ராஜராஜன் சோழன் புகழ்பாடும் திருக்கோவில்கள்
சிவபாதசேகரனான ராஜராஜ சோழன், ஒப்பற்ற பெருங்கோவிலாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோவிலை எடுப்பித்து புகழ் பெற்றான். இக்கோவிலைத் தவிர, பல திருக்கோவில்களை அமைக்க இவன் பங்கு கொண்டதையும், சிறப்பு வழிபாட்டிற்காக தானம் அளித்ததை பற்றியும் ராஜராஜனின் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.
திருவையாறு,
திருவலஞ்சுழி,
திருச்செங்காட்டாங்குடி,
திருக்கடையூர்,
திருப்புகளூர்,
நாகப்பட்டினம்,
திருக்களர்,
திருக்காரவாசல்,
திருநெடுங்களம்,
திருமங்கலம்,
பிரம்மதேசம்,
எண்ணாயிரம்,
திருமுக்கூடல்,
சிவபுரம்,
அகரம்,
மரக்காணம்,
உலகாபுரம்,
திருமலை,
மேல்பாடி
போன்ற பல கோவில்களுக்கு ராஜராஜன் தானம் அளித்த செய்தியை அக்கோவில் கல்வெட்டுகள் அளிக்கும் குறிப்பினால் உணர முடிகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் ஓர் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். இங்குள்ள கீழையூர் வீரட்டானம் திருக்கோவிலில் கருவறைச் சுவரில் காணப்படும் முதலாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு மிகவும் வரலாற்று சிறப்புடையது. சோழர் அதிகாரியாகத் திகழ்ந்த வீதி விடங்கன் கம்பன் என்பவன் அளித்த கொடையை கல்வெட்டு குறிக்கிறது. அதை கூறும் பொழுது ராஜராஜ சோழனின் தாயார் வானவன் மாதேவியார் பற்றிச் சொல்ல வேண்டும்.
மலையமான் குலத்தைச் சேர்ந்தவர். "ராஜராஜன் இந்திரசமானன் ராஜசர்வக்ஞன் என்னும் புலியை பயந்த பொன்மான்' என்று அவரை புகழ்ந்து பேசுகிறது. பாட்டு வடிவில் இக்கல்வெட்டு அமைந்திருப்பதால் இதை, "திருக்கோவிலூர் பாட்டு' எனக் கொள்ளலாம். ராஜராஜ சோழன் தனது பட்டத்தரசி தந்திசக்தி விடங்கியான லோகமாதேவி, திருவையாறு கோவிலில் கட்டிய, "லோகமாதேவீச்சுரம்' என்ற கோவிலுக்கு பல தானங்களை அளித்துள்ளான். திண்டிவனம் அருகே அமைந்துள்ள உலகாபுரம், லோகமாதேவிபுரம் கைலாசநாதர் கோவிலுக்கும் ராஜராஜன் தானம் அளித்துள்ளான். இக்கோவிலும் பட்டத்தரசியின் பெயராலே வழங்கப்படுகிறது.இதேபோன்று ராஜராஜனின் மற்றொரு தேவியான சோழ மகாதேவி தஞ்சை பெரிய கோவிலுக்கு, ஆடவல்லான், உமா பரமேசுவரியார், இடப வாகன தேவர், கணபதி ஆகிய திருமேனிகளை செய்து அளித்தும், அதற்குரிய நகைகளை செய்தளித்தும் புகழ் பெற்றாள்.
இத்தேவியின் பெயராலே திருச்சி, திருவெறும்பூர் அருகே, "சோழ மாதேவி' என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள கைலாச நாதர் கோவிலின் மீது ராஜராஜ சோழன் மிகுந்த ஈடுபாடு கொண்டு நந்தவனம் அமைக்கவும், இசைக் கலைஞர்களை கொண்டு ஐந்து வகையான இசைக் கருவிகளினால், "பஞ்ச மகாசப்தம்' என்ற இசை வழிபாட்டினை செய்ய தானம் அளித்துள்ளான்.கோவிலில் உமா பட்டாரகிக்கு அமுது படைக்கவும், இறைவனுக்கு, "மெய்க்காட்டு' என்ற வழிபாடு செய்யவும், அங்கிருந்த பெருமாள் கோவிலுக்கும் தானம் அளித்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தற்பொழுது இக்கோவிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை போற்றிப் பராமரித்து வருகிறது.ராஜராஜன் பிறந்த நாளான, "ஐப்பசி சதய நாளை' எண்ணாயிரம் (விழுப்புரம் அருகில்), திருவையாறு, திருவெண்காடு, திருப்புகளூர், திருவிடந்தை, பாச்சூர் (கோபுரப்பட்டி), திருநந்திக்கரை போன்ற கோவில்களில் சிறப்பு வழிபாட்டுடன் நடைபெற தானம் அளிக்கப்பட்ட செய்தியை அறிகிறோம். தஞ்சை பெரிய கோவிலில் சதயத் திருவிழா 12 நாட்கள் நடைபெற்றதையும் அறிய முடிகிறது.
