெருஞ்சேரலாதன் - கி.மு. 220 - 200 (20)
குடக்கோ நெடுஞ்சேரலாதன் கி.மு. 200 - 180 - (20)
கடல் பிறக் கோட்டிய வேல்கெழு குட்டுவன் கி.மு.180 - 125 - (55)
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கி.மு. 125 -87 - (38)
செல்வக் கடுங்கோன் வாழியாதன் கி.மு. 87 - 62 - (25)
யானைகட் சேய் மாந்த சேரல் + மாரிவெண்கோ கி.மு. 62 - 42 - (20)
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. 42 - 25 - (17)
இளஞ்சேரல் இரும்பொறை கி.மு.25 - 9 (16)
கருவூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. 9 - 1 (8)
வஞ்சி முற்றத்து துஞ்சிய அந்துவன் சேரல் கி.மு. 20 - கி.பி. 10 (30)
பாலை பாடிய பெருங்கடுங்கோ கி.பி.1 - 30 (30)
கணையன் ( கணைக்கால் இரும்பொறை) கி.பி. 20 - 30 (10)
கோக் கோதை மார்பன் கி.பி. 30 - 60 (30)
சேரன்செங்குட்டுவன் கி.பி. 60 - 140 (70)
கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை கி.பி. 140 - 150 (10)
சேரமான் முடங்கிக் கிடந்தநெடுஞ்சேரலாதன் கி.பி. 150 -160 (10)
சேரமான் கணைக்கால் இரும்பொறை கி.பி. 160 - 180 (20)
சேரமான் இளங்குட்டுவன் கி.பி.180 - 200 (20)
நம்பி குட்டுவன் கி.பி. 200 - 220 (20)
பூரிக் கோ கி.பி. 220 - 250 (30)
சேரமான் குட்டுவன் கோதை கி.பி. 250 - 270 - (20)
சேரமான் வஞ்சன் கி.பி. 270 - 300 30
மாந்தரஞ்சேரல்(சமுத்குப்தன் கல்வெட்டு) கி.பி. 330 - 380 (50)
இவர் தவிர சேரருள் குறுநிலமன்னராக இருந்திருக்கலாம் என கருதப்படுவோர்;
சேரமான் எந்தை (குறு 22, அக 41 ) ;
கரூவூர் சேரமான் சாத்தன் (குறு 268),
மருதம் பாடிய இளங்கடுக்கோ(அக 96, 176 நற் 50),
நன்னன்,
ஆட்டன் அத்தி எனபோர்.
சோழர் தலைமுறை மீட்டமைப்பு
முதற் கரிகாலன் கி.மு. 450 - 380
சேரமான் பாமளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட் சென்னி கி.மு. 380-320
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி கி.மு. 320 - 270
பெரும்பூண் சென்னி கி.மு. 270 - 245
உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி கி.மு. 245 - 232
கரிகாலன் II கி.மு. 232 - 200
மணக்கிள்ளி கி.மு. 200 - 180
வேல் ப்றடக்கை பெருவிற் கிள்ளி கி.மு. 180 - 160
போரவைக் கோல் பெருநற் கிள்ளி கி.மு. 160 -125
முடித்தலை கோல் பெருநற்கிள்ளி கி.மு. 125 - 87
கோப்பெருஞ் சோழன் கி.மு. 87- 62
ஒற்றுமை வேட்ட பெருநற் கிள்ளி (ராசசூய) கி.மு. 62- 40
சேட்சென்னி நலங்கிள்ளி + மாவளத்தான் கி.மு. 40 - 22
குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன் கி.மு. 22 - 1
குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன் கி.பி. 1 - 40
நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி கி.பி. 40 - 60
கரிகாலன் III கி.பி. 60 - 110
மாவண் கிள்ளி கி.பி. 110 -130
நெடுமுடிக்கிள்ளி கி.பி. 130 - 150
செங்கணான் கி.பி. 150 - 180
இசை வெங்கிள்ளி கி.பி.180 -- 210
கைவண்கிள்ளி கி.பி. 210 - 240
பொலம் பூண் கிள்ளி கி.பி. 240 - 260
கடுமான் கிள்ளி கி.பி. 260 -285
நல்லடி (அக 356) கி.பி. 285 - 330
ஆந்திர நாட்டில் சோழராட்சி கி.பி. 300 - 400
மேற்சொன்ன பாண்டிய, சேர, சோழ மன்னர்களின் காலத்தை மதிவாணர் நற்குடி வேளாளர் வரலாறு என்ற நூலைக் கருவி நூலாகக் கொண்டு மீட்டமைத்துள்ளார்.
அவர் ஒரு சில கூற்றுகள் பூராணப் பாங்கிலும் அரசர் பெயர் வடமொழி தழுவியும் இருப்பினும் பெரும்பாலான பகுதிகள் வரலாற்று உண்மைகளோடு பொருந்தி வருகின்றன் என இந்நூல் குறித்து கூறுகிறார். எனவே நற்குடி வேளாளர் வரலாறு நூற்பா ஆவணமாக சேர்க்கப்பட அன்பர்கள் முயல வேண்டும்
பாண்டியர்கள் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டுவரும் தொல்குடியினர் என்பது சன்றோர் குறிப்பு.
சங்க காலப் பதிவுகள்
பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் பாண்டியன் தென்னவன்,மீனவன்,மாறன்,கடலன் வழுதி,பரதவன் மற்றும் முத்தரையன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டான் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.
பாண்டிய நாடு
இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள்
மானாபரணன்,வீரகேரள பாண்டியன்,சுந்தர பாண்டியன்,விக்கிரம பாண்டியன்,வீரபாண்டியன் ஆகிய ஜந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர். மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று முல்லையூரில் ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன் ஈழ நாட்டிற்குத் தப்பி ஓடினான். வீரபாண்டியன் கி.பி. 1048 ஆம் ஆண்டளவில் கொல்லப்பட்டான். கோலார் மிண்டிக்கல் கல்வெட்டு மற்றும் இராசாதிராசன் திருக்களச் செப்பேடு போன்றனவற்றில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாண்டியர் பழக்க வழக்கங்கள்
மன்னன் மகன்,பெயரன் என்ற முறையில் முடிசூடினர்.சிங்காதனங்களுக்கு மழவராயன் காலிங்கராயன் முனையதரையன்,தமிழ்ப் பல்லவராயன் என்று பெயரிடப்பட்டனர்.அரசன் பிறப்பிக்கும் ஆணை திருமுகம்,ஓலை மூலம் மக்களுக்கு அனுப்பப்படும்.அரசர்கள் பிறந்த நாள் விழா நடத்தினர்.போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டி என்ற இறையிலி நிலம் அளிக்கப்பட்டது.உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்துவந்தது.பாடிய புலவர்களுக்குப் பொன்னும்,பொருளும் பரிசாக அளிக்கப்பட்டன.நீதி தவறாது செங்கோல் முறை கோடாது வழங்கப்பட்டன.நீதியை நிலைநாட்ட கை குறைத்தும்,உயிர் கொடுத்தும் காத்தனர் சில பாண்டியர்கள்.நீதி காக்க பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் கொடுத்தான்.பொற்கைப் பாண்டியன் நீதிக்குத் தன் கையை வெட்டிக் கொண்டான்.தினமும் மக்கள் குறைகேட்கும் வழக்கம் இருந்தது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும்,பாராட்டும் செய்யப்பட்டன்.காசுகள் வெளியிடப்பட்டன.பிறவிப் பெருங்கடல் நீந்த நாளும் இறைவனை வழிபட்டனர்.அறம் ஈகையாக,நீதியாகக் காக்கப்பட்டது.”மழை வளம் சிறக்க!மண்ணுயிர் வாழ்க! மன்னனும் வாழ்க!” என்று வாழ்த்தும் வழக்கமும் இருந்து வந்தது.இடுவதும்,சுடுவதும் இறந்தோர்க்கு உண்டு!முன்னோடு வழிபடும் வடிக்கமும் இருந்திருந்தன. பாண்டியர் பண்பாட்டில்
குடும்ப இயல்
அரசன்,அரசி,இளவரசன்,பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது.பட்டத்தரசி பாண்டிமாதேவி எனப்பட்டாள்.பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர் சில பாண்டிய அரசர்கள்.பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர்.அரசனின் மூத்த மகனே பட்டம் பெற முடியும்.இளவரசு பட்டம் பெற இயலும்.மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு.உதாரணமாக வீரபாண்டியன்,சுந்தர பாண்டியன் போன்றவர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
கொற்கை பாண்டியரது துறைமுகம்.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஊழ்வினையால்,கண்ணகி நீதி கேட்டதால் இறந்தான்.அச்சமயம் இளவரசனாக கொற்கையில் இருந்த வெற்றுவேற்செழியன் மதுரைக்கு வந்து முடிசூடினான்.ஜந்து பேர் ஒரே சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது.ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி,தந்தை மகன் சண்டைகள் வந்தன மேலும் ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற சம்பவங்களும் பாண்டியரின் குடும்பவியலில் இருந்தன குறிப்பிடத்தக்கது.
