Final Revised List of Pattangal
அரசன், அரசுடையான், அரசுக்குடையான், அரசுக்குழைச்சான், அரச்சுக்குழைச்சான்,
அரசாண்டான், அரசாளன், அரசாளி, அரசாட்சி, அரசப்பிரியன், அரசுகொண்டான்,
அரசதேவன்.
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் அரசதேவன், அரசபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அரசரிற் சிறந்தவன் என்று போற்றப்பட்டவன். இவன் அரசாண்டான், அரசுக்குடையான் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டான். அரசிலி, அரநெறி, அரதைப்பெரும்பாழி என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதலங்களையும், அரசூர், அரசங்குளம், அரங்குளம், அரசமங்கலம், அரசங்குடி என்ற ஊர்களையும் உண்டாக்கி ஆட்சிபுரிந்தான்.இவன் மரபினர் மேற்கூரிய அரசன், அரசுடையான், அரசுக்குடையான், அரசுக்குழைச்சான், அரச்சுக்குழைச்சான்,
அரசாண்டான், அரசாளன், அரசாளி, அரசாட்சி, அரசப்பிரியன்,
அரசுகொண்டான், அரசதேவன் என்ற பட்டங்களை பெற்றனர்.
அச்சான்டான்.
அங்கராயர்.
முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் அங்கம் என்ற நாட்டை வென்று கங்கையில் நீர் எடுத்த வீர பரம்பரையினர். அங்கதேசம் மகாபாரத கர்ண மகா ராஜவின் நாடாகும்.
அச்சுதன், அச்சுதபண்டாரம், அச்சுததேவன், அச்சுத்தேவன், அச்சுதராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அச்சுதன். அச்சுதபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அச்சுதராயன், அச்சுததேவன் எனவும் வழங்கப்பட்டது. அச்சுதங்குடி, அச்சுதமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் அச்சுதன், அச்சுதபண்டாரம், அச்சுததேவன், அச்சுத்தேவன்.என்ற பட்டங்களை பெற்றனர்.
அத்திரியன், அத்திரியாக்கி, அத்திரிமாக்கி, அத்திப்பிரியன், அத்திகொண்டான், அத்தியாண்டான்,
அத்தியாளி, அத்தியுடையான்.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அத்திசோழன். அத்திக்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அத்திகொண்டான், அத்தியாண்டான், அத்திப்பிரியன், அத்தியாளி, அத்தியுடையான் எனவும் வழங்கும். அத்தங்குடி, (அதங்குடி) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தையும், அத்திப்புலியூர் என்னும் சிவதலத்தையும், அத்திக்கரை, அத்திப்பட்டு எனும் திருப்புகள் பெற்ற சுப்பிரமணிய தலங்களையும், அத்திசோழமங்கலம், அத்திக்கடை, அத்திப்பேட்டை, அத்தியூர், அத்திப்பாக்கம், அத்திவெட்டி, அத்திக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினருக்கு அத்திப்பிரியன், அத்திரியன், அத்திரிமாக்கி என்னும் பட்டங்கள் வழங்குகின்றது. அத்திரி என்பது கோவேறு கழுதையை குறிக்கும். பெருங்குடி மக்கள் அத்திரியை பயன்படுத்தி பிரயானம் செய்தனர். பெருங்குடி வணிகனாகிய கோவலன் அத்திரியில் சென்றதை சிலம்பு குறிப்பிடுகிறது. சங்க காலங்களில் தலைவன் கோவேறு கழுதையில் பயனித்ததை சங்க பாடல்கள் செப்புகின்றன. இதன் மூலம் இப்பட்டங்கள் சங்ககாலம் முதல் வழக்கத்தில் உள்ளது என்பது தெரிய வருகிறது.இப்பட்டமுடையோர் அதிகமாக வாழும் ஊர்கள் தெரியவில்லை.
அரியதன், அரிப்பிரியன், அரியப்பிள்ளை.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி அரியசந்திரசோழன். அரிசந்திரபுரம் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அரியதன், அரிப்பிரியன் அன்வும் வழங்கும். காவிரி ஆற்றிலிருந்து அரிசிலாறு என்னும் பேராற்ரையும், முள்ளியாற்றிலிருந்து அரியசந்திர நதியையும் உருவாக்கினான். அரியலூர், அரியமங்கை, அரியக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் அரியதன், அரிப்பிரியன், அரியப்பிள்ளை என்னும்பட்டங்களை கொண்டனர்.
அண்டங்கொண்டான், அண்ணுண்டான், அண்டப்பிரியன், அண்ணுப்பிரியன், அண்ணுத்திப்பிரியன்,
அண்ணமாண்டான், அண்டமாளியன்.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி. அண்டபுரம் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அண்டங்கொண்டான், அண்டமாண்டான், அண்டப்பிரியன், அண்டமாளி எனவும் வழங்கலாயிற்று. அண்ணாமலை என்னும் தேவார சிவ தலத்தையும்,அண்டக்குடி(அண்ணுகுடி) அண்டக்குளம், அண்டத்துறை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். சுவர்க்கம், அந்தரம், பூமி என்னும் உலகங்களையும் வென்றவன் என புகழப்பட்டவன்.
மேலனைத்துலகு மிவ்வகில லோகமெலாம் வென்றுகொண்டவனு மென்றிவர்கள் கொண்ட விறலும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது.இவன் மரபோர் அண்டங்கொண்டான், அண்ணுண்டான், அண்டப்பிரியன், அண்ணுப்பிரியன், அண்ணுத்திப்பிரியன், அண்ணமாண்டான், அண்டமாளியன் என்னும் பட்டங்களை கொண்டனர். இப்பட்டங்கள் சங்ககாலத்தில் வழங்கப்பட்டவை என உறுதி செய்யப்படுகிறது.
அம்பராண்டான், அமரண்டான், அமராண்டான், அம்பர்த்தேவன், அம்மலத்தேவன்,
அம்மானைத்தேவன், அம்பானைத்தேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அம்பன். அம்பர்,அம்பர்மாகாளம் என்னும் இரண்டு சிவதலமுடைய அம்பர் என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் அம்பராயன், அம்பராண்டான், அம்பர்த்தேவன் எனவும் வழங்கும். அம்பராயன்பேட்டை (அம்பராசன்பேட்டை) அம்பத்தூர்(அம்பகரத்தூர்) அம்புக்கோவில் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் அம்பராண்டான், அமரண்டான், அமராண்டான், அம்பர்த்தேவன், அம்மலத்தேவன், அம்மானைத்தேவன், அம்பானைத்தேவன் எனும் பட்டங்களை கொண்டனர்
அம்மையத்தரையன், அசையாத்துரையன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அம்மையன். அம்மையபுரம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அம்மையப்பன், அம்மளூர் என்னும் ஊர்களையும், அம்மணியாறு என்னும் பேராற்றையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் அம்மையத்தரையன், அசையாத்துரையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
அருண்மொழித்தேவன், அருமொழித்தேவன்.
அருவன், அருவாத்தலைவன், அருவாத்தலையன், அருவாநாடன், அருமைநாடன், அருமடான்,
அருவாநாட்டான், அருமநாட்டான், அருவாநாடன், அருமைநாடன்.
கரிகால் சோழன் வழி வந்தவர்கள். காவிரியின் கழிமுகப் பகுதிக்கு வடக்கேயுள்ள பொண்ணையாற்று பள்ளத்தாக்கு அருவாநாடு என்று அழைக்கப்பட்டது. அதனை ஆண்டவர்கள் அருவாளர் எனப்பட்டனர். கரிகால் சோழன் இந் நாட்டை வெற்றி கொண்டு ஆண்டான் என்றும் வரலாறு கூறுகிறது.(30 கல்வெட்டுகள் வை.சுந்தரேசவாண்டையார்) அருவாநாட்டான், அருவாத்தலையன் என்னும் பட்டங்கள் அருவாநாட்டு வெற்றிகளோடு சம்பந்தப்பட்டுள்ளது. அருவா நாட்டின் வடபால் உள்ள பகுதி அருவாவடதலை நாடாகும். இதனை ஆண்டவர்கள் அருவாவடதலையான் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் திரிந்து அருவாத்தலையர் என்று வழங்கிவருகிறது. இவன் மரபோர் அருவாத்தலைவன், அருவாத்தலையன், அருவாநாடன், அருமைநாடன், அருமடான், அருவாநாட்டான், அருமநாட்டான் என்னும் பட்டங்களை கொண்டனர். இப் பட்டமுடைய கள்ளர் குடியினர் மன்னார்குடி பைங்காநாடு என்ற ஊரில் வாழுகின்றனர்.
அடைக்கப்பட்டான், அடைவளைந்தான், அடவளைந்தான், அடைவளஞ்சான், அண்டம்வளைந்தான்.
அண்டசோழன் மரபில் வந்த மன்னன் அடைவளைசோழன். அடைக்கப்பட்டு என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அடைக்கப்பட்டான், அடைவளைந்தான் எனவும் வழங்கும். அடைப்பாறு என்னும் ஆற்றையும் உருவாக்கி அரசாண்டவன். அடை என்பது நிலம் என்றும், வளைவதாவது சுற்றி வருவது என்றும் பொருள்படும். இதன் மூலம் இவர்கள் நிலத்தை சுற்றி அதன் எல்லைகளை வகுத்து மானியமாக நிலங்களை அளித்தவர்கள் (தினந்தோறும் திருக் கோவில்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு மற்றும் பூசனப்பொருட்களை வழங்குபவர்களுக்கு) என்றும் அறியப்படுகிறது. அடைக்கப்பட்டான், அடைவளைந்தான், அடவளைந்தான், அடைவளஞ்சான், அண்டம்வளைந்தான் என்னும் பட்டமுடைய கள்ளர்கள் திருவையாறு வட்டம் திருச்சினம்பூண்டி, திருச்சி மாவட்டம் கிளியூர் ஆகிய இடங்க்களில் அதிகமாக வாழுகின்றனர்.
அன்னவாயில்ராயன், அன்னவாசல்ராயன்.
அன்னசோழன், அன்னவாயில் என்னும் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அன்னவாயில்ராயன் எனவும்வழங்கும். சோற்றுத்துறை எனும் தேவார சிவ தலத்தையும், அன்னப்பன்பேட்டை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் அன்னவாயில்ராயன், அன்னவாசல்ராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
அதியமான், அதிகைமான், அதியமார், அதியன், அதிகர்.
குறுநில மன்னர் குடிகள்.
சங்காலம் முதல் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய குறுநில மன்னர் குடிகள் பலவாகும், அவற்றுள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை சிறப்பு வாய்ந்த கள்ளர்குல மரபுகள் சிலவே அவற்றுள் அதியமான் பரம்பரையும் ஒன்று.
அதியரையமங்கை (அதிகை) என்னும் தேவாரம் பெற்ற சிவதலநகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன் அதியமான். சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த குறுநில மன்னரான அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன் அதியமான் நெடுமிடல். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நெடுமிடல் என்பது அரசனின் இயற்பெயர் எனச் சிலர் கருதுவர் வேறு சிலர் இது நெடிய வலிபொருந்திய என்னும் பொருள் குறிக்கும் ஒரு அடைமொழி என்பர். சங்ககாலம் முதல் பிற்காலச் சோழர்கள் வரை சிற்சில இடைவெளி நீங்களாகத் தகடூர் நாட்டில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் அதியன் மரபினரே. பனம்பூ மாலையைச் சூடியவர்கள்.
அதியமான் சேரர் வழி வந்த கள்ளர் இனகுழு தலைவன் தகடூர் (இன்றைய தர்மபுரி) என்னும் நாட்டின் அரசன். சத்திய புத்திரன் என்று அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டில் குறிக்கப்பட்ட பெருமை உடையவன். இவனது முன்னோர்கள் தான் இந்திய திருநாட்டிற்கு முதன் முதலில் கரும்பினை கொண்டு வந்தவர்கள் என்ற சிறப்புடைய குடிப்பெருமையுடையவன். சிரந்த போர் ஆற்றலும் ஈகைக்குணமும் உள்ளவன். தன்னிடம் இரந்து வருகின்றவர்களுக்கு இல்லையெனாது வாரிக்கொடுக்கும் வள்ளலாக இருந்தவன். போர் களத்தில் இருந்தபோதும் இரவலர்களுக்கு கொடையளித்தவன் என்ற பெருமை பெற்றவன். அரியதாய் அருமருந்தாய் என்றும் இளமை நல்கும் குணமுடைய அருநெல்லிக் கனியை தான் உண்ணாது, தனது சுற்றத்தினருக்கும் கொடுக்காது தமிழ் வாழ தமிழை தாலாட்டிய மூதாட்டி ஓளவைக்கு கொடுத்தமை இவனது ஈகைக் குணத்திற்கும், தமிழ்மொழி மேல் கொண்ட பற்றிற்கும் ஓளவையின் பால் இவன் கொண்டிருந்த நற்பின் பண்பிற்க்கும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
சங்ககால அதியமான் மரபில் தலைசிறந்த மன்னனாக நெடுமான் அஞ்சி விளங்கியுள்ளான். அதியமான் நெடுமான் அஞ்சி சமகாலத்தில் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை, மலையமான் திருமுடிக்காரி, தொண்டைமான், வல்வில் ஓரி ஆகியோர் இருந்துள்ளனர்.
கடையெழு வள்ளல்களில் ஒருவன் அதிகமான் நெடுமானஞ்சி மன்னன். தருமம் செய்வது கடமை என கொண்ட அதியமானின் ஊர் தருமபுரி என அழைக்கலாயிற்று. அஞ்சி என்ற இயற்பெயர் கொண்ட இம் மன்னன் இன்றைய தர்மபுரியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தான். முதன் முதலாக கரும்பினை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய மன்னனும், நீண்ட ஆயுள் அளிக்கக் கூடிய அரிய கருநெல்லிக் கனியை ஔவைக்கு அளித்து பெருமை பெற்றவனும் இவனே. இவனது வம்சாவழியினரும் பிற்காலச் சோழர்கள் காலத்தில் தகடூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்கள்.
தமிழகத்தின் ஆட்சியில் பன்னூற்றாண்டு காலம் தனிப்பெரும் புகழடன் உலா வந்தவர்கள் அதியமான்கள் இவர்கள் 12ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து செயற்கரும் செயல்கள் செய்ததை அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளனர். சங்க இலக்கியம் வழி அதியர் மரபினர் அமைத்திருந்த இரு கோட்டைகள் குறித்து அறிய முடிகிறது.
கடவுள் அஞ்சி எழுப்பிய கோட்டை தூங்கெயில் கோட்டை எனவும் மற்றது தடூர் அதியமான் நெடுமான் அஞ்சி அமைத்த கோட்டையாகும்.இக்கோட்டையில் தான் நெடுமான் அஞ்சியின் அரண்மனையும் இருந்ததாக அறியப்படுகிறது. இக்கோட்டையே சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையால் அழிக்கப்பட்ட கோட்டையாகும்.இக்கோட்டைக்கு கிழக்கே ஒரு மலைத்தொடர் உள்ளது. இம்மலையே அந்நாளில் குதிரை மலை என்று அழைக்கப்பதுள்ளது. உண்டாரை நீண்ட நாள் உயிர் வாழ்விக்கும் தெய்வத்தன்மை பொருந்திய நெல்லிக்கனியை தந்தது இம்மலை தான்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களுக்கு நிகராக ஒளவைக்கு நெல்லிக்கனி தந்து தமிழ் வளர்த்த தடூர் அதியமான் நெடுமான் அஞ்சி முத்தமிழ் வளர்த்த முதல்வனாகத் திகழ்கிறான். நெடுந்தேர் அஞ்சி, நெடு நெறிக் குதிரை கூர்வேல் அஞ்சி, கடும்பகட்டு யானை நெடுமான்
அஞ்சி என பலவாறு சங்கப்பாடல்களில் புகழப்படுகிறான். இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய தீவுகளில் ஒன்றான இப்போதைய சாலமன் தீவில் இருந்து கரும்பை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய பெருமையும் அதியர் பரம்பரையே சாரும்.
அதியர் பல்லவர் காலத்தில் நாமக்கல் பகுதியை ஆண்டுள்ளனர் என்பதனை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. இங்கு குறிப்பிடும் அதியர் சோமன் என்ற குணசீலன் ஆவான்.
இவன் எழுப்பிய நாமக்கல் குடவரைக் கோயிகள் பல்லவர் காலத்து குடவரைக் கோயிகளுக்கு இணையாகத் திகழ்கின்றன. கரூர் அருகே தான்தோன்றி மலையில் உள்ள முற்றுப்பெறாத குடைவரைக் கோயிலும் இவனது பணியாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இராசராச தேவன் அதியமான் (கி.பி 13 - 14 ஆம் நூற்றாண்டு) இவனைப்பற்றிய குறிப்புகள் மூன்றாம் குலோத்டுங்க சோழன் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இவனது மகன் விடுகாதழகிய பெருமாள் அதியமான் ஆவான். இவனைப்பற்றிய பல விவரங்கள் அருர் வட்டம் கம்பை நல்லூரில் அமைந்த கோயில் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. இவனது கல்வெட்டுகள் தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர லட்டிகத்திலும் உள்ளன.சேலம் மாவட்டம் திருச்செங்கோடு வரையிலும் இவனது ஆட்சிப்பரப்பு இருந்துள்ளது. கம்பைநல்லூரில் சிறுகோட்டை என்னுமிடத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கற்கோயிலாக எடுப்பித்துள்ளான். இவ்வூரின் பழைய பெயரான நாகையன்பள்ளி என்பதைக் கொண்டு இறைவர்க்கும் நாகையநாயனார் என்றே அழைத்துள்ளான். இவை மட்டுமின்றி இவனது பெயராலேயே விடுகாதழகிய நல்லூர் என்னும் ஊரையும் அமைத்துள்ளான்.
இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய கல்வெட்டு என அறியப்படும் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது.
திருக்கோயிலூரிலிருந்து பதினாறு கல் தொலைவில் ஜம்பை என்ற ஊர் தென்னார்காடு மாவட்டத்தில் பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ளது. சுற்றிலும் பலகுன்றுகள் உள்ளமையால் இது பார்ப்பதற்கு இனிமையான சூழ்நிலையில் உள்ளது. பண்டைய கல்வெட்டுகள் இவ்வூர் "வாணகோப்பாடி நாட்டில்" இருந்தது எனக் கூறுகின்றன. இவ்வூரில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டை தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது.
ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி இக்கல்வெட்டின் சிறப்பு என்ன? அதில் உள்ள இரண்டு சொல் தொடர்கள் "ஸதியபுதோ" என்பதும் "அதியந் நெடுமாந் அஞ்சி" என்பதே ஆகும். தமிழக வரலாற்றுக்கு மட்டும் இக்கல்வெட்டு அரும்செய்திகளை அளித்துள்ளது என்று எண்ணிவிடக் கூடாது. இந்திய வரலாற்றுக்கே மிகச் சிறந்த செய்தியை அளித்துள்ளது இக்கல்வெட்டு. அதியனை "ஸதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சி" என்று அழைக்கிறது.
இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மெளரியப் பேரரசன் அசோகன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெருமன்னன் தனது கல்வெட்டுகளில் சோழர், பாண்டியர், கேரளபுத்ரர், ஸத்யபுத்ரர் ஆகியோரைக் குறிக்கிறான். இவர்களது நாடுகள் அவனது ஆட்சிக்கு உட்பட்டவை அல்ல தனி ஆட்சி நடத்தியவை என குறிப்பிடுகிறான். அசோகன் குறிக்கும் ஸத்யபுத்ரர் யார் என்று இது வரை தெளிவாகத் தெரியவில்லை. ஸதியபுதோ என்பவர் அதியமான்களாக இருக்கக்கூடும் என்று ஊகித்தவர்களும் உண்டு.
இப்பொழுது கிடைத்துள்ள இக் கல்வெட்டு அசோகன் கூறும் ஸத்யபுத்ரர்கள் அதியமான்கள் தாம் எனத் திட்டவட்டமாக தெளிவாக்கிவிட்டது. அதியனை பொய்யா எழினி (சத்யபுத்ரர்) எனப்புறம் கூறும்.
ஓரி, காரி, குமணன், பேகன், போன்ற வள்ளல்களும், கரிகால் பெருவளத்தான், இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, எனும் சோழ மன்னர்களும் செல்வக்கடுங்கோ, சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை போன்ற சேரப் பேரரசர்களும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோரும் வாழ்ந்த காலத்தில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது.
இவனைப் பாடிய ஔவை, பரணர், கபிலர், மாமூலனார், நத்தத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்தனார் போன்ற ஈடிலாப் புகழ் பெற்ற புலவர்கள் இக்கல்வெட்டு எழுதிய போது வாழ்ந்தவர்கள்,
தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அவன் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியை வென்றான் எனச் சங்க பாடல் கூறிற்று. ஔவையும், பரணரும் அவனது திருக்கோயிலூர் வெற்றியைப் பாடினார்கள். அந்த திருக்கோயிலூருக்கு மிக அருகிலேயே இந்தக் கல்வெட்டு இருக்கிறது என்றால் அதியமான் திருக்கோயிலூரை வென்றபோது இந்தப் பாளியை ஏற்படுத்தி கல்வெட்டைப் பொறித்திருக்கிறான் என்பது தெளிவாகிறது.
அவன் திருக்கோயிலூரை எறிந்ததும் உண்மை, ஒளவையும் பரணரும் பாடியதும் உண்மை என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு சான்று என்ன வேண்டும்.
கல்வெட்டு "அஞ்சி ஈத்த பாளி" என்கிறது ஈதல் கொடுத்தல் என்னும் பொருளில் ஈத்த என்ற சொல் அப்படியே சங்கப் பாடலில் அதுவும் அதியமானைப் பற்றிய பாடலிலேயே பயன்பட்டுள்ளது. "ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே" என்று கூறும் ஒளவையின் பாடல்.
சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிட்ட சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான். அவனது மார்பகத்தே வேல் பாய அவன் மாய்ந்து வீழ்ந்த போது ஔவை கதறி அழுது பாடியிருக்கிறார். "மாற்றானின் வேல் அவன் மார்பில் மட்டுமா தைத்ததது! இல்லை இரப்போர் கைகளை துளைத்து, அவனது குடிகள் கண்ணீர் சொரிய, நல்ல புலவர்களின் நாவையும் அல்லவா துளைத்தது. இனி பாடுநர் யாரிருக்கிறார்கள்? பாடுவோருக்கு அளிப்பவர்தாம் யாரிக்கிறார்கள்? என்று ஔவை கதறி அழுது பாடியிருக்கிறார்.
அதியமானின் மகன் பொகுட்டெழியும் தந்தையை மிஞ்சும் கொடை திறனும் போர் ஆற்றலையும் கொண்டவன் என்று சங்க நூல்கள் கூறுகின்றன.
தடூரை ஆட்சி புரிந்த அதியமான் மன்னர்களின் பட்டியல்.
அதியமான் நெடுமிடல் சங்ககாலம்
அதியமான் நெடுமான் அஞ்சி சங்ககாலம்
அதியமான் பொகுட்டெழினி சங்ககாலம்
கடவுள் அஞ்சி சங்ககாலம்
அதியமான் சோமன் என்ற குணசீலன் 12 - 13ம் நூற்றாண்டு
இராசராச தேவன் அதியமான் 13ம் நூற்றாண்டு
விடுகாதழகிய பெருமாள் 13ம் நூற்றாண்டு
குலோத்துங்க சோழ தகடாதராயன் 13ம் நூற்றாண்டு
அதியமான் மன்னர்களின் வழித்தோன்றல்கள் அதியமான், அதியமார், அதியன், அதிகர், அதிகமான், அதிகைமான் என்ற படங்களை கொண்டுள்ளனர்.
அயிரப்பிரியன், ஐரைப்பிரியன், அய்யப்பிரியன், ஐயப்பிரியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் அய்வசோழன்(ஐவசோழன்) ஐயனாபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஐயங்கொண்டான், ஐயாண்டான், ஐயப்பிரியன், ஐயுடையன், ஐயாளி எனவும் வழங்கப்பட்டது. ஐவூர், ஐயூர், ஐவனல்லூர், ஐயன்பேட்டை ( அய்யம்பேட்டை) என்னும் ஊர்களையும் உருவாக்கியரசாண்டவன். ஐயனாறு, ஐயவையனாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கியவன். இவன் மரபோர் அயிரப்பிரியன், ஐரைப்பிரியன், அய்யப்பிரியன், ஐயப்பிரியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
அச்சிராயர்.
சோழப் படையில் குதிரை வீரர்களின் தலைமை ஏற்று வெற்றி வாகை சூடிய வீர பரம்பரையினர். அச்சுவவாரியார் என்பது மருவி அச்சிராயர் என வழங்கப்படலாயிற்று.
அதிகாரி.
சோழஅரச ஆணைகளை தலைமையேற்று செயல் படுத்திய நிர்வாகிகள். இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இவர்களின் பட்டப்பெயர்கள் அதிகமாக கானப்படுகின்றன.
அச்சமறியார்.
சோழர் படையில் தற்கொலைப் படைப்பிரிவினராக இருந்தவர்கள். அரசர்கள் போர்க்களம் புகுமுன் காளிக்கோயிலின் முன் வைக்கப்பட்டிருக்கும் சூலாயுதங்களின் மீது மோதி தங்கள் தலையை துண்டித்துக்கொள்ள, இவர்களின் குருதியை திலகமிட்டு அரசர் முதல் போர்வீரர்கள் அனைவரும் களம் புகுவார்கள்.மரணபயமே இல்லாத இவர்கள் அச்சமறியார் என பட்டம் சூட்டப்பட்டனர்
அம்மாலைத்தேவர்.
செம்பியர் மரபில் வந்த அம்பன் என்னும் மன்னனின் சந்ததியினர். அம்பராயன்பேட்டை, அம்பத்தூர், அம்புக்கோயில் என்னும் ஊர்களை உண்டாக்கியவர்கள்.
அயிரப்பிரியன், ஐரைப்பிரியன், அய்யப்பிரியன், ஐயப்பிரியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் அய்வசோழன்(ஐவசோழன்) ஐயனாபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர்
ஐயங்கொண்டான், ஐயாண்டான், ஐயப்பிரியன், ஐயுடையன், ஐயாளி எனவும் வழங்கப்பட்டது. ஐவூர், ஐயூர், ஐவனல்லூர், ஐயன்பேட்டை ( அய்யம்பேட்டை) என்னும் ஊர்களையும் உருவாக்கியரசாண்டவன். ஐயனாறு, ஐயவையனாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கியவன். இவன் மரபோர் அயிரப்பிரியன், ஐரைப்பிரியன், அய்யப்பிரியன், ஐயப்பிரியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஆ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
ஆச்சன், ஆச்சாப்பிரியன், ஆட்சிப்பிரியன்.
முசுகுந்தன் மரபில் வந்தவன். ஆச்சாபுரம் (பெருமணநல்லூர்) என்னும் தேவார சிவதல நகரை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன்.ஆதிசைவர்களுக்கும், கம்மியர்களுக்கும் ஆச்சாரி என்று பட்டம் கொடுத்தவன். இவன் பெயர் ஆச்சாப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. ஆதிச்சபுரம், (ஆச்சாபுரம்) ஆச்சமங்கலம், ஆச்சனூர், ஆச்சங்குடி, ஆச்சான்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன். இவன் மரபினர் ஆச்சாப்பிரியன், ஆட்சிப்பிரியன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
ஆச்சராயன்
ஆச்சுடையன்
ஆச்சாளன்
ஆச்சாளி
ஆச்சங்கொண்டான்
ஆச்சதேவன்
ஆய்ப்பிரியன், ஆளற்பிரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஆய். ஆய்க்கோட்டை, ஆய்ப்பாடி என்னும் நகரங்களை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆய்ப்பிரியன் எனவும் வழங்கும். ஆய்மூர் என்ற தேவார சிவதலத்தையும், ஆய்மழை, ஆய்மங்கலம், ஆய்ப்பட்டி, ஆய்க்குடி, ஆய்ங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். கடையெழு வள்ளல்களுள் ஒருவன். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். இவனை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். ஒளிவீசும் நீலமணியைத் தன்னகத்தே கொண்ட நாகம் தனக்குக் கொடுத்த ஆடையினை, ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள இறைவனுக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தவன். வில்லைத் தாங்கிய, சந்தனம் பூசி உலர்ந்த வலிமை மிக்க தோளினை உடையவனும், அன்பான மொழிகளைப் பேசியவனுமாகிய ஆய் அண்டிரன் அள்ளிக் கொடுத்து அயராதவன் அய்கண்டபிரான் ஆய்' என்று அழைக்கப்படுகிறான். இவன், 'ஆர்வ நன்மொழி ஆய்' என்றும் அழைக்கப்படுகிறான்.
வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன. புலவர் பாடும் புகழுடையவனாய் விளங்கினான். அவன் காலத்தில் ஆய்குடி என்ற ஊர் சிறந்திருந்தது. இவன் மரபினர் ஆய்ப்பிரியன், ஆளற்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
ஆரம்பூண்டான், ஆர்சுத்தி, ஆரஞ்சுற்றி, ஆரமுண்டான், ஆரக்கண்ணியன், மாலையிட்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஆத்திமன். ஆத்திக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆரம்பூண்டான், ஆரஞ்சுற்றி, மாலையிட்டான் எனவும் வழங்கலாயிற்று. ஆத்திமன் காலத்தில் தான் மருத்துவ குணமிக்க ஆத்திமாலை சோழப்போர் மறவர்களுக்கு அணியும் வழக்கம் ஏற்பட்டது. ஆத்தூர், ஆத்தமங்கலம், ஆரம்பூண்டான்பட்டி, ஆத்தங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் ஆரம்பூண்டான், ஆர்சுத்தி, ஆரஞ்சுற்றி, ஆரமுண்டான், ஆரக்கண்ணியன், மாலையிட்டான் என்ற பட்டங்களையும் பெற்றனர்.
ஆக்காட்டரையன், ஆக்காட்டியன்.
அழிசிசோழன், ஆக்காடு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் ஆக்காட்டுராயன், ஆக்காட்டரையன், ஆக்காடுகொண்டான், ஆக்காடாண்டான், ஆக்காடுடையான், ஆக்காட்டுப்பிரியன், ஆக்காடாளி எனவும் வழங்கலாயிற்று. சிறந்த வீரமும் கொடையுமுடையவன். நக்கண்ணையார் முதலிய புலவர்களால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல்கள் நற்றிணையில் 87,169ம் பாடல்களாக உள்ளன. ஆக்கூர் என்னும் தேவார சிவ தலத்தையும்,ஆக்குடி என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டான்.இவன் மரபோர் ஆக்காட்டரையன், ஆக்காட்டியன். என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஆதனழிசியன், ஆதாழியன்.
ஆதனழிசிசோழன், ஆதனக்கோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் நன்பன். (பூதப்பாண்டியன் பாடிய புறநானூறு 71ம் பாடல் ஆதனழிசி பற்றி கூறுகிறது, புறநானூறு மூலமும் பழைய உரையும் பக்கம் 63, உ.வே. சாமிநாத ஐயர்) ஆதனக்குடி, ஆதமங்கலம், ஆதமழை, ஆதனப்பேட்டை, ஆதனூர் எனும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் ஆதனழிசியன், ஆதாழியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
ஆலத்தரையன், ஆவத்தயன், ஆவத்தியான், ஆவாத்தியான், ஆலங்கொண்டான், ஆலத்தொண்டான்,
ஆலத்தொண்டமான், ஆலம்பிரியன், ஆளம்பிரியன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான்.
ஆலசோழன், ஆலங்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆலத்தரையன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான், ஆலம்பிரியன், ஆலமாளி எனவும் வழங்கலாயிற்று. ஆலந்துறை, ஆலம்பொழில், ஆலங்குடி, ஆலங்காடு என்னும் தேவார சிவ தலங்களையும், ஆலத்தம்பாடி, ஆலத்தூர், ஆலத்தாங்குடி, ஆலங்காடு, ஆலம்பாக்கம், ஆலம்பள்ளம், ஆலம்பாடி, ஆலக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன்.இவன் மரபினர் ஆலத்தரையன், ஆவத்தயன், ஆவத்தியான், ஆவாத்தியான், ஆலங்கொண்டான், ஆலத்தொண்டான், ஆலத்தொண்டமான், ஆலம்பிரியன், ஆளம்பிரியன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
இ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
இடங்காப்பிறந்தான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இடைமன். இடங்கான் கோட்டை என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். முல்லைநில மக்களுக்கு இடையர் என்னும் பட்டம் வழங்கியவன். இவன் இடங்காப்பிறந்தான் என்றும் அழைக்கப்பட்டான். முல்லை நில மக்களுக்கு இடையர் என்ற பட்டத்தை அளித்தவனும் இவனே.இடைமருதூர், இடைவாய் (விடைவாய்) இடைக்குளம், இடைப்பள்ளி என்னும் தேவார சிவதலங்களையும், இடையாத்திமங்கலம், இடைக்கோரை, இடையூர், இடையகாடு, இடைக்குடி என்ற நகரங்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன்.இவன் வழி வந்தவர்கள் இடங்காப்பிறந்தான் என்ற பட்டம் பெற்றனர்.
இராயாண்டான், இராயாளன், இராயன், இராங்கியன்,இராயங்கொண்டான், இராயமுண்டான், இராயாளி, இராசாளி, இராயப்பிரியன், இராசப்பிரியன், இராங்கிப்பிலியன்.
முசுகுந்த மரபில் வந்த மன்னன் இராயன், இராயபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் இராயங்கொண்டான், இராயாளி, இராயப்பிரியன் என்றும அழைக்கப்பட்டான். இராயநல்லூர் (இராயந்தூர்), இராயன்பேட்டை, இராயமங்கலம், இராயங்குடி, இராயன்பட்டி (இராங்கியன்பட்டி) எனும் ஊர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மேற்கண்ட பட்டங்களை கொண்டனர்.
இராயத்தேவன்.
இளங்கொண்டான், இளமுண்டான்.
இளஞ்சேட்சென்னிசோழன், இளநகர் என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியகக் கொண்டவன். இவன் பெயர் இளங்கொண்டான், இளமுண்டான், இளம்பிரியன், இளமுடையவன், இளமாளி, இளநாடன் என்வும் வழங்கலாயிற்று. இளமர்( இளமதுக்கூர்) இளங்கடம்பனூர் என்னும் தேவார சிவதலங்களையும், இளமங்கலம், இளங்கார்குடி,இளங்காடு, இளவனூர்,இளையான்குடி என்னுமூர்கலையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இரபோரைப் பாதுகாத்தலையே நோன்பாகக் கொண்டவன். சேரனுடைய பாமுளூரை வெற்றி கொண்டு அதன் பக்கத்தில் இருந்த குன்றில் புலிக்கொடியை நாட்டி அதற்குச் சென்னிமலை என்றும் பெயரிட்டான். ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் இவனை புகழ்ந்து பாடியவை புறநானூற்றில் 10,2003ம் பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இவன் மரபோர் இளங்கொண்டான், இளமுண்டான் என்னும் பட்டங்கள் பெற்றனர்.
இருங்களன், இருங்கள்ளன்.
இறையாண்டான், இராரண்டான், இராயாண்டான். இராசாண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இறையமன். இறையூர் (மாறன்பாடி) என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் இறையாண்டான் எனவும் வழங்கும். இறையனூர், இறையன்சேரி என்னும் தேவார சிவதல நகரங்களையும், இறையாங்குடி, இறைமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் இறையாண்டான், இராரண்டான், இராயாண்டான் எனும் பட்டங்களை கொண்டனர்.
ஈ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
ஈழத்தரையன், ஈழங்கொண்டான், ஈச்சங்கொண்டான், ஈங்கொண்டான், ஈங்கொண்டான்.
ஈசசோழன் ஈங்கை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் ஈங்கொண்டான், ஈங்காண்டான் என்வும் வழங்கும். ஈங்கோய்மலை என்னும் தேவார சிவ தலத்தையும் ஈங்கூர், ஈஞ்சூர், ஈசனூர், ஈசனக்குடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் ஈங்கொண்டான் பட்டத்தை பெற்றனர். மேலும் இப் பட்டம் ஈழநாட்டிற்கும், ஈழத்துரையன், ஈழமுண்டான் ஈழம்கொண்டான் என்ற பட்டங்களுக்கும் தொடர் கொண்டவை எனவும் அறியப்படுகிறது.
உ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
உறந்தைராயன், உறந்தையுடையன், உறந்தையாண்டான், உறந்தையாளன், உறந்தையாளி, உறந்தையாட்சி, உறந்தைப்பிரியன், உறந்தைகொண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் உறந்தைமன். உறையூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் உறந்தைராயன், உறந்தைகொண்டான், உறந்தைபிரியன் எனவும் வழங்கும். உறந்தூர் என்னும் ஊரையும் உருவாக்கியவன் இவன். இவன் வழிவந்தவர்கள் உறந்தைராயன்,
உறந்தையுடையன், உறந்தையாண்டான், உறந்தையாளன், உறந்தையாளி,
உறந்தையாட்சி, உறந்தைப்பிரியன், உறந்தைகொண்டான் என்னும் பட்டம் சுமந்தனர்.
உழுவுடையான்
உழுவாண்டான்
உழுவண்டான்
உழுவாளன்
உழுவாளி
உழுவாட்சி
உழுப்பிரியன்
உழுக்கொண்டான்
உய்யக்கொண்டான்
உத்தமாண்டான்
உத்தமண்டான்
உத்தமங்கொண்டான்
உத்தமுண்டான்
உத்தமப்பிரியன்
உலகுடையன், உலகுடையான், உலகங்காத்தான், உலகுகாத்தான், உலகாண்டான், உலயன், உலகுய்யன்.
உலகநாதசோழன், உலகுண்டம்(உலயக்குண்டம்) என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் உலகாண்டான், உலகங்கொண்டான், உலகுடையான், உலகங்காத்தான் எனவும் வழங்கும். உலகங்காத்தான்பட்டி என்ற ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் உலகுடையன்,உலகுடையான், உலகங்காத்தான், உலகுகாத்தான், உலகாண்டான், உலயன், உலகுய்யன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஊ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
ஊமத்தன்.
