சங்க கால புலவர்கள்
சங்க காலமும் நூல்களும்
முதல் சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் முதலியன மொத்தமாக 9990 ஆண்டுகள் நிலபெற்றிருந்தன. இக் காலங்களில் 8598 புலவர்கள் அரிய பல நூல்களை இயற்றி சங்கத்தில் அரங்கேற்றியுள்ளனர். முதல் இருசங்கங்களிலும் எண்ணிறந்த இலக்கிய நூல்கள் எழுந்தன என்வும், அவற்றுள் பெரும்பாலானவை அழிந்தொழிந்தன எனவும் தற்போது எஞ்சி நிற்கும் நூல்கள் பெரும்பாலும் கடைச்சங்கத்தை சார்ந்தவை என்று செவிவழிச்செய்திகள் வலியுறுத்துகின்றன.
கி.மு 500 முதல் கி.பி 900 வரயுள்ள காலகட்டங்களை கடைச்சங்க காலமென வரலாற்று அறிஞர்கள் குறிபிட்டுள்ளனர். சங்க நூல்களுள் இக் காலம் எஞ்சியிருப்பனவற்றில் தொல்காப்பியம் இடைச்சங்கத்திற்கு உரியது என்றும், எட்டுத்ெத்ாகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியன் கடைச்சங்க படைப்புகள் என்றும் அறியப்படுகிறன.
எட்டுத்தொகை நூல்கள்
நற்றினை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு என்பனவாகும்
பத்துப்பாட்டு நூல்கள்
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம் ஆகியவையாகும்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
திருக்குறல்
நாலடியார்
களவழி நாற்பது
கைந்நிலை
இனியவை நாற்பது
இன்னா நாற்பது
நான்மணிக்கடிகை
கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
திரிகடுகம்
ஏலாதி
ஆசாரக்கோவை
பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்
முது மொழிக்காஞ்சி ஆவன.
சோழர் கால புலவர்கள் கி.பி.30
கழாத்தலை. கி.பி 30 -60
இவர் ஒரு போர்த்துறை கவிஞர். சேரன் ஆதனும் சோழன் கிள்ளியும் போரில் இறந்தபோதும் பின்னர் சேரலாதன் கரிகால் சோழனால் முறியடிக்கப்பட்ட வெண்ணிற் போரிலும் உடனிருந்தார். புலவர் கபிலர் இவரை தம்மினும் மூத்த புலவராக குறிப்பிடுவதுடன் அரசன் இருங்கோவேள் கழாத்தலையை மதிக்காத காரனத்தால் அவன் நகராகிய அரையம் அழிக்கப்பட்டதென்றும் தெரிவிக்கிறார். இவர் இயற்றிய ஆறு பாடல்கள் புறநானூற்றில் 62வது, 65வது, 270வது, 288வது, 289வது, 368வது பாடல்களாக இடம்பெற்று உள்ளன.
உருத்திரன் கண்ணனார். கி.பி. 40 - 70
இவர் பெரும் பாணாற்றுப்படை, படினப்பாலை ஆகிய இரு பாடல்களின் ஆசிரியர். பாணாற்றுப்படை கி.பி 50ல் சோழ அரசன் திரையன் காஞ்சியில் அரசனுக்குரியவனாய் இருக்கும் போது பாடப்பட்டது. இப்பாடல் மூலம் தலைநகரம் காஞ்சியின் சிறப்புகள், மக்கள் குடும்பத்துடன் மாட்டு வண்டிகளில் பயனம் செய்வது, மிளகு மூட்டைகள் சுமந்து பொதி கழுதைகள் வணிகத்திற்காக துறைமுகம் செல்லுதல், ஆயர், உழவர் உறைவிடங்களாகிய சிற்றூர்களின் வாழ்வுமயம், துறைமுகங்களில் கப்பல்கள் நெருக்கமாக நிற்பது, மன்னன் திரையனின் ஆட்சி மகிமை போன்ற முல்லைநில வாழ்க்கை வரலாற்றை சுமந்து பண்டைய நாகரிகத்தையும் பண்புகளையும் நமக்கு தெரிவிக்கிறது.
பட்டினப்பாலை கி.பி. 70ல் கரிகால் சோழன் அரசிருக்கை ஏற்று பல குழந்தைகளின் தந்தையாய் இருந்த சமயத்தில் இயற்றப்பட்டது. இது கரிகால் சோழனின் காவிரிப்பட்டினத்தின் புகழ் பாடுகிறது. காவிரியால் வளம்பெற்ற செழுங்கழனிகள், நகரைச் சூழ்ந்த வயள்கள், சோலைகள், கடல் துறைமுகம், அதிலுள்ள கப்பல் தங்குதுறைகள், சந்தைக்களம், அகலச்சாலைகள், நகரின் கோட்டைகொத்தளங்கள், திருமாவளவன் என்ற கரிகால் சோழனின் வீரதீர வெற்றிகள் ஆகிய வரலாற்று காவியங்களை நீள விரித்துரைக்கிறது.
முடத்தாமக்கண்ணியார். கி.பி. 60 - 90
இவர் கரிகால் சோழனின் இளமை வரலாற்றை பொருநராற்றுப்படை மூலம் நமக்கு தெரிவிக்கிறார். இளமையில் கரிகாலன் சிறையிலிருந்து தப்பியது, வெண்ணில் போர் வெற்றி, அவைக்கு வந்த பாணர் புலவர்களை பண்புடனும், வள்ளன்மையுடன் போற்றியது பற்றியும் தெரிவிக்கிறார்.
கபிலர். கி.பி. 90 - 130
இவர் தொழிலால் புலவர், பிறப்பில் பார்ப்பனர். பாரிமன்னனின் உற்ற நண்பன். கரிகால் சோழன் மகளை மணந்த சேர அரசன் ஆதன் அரசவையில் புலமையின் பிறப்பிடமாக இருந்தவர். ஆதன் இவருக்கு பல ஊர்களை இறையிலிக் கொடையாகக் கொடுத்தான். பாரி மன்னன் அவையிலும் அவைப்புலவராக வளம் வந்தவர் கபிலர். பெருங்குறிஞ்சி என்ற இயவரின் பாடல் தமிழக மலங்குடியினரின் காதல் கதை ஒன்றை விரித்துரைக்கிறது. ஆரிய அரசன் பிரகத்த்னுக்குத் தமிழ் அறிவுறுத்தும்படி பெருங்குறிஞ்சி இயற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவரால் இயற்றப்பட்ட மற்றொரு பாடல் இன்னா நாற்பது. ஒவ்வொரு பாட்டிலும் நான்கு தீங்குகளை உள்ளடக்கிய 40 பாட்டுக்களையுடைய அறநூல் இது. இவரால் இயற்றப்பட்ட ஒரு நூறு பாட்டுக்கள் ஐங்குறு நூற்றில் ஒரு பகுதியாகும், சேரல் ஆதனைப் பாடிய பத்துப் பாட்டுக்கள் பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ளன.
பெண் புலவர்கள்
ஔவையார், அள்ளூர் நன்முல்லையார், காக்கைப் பாடினியார், நச்செள்ளையார், நக்கண்ணையார், வெள்ளி வீதியார், மாறோக்கத்து நப்பசபையார்,
வெண்ணிக்குயத்தியார், குறமகள் இளவெயினி, பூங்கணுத்திரையார், ஒக்கூர் மாசாத்தியார். அரச குல ஆதிமந்தி, பெருங்கோப்பெண்டு மற்றும்
பாரி மகளிர் அங்கவை, சங்கவை.
உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்ற எந்த பேதமும் இன்றி ஒரே தளத்தில் நின்று பெருமை கொள்ளத்தக்க மகத்தான நான்கு பெரும்
சொத்துக்த்துக்கள் நம்மிடம் உண்டு. அவை யாவன
1. சோழர் கலாச்சாரம்
2. பாண்டியர் வீரம்
3. சேரர் இலக்கியம்
4. பல்லவர் கலை வண்ணன்ம்
ஒரு நாட்டின் சமூக வளத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அந்நாட்டு குல மக்களின் இலக்கிய வளத்தை ஆராய்ந்து படித்தால் பொதும் என்பார்கள். இவ்வளவு கோல் கொண்டு பார்த்தால் நம் குலத்தின் தொன்மை, நாகரிக மேன்மை, மனித நேயம், புலமை எவ்வளவு உயர்வானது என்று புரிந்துவிடும். தத்துவமா? அன்பா? பாசமா? தியாகமா? வீரமா? சோகமா? அரக்கத்தனமா? சாகசமா? இப்படி மனிதனுக்குள் இருக்கும் அத்தனை குணங்களையும் நம் குல இதிகாசங்கள் கொண்டுள்ளன. இவை தாண்டி இன்று வரை எந்த ஆட்சியும் புதிய சான்றுகளை படைக்கவில்லை என்று நெஞ்சு நிமிர்த்திஸ் சொல்லலாம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் இது மாறப்போவதுமில்லை.
