கள்ளர் வரலாற்று வரைவியல்
கள்ளர் வரலாற்று வரைவியல்
ஜெயராம் இராசகண்டியர்
சர்வதேச கள்ளர் பேரவை
இங்கிலாந்து
இராசகண்டியன் பதிப்பகம்
லோங்மன்ஸ் அச்சகம்
லண்டன். இங்கிலாந்து
சமர்ப்பணம்
என்னை ஈன்றெடுத்து செறிவூட்டி வளர்த்த தாய் தெய்வத் திருமதி துரைராஜா இராசகண்டியர் சம்பூரணத்தம்மாள் அவர்களுக்கும், கல்வியூட்டி என்னை ஊக்குவித்து, சிந்தனையூட்டி வளம் பலகண்டு செயல் பட வைத்த தந்தை தெய்வத்திரு சிதம்பரம் இராசகண்டியர் துரைராஜா அவர்களுக்கும் இந்நூலை காணிக்கையாக்கி சிரம் தாழ்த்தி தொழுது வணங்குகிறேன்.
வாழ்த்துரை (To be received)
நாகூர் சோமசுந்தர தேவர்
ஆசிரியர் கள்ளர் இன முழக்கம்
தஞ்சாவூர். இந்தியா
அணிந்துரை (To be received)
புலமை வேங்கடாசலம் வன்னியர்.
தமிழ்நாடு கள்ளர் பேரவை.
தஞ்சாவூர். இந்தியா.
உள்ளுரை.
ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரன். நூல் ஆசிரியரின் பெயரிலேயே (இராசகண்டியன்) வரலாறு இருக்கிறது. அதனால் தான் கள்ளர் வரலாற்றில் இன்றைய நிலை குறித்து வருந்தியிருக்கிறார். வரலாறு நடந்த வழியில் ஓர் ஆர்வமுள்ள வழிப்போக்கனாக, தமிழக திருக்கோவில்களில்தான் கள்ளர் குலத்தின் வரலாறும் அடங்கி உள்ளது என்பதனை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். தான் ஒரு வரலாற்று பண்டிதனோ,ஆசிரியனோ இல்லை என்றும் தன்னால் முடிந்தவரை வரலாற்று சான்றுகளை திரட்டி முன் வைத்து இந்னூலினை படைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
இராசகண்டியரின் இப்பெரு முயற்சி பாராட்டுக்குறியது. தேர்தெடுக்கப்பட்ட தலைப்புகளும் நூலுக்கு பெருமை படைக்கிறன. இதுவரை வெளிவந்துள்ள கள்ளர்கள் பற்றிய படைப்புகளில் மிகவும் வித்தியாசமானதாகவும் தெளிவான கருத்துக்களையும், வரலாற்று படிமங்களையும், கேட்டறியாத தகவல்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இப்படைப்பு குறிப்பாக நம் இளைய தலைமுறையினர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவருக்கு முன்னர் எத்தனையோ பேர் கள்ளர் சமுதாயம் பற்றி எழுதியிருக்கலாம், ஆனால் இவரைப்போல் எளிமையாக படைத்திருப்போர் மிகமிகக் குறைவு. தனக்குத்தான் தெரியும் என்றில்லாமல் கள்ளர் சமுதாயம் தம் பெருமைகளை உணரவேண்டும் என்பதற்காக கள்ளர் வரலாற்று வரைவியல் படைக்கப் பட்டுள்ளது. முடியுமா என்போர்க்கு ஊன்று கோலாகவும்,முடியாது என்போர்க்கு போராட்ட ஆயுதமாகவும் இந் நூல் விளங்கும்.
இவ்வறிய நூல் கள்ளர் குல மக்கள் அனைவராலும் படிக்கப்பட்டு நம் குல மக்களை மேம்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை. கள்ளர் குலபட்டங்களும் ,பட்டங்களின் விரிவாக்கங்களும் என்ற பகுதி மிகவும் அருமையாக உள்ளது. கள்ளர் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களும், சோழ மன்னர்களின் மணவுரவுகள் மற்றும் குறுநில மன்னர்களின் ஆளுமை போன்ற சரித்திர சான்றுகள் அனைத்தும் அடங்கிய ஒரே நூல் இது மட்டுமே என்றால்,அது மிகையாகாது.