ராஜராஜன் தன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகள் முழுவதையும் சீராக அளக்கச் செய்தான். இப்பணி ராஜராஜ மாராயன் என்பவன் தலைமையில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளில் இப்பணி முடிவடைந்தது. இதனால் ராஜராஜன், "உலகளந்தான்' என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்கினான். இதுபோன்று திருக்கோவில்களில் காணப்படும் கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை பாதுகாப்பதிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினான். அரியலூர் அருகே உள்ள திருமழபாடி கோவிலில் ராஜராஜ சோழனின் 28வது ஆட்சி ஆண்டில் கோவில் விமானம் புதுப்பிக்கப்பட்டது. சுவரில் இருந்த கல்வெட்டுகளை ஏட்டில் எழுதிக் கொண்டனர். பின்பு மீண்டும் அவைகள் விமானத்தில் பொறிக்கப்பட்டன என்ற செய்தியை அறிய முடிகிறது.ராஜராஜன் காலத்தில் பல திருக்கோவில்களில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
கோவில் வழிபாடு, கணக்குகள் ஆகியவை சரியாக நடைபெறுகின்றதா என்பதை கவனிக்க, "ஸ்ரீகார்யம் ஆராய்கின்ற' என்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அதை ஆய்வு செய்து, மேலும் பொருள் வேண்டியிருப்பின் அதையும் அளித்து கல்வெட்டாகப் பொறித்தனர்.திருக்கோவில்களை ராஜராஜன் எவ்வாறு போற்றி, வழிபாட்டினை தொடர்ந்து நடைபெற வழிவகை செய்தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.மாமல்லபுரம் அருகே உள்ள மரக்காணம் பூமீசுவரர் கோவிலுக்கு, "ராஜராஜ பேரளம்' எனப்படும் உப்பளத்திலிருந்து வரும் வருவாயினைப் பெற உரிய ஆணையிட்டுள்ளான். இன்றும் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள் அதிகம் உள்ளன.சோழர் வரலாற்றில் முதன் முதலில் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பெருமை உடைய மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் ஆவான்.
ராஜராஜனின் பாண்டிய நாட்டு வெற்றி, புகழ் பெற்ற காந்தளூர் சாலை வெற்றிக்கு முன்னர் கிடைத்த வெற்றியாகும். பாண்டிய நாட்டை வென்றதின் அடையாளமாக, "பாண்டிய குலாசனி' எனச் சிறப்பாக அழைத்து கொண்டான்.எனினும், பகைமை பாராட்டாமல் பாண்டிய நாட்டு அரச மகளிரை மணந்து கொண்டான். இப்பகுதியில் ஆட்சி செய்ய அனுப்பப்பட்டவர்கள், "சோழ, பாண்டியர்கள்' என அழைக்கப்பட்டனர். பாண்டிய மண்டலமானது ராஜராஜ மண்டலம், ராஜராஜ வளநாடு எனப் பெயர் மாற்றம் அடைந்தது.பேராற்றல் நிறைந்த படைப் பிரிவுகளை சேர்ந்த படை வீரர்கள் பாண்டிய நாட்டில் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
