புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி.
"மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரி " - பெயருக்கேற்ற படி மன்னர் கால கட்டிட அமைப்பு முறை கொண்ட கல்லூரி . இதில் அதிசயம் என்னவென்றால் மன்னர் காலந்தொட்டே கல்வி வழங்கி வருதல் இக்கல்லூரியின் முக்கியமான சிறப்பாகும் .
தமிழ்நாட்டின் பழம் பெருமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்று. புதுக்கோட்டையில் உள்ள மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி. இதற்குத் தற்போது வயது 125. இந்தக் கல்லூரியில் நாவலாசிரியர் அகிலன் , முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் கல்வி பயின்றனர்.
“Darkness to Light”
"இருளிலிருந்து ஒளியை நோக்கி "
என்ற இந்த வாக்கியத்தை குறிக்கோளை கொண்டு இயங்கி வரும். இந்த கல்லூரியின் பெருமைகள் பல . பெரும்பாலும் கல்லூரியில் தான் ஒவ்வொருவரின் வாழ்கையும் தொடங்கும்.
அந்த தொடக்கமாய் பலரின் வாழ்கையை தீபம் ஏற்றி தொடங்கி வைத்த இந்த கல்லூரியின் சாதனைகள் பல . இக்கல்லுரியின் மூலமாய் சாதனை படிக்கட்டுகளில் ஏறி அமர்ந்த சாதனையாளர்கள் பலர்.
மன்னர் ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கூடமாக இருந்த இந்த நிறுவனம் தற்போது தன்னாட்சி பெற்ற கல்லூரியாகத் திகழ்கிறது. தற்போது தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணினி அறிவியல், வணிகவியல், தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், பொருளியல், உடற்கல்வி அறிவியல், கணிதவியல், இந்தி ஆகிய துறைகள் உள்ளன.
இவற்றில் ஆங்கில வழி, தமிழ்வழி என்ற இரு பிரிவுகளும் உண்டு. மொத்தம் 3000 மாணவர்கள் படிக்கும் இந்நிறுவனம் இருபாலர் படிக்கும் வசதிகள் கொண்டது. மேலும் மாணவ மாணவிகளுக்குத் தனித்தனியாக விடுதி வசதிகளும் உண்டு. மேலும் பல துறைகளில் பட்டமேற்படிப்பு உள்ளன.புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் இதுவும் ஒன்று.
இக்கல்லூரி முதலில் 1857 ம் வருடம் ஆங்கில பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது .பிறகு 1880 ம் வருடம் முதல் மெட்ராஸ் பல்கலைகழகம் கீழ் மெட்ரிகுலேசன் தேர்வுகள் நடத்தப்பட்டன . பின்னர் 1948 ம் வருடம் முதல் அரசு சார்ந்த கல்வி நிலையமாக அறிவிக்கப்பட்டது . பின்னர் 1982 முதல் பாரதிதாசன் பல்கலை கழகத்தின் கீழ் சார்ந்ததாக அறிவிக்கப்பட்டது .
இக்கல்லூரி 1998 ம் வருடம் முதல் தன்னாட்சி கல்லூரி எனஅறிவிக்கப்பட்டது. இக்கல்லூரி 13 துறைகளையும் , 3000 மாணவர்களையும் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இன்றும் இக்கல்லூரியில் தேர்தல் முறைப்படி நடத்தி மாணவர் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழக்கம் உள்ளது . இக்கல்லூரியின் தேசிய மாணவர் படை அமைப்பு பல இராணுவ வீரர்களையும், காவலர்களையும் இந்த நாட்டிற்கு உருவாக்கி தந்துள்ளது
இக்கல்லூரியின் சிறப்புமிக்க நூலகம் ஒன்று இயற்கையின் சீற்றத்தால் அழிக்கப்பட்டு ,பின்னர் மீண்டு அதே கட்டமைப்பை கொண்டு அழகிய பொலிவுடன் அணைத்து மாணவர்களையும் அரவணைக்கிறது. இந்நூலகத்தில் மிகவும் பழைய காலத்து புத்தகங்கள் , மிகவும் அரிய புத்தகங்களும் மிகவும் அழகாய் பராமரிக்கப்பட்டு வருகிறது
புதுக்கோட்டை வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்
ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.
ஆண்டவர்கள் :
பாண்டியப் பேரரசு
கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை தமிழகப் பகுதி கலப்பிரரின் ஆளுகையின் கீழ் இருந்தது. பிறகு பாண்டிய பேரரசு (3-880)வரை ஆட்சி செய்தார்கள்.
பல்லவர்
இதற்கு இடைப்பட்ட காலங்களில் பல்லவ பேரரசும் அவ்வபோது ஆண்டு வந்திருகிறது
முத்தரையர்
தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்திரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவர் ஆட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே.
தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.
முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர்,திருச்சி புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.
முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் கலப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படிவந்தது என்று தெரியவில்லை.
தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.
முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள்.
முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியனின்பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.
மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினராக இருந்திருக்க வ்ஏண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர.
இதற்கு அப்புறம் துவங்கியது தொண்டைமான் அரசர்களின் ஆதிக்கம். சுதந்திர இந்தியாவோடு புதுகை இணையும் வரை ஆண்ட வம்சம் தொண்டைமான் வம்சம்.
புதுக்கோட்டை சமஸ்தானம்
1 இரகுநாத தொண்டைமான் (1686 – 1730)
2 விஜயரகுநாதராய தொண்டைமான் (1730-1769)
3 இராயரகுநாத தொண்டைமான் (1769 – 1789
4 ராஜா விஜயரகுநாத தொண்டைமான் (1789 – 1807)
5 இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் (1807 – 1825)
6 இராஜா ரகுநாத தொண்டைமான் (1825 – 1839)
7 பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் (1839 – 1886)
8 பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி.ஐ.இ. (1886முதல்)
9 விஜயரகுநாத துரராஜ தொண்டைமான் பகதூர் (1922 முதல்)
10 பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்
புதுக்கோட்டை சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு உட்படாத தனி நாடு.தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம் ( இந்தியக் காசை எப்படி ரூபாய் என்கின்றோமோ அதுபோல புதுகை காசின் பெயர் அம்மன் காசு) என்று தனிக்காட்டு இராஜாவாக இருந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் புதுகையில் யாரேனும் என்னிடம் கையில் ஒரு பைசாக்கூட இல்லை என்பதனைக் குறிப்பிடும் முகமாக "கையில் அம்மஞ் சல்லிகூட இல்லை" என்ற பதத்தை வழக்கில் புழங்குவதைப் பரவலாகக் காணலாம்.
தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
புதுக்கோட்டை பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்
1 ) தமிழ்நாட்டின் முதல் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட நகரம்.
2 ) தமிழ்நாட்டின் மிகபெரிய மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்.
3 ) தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அருங்காட்சியகம் .
4 ) இந்தியாவின் முதன்மையான குடைவரை கோவில் கொண்ட நகரம் .
5 ) இந்தியாவின் இரண்டாவது பழமையான நுண்கலை ஓவியங்கள் கொண்ட நகரம்.
6 ) இந்தியாவில் கடைசியாக சுதந்திரம் பெற்ற இராச்சியம்.
7 ) மூன்று மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் ஒரே நகரம்.
8 ) 2012-ல் தமிழ்நாட்டின் மிக வெப்பமான நகரம் (107.8 F)
புதுக்கோட்டை மாகாணஆட்சியில் தபால் தலைகள்
தமிழ்நாட்டின் பழம் பெருமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்று. புதுக்கோட்டையில் உள்ள மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி. இதற்குத் தற்போது வயது 125. இந்தக் கல்லூரியில் நாவலாசிரியர் அகிலன் , முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் கல்வி பயின்றனர்.
“Darkness to Light”
"இருளிலிருந்து ஒளியை நோக்கி "
என்ற இந்த வாக்கியத்தை குறிக்கோளை கொண்டு இயங்கி வரும். இந்த கல்லூரியின் பெருமைகள் பல . பெரும்பாலும் கல்லூரியில் தான் ஒவ்வொருவரின் வாழ்கையும் தொடங்கும்.
அந்த தொடக்கமாய் பலரின் வாழ்கையை தீபம் ஏற்றி தொடங்கி வைத்த இந்த கல்லூரியின் சாதனைகள் பல . இக்கல்லுரியின் மூலமாய் சாதனை படிக்கட்டுகளில் ஏறி அமர்ந்த சாதனையாளர்கள் பலர்.
மன்னர் ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கூடமாக இருந்த இந்த நிறுவனம் தற்போது தன்னாட்சி பெற்ற கல்லூரியாகத் திகழ்கிறது. தற்போது தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணினி அறிவியல், வணிகவியல், தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், பொருளியல், உடற்கல்வி அறிவியல், கணிதவியல், இந்தி ஆகிய துறைகள் உள்ளன.
இவற்றில் ஆங்கில வழி, தமிழ்வழி என்ற இரு பிரிவுகளும் உண்டு. மொத்தம் 3000 மாணவர்கள் படிக்கும் இந்நிறுவனம் இருபாலர் படிக்கும் வசதிகள் கொண்டது. மேலும் மாணவ மாணவிகளுக்குத் தனித்தனியாக விடுதி வசதிகளும் உண்டு. மேலும் பல துறைகளில் பட்டமேற்படிப்பு உள்ளன.புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் இதுவும் ஒன்று.