கள்ளர் சரிதம் ஒரு மகாசமுத்திரம். அதன் சாரத்தை ந.மு. வேங்கடசாமிநாட்டார், சுவாமிநாத மாதவராயர், புலமை வெங்கடாசலம் வன்னியர் உட்பட எத்தனையோ அறிஞர்கள் தங்கள் கைவன்னத்தில் சுரிக்கிச் சுவைபடக் கொடுத்திருக்கிறார்கள். அதே சுவை குன்றாமலும் விரிவாக்கி கலாச்சாரக் கண்ணாக, பெரும் பொக்கிசமாக அளித்துள்ளார் சர்வதேச கள்ளர் பேரவையின் இராசகண்டியர். நேற்று, இன்று, நாளை, முக்காலத்தையும் உணர்த்தி உயரவழி காட்டும் இந்நூல் உங்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருப்பது பெருமை, இப்பெருமையை ஒவ்வொரு கள்ளரும் பெறவேண்டும் என்ற விருப்பமுடன் கேட்டுக்கொள்கிறோம்.
சோழர் கால இலக்கிய படைப்புகள்.
பட்டினைப்பாலை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களை இயற்றிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணார்க்கு கரிகால் சோழன் (கி.மு.60முதல் கி.மு.10 வரை) பதினாறு நூறாயிரம் பொன்னை பரிசாக அளித்தான்.இதுவே புலவர்களுக்கு அளித்த மிக பெரிய பரிசாகும்.
கி.பி.898 ல் உத்தரபுராணம் குணபத்ரா என்பவரால் இயற்றப்பட்டது.
கி.பி.10ம் நூற்றாண்டில் வளையாபதி, குண்டலகேசி படைக்கப்பட்டன.
கல்லாடம் என்னும்னூலை கல்லாண்டார் படைத்துள்ளார்
முதலாம்குலோத்துங்கன் காலத்தில் குலோத்துங்கசோழசரிதை என்னும் நூலை திருநாரயணப்பட்டர் படைத்துள்ளார்
முதலாம்குலோத்துங்கன் காலத்தில் கலிங்கத்துப்பரணி எனும் சிறந்த இயலக்கியத்தை படைத்தார்.
விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கசோழன் மற்றும் இரண்டாம் இராசராசன் காலத்தில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், குலோத்துங்கச் சோழனுலா, இராசராச சோழனுலா, சரசுவதி அந்தாதி, அரும்பைத்தொள்ளாயிரம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
சோழப்பேரரசின் கால கம்பர் இராமாயணம் எனும் ஒப்பற்ற காவியத்தையும், சடகோபர் அந்தாதி, மும்மணிக்கோவை மற்றும் திருக்கைவழக்கம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
நளவெண்பா புலவர் புகழேந்தி படைத்த சிறந்த இலக்கியமாகும்.
அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் பெரியபுராணம் சேக்கிழார் படைத்த சிறந்த இலக்கியமாகும்.
கருவூர்ப்புராணம் கருவூர்த்தேவரால் எழுதப்பட்டது.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் முற்பகுதியில் மெய்கண்டர் சிவஞானபோதம், அருணந்தி சிவஞான சித்தியார் மற்றும் இருபாவிருபது எனும் நூல்களை படைத்தார்
பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியுலும் பதின்னான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சைவ சித்தாந்தத்தின் தத்துவத்தை விளக்கும் வண்னம் எட்டு நூல்கள் உமாபதி சைவாச்சாரியார் என்பவரால் எழுதப்பட்டது.
புத்தரிமித்திரன் வீரசோழியம், தண்டியாசிரியரின் தண்டியலங்காரம், குணவீரர் எழுதிய நேமிநாதம், பவணந்தி முனிவரின் நன்னூல், மண்டல புருஷர் எழுதிய சூடாமணி நிகண்டு ஆகியவை குறிப்படத்தக்க மொழியியல் நூல்களாகும்.
சோழர் காலத்தில் வைணவ இலக்கியமும் தழைத்தது, முகை பிரான் என்பவர் நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்கவுரை எழுதினார்.
திருவரங்கத்து அமுதனார் என்பார் இராமானுஜர் நூற்றந்தாதி எனும் நூலைப் படைத்தார். மேலும் யமுனாச்சாரியார், யாதவப் பிரகாசர், இரரமானுஜர் போன்றோர் பல் வேறு இலக்கியங்களையும் படைத்துள்ளனர்.
சோழர்களின் வழித்தோன்றல்கள் நாம் என்று ஆதாரமற்ற வாதங்களை முன் வைக்கும் சில குலத்தினர்( Is it Necessary ?)
1. சாணார் (நாடார், ஈழவர்),
2. முத்தரையர்,
3. செங்குந்தர் (கைக்கோள நெசவாளர்),
4. மள்ளர் (பள்ளர்),
5. பள்ளி ( படையாச்சி, வன்னியகுல சத்திரியர்),
6. வேளாளர்.
மேலும் ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும்,மற்ற இலக்கியங்களையும் படைத்தனர்.
ஈழவர் என்றும்,பின்னர் சாணார் என்றும், தற்போது நாடார் என்றும் அழைக்கப்படும் மக்கள் 'வலங்கைமாலை' 'சாணார் குலமரபு காத்தவர் சாணார் விதர்ப்ப வினாவிடை' 'நாடாரும், நாயக்கர் மன்னர்களும்' போன்ற நூல்களையும் எழுதினர்.
செங்குந்தர் என்று தம்மை உயர்வாகக் கூறி வரும் கைக்கோள நெசவாளர் 'ஈட்டிஎழுபது' என்ற நூலை எழுதினர்.
பள்ளி வகுப்பினர் தம்மை படையாச்சி எனவும்,வன்னியகுல சத்திரியர் எனவும் கூற முற்பட்டனர்.தம் கூற்றுக்கு ஆதரவாக 'சிலைஎழுபது' என்ற நூலை தோற்றுவித்தனர்.
வேளாளர் என்போர் ஏரெழுபது, திருக்கைவளக்கம். வேளாளர்புராணம்,சதகங்கள் போன்ற நூல்களை எழுதினர்.
மறவர் 'வான் எழுபது' என்ற நூலையும்,சேனைத்தலைவர் சேனைகுலத்தார் பட்டயம்,சேனைத் தலைவர் மரபு காத்தல்' என்ற நூலையும் எழுதினர்.
1. சாணார் (நாடார், ஈழவர்)
சான்றோர்'என்ற ஒற்றைச் சொல் பற்றி
சங்க இலக்கியத்தில் சான்றோர் என்ற சொல் சில பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இது மறவர்,வன்னியர் போன்று வீரரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பண்புப்பெயர் ஆகும்.பலதரப்பட்ட மக்களும் மூவேந்தர் படைப்பிரிவில் பங்குபெற்ற நிலையில்,வீரர்கள் இந்த சொற்களால் அழைக்கப்பட்டனர்.இது தனிப்பட்ட இனத்தைக் குறிப்பதற்கான மரபுச் சொல் கிடையாது.எனவே,சான்றோர் என்பதை ஒரு தனி இனத்தைக் குறிப்பதாகக் கொள்ளக்கூடாது.தற்காலத்தில் நாடார் இனமக்கள் தங்களின் சாதிப்பெயரான சாணார் என்பது சான்றோர் என்பதிலிருந்து வந்ததாகக் கொள்ளப்படுகிறது.இது உண்மையாகக் கொண்டாலும்,அவர்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் கிடையாது.ஏனெனில் சங்க கால திணைநிலை மற்றும் திணைநிலை சாராத இனங்களில் அவர்களின் அடையாளம் கிடையாது.சங்கப் பாடலில் குறிப்பிடக்கூடிய சான்றோர் என்ற சொல்லுக்கும், இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
ஆனால்.பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து படையெடுப்பு நடந்தது. அப்படையெடுப்பில் பலர் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.அதேபோல்,இராசராச சோழன் இலங்கை மீது படையெடுத்தான்.சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் இலங்கை மீது படையெடுத்து பலரை கைது பண்ணி இங்கு கொண்டு வந்தான்.இவ்வாறான படையெடுப்புகள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் ஈழவர் என்று சொல்லக்கூடிய நாடார் இனமக்கள்.படையெடுப்பில் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படை வீரர்கள் இருந்தார்கள்.அவ்வாறாக வந்தவர்தான் ஈழச்சான்றோன் என்று சொல்லக்கூடிய ஏனாதிநாதர்.