இப்பிரிவுக்கு, "மூன்று கைமாசேனை' என்பது பெயர். இவர்கள் ராஜராஜ சோழன் பாண்டிய நாட்டில் ஏற்படுத்திய வளமிக்க சதுர்வேதி மங்கலங்களையும் சமயச் சிறப்பு உடைய கோவில்களையும் காத்து நின்றதையும், அறப்பணிகளையும் செய்து பாண்டிய நாட்டு மக்கள் மனதில் இடம் பிடித்து ராஜராஜனின் நிர்வாகத்திற்கு துணை புரிந்தனர்.இத்தகைய, "மூன்று கைமாசேனை' படைப் பிரிவு இருந்த இடமாக அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருவாலீசுவரம் திருக்கோவில் விளங்குகிறது.கலையழகு மிக்க சிற்பங்களுடன், கலைப் பெட்டகமாக பசுமையான வயல்களுக்கு நடுவே கடனா ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டில் எடுக்கப் பெற்ற சோழ மன்னர்களின் கலை படைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இக்கோவில் அமைந்துள்ள பகுதி, "முள்ளிநாட்டு ராஜராஜ வளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதி மங்கலம்' எனக் குறிப்பிடப்படுகிறது. இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை விமானம் சிற்பக் களஞ்சியமாக திகழ்கிறது. பாண்டிய நாட்டு கோவில்களில் தேவகோட்டங்கள் இருக்காது. அதே முறையில் இங்கும் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இருதளம் உடைய விமானத்தில் சிவபெருமானின் கங்காதரர், ரிஷபாந்திகர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், அர்த்தநாரீசுவரர், திரிபுராந்தகர், காலாந்திகர், லிங்கோத்பவர், கங்காளமூர்த்தி, கல்யாணசுந்தரர், கஜசம்கார மூர்த்தி போன்ற பல சிற்ப வடிவங்களை காணலாம். மரத்தில் செய்து வைத்தது போல நுண்ணிய வேலைப்பாடுடன் இக்கோவில் காணப்படுகிறது.
இக்கோவிலில் காணப்படும் வட்டெழுத்தில் உள்ள ராஜராஜன் கல்வெட்டால் இக்கோவில் ராஜராஜனின் அரிய கலைப்படைப்பு என அறிஞர்கள் கருதுகின்றனர். இக்கோவில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையில் சீரிய முறையில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும், பாண்டிய நாட்டில் திருநெல்வேலி, கங்கைகொண்டான், சேரமாதேவி, அம்பாசமுத்திரம், பிரம்மதேசம், ஆத்தூர் போன்ற கோவில்களில் ராஜராஜன் செய்த தானங்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெற்ற தஞ்சை பெரிய கோவில் ராஜ ராஜ சோழனின் திருக்கோவில் தொண்டினை நிறைவுறுத்துவது போல தமிழகத்தில் உள்ள பல திருக்கோவில்கள் இன்றும் அவனது புகழை பறைசாற்றுகின்றன என்றால் மிகையில்லை!
செப்டம்பர் 25,2010
திருவையாறு,
திருவலஞ்சுழி,
திருச்செங்காட்டாங்குடி,
திருக்கடையூர்,
திருப்புகளூர்,
நாகப்பட்டினம்,
திருக்களர்,
திருக்காரவாசல்,
திருநெடுங்களம்,
திருமங்கலம்,
பிரம்மதேசம்,
எண்ணாயிரம்,
திருமுக்கூடல்,
சிவபுரம்,
அகரம்,
மரக்காணம்,
உலகாபுரம்,
திருமலை,
மேல்பாடி
போன்ற பல கோவில்களுக்கு ராஜராஜன் தானம் அளித்த செய்தியை அக்கோவில் கல்வெட்டுகள் அளிக்கும் குறிப்பினால் உணர முடிகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் ஓர் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். இங்குள்ள கீழையூர் வீரட்டானம் திருக்கோவிலில் கருவறைச் சுவரில் காணப்படும் முதலாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு மிகவும் வரலாற்று சிறப்புடையது. சோழர் அதிகாரியாகத் திகழ்ந்த வீதி விடங்கன் கம்பன் என்பவன் அளித்த கொடையை கல்வெட்டு குறிக்கிறது. அதை கூறும் பொழுது ராஜராஜ சோழனின் தாயார் வானவன் மாதேவியார் பற்றிச் சொல்ல வேண்டும்.