போகிறபோக்கில் கண்ட காட்சிகளையும், கேட்ட நிகழ்வுகளையும், படித்த புத்தகங்களையும், அறிந்த தகவல்களையும் மையமாககொண்டு வரையப்பட்ட இப் படைப்பு அனைவராலும் படித்து பயனடைய வேண்டும். குற்றம் குறைகள் இருப்பின் ஆசிரியரை தொடர்பு கொண்டு அடுத்த பதிப்பில் நிவர்த்தி செய்ய உதவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
கள்ளர் சரிதம் ஒரு மகாசமுத்திரம். அதன் சாரத்தை ந.மு. வேங்கடசாமிநாட்டார், சுவாமிநாத மாதவராயர், புலமை வெங்கடாசலம் வன்னியர் உட்பட எத்தனையோ அறிஞர்கள் தங்கள் கைவன்னத்தில் சுரிக்கிச் சுவைபடக் கொடுத்திருக்கிறார்கள். அதே சுவை குன்றாமலும் விரிவாக்கி கலாச்சாரக் கண்ணாக, பெரும் பொக்கிசமாக அளித்துள்ளார் சர்வதேச கள்ளர் பேரவையின் இராசகண்டியர். நேற்று, இன்று, நாளை, முக்காலத்தையும் உணர்த்தி உயரவழி காட்டும் இந்நூல் உங்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருப்பது பெருமை, இப்பெருமையை ஒவ்வொரு கள்ளரும் பெறவேண்டும் என்ற விருப்பமுடன் கேட்டுக் கொள்கிறேன்
தமிழ் மரபோடும், கள்ளர் குல உணர்வோடும் எழுதப்பட்ட இந் நூலினை முரசு கொட்டி வரவேற்போம். பயனடைவோம்.
கவியூர் மணவாளன் தொண்டைமான்
சர்வதேச கள்ளர் பேரவை
ஒட்டாவா
கனடா
பொருளடக்கம்
1. சோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்)
2. கள்ளரும் சோழரும்
3. கள்ளர் குல குறு நிலமன்னர்களும், ஜமீந்தார்களும்
4. கள்ளர்கள் படைத்த சோழ சாம்ராஜியங்கள்
5. சோழ மன்னர்கள் கட்டிய கோயில்கள்
6. சோழமன்னர்களின் மணவுரவுகள்
7. சோழர்கால தொல்சீர் தமிழ் மொழி
8. பாடல் பெற்ற சிவ தலங்கள்
9. இராசராசனும் தஞ்சை பெரியகோவிலும்
10. கள்ளர் குல பேராசி செம்பியன் மாதேவியார்
11. இராஜேந்திர சோழன்
12. ஆன்மீகத்தில் கள்ளர்
13. கள்ளர்குல வரலாற்று மாமணிகள்
14. இன்றைய கள்ளர் குல சாண்றோர்கள்
15. படிக்கவேண்டிய கள்ளர்குல நூல்கள்
16. பயனுள்ள இனையதளங்கள்
17. கள்ளர் குல பட்டங்கள்
18. பட்டங்க்களின் விளக்கங்கள்
ஆக்கியோன் முன்னுரை (என்னுரை)
கள்ளர் என்ற ஓர் இனமுண்டு
களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு
கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு
கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு
கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும்
புவியில் பெருங்கோயில் அமைத்து,
ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து
ஈராயிரம் பட்டங்களையும் சுமந்து
பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது
காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது.
கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம் இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவொம். வாருங்கள்!
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை. புதினமோ புராணமோ இல்லை அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு உண்மை சம்பவங்களின் வரைபடம்
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும். தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான். கள்ளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
கள்ளர் இனம் பழம் பெருமை பேசுவதென்பதும், கள்ளர் பழமையைப் போற்றுவதென்பதும், கள்ளர் இன பரம்பரை புகழைப் பாராட்டிப் பறப்புவதென்பதும் கள்ளர் குல பண்பாடு, அது ஒரு கலாச்சாரம், அது ஒரு வரலாற்று பெருமை. பழம் பெருமை பேசாத கள்ளர் எவரும் தன் மூத்தோர், முன்னொர் புகழ் பாடாத கள்ளர் எவரும் தன்னைப் பற்றி கள்ளர் இனம் பெருமையாக பேசும்படியான எந்தச் செயலையும் செய்து விட முடியாது.