ஊமத்த நாட்டை ஆண்ட சிற்றரசன், இவன் பெயர் ஊமத்தரையன், ஊமப்பிரியன் எனவும் வழங்கும். இவன் மரபோர்க்கு ஊமத்தரையன், ஊமத்தயன், ஊரத்தியன், ஊமைப்பிரியன், ஊரான்பிலியன், ஊமத்தநாடன், ஊரத்திநாடன் என்னும் பட்டங்கள் வழங்குகின்றன.
ஊமத்தரையன்
ஊமத்தயன்
ஊரத்தியன்
ஊமைப்பிரியன்
ஊரான்பிலியன்
ஊமத்தநாடன்
ஊரத்திநாடன்
எ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
எத்திப்பிரியன்
என்னாட்டுப்பிரியன்
ஏ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன், ஏனாதிநாட்டுப்பிரியன், ஏத்திப்பிரியன்.
ஏனாதி திருக்கிள்ளிசோழன், ஏனாதி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஏனாதிகொண்டான், ஏனாதியாண்டான், ஏனாதிப்பிரியன், ஏனாதியுடையான், ஏனாதியாளி எனவும் வழங்கும்.சிறந்த வீரமும் கொடையுமுடையவன். ஏனாதிமங்கலம், ஏனங்குடி, ஏனனூர், ஏனாதிகுடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இச் சோழ மன்னன் கோனாட்டு எறிச்சிலூர் மாடவன் மதுரைக்குமரனார் என்னும் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல் புறநானூற்றில் 167ம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இவன் மரபினர் ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன், என்னும் பட்டங்களை பெற்றனர். மேலும் இப்பட்டங்கள் படைத் தலைவர்களுக்கு உரியதாக கருதப்பட்டுள்ளது.சங்க காலத்தில் ஏனாதி பட்டம் என்பது அரசன் தன் படைத்தலைவன் மீது கொண்ட நன்மதிப்பினை உணர்த்த வேண்டி தன் பெயர் பொறித்த கணையாளி ஒன்றை அளிப்பதாகும். சங்ககாலத்தில் மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்குட்டுவன் ஆகியோர் ஏனாதிபட்டம் பெற்ற அரசர்களாவார்கள். ஏனாதி சாத்தஞ் சாத்தனார் ஏனாதி பட்டம் பெற்ற புலவராவார். இதன் மூலம் இப் பட்டங்கள் சங்ககாலம் முதல் வழங்கிய பட்டங்கள் என்று அறியமுடிகிறது.
ஐ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
ஐரைப்பிரியன், ஐயப்பிரியன், (அயிரப்பிரியன், அய்யப்பிரியன்)
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் ஐவசோழன் (அய்வசோழன்) ஐயனாபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஐயப்பிரியன்
ஐயங்கொண்டான், ஐயாண்டான், ஐயுடையன், ஐயாளி எனவும் வழங்கப்பட்டது. ஐவூர், ஐயூர், ஐவனல்லூர், ஐயன்பேட்டை (அய்யம்பேட்டை) என்னும் ஊர்களையும் உருவாக்கியரசாண்டவன். ஐயனாறு, ஐயவையனாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கியவன். இவன் மரபோர் ஐரைப்பிரியன், ஐயப்பிரியன் (அயிரப்பிரியன் அய்யப்பிரியன்) என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஐந்நூற்றுப்புரையர்.
செம்பிய சக்ரவர்த்தி காலத்தில் அவர்களுடைய பணிமக்களாக காவல் பணி புரிந்தமையால் இப்பட்டம் கிடைத்துள்ளது.
ஒ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
ஒளியுடையான், ஒளியாண்டான், ஒளியாளன், ஒளியாளி, ஒளியாட்சி, ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் (ஒண்டிப்பிளியன்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஒளிமன். ஒளிகோட்டை (உள்ளிக்கோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அறிவிலும், புகழிலும், கொடையிலும் மிகச்சிறந்தவன். இவன் ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். ஒளியூர், ஒளிமங்கலம், ஒளிக்குடி, ஒளிக்கடை (உள்ளிக்கடை) ஒளிமதி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் (ஒண்டிப்பிளியன்) எனும் பட்டங்களை பெற்றனர்.
ஒமசையன்
ஒசையன்
ஒற்றையன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஒற்றைமன். ஒற்றியூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.ஒற்றகுடி, ஒற்றன்காடு, ஒற்றனூர், ஒற்றமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் ஒற்றையன் எனும் பட்டம் கொண்டனர்.
ஓ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஓனாயன்
ஓமாமுடையன்
ஓடம்போகி, ஓட்டம்பிடுங்கி, ஓட்டம்பிடுக்கி, ஓட்டம்பிடிக்கி.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் ஓடம்போகிசோழன். ஓடம்போகி என்னுமாற்றையும், ஓடாசசேரி, ஓட்டப்பிடாகை, ஓட்டக்குடி, ஓட்டத்தட்டை,ஓட்டப்பிடாரம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் ஓடம்போகி, ஓட்டம்பிடுங்கி, ஓட்டம்பிடுக்கி, ஓட்டம்பிடிக்கி என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஓமாமரையன், ஓமசையன், ஓமனாயன், ஓமாந்தரையன், ஓந்தரையன்,ஓந்திரியன், ஓமாம்பிரியன், ஓயாம்பிலியன்.
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் ஓமாம்புலிமன், ஓமாம்புலியூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் ஓமாந்தரையன், ஓமாமரையன், ஓமாம்பிரியன், ஓமாமுடையான் என்றும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் மேற்கண்ட பட்டங்களை பெற்றனர்.
ஓரி.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஓரி.வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். ஓத்தூர் என்னும் தேவார சிவதலத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். ஓரியூர், ஓரிக்குடி, ஓரிமங்கலம், ஓரிச்சேரி எனும் ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன்.
ஓரி வில்லாளரிற் சிறந்த வீரன்; சிறந்த கொடையாளன். வல்வில் ஓரி என்று பண்டைப் புலவர்கள் அவனைப் பாராட்டினார்கள். கோவை நாட்டுப் பவானி வட்டத்தில் ஓரிசேரி என்னும் ஊர் உள்ளது. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவன் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்படுவான். வன்பரணர் இவனைத் தன் பாடல் (புறநானூறு 153) ஒன்றில் 'ஆதன் ஓரி' என்று குறிப்பிடுகிறார். இதன் மூலம் இவன் தந்தை பெயர் ஆதன் என்பதை அறியலாம்.
இவன் கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரியோடு போரிட்டு மாண்டான். நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான். நற்றிணையில் இவன் பரணரால் சிறப்பிக்கப்பட்டுள்ளான். புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் உள்ளன.
மிக வேகமாகச் செல்லும் ஓரி என்றே பெயர் பெற்ற குதிரையை உடையவன். ஓரி இசையிலும் நாட்டியத்திலும் மிகமிக ஈடுபாடு கொண்டவன். அவனிடம் வந்த கூத்தர்களுக்கு பொன்னினால் குவளைமலர் செய்து வெள்ளி நாரிலே தொடுத்து மாலையாக அணிவித்து ஏராளமான செல்வத்தை அளிப்பான். நாட்டியம் புரிவோருக்கும் இசை வாணருக்கும் ஏராளமான செல்வத்தைக் கொடுத்ததாலேயே கடையேழு வள்ளல்களில் ஒருவனாக புலவர்களால் பாடப்பட்டான். அவன் கொடுத்த செல்வத்தால் கூத்தரும் விறலியரும் ஆடலையும் பாடலையும் கூட மறந்து விடுவாராம். அவன் மீது ஒரு வண்ணம் இசை பாடினான் ஒரு பாணன். உடனிருந்த விறலியர் யாழ் இசைத்தனர். சிறுபறையையும் பெருவங்கியம் என்னும் கருவியையும் இசைத்தனர். அவனை 21 பாடல் துறைகளிலும் பாடல் இசைத்துப் பாடினராம். பாணன் "அப்பேர்பட்ட பெருமகனே" எனப் பாட தன் பெயர் கேட்க நாணி ஏராளமான செல்வம் கொடுத்தானாம். ஆதலால் மிகச் சிறந்த புரவர்களாகிய கபிலர், பரணர், பெருஞ்சித்திரனார், கல்லாடனார் போன்றோர் அவனைப் பாடினர். அவனது கொல்லி மலையை "ஓரி கொல்லி" என்றும் பாடினர். இவ்வளவு புகழ்வாய்ந்த ஓரி ஏனோ சேரனோடு பகமை பூண்டான். ஒளவைப் பிராட்டிக்கு நெல்லிக்கனி கொடுத்து இறவாப் புகழ் கொண்டானே அதியமான் நெடுமான் அஞ்சி. அவன் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். அது கொல்லி மலைக்கு வடக்கே 60 கல் தொலைவில் உள்ளது. அதியமானும் சேரனுடன் பகைமை பூண்டான். அதியமான், ஓரி, சோழன் பாண்டியன் ஆகியோர் கூட்டாக இணைந்து சேரல் இரும்பொறையை ஒடுக்க விரும்பினர். அதனால் இருதரப்பினருக்கும் கடும் போர் மூண்டது. முதலில் மலையமான் திருமுடிக்காரி கொல்லி மலைமீது படையெடுத்து ஓரியோடு போரிட்டான். பேராற்றல் மிகுந்த காரியோடு ஓரியால் சமமாகப் போரிட முடியவில்லை. போரில் ஓரியைக் கொன்று கொல்லி மலையைக் கைப்பற்றி சேரனிடம் ஒப்படைத்தான் காரி. வல்வில் ஓரி மரபினர் ஓரி எனும் பட்டம் கொண்டனர்.
க வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
கருவுடையான், கருவாண்டான், கருவாளன், கருவாளி, கருவாட்சி, கருப்பிரியன்,
கருக்கொண்டான், கருப்பூண்டான் கருப்பையன், கருப்பட்டியன், கருவூரான் கருப்பூரான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கருப்பைமன். கருவூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கருவூரான், கருக்கொண்டான் எனவும் வழங்கப்பட்டது. கருங்குலம், கருவாக்குரிச்சி, கருப்பூர், கருப்புக்களர், கருவிலி, கருப்பறியலூர், கருக்குடி, கருகாவூர், கருப்பட்டிமூலை, கருங்கண்ணி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் கருப்பூண்டான், கருப்பட்டியன், கருப்பூரான் எனும் பட்டங்களை பெற்றனர்.
கஞ்சராயன், கஞ்சன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கஞ்சமன். கஞ்சனூர் என்னும் தேவார சிவதல நகரையுண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கஞ்சராயன் எனவும் வழங்கப்பட்டது. இவன் மரபோர் கஞ்சராயன், கஞ்சன் எனும் பட்டங்களை பெற்றனர்.
கரும்பூரான்
கரும்புடையான்
கரும்பாண்டான்
கரும்பாளன்
கரும்பாளி
கரும்பாட்சி
கரும்புகொண்டான்
கன்னாண்டான், கன்னாளன், கன்னாளி, கன்னாட்சி, கன்னப்பிரியன், கன்னகொண்டான், கன்னதேவன்,
கன்னமுடையன், கன்னப்படையன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கன்னன். கன்னபுரம் என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். கன்ணாண்டான், கன்னகொண்டான், கன்னமுடையான், கன்னப்பிரியன், கன்னாளி எனும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். கன்றாப்பூர் (கன்னாப்பூர்) கன்னாரப்பேட்டை, கன்னந்தகுடி,கன்னக்கொடையான் எனும் ஊர்களையும், கன்னாறு என்னும் காட்டாற்றையும் உருவாக்கி ஆட்சி புரிந்தான். இவன் மரபு வம்சத்தினர் கன்னமுடையன், கன்னப்படையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
கலயன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சாய்மன். சாயக்கோட்டை (கலயநல்லூர்) என்னும் தேவார சிவதலத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். மேலும் சாய்க்காடு, சாய்க்களூர் என்னும் சிவதலங்களையும் உருவாக்கியவன். இவன் மரபு வம்சத்தினர் கலயன் என்ற பட்டம் பெற்றனர்.
கரம்பையன், கரம்பைகொண்டான், கரமுண்டார்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன்.கரம்பைக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். கரவீரம், கரபுரம் என்னும் தேவாரசிவ தலங்களையும் கரம்பை, கரம்பையம், கரம்பைகுடி, கரஞ்சிப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கரம்பையன், கரம்பைகொண்டான், கரமுண்டார் எனும் பட்டங்களை சுமந்தனர்.
கத்தூரியன், கத்தரிகொண்டான், கத்தூரிமுண்டான், கத்தரியன், கத்தூரியன், கத்தரிநாடன்,
கத்திநாடன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கத்தரிமன். கத்தரி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் கத்தரிகொண்டான், கத்தரிநாடன் எனவும் வழங்கும். கத்தரிமங்கலம், கத்தரிக்குடி, கத்தரிக்காடு, கத்தரிப்புலம், கத்தரிக்கொல்லை என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் கத்தரிகொண்டான், கத்தூரிமுண்டான், கத்தரியன், கத்தூரியன், கத்தரிநாடன், கத்திநாடன் என்ற பட்டங்களை பெற்றனர்.
களன்
களாவன்
களத்துவென்றான்
கலியன், கலியாட்சி, கலிச்சி, கலிச்சியன், கலிக்கொண்டார், கலிப்பிரியர், கலியனான், கலியராயன்,
கலியரையன், கலியாளியன், கலிவுடையான், கலிராயன்.
கலிகாமசோழன் கலியாணபுரம் என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் கலியன், கலிராயன், கலியரையன், கலியாண்டான், கலிகொண்டான், கலிப்பிரியன், கலியுடையான்,கலியாளி,கலியாட்சி எனவும் வழங்கலாயிற்று. எதிரிகளுக்கு துன்பம் விளைவிக்கும் ஆற்றல் பெற்றவன், கலிக்காமூர் என்னும் தேவார சிவ தலத்தையும் கலியாணோடை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் பலகாலம் தன்னை கலியன் என்று அழைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. துன்பம் நிறைந்த காலத்தை கலிகாலம், கலியுகம் என்பதும் தெறிந்ததே.கலிகாமசோழன் மரபோர் கலியன், கலியாட்சி, கலிச்சி, கலிச்சியன், கலிக்கொண்டார், கலிப்பிரியர், கலியனான், கலியராயன், கலியரையன், கலியாளியன், கலிவுடையானென்னும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டமுடையோர் தஞ்சை மாவட்ட நீடாமங்கலம், சித்தமல்லி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலியராயன்பட்டி, கரம்பக்குடி, கீரனூர், இலந்தைவாடி, பிலாவிடுதி, குலத்திரான்பட்டுஎன்னுமூர்களில் அதிகமாக வாழுகின்றனர்.
கடம்பன், கடம்பையன், கடம்பராயன், கடம்பரான், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான்,
கடம்பைப்பிரியன், கடம்பையுடையான், கடம்பையாளியான்.
கடம்பசோழன், பெருங்கடம்பனூர் என்னும் தேவார சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் கடம்பன், கடம்பராயன், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையவன், கடம்பையாளி என்வும் வழங்கலாயிற்று. குழித்தண்டலை, கடம்பன்துறை, கடம்பூர், கடவூர், கடவூர்மயானம் என்னும் தேவார சிவ தலங்களையும், கடம்பர்வாழ்க்கை, கடம்பன்குடி, கடலங்குடி என்னும் ஊர்களையும், கடலாழி என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் கடம்பன், கடம்பையன், கடம்பராயன், கடம்பரான், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையான், கடம்பையாளியான் எனும் பட்டங்களை பெற்றனர்.
கருடி, கரடி.
கண்டன், கண்டராயன், கண்டவராயன், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி, கண்டப்பிரியன், கண்டர்பிரியன்,
கண்டப்பிள்ளை, கடாப்பிள்ளை.
கண்டர்கிள்ளி சோழன், கண்டர்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கண்டன், கண்டராயன், கண்டப்பிரியன் எனவும் வழங்கலாயிற்று. கண்டதேவி என்னும் தேவார சிவ தலத்தையும் கண்டமங்கலம், கண்டர்மாணிக்கம், கண்டனூர், கண்டராயன்பட்டி, கண்டர்குடி (கண்ணுகுடி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் கண்டன், கண்டராயன், கண்டவராயன், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி, கண்டப்பிரியன், கண்டப்பிள்ளை, கடாப்பிள்ளை.என்னும் பட்டங்களை பெற்றனர்.
கங்கன்
கங்கராயன்
கங்கைநாடன்
கங்கநாடான்
களப்பாளன்
களப்பளான்
களப்பாளி
களப்பாடி
களந்தையாண்டான்
களந்தண்டான்
களமுடையன்
களக்குடையன்
கக்குடையன்
களக்கடையன்
கன்னகுச்சிராயன்
கலிங்கராயன்
கச்சிராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கச்சிமன். கச்சி தேவார சிவதல நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கச்சிராயன் எனவும் வழங்கும். கச்சூர், கச்சியூர், கச்சையூர் என்னும் தேவார சிவதலங்களையும், கச்சிக்குடி, கச்சிமங்கலம் (கச்சமங்கலம்) காஞ்சிப்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கச்சிராயன் எனும் பட்டத்தையும் சுமந்தனர்.
கண்டியன், கண்டியர், இராசகண்டியன், இராசகண்டியர்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இராசகண்டியன். திருக்கண்டியூர் என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். சின்னக்கண்டியூர், கண்டியன் காடு, கண்டியன்பட்டு (கண்டிதன்பட்டு) கண்டியன்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.
இவர்களின் திருக்கண்டியூர் அரண்மனை சோழநாட்டு நித்தவிநோத வளநாட்டு கிழார்க் கூற்றத்து ஆயிரத்தளி அரண்மனை என்ற பெயருடையது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1244) சோழர்களை வென்று இந்த அரண்மனையில் தான் முடிசூடிக்கொண்டான் என்பது வரலாறு.
இராசராச சோழன் ஈழத்தை வென்று பண்டைய தலைநகரான அணுராதபுரத்தை அழித்த பின் சனநாதமங்கலம் என்ற புதிய ( இன்றைய பொலன்னருவா) தலைநகரை உருவாக்கினான். நாக நாடு, வன்னி, திரிகோணமலை, பொலன்னருவா மற்றும் அணுராதபுரம் போன்ற இடங்களே சோழ ஆட்சிக்கு உட்பட்டிருந்தது (மகாவம்சம்) இக் கால கட்டத்தில் இலங்கையின் தென்பகுதி சோழனின் ஆட்சிக்கு உட்படவில்லை. தொடர்ந்து சிங்கள மன்னர்களின் ஆட்சியில் இருந்ததால் இடையூராக இருந்தது. இந்நிலையை மாற்றி இலங்கை முழுவதும் சோழனின் ஆட்சி அமைய போர் படை அமைத்து தலைமை தாங்கி வெற்றி கண்டவன் திருக்கண்டியூர் இளவரசன் இராசகண்டியன்.
