முற்கால கள்ளர் குல மன்னர்கள்
பெரு வேந்தர் காலங்களில் ஒற்றர்கள் மலைகளிலும், மலை சார்ந்த அடிவாரங்களிலும் தங்கியிருந்து பகைவர்களின் நடமாட்டங்களை ஆய்ந்தறிந்து மன்னர்களுக்கு தகவல் சொல்வதற்காக நாடு சார்ந்த ஊர்களை தவிர்த்து பிற மலை சார்ந்த இடங்களில் வாழ்ந்தனர். இவர்கள் பல்வேறு செய்திகளையும் அறியும் பொருட்டு பல்வேறு சாதிகளில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். அரசு விசுவாசம் காரணமாக வேற்று சாதி பெண்களையும் திருமணம் செய்து கொண்டனர். இவ்வழி வந்தோர்களுக்கு பட்டங்கள் கிடையாது. பொதுவாக தேவர், அம்பலம், சேர்வை என்றே அழைக்கப்பட்டனர். சோழ வேந்தர்களுக்கு பாண்டியரும், சேரனுமே பகையாளியாக இருந்த படியால் சிவகங்கை, மதுரை, உசிலை, குடகுமலை, அழகர்மலை போன்ற மலை சார்ந்த இடங்களில் தான் ஒற்றர்கள் தங்கியிருந்தனர். இவர்களின் வழித்தோன்றல்களே இன்றைய பிறமலை கள்ளர் என்று அறியப்படுகின்றனர்.
முதல் சங்க புலவர் - அகத்தியர்
இடைச்சங்க புலவர் - தொல்காப்பியர்
கடைச்சங்க புலவர்கள்
நக்கீரர், கபிலர், பரணர், ஔவையார் இவர்களுக்கு அடுத்தபடியாக
திருவள்ளுவர், இவருக்கு பின்
பெருங்காப்பியங்கள் படைத்த
இளங்கோவடிகள், சீத்தலைச்சாத்த்னார், திருத்தக்கத்தேவர், கம்பர், சேக்கிழார், பெருந்தேவனார். இவர்களுக்கு அடுத்தபடியாக
ஏறுகள் திருத்தக்கதேவர், செயங்கொண்டார், தோலா மொழிப்புலவர், ஒட்டக்கூத்தர்.
மூன்று கவிச்சக்ரவர்த்திகள்
கம்பர், செயங்க்கொண்டார். ஒட்டக்கூத்தர்.
கல்வெட்டுகள்
நம்நாட்டின் தொன்மை வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் தொல்லியல் சான்றுகளில் ஒன்று கல்வெட்டுகள் ஆகும். கோவில் முதலிய பொதுக் கட்டிட்ங்களின் சுவர்களிலும், பாறைகள் மீதும், கல்தூண்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம். இக் கல்வெட்டு எழுத்துக்களை அறிந்து அவற்றின் பொருளை விளக்கும் கலையே கல்வெட்டியல் எனப்படும். நம்நாட்டில் கல்வெட்டுகளைப் படித்தறிந்து, வரலாற்றுச் சான்றுகளாக அவற்றை உருவாக்கிய பெருமை மேலைநாட்டவரையே சாரும். அவர்களில் முக்கியமானவர்கள்
ஜேம்ஸ் பிரின்செப் 1837 இந்தியாவில் கல்வெட்டாய்வு ஆரம்பிக்கப்படுவதற்கு இவரே முக்கிய காரணம் ஆவார்
அலெக்சாந்தர் கன்னிங்காம் 1871 முதல் 1885 வரை அசோகர் காலத்து கல்வெட்டுகள் என்ற தனித் தொகுப்பை வெளியிட்டார்
டாக்டர் யூஜின் ஹால்ட்ஸ் (1857 - 1906) தென்னிந்திய கல்வெட்டுகளின் முதல் தொகுப்பினை 1903 ல் வெளியிட்டார். மேலும் ராபர்ட் சிவல் (1868 - 1894) டாக்டர்கில்ஹார்ன்,
டாக்டர் ஜார்ஜ் பூலர் (1837 - 1898) ஜான் பிளீட் (1874 - 1917) ஜேம்ஸ் பர்கஸ் ( 1822 - 1917)
டாக்டர் ப்ர்னல், காலின் போன்றோர்களின் ஊக்கமும் உழைப்பும் ஆர்வமும் இல்லை எனில் நமது வரலாற்றினை அறிந்திருக்க வாய்புகள் குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இவர்கள் தவிர கோபிநாத்ராவ், வெங்கையா, சுப்ரமணிய ஐயர், கிருஸ்ணசாஸ்திரி இந்திய கல்வெட்டாய்வுக்கு பெரும் துணை புரிந்துள்ளனர். 1861 முதல் இதுவரையில் சுமார் எழுபத்தைந்தாயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்படாமல் உள்ளன.
சாதீயம்
உணர்வு ரீதியாகவும், கருத்துரீதியாகவும்,மனரீதியாகவும் சாதியின்மை வெற்றி கண்டதிலை. பெரும்பாலும் சாதிய மன நிலையில் இருந்து தற்காலிகமாக விடுபட்டவர்கள் நாளடைவில் அவர்களுக்குள் ஒரு மாற்றம் கண்டு மீண்டும் சாதியை கடைப்பிடிப்பவர்களாக மாறியுள்ளனர். சாதீயத்துக்கு எதிரான போராட்டங்களில் மாணவர்களும் இளம்வயதினரும் பங்காற்றி அதற்கு உண்டான விளைவுகளை கற்று உணர்ந்த பின் சாதிகள் உண்டு ஆனால் ஏற்ற தாழ்வுகள் இல்லை என்ற வாதத்திற்கு வருகிறார்கள்.இவ்வித மாற்றம் ஒரே நாளில் வந்து விடுவதில்லை. மெள்ள மெள்ளப்பல விடயங்களை புரிந்துகொண்டு போராட்டக்களத்தில்தான் இவர்கள் மாறுகிறார்கள். நாம் வாழும் இக்கிரகத்தை பூமி என்று சொல்கிறோம் உண்மையில் இது ஓர் நீர்க்கிரகம் 70% கடலும் 30% கல்,மணல், மண் போன்ற படிமங்களை உடைய ஒரு கோளை பூமி என்று ஏற்றுக்கொள்வதைப் போன்றதே சாதியின்மை. மௌனம் சப்தத்தை விட வலிமையானது, வன்மையானதும் கூட என்று கற்றுக்கொள்வேம். சாதியை ஒப்பீடு செய்து உயர்த்துவதும், தாழ்த்துவதும் இன்றைய நிலையில் சமூக தர்மம் ஆகாது.
உயிர்களை படைத்த இயற்கையின் சக்திக்கு மானுடன் இட்ட பெயர் கடவுள். தன் அறியாமையும், இயலாமையையும் அகற்றிக்கொள்ள ஏதாவது ஒன்றை பற்றிக்கொள்ள விரும்புவது மனித இயல்பு. இத்தத்துவத்தின் அடிப்படையில் ஆராய முடியாத ஒரு சக்தியை உருவபடுத்தி நம்பிக்கையின் அடிப்படையில் வளர்த்துக்கொள்ளப் பட்டதே மதம்.
ஆதிமனிதன் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த கால கட்டத்தில் பல கூட்டங்கள் ஒன்று சேர்ந்து சமூகமாய் மாற்றம் பெற்றன. சமூகம் வளர்ச்சி அடையும்போது சமுதாயத்திற்கு சில கட்டுப்படுகள், சட்டத்திட்டங்கள் சமூககோட்பாடுகள் தேவைப்பட்டன. அப்படி அவர்களை ஒன்று திரட்டி நல் வழிபடுத்த மனிதன் உருவாக்கிய உருவமில்லா அம்சமே கடவுள் என்றும், கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்கும் போது பய உணர்சியும் தேவை என்பதனையும் உணர்ந்த மானிடன் கடவுளின் பெயரால் துணையாக மதத்தையும் அமைத்துக் கொண்டான்.