இக்கல்லூரி முதலில் 1857 ம் வருடம் ஆங்கில பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது .பிறகு 1880 ம் வருடம் முதல் மெட்ராஸ் பல்கலைகழகம் கீழ் மெட்ரிகுலேசன் தேர்வுகள் நடத்தப்பட்டன . பின்னர் 1948 ம் வருடம் முதல் அரசு சார்ந்த கல்வி நிலையமாக அறிவிக்கப்பட்டது . பின்னர் 1982 முதல் பாரதிதாசன் பல்கலை கழகத்தின் கீழ் சார்ந்ததாக அறிவிக்கப்பட்டது .
இக்கல்லூரி 1998 ம் வருடம் முதல் தன்னாட்சி கல்லூரி எனஅறிவிக்கப்பட்டது. இக்கல்லூரி 13 துறைகளையும் , 3000 மாணவர்களையும் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இன்றும் இக்கல்லூரியில் தேர்தல் முறைப்படி நடத்தி மாணவர் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழக்கம் உள்ளது . இக்கல்லூரியின் தேசிய மாணவர் படை அமைப்பு பல இராணுவ வீரர்களையும், காவலர்களையும் இந்த நாட்டிற்கு உருவாக்கி தந்துள்ளது
இக்கல்லூரியின் சிறப்புமிக்க நூலகம் ஒன்று இயற்கையின் சீற்றத்தால் அழிக்கப்பட்டு ,பின்னர் மீண்டு அதே கட்டமைப்பை கொண்டு அழகிய பொலிவுடன் அணைத்து மாணவர்களையும் அரவணைக்கிறது. இந்நூலகத்தில் மிகவும் பழைய காலத்து புத்தகங்கள் , மிகவும் அரிய புத்தகங்களும் மிகவும் அழகாய் பராமரிக்கப்பட்டு வருகிறது
புதுக்கோட்டை வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்
ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.
ஆண்டவர்கள் :
பாண்டியப் பேரரசு
கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை தமிழகப் பகுதி கலப்பிரரின் ஆளுகையின் கீழ் இருந்தது. பிறகு பாண்டிய பேரரசு (3-880)வரை ஆட்சி செய்தார்கள்.
பல்லவர்
இதற்கு இடைப்பட்ட காலங்களில் பல்லவ பேரரசும் அவ்வபோது ஆண்டு வந்திருகிறது
முத்தரையர்
தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்திரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவர் ஆட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே.
தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.
முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர்,திருச்சி புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.
முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் கலப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படிவந்தது என்று தெரியவில்லை.
தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.
முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள்.
முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியனின்பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.
மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினராக இருந்திருக்க வ்ஏண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர.
இதற்கு அப்புறம் துவங்கியது தொண்டைமான் அரசர்களின் ஆதிக்கம். சுதந்திர இந்தியாவோடு புதுகை இணையும் வரை ஆண்ட வம்சம் தொண்டைமான் வம்சம்.
புதுக்கோட்டை சமஸ்தானம்
1 இரகுநாத தொண்டைமான் (1686 – 1730)
2 விஜயரகுநாதராய தொண்டைமான் (1730-1769)
3 இராயரகுநாத தொண்டைமான் (1769 – 1789
4 ராஜா விஜயரகுநாத தொண்டைமான் (1789 – 1807)
5 இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் (1807 – 1825)
6 இராஜா ரகுநாத தொண்டைமான் (1825 – 1839)
7 பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் (1839 – 1886)
8 பிரகதாம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி.ஐ.இ. (1886முதல்)
9 விஜயரகுநாத துரராஜ தொண்டைமான் பகதூர் (1922 முதல்)
10 பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்
புதுக்கோட்டை சமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு உட்படாத தனி நாடு.தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம் ( இந்தியக் காசை எப்படி ரூபாய் என்கின்றோமோ அதுபோல புதுகை காசின் பெயர் அம்மன் காசு) என்று தனிக்காட்டு இராஜாவாக இருந்தவர்கள் நாங்கள். இன்றைக்கும் புதுகையில் யாரேனும் என்னிடம் கையில் ஒரு பைசாக்கூட இல்லை என்பதனைக் குறிப்பிடும் முகமாக "கையில் அம்மஞ் சல்லிகூட இல்லை" என்ற பதத்தை வழக்கில் புழங்குவதைப் பரவலாகக் காணலாம்.
தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
புதுக்கோட்டை பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்
1 ) தமிழ்நாட்டின் முதல் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட நகரம்.
2 ) தமிழ்நாட்டின் மிகபெரிய மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்.
3 ) தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அருங்காட்சியகம் .
4 ) இந்தியாவின் முதன்மையான குடைவரை கோவில் கொண்ட நகரம் .
5 ) இந்தியாவின் இரண்டாவது பழமையான நுண்கலை ஓவியங்கள் கொண்ட நகரம்.
6 ) இந்தியாவில் கடைசியாக சுதந்திரம் பெற்ற இராச்சியம்.
7 ) மூன்று மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் ஒரே நகரம்.
