கோச்செங்கணான்.
அத்தியாயம் 1
முற்காலச் சோழப் பெருவேந்தர்களுள் குறிப்பிடத்தக்க சிலருள் முதன்மையானவன் சோழன் கோச்செங்கணான். இப்பெருமகனைப்பற்றிப் பல வரலாற்றுக் குறிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில வரலாற்று ஆய்வாளர்கள் இப்பெருமகனைச் சங்ககாலச் சோழப்பேரரசர்களுள் ஒருவனாகக் கொள்கின்றனர்(1). வேறு ஆய்வாளர் சிலர் நீண்ட செடும் ஆய்வுக்குப் பிறகு கோச்செங்கணான் தமிழகத்தின் இருண்ட காலத்தில் வாழ்ந்த (கி.பி. 300-600) மன்னர்களுள் ஒருவன் என்று வரையறுக்கின்றனர்(2). கோச்செங்கட்சோழனைக் கணைக்கால் இரும்பொறையுடன் தொடர்புபடுத்திக் கூறுவது போலவே, சேரமான் கோக்கோதை மார்பனுடன் தொடர்புபடுத்திப் பேசுவாரும் உளர். அப்பெருமானைச் சைவத்தில் தழைத்த நாயன்மார்களுள் ஒருவனாய்க் கொண்டாடிவரும் அதே நேரத்தில், அவனைத் திருமால் அடியவனாய்ச் சிறப்புப் பெற்றவன் என்று கூறுவாரும் உளர்(3). அவன் எடுப்பித்த எழுபது மாடக்கோயில்களும் சிவபெருமானுக்கா, திருமாலுக்கா அல்லது இருவருக்குமா என்பதிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன(4). இவற்றையெல்லாம் வரலாற்று இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு தெள்ளத் தெளிய நடுவு நிலையில் நின்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
கோச்செங்கட்சோழனைப் பற்றிய குறிப்புகளைப் புறநானூறு, களவழி நாற்பது, சம்பந்தர், அப்பர், சுந்தரர் தேவாரப் பதிக்ங்கள், பெரிய திருமொழி, திருத்தொண்டத்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, பெரியபுராணம், திருவானைக்கா புராணம், கலிங்கத்துப்பரணி, மூவருலா போன்ற இலக்கியங்களில் காணலாம். அன்பில் செப்பேடுகளில் கோச்செங்கணான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன(5). இது தவிர திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் கன்னியாகுமரிக் கல்வெட்டுகளும் செங்கணானைக் கரிகாலன் வழித்தோன்றலாகவும், ஒன்பதாம் நூற்றாண்டினனான விசயாலயச் சோழனுக்கு முன்னோனாகவும் இடையில் வைத்துக் கூறுகின்றன(6).
இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள் இவற்றை வைத்து நோக்கும்போது கோச்செங்கணான் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவன் என்பது உறுதியாகின்றது. ஆய்வாளர்களுக்குள் இதில் கருத்து மாறுபாடு இல்லை. அவன் சங்க காலத்தில் வாழ்ந்தவனா அல்லது சங்க காலத்திற்குப் பிறகு வாழ்ந்தவனா என்பதே ஆய்வுக்குரிய செய்தியாகும். கோச்செங்கட்சோழன் சங்க காலத்தில் வாழ்ந்தவன் என்று ஆய்வுரை செய்யும் பெருமக்கள் அதற்காக எடுத்துக் கொள்ளும் காட்டுகள் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பும்(7), களவழி நாற்பது ஏட்டின் உரைகாரர் எழுதிய பின்குறிப்புமேயாகும்(8). இவற்றைத் தெளிவாகக் காண்போம்.
"குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத்தானெ". (9)
இப்புறப்பாடலின் அடிக்குறிப்பில் 'சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது, பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து, தண்ணீர் தாவென்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து, உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்று காணப்படுகிறது. இந்த அடிக்குறிப்பு, இப்பாடலைப் பாடிய, புலவர் எழுதியதன்று என்பது, 'உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்பதால் அறியப்படும். புறநானூற்றுப் பாடல்களின் கீழ் உள்ள அடிக்குறிப்புகள் பல பிற்காலத்தில் எழுதப்பட்டவையாகும். அவை பல இடங்களில் பொருத்தமற்று விளங்குவது கண்கூடு. புறம் 389ஆம் செய்யுளில்,
"ஆதனுங்கன் போல நீயும்
பசித்த வொக்கற் பழங்கண் வீடே
வீறுசால் நன்கல நல்குமதி பெரும"
என வரும் தொடர்களைக் கண்டதும், 'ஆதனுங்கனைக் கள்ளிலாத்திரையனார் பாடிய பாட்டு' என்று அடிக்குறிப்பு தரப்பட்டுள்ளது(10). இங்கு 'ஆதனுங்கன் போல நீயும்' என வரும் தொடரே, ஆதனுங்கன் உவமைக்காக மேற்கொள்ளப்பட்ட பெயர் என்பதை விளக்குகிறது. இவ்விளக்கத்தைக் கொள்ளாமல் இது ஆதனுங்கனைப் பாடிய பாட்டு எனப் பிழையான அடிக்குறிப்பு செய்திருப்பது போலவே, பிழைபட்ட இடங்களும் பொருத்தமற்ற அடிக்குறிப்புகளும் பலவாகும். இத்தகைய அடிக்குறிப்புகளில் ஒன்றாகவே செங்கணானைக் குறிக்கும் அடிக்குறிப்பையும் கொள்ளலாம்(11).
மேலும் பேராசிரியர் அவ்வை சு.துரைசாமி அவர்களால் உரை எழுதப்பெற்று, கழகத்தால் வெளியிடப்பட்ட புறநானூற்றுப் பதிப்பில் இப்பாடலின் அடிக்குறிப்பு மாறிக் காணப்படுவது இங்குக் குறிப்பிடத் தகுந்தது. 'இது நல்லேர் முதியனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது' என்று அடிக்குறிப்பு மாறியுள்ளது. இப்பதிப்பின் முன்னுரையில் அவ்வை சு.துரைசாமி அவர்கள், உ.வே.சா அவர்களின் பதிப்புக்கும் தம் பதிப்புக்கும் உள்ள மாறுபாடுகளை விளக்குகையில் தமக்குக் கிடைத்த ஓலைச் சுவடியிலிருந்து இம்மாற்றங்களைச் செய்ததாகக் குறிக்கிறார்கள்(12). இப்படிப் பதிப்புக்குப் பதிப்பு மாறும் அடிக்குறிப்புகளைக் கொண்டு ஒரு மாமன்னனின் காலத்தை நிறுவுவது அறிவுடைமையாகாது.
களவழி நாற்பது நூலின் இறுதியில் அதன் பழைய உரையாசிரியர், 'சோழன் கோச்செங்கணானும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போர்ப்புறத்துப் பொருதுடைந்துழிச் சேரமான் கணைக்கால் இரும்பொறையைப் பற்றிக்கொண்டு, சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று' என்று குறிப்பிடுகிறார்(13).
தமிழ் நாவகர் சரிதையில், கணைக்கால் இரும்பொறையால் பாடப்பட்டதாகக் கூறப்படும் புறநானூற்றின் 74-ஆம் பாடல், 'இது சேரமான் கணைக்கால் இரும்பொறை, செங்கணானால் குணவாயில் கோட்டத்துத் தளைப்பட்டபோது, பொய்கையாருக்கு எழுதி விடுத்த பாட்டு' என்ற அடிக்குறிப்புடன் காணப்படுகிறது(14). இது குறித்து டாக்டர் மா. இராசமாணிக்கனாரவர்களும், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்களும், தங்கள் நூல்களில் விரிவாகவே குறிப்பிடுகின்றார்கள்(15).
புறநானூற்றின் அடிக்குறிப்பு, 'கணைக்கால் இரும்பொறை சிறையில் இறந்தான்' என்று குறிப்பிடுகின்றது, தமிழ் நாவலர் சரிதையில் அச்செய்யுளின் அடியில், 'இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது(16).
ஒட்டக்கூத்தர் தாம் பாடிய மூன்று உலாக்களிலும் இச்செய்தியைக் குறிப்பிடுகிறார்.
"மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும்" (17)
"... பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்" (18)
"நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால்தளையை விட்டகோன்" (19)
இதையே சயங்கொண்டாரும் கலிங்கத்துப் பரணியில் இராச பாரம்பரியத்தில்,
"களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்"
என்று குறிப்பிடுகிறார்.
இவ்விலக்கியச் சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் பல கருத்துகளைத் தெரிவிக்கின்றன. சேரன் சோழனின் சிறையில் இறந்தான் என்ற புறநானூற்று அடிக்குறிப்பும், சேரன் பொய்கையாருக்கு எழுதிவிடுத்த இப்பாட்டு கேட்டுப் பொய்கையார் களவழி பாட, செங்கணான் சேரனைச் சிறைவிட்டு அரசளித்தான் என்று தமிழ் நாவலர் சரிதையும், சோழன் சேரனைப் பொய்கையார் பாடலுக்கு விடுதலை செய்தான் என்று ஏனைய இலக்கியச் சான்றுகளும் குறிப்பிடுகின்றன. இவற்றில் எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று தெளிவு காண வேண்டும்.
அத்தியாயம் 2
சோழனுடன் போரிட்ட சேரமன்னனின் பெயர் எந்த ஒரு பாடலிலும் கூறப்படவில்லை. பாடல்களின் அடிக்குறிப்புகளில் மட்டுமே அம்மன்னன் கணைக்கால் இரும்பொறை என்று குறிப்பிடப்படுகிறான். அப்படியானால் சோழ வேந்தனுடன் போரிட்டது கணைக்கால் இரும்பொறையா அல்லது வேறு சேரவேந்தனா? வேறு சேரமன்னன் என்றால் அவன் யாராக இருக்க முடியும் என்பதைத் தெளிய வேண்டும்.
சோழன் கோச்செங்கணானும் சேரமன்னனும் பொருத இடம் கழுமலம் என்று களவழி நாற்பதும், குணவாயிற் கோட்டம் என்று தமிழ் நாவலர் சரிதையும், திருப்போர்ப்புறமெனப் புறநானூறும் பேசுகின்றன. இவற்றில் போர் நடந்த இடம் எது என்பதை ஆய்ந்தறிய வேண்டும்.
சேரமன்னர்களின் வரலாற்றை ஆய்ந்தெழுதிய பெருமக்களும் இப்போர் குறித்தும் இதன் முடிவு குறித்தும் குழப்பமான நிலையிலேயே செய்தி தருகின்றனர். பேராசிரியர் அவ்வை சு.துரைசாமி அவர்கள் கழுமலத்தில் போர் நடந்ததாகவும் பின் திருப்போர்ப்புறம் என்னும்¢டத்தே தொடர்ந்த போரில் கணைக்கால் இரும்பொறை தோல்வியுறக் குடவாயிற் கோட்டட்தில் சோழனால் சிறைவைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்(20).
துடிசைகிழார் சிதம்பரனார் அவர்களோ, இருவருக்கும் பல போர்கள் நடந்ததாக்வும், அவைகளுள் சிறந்தவை நான்கென்றும் குறிப்பிட்கிறார்(21). அவர் கூற்றுப்படி,
முதல்போர் குணவாயிற் கோட்டத்தில் கி.மு. 45 இல் நடைபெற்றது. சேரன் தோற்றான். இதற்கு ஆதாரமாகத் தமிழ் நாவலர் சரிதையின் அடிக்குறிப்பைக் கொள்கிறார்.
இரண்டாம் போர் சோழ நாட்டு வெண்ணிப் பறந்தலையில் கி.மு. 42 இல் நடைபெற்றது. இதிலும் சேரன் தோற்றான். இதற்கு ஆதாரமாக நற்றிணை முகவுரையைக் காட்டுகிறார்.
மூன்றாம் போர் கழுமலம் என்னும் இடத்தில் கி.மு. 40 இல் நடைபெற்றது. இதிலும் சேர அரசன் தோற்றுச் சிறைபிடிக்கப் பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்பட்டான். இது கேள்விப்பட்டு, பொய்கையார், கடைச்சங்கப் புலவராயும் சோழன் கோச்செங்கணானின் நண்பராகவும் இருந்தமையால், சோழன் வெற்றியைக் குறித்துக் களவழி பாடி அதற்குப் பரிசாக சேரனைச் சிறையினின்று மீட்டார்.
நான்காம் போர், கொங்கு நாட்டில் திருப்பூருக்குப் பக்கத்திலுள்ள (திருப்போர்ப்புறம்) கோயில் வெளி என்னும் இடத்தில் கி.மு. 35 இல் நடந்தது. இதிலும் சேரன் தோல்வியுற்று மீட்டும் சிறைபிடிக்கப்பட்டான். இதுபோழ்துதான், அவன் புறநானூற்றின் 74 ஆம் பாடலான, 'குழவி இறப்பினும்' என்ற பாடலைப் பாடி உயிர் துறந்தான்.
துடிசைகிழார் அவர்கள் குறிப்பிடும் இப்போர்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம். முதல் போர் குணவாயில் கோட்டத்தில் நடந்ததாகக் கூறப்படுவதற்குத் துடிசைகிழார் அவர்கள் தமிழ் நாவலர் சரிதையின் அடிக்குறிப்பினையே ஆதாரம் காட்டுகிறார்கள். அதே அடிக்குறிப்பில், சேரன் சிறைப்பட்ட செய்தியும், அவன் 'குழவி இறப்பினும்' என்னும் பாடலை அங்கிருந்தே எழுதிப் பொய்கையாருக்கு அனுப்ப, அவர் வந்து சோழனைப் பாடிச் சேரனை விடுதலை பெற்ற செய்தியும் சொல்லப்பட்டுள்ளன. இதையெல்லான் துடிசைகிழார் அவர்கள் ஏனோ கொள்ளவில்லை.