அவர் தமிழ்மறவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.மற்ற மக்கள் ஆற்றுக்குக்கரை அமைத்தல்,படையெடுப்பின்போது கொடி சுமந்து செல்லுதல் மற்றும் கள் இறக்குதல் போன்ற பணியில் ஈடுபட்டார்கள்.பெரும்பாலான மக்கள் கள் இறக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன.இன்றுவரை அது தொடர்கிறது.
வீரர் என்ற வகையில் ஏனாதிநாதர் போன்றோர் சான்றோர் என அழைக்கப்பட்டார்கள் என்பதற்காக,அது சான்றோர் இனம் என்றும், நாடார் தான் தமிழகத்தின் உண்மையான மூவேந்தர் இனம் என்றும் சொல்வது உண்மையில் தமிழகத்தின் வரலாற்றைத் தலைகீழாக திருப்பிவிடும்
1921 ஆம் ஆண்டிலிருந்து நாடார் இனமக்களின் பெரிய மனிதர்கள் தங்கள் இனத்தை போலியாக உயர்த்திக்கொள்ள பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி பல வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அப்படி வந்த ஒரு சொல் தான் தாங்கள் சத்திரியர் இனம் என்பதும்,நாடார் என்ற பட்டம் நாடாள்வான் என்பதிலிருந்து வந்தது என்பதும். நாடார் என்பது உண்மையில் நாடாவி என்பதிலிருந்து வந்தது. உண்மையில் நாடாள்வான் மற்றும் நிலைமைக்காரன் என்போர் கள்ளர் இனத்தைச் சார்ந்த மக்கள் ஆவார்கள்.
2. முத்தரையர்
முத்தரையர் யார்?
முத்தரையர் என்போர் பாண்டியரின் கிளைக்குடியாக இருக்கலாம். முத்தரையர் என்பது முத்து+அரையர், முத்து அரசர் அதாவது முத்து சல்லாபத்தில் ஈடுபடுபவர் என்று பொருள் கொள்ளலாம்.முத்து சல்லாபம் என்பது சங்க காலத்தில் பாண்டியநாட்டின் கடற்கரைப்பகுதியில் நடைபெற்றது.அதில் ஈடுபட்டவர் பாண்டியநாட்டு வணிகர்கள்.இவர்கள் மத்தியகிழக்கு மற்றும் உரோமாபுரி முதலிய மேல்நாடுகளுடன் வியாபாரம் செய்துவந்ததாக சங்க இலக்கியங்கள்,வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் மேல்நாட்டார் பயணக்குறிப்புகள் விளக்குகின்றன.எனவே,முத்து வணிகரிலிருந்து முத்தரையர் தோன்றினரா?என்ற கேள்வி எழுகிறது.பாண்டியருக்கும்,முத்தரையருக்கும் இடையேயுள்ள சில ஒற்றுமைகள் பாண்டியநாட்டு வணிகரிலிருந்து முத்தரையர் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை வழுப்படுத்துவதாக உள்ளது.
(1)முத்தரையர் ஆரம்பத்தில் சமண சமய சார்புடையவராக இருந்தனர்.பாண்டிய மன்னர்களும் சமய சமயச் சார்புடையவராக இருந்திருக்கின்றனர்.சோழ இளவரசியை மணந்த கூன்பாண்டியன் ஆரம்பத்தில் சமண சமயச் சார்புடையவராய் இருந்தான்.முத்தரையர் காலத்தில் தோன்றிய நாலடியார் என்ற நூல் சமண சமயச் சார்புடையது ஆகும்.
(2)முத்தரையரின் சின்னம் மீன் ஆகும்.பாண்டியரின் சின்னமும் மீன் என்பது குறிப்பிடத்தக்கது.
(3)முத்தரையர் மன்னர் மாறன் என்ற பட்டம் தரித்திருந்தனர். வேல்மாறன், வாள்மாறன், சுவரன்மாறன், மாறன் பரமேஸ்வரன், செருமாறன், மாறன் என்பது பாண்டியர்களின் பட்டம் என்பது நமக்குத் தெரியும். அதாவது,மாறவர்மன்,மாறன் குலசேகர பாண்டியன்,மாறன் சடையன்....
(4)முத்தரையர் மல்லன் என்ற பெயர் தரித்திருந்தனர்.மல்லன் அநந்தன்,மல்லன் வதுமன்,சத்ரு மல்லன் என வழங்கினர்.மல்லன் என்பது சேர,சோழ,பாண்டியரின் குடிப்பெயராகும்.
(5)முத்தரையர் தென்னவர் எனவும்,தமிழ்திரையன் எனவும் மற்றும் மீனவன் எனவும் வழ்ங்கியுள்ளனர். இப்பட்டங்கள் பாண்டியருக்கு உரியதாகும்.
முத்தரையர் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே மிகுந்த கருத்து வேறுபாடு உள்ளதாக புதுக்கோட்டை வரலாறு கண்ட திரு ஜெ.இராஜாமுகமது கூறுகிறார்.(அ)முத்தரையர் களப்பிரர் கிளைக்குடி என எஸ்.கே.அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.ஆனால் களப்பிரரிலிருந்து முத்தரையர் எப்படி வந்தது என்று விளக்கவில்லை.(ஆ)முத்தரையர் என்போர் பல்லவர் என வெங்கடசாமி நாட்டாரும்,கள்ளர் என இராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.
முத்தரையர் என்பது முத்து+அரையர்,அரையர் என்பது நாடாள்வோர் என்பதையும் குறிக்கும். 'அரையனாய மருளகமாளவதற்கு'(தேவாரம்- 648.4)
*முத்தரையர் மாறன்,மீனவன்,தென்னவன் போன்ற பாண்டியரின் குடிப்பெயரைப் பெற்றிருந்த செய்தியைப் புதுக்கோட்டை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
*செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச்சின்னம் கயல்(மீன்)எனக் காணப்படுகிறது.இதனை ஆய்வு செய்யும்போது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியாக இருக்கவேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது.
(திரு.இராஜா முகமது,புதுக்கோட்டை வரலாறு,பக்கம் 18)
3. செங்குந்தர்(கைக்கோள நெசவாளர்)
இந்த மக்கள் கோயிலில் பணிபுரிவதற்கும்,ஆண்கள் தேவாரம்,திருவாசகம் ஓதுவதற்கும்,பெண்கள் நடனமாடுவதற்கும்,பாடுவதற்கும் நியமனம் பெற்றதைப் பற்றி ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உண்டு.
எல்லா ஊர்களிலும் இவர்களுக்குத் தனித் தெருக்கள் இருந்தன.இவர்களுக்கு சில சிறப்பு உரிமைகளும் இருந்தன.இவர்களுக்கு முதலி என்ற பட்டமும் வழங்கிற்று.இவர்கள் படைப்பிரிவில் ஈடுபட்ட ஆதாரம் இல்லை.
4. மள்ளர் (பள்ளர்)
தேவேந்திர இனத்தவர் சோழர் வழியினர் என்றும் உரிமை கோருகின்றனர்.அவர்கள் அனைவரும் சோழர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்களா? சோழர் என்ற பெயருடன் இம்மக்கள் மட்டும் வாழும் பகுதி உள்ளதா?
சங்க காலம் முதற்கொண்டு இடைக்காலத்திலும் ஆண்ட அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் அல்லது வேளிர்கள் அனைவரும் மள்ளர் குலத்தவர் என்று கூறுவது அதிகப்படியாகத் தோன்றுகிறது.
இடைக்காலம் என்பதும் தமிழரசர்கள் ஆண்ட காலம் தான்.குறு நில மன்னர்கள் ஏனைய இனத்தோரிலும் உண்டு.
மள்ளர்களே தமிழகம் முழுதும் ஆண்டார்கள், சிறிய பகுதிகளுக்குக் கூட தலைவராக விளங்கியவர்கள் மள்ளர்கள் என்பது போன்ற கருத்துக்கள் மிகையானவை. உழு தொழில் செய்தவர்தான் அனைத்தும் அறிந்தவர் எனக் கூற முடியாது. உழு தொழில் மேன்மை உடையது என்று கூறினாலும் ஒவ்வொரு அரசனும் தங்கள் நாட்டைக் காத்துக் கொள்ள படைகள் கூடுதலாகவே தேவைப்பட்டன. உழு தொழில் செய்த மள்ளர்களும் போர்த் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
மல் என்ற சொல்லுக்குச் செல்வம் என்று பொருள். மல்லை என்றால் செல்வம் மிகுந்தது என்று பொருள். அதற்கு திண்மை என்ற பொருளும் உண்டு. வளப்பம் என்ற பொருளும் உண்டு.