8 ) 2012-ல் தமிழ்நாட்டின் மிக வெப்பமான நகரம் (107.8 F)
புதுக்கோட்டை மாகாணஆட்சியில் தபால் தலைகள்
திருமயம்
திருச்சி - புதுகோட்டை - காரைக்குடி சாலையில் புதுகோட்டையிலிருந்து தெற்கே 20கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருமயம் ஒரு கிராமும் கிடையாது, நகரமும் கிடையாது. இது ஒரு சிற்றூராட்சி.
இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது.
கிபி 630-688ல் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது தான் திருமயம். கருவரையுடன் கூடிய குடைவரைக் கோவிலை மட்டும் தான் பல்லவர்கள் கட்டியுள்ளார்கள்
அங்கு உள்ள சத்திய மூர்த்திப் பெருமாள் கோயில் முழுவதும் படிபடியாக பலரால் பிற்காலத்தில் சோழர்கள், முத்தரையர்கள், பாண்டியர்கள், விஜய நகர அரசர்கள், நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முதலானோர்கள் பல நிலைகளில் இக்கோயிலை கட்டியுள்ளார்கள்.
இங்கு உள்ள பெருமாள் பெரிய திருமேனியுடன் முப்பது அடிநீளத்தில் ( அரங்கநாதனை விட பெரிய திருமேனி) காட்சியளிக்கிறார்.
குடைவரை கோயிலில் ஐந்து தலைகளை உடைய ஆதிசேஷன் மீது சயனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். காலடியில் பூமாதேவி, மார்பினில் திருமகள், இடமிருந்து வலமாக கருடன், தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், வலதுகோடியில் மது,கைடபன் முதலான அரக்கர்கள் என அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கானப்பறை, பேரிகை, சல்லிகை, தக்கை, தண்ணுமை தடாகமும், தடாரி, உடுக்கை, கிடக்கை, கரடிக்கை முதலான பண்டைக்கால கருவிகளும் மலையில் வடிக்கப்பட்டுள்ளன!.
கோயிலுக்கு மேல் இருக்கும் கோட்டை ஒரு சின்ன குன்றின் மேல் அமைந்துள்ளது. இந்த கோட்டை ஊமையன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஊமையன் வீரப்பாண்டிய கட்டபொம்மனின் தம்பி. இந்த கோட்டை ராமனாதபுரம் இரகுநாத சேதுபதியால்(1678) கட்டப்பட்டது.
பிறகு(1728) தன் மாமன் இரகுநாத ராயத் தொண்டைமானுக்கு கொடுக்கப்பட்டது. இந்த கோட்டை ஏழு பிரகாரங்களை கொண்டவை. கடைசி பிரகாரம் தற்போது குப்பை தொட்டியாக பயண்படுகிறது.
இந்த திருமயம் கோட்டையின் ஒரு புறமாக , அக்கால போர்முறைகளை கண்முன் கொண்டுவரும் சுழலை காணலாம்.
இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது.
கிபி 630-688ல் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது தான் திருமயம். கருவரையுடன் கூடிய குடைவரைக் கோவிலை மட்டும் தான் பல்லவர்கள் கட்டியுள்ளார்கள்
அங்கு உள்ள சத்திய மூர்த்திப் பெருமாள் கோயில் முழுவதும் படிபடியாக பலரால் பிற்காலத்தில் சோழர்கள், முத்தரையர்கள், பாண்டியர்கள், விஜய நகர அரசர்கள், நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முதலானோர்கள் பல நிலைகளில் இக்கோயிலை கட்டியுள்ளார்கள்.
இங்கு உள்ள பெருமாள் பெரிய திருமேனியுடன் முப்பது அடிநீளத்தில் ( அரங்கநாதனை விட பெரிய திருமேனி) காட்சியளிக்கிறார்.
குடைவரை கோயிலில் ஐந்து தலைகளை உடைய ஆதிசேஷன் மீது சயனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். காலடியில் பூமாதேவி, மார்பினில் திருமகள், இடமிருந்து வலமாக கருடன், தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், வலதுகோடியில் மது,கைடபன் முதலான அரக்கர்கள் என அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, கானப்பறை, பேரிகை, சல்லிகை, தக்கை, தண்ணுமை தடாகமும், தடாரி, உடுக்கை, கிடக்கை, கரடிக்கை முதலான பண்டைக்கால கருவிகளும் மலையில் வடிக்கப்பட்டுள்ளன!.
கோயிலுக்கு மேல் இருக்கும் கோட்டை ஒரு சின்ன குன்றின் மேல் அமைந்துள்ளது. இந்த கோட்டை ஊமையன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஊமையன் வீரப்பாண்டிய கட்டபொம்மனின் தம்பி. இந்த கோட்டை ராமனாதபுரம் இரகுநாத சேதுபதியால்(1678) கட்டப்பட்டது.
