BOOK ON Kallar
வரலாற்றுப் பாதையில் பெருமைமிகு கள்ளர் இனம்
ஜெயராம் இராசகண்டியர்
சர்வதேச கள்ளர் பேரவை
இங்கிலாந்து
இராசகண்டியன் பதிப்பகம்
லோங்மன்ஸ் அச்சகம்
இங்கிலாந்து
சமர்ப்பணம்
என்னை ஈன்றெடுத்து செறிவூட்டி வளர்த்த தாய் தெய்வத் திருமதி துரைராஜா இராசகண்டியர் சம்பூரணத்தம்மாள் அவர்களுக்கும், கல்வியூட்டி என்னை ஊக்குவித்து, சிந்தனையூட்டி வளம் பலகண்டு செயல் பட வைத்த தந்தை தெய்வத்திரு சிதம்பரம் இராசகண்டியர் துரைராஜா அவர்களுக்கும் இந்நூலை காணிக்கையாக்கி சிரம் தாழ்த்தி தொழுது வணங்குகிறேன்.
வாழ்த்துரை
நாகூர் சோமசுந்தர தேவர்
ஆசிரியர் கள்ளர் இன முழக்கம்
தஞ்சாவூர்.
இந்தியா
அணிந்துரை
புலமை வேங்கடாசலம் வன்னியர்.
தமிழ்நாடு கள்ளர் பேரவை.
தஞ்சாவூர்.
இந்தியா.
உள்ளுரை.
ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரன். நூல் ஆசிரியரின் பெயரிலேயே (இராசகண்டியன்) வரலாறு இருக்கிறது. அதனால் தான் கள்ளர் வரலாற்றில் இன்றைய நிலை குறித்து வருந்தியிருக்கிறார். வரலாறு நடந்த வழியில் ஓர் ஆர்வமுள்ள வழிப்போக்கனாக, தமிழக திருக்கோவில்களில்தான் கள்ளர் குலத்தின் வரலாறும் அடங்கி உள்ளது என்பதனை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். தான் ஒரு வரலாற்று பண்டிதனோ,ஆசிரியனோ இல்லை என்றும் தன்னால் முடிந்தவரை வரலாற்று சான்றுகளை திரட்டி முன் வைத்து இந்னூலினை படைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
இராசகண்டியரின் இப்பெரு முயற்சி பாராட்டுக்குறியது. தேர்தெடுக்கப்பட்ட தலைப்புகளும் நூலுக்கு பெருமை படைக்கிறன. இதுவரை வெளிவந்துள்ள கள்ளர்கள் பற்றிய படைப்புகளில் மிகவும் வித்தியாசமானதாகவும் தெளிவான கருத்துக்களையும், வரலாற்று படிமங்களையும், கேட்டறியாத தகவல்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இப்படைப்பு குறிப்பாக நம் இளைய தலைமுரையினர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவருக்கு முன்னர் எத்தனையோ பேர் கள்ளர் சமுதாயம் பற்றி எழுதியிருக்கலாம், ஆனால் இவரைப்போல் எளிமையாக படைத்திருப்போர் மிகமிகக் குறைவு. தனக்குத்தான் தெரியும் என்றில்லாமல் கள்ளர் சமுதாயம் தம் பெருமைகளை உணரவேண்டும் என்பதற்காக கள்ளர் வரலாற்று வரைவியல் படைக்கப் பட்டுள்ளது. முடியுமா என்போர்க்கு ஊன்று கோலாகவும்,முடியாது என்போர்க்கு போராட்ட ஆயுதமாகவும் இந் நூல் விளங்கும்.
இவ்வறிய நூல் கள்ளர் குல மக்கள் அனைவராலும் படிக்கப்பட்டு நம் குல மக்களை மேம்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை. கள்ளர் குலபட்டங்களும் ,பட்டங்களின் விரிவாக்கங்களும் என்ற பகுதி மிகவும் அருமையாக உள்ளது. கள்ளர் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களும், சோழ மன்னர்களின் மணவுரவுகள் மற்றும் குறுநில மன்னர்களின் ஆளுமை போன்ற சரித்திர சான்றுகள் அனைத்தும் அடங்கிய ஒரே நூல் இது மட்டுமே என்றால்,அது மிகையாகாது.
போகிறபோக்கில் கண்ட காட்சிகளையும், கேட்ட நிகழ்வுகளையும், படித்த புத்தகங்களையும், அறிந்த தகவல்களையும் மையமாககொண்டு வரையப்பட்ட இப் படைப்பு அனைவராலும் படித்து பயனடைய வேண்டும். குற்றம் குறைகள் இருப்பின் ஆசிரியரை தொடர்பு கொண்டு அடுத்த பதிப்பில் நிவர்த்தி செய்ய உதவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
கள்ளர் சரிதம் ஒரு மகாசமுத்திரம். அதன் சாரத்தை ந.மு. வேங்கடசாமிநாட்டார், சுவாமிநாத மாதவராயர், புலமை வெங்கடாசலம் வன்னியர் உட்பட எத்தனையோ அறிஞர்கள் தங்கள் கைவன்னத்தில் சுரிக்கிச் சுவைபடக் கொடுத்திருக்கிறார்கள். அதே சுவை குன்றாமலும் விரிவாக்கி கலாச்சாரக் கண்ணாக, பெரும் பொக்கிசமாக அளித்துள்ளார் சர்வதேச கள்ளர் பேரவையின் இராசகண்டியர். நேற்று, இன்று, நாளை, முக்காலத்தையும் உணர்த்தி உயரவழி காட்டும் இந்நூல் உங்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருப்பது பெருமை, இப்பெருமையை ஒவ்வொரு கள்ளரும் பெறவேண்டும் என்ற விருப்பமுடன் கேட்டுக் கொள்கிறேன்
தமிழ் மரபோடும், கள்ளர் குல உணர்வோடும் எழுதப்பட்ட இந் நூலினை முரசு கொட்டி வரவேற்போம். பயனடைவோம்.
கவியூர் மணவாளன் தொண்டைமான்
சர்வதேச கள்ளர் பேரவை
ஒட்டாவா
கனடா
ஆக்கியோன் முன்னுரை (என்னுரை)
கள்ளர் என்ற ஓர் இனமுண்டு
களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு
கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு
கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு
கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும்
புவியில் பெருங்கோயில் அமைத்து,
ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து
ஈராயிரம் பட்டங்களையும் சுமந்து
பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது
காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு
வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது.
கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம்
இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவொம்.
வாருங்கள்!
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை. புதினமோ புராணமோ இல்லை அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு உண்மை சம்பவங்களின் வரைபடம்
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும். தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான். கள்ளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
கள்ளர் இனம் பழம் பெருமை பேசுவதென்பதும், கள்ளர் பழமையைப் போற்றுவதென்பதும், கள்ளர் இன பரம்பரை புகழைப் பாராட்டிப் பறப்புவதென்பதும் கள்ளர் குல பண்பாடு, அது ஒரு கலாச்சாரம், அது ஒரு வரலாற்று பெருமை. பழம் பெருமை பேசாத கள்ளர் எவரும் தன் மூத்தோர், முன்னொர் புகழ் பாடாத கள்ளர் எவரும் தன்னைப் பற்றி கள்ளர் இனம் பெருமையாக பேசும்படியான எந்தச் செயலையும் செய்து விட முடியாது.
தீர்வு காணத் தெரியாதவர்கள் தீர்ப்பு கோரி புலம்பாதீர்கள். தீர்வு காணும் முயற்சிகளின் எண்ணிக்கயை அதிகமாக்குங்கள். முயற்சிகளின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. முயற்சி தான் தன்மானத்தின் உச்ச நிலை என்பதனை நீங்கள் உணரும்போது தீர்வு தானாக உங்களை நாடி வரும். இல்லை எனில், அநியாயமாக ஒருவரை நீதிபதி ஆக்கிவிட்ட அவமானம் உங்களைக் குடையும்.
நாம் செழுமை மிக்க பாரம்பரிய பண்பாடுகளை கொண்ட வலிமை மிக்க உயிர்துடிப்புள்ள ஒரு குலத்தின் சொந்தக்காரர்கள். நம் குலத்திற்கு புதிய வலிமை தேடவோ, புதிய இலக்கணம் படைக்கவோ, செறிவைக் கூட்டவோ முயலவில்லை. எம் முயற்சி எல்லாம் எம் குலத்தின் தொன்மையை ஆராய்ந்து அதன் வயதையும் கணித்து எம் முன்னோர்களுடைய செழுமை மிகு எண்ணங்களை எடுத்துறைக்க வேண்டுமென்பதே. கள்ளர் குலம் பற்றி நடக்கும் ஆய்வுகளையும் முடிவுகளையும் நம் குல வளர்ச்சிக்கு மட்டுமே பயன் படுத்தி உயர்வோம்.
இன்றைய நிலையில் கள்ளர் குலம் தனது இயல்பான மாண்புகளை மறந்து துயில் கொள்கிறது, மதி மயங்கி கிடக்கிறது. தயங்கி நிற்கிறது. நம்மால் முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. சோழன் வட நாட்டின் மீது படையெடுத்த போது நம்மால் முடியுமா என்று அவன் தயங்கவில்லை. நாவாய்களை செலுத்தி அலை கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளை வென்றபோது நம்மால் முடியுமா என்று அவன் தயங்கவில்லை. கள்ளர் இனமே தயங்காதே, மயங்காதே. அனைத்தும் முடியும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்து.
கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.
உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?
உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?
உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?
விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஆண்ட பரம்பரை அடிமைப் படலாமா?
வந்த பாதையை நாம் மறந்து விட்டால் போகும் பாதை நமக்கு புரியாமல் போய்விடும். கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள். இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவொம். வாருங்கள்!
நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டுவது அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும். நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன். இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
வரலாறு நெடியது. முடிவில்லாதது. வாழ்க்கையைப் போலவே தன்னை மறந்தவர்களையும், மறைத்தவர்களையும் கடந்து அது நீளப்பயணம் செய்து கொண்டுதான் இருக்கும். இத் தளத்தில் தரப்பெற்றுள்ள தகவல்கள் முற்று முடிந்த முடிபுகள் அல்ல.இன்றும் ஆராய இடம் கொடுப்பன. காலப்போக்கில் இதில் சொல்லப்பெற்ற யூகங்கள், செய்திகள் பொய்யாகும்படியான உண்மைகளை ஆய்வாளர்கள் கண்டு சொல்லக்கூடும், சொல்லவும் வேண்டும். வரலாறு முடிந்து விடுவதில்லை, தொடரும் ஒரு தொடரே.
ஆலயங்கள் ஆண்டவனின் இருப்பிடம் மட்டுமல்ல, மானுட ஆன்மாவை மேன்மைபடுத்தும் பயிற்சிக்களங்கள். ஆலயங்கள் வழிபாட்டு மையங்கள் மட்டுமல்ல, வரலாற்று நிலையங்களும்கூட. எமது திருக்கோயில்களில் கண்டு படிக்கப்பட்ட, படிக்கப்படாத கல்வெட்டுகளளில் தான் கள்ளர் குல வரலாறு அதிகமாக இருக்கிறது என்ற உண்மை நம் இனத்திற்கு தெரியவில்லை, புரியவில்லை.
வரலாறு நடந்த வழியில் ஓர் ஆர்வமுள்ள வழிப்போக்கனாக நடக்கமுயன்றுள்ளேன். நான் நடந்த வழித்தடத்தில் என்னால் முடிந்தளவு தேடியுள்ளேன், தேடிக்கொண்டிருக்கிறேன், தேடிக்கொண்டே இருப்பேன். சில பதிவுகள் தப்பாகவும் ஆதாரமற்றவையாகவும் சிலருக்கு தெரியலாம். திருத்திக்கொள்ள ஆதாரங்களுடன் உதவுங்கள். சொந்தங்களே கள்ளர் வரலாறு பற்றிய ஆர்வம் உங்களுக்கும் இருக்குமானால் களத்துக்கு வாருங்கள். உங்கள் கண்களால் தேடப்படும் வரலாறும், கைகளால் எழுதப்படும் வரலாறும் தான் தலைமுறைகளை அடையாலப்படுத்தும். தங்கள் தேடல்களின் முடிவுகளையும் தாங்கள் அறிந்தவை, கேட்டவை, தெரிந்தவைகளையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கள்ளர் குல வரலாற்று வளர்ச்சிக்கு இவை பெரிதும் உதவிடும்
நன்றி.
என்றும் அன்புடன்
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
பொருளடக்கம்
1. கள்ளர்
2. கள்ளர்குல அரசபரம்பரை
3. கள்ளர் படைத்த ராஜியங்கள்
4. முக்குல மனனர்கள்
5. மனர்களின் மணவுரவுகள்
6. கள்ளர் இன பேராசி செம்பியன் மாதேவியார்
7. புதுக்கோட்டை
8. ஆன்மீகத்தில் கள்ளர்
9. பெயர் சொல்லும் திருத்தலங்கள்
10. பாடல் பெற்ற சிவத்தலங்கள்
11. கள்ளர்குல வரலாற்று மாமணிகள்
12. இன்றைய சான்றோர்கள்
13. வரலாற்றில் ஊரும் பெயரும்
14. கள்ளர்குல பட்டங்கள்
15. பட்டகளின் விரிவாக்கம்
பின்னினைப்பு 1
பின்னினைப்பு 2
பின்னினைப்பு 3
1. கள்ளர்
உலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஏகாதிபதியாய் பல்லாயிரம் நகரங்களையும், எண்ணிறந்த கோயில்களையும் அளவற்ற ஆறுகளையும் கணக்கற்ற ஊர்களையும் உண்டுபண்ணி வாழையடி வாழை போல் ஆண்டு வந்த ஒரு பூர்வீக குடிகளென்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெங்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலிங்கத்துப்பரணி, பன்னிருதிருமுறை, திருமொழிப்பிரபந்தம் மூலம் அறிய முடிகிறது. ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் கள்ளர். இப் பட்டங்கள் அரசன்,தலைவன்,வீரம், நாடு, நகரம், ஆறு, ஊர், கோயில், குளம், ஏரி முதலியவற்றுடன் சம்பந்தபட்டவை என்பதனை நன்குணரலாம்
கள்ளரினமொரு வரலாற்றுப் பாரம்பரிய மிக்க இனம். ஏராளமான வரலாற்று ஆதரங்களை கொண்ட இனம். உலகவரலாற்றில் கள்ளரினத்தை மிஞ்சும் அளவுக்கு ஆதரங்களை கொண்ட வேறு எந்த இனமும் இல்லை என்பதும் வரலாறு. இவ்வளவு ஆதரங்களை கொண்ட கள்ளரினத்தை கள்ளரின மக்களே அறியவில்லை என்பதும் அறிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை என்பது தான் என் வருத்தம். கள்ளர் வரலாறு, கள்ளர்களின் வரலாறு மட்டுமல்ல, தமிழ், தமிழர், தமிழகத்தின் வரலாறும் அடங்கியிருப்பதும் ஒரு வரலாறு.
தமிழகத்தை முற்காலத்தில் பேராசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும்,நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினரே கள்ளர் எனப்படுவர். தொல்காப்பிய உரைத்தலைமகன் இளம்பூரணர் புறவொழகலாற்றில் விளக்கமளிக்கையில், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் எனப்பட்டனர் என்கிறார்.
கள்ளர் என்ற சொல்லுக்கு கரியவன், கர்க்கடகம், குரங்கு, அரசன், நண்டு, முசு, யானை என்று பல்வேறு பொருள்கள் உண்டு. சங்ககால இலக்கியங்களில் கள்வர் என்ற சொல் காணப்படவில்லை. மேலும் கள்வன் என்னும் சொல்லுக்கு திவாரக நிகண்டு கரியோன் என்று மட்டுமே பொருள் தருகிறது.பிங்கலந்தையும் இதையே கூறுகிறது. எனவே கள்வன்,கள்வர் என்னும் சொல் கருமை நிறம் கொண்டவர்களையே தொன்று தொட்டு குறிப்பிட்டு வருவது புலப்படுகிறது. கள்ளர் குலம் என்று அறியும் போது அரசன், மன்னவன் என்று பொருள் அடக்கம் பெரும். இதனை நச்சினார்க்கினியரின் சீவகசிந்தாமணியின் உரைநடை அரங்கேற்றுகிறது.
ஆரியர் தமிழரை கரியவர் என்று இருக்கு வேதத்தில் குறித்துள்ளனர். இந்திரனுக்கு மட்டுமே கரியவன் என்ற பெயர் உண்டு. மேலும் சோழர்களும் கருமை நிறம் கொண்டிருந்தமையால் மால் என்று அழைக்கப்பட்டனர். இதனால் தான் இந்திர குலத்தவர் கள்ளர் என்றும் அழைக்கப்பட்டனர்.
கள்ளர் என்னும் சொல் மிக உயர்ந்த சொல்லாகக் கருதி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.
கள்வர், கள்ளர் என்ற பெயருள்ள கடவுள்கள்
சிவபெருமான் - திருமால் (மால்) என்றும் உள்ளங்கவர் கள்வன் என்று என சிவபெருமானை சம்பந்தரும்
திருமாலை, கள்ள மாதவா கேசவா,
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா,
வரி பொழி லாங்கந்தனுள் கள்வனார்,
கிடந்த வாறும் என திருமாலை திருமொழிப்பிரபதங்களில் ஆழ்வார்களும் குறிப்பிடுகின்றனர்
திருப்பதி வேங்கடாசலபதி பெருமாளின் மனைவி அலர்மேல்மங்கை திருவேங்கடத்தை ஆண்ட கள்ளர் இனத்து முனியத்தொண்டைமானின் மகளாவாள் ( திருமலை மான்மியம்)
சங்ககால மாமன்னன் புல்லி என்பான் வேங்கடத்தை ஆண்டவன். இவனது சிறப்புபெயர் கள்வர் கோமான்
கள்வர் கள்வன் பெரும் பிடுகு முத்தரையன் 9 செந்தலைக் கல்வெட்டு
திருக்காட்டுப்பள்ளி-செந்தலைதூண் கல்வெட்டு
“வல்லக்கோன், தஞ்சைக்கோன் ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்.” எனவும் குறிப்பிடுகின்றன.
“ வினைநவில் யானை விறற்போர்க் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்” (அகம்.)
என வேங்கடமலைப்பகுதியை ஆண்ட தொண்டைமானைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.
“ கள்வர் பெருமகன் - தென்னன்”
“ கள்வர் கோமான் தென்னவன்”
என அகநானூறு பாண்டிய மா மன்னனையும்
சேர, சோழ, பாண்டிய மா மன்னர்களும், தொண்டைமான், புல்லி, முத்தரையர் போன்ற மன்னர்களும் பழந்தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் கள்வர், கள்ளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
இவனென் னலங்கவர்ந்த கள்வ னிவனெனது
நெஞ்ச நிறையழித்த கள்வனென். . “
என முத்தொள்ளாயிரம் சேர மா மானைப் பற்றியும்
“.மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்கும்”(சுந்தரர் திருத்தொண்டர்தொகை)
“கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்”(சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)
“ கொங்கிற் கனகமணிந்த ஆதித்தன் குல முதலோன். .
இருக்குவேள் மன்ன இடங்கழியே”(நம்பியாண்டார் நம்பி-திருவந்தாதி
இருக்குவேளிர் குலத்தலைவர் . இடங்கழியார். . பொன்வேய்ந்த ஆதித்தன்
மரபோர்” (சேக்கிழார் திருத்தொண்டர் புராண சாரம் பக்.52)
என சுந்தரர்,சேக்கிழார், நம்பியாண்டார் நம்பிஅடிகள் சோழர்கள் கள்ளர்கள் எனவும்
“ களப ராஜராஜன்”
“ கள்வன் ராஜராஜன்”
என மெய்க்கீர்த்தி கல்வெட்டு இராண்டாம் இராசராச சோழனை களபர்-கள்வன் எனவும்
“ கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (அகம்.61)
“ புடையலங் கழற்காற் புல்லி குன்றத்து” (அகம்.)
“ பொய்யா நல்லிசை மாவண் புல்லி” (அகம்.359)
“ நெடுமொழிப் புல்லி” (அகம்.)
புல்லி நன்னாட்டும்பர்”(அகம்.)
“ கடுமான் புல்லிய காடிறந்தோரே”(நற்றிணை)
என மாமூலனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப்பற்றியும்
“ புல்லி வியன்றலை நன்னாட்டு வேங்கடம்”
“ மாஅல்யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடம்”
என கல்லாடனார் வேங்கடமலைப்பகுதியை ஆண்ட புல்லியைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.
கள்ளர்குலமும் அரசமரபுகளும்.
தமிழக வரலாற்றில் மிகத்தொன்மையான காலம் முதற்கொண்டு சிறப்புற்று வாழும் குடிகளுள் கள்ளர்குடி தனிச் சிறப்புடையதாகும். இக்குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விழங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இவ்வினப் பெருமக்கள் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரச குடும்ப தோற்றல்களாகவும், தொடர் புள்ளவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு சோழர் கால கல்வெட்டுகள் காட்டுகின்றன. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன.
சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குற்பட்டிருந்த சிற்றரசர்களைத் தம் அரசியலில் உயரதிகாரிகளாக கொண்டிருந்தனர், அவர்களே கல்வெட்டுகளில் கையொப்பமும் மேலொப்பமும் இட்டுள்ளனர். சங்ககாலம் முதற்கொண்டு மிகப் பிற்காலம் வரையில் கள்ளர் மரபினர் நாட்டாச்சியோடு தொடர்புடன் விளங்கியுள்ளனர். மேலும் சோழர், மலையர், மழவர், பழுவேட்டரையர், சேதிராயர், வாணாதிராயர், பேசாளர், சாளுக்கியர், கங்கர், முத்தரையர், பல்லவர், அதியமார் முதலிய கள்ளர் குலத்தவர் நாடாண்டுள்ளனர் என்பதும் வரலாறு.
சக்கரவர்த்திகளும், மாமனர்களும், மன்னர்களும் தம் கீழ்ப்பணியாற்றிய அதிகாரிகள், வீரர்கள், சான்றோர்களுக்கு அவர்களின் அருஞ்செயல்களைப் பாராட்டி அவர்களுக்கு உயரிய பட்டங்களை வழங்குவது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டது. பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
முதலாம் பராந்தகனுக்கு உதவியாக இருந்த கள்ளர் குல கங்க மன்னன் இரண்டாம் பிரிதிவிபதிக்கு அவன் வாணர்களின் தலைவன் என்பதால் வாணாதிராயன் என்னும் வீர விருது வழங்கப்பட்டது. இவ்வாரே தென்னவன் மூவேந்த வேளான், இராசராசக் காடவராயன், ஆளப்பிறந்தான் முதலான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. சோழமண்டலத்தில் காணப்பட்ட கல்வெட்டுகளில் ஈழத்தரையர், ஈழமுண்டார், கொல்லமுண்டார், கொல்லத்தரையர், கொங்கரையர், கங்கநாட்டார், சோழகங்கநாட்டார், காலிங்கராயர், கடாரத்தேவர், கடாரத்தலைவர், கடாரம்தாங்கியார், மண்ணையார், சிங்களாந்தான், சிங்களராயர், சிங்களேந்தியார், கேளராயர், கேரளாந்தகன் போன்ற பட்டங்கள் போர் வெற்றிகளை குறித்து வழங்கப்பட்டதாக தெரிகிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவலூர் என்ற இன்றைய திருக்கோவலூர் மலையமான் என்னும் கள்ளர் குல மன்னர்களால் ஆளப்பட்டது. திருமுடிக்காரி இக்குடியில் பிறந்த வள்ளலாவான். கோவலூரை ஆண்டவர்கள் கோவலராயன் என்றுமழைக்கப்பட்டனர். இக்குடியினரின் மருவிய பட்டப்பெயரே இன்று கோபலர் என்று அழைக்கப்படுகிறது.
இன்றைய தர்மபுரி சங்ககாலத்தில் தகடூராக இருந்தது. தடூரை ஆண்டவர்கள் அதியமான் என்னும் கள்ளர் குல மன்னர்களாவர். அதியமான் என்னும்பட்டம் மருவி அதியமார் என்றும் இப்போது அழைக்கப்படுகிறது.
வடக்கே பாலாற்றுக்கரையில் ஆண்டோர் வாணாதிராயர் என்னும் கள்ளர் குல மன்னர்களாவர். இங்கு வாணாதிராயன் பட்டினம் என்றோர் ஊரும் உண்டு. இவர்கள் பாலியார், பால்நாட்டார், பாலாண்டார், மாவாலியார் என்னும் பட்டங்களிலும் அழைக்கப்படுகின்றனர்.
இது போன்று திருமுனைப்பாடியை ஆண்டவர்கள் முனையர் என்ற பட்டமும், சேதிநாட்டை ஆண்டவர்கள் சேதிராயர் என்ற பட்டமும், மழவ நாட்டைகொண்டவர்கள் மழவராயர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் என்பது தெளிவாகிறது.