மலையமான் குலத்தைச் சேர்ந்தவர். "ராஜராஜன் இந்திரசமானன் ராஜசர்வக்ஞன் என்னும் புலியை பயந்த பொன்மான்' என்று அவரை புகழ்ந்து பேசுகிறது. பாட்டு வடிவில் இக்கல்வெட்டு அமைந்திருப்பதால் இதை, "திருக்கோவிலூர் பாட்டு' எனக் கொள்ளலாம். ராஜராஜ சோழன் தனது பட்டத்தரசி தந்திசக்தி விடங்கியான லோகமாதேவி, திருவையாறு கோவிலில் கட்டிய, "லோகமாதேவீச்சுரம்' என்ற கோவிலுக்கு பல தானங்களை அளித்துள்ளான். திண்டிவனம் அருகே அமைந்துள்ள உலகாபுரம், லோகமாதேவிபுரம் கைலாசநாதர் கோவிலுக்கும் ராஜராஜன் தானம் அளித்துள்ளான். இக்கோவிலும் பட்டத்தரசியின் பெயராலே வழங்கப்படுகிறது.இதேபோன்று ராஜராஜனின் மற்றொரு தேவியான சோழ மகாதேவி தஞ்சை பெரிய கோவிலுக்கு, ஆடவல்லான், உமா பரமேசுவரியார், இடப வாகன தேவர், கணபதி ஆகிய திருமேனிகளை செய்து அளித்தும், அதற்குரிய நகைகளை செய்தளித்தும் புகழ் பெற்றாள்.
இத்தேவியின் பெயராலே திருச்சி, திருவெறும்பூர் அருகே, "சோழ மாதேவி' என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள கைலாச நாதர் கோவிலின் மீது ராஜராஜ சோழன் மிகுந்த ஈடுபாடு கொண்டு நந்தவனம் அமைக்கவும், இசைக் கலைஞர்களை கொண்டு ஐந்து வகையான இசைக் கருவிகளினால், "பஞ்ச மகாசப்தம்' என்ற இசை வழிபாட்டினை செய்ய தானம் அளித்துள்ளான்.கோவிலில் உமா பட்டாரகிக்கு அமுது படைக்கவும், இறைவனுக்கு, "மெய்க்காட்டு' என்ற வழிபாடு செய்யவும், அங்கிருந்த பெருமாள் கோவிலுக்கும் தானம் அளித்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தற்பொழுது இக்கோவிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை போற்றிப் பராமரித்து வருகிறது.ராஜராஜன் பிறந்த நாளான, "ஐப்பசி சதய நாளை' எண்ணாயிரம் (விழுப்புரம் அருகில்), திருவையாறு, திருவெண்காடு, திருப்புகளூர், திருவிடந்தை, பாச்சூர் (கோபுரப்பட்டி), திருநந்திக்கரை போன்ற கோவில்களில் சிறப்பு வழிபாட்டுடன் நடைபெற தானம் அளிக்கப்பட்ட செய்தியை அறிகிறோம். தஞ்சை பெரிய கோவிலில் சதயத் திருவிழா 12 நாட்கள் நடைபெற்றதையும் அறிய முடிகிறது.
ராஜராஜன் தன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகள் முழுவதையும் சீராக அளக்கச் செய்தான். இப்பணி ராஜராஜ மாராயன் என்பவன் தலைமையில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளில் இப்பணி முடிவடைந்தது. இதனால் ராஜராஜன், "உலகளந்தான்' என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்கினான். இதுபோன்று திருக்கோவில்களில் காணப்படும் கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை பாதுகாப்பதிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினான். அரியலூர் அருகே உள்ள திருமழபாடி கோவிலில் ராஜராஜ சோழனின் 28வது ஆட்சி ஆண்டில் கோவில் விமானம் புதுப்பிக்கப்பட்டது. சுவரில் இருந்த கல்வெட்டுகளை ஏட்டில் எழுதிக் கொண்டனர். பின்பு மீண்டும் அவைகள் விமானத்தில் பொறிக்கப்பட்டன என்ற செய்தியை அறிய முடிகிறது.ராஜராஜன் காலத்தில் பல திருக்கோவில்களில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
கோவில் வழிபாடு, கணக்குகள் ஆகியவை சரியாக நடைபெறுகின்றதா என்பதை கவனிக்க, "ஸ்ரீகார்யம் ஆராய்கின்ற' என்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அதை ஆய்வு செய்து, மேலும் பொருள் வேண்டியிருப்பின் அதையும் அளித்து கல்வெட்டாகப் பொறித்தனர்.திருக்கோவில்களை ராஜராஜன் எவ்வாறு போற்றி, வழிபாட்டினை தொடர்ந்து நடைபெற வழிவகை செய்தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.மாமல்லபுரம் அருகே உள்ள மரக்காணம் பூமீசுவரர் கோவிலுக்கு, "ராஜராஜ பேரளம்' எனப்படும் உப்பளத்திலிருந்து வரும் வருவாயினைப் பெற உரிய ஆணையிட்டுள்ளான். இன்றும் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள் அதிகம் உள்ளன.சோழர் வரலாற்றில் முதன் முதலில் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பெருமை உடைய மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் ஆவான்.