வளப்பம் என்ற பொருளும், திண்மை என்ற பொருளும், செழுமை என்ற பொருளும்,செல்வம் என்ற பொருளும் மல் என்ற சொல்லுக்கு உண்டு (டாக்டர்.தயாளனின் லெக்௯சிகன் மற்றும் திராவிடியன் எட்டிமலாச்சி டிக்ஸனரி). எனவே,மல்லன் என்றால் யார் எனப் புரிந்துவிடும்.
இதே பொருளை மள் என்ற சொல்லுக்கும் பார்க்கலாம்.அதாவது,மள்ளர் என்றால் திண்மை, செழுமை என்று வருகிறது. மல்-மல்லர், மள்-மள்ளர் இரண்டுக்கும் ஒரே மாதிரியான பொருள் வருகின்ற காரணத்தினால் இரண்டு சொற்களும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
படைகளில் சிறந்து விளங்கிய இனத்தாருக்கு பல்வேறு பட்டப்பெயர்கள் வழங்கப்பட்டன. சேரனார். சோழன், பல்லவராயர், முனையரையர் போன்ற பட்டங்களை பிற இனத்தினர் பெற்றுள்ளபோது இது போன்ற பட்டப்பெயர்கள் மள்ளர்களாகிய பள்ளருக்கு ஏன் இல்லை?
மள்ளர் என்பார் பழமை வாய்ந்த குடியினர்.உழவர்களாகவும் போர் வீரர்களாகவும் விளங்கியவர்கள். இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவர்கள் பேரரசர்களின் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படாதது வியப்பானது. சோழர் காலச் சமுதாயம் , தொகுதி - 4.
இடைக்காலத்தில் இம் மள்ளர்கள் நிலை என்ன? மற்ற குடியினர் பற்றியும் அவர்கள் பொது வாழ்வில் செய்த கொடைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளபோது இவர்கள் பற்றி மட்டும் குறிப்புகள் ஏன் இல்லை?
மள்ளர் என்பார் மருத நிலத்தவர். இடைக்காலத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலப்பரப்பிற்குப் பெயர் இல்லையா? மள்ளர் நாடு என்று இருந்ததா? வேளிர்கள் ஆட்சி செலுத்திய பகுதிகளில் உள்ள மள்ளர்கள் தற்போது எங்கே உள்ளார்கள்? இடைக்காலத்திலும் சோழர்,பாண்டியர் ஆட்சி செலுத்தினர். அப்போது செல்வாக்குள்ளவர்களாக சில குடியினர் அறியப்படும்போது மள்ளர் நிலை என்ன ?(பிற்கால) சோழர் காலத்தில் ஆட்சி செய்த குறு நில மன்னர்கள் யாரும் மள்ளர் அல்ல. கல்வெட்டுக்கள் இதனை உறுதி செய்கின்றன.
மள்ளர்,மல்லர் எனத் தேவைக்கேற்ப பொருள் கொள்வது சரியா என்பதை ஏனையோர் கூறுவதை விட வரலாற்றுத் துறை ஒப்புக்கொள்ளுமா? "மல்லன்" என்ற பட்டம் வன்னியருக்கும் உண்டு. சமீபத்தில் நான் கண்ட ஒரு நூலில் அவர்களது பட்டப்பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.அவற்றில் மல்லன் என்பதும் ஒரு பட்டமாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.
5. பள்ளி ( படையாச்சி, வன்னியகுல சத்திரியர்)
தொண்டை மண்டலப் பகுதிகளை ஆட்சி செய்துவந்த சம்புவராயர்கள் பள்ளி(வன்னியர்) குலத்தவர்.
நடு நாட்டின் வலிமை மிகுந்த சிற்றரசர்களான காடவராயர்களும் வன்னியர் இனத்தவரே.இவர்கள் கல்வெட்டுக்களில் தம்மை பள்ளி இனத்தவராகவே குறிப்பிட்டுள்ளனர்(ARE 137 of 1900; S.I.I vol.7, No.150).
செல்வாக்குள்ள மள்ளர் இனத்தவர் ஏன் ஒருவர் கூட சிற்றசராய் அறியப்படவில்லை?கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலை எழுபது நாயக்கர் காலத்திற்கு முன் சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில்தான் எழுதப்பெற்றது.வன்னிய குலத்தவரின் பெருமைகளைக் குறிப்பிடும் இந் நூல் வன்னியர்களை ஆட்சி செய்யும் மன்னர் இனத்தவராகக் குறிப்பிடுகின்றது.
பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் வன்னிய குலத்தவர் சோழர் காலத்தில் பெற்றிருந்த செல்வாக்கும் அதிகாரமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.வன்னிய குலத்தவருக்கு அரசரால் கொடையளிக்கப்பட்ட நிலங்கள் "பள்ளிப் பேறு" எனப்பட்டன.(ARE 200 of 1904)
மேலும் வன்னியர் குலத்தவர் விற்போர் வீரர்களாக விளங்கினர். இவர்கள் "வில்லிகள்" என்றும் அழைக்கப்பட்டனர்(ARE 360 of 1902)(ARE 394 of 1921).பள்ளி குல மக்கள் வாழ்ந்த பகுதி பள்ளி நாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது(ARE 35 of 1913).
விஜயநகர வேந்தர் படையெடுப்பின்போது அவர்களை எதிர்த்து முதலில் போரிட்டது தமிழ் குறு நில மன்னர்களான சம்புவராயர்கள்தான்.இவர்கள் வன்னியர் குலத்தவர்.(ARE 267 of 1919)
வன்னியர்களும் வெள்ளைக் குடை, வெள்ளை யானை, தேர் போன்ற உரிமைகளைப் பெற்றிருந்தனர்.
6. வேளாளர்
அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பெருங்குலத்தாருள், வேளாளர் ஏனை முக்குலத் தில்லறத்தாரையும் தாங்கிவந்ததினால், வேளாளரே சிறந்த இல்லறத்தாராகக் கருதப்பட்டனர். மருத நிலத்தூரில் நிலையாக வசித்து ஆறிலொரு கடமையை அரசனுக்கு ஒழுங்காக இறுத்து வந்தவரும் வேளாளரே.
"வேளார் என்பதும், வேளாளர் என்பதும் வெவ்வேறு இனத்தவரின் குடிப்பெயர்கள்.
வேளார் உழுவித்து உண்பவர்-அரச பரம்பையினர்.
வேளாளர் உழுது உண்பவர்- உழவர்.
உழுபவருக்கு வேளாண் என்ற குடிப்பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியது. வேளாண் என்பதற்கு உபகாரி என்று பொருள். "வேளாண் வாயில் வெப்பக்கூறி"
பதினெண் குடிமக்கள்
வண்ணான், மயிர்வினைஞன், செம்மான், குயவன், கொத்தன், கொல்லன், கன்னான், தட்டான், தச்சன், கற்றச்சன், செக்கான்,கைக்கோளன், பூக்காரன், கிணையன், பாணன், கூத்தன், வள்ளுவன், மருத்துவன் ஆகிய பதினெண் தொழிலாளரும், உழவனுக்குப் பக்கத்துணையாயிருந்து தத்தம் தொழிலைச் செய்து அவனிடம் கூலி அல்லது தாம் செய்த பொருட்கு விலை பெற்று வந்தனர். இதனால், அவர் பதினெண் குடிமக்கள் எனக் கூறப்பட்டு வேளாளருள் அடக்கப்பட்டனர்".
கி.பி.12 ம் நூற்றாண்டு சோழர் கல்வெட்டு ஒன்றில் வரும் வாசகம்: "பெருங்குடிகள் பேரால் கடமைக்கு வெள்ளாழரைச் சிறைப்பிடித்தல் இவர்கள் அங்கங்களில் ஒடுக்குதல் செய்யக் கடவதல்லாததாகவும்" என்கிறது.
இதன் பொருள்: பெருங்குடிகள் செலுத்தவேண்டிய வரிக்காக அந்தப் பெருங்குடியிடம் வாரக்குடியாக இருக்கும் வெள்ளாளரைச் சிறைப்பிடிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து இக்கல்வெட்டு மூலம் தடை செய்யப்பட்டதையும் குறிக்கும்.