புதுக்கோட்டை பகுதியிலுள்ள கொடும்பாளூரை ஆண்டோர் கள்ளர்குல இருக்கு வேளீர்களாவர். இவர்கள் சோழர்களுக்கு பெண் கொடுக்கும் உரிமை கொண்டோராவர். கொடும்பாளூரை கல்வெட்டுக்கள் கொடும்பை எனக் குறிக்கின்றன. கொடும்பைராயர் என்ற பட்டம் இன்று மருவி கெடும்புராயர், கொடும்பாளூர்ராயர், கொடும்பூராரென்றும் வழங்கி வருகின்றன. மேலும் இருங்கோ வேளார் என்னும் பெயரும் இன்று இருங்களார் என்ற பட்டமாக மருவி விட்டது. அண்ணவாயில், பூவனைக்குடி முதலிய இடங்களும் கொடும்பாளூரைச் சேர்ந்தபகுதியாகும், இப் பகுதி கள்ளர் குலத்தவர்களுக்கு அண்ணவாசல்ராயர் என்ற பட்டமும், பூவனைக்குடி கள்ளர்களின் பட்டமாகிய பூவனையரையர் என்ற பட்டம் இன்று பூனையர் என்று திரிந்து வழங்குகிறது. பூவனைக்குடியில் பூதிகளறி அமரூன்றி என்னும் முத்தரைய மன்னன் இங்கு புட்பவனேசுரருக்கு ஒரு கோயிலைக் குடைந்திருக்கிறான். கொடும்பாளூர் குறுநில மன்னன் பராந்தகன் சிறிய வேளர் சுந்தரசோழன் காலத்தில் ஈலத்தை வென்று அப்போரிலேயே உயிநீத்த பெருமையும் இருக்கு வேளீர் பரம்பரையையே சாரும்.
"வில்லவர்"
உழு தொழில் தோன்றுமுன்னரே பல்வேறு இனக் குழுக்கள் இருந்தன. பெருங்கற்காலத்தில் அதாவது சங்க காலத்திற்கு சற்று முந்தைய காலத்தில் மனிதன் வேட்டையாடுவதற்கு வில் அம்புகளைப் பயன்படுத்தத் தொடங்கினான்.அப்போது உழவுத் தொழிலே இல்லை.அப்போது அறியப்பட்டவர்கள் வேட்டையாடல் தொழில் செய்தோரே.
தமிழகத்தின் மிகப் பழமை வாய்ந்த குடியினராக (கள்ளர்) "வில்லவர்" அல்லது வில்லாளிகள் என்ற குடியினர் மலைப் பகுதிகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வேட்டையாடல் வாழ்க்கை நடத்தினார்கள். இக் குடியினருக்குத் தலைவராக யார் விளங்கமுடியும்?அவர் குடியில் ஒருவர் தான் தலைவராக இருந்திருப்பார்.இவர்கள் தான் அரச குலத்தின் முன்னோடிகளாக இருக்கமுடியும்.
பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கு முன்னோடியாகக் காணப்பெறும் குறியீடுகளில் வில்லின் உருவமும் பொறிக்கப் பெற்றிருக்கிறது. இக்குறியீடுகள் பண்டையத் தமிழ் எழுத்தின் முந்தைய வடிவம் என்று வரலாற்றறிஞர்களால் கூறப்படுகிறது.(B.B.Lal, "From the megalithic to the Harappa, tracing back
the graffiti on the pottery" Ancient India, Number 16, (1960), Bulletin of the Archaeological survey of India, Plate 23)
கி.மு 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சில சதுர செப்புக் காசுகள் கண்டுபிடிக்கப்பட்டன.மன்னர் உருவம் பொறிக்கப்படாத அக்காசுகளில் முன்புறம் யானை உருவமும் பின்புறம் வில் அம்பு உருவமும் காணப்பெறுகிறது.(தமிழர்காசு இயல் - நடன.காசிநாதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு,முதல் பதிப்பு(1995)
முத்திரை குத்தப் பெற்ற காசுகள் ஜனபதக் குழுக்களால் வெளியிடப் பெற்றவை எனக் கொள்ளப்படுகிறது (நாணயங்கள் - டாக்டர் பரமேஸ்வரி லால்குப்தா, நேஷனல் புக் ட்ரஸ்ட்,புது டில்லி, 1975, பக்கம் 13- 14)
அதை போலவே மேற்குறிப்பிட்ட காசுகள் வில்லைக் குலக் குறியீடாகக் கொண்ட குடியினரால் வெளியிடப்பெற்றவை எனக் கூறலாம்.
அரசர்கள் போர்க்குடியினருக்கு விளை நிலங்களை எதற்காக வழங்கினார்கள்? மழவர்,மறவர் வழித் தோன்றல்கள் தங்கள் வீரத்திற்குப் பரிசாகப் பெற்ற நிலங்களே அவை. மழவர்,கள்ளர்,மறவர் போன்றோர் சோழர்,பாண்டியர் படைகளில் பிரதான இடம் வகித்ததால் தான் பிற நாட்டரசர்களை வெல்லுமளவிற்கு வேந்தர்கள் வலிமையுடன் இருந்தனர். கங்கை கொண்டான்,கடாரம் கொண்டான் என தமது பெருமைகளை தம்பட்டம் அடித்துகொள்ள முடிந்தது எதனால்? போர்க்குடியினரான, மறவர்,மழவர் வழித்தோன்றல்களான வீரர்களால்தான். அதனால்தான் போர்க்குடியினர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றனர்.
வேளார் தலைவர்கள்
வேளார் என்பதும், வேளாளர் என்பதும் வெவ்வேறு இனத்தவரின் குடிப்பெயர்கள்.
வேளார் உழுவித்து உண்பவர்-அரச பரம்பையினர்.
வேளாளர் உழுது உண்பவர்- உழவர்.
உழுபவருக்கு வேளாண் என்ற குடிப்பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியது. வேளாண் என்பதற்கு உபகாரி என்று பொருள். "வேளாண் வாயில் வெப்பக்கூறி"
உழவுத் தொழில் அறிமுகமான போது தான் தலைவர்கள் தோன்றினர் என்பது சரியான வாதமன்று. தலைமைப் பொறுப்பிற்கும், உழவுத் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் கூறப்போனால் உழவுத் தொழில் தோன்று முன்னரே தலைவர்கள் தோன்றிவிட்டனர். தலைவர்களானவர் உண்மையில் நாகரிகமற்ற போர்க்குடிகளே. இவர்கள் உழவு செய்வதில்லை.உழவுத் தொழில் மேற்கொண்டோரை ஊக்கப்படுத்தினர். ஆயுதங்களை மட்டும் தொடர்ந்து உபயோகித்தோர் வலிமை பொருந்தியவரா? அல்லது அதனை விடுத்து ஏர் தொழில் செய்தோர் வலிமையானவர்களா?ஆயுதங்களை தொடர்ந்து பயன்படுத்தி வில்,வேல் கொண்டு போரிட்டவர்களே தலைவர்கள். எந்தத் தலைவனும் ஏர் பூட்டி உழுவதில்லை.
திணை நிலங்கள் பகுப்பிற்கு முன்பே(உழும் தொழில் அறிமுகமாதற்கு முன்னரே) தலைவர்கள் இருந்தனர்.அப்படியிருக்கும்போது உழவுத் தொழில் செய்தவர்தான் தலைவர்கள் என்று ஒருக்காலும் கூற முடியாது.
தங்கள் பகுதியைக் காப்பதற்கும், படையைப் பெருக்குவதற்கும் உழவர்களை அரசர்கள் கூடுதலான வீரர்களாகச் சேர்த்துக்கொண்டனர்.உழும் தொழில் செய்தாலும் இவர்கள் போரின்போது தமக்கு உதவ வேண்டும் என்பதால் இவ்வுழவர்களுக்குப் போர் பயிற்சியளித்தனர் அரசர்கள்.இத்தகைய உழவர்களைப் படைவீரராகப் பெற்றிருந்ததால்தான் சேரர்,சோழர் போன்றோர் தம்மை மள்ளர் ( உழவர்) தலைவராகக் கூறிக்கொண்டனர். இப்போது மருத நிலப் பகுதிகளாக அறியப்படும் பகுதிகளில் கள்ளர் இனத்தோர் மிகுதியாக உள்ளது ஏன்? இவர்கள் அன்னியர்(தெலுங்கர்) படையெடுப்பிற்குப் பின் குடியேறியவர்கள் என்று கருதினால் அது அறியாமையே. ஏனெனில் கல்வெட்டுக்கள் இம் மக்கள் சோழர் காலத்தில் இப்பகுதிகளில் இருந்தமையை தெளிவாக நிருபிக்கின்றன. மழவர்,கள்ளர்,மறவர் போன்றோர் எப்போதும் போருக்குத்தான். இவரே போர்க்குடிகள். இவர்கள் அரசராகாமல் வேறு யாரால் முடியும்?
ஆதாரம்.
01.சங்ககால வேளிர்கள். க.சண்முகசுந்தரம்
02.தொல்காப்பியம்..
03. தொல்காப்பியம், பொருளதிகார உரை, இளம்பூரணர்.
04. தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியர்.
05. சேந்தன் திவாகரம்
06. சூளாமணி நிகண்டு
07. பிங்கல நிகண்டு
08. வடமலை நிகண்டு
09. பாரதிதீபம்
10. சதுரகராதி
11. கதிரைவேற்பிள்ளை அகராதி.
இந்த நூல்களின் நம்பகத்தன்மை வினாக்குரியது என்றால் தமிழ் வரலாறே வினாக்குரியது என்று பொருள் என்பதை தமிழ்கூறு நல்லுலகம் அறியும்.
புதுக்கோட்டைமன்னர் தொண்டமான்
புதுக்கோட்டைமன்னர் தொண்டமான் அவர்கள் கள்ளர் என்பதை அனைவரும் அறிவர். இவருடைய முன்னோர்கள் வேங்கடமலைப் பகுதியை ஆண்ட தொண்டைமான் கோட்டையிலிருந்து வந்தவர்கள் என்று இராஜ அனுராக மாலை கூறுகின்றது. பண்டை காலத்தில் விழுச்சீர் வேங்கட மலையும் சேர்ந்ததே தொண்டை மண்டலம் எனப்பட்டது. முற்காலத்தில் திருப்பதி மலையில் வணங்கப்பட்டவர் சிவபெருமானே என்பதை சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
திருப்பதி மலை உட்பட்ட தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் கள்ளர்களே. இதனை கள்ளில் ஆத்திரையனார், மாமூலனார், தாயங்கண்ணனார் போன்ற தகைசான்ற பெரும் புலவர் பெருமக்கள் பன்னிரண்டு அகநானூறு பாடல்களில் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டதால் தொண்டைமான் என்ற பட்டம் பெற்றனர். தொண்டைமான், தொண்டையர், தொண்டைமான் கிளையார், தொண்டைப்பிரியர், தொண்டார், பல்லவர், பல்லவராயர், பல்லவாண்டார், பல்லவநாடார், பல்லவதரையர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் இவர்களின் வழித் தோன்றல்களே ஆவர்.
இன்றைய சூழலில் கள்ளர் என்பது கள்ளர், கள்வர் இரண்டும் கலந்து திருடன் என்று ஒரு பொருள் கொள்ள நினைப்பது தவறாகும். பொதுவாக நாற்றம் என்ற சொல் இன்றைய சூழலில் துர்நாற்றம், விரும்பத்தகாத ஒரு மணம் என்றே அறியப்படுகிறது. ஆனால் நாற்றம் என்றால் நறுமணத்தை மட்டுமே குறிக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர்ஸ்பென்சர்வெல்மனிதனின் பயனம் என்ற ஆய்வின் முடிவுகள் தரும் தகவலின் படி கள்ளரினத்தில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரலாற்று தொடாபு உண்டு என்றும், வேறு எந்த சமூகத்திற்கும் இவ்வித குடும்ப வரலாற்று தொடர்புகள் இல்லை என்றும், நாகரீக இனங்களில் 65000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் இனம் கள்ளர் இனமென்றும், இன்று உலகலவில் பல்வேறு நாட்டு மானிடவியல் அறிஞர்களும் ஆய்வு செய்யும் இனமும் கள்ளர் இனம் என்றும் கூறுகிறார். எந்த ஒரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாடுகளையும் அறிந்து உரையாடி உறவு கொண்டுள்ளதோ அது தான் ஜீவனுள்ள உயிருள்ள இனமாகும். இல்லை எனில் அடையாலமற்ற மாண்ட இனமாகிவிடும் என்றும் கூறுகிறார்.
உலக வரலாற்றில் தொடர்ந்து 433 ஆண்டுகள் (கி.பி 846 முதல் கி.பி. 1279) ஆண்ட இனமும் கள்ளரினமே. கள்ளரின நாகரீகம் மிகவும் பழைமையானது என்று வரலாறு ஏற்றுக்கொள்கிறது. அரசு உருவாக்கத்தில் தன் நாட்டு எல்லையை வரையறுக்கவும் விரிவுபடுத்தவும், விரிவுற்றதை பாதுகாக்கவும் போர்கள் எழுந்தன. போரில் பங்கேற்பதும், மார்பில் புண்பட்டு மடிவதும் மாட்சிமைக்குரிய வாழ்வாக மக்கள் கருதினர். இக் காலத்தை வீரநிலைக்காலம் என்பர். இத்தகு வீரநிலைக் கால வாழ்வில் பங்கேற்றுத் தன்னலம் பாராது தாய்மண் காத்த மறவர்களுக்கு மன்னர்கள் வழங்கிய வீரநிலைப் பட்டங்கள் ஏராளம்.
தாய்மண் காக்க தன் உதிரத்தை கொட்டிய கள்ளர் குல மறவர்க்கு உதிரப்பற்று என்ற வரி நீக்கிய நிலக்கொடையை முதலாம் இராசராச சோழன் வழங்கிப் போற்றியதைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு கண்முன்னே காட்சிப்படுத்துகிறது.
பழங்கால நீண்ட நெடிய கள்ளர் குல வரலாற்றுச் செய்திகளை அரைகுறையாக குறிப்பிடும் நிலை நெடுங்காலமாக இருந்து வருகிறது. இக்குறையை போக்கும் வண்ணம் வரலாற்றுச் செய்திகளுக்கு முக்கியத்துவமளித்து கல்வெட்டுச் செய்திகள், செப்புப் பட்டயச் செய்திகள், செங்கோல் ஆட்சிபுரிந்து சாதனை படைத்த மாமன்னர்களின் பெருமை மிகு வரலாறு, கோயில்களின் வரலாறு மற்றும் ஊர்பெயர்களின் வரலாறு போன்ற தொன்மை மிகு சான்றுகளை மையமாக வைத்து நெறியான கள்ளர் குல வரலாற்றை தொகுத்துள்ளோம்.
கள்ளர்களின் கிளைப்பிரிவுகள்
மாகாணக்கள்ளர்
கிளைவழிக்கள்ளர்
தஞ்சைநாட்டுக்கள்ளர்
அம்புநாட்டுக்கள்ளர்
ஈசநாட்டுக்கள்ளர்
செங்களநாட்டுக்கள்ளர்
வளநாட்டுக்கள்ளர்
பிரம்புநாட்டுக்கள்ளர்
மீய்செங்கிளிநாட்டுக்கள்ளர்
நாலுநாட்டுக்கள்ளர்
ஐந்துநாட்டுக்கள்ளர்
ஏழுநாட்டுக்கள்ளர்
பாண்டிநாட்டுக்கள்ளர்
சேருவநாட்டுக்கள்ளர்
அம்பலநாட்டுக்கள்ளர்
புதுக்கோட்டைக்கள்ளர்
காந்தர்வகோட்டைக்கள்ளர்
பிரமலைக்கள்ளர்
பாரதத்தையும் கடல் கடந்த நாடுகளையும் கட்டியாண்ட கள்ளர் இனத்தின் வீர வரலாறு
யார் இந்த கள்ளர்குல மறவர்கள்?
சங்க இலக்கியத்துல் சங்கமித்து
கல்வியில் பண்பட்டு அறிவியலில் கரைந்து
குல குருதியில் வளர்ந்தவர்கள் கள்ளர்குல மறவர்கள்.
தங்கள் உதிரத்தையே வியர்வையாக்கி இராச்சியங்களை உருவாக்கி நாட்டுக்கு உழைத்தவர்கள். வரலாற்றால் ரசிக்கப்பட்டவர்கள். வாழ்க்கையை ரசித்தவர்கள் அல்ல.
உணவை மறந்து, உறக்கத்தை இழந்து இழப்பதற்கு ஏதுமின்றி இறந்தவர்கள், சிம்மாசனத்தை தலை நிமிர்ந்து பார்ததுமில்லை, சிம்மாசனங்களும் இவர்கள் இன்றி தலை நிமிர்ந்து நின்றதுமில்லை. இராச்சியங்களை உருவாக்கியவர்கள், உதிரப்பற்று வரி நீக்கம் பெற்றவர்கள். இருப்புகளால் பேசப்பட்டவர்களும் இல்லை, இழப்புகளால் இன்றும் அறியப்படுபவர்கள். அறம்கண்ட சிபியும், மனுகண்ட சோழனும், நெறிகண்ட செம்பியனும், காவிரிக்கு கரை வார்த்த கரிகாலனும், புவிதனில் பெருங்கோயில் படைத்த ராசராசனும் கள்ளர் குல மரபு வழி வந்தவர்களே.
வம்ச தோன்றலின் முடிவில்லா சுகமான நெடும் பயணம்
வரலாற்றுல் சிபி சக்கரவர்த்தியில் தொடங்கி
முசுகுந்தனில் விதையாகி
காந்தனில் பதிந்து
செம்பியனில் முளை விட்டு
மநுவில் வளர்ந்து
கரிகாலனில் உயர்ந்து
சென்னியில் திளைத்து
கோப்பெருஞ்சோழனில் படர்ந்து
கோச்செங்கணானில் அரும்பாகி
விசயாலயனில் மொட்டாகி
ஆதித்தனில் முகையாகி
பராந்தகனில் மலராகி
கண்டராதித்தனில் அலராகி
அரிஞ்சயனில் வீயாகி
உத்தமனில் செம்மலாகி
இராசராசனில் காயாகி
இராசேந்திரனில் கணியாகி
என்றும் நம் இதயத்தில் இணந்தது வளர்வதும் கள்ளர் இனமே!
கொற்றவர்கள் கற்றவர்களைப் போற்றிய கள்ளர் குல கோட்பாடுகள்
மகளாய் பிறந்து மணைவியாய் விளங்கி தாயாக உயர்ந்து, முடிவில் இறையாகிப் போற்றப்படுகிறவள் பெண்.
மகனை பெற்றளித்தல் என் கடமை - சங்க கால கள்ளர் குல தாய்
சான்றோனாக்குதல் என் கடமை - தந்தை
நன்னடை நல்கல் என் கடமை - வேந்தன்
போரில் களிறு எறிந்து பெயர்தல் என் கடமை - மைந்தன்.
இனத்தையும் குலத்தையும் பெருமைப்படுத்தல் என் கடமை - போர் மறவன்
பிறந்த வீட்டை காத்தல் என் கடமை - தலைவன்
புகுந்த வீட்டை ஒளியாக்கல் என் கடமை - தலைவி
நிழலளித்த பெற்றோரை காத்தல் என் கடமை - தலைமகன்
கல்வி அளித்த குருவை நினைவில் கொள்ளல் என் கடமை - சான்றோன்
மக்களை பெற்றுத்தந்த மனைவியை மகிழ்வித்தல் என் கடமை - கணவன்
குலம் தலைக்க வந்த மக்களை வளர்த்திடல் எம் கடமை - கள்ளர் குல மக்கள்
இப்பொழுது கள்ளர்கள் பெருந்தொகையினராய் இருந்து வரும் காவிரி நாடே சோழர்கள் ஆட்சி புரிந்த நாடு. சோழர்கள் சோணாடேயன்றி வேறு நாடுகளையும் ஓரொருகாலத்தில் வென்று ஆண்டிருக்கின்றனர். சோழரிற் சிலர்க்கு ‘கோனேரிமேல் கொண்டான்’ என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது, இப்பெயர் தரித்திருந்தோரும் , கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தோருமான மூன்றாம் குரோத்துங்க சோழனும், வீர சோழனும் முறையே வெங்கால நாட்டுக் கம்மாளர்க்கச் செய்திருக்கும் தீர்ப்பு ஒன்றும், கருவூர்க் கோயிற் பணியாளர்க்கு இறையிலி நிலம் விட்டிருப்பதைக் குறிப்பது ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் கருவூர் பசுபதீச்சுரர் கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. அவை பின் வருவன:
“திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகோனேரிமேல் கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு 15-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி, பேரிகை உள்ளிட்டவும் கொட்டுவித்துக் கொள்ளவும், தாங்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குப் பாதரஷை சேர்த்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக்கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு இவிவோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்லத் தக்கதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து.”
‘’கோனேரி மேல்கொண்டான் கருவூர்த் திருவானிலை ஆளுடையார் கோயில் தேவர்கன்மிகளுக்கு — இந்நாயனார் கோயிலுக்கு நம்பெயரால் இயற்றின வீரசோழன் திருமடவளாகத்தில் குடியிருந்த தவசியர்க்கும், சிவப்பிராமணர்கும், தேவரடியார்க்கும், உவச்சர்க்கும், பலபணி நிமந்தக்காரர்க்கும் சீவனசேஷமாகத் தென்கரை ஆந்தனூரான வீரசோழ நல்லூர் கொடுத்து இவ்வூரால் வந்த இறையும் எலவையும் உகவையும் கொள்ளப்பெறாதோமாக விட்டு மற்றுள்ள குடிமைப்பாடும் எப்பேர்ப்பட்டதும் இந்நாயனார் கோயிலுக்குச் செய்து இவ்வூர் இப்படி சந்திராதித்த வரை அநுபவிப்பார்களாக நம்மோலைக் கொடுத்தோம். இப்படி செம்பிலும் சிலையிலும் வெட்டிக்கொள்க. இவை விலாடத்தரையன் எழுத்து”
இவற்றிலிருந்து தோன்றும் பிற உண்மைகள் ஒருபுறம் நிற்க. கோனேரி மேல்கொண்டான் என்னும் பெயரே இங்கு வேண்டுவது. பெயரினைக் குறித்துத் தென்னிந்தியசாசன புத்தகம் இரண்டாவது தொகுதி, முதற்பகுதி 21-ம் சாசனத்தில் சாசன பரிசோதகர் பின் வருமாறு குறித்திருக்கின்றனர்.:
“இப்பெயர் ஒரு விடுகதை பொன்றே இருந்து வந்திருக்கிறது. பலர் பலவிதமாக இதனை எழுதியுள்ளார்கள். கோனேரின்மை கொண்டான் என்பதற்கு அரசர்க்குள் ஒப்பிரல்லாதவன் என்று பொருள்கொள்ளலாம். கோனேரி எனப் பின்னர் மருவியிருக்கிற தாகத் தெரிகிறது, வீரசோழனும், குலோத்துங்க சோழதேவனும் கோனேரிமேல்கொண்டான் எனவும், கோனேரிமேங்கொண்டான் எனவும் பட்டம் பூண்டிருக்கின்றனர். ஒரு நாணயத்தில் கோனேரி ராயன் என்று எழுதப்பட்டிருக்கிறது. கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டம் சோழவரசர் ராஜராஜ தேவராலும் கொள்ளப் பட்டிருக்கிறது. சுந்தர பாண்டியனுக்கும் இப்பட்டமுண்டு. வீரபாண்டியன், குலசேகர தேவன் இவர்களுக்கும் இப்பட்டத்தையே கொண்டவர்கள்”
இப்பெயர் இங்ஙனம் திரிந்து காணப்படினும், கோனேரி மேல்கொண்டான் என்பதே திருத்தமுள்ளதாக இப்பொழுது கொள்ளற்பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்த்தம் கோனேரி என்னும் பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்தம் கோனேரி என்னும் பெயரதாதலும், கோனேரிராஜபுரம் எனச் சில ஊர்களிருத்தலும், கோனேரி என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருத்தலும் இவ்வுண்மையை விளக்குவனவாகும். குலசேகர ஆழ்வார் காலத்திலேயே கோனேரி என வழங்கியிருப்பது, அவர்,
‘கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே’ என்று பாடுவதால் அறியலாகும். இவ்வாற்றால் கோனேரி, மேல்கொண்டான் என்னும் இரு பெயர்களை இணைந்து ஒரு பட்டமாக வழங்கியிருப்பது புலனாகும். இப்பெயர்களில் யாதேனும் யாருக்காவது இப்பொழுது பட்டப்பெயராக வழங்குகின்றதா என்பதே கண்டறிய வேண்டுவது.
கள்ளருக்குள் வழங்கும் பல்வகையான பட்டப் பெயர்களில் மேல் கொண்டார் என்பதும் ஒன்று. இப்பட்ட முடையார் செங்கிப்பட்டி முதலிய இடங்களில் இருக்கின்றனர். இன்னோர் பரம்பரையாக மிக்க மேன்மை யுடையராய் இருந்து வந்திருக்கின்றனர். மதுக்கூர்ச்சமீன்றாரின் மாப்பிள்ளையும் கூனம் பட்டியின் அதிபருமாகிய திரூவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்களை இதற்குச் சான்றாகக் குறிப்பிடுதல் பொருந்தும். கோனேரி என்னும் பெயரும் கள்ளர்களில் பலர் தரித்து வந்திருக்கின்றனர் இவகைளிலிருந்து. சோழர் பலர்க்கு வழங்கிய மேல்கொண்டான் என்னும் பெயர் அவர் வழியினர்க்குப் பட்டமாக இருந்துவருகிறதென்றும், அவர்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து தங்கள் நாடாட்சியை இழந்து பிற்காலத்திலே சோழர் குடியிற் றேன்றினோ ரென்னும் உண்மை மறக்கப்பட்டிருக்கிறதென்றும் துணியலாகும்.