தீர்வு காணத் தெரியாதவர்கள் தீர்ப்பு கோரி புலம்பாதீர்கள். தீர்வு காணும் முயற்சிகளின் எண்ணிக்கயை அதிகமாக்குங்கள். முயற்சிகளின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. முயற்சி தான் தன்மானத்தின் உச்ச நிலை என்பதனை நீங்கள் உணரும்போது தீர்வு தானாக உங்களை நாடி வரும். இல்லை எனில், அநியாயமாக ஒருவரை நீதிபதி ஆக்கிவிட்ட அவமானம் உங்களைக் குடையும்.
நாம் செழுமை மிக்க பாரம்பரிய பண்பாடுகளை கொண்ட வலிமை மிக்க உயிர்துடிப்புள்ள ஒரு குலத்தின் சொந்தக்காரர்கள். நம் குலத்திற்கு புதிய வலிமை தேடவோ, புதிய இலக்கணம் படைக்கவோ, செறிவைக் கூட்டவோ முயலவில்லை. எம் முயற்சி எல்லாம் எம் குலத்தின் தொன்மையை ஆராய்ந்து அதன் வயதையும் கணித்து எம் முன்னோர்களுடைய செழுமை மிகு எண்ணங்களை எடுத்துறைக்க வேண்டுமென்பதே. கள்ளர் குலம் பற்றி நடக்கும் ஆய்வுகளையும் முடிவுகளையும் நம் குல வளர்ச்சிக்கு மட்டுமே பயன் படுத்தி உயர்வோம்.
இன்றைய நிலையில் கள்ளர் குலம் தனது இயல்பான மாண்புகளை மறந்து துயில் கொள்கிறது, மதி மயங்கி கிடக்கிறது. தயங்கி நிற்கிறது. நம்மால் முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. சோழன் வட நாட்டின் மீது படையெடுத்த போது நம்மால் முடியுமா என்று அவன் தயங்கவில்லை. நாவாய்களை செலுத்தி அலை கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளை வென்றபோது நம்மால் முடியுமா என்று அவன் தயங்கவில்லை. கள்ளர் இனமே தயங்காதே, மயங்காதே. அனைத்தும் முடியும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்து.
கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.
உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?
உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?
உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?
விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஆண்ட பரம்பரை அடிமைப் படலாமா?
வந்த பாதையை நாம் மறந்து விட்டால் போகும் பாதை நமக்கு புரியாமல் போய்விடும். கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள். இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவொம். வாருங்கள்!
நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டுவது அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும். நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன். இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
வரலாறு நெடியது. முடிவில்லாதது. வாழ்க்கையைப் போலவே தன்னை மறந்தவர்களையும், மறைத்தவர்களையும் கடந்து அது நீளப்பயணம் செய்து கொண்டுதான் இருக்கும். இத் தளத்தில் தரப்பெற்றுள்ள தகவல்கள் முற்று முடிந்த முடிபுகள் அல்ல.இன்றும் ஆராய இடம் கொடுப்பன. காலப்போக்கில் இதில் சொல்லப்பெற்ற யூகங்கள், செய்திகள் பொய்யாகும்படியான உண்மைகளை ஆய்வாளர்கள் கண்டு சொல்லக்கூடும், சொல்லவும் வேண்டும். வரலாறு முடிந்து விடுவதில்லை, தொடரும் ஒரு தொடரே.
ஆலயங்கள் ஆண்டவனின் இருப்பிடம் மட்டுமல்ல, மானுட ஆன்மாவை மேன்மைபடுத்தும் பயிற்சிக்களங்கள். ஆலயங்கள் வழிபாட்டு மையங்கள் மட்டுமல்ல, வரலாற்று நிலையங்களும்கூட. எமது திருக்கோயில்களில் கண்டு படிக்கப்பட்ட, படிக்கப்படாத கல்வெட்டுகளளில் தான் கள்ளர் குல வரலாறு அதிகமாக இருக்கிறது என்ற உண்மை நம் இனத்திற்கு தெரியவில்லை, புரியவில்லை.