இதன்பின் இலங்கையின் மையப்பகுதியில் புதிய தலைநகரை உருவாக்கி இராச கண்டியன் மாநகரம் என்று பெயரும் சூட்டப்பட்டு சோழனின் பிரதிநிதியாக ஆட்சி ஏற்றான்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராச கண்டியன் மாநகரம் கண்டி என்ற பெயருடன் ராஜதானியகவே திகழந்தது. இன்றும் சிங்கள மக்கள் கண்டியை மாநுவர என்ற பெயர் கொண்டே அழைக்கின்றனர். மாநுவர என்றால் சிங்கள மொழியில் தலைநகரம், மாபெரும் நகரம் அல்லது ராஜதானி என்று பொருள் படும்.
உலக நாடுகளில் முதன் முதலில் சோழனின் ஆதிக்கத்தை ஏற்படுத்திய பெருமை இராசகண்டியனுக்கே உரியது. இதனை பெருமைப்படுத்தவே இராசராச சோழன் இராசகண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தை தான் ஏற்றான் என்பதும் வரலாறு.
(செம்பியன் கண்டியூர் அகழாய்வு அறிக்கை 2007 - 2008)
தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை.சென்னை.
செம்பியன் கண்டியூர் அகழாய்வு.
செம்பியன் கண்டியூர் குறுநில மன்னன்.
செம்பியன் என்றால் மாசற்ற சொக்கத் தங்கம் போன்றவன் என்று பொருள். கண்டியர்கள் மன்னர்களாகவும் அமைச்சர்களாகவும், படைத்தளபதிகளாகவும், வேளீர் போன்று குறுநில மன்னர்களாகவும் இருந்தவர்கள்.என்வே கண்டியர் + ஊர் என்ற பொருளில் வழங்கிய பகுதி கண்டியூர் என்றாகி செம்பியன் பட்டமும் சேர்ந்து செம்பியன் கண்டியூர் என்று வழங்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் குத்தாலத்திலிருந்து இரண்டு கி.மி தொலைவில் திருமணஞ்சேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது செம்பியன் கண்டியூர் என்ற இன்றைய சிற்றுர், இவ்வூர் காவிரி ஆற்றின் கிளை நதியான விகிரமன் ஆற்றின் மேற்கரையில் அமைந்துள்ளது. இவ்வூரின் அரண்மனையும், சிவன் கோயிலும் அதன் கிழக்கில் அமைந்திருந்த தெருவும் தற்போது அழிந்து விட்டன. இன்றும் அப்பகுதி படையாட்சி தெருத் திடல் என்று வழங்கப்படுகிறது. பிற்கால சோழர் ஆட்சியின் போது இவ்வூரில் செம்பியன் கண்டியூர் ஸ்ரீநக்கன் கண்டியர் என்கிற குறுநில மன்னன் ஆண்டுள்ளான். இவன் கண்டியூரைச் சுற்றியுள்ள 18 ஊர்களுக்கு தலைவனாக இருந்துள்ளான். செம்பியன் கண்டியூர் அருகில் உள்ள வில்லிய நல்லூர் என்ற இடம் விற்போர் பயிற்சித் தளமாகவும் இருந்துள்ளது. மேலும் செம்பியன் கண்டியூருக்கு மேற்கே உள்ள பெரிய திடலும், பெரிய குளமும் விற்போர் வீரர்கள் தங்கியிருந்த இடமாகவும் கருதப்படுகிறது. செம்பியன் கண்டியூருக்கு தெற்கே 12 கி.மீ. தொலைவில் செம்பியன் கண்டியூர் ஸ்ரீநக்கன் கண்டியன் பெயரால் ஸ்ரீகண்டர்புரம் மற்றும் நக்கம்பாடி போன்ற ஊர்களும் அமைந்துள்ளன என்ற விபரமும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
செம்பியன் கண்டியூருக்கு கிழக்கே இரண்டு கி.மீ தொலைவில் திருவேள்விக்குடி எனும் ஊர் சங்ககாலத்தியச் சோழப் பெருவழியில் அமைந்துள்ளது.சோழ் அரசி செம்பியன் மாதேவியார் காவிரியின் வடகரையில் உள்ள திருவேள்விக்குடியில் ஒரு சிவன் கோயில் கட்டியுள்ளார்.இக் கோயிலில் செம்பியன் மாதேவியாரும் அவர் கணவர் கண்டராதித்த சோழனும் சிவ பெருமானுக்கு வேள்வி செய்து வழிபாடுகள் நடத்தி உள்ளனர். அக்காட்சி கோயிலின் மகா மண்டபத்தில் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறது.
மேலும் இக் கோயிலில் 60க்கும் மேற்பட்ட சோழர்காலக் கல்வெட்டுகள் (கி.பி. 8 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை) இடம் பெற்றுள்ளன. இக் கோயில் கல் வெட்டில் தான் செம்பியன் கண்டியூர் என்ற பெயர் இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறது. சோழர் காலத்திற்கு முன்புள்ள சான்றுகள் த்ற்போது அகழாய்வு மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளன.
சேகண்டிருப்பு - சேண்டிருப்பு.
இதுவும் செம்பியன் கண்டியூர் போல வில்லியநல்லூரின் உட்கிராமமாக உள்ளது. செம்பியன் + கண்டியர் + இருப்பு என்பது சுருங்கி சேக்கண்டிருப்பு என்றாகி தற்போது சேண்டிருப்பு என்று வழங்கப்படுகிறது.
வானாதிராஜபுரம்.
செம்பியன் கண்டியூருக்கு அருகில் மயிலாடுதுறை வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் உள்ளது வானாதிராஜபுரம். இங்கு சோழர் காலக் கோயில்கள் இருந்து இடிந்ததற்கான தடய்ங்கள் நிறையவே உள்ளன. அக்கால உடைந்த செங்கல் கட்டடம் உள்ளன. வானதிராயர்கள் (கள்ளர் குல பட்டம் கொண்டவர்கள்) இங்கு அதிகமாக வாழ்ந்து வருவதால் ஊரும் அப்பெயரில் வானாதிராயர்புரம் என்று இருந்து பிறகு வானாதிராஜபுரம் என்று வழ்ங்கப்படுகிறது
செம்பியன் கண்டியூரில் தொல்லியல் துறையின் தொழில்நுட்ப அலுவலர்கள் கல்வெட்டு முனைப்புத்திட்டத்தின் கீழ் பிப்ரவரி 2006இல் ஆய்வு தொடரப்பட்டது. களஆய்வில் இரண்டு புதிய கற்கால கைக்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் ஒன்றில் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட (கி.மு.1500) மொஹஞ்சதாரோ, ஹரப்பா பண்பாட்டுக் கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆய்வில் கிடைத்த அரிய தொல்பொருட்களின் மூலம் காவிரிக்கரையில் மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்களின் நாகரீகம் சிறப்பாக இப்பகுதியில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
கண்டியர் என்ற பட்டமுடைய கள்ளர் இனமக்கள் தஞ்சை மாவட்ட நந்தவனம்பட்டி,
முத்துவீரக்கண்டியன்பட்டி, மனையேறிபட்டி, ஆவாரம்பட்டி, புங்கலூர், கக்கரை, பின்னையூர், மண்டலக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஆர்சுற்றிப்பட்டு, மன்னார்குடி பைங்காநாடு, தலையாமங்கலம், எடமேலையூர், வடுவூர், திருக்களர், பெருகவாழ்ந்தான், கருவாக்குறிச்சி, சொக்களாவூர், கீராலத்தூர்,சோழபாண்டி, பட்டுக்கோட்டை ஆவிக்கோட்டை, பெரியகோட்டை, அதிராம்பட்டிணம், திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, மகாராசபுரம், புதுக்கோட்டை, கீழக்கரைமீண்டார்கோட்டை, புதுக்கோட்டை விடுதி, பாச்சுக்கோட்டை,கீழாத்தூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்.
இராசகண்டியன், இராசகண்டியர் என்று உருமாறி இன்று கண்டியர் என்று அழைக்கப்படுகின்றனர்.
கா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
கார்யோகன்
கார்யோகராயன்
காருடையன்
காராண்டான்
காராளன்
காராட்சி
காரையாட்சி, காரைக்காச்சி.
மாந்தாதா மரபில் வந்த மன்னன் கார்மன், காரைக்கோட்டை எனும் நகரத்தை இராசதானியாகக் கொண்டவன். காரைவாயில் (காராயில்), காரைமேடு(கழிப்பாழை), காரைக்காடு, காரைக்கால், காரைப்பாக்கம், காரைபட்டு, காரைப்பட்டி, காரைக்குடி, காரைப்பள்ளம், காரப்பன்காடு, காரைமங்கலம், என்ற ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
கார்ப்பிரியன்
கார்கொண்டான்
காசிராயன், காசிநாடான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காசிமன். காசாங்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். தென்காசி, சிவகாசி என்னும் பிரபலமான சிவதலங்களையும், காசாங்காடு என்னும் ஊர்களையும் உண்டு பண்ணி அரசாண்டவன்.இவன் மரபினர் காசிராயன், காசிநாடான் எனும் பட்டங்களை பெற்றனர்.
காவலக்குடியன், காலாக்குடியன், காவாளி, காவாலி, காவாடி, காலாடி.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காவலன். காவலகுடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் காவலகுடியன், காவாளி எனவும் வழங்கும். காலம் (கைச்சினம்) என்னும் தேவார சிவதல நகரத்தையும், காவளூர், கானூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் காவலக்குடியன், காலாக்குடியன், காவாளி, காவாலி, காவாடி, காலாடி எனும் பட்டங்களை கொண்டனர்.
காங்கயன், காங்கியன், காங்கேயன்.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த காங்கமசோழ சக்ரவர்த்தி. காங்கயம் (காங்கயன்பட்டி) என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் காங்கயன் எனவும் வழங்கும். காலனுக்கு இது வழக்கென்று போதித்தவன் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்) இவன் மரபோர் காங்கயன், காங்கியன், காங்கேயன் எனும் பட்டங்கள் கொண்டனர். வீரசோழப் பெரிய காங்கேயன் என்பவன் சோழ வல்லரசில் பெரும் வீரனாக விளங்கியுள்ளான். இவன் பெரியகுலத் தலைவன், கங்கை முதல்வன் எனவும் அழைக்கப்பட்டுள்ளான். இவன் கொங்குசோழ மன்னர்களின் முதல்வனும் ஆவான். இவன் குடியோறிய இடம் காங்கேயம் எனவும் அழைக்கப்படுகிறது. நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் கோயில் கல்வெட்டு ஒன்றில் ஆதி சண்டிகேசுவரர் கோயிலுக்கு நிலம் விற்றுக்கொடுத்த தகவலும் அதில் கையெழுத்திட்டுள்ள அதிகாரிகளுள் ஒருவனாக காங்கேயன் இடம் பெற்றுள்ளான். இவன் வழி வந்தோர் சோழர் படைதலைவராகவும், அதிகாரியாகவும் கொங்குநாட்டில் பணியாற்றி உள்ளனர். இப்படம் முடையோர் தஞ்சை மாவட்ட காங்கேயன்பட்டியில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
காவிரிநாடன், காவிரிவெட்டி.
சங்ககால சோழர்களுள் மிகவும் புகழ்பெற்றவன் கரிகால் சோழன். இவனது காலம் கி.மு 60 முதல் கி.மு 10 வரை என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சங்ககால இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் இடம்பெறும் பட்டினைப்பாலை, பொருநாற்றுப்படை ஆகிய இரண்டும் கரிகாலனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டவை. இச்சிறப்பினை வேறு சோழ அரசர்கள் எவரும் பெற்றதில்லை. வெள்ளப்பெருக்கால் ஏற்படும் சேதங்களைத் தவிர்கவும் வேளாண்மையை பெருக்கவும், நீர்பாசன வசதிகளை செய்து தரும் பொருட்டு தன்னுடன் போரிட்டு தோற்றுப்போன இலங்கை வேந்தனின் 12000 படை வீரர்களை பயன்படுத்தி திருச்சி திருவரங்கத்திற்கு மேற்கே காவிரி ஆற்றுக்கிடையே 1080 அடி நீளமும், 40 முதல் 60 அடிவரை அகலமும் கொண்ட கல்லணையும் கட்டி காவிரியின் கரைகளை உயர்த்திய பெருமையும் பெற்றவன் கரிகாலன். இச்செய்தியை பிற்கால இலங்கை நூள்களும், கலிங்கத்துப்பரணியும்,சிலப்பதிகாரமும்,தெலுங்குச் சோழன் புன்னியகுமாரனின் மேலப்பாடு கல்வெட்டும் குறிப்பிடுகின்றன.வேறு சங்ககால அரசர்கள் எவரும் வேளாண் விரிவாக்கத்திற்கு அணை கட்டியதாக சான்றுகள் இல்லை. வட இந்திய அரசுகளின் மீது போர் தொடுத்து மகத, வச்சிர, அவந்தி நாட்டு வேந்தர்களையும் வென்று இமயத்தில் புலிக்கொடியை பறக்கவிட்டு பின்பு வாகைப் பறந்தலையில் ஒன்பது வேளிர்குல அரசர்களையும், நாகப்படினம் பகுதியை சார்ந்த நாகர்களின் பன்றி நாட்டையும், பெண்ணை ஆற்றுக்கரை குறும்பர்களையும், ஆயர்தலைவன் இளங்கோ மற்றும் தொண்டை நாட்டையும் வென்று காடுகளை அழித்து வேளான் நிலங்களாகவும் மாற்றிய பெருமை உடையவன் கரிகால் சோழன். இவனது ஆட்சிக்காலத்தில் சோழ அரசு வடக்கே வடபெண்ணை, தெற்கே குமரிவரை பரவியிருந்தது. இதனால் இவன் கரிகால் பெருவளத்தான், காவிரிநாடன் எனும் சிறப்புப் பெயர்களை பெற்றிருந்தான். கள்ளர் குலத்தில் காவிரிநாடன் எனும் பட்டப்பெயர் இவன் சந்ததியினருக்கு வழங்கிவருவதையும் அறியமுடிகிறது. இப்பட்டம் தான் கள்ளர் குல பட்டங்களில் மிகவும் பழமை வாய்ந்தது என்று அறியவும் முடிகிறது.
காவெட்டி
காடுவெட்டி.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காடுவெட்டி. காடுகளை வெட்டி அழித்து நகரங்களை உருவாக்கியவன். காட்டூர், மேலக்காட்டுப்பள்ளி, கீழைக்காட்டுப்பள்ளி என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் மரபினர் காடுவெட்டி எனும் பட்டம் கொண்டனர். காடவராயன் என்ற பட்டத்துடன் தொடர்புடைய பட்டம் காடுவெட்டி என்றும், காடுவெட்டி என்பது பல்லவரது பெயராக சாசனங்களிலும் வருகிறது. கங்கவேந்தர்களின் செப்பேடுகள் காஞ்சி மாநகரத்தை காடுவெட்டிகள் ஆண்டதாக கூறுகின்றன. காடுவெட்டி பேரரையன், காடுவெட்டி தமிழ் பேரரையன், விடேல் விடுகு காடுபட்டித் தமிழ் பேரரையன் என்போர் பல்லவ பெரு வேந்தர்களின் கீழிருந்த பல்லவ சிற்ரசர்கள், தலைவர்களென்றும் சுட்டுகின்றன. பழைய திருவிளையாடல் புரானத்தில் பல்லவ குல காடுவெட்டி என்பவனின் பெருமையும் அவனது பக்திச் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. காடுவெட்டி பட்டமுடையோர் புதுக்கோட்டை மாவட்டத்தில் காடுவெட்டிவிடுதி, பாலக்குடிப்பட்டி, உஞ்சைவிடுதி, அரிமளம் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். காடுவெட்டிகள் சோழர் மற்றும் பல்லவர் மரபினர் என்றும் அறிய முடிகிறது.
காடவராயன்.
பல்லவ மரபு வழி வந்தவர்கள். தொண்டை மண்டலத்தில் காடுகளை அழித்து நாடு, நகரங்களை உருவாக்கி அரசாண்டவர்கள். சங்க இலக்கிய சான்றுகளால் அறியப்படும் முதல் காடவன் ஐயடிகள் என்னும் சைவ அடிகளாவார். இவரை சுந்தரமூர்த்தி நாயனார் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகிறார். நம்பியாண்டார் நம்பி இவரை பக்திக்கடல் ஐயடிகளாகின்ற நம்பல்லவனே என்று கூறுகிறார். சேக்கிழார் இவரை பல்லவர் தம்குலமரபின் வழித்தோன்றல் என்றும் கூறுகின்றனர். பிற்கால சோழர் அரசியலில் காடவச் சிற்றரசர்களின் பங்கு மிகப்பெரியதாக இருந்துள்ளது. எழிசை மோகன் ஆட்கொல்லியான குலோத்துங்கச் சோழக் காடவராயன் (கி.பி 1129), கடலூர் ஆளப்பிறந்தான் மோகனாகிய இராசராச காடவராயன் (1136), செஞ்சியர்கோன் காடவன் (1152) என்போர் அதிகாரிகளாகவும்,சிற்றரசர்களாகவும் சோழர் ஆட்சியில் பணிபுரிந்துள்ளனர். காடவராயர் என்ற பட்டம் எவ்வித திரிபும் இன்றி இன்றும் வழங்கிவருவது குறிப்பிடத் தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் காடவராயன்பட்டி, நமல்பட்டி, தஞ்சை மாவட்டம் பஞ்சநதிக்கோட்டை, கருக்காக்கோட்டை, ஈச்சங்கோட்டை, ஆழிவாய்க்கால், சாமிப்பட்டி, மருங்குளம், புதுவூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்,
கடாரத்தலைவன்.
கடாத்தலைவன்
கடாந்தாங்கி
காலிங்கராயன்
காரி.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காரி. வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். காரிக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். காரிக்கரை என்னும் தேவார சிவதலத்தையும் உண்டு பண்ணியவன். காரியூர், காரிபட்டி, காரிமங்கலம், காரிகுடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன். சிறந்த குதிரை வீரன். சங்க இலக்கியத்தில் மலையமான் திருமுடிக்காரி என்று இவன் குறிக்கப்படுகின்றான்.
சேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள கார்குடி என்னும் ஊர் இச்சிற்றரசனோடு தொடர்புடையதாகத் தெரிகின்றது. சாசனங்களில் இவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது. சேலம் நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு.
இவன் காலத்தில் இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு, மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது. மலையமான் நாடான மலாட்டில் கொடுங்கால் என்ற நகரம் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது.
இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம். மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படுகிறது. மலையமானாடு எனவும் மலாடு எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் திருமுனைப்பாடிநாடு, சேதிநாடு, மகதநாடு; சகந்நாதநாடு எனவும் அழைக்கப்பட்டது.
மலையமான் திருமுடிக்காரிக்குப் பின் மகன் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆட்சிக்கு வந்தான்.
இவன் காலத்தில் மலாடு சோழர்களின் ஆட்சிக்கு உடபட்டிருந்தது. பிற்காலச் சோழர் ஆட்சியில் சிறந்து விளங்கிய பளுவேட்டரையர் இவன் மரபினரே. சோழர்களோடும், பாண்டியர்களோடும் மண உறவு கொள்ளூமளவிற்கு ஏற்றம் பெற்றோராய் மழவர்கள் விளங்கியமை கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படும் செய்தி.
இராசராச சோழன்ராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர். கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது. திருமுடிக்காரி மரபினர் காரி எனும் பட்டம் கொண்டனர்.