கள்ளருக்குள் வழங்கும் பட்டங்களில் சோழங்கர் அல்லது சோழங்க தேவர் என்பதும் ஒன்று, இப்பெயரின் வரலாற்றை ஆராயும் பொழுது சோழ சம்பந்தம் பெறப்படுகிறது. சோழ மன்னர்கள் ஓரொருகால் தாம் வென்று கைப்பற்றிய நாடுகளில் தம் கிளைஞரைப் பிரதிநிதிகளாக நியமித்து, அவர்கட்கு வெவ்வேறு பட்டங்கள் கொடுத்திருக்கின்றனர் எனத் தெரிகிறது. சோழ பாண்டியன், சோழ கேரளன், சோழபல்லவன் முதலியன அங்ஙனம் உண்டாய பட்டங்களாகும். தென்தனிந்திய சாசன புத்தகம் மூன்றாவது தொகுதி, முதற் பகுதி 59-ம் சாசனத்தில் வந்துள்ள பட்டங்களில் ‘சோழங்கன்’ என்பதும் ஒன்று, ‘தன்றிருத்தம்பியர் தம்முள்–மதுராந்தகனைச் சோழகங்கனென்றும், மணிமுடிசூட்டி’ எனக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து சோழமன்னன் ஒருவன் தம்பி சோழகங்கன் சோழங்கன் மருவுவது மிக எளிதே. இப்பட்டமுடைய கள்ளர் குல மக்கள் துண்டுராயன்பாடி, அந்தலை முதலிய இடங்களில் இருக்கின்றனர். இவரெல்லாம் தொன்றுதொட்டுப் பெருமை வாய்ந்துள்ள குடும்பத்தினர்களாவர். இன்னோர் கோட்டை கட்டியும் ஆட்சி புரிந்திருக்கின்றனர். அது பின் கூறப்படும் சாசனங்களில் ‘சோழகோன்’ என ஒரு பட்டம் வந்துள்ளது. இது சோழகன் எனத்திரிந்து பன்மையில் சோழகர் என்றாகி இவ்வகுப்பினர்க்கு வழங்குகிறது.
கள்ளர்களில் நாட்டாள்வார் அல்லது நாடாள்வார் என்னும் பட்டந்தரித்தோர் பல இடங்களில் பெருந்தொகையினராக இருக்கின்றனர். கோனாடு, கானாடுகளின் பிரிவுகளை ‘அரையர் ‘ ‘நாடாள்வார்’ என்னும் பட்டமுடையார் ஆட்சிபுரிந்த செய்தி கல்வெட்டுகளில் வெளியாவது முன்பே காட்டப்பட்டது. நாடாள்வார் என்னும் இப்பெயர் முதல் குலோத்ததுங்கன் மகனாகிய விக்கிரம சோழனுக்கு வழங்கியுள்ளது. குருபரம்பரைப் பிரபந்தம் என்னும் தமிழ்ச் செய்யுள் நூலில், இராமாநுசர் சரிதையில்,
‘சீராரு மரங்கத்துச் சிலபகல்கண் மன்னவந்நாட்
பாராளு மன்னவன் பாகவத ரிடத்திலென்றும்
ஆராத காதலனாம் அகளங்க நாடாள்வான்
ஏராரும் வைகுந்த நாடாள வேகினான் (794)
என்று கூறப்படுதல் காண்க. (செந்தமிழ் தொகுதி 3, பாக்கம் 347-351)
விக்கிரமனுக்குப் பின்னர் ஸ்ரீரங்கத்தில் சிற்றரசர்களாயிருந்தோர்க்கும் இப்பெயர் வழங்கிய செய்தி கல்வெட்டக்களால் வெளியாகின்றது. அது பின்பு காட்டப்படும். இவைகளிலிருந்து முடியுடை வேந்தராகிய சோழர்க்கு வழங்கிய நாடாள்வார் என்னும் பெயர் அவ்வழியினர்ககும் ஆட்சி சுருங்கிய பிற்காலத்தும் வழங்கி வந்திருப்பது புலனாம். இவ்வாறே மற்றும் பல பட்டங்கள் சோழர்க் குரியன கள்ளரிடத்திற் காணப்படுகின்றன
அரசு உருவாக்கத்தில் தன் நாட்டு எல்லையை வரையறுக்கவும் விரிவுபடுத்தவும், விரிவுற்றதை பாதுகாக்கவும் போர்கள் எழுந்தன. போரில் பங்கேற்பதும், மார்பில் புண்பட்டு மடிவதும் மாட்சிமைக்குரிய வாழ்வாக மக்கள் கருதினர். இக் காலத்தை வீரநிலைக்காலம் என்பர். இத்தகு வீரநிலைக் கால வாழ்வில் பங்கேற்றுத் தன்னலம் பாராது தாய்மண் காத்த மறவர்களுக்கு மன்னர்கள் வழங்கிய வீரநிலைப் பட்டங்கள் ஏராளம்.
கண்டராதித்தசோழன், அரிஞ்சயசோழன், சுந்தரசோழன், உத்தமசோழன்,இராசராசசோழன், இராசேந்திரசோழன்,இரண்டாம் இராசேந்திரசோழன், வீரராசேந்திரசோழன், அதிராசேந்திரசோழன், குலோத்துங்க சோழன் ஆகியோர் தேவர் என்னும் கள்ளர் பட்டங்களை பூண்டனர்.
முதலாம் இராசராசசோழன் இராசகண்டியன், உய்யக்கொண்டான், கேரளாந்தகன், சிங்களாந்தகன் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.
முதலாம் இராசேந்திரசோழன் சீனத்தரையன், சேனாதி, சேனாதிபதி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.
இராசாதிராசசோழன் செயங்கொண்டான், சயங்கொண்டான், சேங்கொண்டான், போரிற் கொளுத்தி, போரைக்கொளுத்தி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.
குலோத்துங்கசோழன் ஈழத்தரையன், ஈழங்கொண்டான், கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டான், முடிகொண்டான் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.
இரண்டாம் இராசேந்திரசோழன் உத்த்ங்கொண்டார், உத்தமுண்டார் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.
இரண்டாம் இராசேந்திரசோழனின் மகன் சோழகன்ன குச்சிராயன் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டான்.
மதுராந்தக சோழன் சோழங்கர் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டான்.
மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ கேரள தேவன், சோழபாண்டியன், கோனேரி மேற்கொண்டான் என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டிருந்தான்
விக்கிரம சோழன் கோனேரி மேற்கொண்டான் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டிருந்தான்
இராசமகேந்திர சோழன் கொல்லத்தரையன் என்னும் கள்ளர் பட்டத்தை கொண்டிருந்தான்
முதலாம் இராசேந்திரன் தெற்காசிய நாடுகளை கைப்பற்றிய போது நிகழுற்ற போரில் மண்ணைக் கடக்கத்தை வென்று கடும் போர் புரிந்தவர்கட்கு மண்ணையார் என்ற பட்டத்தையும், இலங்கையை வெல்ல போர் புரிந்தவர்கட்கு முடிகொண்டார், ஈழம்கொண்டார் என்றும், மலேயாவின் மேற்கரையில் உள்ள கடாரத்தை வென்றோருக்கு கடாரம்கொண்டார், கடாரம்தாங்கியார், கடாரத்தலைவர், கடாரத்தரையர் என்றும், ஸ்ரீவிசயம் என்ற சுமத்திராவை வென்றதற்காக விசயதேவர், விசயராயர் என்றும், நிக்கோபார் என்ற மாணக்கவாரம் தீவை வென்றதற்காக மாணக்கவாரர் என்றும் சுமத்திரா தீவின் பன்னையூரை வென்றதனால் பன்னையார் என்றும், வணிகத்தின் பொருட்டு சீனநாட்டிற்கு அனுப்பியோருக்கு சீனத்தரையரென்றும் பட்டங்களும் வழங்கப்பட்டது. இலங்கையில் சோழ அரசின் சார்பாக கண்டி மாநகர் என்னும் தலைநகர் அமைத்து அரசாண்ட கண்டியூர் அரசனுக்கு ராசகண்டியன் என்னும் பட்டமும் வழங்கி, அதே ராசகண்டியன் என்ற பட்டத்தை தனது சிறப்புப் பட்டமாக இராசராச சோழன் தனுக்கு சூட்டிக் கொண்டது பெரும்வியப்புக்குறியது
கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.
அரையர் என்றால் அரசன்,மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன்
(பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன் ), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை.. இவை ஓன்று இருந்தாலே அநியாயத்துக்கு தம்பட்டம் அடிக்கும் சாதிகள் இருக்கும் தமிழகத்தில் இணையில்லா தஞ்சை கள்ளர் குலத்தின் பட்டங்களை பாருங்கள் 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்
1பாண்டியராயர்,
2 பல்லவதரையர்,
3 பல்லவராயர்
4 சேதிராயர் (சோழனின் கிளைக்குடி)
5 பழுவேட்டரையர்(சோழன் பெண் எடுத்த சேரன் குலம்)
6 தஞ்சைராயர்
7 பழையாற்றரையர்(பறையாறு சோழர்களின் தலைநகரம் )
8 கொடும்பாளுர்ராயர் (மாமன்னன் ராஜராஜன் மனைவியின் குலம்,ராஜேந்திர சோழன் தாய்
9 வல்லத்தரையர்
10 முத்தரையர்
11 கொல்லத்தரையர்
12 கலிங்கராயர்
13 கொங்குராயர்
14 செம்பியதரையர்
15 கேரளராயர்
16 ஈழ்த்தரையர்
17 கச்சியராயர்
18 காடவராயர்
19 கடாரத்தரையர்
20 கச்சைராயர்
21 கோழிராயர் (கூழி என்றால் கரிகாலன் தலைநகர் உறையூரை குறிக்கும்)
22 கலிங்கராயதேவர்
23 களப்பாளராயர்
24 குறும்பராயர்
25 சோழகன்னகுச்சிராயர்
26 காலிங்கராயர்
27 செம்பியமுத்தரையர்
28 சம்புராயர்
29 சோழரையர்
30 சேதுராயர்
31 செம்பியரையர்
32 சோழதரையர்
33 சீனத்தரயைர்
34 சோழதிரையர்
35 சிங்களராயர்
36 தஞ்சிராயர்
37 செழியதரையர்
38 சிந்துராபாண்டிராயர்யர்
39 தேவராயர்
40 தமிழுதரையர்
41 தெலிங்கராயர்
42 தென்னதிரையர்
43 தென்னரையர்
44 தென்னறையர்
45 தென்னவராயர்
46 பாண்டுராயர்
47 மூவரையர்
48 மூவேந்த்ரையர்
49 மானமுத்தரையர்
50 மீனவராயர்மலைராயர்
51 மலையராயர்
52 மழவராயர்
53 முனைதரையர்
54 மலையராயர்
55 மலையரையர்
56 வங்கத்தரையர்
57 வங்கராயர்
58 வடுகராயர்
59 நாகராயர்
60 வாணாதிராயர்
61 வல்லவராயர்
62 வில்லவதரையனார்
63 வில்லவராயர்
64 வெங்கிராயர்
65 வாணரையர்
66 வாண்டராயர்
67 வண்டைராயர்
68 வேங்கைராயர்
69 வெங்கிராயர்,
70 அங்கராயர்.
71 ஆக்காட்டரையர்.
72 அன்கராயர்.
73 ஆற்காட்டரையர்.
74 அனகராயர்
75 அங்கதராயர்
76 ஆச்சராயர்
77 ஆச்சாண்டார்
78 உழுவாண்டார்.
79 அச்சிராயர்
80 அச்சுதராயர்
81 உமத்தரையர்
82 அத்திராயர்
83 அத்தியரையர்
84 ஆலத்தரையர்.
85 அமராண்டார்
86 அம்பராண்டார்
87 ஆற்க்காடுராயர்
88 அம்மையத்தரையர்
89 இராதராயர்
90 இராமலிங்கராயதேவர்
91 இராலிங்கராயதேவர்
92 ஓந்திரையர்
93 ஓந்தரையர்
94 ஓமாந்தரையர்
95 ஓமாமரையர்
96 இருப்பரையர்
97 அண்ணவசல்ராயர
98 கொங்கரையர்
99 கொங்ககரையர்
100 கொங்குதிரையர்
101 கொடிராயர்
102 காசிராயர்
103 கொடிக்கிராயர்,
104 கொடிக்கவிராயர்
105 கஞ்சராயர்
106 கொடும்பராயர்,
107 கொடும்பைராயர்
108 கடம்பராயர்
109 கொடும்புராயர்
110 கடம்பைராயர்
111 கொடும்மளுர்ராயர்
112 கொடும்பிராயர்,
113 கொடும்பையரையர்
114 கார்யோகராயர்
115 கட்டராயர்
116 கொழுந்தராயர்
117 கொற்றப்பராயர்
118 கொத்தப்பராயர்
119 கொற்றரையர்
120 கண்டராயர்
121 கண்டவராயர்
122 கோட்டரையர்
123 கோட்டையரையர்
124 கண்ணரையர்
125 கரம்பராயர்
126 கீழரையர்
127 கைலாயராயர்
128 கையராயர்
129 கரும்பராயர்
130 குச்சராயர்
131 குச்சிராயர்
132 குச்சியராயர்
133 குமதராயர்
134 கலிராயர்
135 குருகுலராயர்
136 குழந்தைராயர்
137 கொழந்தைராயர்
138 கொழந்தராயர்
139 கொழுந்தைராயர்,
140 களப்பாள்ராயர்,
141 கனகராயர்
142 கூத்தப்பராயர்
143 கன்னகொண்டார்
144 கொத்தப்பராயர்
145 கன்னக்குச்சிராயர்
146 கன்னராயர்
147 கன்னிராயர்
148 கேளராயர்
149 சக்கரையர்
150 சாக்கரையர்
151 சக்கராயர்
152 செம்பரையர்
153 சக்காராயர்
154 சங்கரராயர்
155 சோழுதிரையர்
156 சோதிரையர்
157 செல்லரையர்
158 செனவராயர்
159 சன்னவராயர்
160 சனகராயர்
161 சன்னராயர்
162 சென்னிராயர்
163 சன்னவராயர்
164 சாணரையர்
165 சாத்தரையர்
166 சாமுத்தரையர்
167 சாமுத்திரையர்,
168 சேண்ராயர்
169 செனவராயர்
170 சிங்கராயர்
171 சேந்தராயர்
172 சிந்துராயர்
173 சிறுநாட்டுராயர்
174 சிறுராயர்
175 சேறைராயர்
176 சேற்றூரரையர்
177 சுக்கிராயர்
178 சுக்கிரபராயர்
179 சுக்கிரியராயர்
180 சுந்தரராயர்
181 சொரப்பரையர்
182 சோதிரையர்
183 தேசுராயர்
184 தனஞ்சராயர்
185 திருக்காட்டுராயர்
186 தம்பிராயர்
187 தனராயர்
188 தோப்பைராயர்
189 தலைசைராயர்,
190 துண்டராயர்
191 தனசைராயர்
192 துண்டுராயர்
193 துண்டீரராயர்
194 தனிராயர் ,
195 நண்டல்ராயர்
196 நந்திராயர்
197 நந்தியராயர்
198 நாட்டரையர்
199 நாட்டறையர்
200 நரசிங்கராயர்
201 நெடுந்தரையர்
202 நன்னிராயர்
203 நெல்லிராயர்
204 பகட்டுராயர்
205 பூழிராயர்
206 பூவனையரையர்
207 பங்களராயர்
208 பாச்சிராயர்
209 பேரரையர்,
210 பேதரையர்
211 பாண்டராயர்
212 பஞ்சராயர்
213 பஞ்சந்தரையர்
214 பஞ்சநதரையர்
215 பாப்பரையர்
216 பொய்ந்தராயர்
217 போய்ந்தராயர்
218 போய்ந்தரராயர்
219 பட்டுராயர்
220 பொன்னவராயர்
221 பாலைராயர்
222 பால்ராயர்
223 பிச்சராயர்
224 பதுங்கராயர்
225 பதுங்கரார்
226 பிரமராயர்
227 பிலியராயர்
228 பயிற்றுராயர்
229 பரங்கிலிராயர்
230 பரங்கிராயர்
231 பருதிராயர்
232 புள்ளராயர்
233 பிள்ளைராயர்
234 போதரையர்
235 பூராயர்
236 பனைராயர்
237 மாதராயர்
238 மாதைராயர்
239 மாதுராயர்
240 மாத்துராயர்
241 மங்கலராயர்
242 மாதவராயர்
243 மாந்தராயர்
244 மாந்தையரையர்,
245 மாந்தரையர்
246 மட்டைராயர்
247 மேனாட்டரையர்
248 மணிராயர்
249 மண்டலராயர்
250 மண்டராயர்
251 மாவாளியார்
252 மண்ணிராயர்
253 மணிக்கராயர்
254 மாளுவராயர்
255 மானத்தரையர்
256 மருங்கராயர்
257 பருங்கைராயர்
258 கைராயர்
259 விக்கிரமத்தரையர்
260 விசயராயர்
261 வங்கனராயர்
262 விசையராயர்
263 வங்காரமுத்தரையர்
264 விசராயர்
265 விசுவராயர்
266 வங்கானமுத்திரையர்
267 விசுவரார்
268 வஞ்சிராயர்
269 வாஞ்சிராயர்
270 விஞ்சிராயர்
271 விஞ்சைராயர்
272 வடுராயர்
273 விசலராயர்
274 வடுராயர்,
275 விசுவராயர்
276 வல்லவரையர்
277 விண்டுராயர்
278 வீண்டுராயர்
279 விருதுளார்
280 விலாடத்தரையர்
281 வில்லவதரையர்
282 வில்வராயர்
283 விழுப்பாதராயர்
284 விற்பன்னராயர்
285 வீணதரையர்,
286 வெட்டுவராயர்
287 வணதரையர்
288 வாணதிரையர்
289 வாணாதரையர்
290 வீணாதரையர்
291 வீனைதிரையர்
292 வெங்கிராயர்
293 வாலிராயர்
294 வேம்பராயர்
295 வாளுவராயர்
296 வேள்ராயர்
297 வாள்ராயர்
298 வைகராயர்
299 வையராயர்
300 வைராயர்
301 வயிராயர்
302 பிள்ளைராயர்
303 கழுத்திரையர்
304 செட்டரையர்
305 தழிஞ்சிராயர்
கள்ளர்கள்அரசர்களாயிருந்த காலத்தில் பல விடங்களில் அரண் (கோட்டை)கள் கட்டியிருந்தனர் என்பது அறியற்பாலது. இந்த ஊர்களில் எல்லாம் கள்ளர் இன மக்களே பரம்பரை பரம்பரையாக அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.
சோழ நாட்டில் கோட்டை என முடியும் ஊர்களில் சில.
அத்திக்கோட்டை
அருப்புக்கோட்டை
அருமலைக்கோட்டை
ஆத்திக்கோட்டை
ஆவணக்கோட்டை
ஆதனக்கோட்டை
ஆய்க்கோட்டை
இடைங்கான்கோட்டை
ஈச்சங்கோட்டை
உள்ளிக்கோட்டை
உச்சக்கோட்டை
எயிலுவான் கோட்டை
ஒளிக்கோட்டை
பட்டுக்கோட்டை
பரமக்கோட்டை
பரக்கலகோட்டை
பரவாக்கோட்டை
பஞ்சநதிக்கோட்டை
பருதிக்கோட்டை
பத்தாளன்கோட்டை
பாச்சிற்கோட்டை
பனையக்கோட்டை
பரங்கிலிகோட்டை
பழங்கொண்டான் கோட்டை
பாலபத்திரன் கோட்டை
பாத்தாளன் கோட்டை
பாதிரங்கோட்டை
பாளைங்கோட்டை
பராக்கோட்டை
பிங்கலக்கோட்டை
புத்திகழிச்சான்கோட்டை
புதுக்கோட்டை
பெரண்டார்கோட்டை
பெரியக்கோட்டை
பெரியபருத்திக்கோட்டை
பொய்கையாண்டார் கோட்டை
பொன்னவராயன்கோட்டை
கள்ளிக்கோட்டை
கண்டர் கோட்டை
கந்தர்வக்கோட்டை
கல்லாக்கோட்டை
கக்கரக்கோட்டை
கரம்பயன்கோட்டை
கருக்காக்கோட்டை
கரும்பூரான்கோட்டை
கரைமீண்டார் கோட்டை
காரைக்கோட்டை
காரிகோட்டை
காசாங் கோட்டை
கிள்ளிக் கோட்டை
கிள்ளுக்கோட்டை
கீழைக்கோட்டை
கீழாநிலைக்கோட்டை
குன்னங் கோட்டை
கூராட்சிகோட்டை
நடுவாக்கோட்டை
நடுவிக்கோட்டை
நள்ளிக்கோட்டை
நம்பன்கோட்டை
நாஞ்சிக்கோட்டை
நாயக்கர் கோட்டை
நாயக்கான்கோட்டை
நாட்டரையர் கோட்டை
நெடுவாக்கோட்டை
நெல்லிக்கோட்டை
மல்லாக்கோட்டை
மலைக்கோட்டை
மண்டலகோட்டை
மயிலாடு கோட்டை
மயிலாளிகோட்டை (மயில்கோட்டை)
மருதக்கோட்டை
மகிழங்கோட்டை
மழவன்கோட்டை (மகழன்கோட்டை)
மண்டலகோட்டை
மானரராயன் புதுக்கோட்டை
மாங்கோட்டை
மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை)
மூவரையர் கோட்டை
மேலைக்கோட்டை
தம்பிக்கோட்டை
தளிக்கோட்டை
தர்மக்கோட்டை
தாமரங்கோட்டை
தாமிரன்கோட்டை
திருமங்கலக்கோட்டை
திருமலைக்கோட்டை
திருமக்கோட்டை
தும்பதிக்கோட்டை
துரையண்டார்க் கோட்டை
துறையாண்டார் கோட்டை
துரையுண்டார்கோட்டை
தெற்குக் கோட்டை
சத்துருசங்காரக் கோட்டை
சாக்கோட்டை
சாய்க்கோட்டை
சின்னபருத்திக்கோட்டை
சிறுகோட்டை
சுந்தரகோட்டை
சூரக்கோட்டை
செங்கோட்டை
செஞ்சிக்கோட்டை
சோணாகோட்டை
சேண்டாகோட்டை
வரவுக்கோட்டை
வாட்டாட்சிகோட்டை (வாவாசிகோட்டை)
வத்தானக்கோட்டை
வாகோட்டை
வாளமரங் கோட்டை
வாழவந்தான் கோட்டை
வீரயன்கோட்டை (வீரியன்கோட்டை)
வெண்டாக்கோட்டை
வெட்டுவாகோட்டை
பல ஊர்ப்பெயர்கள் கள்ளர் இனத்தின் பட்டங்களை கொண்டுதிருத்தலும் அவ்விடங்களில் இவர்கள் முதன்மையுற்றிருந்தன ரென்பதற்குச் சிறந்த சான்றாகும். அவற்றுள் சில
1.காங்கெயன்பட்டி
2.சோழகன்பட்டி
3.ராயமுண்டான்பட்டி
4.வாலியன்பட்டி
5.தொண்டைமான்பட்டி
6.கண்டியன்பட்டி
7.சாதகன்பட்டி
8.துண்டுராயன்பாடி
9.ஆரமுண்டான்பட்டி
10.ஓசையன்பட்டி
11.வில்லவராயன்பட்டி
12.செம்பியன்களர்
13.உலகங்காத்தான்பட்டி
14.மலைராயன்பட்டி
15.திராணிபட்டி
16.கலியராயன்பட்டி
17.சாணூரன்பட்டி
18.கச்சியராயன்மங்கலம் (கச்சமங்கலம்)
19.ஏத்தொண்டான்பட்டி
20.பத்தாளன்கோட்டை
21.பாப்பரையன்பட்டி
22.மாதைராயன்பட்டி
23.சேதிராயன் குடிக்காடு
24.நல்ல வன்னியவன் குடிக்காடு
25.வல்லாண்டான்பட்டி
26.வாண்டையானிருப்பு
27.தென்கொண்டானிருப்பு
28.நரங்கியன்பட்டி
29.பாலாண்டான்பட்டி
30.கண்டர்கோட்டை
31.வன்னியன் பட்டி
32.பாண்டுராயன்பட்டி
33.சுரக்குடிப்பட்டி (சுரக்குடியார் பட்டி)
34.காடவராயன்பட்டி
35.சாளுவன்பேட்டை
36.நாய்க்கர்பாளைம் (சாவடி நாயக்கர் கிராமம்)
37.செம்பின் மணக்குடி
இனி, கள்ளர் சிற்றரசர்களாயிருந்த காலத்தில் பல விடங்களில் அரண் (கோட்டை)கள் கட்டியிருந்தனர் என்பது அறியற்பாலது.
1.துண்டுராயன்பட்டி
3.காங்கெயன்பட்டி
4.ஆற்காடு
5.சுரக்குடிப்பட்டி
6.சோழகன்பட்டி
7.உறத்தூர்
8.விண்ணமங்கலம்
9.திருக்காட்டுப்பள்ளி
10.பூண்டிபானமங்கலம்
11.அன்பில்
12.மாங்குடி
என்னும் இடங்களிலெல்லாம் இவர்களுடைய கோட்டைகள் இருந்தன. இவற்றுட் சில ஊர்களில் கோட்டை அழிந்தவிடத்தில் திடர்களும், நிலங்களும் கோட்டைமேடு, பீரங்கிமேடு, என்னும் பெயர்களால் வழங்குகின்றன.