மதம் என்ற சொல்லுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். கடவுளை நம்புகிறவனும், நம்பாதவனும் மதத்தை பிடித்து தொங்கிகொன்டே இருக்கிறார்கள்.இந்த ஈர்ப்பு இல்லை என்றால் இப்படி தொங்கவேண்டிய அவசியமே இல்லை. ஆன்மீகர்களுக்கு மதம் ஓர் ஏணி இதற்கு வேலிகள் இல்லை. ஆன்மீகர்களுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றி துன்பம் இல்லாமல் வாழ வழி சொல்லும் தத்துவங்களை கொண்டது மதம். மகான்கள் மக்கள் துயர் இன்றி வாழ வகுத்து தந்த பாதை தான் மதம்.
மதங்கள் தோன்ற காரணங்கள் பல இருந்தாலும் குறிக்கோல் ஒன்றே! மதங்களிடையே உள்ள வேறு பாடுகள் அவை தேன்றிய இடம், காலம், மற்றும் அன்றைய சமுதாய சூழ்நிலைகளை பொறுத்தே அமைந்தன. நலமாக வாழ வழி சொல்லும் மதங்கள் வரலாற்றின் பல கால கட்ட்ங்களில் மாபெரும் அழிவுகளுக்கும் காரணமாகி இருந்துள்ளதையும் அறிவேம். சமூகத்தை கட்டுக்குள் வைக்கவும், ஒழுங்கு முறைபடுத்தவும், நம்பிக்கையை வளர்க்கவும் பின் நாளில் மதம் வழிகாட்டியாக அமைந்தது.
மதம் மக்களை மயக்கும் ஓர் மந்திரக்கோல், மொழி நம் எண்ணங்களை படைத்திடும் ஒரு மந்திரக்கண்ணாடி இவை எல்லாம் எல்லைகள் இல்லா ஒரு கவசம் மட்டுமே, வெளி வேடத்திற்கான உடையன்று. இயற்கையின் படைப்பில் வெற்றிடம் இல்லை, வாழை விழும் நேரம் அதன் காலடியில் தன் கன்று எழுவதைக் கண்டு விடும். இதை போன்றதே மொழியும் மதமும்
நாத்திகர்கள் மதம் என்று ஒன்று இல்லை என்று அறிவு வழி செயல்படுபவர்கள்.
கடவுள் எப்படி இருப்பார்?
கடவுளை பகுதி பகுதியாக பிரிக்கமுடியாது. ஒரு கடவுளைத்தான் வணங்க வேண்டும். கடவுள் எல்லாவற்றையும் கடந்தவர். எல்லவற்றிற்க்கும் மேலானவர். கடவுளுக்கு உருவம் கிடையாது. கடவுள் ஆணும் அல்ல, பெண்ணுமல்ல. கடவுள் நம் உலகை நம் உதவியுமின்றி படைத்துள்ளார். கடவுளால் எதுவும் செய்யமுடியும். கடவுள் எங்கும் நிறைந்துள்ளார். கடவுள் இரக்கம் நிறைந்தவராக இருக்கிறார். கெட்ட்வர்களை தண்டிக்கிறார், நல்லவர்களை ஆதரிக்கிறார். கடவுள் மன்னிப்பும் அளிப்பார்.
சாதி
சாதியை ஒப்பீடு செய்து உயர்த்துவதும், தாழ்த்துவதும் சமூக தர்மம் ஆகாது.
வீணையின் இசை நாதஸ்வரத்தில் வராது.
நாதஸ்வரத்தின் நாதம் மத்தளத்தில் எழாது
மத்தள ஓசையைப் புல்லாங்குழலில் எதிர்பார்க்கக் கூடாது.
இயற்கையின் படைப்பில் வெற்றிடம் இல்லை
வாழை விழும் நேரம் அதன் காலடியில் தன் கன்று எழுவதைக் கண்டு விடும்
இரவு எவ்வளவு நீண்டு கிடந்தாலும் பொழுது விடிந்துதான் ஆகவேண்டும்.
இருண்டுகிடக்கும் வானில் நட்சத்திரங்கள் தெரிவதில்லை அதற்காக நட்சத்திரங்களே இல்லை என்று அர்த்தமும் இல்லை. தளர்ச்சி, வீக்கம், வளர்ச்சி எல்லாம் வெவ்வேறு பரிமாணங்கள்
சாதி இன்றி எந்த மனிதனும் வாழ முடியாது. சிலர் தங்களுடைய அகங்காரத்தினால் தங்களுக்கும் சாதிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற அரசியல் விளையாட்டில் வெற்றி இன்றி தவிக்கின்றனர். மெளனம் சில வேளைகளில் சப்தத்தை விட வன்மையானது.
நான் மூச்சு விடுகிறேன் ஆனால் என்னிடம் சுவாசமில்லை என்றால் எப்படி? தேச நலனென்ற பெயரில் சாதிகள் அகற்றப்படுகின்றன. விளைவு அகதி என்ற ஒரு புதிய சாதிப்பட்டம் நாம் ஏற்காமல் தினிக்கப்படுகிறது. வேரை மறந்து வேறாய் மாறும் போது நமது முகவரியின் மரணம் அருகில் என்பதும் உறுதியாகிவிடும். செய்ய வேண்டிய கடமைகள் இருக்கும் போது பெறவேண்டிய உரிமைகளை மட்டுமே கேட்கக்கூடாது.
இனம் என் இதயத்தில் இணைந்து வளர்ந்தது
குலம் என் குருதியில் கலந்தது
கல்வி என்னை பண்படுத்தி அறிவில் கரைத்தது
சங்க இலக்கியத்தில் சங்கமித்து
வரலாற்று உலகில் சிபி சக்கரவர்த்தியில் தொடங்கி
மனுநீதி சோழனில் படர்ந்து
செம்பியவேந்தனில் பதிந்து
கரிகாலனில் கரைந்து
விஜயலாயனில் திளைத்து
ராசராச பெருமன்னனில் கலந்தவன் நான்
கற்றுப்பெரும் அறிவு அனைவருக்கும் வாய்க்காது.
படித்துக்கொண்டே இருந்தால் பார்வை பழுது படும்
எல்லாவற்றையும் கற்க விரும்பினால் காலம்முடிந்து விடும்.
சான்றோர் சொல் செவி மடுத்தால் சிந்தனை மலர்ந்திடும்
கேட்டலில் கிடைக்கும் அறிவு பாமரனையும் பண்டிதனாக்கிவிடும்
இசையின் நாதம் காது நோகாது
உரைத்தல் உண்மையின் பண்பு.
மறைத்தல் பொய்மையின் இயல்பு
அறியாமையால் செய்தல் நல்லவையாய் இருப்பதில்லை
உண்மையும், அன்பும், மன்னித்தலும் இல்லையேல் குற்றமும் துரோகங்களும் கைகோர்த்து ஊரறிய வலம் வரும்.
இறை படைப்புகள்
ஓரறிவு ஜடப்பொருட்கள்
ஈரறிவு தாவரங்கள்
மூவறிவு ஜந்துக்கள்
நாலறிவு பறவைகள்
ஐந்தறிவு மிருகங்கள்
ஆறறிவு மனிதர்கள் (பகுத்தறிவு கொண்ட)
கொற்றவர்கள் கற்றவர்களைப் போற்றியது சங்க காலம்
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த முதுமொழி தமிழ்மொழி.
சீரான வாழ்க்கை, சீர்மிகு சிந்தனை, நலம் மிகுந்து, வளங்கள் பெருகி, நயமுடன் வாழ்ந்திடவும் தரணிக்கு வழிகாட்டிய மொழி தமிழ்மொழி.
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி
தேடித் தேடி கற்றவன் அறிஞன் ஆகிறான்.
ஓடி ஓடி உழைத்தவன் செல்வனாகிறான்.
ஒளிந்து ஒளிந்து திரிந்தவன் பலவீனமாகி கொடியவனாகிறான்
தெளிந்த பண்பும் மனித நேயமும் உடையவன் மாமனிதனாகிறான்.
இறுதி என்பது அருகில் என்று உணர்ந்தவன் ஞானியாகிறான்
இறுதி என்பது அருகில் என்று உணருங்கள்
இதயம் தொட்டு இன்னல்கள் தொலைப்போம்
பணிவு என்பது பலகீனமல்ல
விட்டுக் கொடுத்தலுக்கு இயலாமை என்று பெயரும் இல்லை
பண்பின் உயர்வை உறுதி செய்வது.