சங்க காலமும் நூல்களும்
முதல் சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் முதலியன மொத்தமாக 9990 ஆண்டுகள் நிலபெற்றிருந்தன. இக் காலங்களில் 8598 புலவர்கள் அரிய பல நூல்களை இயற்றி சங்கத்தில் அரங்கேற்றியுள்ளனர். முதல் இருசங்கங்களிலும் எண்ணிறந்த இலக்கிய நூல்கள் எழுந்தன என்வும், அவற்றுள் பெரும்பாலானவை அழிந்தொழிந்தன எனவும் தற்போது எஞ்சி நிற்கும் நூல்கள் பெரும்பாலும் கடைச்சங்கத்தை சார்ந்தவை என்று செவிவழிச்செய்திகள் வலியுறுத்துகின்றன.
கி.மு 500 முதல் கி.பி 900 வரயுள்ள காலகட்டங்களை கடைச்சங்க காலமென வரலாற்று அறிஞர்கள் குறிபிட்டுள்ளனர். சங்க நூல்களுள் இக் காலம் எஞ்சியிருப்பனவற்றில் தொல்காப்பியம் இடைச்சங்கத்திற்கு உரியது என்றும், எட்டுத்ெத்ாகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியன் கடைச்சங்க படைப்புகள் என்றும் அறியப்படுகிறன.
எட்டுத்தொகை நூல்கள்
நற்றினை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு என்பனவாகும்
பத்துப்பாட்டு நூல்கள்
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம் ஆகியவையாகும்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
திருக்குறல்
நாலடியார்
களவழி நாற்பது
கைந்நிலை
இனியவை நாற்பது
இன்னா நாற்பது
நான்மணிக்கடிகை
கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
திரிகடுகம்
ஏலாதி
ஆசாரக்கோவை
பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்
முது மொழிக்காஞ்சி ஆவன.
சோழர் கால புலவர்கள் கி.பி.30
கழாத்தலை. கி.பி 30 -60
இவர் ஒரு போர்த்துறை கவிஞர். சேரன் ஆதனும் சோழன் கிள்ளியும் போரில் இறந்தபோதும் பின்னர் சேரலாதன் கரிகால் சோழனால் முறியடிக்கப்பட்ட வெண்ணிற் போரிலும் உடனிருந்தார். புலவர் கபிலர் இவரை தம்மினும் மூத்த புலவராக குறிப்பிடுவதுடன் அரசன் இருங்கோவேள் கழாத்தலையை மதிக்காத காரனத்தால் அவன் நகராகிய அரையம் அழிக்கப்பட்டதென்றும் தெரிவிக்கிறார். இவர் இயற்றிய ஆறு பாடல்கள் புறநானூற்றில் 62வது, 65வது, 270வது, 288வது, 289வது, 368வது பாடல்களாக இடம்பெற்று உள்ளன.
உருத்திரன் கண்ணனார். கி.பி. 40 - 70
இவர் பெரும் பாணாற்றுப்படை, படினப்பாலை ஆகிய இரு பாடல்களின் ஆசிரியர். பாணாற்றுப்படை கி.பி 50ல் சோழ அரசன் திரையன் காஞ்சியில் அரசனுக்குரியவனாய் இருக்கும் போது பாடப்பட்டது. இப்பாடல் மூலம் தலைநகரம் காஞ்சியின் சிறப்புகள், மக்கள் குடும்பத்துடன் மாட்டு வண்டிகளில் பயனம் செய்வது, மிளகு மூட்டைகள் சுமந்து பொதி கழுதைகள் வணிகத்திற்காக துறைமுகம் செல்லுதல், ஆயர், உழவர் உறைவிடங்களாகிய சிற்றூர்களின் வாழ்வுமயம், துறைமுகங்களில் கப்பல்கள் நெருக்கமாக நிற்பது, மன்னன் திரையனின் ஆட்சி மகிமை போன்ற முல்லைநில வாழ்க்கை வரலாற்றை சுமந்து பண்டைய நாகரிகத்தையும் பண்புகளையும் நமக்கு தெரிவிக்கிறது.
பட்டினப்பாலை கி.பி. 70ல் கரிகால் சோழன் அரசிருக்கை ஏற்று பல குழந்தைகளின் தந்தையாய் இருந்த சமயத்தில் இயற்றப்பட்டது. இது கரிகால் சோழனின் காவிரிப்பட்டினத்தின் புகழ் பாடுகிறது. காவிரியால் வளம்பெற்ற செழுங்கழனிகள், நகரைச் சூழ்ந்த வயள்கள், சோலைகள், கடல் துறைமுகம், அதிலுள்ள கப்பல் தங்குதுறைகள், சந்தைக்களம், அகலச்சாலைகள், நகரின் கோட்டைகொத்தளங்கள், திருமாவளவன் என்ற கரிகால் சோழனின் வீரதீர வெற்றிகள் ஆகிய வரலாற்று காவியங்களை நீள விரித்துரைக்கிறது.
முடத்தாமக்கண்ணியார். கி.பி. 60 - 90
இவர் கரிகால் சோழனின் இளமை வரலாற்றை பொருநராற்றுப்படை மூலம் நமக்கு தெரிவிக்கிறார். இளமையில் கரிகாலன் சிறையிலிருந்து தப்பியது, வெண்ணில் போர் வெற்றி, அவைக்கு வந்த பாணர் புலவர்களை பண்புடனும், வள்ளன்மையுடன் போற்றியது பற்றியும் தெரிவிக்கிறார்.
கபிலர். கி.பி. 90 - 130
இவர் தொழிலால் புலவர், பிறப்பில் பார்ப்பனர். பாரிமன்னனின் உற்ற நண்பன். கரிகால் சோழன் மகளை மணந்த சேர அரசன் ஆதன் அரசவையில் புலமையின் பிறப்பிடமாக இருந்தவர். ஆதன் இவருக்கு பல ஊர்களை இறையிலிக் கொடையாகக் கொடுத்தான். பாரி மன்னன் அவையிலும் அவைப்புலவராக வளம் வந்தவர் கபிலர். பெருங்குறிஞ்சி என்ற இயவரின் பாடல் தமிழக மலங்குடியினரின் காதல் கதை ஒன்றை விரித்துரைக்கிறது. ஆரிய அரசன் பிரகத்த்னுக்குத் தமிழ் அறிவுறுத்தும்படி பெருங்குறிஞ்சி இயற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவரால் இயற்றப்பட்ட மற்றொரு பாடல் இன்னா நாற்பது. ஒவ்வொரு பாட்டிலும் நான்கு தீங்குகளை உள்ளடக்கிய 40 பாட்டுக்களையுடைய அறநூல் இது. இவரால் இயற்றப்பட்ட ஒரு நூறு பாட்டுக்கள் ஐங்குறு நூற்றில் ஒரு பகுதியாகும், சேரல் ஆதனைப் பாடிய பத்துப் பாட்டுக்கள் பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ளன.
பெண் புலவர்கள்
ஔவையார், அள்ளூர் நன்முல்லையார், காக்கைப் பாடினியார், நச்செள்ளையார், நக்கண்ணையார், வெள்ளி வீதியார், மாறோக்கத்து நப்பசபையார்,
வெண்ணிக்குயத்தியார், குறமகள் இளவெயினி, பூங்கணுத்திரையார், ஒக்கூர் மாசாத்தியார். அரச குல ஆதிமந்தி, பெருங்கோப்பெண்டு மற்றும்
பாரி மகளிர் அங்கவை, சங்கவை.
உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்ற எந்த பேதமும் இன்றி ஒரே தளத்தில் நின்று பெருமை கொள்ளத்தக்க மகத்தான நான்கு பெரும்
சொத்துக்த்துக்கள் நம்மிடம் உண்டு. அவை யாவன
1. சோழர் கலாச்சாரம்
2. பாண்டியர் வீரம்
3. சேரர் இலக்கியம்
4. பல்லவர் கலை வண்ணன்ம்
ஒரு நாட்டின் சமூக வளத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அந்நாட்டு குல மக்களின் இலக்கிய வளத்தை ஆராய்ந்து படித்தால் பொதும் என்பார்கள். இவ்வளவு கோல் கொண்டு பார்த்தால் நம் குலத்தின் தொன்மை, நாகரிக மேன்மை, மனித நேயம், புலமை எவ்வளவு உயர்வானது என்று புரிந்துவிடும். தத்துவமா? அன்பா? பாசமா? தியாகமா? வீரமா? சோகமா? அரக்கத்தனமா? சாகசமா? இப்படி மனிதனுக்குள் இருக்கும் அத்தனை குணங்களையும் நம் குல இதிகாசங்கள் கொண்டுள்ளன. இவை தாண்டி இன்று வரை எந்த ஆட்சியும் புதிய சான்றுகளை படைக்கவில்லை என்று நெஞ்சு நிமிர்த்திஸ் சொல்லலாம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் இது மாறப்போவதுமில்லை.