நாணய இயல்
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பொன்,செம்பால் செய்யபட்ட காசுகள் புழக்கத்தில் இருந்தன.மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள்.
சீமாறன் சீவல்லபவன் – அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான்.இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது.முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் “அவனிப சேகரன் கோளகை” என்ற பெயரில் வெளியிட்டான்.1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் “வாளால் வழி திறந்தான் குளிகை” என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 காணம் – 1 கழஞ்சு ஒரு காணம் 4 குன்றி ‘காசும் பொன்னும் கலந்து தூவியும்’ என்ற தொடர் இதனை உணர்த்துகின்றது.காணம்,கழஞ்சு,காசு,பொன் புறத்திலே வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
படை இயல்
யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை,தேர்ப்படை போன்ற நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பாண்டியர்.கொற்கை,தொண்டி துறைமுகங்களில் வெளிநாட்டுக் குதிரைகள் ஆண்டுதோறும் வந்திறங்கியது.ஆண்டுக்கு பதினாராயிரம் குதிரைகள் வந்தன என ‘வாசப்’ கூறியுள்ளான்,மார்க்கோபோலோ “குதிரைகள் வாங்க மிகுதியான பொருளைச் செலவிடுகின்றனர்” என்று பாண்டியர்களைப் பற்றிக் குறித்துள்ளார்.வாட்போர்வல்ல பெரிய காலாட்படை இருந்தது பாண்டியர் ஆட்சிக்காலத்தில்.”பெரும் படையோம்”எனக் கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில் இருந்தது.’முனையெதிர் மோகர்’ ‘தென்னவன் ஆபத்துதவிகள்’ போன்ற படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு (கி.மு.300 - கி.பி.300) முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுயுள்ளார்.கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது. இவனுடைய அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. இவ்வரசன் தலைச்சங்கத்தின் இறுதியில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. முதல் இரு தமிழ்ச் சங்கங்கள் இருந்ததற்கான உறுதி பயக்கும் சான்றுகள் அதிகம் இல்லை. இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் முதல் இரு சங்கங்கள் இருந்ததாகக் கருதப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் வரும் சிறு குறிப்புகளும், இறையனார் அகப்பொருளில் வரும் விரிவான குறிப்புமே இவ்விலக்கிய சான்றுகள்.
இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. தலைச்சங்க காலத்து இறுதி அரசனாக இருந்திருப்பான் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது.மூத்த குடியினன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவனைப் பற்றிப் புறநானூற்றில் "முதுகுடுமிப் பெருவழுதி ஆற்றல் மிக்க படையோன்;அரசர் பலரையும் புறங்கண்டவன்;புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்துச் சிறந்தவன்;இரவலர்க்கு இல்லையெனாது ஈயும் பெருங்கொடையான்;வேள்வி பல செய்து புகழ் பெற்றவன்;சிவ பெருமானிடத்து பேரன்பு உடையோன்;பெரியோர்களை மதிப்பவன்" (புறம்-6,9,12,15,64)
மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு "விறல் மாண்குடுமி பிறர் மண்கொண்டு பாணர்க்குப் பொன் தாமரையும்,புலவர்க்கு யானையும்,தேரும் பரிசாக நல்கினான்" எனப் புறம்-12 கூறுகின்றது.
நால்வேதங்கூறியாங்கு "வியாச் சிறப்பின் வேள்ளி முற்றச் செய்தான்" எனப் புறம்-15 இல் நெட்டிமையார் கூறுகின்றார். இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் காரிக்கிழார், பெண்பாற் புலவர் நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் முதலியோர் இவ்வரசனைப் பாடியுள்ளார்கள்.
இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ்.
கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள்
பாண்டியன் முடத்திருமாறன்
முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிக்கோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை.
குறிப்பு: கொல்லிமலைக் குட்டுவனைத் தன் பாடலில் குறிப்பிடும் இவன் கடைச்சங்க காலத்தவன். மேலே தரப்பட்டுள்ள செய்தியில், இறையனார் களவியலுரை அடிப்படையில் காட்டப்பட்டுள்ள முடத்திருமாறன் இவன் காலத்துக்கு முந்தியவன்.
பாண்டியன் மதிவாணன்
மதிவாணன் கி.பி. 60 முதல் 85 வரை முடத்திருமாறனுக்குப் பின்னர் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் சிறந்த தமிழ் நூல்களினை இயற்றவைத்தும் கல்வி,கேள்விகளில் வல்லவனாகவும் நாடகத் தமிழில் ஈடுபாடு கொண்டவனாவும் விளங்கினான். நாடகத்தமிழ் நூல் ஒன்றினை இயற்றி அதற்கு மதிவாணன் மதிவாணர் நாடகத் தமிழர் எனப் பெயரிட்டான். மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இந்நூலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடக நூல் தந்த மதிவாணன் நான்மாடக் கூடல் நாயகனாக இருந்தான்.
பெரும்பெயர் வழுதி
பெரும்பெயர் வழுதி கி.பி. 90 முதல் 120 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் கரிகாலன் காலத்தில் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றான். கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்ற பட்டத்தினையும் பெற்ற இம்மன்னனை கரிகாலனின் நண்பனாகவிருந்த இரும்பிடர்த்தலையர் "கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியே!நிலம் பெயர்ந்தாலும்,நீ சொல் பெயராய்! விலங்கு அகன்ற வியல்மார்பனே!உன்னை விரும்பி இரவலர் வருவர்!உன்ன மரத்தின் சகுனம் பொய்க்கநீ ஈவாய்!தவிரா ஈகை,கவுரியர் மருமகனே! ஏமமுரசும் இழுமென முழங்க வெண்குடை மண்ணகம் நிழற்ற வாழ்பவனே!" என்று (புறம்-3) இல் போற்றுகின்றார்.
பொற்கைப்பாண்டியன்
பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான்.
பொற்கை பெற்ற வரலாறு மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் "வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்" எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள். வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக்கூறிச் சென்றான். இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான். அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஐயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எண்ணி அவ்வீதியில் அமைந்திருந்த அனைத்து வீட்டுக் கதவுகளினையும் தட்டினான் பாண்டியன்.
மறுநாள் அரசவையில் அத்தெரு மக்கள் முறையிட்டனர். அமைச்சர், மடைத்தலைவர், புலவர் அனைவரும் அமர்ந்திருந்தனர். எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிய திருடன் கையை வெட்ட வேண்டும் என்றும் கூறினர் அம்மக்கள். அரசனும் வாளொன்றைக் கொண்டு வரச்சொல்லி தன் கையையே வெட்டிக் கொண்டான். வியந்த அனைவரிடமும் தானே கதவைத் தட்டியதாகக் கூறியதனைக் கேட்டு மக்கள் வியந்து நின்றனர். பாண்டியனும் பொற்கை ஒன்றினை வைத்துக் கொண்டான் அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என்ற பெயரைப் பெற்றான் அப்பாண்டிய மன்னன். இவ்வாறு சிலப்பதிகாரத்தில் கண்ணகியிடம் தெய்வம் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி
பாண்டியன் அறிவுடை நம்பி
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
பாண்டியன் ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
பாண்டியன் கானப்போர் கடந்த உக்கிரப் பெருவழுதி
கருங்கையொள்வாட் பெரும்பெயர்வழுதி
பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி
நல்வழுதி
கூடகாரத்து துஞ்சிய மாறன்வழுதி
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
குறுவழுதி
நம்பி நெடுஞ்செழியன்
பாண்டிய மன்னர்கள் (பல்லவர் காலம் கி.பி. 575 - 900)
பாண்டியன் கடுங்கோன் கி.பி. 575 - 600
கடுங்கோன் தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்பட்ட களப்பிரர் ஆட்சிக்காலமான கி.பி. (300-700) இருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவான்.கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான்.பாண்டிய நாடு முழுவதனையும் தன் ஆட்சிக்குள் கொண்டும் வந்தான்.இவனைப் பற்றிய செய்திகள் பலவற்றையும் வேள்விக்குடி செப்பேடுகள் சிறப்பித்துக் கூறுகின்றன.