அரசன், அரசுடையான், அரசுக்குடையான், அரசுக்குழைச்சான், அரச்சுக்குழைச்சான்,
அரசாண்டான், அரசாளன், அரசாளி, அரசாட்சி, அரசப்பிரியன், அரசுகொண்டான்,
அரசதேவன்.
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் அரசதேவன், அரசபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அரசரிற் சிறந்தவன் என்று போற்றப்பட்டவன். இவன் அரசாண்டான், அரசுக்குடையான் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டான். அரசிலி, அரநெறி, அரதைப்பெரும்பாழி என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதலங்களையும், அரசூர், அரசங்குளம், அரங்குளம், அரசமங்கலம், அரசங்குடி என்ற ஊர்களையும் உண்டாக்கி ஆட்சிபுரிந்தான்.இவன் மரபினர் மேற்கூரிய அரசன், அரசுடையான், அரசுக்குடையான், அரசுக்குழைச்சான், அரச்சுக்குழைச்சான்,
அரசாண்டான், அரசாளன், அரசாளி, அரசாட்சி, அரசப்பிரியன்,
அரசுகொண்டான், அரசதேவன் என்ற பட்டங்களை பெற்றனர்.
அச்சான்டான்.
அங்கராயர்.
முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் அங்கம் என்ற நாட்டை வென்று கங்கையில் நீர் எடுத்த வீர பரம்பரையினர். அங்கதேசம் மகாபாரத கர்ண மகா ராஜவின் நாடாகும்.
அச்சுதன், அச்சுதபண்டாரம், அச்சுததேவன், அச்சுத்தேவன், அச்சுதராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அச்சுதன். அச்சுதபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அச்சுதராயன், அச்சுததேவன் எனவும் வழங்கப்பட்டது. அச்சுதங்குடி, அச்சுதமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் அச்சுதன், அச்சுதபண்டாரம், அச்சுததேவன், அச்சுத்தேவன்.என்ற பட்டங்களை பெற்றனர்.
அத்திரியன், அத்திரியாக்கி, அத்திரிமாக்கி, அத்திப்பிரியன், அத்திகொண்டான், அத்தியாண்டான்,
அத்தியாளி, அத்தியுடையான்.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அத்திசோழன். அத்திக்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அத்திகொண்டான், அத்தியாண்டான், அத்திப்பிரியன், அத்தியாளி, அத்தியுடையான் எனவும் வழங்கும். அத்தங்குடி, (அதங்குடி) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தையும், அத்திப்புலியூர் என்னும் சிவதலத்தையும், அத்திக்கரை, அத்திப்பட்டு எனும் திருப்புகள் பெற்ற சுப்பிரமணிய தலங்களையும், அத்திசோழமங்கலம், அத்திக்கடை, அத்திப்பேட்டை, அத்தியூர், அத்திப்பாக்கம், அத்திவெட்டி, அத்திக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினருக்கு அத்திப்பிரியன், அத்திரியன், அத்திரிமாக்கி என்னும் பட்டங்கள் வழங்குகின்றது. அத்திரி என்பது கோவேறு கழுதையை குறிக்கும். பெருங்குடி மக்கள் அத்திரியை பயன்படுத்தி பிரயானம் செய்தனர். பெருங்குடி வணிகனாகிய கோவலன் அத்திரியில் சென்றதை சிலம்பு குறிப்பிடுகிறது. சங்க காலங்களில் தலைவன் கோவேறு கழுதையில் பயனித்ததை சங்க பாடல்கள் செப்புகின்றன. இதன் மூலம் இப்பட்டங்கள் சங்ககாலம் முதல் வழக்கத்தில் உள்ளது என்பது தெரிய வருகிறது.இப்பட்டமுடையோர் அதிகமாக வாழும் ஊர்கள் தெரியவில்லை.
அரியதன், அரிப்பிரியன், அரியப்பிள்ளை.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி அரியசந்திரசோழன். அரிசந்திரபுரம் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அரியதன், அரிப்பிரியன் அன்வும் வழங்கும். காவிரி ஆற்றிலிருந்து அரிசிலாறு என்னும் பேராற்ரையும், முள்ளியாற்றிலிருந்து அரியசந்திர நதியையும் உருவாக்கினான். அரியலூர், அரியமங்கை, அரியக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் அரியதன், அரிப்பிரியன், அரியப்பிள்ளை என்னும்பட்டங்களை கொண்டனர்.
அண்டங்கொண்டான், அண்ணுண்டான், அண்டப்பிரியன், அண்ணுப்பிரியன், அண்ணுத்திப்பிரியன்,
அண்ணமாண்டான், அண்டமாளியன்.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி. அண்டபுரம் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அண்டங்கொண்டான், அண்டமாண்டான், அண்டப்பிரியன், அண்டமாளி எனவும் வழங்கலாயிற்று. அண்ணாமலை என்னும் தேவார சிவ தலத்தையும்,அண்டக்குடி(அண்ணுகுடி) அண்டக்குளம், அண்டத்துறை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். சுவர்க்கம், அந்தரம், பூமி என்னும் உலகங்களையும் வென்றவன் என புகழப்பட்டவன்.
மேலனைத்துலகு மிவ்வகில லோகமெலாம் வென்றுகொண்டவனு மென்றிவர்கள் கொண்ட விறலும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது.இவன் மரபோர் அண்டங்கொண்டான், அண்ணுண்டான், அண்டப்பிரியன், அண்ணுப்பிரியன், அண்ணுத்திப்பிரியன், அண்ணமாண்டான், அண்டமாளியன் என்னும் பட்டங்களை கொண்டனர். இப்பட்டங்கள் சங்ககாலத்தில் வழங்கப்பட்டவை என உறுதி செய்யப்படுகிறது.
அம்பராண்டான், அமரண்டான், அமராண்டான், அம்பர்த்தேவன், அம்மலத்தேவன்,
அம்மானைத்தேவன், அம்பானைத்தேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அம்பன். அம்பர்,அம்பர்மாகாளம் என்னும் இரண்டு சிவதலமுடைய அம்பர் என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் அம்பராயன், அம்பராண்டான், அம்பர்த்தேவன் எனவும் வழங்கும். அம்பராயன்பேட்டை (அம்பராசன்பேட்டை) அம்பத்தூர்(அம்பகரத்தூர்) அம்புக்கோவில் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் அம்பராண்டான், அமரண்டான், அமராண்டான், அம்பர்த்தேவன், அம்மலத்தேவன், அம்மானைத்தேவன், அம்பானைத்தேவன் எனும் பட்டங்களை கொண்டனர்
அம்மையத்தரையன், அசையாத்துரையன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அம்மையன். அம்மையபுரம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அம்மையப்பன், அம்மளூர் என்னும் ஊர்களையும், அம்மணியாறு என்னும் பேராற்றையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் அம்மையத்தரையன், அசையாத்துரையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
அருண்மொழித்தேவன், அருமொழித்தேவன்.
அருவன், அருவாத்தலைவன், அருவாத்தலையன், அருவாநாடன், அருமைநாடன், அருமடான்,
அருவாநாட்டான், அருமநாட்டான், அருவாநாடன், அருமைநாடன்.
கரிகால் சோழன் வழி வந்தவர்கள். காவிரியின் கழிமுகப் பகுதிக்கு வடக்கேயுள்ள பொண்ணையாற்று பள்ளத்தாக்கு அருவாநாடு என்று அழைக்கப்பட்டது. அதனை ஆண்டவர்கள் அருவாளர் எனப்பட்டனர். கரிகால் சோழன் இந் நாட்டை வெற்றி கொண்டு ஆண்டான் என்றும் வரலாறு கூறுகிறது.(30 கல்வெட்டுகள் வை.சுந்தரேசவாண்டையார்) அருவாநாட்டான், அருவாத்தலையன் என்னும் பட்டங்கள் அருவாநாட்டு வெற்றிகளோடு சம்பந்தப்பட்டுள்ளது. அருவா நாட்டின் வடபால் உள்ள பகுதி அருவாவடதலை நாடாகும். இதனை ஆண்டவர்கள் அருவாவடதலையான் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் திரிந்து அருவாத்தலையர் என்று வழங்கிவருகிறது. இவன் மரபோர் அருவாத்தலைவன், அருவாத்தலையன், அருவாநாடன், அருமைநாடன், அருமடான், அருவாநாட்டான், அருமநாட்டான் என்னும் பட்டங்களை கொண்டனர். இப் பட்டமுடைய கள்ளர் குடியினர் மன்னார்குடி பைங்காநாடு என்ற ஊரில் வாழுகின்றனர்.
அடைக்கப்பட்டான், அடைவளைந்தான், அடவளைந்தான், அடைவளஞ்சான், அண்டம்வளைந்தான்.
அண்டசோழன் மரபில் வந்த மன்னன் அடைவளைசோழன். அடைக்கப்பட்டு என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அடைக்கப்பட்டான், அடைவளைந்தான் எனவும் வழங்கும். அடைப்பாறு என்னும் ஆற்றையும் உருவாக்கி அரசாண்டவன். அடை என்பது நிலம் என்றும், வளைவதாவது சுற்றி வருவது என்றும் பொருள்படும். இதன் மூலம் இவர்கள் நிலத்தை சுற்றி அதன் எல்லைகளை வகுத்து மானியமாக நிலங்களை அளித்தவர்கள் (தினந்தோறும் திருக் கோவில்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு மற்றும் பூசனப்பொருட்களை வழங்குபவர்களுக்கு) என்றும் அறியப்படுகிறது. அடைக்கப்பட்டான், அடைவளைந்தான், அடவளைந்தான், அடைவளஞ்சான், அண்டம்வளைந்தான் என்னும் பட்டமுடைய கள்ளர்கள் திருவையாறு வட்டம் திருச்சினம்பூண்டி, திருச்சி மாவட்டம் கிளியூர் ஆகிய இடங்க்களில் அதிகமாக வாழுகின்றனர்.
அன்னவாயில்ராயன், அன்னவாசல்ராயன்.
அன்னசோழன், அன்னவாயில் என்னும் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அன்னவாயில்ராயன் எனவும்வழங்கும். சோற்றுத்துறை எனும் தேவார சிவ தலத்தையும், அன்னப்பன்பேட்டை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் அன்னவாயில்ராயன், அன்னவாசல்ராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
அதியமான், அதிகைமான், அதியமார், அதியன், அதிகர்.
குறுநில மன்னர் குடிகள்.
சங்காலம் முதல் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய குறுநில மன்னர் குடிகள் பலவாகும், அவற்றுள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை சிறப்பு வாய்ந்த கள்ளர்குல மரபுகள் சிலவே அவற்றுள் அதியமான் பரம்பரையும் ஒன்று.
அதியரையமங்கை (அதிகை) என்னும் தேவாரம் பெற்ற சிவதலநகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன் அதியமான். சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த குறுநில மன்னரான அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன் அதியமான் நெடுமிடல். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நெடுமிடல் என்பது அரசனின் இயற்பெயர் எனச் சிலர் கருதுவர் வேறு சிலர் இது நெடிய வலிபொருந்திய என்னும் பொருள் குறிக்கும் ஒரு அடைமொழி என்பர். சங்ககாலம் முதல் பிற்காலச் சோழர்கள் வரை சிற்சில இடைவெளி நீங்களாகத் தகடூர் நாட்டில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் அதியன் மரபினரே. பனம்பூ மாலையைச் சூடியவர்கள்.
அதியமான் சேரர் வழி வந்த கள்ளர் இனகுழு தலைவன் தகடூர் (இன்றைய தர்மபுரி) என்னும் நாட்டின் அரசன். சத்திய புத்திரன் என்று அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டில் குறிக்கப்பட்ட பெருமை உடையவன். இவனது முன்னோர்கள் தான் இந்திய திருநாட்டிற்கு முதன் முதலில் கரும்பினை கொண்டு வந்தவர்கள் என்ற சிறப்புடைய குடிப்பெருமையுடையவன். சிரந்த போர் ஆற்றலும் ஈகைக்குணமும் உள்ளவன். தன்னிடம் இரந்து வருகின்றவர்களுக்கு இல்லையெனாது வாரிக்கொடுக்கும் வள்ளலாக இருந்தவன். போர் களத்தில் இருந்தபோதும் இரவலர்களுக்கு கொடையளித்தவன் என்ற பெருமை பெற்றவன். அரியதாய் அருமருந்தாய் என்றும் இளமை நல்கும் குணமுடைய அருநெல்லிக் கனியை தான் உண்ணாது, தனது சுற்றத்தினருக்கும் கொடுக்காது தமிழ் வாழ தமிழை தாலாட்டிய மூதாட்டி ஓளவைக்கு கொடுத்தமை இவனது ஈகைக் குணத்திற்கும், தமிழ்மொழி மேல் கொண்ட பற்றிற்கும் ஓளவையின் பால் இவன் கொண்டிருந்த நற்பின் பண்பிற்க்கும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
சங்ககால அதியமான் மரபில் தலைசிறந்த மன்னனாக நெடுமான் அஞ்சி விளங்கியுள்ளான். அதியமான் நெடுமான் அஞ்சி சமகாலத்தில் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை, மலையமான் திருமுடிக்காரி, தொண்டைமான், வல்வில் ஓரி ஆகியோர் இருந்துள்ளனர்.
கடையெழு வள்ளல்களில் ஒருவன் அதிகமான் நெடுமானஞ்சி மன்னன். தருமம் செய்வது கடமை என கொண்ட அதியமானின் ஊர் தருமபுரி என அழைக்கலாயிற்று. அஞ்சி என்ற இயற்பெயர் கொண்ட இம் மன்னன் இன்றைய தர்மபுரியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தான். முதன் முதலாக கரும்பினை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய மன்னனும், நீண்ட ஆயுள் அளிக்கக் கூடிய அரிய கருநெல்லிக் கனியை ஔவைக்கு அளித்து பெருமை பெற்றவனும் இவனே. இவனது வம்சாவழியினரும் பிற்காலச் சோழர்கள் காலத்தில் தகடூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்கள்.
தமிழகத்தின் ஆட்சியில் பன்னூற்றாண்டு காலம் தனிப்பெரும் புகழடன் உலா வந்தவர்கள் அதியமான்கள் இவர்கள் 12ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து செயற்கரும் செயல்கள் செய்ததை அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளனர். சங்க இலக்கியம் வழி அதியர் மரபினர் அமைத்திருந்த இரு கோட்டைகள் குறித்து அறிய முடிகிறது.
கடவுள் அஞ்சி எழுப்பிய கோட்டை தூங்கெயில் கோட்டை எனவும் மற்றது தடூர் அதியமான் நெடுமான் அஞ்சி அமைத்த கோட்டையாகும்.இக்கோட்டையில் தான் நெடுமான் அஞ்சியின் அரண்மனையும் இருந்ததாக அறியப்படுகிறது. இக்கோட்டையே சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையால் அழிக்கப்பட்ட கோட்டையாகும்.இக்கோட்டைக்கு கிழக்கே ஒரு மலைத்தொடர் உள்ளது. இம்மலையே அந்நாளில் குதிரை மலை என்று அழைக்கப்பதுள்ளது. உண்டாரை நீண்ட நாள் உயிர் வாழ்விக்கும் தெய்வத்தன்மை பொருந்திய நெல்லிக்கனியை தந்தது இம்மலை தான்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களுக்கு நிகராக ஒளவைக்கு நெல்லிக்கனி தந்து தமிழ் வளர்த்த தடூர் அதியமான் நெடுமான் அஞ்சி முத்தமிழ் வளர்த்த முதல்வனாகத் திகழ்கிறான். நெடுந்தேர் அஞ்சி, நெடு நெறிக் குதிரை கூர்வேல் அஞ்சி, கடும்பகட்டு யானை நெடுமான்
அஞ்சி என பலவாறு சங்கப்பாடல்களில் புகழப்படுகிறான். இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய தீவுகளில் ஒன்றான இப்போதைய சாலமன் தீவில் இருந்து கரும்பை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய பெருமையும் அதியர் பரம்பரையே சாரும்.
அதியர் பல்லவர் காலத்தில் நாமக்கல் பகுதியை ஆண்டுள்ளனர் என்பதனை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. இங்கு குறிப்பிடும் அதியர் சோமன் என்ற குணசீலன் ஆவான்.
இவன் எழுப்பிய நாமக்கல் குடவரைக் கோயிகள் பல்லவர் காலத்து குடவரைக் கோயிகளுக்கு இணையாகத் திகழ்கின்றன. கரூர் அருகே தான்தோன்றி மலையில் உள்ள முற்றுப்பெறாத குடைவரைக் கோயிலும் இவனது பணியாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இராசராச தேவன் அதியமான் (கி.பி 13 - 14 ஆம் நூற்றாண்டு) இவனைப்பற்றிய குறிப்புகள் மூன்றாம் குலோத்டுங்க சோழன் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இவனது மகன் விடுகாதழகிய பெருமாள் அதியமான் ஆவான். இவனைப்பற்றிய பல விவரங்கள் அருர் வட்டம் கம்பை நல்லூரில் அமைந்த கோயில் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. இவனது கல்வெட்டுகள் தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர லட்டிகத்திலும் உள்ளன.சேலம் மாவட்டம் திருச்செங்கோடு வரையிலும் இவனது ஆட்சிப்பரப்பு இருந்துள்ளது. கம்பைநல்லூரில் சிறுகோட்டை என்னுமிடத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கற்கோயிலாக எடுப்பித்துள்ளான். இவ்வூரின் பழைய பெயரான நாகையன்பள்ளி என்பதைக் கொண்டு இறைவர்க்கும் நாகையநாயனார் என்றே அழைத்துள்ளான். இவை மட்டுமின்றி இவனது பெயராலேயே விடுகாதழகிய நல்லூர் என்னும் ஊரையும் அமைத்துள்ளான்.
இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய கல்வெட்டு என அறியப்படும் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது.
திருக்கோயிலூரிலிருந்து பதினாறு கல் தொலைவில் ஜம்பை என்ற ஊர் தென்னார்காடு மாவட்டத்தில் பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ளது. சுற்றிலும் பலகுன்றுகள் உள்ளமையால் இது பார்ப்பதற்கு இனிமையான சூழ்நிலையில் உள்ளது. பண்டைய கல்வெட்டுகள் இவ்வூர் "வாணகோப்பாடி நாட்டில்" இருந்தது எனக் கூறுகின்றன. இவ்வூரில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டை தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது.
ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி இக்கல்வெட்டின் சிறப்பு என்ன? அதில் உள்ள இரண்டு சொல் தொடர்கள் "ஸதியபுதோ" என்பதும் "அதியந் நெடுமாந் அஞ்சி" என்பதே ஆகும். தமிழக வரலாற்றுக்கு மட்டும் இக்கல்வெட்டு அரும்செய்திகளை அளித்துள்ளது என்று எண்ணிவிடக் கூடாது. இந்திய வரலாற்றுக்கே மிகச் சிறந்த செய்தியை அளித்துள்ளது இக்கல்வெட்டு. அதியனை "ஸதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சி" என்று அழைக்கிறது.
இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மெளரியப் பேரரசன் அசோகன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெருமன்னன் தனது கல்வெட்டுகளில் சோழர், பாண்டியர், கேரளபுத்ரர், ஸத்யபுத்ரர் ஆகியோரைக் குறிக்கிறான். இவர்களது நாடுகள் அவனது ஆட்சிக்கு உட்பட்டவை அல்ல தனி ஆட்சி நடத்தியவை என குறிப்பிடுகிறான். அசோகன் குறிக்கும் ஸத்யபுத்ரர் யார் என்று இது வரை தெளிவாகத் தெரியவில்லை. ஸதியபுதோ என்பவர் அதியமான்களாக இருக்கக்கூடும் என்று ஊகித்தவர்களும் உண்டு.
இப்பொழுது கிடைத்துள்ள இக் கல்வெட்டு அசோகன் கூறும் ஸத்யபுத்ரர்கள் அதியமான்கள் தாம் எனத் திட்டவட்டமாக தெளிவாக்கிவிட்டது. அதியனை பொய்யா எழினி (சத்யபுத்ரர்) எனப்புறம் கூறும்.
ஓரி, காரி, குமணன், பேகன், போன்ற வள்ளல்களும், கரிகால் பெருவளத்தான், இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, எனும் சோழ மன்னர்களும் செல்வக்கடுங்கோ, சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை போன்ற சேரப் பேரரசர்களும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோரும் வாழ்ந்த காலத்தில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது.
இவனைப் பாடிய ஔவை, பரணர், கபிலர், மாமூலனார், நத்தத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்தனார் போன்ற ஈடிலாப் புகழ் பெற்ற புலவர்கள் இக்கல்வெட்டு எழுதிய போது வாழ்ந்தவர்கள்,
தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அவன் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியை வென்றான் எனச் சங்க பாடல் கூறிற்று. ஔவையும், பரணரும் அவனது திருக்கோயிலூர் வெற்றியைப் பாடினார்கள். அந்த திருக்கோயிலூருக்கு மிக அருகிலேயே இந்தக் கல்வெட்டு இருக்கிறது என்றால் அதியமான் திருக்கோயிலூரை வென்றபோது இந்தப் பாளியை ஏற்படுத்தி கல்வெட்டைப் பொறித்திருக்கிறான் என்பது தெளிவாகிறது.
அவன் திருக்கோயிலூரை எறிந்ததும் உண்மை, ஒளவையும் பரணரும் பாடியதும் உண்மை என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு சான்று என்ன வேண்டும்.
கல்வெட்டு "அஞ்சி ஈத்த பாளி" என்கிறது ஈதல் கொடுத்தல் என்னும் பொருளில் ஈத்த என்ற சொல் அப்படியே சங்கப் பாடலில் அதுவும் அதியமானைப் பற்றிய பாடலிலேயே பயன்பட்டுள்ளது. "ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே" என்று கூறும் ஒளவையின் பாடல்.
சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிட்ட சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான். அவனது மார்பகத்தே வேல் பாய அவன் மாய்ந்து வீழ்ந்த போது ஔவை கதறி அழுது பாடியிருக்கிறார். "மாற்றானின் வேல் அவன் மார்பில் மட்டுமா தைத்ததது! இல்லை இரப்போர் கைகளை துளைத்து, அவனது குடிகள் கண்ணீர் சொரிய, நல்ல புலவர்களின் நாவையும் அல்லவா துளைத்தது. இனி பாடுநர் யாரிருக்கிறார்கள்? பாடுவோருக்கு அளிப்பவர்தாம் யாரிக்கிறார்கள்? என்று ஔவை கதறி அழுது பாடியிருக்கிறார்.
அதியமானின் மகன் பொகுட்டெழியும் தந்தையை மிஞ்சும் கொடை திறனும் போர் ஆற்றலையும் கொண்டவன் என்று சங்க நூல்கள் கூறுகின்றன.
தடூரை ஆட்சி புரிந்த அதியமான் மன்னர்களின் பட்டியல்.
அதியமான் நெடுமிடல் சங்ககாலம்
அதியமான் நெடுமான் அஞ்சி சங்ககாலம்
அதியமான் பொகுட்டெழினி சங்ககாலம்
கடவுள் அஞ்சி சங்ககாலம்
அதியமான் சோமன் என்ற குணசீலன் 12 - 13ம் நூற்றாண்டு
இராசராச தேவன் அதியமான் 13ம் நூற்றாண்டு
விடுகாதழகிய பெருமாள் 13ம் நூற்றாண்டு
குலோத்துங்க சோழ தகடாதராயன் 13ம் நூற்றாண்டு
அதியமான் மன்னர்களின் வழித்தோன்றல்கள் அதியமான், அதியமார், அதியன், அதிகர், அதிகமான், அதிகைமான் என்ற படங்களை கொண்டுள்ளனர்.
அயிரப்பிரியன், ஐரைப்பிரியன், அய்யப்பிரியன், ஐயப்பிரியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் அய்வசோழன்(ஐவசோழன்) ஐயனாபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஐயங்கொண்டான், ஐயாண்டான், ஐயப்பிரியன், ஐயுடையன், ஐயாளி எனவும் வழங்கப்பட்டது. ஐவூர், ஐயூர், ஐவனல்லூர், ஐயன்பேட்டை ( அய்யம்பேட்டை) என்னும் ஊர்களையும் உருவாக்கியரசாண்டவன். ஐயனாறு, ஐயவையனாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கியவன். இவன் மரபோர் அயிரப்பிரியன், ஐரைப்பிரியன், அய்யப்பிரியன், ஐயப்பிரியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
அச்சிராயர்.
சோழப் படையில் குதிரை வீரர்களின் தலைமை ஏற்று வெற்றி வாகை சூடிய வீர பரம்பரையினர். அச்சுவவாரியார் என்பது மருவி அச்சிராயர் என வழங்கப்படலாயிற்று.
அதிகாரி.
சோழஅரச ஆணைகளை தலைமையேற்று செயல் படுத்திய நிர்வாகிகள். இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இவர்களின் பட்டப்பெயர்கள் அதிகமாக கானப்படுகின்றன.
அச்சமறியார்.
சோழர் படையில் தற்கொலைப் படைப்பிரிவினராக இருந்தவர்கள். அரசர்கள் போர்க்களம் புகுமுன் காளிக்கோயிலின் முன் வைக்கப்பட்டிருக்கும் சூலாயுதங்களின் மீது மோதி தங்கள் தலையை துண்டித்துக்கொள்ள, இவர்களின் குருதியை திலகமிட்டு அரசர் முதல் போர்வீரர்கள் அனைவரும் களம் புகுவார்கள்.மரணபயமே இல்லாத இவர்கள் அச்சமறியார் என பட்டம் சூட்டப்பட்டனர்
அம்மாலைத்தேவர்.
செம்பியர் மரபில் வந்த அம்பன் என்னும் மன்னனின் சந்ததியினர். அம்பராயன்பேட்டை, அம்பத்தூர், அம்புக்கோயில் என்னும் ஊர்களை உண்டாக்கியவர்கள்.
அயிரப்பிரியன், ஐரைப்பிரியன், அய்யப்பிரியன், ஐயப்பிரியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் அய்வசோழன்(ஐவசோழன்) ஐயனாபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர்
ஐயங்கொண்டான், ஐயாண்டான், ஐயப்பிரியன், ஐயுடையன், ஐயாளி எனவும் வழங்கப்பட்டது. ஐவூர், ஐயூர், ஐவனல்லூர், ஐயன்பேட்டை ( அய்யம்பேட்டை) என்னும் ஊர்களையும் உருவாக்கியரசாண்டவன். ஐயனாறு, ஐயவையனாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கியவன். இவன் மரபோர் அயிரப்பிரியன், ஐரைப்பிரியன், அய்யப்பிரியன், ஐயப்பிரியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஆ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
ஆச்சன், ஆச்சாப்பிரியன், ஆட்சிப்பிரியன்.
முசுகுந்தன் மரபில் வந்தவன். ஆச்சாபுரம் (பெருமணநல்லூர்) என்னும் தேவார சிவதல நகரை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன்.ஆதிசைவர்களுக்கும், கம்மியர்களுக்கும் ஆச்சாரி என்று பட்டம் கொடுத்தவன். இவன் பெயர் ஆச்சாப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. ஆதிச்சபுரம், (ஆச்சாபுரம்) ஆச்சமங்கலம், ஆச்சனூர், ஆச்சங்குடி, ஆச்சான்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன். இவன் மரபினர் ஆச்சாப்பிரியன், ஆட்சிப்பிரியன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
ஆச்சராயன்
ஆச்சுடையன்
ஆச்சாளன்
ஆச்சாளி
ஆச்சங்கொண்டான்
ஆச்சதேவன்
ஆய்ப்பிரியன், ஆளற்பிரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஆய். ஆய்க்கோட்டை, ஆய்ப்பாடி என்னும் நகரங்களை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆய்ப்பிரியன் எனவும் வழங்கும். ஆய்மூர் என்ற தேவார சிவதலத்தையும், ஆய்மழை, ஆய்மங்கலம், ஆய்ப்பட்டி, ஆய்க்குடி, ஆய்ங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். கடையெழு வள்ளல்களுள் ஒருவன். பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். இவனை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். ஒளிவீசும் நீலமணியைத் தன்னகத்தே கொண்ட நாகம் தனக்குக் கொடுத்த ஆடையினை, ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ள இறைவனுக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தவன். வில்லைத் தாங்கிய, சந்தனம் பூசி உலர்ந்த வலிமை மிக்க தோளினை உடையவனும், அன்பான மொழிகளைப் பேசியவனுமாகிய ஆய் அண்டிரன் அள்ளிக் கொடுத்து அயராதவன் அய்கண்டபிரான் ஆய்' என்று அழைக்கப்படுகிறான். இவன், 'ஆர்வ நன்மொழி ஆய்' என்றும் அழைக்கப்படுகிறான்.
வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன. புலவர் பாடும் புகழுடையவனாய் விளங்கினான். அவன் காலத்தில் ஆய்குடி என்ற ஊர் சிறந்திருந்தது. இவன் மரபினர் ஆய்ப்பிரியன், ஆளற்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
ஆரம்பூண்டான், ஆர்சுத்தி, ஆரஞ்சுற்றி, ஆரமுண்டான், ஆரக்கண்ணியன், மாலையிட்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஆத்திமன். ஆத்திக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆரம்பூண்டான், ஆரஞ்சுற்றி, மாலையிட்டான் எனவும் வழங்கலாயிற்று. ஆத்திமன் காலத்தில் தான் மருத்துவ குணமிக்க ஆத்திமாலை சோழப்போர் மறவர்களுக்கு அணியும் வழக்கம் ஏற்பட்டது. ஆத்தூர், ஆத்தமங்கலம், ஆரம்பூண்டான்பட்டி, ஆத்தங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் ஆரம்பூண்டான், ஆர்சுத்தி, ஆரஞ்சுற்றி, ஆரமுண்டான், ஆரக்கண்ணியன், மாலையிட்டான் என்ற பட்டங்களையும் பெற்றனர்.
ஆக்காட்டரையன், ஆக்காட்டியன்.
அழிசிசோழன், ஆக்காடு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் ஆக்காட்டுராயன், ஆக்காட்டரையன், ஆக்காடுகொண்டான், ஆக்காடாண்டான், ஆக்காடுடையான், ஆக்காட்டுப்பிரியன், ஆக்காடாளி எனவும் வழங்கலாயிற்று. சிறந்த வீரமும் கொடையுமுடையவன். நக்கண்ணையார் முதலிய புலவர்களால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல்கள் நற்றிணையில் 87,169ம் பாடல்களாக உள்ளன. ஆக்கூர் என்னும் தேவார சிவ தலத்தையும்,ஆக்குடி என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டான்.இவன் மரபோர் ஆக்காட்டரையன், ஆக்காட்டியன். என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஆதனழிசியன், ஆதாழியன்.
ஆதனழிசிசோழன், ஆதனக்கோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் நன்பன். (பூதப்பாண்டியன் பாடிய புறநானூறு 71ம் பாடல் ஆதனழிசி பற்றி கூறுகிறது, புறநானூறு மூலமும் பழைய உரையும் பக்கம் 63, உ.வே. சாமிநாத ஐயர்) ஆதனக்குடி, ஆதமங்கலம், ஆதமழை, ஆதனப்பேட்டை, ஆதனூர் எனும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் ஆதனழிசியன், ஆதாழியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
ஆலத்தரையன், ஆவத்தயன், ஆவத்தியான், ஆவாத்தியான், ஆலங்கொண்டான், ஆலத்தொண்டான்,
ஆலத்தொண்டமான், ஆலம்பிரியன், ஆளம்பிரியன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான்.
ஆலசோழன், ஆலங்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆலத்தரையன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான், ஆலம்பிரியன், ஆலமாளி எனவும் வழங்கலாயிற்று. ஆலந்துறை, ஆலம்பொழில், ஆலங்குடி, ஆலங்காடு என்னும் தேவார சிவ தலங்களையும், ஆலத்தம்பாடி, ஆலத்தூர், ஆலத்தாங்குடி, ஆலங்காடு, ஆலம்பாக்கம், ஆலம்பள்ளம், ஆலம்பாடி, ஆலக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன்.இவன் மரபினர் ஆலத்தரையன், ஆவத்தயன், ஆவத்தியான், ஆவாத்தியான், ஆலங்கொண்டான், ஆலத்தொண்டான், ஆலத்தொண்டமான், ஆலம்பிரியன், ஆளம்பிரியன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
இ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
இடங்காப்பிறந்தான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இடைமன். இடங்கான் கோட்டை என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். முல்லைநில மக்களுக்கு இடையர் என்னும் பட்டம் வழங்கியவன். இவன் இடங்காப்பிறந்தான் என்றும் அழைக்கப்பட்டான். முல்லை நில மக்களுக்கு இடையர் என்ற பட்டத்தை அளித்தவனும் இவனே.இடைமருதூர், இடைவாய் (விடைவாய்) இடைக்குளம், இடைப்பள்ளி என்னும் தேவார சிவதலங்களையும், இடையாத்திமங்கலம், இடைக்கோரை, இடையூர், இடையகாடு, இடைக்குடி என்ற நகரங்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன்.இவன் வழி வந்தவர்கள் இடங்காப்பிறந்தான் என்ற பட்டம் பெற்றனர்.
இராயாண்டான், இராயாளன், இராயன், இராங்கியன்,இராயங்கொண்டான், இராயமுண்டான், இராயாளி, இராசாளி, இராயப்பிரியன், இராசப்பிரியன், இராங்கிப்பிலியன்.
முசுகுந்த மரபில் வந்த மன்னன் இராயன், இராயபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் இராயங்கொண்டான், இராயாளி, இராயப்பிரியன் என்றும அழைக்கப்பட்டான். இராயநல்லூர் (இராயந்தூர்), இராயன்பேட்டை, இராயமங்கலம், இராயங்குடி, இராயன்பட்டி (இராங்கியன்பட்டி) எனும் ஊர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மேற்கண்ட பட்டங்களை கொண்டனர்.
இராயத்தேவன்.
இளங்கொண்டான், இளமுண்டான்.
இளஞ்சேட்சென்னிசோழன், இளநகர் என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியகக் கொண்டவன். இவன் பெயர் இளங்கொண்டான், இளமுண்டான், இளம்பிரியன், இளமுடையவன், இளமாளி, இளநாடன் என்வும் வழங்கலாயிற்று. இளமர்( இளமதுக்கூர்) இளங்கடம்பனூர் என்னும் தேவார சிவதலங்களையும், இளமங்கலம், இளங்கார்குடி,இளங்காடு, இளவனூர்,இளையான்குடி என்னுமூர்கலையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இரபோரைப் பாதுகாத்தலையே நோன்பாகக் கொண்டவன். சேரனுடைய பாமுளூரை வெற்றி கொண்டு அதன் பக்கத்தில் இருந்த குன்றில் புலிக்கொடியை நாட்டி அதற்குச் சென்னிமலை என்றும் பெயரிட்டான். ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் இவனை புகழ்ந்து பாடியவை புறநானூற்றில் 10,2003ம் பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இவன் மரபோர் இளங்கொண்டான், இளமுண்டான் என்னும் பட்டங்கள் பெற்றனர்.
இருங்களன், இருங்கள்ளன்.
இறையாண்டான், இராரண்டான், இராயாண்டான். இராசாண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இறையமன். இறையூர் (மாறன்பாடி) என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் இறையாண்டான் எனவும் வழங்கும். இறையனூர், இறையன்சேரி என்னும் தேவார சிவதல நகரங்களையும், இறையாங்குடி, இறைமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் இறையாண்டான், இராரண்டான், இராயாண்டான் எனும் பட்டங்களை கொண்டனர்.
ஈ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
ஈழத்தரையன், ஈழங்கொண்டான், ஈச்சங்கொண்டான், ஈங்கொண்டான், ஈங்கொண்டான்.
ஈசசோழன் ஈங்கை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் ஈங்கொண்டான், ஈங்காண்டான் என்வும் வழங்கும். ஈங்கோய்மலை என்னும் தேவார சிவ தலத்தையும் ஈங்கூர், ஈஞ்சூர், ஈசனூர், ஈசனக்குடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் ஈங்கொண்டான் பட்டத்தை பெற்றனர். மேலும் இப் பட்டம் ஈழநாட்டிற்கும், ஈழத்துரையன், ஈழமுண்டான் ஈழம்கொண்டான் என்ற பட்டங்களுக்கும் தொடர் கொண்டவை எனவும் அறியப்படுகிறது.
உ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
உறந்தைராயன், உறந்தையுடையன், உறந்தையாண்டான், உறந்தையாளன், உறந்தையாளி, உறந்தையாட்சி, உறந்தைப்பிரியன், உறந்தைகொண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் உறந்தைமன். உறையூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் உறந்தைராயன், உறந்தைகொண்டான், உறந்தைபிரியன் எனவும் வழங்கும். உறந்தூர் என்னும் ஊரையும் உருவாக்கியவன் இவன். இவன் வழிவந்தவர்கள் உறந்தைராயன்,
உறந்தையுடையன், உறந்தையாண்டான், உறந்தையாளன், உறந்தையாளி,
உறந்தையாட்சி, உறந்தைப்பிரியன், உறந்தைகொண்டான் என்னும் பட்டம் சுமந்தனர்.
உழுவுடையான்
உழுவாண்டான்
உழுவண்டான்
உழுவாளன்
உழுவாளி
உழுவாட்சி
உழுப்பிரியன்
உழுக்கொண்டான்
உய்யக்கொண்டான்
உத்தமாண்டான்
உத்தமண்டான்
உத்தமங்கொண்டான்
உத்தமுண்டான்
உத்தமப்பிரியன்
உலகுடையன், உலகுடையான், உலகங்காத்தான், உலகுகாத்தான், உலகாண்டான், உலயன், உலகுய்யன்.
உலகநாதசோழன், உலகுண்டம்(உலயக்குண்டம்) என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் உலகாண்டான், உலகங்கொண்டான், உலகுடையான், உலகங்காத்தான் எனவும் வழங்கும். உலகங்காத்தான்பட்டி என்ற ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் உலகுடையன்,உலகுடையான், உலகங்காத்தான், உலகுகாத்தான், உலகாண்டான், உலயன், உலகுய்யன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஊ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
ஊமத்தன்.