கள்ளர் சரிதம் ஒரு மகாசமுத்திரம். அதன் சாரத்தை ந.மு. வேங்கடசாமிநாட்டார், சுவாமிநாத மாதவராயர், புலமை வெங்கடாசலம் வன்னியர் உட்பட எத்தனையோ அறிஞர்கள் தங்கள் கைவன்னத்தில் சுரிக்கிச் சுவைபடக் கொடுத்திருக்கிறார்கள். அதே சுவை குன்றாமலும் விரிவாக்கி கலாச்சாரக் கண்ணாக, பெரும் பொக்கிசமாக அளித்துள்ளார் சர்வதேச கள்ளர் பேரவையின் இராசகண்டியர். நேற்று, இன்று, நாளை, முக்காலத்தையும் உணர்த்தி உயரவழி காட்டும் இந்நூல் உங்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருப்பது பெருமை, இப்பெருமையை ஒவ்வொரு கள்ளரும் பெறவேண்டும் என்ற விருப்பமுடன் கேட்டுக்கொள்கிறோம்.
சோழர் கால இலக்கிய படைப்புகள்.
பட்டினைப்பாலை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களை இயற்றிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணார்க்கு கரிகால் சோழன் (கி.மு.60முதல் கி.மு.10 வரை) பதினாறு நூறாயிரம் பொன்னை பரிசாக அளித்தான்.இதுவே புலவர்களுக்கு அளித்த மிக பெரிய பரிசாகும்.
கி.பி.898 ல் உத்தரபுராணம் குணபத்ரா என்பவரால் இயற்றப்பட்டது.
கி.பி.10ம் நூற்றாண்டில் வளையாபதி, குண்டலகேசி படைக்கப்பட்டன.
கல்லாடம் என்னும்னூலை கல்லாண்டார் படைத்துள்ளார்
முதலாம்குலோத்துங்கன் காலத்தில் குலோத்துங்கசோழசரிதை என்னும் நூலை திருநாரயணப்பட்டர் படைத்துள்ளார்
முதலாம்குலோத்துங்கன் காலத்தில் கலிங்கத்துப்பரணி எனும் சிறந்த இயலக்கியத்தை படைத்தார்.
விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கசோழன் மற்றும் இரண்டாம் இராசராசன் காலத்தில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், குலோத்துங்கச் சோழனுலா, இராசராச சோழனுலா, சரசுவதி அந்தாதி, அரும்பைத்தொள்ளாயிரம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
சோழப்பேரரசின் கால கம்பர் இராமாயணம் எனும் ஒப்பற்ற காவியத்தையும், சடகோபர் அந்தாதி, மும்மணிக்கோவை மற்றும் திருக்கைவழக்கம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
நளவெண்பா புலவர் புகழேந்தி படைத்த சிறந்த இலக்கியமாகும்.
அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் பெரியபுராணம் சேக்கிழார் படைத்த சிறந்த இலக்கியமாகும்.
கருவூர்ப்புராணம் கருவூர்த்தேவரால் எழுதப்பட்டது.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் முற்பகுதியில் மெய்கண்டர் சிவஞானபோதம், அருணந்தி சிவஞான சித்தியார் மற்றும் இருபாவிருபது எனும் நூல்களை படைத்தார்
பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியுலும் பதின்னான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சைவ சித்தாந்தத்தின் தத்துவத்தை விளக்கும் வண்னம் எட்டு நூல்கள் உமாபதி சைவாச்சாரியார் என்பவரால் எழுதப்பட்டது.
புத்தரிமித்திரன் வீரசோழியம், தண்டியாசிரியரின் தண்டியலங்காரம், குணவீரர் எழுதிய நேமிநாதம், பவணந்தி முனிவரின் நன்னூல், மண்டல புருஷர் எழுதிய சூடாமணி நிகண்டு ஆகியவை குறிப்படத்தக்க மொழியியல் நூல்களாகும்.
சோழர் காலத்தில் வைணவ இலக்கியமும் தழைத்தது, முகை பிரான் என்பவர் நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்கவுரை எழுதினார்.
திருவரங்கத்து அமுதனார் என்பார் இராமானுஜர் நூற்றந்தாதி எனும் நூலைப் படைத்தார். மேலும் யமுனாச்சாரியார், யாதவப் பிரகாசர், இரரமானுஜர் போன்றோர் பல் வேறு இலக்கியங்களையும் படைத்துள்ளனர்.
சோழர்களின் வழித்தோன்றல்கள் நாம் என்று ஆதாரமற்ற வாதங்களை முன் வைக்கும் சில குலத்தினர்( Is it Necessary ?)
1. சாணார் (நாடார், ஈழவர்),
2. முத்தரையர்,
3. செங்குந்தர் (கைக்கோள நெசவாளர்),
4. மள்ளர் (பள்ளர்),
5. பள்ளி ( படையாச்சி, வன்னியகுல சத்திரியர்),
6. வேளாளர்.
மேலும் ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும்,மற்ற இலக்கியங்களையும் படைத்தனர்.
ஈழவர் என்றும்,பின்னர் சாணார் என்றும், தற்போது நாடார் என்றும் அழைக்கப்படும் மக்கள் 'வலங்கைமாலை' 'சாணார் குலமரபு காத்தவர் சாணார் விதர்ப்ப வினாவிடை' 'நாடாரும், நாயக்கர் மன்னர்களும்' போன்ற நூல்களையும் எழுதினர்.
செங்குந்தர் என்று தம்மை உயர்வாகக் கூறி வரும் கைக்கோள நெசவாளர் 'ஈட்டிஎழுபது' என்ற நூலை எழுதினர்.
பள்ளி வகுப்பினர் தம்மை படையாச்சி எனவும்,வன்னியகுல சத்திரியர் எனவும் கூற முற்பட்டனர்.தம் கூற்றுக்கு ஆதரவாக 'சிலைஎழுபது' என்ற நூலை தோற்றுவித்தனர்.
வேளாளர் என்போர் ஏரெழுபது, திருக்கைவளக்கம். வேளாளர்புராணம்,சதகங்கள் போன்ற நூல்களை எழுதினர்.
மறவர் 'வான் எழுபது' என்ற நூலையும்,சேனைத்தலைவர் சேனைகுலத்தார் பட்டயம்,சேனைத் தலைவர் மரபு காத்தல்' என்ற நூலையும் எழுதினர்.
1. சாணார் (நாடார், ஈழவர்)
சான்றோர்'என்ற ஒற்றைச் சொல் பற்றி
சங்க இலக்கியத்தில் சான்றோர் என்ற சொல் சில பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இது மறவர்,வன்னியர் போன்று வீரரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பண்புப்பெயர் ஆகும்.பலதரப்பட்ட மக்களும் மூவேந்தர் படைப்பிரிவில் பங்குபெற்ற நிலையில்,வீரர்கள் இந்த சொற்களால் அழைக்கப்பட்டனர்.இது தனிப்பட்ட இனத்தைக் குறிப்பதற்கான மரபுச் சொல் கிடையாது.எனவே,சான்றோர் என்பதை ஒரு தனி இனத்தைக் குறிப்பதாகக் கொள்ளக்கூடாது.தற்காலத்தில் நாடார் இனமக்கள் தங்களின் சாதிப்பெயரான சாணார் என்பது சான்றோர் என்பதிலிருந்து வந்ததாகக் கொள்ளப்படுகிறது.இது உண்மையாகக் கொண்டாலும்,அவர்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் கிடையாது.ஏனெனில் சங்க கால திணைநிலை மற்றும் திணைநிலை சாராத இனங்களில் அவர்களின் அடையாளம் கிடையாது.சங்கப் பாடலில் குறிப்பிடக்கூடிய சான்றோர் என்ற சொல்லுக்கும், இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
ஆனால்.பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து படையெடுப்பு நடந்தது. அப்படையெடுப்பில் பலர் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.அதேபோல்,இராசராச சோழன் இலங்கை மீது படையெடுத்தான்.சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் இலங்கை மீது படையெடுத்து பலரை கைது பண்ணி இங்கு கொண்டு வந்தான்.இவ்வாறான படையெடுப்புகள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் ஈழவர் என்று சொல்லக்கூடிய நாடார் இனமக்கள்.படையெடுப்பில் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படை வீரர்கள் இருந்தார்கள்.அவ்வாறாக வந்தவர்தான் ஈழச்சான்றோன் என்று சொல்லக்கூடிய ஏனாதிநாதர்.