களப்பிரன் பாண்டிய நாட்டைக் கைக்கொண்டான்,கதிரவன் போன்ற பாண்டியன் ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்றும்,கதிர்வேல் தென்னன் என்றும்,செங்கோல் ஓச்சியவன் என்றும் உலகப் பெண் உரிமையைத் தனதாக்கிக் கொண்டவன் என்றும் சிறப்பிக்கப்படுகின்றான்.வீரத்தால் களப்பிரரை வென்றான் புகழால் தமிழை நிலைபெற வைத்தான் எனவும் மெய்ச்சப்படுகின்றான்.
மாற்வர்மன் அவனி சூளாமணி கி.பி. 600 - 625
சடையவர்மன் செழியன் சேந்தன் கி.பி. 625 - 640
மாறவர்மன் அரிகேசரி கி.பி. 640 - 680
இவனை சுந்தரபாண்டியன் எனவும் கூன்பாண்டியன் எனவும் திருவிளையாடற் புராணம் கூறாந்ற்கும். முதலில் சமண மதப்பற்றுடையவனாய்யிருந்து பின்பு சமய குறவர் திருஞானசம்பந்தமூர்திகளாற் சைவனாக்கப்பட்டான். இவன் முன்னிலையில் தான் திருஞானசம்பந்தமூர்திக்கும் சமன முனிவர்களுக்கும் அனல் வாதமும் புனல்வாதம் நிகழ்ந்தன. இவ்வேந்தன் ஆட்சியில் பாண்டியநாடு உயர்நிலை அடைந்தது. சோழர்களையும், சேரர்களையும்,பரவரையும்,குறுநில மன்னர்கள் சிலரையும் வெற்றிகொண்டான். மணிமுடிசசோழனை உறையூரில் வெற்றி கண்டு அவ்வேந்தன் மகள் மங்கையர்க்கரசியை திருமணம் செய்துகொண்டான். இக்காலகட்டத்தில் பாண்டியநாட்டில் அமைச்சராயிருந்தவர் குலச்சிறையார் என்பவர். மாறவர்மனரிகேசரி, மங்கையர்க்கரசி,குலச்சிறையார் மூவரும் சிவனடியாராகி அறுபத்துமூவருள் சேர்க்கப்பட்டனர்.இவர்கள் வரலாற்றைப் பெரிய புராணத்தில் காணலாம்.
கோச்சடையான் ரணதீரன் கி.பி. 680 - 710
மாறவர்மன் அரிகேசரி பாராங்குசன் - இராசசிமன். கி.பி. 710 - 765
நெடுஞ்சடையான் பராந்தகன் கி.பி. 765 - 790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 - 800
வரகுண மகாராசன் கி.பி. 800 - 830
ஸ்ரீ மாரன் ஸ்ரீ வல்லபன் கி.பி. 830 - 862
வரகுணவர்மன் கி.பி 862 - 880
பராந்தக பாண்டியன் கி.பி. 880 - 900
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900 - 920
வீரபாண்டியன் கி.பி. 946 - 966
சோழர் வரலாற்றை மூன்றாக பிரிக்கலாம்
1. வரலாற்றுக்கு முற்பட்ட சோழர்கள் (சரித்திரத்திற் குட்படாத முற்காலத்தவர்)
சூரியன்.
மனு.
இக்குவாகு.
ககுத்தன்.
புலியும்மானும் ஒரு துறையுண்ண ஆண்டவன்,
மாந்தாதா.
முசுகுந்தன்.
தேவர்க்கமுதமளித்தவன்.
வல்லபன்.
சிபி.
சுராதிராசன்.
சோளன்.
இராசசேகரி.
பரகேசரி.
காலனிடத்தில் வழக்குரைத்தோன்.
காந்தன்.
காகந்தி.
அனைத்துலகும் வென்றோன்.
வேந்தனைக் கொடியாக வைத்தோன்.
ஒருகடலில் மற்றொரு கடலைப்புக விட்டோன்.
தன் குருதியை உண்ணவளித்தோன்.
காற்றைப்பணிகொண்டோன்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செப்பியன்.
வானவூர்தி செலுத்தினோன்.
அரசர் சூளாமணி.
வீரவாதித்தன்.
சூரவாதித்தன் முதலியோர்.
மனுவுக்கு முன்னிருந்த சோழ மன்னவர் கணக்கற்றவர். அவர் பெயர் திட்டமாய்த் தெரியவில்லை.சோழர், திருவாரூர் சீகாழி உறையூர் புகார் தஞ்சை செயங்கொண்ட சோழபுரம் முதலிய பல நகரங்களைப் பல சமையங்களில் தலைநகராகக் கொண்டிருந்தனர்.
2. முற்கால சோழர்கள. (சரித்திரத்திற்கு பிற்கலத்தவர்)
உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னி.
கரிகாலன்.
கிள்ளிவளவன்.
தித்தன்.
பெருங்கிள்ளி.
நல்லுத்தரன்.
கோப்பெருஞ் சோழன்.
கோச்செங்கட் சோழன் முதலியோர்.
இவருள் கரிகால் வளவன் பனிமலையிற் புலியைப் பொறித்து நாவலந்தேசம்[india] முழுதும் தன் ஆணையைச் செலுத்தினான்.
3. பிற்கால சோழர்கள்.சோழநாட்டின் பேரரசர்களாக இருந்தவர்கள்
சேரர்
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.
சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.
சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.
மன்னர்கள்
சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.
நகரங்கள்
கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்
சில அரசர்களின் ஆட்சியாண்டுகள்
* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்
தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.
உதியஞ்சேரலாதன் – கி.பி. 45-70
உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள “துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்” என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – கி.பி. 71-129
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் “இமய வரம்பன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் அடங்கும், குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை. இவரைவிட காழா அத் தலையார், மாமூலனார், பரணர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இவனைப்பாடியுள்ளனர்
வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.
முதுமைப் பகுவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத் தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் – கி.பி. 80-105
பல்யானைச் செல்கெழுகுட்டுவன், சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் – கி.பி. 106-130
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ….சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்…. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலம்
பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.
செயல்கள்
பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், “……இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்…..” என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.
சேரன் செங்குட்டுவன் – கி.பி. 129-184
சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.
பல்வேறு சேர மன்னர்களைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக்கள் இருந்தாலும் செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள் எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது வெளிப்படை. இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.
வரலாற்றுத் தகவல்கள்
தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.
அந்துவஞ்சேரல் இரும்பொறை
அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.
அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை – கி.பி. 123-148
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.
இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும் இத்தகையதொரு கல்வெட்டு “கோ ஆதன்” என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 148-165
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.
தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.
இளஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 165-180
இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.
குட்டுவன் கோதை – கி.பி. 184-194
குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.
சேரமான் வஞ்சன்
சேரமான் வஞ்சன், என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச் சேர்ந்தவர். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.ன் புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர். எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். “மாக்கோதை” என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.
சேர மன்னர்கள் ( Edit with the above)
சங்ககாலம் என்பது தமிழ்நாட்டின் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தரும் வாழ்ந்த காலமாகும். சேரர்களை வானவரம்பன், வானவன், குட்டுவன், குடக்கோ,பொறையன், இரும்பொறை, கடுங்கோ, கோதை, சேரல், சேரலர்,சேரமான் என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைப்பதுண்டு.
பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன்
பல்யானைச் செல்கெழு குட்டுவன்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
செல்வக் கடுங்கோ வாழியாதன்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ
யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சேரமான் வஞ்சன்
சேரமான் மாவண்கோ
சேரமான் குட்டுவன் கோதை
சேரமான் கணைக்கால் இரும்பொறை
பாண்டியர்கள் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டுவரும் தொல்குடியினர் என்பது சன்றோர் குறிப்பு.
கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள்
பாண்டியன் முடத்திருமாறன்
பாண்டியன் மதிவாணன்
பொற்கைப்பாண்டியன்
கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி
பாண்டியன் அறிவுடை நம்பி
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
பாண்டியன் ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
பாண்டியன் கானப்போர் கடந்த உக்கிரப் பெருவழுதி
கருங்கையொள்வாட் பெரும்பெயர்வழுதி
பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி
நல்வழுதி
கூடகாரத்து துஞ்சிய மாறன்வழுதி
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
குறுவழுதி
நம்பி நெடுஞ்செழியன்
பாண்டிய மன்னர்கள் (பல்லவர் காலம் கி.பி. 575 - 900)
பாண்டியன் கடுங்கோன் கி.பி. 575 - 600
மாற்வர்மன் அவனி சூளாமணி கி.பி. 600 - 625
சடையவர்மன் செழியன் சேந்தன் கி.பி. 625 - 640
மாறவர்மன் அரிகேசரி கி.பி. 640 - 680
கோச்சடையான் ரணதீரன் கி.பி. 680 - 710
மாறவர்மன் அரிகேசரி பாராங்குசன் - இராசசிமன். கி.பி. 710 - 765
நெடுஞ்சடையான் பராந்தகன் கி.பி. 765 - 790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 - 800
வரகுண மகாராசன் கி.பி. 800 - 830
ஸ்ரீ மாரன் ஸ்ரீ வல்லபன் கி.பி. 830 - 862
வரகுணவர்மன் கி.பி 862 - 880
பராந்தக பாண்டியன் கி.பி. 880 - 900
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900 - 920
வீரபாண்டியன் கி.பி. 946 - 966
மூவேந்தரும் ஒரே குடிவழியினர் பழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய மன்னர் மரபு பாண்டிய மரபு ஒன்றே. பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது. தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை மாறன் வழுதி மாறன் திரையன் மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர் தமிழ்மூ வரசிவர் தாமா வாரே (ந.வே.வ.பாயிரம்)
மாறன் திரையன் மரபில் வந்தோர் சோழராயினர் இவர்கள் அலைகடலில் நெடுந்தொலைவு
ஆழ்கடலில் பயணம் செய்ததால் திரையர் எனப்பட்டனர். கடல் கடந்த தொலைவிடங்களிலிருந்து நெற்பயிர் கொண்டு வந்து பயிர் செய்ததால் சொல் - சொல்லர் -
சோலர் - சோழர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என கருதப் படுகிறது.
மாறன் வழுதி மரபினர் தொடர்ந்து பாண்டியராகவே நீடித்தனர்.
சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு. சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு, பாண்டிமண்டலம், வையைநாடு என பெயர்களுண்டு. அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம், மலை நாடு, சேரன் நாடு என பெயர்களுண்டு. சோழர் நாடுகளின் ஊர் பெயர்கள் கோட்டை என்றும், பாண்டியர் நாடுகளின் ஊர் பெயர்கள் பட்டி என்றும், சேரன் நாடுகளின் ஊர் பெயர்கள் பாளையம் என்று முடிவடைவதையும் காணலாம். மேலும் சோழமண்டலம் தஞ்சை, கச்சி என்ற கூறையுடையது. பாண்டிமண்டலம் கொற்கை, கூடல் எனும் கூறையும், சேரமண்டலம் கொங்கு, கேரளம் எனும் கூறையும் உடையன.
சந்திர மரபினர் பெயர்கள் உசிதன், கவுரியன், கூடற்கோமான், கொற்கைவேந்தன், செழியன், தென்னவன், பஞ்சவன், பாண்டியன், மாறன், மீனவன், வழுதி, வையைத்துறைவன் என்பன.
அக்கினி மரபினர் பெயர்கள் உதியன், குடகன், குடக்கோன், கேரளன், கொங்கன், சேரலன், சேரலாதன், மலையமான், முத்தரையன், வஞ்சிவேந்தன், வானவரம்பன், வானவன், வில்லவன், பூலியன், பனந்தாரகன், பொறையன், கொல்லிவெற்பன், குட்டுவன் என்பன
சூரிய மரபினர் பெயர்கள் மனு, இக்குவாகு, நல்லுத்தரன், புறஞ்சயன், மாந்தாதா, நாகன், மறையன், இராயன், முசுகுந்தன், வாளமரன், விசலன், நன்னி, ஓரி, காரி, கண்டியன், அம்பன், கள்ளியன், சோழன், மறவசோழன், வில்லியன், நன்னி என்பன
சூரிய மரபினர்களே பெரும்பான்மையும் சக்கரவர்த்திகளாக இருந்தனர் என்று சுந்தரபாண்டியன், திருக்களர், பத்தூர் முதலாய கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
பதிற்றுப்பத்து எட்டு சேர மன்னர்களின் வரலாற்றை அவர்கள் ஆட்சி புரிந்த ஆண்டுக் காலக் குறிப்போடு தெளிவாலக் கூறுகிறது. கா.சு. பிள்ளை அவர்கள் இந்த ஆட்சிக் காலத்தைக கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் முறைப்படி கணித்திருக்கிறார்.
1920 ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நற்குடி வேளாளர் வரலாறு என்னும் 1035 செய்யுள் கொண்ட பாண்டியர் குடிமரபு கூறும் நூல் பாண்டியர்களின் 201 தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது.
நெடிய பாண்டியர் மரபை நற்குடிவேளாளர் வரலாறு குறிப்பிடுவது, நெடிய மூவேந்தர் வரலாற்றை மீட்டமைப்பதற்கு ஓரளவு துணை செய்கிறது. இந்நூலில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனை 87 ஆவது பாண்டியனாகவும், வெற்றிவேள்செழியனை 88 ஆவது பாண்டியனாகவும் குறித்திருப்பது ஏனைய சேர, சோழ வரலாற்றுக் காலத்தோடு நன்கு பொருந்தி வருகிறது. இந்நூலில் கண்ட குறிப்புகளின் வண்ணம் விடுபட்ட பாண்டியன் பெயர்களையும் சேர்த்தால் கி.மு. 500 முதல் கி.பி. 500 வரை 1000 ஆண்டுக் கால பாண்டியர் தலைமுறைகளைக் கண்டறிய முடிகிறது.
1000 ஆண்டுகளில் 40 தலைமுறை குறிப்பிடப்படுகிறது. ஒரு தலைமுறைக்குச் சராசரி 25 ஆண்டுகள் என்பது இயல்பான நிகழ்ச்சி ஆகும். இவர்களுள் கடைக் கழக நூல்களில் 20 பாண்டியர் பெயர்கள் மட்டும் உள்ளன.
ஏனையவற்றுள் பிற சான்றுகள் வாயிலாகக் கிடைத்த பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடைக்கழக இலக்கியங்களின் வாயிலாக அறியப்படும் முதுகுடுமிப் பெரு வழுதி, கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி ஆகிய இருவரும் முறையே 66 ஆவது, 67 ஆவது பாண்டிய மரபிரராக அறிய முடிகிறது.
இமயவரம்பனும், பல்யானச் செல்கெழு குட்டுவனும் வாழ்ந்த கி.மு. 350 - 300 கால அளவில் 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆட்டி புரிந்ததாக நற்குடி வேளாளர் வரலாறு கூறுகிறது.
பாண்டியரின் கிளை மரபாகிய இருங்கோவேள் மரபு கி.மு. 2283 கூன் பாண்டியனில் தொடங்குகிறது.
மேற் சொன்ன செய்திகள் முனைவர் இரா. மதிவாணனின் கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும் எனற நூலில் இருந்து தட்டச்சு செய்யப்பட்டது.