பிறகு(1728) தன் மாமன் இரகுநாத ராயத் தொண்டைமானுக்கு கொடுக்கப்பட்டது. இந்த கோட்டை ஏழு பிரகாரங்களை கொண்டவை. கடைசி பிரகாரம் தற்போது குப்பை தொட்டியாக பயண்படுகிறது.
இந்த திருமயம் கோட்டையின் ஒரு புறமாக , அக்கால போர்முறைகளை கண்முன் கொண்டுவரும் சுழலை காணலாம்.
சித்தன்னவாசல்
சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். அந்த மாவட்டத்தின் தொல்லியல் பாரம்பரியம் மிக்க இடங்களில் புகழ்பெற்றதும் இந்த இடம்தான்.
இங்கே அழியும் தருவாயில் உள்ள பழங்கால ஓவியம், அந்த ஓவியம் அமைந்துள்ள குகைக்கோயில், அதன் பிறகு சில பல சமணர் படுக்கைகள், மிகப் பழமையான கல்வெட்டுக்கள் என்று அனைத்தும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன. இவை அனைத்தும் நமது பாரம்பரியத்திற்கு சமணர்களின் பங்களிப்பாகும். அவை மட்டுமின்றி, ஏகப்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சமணர்கள் பலகாலம் தங்கி இருந்ததற்கான சான்றுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. சில சில ஊர்களின் கூட இடிந்து போய் அடிவாரம் வரை மிச்சமமுள்ள சமணர் கோயில்களையும், அனாதையாக கைவிடப்பட்டுள்ள சமணர் சிலைகளும் கிடைத்துள்ளன.
தமிழக தொல்லியல் துறையின் சமணர் பட்டியலில் புதுக்கோட்டை மிக முக்கியத்துவம் பெறுகிறது. அப்படிக் கைவிடப்பட்டுள்ள சில சமணர் சிலைகள் சில இடங்களில் வழிபாட்டிலும் உள்ளன. மொட்டைப் பிள்ளையார், சடையர் என்று மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப பெயர் சூட்டி, செவ்வந்திப்பூ மாலை, சாம்பிராணி, குழாயில் மாரியம்மன் பாடல் என்று சில புண்ணியம் பெற்ற சமணர் சிலைகள் வழிபாட்டில் உள்ளன.
இந்த இடம் ஒரு குன்று. கிட்டத்தட்ட 200 அடி உயரம் உடையது. சாலையிலிருந்து போனதும் செங்குத்தான அந்த மலையில் ஓரத்திலிருந்து படிக்கட்டுகள் தொடங்குகின்றன. ஒரு புறம் ஏறி மறுபுறம் அடைந்தால் முதலில் வருவது சமணர் படுக்கைகள்.
அவற்றை விடுத்து கீழே இறங்கி அடுத்த அரை கிலோமீட்டர் போனால் குகைக்கோயிலும் அதனுள் வரையப்பட்டிரு்ககும் அழகிய ஓவியமும் உள்ளன.
அந்த குன்றைச் சுற்றி பல்வேறு இடங்களில் முதுமக்கள் தாழிகளைப் பார்க்கலாம். கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 10 ஆம் நூற்றாண்டு வரை சித்தன்னவாசலில் சமணம் தழைத்தோங்கி உள்ளது. கிபி 7 அல்லது 9ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற ஓவியம் வரையப்பட்டுள்ள அறிவர் கோயில் குடையப்பெற்றுள்ளது.
இங்கே சமணர் படுக்கைகள் மற்றும் எழுத்துருக்கள் உள்ள ஏழடிப்பட்டம்
குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில் மலை உச்சியில் ஒரு சுனை, நவ்வாச்சுனை என்று ஒரு பாதி நாளுக்கு வரலாற்றுசு் சுற்றுலா கொண்டாட ஏதுவான வசதிகள் அனைத்தும் உண்டு.இந்த இடத்தை ஏழடிப்பட்டம் என்று கூறுகிறார்கள்.
முன்னரே சொன்னது போல, ஒரு மலையில் செங்குத்தாக கடந்து மறுபக்கம் இறங்கவேண்டி உள்ளது. இருக்கும் ஒரு அடி இடத்தில் நமக்காக பாதை அமைந்துத் தந்துள்ளது தொல்லியல் துறை. கொஞ்சம் பலமாகக் காற்றடித்தால், இதயம் உடலை விட்டு வெளியில் வந்து துடிக்கும், அந்த அளவுக்கு செங்குத்தான சரிவு மறுபுறம். எழு காலடித்தடங்களைச் செதுக்கி அதன் மூலமாக முனிவர்கள் இந்த இடத்தை வந்த போயிருக்கிறார்கள். அதனாலேயே இந்த அழகான பெயரைச் சூட்டியிருக்கின்றனர்.