உறையூர்க் கோட்டையின் கிழக்குப் பக்கத்து வாயிலே குணவாயில் கோட்டம் என்றும் அதுதான் தற்போதைய தாயுமானசுவாமி மலைக்கோயில் உள்ள பகுதி என்றும் துடிசைகிழார் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்(22). உறையூர்க் கோட்டையின் கிழக்குப்பக்க வாயில்தான் குணவாயிற்கோட்டமென்றால், சேரன் சோழன் மீது படையெடுத்து வந்ததாகக் கொள்ள நேரிடும். சேரன் கோட்டை வாயிலருகில் படையுடன் வரும் வரை சோழன் என்ன செய்து கொண்டிருந்தான் என்ற வினா எழும்! எனவே, குணவாயிற் கோட்டத்தில் போர் நடந்ததாகக் கொள்வது பொருத்தமற்றது.
தமிழ் நாவலர் சரிதை காலத்தால் மிகவும் பிற்பட்டது. புறநானூற்று அடிக்குறிப்புக்கும் தமிழ் நாவலர் சரிதை அடிக்குறிப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. புறநானூற்ற்¢ல் குறிக்கப்பட்டுள்ள குடவாயிற்கோட்டம் இதில் குணவாயிற்கோட்டம் என்று குறிக்கப்பட்டுள்ளது. குடவாயிற்கோட்டம் என்பதே குணவாயிற்கோட்டம் என்று தவறாகத் திரித்து எழுதப்பட்டிருக்கலாம் என்று கொள்வதே பொருத்தமானதாக அமையும். இக்குடவாயிற் கோட்டத்துச் சிறையில் இருந்ததாகக் கருதப்படும் சேரன், சிறைய்¢ல் இருந்தபடியே பொய்கையாருக்குப் பாட்டெழுதி அனுப்பியதாகத் தமிழ் நாவலர் சரிதை அடிக்குறிப்பு கூறுவத் எவ்வகையானும் பொருந்தாது. அது சேரமானின் வீரத்துக்கே இழுக்குத்ட் தேடுவதாக அமையும். எனவே தமிழ் நாவலர் சரிதைக் குறிப்பில் கண்டுள்ள செய்திகள் தவறானவை என்று முடிவு கோடலே பொருந்தும்.
இரண்டாவது போர் வெண்ணிப் பறந்தலையில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறார் துடிசைகிழார். இதற்கு நற்றிணை முகவுரை ஆதாரம் காட்டப்படுகிறது. நற்றிண்ணயில், பொய்கையார் வரலாறு கூறுமிடத்தில், சோழனுக்கும் சேரனுக்கும் வெண்ணிப்பறந்தலை (கோயில் வெண்ணிவெளியில் போர் நடந்ததாகவும், அப்போரில் சேரமான் தோற்றுக் குடவாயிற்கோட்டத்தில் சிறை வைக்கப்பட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து, இப்பொய்கையாரே வைணவர்கள் கூறும் பொய்கையாழ்வாரென்று அறியப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது(23). இங்கு இரண்டு செய்திகள் முரண்படுகின்றன.
1. கோயில் வெண்ணி வெளியில் நடந்ததாகக் கூறப்படும் இப்போரில் சேரன் சிறைப்பட்டான் என்று நற்றிணை முகவுரை சொல்கிறது. ஆனால் துடிசைகிழார் அவர்கள் இப்போரை வெண்ணிப்பறந்தலையில் நடந்ததாகக் கொண்டு, அஃதாவது வெண்ணிப்பறந்தலை வேறு, கோயில்வெளி வேறு என்று எடுத்துக்கொண்டு சேரன் தோற்றான் என்று மட்டுமே கூறுகிறார். ஓரிடத்தில் நடந்த போரையே இரண்டு இடங்களில் நடந்ததாகக் கொண்டு இரண்டு போர்களாகக் கற்பனை செய்திருப்பது வியப்புக்குரியது.
2. களவழி பாடிய புலவரும் முதலாழ்வார்களுள் ஒருவரான பொய்கையாழ்வாரும் ஒருவரென்று நற்றிணை முகவுரை குறிப்பிடுவதைக் கொண்டால், பொய்கையாழ்வாரின் காலமும் இப்போர் நடந்ததாகத் துடிசைகிழார் அவர்கள் குறிப்பிடும் காலமும் பொருந்தாமல் போகும். எனவே இந்த இரண்டாவது போர்ச்செய்தி குறித்துத் துடிசைகிழார் அவர்கள் கூறும் செய்திகள் பொருந்தி வரவில்லை.
இதே போரைப்பற்றித் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில், திருநறையூர்ப் பதிகத்தில் சோழன் கோச்செங்கணானைப் பாடும்போது,
"வெங்கண்மா களிறுந்தி வெண்ணி யேற்ற
விறல்மன்னர் திறலழிய வெம்மா வுய்த்த
செங்கணான் கோச்சோழன்"
என்றும்,
"கவ்வைமா களிறுந்த்¢ வெண்ணி யேற்ற
கழல் மன்னர் மணிமுடிமேல் காகமேற"
என்றும் பாடுவதால், வெண்ணியில் கோச்செங்கணான் பகைவருடன் போரிட்டது உறுதியாகின்றது. இப்போர்¢ல் செங்கணானுடன் போரிட்டுத் தோற்ற, கழல் மன்னரென்றும் விறல் மன்னரென்றும் குறிக்கப்படுபவர் யார்? நற்றிணை முகவுரையின்படி இப்போர் சோழனுக்கும் சேரனுக்கும் இடையே நடந்ததென்று கொண்டால் அச்சேர வேந்தன் கணைக்கால் இரும்பொறைதான் என்பதற்குச் சான்றுகள் உள்ளனவா? இப்போரில் சேரன் சிறைப்பட்டான் என்று நற்றிணை முகவுரை சொல்கின்றது. ஆனால் திருமங்கையாழ்வார் அது குறித்து ஏதும் தம் பதிகத்தில் குறிப்பிடவில்லை என்பது நினைக்கத்தக்கது.
மூன்றாம் போர் கழுமலத்தில் நடந்ததாகத் துடிசைகிழார் குறிப்பிடுகிறார். இப்போர் நடந்ததைக் களவழி நாற்பது பாடல்களே அரண் செய்கின்றன. கோச்செங்கணானைப்பற்றிக் கூறும் பல நூல்களுள் நேரடியாகக் கோச்செங்கட்சோழனைப் பாடிய பெருமையை உடையது களவழி நாற்பது ஒன்றே. எனவே களவழி நாற்பது தரும் செய்திகளை ஏற்பது ஏற்புடைத்து. இது கோச்செங்கட்சோழன் வஞ்சியரசன் ஒருவன் மீது செய்த போரைப் பாடிச் சோழனைப் புகழும் முகத்தான் எழுந்த நூலாகும். இதில் நாற்பது பாடல்கள் உள்ளன. இவற்றுள் ஐந்து பாடல்களில் செங்கட் சினமால் என்றும்(24), மூன்று மாடல்களில் செங்கண்மால் என்றும்(25), மூன்று பாடல்களில் திண்தேர்ச் செம்பியன் என்றும்(26), பிற பாடல்களில் நீர்நாடன், புனல்நாடன் என்றும் இச்சோழர் பெருமான் குறிக்கப்படுகிறான்.
இந்நூலின் 36 ஆம் பாடலில்,
"காவிரி நாடன் கழுமலம் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாம் கீழ்மேலாய்
ஆவுதை கரளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை அட்ட களத்து"
எனவரும் வரிகள் கொள்ளத்தக்கன. 'கழுமலம் கொண்ட நாள்' என்னும் குறிப்பு போர் நடந்த இடத்தையே குறிப்பதென்பது உணரத்தக்கது.
நான்காவது போர் திருப்போர்ப்புறம் (திருப்பூருக்கு அருகிலுள்ள கோயில்வெளி) என்ற இடத்தில் நடந்ததாகவும், சேரன் அங்கும் தோற்றுச் சிறைபிடிக்கப்பட்டான் என்றும், அந்நிலையில்தான் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் 'குழவி இறப்பினும்' என்னும் பாடலைப் பாடித் துஞ்சினான் என்றும் துடிசைகிழார் குறிப்பிடுகிறார். இந்தக் கோயில்வெளிப் போரைத்தான் நற்றிணை முகவுரை வெண்ணிப் பறந்தலைப் போராகக் குறிப்பிடுகின்றது. புறநானூற்று அடிக்குறிப்பு திருப்போர்ப்புறத்துப் போராகக் குறிப்பிடுகின்றது. இம்மூன்று செய்திகளை நோக்க துடிசைகிழார் குறிப்பிட்ட இரண்டாவது போரும் நான்காவது போரும் ஒன்றே என்பதும், பல பெயர்களைக் கொண்ட ஒரே இடத்தில் நடந்ததென்பதும் பெறப்படும். மேலும் இதுவரை கண்ட செய்திகளிலிருந்து சோழன் கோச்செங்கணான் பகை அரசன் ஒருவனுடன் கழுமலத்திலும், வெண்ணி என்னும் கோயில்வெளியிலும் போரிட்டிருப்பது புலனாகின்ரது. இப்போர்களில் சோழனோடு பொருத பகையரசன் சேரவேந்தனே என்பது,
"மைந்துகால் யாத்து மயங்கிய ஞாட்பினுள்
புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை
பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து",
என்னும் களவழி நாற்பதின் 39 ஆம் பாடலால் அறியப்படும். இச்சேரவேந்தன் கணைக்கால் இரும்பொறை என்பதற்கு யாதொரு சான்றும் களவழி நாற்பதில் இல்லை. வென்ற மன்னனைப் பல இடங்களில் பெயர் குறிப்பிட்டுப் புகழும் புலவர் தோற்ற வேந்தனின் பெயரை ஓரிடத்தானும் குறித்தாரில்லை.
உலாப் பாடல் வரிகளும், பரணிப் பாடல் வரிகளும், சோழன் களவழி நாற்பது கொண்டு விடுதலை செய்த மன்னனை வில்லவன், பொறையன், உதியன் என்று குறிக்கின்றனவேயன்றி, 'கணைக்கால் இரும்பொறை' என்று ஓரிடத்தானும் குறித்தில. சோழனோடு போர் செய்த சேரவேந்தன் கணைக்கால் இரும்பொறையா அல்லது வேறு சேர மன்னனா என்பது ஆய்வுக்குரியது.
கோச்செங்கணானைப் பாடிய பொய்கையார் கோக்கோதை மார்பன் என்ற சேரமன்னனைப் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இரண்டும்(27), நற்றிணையில் ஒன்றுமாய் இடம் பெற்றுள்ளன(28). களவழி நாற்பது உரைய்¢ல் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள், புறநானூற்றுக் குறிப்பே வலியுடையதென்று கொள்ளின், அது பரணி, உலா முதலியவற்றுடன் முரணாமைப் பொருட்டுத் துஞ்சினான் கணைக்கால் இரும்பொறையாகச் சிறைவீடு செய்து அரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரனாவான் என்று கொள்ள வேண்டும்' என்றும், 'அவ்வேந்தன் கணைக்கால் இரும்பொறையின் வேறாகிச் சோழனால் சிறைப்பட்டவனாயின் அவனை விடுவித்து, களவழி நாற்பது பாடல் பாடப்பட்டதென்று கோடல் அமையும்(29)' என்றும் ஒரு முடிவுக்கு வர முயல்கிறார்கள். இதையே டாக்டர். மா. இராசமாணிக்கனாரவர்கள் தம் சோழர் வரலாற்றில், 'இங்ஙனம் பேரறிஞரையும் (நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்) குழப்பத்திற்கு உட்படுத்தும் பொருத்தமற்ற அடிக்குறிப்புக்களைக் கொண்டு கோச்செங்கணான் போன்ற பேரரசர் காலத்தை வரையறுத்தல் வலியுடைத்தாகாது(30)' என்கிறார்கள்.
அத்தியாயம் 3
கோச்செங்கணான் காலம்
சோழனோடு போரிட்ட இச்சேரமன்னன் யாராக இருக்க முடியும் என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு முன், இம்மன்னன் சோழனால் சிறைப்படுத்தப்பட்ட செய்தி உண்மைதானா என்பதையும், அப்படிச் சிறைப்படுத்தப்பட்டிருந்தால், சிறைக்கூடத்திலிருந்தபடி இம்மன்னன் பாடியதுதான் புறநானூற்றில் 74ஆம் பாடலாக மலர்ந்துள்ளதா என்பதையும், இவனை மீட்கத்தான் பொய்கையார் களவழி பாடினாரா என்பதையும், இவன் சிறையில் இறந்தானா அல்லது சிறைமீட்கப்பட்டானா என்பதையும் ஆய்ந்தறிவது நன்று.
"அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு
முத்துடைக் கோட்டக் களிறீர்ப்ப - எத்திசையும்
பெளவம் புணரம்பி போன்ற புனனாடன்
தெவ்வரை அட்ட களத்து" (31)
என்ற களவழி நாற்பது பாடலின் முதல்வரியில் காணப்படும் 'அரசர் பிணங்கான்ற' என்ற தொடருக்கு 'அரசரின் உடல் மறிந்து கிடப்பதனை' என்று நாட்டாரவர்கள் பொருள் எழுதுகிறார்கள்.