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன் பரம்பரையின் தொகுப்பு
01 சுடலைமலை கண்டியர் - பேச்சியம்மாள் வன்னியர் 1650
02 அப்பாவு கண்டியர் - அழகாயீ அங்குராயர் 1665
03 பெத்தாண்டி கண்டியர் - செவந்தி சாளுவர் 1682
04 மலையாண்டி கண்டியர் - கருப்பாயம்மாள் கிழாமுடையார் 1701
05 முத்தாண்டி கண்டியர் - அகிலாயீ காடுவெட்டியார் 1721
06 சின்னத்தம்பி கண்டியர் - வள்ளி சாளுவர் 1743
07 அய்யாக்கன்னு கண்டியர் - முத்தாயம்மாள் வாண்டையார் 1760
08 மருதாண்டி கண்டியர் - அழகியம்மாள் அங்குராயர் 1780
09 சந்தனம் கண்டியர் - வெள்ளையம்மாள் காலிங்கராயர் 1803
10 பெத்தையா கண்டியர் - மீனாச்சி விஜயதேவர் 1820
11 தொப்பையா கண்டியர் - இருளாயீ ராசபிரியர் 1841
12 வடமலை கண்டியர் - காமாச்சி தெங்கொண்டார் 1857
13 சிதம்பரம் கண்டியர் - அஞ்சலையம்மாள் தஞ்சிராயர் 1875
14 துரைராஜா கண்டியர் - சம்பூரனத்தம்மாள் கருப்பூண்டார் 1905
மு. சுவாமிநாத உபாத்தியாயர் திருக்களர்
இவர் பிறப்பு, வளர்ப்பு, கல்வி போன்ற செய்திகளை விரிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. எனினும் இவர் எழுதிய திருக்களர் வைபவம் என்னும் நூலில் சில குறிப்புகள் இடம் பெற்றுள்ளனன. அந்நூலிலும் இவர் தன்னைப் பற்றி எழுதவேண்டும் என்று எழுதவில்லை. திருக்களர் தேவஸ்தானத்தில் சிவத்துரோகம் செய்தோரைக் கண்டித்து எழுத, அதற்காகச் சிலர் இவரைத் தூற்றியுள்ளனர். அதற்குப் பதில் கூறும் முகமாகத் தம் குடிப்பெருமை, குலப்பெருமை, குணப்பெருமை முதலியவற்றை எடுத்துக்காட்டி, அவ்வழியில் வந்தவன், வாழ்பவன், பழி. பாவம் ஏதும் அறியாதவன் என எடுத்துக் காட்டியுள்ளார். அக்குறிப்புகளே இப்போது அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள நமக்குத் துணை புரிகின்றன.
திருக்களர் பெருமை
தாம் பிறந்து வளர்ந்து, தமிழுக்கும், சைவத்திற்கும் தொண்டாற்றிய திருக்காளர் என்ற ஊரைப் பற்றிக் குறிப்பிடும் போது கடல் புடை சூழ்ந்த நெடு நிலவுலகிலே, தண்டமிழ் மண்டலத்திலே எண்ணிறந்த கோடி திருத்தலங் களுளொன்றாயும், மூவரருளிய தேவாரத்திருப்பதிகங்கள் பெற்ற திருத்தலங் களுளொன்றாயும், தேவாரத்திருப்பதிகமுடைய (275) இருநூற்றெழுபத்தைந்து திருத்தலங்களுள் (7) ஏழு நீங்கலாக (268) இருநூற்றறுபத்தெட்டுத் தலங்களுளொன்றாயும், சோழவள நாட்டில் தேவாரத் திருப்பதிகமுடையனவாய் விளங்கும் (191) நூற்றுத் தொண்ணுற்றொரு தலங்களுளொன்றாயும் காவிரி நதிக்குத் தென்புறத் தேவாரமுடையனவாய் விளங்கும் (128) நூற்றிருபத்தெட்டுத் தலங்களுளொன்றாயும் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய ஒவ்வொரு திருப்பதிகமுடையனவாய் விளங்கும் (105) நூற்றைந்து தலங்களுளொன்றாயும் விளங்கி நின்றது இத்தலம் என்பார்.
கல்வியும் தொழிலும்
கல்வி கேள்விகளிற் சிறந்த சான்றோராய் விளங்கிய திரு. மாதவராயர் பல நூல்களை ஆக்கியதோடு களப்பாள் ஆதியப்பப் புலவர் இயற்றிய திருக்களர்ப் புராணம் என்னும் நூலையும் பதிப்பித்துள்ளார். திரு. மாதவராயர் பின்னத்தூர் ப்ரஹ்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயரவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தாம் சேகரித்த பிரதிகளில், கல்வெட்டுகளில், செப்பேடுகளில் தமக்கு ஐயம் ஏற்படும்பொழுதெல்லாம் அவற்றைப் போக்க, திரு ஐயரவர்களையே நாடியுள்ளார். இந்த மகானின் அறிவுச்சுடரின் தூண்டு கோலாக திரு. ஐயரவர்கள் திகழ்ந்தார்கள். (இதை அவரே ஓரிடத்தில் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்) திருக்களர்ப் புராணம் என்னும் நூலைப் பதிப்பித்ததோடு (1912) அதற்குக் கதாசாரங்கள், குறிப்புகள், கர்ண பரம்பரைக் கதைகள் முதலியவற்றோடு உரையும் வகுத்துள்ளார்.
திருக்களர் தேவஸ்தான விவகாரத்தில் சூழ்ந்து வந்த பகையை எதிர்த்து வென்றவர். அஞ்சா நெஞ்சத்துடன் தாம் யார் என்பதை அப்பகைவர்களுக்குக் கூறுவதைக் கேட்போம். பாரினிற் சிறந்த பருதியின் குலத்திலே இராதிரானென்னஞ் சோழன் மரபிலே மாதயபட்டினம் என்னும் திரு நகரத்தை இராசதானியாகக் கொண்ட மாதவராயன் என்னும் அரசன் கால் வழியிலே ஏணாட்டிய புகழ் சோணாட்டிடையிலே எந்நதிகளினுஞ் சிறந்த பொன்னி நதிப்பரப்பிலே அறந்திறம்பாத புறங்கரம்பை நாட்டிலே, பிறந்தோர். இறந்தோர். தரிசித்தோர். நினைந்தோர் என்னும் நால்வகையோருக்கும் நற்கதியளிக்கும் மருக்கிளர் பொழில் சூழ் திருக்களர் பதியிலே, முருக மாதவராயருக்கு, பொதியம்மையார் திருவயிற்றிலே பிறந்தவரும், திருத்தில்லைச் சிற்றம்பலத்திலே கல்வி பயின்றவரும், இரயில். சால்ட், போலீசு, என்னும் மூன்று டிபார்ட்மெண்டில் வேலை பார்த்தவரும், நாற்பது வருடங்களாக உத்தமத் தொழிலாகிய உபாத்திமைத் தொழில் நடத்தி வருகின்றவரும் ஔவையார், தாயுமானவர், திருமூலர், பட்டினத்தடிகள், வள்ளலார் ஆகிய ஆன்றோர்கள் அருளிச் செய்திருப்பதற்கிணங்கப் புலால் உண்ணுதலைத் துறந்தும், செல்வம் நிலையாமை, ஆக்கை நிலையாமை ஆகியவற்றை நன்குணர்ந்திருப்பதாகவும், தன் கொள்கையை எடுத்துக் காட்டுகின்றார். இதற்கு மேலும் அவர் பெருமையாகக் கருதும் ஒன்றிணையும் குறிப்பிட்டுள்ளார், இதோ அவ்வரிகள், சபாநாயகப் பெருமானையே வழிபடு கடவுளாகக் கொண்டவரும். திருமூலர் பரம்பரையில் சிவராச யோகேந்திர ஞானானந்தப் பெருவாரி தியாய், விருப்பு வெறுப்பற்ற சமரச சுவாநுபூதிக் கிருபா சமுத்திரமாய் கருப்புக்களர் கிராமத்திலே சமாதியுற்று விளங்கும் ஒரிச்சேரி சுவாமிகள் என்னும் திருவருள். சுப்பைய சுவாமிகளிடம் அனுக்கிரகம் பெற்றவரும் ஆகிய மு.சுவாமிநாத உபாத்தியாயர் என்பவர் என்று தன்னைப் பற்றிக் கூறுவது முற்றிலும் உண்மை என்றே அவர் தம் மாணவர்கள் உரைக்கின்றனர்.