இந்த ஏழடிப்பட்டம் என்பது இயற்கையாகவே மலையில் அமைந்த ஒரு குகை. மலையில் மடிப்பு மாதிரியான ஒரு அமைப்பு. காதில் கூச்சலிடும் காற்று, தனிமை, அமைதி, பக்கத்தில் உதவிக்கு என்று அழைக்க யாருமே இல்லாத ஒரு புதர் காடு என்று இந்த இடம் துறவிகளுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் போல.
கயாவின் லோமாஸ் ரிஷி, புவனேஸ்வரத்தின் உதயகிரி குகைகள், தமிழ்நாட்டின் ஆனைமலை, அழகர்மலை போன்றவையும் இத்தன்மையதே. புதுக்கோட்டையிலேயே, குடுமியாமலை, நார்த்தாமலையில் இத்தகைய குகைகள் உண்டு. மலை இருந்தால் குகை இருப்பது சகஜம்தானே!
இங்கேதான் சமண துறவிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி சமய சேவைகள் செய்து, நோண்பிருந்து தம் நல்லுயிர் ஈந்திரு்கின்றனர். இந்த குகை ஒரு அறை போன்று தோற்றம் உடையது. தொலலியல் துறைக்கே உண்டான வவ்வால் நாற்றமும் உண்டு. இங்கே 17 படுக்கைகள் அமைந்துள்ளன, கல் தலையணையோடு! அதில் ஒன்று மட்டும் பெரியது, அனேகமாக அதுவே பழையது.
இதைப் பற்றி குறிப்பிட காரணம் உண்டு. அனேகமாக இந்த படுக்கையைச் சுற்றித்தான் தென்னிந்தியாவின் மிகப் பழமையான எழுத்துவடிவம் கல்வெட்டாய் நமக்குக் கிடைக்கிறது. தமிழ் மொழியை அசோக பிராமியில் பதித்துள்ளார்கள். இதன் காலம் கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட 2010 வருடங்களுக்கு முந்தியது!!
படத்தைச் சுற்றி எழுதியிருப்பது கல்வெட்டின் வடிவம். எருமிநாட்டில் உள்ள குமிழூரில் பிறந்த காவுடி (துறவியோட பெயர்)க்காக, தென்கு சிறுபோசில் ஊரைச் சேர்ந்த இளையர் செய்தளித்த படுக்கை என்பதே அதில் கூறப்படம் செய்தி. செய்தியில் விசேசமில்லை, அது செய்யப்பட்ட காலத்தில்தான் சிறப்பு உள்ளது.
பெரும்பாலும் அனைத்துப் படுக்கைகளும் கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளன. பொதுவாக யாருக்காக யார் செய்து கொடுத்த படுக்கை என்ற அதில் எழுதப்பட்டிருக்கும். சில படுக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களும் உண்டு. ஒரே படுக்கையை பலரும் பயன்படுத்தி இரு்ககலாம் அல்லவா.
ஓவியங்கள் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைக்கோயில்தான் அறிவர் கோயில். சாலையிலிருந்து ஒரு நூறு அடி தூரத்தில் உள்ளது இந்த கோயில். இதன் உள்ளே சமண ஆச்சாரியர்களின் சிலைகளும், விதானத்தில் ஓவியங்களும் காண்பபடுகின்றன
கர்ப்ப கிரகத்தின் சிற்பங்கள்,சித்தன்னவாசல் ஓவியங்கள், கிமு 2- கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா, 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை சிகிரியா, 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாக் குகை ஓவியங்கள் (மத்தியபிரதேசம்) இவற்றுடன் காலத்திலும், வரையும் முறையிலும், தரத்திலும் ஒப்பிடத்தக்கது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, சித்தன்னவாசல் மட்டுமே முற்கால சமண ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
சமவஸரணம் என்ற சமண சமய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ள விதான ஓவியங்கள் நிஜமாகவே அழகான மற்றும் நேர்த்தியானவை. மேலே கொடுக்கப்பட்டுள்ள ஓவியங்களில் கோட்டோவியங்களாகக் கொடுக்கப்பட்டுள்ள நடன மாதர்களின் படங்கள் அழிந்துவிட்டன.
நவ்வா மரத்தூர்களில் ஒளிந்திருக்கும் நவ்வாச்சுனை, இந்த சுனையின் உள்ளே ஒரு குகைக்கோயில் உள்ளது. சிவனுக்கானது.இதுமாதிரியான கல் வட்டங்களை நிறைய பார்க்கலாம். பழங்கால மக்களைப் புதைத்த இடங்கள் இவை. இங்கிருந்து எடுக்கப்பட்ட தாழிகளில் ஆயுதங்கள் போன்றவையும் இருந்திருக்கின்றன.
அஜந்தா குகை ஓவியங்களைப் போன்று பல ஓவியங்களைப் பார்க்க இயலாது. இருப்பது சிறிய குகைக்கோயில்தான். அதுவும் ஒனறுதான்.