வரலாற்றுக் காலப் பாண்டியர்கள்
முடத்திருமாறன் - 6ஆவது பாண்டியன். கி.மு. 2082
மாறன் வழுதி - 10 ஆவது பாண்டியன். கி.மு.1932
திருவழுதி - 45 ஆவது பாண்டியன். கி.மு. 1002 - 960
வீர பாண்டியன் - 49 ஆவது பாண்டியன். கி.மு. 910 - 854
திருவின்பாண்டியன் - 50 ஆவது பாண்டியன் கி.மு. 884 -832
பல்சாலை முதுகுடுமி பெரு வழுதி - 66 ஆவது பாண்டியன் கி.மு. 500 - 450
கருங்கை யொளைவாட் பெரும் பெயர் வழுதி 67 ஆவது பாண்டியன் கி.மு. 450 - 400
போர்வல் வழுதி - 68 ஆவது பாண்டியன் கி.மு. 400 - 380
கொற்கை வழுதி நற்றேர் வழுதி - 69 ஆவது பாண்டியன் கி.மு. 380 - 340
தேவ பாண்டியன் - 70 ஆவது பாண்டியன் கி.மு. 340 - 302
செய புஞ்சன் - 71 ஆவது கி.மு. பாண்டியன் 302 - 270
பசும் பூண்பாண்டியன் - 72 ஆவது பாண்டியன் கி.மு. 270 - 245
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் - 73 ஆவது பாண்டியன் கி.மு. 245 - 220
பாண்டியன் நன்மாறன் - 74 ஆவது பாண்டியன் கி.மு. 220 - 200
கடலன் வழுதி - நெடுஞ்செழியன் - 75 ஆவது பாண்டியன் கி.மு. 200 - 180
மருங்கை வழுதி - 76 ஆவது பாண்டியன் கி.மு. 180 - 160
பாண்டியன் இத்தமன் -- புலிமான் வழுதி - 77ஆவது பாண்டியன் கி.மு. 160 - 150
பாண்டியன் கீரன் சாத்தன் - 78 ஆவது பாண்டியன் கி.மு. 150 - 140
கலிமான் வழுதி (அண்டர் மகன் குறுவழுதி) - 79 ஆவது பாண்டியன் கி.மு. 140 - 120
பாண்டியன் ஏனாதி (நெடுங் கண்ணன்) - 80 ஆவது பாண்டியன் கி.மு. 120 - 100
கொற்கை வழுதி(பசும்பூண்பாண்டியன் II) - 81ஆவது பாண்டியன் கி.மு. 100 - 87
தேவபூடணன்(இலவந்திகை தூஞ்சிய நன்மாறன் - 82ஆவது பாண்டியன் கி.மு. 87 - 62
தலை. கான. செரு. நெடுஞ்செழியன் - 83ஆவது பாண்டியன் கி.மு. 62 - 42
கானப்பேரெயில் கட உக்கி பெருவழுதி - 84 ஆவது பாண்டியன் கி.மு. 42 - 1
பாண்டியன் அறிவுடைநம்பி புற 184 - 85ஆவது பாண்டியன் கி.மு. 1 - 30
வெள்ளிநம்பலத்து துஞ்சிய பெருவழுதி - 86 ஆவது பாண்டியன் கி.பி. 30 - 60
ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் - 87 ஆவது பாண்டியன் கி.பி. 60 - 117
வெற்றிவேற் செழியன் - 88 ஆவது பாண்டியன் கி.பி. 117 - 160
நெடுஞ்செழியன் II - 89 ஆவது பாண்டியன் கி.பி. 160 - 198
சித்ர மாட துஞ் நன்மாறன்/ உக்கிரமாறன் - 90 ஆவது பாண்டியன் கி.பி. 198 - 220
பன்னாடு தந்த மாறன் வழுதி - 91 ஆவது பாண்டியன் கி.பி. 220 - 250
கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி - 92 ஆவது பாண்டியன் கி.பி.250 - 270
தென்னவன் கோ - 93 ஆவது பாண்டியன் கி.பி. 270 - 297
பராக்கிரமபாகு (மானாபரணன்) - 94 ஆவது பாண்டியன் கி.பி. 298 - 310
நல்வழுதி கலியன் கூத்தன் - 95 ஆவது பாண்டியன்
கடலன் வழுதி (கழுகு மலை கல்வெட்டு - 96 ஆவது பாண்டியன்
பொற்கைப் பாண்டியன் புற -18 - 97ஆவது பாண்டியன் ஆவது
பாண்டியன் மதிவாணன் 98 ஆவது பாண்டியன் முதல் 102 வரை
கடுங்கோன் - 103 ஆவது பாண்டியன்கி.பி. 475 -490
உக்கிரபாண்டியன் - 104 ஆவது பாண்டியன்கி.பி. 498
சோம சுந்தர பாண்டியன் - 105 ஆவது பாண்டியன்கி.பி. 498 - 540
பதிற்றுப்பத்து எட்டு சேர மன்னர்களின் வரலாற்றை அவர்கள் ஆட்சி புரிந்த ஆண்டுக் காலக் குறிப்போடு தெளிவாலக் கூறுகிறது. கா.சு. பிள்ளை அவர்கள் இந்த ஆட்சிக் காலத்தைக கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் முறைப்படி கணித்திருக்கிறார்.
பெயர் - காலம் - (ஆட்சி ஆண்டுகள் )
வானவன் (அ) வானவரம்பன். கி.மு. 430-350 (20)
(குட்டுவன்) உதியஞ் சேரலாதன் கி.மு. 350 - 328 ( 22 )
இமயவர நெடு சேரலாதன் கி.மு.329 - 270 (58)
பல்யானை செல்கெழு குட்டுவன்கி.மு. 270-245 (25)
களங்காய்கண்ணி நார்முடிச்சேரல் கி.மு. 245- 220 (25)
பெருஞ்சேரலாதன் - கி.மு. 220 - 200 (20)
குடக்கோ நெடுஞ்சேரலாதன் கி.மு. 200 - 180 - (20)
கடல் பிறக் கோட்டிய வேல்கெழு குட்டுவன் கி.மு.180 - 125 - (55)
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கி.மு. 125 -87 - (38)
செல்வக் கடுங்கோன் வாழியாதன் கி.மு. 87 - 62 - (25)
யானைகட் சேய் மாந்த சேரல் + மாரிவெண்கோ கி.மு. 62 - 42 - (20)
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. 42 - 25 - (17)
இளஞ்சேரல் இரும்பொறை கி.மு.25 - 9 (16)
கருவூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. 9 - 1 (8)
வஞ்சி முற்றத்து துஞ்சிய அந்துவன் சேரல் கி.மு. 20 - கி.பி. 10 (30)
பாலை பாடிய பெருங்கடுங்கோ கி.பி.1 - 30 (30)
கணையன் ( கணைக்கால் இரும்பொறை) கி.பி. 20 - 30 (10)
கோக் கோதை மார்பன் கி.பி. 30 - 60 (30)
சேரன்செங்குட்டுவன் கி.பி. 60 - 140 (70)
கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை கி.பி. 140 - 150 (10)
சேரமான் முடங்கிக் கிடந்தநெடுஞ்சேரலாதன் கி.பி. 150 -160 (10)
சேரமான் கணைக்கால் இரும்பொறை கி.பி. 160 - 180 (20)
சேரமான் இளங்குட்டுவன் கி.பி.180 - 200 (20)
நம்பி குட்டுவன் கி.பி. 200 - 220 (20)
பூரிக் கோ கி.பி. 220 - 250 (30)
சேரமான் குட்டுவன் கோதை கி.பி. 250 - 270 - (20)
சேரமான் வஞ்சன் கி.பி. 270 - 300 30
மாந்தரஞ்சேரல்(சமுத்குப்தன் கல்வெட்டு) கி.பி. 330 - 380 (50)
இவர் தவிர சேரருள் குறுநிலமன்னராக இருந்திருக்கலாம் என கருதப்படுவோர்;
சேரமான் எந்தை (குறு 22, அக 41 ) ;
கரூவூர் சேரமான் சாத்தன் (குறு 268),
மருதம் பாடிய இளங்கடுக்கோ(அக 96, 176 நற் 50),
நன்னன்,
ஆட்டன் அத்தி எனபோர்.
சோழர் தலைமுறை மீட்டமைப்பு
முதற் கரிகாலன் கி.மு. 450 - 380
சேரமான் பாமளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட் சென்னி கி.மு. 380-320
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி கி.மு. 320 - 270
பெரும்பூண் சென்னி கி.மு. 270 - 245
உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி கி.மு. 245 - 232
கரிகாலன் II கி.மு. 232 - 200
மணக்கிள்ளி கி.மு. 200 - 180
வேல் ப்றடக்கை பெருவிற் கிள்ளி கி.மு. 180 - 160
போரவைக் கோல் பெருநற் கிள்ளி கி.மு. 160 -125
முடித்தலை கோல் பெருநற்கிள்ளி கி.மு. 125 - 87
கோப்பெருஞ் சோழன் கி.மு. 87- 62
ஒற்றுமை வேட்ட பெருநற் கிள்ளி (ராசசூய) கி.மு. 62- 40
சேட்சென்னி நலங்கிள்ளி + மாவளத்தான் கி.மு. 40 - 22
குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன் கி.மு. 22 - 1
குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன் கி.பி. 1 - 40
நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி கி.பி. 40 - 60
கரிகாலன் III கி.பி. 60 - 110
மாவண் கிள்ளி கி.பி. 110 -130
நெடுமுடிக்கிள்ளி கி.பி. 130 - 150
செங்கணான் கி.பி. 150 - 180
இசை வெங்கிள்ளி கி.பி.180 -- 210
கைவண்கிள்ளி கி.பி. 210 - 240
பொலம் பூண் கிள்ளி கி.பி. 240 - 260
கடுமான் கிள்ளி கி.பி. 260 -285
நல்லடி (அக 356) கி.பி. 285 - 330
ஆந்திர நாட்டில் சோழராட்சி கி.பி. 300 - 400
மேற்சொன்ன பாண்டிய, சேர, சோழ மன்னர்களின் காலத்தை மதிவாணர் நற்குடி வேளாளர் வரலாறு என்ற நூலைக் கருவி நூலாகக் கொண்டு மீட்டமைத்துள்ளார்.