அவர் தமிழ்மறவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.மற்ற மக்கள் ஆற்றுக்குக்கரை அமைத்தல்,படையெடுப்பின்போது கொடி சுமந்து செல்லுதல் மற்றும் கள் இறக்குதல் போன்ற பணியில் ஈடுபட்டார்கள்.பெரும்பாலான மக்கள் கள் இறக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன.இன்றுவரை அது தொடர்கிறது.
வீரர் என்ற வகையில் ஏனாதிநாதர் போன்றோர் சான்றோர் என அழைக்கப்பட்டார்கள் என்பதற்காக,அது சான்றோர் இனம் என்றும், நாடார் தான் தமிழகத்தின் உண்மையான மூவேந்தர் இனம் என்றும் சொல்வது உண்மையில் தமிழகத்தின் வரலாற்றைத் தலைகீழாக திருப்பிவிடும்
1921 ஆம் ஆண்டிலிருந்து நாடார் இனமக்களின் பெரிய மனிதர்கள் தங்கள் இனத்தை போலியாக உயர்த்திக்கொள்ள பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி பல வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அப்படி வந்த ஒரு சொல் தான் தாங்கள் சத்திரியர் இனம் என்பதும்,நாடார் என்ற பட்டம் நாடாள்வான் என்பதிலிருந்து வந்தது என்பதும். நாடார் என்பது உண்மையில் நாடாவி என்பதிலிருந்து வந்தது. உண்மையில் நாடாள்வான் மற்றும் நிலைமைக்காரன் என்போர் கள்ளர் இனத்தைச் சார்ந்த மக்கள் ஆவார்கள்.
2. முத்தரையர்
முத்தரையர் யார்?
முத்தரையர் என்போர் பாண்டியரின் கிளைக்குடியாக இருக்கலாம். முத்தரையர் என்பது முத்து+அரையர், முத்து அரசர் அதாவது முத்து சல்லாபத்தில் ஈடுபடுபவர் என்று பொருள் கொள்ளலாம்.முத்து சல்லாபம் என்பது சங்க காலத்தில் பாண்டியநாட்டின் கடற்கரைப்பகுதியில் நடைபெற்றது.அதில் ஈடுபட்டவர் பாண்டியநாட்டு வணிகர்கள்.இவர்கள் மத்தியகிழக்கு மற்றும் உரோமாபுரி முதலிய மேல்நாடுகளுடன் வியாபாரம் செய்துவந்ததாக சங்க இலக்கியங்கள்,வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் மேல்நாட்டார் பயணக்குறிப்புகள் விளக்குகின்றன.எனவே,முத்து வணிகரிலிருந்து முத்தரையர் தோன்றினரா?என்ற கேள்வி எழுகிறது.பாண்டியருக்கும்,முத்தரையருக்கும் இடையேயுள்ள சில ஒற்றுமைகள் பாண்டியநாட்டு வணிகரிலிருந்து முத்தரையர் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை வழுப்படுத்துவதாக உள்ளது.
(1)முத்தரையர் ஆரம்பத்தில் சமண சமய சார்புடையவராக இருந்தனர்.பாண்டிய மன்னர்களும் சமய சமயச் சார்புடையவராக இருந்திருக்கின்றனர்.சோழ இளவரசியை மணந்த கூன்பாண்டியன் ஆரம்பத்தில் சமண சமயச் சார்புடையவராய் இருந்தான்.முத்தரையர் காலத்தில் தோன்றிய நாலடியார் என்ற நூல் சமண சமயச் சார்புடையது ஆகும்.
(2)முத்தரையரின் சின்னம் மீன் ஆகும்.பாண்டியரின் சின்னமும் மீன் என்பது குறிப்பிடத்தக்கது.
(3)முத்தரையர் மன்னர் மாறன் என்ற பட்டம் தரித்திருந்தனர். வேல்மாறன், வாள்மாறன், சுவரன்மாறன், மாறன் பரமேஸ்வரன், செருமாறன், மாறன் என்பது பாண்டியர்களின் பட்டம் என்பது நமக்குத் தெரியும். அதாவது,மாறவர்மன்,மாறன் குலசேகர பாண்டியன்,மாறன் சடையன்....
(4)முத்தரையர் மல்லன் என்ற பெயர் தரித்திருந்தனர்.மல்லன் அநந்தன்,மல்லன் வதுமன்,சத்ரு மல்லன் என வழங்கினர்.மல்லன் என்பது சேர,சோழ,பாண்டியரின் குடிப்பெயராகும்.
(5)முத்தரையர் தென்னவர் எனவும்,தமிழ்திரையன் எனவும் மற்றும் மீனவன் எனவும் வழ்ங்கியுள்ளனர். இப்பட்டங்கள் பாண்டியருக்கு உரியதாகும்.
முத்தரையர் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே மிகுந்த கருத்து வேறுபாடு உள்ளதாக புதுக்கோட்டை வரலாறு கண்ட திரு ஜெ.இராஜாமுகமது கூறுகிறார்.(அ)முத்தரையர் களப்பிரர் கிளைக்குடி என எஸ்.கே.அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.ஆனால் களப்பிரரிலிருந்து முத்தரையர் எப்படி வந்தது என்று விளக்கவில்லை.(ஆ)முத்தரையர் என்போர் பல்லவர் என வெங்கடசாமி நாட்டாரும்,கள்ளர் என இராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.
முத்தரையர் என்பது முத்து+அரையர்,அரையர் என்பது நாடாள்வோர் என்பதையும் குறிக்கும். 'அரையனாய மருளகமாளவதற்கு'(தேவாரம்- 648.4)
*முத்தரையர் மாறன்,மீனவன்,தென்னவன் போன்ற பாண்டியரின் குடிப்பெயரைப் பெற்றிருந்த செய்தியைப் புதுக்கோட்டை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
*செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச்சின்னம் கயல்(மீன்)எனக் காணப்படுகிறது.இதனை ஆய்வு செய்யும்போது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியாக இருக்கவேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது.
(திரு.இராஜா முகமது,புதுக்கோட்டை வரலாறு,பக்கம் 18)
3. செங்குந்தர்(கைக்கோள நெசவாளர்)
இந்த மக்கள் கோயிலில் பணிபுரிவதற்கும்,ஆண்கள் தேவாரம்,திருவாசகம் ஓதுவதற்கும்,பெண்கள் நடனமாடுவதற்கும்,பாடுவதற்கும் நியமனம் பெற்றதைப் பற்றி ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உண்டு.
எல்லா ஊர்களிலும் இவர்களுக்குத் தனித் தெருக்கள் இருந்தன.இவர்களுக்கு சில சிறப்பு உரிமைகளும் இருந்தன.இவர்களுக்கு முதலி என்ற பட்டமும் வழங்கிற்று.இவர்கள் படைப்பிரிவில் ஈடுபட்ட ஆதாரம் இல்லை.
4. மள்ளர் (பள்ளர்)
தேவேந்திர இனத்தவர் சோழர் வழியினர் என்றும் உரிமை கோருகின்றனர்.அவர்கள் அனைவரும் சோழர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்களா? சோழர் என்ற பெயருடன் இம்மக்கள் மட்டும் வாழும் பகுதி உள்ளதா?
சங்க காலம் முதற்கொண்டு இடைக்காலத்திலும் ஆண்ட அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் அல்லது வேளிர்கள் அனைவரும் மள்ளர் குலத்தவர் என்று கூறுவது அதிகப்படியாகத் தோன்றுகிறது.
இடைக்காலம் என்பதும் தமிழரசர்கள் ஆண்ட காலம் தான்.குறு நில மன்னர்கள் ஏனைய இனத்தோரிலும் உண்டு.
மள்ளர்களே தமிழகம் முழுதும் ஆண்டார்கள், சிறிய பகுதிகளுக்குக் கூட தலைவராக விளங்கியவர்கள் மள்ளர்கள் என்பது போன்ற கருத்துக்கள் மிகையானவை. உழு தொழில் செய்தவர்தான் அனைத்தும் அறிந்தவர் எனக் கூற முடியாது. உழு தொழில் மேன்மை உடையது என்று கூறினாலும் ஒவ்வொரு அரசனும் தங்கள் நாட்டைக் காத்துக் கொள்ள படைகள் கூடுதலாகவே தேவைப்பட்டன. உழு தொழில் செய்த மள்ளர்களும் போர்த் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
மல் என்ற சொல்லுக்குச் செல்வம் என்று பொருள். மல்லை என்றால் செல்வம் மிகுந்தது என்று பொருள். அதற்கு திண்மை என்ற பொருளும் உண்டு. வளப்பம் என்ற பொருளும் உண்டு.