சிவத்தொண்டு
திருக்களர் தேவஸ்தானம் பாவிகள் வசம் இருந்ததைக் கண்டு புழுங்கிய இந்த மகான் ஆலய நிர்வாகத்தைச் சீரமைத்துத் திருப்பணி செய்யப் பெரிதும் முயன்றார். களவு, காமம் முதலியவற்றின் இருப்பிடமாகக் கோயில் இருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். கையில் ஒரு காசு கூட இல்லாது, இறைவன் திருவருளை மட்டுமே துணையாகக் கொண்டு கோயில் திருப்பணி முயற்சிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் உயிருக்கு நேர்ந்த காலத்துங்கூட அவர் கலங்கவில்லை. கோயில் திருப்பணிக்காக அவர் சந்தித்த துன்பங்களும். தொல்லைகளும் கொஞ்சமல்ல. அதைப் பற்றி அவரே கூறுகின்றார். 1898-ஆம் வருடம் முதல் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியாரவர்களுக்கு ஓய்வின்றி எண்ணிறந்த மகசர், மனுக்கள் எழுதினார். நீலலோசனி, யார்த்தவசனி, என்னும் பத்திரிக்கைகளின் வாயிலாக இடைவிடாமல் கதறினார். இத்தல சம்பந்தமாகவுள்ள வைகளையெல்லாம் ஒரே புத்தகமாகத் திரட்டியும், 1902-ம் வருடத்தில் அச்சிற் பதிப்பித்துக் கொண்டு போய், இரயில் மோட்டார், இல்லாத அக்காலத்தில் தேவகோட்டை, காரைக்குடி வகையறாத் தொண்ணுற்றாறு நகரங்களிலும் பரப்பினார். காரைக்குடிக்கடுத்த கோவிலூர் மடாலயத்தில் ஐந்தாங்குருமார்தமாயெழுந்தருளியிருந்த வீரசேகர மகாமுனிவர், திருச்சன்னிதானத்தில் சமர்ப்பித்து வணங்கி விண்ணப்பஞ் செய்தார். இந்த நிலைமையில் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியில் கிருபாநிதியாகிய பி.ஆர்.நடேச ஐயரவர்கள் புதிதாகத் தலைமைப் பதவி வகித்ததை மேற்படி மு.சுவாமிநாத உபாத்தியாயர் கேள்விப்பட்டு, காரைக்குடியிலிருந்தபடியே தஞ்சாவூருக்குப் போய் மேற்படி பி.ஆர்.நடேச ஐயரவர்களுடைய காலில் விழுந்து இரண்டு கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரக்கூடியவர் களைப் பஞ்சாய்தார்களாக நியமித்திருக்கிறதாக வாக்களித்தால் கால்களை விடுவேன் இல்லையேல் உயிரை விடுவேன் என்று அழுது அரற்றினார். மேற்படி பி.ஆர். நடேச ஐயரவர்கள், கே. திருவேங்கட முதலியாரவர்கள், வி.அப்பாசாமி வாண்டையாரவர்கள், சாம்பமூர்த்திராயரவர்கள் இந்நான்கு கனவான்களும் திருக்களர்க்கோவிலை நல்ல நிலைமைக்குக் கொண்டு வரத் திருவுளங் கொண்டும், மேற்படி மு. சுவாமிநாத உபாத்தியாயருடைய துக்கத்தை நிவர்த்தி செய்தும் வைத்தனர்.
இப்பெருமகனின் பெருமுயற்சியால் காடு மூடிக்கிடந்த திருக்களர் பெரிய கோவில் புதுப் பொலிவு பெற்றது. கோவிலூர் ஸ்ரீமத் வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் திருவுளப்படி மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து திருக்களர் கோவிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கலி ஐயாயிரத்துப் பன்னிரண்டுக்குச் சரியான (கி.பி.1911) விரோதிகிருது வருடம். சித்திரை மாசம் குருவாரம் புனர்பூச நட்சத்திரங் கூடிய நற்றினத்தில் அட்டபந்தன மகாகும்பாபிடேகம் நடைபெற்றுக் கோவில் நன்னிலைக்குத் திரும்பியது. திரு. மாதவராயருடைய பெருமுயற்சியால் சிவன் விரும்பி உறையும் திருத்தலங்களுள் திருக்களரும் ஒன்றானது.
தமிழ்ப்பணி
இம்மகானின் சைவப் பணியும், தமிழ்ப்பணியும் அளவிடற்கரியதாகும். நவீன வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தில் நாடு முழுவதும் நடையாய் நடந்து நற்பணியாற்றியுள்ளார். இவரெழுதிய சைவசமயமும் தமிழ்ப்பாடையும் (1921) என்றும் நூலில் தமிழின் பெருமைகளை வியந்து போற்றியுள்ளார். அக்காலத்திலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அவர் எழுதியுள்ளவை குறிப்பிடத்தக்கனவாகும். நம்முடைய தமிழ்த் தேயத்திலே பூர்வீகத் தமிழர் மரபிலே பிறந்த தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களால் கூடிய வரையில் முயற்சி செய்து ஆங்காங்கு பற்பல தமிழ்ப் பாடசாலைகளை ஏற்படுத்தி (இடைக் காலத்தில் சொரூப பேதமடைந்த ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, னா, னை, னெ, னே இவ்வெழுத்துக்களுக்குப் பதிலாக ஆதிகாலத்திலிருந்தபடி ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ, இவ்வெழுத்துக்களை அமைத்தும், ஆரிய பாடையிலிருந்து சேர்ந்திருக்கும் ஐ, ஸ, ஷ, க்ஷ, ஹ இவ்வெழுத்துக்களில் வகையறா அறுபத்தைந்து எழுத்துக்களை நீக்கியும்) சுத்தத் தமிழில் யாவும் கற்கவும் கற்பிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
இவரெழுதிய நூல்கள் பல. இவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இவரெழுதிய நூல்களைப் பற்றி இவரே குறிப்பிட்டுள்ளார். திருக்களர்ப்புராணம், திருக்களர்ச்சார சங்கீரகம் திருக்களர் விளக்கம் ( 2,3,4, பாகங்கள்) திருக்களர் வீரசேகரஞான தேசிகர் சரித்திரம், களப்பாள் கசேந்திரவரதர் புராணம், களப்பாள் சிவசேத்திர விளக்கம், திருச்சிற்றேமம் சிவசேத்திர விளக்கம். திருவிடும்பாவனம் சிவசேத்திர விளக்கம். முப்பொருள் விளக்கம் (பசுமகிமை, விபூதி மகிமை, உருத்திராக்கம் மகிமை) திருக்கோட்டூர்ப் புராணம் நாற்பொருள் விளக்கம், (பசுமகிமை, விபூதிமகிமை, உருத்திராக்கம் மகிமை) திருக்கோட்டூர்ப் புராணம் நாற்பொருள் விளக்கம், (பசுமகிமை, விபூதி மகிமை, உருத்திராக்க மகிமை, பஞ்சாக்கர மகிமை) திருவிடைவாய் கல்வெட்டினின்று 1917-ம் வருடங்கண்டு பிடித்தது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய திருவிடைவாய்த் தேவாரம், சைவ சமயமும் தமிழ்ப்பாட்டையும், சூரியகுலக் கள்ளர் சரித்திரம். செந்தமிழாரம்பப் போதனாமுறை என்னும் புத்தகங்களை அச்சிற் பதிப்பித்து பலருக்கும் இனாமாகக் கொடுத்தார். கள்வர் கோமான் என்னும் பத்திரிகையும் நடத்தினார் என்ற செய்திகளை அறிய முடிகிறது.