கள்ளர் குல திருமண கோட்பாடுகள்
சூரிய மரபினர் முற்காலத்தில் இரத்தினங்க்களினால் மணவரை அமைத்து வாழை, கமுகு, கொடி, மகரதோரணம், பூரணகும்பம், முதலியவற்றால் அலங்காரம் செய்து ஆயிரப்பெருந்த்கழி என்னுந் திருவிளக்கேற்றி ஒரு புறம் யானையும், ஒரு புறம் குதிரையும், ஒரு புறம் மயிலும், ஒரு புறம் கும்பமும் அமைத்து பூசனைசெய்து முரசு, மத்தளம், உடுக்கை போன்ற தோற்கருவிகள், நாதசுரம், புல்லாங்குழல், சங்கு முதலிய துளைக்கருவிகள், தாளம் முதலிய கஞ்சக்கருவிகள், வீணை முதலிய நரம்புக்கருவிகள் வாத்தியங்கள் முழங்க மணமக்களை மங்கலநீராட்டி பட்டு, பீதாம்பரம், கவசம், காப்பு, மோதிரம், பதக்கம், நெற்றிச்சுட்டி, முத்துமாலை, ஒட்டியாணம், பூமாலைகள் அணிவித்து சந்தனம், புனுகு, சவாது முதலிய வாசனை திர்வியங்கள் தெளித்து மணவரையில் அமர்த்தி பொற்கம்பியில் தாலியைக்கோத்து மணமகன் மணமகள் கழுத்தில் தரிப்பித்து இருவரையும் சிவனை வலம்வந்து வணங்கி சாண்றோர் வாழ்த்தினைப் பெருவர். ஆரியரின் வருகைக்கு பின் இவை எல்லாம் மாறிவிட்டன.
கள்ளர் குல மரண சடங்குகள்
கள்ளர்கள் இறந்த ஆண்பாலரைப் பச்சைத் தேரிலும், பெண்பாலரைப் பச்சை பல்லக்கிலும், பறை, கொம்பு, எக்காளம், சங்கு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க சுடுகாடு சென்று விறகு சதையில் தீயிட வேண்டும்.
பெருங்கற்கால ஈமச் சின்னங்களில் இறந்தோரின் எலும்புக் கூடுகளுக்கு அருகில் எலும்பு மற்றும் இரும்பினால் செய்யப் பெற்ற அம்பு முனைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.அவற்றோடு ஒரு சில ஈமச் சின்னங்களில் இரும்பினாலான குறுவாள்கள், பெருங்கத்திகள் காணப்படுகின்றன.("கொடுமணல் அகழாய்வு - ஓர் அறிமுகம்" - கா.ராஜன், 1994, பக்கம் 21).
எதற்காக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன?போர் செய்யத்தானே? குறு வாள், கத்தி போன்றவற்றைப் பயன்படுத்தி போர் செய்யத் தெரியும்போது தமக்கென்று ஒரு தலைவனை அம்மக்கள் தேர்ந்தெடுக்கத் தெரியாதவர்களா?
2. கள்ளர்குல அரசபரம்பரை
3. கள்ளர் படைத்த ராஜியங்கள்
4. முக்குல மனனர்கள்
5. மனர்களின் மணவுரவுகள்
மன்னர்களின் மண உறவுகள்
1. உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னி கி.பி 2ம் நூற்றாண்டில் அரசுபுரிந்தவன்.கரிகால் சோழனின் தந்தையுமாவான். இவன் மனைவி கள்ளரின அழுந்தூர் வேளிர் குல இளவரசியாவாள்.
2. கரிகால் சோழனின் மனைவி கள்ளரின திருநாங்கூர் வேளிர் குல இளவரசியாவாள்.
3. கரிகால் சோழனின் மகள் நற்சேனையை மணந்தவன் சேரன் இமயவரம்பன். இவர்களின் மகன்கள் மா மன்னன் சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகார இளங்கோ அடிகளும் ஆவர். வீரமும் புலமையும் ஒரே வயிற்றில் தோன்றிய நல் முத்துக்கள்
.
4. விசயாலய சோழன் (கி.பி. 846 - 881) ஆவூருக்கு அருகில் உள்ள ஊத்துக்காடு என்னும் ஊரில் கள்ளரினத்தின் மழவராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் மனைவியை பெற்றிருந்தான். (கள்ளரின மன்னன் இராசராச சோழன். புலமை வேங்கடாசலம் பக்கம் 6)
5. விசயாலய சோழனின் மகன் முதல் ஆதித்த சோழன் (கி.பி. 871 - 907) கள்ளரினத்தின் வல்லவரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் இளங்கோப்பிச்சி என்பவளையும், மற்றும் காடுபட்டிகள் வழி வந்த காடுவெட்டியார் மகள் திரிபுவன மாதேவியையும் மணந்திருந்தான் (E.P.Ind.Vol.XXVI, பக்கம் 233, 234)
6. முதல் ஆதித்த சோழன் மகன் கன்னரதேவன் (கி.பி கள்ளரினத்தின் கொடும்புரார் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பூதிமாதேவ அடிகள் என்பவளை மணந்திருந்தான் (S.I. Vol.VIII.Np 665)
7. முதல் பராந்தக சோழன் (கி.பி. 907 - 953) கள்ளரினத்தின் பழுவேட்டரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் மனைவியை பெற்றிருந்தான். (அன்பில் செப்பேடு E.P. Ind. Vol XV. No 5)
8. கண்டராதித்த சோழன் (கி.பி. 950 - 957) கள்ளரினத்தின் மழவராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் செம்பியன் மாதேவி என்பவரை மணந்திருந்தான் (S.I.I. Vol. VIII. No.141)
9. அரிஞ்சய சோழன் (கி.பி. 956 - 957) கள்ளரினத்தின் வைதும்பராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த கல்யாணி என்பவளையும் கொடும்புரார் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த பூதி ஆதித்த பிடாரி என்பவளையும் மணந்திருந்தான் (The Cholas இரண்டாம் பதிப்பு பக்கம் 152)
10. இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் (கி.பி.957 -970) கள்ளரினத்தின் சேதுராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த வானவன் மாதேவி என்பவளை மணந்திருந்தான் (S.I.I. Vol.VII.No 863 மற்றும் பெரியபுராண ஆராய்ச்சி டாக்டர்.மா. இராசமாணிக்கனார் பக்கம் 74.)
11. உத்தம சோழன் (கி.பி. 957 - 970) கள்ளரினத்தின் மழபாடியார் (மழ வாடியார்) என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த மழபாடித் தென்னவன் மாதேவி என்பவளையும் கள்ளரினத்தின் இருங்களார் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த வானவன் மாதேவி என்பவளையும், கள்ளரினத்தின் விழுப்பரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த கிழானடிகள் என்பவளையும் மணந்திருந்தான் (Ins. 494 of1925, Ins 298 of 1906)
12. மாமன்னன் முதலாம் இராசராச சோழன் (985 - 1014) கள்ளரினத்தின் பழுவேட்டரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த பஞ்சவன் மாதேவி என்பவளையும் மற்றும் கொடும்பாளூர் வேளிர்குல இளவரசி வானதி என்னும் வானமாதேவியையும் மணந்திருந்தான் (பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி 1 பக்கம் 141)
13. இராசேந்திரசோழன் (கி.பி. 1012-1044) கள்ளரினத்தின் பழுவேட்டரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த பஞ்சவன்மாதேவி என்பவளை மணந்திருந்தான்
14. முதல் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 - 1120) கள்ளரினத்தின் காடவராயர்
என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த காடவன் மாதேவி என்பவளை மணந்திருந்தான்
(பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 232 -233)
15. இரண்டாம் இராசராச சோழன் (கி.பி. 1146 - 1163) கள்ளரினத்தின் சேதிராயர்
என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த அவனி முழுதுடையாள் (உலகுடை முக்கோக் கிழானடிகள்) என்பவளை மணந்திருந்தான்
(பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 292)
16. மூன்றாம் இராசராச சோழன் (கி.பி. 1216 - 1256) கள்ளரினத்தின் வல்லவரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த புவனமுழுதுடையாள் என்பவளை மணந்திருந்தான்.
(பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 357)
17. மூன்றாம் இராசேந்திரசோழன் (கி.பி.1246 -1279) சோழகுல மாதேவி
6. கள்ளர் இன பேராசி செம்பியன் மாதேவியார்
10ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் அரசகுலத்திலே தோன்றியவர் கண்டராதித்தர். அவருடைய தந்தை, பராந்தக சோழர். கண்டராதித்தர் மிகச் சிறந்த சிவபக்தராக விளக்கினார். நற்குணங்கள் மிக்க மழபாடி நாட்டின் (மழவராயர் குடும்பத்தில் பிறந்த )இளவரசியை மணந்தார். கண்டராதித்தரின் மனைவியாக பட்டத்து மகிஷியாக இருந்தவளே செம்பியன் மாதேவி.
கண்டராதித்தர், நடராஜப் பெருமான் மீது பத்து பதிகங்கள் பாடினார். அவை ஒன்பதாம் திருமுறையில் உள்ளன. சிவபக்தியில் தோய்ந்த இத்தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிதுகாலமே ஆனபோது கண்டராதித்தர் சிவபதம் எய்தினார். செம்பியன் மாதேவி, குழந்தையை சிவபக்தி மிக்கவனாக வளர்த்து வந்தார்.
கணவர் கண்டராதித்தருக்குப் பிறகு சோழ அரியணையில் அமர அவருடைய பிள்ளைக்கு உரிமை இருந்தாலும் மிகச் சிறிய பாலகனானதால், தாய் அனைவருக்கும் வழிகாட்டினாள்.
சோழ நாட்டின் அரியணையை, கண்டராதித்தரின் சகோதரர் அரிஞ்சய சோழர் அலங்கரிக்க வேண்டும் என்று செம்பியன் மாதேவி வேண்டிக் கொண்டாள். கண்டராதித்தரின் புதல்வன் உத்தமசோழன் இளம் பாலகனாக இருப்பதாலும், நாடு அரசனின்றி இயங்காது என்பதாலும் ராஜ மாதாவான செம்பியன் மாதேவியின் வேண்டுகோளை அரிஞ்சயர் ஏற்றார். நாட்டின் அரசரானார். இவ்வாறு செம்பியன் மாதேவியின் வழிகாட்டுதலால் நாட்டின் அரசுரிமைப் பிரச்னை சுமுகமாகத் தீர்ந்தது.
சிவபக்தியில் தோய்ந்த கணவரிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருந்த செம்பியன் மாதேவி, சோழ நாட்டுச் சிவாலயங்களைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டாள். தியாகமும் பக்தியும் அன்பும் மிகுந்த மாதேவியை அரச குடும்பத்தவரும் அந்நாட்டு மக்களும் மிகுந்த மதிப்புடன் போற்றினார்கள். செம்பியன் மாதேவி, தம் கணவர் தமக்கிட்ட சைவப் பணிகளைச் செய்ய விழைந்தார். அவர் விழைந்தவற்றுக்கு ஆகும் செலவை, அரிஞ்சய சோழர் அள்ளி வழங்கினார்.
ஓர் இயக்கமாகவே, சைவப்பணியைச் செய்து வந்த மாதேவி சிவாலயங்களுக்குச் சென்று பார்வையிட்டார். 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் சோழவள நாட்டில் பல கோவில்கள் கட்டப்பட்டன. ஆனால் அவையெல்லாம் மண்ணாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டிருந்தன. அதனால் அவை காலப்போக்கினாலும் பருவ மாற்றங்களாலும் சிதிலமடைந்து கிடந்தன.
இவ்வாறு நூற்றுக்கணக்கான கோவில்கள் இருப்பதைப் பார்த்து செம்பியன் மாதேவி கண்ணீர் வடித்தாள். இறைவனின் ஆலயங்களைப் புதுப்பிக்கும் பணி இனி தம் பணி என்று உறுதி செய்து கொண்டார். அதுவே சிவபக்தராம் தம் கணவரின் உள்ளத்துக்கும் உகப்பான பணி என்று எண்ணி மகிழ்ந்தார்.
முதன் முதலில் செம்பியன் மாதேவி சீரமைத்த திருக்கோவில் நல்லம் ஆகும். சிதிலமடைந்த அக்கோவிலுக்கு கருங்கல் திருப்பணி செய்ய விழைந்தார். மலைகளோ குன்றுகளோ இல்லாதது சோழநாடு. ஆகவே கருங்கற்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்கள் வரவழைக்கப்பட்டன. கல் தச்சர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து கோவிலை கருங்கல் திருப்பணியாகச் செய்தார்கள். ராஜமாதா செம்பியன் மாதேவி நாள்தோறும் இறைப்பணி செவ்வனே நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொண்டார்கள்.
நல்லம் கோவில் பணி முடியும் தறுவாயில், கருவறைக்கு வெளிச் சுவரில், கண்டராதித்தர் சிவபூஜை செய்வது போன்று செதுக்கச் செய்தார். அதைக்கண்டு,மாதேவியின் கண்கள், கணவரை நேரிலே காண்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தன. இதுபோன்றே மேலும் பத்து கோவில்களிலும் கணவரின் சிவபூஜைக் காட்சியைச் சித்திரிக்கச் செய்தார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அக்காட்சியை நாம் கண்டு களிக்கலாம்.
சிவத்தொண்டில் ஈடுபட்டு கோவில் பணிகளைச் செய்தது போன்றே, மாதேவி, சோழநாட்டு இளவரசர்கள், இளவரசிகளையும் பக்தியும் நற்குணங்களும் நிரம்பியவர்களாக வளர்த்து வந்தார்.
அரிஞ்சய சோழரின் மைந்தர்களும் மகள் குந்தவியும் மாதேவியிடம் வளர்ந்து நற்குண நற்செயல்களை அறிந்தார்கள். எல்லாருடைய நெஞ்சங்களிலும் இளமை முதலே சிவபக்தியை வளர்த்தார். ஆகையால் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகும் சிவபக்தியுடனே வாழ்ந்து சிவப்பணிகளில் ஈடுபட்டார்கள்.
செம்பியன் மாதேவியிடம் இளம் பருவம் முதலே வளர்ந்த ராஜராஜன், அரியணை ஏறியதும் தஞ்சைத் தரணியில் வானுயர்ந்த கோபுரத்துடன் பெரிய கோவிலைக் கட்டினான். அதுமட்டுமல்ல, நியாயம், தர்மம் ஆகியவற்றை நன்கு உள்ளத்திலே பதிய வைத்தவர் பெரியன்னை செம்பியன் மாதேவியல்லவா?
அரிஞ்சயரின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, ராஜராஜன் அரியணையை ஏற்க முன்வரவில்லை. கண்டராதித்தரின் புதல்வரான உத்தம சோழர்தான் அரியணையில் அமரத் தகுந்தவர் என்று வாதாடினார். இத்தகைய தியாக புத்தியும் நேர்மை குணமும் அவருக்கு ஊட்டியவர் செம்பியன் மாதேவி தானே! தேவியின் பெயரால் கோவில்களில் பல மான்யங்கள் அளிக்கப்பட்டன. பல ஏரிகள் குளங்கள் வெட்டப்பட்டன.
செம்பியன் மாதேவி, சிவபக்தியில் தோய்ந்தவராக இருந்து, தாம் புகுந்த சோழநாட்டில் சைவம் தழைக்கச் செய்தார். அரச பரம்பரையினர் சைவப் பற்று மிகுந்தவராகச் செய்து நாட்டிற்கும் குடும்பத்தாருக்கும் நல்லன செய்து அனைவராலும் போற்றப்பட்ட மூதாட்டியாக விளங்கி, 90ஆவது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.
பெருமை வாய்ந்த சோழ வம்சத்தின் மருமகளான செம்பியன் மாதேவி ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 - 1001) வாழ்ந்து ஆறு சோழ மாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.
1. மாமனாரான முதலாம் பராந்தகச் சோழன்.
2. கணவர் கண்டராதித்த சோழன்
3. கொழுந்தன் அரிஞ்சய சோழன்
4. கொழுந்தனின் மகன் சுந்தரசோழன் (இரண்டாம் பராந்தகச் சோழன்)
5. செம்பியன் மாதேவியார் மகன் உத்தம சோழன்
6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன்
உலக வரலாற்றில் ஒரே குலத்தை சார்ந்த 6 மாமன்னர்களையும் வழி காட்டி அடுத்தடுத்து அரியணை ஏற்றிய பெருமை செம்பியன் மாதேவியாரையே சாரும். செம்பியன் மாதேவி சோழ மண்டலத்தில் செங்கற் கோயிலாக இருந்த பத்து ஆலயங்க்களை கருங்கல் கட்டமைப்பாக (கற்றளி) மாற்றிக் கட்டினார்.அவை
1. திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
2. திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)
3. திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்)
4. திருமணஞ்சேரி
5. தெங்குரங்காடுதுறை (ஆடுதுறை)
6. திருக்கோடிக்காவல்
7. ஆதாங்கூர்
8. குத்தாலம்
9. திருவக்கரை
10. திருச்சேலூர்
புதிதாகவும் ஆகம விதிக்கு உட்பட்டு கற்றளியாக இவர் கட்டிய கோயிலே செம்பியன் மாதேவியில் இருக்கும் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலாகும்.
கி.பி 1019ல் முதலாம் இராஜேந்திரசோழன் செம்பியன் மாதேவியாருக்கு சுமார் ஒன்றரை அடி உயரத்தில் சிலை அமைத்து இக் கோயிலில் தனிச்சந்நிதியும் அமைத்து வழிபாடுகள் குறைவின்றி நடைபெருவதற்க்கு வறுவாய் அதிகம் பெற்றுத்தரும் நில புலன்களை அளித்துள்ளான் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செம்பியன் மாதேவி சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர். இந் நாட்களில் நடைபெரும் விசேட வ்ழிப்பாட்டுக்காக ஏராளமான பொன்னை அரிஞ்சய சோழனின் பட்டத்தரசியான அரிஞ்சிகை பிராட்டியாரும், ராசராச சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியாரும் ஆலயத்துக்கு வழங்கியதாக ஒரு கல்வெட்டும் சொல்கிறது. உத்தமசோழனின் மனைவியர் ஏழு பேரும் தங்கள் மாமியார் செம்பியன் மாதேவிக்கு நடைபெரும் வழிபாடுகளுக்கு ஏராளமான நிலபுலன்களையும் வழங்கியுள்ளனர்.
இன்றளவும் சித்திரை கேட்டை திருநாள் வைபவம் ஆலயத்தில் பிரமாதமாக நடந்து வருகிறது. செம்பியன் மாதேவியில்இருக்கும் அனைத்து வீடுகளில் இருந்தும் மஞ்சள். குங்குமம், வெற்றிலை-பாக்கு, தேங்காய் என சீர்வரிசைப் பொருட்களை எடுத்து வந்து ஆராதனைகள் நடைபெருகின்றன.மழவராயர் குடும்பத்தில் இருந்து எடுத்துவரும் பட்டுப்புடவையை சார்த்தி செம்பியன் மாதேவியாருக்குச் மேள தாளம் முழங்க உற்சவ விக்கிரத்தை அலங்கரித்து வீதியுலாவும் நடத்தி இக் கிராம மக்கள் வழிபடுகின்றனர். ஒரு சரித்திரப் பெண்மனியின் வாழ்க்கையை மறக்கக்கூடாது என்பதற்காக விமரிசையாக விழா நடத்தும் இந்தக் கிராமத்தினரை உளமார வாழ்த்துவோம்.
7. புதுக்கோட்டை
புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் தொன்மையானதொரு பரம்பரையினர் ஆவார்கள் எனினும் தொன்றுதொட்டு வந்த அரச மரபினர் அல்லர். தமது வீரத்தாலும் தீரத்தாலும் நாடாள்வோராக உயர்ந்தவர்கள். இவர்கள் பழங்காலத்தில் தமிழகத்தின் வட எல்லையான வேங்கடம் எனப்படும் திருப்பதி மலைப் பகுதியில் இருந்த கள்ளர் மரபினர் வழி வந்தவர்கள். யானைப் படைகளுக்கு பயிற்சி அளிப்பதில் சிறந்து விளங்கியவர்கள்.
தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் வரலாற்றுப் பின்னணியிலிருந்து மறைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விஜயநகர மன்னர்களின் ஆதிக்கம், அவர்களின் மேலாண்மைக்குட்பட்ட நாயக்கர் ஆட்சி முறை, இவற்றால் ஏற்பட்ட புதிய சூழ்நிலைகள், ஆகியவற்றின் காரணமாக வட தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள்(கி.பி 15ம் நூற்றாண்டிலிருந்து) தென் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு அதிக அளவில் குடிபெயரத் தொடங்கினர். அப்படி குடியேறிய இடங்களுள் திருச்சிக்கு அருகிலுள்ள அன்பில் கிராமம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இங்கிருந்த ஒரு பிரிவினர் குடிபெயர்ந்து புதுக்கோட்டையில் தற்போது ஆலங்குடியைச் சுற்றியுள்ள பிலாவிடுதி, வடுக்கலூர், கல்லாக்கோட்டை, கறம்பக்குடி, நெல்வேலி, நரங்கியம்பட்டு, அம்மணிப்பட்டு, பந்துவாக்கோட்டை, மங்கள் வெள்ளாள விடுதி ஆகிய ஊர்களில் குடியேறினர். இவர்களுள் கறம்பக்குடியில் குடியேறிய கள்ளர் வகுப்பினர், வீரத்திலும் கடின உழைப்பாலும் சிறந்து விளங்கினர். மேலும் இவர்கள் யானை பழக்குதல் போன்ற வீரசாகசங்களில் சிறப்புப் பெற்றிருந்தாலும், இப்பகுதியை ஆண்ட நாயக்க மன்னர்களின் அரசப் பிரதிநிதிகளின் படைகளில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்று செல்வாக்கு பெற்றவர்களாக விளங்கினர். இந்தப் பிரிவினரிலிருந்து தோன்றிப் புகழுடன் விளங்கியவர்களே தொண்டைமான் பரம்பரையினர்.
இவர்கள் கறம்பக்குடிப் பகுதியில் நாடாள்வோராக இருந்து படிப்படியாக தங்கள் ஆட்சிப்பகுதியை விரிவாக்கி, தற்போது புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், குளத்தூர், கந்தர்வக்கோட்டை ஆகிய வட்டங்களை உள்ளடக்கியப் பகுதிகளை, புதுக்கோட்டையை தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். அப்போது "பல்லவரையன் சீமை" என்று வழங்கப்பட்ட நாட்டமைப்பில் அடங்கியிருந்த அப்பகுதிகள் பின்னர் புதுக்கோட்டை மன்னர்களது தனியரசு "புதுக்கோட்டை சமஸ்தானம்" என்று அழைக்கப்பட்டது.
புதுக்கோட்டை
வரலாற்று சிறப்பு மிகு புதுக்கோட்டையின் சங்ககாலப் பெயர் பன்றிநாடு. "ராஜராஜ வளநாட்டு பன்றியூர் அழும்பில்"என்று பிற்காலச் சோழர் கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. சங்க காலத்தில் சோழநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் எல்லையாக புதுக்கோட்டைப் பகுதி தமிழகத்தை ஆண்ட அனைத்து வம்ச மன்னர்களுக்கும் போர்க்களமாக விளங்கியுள்ளது. இன்றைய நிலையில் போர்க்களங்கள் அழிந்துவிட்டன! ஆனால் அவை கூறும் வரலாறு நமது முன்னோர்களின் வீரத்திற்கு வித்தாக உள்ளதை காண்கிறோம்!
தமிழகத்தில் பெருங்கற்கால நாகரிகம் குறித்து படித்தறிய சிறந்த மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். தமிழக நாகரீகக் கூறுகளை தெறிந்து கொள்ள புதுக்கோட்டை வரலாறு பெரிதும் உதவுமென்பதில் ஐயமில்லை. அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை. சோழர், பாண்டியர், பல்லவர், நாயக்கர், முத்தரையர், வேளீர், தொண்டைமான், வாணதிரையர், கொடும்புராயர் ஆகிய அனைத்து வம்சாவழிகளின் ஆட்சியையும் கண்டது இப்பகுதியாகும். இக்காலங்களை அடுத்து அண்மைக்காலம் (1948) வரை சுமார் 300 ஆண்டுகள் தனியரசாக விளங்கியதும் புதுக்கோட்டை ஒன்றே!
ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் (திருமெய்யம்) வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவுமறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.
மேலும் உலோகக்காலத்தின் பிற்பகுதியான இரும்புக்கால செம்பு, இரும்பு ஆயுதங்கள், மணிகள், அணிகலங்கள், இறந்தோரைப் புதைத்த புதைகுழிகள்,இறந்தோரின் நினைவுஸ் சின்னங்கள், கல்லறைகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதுக்கோட்டை சார்ந்த பகுதிகளில் கி.மு. 800க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் பெருங்கற்கால நாகரிகம் தழைத்திருந்தது எனக் கருதப்படுகிறது.