'நீர்நாட்டையுடைய கோச்செங்கட்சோழன் பகைவரைக் கொன்ற போர்க்களத்தில், அரசர் பிணங்கள் சிந்திய உதிர வெள்ளங்கள் எல்லாத் திசைகளிலும் முரசினோடு, முத்தினையுடைய கொம்புகளையுடைய யானைகளை இழுப்ப, அவை கடலையும், அக்கடலைச் சார்ந்த மரக்கலங்களையும் ஒத்தன', என்று மேற்கண்ட பாடலுக்கு நாட்டாரவர்கள் உரையெழுதுகிறார்கள். (32)
களவழி நாற்பது முப்பத்தைந்தாம் பாடலில்,
'உரைசால் உடம்பிடி மூழ்க அரசோ(டு)
அரசுவா வீழ்ந்த களத்து'
என்ற வரிகளும் ஈண்டு கவனிக்கத்தக்கன. இதற்குப் பொருள் கூறும்போது, 'புகழமைந்த வேல்கள் குளிப்ப அரசரோடு பட்டத்து யானை மறிந்து வீழ்ந்த களத்தின்கண்' என்று நாட்டாரவர்கள் குறிப்பிடுகிறார்கள். (33)
களவழி நாற்பது முப்பத்தொன்பதாம் பாடலின் கடைசி வரியில் 'வஞ்சிக்கோ அட்ட களத்து' என்று புலவர் குறிப்பிடுவதை, 'வஞ்சி அரசனாகிய சேரனைக் கொன்ற போர்க்களத்திலே' என்று உரை விளக்கம் செய்கிறார் நாட்டாரவர்கள், (34)
வேல்பட்டு பட்டத்து யானையும் அரசனும் வீழ்வதாக முப்பத்தைந்தாம் பாடலிலும், அரசனது பிணத்திலிருந்து சிதறிய குருதி வெள்ளத்தில் யானை, முரசு முதலியன இழுபட்டுச் செல்வதாக முப்பத்தேழாம் பாடலிலும், வஞ்சியரசனாகிய சேரனைக் கொன்ற போர்க்களமென்று முப்பத்தொன்பதாம் பாடலிலும் புலவர் மிகத்தெளிவாகச் செய்திகளைச் சொல்லியிருக்கின்றார். எனவே, இம்மூன்று பாடல்களின் தெளிவான அடிப்படையில், சோழமன்னனோடு போரிட்ட சேரவேந்தன், அவன் யாராக இருந்த போதும், போர்க்களத்தில் மடிந்ததாகக் கொள்வதே பொருத்தமுடையதாகும். களவழி பாடிய புலவரே வஞ்சியரசன் போர்க்களத்தில் மடிந்த செய்தியைத் தெளிவாக்கி விடுவதால், அம்மன்னன் சோழனால் சிறைகொள்ளப்பட்டதும், அவனை விடுவிக்கும் பொருட்டே களவழி பாடப்பட்டதென்பதும், அது கேட்டுச் சோழன் சேரனுக்கு அரசளித்தான் என்பதும் பொருந்தாமை காண்க.
ஒட்டக்கூத்தர் உலாவும் சயங்கொண்டாரின் பரணியும் காலத்தால் மிகவும் பிற்பட்ட நூல்கள். அவர்தம் நூல்களின் வழிவழி வரலாறு கூறும் பகுதியில், வழங்கிவந்த செய்திகள் பல இணைக்கப்பட்டுள்ளமை கண்கூடு. அவற்றுள் ஒன்றாகவே செங்கணான் களவழிக்குச் சேரனைத் தளைவிடுத்த செய்தியைக் கொள்வோமானால், களவழி நாற்பது சோழனின் வெற்றியைப் போற்றிப் பாடப்பட்டதே அன்றி, சேரனின் விடுதலை வேண்டிப் பாடப்பட்டதன்று என்பது புலப்படும்.
புறநானூற்றின் 74ஆம் பாடல், நற்றிணையின் 18ஆம் பாடல் இரண்டிலுமே சேரவேந்தனின் பெயர் குறிக்கப்படவில்லை. நற்றிணை 18ஆம் பாடலில், 'பொறையன்' என்ற பெயரே குறிக்கப்படுகின்றது. பொய்கையார், கோக்கோதை மார்பன் என்ற சேரமன்னனைப் பாடிய பாடல்கள் இரண்டு புறநானூற்றில் உள்ளன. அவற்றுள் ஒன்றில்,
'கண்ணா லும்மே கானலந் தொண்டி
அஃதெம் மூரே அவனெம் இறைவன்' (35)
என்று குறிப்பிடுகிறார். இன்னொன்றில்,
'நாடன் என்கோ ஊரன் என்கோ
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ
யாங்கன மொழிகோ வோங்குவாள் கோதையை' (36)
என்று குறிப்பிடுகிறார். இவற்றை நோக்கப் பொய்கையாரின் தலைவனாக அவர் காலத்தில், சேரநாட்டையாண்டது கோக்கோதை மார்பனே என்பது தெளிவுபடும். நற்றிணை பதினெட்டாம் பாடலில், 'பொறையன்' என்று குறிக்கப்படுவதும் இக்கோக்கோதை மார்பனாகத்தான் இருத்தல் வேண்டும் என்று கொள்வதே சால்புடையது. கோச்செங்கணானைப் பாடிக் களவழி இயற்றிய பொய்கையாரும், இக்கோக்கோதை மார்பனைப் பாடிய பொய்கையாரும் ஒருவராக இருக்கும் நிலையில், சோழனுடன் கழுமலத்திலும் வெண்ணியிலும் போரிட்டது இக்கோக்கோதை மார்பனாகவே இருத்தல் வேண்டும். வேறு தெளிவான சான்றுகள் புலப்படும் வரையில் இப்படிக் கொள்வதே ஏற்றமுள்ளதாக அமையும். புறநானூற்றுப் பாடல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டன. அதனால் சங்ககாலப் பாடல்களுடன் சங்கத்துக்குப் பிற்பட்ட காலகட்டத்தில் பாடப்பட்ட சில பாடல்களும் சேர்க்கப்பட்டு, புறநானூறு உருவாகியிருக்கலாம். கோக்கோதை மார்பனைப் பற்றிய பொய்கையாரின் பாடல்கள் புறநானூற்றுள் இடம்பெற்றமைக்கு இதுவே ஒரு காரணமாகலாம். எனவே இதுவரை கண்ட சான்றுகளைக் கொண்டு சோழன் கோச்செங்கணான், சேரன் கோக்கோதை மார்பன், புலவர் பெருமான் பொய்கையார் மூவரும் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவர்களே என்ற முடிவுக்கு வருவதில் யாதொரு தடையுமில்லை.
சோழன் கோச்செங்கணானின் காலத்தை நிறுவுவதில் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியும், திருமுறைகளும் பெரிதும் உதவுகின்றன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் மூன்றாம் திருநறையூர்ப் பதிகத்தில் பத்துப்பதிகப் பாடல்களிலும் கோச்செங்கணானைப் பாடிப் பரவியுள்ளார். அவர் குறிப்பிடும் வெண்ணிப் போரைப்பற்றி முன்பே கண்டோம். இளந்தைவேள் என்ற வேளிர்குல மன்னன் செங்கணானுக்குப் பகைவனாக இருந்தான் என்பதும், அவனைப் போரொன்றிலே தன் வேலைச் செலுத்தி அழித்த பெருவேந்தன் கோச்செங்கணான் என்பதும்,
'மின்னாடு வேலேந்து விளந்தை வேளை
விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட
தென்னாடன் குடகொங்கன்' (37)
என்ற ஆழ்வாரின் பாடல் வரிகளால் அறியக் கிடக்கின்றன. கோச்செங்கணான் அழுந்தையில் செய்த போரைப்பற்றி,
'பாராளர் அவர்இவரென் றழுந்தை யேற்ற
படைமன்னர் உடல்துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச்சோழன்' (38)
எனவரும் வரிகள் மேலும் விளக்குகின்றன. கோச்செங்கணானைக் குறிக்கும்போது, தெய்வவாள் வலம்கொண்ட சோழன், தென் தமிழன் வடபுலக்கோன் சோழன், உலகமாண்ட தென்னாடன் குடகொங்கன் சோழன், தேராலின் கோச்சோழன் என்று பல மொழிகளால் சிறப்புச் செய்யப்படுகிறான். சோழவேந்தனோடு போரிட்ட வேந்தர்களும் கழல் மன்னர், விறல் மன்னர், படை மன்னர் என்று சிறப்பிக்கப்படுகின்றனர். இப்பாடல்களிலிருந்து சோழன் பல போர்களைக் கண்ட பெருவீரன் என்பதும், பெரும்படை போற்றிய மன்னர் பலரை வென்றவன் என்பதும், தென்னவனாய் உலகமாண்ட மாமன்னன் என்பதும் புலனாகின்றன. திருஞானசம்பந்தரும் மூன்றாம் திருமுறையில்,
'திறையுடைய நிறைசெல்வன்' (39)
என்று கோச்செங்கணானைக் குறிப்பதால், பல மன்னர்களை வென்று திறைபெற்ற பெருவேந்தன் இப்பேரரசன் என்பது பெறப்படுகின்றது. 'வடபுலக்கோன்' என்று இம்மன்னனைத் திருமங்கையாழ்வார் குறிக்கக் காரணம் இருத்தல் வேண்டும் என்பதை டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் தம் சோழர் வரலாற்றில் மிகத் தெளிவாக ஆய்ந்து விளக்குகிறார்கள். (40)
கோச்செங்கணான் சங்க காலத்து மன்னனாக வாழ்ந்திருப்பின், இப்பெரும் போர்களில் ஏதேனும் ஒன்றைப்பற்றிய குறிப்பேனும் ஏதாவது ஒரு சங்கப்பாடலில் இடம் பெற்றிருக்கும். இம்மன்னன் பெருவேந்தனாக, மன்னர் பலரைப் பொருது வென்றவனாகத் திருமங்கையாழ்வாராலும், சம்பந்தராலும் குறிக்கப்பெறுவது போல வேறெந்தப் புலவர்களாலும் குறிக்கப்படவில்லை. சங்க நூல்களில் எங்குமே கோச்செங்கணான் குறிப்பிடப்படாத நிலையொன்றே இம்மன்னன் சங்க காலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்தவன் என்று துணியப் போதுமானதாகும். சங்க காலத்திற்குப் பிற்பட்டும், சிம்ம விஷ்ணுவின் பல்லவப் பேரரசு அமைவதற்கு முற்பட்டும் அமைந்த ஒரு காலகட்டத்தில் (கி.பி. 300 - கி.பி. 600) இம்மன்னன் வாழ்ந்ததாகக் கொள்வதே எவ்வழியினும் பொருத்தமுடையதாகும்.
அத்தியாயம் 4
கோச்செங்கணானின் கலைப்பாணியும் இறைத்தொண்டும்
இம்மன்னனின் கலைப்பாணியும், இறைத்தொண்டும் சிறப்புக்குரியன. மாடக்கோயில்கள் எழுப்பிய முதல் மன்னன் இப்பெருமகனே.
'இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு
எழில்மாடம் எழுபதுசெய்(து) உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச்சோழன்' (41)
எனவரும் பெரிய திருமொழிப் பாசுர வரிகள், இப்பெருமான் எழுபது மாடக்கோயில்களை எழுப்பிய செய்தியைத் தெரிவிக்கின்றன. இத்தகைய இறைபணி செய்த இம்மன்னன் சங்க காலத்தவனாய் இருந்திருப்பின் யாரேனும் ஒரு புலவராவது ஒரு பாடலிலாவது இச்செய்தியைக் கோடிகாட்டாது விட்டிரார். இம்மன்னன் சங்ககாலத்தவன் அல்லன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
இனி இம்மன்னன் எழுப்பித்த எழுபது மாடக்கோயில்களும் சிவபெருமானுக்கா அல்லது திருமாலுக்கா அல்லது இருவருக்குமா என்பது பற்றிக் காண்போம்.
'ஈசன்' என்னும் சொல் சிவபெருமானைத்தான் குறிக்கும் என்பதால், இக்கோயில்கள் எழுபதும் ஈசுவரனான சிவபெருமானுக்கே எடுப்பிக்கப்பட்டதாகப் பலரும் கருதினர். ஆனால் பெரிய திருமொழியில் பதினொரு இடங்களில் 'ஈசன்' என்ற சொல்லால் திருமங்கையாழ்வார் திருமாலைக் குறிப்பிடுகிறார். பெரிய திருமடலிலும், 'என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை' (42) என்று குறிப்பிடுகிறார்.
கோச்செங்கணானைப் பற்றிப்பாடும் திருநறையூர்ப் பதிகத்திலேயே,
'கொழுங்கயிலாயப் பெருவெள்ளம் கொண்டகாலம்
குலவரையின் மீதோடி அண்டத் தப்பால்
எழுந்தினிது விளையாடும் ஈசன் எந்தை
இணையடிக்கீழ் இனிதிருப்பீர்' (43)
என்று திருமாலை 'ஈசன்' என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
சிலர் 'எண்டோள் ஈசன்' என்பதால், அது சிவபெருமானைத்தான் குறிக்கிறது என்பார்கள்.