ராஜராஜனின் பாண்டிய நாட்டு வெற்றி, புகழ் பெற்ற காந்தளூர் சாலை வெற்றிக்கு முன்னர் கிடைத்த வெற்றியாகும். பாண்டிய நாட்டை வென்றதின் அடையாளமாக, "பாண்டிய குலாசனி' எனச் சிறப்பாக அழைத்து கொண்டான்.எனினும், பகைமை பாராட்டாமல் பாண்டிய நாட்டு அரச மகளிரை மணந்து கொண்டான். இப்பகுதியில் ஆட்சி செய்ய அனுப்பப்பட்டவர்கள், "சோழ, பாண்டியர்கள்' என அழைக்கப்பட்டனர். பாண்டிய மண்டலமானது ராஜராஜ மண்டலம், ராஜராஜ வளநாடு எனப் பெயர் மாற்றம் அடைந்தது.பேராற்றல் நிறைந்த படைப் பிரிவுகளை சேர்ந்த படை வீரர்கள் பாண்டிய நாட்டில் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
இப்பிரிவுக்கு, "மூன்று கைமாசேனை' என்பது பெயர். இவர்கள் ராஜராஜ சோழன் பாண்டிய நாட்டில் ஏற்படுத்திய வளமிக்க சதுர்வேதி மங்கலங்களையும் சமயச் சிறப்பு உடைய கோவில்களையும் காத்து நின்றதையும், அறப்பணிகளையும் செய்து பாண்டிய நாட்டு மக்கள் மனதில் இடம் பிடித்து ராஜராஜனின் நிர்வாகத்திற்கு துணை புரிந்தனர்.இத்தகைய, "மூன்று கைமாசேனை' படைப் பிரிவு இருந்த இடமாக அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருவாலீசுவரம் திருக்கோவில் விளங்குகிறது.கலையழகு மிக்க சிற்பங்களுடன், கலைப் பெட்டகமாக பசுமையான வயல்களுக்கு நடுவே கடனா ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டில் எடுக்கப் பெற்ற சோழ மன்னர்களின் கலை படைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இக்கோவில் அமைந்துள்ள பகுதி, "முள்ளிநாட்டு ராஜராஜ வளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதி மங்கலம்' எனக் குறிப்பிடப்படுகிறது. இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை விமானம் சிற்பக் களஞ்சியமாக திகழ்கிறது. பாண்டிய நாட்டு கோவில்களில் தேவகோட்டங்கள் இருக்காது. அதே முறையில் இங்கும் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இருதளம் உடைய விமானத்தில் சிவபெருமானின் கங்காதரர், ரிஷபாந்திகர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், அர்த்தநாரீசுவரர், திரிபுராந்தகர், காலாந்திகர், லிங்கோத்பவர், கங்காளமூர்த்தி, கல்யாணசுந்தரர், கஜசம்கார மூர்த்தி போன்ற பல சிற்ப வடிவங்களை காணலாம். மரத்தில் செய்து வைத்தது போல நுண்ணிய வேலைப்பாடுடன் இக்கோவில் காணப்படுகிறது.