வரலாறு நடந்த வழியில் ஓர் ஆர்வமுள்ள வழிப்போக்கனாக நடக்கமுயன்றுள்ளேன். நான் நடந்த வழித்தடத்தில் என்னால் முடிந்தளவு தேடியுள்ளேன், தேடிக்கொண்டிருக்கிறேன், தேடிக்கொண்டே இருப்பேன். சில பதிவுகள் தப்பாகவும் ஆதாரமற்றவையாகவும் சிலருக்கு தெரியலாம். திருத்திக்கொள்ள ஆதாரங்களுடன் உதவுங்கள். சொந்தங்களே கள்ளர் வரலாறு பற்றிய ஆர்வம் உங்களுக்கும் இருக்குமானால் களத்துக்கு வாருங்கள். உங்கள் கண்களால் தேடப்படும் வரலாறும், கைகளால் எழுதப்படும் வரலாறும் தான் தலைமுறைகளை அடையாலப்படுத்தும். தங்கள் தேடல்களின் முடிவுகளையும் தாங்கள் அறிந்தவை, கேட்டவை, தெரிந்தவைகளையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கள்ளர் குல வரலாற்று வளர்ச்சிக்கு இவை பெரிதும் உதவிடும்
நன்றி.
என்றும் அன்புடன்
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.
ஜெயராம் இராசகண்டியர்
சர்வதேச கள்ளர் பேரவை
இங்கிலாந்து
இராசகண்டியன் பதிப்பகம்
லோங்மன்ஸ் அச்சகம்
லண்டன். இங்கிலாந்து
சமர்ப்பணம்
என்னை ஈன்றெடுத்து செறிவூட்டி வளர்த்த தாய் தெய்வத் திருமதி துரைராஜா இராசகண்டியர் சம்பூரணத்தம்மாள் அவர்களுக்கும், கல்வியூட்டி என்னை ஊக்குவித்து, சிந்தனையூட்டி வளம் பலகண்டு செயல் பட வைத்த தந்தை தெய்வத்திரு சிதம்பரம் இராசகண்டியர் துரைராஜா அவர்களுக்கும் இந்நூலை காணிக்கையாக்கி சிரம் தாழ்த்தி தொழுது வணங்குகிறேன்.
வாழ்த்துரை (To be received)
நாகூர் சோமசுந்தர தேவர்
ஆசிரியர் கள்ளர் இன முழக்கம்
தஞ்சாவூர். இந்தியா
அணிந்துரை (To be received)
புலமை வேங்கடாசலம் வன்னியர்.
தமிழ்நாடு கள்ளர் பேரவை.
தஞ்சாவூர். இந்தியா.
உள்ளுரை.
ஜெயராம் இராசகண்டியன் கிருபாகரன். நூல் ஆசிரியரின் பெயரிலேயே (இராசகண்டியன்) வரலாறு இருக்கிறது. அதனால் தான் கள்ளர் வரலாற்றில் இன்றைய நிலை குறித்து வருந்தியிருக்கிறார். வரலாறு நடந்த வழியில் ஓர் ஆர்வமுள்ள வழிப்போக்கனாக, தமிழக திருக்கோவில்களில்தான் கள்ளர் குலத்தின் வரலாறும் அடங்கி உள்ளது என்பதனை தெளிவாக எடுத்துரைத்துள்ளார். தான் ஒரு வரலாற்று பண்டிதனோ,ஆசிரியனோ இல்லை என்றும் தன்னால் முடிந்தவரை வரலாற்று சான்றுகளை திரட்டி முன் வைத்து இந்னூலினை படைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
இராசகண்டியரின் இப்பெரு முயற்சி பாராட்டுக்குறியது. தேர்தெடுக்கப்பட்ட தலைப்புகளும் நூலுக்கு பெருமை படைக்கிறன. இதுவரை வெளிவந்துள்ள கள்ளர்கள் பற்றிய படைப்புகளில் மிகவும் வித்தியாசமானதாகவும் தெளிவான கருத்துக்களையும், வரலாற்று படிமங்களையும், கேட்டறியாத தகவல்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இப்படைப்பு குறிப்பாக நம் இளைய தலைமுறையினர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவருக்கு முன்னர் எத்தனையோ பேர் கள்ளர் சமுதாயம் பற்றி எழுதியிருக்கலாம், ஆனால் இவரைப்போல் எளிமையாக படைத்திருப்போர் மிகமிகக் குறைவு. தனக்குத்தான் தெரியும் என்றில்லாமல் கள்ளர் சமுதாயம் தம் பெருமைகளை உணரவேண்டும் என்பதற்காக கள்ளர் வரலாற்று வரைவியல் படைக்கப் பட்டுள்ளது. முடியுமா என்போர்க்கு ஊன்று கோலாகவும்,முடியாது என்போர்க்கு போராட்ட ஆயுதமாகவும் இந் நூல் விளங்கும்.