பெரு வேந்தர் காலங்களில் ஒற்றர்கள் மலைகளிலும், மலை சார்ந்த அடிவாரங்களிலும் தங்கியிருந்து பகைவர்களின் நடமாட்டங்களை ஆய்ந்தறிந்து மன்னர்களுக்கு தகவல் சொல்வதற்காக நாடு சார்ந்த ஊர்களை தவிர்த்து பிற மலை சார்ந்த இடங்களில் வாழ்ந்தனர். இவர்கள் பல்வேறு செய்திகளையும் அறியும் பொருட்டு பல்வேறு சாதிகளில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். அரசு விசுவாசம் காரணமாக வேற்று சாதி பெண்களையும் திருமணம் செய்து கொண்டனர். இவ்வழி வந்தோர்களுக்கு பட்டங்கள் கிடையாது. பொதுவாக தேவர், அம்பலம், சேர்வை என்றே அழைக்கப்பட்டனர். சோழ வேந்தர்களுக்கு பாண்டியரும், சேரனுமே பகையாளியாக இருந்த படியால் சிவகங்கை, மதுரை, உசிலை, குடகுமலை, அழகர்மலை போன்ற மலை சார்ந்த இடங்களில் தான் ஒற்றர்கள் தங்கியிருந்தனர். இவர்களின் வழித்தோன்றல்களே இன்றைய பிறமலை கள்ளர் என்று அறியப்படுகின்றனர்.
முதல் சங்க புலவர் - அகத்தியர்
இடைச்சங்க புலவர் - தொல்காப்பியர்
கடைச்சங்க புலவர்கள்
நக்கீரர், கபிலர், பரணர், ஔவையார் இவர்களுக்கு அடுத்தபடியாக
திருவள்ளுவர், இவருக்கு பின்
பெருங்காப்பியங்கள் படைத்த
இளங்கோவடிகள், சீத்தலைச்சாத்த்னார், திருத்தக்கத்தேவர், கம்பர், சேக்கிழார், பெருந்தேவனார். இவர்களுக்கு அடுத்தபடியாக
ஏறுகள் திருத்தக்கதேவர், செயங்கொண்டார், தோலா மொழிப்புலவர், ஒட்டக்கூத்தர்.
மூன்று கவிச்சக்ரவர்த்திகள்
கம்பர், செயங்க்கொண்டார். ஒட்டக்கூத்தர்.
கல்வெட்டுகள்
நம்நாட்டின் தொன்மை வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் தொல்லியல் சான்றுகளில் ஒன்று கல்வெட்டுகள் ஆகும். கோவில் முதலிய பொதுக் கட்டிட்ங்களின் சுவர்களிலும், பாறைகள் மீதும், கல்தூண்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை காணலாம். இக் கல்வெட்டு எழுத்துக்களை அறிந்து அவற்றின் பொருளை விளக்கும் கலையே கல்வெட்டியல் எனப்படும். நம்நாட்டில் கல்வெட்டுகளைப் படித்தறிந்து, வரலாற்றுச் சான்றுகளாக அவற்றை உருவாக்கிய பெருமை மேலைநாட்டவரையே சாரும். அவர்களில் முக்கியமானவர்கள்
ஜேம்ஸ் பிரின்செப் 1837 இந்தியாவில் கல்வெட்டாய்வு ஆரம்பிக்கப்படுவதற்கு இவரே முக்கிய காரணம் ஆவார்
அலெக்சாந்தர் கன்னிங்காம் 1871 முதல் 1885 வரை அசோகர் காலத்து கல்வெட்டுகள் என்ற தனித் தொகுப்பை வெளியிட்டார்
டாக்டர் யூஜின் ஹால்ட்ஸ் (1857 - 1906) தென்னிந்திய கல்வெட்டுகளின் முதல் தொகுப்பினை 1903 ல் வெளியிட்டார். மேலும் ராபர்ட் சிவல் (1868 - 1894) டாக்டர்கில்ஹார்ன்,
டாக்டர் ஜார்ஜ் பூலர் (1837 - 1898) ஜான் பிளீட் (1874 - 1917) ஜேம்ஸ் பர்கஸ் ( 1822 - 1917)
டாக்டர் ப்ர்னல், காலின் போன்றோர்களின் ஊக்கமும் உழைப்பும் ஆர்வமும் இல்லை எனில் நமது வரலாற்றினை அறிந்திருக்க வாய்புகள் குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இவர்கள் தவிர கோபிநாத்ராவ், வெங்கையா, சுப்ரமணிய ஐயர், கிருஸ்ணசாஸ்திரி இந்திய கல்வெட்டாய்வுக்கு பெரும் துணை புரிந்துள்ளனர். 1861 முதல் இதுவரையில் சுமார் எழுபத்தைந்தாயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்படாமல் உள்ளன.
சாதீயம்
உணர்வு ரீதியாகவும், கருத்துரீதியாகவும்,மனரீதியாகவும் சாதியின்மை வெற்றி கண்டதிலை. பெரும்பாலும் சாதிய மன நிலையில் இருந்து தற்காலிகமாக விடுபட்டவர்கள் நாளடைவில் அவர்களுக்குள் ஒரு மாற்றம் கண்டு மீண்டும் சாதியை கடைப்பிடிப்பவர்களாக மாறியுள்ளனர். சாதீயத்துக்கு எதிரான போராட்டங்களில் மாணவர்களும் இளம்வயதினரும் பங்காற்றி அதற்கு உண்டான விளைவுகளை கற்று உணர்ந்த பின் சாதிகள் உண்டு ஆனால் ஏற்ற தாழ்வுகள் இல்லை என்ற வாதத்திற்கு வருகிறார்கள்.இவ்வித மாற்றம் ஒரே நாளில் வந்து விடுவதில்லை. மெள்ள மெள்ளப்பல விடயங்களை புரிந்துகொண்டு போராட்டக்களத்தில்தான் இவர்கள் மாறுகிறார்கள். நாம் வாழும் இக்கிரகத்தை பூமி என்று சொல்கிறோம் உண்மையில் இது ஓர் நீர்க்கிரகம் 70% கடலும் 30% கல்,மணல், மண் போன்ற படிமங்களை உடைய ஒரு கோளை பூமி என்று ஏற்றுக்கொள்வதைப் போன்றதே சாதியின்மை. மௌனம் சப்தத்தை விட வலிமையானது, வன்மையானதும் கூட என்று கற்றுக்கொள்வேம். சாதியை ஒப்பீடு செய்து உயர்த்துவதும், தாழ்த்துவதும் இன்றைய நிலையில் சமூக தர்மம் ஆகாது.
உயிர்களை படைத்த இயற்கையின் சக்திக்கு மானுடன் இட்ட பெயர் கடவுள். தன் அறியாமையும், இயலாமையையும் அகற்றிக்கொள்ள ஏதாவது ஒன்றை பற்றிக்கொள்ள விரும்புவது மனித இயல்பு. இத்தத்துவத்தின் அடிப்படையில் ஆராய முடியாத ஒரு சக்தியை உருவபடுத்தி நம்பிக்கையின் அடிப்படையில் வளர்த்துக்கொள்ளப் பட்டதே மதம்.
ஆதிமனிதன் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த கால கட்டத்தில் பல கூட்டங்கள் ஒன்று சேர்ந்து சமூகமாய் மாற்றம் பெற்றன. சமூகம் வளர்ச்சி அடையும்போது சமுதாயத்திற்கு சில கட்டுப்படுகள், சட்டத்திட்டங்கள் சமூககோட்பாடுகள் தேவைப்பட்டன. அப்படி அவர்களை ஒன்று திரட்டி நல் வழிபடுத்த மனிதன் உருவாக்கிய உருவமில்லா அம்சமே கடவுள் என்றும், கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்கும் போது பய உணர்சியும் தேவை என்பதனையும் உணர்ந்த மானிடன் கடவுளின் பெயரால் துணையாக மதத்தையும் அமைத்துக் கொண்டான்.