'நிணம்புல்கு சூலத்தார் நீல கண்டர்
எண்டோளர் எண்ணிறந்த குணத்தினாலே
கணம்புல்லன் கருத்துகந்தார்' (44)
என்ற வரிகளையும்,
எண்டோள் வீசிநின் றாடும்பி ராந்தன்னைக்
கண்காள் காண்மின்களோ' (45)
என்ற வரிகளையும் அதற்கு மேற்கோளாய்க் காட்டுவார்கள். அப்பர் பெருமான் சிவபெருமானை எண்டோள் ஈசனாக விளித்து வழிபட்டிருப்பது போலவே, திருமங்கையாழ்வார் கோச்செங்கணானைப் பாடும் அதே மூன்றாம் திருநறையூர்ப் பதிகத்தில்,
'பவ்வநீர் உடைஆடை யாகச் சுற்றிப்
பாரகலம் திருவடியாய்ப் பவனம் மெய்யா
செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம்
திருமுடியா நின்றான்பால் செல்ல கிற்பீர்' (46)
என்று திருமாலைத் திசையெட்டும் தோளாய்க் கொண்ட எண்தோள் ஈசனாகக் குறிப்பிடுகிறார். அப்பர் அடிகள் சிவபெருமானை எண்தோள் ஈசனாகப் பாடியிருக்கலாம். ஆனால் கோச்செங்கணான் எண்தோள் ஈசற்குக் கோயில்கள் எழுபது செய்தமை குறித்துப் பாடியது திருமங்கையாழ்வார்தாமே தவிர, அப்பர் அடிகள் அல்லரே! அதனால் திருமங்கையாழ்வார் எண்தோள் ஈசனாக யாரைக் கருதினார் என்பதே இங்கு நினைக்கத் தகுந்தது, வேறு ஏதேனும் பதிகத்தில் எண்தோள் ஈசனாகத் திருமாலைக் குறித்திருந்தாலும் பரவாயில்லை. அதே பதிகத்தில் மூன்றாம் பாடலில் திசையெட்டும் தோளாய்க் கொண்டவன் திருமாலே என்று கூறுகிறார். அத்திருமாலே ஈசன் எந்தை என்று இரண்டாம் பாடலில் குறிப்பிடப்படுகிறார். இவ்விரண்டு சான்றுகளையும் நோக்கும்போது கோச்செங்கணான் எழுபது மாடக்கோயில்கள் எழுப்பியது திருமாலுக்கே என்றாகும்.
இதையே பல்லவர் சரித்திரம் என்னும் நூலில், 'இருக்கு வேதத்தைக் கூறும் திருமாலுக்கு எழுபது ஆலயங்கள் செய்துள்ள சோழர் குலத்துச் செங்கணான் செய்த திருநறையூர்க் கோயிலைச் சேருங்கள்' என்று திருநறையூர்ப் பதிகத்தின் எட்டாம் பாடலின் இறுதி வரிகளுக்குப் பொருள் விளக்கம் தருகிறார் வரலாற்றுப் பேராசிரியர் பி.தி.சீனிவாச அய்யங்கார் அவர்கள். (47)
'எண்தோள் ஈசன்' என்று திருமங்கை மன்னன் குறிப்பிடப்படுவது சிவபெருமானையல்ல என்பதற்கு மேலும் சில சான்றுகள் காட்டலாம். முதலாழ்வார்கள் மூவர் காலத்தும் இருந்தது போல் திருமங்கையாழ்வார் காலத்தில் சைவத்தைப் போற்றும் மனப்பாங்கு வைணவர்களிடத்து இல்லை. மாறாகச் சைவக்கடவுளான சிவபெருமானை இழித்தும் பழித்தும் கூறுவதே இயல்பாய் இருந்து வந்தது. இதை,
'வள்ளி கொழுநன் முதலாய
மக்களொடு முக்கண்ணான்
வெள்கி ஓட' (48)
என்ற வரிகளாலும்,
'ஆறும் பிறையும் அரவமும்
அடம்பும் சடைமேல் அணிந்து உடலம்
நீறும் பூசி ஏறும் ஊரும்
இறையோன் சென்று குறையிரப்ப' (49)
என்ற வரிகளாகும் நன்கு உணரலாம்,
திருமாலே அனைத்துக் கடவுளரிலும் பெரியவர் என்பதை,
'நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்
பிறையாடும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த
இறையாகி நின்றான் தன் இணையடியே அடைநெஞ்சே' (50)
என்ற வரிகளாலும்,
'மூவரில் முன் முதல்வன்' (51)
'முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை' (52)
என்ற வரிகளாலும் திருமங்கையாழ்வாரே உணர்த்துதலைக் காணலாம். இவ்வாறு திருமாலை உயர்த்தியும், சிவபெருமானைப் பழித்தும் இழித்தும் கூறும் திருமங்கையாழ்வார் தம் பாடலில் 'இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு' என்று சிவபெருமானைக் குறிப்பாரா?
'எண்தோள் ஈசன்' என்ற பெயரால் திருமாலைத் திருமங்கை மன்னன் பாடியிருப்பது போலவே, 'கூத்தன்' என்றும், 'பரமன்' என்றும் கூட திருமாலை விளித்துப் பாடியிருக்கிறார்.
'பரிமுகமாய் அருளியஎம் பரமன் காண்மின்' (53)
'பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப்
படைத்துக் காத்(து) உண்டுமிழ்ந்த பரமன் தன்னை' (54)
'பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்' (55)
'பறவைமுன் உயர்த்துப் பாற்கடல் துயின்ற
பரமனார் பள்ளி கொள் கோயில்' (56)
'குறிய மாணி உருவாய
கூத்தன் மன்னி அமரும் இடம்' (57)
'கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தன் அமர்ந்துறையும் இடம்' (58)
என்னும் வரிகள் இதற்குச் சான்றுகளாம். இவற்றையெல்லாம் நோக்கும்போது கோச்செங்கணான் எழுப்பிய எழுபது மாடக்கோயில்களும் திருமாலுக்கே என்றுதான் திருமங்கையாழ்வார் சொல்வதாகக் கொள்ள நேரிடும்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் கோச்செங்கணான் கட்டிய சிவன் கோயில்களைப் பாடியுள்ளமை இங்கு எண்ணத்தக்கது. அப்பர் அடிகள் தம்முடைய அடைவுத் திருத்தாண்டகத்தில்,
'பெருக்காது சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும்' (59)
என்று குறித்திருப்பது, சிவபெருமானுக்கான பெருங்கோயில்கள் அவர் காலத்தில் எழுபத்தெட்டு இருந்தமையைப் புலப்படுத்துகின்றன. அப்பர் அடிகள் இந்த எழுபத்தெட்டு கோயில்களையும் எழுப்பியது யாரென்று குறிக்கவில்லை. பெருங்கோயில் என்று அப்பர் அடிகள் குறிப்பதும், மாடக்கோயில் என்று திருமங்கையாழ்வார் குறிப்பதும் ஒன்றே என்பது கலைவரலாற்று அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் செய்தியாகும். கோச்செங்கணான் எழுப்பியதாகச் சில மாடக்கோயில்களைச் சம்பந்தரும் சுந்தரரும் தங்கள் தேவாரப்பதிகங்களில் குறிப்பிடுகின்றார்கள்.
'வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே' (60)
'மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக் கோயிலே' (61)
என்று சம்பந்தர் பெருமான் திருவைகன் மாடக்கோயில் இறைவனைப் பாடும்போது, கோச்செங்கணானே அக்கோயிலை எழுப்பியதாகக் கூறுகிறார்.
'ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் சிறைசெய்த கோயில் சேர்வரே' (62)
'அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே' (63)
என்ற சம்பந்தரின் வரிகளால், திரு அம்பர்ப் பெருந்திருக்கோயிலைக் கட்டியவன் சோழன் கோச்செங்கணானே என்பது பெறப்படுகின்றது.
அடிக்குறிப்புக்கள்
1. பிற்காலச் சோழர் வரலாறு - தி.வை. சதாசிவ பண்டாரத்தார், பக்கம் 4.
2. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 13.
3. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 127.
4. பல்லவர் சரித்திரம் - பி.தி. சீனிவாச அய்யங்கார், பக்கம் 114.
5. Epigraphica Indica Vol 15, Verse 13, Page 70 (Anbil plates of Sundara chola).
6. ஆழ்வார்கள் காலநிலை - மு. இராகவையங்கார், பக்கம் 40.
7. புறநானூறு - உ.வே. சாமிநாதய்யர் உரை, பக்கம் 184, பாடல் - 74.
8. களவழி நாற்பது - கழகப் பதிப்பு, பக்கம் 4.
9. புறநானூறு - செய்யுள் 74.
10. புறநானூறு - உ.வே. சாமிநாதய்யர் உரை, பக்கம் 582.
11. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 8.
12. புறநானூறு II - அவ்வை சு. துரைசாமி உரை, கழகப்பதிப்பு, பக்கம் 6.
13. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, முகவுரை, பக்கம் 4.
14. தமிழ் நாவலர் சரிதை - கழகப்பதிப்பு, பக்கம் 130.
15. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 9, களவழி நாற்பது - கழகப் பதிப்பு, முகவுரை, பக்கம் 5.
16. தமிழ் நாவலர் சரிதை - கழகப்பதிப்பு, பக்கம் 130.
17. விக்கிரமசோழன் உலா - கழகப்பதிப்பு, பக்கம் 28, வரி 27,28.
18. குலோத்துங்க சோழன் உலா - கழகப்பதிப்பு, பக்கம் 28, வரி 39,40.
19. இராசராச சோழன் உலா - கழகப்பதிப்பு, பக்கம் 2, வரி 35,36.
20. பண்டை நாளைச் சேரமன்னர்கள் - அவ்வை சு. துரைசாமி, பக்கம் 299.
21. சேரர் வரலாறு - துடிசைகிழார் சிதம்பரனார், பக்கம் 138.
22. சேரர் வரலாறு - துடிசைகிழார் சிதம்பரனார், பக்கம் 139.
23. நற்றிணை - கழகப்பதிப்பு, பாடினோர் வரலாறு, பக்கம் 40.
24. களவழி நாற்பது - பாடல்கள் 15,21,29,30,40.
25. களவழி நாற்பது - பாடல்கள் 4,5,11.
26. களவழி நாற்பது - பாடல்கள் 6,22,33.
27. புறநானூறு - உ.வே. சாமிநாதய்யர் பதிப்பு, செய்யுள்கள் 48,49.
28. நற்றிணை - கழகப்பதிப்பு, செய்யுள் 11.
29. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, முகவுரை, பக்கம் 5.
30. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 8.
31. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, செய்யுள் 37.
32. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, பக்கம் 28.
33. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, பக்கம் 27.
34. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, பக்கம் 29.
35. புறநானூறு - உ.வே.சாமிநாதய்யர் பதிப்பு, செய்யுள் 48.
36. புறநானூறு - உ.வே.சாமிநாதய்யர் பதிப்பு, செய்யுள் 49.
37. பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகம், பக்கம் 145, பாடல் எண் 6, திருவேங்கடத்தான் திருமன்றப் பதிப்பு.
38. பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகம், பக்கம் 146, பாடல் எண் 9, திருவேங்கடத்தான் திருமன்றப் பதிப்பு.
39. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீனப் பதிப்பு, திருவைகல் மாடக்கோயில், பக்கம் 85, பாடல் எண் 6.
40. சோழர் வரலாறு - டாக்டர் மா. இராசமாணிக்கனார், பக்கம் 13.
41. பெரிய திருமொழி - திருநறையூர்ப் பதிகம், பக்கம் 146, பாடல் எண் 8.
42. பெரிய திருமடல், பக்கம் 102, வரி 119.
43. பெரிய திருமொழி, மூன்றாம் திருநறையூர்ப் பதிகம் பக்கம் 144, பாடல் எண் 2.
44. ஆறாம் திருமுறை - திருநாவுக்கரசர், தருமபுர ஆதீனப் பதிப்பு, பக்கம் 95, செய்யுள் எண் 7.
45. நான்காம் திருமுறை - திருநாவுக்கரசர், தருமபுர ஆதீனப் பதிப்பு, பக்கம் 78, செய்யுள் எண் 83.
46. பெரிய திருமொழி - திருநறையூர்ப் பதிகம், பக்கம் 144, செய்யுள் எண் 3.
47. பல்லவர் சரித்திரம் - பி.தி.சீனிவாச அய்யங்கார், பக்கம் 114.
48. பெரிய திருமொழி, திருவேங்கடத்தான் திருமன்றப் பதிப்பு, பக்கம் 148, செய்யுள் எண் 6.
49. பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகம் 4, பக்கம் 148, செய்யுள் எண் 6.
50. பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகம் 6, பக்கம் 153, செய்யுள் எண் 9.
51. பெரிய திருமொழி, திருமாலிருஞ்சோலை 2, பக்கம் 227, செய்யுள் எண் 1.
52. பெரிய திருமொழி, திருமாலிருஞ்சோலை 2, பக்கம் 227, செய்யுள் எண் 2.
53. பெரிய திருமொழி, திருவழுந்தூர் 4, பக்கம் 174, செய்யுள் எண் 2.
54. பெரிய திருமொழி, திருவழுந்தூர் 4, பக்கம் 176, செய்யுள் எண் 10.
55. பெரிய திருமொழி, திருத்தேவனார் தொகை, பக்கம் 81, செய்யுள் எண் 6.
56. பெரிய திருமொழி, திருவெள்ளியங்குடி, பக்கம் 105, செய்யுள் எண் 4.
57. பெரிய திருமொழி, திருப்புள்ளம் பூதங்குடி, பக்கம் 107, செய்யுள் எண் 1.
58. பெரிய திருமொழி, திருத்தேவனார் தொகை, பக்கம் 81, செய்யுள் எண் 9.
59. ஆறாம் திருமுறை, அடைவுத் திருத்தாண்டகம், பக்கம் 521.
60. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருவைகல் மாடக்கோயில், பக்கம் 84.
61. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருவைகல் மாடக்கோயில், பக்கம் 84.
62. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருஅம்பர்பெருந்திருக்கோயில், பக்கம் 87.
63. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருஅம்பர்பெருந்திருக்கோயில், பக்கம் 87.