அவர் ஒரு சில கூற்றுகள் பூராணப் பாங்கிலும் அரசர் பெயர் வடமொழி தழுவியும் இருப்பினும் பெரும்பாலான பகுதிகள் வரலாற்று உண்மைகளோடு பொருந்தி வருகின்றன் என இந்நூல் குறித்து கூறுகிறார். எனவே நற்குடி வேளாளர் வரலாறு நூற்பா ஆவணமாக சேர்க்கப்பட அன்பர்கள் முயல வேண்டும்
பாண்டியர்கள் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டுவரும் தொல்குடியினர் என்பது சன்றோர் குறிப்பு.
சங்க காலப் பதிவுகள்
பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும்.வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் பாண்டியன் தென்னவன்,மீனவன்,மாறன்,கடலன் வழுதி,பரதவன் மற்றும் முத்தரையன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டான் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.
பாண்டிய நாடு
இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள்
மானாபரணன்,வீரகேரள பாண்டியன்,சுந்தர பாண்டியன்,விக்கிரம பாண்டியன்,வீரபாண்டியன் ஆகிய ஜந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர். மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று முல்லையூரில் ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன் ஈழ நாட்டிற்குத் தப்பி ஓடினான். வீரபாண்டியன் கி.பி. 1048 ஆம் ஆண்டளவில் கொல்லப்பட்டான். கோலார் மிண்டிக்கல் கல்வெட்டு மற்றும் இராசாதிராசன் திருக்களச் செப்பேடு போன்றனவற்றில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாண்டியர் பழக்க வழக்கங்கள்
மன்னன் மகன்,பெயரன் என்ற முறையில் முடிசூடினர்.சிங்காதனங்களுக்கு மழவராயன் காலிங்கராயன் முனையதரையன்,தமிழ்ப் பல்லவராயன் என்று பெயரிடப்பட்டனர்.அரசன் பிறப்பிக்கும் ஆணை திருமுகம்,ஓலை மூலம் மக்களுக்கு அனுப்பப்படும்.அரசர்கள் பிறந்த நாள் விழா நடத்தினர்.போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டி என்ற இறையிலி நிலம் அளிக்கப்பட்டது.உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்துவந்தது.பாடிய புலவர்களுக்குப் பொன்னும்,பொருளும் பரிசாக அளிக்கப்பட்டன.நீதி தவறாது செங்கோல் முறை கோடாது வழங்கப்பட்டன.நீதியை நிலைநாட்ட கை குறைத்தும்,உயிர் கொடுத்தும் காத்தனர் சில பாண்டியர்கள்.நீதி காக்க பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் கொடுத்தான்.பொற்கைப் பாண்டியன் நீதிக்குத் தன் கையை வெட்டிக் கொண்டான்.தினமும் மக்கள் குறைகேட்கும் வழக்கம் இருந்தது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும்,பாராட்டும் செய்யப்பட்டன்.காசுகள் வெளியிடப்பட்டன.பிறவிப் பெருங்கடல் நீந்த நாளும் இறைவனை வழிபட்டனர்.அறம் ஈகையாக,நீதியாகக் காக்கப்பட்டது.”மழை வளம் சிறக்க!மண்ணுயிர் வாழ்க! மன்னனும் வாழ்க!” என்று வாழ்த்தும் வழக்கமும் இருந்து வந்தது.இடுவதும்,சுடுவதும் இறந்தோர்க்கு உண்டு!முன்னோடு வழிபடும் வடிக்கமும் இருந்திருந்தன. பாண்டியர் பண்பாட்டில்
குடும்ப இயல்
அரசன்,அரசி,இளவரசன்,பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது.பட்டத்தரசி பாண்டிமாதேவி எனப்பட்டாள்.பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர் சில பாண்டிய அரசர்கள்.பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர்.அரசனின் மூத்த மகனே பட்டம் பெற முடியும்.இளவரசு பட்டம் பெற இயலும்.மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு.உதாரணமாக வீரபாண்டியன்,சுந்தர பாண்டியன் போன்றவர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
கொற்கை பாண்டியரது துறைமுகம்.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஊழ்வினையால்,கண்ணகி நீதி கேட்டதால் இறந்தான்.அச்சமயம் இளவரசனாக கொற்கையில் இருந்த வெற்றுவேற்செழியன் மதுரைக்கு வந்து முடிசூடினான்.ஜந்து பேர் ஒரே சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது.ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி,தந்தை மகன் சண்டைகள் வந்தன மேலும் ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற சம்பவங்களும் பாண்டியரின் குடும்பவியலில் இருந்தன குறிப்பிடத்தக்கது.
நாணய இயல்
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பொன்,செம்பால் செய்யபட்ட காசுகள் புழக்கத்தில் இருந்தன.மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள்.
சீமாறன் சீவல்லபவன் – அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான்.இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது.முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் “அவனிப சேகரன் கோளகை” என்ற பெயரில் வெளியிட்டான்.1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் “வாளால் வழி திறந்தான் குளிகை” என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான்.காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 காணம் – 1 கழஞ்சு ஒரு காணம் 4 குன்றி ‘காசும் பொன்னும் கலந்து தூவியும்’ என்ற தொடர் இதனை உணர்த்துகின்றது.காணம்,கழஞ்சு,காசு,பொன் புறத்திலே வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
படை இயல்
யானைப்படை,குதிரைப்படை,காலாட்படை,தேர்ப்படை போன்ற நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பாண்டியர்.கொற்கை,தொண்டி துறைமுகங்களில் வெளிநாட்டுக் குதிரைகள் ஆண்டுதோறும் வந்திறங்கியது.ஆண்டுக்கு பதினாராயிரம் குதிரைகள் வந்தன என ‘வாசப்’ கூறியுள்ளான்,மார்க்கோபோலோ “குதிரைகள் வாங்க மிகுதியான பொருளைச் செலவிடுகின்றனர்” என்று பாண்டியர்களைப் பற்றிக் குறித்துள்ளார்.வாட்போர்வல்ல பெரிய காலாட்படை இருந்தது பாண்டியர் ஆட்சிக்காலத்தில்.”பெரும் படையோம்”எனக் கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில் இருந்தது.’முனையெதிர் மோகர்’ ‘தென்னவன் ஆபத்துதவிகள்’ போன்ற படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு (கி.மு.300 - கி.பி.300) முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர்.24 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தான் என இவன் ஆண்ட 24 ஆண்டுக்காலத்தினை தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் கூறுயுள்ளார்.கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது. இவனுடைய அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. இவ்வரசன் தலைச்சங்கத்தின் இறுதியில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. முதல் இரு தமிழ்ச் சங்கங்கள் இருந்ததற்கான உறுதி பயக்கும் சான்றுகள் அதிகம் இல்லை. இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் முதல் இரு சங்கங்கள் இருந்ததாகக் கருதப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் வரும் சிறு குறிப்புகளும், இறையனார் அகப்பொருளில் வரும் விரிவான குறிப்புமே இவ்விலக்கிய சான்றுகள்.
இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. தலைச்சங்க காலத்து இறுதி அரசனாக இருந்திருப்பான் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது.மூத்த குடியினன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவனைப் பற்றிப் புறநானூற்றில் "முதுகுடுமிப் பெருவழுதி ஆற்றல் மிக்க படையோன்;அரசர் பலரையும் புறங்கண்டவன்;புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்துச் சிறந்தவன்;இரவலர்க்கு இல்லையெனாது ஈயும் பெருங்கொடையான்;வேள்வி பல செய்து புகழ் பெற்றவன்;சிவ பெருமானிடத்து பேரன்பு உடையோன்;பெரியோர்களை மதிப்பவன்" (புறம்-6,9,12,15,64)
மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு "விறல் மாண்குடுமி பிறர் மண்கொண்டு பாணர்க்குப் பொன் தாமரையும்,புலவர்க்கு யானையும்,தேரும் பரிசாக நல்கினான்" எனப் புறம்-12 கூறுகின்றது.