ஊமத்த நாட்டை ஆண்ட சிற்றரசன், இவன் பெயர் ஊமத்தரையன், ஊமப்பிரியன் எனவும் வழங்கும். இவன் மரபோர்க்கு ஊமத்தரையன், ஊமத்தயன், ஊரத்தியன், ஊமைப்பிரியன், ஊரான்பிலியன், ஊமத்தநாடன், ஊரத்திநாடன் என்னும் பட்டங்கள் வழங்குகின்றன.
ஊமத்தரையன்
ஊமத்தயன்
ஊரத்தியன்
ஊமைப்பிரியன்
ஊரான்பிலியன்
ஊமத்தநாடன்
ஊரத்திநாடன்
எ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
எத்திப்பிரியன்
என்னாட்டுப்பிரியன்
ஏ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன், ஏனாதிநாட்டுப்பிரியன், ஏத்திப்பிரியன்.
ஏனாதி திருக்கிள்ளிசோழன், ஏனாதி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஏனாதிகொண்டான், ஏனாதியாண்டான், ஏனாதிப்பிரியன், ஏனாதியுடையான், ஏனாதியாளி எனவும் வழங்கும்.சிறந்த வீரமும் கொடையுமுடையவன். ஏனாதிமங்கலம், ஏனங்குடி, ஏனனூர், ஏனாதிகுடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இச் சோழ மன்னன் கோனாட்டு எறிச்சிலூர் மாடவன் மதுரைக்குமரனார் என்னும் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல் புறநானூற்றில் 167ம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இவன் மரபினர் ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன், என்னும் பட்டங்களை பெற்றனர். மேலும் இப்பட்டங்கள் படைத் தலைவர்களுக்கு உரியதாக கருதப்பட்டுள்ளது.சங்க காலத்தில் ஏனாதி பட்டம் என்பது அரசன் தன் படைத்தலைவன் மீது கொண்ட நன்மதிப்பினை உணர்த்த வேண்டி தன் பெயர் பொறித்த கணையாளி ஒன்றை அளிப்பதாகும். சங்ககாலத்தில் மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்குட்டுவன் ஆகியோர் ஏனாதிபட்டம் பெற்ற அரசர்களாவார்கள். ஏனாதி சாத்தஞ் சாத்தனார் ஏனாதி பட்டம் பெற்ற புலவராவார். இதன் மூலம் இப் பட்டங்கள் சங்ககாலம் முதல் வழங்கிய பட்டங்கள் என்று அறியமுடிகிறது.
ஐ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
ஐரைப்பிரியன், ஐயப்பிரியன், (அயிரப்பிரியன், அய்யப்பிரியன்)
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் ஐவசோழன் (அய்வசோழன்) ஐயனாபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஐயப்பிரியன்
ஐயங்கொண்டான், ஐயாண்டான், ஐயுடையன், ஐயாளி எனவும் வழங்கப்பட்டது. ஐவூர், ஐயூர், ஐவனல்லூர், ஐயன்பேட்டை (அய்யம்பேட்டை) என்னும் ஊர்களையும் உருவாக்கியரசாண்டவன். ஐயனாறு, ஐயவையனாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கியவன். இவன் மரபோர் ஐரைப்பிரியன், ஐயப்பிரியன் (அயிரப்பிரியன் அய்யப்பிரியன்) என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஐந்நூற்றுப்புரையர்.
செம்பிய சக்ரவர்த்தி காலத்தில் அவர்களுடைய பணிமக்களாக காவல் பணி புரிந்தமையால் இப்பட்டம் கிடைத்துள்ளது.
ஒ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
ஒளியுடையான், ஒளியாண்டான், ஒளியாளன், ஒளியாளி, ஒளியாட்சி, ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் (ஒண்டிப்பிளியன்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஒளிமன். ஒளிகோட்டை (உள்ளிக்கோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அறிவிலும், புகழிலும், கொடையிலும் மிகச்சிறந்தவன். இவன் ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். ஒளியூர், ஒளிமங்கலம், ஒளிக்குடி, ஒளிக்கடை (உள்ளிக்கடை) ஒளிமதி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் (ஒண்டிப்பிளியன்) எனும் பட்டங்களை பெற்றனர்.
ஒமசையன்
ஒசையன்
ஒற்றையன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஒற்றைமன். ஒற்றியூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.ஒற்றகுடி, ஒற்றன்காடு, ஒற்றனூர், ஒற்றமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் ஒற்றையன் எனும் பட்டம் கொண்டனர்.
ஓ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஓனாயன்
ஓமாமுடையன்
ஓடம்போகி, ஓட்டம்பிடுங்கி, ஓட்டம்பிடுக்கி, ஓட்டம்பிடிக்கி.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் ஓடம்போகிசோழன். ஓடம்போகி என்னுமாற்றையும், ஓடாசசேரி, ஓட்டப்பிடாகை, ஓட்டக்குடி, ஓட்டத்தட்டை,ஓட்டப்பிடாரம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் ஓடம்போகி, ஓட்டம்பிடுங்கி, ஓட்டம்பிடுக்கி, ஓட்டம்பிடிக்கி என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஓமாமரையன், ஓமசையன், ஓமனாயன், ஓமாந்தரையன், ஓந்தரையன்,ஓந்திரியன், ஓமாம்பிரியன், ஓயாம்பிலியன்.
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் ஓமாம்புலிமன், ஓமாம்புலியூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் ஓமாந்தரையன், ஓமாமரையன், ஓமாம்பிரியன், ஓமாமுடையான் என்றும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் மேற்கண்ட பட்டங்களை பெற்றனர்.
ஓரி.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஓரி.வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். ஓத்தூர் என்னும் தேவார சிவதலத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். ஓரியூர், ஓரிக்குடி, ஓரிமங்கலம், ஓரிச்சேரி எனும் ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன்.
ஓரி வில்லாளரிற் சிறந்த வீரன்; சிறந்த கொடையாளன். வல்வில் ஓரி என்று பண்டைப் புலவர்கள் அவனைப் பாராட்டினார்கள். கோவை நாட்டுப் பவானி வட்டத்தில் ஓரிசேரி என்னும் ஊர் உள்ளது. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவன் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்படுவான். வன்பரணர் இவனைத் தன் பாடல் (புறநானூறு 153) ஒன்றில் 'ஆதன் ஓரி' என்று குறிப்பிடுகிறார். இதன் மூலம் இவன் தந்தை பெயர் ஆதன் என்பதை அறியலாம்.
இவன் கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரியோடு போரிட்டு மாண்டான். நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான். நற்றிணையில் இவன் பரணரால் சிறப்பிக்கப்பட்டுள்ளான். புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் உள்ளன.
மிக வேகமாகச் செல்லும் ஓரி என்றே பெயர் பெற்ற குதிரையை உடையவன். ஓரி இசையிலும் நாட்டியத்திலும் மிகமிக ஈடுபாடு கொண்டவன். அவனிடம் வந்த கூத்தர்களுக்கு பொன்னினால் குவளைமலர் செய்து வெள்ளி நாரிலே தொடுத்து மாலையாக அணிவித்து ஏராளமான செல்வத்தை அளிப்பான். நாட்டியம் புரிவோருக்கும் இசை வாணருக்கும் ஏராளமான செல்வத்தைக் கொடுத்ததாலேயே கடையேழு வள்ளல்களில் ஒருவனாக புலவர்களால் பாடப்பட்டான். அவன் கொடுத்த செல்வத்தால் கூத்தரும் விறலியரும் ஆடலையும் பாடலையும் கூட மறந்து விடுவாராம். அவன் மீது ஒரு வண்ணம் இசை பாடினான் ஒரு பாணன். உடனிருந்த விறலியர் யாழ் இசைத்தனர். சிறுபறையையும் பெருவங்கியம் என்னும் கருவியையும் இசைத்தனர். அவனை 21 பாடல் துறைகளிலும் பாடல் இசைத்துப் பாடினராம். பாணன் "அப்பேர்பட்ட பெருமகனே" எனப் பாட தன் பெயர் கேட்க நாணி ஏராளமான செல்வம் கொடுத்தானாம். ஆதலால் மிகச் சிறந்த புரவர்களாகிய கபிலர், பரணர், பெருஞ்சித்திரனார், கல்லாடனார் போன்றோர் அவனைப் பாடினர். அவனது கொல்லி மலையை "ஓரி கொல்லி" என்றும் பாடினர். இவ்வளவு புகழ்வாய்ந்த ஓரி ஏனோ சேரனோடு பகமை பூண்டான். ஒளவைப் பிராட்டிக்கு நெல்லிக்கனி கொடுத்து இறவாப் புகழ் கொண்டானே அதியமான் நெடுமான் அஞ்சி. அவன் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். அது கொல்லி மலைக்கு வடக்கே 60 கல் தொலைவில் உள்ளது. அதியமானும் சேரனுடன் பகைமை பூண்டான். அதியமான், ஓரி, சோழன் பாண்டியன் ஆகியோர் கூட்டாக இணைந்து சேரல் இரும்பொறையை ஒடுக்க விரும்பினர். அதனால் இருதரப்பினருக்கும் கடும் போர் மூண்டது. முதலில் மலையமான் திருமுடிக்காரி கொல்லி மலைமீது படையெடுத்து ஓரியோடு போரிட்டான். பேராற்றல் மிகுந்த காரியோடு ஓரியால் சமமாகப் போரிட முடியவில்லை. போரில் ஓரியைக் கொன்று கொல்லி மலையைக் கைப்பற்றி சேரனிடம் ஒப்படைத்தான் காரி. வல்வில் ஓரி மரபினர் ஓரி எனும் பட்டம் கொண்டனர்.
க வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
கருவுடையான், கருவாண்டான், கருவாளன், கருவாளி, கருவாட்சி, கருப்பிரியன்,
கருக்கொண்டான், கருப்பூண்டான் கருப்பையன், கருப்பட்டியன், கருவூரான் கருப்பூரான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கருப்பைமன். கருவூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கருவூரான், கருக்கொண்டான் எனவும் வழங்கப்பட்டது. கருங்குலம், கருவாக்குரிச்சி, கருப்பூர், கருப்புக்களர், கருவிலி, கருப்பறியலூர், கருக்குடி, கருகாவூர், கருப்பட்டிமூலை, கருங்கண்ணி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் கருப்பூண்டான், கருப்பட்டியன், கருப்பூரான் எனும் பட்டங்களை பெற்றனர்.
கஞ்சராயன், கஞ்சன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கஞ்சமன். கஞ்சனூர் என்னும் தேவார சிவதல நகரையுண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கஞ்சராயன் எனவும் வழங்கப்பட்டது. இவன் மரபோர் கஞ்சராயன், கஞ்சன் எனும் பட்டங்களை பெற்றனர்.
கரும்பூரான்
கரும்புடையான்
கரும்பாண்டான்
கரும்பாளன்
கரும்பாளி
கரும்பாட்சி
கரும்புகொண்டான்
கன்னாண்டான், கன்னாளன், கன்னாளி, கன்னாட்சி, கன்னப்பிரியன், கன்னகொண்டான், கன்னதேவன்,
கன்னமுடையன், கன்னப்படையன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கன்னன். கன்னபுரம் என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். கன்ணாண்டான், கன்னகொண்டான், கன்னமுடையான், கன்னப்பிரியன், கன்னாளி எனும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். கன்றாப்பூர் (கன்னாப்பூர்) கன்னாரப்பேட்டை, கன்னந்தகுடி,கன்னக்கொடையான் எனும் ஊர்களையும், கன்னாறு என்னும் காட்டாற்றையும் உருவாக்கி ஆட்சி புரிந்தான். இவன் மரபு வம்சத்தினர் கன்னமுடையன், கன்னப்படையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
கலயன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சாய்மன். சாயக்கோட்டை (கலயநல்லூர்) என்னும் தேவார சிவதலத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். மேலும் சாய்க்காடு, சாய்க்களூர் என்னும் சிவதலங்களையும் உருவாக்கியவன். இவன் மரபு வம்சத்தினர் கலயன் என்ற பட்டம் பெற்றனர்.
கரம்பையன், கரம்பைகொண்டான், கரமுண்டார்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன்.கரம்பைக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். கரவீரம், கரபுரம் என்னும் தேவாரசிவ தலங்களையும் கரம்பை, கரம்பையம், கரம்பைகுடி, கரஞ்சிப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கரம்பையன், கரம்பைகொண்டான், கரமுண்டார் எனும் பட்டங்களை சுமந்தனர்.
கத்தூரியன், கத்தரிகொண்டான், கத்தூரிமுண்டான், கத்தரியன், கத்தூரியன், கத்தரிநாடன்,
கத்திநாடன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கத்தரிமன். கத்தரி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் கத்தரிகொண்டான், கத்தரிநாடன் எனவும் வழங்கும். கத்தரிமங்கலம், கத்தரிக்குடி, கத்தரிக்காடு, கத்தரிப்புலம், கத்தரிக்கொல்லை என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் கத்தரிகொண்டான், கத்தூரிமுண்டான், கத்தரியன், கத்தூரியன், கத்தரிநாடன், கத்திநாடன் என்ற பட்டங்களை பெற்றனர்.
களன்
களாவன்
களத்துவென்றான்
கலியன், கலியாட்சி, கலிச்சி, கலிச்சியன், கலிக்கொண்டார், கலிப்பிரியர், கலியனான், கலியராயன்,
கலியரையன், கலியாளியன், கலிவுடையான், கலிராயன்.
கலிகாமசோழன் கலியாணபுரம் என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் கலியன், கலிராயன், கலியரையன், கலியாண்டான், கலிகொண்டான், கலிப்பிரியன், கலியுடையான்,கலியாளி,கலியாட்சி எனவும் வழங்கலாயிற்று. எதிரிகளுக்கு துன்பம் விளைவிக்கும் ஆற்றல் பெற்றவன், கலிக்காமூர் என்னும் தேவார சிவ தலத்தையும் கலியாணோடை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் பலகாலம் தன்னை கலியன் என்று அழைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. துன்பம் நிறைந்த காலத்தை கலிகாலம், கலியுகம் என்பதும் தெறிந்ததே.கலிகாமசோழன் மரபோர் கலியன், கலியாட்சி, கலிச்சி, கலிச்சியன், கலிக்கொண்டார், கலிப்பிரியர், கலியனான், கலியராயன், கலியரையன், கலியாளியன், கலிவுடையானென்னும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டமுடையோர் தஞ்சை மாவட்ட நீடாமங்கலம், சித்தமல்லி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலியராயன்பட்டி, கரம்பக்குடி, கீரனூர், இலந்தைவாடி, பிலாவிடுதி, குலத்திரான்பட்டுஎன்னுமூர்களில் அதிகமாக வாழுகின்றனர்.
கடம்பன், கடம்பையன், கடம்பராயன், கடம்பரான், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான்,
கடம்பைப்பிரியன், கடம்பையுடையான், கடம்பையாளியான்.
கடம்பசோழன், பெருங்கடம்பனூர் என்னும் தேவார சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் கடம்பன், கடம்பராயன், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையவன், கடம்பையாளி என்வும் வழங்கலாயிற்று. குழித்தண்டலை, கடம்பன்துறை, கடம்பூர், கடவூர், கடவூர்மயானம் என்னும் தேவார சிவ தலங்களையும், கடம்பர்வாழ்க்கை, கடம்பன்குடி, கடலங்குடி என்னும் ஊர்களையும், கடலாழி என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் கடம்பன், கடம்பையன், கடம்பராயன், கடம்பரான், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையான், கடம்பையாளியான் எனும் பட்டங்களை பெற்றனர்.
கருடி, கரடி.
கண்டன், கண்டராயன், கண்டவராயன், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி, கண்டப்பிரியன், கண்டர்பிரியன்,
கண்டப்பிள்ளை, கடாப்பிள்ளை.
கண்டர்கிள்ளி சோழன், கண்டர்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கண்டன், கண்டராயன், கண்டப்பிரியன் எனவும் வழங்கலாயிற்று. கண்டதேவி என்னும் தேவார சிவ தலத்தையும் கண்டமங்கலம், கண்டர்மாணிக்கம், கண்டனூர், கண்டராயன்பட்டி, கண்டர்குடி (கண்ணுகுடி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் கண்டன், கண்டராயன், கண்டவராயன், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி, கண்டப்பிரியன், கண்டப்பிள்ளை, கடாப்பிள்ளை.என்னும் பட்டங்களை பெற்றனர்.
கங்கன்
கங்கராயன்
கங்கைநாடன்
கங்கநாடான்
களப்பாளன்
களப்பளான்
களப்பாளி
களப்பாடி
களந்தையாண்டான்
களந்தண்டான்
களமுடையன்
களக்குடையன்
கக்குடையன்
களக்கடையன்
கன்னகுச்சிராயன்
கலிங்கராயன்
கச்சிராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கச்சிமன். கச்சி தேவார சிவதல நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கச்சிராயன் எனவும் வழங்கும். கச்சூர், கச்சியூர், கச்சையூர் என்னும் தேவார சிவதலங்களையும், கச்சிக்குடி, கச்சிமங்கலம் (கச்சமங்கலம்) காஞ்சிப்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கச்சிராயன் எனும் பட்டத்தையும் சுமந்தனர்.
கண்டியன், கண்டியர், இராசகண்டியன், இராசகண்டியர்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இராசகண்டியன். திருக்கண்டியூர் என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். சின்னக்கண்டியூர், கண்டியன் காடு, கண்டியன்பட்டு (கண்டிதன்பட்டு) கண்டியன்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.
இவர்களின் திருக்கண்டியூர் அரண்மனை சோழநாட்டு நித்தவிநோத வளநாட்டு கிழார்க் கூற்றத்து ஆயிரத்தளி அரண்மனை என்ற பெயருடையது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1244) சோழர்களை வென்று இந்த அரண்மனையில் தான் முடிசூடிக்கொண்டான் என்பது வரலாறு.
இராசராச சோழன் ஈழத்தை வென்று பண்டைய தலைநகரான அணுராதபுரத்தை அழித்த பின் சனநாதமங்கலம் என்ற புதிய ( இன்றைய பொலன்னருவா) தலைநகரை உருவாக்கினான். நாக நாடு, வன்னி, திரிகோணமலை, பொலன்னருவா மற்றும் அணுராதபுரம் போன்ற இடங்களே சோழ ஆட்சிக்கு உட்பட்டிருந்தது (மகாவம்சம்) இக் கால கட்டத்தில் இலங்கையின் தென்பகுதி சோழனின் ஆட்சிக்கு உட்படவில்லை. தொடர்ந்து சிங்கள மன்னர்களின் ஆட்சியில் இருந்ததால் இடையூராக இருந்தது. இந்நிலையை மாற்றி இலங்கை முழுவதும் சோழனின் ஆட்சி அமைய போர் படை அமைத்து தலைமை தாங்கி வெற்றி கண்டவன் திருக்கண்டியூர் இளவரசன் இராசகண்டியன்.