அத்தியாயம் 1
முற்காலச் சோழப் பெருவேந்தர்களுள் குறிப்பிடத்தக்க சிலருள் முதன்மையானவன் சோழன் கோச்செங்கணான். இப்பெருமகனைப்பற்றிப் பல வரலாற்றுக் குறிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில வரலாற்று ஆய்வாளர்கள் இப்பெருமகனைச் சங்ககாலச் சோழப்பேரரசர்களுள் ஒருவனாகக் கொள்கின்றனர்(1). வேறு ஆய்வாளர் சிலர் நீண்ட செடும் ஆய்வுக்குப் பிறகு கோச்செங்கணான் தமிழகத்தின் இருண்ட காலத்தில் வாழ்ந்த (கி.பி. 300-600) மன்னர்களுள் ஒருவன் என்று வரையறுக்கின்றனர்(2). கோச்செங்கட்சோழனைக் கணைக்கால் இரும்பொறையுடன் தொடர்புபடுத்திக் கூறுவது போலவே, சேரமான் கோக்கோதை மார்பனுடன் தொடர்புபடுத்திப் பேசுவாரும் உளர். அப்பெருமானைச் சைவத்தில் தழைத்த நாயன்மார்களுள் ஒருவனாய்க் கொண்டாடிவரும் அதே நேரத்தில், அவனைத் திருமால் அடியவனாய்ச் சிறப்புப் பெற்றவன் என்று கூறுவாரும் உளர்(3). அவன் எடுப்பித்த எழுபது மாடக்கோயில்களும் சிவபெருமானுக்கா, திருமாலுக்கா அல்லது இருவருக்குமா என்பதிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன(4). இவற்றையெல்லாம் வரலாற்று இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு தெள்ளத் தெளிய நடுவு நிலையில் நின்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
கோச்செங்கட்சோழனைப் பற்றிய குறிப்புகளைப் புறநானூறு, களவழி நாற்பது, சம்பந்தர், அப்பர், சுந்தரர் தேவாரப் பதிக்ங்கள், பெரிய திருமொழி, திருத்தொண்டத்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, பெரியபுராணம், திருவானைக்கா புராணம், கலிங்கத்துப்பரணி, மூவருலா போன்ற இலக்கியங்களில் காணலாம். அன்பில் செப்பேடுகளில் கோச்செங்கணான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன(5). இது தவிர திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் கன்னியாகுமரிக் கல்வெட்டுகளும் செங்கணானைக் கரிகாலன் வழித்தோன்றலாகவும், ஒன்பதாம் நூற்றாண்டினனான விசயாலயச் சோழனுக்கு முன்னோனாகவும் இடையில் வைத்துக் கூறுகின்றன(6).
இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள் இவற்றை வைத்து நோக்கும்போது கோச்செங்கணான் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவன் என்பது உறுதியாகின்றது. ஆய்வாளர்களுக்குள் இதில் கருத்து மாறுபாடு இல்லை. அவன் சங்க காலத்தில் வாழ்ந்தவனா அல்லது சங்க காலத்திற்குப் பிறகு வாழ்ந்தவனா என்பதே ஆய்வுக்குரிய செய்தியாகும். கோச்செங்கட்சோழன் சங்க காலத்தில் வாழ்ந்தவன் என்று ஆய்வுரை செய்யும் பெருமக்கள் அதற்காக எடுத்துக் கொள்ளும் காட்டுகள் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பும்(7), களவழி நாற்பது ஏட்டின் உரைகாரர் எழுதிய பின்குறிப்புமேயாகும்(8). இவற்றைத் தெளிவாகக் காண்போம்.
"குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத்தானெ". (9)
இப்புறப்பாடலின் அடிக்குறிப்பில் 'சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது, பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து, தண்ணீர் தாவென்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து, உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்று காணப்படுகிறது. இந்த அடிக்குறிப்பு, இப்பாடலைப் பாடிய, புலவர் எழுதியதன்று என்பது, 'உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு' என்பதால் அறியப்படும். புறநானூற்றுப் பாடல்களின் கீழ் உள்ள அடிக்குறிப்புகள் பல பிற்காலத்தில் எழுதப்பட்டவையாகும். அவை பல இடங்களில் பொருத்தமற்று விளங்குவது கண்கூடு. புறம் 389ஆம் செய்யுளில்,
"ஆதனுங்கன் போல நீயும்
பசித்த வொக்கற் பழங்கண் வீடே
வீறுசால் நன்கல நல்குமதி பெரும"
என வரும் தொடர்களைக் கண்டதும், 'ஆதனுங்கனைக் கள்ளிலாத்திரையனார் பாடிய பாட்டு' என்று அடிக்குறிப்பு தரப்பட்டுள்ளது(10). இங்கு 'ஆதனுங்கன் போல நீயும்' என வரும் தொடரே, ஆதனுங்கன் உவமைக்காக மேற்கொள்ளப்பட்ட பெயர் என்பதை விளக்குகிறது. இவ்விளக்கத்தைக் கொள்ளாமல் இது ஆதனுங்கனைப் பாடிய பாட்டு எனப் பிழையான அடிக்குறிப்பு செய்திருப்பது போலவே, பிழைபட்ட இடங்களும் பொருத்தமற்ற அடிக்குறிப்புகளும் பலவாகும். இத்தகைய அடிக்குறிப்புகளில் ஒன்றாகவே செங்கணானைக் குறிக்கும் அடிக்குறிப்பையும் கொள்ளலாம்(11).
மேலும் பேராசிரியர் அவ்வை சு.துரைசாமி அவர்களால் உரை எழுதப்பெற்று, கழகத்தால் வெளியிடப்பட்ட புறநானூற்றுப் பதிப்பில் இப்பாடலின் அடிக்குறிப்பு மாறிக் காணப்படுவது இங்குக் குறிப்பிடத் தகுந்தது. 'இது நல்லேர் முதியனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது' என்று அடிக்குறிப்பு மாறியுள்ளது. இப்பதிப்பின் முன்னுரையில் அவ்வை சு.துரைசாமி அவர்கள், உ.வே.சா அவர்களின் பதிப்புக்கும் தம் பதிப்புக்கும் உள்ள மாறுபாடுகளை விளக்குகையில் தமக்குக் கிடைத்த ஓலைச் சுவடியிலிருந்து இம்மாற்றங்களைச் செய்ததாகக் குறிக்கிறார்கள்(12). இப்படிப் பதிப்புக்குப் பதிப்பு மாறும் அடிக்குறிப்புகளைக் கொண்டு ஒரு மாமன்னனின் காலத்தை நிறுவுவது அறிவுடைமையாகாது.
களவழி நாற்பது நூலின் இறுதியில் அதன் பழைய உரையாசிரியர், 'சோழன் கோச்செங்கணானும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போர்ப்புறத்துப் பொருதுடைந்துழிச் சேரமான் கணைக்கால் இரும்பொறையைப் பற்றிக்கொண்டு, சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று' என்று குறிப்பிடுகிறார்(13).
தமிழ் நாவகர் சரிதையில், கணைக்கால் இரும்பொறையால் பாடப்பட்டதாகக் கூறப்படும் புறநானூற்றின் 74-ஆம் பாடல், 'இது சேரமான் கணைக்கால் இரும்பொறை, செங்கணானால் குணவாயில் கோட்டத்துத் தளைப்பட்டபோது, பொய்கையாருக்கு எழுதி விடுத்த பாட்டு' என்ற அடிக்குறிப்புடன் காணப்படுகிறது(14). இது குறித்து டாக்டர் மா. இராசமாணிக்கனாரவர்களும், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்களும், தங்கள் நூல்களில் விரிவாகவே குறிப்பிடுகின்றார்கள்(15).
புறநானூற்றின் அடிக்குறிப்பு, 'கணைக்கால் இரும்பொறை சிறையில் இறந்தான்' என்று குறிப்பிடுகின்றது, தமிழ் நாவலர் சரிதையில் அச்செய்யுளின் அடியில், 'இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது(16).
ஒட்டக்கூத்தர் தாம் பாடிய மூன்று உலாக்களிலும் இச்செய்தியைக் குறிப்பிடுகிறார்.
"மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும்" (17)
"... பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்" (18)
"நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால்தளையை விட்டகோன்" (19)
இதையே சயங்கொண்டாரும் கலிங்கத்துப் பரணியில் இராச பாரம்பரியத்தில்,
"களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்"
என்று குறிப்பிடுகிறார்.
இவ்விலக்கியச் சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் பல கருத்துகளைத் தெரிவிக்கின்றன. சேரன் சோழனின் சிறையில் இறந்தான் என்ற புறநானூற்று அடிக்குறிப்பும், சேரன் பொய்கையாருக்கு எழுதிவிடுத்த இப்பாட்டு கேட்டுப் பொய்கையார் களவழி பாட, செங்கணான் சேரனைச் சிறைவிட்டு அரசளித்தான் என்று தமிழ் நாவலர் சரிதையும், சோழன் சேரனைப் பொய்கையார் பாடலுக்கு விடுதலை செய்தான் என்று ஏனைய இலக்கியச் சான்றுகளும் குறிப்பிடுகின்றன. இவற்றில் எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று தெளிவு காண வேண்டும்.
அத்தியாயம் 2
சோழனுடன் போரிட்ட சேரமன்னனின் பெயர் எந்த ஒரு பாடலிலும் கூறப்படவில்லை. பாடல்களின் அடிக்குறிப்புகளில் மட்டுமே அம்மன்னன் கணைக்கால் இரும்பொறை என்று குறிப்பிடப்படுகிறான். அப்படியானால் சோழ வேந்தனுடன் போரிட்டது கணைக்கால் இரும்பொறையா அல்லது வேறு சேரவேந்தனா? வேறு சேரமன்னன் என்றால் அவன் யாராக இருக்க முடியும் என்பதைத் தெளிய வேண்டும்.
சோழன் கோச்செங்கணானும் சேரமன்னனும் பொருத இடம் கழுமலம் என்று களவழி நாற்பதும், குணவாயிற் கோட்டம் என்று தமிழ் நாவலர் சரிதையும், திருப்போர்ப்புறமெனப் புறநானூறும் பேசுகின்றன. இவற்றில் போர் நடந்த இடம் எது என்பதை ஆய்ந்தறிய வேண்டும்.
சேரமன்னர்களின் வரலாற்றை ஆய்ந்தெழுதிய பெருமக்களும் இப்போர் குறித்தும் இதன் முடிவு குறித்தும் குழப்பமான நிலையிலேயே செய்தி தருகின்றனர். பேராசிரியர் அவ்வை சு.துரைசாமி அவர்கள் கழுமலத்தில் போர் நடந்ததாகவும் பின் திருப்போர்ப்புறம் என்னும்¢டத்தே தொடர்ந்த போரில் கணைக்கால் இரும்பொறை தோல்வியுறக் குடவாயிற் கோட்டட்தில் சோழனால் சிறைவைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்(20).
துடிசைகிழார் சிதம்பரனார் அவர்களோ, இருவருக்கும் பல போர்கள் நடந்ததாக்வும், அவைகளுள் சிறந்தவை நான்கென்றும் குறிப்பிட்கிறார்(21). அவர் கூற்றுப்படி,
முதல்போர் குணவாயிற் கோட்டத்தில் கி.மு. 45 இல் நடைபெற்றது. சேரன் தோற்றான். இதற்கு ஆதாரமாகத் தமிழ் நாவலர் சரிதையின் அடிக்குறிப்பைக் கொள்கிறார்.
இரண்டாம் போர் சோழ நாட்டு வெண்ணிப் பறந்தலையில் கி.மு. 42 இல் நடைபெற்றது. இதிலும் சேரன் தோற்றான். இதற்கு ஆதாரமாக நற்றிணை முகவுரையைக் காட்டுகிறார்.
மூன்றாம் போர் கழுமலம் என்னும் இடத்தில் கி.மு. 40 இல் நடைபெற்றது. இதிலும் சேர அரசன் தோற்றுச் சிறைபிடிக்கப் பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்பட்டான். இது கேள்விப்பட்டு, பொய்கையார், கடைச்சங்கப் புலவராயும் சோழன் கோச்செங்கணானின் நண்பராகவும் இருந்தமையால், சோழன் வெற்றியைக் குறித்துக் களவழி பாடி அதற்குப் பரிசாக சேரனைச் சிறையினின்று மீட்டார்.
நான்காம் போர், கொங்கு நாட்டில் திருப்பூருக்குப் பக்கத்திலுள்ள (திருப்போர்ப்புறம்) கோயில் வெளி என்னும் இடத்தில் கி.மு. 35 இல் நடந்தது. இதிலும் சேரன் தோல்வியுற்று மீட்டும் சிறைபிடிக்கப்பட்டான். இதுபோழ்துதான், அவன் புறநானூற்றின் 74 ஆம் பாடலான, 'குழவி இறப்பினும்' என்ற பாடலைப் பாடி உயிர் துறந்தான்.
துடிசைகிழார் அவர்கள் குறிப்பிடும் இப்போர்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம். முதல் போர் குணவாயில் கோட்டத்தில் நடந்ததாகக் கூறப்படுவதற்குத் துடிசைகிழார் அவர்கள் தமிழ் நாவலர் சரிதையின் அடிக்குறிப்பினையே ஆதாரம் காட்டுகிறார்கள். அதே அடிக்குறிப்பில், சேரன் சிறைப்பட்ட செய்தியும், அவன் 'குழவி இறப்பினும்' என்னும் பாடலை அங்கிருந்தே எழுதிப் பொய்கையாருக்கு அனுப்ப, அவர் வந்து சோழனைப் பாடிச் சேரனை விடுதலை பெற்ற செய்தியும் சொல்லப்பட்டுள்ளன. இதையெல்லான் துடிசைகிழார் அவர்கள் ஏனோ கொள்ளவில்லை.