இக்கோவிலில் காணப்படும் வட்டெழுத்தில் உள்ள ராஜராஜன் கல்வெட்டால் இக்கோவில் ராஜராஜனின் அரிய கலைப்படைப்பு என அறிஞர்கள் கருதுகின்றனர். இக்கோவில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையில் சீரிய முறையில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும், பாண்டிய நாட்டில் திருநெல்வேலி, கங்கைகொண்டான், சேரமாதேவி, அம்பாசமுத்திரம், பிரம்மதேசம், ஆத்தூர் போன்ற கோவில்களில் ராஜராஜன் செய்த தானங்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெற்ற தஞ்சை பெரிய கோவில் ராஜ ராஜ சோழனின் திருக்கோவில் தொண்டினை நிறைவுறுத்துவது போல தமிழகத்தில் உள்ள பல திருக்கோவில்கள் இன்றும் அவனது புகழை பறைசாற்றுகின்றன என்றால் மிகையில்லை!
செப்டம்பர் 25,2010
திருவரங்கம்
காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் அல்லது ஸ்ரீரங்கம் என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
இச் சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டிலேயே ஆகும்.
ஸ்ரீரங்கத்தின் மரபு வழி வரலாறு
ஸ்ரீரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய புஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறுது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவேரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.
கோயில் ஒழுகு
கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய ஸ்ரீரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் தி ரும்பக் சொல்லிக் கொண்டுடிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருத்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.
கோயில் அமைப்பு
இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.
சங்க இலகியங்களில் திருவரங்கம் கோயில்
சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் "விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என வர்ணிக்கப்படுகிறது.
மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்
மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி.
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றி குறிப்புள்ளது.
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
சங்கம் மறுவிய காலத்தில், பல ஆழ்வார்கள் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.
திருமங்கை ஆழ்வார் 73
தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55
பெரியாழ்வார் 35
குலசேகராழ்வார் 31
திருமழிசையாழ்வார் 14
நம்மாழ்வார் 12
திருப்பாணாழ்வார் 10
ஆண்டாள் 10
பூதத்தாழ்வார் 4
பேயாழ்வார் 2
பொய்கையாழ்வார் 1
9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்க்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கிறன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. 'கோவில் ஒழுகு' 11ம் நூறாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கோவிலொழுகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. கோவிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுக்கிறது.
105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தள்பதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்க்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உத்ஸவ மூர்த்திகள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331-1371) வீழ்ந்த பின், உத்ஸவ மூர்த்திகள் மறுபடியும் ப்ரதிஷ்டை செய்யப் பட்டன. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.
திருவரங்கம் விண்ணகரம் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் 807 , அதாவது கிபி 885 இல் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார் எனவும் பாடப் படுகிறது.
எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய இராம காதை பங்குனி உத்த ரத்தில்
கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கு ஏற்றி னானே
இச் சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டிலேயே ஆகும்.
ஸ்ரீரங்கத்தின் மரபு வழி வரலாறு
ஸ்ரீரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய புஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறுது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவேரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.
கோயில் ஒழுகு
கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய ஸ்ரீரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் தி ரும்பக் சொல்லிக் கொண்டுடிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருத்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.
கோயில் அமைப்பு
இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.
சங்க இலகியங்களில் திருவரங்கம் கோயில்
சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் "விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என வர்ணிக்கப்படுகிறது.
மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்
மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி.
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றி குறிப்புள்ளது.
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
சங்கம் மறுவிய காலத்தில், பல ஆழ்வார்கள் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.
திருமங்கை ஆழ்வார் 73
தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55
பெரியாழ்வார் 35
குலசேகராழ்வார் 31
திருமழிசையாழ்வார் 14
நம்மாழ்வார் 12
திருப்பாணாழ்வார் 10
ஆண்டாள் 10
பூதத்தாழ்வார் 4
பேயாழ்வார் 2
பொய்கையாழ்வார் 1
9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்க்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கிறன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. 'கோவில் ஒழுகு' 11ம் நூறாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கோவிலொழுகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. கோவிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுக்கிறது.
105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தள்பதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்க்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உத்ஸவ மூர்த்திகள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டன. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331-1371) வீழ்ந்த பின், உத்ஸவ மூர்த்திகள் மறுபடியும் ப்ரதிஷ்டை செய்யப் பட்டன. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.
திருவரங்கம் விண்ணகரம் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் 807 , அதாவது கிபி 885 இல் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார் எனவும் பாடப் படுகிறது.
எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய இராம காதை பங்குனி உத்த ரத்தில்
கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கு ஏற்றி னானே