புதுக்கோட்டை வரலாற்றில் தடம் பதித்த சில இடங்கள்
கலசமங்கலம் பல்லவர் ஆட்சியில் ஆட்சிப்பீடமாக விளங்கியது. பல்லவராயன் சீமை என்றும் அழைக்கப்பட்டது. திருக்கோகர்ணம் புதுக்கோட்டையின் புறநகர் பகுதியாகும்.கி.பி. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த குகைக்கோயிலும் அருங்காட்சியமும் அமைந்துள்ள இடமாகும். புதுக்கோட்டை அரசின் கலை மற்றும் கலாச்சார மையமாகவும் திகழ்ந்த இடமாகும். குகைக்கோயில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தை சேர்ந்தது என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இது கி.பி. 8ம் நூற்றண்டை சேர்ந்த பாண்டிய மன்னன் காலக்கோயில் என்று கருதப்படுகிறது. குகைக்கோயிலுக்கு உள்ள மகாமண்டபமும் மற்ற மண்டபங்களும் பின்னர் ஆண்ட சோழர்,பாண்டியர்,நாயக்கவர்,தொண்டைமான் ஆகிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டவையாகும்.
இக்கோயிலில் 11 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுள்ளன. இவற்றுள் பாண்டிய மன்னன் மாறன் சடையன் (கி.பி.781 - 782)காலத்து கல்வெட்டு காலத்தால் முந்தியது என்று அறிகிறோம். ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டுஒன்றும்,ஹோய்சள மன்னன் வீரநரசிங்கதேவர் விளக்கு எரிக்க கொடை அளித்த செய்தியை மூன்றாம் ராஜராஜன் காலத்து கல்வெட்டும் , விஜயநகர் மன்னர் கிருஷ்ண தேவராயர் பலவிதமான ஆபணங்களை கொடையளித்த செய்தியும் தெரியவருகிறது.
திருக்கோகர்ணத்தை ஒட்டியுள்ள திருவப்பூரில் ராஜ ராஜேஸ்வரம் என்னும் கோயில் பாழடைந்து போன நிலையில் காணப்படுகிறது. இக் கோயில் இரண் டாம் ராஜராஜன் காலத்தில் (கி.பி.1146 - கி.பி.1163) கட்டப்பட்டது. இங்கு கானப்படும் கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 24ம் ஆட்சி ஆண்டைக் குறிக்கிறது.
8. ஆன்மீகத்தில் கள்ளர்
1. திருமங்கையாழ்வார்
கள்ளர் மரபைச் சேர்ந்தவர். திருமங்கை மன்னரின்இயற்பெயர் நீலன். சோழ மன்னனின் சேனைத் தலைவர் ஆலிநாடான் என்பவர்க்கும் மனைவி வல்லித்திருவுக்கும் நள ஆண்டில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் வியாழக்கிழமை அன்று சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார். பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது. நீலன் கல்வி கற்க்கும்போதே இலகணப்பிழையின்றி கருத்துச் செறிவுள்ள பாக்களை இயற்றும் ஆற்றலைப்பெற்றிருந்தார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளில் வல்லவராக விளங்கி நாற்கவி வல்லான் என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.
இளம் வயதிலே போர்த் திறமைகள் பயின்றார். தந்தைக்குப் பின் சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார்.
வாள், வில், வேல், ஈட்டி ஆகியபடைக்கலப் பயிற்சியிலும் வல்லவனானார். தேர், யானை, குதிரை, காலால் ஆகிய நால்வகைப் படைகளையும் தலைமை யேற்று பகைவர்களை வென்று சோழ மன்னருக்குபெரும் வெற்றிகளை தேடித்தந்தார். சோழ மன்னர் அகமகிழ்ந்து நீலனை திருவாலி நாட்டிற்க்கு மன்னனாக்கி திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தான்.
வாணிலா முறுவல், சிறுநுதல் பெருந்தோள் மாதரார்
வனமுறைப் பயனே பேணினேன்...
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்
என்று அழகான புன்னகை, சின்ன நெற்றி, பெரிய தோள்களைக் கொண்ட பெண்களைப் பேணியதற்கு நாணினேன் என்று பல பாடல்கள் பாடியுள்ளார்.
நீலன்குமுதவல்லியார் என்பவரை மணந்து தன் வாழக்கைப் பயணத்தை தொடங்கினார். தன் கையில்கிடைத்த செல்வத்தை எல்லாம் பாகவதர்கட்கு அமுது படைப்பதிலேயே செலவழித்தார். அரசனுக்கு சேரவேண்டிய வரிப்பணத்தையும் இதற்கே செலவழித்தமமையால் அரசு காவலில் சிறைவைக்கப்பட்டு பின்னர் காஞ்சிப் பேரருளான்வரதராசப்பெருமாள் திருவருளாள் பெரும் பொருள் பெற்று அரசுக்குரிய கப்பத்தை செலுத்தியும் சிறை மீண்டார்.
திருவரங்கப் பெருமாள் நீலனின் வலது காதில் ஓம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தை உபதேசித்து அவரின் ஞானக்கண்ணைத் திறந்து திருவருள் காட்டினார். நாராயணன் அவர் காதில் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தைச் சொல்ல ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க நாராயணன் தன் திரு உருவில் மனைவியுடன் கருடன் மேல் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது. அப்போது அவர் பாடிய பாசுரம்:
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே
திருமங்கை மன்னனின் வாழ்வின் வீச்சும் கவிதையின் வீச்சும் அவரின் மகிமையைச் சொல்கின்றன.
நிறைய சம்பாதித்தார், நிறைய அனுபவித்தார், நிறைவாக வாழ்ந்தார், காதலித்தார். முதலில் பெண்களை, பின்பு திருமாலை. எல்லா வகைப் பாடல்களையும் முயன்று அருமையான கவிதைகள் படைத்தார். பல கோவில்களைச் செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார். எல்லாவற்றையும்விட திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் உள்ள கம்பீரம் நம்மை பிரமிக்க வைக்கும்.
பெரிய திருமடலில் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட பல ஊர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறார். 220ம் வரியிலிருந்து வரிசையாக ஒவ்வொரு ஊரையும் அழகாகச் சொல்கிறார்.
அந்த ஊர்கள்:
திருவிண்ணகர்,
குடந்தை,
திருக்குறுங்குடி,
திருச்சேறை,
திருவாலி,
திரு எவ்வளூர்,
திருக்கண்ணமங்கை,
திருவெள்ளறை,
திருப்புட்குழி,
திருவரங்கம்,
திருவல்லவாழ்,
திருப்பேர்நகர்,
திருக்கோவிலூர்,
திருவழுந்தூர்,
தில்லைச் சித்திரக்கூடம்,
திருவேங்கடம்,
திருமாலிரும்சோலை,
திருக்கோட்டியூர்,
திருமையம்,
திரு இந்தளூர் கச்சி,
திருவேளுக்கை,
திருவெஃபா,
திருவிடவெந்தை,
கடல்மல்லை,
திருத்தண்கா,
ஊரகம்,
அட்டபுயகரம்,
திருவாதனூர்,
திருநீர்மலை,
திருப்புல்லாணி,
திருநாங்கூர்,
திருக்கண்ணபுரம்,
திருநறையூர் மணிமாடக் கோயில்
இவ்வாறு தென்னாட்டில் உள்ள வைணவத் தலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுவிடுகிறார்.
ஆழ்வார்களிலேயே மிக அதிகம் அலைந்தவர் திருமங்கை மன்னன்தான். அவரால் பாடப்படவில்லையென்றால் அந்தக் கோயில் பிற்காலத்தது என்று சொல்லிவிடலாம். ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகளாக உள்ளன. இவைகள் எல்லம் இன்றும் உள்ளன. போய்ப் பாருங்கள். எட்டாம் நூற்றாண்டுக்கு உரிய மரியாதையுடன் அவைகளைப் பாதுகாத்திருக்கிறோமா பாருங்கள். வருத்தப்படுவீர்கள். இவைகள் எல்லாம் உலகின் பாரம்பரியச் சொத்து.
திருமங்கையாழ்வார் 108 திவ்விய தேசங்களில் 86 திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்தார். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிரியதிருமடல், பெரியதிருமடல் என்கிற ஆறுபிரபந்தங்களையும் அருளிச்செய்துள்ளார். திருமங்கையாழ்வார் தம் இறுதிக்காலத்தை தம் மணைவியுடன் திருக்குறுங்குடியில் கழித்தார்.
2. கூற்றுவநாயனார்
களந்தைஎன்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார். அவர்சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார்.அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக்கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள்வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்றுமாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள் வல்லாமையால் பல போர்களிலும்பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தார். மணிமுடி ஒன்றொழியஅரசர் திருவெல்லாமுடையாராய் விளங்கினார்.
மணிமுடிசூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய தில்லைவாழந்தணர்களைக் கேட்டார். அவர் சோழர் குலமுதல்வர்களுக்கு அன்றி முடி சூட்டமாட்டோம் என்று மறுத்துத் தம்மில் ஒரு குடியை மணிமுடியைக் காவல் செய்யும் படி வைத்து, இவராணைக்கு அஞ்சி சேர நாட்டிற்குச்சென்றுவிட்டனர்.
அதுகண்ட கூற்றனார் மனம் தளர்ந்து “முடியாக உமது பாதம் பெற வேண்டும்” என்று ஆடவல்லானைப் பரவி,அந்நினைவுடன்துயின்றார். அன்றிரவு மன்றிலாடும் பெருங்கூத்தர் எழுந்தருளி, தமது திருவடிகளையே முடியாக அவருக்குச் சூட்டியருள, அவற்றைத் தாங்கி அவர் உலகினைத் தனியாட்சி புரிந்தனர். இறைவர்கோயிலெல்லாம் உலகுவாழப்பூசை புரிவித்தனர். இவ்வாறு உம்பர் மகிழ நல் அரசாட்சிபுரிந்திருந்து உமையொருபாகர் திருவடி சேர்ந்தனர்.
3. மெய்பொருள் நாயனார்
“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கடியேன்” – திருத்தொண்டத்தொகை.
சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர்குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்புசெய்து வந்த மலையான்மான்குலமாகும். நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால்கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக்கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச்சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவுகாணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.
இவ்வாறுஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமைகொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர்முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத் தோல்வியுற்றுஅவமானப்பட்டுப்போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாதெனக் கருதிய அவன்வஞ்சனையால் வெல்லத்துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக்கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கிஉள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான்.அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணமறிந்து செல்லல் வேண்டும் அரசர்பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கெனவந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறிஉள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசிஅடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர்எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கலவரவு கூறி மகிழ்ந்தார். அடியவர்வேடத்திருந்தவர் எங்குமிலாதோர் சிவாகமம் கொண்டுவந்திருப்பதாகப் புத்தகப்பையைப்காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினானஅவ்வேடத்தான் தனியிடதிலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான்.மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர்ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்குஆயத்தமானார். அத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளைஎடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும்நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுதுவென்றார். முத்தநாதன் நுளைந்தபொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும்கணத்திற் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில்இருந்த நாயனார் “தத்தா நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கிநின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும்நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார்.மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தியறிந்தகுடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றோழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து நகரைக் கடந்துசென்று நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன்.வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனைஇடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள்நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார்செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர்அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத்திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தைசெய்தார். அம்பலத்தரசுஅம்மையப்பராக மெய்பொருளாளன்பாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளாளார். அருட்கழல்நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.
4. நரசிங்கமுன்னையரையர்
“மெய்யடியான் நரசிங்கமுனையரையற் கடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை.
தேடாத வளத்திற் சிறந்த திருமுனைப்பாடி நாடு. இந்நாட்டினை அரசுபுரிந்தமுனையராயர் என்னும் குறுநில மன்னர் மரபிலே வந்தவர் நரசிங்கமுனையரையர். அவர் பகைவரைவென்று தீதகலச் செய்தனர்; சிவனடியார்களின்திருவடியடைதலே அரும்பேறென்று அடியாரைப் பண்ந்தார். சிவன்கோயிலின் சிவச்செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர். சிவநெறித்திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்து வந்தார்.
திருவாதிரை நாடோறும் சிவபெருமானுக்கு நியமமாக விசேட பூசை செய்து, அன்று வந்தணையும் அடியார்கள் ஒவ்வொருவருக்கும்நூறு பொன் குறையாமல் கொடுத்துத் திருவமுது அளித்து வழிபட்டு வந்தார். ஒருதிருவாதிரை நாளில் அடியார்களுடனே “மான நிலையழி தன்மை வரும் காமக்குறி மலர்ந்த ஊனநிகழ் மேனியராகிய” ஒருவரும், திருநீறு அணிந்து வந்தனர். அவர் நிலையினைக் கண்டுஅருகிலிருந்தவர்கள் இழந்து அருவருத்து ஒதுங்கினர்.
நரசிங்கர் அதுகண்டு அவரை அணுகி வணங்கிப் பேணினார். நல்லொழுக்கம்இல்லாதவர்களாயினும் திருநீறு அணிந்தவர்களை உலகம் இகழ்ந்து நரகிலடையாமல்உய்யவேண்டுமென உளம்கொண்டு அவரைத் தொழுது அவருக்கு இரட்டிப்பொன் (இருநூறு பொன்;)கொடுத்து உபசரித்து விடை கொடுத்தருளினார்.
நரசிங்கமுன்னையரையர் ஒரு நாள் வீதிவலம் வரும் பொழுது வீதியில்தேருருட்டி விளையாடும் நம்பியாரூரரைக் கண்டார். அவர் தம் அழகில்பெரிதும் ஈடுபட்ட அரசர் சடையனாரிடம் சென்று அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையினால்நம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலிற்கு இணங்கிநம்பியை வளர்த்தற்குத் தருமாறு வேண்டினார். சடையனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கிநம்பியை அளித்தார். நம்பியைச் பெருஞ் செல்வமெனக் கொண்ட நரசிங்கமுனையார் அவரை அரசதிருவெலாம் பொருந்த திருமணப் பருவம் அடையும்வரை வளர்த்தார். இவ்வாறு அன்பர்பணிசெய்து நம்பியை வளர்க்கும் பேறு பெற்றமையாலே இறைவரது திருவடி நீழலில் சேர்ந்துமீளாத நிலைபெற்றனர்.
5. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
மன்னரெல்லாம் தம்ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்தஇம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன்புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால்அத்தலங்களைப் போற்றிப்பாடினார். அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன.அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப்பெறுகின்றது. இப்பாடல்கள் பலவற்றிலும்நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம்இப்பாடல்களில் இருக்கக் காணலாம்.
6. கழற்சிங்க நாயனார்
கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும்அடியேன்" - திருத்தொண்டத்தொகை.
கழற்சிங்க நாயனார்
பல்லவர் குலத்திலே தோன்றியவர்;சிவனடி அன்றிவேறொன்றை அறிவினிற் குறியாதவர்; வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்றுநாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச்சென்றார். அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசிஅங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக்கண்ட அங்குவந்த செருத்துணையார் என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச்சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால்அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறைவரைப்பணிந்து வெளியேவந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்துமிகவும் வெகுண்டு 'அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச்செய்தவர் யார்?' என வினவினார் .அருகே நின்றசெருத்துணையார், 'இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரைஎடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்' என்றார். அப்போது கழற்சிங்கர் அவரைநோக்கி, 'பூவை எடுத்த கையையன்றோ முதலில்வெட்டுதல் வேண்டும்? என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப்பட்டத்தரசியின் கையைத் தடிந்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்கநாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும்பெருவாழ்வு பெற்றார்.
9. பெயர் சொல்லும் திருத்தலங்கள்
10. பாடல் பெற்ற சிவத்தலங்கள்
பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - ஒரு கண்ணோட்டம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அநேக சிவன் கோவில்கள் இருந்தாலும், 274 கோவில்கள் மட்டுமே பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கின்றன. தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் வாழ்ந்திருந்த காலமாகிய 7, 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட தேவார பதிகங்களில் இந்தக் கோவில்களைப் பற்றியும், கோவில்களில் குடி கொண்டுள்ள சிவபெருமானைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்று கூறப்படும் இந்தக் கோவில்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த இந்தக் கோவில்கள் தனிச்சிறப்பு பெற்றதில் வியப்பில்லை.
தமிழ்நாட்டில் தேவாரம் எழுந்ததற்கு முன்பே சிவாலயங்கள் இருந்து வந்தன. அடியார்கள் அந்தந்த ஊர்களில் ஆலய வழிபாடு செய்து வந்தார்கள். இராஜ ராஜ சோழனும், நம்பியாண்டார் நம்பிகளும் தில்லை சிதம்பரத்தில் தேவாரம் எழுதியிருந்த ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து எடுத்த போது அவைகள் கறையானால் மூடப்பட்டிருந்தது. பிறகு எண்ணை ஊற்றி கறையானைப் போக்கி ஏட்டை எடுத்துப் பார்க்கும் போது பல பதிகங்கள் சிதைந்திருந்தன. அதைக் கண்டு சோழ மன்னன் வருந்தியபோது "ஈண்டு வேண்டுவன வைத்தோம்" என்று அசரீரி வாக்கு எழ, பிறகு கிடைத்தவற்றை ஒழுங்கு படுத்தினார்கள். தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தோன்றி தேவாரம் பாடிய பிறகு, தேவாரம் பெற்ற ஸ்தலங்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய இந்த மூவரும் அக்காலத்தில் இருந்த இந்தக் கோவில்களுக்குச் சென்று அங்கு குடி கொண்டுள்ள இறைவனைத் தரிசித்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். பல இடங்களில் பதிகங்கள் பாடி அற்புதங்களும் நிகழ்த்தியுள்ளனர். உதாரணமாக திருமருகல் என்கின்ற சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்த ஒரு வணிகனின் உயிரை மீட்டுத் தரும்படி அவன் மனைவி கதறி அழுது கேட்டுக்கொண்டதின் பேரில் அவள் பால் இரக்கப்பட்டு " சடையாய் எனுமால் " எனத் தொடங்கும் பதிகம் பாடி திருஞானசம்பந்தர் இறைவனிடம் உயிர்ப் பிச்சை கேட்டார். இறந்த வணிகனும் திருமருகல் இறைவன் மாணிக்கவண்ணர் பேரருளால் உயிர் பெற்று எழுந்தான். அதே போன்று திங்களூர் சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்து விட்ட அப்பூதியடிகள் மூத்த மகனை "ஒன்று கொலாம் " என்று ஆரம்பிக்கும் பதிகம் பாடி இறந்தவனை உயிர்ப்பித்து எழுப்பிய அற்புதம் திருநாவுக்கரசரால் நிகழ்ந்தது. ஒவ்வொரு சிவஸ்தலமும் ஒவ்வொரு பெருமை பெற்றது.
தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மூவரும் அவர்கள் காலத்தில் உள்ள போக்குவரத்து சிரமங்களையும் பாராமல் இந்த கோவில்களுக்குச் சென்று அங்குள்ள சிவபெருமானைப் பாடி புகழ்ந்துள்ளனர். ஒரு சில சிவஸ்தலங்களுக்கு இவர்கள் நேரில் போகாமல் இருந்த போது, இறைவனே இவர்கள் கனவிலோ அல்லது அசரீரியாகவோ கூப்பிட்டு அவர்களை வரச்செய்து இறைவன் தன் மேல் பதிகங்கள் பாட வைத்திருக்கிறார்.
இவர்கள் பாடிய பதிகங்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் பல ஆண்டுகளாக சிதம்பரம் கோவிலில் உள்ள ஓர் அறையில் பூட்டி வைக்கபட்டு இருந்தன. திருமுறை கண்ட சோழன் என்றழைக்கப்படும் ராஜராஜ சோழன் காலத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டு திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுத்து ஒழுங்கு படுத்தப்பட்டன. சைவத் திருமுறைகள் 12 ஆக வகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் 7-ம் தேவார மூவர் பாடிய பதிகங்களைப் பற்றிய விபரங்களைக் கொண்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களைக் கொண்டுள்ளன. 4,5, 6-ம் திருமுறைகளில் திருநாவுக்கரசர் பாடிய பதிகங்களும், 7-ம் திருமுறையில் சுந்தரர் பாடிய பதிகங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியங்களில் தேவாரப் பாடல்கள் என்று குறிப்பிடப்படும் இந்த பதிகங்கள் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன.
திருநாவுக்கரசர் (அப்பர்) பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் எண்ணிக்கை. 223
திருநாவுக்கரசர் சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 125
நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 98
பதிகம் பெறாத சிவஸ்தலங்கள் 51
திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் எண்ணிக்கை. 231
திருஞானசம்பந்தர் சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 219
நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 12
பதிகம் பெறாத சிவஸ்தலங்கள் 43
சுந்தரர்பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் எண்ணிக்கை. 138
சுந்தரர் சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 84
நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 54
பதிகம் பெறாத சிவஸ்தலங்கள் 136
காவிரி நதியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
இறைவன் பெயர் - சிவஸ்தலம் இருப்பிடம்.