உறையூர்க் கோட்டையின் கிழக்குப் பக்கத்து வாயிலே குணவாயில் கோட்டம் என்றும் அதுதான் தற்போதைய தாயுமானசுவாமி மலைக்கோயில் உள்ள பகுதி என்றும் துடிசைகிழார் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்(22). உறையூர்க் கோட்டையின் கிழக்குப்பக்க வாயில்தான் குணவாயிற்கோட்டமென்றால், சேரன் சோழன் மீது படையெடுத்து வந்ததாகக் கொள்ள நேரிடும். சேரன் கோட்டை வாயிலருகில் படையுடன் வரும் வரை சோழன் என்ன செய்து கொண்டிருந்தான் என்ற வினா எழும்! எனவே, குணவாயிற் கோட்டத்தில் போர் நடந்ததாகக் கொள்வது பொருத்தமற்றது.
தமிழ் நாவலர் சரிதை காலத்தால் மிகவும் பிற்பட்டது. புறநானூற்று அடிக்குறிப்புக்கும் தமிழ் நாவலர் சரிதை அடிக்குறிப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. புறநானூற்ற்¢ல் குறிக்கப்பட்டுள்ள குடவாயிற்கோட்டம் இதில் குணவாயிற்கோட்டம் என்று குறிக்கப்பட்டுள்ளது. குடவாயிற்கோட்டம் என்பதே குணவாயிற்கோட்டம் என்று தவறாகத் திரித்து எழுதப்பட்டிருக்கலாம் என்று கொள்வதே பொருத்தமானதாக அமையும். இக்குடவாயிற் கோட்டத்துச் சிறையில் இருந்ததாகக் கருதப்படும் சேரன், சிறைய்¢ல் இருந்தபடியே பொய்கையாருக்குப் பாட்டெழுதி அனுப்பியதாகத் தமிழ் நாவலர் சரிதை அடிக்குறிப்பு கூறுவத் எவ்வகையானும் பொருந்தாது. அது சேரமானின் வீரத்துக்கே இழுக்குத்ட் தேடுவதாக அமையும். எனவே தமிழ் நாவலர் சரிதைக் குறிப்பில் கண்டுள்ள செய்திகள் தவறானவை என்று முடிவு கோடலே பொருந்தும்.
இரண்டாவது போர் வெண்ணிப் பறந்தலையில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறார் துடிசைகிழார். இதற்கு நற்றிணை முகவுரை ஆதாரம் காட்டப்படுகிறது. நற்றிண்ணயில், பொய்கையார் வரலாறு கூறுமிடத்தில், சோழனுக்கும் சேரனுக்கும் வெண்ணிப்பறந்தலை (கோயில் வெண்ணிவெளியில் போர் நடந்ததாகவும், அப்போரில் சேரமான் தோற்றுக் குடவாயிற்கோட்டத்தில் சிறை வைக்கப்பட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து, இப்பொய்கையாரே வைணவர்கள் கூறும் பொய்கையாழ்வாரென்று அறியப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது(23). இங்கு இரண்டு செய்திகள் முரண்படுகின்றன.
1. கோயில் வெண்ணி வெளியில் நடந்ததாகக் கூறப்படும் இப்போரில் சேரன் சிறைப்பட்டான் என்று நற்றிணை முகவுரை சொல்கிறது. ஆனால் துடிசைகிழார் அவர்கள் இப்போரை வெண்ணிப்பறந்தலையில் நடந்ததாகக் கொண்டு, அஃதாவது வெண்ணிப்பறந்தலை வேறு, கோயில்வெளி வேறு என்று எடுத்துக்கொண்டு சேரன் தோற்றான் என்று மட்டுமே கூறுகிறார். ஓரிடத்தில் நடந்த போரையே இரண்டு இடங்களில் நடந்ததாகக் கொண்டு இரண்டு போர்களாகக் கற்பனை செய்திருப்பது வியப்புக்குரியது.
2. களவழி பாடிய புலவரும் முதலாழ்வார்களுள் ஒருவரான பொய்கையாழ்வாரும் ஒருவரென்று நற்றிணை முகவுரை குறிப்பிடுவதைக் கொண்டால், பொய்கையாழ்வாரின் காலமும் இப்போர் நடந்ததாகத் துடிசைகிழார் அவர்கள் குறிப்பிடும் காலமும் பொருந்தாமல் போகும். எனவே இந்த இரண்டாவது போர்ச்செய்தி குறித்துத் துடிசைகிழார் அவர்கள் கூறும் செய்திகள் பொருந்தி வரவில்லை.
இதே போரைப்பற்றித் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில், திருநறையூர்ப் பதிகத்தில் சோழன் கோச்செங்கணானைப் பாடும்போது,
"வெங்கண்மா களிறுந்தி வெண்ணி யேற்ற
விறல்மன்னர் திறலழிய வெம்மா வுய்த்த
செங்கணான் கோச்சோழன்"
என்றும்,
"கவ்வைமா களிறுந்த்¢ வெண்ணி யேற்ற
கழல் மன்னர் மணிமுடிமேல் காகமேற"
என்றும் பாடுவதால், வெண்ணியில் கோச்செங்கணான் பகைவருடன் போரிட்டது உறுதியாகின்றது. இப்போர்¢ல் செங்கணானுடன் போரிட்டுத் தோற்ற, கழல் மன்னரென்றும் விறல் மன்னரென்றும் குறிக்கப்படுபவர் யார்? நற்றிணை முகவுரையின்படி இப்போர் சோழனுக்கும் சேரனுக்கும் இடையே நடந்ததென்று கொண்டால் அச்சேர வேந்தன் கணைக்கால் இரும்பொறைதான் என்பதற்குச் சான்றுகள் உள்ளனவா? இப்போரில் சேரன் சிறைப்பட்டான் என்று நற்றிணை முகவுரை சொல்கின்றது. ஆனால் திருமங்கையாழ்வார் அது குறித்து ஏதும் தம் பதிகத்தில் குறிப்பிடவில்லை என்பது நினைக்கத்தக்கது.
மூன்றாம் போர் கழுமலத்தில் நடந்ததாகத் துடிசைகிழார் குறிப்பிடுகிறார். இப்போர் நடந்ததைக் களவழி நாற்பது பாடல்களே அரண் செய்கின்றன. கோச்செங்கணானைப்பற்றிக் கூறும் பல நூல்களுள் நேரடியாகக் கோச்செங்கட்சோழனைப் பாடிய பெருமையை உடையது களவழி நாற்பது ஒன்றே. எனவே களவழி நாற்பது தரும் செய்திகளை ஏற்பது ஏற்புடைத்து. இது கோச்செங்கட்சோழன் வஞ்சியரசன் ஒருவன் மீது செய்த போரைப் பாடிச் சோழனைப் புகழும் முகத்தான் எழுந்த நூலாகும். இதில் நாற்பது பாடல்கள் உள்ளன. இவற்றுள் ஐந்து பாடல்களில் செங்கட் சினமால் என்றும்(24), மூன்று மாடல்களில் செங்கண்மால் என்றும்(25), மூன்று பாடல்களில் திண்தேர்ச் செம்பியன் என்றும்(26), பிற பாடல்களில் நீர்நாடன், புனல்நாடன் என்றும் இச்சோழர் பெருமான் குறிக்கப்படுகிறான்.
இந்நூலின் 36 ஆம் பாடலில்,
"காவிரி நாடன் கழுமலம் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாம் கீழ்மேலாய்
ஆவுதை கரளாம்பி போன்ற புனனாடன்
மேவாரை அட்ட களத்து"
எனவரும் வரிகள் கொள்ளத்தக்கன. 'கழுமலம் கொண்ட நாள்' என்னும் குறிப்பு போர் நடந்த இடத்தையே குறிப்பதென்பது உணரத்தக்கது.
நான்காவது போர் திருப்போர்ப்புறம் (திருப்பூருக்கு அருகிலுள்ள கோயில்வெளி) என்ற இடத்தில் நடந்ததாகவும், சேரன் அங்கும் தோற்றுச் சிறைபிடிக்கப்பட்டான் என்றும், அந்நிலையில்தான் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் 'குழவி இறப்பினும்' என்னும் பாடலைப் பாடித் துஞ்சினான் என்றும் துடிசைகிழார் குறிப்பிடுகிறார். இந்தக் கோயில்வெளிப் போரைத்தான் நற்றிணை முகவுரை வெண்ணிப் பறந்தலைப் போராகக் குறிப்பிடுகின்றது. புறநானூற்று அடிக்குறிப்பு திருப்போர்ப்புறத்துப் போராகக் குறிப்பிடுகின்றது. இம்மூன்று செய்திகளை நோக்க துடிசைகிழார் குறிப்பிட்ட இரண்டாவது போரும் நான்காவது போரும் ஒன்றே என்பதும், பல பெயர்களைக் கொண்ட ஒரே இடத்தில் நடந்ததென்பதும் பெறப்படும். மேலும் இதுவரை கண்ட செய்திகளிலிருந்து சோழன் கோச்செங்கணான் பகை அரசன் ஒருவனுடன் கழுமலத்திலும், வெண்ணி என்னும் கோயில்வெளியிலும் போரிட்டிருப்பது புலனாகின்ரது. இப்போர்களில் சோழனோடு பொருத பகையரசன் சேரவேந்தனே என்பது,
"மைந்துகால் யாத்து மயங்கிய ஞாட்பினுள்
புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை
பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து",
என்னும் களவழி நாற்பதின் 39 ஆம் பாடலால் அறியப்படும். இச்சேரவேந்தன் கணைக்கால் இரும்பொறை என்பதற்கு யாதொரு சான்றும் களவழி நாற்பதில் இல்லை. வென்ற மன்னனைப் பல இடங்களில் பெயர் குறிப்பிட்டுப் புகழும் புலவர் தோற்ற வேந்தனின் பெயரை ஓரிடத்தானும் குறித்தாரில்லை.
உலாப் பாடல் வரிகளும், பரணிப் பாடல் வரிகளும், சோழன் களவழி நாற்பது கொண்டு விடுதலை செய்த மன்னனை வில்லவன், பொறையன், உதியன் என்று குறிக்கின்றனவேயன்றி, 'கணைக்கால் இரும்பொறை' என்று ஓரிடத்தானும் குறித்தில. சோழனோடு போர் செய்த சேரவேந்தன் கணைக்கால் இரும்பொறையா அல்லது வேறு சேர மன்னனா என்பது ஆய்வுக்குரியது.
கோச்செங்கணானைப் பாடிய பொய்கையார் கோக்கோதை மார்பன் என்ற சேரமன்னனைப் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இரண்டும்(27), நற்றிணையில் ஒன்றுமாய் இடம் பெற்றுள்ளன(28). களவழி நாற்பது உரைய்¢ல் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள், புறநானூற்றுக் குறிப்பே வலியுடையதென்று கொள்ளின், அது பரணி, உலா முதலியவற்றுடன் முரணாமைப் பொருட்டுத் துஞ்சினான் கணைக்கால் இரும்பொறையாகச் சிறைவீடு செய்து அரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரனாவான் என்று கொள்ள வேண்டும்' என்றும், 'அவ்வேந்தன் கணைக்கால் இரும்பொறையின் வேறாகிச் சோழனால் சிறைப்பட்டவனாயின் அவனை விடுவித்து, களவழி நாற்பது பாடல் பாடப்பட்டதென்று கோடல் அமையும்(29)' என்றும் ஒரு முடிவுக்கு வர முயல்கிறார்கள். இதையே டாக்டர். மா. இராசமாணிக்கனாரவர்கள் தம் சோழர் வரலாற்றில், 'இங்ஙனம் பேரறிஞரையும் (நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்) குழப்பத்திற்கு உட்படுத்தும் பொருத்தமற்ற அடிக்குறிப்புக்களைக் கொண்டு கோச்செங்கணான் போன்ற பேரரசர் காலத்தை வரையறுத்தல் வலியுடைத்தாகாது(30)' என்கிறார்கள்.
அத்தியாயம் 3
கோச்செங்கணான் காலம்
சோழனோடு போரிட்ட இச்சேரமன்னன் யாராக இருக்க முடியும் என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு முன், இம்மன்னன் சோழனால் சிறைப்படுத்தப்பட்ட செய்தி உண்மைதானா என்பதையும், அப்படிச் சிறைப்படுத்தப்பட்டிருந்தால், சிறைக்கூடத்திலிருந்தபடி இம்மன்னன் பாடியதுதான் புறநானூற்றில் 74ஆம் பாடலாக மலர்ந்துள்ளதா என்பதையும், இவனை மீட்கத்தான் பொய்கையார் களவழி பாடினாரா என்பதையும், இவன் சிறையில் இறந்தானா அல்லது சிறைமீட்கப்பட்டானா என்பதையும் ஆய்ந்தறிவது நன்று.
"அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு
முத்துடைக் கோட்டக் களிறீர்ப்ப - எத்திசையும்
பெளவம் புணரம்பி போன்ற புனனாடன்
தெவ்வரை அட்ட களத்து" (31)
என்ற களவழி நாற்பது பாடலின் முதல்வரியில் காணப்படும் 'அரசர் பிணங்கான்ற' என்ற தொடருக்கு 'அரசரின் உடல் மறிந்து கிடப்பதனை' என்று நாட்டாரவர்கள் பொருள் எழுதுகிறார்கள்.