வளப்பம் என்ற பொருளும், திண்மை என்ற பொருளும், செழுமை என்ற பொருளும்,செல்வம் என்ற பொருளும் மல் என்ற சொல்லுக்கு உண்டு (டாக்டர்.தயாளனின் லெக்௯சிகன் மற்றும் திராவிடியன் எட்டிமலாச்சி டிக்ஸனரி). எனவே,மல்லன் என்றால் யார் எனப் புரிந்துவிடும்.
இதே பொருளை மள் என்ற சொல்லுக்கும் பார்க்கலாம்.அதாவது,மள்ளர் என்றால் திண்மை, செழுமை என்று வருகிறது. மல்-மல்லர், மள்-மள்ளர் இரண்டுக்கும் ஒரே மாதிரியான பொருள் வருகின்ற காரணத்தினால் இரண்டு சொற்களும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
படைகளில் சிறந்து விளங்கிய இனத்தாருக்கு பல்வேறு பட்டப்பெயர்கள் வழங்கப்பட்டன. சேரனார். சோழன், பல்லவராயர், முனையரையர் போன்ற பட்டங்களை பிற இனத்தினர் பெற்றுள்ளபோது இது போன்ற பட்டப்பெயர்கள் மள்ளர்களாகிய பள்ளருக்கு ஏன் இல்லை?
மள்ளர் என்பார் பழமை வாய்ந்த குடியினர்.உழவர்களாகவும் போர் வீரர்களாகவும் விளங்கியவர்கள். இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவர்கள் பேரரசர்களின் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படாதது வியப்பானது. சோழர் காலச் சமுதாயம் , தொகுதி - 4.
இடைக்காலத்தில் இம் மள்ளர்கள் நிலை என்ன? மற்ற குடியினர் பற்றியும் அவர்கள் பொது வாழ்வில் செய்த கொடைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளபோது இவர்கள் பற்றி மட்டும் குறிப்புகள் ஏன் இல்லை?
மள்ளர் என்பார் மருத நிலத்தவர். இடைக்காலத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலப்பரப்பிற்குப் பெயர் இல்லையா? மள்ளர் நாடு என்று இருந்ததா? வேளிர்கள் ஆட்சி செலுத்திய பகுதிகளில் உள்ள மள்ளர்கள் தற்போது எங்கே உள்ளார்கள்? இடைக்காலத்திலும் சோழர்,பாண்டியர் ஆட்சி செலுத்தினர். அப்போது செல்வாக்குள்ளவர்களாக சில குடியினர் அறியப்படும்போது மள்ளர் நிலை என்ன ?(பிற்கால) சோழர் காலத்தில் ஆட்சி செய்த குறு நில மன்னர்கள் யாரும் மள்ளர் அல்ல. கல்வெட்டுக்கள் இதனை உறுதி செய்கின்றன.
மள்ளர்,மல்லர் எனத் தேவைக்கேற்ப பொருள் கொள்வது சரியா என்பதை ஏனையோர் கூறுவதை விட வரலாற்றுத் துறை ஒப்புக்கொள்ளுமா? "மல்லன்" என்ற பட்டம் வன்னியருக்கும் உண்டு. சமீபத்தில் நான் கண்ட ஒரு நூலில் அவர்களது பட்டப்பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.அவற்றில் மல்லன் என்பதும் ஒரு பட்டமாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.
5. பள்ளி ( படையாச்சி, வன்னியகுல சத்திரியர்)
தொண்டை மண்டலப் பகுதிகளை ஆட்சி செய்துவந்த சம்புவராயர்கள் பள்ளி(வன்னியர்) குலத்தவர்.
நடு நாட்டின் வலிமை மிகுந்த சிற்றரசர்களான காடவராயர்களும் வன்னியர் இனத்தவரே.இவர்கள் கல்வெட்டுக்களில் தம்மை பள்ளி இனத்தவராகவே குறிப்பிட்டுள்ளனர்(ARE 137 of 1900; S.I.I vol.7, No.150).
செல்வாக்குள்ள மள்ளர் இனத்தவர் ஏன் ஒருவர் கூட சிற்றசராய் அறியப்படவில்லை?கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலை எழுபது நாயக்கர் காலத்திற்கு முன் சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில்தான் எழுதப்பெற்றது.வன்னிய குலத்தவரின் பெருமைகளைக் குறிப்பிடும் இந் நூல் வன்னியர்களை ஆட்சி செய்யும் மன்னர் இனத்தவராகக் குறிப்பிடுகின்றது.
பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் வன்னிய குலத்தவர் சோழர் காலத்தில் பெற்றிருந்த செல்வாக்கும் அதிகாரமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.வன்னிய குலத்தவருக்கு அரசரால் கொடையளிக்கப்பட்ட நிலங்கள் "பள்ளிப் பேறு" எனப்பட்டன.(ARE 200 of 1904)
மேலும் வன்னியர் குலத்தவர் விற்போர் வீரர்களாக விளங்கினர். இவர்கள் "வில்லிகள்" என்றும் அழைக்கப்பட்டனர்(ARE 360 of 1902)(ARE 394 of 1921).பள்ளி குல மக்கள் வாழ்ந்த பகுதி பள்ளி நாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது(ARE 35 of 1913).
விஜயநகர வேந்தர் படையெடுப்பின்போது அவர்களை எதிர்த்து முதலில் போரிட்டது தமிழ் குறு நில மன்னர்களான சம்புவராயர்கள்தான்.இவர்கள் வன்னியர் குலத்தவர்.(ARE 267 of 1919)
வன்னியர்களும் வெள்ளைக் குடை, வெள்ளை யானை, தேர் போன்ற உரிமைகளைப் பெற்றிருந்தனர்.
6. வேளாளர்
அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பெருங்குலத்தாருள், வேளாளர் ஏனை முக்குலத் தில்லறத்தாரையும் தாங்கிவந்ததினால், வேளாளரே சிறந்த இல்லறத்தாராகக் கருதப்பட்டனர். மருத நிலத்தூரில் நிலையாக வசித்து ஆறிலொரு கடமையை அரசனுக்கு ஒழுங்காக இறுத்து வந்தவரும் வேளாளரே.
"வேளார் என்பதும், வேளாளர் என்பதும் வெவ்வேறு இனத்தவரின் குடிப்பெயர்கள்.
வேளார் உழுவித்து உண்பவர்-அரச பரம்பையினர்.
வேளாளர் உழுது உண்பவர்- உழவர்.
உழுபவருக்கு வேளாண் என்ற குடிப்பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியது. வேளாண் என்பதற்கு உபகாரி என்று பொருள். "வேளாண் வாயில் வெப்பக்கூறி"
பதினெண் குடிமக்கள்
வண்ணான், மயிர்வினைஞன், செம்மான், குயவன், கொத்தன், கொல்லன், கன்னான், தட்டான், தச்சன், கற்றச்சன், செக்கான்,கைக்கோளன், பூக்காரன், கிணையன், பாணன், கூத்தன், வள்ளுவன், மருத்துவன் ஆகிய பதினெண் தொழிலாளரும், உழவனுக்குப் பக்கத்துணையாயிருந்து தத்தம் தொழிலைச் செய்து அவனிடம் கூலி அல்லது தாம் செய்த பொருட்கு விலை பெற்று வந்தனர். இதனால், அவர் பதினெண் குடிமக்கள் எனக் கூறப்பட்டு வேளாளருள் அடக்கப்பட்டனர்".
கி.பி.12 ம் நூற்றாண்டு சோழர் கல்வெட்டு ஒன்றில் வரும் வாசகம்: "பெருங்குடிகள் பேரால் கடமைக்கு வெள்ளாழரைச் சிறைப்பிடித்தல் இவர்கள் அங்கங்களில் ஒடுக்குதல் செய்யக் கடவதல்லாததாகவும்" என்கிறது.
இதன் பொருள்: பெருங்குடிகள் செலுத்தவேண்டிய வரிக்காக அந்தப் பெருங்குடியிடம் வாரக்குடியாக இருக்கும் வெள்ளாளரைச் சிறைப்பிடிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து இக்கல்வெட்டு மூலம் தடை செய்யப்பட்டதையும் குறிக்கும்.