பூண் என்பது மார்புக் கவச அணி. நறும்பூண் என்பது நறுமணப் பூக்களாலான மார்புக் கவசம். பெரும்பூண் என்பது மார்பில் அணியும் பெரிய கவசம்.
பெரும்பூண் சென்னி என்னும் சோழ மன்னனின் படைத்தலைவன் பழையன் என்பவன் போஒர் என்னும் ஊரில் இருந்துகொண்டு சோழநாட்டு எல்லையைக் காத்துவந்தான். நறும்பூண் அத்தி உள்ளிட்ட எழுவர் கூட்டணி ஒன்று பழையனைத் தாக்கிக் கொன்றது. சினம் கொண்ட பெரும்பூண் சென்னி தானே முன்னின்று தாக்கி எழுவர் கூட்டணியை முறியடித்தான். அப்போரின்போது எழுவர் கூட்டணியில் இருந்துகொண்டு தாக்கிய கணையன் என்பவன் மட்டும் பிடிபட்டான்.அவனைச் சோழன் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து கழுமலம் என்னும் ஊரிலிருந்த சிறையில் அடைத்துவைத்தான்.
இந்தப் பெரும்பூண் சென்னி அழும்பில் என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட சோழ மன்னன். இவன் தலையில் பூப்பிணையலாலான கவசமும், மார்பில் பெரும்பூண் கவசமும் அணிந்திர்ந்தான்.
அழும்பில் என்பது இக்காலக் கர்நாடக மாநிலப் பகுதியில் சங்ககாலத்தில் இருந்த ஓர் ஊர். கோசர் குடியினர் சங்ககாலத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே வாழ்ந்துவந்தனர். எனினும் அவர்களின் சொல்வாக்குள்ள மையம் அழும்பில்.
சங்கப் பாடல்கள் தரும் செய்திகள்
இவ்வூரில் அவர்களின் அவைக்களம் இருந்தது. அதில் அவர்கள் வலம்பிரிச்சங்கு போல் அமர்ந்து கலந்தாய்வர். தலைவன் சங்கின் கூர்முனை உச்சி போல் அமர்ந்திருப்பான். - புறம் 283
இளஞ்சேட்சென்னி,
பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார்என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.
கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது[3]. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது.
இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இருங்கோவேள் என்பவனால் கொல்லப்பட்டான்.
பெரும்பூண் சென்னி என்னும் சோழ மன்னனின் படைத்தலைவன் பழையன் என்பவன் போஒர் என்னும் ஊரில் இருந்துகொண்டு சோழநாட்டு எல்லையைக் காத்துவந்தான். நறும்பூண் அத்தி உள்ளிட்ட எழுவர் கூட்டணி ஒன்று பழையனைத் தாக்கிக் கொன்றது. சினம் கொண்ட பெரும்பூண் சென்னி தானே முன்னின்று தாக்கி எழுவர் கூட்டணியை முறியடித்தான். அப்போரின்போது எழுவர் கூட்டணியில் இருந்துகொண்டு தாக்கிய கணையன் என்பவன் மட்டும் பிடிபட்டான்.அவனைச் சோழன் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து கழுமலம் என்னும் ஊரிலிருந்த சிறையில் அடைத்துவைத்தான்.
இந்தப் பெரும்பூண் சென்னி அழும்பில் என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட சோழ மன்னன். இவன் தலையில் பூப்பிணையலாலான கவசமும், மார்பில் பெரும்பூண் கவசமும் அணிந்திர்ந்தான்.
அழும்பில் என்பது இக்காலக் கர்நாடக மாநிலப் பகுதியில் சங்ககாலத்தில் இருந்த ஓர் ஊர். கோசர் குடியினர் சங்ககாலத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே வாழ்ந்துவந்தனர். எனினும் அவர்களின் சொல்வாக்குள்ள மையம் அழும்பில்.
சங்கப் பாடல்கள் தரும் செய்திகள்
இவ்வூரில் அவர்களின் அவைக்களம் இருந்தது. அதில் அவர்கள் வலம்பிரிச்சங்கு போல் அமர்ந்து கலந்தாய்வர். தலைவன் சங்கின் கூர்முனை உச்சி போல் அமர்ந்திருப்பான். - புறம் 283
- அழும்பில் என்பது சோழநாட்டில் இருந்த ஓர் ஊர்.
- அழும்பில் என்பவன் ஓர் அரசன்
இளஞ்சேட்சென்னி,
பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார்என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.
கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது[3]. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது.
இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இருங்கோவேள் என்பவனால் கொல்லப்பட்டான்.