'நீர்நாட்டையுடைய கோச்செங்கட்சோழன் பகைவரைக் கொன்ற போர்க்களத்தில், அரசர் பிணங்கள் சிந்திய உதிர வெள்ளங்கள் எல்லாத் திசைகளிலும் முரசினோடு, முத்தினையுடைய கொம்புகளையுடைய யானைகளை இழுப்ப, அவை கடலையும், அக்கடலைச் சார்ந்த மரக்கலங்களையும் ஒத்தன', என்று மேற்கண்ட பாடலுக்கு நாட்டாரவர்கள் உரையெழுதுகிறார்கள். (32)
களவழி நாற்பது முப்பத்தைந்தாம் பாடலில்,
'உரைசால் உடம்பிடி மூழ்க அரசோ(டு)
அரசுவா வீழ்ந்த களத்து'
என்ற வரிகளும் ஈண்டு கவனிக்கத்தக்கன. இதற்குப் பொருள் கூறும்போது, 'புகழமைந்த வேல்கள் குளிப்ப அரசரோடு பட்டத்து யானை மறிந்து வீழ்ந்த களத்தின்கண்' என்று நாட்டாரவர்கள் குறிப்பிடுகிறார்கள். (33)
களவழி நாற்பது முப்பத்தொன்பதாம் பாடலின் கடைசி வரியில் 'வஞ்சிக்கோ அட்ட களத்து' என்று புலவர் குறிப்பிடுவதை, 'வஞ்சி அரசனாகிய சேரனைக் கொன்ற போர்க்களத்திலே' என்று உரை விளக்கம் செய்கிறார் நாட்டாரவர்கள், (34)
வேல்பட்டு பட்டத்து யானையும் அரசனும் வீழ்வதாக முப்பத்தைந்தாம் பாடலிலும், அரசனது பிணத்திலிருந்து சிதறிய குருதி வெள்ளத்தில் யானை, முரசு முதலியன இழுபட்டுச் செல்வதாக முப்பத்தேழாம் பாடலிலும், வஞ்சியரசனாகிய சேரனைக் கொன்ற போர்க்களமென்று முப்பத்தொன்பதாம் பாடலிலும் புலவர் மிகத்தெளிவாகச் செய்திகளைச் சொல்லியிருக்கின்றார். எனவே, இம்மூன்று பாடல்களின் தெளிவான அடிப்படையில், சோழமன்னனோடு போரிட்ட சேரவேந்தன், அவன் யாராக இருந்த போதும், போர்க்களத்தில் மடிந்ததாகக் கொள்வதே பொருத்தமுடையதாகும். களவழி பாடிய புலவரே வஞ்சியரசன் போர்க்களத்தில் மடிந்த செய்தியைத் தெளிவாக்கி விடுவதால், அம்மன்னன் சோழனால் சிறைகொள்ளப்பட்டதும், அவனை விடுவிக்கும் பொருட்டே களவழி பாடப்பட்டதென்பதும், அது கேட்டுச் சோழன் சேரனுக்கு அரசளித்தான் என்பதும் பொருந்தாமை காண்க.
ஒட்டக்கூத்தர் உலாவும் சயங்கொண்டாரின் பரணியும் காலத்தால் மிகவும் பிற்பட்ட நூல்கள். அவர்தம் நூல்களின் வழிவழி வரலாறு கூறும் பகுதியில், வழங்கிவந்த செய்திகள் பல இணைக்கப்பட்டுள்ளமை கண்கூடு. அவற்றுள் ஒன்றாகவே செங்கணான் களவழிக்குச் சேரனைத் தளைவிடுத்த செய்தியைக் கொள்வோமானால், களவழி நாற்பது சோழனின் வெற்றியைப் போற்றிப் பாடப்பட்டதே அன்றி, சேரனின் விடுதலை வேண்டிப் பாடப்பட்டதன்று என்பது புலப்படும்.
புறநானூற்றின் 74ஆம் பாடல், நற்றிணையின் 18ஆம் பாடல் இரண்டிலுமே சேரவேந்தனின் பெயர் குறிக்கப்படவில்லை. நற்றிணை 18ஆம் பாடலில், 'பொறையன்' என்ற பெயரே குறிக்கப்படுகின்றது. பொய்கையார், கோக்கோதை மார்பன் என்ற சேரமன்னனைப் பாடிய பாடல்கள் இரண்டு புறநானூற்றில் உள்ளன. அவற்றுள் ஒன்றில்,
'கண்ணா லும்மே கானலந் தொண்டி
அஃதெம் மூரே அவனெம் இறைவன்' (35)
என்று குறிப்பிடுகிறார். இன்னொன்றில்,
'நாடன் என்கோ ஊரன் என்கோ
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ
யாங்கன மொழிகோ வோங்குவாள் கோதையை' (36)
என்று குறிப்பிடுகிறார். இவற்றை நோக்கப் பொய்கையாரின் தலைவனாக அவர் காலத்தில், சேரநாட்டையாண்டது கோக்கோதை மார்பனே என்பது தெளிவுபடும். நற்றிணை பதினெட்டாம் பாடலில், 'பொறையன்' என்று குறிக்கப்படுவதும் இக்கோக்கோதை மார்பனாகத்தான் இருத்தல் வேண்டும் என்று கொள்வதே சால்புடையது. கோச்செங்கணானைப் பாடிக் களவழி இயற்றிய பொய்கையாரும், இக்கோக்கோதை மார்பனைப் பாடிய பொய்கையாரும் ஒருவராக இருக்கும் நிலையில், சோழனுடன் கழுமலத்திலும் வெண்ணியிலும் போரிட்டது இக்கோக்கோதை மார்பனாகவே இருத்தல் வேண்டும். வேறு தெளிவான சான்றுகள் புலப்படும் வரையில் இப்படிக் கொள்வதே ஏற்றமுள்ளதாக அமையும். புறநானூற்றுப் பாடல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டன. அதனால் சங்ககாலப் பாடல்களுடன் சங்கத்துக்குப் பிற்பட்ட காலகட்டத்தில் பாடப்பட்ட சில பாடல்களும் சேர்க்கப்பட்டு, புறநானூறு உருவாகியிருக்கலாம். கோக்கோதை மார்பனைப் பற்றிய பொய்கையாரின் பாடல்கள் புறநானூற்றுள் இடம்பெற்றமைக்கு இதுவே ஒரு காரணமாகலாம். எனவே இதுவரை கண்ட சான்றுகளைக் கொண்டு சோழன் கோச்செங்கணான், சேரன் கோக்கோதை மார்பன், புலவர் பெருமான் பொய்கையார் மூவரும் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவர்களே என்ற முடிவுக்கு வருவதில் யாதொரு தடையுமில்லை.
சோழன் கோச்செங்கணானின் காலத்தை நிறுவுவதில் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியும், திருமுறைகளும் பெரிதும் உதவுகின்றன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் மூன்றாம் திருநறையூர்ப் பதிகத்தில் பத்துப்பதிகப் பாடல்களிலும் கோச்செங்கணானைப் பாடிப் பரவியுள்ளார். அவர் குறிப்பிடும் வெண்ணிப் போரைப்பற்றி முன்பே கண்டோம். இளந்தைவேள் என்ற வேளிர்குல மன்னன் செங்கணானுக்குப் பகைவனாக இருந்தான் என்பதும், அவனைப் போரொன்றிலே தன் வேலைச் செலுத்தி அழித்த பெருவேந்தன் கோச்செங்கணான் என்பதும்,
'மின்னாடு வேலேந்து விளந்தை வேளை
விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட
தென்னாடன் குடகொங்கன்' (37)
என்ற ஆழ்வாரின் பாடல் வரிகளால் அறியக் கிடக்கின்றன. கோச்செங்கணான் அழுந்தையில் செய்த போரைப்பற்றி,
'பாராளர் அவர்இவரென் றழுந்தை யேற்ற
படைமன்னர் உடல்துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச்சோழன்' (38)
எனவரும் வரிகள் மேலும் விளக்குகின்றன. கோச்செங்கணானைக் குறிக்கும்போது, தெய்வவாள் வலம்கொண்ட சோழன், தென் தமிழன் வடபுலக்கோன் சோழன், உலகமாண்ட தென்னாடன் குடகொங்கன் சோழன், தேராலின் கோச்சோழன் என்று பல மொழிகளால் சிறப்புச் செய்யப்படுகிறான். சோழவேந்தனோடு போரிட்ட வேந்தர்களும் கழல் மன்னர், விறல் மன்னர், படை மன்னர் என்று சிறப்பிக்கப்படுகின்றனர். இப்பாடல்களிலிருந்து சோழன் பல போர்களைக் கண்ட பெருவீரன் என்பதும், பெரும்படை போற்றிய மன்னர் பலரை வென்றவன் என்பதும், தென்னவனாய் உலகமாண்ட மாமன்னன் என்பதும் புலனாகின்றன. திருஞானசம்பந்தரும் மூன்றாம் திருமுறையில்,
'திறையுடைய நிறைசெல்வன்' (39)
என்று கோச்செங்கணானைக் குறிப்பதால், பல மன்னர்களை வென்று திறைபெற்ற பெருவேந்தன் இப்பேரரசன் என்பது பெறப்படுகின்றது. 'வடபுலக்கோன்' என்று இம்மன்னனைத் திருமங்கையாழ்வார் குறிக்கக் காரணம் இருத்தல் வேண்டும் என்பதை டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் தம் சோழர் வரலாற்றில் மிகத் தெளிவாக ஆய்ந்து விளக்குகிறார்கள். (40)
கோச்செங்கணான் சங்க காலத்து மன்னனாக வாழ்ந்திருப்பின், இப்பெரும் போர்களில் ஏதேனும் ஒன்றைப்பற்றிய குறிப்பேனும் ஏதாவது ஒரு சங்கப்பாடலில் இடம் பெற்றிருக்கும். இம்மன்னன் பெருவேந்தனாக, மன்னர் பலரைப் பொருது வென்றவனாகத் திருமங்கையாழ்வாராலும், சம்பந்தராலும் குறிக்கப்பெறுவது போல வேறெந்தப் புலவர்களாலும் குறிக்கப்படவில்லை. சங்க நூல்களில் எங்குமே கோச்செங்கணான் குறிப்பிடப்படாத நிலையொன்றே இம்மன்னன் சங்க காலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்தவன் என்று துணியப் போதுமானதாகும். சங்க காலத்திற்குப் பிற்பட்டும், சிம்ம விஷ்ணுவின் பல்லவப் பேரரசு அமைவதற்கு முற்பட்டும் அமைந்த ஒரு காலகட்டத்தில் (கி.பி. 300 - கி.பி. 600) இம்மன்னன் வாழ்ந்ததாகக் கொள்வதே எவ்வழியினும் பொருத்தமுடையதாகும்.
அத்தியாயம் 4
கோச்செங்கணானின் கலைப்பாணியும் இறைத்தொண்டும்
இம்மன்னனின் கலைப்பாணியும், இறைத்தொண்டும் சிறப்புக்குரியன. மாடக்கோயில்கள் எழுப்பிய முதல் மன்னன் இப்பெருமகனே.
'இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு
எழில்மாடம் எழுபதுசெய்(து) உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச்சோழன்' (41)
எனவரும் பெரிய திருமொழிப் பாசுர வரிகள், இப்பெருமான் எழுபது மாடக்கோயில்களை எழுப்பிய செய்தியைத் தெரிவிக்கின்றன. இத்தகைய இறைபணி செய்த இம்மன்னன் சங்க காலத்தவனாய் இருந்திருப்பின் யாரேனும் ஒரு புலவராவது ஒரு பாடலிலாவது இச்செய்தியைக் கோடிகாட்டாது விட்டிரார். இம்மன்னன் சங்ககாலத்தவன் அல்லன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
இனி இம்மன்னன் எழுப்பித்த எழுபது மாடக்கோயில்களும் சிவபெருமானுக்கா அல்லது திருமாலுக்கா அல்லது இருவருக்குமா என்பது பற்றிக் காண்போம்.
'ஈசன்' என்னும் சொல் சிவபெருமானைத்தான் குறிக்கும் என்பதால், இக்கோயில்கள் எழுபதும் ஈசுவரனான சிவபெருமானுக்கே எடுப்பிக்கப்பட்டதாகப் பலரும் கருதினர். ஆனால் பெரிய திருமொழியில் பதினொரு இடங்களில் 'ஈசன்' என்ற சொல்லால் திருமங்கையாழ்வார் திருமாலைக் குறிப்பிடுகிறார். பெரிய திருமடலிலும், 'என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை' (42) என்று குறிப்பிடுகிறார்.
கோச்செங்கணானைப் பற்றிப்பாடும் திருநறையூர்ப் பதிகத்திலேயே,
'கொழுங்கயிலாயப் பெருவெள்ளம் கொண்டகாலம்
குலவரையின் மீதோடி அண்டத் தப்பால்
எழுந்தினிது விளையாடும் ஈசன் எந்தை
இணையடிக்கீழ் இனிதிருப்பீர்' (43)
என்று திருமாலை 'ஈசன்' என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
சிலர் 'எண்டோள் ஈசன்' என்பதால், அது சிவபெருமானைத்தான் குறிக்கிறது என்பார்கள்.