நால்வேதங்கூறியாங்கு "வியாச் சிறப்பின் வேள்ளி முற்றச் செய்தான்" எனப் புறம்-15 இல் நெட்டிமையார் கூறுகின்றார். இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் காரிக்கிழார், பெண்பாற் புலவர் நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் முதலியோர் இவ்வரசனைப் பாடியுள்ளார்கள்.
இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ்.
கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள்
பாண்டியன் முடத்திருமாறன்
முடத்திருமாறன் என்னும் முற்காலப் பாண்டியன் இரண்டாம் கடற்கோளுக்குப் முன் வாழ்ந்தவன். இவன் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். கடற்கோளுக்குப் பின் தமிழகத்தின் வடக்கே சென்று மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இம்மன்னனனின் தமிழ்ப்பாடல்கள் இரண்டு சங்க இலக்கியமாகிய நற்றிணையில் உள்ளன. ஆட்சியாண்டுகள் துல்லியமாய்த் தெரியவில்லை, வேறு உறுதிக்கோள்களும் செய்திகளும் கிடைக்கவில்லை.
குறிப்பு: கொல்லிமலைக் குட்டுவனைத் தன் பாடலில் குறிப்பிடும் இவன் கடைச்சங்க காலத்தவன். மேலே தரப்பட்டுள்ள செய்தியில், இறையனார் களவியலுரை அடிப்படையில் காட்டப்பட்டுள்ள முடத்திருமாறன் இவன் காலத்துக்கு முந்தியவன்.
பாண்டியன் மதிவாணன்
மதிவாணன் கி.பி. 60 முதல் 85 வரை முடத்திருமாறனுக்குப் பின்னர் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித்தும் சிறந்த தமிழ் நூல்களினை இயற்றவைத்தும் கல்வி,கேள்விகளில் வல்லவனாகவும் நாடகத் தமிழில் ஈடுபாடு கொண்டவனாவும் விளங்கினான். நாடகத்தமிழ் நூல் ஒன்றினை இயற்றி அதற்கு மதிவாணன் மதிவாணர் நாடகத் தமிழர் எனப் பெயரிட்டான். மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இந்நூலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடக நூல் தந்த மதிவாணன் நான்மாடக் கூடல் நாயகனாக இருந்தான்.
பெரும்பெயர் வழுதி
பெரும்பெயர் வழுதி கி.பி. 90 முதல் 120 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் கரிகாலன் காலத்தில் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றான். கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்ற பட்டத்தினையும் பெற்ற இம்மன்னனை கரிகாலனின் நண்பனாகவிருந்த இரும்பிடர்த்தலையர் "கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியே!நிலம் பெயர்ந்தாலும்,நீ சொல் பெயராய்! விலங்கு அகன்ற வியல்மார்பனே!உன்னை விரும்பி இரவலர் வருவர்!உன்ன மரத்தின் சகுனம் பொய்க்கநீ ஈவாய்!தவிரா ஈகை,கவுரியர் மருமகனே! ஏமமுரசும் இழுமென முழங்க வெண்குடை மண்ணகம் நிழற்ற வாழ்பவனே!" என்று (புறம்-3) இல் போற்றுகின்றார்.
பொற்கைப்பாண்டியன்
பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 முதல் 120 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டிய மன்னர்களுள் நீதி தவறாது வாழ்ந்தவர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான்.
பொற்கை பெற்ற வரலாறு மதுரை நான்மாடக்கூடல் நகராக இருந்த சமயம். இரவு நேரங்களில் அரசன் காவல் பொருட்டு வீதி வலம் வருதல் உண்டு ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் "வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்" எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளது திருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள். வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக்கூறிச் சென்றான். இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான். அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஐயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எண்ணி அவ்வீதியில் அமைந்திருந்த அனைத்து வீட்டுக் கதவுகளினையும் தட்டினான் பாண்டியன்.
மறுநாள் அரசவையில் அத்தெரு மக்கள் முறையிட்டனர். அமைச்சர், மடைத்தலைவர், புலவர் அனைவரும் அமர்ந்திருந்தனர். எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிய திருடன் கையை வெட்ட வேண்டும் என்றும் கூறினர் அம்மக்கள். அரசனும் வாளொன்றைக் கொண்டு வரச்சொல்லி தன் கையையே வெட்டிக் கொண்டான். வியந்த அனைவரிடமும் தானே கதவைத் தட்டியதாகக் கூறியதனைக் கேட்டு மக்கள் வியந்து நின்றனர். பாண்டியனும் பொற்கை ஒன்றினை வைத்துக் கொண்டான் அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என்ற பெயரைப் பெற்றான் அப்பாண்டிய மன்னன். இவ்வாறு சிலப்பதிகாரத்தில் கண்ணகியிடம் தெய்வம் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி
பாண்டியன் அறிவுடை நம்பி
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
பாண்டியன் ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
பாண்டியன் கானப்போர் கடந்த உக்கிரப் பெருவழுதி
கருங்கையொள்வாட் பெரும்பெயர்வழுதி
பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி
நல்வழுதி
கூடகாரத்து துஞ்சிய மாறன்வழுதி
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
குறுவழுதி
நம்பி நெடுஞ்செழியன்
பாண்டிய மன்னர்கள் (பல்லவர் காலம் கி.பி. 575 - 900)
பாண்டியன் கடுங்கோன் கி.பி. 575 - 600
கடுங்கோன் தமிழகத்தின் இருண்ட காலமாகக் கருதப்பட்ட களப்பிரர் ஆட்சிக்காலமான கி.பி. (300-700) இருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவான்.கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான்.பாண்டிய நாடு முழுவதனையும் தன் ஆட்சிக்குள் கொண்டும் வந்தான்.இவனைப் பற்றிய செய்திகள் பலவற்றையும் வேள்விக்குடி செப்பேடுகள் சிறப்பித்துக் கூறுகின்றன.
களப்பிரன் பாண்டிய நாட்டைக் கைக்கொண்டான்,கதிரவன் போன்ற பாண்டியன் ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்றும்,கதிர்வேல் தென்னன் என்றும்,செங்கோல் ஓச்சியவன் என்றும் உலகப் பெண் உரிமையைத் தனதாக்கிக் கொண்டவன் என்றும் சிறப்பிக்கப்படுகின்றான்.வீரத்தால் களப்பிரரை வென்றான் புகழால் தமிழை நிலைபெற வைத்தான் எனவும் மெய்ச்சப்படுகின்றான்.
மாற்வர்மன் அவனி சூளாமணி கி.பி. 600 - 625
சடையவர்மன் செழியன் சேந்தன் கி.பி. 625 - 640
மாறவர்மன் அரிகேசரி கி.பி. 640 - 680
இவனை சுந்தரபாண்டியன் எனவும் கூன்பாண்டியன் எனவும் திருவிளையாடற் புராணம் கூறாந்ற்கும். முதலில் சமண மதப்பற்றுடையவனாய்யிருந்து பின்பு சமய குறவர் திருஞானசம்பந்தமூர்திகளாற் சைவனாக்கப்பட்டான். இவன் முன்னிலையில் தான் திருஞானசம்பந்தமூர்திக்கும் சமன முனிவர்களுக்கும் அனல் வாதமும் புனல்வாதம் நிகழ்ந்தன. இவ்வேந்தன் ஆட்சியில் பாண்டியநாடு உயர்நிலை அடைந்தது. சோழர்களையும், சேரர்களையும்,பரவரையும்,குறுநில மன்னர்கள் சிலரையும் வெற்றிகொண்டான். மணிமுடிசசோழனை உறையூரில் வெற்றி கண்டு அவ்வேந்தன் மகள் மங்கையர்க்கரசியை திருமணம் செய்துகொண்டான். இக்காலகட்டத்தில் பாண்டியநாட்டில் அமைச்சராயிருந்தவர் குலச்சிறையார் என்பவர். மாறவர்மனரிகேசரி, மங்கையர்க்கரசி,குலச்சிறையார் மூவரும் சிவனடியாராகி அறுபத்துமூவருள் சேர்க்கப்பட்டனர்.இவர்கள் வரலாற்றைப் பெரிய புராணத்தில் காணலாம்.