மதம் என்ற சொல்லுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். கடவுளை நம்புகிறவனும், நம்பாதவனும் மதத்தை பிடித்து தொங்கிகொன்டே இருக்கிறார்கள்.இந்த ஈர்ப்பு இல்லை என்றால் இப்படி தொங்கவேண்டிய அவசியமே இல்லை. ஆன்மீகர்களுக்கு மதம் ஓர் ஏணி இதற்கு வேலிகள் இல்லை. ஆன்மீகர்களுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றி துன்பம் இல்லாமல் வாழ வழி சொல்லும் தத்துவங்களை கொண்டது மதம். மகான்கள் மக்கள் துயர் இன்றி வாழ வகுத்து தந்த பாதை தான் மதம்.
மதங்கள் தோன்ற காரணங்கள் பல இருந்தாலும் குறிக்கோல் ஒன்றே! மதங்களிடையே உள்ள வேறு பாடுகள் அவை தேன்றிய இடம், காலம், மற்றும் அன்றைய சமுதாய சூழ்நிலைகளை பொறுத்தே அமைந்தன. நலமாக வாழ வழி சொல்லும் மதங்கள் வரலாற்றின் பல கால கட்ட்ங்களில் மாபெரும் அழிவுகளுக்கும் காரணமாகி இருந்துள்ளதையும் அறிவேம். சமூகத்தை கட்டுக்குள் வைக்கவும், ஒழுங்கு முறைபடுத்தவும், நம்பிக்கையை வளர்க்கவும் பின் நாளில் மதம் வழிகாட்டியாக அமைந்தது.
மதம் மக்களை மயக்கும் ஓர் மந்திரக்கோல், மொழி நம் எண்ணங்களை படைத்திடும் ஒரு மந்திரக்கண்ணாடி இவை எல்லாம் எல்லைகள் இல்லா ஒரு கவசம் மட்டுமே, வெளி வேடத்திற்கான உடையன்று. இயற்கையின் படைப்பில் வெற்றிடம் இல்லை, வாழை விழும் நேரம் அதன் காலடியில் தன் கன்று எழுவதைக் கண்டு விடும். இதை போன்றதே மொழியும் மதமும்
நாத்திகர்கள் மதம் என்று ஒன்று இல்லை என்று அறிவு வழி செயல்படுபவர்கள்.
கடவுள் எப்படி இருப்பார்?
கடவுளை பகுதி பகுதியாக பிரிக்கமுடியாது. ஒரு கடவுளைத்தான் வணங்க வேண்டும். கடவுள் எல்லாவற்றையும் கடந்தவர். எல்லவற்றிற்க்கும் மேலானவர். கடவுளுக்கு உருவம் கிடையாது. கடவுள் ஆணும் அல்ல, பெண்ணுமல்ல. கடவுள் நம் உலகை நம் உதவியுமின்றி படைத்துள்ளார். கடவுளால் எதுவும் செய்யமுடியும். கடவுள் எங்கும் நிறைந்துள்ளார். கடவுள் இரக்கம் நிறைந்தவராக இருக்கிறார். கெட்ட்வர்களை தண்டிக்கிறார், நல்லவர்களை ஆதரிக்கிறார். கடவுள் மன்னிப்பும் அளிப்பார்.
சாதி
சாதியை ஒப்பீடு செய்து உயர்த்துவதும், தாழ்த்துவதும் சமூக தர்மம் ஆகாது.
வீணையின் இசை நாதஸ்வரத்தில் வராது.
நாதஸ்வரத்தின் நாதம் மத்தளத்தில் எழாது
மத்தள ஓசையைப் புல்லாங்குழலில் எதிர்பார்க்கக் கூடாது.
இயற்கையின் படைப்பில் வெற்றிடம் இல்லை
வாழை விழும் நேரம் அதன் காலடியில் தன் கன்று எழுவதைக் கண்டு விடும்
இரவு எவ்வளவு நீண்டு கிடந்தாலும் பொழுது விடிந்துதான் ஆகவேண்டும்.
இருண்டுகிடக்கும் வானில் நட்சத்திரங்கள் தெரிவதில்லை அதற்காக நட்சத்திரங்களே இல்லை என்று அர்த்தமும் இல்லை. தளர்ச்சி, வீக்கம், வளர்ச்சி எல்லாம் வெவ்வேறு பரிமாணங்கள்
சாதி இன்றி எந்த மனிதனும் வாழ முடியாது. சிலர் தங்களுடைய அகங்காரத்தினால் தங்களுக்கும் சாதிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற அரசியல் விளையாட்டில் வெற்றி இன்றி தவிக்கின்றனர். மெளனம் சில வேளைகளில் சப்தத்தை விட வன்மையானது.
நான் மூச்சு விடுகிறேன் ஆனால் என்னிடம் சுவாசமில்லை என்றால் எப்படி? தேச நலனென்ற பெயரில் சாதிகள் அகற்றப்படுகின்றன. விளைவு அகதி என்ற ஒரு புதிய சாதிப்பட்டம் நாம் ஏற்காமல் தினிக்கப்படுகிறது. வேரை மறந்து வேறாய் மாறும் போது நமது முகவரியின் மரணம் அருகில் என்பதும் உறுதியாகிவிடும். செய்ய வேண்டிய கடமைகள் இருக்கும் போது பெறவேண்டிய உரிமைகளை மட்டுமே கேட்கக்கூடாது.
இனம் என் இதயத்தில் இணைந்து வளர்ந்தது
குலம் என் குருதியில் கலந்தது
கல்வி என்னை பண்படுத்தி அறிவில் கரைத்தது
சங்க இலக்கியத்தில் சங்கமித்து
வரலாற்று உலகில் சிபி சக்கரவர்த்தியில் தொடங்கி
மனுநீதி சோழனில் படர்ந்து
செம்பியவேந்தனில் பதிந்து
கரிகாலனில் கரைந்து
விஜயலாயனில் திளைத்து
ராசராச பெருமன்னனில் கலந்தவன் நான்
கற்றுப்பெரும் அறிவு அனைவருக்கும் வாய்க்காது.
படித்துக்கொண்டே இருந்தால் பார்வை பழுது படும்
எல்லாவற்றையும் கற்க விரும்பினால் காலம்முடிந்து விடும்.
சான்றோர் சொல் செவி மடுத்தால் சிந்தனை மலர்ந்திடும்
கேட்டலில் கிடைக்கும் அறிவு பாமரனையும் பண்டிதனாக்கிவிடும்
இசையின் நாதம் காது நோகாது
உரைத்தல் உண்மையின் பண்பு.
மறைத்தல் பொய்மையின் இயல்பு
அறியாமையால் செய்தல் நல்லவையாய் இருப்பதில்லை
உண்மையும், அன்பும், மன்னித்தலும் இல்லையேல் குற்றமும் துரோகங்களும் கைகோர்த்து ஊரறிய வலம் வரும்.
இறை படைப்புகள்
ஓரறிவு ஜடப்பொருட்கள்
ஈரறிவு தாவரங்கள்
மூவறிவு ஜந்துக்கள்
நாலறிவு பறவைகள்
ஐந்தறிவு மிருகங்கள்
ஆறறிவு மனிதர்கள் (பகுத்தறிவு கொண்ட)
கொற்றவர்கள் கற்றவர்களைப் போற்றியது சங்க காலம்
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த முதுமொழி தமிழ்மொழி.
சீரான வாழ்க்கை, சீர்மிகு சிந்தனை, நலம் மிகுந்து, வளங்கள் பெருகி, நயமுடன் வாழ்ந்திடவும் தரணிக்கு வழிகாட்டிய மொழி தமிழ்மொழி.
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி
தேடித் தேடி கற்றவன் அறிஞன் ஆகிறான்.
ஓடி ஓடி உழைத்தவன் செல்வனாகிறான்.
ஒளிந்து ஒளிந்து திரிந்தவன் பலவீனமாகி கொடியவனாகிறான்
தெளிந்த பண்பும் மனித நேயமும் உடையவன் மாமனிதனாகிறான்.
இறுதி என்பது அருகில் என்று உணர்ந்தவன் ஞானியாகிறான்
இறுதி என்பது அருகில் என்று உணருங்கள்
இதயம் தொட்டு இன்னல்கள் தொலைப்போம்
பணிவு என்பது பலகீனமல்ல
விட்டுக் கொடுத்தலுக்கு இயலாமை என்று பெயரும் இல்லை
பண்பின் உயர்வை உறுதி செய்வது.