இருக்கும் ஓவியங்களும் அழிந்து வருகின்றன. இருப்பவையும் பக்கத்தில் நடைபெற்றுவரும் கல்குவாரிகளால் நாளுக்கு நாள் உதிர்கின்றன. சமண சமயத்திற்கு என்று நமக்கு இருக்கும் ஒரே இடம் இதுதான்.
அம்மதத்தைச் சேர்ந்த அல்லது சேராத அமைப்புகளோ தனி மனிதர்களோ, சற்று கவனம் எடுத்து சித்தன்னவாசலைக் காப்பாற்றினால் மட்டுமே நமது சந்ததியினருக்கு சித்தன்னவாசல் ஓவியத்தைக் காட்டலாம்.
வெற்றிடமே!அதுமட்டுமில்லாமல் ஆள் அரவமற்ற இடமாக இருப்பதால், நம் ஊருக்கென உள்ள அலங்கோலங்களும் நடைபெறும். தக்க துணையுடனும் ஏற்பாடுகளுடனும் செல்லுதல் உகந்தது.
இங்கே அழியும் தருவாயில் உள்ள பழங்கால ஓவியம், அந்த ஓவியம் அமைந்துள்ள குகைக்கோயில், அதன் பிறகு சில பல சமணர் படுக்கைகள், மிகப் பழமையான கல்வெட்டுக்கள் என்று அனைத்தும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன. இவை அனைத்தும் நமது பாரம்பரியத்திற்கு சமணர்களின் பங்களிப்பாகும். அவை மட்டுமின்றி, ஏகப்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சமணர்கள் பலகாலம் தங்கி இருந்ததற்கான சான்றுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. சில சில ஊர்களின் கூட இடிந்து போய் அடிவாரம் வரை மிச்சமமுள்ள சமணர் கோயில்களையும், அனாதையாக கைவிடப்பட்டுள்ள சமணர் சிலைகளும் கிடைத்துள்ளன.
தமிழக தொல்லியல் துறையின் சமணர் பட்டியலில் புதுக்கோட்டை மிக முக்கியத்துவம் பெறுகிறது. அப்படிக் கைவிடப்பட்டுள்ள சில சமணர் சிலைகள் சில இடங்களில் வழிபாட்டிலும் உள்ளன. மொட்டைப் பிள்ளையார், சடையர் என்று மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப பெயர் சூட்டி, செவ்வந்திப்பூ மாலை, சாம்பிராணி, குழாயில் மாரியம்மன் பாடல் என்று சில புண்ணியம் பெற்ற சமணர் சிலைகள் வழிபாட்டில் உள்ளன.
இந்த இடம் ஒரு குன்று. கிட்டத்தட்ட 200 அடி உயரம் உடையது. சாலையிலிருந்து போனதும் செங்குத்தான அந்த மலையில் ஓரத்திலிருந்து படிக்கட்டுகள் தொடங்குகின்றன. ஒரு புறம் ஏறி மறுபுறம் அடைந்தால் முதலில் வருவது சமணர் படுக்கைகள்.
அவற்றை விடுத்து கீழே இறங்கி அடுத்த அரை கிலோமீட்டர் போனால் குகைக்கோயிலும் அதனுள் வரையப்பட்டிரு்ககும் அழகிய ஓவியமும் உள்ளன.
அந்த குன்றைச் சுற்றி பல்வேறு இடங்களில் முதுமக்கள் தாழிகளைப் பார்க்கலாம். கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 10 ஆம் நூற்றாண்டு வரை சித்தன்னவாசலில் சமணம் தழைத்தோங்கி உள்ளது. கிபி 7 அல்லது 9ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற ஓவியம் வரையப்பட்டுள்ள அறிவர் கோயில் குடையப்பெற்றுள்ளது.
இங்கே சமணர் படுக்கைகள் மற்றும் எழுத்துருக்கள் உள்ள ஏழடிப்பட்டம்
குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில் மலை உச்சியில் ஒரு சுனை, நவ்வாச்சுனை என்று ஒரு பாதி நாளுக்கு வரலாற்றுசு் சுற்றுலா கொண்டாட ஏதுவான வசதிகள் அனைத்தும் உண்டு.இந்த இடத்தை ஏழடிப்பட்டம் என்று கூறுகிறார்கள்.
முன்னரே சொன்னது போல, ஒரு மலையில் செங்குத்தாக கடந்து மறுபக்கம் இறங்கவேண்டி உள்ளது. இருக்கும் ஒரு அடி இடத்தில் நமக்காக பாதை அமைந்துத் தந்துள்ளது தொல்லியல் துறை. கொஞ்சம் பலமாகக் காற்றடித்தால், இதயம் உடலை விட்டு வெளியில் வந்து துடிக்கும், அந்த அளவுக்கு செங்குத்தான சரிவு மறுபுறம். எழு காலடித்தடங்களைச் செதுக்கி அதன் மூலமாக முனிவர்கள் இந்த இடத்தை வந்த போயிருக்கிறார்கள். அதனாலேயே இந்த அழகான பெயரைச் சூட்டியிருக்கின்றனர்.