இவ்வறிய நூல் கள்ளர் குல மக்கள் அனைவராலும் படிக்கப்பட்டு நம் குல மக்களை மேம்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை. கள்ளர் குலபட்டங்களும் ,பட்டங்களின் விரிவாக்கங்களும் என்ற பகுதி மிகவும் அருமையாக உள்ளது. கள்ளர் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களும், சோழ மன்னர்களின் மணவுரவுகள் மற்றும் குறுநில மன்னர்களின் ஆளுமை போன்ற சரித்திர சான்றுகள் அனைத்தும் அடங்கிய ஒரே நூல் இது மட்டுமே என்றால்,அது மிகையாகாது.
போகிறபோக்கில் கண்ட காட்சிகளையும், கேட்ட நிகழ்வுகளையும், படித்த புத்தகங்களையும், அறிந்த தகவல்களையும் மையமாககொண்டு வரையப்பட்ட இப் படைப்பு அனைவராலும் படித்து பயனடைய வேண்டும். குற்றம் குறைகள் இருப்பின் ஆசிரியரை தொடர்பு கொண்டு அடுத்த பதிப்பில் நிவர்த்தி செய்ய உதவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
கள்ளர் சரிதம் ஒரு மகாசமுத்திரம். அதன் சாரத்தை ந.மு. வேங்கடசாமிநாட்டார், சுவாமிநாத மாதவராயர், புலமை வெங்கடாசலம் வன்னியர் உட்பட எத்தனையோ அறிஞர்கள் தங்கள் கைவன்னத்தில் சுரிக்கிச் சுவைபடக் கொடுத்திருக்கிறார்கள். அதே சுவை குன்றாமலும் விரிவாக்கி கலாச்சாரக் கண்ணாக, பெரும் பொக்கிசமாக அளித்துள்ளார் சர்வதேச கள்ளர் பேரவையின் இராசகண்டியர். நேற்று, இன்று, நாளை, முக்காலத்தையும் உணர்த்தி உயரவழி காட்டும் இந்நூல் உங்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருப்பது பெருமை, இப்பெருமையை ஒவ்வொரு கள்ளரும் பெறவேண்டும் என்ற விருப்பமுடன் கேட்டுக் கொள்கிறேன்
தமிழ் மரபோடும், கள்ளர் குல உணர்வோடும் எழுதப்பட்ட இந் நூலினை முரசு கொட்டி வரவேற்போம். பயனடைவோம்.