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன் பரம்பரையின் தொகுப்பு
01 சுடலைமலை கண்டியர் - பேச்சியம்மாள் வன்னியர் 1650
02 அப்பாவு கண்டியர் - அழகாயீ அங்குராயர் 1665
03 பெத்தாண்டி கண்டியர் - செவந்தி சாளுவர் 1682
04 மலையாண்டி கண்டியர் - கருப்பாயம்மாள் கிழாமுடையார் 1701
05 முத்தாண்டி கண்டியர் - அகிலாயீ காடுவெட்டியார் 1721
06 சின்னத்தம்பி கண்டியர் - வள்ளி சாளுவர் 1743
07 அய்யாக்கன்னு கண்டியர் - முத்தாயம்மாள் வாண்டையார் 1760
08 மருதாண்டி கண்டியர் - அழகியம்மாள் அங்குராயர் 1780
09 சந்தனம் கண்டியர் - வெள்ளையம்மாள் காலிங்கராயர் 1803
10 பெத்தையா கண்டியர் - மீனாச்சி விஜயதேவர் 1820
11 தொப்பையா கண்டியர் - இருளாயீ ராசபிரியர் 1841
12 வடமலை கண்டியர் - காமாச்சி தெங்கொண்டார் 1857
13 சிதம்பரம் கண்டியர் - அஞ்சலையம்மாள் தஞ்சிராயர் 1875
14 துரைராஜா கண்டியர் - சம்பூரனத்தம்மாள் கருப்பூண்டார் 1905
மு. சுவாமிநாத உபாத்தியாயர் திருக்களர்
இவர் பிறப்பு, வளர்ப்பு, கல்வி போன்ற செய்திகளை விரிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. எனினும் இவர் எழுதிய திருக்களர் வைபவம் என்னும் நூலில் சில குறிப்புகள் இடம் பெற்றுள்ளனன. அந்நூலிலும் இவர் தன்னைப் பற்றி எழுதவேண்டும் என்று எழுதவில்லை. திருக்களர் தேவஸ்தானத்தில் சிவத்துரோகம் செய்தோரைக் கண்டித்து எழுத, அதற்காகச் சிலர் இவரைத் தூற்றியுள்ளனர். அதற்குப் பதில் கூறும் முகமாகத் தம் குடிப்பெருமை, குலப்பெருமை, குணப்பெருமை முதலியவற்றை எடுத்துக்காட்டி, அவ்வழியில் வந்தவன், வாழ்பவன், பழி. பாவம் ஏதும் அறியாதவன் என எடுத்துக் காட்டியுள்ளார். அக்குறிப்புகளே இப்போது அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள நமக்குத் துணை புரிகின்றன.
திருக்களர் பெருமை
தாம் பிறந்து வளர்ந்து, தமிழுக்கும், சைவத்திற்கும் தொண்டாற்றிய திருக்காளர் என்ற ஊரைப் பற்றிக் குறிப்பிடும் போது கடல் புடை சூழ்ந்த நெடு நிலவுலகிலே, தண்டமிழ் மண்டலத்திலே எண்ணிறந்த கோடி திருத்தலங் களுளொன்றாயும், மூவரருளிய தேவாரத்திருப்பதிகங்கள் பெற்ற திருத்தலங் களுளொன்றாயும், தேவாரத்திருப்பதிகமுடைய (275) இருநூற்றெழுபத்தைந்து திருத்தலங்களுள் (7) ஏழு நீங்கலாக (268) இருநூற்றறுபத்தெட்டுத் தலங்களுளொன்றாயும், சோழவள நாட்டில் தேவாரத் திருப்பதிகமுடையனவாய் விளங்கும் (191) நூற்றுத் தொண்ணுற்றொரு தலங்களுளொன்றாயும் காவிரி நதிக்குத் தென்புறத் தேவாரமுடையனவாய் விளங்கும் (128) நூற்றிருபத்தெட்டுத் தலங்களுளொன்றாயும் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய ஒவ்வொரு திருப்பதிகமுடையனவாய் விளங்கும் (105) நூற்றைந்து தலங்களுளொன்றாயும் விளங்கி நின்றது இத்தலம் என்பார்.
கல்வியும் தொழிலும்
கல்வி கேள்விகளிற் சிறந்த சான்றோராய் விளங்கிய திரு. மாதவராயர் பல நூல்களை ஆக்கியதோடு களப்பாள் ஆதியப்பப் புலவர் இயற்றிய திருக்களர்ப் புராணம் என்னும் நூலையும் பதிப்பித்துள்ளார். திரு. மாதவராயர் பின்னத்தூர் ப்ரஹ்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயரவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தாம் சேகரித்த பிரதிகளில், கல்வெட்டுகளில், செப்பேடுகளில் தமக்கு ஐயம் ஏற்படும்பொழுதெல்லாம் அவற்றைப் போக்க, திரு ஐயரவர்களையே நாடியுள்ளார். இந்த மகானின் அறிவுச்சுடரின் தூண்டு கோலாக திரு. ஐயரவர்கள் திகழ்ந்தார்கள். (இதை அவரே ஓரிடத்தில் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்) திருக்களர்ப் புராணம் என்னும் நூலைப் பதிப்பித்ததோடு (1912) அதற்குக் கதாசாரங்கள், குறிப்புகள், கர்ண பரம்பரைக் கதைகள் முதலியவற்றோடு உரையும் வகுத்துள்ளார்.
திருக்களர் தேவஸ்தான விவகாரத்தில் சூழ்ந்து வந்த பகையை எதிர்த்து வென்றவர். அஞ்சா நெஞ்சத்துடன் தாம் யார் என்பதை அப்பகைவர்களுக்குக் கூறுவதைக் கேட்போம். பாரினிற் சிறந்த பருதியின் குலத்திலே இராதிரானென்னஞ் சோழன் மரபிலே மாதயபட்டினம் என்னும் திரு நகரத்தை இராசதானியாகக் கொண்ட மாதவராயன் என்னும் அரசன் கால் வழியிலே ஏணாட்டிய புகழ் சோணாட்டிடையிலே எந்நதிகளினுஞ் சிறந்த பொன்னி நதிப்பரப்பிலே அறந்திறம்பாத புறங்கரம்பை நாட்டிலே, பிறந்தோர். இறந்தோர். தரிசித்தோர். நினைந்தோர் என்னும் நால்வகையோருக்கும் நற்கதியளிக்கும் மருக்கிளர் பொழில் சூழ் திருக்களர் பதியிலே, முருக மாதவராயருக்கு, பொதியம்மையார் திருவயிற்றிலே பிறந்தவரும், திருத்தில்லைச் சிற்றம்பலத்திலே கல்வி பயின்றவரும், இரயில். சால்ட், போலீசு, என்னும் மூன்று டிபார்ட்மெண்டில் வேலை பார்த்தவரும், நாற்பது வருடங்களாக உத்தமத் தொழிலாகிய உபாத்திமைத் தொழில் நடத்தி வருகின்றவரும் ஔவையார், தாயுமானவர், திருமூலர், பட்டினத்தடிகள், வள்ளலார் ஆகிய ஆன்றோர்கள் அருளிச் செய்திருப்பதற்கிணங்கப் புலால் உண்ணுதலைத் துறந்தும், செல்வம் நிலையாமை, ஆக்கை நிலையாமை ஆகியவற்றை நன்குணர்ந்திருப்பதாகவும், தன் கொள்கையை எடுத்துக் காட்டுகின்றார். இதற்கு மேலும் அவர் பெருமையாகக் கருதும் ஒன்றிணையும் குறிப்பிட்டுள்ளார், இதோ அவ்வரிகள், சபாநாயகப் பெருமானையே வழிபடு கடவுளாகக் கொண்டவரும். திருமூலர் பரம்பரையில் சிவராச யோகேந்திர ஞானானந்தப் பெருவாரி தியாய், விருப்பு வெறுப்பற்ற சமரச சுவாநுபூதிக் கிருபா சமுத்திரமாய் கருப்புக்களர் கிராமத்திலே சமாதியுற்று விளங்கும் ஒரிச்சேரி சுவாமிகள் என்னும் திருவருள். சுப்பைய சுவாமிகளிடம் அனுக்கிரகம் பெற்றவரும் ஆகிய மு.சுவாமிநாத உபாத்தியாயர் என்பவர் என்று தன்னைப் பற்றிக் கூறுவது முற்றிலும் உண்மை என்றே அவர் தம் மாணவர்கள் உரைக்கின்றனர்.