இதன்பின் இலங்கையின் மையப்பகுதியில் புதிய தலைநகரை உருவாக்கி இராச கண்டியன் மாநகரம் என்று பெயரும் சூட்டப்பட்டு சோழனின் பிரதிநிதியாக ஆட்சி ஏற்றான்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராச கண்டியன் மாநகரம் கண்டி என்ற பெயருடன் ராஜதானியகவே திகழந்தது. இன்றும் சிங்கள மக்கள் கண்டியை மாநுவர என்ற பெயர் கொண்டே அழைக்கின்றனர். மாநுவர என்றால் சிங்கள மொழியில் தலைநகரம், மாபெரும் நகரம் அல்லது ராஜதானி என்று பொருள் படும்.
உலக நாடுகளில் முதன் முதலில் சோழனின் ஆதிக்கத்தை ஏற்படுத்திய பெருமை இராசகண்டியனுக்கே உரியது. இதனை பெருமைப்படுத்தவே இராசராச சோழன் இராசகண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தை தான் ஏற்றான் என்பதும் வரலாறு.
(செம்பியன் கண்டியூர் அகழாய்வு அறிக்கை 2007 - 2008)
தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை.சென்னை.
செம்பியன் கண்டியூர் அகழாய்வு.
செம்பியன் கண்டியூர் குறுநில மன்னன்.
செம்பியன் என்றால் மாசற்ற சொக்கத் தங்கம் போன்றவன் என்று பொருள். கண்டியர்கள் மன்னர்களாகவும் அமைச்சர்களாகவும், படைத்தளபதிகளாகவும், வேளீர் போன்று குறுநில மன்னர்களாகவும் இருந்தவர்கள்.என்வே கண்டியர் + ஊர் என்ற பொருளில் வழங்கிய பகுதி கண்டியூர் என்றாகி செம்பியன் பட்டமும் சேர்ந்து செம்பியன் கண்டியூர் என்று வழங்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் குத்தாலத்திலிருந்து இரண்டு கி.மி தொலைவில் திருமணஞ்சேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது செம்பியன் கண்டியூர் என்ற இன்றைய சிற்றுர், இவ்வூர் காவிரி ஆற்றின் கிளை நதியான விகிரமன் ஆற்றின் மேற்கரையில் அமைந்துள்ளது. இவ்வூரின் அரண்மனையும், சிவன் கோயிலும் அதன் கிழக்கில் அமைந்திருந்த தெருவும் தற்போது அழிந்து விட்டன. இன்றும் அப்பகுதி படையாட்சி தெருத் திடல் என்று வழங்கப்படுகிறது. பிற்கால சோழர் ஆட்சியின் போது இவ்வூரில் செம்பியன் கண்டியூர் ஸ்ரீநக்கன் கண்டியர் என்கிற குறுநில மன்னன் ஆண்டுள்ளான். இவன் கண்டியூரைச் சுற்றியுள்ள 18 ஊர்களுக்கு தலைவனாக இருந்துள்ளான். செம்பியன் கண்டியூர் அருகில் உள்ள வில்லிய நல்லூர் என்ற இடம் விற்போர் பயிற்சித் தளமாகவும் இருந்துள்ளது. மேலும் செம்பியன் கண்டியூருக்கு மேற்கே உள்ள பெரிய திடலும், பெரிய குளமும் விற்போர் வீரர்கள் தங்கியிருந்த இடமாகவும் கருதப்படுகிறது. செம்பியன் கண்டியூருக்கு தெற்கே 12 கி.மீ. தொலைவில் செம்பியன் கண்டியூர் ஸ்ரீநக்கன் கண்டியன் பெயரால் ஸ்ரீகண்டர்புரம் மற்றும் நக்கம்பாடி போன்ற ஊர்களும் அமைந்துள்ளன என்ற விபரமும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
செம்பியன் கண்டியூருக்கு கிழக்கே இரண்டு கி.மீ தொலைவில் திருவேள்விக்குடி எனும் ஊர் சங்ககாலத்தியச் சோழப் பெருவழியில் அமைந்துள்ளது.சோழ் அரசி செம்பியன் மாதேவியார் காவிரியின் வடகரையில் உள்ள திருவேள்விக்குடியில் ஒரு சிவன் கோயில் கட்டியுள்ளார்.இக் கோயிலில் செம்பியன் மாதேவியாரும் அவர் கணவர் கண்டராதித்த சோழனும் சிவ பெருமானுக்கு வேள்வி செய்து வழிபாடுகள் நடத்தி உள்ளனர். அக்காட்சி கோயிலின் மகா மண்டபத்தில் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறது.
மேலும் இக் கோயிலில் 60க்கும் மேற்பட்ட சோழர்காலக் கல்வெட்டுகள் (கி.பி. 8 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை) இடம் பெற்றுள்ளன. இக் கோயில் கல் வெட்டில் தான் செம்பியன் கண்டியூர் என்ற பெயர் இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறது. சோழர் காலத்திற்கு முன்புள்ள சான்றுகள் த்ற்போது அகழாய்வு மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளன.
சேகண்டிருப்பு - சேண்டிருப்பு.
இதுவும் செம்பியன் கண்டியூர் போல வில்லியநல்லூரின் உட்கிராமமாக உள்ளது. செம்பியன் + கண்டியர் + இருப்பு என்பது சுருங்கி சேக்கண்டிருப்பு என்றாகி தற்போது சேண்டிருப்பு என்று வழங்கப்படுகிறது.
வானாதிராஜபுரம்.
செம்பியன் கண்டியூருக்கு அருகில் மயிலாடுதுறை வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் உள்ளது வானாதிராஜபுரம். இங்கு சோழர் காலக் கோயில்கள் இருந்து இடிந்ததற்கான தடய்ங்கள் நிறையவே உள்ளன. அக்கால உடைந்த செங்கல் கட்டடம் உள்ளன. வானதிராயர்கள் (கள்ளர் குல பட்டம் கொண்டவர்கள்) இங்கு அதிகமாக வாழ்ந்து வருவதால் ஊரும் அப்பெயரில் வானாதிராயர்புரம் என்று இருந்து பிறகு வானாதிராஜபுரம் என்று வழ்ங்கப்படுகிறது
செம்பியன் கண்டியூரில் தொல்லியல் துறையின் தொழில்நுட்ப அலுவலர்கள் கல்வெட்டு முனைப்புத்திட்டத்தின் கீழ் பிப்ரவரி 2006இல் ஆய்வு தொடரப்பட்டது. களஆய்வில் இரண்டு புதிய கற்கால கைக்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் ஒன்றில் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட (கி.மு.1500) மொஹஞ்சதாரோ, ஹரப்பா பண்பாட்டுக் கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆய்வில் கிடைத்த அரிய தொல்பொருட்களின் மூலம் காவிரிக்கரையில் மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்களின் நாகரீகம் சிறப்பாக இப்பகுதியில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
கண்டியர் என்ற பட்டமுடைய கள்ளர் இனமக்கள் தஞ்சை மாவட்ட நந்தவனம்பட்டி,
முத்துவீரக்கண்டியன்பட்டி, மனையேறிபட்டி, ஆவாரம்பட்டி, புங்கலூர், கக்கரை, பின்னையூர், மண்டலக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஆர்சுற்றிப்பட்டு, மன்னார்குடி பைங்காநாடு, தலையாமங்கலம், எடமேலையூர், வடுவூர், திருக்களர், பெருகவாழ்ந்தான், கருவாக்குறிச்சி, சொக்களாவூர், கீராலத்தூர்,சோழபாண்டி, பட்டுக்கோட்டை ஆவிக்கோட்டை, பெரியகோட்டை, அதிராம்பட்டிணம், திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, மகாராசபுரம், புதுக்கோட்டை, கீழக்கரைமீண்டார்கோட்டை, புதுக்கோட்டை விடுதி, பாச்சுக்கோட்டை,கீழாத்தூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்.
இராசகண்டியன், இராசகண்டியர் என்று உருமாறி இன்று கண்டியர் என்று அழைக்கப்படுகின்றனர்.
கா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்.
கார்யோகன்
கார்யோகராயன்
காருடையன்
காராண்டான்
காராளன்
காராட்சி
காரையாட்சி, காரைக்காச்சி.
மாந்தாதா மரபில் வந்த மன்னன் கார்மன், காரைக்கோட்டை எனும் நகரத்தை இராசதானியாகக் கொண்டவன். காரைவாயில் (காராயில்), காரைமேடு(கழிப்பாழை), காரைக்காடு, காரைக்கால், காரைப்பாக்கம், காரைபட்டு, காரைப்பட்டி, காரைக்குடி, காரைப்பள்ளம், காரப்பன்காடு, காரைமங்கலம், என்ற ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
கார்ப்பிரியன்
கார்கொண்டான்
காசிராயன், காசிநாடான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காசிமன். காசாங்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். தென்காசி, சிவகாசி என்னும் பிரபலமான சிவதலங்களையும், காசாங்காடு என்னும் ஊர்களையும் உண்டு பண்ணி அரசாண்டவன்.இவன் மரபினர் காசிராயன், காசிநாடான் எனும் பட்டங்களை பெற்றனர்.
காவலக்குடியன், காலாக்குடியன், காவாளி, காவாலி, காவாடி, காலாடி.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காவலன். காவலகுடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் காவலகுடியன், காவாளி எனவும் வழங்கும். காலம் (கைச்சினம்) என்னும் தேவார சிவதல நகரத்தையும், காவளூர், கானூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் காவலக்குடியன், காலாக்குடியன், காவாளி, காவாலி, காவாடி, காலாடி எனும் பட்டங்களை கொண்டனர்.
காங்கயன், காங்கியன், காங்கேயன்.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த காங்கமசோழ சக்ரவர்த்தி. காங்கயம் (காங்கயன்பட்டி) என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் காங்கயன் எனவும் வழங்கும். காலனுக்கு இது வழக்கென்று போதித்தவன் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்) இவன் மரபோர் காங்கயன், காங்கியன், காங்கேயன் எனும் பட்டங்கள் கொண்டனர். வீரசோழப் பெரிய காங்கேயன் என்பவன் சோழ வல்லரசில் பெரும் வீரனாக விளங்கியுள்ளான். இவன் பெரியகுலத் தலைவன், கங்கை முதல்வன் எனவும் அழைக்கப்பட்டுள்ளான். இவன் கொங்குசோழ மன்னர்களின் முதல்வனும் ஆவான். இவன் குடியோறிய இடம் காங்கேயம் எனவும் அழைக்கப்படுகிறது. நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் கோயில் கல்வெட்டு ஒன்றில் ஆதி சண்டிகேசுவரர் கோயிலுக்கு நிலம் விற்றுக்கொடுத்த தகவலும் அதில் கையெழுத்திட்டுள்ள அதிகாரிகளுள் ஒருவனாக காங்கேயன் இடம் பெற்றுள்ளான். இவன் வழி வந்தோர் சோழர் படைதலைவராகவும், அதிகாரியாகவும் கொங்குநாட்டில் பணியாற்றி உள்ளனர். இப்படம் முடையோர் தஞ்சை மாவட்ட காங்கேயன்பட்டியில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
காவிரிநாடன், காவிரிவெட்டி.
சங்ககால சோழர்களுள் மிகவும் புகழ்பெற்றவன் கரிகால் சோழன். இவனது காலம் கி.மு 60 முதல் கி.மு 10 வரை என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சங்ககால இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் இடம்பெறும் பட்டினைப்பாலை, பொருநாற்றுப்படை ஆகிய இரண்டும் கரிகாலனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டவை. இச்சிறப்பினை வேறு சோழ அரசர்கள் எவரும் பெற்றதில்லை. வெள்ளப்பெருக்கால் ஏற்படும் சேதங்களைத் தவிர்கவும் வேளாண்மையை பெருக்கவும், நீர்பாசன வசதிகளை செய்து தரும் பொருட்டு தன்னுடன் போரிட்டு தோற்றுப்போன இலங்கை வேந்தனின் 12000 படை வீரர்களை பயன்படுத்தி திருச்சி திருவரங்கத்திற்கு மேற்கே காவிரி ஆற்றுக்கிடையே 1080 அடி நீளமும், 40 முதல் 60 அடிவரை அகலமும் கொண்ட கல்லணையும் கட்டி காவிரியின் கரைகளை உயர்த்திய பெருமையும் பெற்றவன் கரிகாலன். இச்செய்தியை பிற்கால இலங்கை நூள்களும், கலிங்கத்துப்பரணியும்,சிலப்பதிகாரமும்,தெலுங்குச் சோழன் புன்னியகுமாரனின் மேலப்பாடு கல்வெட்டும் குறிப்பிடுகின்றன.வேறு சங்ககால அரசர்கள் எவரும் வேளாண் விரிவாக்கத்திற்கு அணை கட்டியதாக சான்றுகள் இல்லை. வட இந்திய அரசுகளின் மீது போர் தொடுத்து மகத, வச்சிர, அவந்தி நாட்டு வேந்தர்களையும் வென்று இமயத்தில் புலிக்கொடியை பறக்கவிட்டு பின்பு வாகைப் பறந்தலையில் ஒன்பது வேளிர்குல அரசர்களையும், நாகப்படினம் பகுதியை சார்ந்த நாகர்களின் பன்றி நாட்டையும், பெண்ணை ஆற்றுக்கரை குறும்பர்களையும், ஆயர்தலைவன் இளங்கோ மற்றும் தொண்டை நாட்டையும் வென்று காடுகளை அழித்து வேளான் நிலங்களாகவும் மாற்றிய பெருமை உடையவன் கரிகால் சோழன். இவனது ஆட்சிக்காலத்தில் சோழ அரசு வடக்கே வடபெண்ணை, தெற்கே குமரிவரை பரவியிருந்தது. இதனால் இவன் கரிகால் பெருவளத்தான், காவிரிநாடன் எனும் சிறப்புப் பெயர்களை பெற்றிருந்தான். கள்ளர் குலத்தில் காவிரிநாடன் எனும் பட்டப்பெயர் இவன் சந்ததியினருக்கு வழங்கிவருவதையும் அறியமுடிகிறது. இப்பட்டம் தான் கள்ளர் குல பட்டங்களில் மிகவும் பழமை வாய்ந்தது என்று அறியவும் முடிகிறது.
காவெட்டி
காடுவெட்டி.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காடுவெட்டி. காடுகளை வெட்டி அழித்து நகரங்களை உருவாக்கியவன். காட்டூர், மேலக்காட்டுப்பள்ளி, கீழைக்காட்டுப்பள்ளி என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் மரபினர் காடுவெட்டி எனும் பட்டம் கொண்டனர். காடவராயன் என்ற பட்டத்துடன் தொடர்புடைய பட்டம் காடுவெட்டி என்றும், காடுவெட்டி என்பது பல்லவரது பெயராக சாசனங்களிலும் வருகிறது. கங்கவேந்தர்களின் செப்பேடுகள் காஞ்சி மாநகரத்தை காடுவெட்டிகள் ஆண்டதாக கூறுகின்றன. காடுவெட்டி பேரரையன், காடுவெட்டி தமிழ் பேரரையன், விடேல் விடுகு காடுபட்டித் தமிழ் பேரரையன் என்போர் பல்லவ பெரு வேந்தர்களின் கீழிருந்த பல்லவ சிற்ரசர்கள், தலைவர்களென்றும் சுட்டுகின்றன. பழைய திருவிளையாடல் புரானத்தில் பல்லவ குல காடுவெட்டி என்பவனின் பெருமையும் அவனது பக்திச் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. காடுவெட்டி பட்டமுடையோர் புதுக்கோட்டை மாவட்டத்தில் காடுவெட்டிவிடுதி, பாலக்குடிப்பட்டி, உஞ்சைவிடுதி, அரிமளம் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். காடுவெட்டிகள் சோழர் மற்றும் பல்லவர் மரபினர் என்றும் அறிய முடிகிறது.
காடவராயன்.
பல்லவ மரபு வழி வந்தவர்கள். தொண்டை மண்டலத்தில் காடுகளை அழித்து நாடு, நகரங்களை உருவாக்கி அரசாண்டவர்கள். சங்க இலக்கிய சான்றுகளால் அறியப்படும் முதல் காடவன் ஐயடிகள் என்னும் சைவ அடிகளாவார். இவரை சுந்தரமூர்த்தி நாயனார் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகிறார். நம்பியாண்டார் நம்பி இவரை பக்திக்கடல் ஐயடிகளாகின்ற நம்பல்லவனே என்று கூறுகிறார். சேக்கிழார் இவரை பல்லவர் தம்குலமரபின் வழித்தோன்றல் என்றும் கூறுகின்றனர். பிற்கால சோழர் அரசியலில் காடவச் சிற்றரசர்களின் பங்கு மிகப்பெரியதாக இருந்துள்ளது. எழிசை மோகன் ஆட்கொல்லியான குலோத்துங்கச் சோழக் காடவராயன் (கி.பி 1129), கடலூர் ஆளப்பிறந்தான் மோகனாகிய இராசராச காடவராயன் (1136), செஞ்சியர்கோன் காடவன் (1152) என்போர் அதிகாரிகளாகவும்,சிற்றரசர்களாகவும் சோழர் ஆட்சியில் பணிபுரிந்துள்ளனர். காடவராயர் என்ற பட்டம் எவ்வித திரிபும் இன்றி இன்றும் வழங்கிவருவது குறிப்பிடத் தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் காடவராயன்பட்டி, நமல்பட்டி, தஞ்சை மாவட்டம் பஞ்சநதிக்கோட்டை, கருக்காக்கோட்டை, ஈச்சங்கோட்டை, ஆழிவாய்க்கால், சாமிப்பட்டி, மருங்குளம், புதுவூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்,
கடாரத்தலைவன்.
கடாத்தலைவன்
கடாந்தாங்கி
காலிங்கராயன்
காரி.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காரி. வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். காரிக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். காரிக்கரை என்னும் தேவார சிவதலத்தையும் உண்டு பண்ணியவன். காரியூர், காரிபட்டி, காரிமங்கலம், காரிகுடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன். சிறந்த குதிரை வீரன். சங்க இலக்கியத்தில் மலையமான் திருமுடிக்காரி என்று இவன் குறிக்கப்படுகின்றான்.
சேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள கார்குடி என்னும் ஊர் இச்சிற்றரசனோடு தொடர்புடையதாகத் தெரிகின்றது. சாசனங்களில் இவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது. சேலம் நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு.
இவன் காலத்தில் இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு, மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது. மலையமான் நாடான மலாட்டில் கொடுங்கால் என்ற நகரம் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது.
இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம். மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படுகிறது. மலையமானாடு எனவும் மலாடு எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் திருமுனைப்பாடிநாடு, சேதிநாடு, மகதநாடு; சகந்நாதநாடு எனவும் அழைக்கப்பட்டது.
மலையமான் திருமுடிக்காரிக்குப் பின் மகன் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆட்சிக்கு வந்தான்.
இவன் காலத்தில் மலாடு சோழர்களின் ஆட்சிக்கு உடபட்டிருந்தது. பிற்காலச் சோழர் ஆட்சியில் சிறந்து விளங்கிய பளுவேட்டரையர் இவன் மரபினரே. சோழர்களோடும், பாண்டியர்களோடும் மண உறவு கொள்ளூமளவிற்கு ஏற்றம் பெற்றோராய் மழவர்கள் விளங்கியமை கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படும் செய்தி.
இராசராச சோழன்ராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர். கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது. திருமுடிக்காரி மரபினர் காரி எனும் பட்டம் கொண்டனர்.