கவியூர் மணவாளன் தொண்டைமான்
சர்வதேச கள்ளர் பேரவை
ஒட்டாவா
கனடா
பொருளடக்கம்
1. சோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்)
2. கள்ளரும் சோழரும்
3. கள்ளர் குல குறு நிலமன்னர்களும், ஜமீந்தார்களும்
4. கள்ளர்கள் படைத்த சோழ சாம்ராஜியங்கள்
5. சோழ மன்னர்கள் கட்டிய கோயில்கள்
6. சோழமன்னர்களின் மணவுரவுகள்
7. சோழர்கால தொல்சீர் தமிழ் மொழி
8. பாடல் பெற்ற சிவ தலங்கள்
9. இராசராசனும் தஞ்சை பெரியகோவிலும்
10. கள்ளர் குல பேராசி செம்பியன் மாதேவியார்
11. இராஜேந்திர சோழன்
12. ஆன்மீகத்தில் கள்ளர்
13. கள்ளர்குல வரலாற்று மாமணிகள்
14. இன்றைய கள்ளர் குல சாண்றோர்கள்
15. படிக்கவேண்டிய கள்ளர்குல நூல்கள்
16. பயனுள்ள இனையதளங்கள்
17. கள்ளர் குல பட்டங்கள்
18. பட்டங்க்களின் விளக்கங்கள்
ஆக்கியோன் முன்னுரை (என்னுரை)
கள்ளர் என்ற ஓர் இனமுண்டு
களங்கமற்ற இனமென்ற பெயரும் உண்டு
கங்கை முதல் கடாரம் வரை அறியணை ஏறிய முகவரியும் உண்டு
கடல் கடந்து மும்முடி தரித்த முதல்வன் என்ற வரலாரும் உண்டு
கல்லணை கட்டியும் மைந்தன் மேல் தேரோட்டி நீதியை வணங்கியும்
புவியில் பெருங்கோயில் அமைத்து,
ஔவையின் வரப்புயர பா மாலையும் ரசித்து
ஈராயிரம் பட்டங்களையும் சுமந்து
பல்லாயிரம் பிறைகளைக் கண்ட வம்சமிது
காலச்சுவடுகள் எமக்களித்த அழியாப் புகழ் கண்டு வீரமுடன் செங்குருதி சிந்திய இனமிது.
கள்ளர் பெருமை கொள்வொம். களம் காண்போம் இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவொம். வாருங்கள்!
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை. புதினமோ புராணமோ இல்லை அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு உண்மை சம்பவங்களின் வரைபடம்
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும். தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான். கள்ளர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
கள்ளர் இனம் பழம் பெருமை பேசுவதென்பதும், கள்ளர் பழமையைப் போற்றுவதென்பதும், கள்ளர் இன பரம்பரை புகழைப் பாராட்டிப் பறப்புவதென்பதும் கள்ளர் குல பண்பாடு, அது ஒரு கலாச்சாரம், அது ஒரு வரலாற்று பெருமை. பழம் பெருமை பேசாத கள்ளர் எவரும் தன் மூத்தோர், முன்னொர் புகழ் பாடாத கள்ளர் எவரும் தன்னைப் பற்றி கள்ளர் இனம் பெருமையாக பேசும்படியான எந்தச் செயலையும் செய்து விட முடியாது.
தீர்வு காணத் தெரியாதவர்கள் தீர்ப்பு கோரி புலம்பாதீர்கள். தீர்வு காணும் முயற்சிகளின் எண்ணிக்கயை அதிகமாக்குங்கள். முயற்சிகளின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. முயற்சி தான் தன்மானத்தின் உச்ச நிலை என்பதனை நீங்கள் உணரும்போது தீர்வு தானாக உங்களை நாடி வரும். இல்லை எனில், அநியாயமாக ஒருவரை நீதிபதி ஆக்கிவிட்ட அவமானம் உங்களைக் குடையும்.
நாம் செழுமை மிக்க பாரம்பரிய பண்பாடுகளை கொண்ட வலிமை மிக்க உயிர்துடிப்புள்ள ஒரு குலத்தின் சொந்தக்காரர்கள். நம் குலத்திற்கு புதிய வலிமை தேடவோ, புதிய இலக்கணம் படைக்கவோ, செறிவைக் கூட்டவோ முயலவில்லை. எம் முயற்சி எல்லாம் எம் குலத்தின் தொன்மையை ஆராய்ந்து அதன் வயதையும் கணித்து எம் முன்னோர்களுடைய செழுமை மிகு எண்ணங்களை எடுத்துறைக்க வேண்டுமென்பதே. கள்ளர் குலம் பற்றி நடக்கும் ஆய்வுகளையும் முடிவுகளையும் நம் குல வளர்ச்சிக்கு மட்டுமே பயன் படுத்தி உயர்வோம்.
இன்றைய நிலையில் கள்ளர் குலம் தனது இயல்பான மாண்புகளை மறந்து துயில் கொள்கிறது, மதி மயங்கி கிடக்கிறது. தயங்கி நிற்கிறது. நம்மால் முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. சோழன் வட நாட்டின் மீது படையெடுத்த போது நம்மால் முடியுமா என்று அவன் தயங்கவில்லை. நாவாய்களை செலுத்தி அலை கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளை வென்றபோது நம்மால் முடியுமா என்று அவன் தயங்கவில்லை. கள்ளர் இனமே தயங்காதே, மயங்காதே. அனைத்தும் முடியும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்து.