சிவத்தொண்டு
திருக்களர் தேவஸ்தானம் பாவிகள் வசம் இருந்ததைக் கண்டு புழுங்கிய இந்த மகான் ஆலய நிர்வாகத்தைச் சீரமைத்துத் திருப்பணி செய்யப் பெரிதும் முயன்றார். களவு, காமம் முதலியவற்றின் இருப்பிடமாகக் கோயில் இருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். கையில் ஒரு காசு கூட இல்லாது, இறைவன் திருவருளை மட்டுமே துணையாகக் கொண்டு கோயில் திருப்பணி முயற்சிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் உயிருக்கு நேர்ந்த காலத்துங்கூட அவர் கலங்கவில்லை. கோயில் திருப்பணிக்காக அவர் சந்தித்த துன்பங்களும். தொல்லைகளும் கொஞ்சமல்ல. அதைப் பற்றி அவரே கூறுகின்றார். 1898-ஆம் வருடம் முதல் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியாரவர்களுக்கு ஓய்வின்றி எண்ணிறந்த மகசர், மனுக்கள் எழுதினார். நீலலோசனி, யார்த்தவசனி, என்னும் பத்திரிக்கைகளின் வாயிலாக இடைவிடாமல் கதறினார். இத்தல சம்பந்தமாகவுள்ள வைகளையெல்லாம் ஒரே புத்தகமாகத் திரட்டியும், 1902-ம் வருடத்தில் அச்சிற் பதிப்பித்துக் கொண்டு போய், இரயில் மோட்டார், இல்லாத அக்காலத்தில் தேவகோட்டை, காரைக்குடி வகையறாத் தொண்ணுற்றாறு நகரங்களிலும் பரப்பினார். காரைக்குடிக்கடுத்த கோவிலூர் மடாலயத்தில் ஐந்தாங்குருமார்தமாயெழுந்தருளியிருந்த வீரசேகர மகாமுனிவர், திருச்சன்னிதானத்தில் சமர்ப்பித்து வணங்கி விண்ணப்பஞ் செய்தார். இந்த நிலைமையில் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியில் கிருபாநிதியாகிய பி.ஆர்.நடேச ஐயரவர்கள் புதிதாகத் தலைமைப் பதவி வகித்ததை மேற்படி மு.சுவாமிநாத உபாத்தியாயர் கேள்விப்பட்டு, காரைக்குடியிலிருந்தபடியே தஞ்சாவூருக்குப் போய் மேற்படி பி.ஆர்.நடேச ஐயரவர்களுடைய காலில் விழுந்து இரண்டு கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரக்கூடியவர் களைப் பஞ்சாய்தார்களாக நியமித்திருக்கிறதாக வாக்களித்தால் கால்களை விடுவேன் இல்லையேல் உயிரை விடுவேன் என்று அழுது அரற்றினார். மேற்படி பி.ஆர். நடேச ஐயரவர்கள், கே. திருவேங்கட முதலியாரவர்கள், வி.அப்பாசாமி வாண்டையாரவர்கள், சாம்பமூர்த்திராயரவர்கள் இந்நான்கு கனவான்களும் திருக்களர்க்கோவிலை நல்ல நிலைமைக்குக் கொண்டு வரத் திருவுளங் கொண்டும், மேற்படி மு. சுவாமிநாத உபாத்தியாயருடைய துக்கத்தை நிவர்த்தி செய்தும் வைத்தனர்.
இப்பெருமகனின் பெருமுயற்சியால் காடு மூடிக்கிடந்த திருக்களர் பெரிய கோவில் புதுப் பொலிவு பெற்றது. கோவிலூர் ஸ்ரீமத் வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் திருவுளப்படி மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து திருக்களர் கோவிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கலி ஐயாயிரத்துப் பன்னிரண்டுக்குச் சரியான (கி.பி.1911) விரோதிகிருது வருடம். சித்திரை மாசம் குருவாரம் புனர்பூச நட்சத்திரங் கூடிய நற்றினத்தில் அட்டபந்தன மகாகும்பாபிடேகம் நடைபெற்றுக் கோவில் நன்னிலைக்குத் திரும்பியது. திரு. மாதவராயருடைய பெருமுயற்சியால் சிவன் விரும்பி உறையும் திருத்தலங்களுள் திருக்களரும் ஒன்றானது.
தமிழ்ப்பணி
இம்மகானின் சைவப் பணியும், தமிழ்ப்பணியும் அளவிடற்கரியதாகும். நவீன வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தில் நாடு முழுவதும் நடையாய் நடந்து நற்பணியாற்றியுள்ளார். இவரெழுதிய சைவசமயமும் தமிழ்ப்பாடையும் (1921) என்றும் நூலில் தமிழின் பெருமைகளை வியந்து போற்றியுள்ளார். அக்காலத்திலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அவர் எழுதியுள்ளவை குறிப்பிடத்தக்கனவாகும். நம்முடைய தமிழ்த் தேயத்திலே பூர்வீகத் தமிழர் மரபிலே பிறந்த தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்களால் கூடிய வரையில் முயற்சி செய்து ஆங்காங்கு பற்பல தமிழ்ப் பாடசாலைகளை ஏற்படுத்தி (இடைக் காலத்தில் சொரூப பேதமடைந்த ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, னா, னை, னெ, னே இவ்வெழுத்துக்களுக்குப் பதிலாக ஆதிகாலத்திலிருந்தபடி ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றொ, றோ, னா, னை, னொ, னோ, இவ்வெழுத்துக்களை அமைத்தும், ஆரிய பாடையிலிருந்து சேர்ந்திருக்கும் ஐ, ஸ, ஷ, க்ஷ, ஹ இவ்வெழுத்துக்களில் வகையறா அறுபத்தைந்து எழுத்துக்களை நீக்கியும்) சுத்தத் தமிழில் யாவும் கற்கவும் கற்பிக்கவும் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
இவரெழுதிய நூல்கள் பல. இவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இவரெழுதிய நூல்களைப் பற்றி இவரே குறிப்பிட்டுள்ளார். திருக்களர்ப்புராணம், திருக்களர்ச்சார சங்கீரகம் திருக்களர் விளக்கம் ( 2,3,4, பாகங்கள்) திருக்களர் வீரசேகரஞான தேசிகர் சரித்திரம், களப்பாள் கசேந்திரவரதர் புராணம், களப்பாள் சிவசேத்திர விளக்கம், திருச்சிற்றேமம் சிவசேத்திர விளக்கம். திருவிடும்பாவனம் சிவசேத்திர விளக்கம். முப்பொருள் விளக்கம் (பசுமகிமை, விபூதி மகிமை, உருத்திராக்கம் மகிமை) திருக்கோட்டூர்ப் புராணம் நாற்பொருள் விளக்கம், (பசுமகிமை, விபூதிமகிமை, உருத்திராக்கம் மகிமை) திருக்கோட்டூர்ப் புராணம் நாற்பொருள் விளக்கம், (பசுமகிமை, விபூதி மகிமை, உருத்திராக்க மகிமை, பஞ்சாக்கர மகிமை) திருவிடைவாய் கல்வெட்டினின்று 1917-ம் வருடங்கண்டு பிடித்தது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய திருவிடைவாய்த் தேவாரம், சைவ சமயமும் தமிழ்ப்பாட்டையும், சூரியகுலக் கள்ளர் சரித்திரம். செந்தமிழாரம்பப் போதனாமுறை என்னும் புத்தகங்களை அச்சிற் பதிப்பித்து பலருக்கும் இனாமாகக் கொடுத்தார். கள்வர் கோமான் என்னும் பத்திரிகையும் நடத்தினார் என்ற செய்திகளை அறிய முடிகிறது.