'நிணம்புல்கு சூலத்தார் நீல கண்டர்
எண்டோளர் எண்ணிறந்த குணத்தினாலே
கணம்புல்லன் கருத்துகந்தார்' (44)
என்ற வரிகளையும்,
எண்டோள் வீசிநின் றாடும்பி ராந்தன்னைக்
கண்காள் காண்மின்களோ' (45)
என்ற வரிகளையும் அதற்கு மேற்கோளாய்க் காட்டுவார்கள். அப்பர் பெருமான் சிவபெருமானை எண்டோள் ஈசனாக விளித்து வழிபட்டிருப்பது போலவே, திருமங்கையாழ்வார் கோச்செங்கணானைப் பாடும் அதே மூன்றாம் திருநறையூர்ப் பதிகத்தில்,
'பவ்வநீர் உடைஆடை யாகச் சுற்றிப்
பாரகலம் திருவடியாய்ப் பவனம் மெய்யா
செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம்
திருமுடியா நின்றான்பால் செல்ல கிற்பீர்' (46)
என்று திருமாலைத் திசையெட்டும் தோளாய்க் கொண்ட எண்தோள் ஈசனாகக் குறிப்பிடுகிறார். அப்பர் அடிகள் சிவபெருமானை எண்தோள் ஈசனாகப் பாடியிருக்கலாம். ஆனால் கோச்செங்கணான் எண்தோள் ஈசற்குக் கோயில்கள் எழுபது செய்தமை குறித்துப் பாடியது திருமங்கையாழ்வார்தாமே தவிர, அப்பர் அடிகள் அல்லரே! அதனால் திருமங்கையாழ்வார் எண்தோள் ஈசனாக யாரைக் கருதினார் என்பதே இங்கு நினைக்கத் தகுந்தது, வேறு ஏதேனும் பதிகத்தில் எண்தோள் ஈசனாகத் திருமாலைக் குறித்திருந்தாலும் பரவாயில்லை. அதே பதிகத்தில் மூன்றாம் பாடலில் திசையெட்டும் தோளாய்க் கொண்டவன் திருமாலே என்று கூறுகிறார். அத்திருமாலே ஈசன் எந்தை என்று இரண்டாம் பாடலில் குறிப்பிடப்படுகிறார். இவ்விரண்டு சான்றுகளையும் நோக்கும்போது கோச்செங்கணான் எழுபது மாடக்கோயில்கள் எழுப்பியது திருமாலுக்கே என்றாகும்.
இதையே பல்லவர் சரித்திரம் என்னும் நூலில், 'இருக்கு வேதத்தைக் கூறும் திருமாலுக்கு எழுபது ஆலயங்கள் செய்துள்ள சோழர் குலத்துச் செங்கணான் செய்த திருநறையூர்க் கோயிலைச் சேருங்கள்' என்று திருநறையூர்ப் பதிகத்தின் எட்டாம் பாடலின் இறுதி வரிகளுக்குப் பொருள் விளக்கம் தருகிறார் வரலாற்றுப் பேராசிரியர் பி.தி.சீனிவாச அய்யங்கார் அவர்கள். (47)
'எண்தோள் ஈசன்' என்று திருமங்கை மன்னன் குறிப்பிடப்படுவது சிவபெருமானையல்ல என்பதற்கு மேலும் சில சான்றுகள் காட்டலாம். முதலாழ்வார்கள் மூவர் காலத்தும் இருந்தது போல் திருமங்கையாழ்வார் காலத்தில் சைவத்தைப் போற்றும் மனப்பாங்கு வைணவர்களிடத்து இல்லை. மாறாகச் சைவக்கடவுளான சிவபெருமானை இழித்தும் பழித்தும் கூறுவதே இயல்பாய் இருந்து வந்தது. இதை,
'வள்ளி கொழுநன் முதலாய
மக்களொடு முக்கண்ணான்
வெள்கி ஓட' (48)
என்ற வரிகளாலும்,
'ஆறும் பிறையும் அரவமும்
அடம்பும் சடைமேல் அணிந்து உடலம்
நீறும் பூசி ஏறும் ஊரும்
இறையோன் சென்று குறையிரப்ப' (49)
என்ற வரிகளாகும் நன்கு உணரலாம்,
திருமாலே அனைத்துக் கடவுளரிலும் பெரியவர் என்பதை,
'நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்
பிறையாடும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த
இறையாகி நின்றான் தன் இணையடியே அடைநெஞ்சே' (50)
என்ற வரிகளாலும்,
'மூவரில் முன் முதல்வன்' (51)
'முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை' (52)
என்ற வரிகளாலும் திருமங்கையாழ்வாரே உணர்த்துதலைக் காணலாம். இவ்வாறு திருமாலை உயர்த்தியும், சிவபெருமானைப் பழித்தும் இழித்தும் கூறும் திருமங்கையாழ்வார் தம் பாடலில் 'இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு' என்று சிவபெருமானைக் குறிப்பாரா?
'எண்தோள் ஈசன்' என்ற பெயரால் திருமாலைத் திருமங்கை மன்னன் பாடியிருப்பது போலவே, 'கூத்தன்' என்றும், 'பரமன்' என்றும் கூட திருமாலை விளித்துப் பாடியிருக்கிறார்.
'பரிமுகமாய் அருளியஎம் பரமன் காண்மின்' (53)
'பன்றியாய் மீனாகி அரியாய்ப் பாரைப்
படைத்துக் காத்(து) உண்டுமிழ்ந்த பரமன் தன்னை' (54)
'பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்' (55)
'பறவைமுன் உயர்த்துப் பாற்கடல் துயின்ற
பரமனார் பள்ளி கொள் கோயில்' (56)
'குறிய மாணி உருவாய
கூத்தன் மன்னி அமரும் இடம்' (57)
'கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தன் அமர்ந்துறையும் இடம்' (58)
என்னும் வரிகள் இதற்குச் சான்றுகளாம். இவற்றையெல்லாம் நோக்கும்போது கோச்செங்கணான் எழுப்பிய எழுபது மாடக்கோயில்களும் திருமாலுக்கே என்றுதான் திருமங்கையாழ்வார் சொல்வதாகக் கொள்ள நேரிடும்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் கோச்செங்கணான் கட்டிய சிவன் கோயில்களைப் பாடியுள்ளமை இங்கு எண்ணத்தக்கது. அப்பர் அடிகள் தம்முடைய அடைவுத் திருத்தாண்டகத்தில்,
'பெருக்காது சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும்' (59)
என்று குறித்திருப்பது, சிவபெருமானுக்கான பெருங்கோயில்கள் அவர் காலத்தில் எழுபத்தெட்டு இருந்தமையைப் புலப்படுத்துகின்றன. அப்பர் அடிகள் இந்த எழுபத்தெட்டு கோயில்களையும் எழுப்பியது யாரென்று குறிக்கவில்லை. பெருங்கோயில் என்று அப்பர் அடிகள் குறிப்பதும், மாடக்கோயில் என்று திருமங்கையாழ்வார் குறிப்பதும் ஒன்றே என்பது கலைவரலாற்று அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் செய்தியாகும். கோச்செங்கணான் எழுப்பியதாகச் சில மாடக்கோயில்களைச் சம்பந்தரும் சுந்தரரும் தங்கள் தேவாரப்பதிகங்களில் குறிப்பிடுகின்றார்கள்.
'வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே' (60)
'மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக் கோயிலே' (61)
என்று சம்பந்தர் பெருமான் திருவைகன் மாடக்கோயில் இறைவனைப் பாடும்போது, கோச்செங்கணானே அக்கோயிலை எழுப்பியதாகக் கூறுகிறார்.
'ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் சிறைசெய்த கோயில் சேர்வரே' (62)
'அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே' (63)
என்ற சம்பந்தரின் வரிகளால், திரு அம்பர்ப் பெருந்திருக்கோயிலைக் கட்டியவன் சோழன் கோச்செங்கணானே என்பது பெறப்படுகின்றது.
அடிக்குறிப்புக்கள்
1. பிற்காலச் சோழர் வரலாறு - தி.வை. சதாசிவ பண்டாரத்தார், பக்கம் 4.
2. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 13.
3. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 127.
4. பல்லவர் சரித்திரம் - பி.தி. சீனிவாச அய்யங்கார், பக்கம் 114.
5. Epigraphica Indica Vol 15, Verse 13, Page 70 (Anbil plates of Sundara chola).
6. ஆழ்வார்கள் காலநிலை - மு. இராகவையங்கார், பக்கம் 40.
7. புறநானூறு - உ.வே. சாமிநாதய்யர் உரை, பக்கம் 184, பாடல் - 74.
8. களவழி நாற்பது - கழகப் பதிப்பு, பக்கம் 4.
9. புறநானூறு - செய்யுள் 74.
10. புறநானூறு - உ.வே. சாமிநாதய்யர் உரை, பக்கம் 582.
11. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 8.
12. புறநானூறு II - அவ்வை சு. துரைசாமி உரை, கழகப்பதிப்பு, பக்கம் 6.
13. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, முகவுரை, பக்கம் 4.
14. தமிழ் நாவலர் சரிதை - கழகப்பதிப்பு, பக்கம் 130.
15. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 9, களவழி நாற்பது - கழகப் பதிப்பு, முகவுரை, பக்கம் 5.
16. தமிழ் நாவலர் சரிதை - கழகப்பதிப்பு, பக்கம் 130.
17. விக்கிரமசோழன் உலா - கழகப்பதிப்பு, பக்கம் 28, வரி 27,28.
18. குலோத்துங்க சோழன் உலா - கழகப்பதிப்பு, பக்கம் 28, வரி 39,40.
19. இராசராச சோழன் உலா - கழகப்பதிப்பு, பக்கம் 2, வரி 35,36.
20. பண்டை நாளைச் சேரமன்னர்கள் - அவ்வை சு. துரைசாமி, பக்கம் 299.
21. சேரர் வரலாறு - துடிசைகிழார் சிதம்பரனார், பக்கம் 138.
22. சேரர் வரலாறு - துடிசைகிழார் சிதம்பரனார், பக்கம் 139.
23. நற்றிணை - கழகப்பதிப்பு, பாடினோர் வரலாறு, பக்கம் 40.
24. களவழி நாற்பது - பாடல்கள் 15,21,29,30,40.
25. களவழி நாற்பது - பாடல்கள் 4,5,11.
26. களவழி நாற்பது - பாடல்கள் 6,22,33.
27. புறநானூறு - உ.வே. சாமிநாதய்யர் பதிப்பு, செய்யுள்கள் 48,49.
28. நற்றிணை - கழகப்பதிப்பு, செய்யுள் 11.
29. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, முகவுரை, பக்கம் 5.
30. சோழர் வரலாறு - டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம் 8.
31. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, செய்யுள் 37.
32. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, பக்கம் 28.
33. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, பக்கம் 27.
34. களவழி நாற்பது - கழகப்பதிப்பு, பக்கம் 29.
35. புறநானூறு - உ.வே.சாமிநாதய்யர் பதிப்பு, செய்யுள் 48.
36. புறநானூறு - உ.வே.சாமிநாதய்யர் பதிப்பு, செய்யுள் 49.
37. பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகம், பக்கம் 145, பாடல் எண் 6, திருவேங்கடத்தான் திருமன்றப் பதிப்பு.
38. பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகம், பக்கம் 146, பாடல் எண் 9, திருவேங்கடத்தான் திருமன்றப் பதிப்பு.
39. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீனப் பதிப்பு, திருவைகல் மாடக்கோயில், பக்கம் 85, பாடல் எண் 6.
40. சோழர் வரலாறு - டாக்டர் மா. இராசமாணிக்கனார், பக்கம் 13.
41. பெரிய திருமொழி - திருநறையூர்ப் பதிகம், பக்கம் 146, பாடல் எண் 8.
42. பெரிய திருமடல், பக்கம் 102, வரி 119.
43. பெரிய திருமொழி, மூன்றாம் திருநறையூர்ப் பதிகம் பக்கம் 144, பாடல் எண் 2.
44. ஆறாம் திருமுறை - திருநாவுக்கரசர், தருமபுர ஆதீனப் பதிப்பு, பக்கம் 95, செய்யுள் எண் 7.
45. நான்காம் திருமுறை - திருநாவுக்கரசர், தருமபுர ஆதீனப் பதிப்பு, பக்கம் 78, செய்யுள் எண் 83.
46. பெரிய திருமொழி - திருநறையூர்ப் பதிகம், பக்கம் 144, செய்யுள் எண் 3.
47. பல்லவர் சரித்திரம் - பி.தி.சீனிவாச அய்யங்கார், பக்கம் 114.
48. பெரிய திருமொழி, திருவேங்கடத்தான் திருமன்றப் பதிப்பு, பக்கம் 148, செய்யுள் எண் 6.
49. பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகம் 4, பக்கம் 148, செய்யுள் எண் 6.
50. பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகம் 6, பக்கம் 153, செய்யுள் எண் 9.
51. பெரிய திருமொழி, திருமாலிருஞ்சோலை 2, பக்கம் 227, செய்யுள் எண் 1.
52. பெரிய திருமொழி, திருமாலிருஞ்சோலை 2, பக்கம் 227, செய்யுள் எண் 2.
53. பெரிய திருமொழி, திருவழுந்தூர் 4, பக்கம் 174, செய்யுள் எண் 2.
54. பெரிய திருமொழி, திருவழுந்தூர் 4, பக்கம் 176, செய்யுள் எண் 10.
55. பெரிய திருமொழி, திருத்தேவனார் தொகை, பக்கம் 81, செய்யுள் எண் 6.
56. பெரிய திருமொழி, திருவெள்ளியங்குடி, பக்கம் 105, செய்யுள் எண் 4.
57. பெரிய திருமொழி, திருப்புள்ளம் பூதங்குடி, பக்கம் 107, செய்யுள் எண் 1.
58. பெரிய திருமொழி, திருத்தேவனார் தொகை, பக்கம் 81, செய்யுள் எண் 9.
59. ஆறாம் திருமுறை, அடைவுத் திருத்தாண்டகம், பக்கம் 521.
60. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருவைகல் மாடக்கோயில், பக்கம் 84.
61. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருவைகல் மாடக்கோயில், பக்கம் 84.
62. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருஅம்பர்பெருந்திருக்கோயில், பக்கம் 87.
63. மூன்றாம் திருமுறை - தருமபுர ஆதீன வெளியீடு, திருஅம்பர்பெருந்திருக்கோயில், பக்கம் 87.