கள்ளர் குல இளைஞர்களே கண்மூடித்தனமெல்லாம் மண்மூடிபோக விழித்தெழுங்கள். உங்கள் இனம் காக்க நீங்கள் முன்னேற்றமடைய இன்றைய கள்ளர் தான் அன்றைய மன்னர்கள் என்று உணருங்கள்.
உங்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சொந்தம் ?
உங்களுக்கும் இந்த மண்னின் பண்பாட்டிற்கும் என்ன உறவு ?
உங்களுக்கும் இந்த மாபெரும் சோழமண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் ?
விடை கண்டு உயர்வு அடையுங்கள்.
ஆண்ட பரம்பரை அடிமைப் படலாமா?
வந்த பாதையை நாம் மறந்து விட்டால் போகும் பாதை நமக்கு புரியாமல் போய்விடும். கள்ளர் இனமே ஒன்று கூடுங்கள். இனிமையுடன் புதியதோர் வரலாறு படைத்திடுவொம். வாருங்கள்!
நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டுவது அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும். நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன். இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
வரலாறு நெடியது. முடிவில்லாதது. வாழ்க்கையைப் போலவே தன்னை மறந்தவர்களையும், மறைத்தவர்களையும் கடந்து அது நீளப்பயணம் செய்து கொண்டுதான் இருக்கும். இத் தளத்தில் தரப்பெற்றுள்ள தகவல்கள் முற்று முடிந்த முடிபுகள் அல்ல.இன்றும் ஆராய இடம் கொடுப்பன. காலப்போக்கில் இதில் சொல்லப்பெற்ற யூகங்கள், செய்திகள் பொய்யாகும்படியான உண்மைகளை ஆய்வாளர்கள் கண்டு சொல்லக்கூடும், சொல்லவும் வேண்டும். வரலாறு முடிந்து விடுவதில்லை, தொடரும் ஒரு தொடரே.
ஆலயங்கள் ஆண்டவனின் இருப்பிடம் மட்டுமல்ல, மானுட ஆன்மாவை மேன்மைபடுத்தும் பயிற்சிக்களங்கள். ஆலயங்கள் வழிபாட்டு மையங்கள் மட்டுமல்ல, வரலாற்று நிலையங்களும்கூட. எமது திருக்கோயில்களில் கண்டு படிக்கப்பட்ட, படிக்கப்படாத கல்வெட்டுகளளில் தான் கள்ளர் குல வரலாறு அதிகமாக இருக்கிறது என்ற உண்மை நம் இனத்திற்கு தெரியவில்லை, புரியவில்லை.
வரலாறு நடந்த வழியில் ஓர் ஆர்வமுள்ள வழிப்போக்கனாக நடக்கமுயன்றுள்ளேன். நான் நடந்த வழித்தடத்தில் என்னால் முடிந்தளவு தேடியுள்ளேன், தேடிக்கொண்டிருக்கிறேன், தேடிக்கொண்டே இருப்பேன். சில பதிவுகள் தப்பாகவும் ஆதாரமற்றவையாகவும் சிலருக்கு தெரியலாம். திருத்திக்கொள்ள ஆதாரங்களுடன் உதவுங்கள். சொந்தங்களே கள்ளர் வரலாறு பற்றிய ஆர்வம் உங்களுக்கும் இருக்குமானால் களத்துக்கு வாருங்கள். உங்கள் கண்களால் தேடப்படும் வரலாறும், கைகளால் எழுதப்படும் வரலாறும் தான் தலைமுறைகளை அடையாலப்படுத்தும். தங்கள் தேடல்களின் முடிவுகளையும் தாங்கள் அறிந்தவை, கேட்டவை, தெரிந்தவைகளையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கள்ளர் குல வரலாற்று வளர்ச்சிக்கு இவை பெரிதும் உதவிடும்
நன்றி.
என்றும் அன்புடன்
ஜெயராம் கண்டியர் கிருபாகரன்.