1. நடராஜர் - சிதம்பரம்
2. பசுபதீஸ்வரர் - திருவேட்களம்
3. உச்சிநாதேசுவரர் - திருநெல்வாயல்
4. பால்வண்ண நாதர் - திருக்கழிப்பாலை
5. சிவலோக தியாகேசர் - திருநல்லுர் பெருமணம்
6. திருமேனிஅழகர் - திருமயேந்திரப்பள்ளி
7. முல்லைவன நாதர் - தென்திருமுல்லைவாசல்
8. சுந்தரேஸ்வரர் - திருக்கலிக்காமூர்
9. சாயாவனேஸ்வரர் - திருசாய்க்காடு (சாயாவனம்)
10. பல்லவனேஸ்வரர் - திருபல்லவனீச்சுரம்
11. சுவேதஆரன்யேஸ்வரர் - திருவெண்காடு
12. ஆரண்ய சுந்தரேஸ்வரர் கீழை - திருக்காட்டுப்பள்ளி
13. வெள்ளடையீசுவரர் - திருக்குருகாவூர் வெள்ளடை
14. பிரம்மபுரீசர் - சீர்காழி
15. சத்தபுரீசுவரர் - திருகோலக்கா
16. வைத்தியநாதர் - திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)
17. கண்ணாயிரநாதர் - திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி )
18. கடைமுடிநாதர் - திருக்கடைமுடி
19. மஹாலக்ஷ்மி நாதர் - திருநின்றியூர்
20. சிவலோகநாதர் - திருபுன்கூர்
21. அருட்சோம நாதேஸ்வரர் - நீடூர்
22. ஆபத்சகாயேஸ்வரர் - திருஅன்னியூர்
23. கல்யாணசுந்தரர் - திருவேள்விக்குடி
24. ஐராவதேஸ்வரர் - திருஎதிர்கொள்பாடி
25. அருள்வள்ள நாதர் - திருமணஞ்சேரி
26. வீரட்டேஸ்வரர் - திருக்குருக்கை
27. குற்றம் பொருத்த நாதர் - திருக்கருப்பறியலூர்
28. கோந்தல நாதர் - திருக்குரக்குக்கா
29. மாணிக்கவண்ணர் - திருவாளொளிப்புத்தூர்
30. நீலகண்டேசர் - திருமண்ணிப்படிக்கரை
31. துயரந்தீர்த்தநாதர் - திருஓமாம்புலியூர்
32. பதஞ்சலி நாதர் - திருக்கானாட்டுமுல்லூர்
33. சௌந்தரேசுவரர் - திருநாரையூர்
34. அமிர்தகடேசர் - திருக்கடம்பூர்
35. பசுபதி நாதர் - திருபந்தனைநல்லூர்
36. அக்னீஸ்வரர் - திருகஞ்சனூர்
37. திருக்கோடீஸ்வரர் - திருகோடிக்கா
38. பிராண நாதேஸ்வரர் - திருமங்கலக்குடி
39. செஞ்சடையப்பர் - திருப்பனந்தாள்
40. பாலுகந்த ஈஸ்வரர் - திருஆப்பாடி
41. சத்யகிரீஸ்வரர் - திருசேய்ஞலூர்
42. கற்கடேஸ்வரர் - திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில் )
43. வில்வஆரன்யேஸ்வரர் - திருவியலூர்
44. கோடீஸ்வரர் - திருக்கொட்டையூர்
45. எழுத்தறிநாதர் - திருஇன்னாம்பர்
46. சாட்சி நாதேஸ்வரர் - திருப்புறம்பியம்
47. விஜயநாதர் - திருவிசயமங்கை
48. வில்வவனநாதர் - திருவைகாவூர்
49. குலைவணங்குநாதர் - வடகுரங்காடுதுறை
50. ஆபத்சகாயநாதர் - திருப்பழனம்
51. ஐயாரப்பர் - திருவையாறு
52. நெய்யாடியப்பர் - திருநெய்த்தானம்
53. வியாக்ர புரீசர் - திருப்பெரும்புலியூர்
54. வஜ்ரதம்ப நாதர் - திருமழபாடி
55. வடமூலநாதர் - திருப்பழுவூர்
56. செம்மேனி நாதர் - திருக்கானூர்
57. சத்யவாகீஸ்வரர் - திருஅன்பில் ஆலாந்துறை
58. ஆம்பிரவன நாதர் - திருமாந்துறை
59. திருமூலநாதர் - திருபாற்றுறை
60. ஜம்புகேஸ்வரர் - திருவானைக்கா
61. ஞீலிவனேஸ்வரர் - திருபைஞ்ஜிலி
62. மாற்றுறை வரதீஸ்வரர் - திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
63. மரகதேஸ்வரர் - திருஈங்கோய்மலை
காவிரி நதியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
இறைவன் பெயர் - சிவஸ்தலம் இருப்பிடம்
1. ரத்னகிரிநாதர். - திருவாட்போக்கி
2. கடம்பவன நாதேஸ்வரர். - திருகடம்பந்துறை
3. பராய்த்துறை நாதர். - திருப்பராய்த்துறை
4. உஜ்ஜீவ நாதர். - திருகற்குடி
5. பஞ்சவர்னேஸ்வரர். - திருமூக்கீச்சரம் (உறையூர், திருச்சி)
6. தாயுமானவர். - திருச்சிராப்பள்ளி
7. எறும்பீசர். - திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)
8. நித்திய சுந்தரர். - திருநெடுங்களம்
9. தீயாடியப்பர். - மேலை திருக்காட்டுப்பள்ளி
10. ஆத்மநாதேஸ்வரர். - திருவாலம்பொழில்
11. புஷ்பவன நாதர். - திருபூந்துருத்தி
12. பிரம்மசிரகண்டீசர். - திருக்கண்டியூர்
13. தொலையாச்செல்வர். - திருசோற்றுத்துறை
14. வேதபுரீசர். - திருவேதிகுடி
15. வசிஷ்டேஸ்வரர். - திருதென்குடித்திட்டை
16. ஆலந்துறை நாதர். - திருபுள்ளமங்கை
17. சக்ரவாகேஸ்வரர். - திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை)
18. முல்லைவன நாதர். - திருக்கருகாவூர்
19. பாலைவன நாதர். - திருப்பாலைத்துறை
20. கல்யாண சுந்தரேஸ்வரர். - திருநல்லூர்
21. பசுபதீஸ்வரர். - ஆவூர் பசுபதீச்சரம்
22. சிவகொழுந்தீசர். - திருசத்திமுற்றம்
23. தேனுபுரீஸ்வரர். - திருபட்டீச்சரம்
24. சோமேஸ்வரர். - பழையாறை வடதளி
25. கற்பகநாதர். - திருவலஞ்சுழி
26. கும்பேஸ்வரர். - திருக்குடமூக்கு (கும்பகோனம்)
27. நாகேஸ்வரசுவாமி. - திருக்குடந்தை கீழ்கோட்டம்
28. காசி விஸ்வநாதர். - திருக்குடந்தைக் காரோணம்
29. சண்பக ஆரண்யேஸ்வரர். - திருநாகேஸ்வரம்
30. மஹாலிங்கேஸ்வரர். - திருவிடைமருதூர்
31. ஆபத்சகாயநாதர். - தென்குரங்காடுதுறை
32. நீலகண்டேஸ்வரர். - திருநீலக்குடி
33. வைகன் நாதர். - திருவைகல் மாடக்கோவில்
34. உமாமஹேஸ்வரர். - திருநல்லம்
35. கோகிலேஸ்வரர். - திருக்கோழம்பம்
36. மாசிலாமனி ஈஸ்வரர். - திருவாவடுதுறை
37. உக்தவேதீஸ்வரர். - திருத்துருத்தி (குத்தாலம்)
38. வேதபுரீஸ்வரர். - திருவழுந்தூர்
39. மயூரநாதர். - மயிலாடுதுறை
40. துறைகாட்டும் வள்ளலார். - திருவிளநகர்
41. வீரட்டேஸ்வரர். - திருப்பறியலூர் (பரசலூர்)
42. சுவர்ணபுரீசர். - திருசெம்பொன்பள்ளி
43. நற்றுணையப்பர். - திருநனிபள்ளி (புஞ்ஜை)
44. வலம்புரநாதர். - திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)
45. சங்கருனாதேஸ்வரர். - திருதலைச்சங்காடு
46. தான்தோன்றியப்பர். - திருஆக்கூர்
47. அமிர்தகடேஸ்வரர். - திருக்கடவூர்
48. பிரம்மபுரீஸ்வரர். - திருக்கடவூர் மயானம்
49. திருமேனிஅழகர். - திருவேட்டக்குடி
50. பார்வதீஸ்வரர். - திருதெளிச்சேரி (கோயில்பத்து)
51. யாழ்மூரிநாதர். - திருதர்மபுரம்
52. தர்பாரண்யேஸ்வரர். - திருநள்ளாறு
53. ஐராவதேஸ்வரர். - திருக்கோட்டாறு
54. பிரம்மபுரீசர். - அம்பர் பெருந்திருக்கோவில்
55. மாகாளநாதர். - அம்பர் மாகாளம்
56. முயற்சிநாதேஸ்வரர். - திருமீயச்சூர்
57. சகலபுவனேஸ்வரர். - திருமீயச்சூர் இளங்கோவில்
58. மதிமுத்தீஸ்வரர். - திருதிலதைப்பதி
59. பாம்பு புரேஸ்வரர். - திருப்பாம்புரம்
60. மங்களநாதர். - சிறுகுடி
61. நேத்ரார்பனேஸ்வரர். - திருவீழிமிழிலை
62. அக்னீஸ்வரர். - திருவன்னியூர்
63. சற்குனநாதேஸ்வரர். - திருக்கருவிலிக்கொட்டிட்டை
64. சிவானந்தேஸ்வரர். - திருபேணுபெருந்துறை
65. சித்தி நாதேஸ்வரர். - திருநறையூர்
66. படிக்காசு அளித்த நாதர். - அரிசிற்கரைப்புத்தூர்
67. சிவபுரநாதர். - சிவபுரம்
68. அமிர்தகலேஸ்வரர். - திருகலயநல்லூர்
69. சற்குனலிங்கேஸ்வரர். - திருக்கருக்குடி
70. வாஞ்சிநாதர். - திருவாஞ்சியம்
71. மதுவனேஸ்வரர். - நன்னிலம்
72. பசுபதீஸ்வரர். - திருகொண்டீச்சரம்
73. சௌந்தர்யநாதர். - திருப்பனையூர்
74. வீரட்டானேஸ்வரர். - திருவிற்குடி
75. அக்னீஸ்வரர். - திருப்புகலூர்
76. வர்த்தமானேஸ்வரர். - திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்
77. இராமணதேஸ்வரர். - இராமனதீச்சுரம்
78. திருபயற்றுநாதர். - திருபயற்றூர்
79. உத்தராபதீஸ்வரர். - திருசெங்கட்டாங்குடி
80. இரத்தினகிரீஸ்வரர். - திருமருகல்
81. அயவந்தீஸ்வரர். - திருச்சாத்தமங்கை
82. காயாரோகனேஸ்வரர். - நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்)
83. வெண்ணைலிங்கேஸ்வரர். - சிக்கல்
84. கேடிலியப்பர். - திருக்கீழ்வேளூர்
85. தேவபுரீஸ்வரர். - தேவூர்
86. முக்கோண நாதேஸ்வரர். - பள்ளியின் முக்கூடல்
87. வன்மீகி நாதர். - திருவாரூர்
88. அறனெறியப்பர். - திருவாரூர் அரநெறி
89. தூவாய் நாயனார். - ஆரூர் பறவையுன்மண்டளி
90. பதஞ்சலி மனோஹரர். - திருவிளமர்
91. கரவீரநாதர். - திருக்கரவீரம்
92. பிரியாதநாதர். - திருப்பெருவேளுர்
93. ஆடவல்லீஸ்வரர். - திருதலையாலங்காடு
94. கோனேஸ்வரர். - திருக்குடவாயில்
95. செந்நெறியப்பர். - திருச்சேறை
96. பாலசவனநாதர். - திருநாலூர் மயானம்
97. சொர்ணபுரீசுவரர். - திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
98. ஆபத்சகாயேஸ்வரர். - திருஇரும்பூளை (ஆலங்குடி)
99. பாதாளேஸ்வரர். - திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்)
100. சாட்சி நாநர். - திருஅவளிவநல்லூர்
101. பரிதியப்பர். - திருப்பரிதிநியமம்
102. வெண்ணிக்கரும்பர். - திருவெண்ணியூர்
103. புஷ்பவனநாதர். - திருப்பூவனூர்
104. சர்ப்ப புரீஸ்வரர். - திருப்பாதாளீச்சரம்
105. களர்முலைநாதேஸ்வரர். - திருக்களர்
106. பொன்வைத்த நாதேஸ்வரர். - திருசிற்றேமம்
107. மந்திர புரீஸ்வரர். - திருவுசத்தானம்
108. சற்குனநாதேஸ்வரர். - திருஇடும்பாவனம்
109. கற்பகநாதர். - திருக்கடிக்குளம்
110. நீணெறிநாதர். - திருத்தண்டலை நீணெறி
111. கொழுந்தீசர். - திருக்கோட்டூர்
112. வெண்டுறைநாதர். - திருவெண்டுறை
113. வில்வவனேஸ்வரர். - திருக்கொள்ளம்புதூர்
114. ஜகதீஸ்வரர். - திருப்பேரெயில்
115. அக்னீஸ்வரர். - திருக்கொள்ளிக்காடு
116. வெள்ளிமலைநாதர். - திருதெங்கூர்
117. நெல்லிவனநாதேஸ்வரர். - திருநெல்லிக்கா
118. மாணிக்கவண்ணர். - திருநாட்டியாத்தான்குடி
119. கண்ணாயிரநாதர். - திருக்காறாயில்
120. நடுதறியப்பர். - திருகன்றாப்பூர்
121. மனத்துனைநாதர். - திருவலிவலம்
122. கைசின நாதேஸ்வரர். - திருகைச்சினம்
123. கோளிலிநாதர். - திருக்கோளிலி
124. வாய்மூர்நாதர். - திருவாய்மூர்
125. மறைக்காட்டு மணாளர். - திருமறைக்காடு (வேதாரண்யம்)
126. அகஸ்தீஸ்வரர். - அகத்தியான்பள்ளி
127. அமிர்தகடேஸ்வரர். - கோடியக்கரை
பாண்டிய நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
இறைவன் பெயர் - சிவஸ்தலம் இருப்பிடம்
1. சொக்கநாதர் - திருஆலவாய் (மதுரை)
2. ஆப்புடையார் - திருஆப்பனுர்
3. பரங்கிரிநாதர் - திருப்பரங்குன்றம்
4. ஏடகநாதேஸ்வரர் - திருவேடகம்
5. கொடுங்குன்றீசர் - திருகொடுங்குன்றம்
6. திருத்தளிநாதர் - திருப்புத்துர்
7. பழம்பதிநாதர் - திருப்புனவாயில்
8. இராமநாதசுவாமி - இராமேஸ்வரம் (ஜோதிர்லிங்க ஸ்தலம்)
9. ஆடானைநாதர் - திருவாடானை
10. காளையப்பர் - திருக்கானப்பேர் (காளையார்கோவில்)
11. பூவணநாதர் - திருப்பூவணம்
12. திருமேனிநாதர் - திருச்சுழியல்
13. குறும்பலாநாதர் - குற்றாலம்
14. நெல்லையப்பர் - திருநெல்வேலி
கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
இறைவன் பெயர் - சிவஸ்தலம் இருப்பிடம்
1. சங்கமேஸ்வரர் - திருநணா (பவானி)
2. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு
3. பசுபதிநாதர் - கருவூர் (கரூர்)
4. திருமுருகநாதசுவாமி - திருமுருகப்பூண்டி
5. கொடுமுடிநாதர் - திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
6. அவிநாசியப்பர் - திருப்புக்கொளியூர் (அவிநாசி)
7. விகிர்தநாதேஸ்வரர் - வெஞ்சமாக்கூடல்
நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள
இறைவன் பெயர் - சிவஸ்தலம் இருப்பிடம்
1. அரத்துறை நாதர் - திருநெல்வாயில் அரத்துறை
2. சுடர்கொழுந்தீசர் - தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)
3. நெறிகாட்டுநாயகர் - திருக்கூடலையாற்றுர்
4. திருநீலகண்டர் - திருஎருக்கத்தம்புலியூர்
5. சிவக்கொழுந்தீசர் - திருத்திணை நகர்
6. சோபுரநாதர் - திருச்சோபுரம்
7. அதிகை வீரட்டநாதர் - திருவதிகை
8. திருநாவலேஸ்வரர் - திருநாவலூர்
9. பழமலைநாதர் - திருமுதுகுன்றம்
10. வெண்ணையப்பர் - திருநெல்வெண்ணை
11. வீரட்டேஸ்வரர் - திருக்கோவிலூர்
12. அறையணிநாதர் - திருஅறையணிநல்லூர்
13. இடையாற்று நாதர் - திருவிடையாறு
14. தடுத்து ஆட்கொண்டநாதர் - திருவெண்ணைநல்லுர்
15. சிஷ்டகுருநாதர் - திருத்துறையூர்
16. வடுகூர்நாதர் - வடுகூர்
17. வாமனபுரீஸ்வரர் - திருமாணிகுழி
18. பாடலீஸ்வரர் - திருப்பாதிரிப்புலியூர்
19. சிவலோக நாதர் - திருமுண்டீச்சரம்
20. பனங்காட்டீசர் - புறவர் பனங்காட்டூர்
21. அழகிய நாதர் - திரு ஆமாத்தூர்
22. அருணாசலேஸ்வரர் - திருவண்ணாமலை
தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
இறைவன் பெயர் - சிவஸ்தலம் இருப்பிடம்
1. ஏகாம்பரேஸ்வரர் - கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்)
2. திருமேற்றளிநாதர் - திருக்கச்சி மேற்றளி
3. ஓணகாந்தேஸ்வரர் - திருஓணகாந்தான்தளி
4. அநேகதங்கா பதேஸ்வரர் - கச்சி அநேகதங்காபதம்
5. காரை திருநாதேஸ்வரர் - கச்சிநெறிக் காரைக்காடு
6. வாலீஸ்வரர் - திருகுரங்கணில் முட்டம்
7. அடைக்கலம்காத்த நாதர் - திருமாகறல்
8. வேதபுரீஸ்வரர் - திருவோத்தூர்
9. பனங்காட்டீஸ்வரர் - திருப்பனங்காட்டூர்
10. வில்வநாதேஸ்வரர் - திருவல்லம்
11. மணிகண்டேஸ்வரர் - திருமாற்பேறு
12. ஜலநாதேஸ்வரர் - திருஊறல் (தக்கோலம்)
13. தெய்வநாதேஸ்வரர் - இலம்பையங்கோட்டூர்
14. திரிபுரநாதர் - திருவிற்கோலம்
15. வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு
16. வாசீஸ்வரர் - திருப்பாசூர்
17. ஊண்றீஸ்வரர் - திருவெண்பாக்கம்
18. சிவானந்தேஸ்வரர் - திருக்கள்ளில்
19. ஆதிபுரீசர், படம்பக்கநாதர் - திருவொற்றியூர் (சென்னை)
20. வலிதாய நாதர் - திருவலிதாயம்
21. மாசிலாமனி ஈஸ்வரர் - திருமுல்லைவாயில்
22. வேதபுரீசர் - திருவேற்காடு
23. கபாலீஸ்வரர் - திருமயிலை (சென்னை)
24. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் (சென்னை)
25. விருந்திட்ட ஈஸ்வரர் - திருக்கச்சூர் ஆலக்கோவில்
26. ஞானபுரீஸ்வரர் - திருஇடைச்சுரம்
27. வேதகிரீஸ்வரர் - திருக்கழுகுன்றம்
28. ஆட்சீஸ்வரர் - அச்சிறுபாக்கம்
29. சந்திரசேகர் - திருவக்கரை
30. அரசிலிநாதர் - திருஅரசிலி
31. மாகாளேஸ்வரர் - இரும்பை மாகாளம்
11. கள்ளர்குல வரலாற்று மாமணிகள்
12. இன்றைய சான்றோர்கள்
13. வரலாற்றில் ஊரும் பெயரும்
14. கள்ளர்குல பட்டங்கள்
சோழ மண்டலத்தை விரிவுபடுத்திச் செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியதற்காகச் சுமார் ஈராயிரம் புகழுடைய பட்டங்களை சுமந்த கள்ளர் குல பட்டங்களை பற்றியஒரு கண்ணோட்டம்.
அ எழுத்தில் பட்டப்பெயர்கள்
0001. அகத்தியர்.
0002. அகத்தியார்
0003. அங்கராயர்.
0004. அங்கரான்,
0005. அங்கரார்
0006. அங்கவார்
0007. அங்குரார்
0008. அத்தானியார்
0009. ஆந்தையார்
0010. அன்கராயர்.
0011. அனகராயர்
0012. அங்கதராயர்
0013. அச்சமறியார்.
0014. அச்சிப்பிரியர்
0015. அச்சித்தேவர்.
0016. அச்சுத்தேவர்.
0017. அச்சுதத்தேவர்.
0018. அச்சமறியார்
0019. அச்சிராயர்
0020. அச்சுதர்.
0021. அச்சுதபண்டாரம்.
0022. அச்சுதராயர்
0023. அசையாத்துரையார்.
0024. அசையாத்துரையர்
0025. அடக்கப்பட்டார்.
0026. அடைக்கப்பட்டார்
0027. அடக்குப்பாச்சியார்
0028. அடங்காப்பிரியர்
0029. அடைவளைந்தார்.
0030. அடவளைந்தார்.
0031. அடைவளைஞ்சார்.
0032. அண்டம்வளைந்தார்.
0033. அண்டங்கொண்டார்.
0034. அண்டப்பிரியர்
0035. அண்டமுடையர்.
0036. அண்டக்குடையர்
0037. அண்டாட்சியார்
0038. அண்ணாகொண்டார்
0039. அண்ணுண்டார்.
0040. அண்ணூத்திப்பிரியர்.
0041. அண்ணுத்திப்பிரியர்.
0042. அண்ணுப்பிரியர்.
0043.அதியர்
0044. அதிகமார்.
0045. அதியமார்
0046. அதியபுரத்தார்
0047. அதிகாரி
0048. அதிகாரியார்
0049. அதிகையாளியார்
0050. அத்திப்பிரியர்
0051. அத்தியாக்கியார்.
0052. அத்திரியாக்கியார்.
0053. அத்திரிமாக்கியார்
0054. அத்திரியர்.
0055. அத்திராயர்.
0057. அத்தியரையர்.
0058. அத்திஅரையர்.
0059. அத்தியாளியார்.
0060. அநந்தர்.அறந்தர்.
0061. அமரகொண்டார்.
0062. அமரண்டார்.
0063. அமராண்டார்
0064. அம்பர்கொண்டார்
0065. அம்பராண்டார்
0066. அம்பர்த்தேவர்
0067. அம்பாணர்.
0068. அம்பலத்தார்.
0069. அம்பலம்.
0070. அம்பானையர்
0071. அம்பானைத்தேவர்
0072. அம்மலத்தேவர்.
0073. அம்மாலைத்தேவர்.
0074. அம்மானைத்தேவர்.
0075. அம்பானைத்தேவர்
0076. அம்பானை
0077. அம்மையார்.
0078. அம்மையர்
0079. அம்மையன்
0080. அம்மையத்தரையர்
0081. அம்மையத்தேவர்.
0082. அம்மையதேவர்
0083. அயிரப்பிரியர்
0084. அரதர்
0085. அரசர்.
0086. அரசதேவர்
0087. அரசப்பிரியர்.
0088. அரசுப்பிரியர்
0089. அரசாண்டார்
0090. அரசாளர்.
0091. அரசாளியார்.
0092. அரசாட்சியார்.
0093. அரசுகொண்டார்
0094. அரசுக்குடையார்.
0095. அரசுக்குடையர்.
0096. அரசுடையார்.
0097. அரசுடையர்
0098. அரசுக்குளைச்சார்.
0099. அரசுக்குவாச்சார்.
0100. அரசுக்குழைத்தார்.
0101. அரிப்பிரியர்
0102. அரியப்பிள்ளை.
0103. அரியபிள்ளை.
0104. அரியதன்.
0105. அருண்மொழித்தேவர்.
0106. அருமொழிதேவர்.
0107. அருமடார்
0108. அருமத்தலைவர்
0109. அருமநாடார்.
0110. அருமைநாடார்.
0111அருமநாடர்.
0112. அருமடார்.
0113. அருவாநாடர்.
0114. அருவநாடார்
0115. அருமநாட்டார்.
0116. அருமைநாட்டார்.
0117. அருவாநாட்டார்
0118. அருவாத்தலைவர்.
0119. அருவாத்தலையர்.
0120. அலங்காரப்பிரியர்.
0121. அலங்கற்பிரியர்.
0122. அல்லிநாடாள்வார்.
0123. அலும்புள்ளார்
0124. அன்னக்கொடியார்.
0125. அன்னக்கொடியர்.
0126. அன்னமுடையார். .
0127. அன்னவாயில்ராயர்.
0128. அன்னவாசல்ராயர்.
0129. அண்ணவசல்ராயர
ஆ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஆர்தர்
ஆரக்கண்ணியர்
ஆரஞ்சுற்றியார்.
ஆரச்சுத்தியார்
ஆர்சுற்றியார்.
ஆர்சுத்தியார்.
ஆரிச்சுற்றியார்
ஆரம்பூண்டார்.
ஆரமுண்டார்.
ஆரூரார்.
ஆரூராண்டார்
ஆரூராளியார்.
ஆராளியார்
ஆலங்கொண்டார்
ஆலத்தொண்டார்.
ஆலத்தொண்டமார்
ஆலத்தரையர்.
ஆலப்பிரியர்.
ஆளற்பிரியர்.
ஆளம்பிரியர்.
ஆலம்பிரியர்
ஆவத்தியார்.
ஆவத்தயர்.
ஆவத்தார்.
ஆவணத்தார்
ஆவாண்டார்.
ஆவாண்டையார்
ஆவண்டார்
ஆவாளியார்.
ஆதாழியார்.
ஆதியபுரத்தார்
ஆளியார்.
ஆள்காட்டியார்.
ஆள்காட்டியர்
ஆற்க்காடுராயர்
ஆநந்தர்.
ஆஞ்சாததேவர்.
இ எழுத்தில் பட்டப்பெயர்கள்
இன்புச்செட்டி
இரட்டப்பிரியர்.
இரட்டப்பிலியர்
இராக்கதர்.
இராக்கசர்.
இராங்கிப்பிலியர்.
இராங்கப்பிரியர்
இராங்கியர்
இராசகுலம்
இராசாளியார்.
இராயாளியார்.
இராஜாளியார்.
இராதராண்டார்.
இராரண்டார்
இராதராயர்.
இராதரார்.
இராதரன்
இராமலிங்கராயதேவர்.
இராலிங்கராயதேவர்.
இராயங்கொண்டார்.
இராயமுண்டார்.
இராயதேவர்.
இராயர்
இராயப்பிரியர்.
இராசப்பிரியர்.
இராசகண்டியன்
இராசாப்பிரியர்.
இராயாண்டார்.
இறையாண்டார்.
இராரண்டர்.
இராயாளர்
இருங்களர்.
இருங்கள்ளர்.
இருங்களார்
இருங்கோளர்.
இருங்கோஇளர்.
இரும்பர்
இருப்பரையர்
இளங்கொண்டார்.
இளமுண்டார்.
இளந்தாரியார
ஈ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஈச்சங்கொண்டார்.
ஈங்கொண்டார்
ஈழங்கொண்டர்.
ஈழமுண்டார்
ஈழ்த்தரையர்
உ எழுத்தில் பட்டப்பெயர்கள்
உத்தங்கொண்டார்.
உத்தமுண்டார்
உத்தமங்கொண்டார்.
உத்தப்பிரியர்.
யுத்தப்பிரியர்.
உத்தமாண்டார்.
உத்தமண்டார்.
உத்தாரப்பிரியர்.
உத்தாரப்பிலியர்.
உய்யக்கொண்டார்.
உதாரப்பிரியர்.
உதாரப்பிலியர்
உலகங்கத்தார்.
உலகம்காத்தார்
உலவராயர்
உலகுடையார்.
உலகுடையர்
உலகுய்யர்.
உலயர்
உழுக்கொண்டார்
உழுப்பிரியர்.
உழுவாண்டார்.
உழுவண்டார்.
உழுவாளர்
உழுவாளியார்.
உழுவாட்சியார்.
உழுவுடையார்.
உழுவுடையர்.
உரங்கார்
உறந்தைகொண்டார்
உறந்தைப்பிரியர்
உறந்தையர்
உறந்தையாண்டார்
உரந்தையாளர்
உறந்தையாளியார்.
உறந்தையாட்சியார்.
உறந்தையுடையார்.
உறந்தையுடையர்.
உறந்தைராயர்
உறயர்.
உறியர்
ஊ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஊணர்.
ஊணியர்ஊணியார்
ஊமத்தயர்
ஊமத்தநாடார்.
ஊமத்தநாடர்.
உமத்தரையர்
ஊமைப்பிரியர்.
ஊமைப்பிலியர்
ஊரத்திநாடார்.
ஊரத்தியார்.
ஊரத்தியர்.
ஊரான்பிலியர்.
ஊரர்ன்பீலியர்.
எ எழுத்தில் பட்டபெயர்கள்
எண்ணாட்டுப்பிரியர்,
எத்திப்பிரியர்,
எத்தொண்டார்,
ஏ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஏத்திப்பிரியர்,
ஏத்திரிப்பிரியர்
எத்தியப்பிரியர்.
ஏத்தொண்டார்
ஏகம்பத்தொண்டார்
ஏகம்பத்துப்பிரியர்.