கோச்சடையான் ரணதீரன் கி.பி. 680 - 710
மாறவர்மன் அரிகேசரி பாராங்குசன் - இராசசிமன். கி.பி. 710 - 765
நெடுஞ்சடையான் பராந்தகன் கி.பி. 765 - 790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 - 800
வரகுண மகாராசன் கி.பி. 800 - 830
ஸ்ரீ மாரன் ஸ்ரீ வல்லபன் கி.பி. 830 - 862
வரகுணவர்மன் கி.பி 862 - 880
பராந்தக பாண்டியன் கி.பி. 880 - 900
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900 - 920
வீரபாண்டியன் கி.பி. 946 - 966
சோழர் வரலாற்றை மூன்றாக பிரிக்கலாம்
1. வரலாற்றுக்கு முற்பட்ட சோழர்கள் (சரித்திரத்திற் குட்படாத முற்காலத்தவர்)
சூரியன்.
மனு.
இக்குவாகு.
ககுத்தன்.
புலியும்மானும் ஒரு துறையுண்ண ஆண்டவன்,
மாந்தாதா.
முசுகுந்தன்.
தேவர்க்கமுதமளித்தவன்.
வல்லபன்.
சிபி.
சுராதிராசன்.
சோளன்.
இராசசேகரி.
பரகேசரி.
காலனிடத்தில் வழக்குரைத்தோன்.
காந்தன்.
காகந்தி.
அனைத்துலகும் வென்றோன்.
வேந்தனைக் கொடியாக வைத்தோன்.
ஒருகடலில் மற்றொரு கடலைப்புக விட்டோன்.
தன் குருதியை உண்ணவளித்தோன்.
காற்றைப்பணிகொண்டோன்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செப்பியன்.
வானவூர்தி செலுத்தினோன்.
அரசர் சூளாமணி.
வீரவாதித்தன்.
சூரவாதித்தன் முதலியோர்.
மனுவுக்கு முன்னிருந்த சோழ மன்னவர் கணக்கற்றவர். அவர் பெயர் திட்டமாய்த் தெரியவில்லை.சோழர், திருவாரூர் சீகாழி உறையூர் புகார் தஞ்சை செயங்கொண்ட சோழபுரம் முதலிய பல நகரங்களைப் பல சமையங்களில் தலைநகராகக் கொண்டிருந்தனர்.
2. முற்கால சோழர்கள. (சரித்திரத்திற்கு பிற்கலத்தவர்)
உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னி.
கரிகாலன்.
கிள்ளிவளவன்.
தித்தன்.
பெருங்கிள்ளி.
நல்லுத்தரன்.
கோப்பெருஞ் சோழன்.
கோச்செங்கட் சோழன் முதலியோர்.
இவருள் கரிகால் வளவன் பனிமலையிற் புலியைப் பொறித்து நாவலந்தேசம்[india] முழுதும் தன் ஆணையைச் செலுத்தினான்.
3. பிற்கால சோழர்கள்.சோழநாட்டின் பேரரசர்களாக இருந்தவர்கள்
- விஜயாலய சோழன் (846 - 881)
- ஆதித்தியன் (880 - 907)
- பராந்தகன் (907 - 955)
- கண்டராதித்தியன் (955 – 957)
- அரிஞ்சயன் (957)
- சுந்தரசோழ பராந்தகன் (957 - 985)
- உத்தம சோழன் (973 - 989)
- இராஜராஜன் (985-1012)(மகள்)
- ராஜேந்திரன் (1012-1044) (மகள்)
- இராஜாதிராஜன் (1018-1054)
- ராஜேந்திரன் II (1052-1064) (மகள்)
- வீரராஜேந்திரன் (1063-1069)
சேரர்
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.
சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.
சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.
மன்னர்கள்
சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.
நகரங்கள்
கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்
சில அரசர்களின் ஆட்சியாண்டுகள்
* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 58 ஆண்டுகள்
* பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகள்
* களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள்
* செங்குட்டுவன் 55 ஆண்டுகள்
* ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகள்
* செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள்
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகள்
* இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகள்
தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. 1200 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும், இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும், இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.
உதியஞ்சேரலாதன் – கி.பி. 45-70
உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள “துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்” என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், வெண்னிகுயத்தியார், கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் – கி.பி. 71-129
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் “இமய வரம்பன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் அடங்கும், குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை. இவரைவிட காழா அத் தலையார், மாமூலனார், பரணர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இவனைப்பாடியுள்ளனர்
வட இந்தியாவில், நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.
முதுமைப் பகுவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன், வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத் தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் – கி.பி. 80-105
பல்யானைச் செல்கெழுகுட்டுவன், சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. 25 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன், நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. 500 சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான், நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் – கி.பி. 106-130
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ….சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்…. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலம்
பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.
செயல்கள்
பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், “……இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்…..” என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.
சேரன் செங்குட்டுவன் – கி.பி. 129-184
சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.
பல்வேறு சேர மன்னர்களைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக்கள் இருந்தாலும் செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள் எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது வெளிப்படை. இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.
வரலாற்றுத் தகவல்கள்
தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.
அந்துவஞ்சேரல் இரும்பொறை
அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.
அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை – கி.பி. 123-148
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் இரும்பொறை அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.
இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும் இத்தகையதொரு கல்வெட்டு “கோ ஆதன்” என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன், ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 148-165
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.
தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.
இளஞ்சேரல் இரும்பொறை – கி.பி. 165-180
இளஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர், சோழர், குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.
குட்டுவன் கோதை – கி.பி. 184-194
குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.
சேரமான் வஞ்சன்
சேரமான் வஞ்சன், என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச் சேர்ந்தவர். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.ன் புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன், புலவர்களை இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர். எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் 74 ஆவது பாடலாக உள்ளது.
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். “மாக்கோதை” என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.
சேர மன்னர்கள் ( Edit with the above)
சங்ககாலம் என்பது தமிழ்நாட்டின் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தரும் வாழ்ந்த காலமாகும். சேரர்களை வானவரம்பன், வானவன், குட்டுவன், குடக்கோ,பொறையன், இரும்பொறை, கடுங்கோ, கோதை, சேரல், சேரலர்,சேரமான் என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைப்பதுண்டு.
பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன்
பல்யானைச் செல்கெழு குட்டுவன்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
செல்வக் கடுங்கோ வாழியாதன்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ
யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சேரமான் வஞ்சன்
சேரமான் மாவண்கோ
சேரமான் குட்டுவன் கோதை
சேரமான் கணைக்கால் இரும்பொறை
பாண்டியர்கள் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டுவரும் தொல்குடியினர் என்பது சன்றோர் குறிப்பு.
கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள்
பாண்டியன் முடத்திருமாறன்
பாண்டியன் மதிவாணன்
பொற்கைப்பாண்டியன்
கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி
பாண்டியன் அறிவுடை நம்பி
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
பாண்டியன் ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
பாண்டியன் கானப்போர் கடந்த உக்கிரப் பெருவழுதி
கருங்கையொள்வாட் பெரும்பெயர்வழுதி
பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி
நல்வழுதி
கூடகாரத்து துஞ்சிய மாறன்வழுதி
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
குறுவழுதி
நம்பி நெடுஞ்செழியன்
பாண்டிய மன்னர்கள் (பல்லவர் காலம் கி.பி. 575 - 900)
பாண்டியன் கடுங்கோன் கி.பி. 575 - 600
மாற்வர்மன் அவனி சூளாமணி கி.பி. 600 - 625
சடையவர்மன் செழியன் சேந்தன் கி.பி. 625 - 640
மாறவர்மன் அரிகேசரி கி.பி. 640 - 680
கோச்சடையான் ரணதீரன் கி.பி. 680 - 710
மாறவர்மன் அரிகேசரி பாராங்குசன் - இராசசிமன். கி.பி. 710 - 765
நெடுஞ்சடையான் பராந்தகன் கி.பி. 765 - 790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 - 800
வரகுண மகாராசன் கி.பி. 800 - 830
ஸ்ரீ மாரன் ஸ்ரீ வல்லபன் கி.பி. 830 - 862
வரகுணவர்மன் கி.பி 862 - 880
பராந்தக பாண்டியன் கி.பி. 880 - 900
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900 - 920
வீரபாண்டியன் கி.பி. 946 - 966