ஏன்னாட்டுப்பிரியர்
ஏனாதிகொண்டார்
ஏனாதிநாட்டுப்பிரியர்.
ஏனாதிப்பிரியர்,
ஏனாதியார்
ஐ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஐயப்பிரியர்,
ஐரைப்பிரியர்,
ஐந்நூற்றுப்பிரியர்.
ஒ எழுத்தில் பட்டபெயர்கள்.
ஒண்டிப்பிரியர்,
ஒண்டிப்பிலியர்.
ஒண்டிப்புலியார்
ஒளிகொண்டார்
ஒளிப்பிரியர்
ஒளியாண்டார்
ஒளியாளார்
ஒளியாளியார்.
ஒளியாட்சியார்
ஒளியுடையார்,
ஒளியுடையர்
ஒளிராயார்.
ஒளிவிராயர்
ஒற்றையார்.
ஒற்றையர்
ஓ எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஓசையார்,
ஓசையர்
ஓடம்போக்கியார்
ஓட்டம்பிடுக்கியார்,
ஓட்டம்பிடிக்கியார்
ஓந்திரியர்,
ஓந்திரையர்,
ஓந்தரையர்
ஓமசையர்,
ஒமனாயர்,
ஓனாயர்
ஓமாந்தரையர்
ஓமாமரையர்
ஓமாமுடையர்
ஓம்பிரியர்
ஓமாமெபிரியர்,
ஓயாம்பிலியர்
க எழுத்தில் பட்டபெயர்கள்
கங்கர்
கங்கநாட்டார்,
கங்கநாடர்,
கங்கைநாடர்,
கங்கைநாட்டார்,
கங்கநாட்டார்
கங்காளநாட்டார்
கங்கைராயர்
கச்சிராயர்,
கச்சைராயர்,
கச்சியராயர்
கஞ்சர்
கஞ்சராயர்
கடம்பர்
கடம்பரார்
கடம்பையர்
கடம்பராயர்,
கடம்பைராயர்
கடம்பப்பிரியர்,
கடியப்பிலியர்
கடாரம்கொண்டார்,
கடாரத்தலைவர்,
கடாத்தலைவர்,
கடாத்தலையர்
கடாரத்தரையர்,
கடாத்திரியர்
கடாரந்தாங்கியார்,
கடாரம்தாங்கியார்
கட்டத்தேவர்
கட்டராயர்
கட்டவிடார்
கட்டுவிடான்
கட்டக்கொண்டார்
கவிராயர்
கத்தியநாட்டார்
கடம்புராயர்
கல்விராயர்
கருத்திரையர்
கண்ணப்பட்டார்
கட்டவெட்டியார்
கட்டைகொண்டார்,
கட்டைக்குண்டார்
கட்டையார்,
கட்டயர்
கட்டையாளியார்,
கட்டாணியார்
கண்டப்பிரியர்
கண்டபிள்ளை,
கண்டப்பிள்ளை,
காடப்பிள்ளை
கண்டர்,
கன்னைக்காரர்
கன்னக்காரர்
கவுண்டர்
கண்டராயர்,
கண்டவராயர்
கண்டர்கிள்ளி,
கண்டர்சில்லி
கண்டியர்,
கண்டியார்
கண்டுவார்
கண்ணரையர்
கணியர்
கதவடியார்
கத்தரிகொண்டார்,
கத்தூரிமுண்டார்
கத்தரிநாடர்,
கத்திநாடர்
கத்தரியர்,
கத்திரியர்,
கத்தூரியர்
கத்தரியாளியார்
கரங்கொண்டார்,
கரமுண்டார்
கரம்பைகொண்டார்
கரடியார்,
கருடியார்
கரம்பராயர்
கரம்பையார்,
கரம்பையர்,
கரம்பியத்தார்
கருக்கொண்டார்,
கருத்துண்டார்,
கருப்பூண்டார்
கருடிகருப்பக்கள்ளர்
கருப்பற்றியார்,
கருப்பட்டியார்,
கரும்பற்றியார்,
கருப்பட்டியர்
கருப்பிரியர்
கருப்பையர்,
கருப்புளார்
கருமண்டார்,
கரமுண்டார்
கரும்பராயர்
கரும்பர்,
கருமர்
கரும்பாண்டார்
கரும்பாளர்
கரும்பாளியார்,
கரும்பாட்சியார்
கரும்புகொண்டார்
கரும்புடையர்
கரும்பூரார்
கருவபாண்டியர்
கருவாண்டார்
கருவாளர்
கருவாளியார்,
கருவாட்சியார்
கருவுடையார்,
கருவுடையர்
கருவூரார்,
கருப்பூரார்
கருப்பக்கள்ளன்
கலயர்
கலிங்கராயர்,
கலிங்கராயதேவர்,
கலியர்
கலியனார்
கலியாட்சியார்
கலிராயர்
களத்துவென்றார்
களந்தண்டார்,
களந்தையாண்டார்
களபர்,
களவர்,
களாவர்,
களர்களரி
கள்வன்
களப்பாளர்,
களப்பளார்,
களப்பிலார்,
களப்பிரர்
களப்பாளியார்,
களப்பாடியார்
களப்பாள்ராயர்,
களப்பாளராயர்
களள்குழியார்
களமுடையார்,
களமுடையர்
களக்குடையார்,
களக்குடையர்,
களக்கடையர்,
கழுத்திரையர்
கக்குடையர்
கனகராயர்
கன்னகொண்டார்
கன்னக்குச்சிராயர்
கன்னதேவர்
கன்னபாண்டியர்
கன்னப்படையார்,
கன்னப்படையர்,
கன்னப்பட்டையார்
கன்னப்பிரியர்
கன்னமுடையார்,
கன்னமுடையர்
கன்னராயர்,
கன்னவண்டி
கண்வாண்டார்
கந்தானி
கன்னிராயர்
கன்னாண்டார்
கன்னாளர்
கன்னாளியார்,
கன்னாட்சியார்
கஸ்தூரியார்
கா எழுத்தில் பட்டப்பெயர்கள்
காங்கயார்,
காங்கயர்,
காங்கெயர்,
காங்கேயர்,
காங்கியர்
காசிநாடர்,
காசிநாடார்
காசிராயர்
காடவராயர்
காடுவெட்டி,
காடுவெட்டியார்
காடுரார்
காராட்சியார்
காராண்டார்
காராளர்
காரி,
காரியார்
காருடையார்,
காருடையர்
காரைக்காச்சியார்
காரையாட்சியார்
கார்கொண்டார்
கார்ப்பிரியர்
கார்யோகர்
கார்யோகராயர்
காலாடியார்,
காவாடியார்
காவலகுடியார்,
காவலகுடியர்,
காலாக்குடியார்,
காலாக்குடியர்
காளாக்குழியார்
காலிங்கராயர்
காலிங்கராயதேவர்
காவலாளியார்,
காவலியார்,
காவாலியார்,
காவளியார்,
காளியார்
காவிரிவெட்டி,
காவெட்டி,
காக்கரிவெட்டி
காவெட்டார்
கி எழுத்தில் பட்டப்பெயர்கள்
கிடாத்திரியார்
கிருட்டினர்
கிளாவர்
கிளாக்கர்
கிளக்கட்டையார்
கிளாக்குடையார்
கிளாக்குடையர்
கிளாக்கடையார்,
கிளாக்கடையர்
கிள்ளியார்
கிளியிநார்
கிள்ளிகண்டார்,
கிளிகண்டார்,
கிளிகொண்டார்
கிள்ளிகொண்டார்,
கிள்ளிநாடர்,
கிளிநாடர்
கிள்ளியாண்டார்,
கிளியாண்டார்,
கிளிப்பாண்டார்
கிள்ளிராயர்,
கிளிராயர்
கிளுப்பாண்டார்
கிழண்டார்
கீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கீரக்கட்டையர்,
கீரைக்கட்டையார்
கீரமுடையார்,
கீரமுடையர்,
கீருடையார்,
கீருடையர்,
கீழுடையர்
கீரரையர்,
கீரையர்
கிழப்பிரியர்
கீழரையர்
கீழண்டார்,
கீழாண்டார்
கீழாளர்
கீழாளியார்,
கீழாட்சியார்
கீழையர்
கீழாளியார்,
கீழாட்சியார்
கீழுடையார்,
கீழுடையர்
கீழ்க்கொண்டார்
கு எழுத்தில் பட்டப்பெயர்கள்
குங்க்கிலியர்
குச்சராயர்,
குச்சிராயர்,
குச்சியராயர்
குடிகொண்டார்,
குடிக்கமுண்டார்,
குடியாளர்,
குடிபாலர்
குட்டுவர்
குட்டுவழியர்,
குட்டுவள்ளியர்
குண்டையர்,
குமதராயர்
குமரர்
குமரண்டார்,
குமாரண்டார்,
குமாராண்டார்,
குமறண்டார்,
குமரையாண்டார்,
குமரையண்டார்
குமரநாடர்
கும்பத்தார்,
கும்பந்தார்
கும்மாயன்
குருகுலராயர்
குளிகொண்டார்
குழந்தைராயர்,
குழந்தையர்
குறுக்கண்டார்,
குறுக்காண்டார்,
குறுக்கொண்டார்
குறுக்களாஞ்சியார்
குறுக்காளர்
குறுக்காளியார்,
குறுக்காட்சியார்
குறுக்கைப்பிரியர்
குருக்கையர்
குருக்கைப்பிரியர்
குருக்குடையார்,
குருக்குடையர்
குறும்பர்
குறும்பராயர்
கூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கூசார்,
கூர்சார்
கூடலர்
கூட்டர்
கூத்தப்பராயர்,
கூரார்,கூராயர்
கூரராயர்,
கூரராசர்
கூழாக்கியார்
கூழாளியார்,
கூழாணியார்
கூழையர்
கே எழுத்தில் பட்டப்பெயர்கள்
கேரளராயர்
கேளராயர்
கேரளாந்தகன்
கொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கொங்கணர்
கொங்கரையர்,
கொங்ககரையர்,
கொங்குதிரையர்
கொங்குராயர்
கொடிக்கமுண்டார்,
கொடிகொண்டார்,
கொடியாளர்,
கொடிபாலர்
கொடிராயர்,
கொடிக்கிராயர்,
கொடிக்கவிராயர்
கொடும்பர்,
கொடும்பையர்
கொடும்பராயர்,
கொடும்பைராயர்,
கொடும்புராயர்
கொடும்பாளுர்ராயர்,
கொடும்மளுர்ராயர்
கொடும்பிராயர்,
கொடும்புலியர்,
கொடுப்புலியர்,
கொடுப்புலியார்
கொடும்பைப்பிரியர்,
கொடும்பப்பிரியர்
கொடும்பையரையர்
கொட்டையண்டார்,
கொம்பட்டி
கொல்லத்தரையர்,
கொல்லமுண்டார்
கொழுந்தராயர்
கொழந்தைராயர்,
கொழந்தராயர்,
கொழுந்தைராயர்,
கொளந்தைராயர்
கொற்றங்கொண்டார்
கொற்றப்பராயர்,
கொத்தப்பராயர்
கொற்றப்பிரார்,
கொற்றப்பிரியர்,
கொற்றபிரியர்,
கொத்தப்பிரியர்
கொற்றமாண்டார்,
கொத்தமாண்டார்
கொற்றரையர்
கொற்றாண்டார்
கொற்றாளர்
கொற்றாளியார்,
கொற்றாட்சியார்
கொன்றையர்,
கொன்டையர்,
கொண்டையர்
கொன்னமுண்டார்
கொப்பாண்டியர்
கொல்லத்திரையர்
கொழுந்திரார்
கொப்பனார்
கொம்பியர்
கொத்தப்பிரார்
கோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
கோட்டரையர்
கோட்டையரையர்,
கோட்டைத்திரையர்
கோட்டைகருட்டியார்
கோட்டைமீட்டர்
கோட்டையாண்டார்,
கோதப்பிரார்
கோரர்
கோதண்டப்பிரியர்,
கோதண்டப்புலியர்
கோபாண்டியர்,
கோப்பணர்,
கோப்பர்
கோபாலர்
கோப்புலிங்கம்
கோப்பனார்
கோன்றி
கோழயர்,
கோழியர்
கோழிராயர்
கோறர்
கோனேரி
கோனெரிகொண்டார்
கோனெரிமேல்கொண்டார்,
கோனெரிமேல்கொண்டான்,
கோனெரிமேற்கொண்டார்
கோனாடுகொண்டார்
கோப்புலி
கோட்டத்துறையார்
கை எழுத்தில் பட்டப்பெயர்கள்
கைலாயதேவர்
கைலாயராயர்
கையராயர்
ச எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்
சக்கரர்
சக்கரை,
சர்க்கரை,
சக்கரையர்,
சாக்கரையர்
சக்கராயர்,
சக்காராயர்
சக்கரநாடர்
சக்கரநாட்டார்
சக்கரப்பநாட்டாள்வார்,
சக்கரையப்பநாட்டாள்வார்,
சர்க்கரையப்பநாட்டாள்வார்
சன்னவராயர்,
சனகராயர்,
சங்கத்தியார்,
சங்காத்தியார்,
சங்காத்தியர்,
சங்கப்பிரியர்,
சங்கப்பிலியர்,
சங்கேந்தியார்
சங்கரர்
சங்கரதேவர்
சங்கரராசர்
சங்கரராயர்
சரபோதி
சண்டப்பிரதேவர்
சத்திரங்கொண்டார்
சந்திரதேவர்
சமயர்,
சம்பட்டி
சமையர்
சமயதேவர்
சமயாளியார்,
சமயாட்சியார்
சட்டம்பி
சம்பிரதியார்
சம்பிரத்தேவர்,
சம்பிரதேவர்
சம்புராயர்
சம்புவராயர்
சம்மதிராயர்
சரவணர்,
சரவர்சயங்கொண்டார்,
சவுட்டியார்,
சமட்டியார்,
சம்பட்டியார்
சவுளியார்
சன்னநாடர்,
சன்னாடர்
சன்னராயர்,
சன்னவராயர்
சவுளி
சா எழுத்தில் பட்டப்பெயர்கள்
சாகோட்டைதாங்கியார்,
சாகொடைதாங்கியார்
சாணர்,
சாணையர்,
சாணரையர்
சானூரர்
சாதகர்
சாத்தயர்
சாத்தரையர்
சாமுத்தரையர்,
சாமுத்திரையர்,
சாமுத்திரியர்
சாம்பாளியார்,
சாம்பலாண்டியார்
சாலியதேவர்
சாளுக்கியர்
சாளுவர்
சாவளியார்,
சாவாடியர்,
சாடியார்
சி எழுத்தில் பட்டப்பெயர்கள்
சிங்களநாடர்,
சிங்கநாடார்
சிங்களப்பிரியர்,
சிங்கப்பிலியர்,
சிங்கப்பீலியர்,
சிங்கப்புலியர்
சிக்கராயர்,
சிங்கராயர்
சிங்களராயர்
சிங்களர்,
சிங்களார்
சிங்களாளியர்,
சிங்களாந்தகன்,
சிங்களேந்தியார்
சிங்காரியர்,
சிங்காரிக்கர்
சிந்துராயர்
சிட்டாட்சியார்,
சிற்றாட்சியார்,
சித்தாட்சியார்
சிந்துராயர்
சிலம்பர்,
சிலுப்பர்,
சிலுப்பியர்,
சிலுகியர்,
சிலுப்பியார்
சிவலிதேவர்
சிவலிங்கதேவர்
சிவன்
சிவந்தாக்கி
சிறுநாடர்
சிறுநாட்டுராயர்
சிறுப்பிரியர்
சிறுமாடர்,
சிறுமடார்
சிறுராயர்
சீனத்தரயைர்
சு எழுத்தில் பட்டப்பெயர்கள்
சுக்கிரர்
சுக்கிராயர்,
சுக்கிரபராயர்,
சுக்கிரியராயர்
சுண்டையார்,
சுண்டையர்,
சுன்றயர்
சுத்தவீரர்,
சுற்றிவீரர்
சுந்தர்
சுந்தரராயர்
சுரக்குடியார்,
சுரக்குடையர்,
சுரைப்பிடுங்கியார்,
சுரப்பிடுங்கியர்,
சூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சூரக்குடையர்,
சூரக்கொடையர்
சூரப்பிடுங்கியர்
சூரக்கோட்டையார்,
சூரக்கோட்டையர்
சூரப்பிரியர்,
சூரப்பிலியர்
சூரயர்,
சூரியர்
செ எழுத்தில் பட்டப்பெயர்கள்
செட்டியார்செட்டிரையர்
செட்டரையர்
செம்படையார்,
செம்படையர்,
செம்புடையர்
செம்பரையர்
செம்பியங்கொண்டார்,
செம்பொன்கொண்டார்
செம்பியத்தரசு
செம்பியதரையர்
செம்பியப்பிரியர்,
செம்பிலியர்,
செம்பிழியர்
செம்பியமுடையார்,
செம்பியமுடையர்
செம்பியமுத்தரசு,
செம்பியமுடையர்
செம்பியமுத்தரையர்,
செம்பியமுத்திரியர்
செம்பியர்,
செம்பர்,
செம்பொர்
செம்பியரையர்
செம்மைக்காரர்
செம்மைகொண்டார்
செயங்கொண்டார்,
செங்கிடியர்
செந்தார்,
செந்தியார்
செல்லர்
செல்லரையர்
செழியதரையர்
செனவராயர்,
சென்னியாண்டார்,
சென்னண்டார்
சென்னிராயர்
சென்னித்தலைவர்
சென்னிநாடர்,
சென்னிகொண்டார்,
சென்னாடார்
சே எழுத்தில் பட்டப்பெயர்கள்
சேனைகொண்டார்,
சேனக்கொண்டார்
சேனைநாடர்,
சேனைநாடார்
சேசேணர்,
சேணரையர்,
சேணாடர்,
சேணாநாடார்,
சேனைநாடார்,
சேணாண்டார்,
சேண்கொண்டார்,
சேனக்கொண்டார்,
சேனைக்கொண்டார்,
சேண்டப்பிரியர்,
சேண்டாப்பிரியர்,
சேண்பிரியர்,
சேண்ராயர்,
சேதுராயர்,
சேதிராயர்
சேதிரார்,
சேதுரார்
சேதுநாடர்,
சேதிநாடர்
சேந்தமுடையார்,
சேந்தமுடையர்,
சேந்தமடையார்
சேந்தராயர்,
சேந்தர்,
சேந்தூரியர்,
சேத்தூரியர்
சேய்ஞலரையர்,
சேய்ஞலாண்டார்
சேய்ஞலாளர்
சேய்ஞலாளியர்,
சேய்ஞலாட்சியார்
சேய்ஞற்கொண்டார்,
சேங்கொண்டார்
சேய்ஞற்பிரியர்
சேய்நற்பிரியர்
சேய்ப்பிரியர்
சேய்ப்பிளர்,
சேப்பிளார்,
சேப்பிழார்
சேரமுடியர்,
சேறைமுடியர்
சேர்வைகாரர்,
சேர்வை
சேலைக்கொண்டார்
சேறியர்
சேறைராயர்
சேற்றூரரையர்
சேனாதிபதி,
சேனாதிபதியார்,
சேனாபதியார்,
சேனாதியார்,
சேனாதி,
சேனாதிபர்
சேனைகொண்டார்
சேனைத்தலைவர்,
சேனைத்தலையர்
சேனைநாடார்
சேவன்
சொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சொக்கராயர்,
சொரப்பரையர்,
சொரப்பளிங்கியார்
சொறியர்
சோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
சோணாடர்
சோணாடுகொண்டார்,
சோணாருண்டார்
சோணையர்
சோதிரையர்
சோமணநாயக்கர்,
சோமநாயக்கர்,
சோதிரியர்
சோமநாடர்,
சோமநாடார்
சோழர்,
சோழகர்,
சோழயர்,
சோழவர்,
சோலையர்,
சோமணர்
சோழன்
சோழகங்கநாட்டார்,
சோழகங்கர்,
சோழகன்னகுச்சிராயர்
சோழசனகராசர்
சோழகேரளர்
சோழகோன்
சோழங்கர்
சோழங்கதேவர்,
சோழகங்கதேவர்
சோழங்க தேவ அம்பலம்
சோமநாயக்கர்
சோழங்கநாடர்,
சோழங்கநாடார்
சோழங்கொண்டார்
சோழசனகராசர்,
சோழதரையர்,
சோழதிரையர்,
சோழதிரியர்,
சோழுதிரையர்,
சோதிரையர்
சோழதேவர்,
சோமதேவர்
சோழநாடர்,
சோமநாடர்,
சோமநாடார்
சோழநாயகர்
சோழபல்லவர்
சோழபாண்டியர்,
சோழப்பிரியர்
சோழரசர்,
சோமரசர்
சோழராசர்,
சோமராசர்
சோழரையர்
சோழயோத்தியராசர்
சோழங்கிளையார்
சோழாட்சியார்,
சோமாசியார்
ஞா எழுத்தில் பட்டப்பெயர்கள்
ஞானிசேவகர்
ஞானசெல்வர்
ஞானியர்
த எழுத்தில் பட்ட்ப்பெயர்கள்
தக்கோலர்
தக்கோலாக்கியர்,
தக்கோலாக்கியார்,
தனஞ்சுரார்
தக்கடியார்
தஞ்சுண்டார்
தக்கலையார்
தஞ்சைக்கோன்
தஞ்சைராயர்,
தஞ்சிராயர்
தனஞ்சராயர்
தண்டத்தலைவர்,
தண்டத்தலையர்,
தண்டநாயகர்
தத்தாண்டார்,
தத்துவண்டார்,
தத்துவாண்டையார்,
தமிழுதரையர்
தழிஞ்சிராயர்
தம்பாக்கியார்,
தம்பாக்குடிக்கியார்
தம்பிராயர்,
தம்பிரார்
தலைமலையார்,
தலைமுறையார்
தலையர்,
தலைவர்
தலைராயர்,
தனராயர்
தலைசைராயர்,
தனசைராயர்
தளவாய்
தளிகொண்டார்
தளிதியர் தளிநாடர்
தளிப்பிரியர்
தளியர்
தளியாண்டார்
தளியாளர்
தளியாளியார்,
தளியாட்சியார்
தளியுடையார்
தனிராயர்
தனுசர்,
தனுச்சர்
தன்மபால்குடிக்கியார்
தா எழுத்தில் பட்டப்பெயர்கள்
தாங்கியர்
தாளிதியார்
தாளியர்தாளதியார்
தாந்தாணி
தானாதியார்
தானாதிபதியார்
தானாபதியார்
தானாதிபர்
தானைத்தலைவர்,
தானைத்தலையர்
தான்தோன்றியார்,
தான்தோணியார்
தாக்கலாக்கியார்
தி எழுத்தில் பட்டப்பெயர்கள்
திண்ணாப்பிரியர்
தின்னாப்பிரியர்,
தியாகர்,
தியாகி
திராணியார்,
திராணியர்
தியேட்டாளர்
திருக்கட்டியர்,
திருக்காட்டியர்,
திருக்காட்டியார்
திருக்காட்டுராயர்
திருப்பூட்சியார்
திருப்பூவாட்சியார்,
திருப்புழுச்சியார்,
திருவளச்சியார்
திருமக்கோடைதாங்கி,
திருவுடைதாங்கி
திருமயிலர்,
திருமார்
திருமயிலாண்டார்,
திருமயிலாட்சியார்,
திம்மாச்சியார்
திருமுடியார்
திருநாள்பிரியர்
து எழுத்தில் பட்டப்பெயர்கள்
துண்டர்,
துண்டயர்,
துண்டராயர்,
துண்டுராயர்,
துரையர்துண்டீரராயர்
துவார்
துறைகொண்டார்
துரையமர்ந்தார்,
துறந்தார்
துறையாண்டார்,
துறவாண்டார்,
துறையுண்டார்
தெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
தெத்துவென்றார்,
தெத்துவெண்டார்
தெலிங்கராயர்
தென்கொண்டார்,
தெங்கொண்டார்,
தெங்கண்டார்,
தெங்கிண்டார்
தென்னங்கியர்
தென்னதிரையர்
தெனந்திரையர்
தென்னப்பிரியர்,
தென்னரையர்,
தென்னறையர்
தென்னவராயர்
தென்னவன்,
தென்னர்
தே எழுத்தில் பட்டப்பெயர்கள்
தேசிராயர்,
தேசுராயர்
தேட்டாளர்
தேவர்தேளி
தேவப்பிரியர்
தேவராயர்.
தேவாண்டார்,
தேவண்டார்
தேவாளர்
தேவாளியார்,
தேவாட்சியார்
தேவுகொண்டார்
தேவுடையார்,
தேவுடையர்
தொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
தொண்டார்
தொண்டர்
தொண்டையர்
தொண்டைப்பிரியர்,
தொண்டாப்பிரியர்
தொண்டைமான்,
தொண்டைமார்
தொண்டைமான்கிளையார்
தொண்டையர்
தொரையண்டார்
தொத்துவாண்டையார்
தோ எழுத்தில் பட்டப்பெயர்கள்
தோப்பையார்,
தோப்பையர்
தோப்பைராயர்
தோன்றார்,
தோணார்
தோணாத்தி
தோப்பை
தோளர்
ந எழுத்தில் பட்டப்பெயர்கள்
நண்டர்
நண்டல்ராயர்
நண்டலாறுவெட்டி,
நண்டலாறுவெட்டியார்,
நண்டுவெட்டியார்,
நண்டுவெட்டி
நந்தியர்,நந்தர்
நந்திராயர்,
நந்தியராயர்
நங்கியார்,
நரங்கியர்,
நரயர்,
நரியர்
நரங்கியப்பிரியர்,
நரங்கியப்பிலியர்,
நரங்கப்பிலியர்
நரசிங்கர்
நரசிங்கதேவர்,
நரங்கியதேவர்
நரசிங்கப்பிரியர்
நரசிங்கராயர்
நல்லப்பிரியர்
நல்லவன்னியர்
நல்லிப்பிரியர்,
நள்ளிப்பிரியர்
நன்னியர்,
நயினியர்,
நைனியர்,
நைனியார்
நன்னிராயர்
நா எழுத்தில் பட்டப்பெயர்கள்
நாகங்கொண்டார்
நாகதேவர்
நாகநாடர்
நாகப்பிரியர்
நாகர்,
நாகன்
நாகராயர்
நாகாண்டார்
நாகாளர்
நாகாளியார்,
நாகாட்சியார்
நாகுடையார்,
நாகுடையர்
நாணசிவன்,
நாணசேவர்,
நானசேவர்,
நாடர்,
நாடார்
நாட்டார்
நாட்டாள்வார்,
நாடாள்வார்,
நாடாவார்
நாட்டரசர்
நாடாவி
நாட்டரியார்
நாட்டரையர்,
நாட்டறையர்
நாய்க்கர்,
நாயக்கர்
நாய்க்காடியார்,
நாக்காடியார்,
நாய்க்காவாடியார்
நார்த்தேவர்,
நார்த்தவார்,
நாரத்தேவர்
நாவிளங்கியார்
நாவலங்கியார்
நாணுசட்தேவர்
நீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
நீலங்கொண்டார்
நெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
நெடுங்கொண்டார்,
நெடுமுண்டார்,
நெறிமுண்டார்
நெடுத்தர்,
நெடுத்தார்
நெடுந்தரையர்
நெடுவர்,
நெட்டையர்
நெடுவாண்டார்,
நெடுவண்டார்,
நெடுவாண்டையர்
நெடுவாளியார்,
நெடுங்காளியர்
நெல்லிகொண்டார்
நெல்லிதேவர்
நெல்லிப்பிரியர்,
நெல்லியர்
நெல்லியாண்டார்
நெல்லியாளர்
நெல்லியாளியார்,
நெல்லியாட்சியார்
நெல்லியுடையார்
நெல்லிராயர்
ப எழுத்தில் பட்டப்பெயர்கள்
பகட்டுவார்,
பவட்டுவார்,
பவட்டுரார்
பகட்டுராயர்
பக்தாளர்
பங்களராயர்
பசண்டியார்
பசும்படியார்,
பசும்பிடியார்,
பசும்பிடியர்
பசுபதியார்,
பசுபதியர்
பஞ்சரமார்
பஞ்சராயர்
பஞ்சரையர்
பஞ்சையர்
பஞ்சந்தரையர்,
பஞ்சநதரையர்
படைத்தலைவர்,
படைத்தலையர்
படையாட்சி,
படையாட்சியார்,
படையெழுச்சியார்
பட்சியர்
பட்டாண்டார்
பட்டாளர்
பட்டாளியார்,
பட்டாசியார்
பட்டுக்கட்டியார்
பட்டுகொண்டார்
பட்டுடையர்
பட்டுப்பிரியர்
பட்டுராயர்
பணிகொண்டார்
பணிபூண்டார்
பண்ணிக்கொண்டார்,
பண்ணிக்கொண்டர்,
பன்னிக்கொண்டார்,
பன்றிகொண்டார்
பன்னம் கொண்டார்
பண்ணிமுண்டார்,
பண்ணியமுண்டார்,
பண்ணிக்குட்டியார்
பண்டாரத்தார்
பத்தாண்டார்
பத்தாளர்,
பக்தாளர்,
பயத்தார்
பத்தாளியார்,
பத்தாட்சியார்,
பத்தாச்சியார்,
பெத்தாச்சியார்
பத்துகொண்டார்
பத்துடையார்,
பத்துடையர்
பதுங்கராயர்,
பதுங்கரார்,
பதுங்கிரார்,
பதுங்கியார்,
பதுங்கர்
பவம்பாளியர்
பம்பாளியார்
பம்பாளியர்,
பயிற்றுராயர்
பரங்கிலிராயர்,
பரங்கிராயர்
பரங்கியர்
பருதிகொண்டார்
பருதிிதேவர்
பருதிநாடர்
பருதிப்பிரியர்
பருதியர்
பருதியாண்டார்
பருதியாளர்
பருதியாளியார்,
பருதியாட்சியார்
பருதியுடையர்
பருதிராயர்
பருதிகொண்டார்
பருதிக்குடையார்
பருதிவாண்டையார்
பப்புவெட்டியார்
பலமுடையர்,
பலமுடியர்
பல்லவதரையர்
பல்லவநாடர்
பல்லவர்
பல்லவராயர்
பல்லவவாண்டார்,
பல்லவாண்டார்
பவட்டுவார்,
பாட்டுவார்
பழங்கொண்டார்,
பழனங்கொண்டார்,
பழங்கண்டார்
பழ்சைப்பிரியர்
பழசையர்,
பழசையார்
பழசையாளர்,
பழைசையாளர்
பழசையாளியார்,
பழைசையாளியார்,
பழைசையாட்சியார்,
பழசையாட்சியார்
பழத்தார்,
பழுவேட்டரையர்
பழைசைகொண்டார்
பழைசைநாடர்
பழைசையாண்டார்
பழைசையுடையார்
பழையாறுகொண்டார்
பழையாற்றார்
பழையாற்றரையர்
பனங்கொண்டார்
பனைகொண்டார்
பனைநாடர்
பனைப்பிரியர்
பனையதேவர்
பனையர்,
பன்னையர்,
பன்னையார்
பனையாண்டார்
பனையாளர்
பனையாளியார்,
பனையாட்சியார்
பனையுடையார்,
பனையுடையர்
பனைராயர்
பா எழுத்தில் பட்டப்பெயர்கள்
பாச்சிகொண்டார்,
பாச்சுண்டார்
பாச்சிப்பிரியர்,
பாப்பிலியர்,
பரிசப்பிலியர்
பாச்சிராயர்
பாச்சிலாளி,
பாச்சிலாளியார்,
பாண்டராயர்,
பாண்டுராயர்
பாண்டுரார்
பாண்டிராயர்
பாண்டியர்,
பாண்டியன்
பாண்டியராயர்
பாப்பரையர்
பாப்பிரியர்,
பாப்பிலியர்
பாப்புடையார்,
பாப்புடையர்
பாப்புரெட்டியார்,
பாப்புவெட்டியார்
பாம்பாளியார்,
பாம்பாளியர்,
பாலைநாடர்,
பானாடர்
பாலைநாட்டர்,
பானாட்டார்,
பால்நாட்டார்
பாலையர்,
பாலியர்,
பாலியார்
பாலையாண்டார்,
பாலாண்டர்
பாலையுடையர்,
பாலுடையர்,
பாவுடையர்,
பவுடையார்
பாலைராயர்,
பால்ராயர்
பி எழுத்தில் பட்டப்பெயர்கள்
பிசலண்டார்
பிசலுண்டார்
பின்னாண்டார்
பின்னுண்டார்
பிச்சயன்,பிச்சயர்
பிச்சயங்கிளையார்
பிச்சராயர்
பிச்சாண்டார்
பிச்சாளியார்,
பிச்சாளியர்,
பிச்சாடியர்,
பிச்சாடியார்
பிரமராயர்
பிரமர்
பிலியராயர்
பிள்ளைராயர்
பிலிமுண்டார்
பிலியிராயர்
பிலுக்கட்டி
பீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பீலியர்
பீலிமுண்டார்
பு எழுத்தில் பட்டப்பெயர்கள்
புத்தகழிச்சார்
புத்திகழிந்தார்,
புற்றில்கழிந்தார்,
புட்டில்கழிந்தார்
புலிகொண்டார்,
புலிக்கொடியர்,
புலிக்கொடியோர்,
புலிக்குட்டியார்,
புலிக்குட்டியர்,
புல்லுக்கட்டியர்
புலியாக்கியார்,
புலிக்கியார்,
புளுக்கியார்புழுக்கி
புலியூரார்
புலிராயர்
புலியிரார்
புள்ளராயர்,
புள்ளவராயர்
புரங்காட்டார்
புறம்பயங்கொண்டார்,
புறம்பயத்தார்,
புறம்பயப்பிரியர்
புறம்பயமுடையர்
புறம்பயர்,
புறம்பயாண்டார்
புறம்பயாளர்
புறம்பயாளியார்,
புறம்பயாளியர்,
புறம்பயாட்சியார்,
புறம்பயாட்சியர்
புன்னாகர்,
புண்ணாக்கர்
புன்னைகொண்டார்
புன்னையர்,
பூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பூனையர்
பூக்கட்டியார்
பூக்கொண்டார்
பூச்சியார்,
பூட்சியார்,
பூட்டங்கண்ணியர்
பூதரையர்,
பூதாங்கியார்,
பூராங்கியார்
பூங்காவணத்தார்
பூப்பிரியர்
பூராயர்பூலார்
பூவர்
பூவாண்டார்,
பூவாண்டர்
பூவாளர்
பூவாளியார்,
பூவாட்சியார்
பூவுடையர்
பூழிநாடர்,
பூழிநாடார்
பூழியர்பிரான்
பூழியூரார்
பூழிராயர்
பூவனையரையர்
பெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பெரிச்சிக்கணக்கர்
பெரியாட்சியார்
பெத்தாச்சி
பெரிச்சியார்
பே எழுத்தில் பட்டப்பெயர்கள்
பேரரையர்,
பேதரையர்
பேயர்
பேதிரியர்
பைதுங்கர்
பொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
பொதியர்,
பொய்யர்,
பொய்ந்தார்
பொயிந்தார்
பொம்மையர்
பொய்கொண்டார்,
பொய்யுண்டார்,
பொய்கையாண்டார்
பொய்ந்ததேவர்,
பொய்ந்தராயர்,
பொரிப்பொறுக்கியார்
பொறையர்
பொரைபொறுத்தார்
பொற்றையர்,
பொத்தையர்
பொத்தையன்
பொற்றைவெட்டியார்,
பொற்றைவெட்டி,
பொத்தன்வெட்டியார்
பொன்னங்கொண்டார்,
பொன்னமுண்டார்
பொன்பூண்டார்
பொன்னங்குட்டியார்
பொன்னக்குட்டி
பொன்னதேவர்
பொன்னவராயர்
பொன்னாண்டார்
பொன்னாப்பூண்டார்
பொன்னாரம்பூண்டார்
பொன்னாளியார்,
பொன்னானியார்,
பொன்னானீயார்,
பொன்மாரியார்
பொண்டவராயர்
போ எழுத்தில் பட்டப்பெயர்கள்
போசளர்
போய்ந்தார்
போய்ந்தராயர்,
போய்ந்தரராயர்
போசுதேவர்
போரிற்கொளுத்தியார்,
போரைக்க்ப்ளுத்தியார்
போரிற்சுற்றியார்,
போரைச்சுற்றியார்
போரிற்பொறுக்கியார்,
போர்பொறுக்கியார்,
போர்க்கட்டியார்,
போர்க்கட்டியர்,
போர்க்காட்டியார்,
போத்திரியர்
போக்காட்டியார்
போறிர்கட்டியார்
போர்மூட்டியார்
போதரையர்
ம எழுத்தில் பட்டப்பெயர்கள்
மங்கலதேவர்,
மங்கதேவர்,
மங்காத்தேவர்,
மொங்கத்தேவர்
மங்கலத்தார்
மங்கலநாடர்
மங்கலப்பிரியர்
மங்கலராயர்
மங்கலர்,
மங்கலார்
மங்கலண்டார்
மங்கலாளர்
மங்கலளியார்,
மங்கலாட்சியார்
மங்கல்கொண்டார்
மட்டியார்,
மட்டையர்
மட்டையாண்டார்
மட்டைராயர்
மணவாளர்
மணிக்கிரார்
மணிராயர்
மண்கொண்டார்,
மங்கொண்டார்,
மங்கண்டார்,
மண்ணைகொண்டார்
மண்டலமாளியார்
மண்டலராயர்,
மண்டராயர்
மண்ணியார்,
மண்ணியர்,
மண்ணையார்,
மண்ணையர்,
மண்டலார்
மண்ணவேளார்
மணியர்,
மணியார்
மனவாரர்
மன்னயர்,
மன்னியர்
மண்ணிராயர்,
மணிக்கராயர்
மண்மலைக்காளியார்
மண்வெட்டிக்கூழ்வழங்கியார்,
மண்வெட்டியில்கூழ்வாங்கி
மதப்பிரியர்,
மதப்பிலியர்,
மதியாப்பிரியர்
மதில்சுற்றி
மணிகொண்டார்
மங்களார்
மன்னைசிங்காரி
மதமடக்கு
மநமடக்கு
மந்திரியார்,
மந்தியார்
மயிலாண்டார்,
மயிலாண்டர்
மருங்கராயர்,
பருங்கைராயர்,
கைராயர்
மலையர்
மலையமான்
மலையராயர்
மலையரையர்
மலைராயர்,
மலையராயர்
மல்லிகோண்டார்
மழநாடர்
மழவராயர்
மழவர்
மழவாளியார்,
மழுவாடியார்
மனமஞ்சார்
மன்னையர்,
மன்னையார்,
மன்னையர்,
மன்னியர்,
மண்ணியர்,
மண்ணையர்
மன்னசிங்கர்,
மன்னசிங்காரியார்
மன்னதேவர்
மன்னவேளார்,
மன்னவேள்
மன்றாடியார்
மா எழுத்தில் பட்டப்பெயர்கள்
மாங்கொண்டார்
மாங்காடர்
மாங்காட்டார்
மாகாளியார்
மாதராயர்,
மாதைராயர்,
மாதுராயர்,
மாத்துராயர்
மாதவராயர்
மாதிரார்
மாதையர்,
மாதயர்
மாதையாண்டார்,
மாதயாண்டார்
மாத்துளார்
மாநாடர்,
மாடர்,
மாந்தராயர்
மாந்தையரையர்,
மாந்தரையர்
மாவிழிசுத்தியார்
மாதையுண்டார்
மாப்பிரியர்
மாமணக்காரர்
மாம்பழத்தார்,
பழத்தார்
மாலையிட்டார்
மால்
மாவலியார்
மாவாண்டார்,
மாவாண்டர்
மாவாளர்
மாவாளியார்,
மாவாட்சியார்
மாவுடையார்
மாவெற்றியார்,
மாவெட்டியார்
மாளிகைசுற்றியார்
மாளிச்சுற்றியார்,
மாளிச்சுத்தியார்
மாளிச்சர்
மாளுவராயர்
மானங்காத்தார்
மானத்தரையர்,
மானமுத்தரையர்
மானம்விழுங்கியார்,
மானவிழுங்கியார்,
மானமுழுங்கியார்
மான்சுத்தியார்
மானவழங்கியார்
மானுசதேவர்
மி எழுத்தில் பட்டப்பெயர்கள்
மின்கொண்டார்
மின்னாண்டார்
மின்னாண்டார்
மின்னாளியார்
மீனவராயர்
மு எழுத்தில் பட்டப்பெயர்கள்
முடிகொண்டார்,
முடியைக்கொண்டார்
முட்டியார்
முணுக்காட்டியார்,
முனுக்காட்டியார்
முண்டார்,
முண்டர்
முதலியார்
முத்தரையர்
முத்துக்குமார்
மும்முடியார்,
மும்முடியர்
முருகர்
முறையார்
முனைகொண்டார்,
முனைமுண்டார்
முனைதரையர்,
முனையதிரியர்
முனையாளியார்,
முனையாட்சியார்
மூ எழுத்தில் பட்டப்பெயர்கள்
மூங்கிலியார்,
மூங்கிலியர்
மூரியர்,
மூரையர்,
முறையார்
மூவர்,மூசி
மூசியார்
மூட்டார்
மூன்றர்,
மூக்குவெள்ளையர்
மூவராயர்கண்டார்
மூவரையர்
மூவாளியார்
மூவெற்றியார்,
மூவெட்டியார்,
மூளைவெட்டியார்
மூவேந்த்ரையர்
மூன்றாட்சியார்,
மூண்டவாசியார்,
மூண்டாசியார்
மெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
மெய்க்கன்கோபாலர்
மெனக்கடார்,
மெனக்கடர்
மெட்டத்தேவர்
மே எழுத்தில் பட்டப்பெயர்கள்
மேல்கொண்டார்,
மேற்கொண்டார்,
மேல்கொண்டார்
மேல்நாடர்,
மேனாடர்
மேல்நாட்டுராயர்,
மேனாட்டரையர்
மேனாட்டுத்தேவர்
மொ எழுத்தில் பட்டப்பெயர்கள்
மொட்டதேவர்
மொட்டாளியார்,
மொட்டாளியர்,
மொட்டாணியர்
மோகூர்ப்பிரியர்,
மோதப்பிலியர்
வ எழுத்தில் பட்டப்பெயர்கள்
வயிராயர்,
வயிரவர்
வங்கணர்,
வங்கத்தரையர்
வங்கர்
வங்கராயர்,
வங்கனராயர்
வங்காரமுத்தரையர்,
வங்காரமுத்திரியர்,
வங்கானமுத்திரையர்
வஞ்சிராயர்,
வடுராயர்,
வடுகராயர்
வண்டர்,
வடிவிராயர்
வடுவுரையார்
வாண்டார்
வண்டதேவர்
வம்பாளியார்
வர்மர்
வலங்கொண்டார்,
வலங்கண்டார்
வல்லக்கோன்
வல்லங்கொண்டார்,
வல்லுண்டார்
வல்லத்தரசு,
வல்லத்தரசர்
வல்லத்தரையர்,
வல்லவரையர்
வல்லமாண்டார்
வல்லவராயர்
வல்லரண்டார்
வல்லாண்டார்,
வல்லண்டார்
வல்லாளதேவர்,
வள்ளாளதேவர்,
வல்வாளதேவர்
வல்லாளியார்,
வல்லாடியார்,
வல்லிடியார்
வழியார்
வழுதியார்
வழுவாளியார்,
வழுவாடியார்,
வழுவாட்சியார்
வலங்கூரர்
வளத்தாதேவர்
வளம்பர்,வளவர்
வள்ளையர்
வள்ளைராயர்
வன்னிகொண்டார்
வன்னிமுண்டார்,
வண்ணிமுண்டார்,
வண்ணியமுண்டார்
வன்னியர்,
வன்னியனார்
வா எழுத்தில் பட்டப்பெயர்கள்
வாச்சார்,
வாச்சியார்
வாச்சுக்குடையார்,
வாச்சிக்குட்டியர்
வாஞ்சிராயர்,
வாட்கொண்டார்,
வாள்கொண்டார்
வாட்டாட்சியார்,
வாட்டாச்சியார்,
வாட்டாச்சியர்
வாணக்கர்
வணதரையர்,
வாணதிரையர்,
வாணதிரியர்,
வாணாதிரியர்
வாணாதிராயர்
வாணரையர்
வாண்டாப்பிரியர்,
வண்டப்பிரியர்
வாண்டையார்,
வண்டயர்
வாண்டராயர்,
வண்டைராயர்
வாப்பிரியர்,
வாப்பிலியர்
வாயாண்டார்
வாயாளர்
வாயாளியார்,
வாயாடியார்,
வாயாட்சியார்.
வாய்ப்புலியார்
வாளாடியார்
வாலியர்
வாலிராயர்
வாவுடையர்
வாளமரர்வாளையார்
வாளாண்டார்
வாளாளர்
வாளாளியார்,
வாளாட்சியார்
வாளுக்குவலியர்,
வாளுக்குவேலியர்
வாளுடையர்
வாளுவராயர்
வாள்கொளியார்
வாள்பிரியர்,
வாட்பிரியர்
வாள்ராயர்
வாள்வெற்றியார்,
வாள்வெட்டியார்,
வாளால்வெட்டியார்
வி எழுத்தில் பட்டப்பெயர்கள்
விக்கிரமத்தார்
விக்கிரமத்தரையர்
விசயதேவர்,
விசயத்தேவர்,
விசாதேவர்,
விசயராயர்,
விசையராயர்,
விசராயர்,
விசுராயர்
விசாறுண்டார்
விசுவராயர்,
விசுவரார்
விசயாண்டார்,
விசலர்
விசலப்பிரியர்
விசலராயர்
விசலாண்டார்,
விசலண்டார்,
விசலாளர்
விசலாளியர்,
விசாலாளியார்,
விசலாட்சியார்,
விசாலாட்சியார்
விசலுடையர்
விசல்கொண்டார்,
விசலுண்டார்,
விசல்தேவர்
விசல்நாடர்
விசுவராயர்
விண்டுராயர்,
விஞ்சிராயர்,
விஞ்சைராயர்
விருதராசர்
விருதராசபயங்கரர்
விருதலார்,
விருதுளார்
விலாடத்தரையர்
வில்லர்
வில்லதேவர்
வில்லவதரையர்,
வில்லவதரையனார்
வில்லவராயர்,
வில்வராயர்
விழுப்பாதராயர்
விளப்பர்
விற்பனர்,
விட்டுணர்
விற்பன்னராயர்
வினவற்பிரியர்,
வினைத்தலைப்பிரியர்,
வினைத்தலைப்பிலியர்
வீ எழுத்தில் பட்டப்பெயர்கள்
வீசண்டார்
வீசாண்டார்
வீச்சாதேவர்
வீண்டுராயர்,
வீணதரையர்,
வீணாதிரியர்
வீரங்கொண்டார்,
வீரமுண்டார்,
வீரமுள்ளார்
வீரப்பிரியர்,
வீரப்பிலியர்,
வீரப்புலியார்
வீராண்டார்,
வீராண்டியார்
வீணாதரையர்,
வீணாதிரியர்,
வீனைதிரையர்
வெ எழுத்தில் பட்டப்பெயர்கள்
வெக்காலியார்
வெங்களபர்,
வெங்களப்பர்
வெங்கிராயர்
வெட்டுவராயர்
வெட்டுவார்,
வெட்டுவர்,
வெட்டர்
வெண்டர்,
வென்றார்
வெண்டதேவர்,
வெண்டாதேவர்
வெண்ணுமலையார்,
வெண்ணுமலையர்
வெள்ளங்கொண்டார்
வெள்ளடையார்.
வெள்ளடையர்
வெள்ளதேவர்
வெள்ளப்பனையர்
வெள்ளாளியார்,
வெள்ளாணியார்
வெற்றியர்,
வெறியர்
வே எழுத்தில் பட்டப்பெயர்கள்
வேங்கைப்பிரியர்,
வேங்கைப்பிலியர்
வேங்கைராயர்,
வேங்கையன்
வேங்கைகொண்டார்
வேங்கைத்தேவர்
வேங்கைநாட்டார்
வேங்கைகோட்டையார்,
வேங்கையாண்டார்,
வேங்கையாளியார்,
வேட்கொண்டார்
வேட்ப்பிரியர்
வேணாடர்
வேணுடையார்,
வேணுடையர்
வேம்பராயர்
வேம்பையன்
வேம்பர்
வேம்பாண்டார்
வேளாண்டார்
வேளார்வேலர்
வேளாளியார்,
வேளாட்சியார்
வேளுடையார்,
வேளுடையர்
வேளுரார்,
வேளுரர்
வேள்
வேள்ராயர்
வை எழுத்தில் பட்டப்பெயர்கள்
வைகராயர்,
வையராயர்
வைதும்பர்,
வைதுங்கர்,
வைதும்பராயர்,
வைராயர்,
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதிய பட்டங்கள்
இராதரன்
இரும்பர்
இன்பச்செட்டி
ஊணியார்
ஊர்த்தியார்
கட்டுவிடான்
கட்டையர்
கண்டுவார்
கணியர்
கருப்பக்கள்ளன்
கழுத்திரையர்
களரி
கன்னக்காரர்
கன்னவண்டி
காரி
கிடாத்திரியார்
கிழண்டார்
கிளுப்பண்டார்
கும்மாயன்
கொம்பட்டி
கோன்றி
கோப்பனார்
சட்டம்பி
சம்பட்டி
சம்புராயர்
சரபோதி
சவுளி
சிங்கப்புலி
சிவந்தாக்கி
செட்டரையர்
சேப்பிழார்
சோணையர்
தம்பாகுடிக்கி
தம்பிரார்
தமிஞ்சிராயர்
தாந்தாணி
தியேட்டாளர்
தேளி
தோணாத்தி
தோப்பை
தோளர்
நரியர்
பஞ்சையர்
பணிபூண்டார்
பரங்கியர்
பாச்சுண்டார்
பிச்சாடி
பில்லுக்கட்டி
பீலியர்
புழுக்கி
பூலார்
பெத்தாச்சி
பேயர்
பொத்தையன்
பொன்னக்குட்டி
மண்டலார்
மண்ணவேளார்
மாகாளி
பின்னாண்டார்
மூசி
மூட்டார்
வாட்டாச்சி
வாணக்கர்
வாய்ப்புலி
15. பட்டகளின் விரிவாக்கம்
பின்னினைப்பு 1
பின்னினைப்பு 2
பின்னினைப்பு 3