இந்த ஏழடிப்பட்டம் என்பது இயற்கையாகவே மலையில் அமைந்த ஒரு குகை. மலையில் மடிப்பு மாதிரியான ஒரு அமைப்பு. காதில் கூச்சலிடும் காற்று, தனிமை, அமைதி, பக்கத்தில் உதவிக்கு என்று அழைக்க யாருமே இல்லாத ஒரு புதர் காடு என்று இந்த இடம் துறவிகளுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் போல.
கயாவின் லோமாஸ் ரிஷி, புவனேஸ்வரத்தின் உதயகிரி குகைகள், தமிழ்நாட்டின் ஆனைமலை, அழகர்மலை போன்றவையும் இத்தன்மையதே. புதுக்கோட்டையிலேயே, குடுமியாமலை, நார்த்தாமலையில் இத்தகைய குகைகள் உண்டு. மலை இருந்தால் குகை இருப்பது சகஜம்தானே!
இங்கேதான் சமண துறவிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி சமய சேவைகள் செய்து, நோண்பிருந்து தம் நல்லுயிர் ஈந்திரு்கின்றனர். இந்த குகை ஒரு அறை போன்று தோற்றம் உடையது. தொலலியல் துறைக்கே உண்டான வவ்வால் நாற்றமும் உண்டு. இங்கே 17 படுக்கைகள் அமைந்துள்ளன, கல் தலையணையோடு! அதில் ஒன்று மட்டும் பெரியது, அனேகமாக அதுவே பழையது.
இதைப் பற்றி குறிப்பிட காரணம் உண்டு. அனேகமாக இந்த படுக்கையைச் சுற்றித்தான் தென்னிந்தியாவின் மிகப் பழமையான எழுத்துவடிவம் கல்வெட்டாய் நமக்குக் கிடைக்கிறது. தமிழ் மொழியை அசோக பிராமியில் பதித்துள்ளார்கள். இதன் காலம் கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட 2010 வருடங்களுக்கு முந்தியது!!
படத்தைச் சுற்றி எழுதியிருப்பது கல்வெட்டின் வடிவம். எருமிநாட்டில் உள்ள குமிழூரில் பிறந்த காவுடி (துறவியோட பெயர்)க்காக, தென்கு சிறுபோசில் ஊரைச் சேர்ந்த இளையர் செய்தளித்த படுக்கை என்பதே அதில் கூறப்படம் செய்தி. செய்தியில் விசேசமில்லை, அது செய்யப்பட்ட காலத்தில்தான் சிறப்பு உள்ளது.
பெரும்பாலும் அனைத்துப் படுக்கைகளும் கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளன. பொதுவாக யாருக்காக யார் செய்து கொடுத்த படுக்கை என்ற அதில் எழுதப்பட்டிருக்கும். சில படுக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களும் உண்டு. ஒரே படுக்கையை பலரும் பயன்படுத்தி இரு்ககலாம் அல்லவா.
ஓவியங்கள் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைக்கோயில்தான் அறிவர் கோயில். சாலையிலிருந்து ஒரு நூறு அடி தூரத்தில் உள்ளது இந்த கோயில். இதன் உள்ளே சமண ஆச்சாரியர்களின் சிலைகளும், விதானத்தில் ஓவியங்களும் காண்பபடுகின்றன
கர்ப்ப கிரகத்தின் சிற்பங்கள்,சித்தன்னவாசல் ஓவியங்கள், கிமு 2- கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா, 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை சிகிரியா, 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாக் குகை ஓவியங்கள் (மத்தியபிரதேசம்) இவற்றுடன் காலத்திலும், வரையும் முறையிலும், தரத்திலும் ஒப்பிடத்தக்கது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, சித்தன்னவாசல் மட்டுமே முற்கால சமண ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
சமவஸரணம் என்ற சமண சமய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ள விதான ஓவியங்கள் நிஜமாகவே அழகான மற்றும் நேர்த்தியானவை. மேலே கொடுக்கப்பட்டுள்ள ஓவியங்களில் கோட்டோவியங்களாகக் கொடுக்கப்பட்டுள்ள நடன மாதர்களின் படங்கள் அழிந்துவிட்டன.
நவ்வா மரத்தூர்களில் ஒளிந்திருக்கும் நவ்வாச்சுனை, இந்த சுனையின் உள்ளே ஒரு குகைக்கோயில் உள்ளது. சிவனுக்கானது.இதுமாதிரியான கல் வட்டங்களை நிறைய பார்க்கலாம். பழங்கால மக்களைப் புதைத்த இடங்கள் இவை. இங்கிருந்து எடுக்கப்பட்ட தாழிகளில் ஆயுதங்கள் போன்றவையும் இருந்திருக்கின்றன.
அஜந்தா குகை ஓவியங்களைப் போன்று பல ஓவியங்களைப் பார்க்க இயலாது. இருப்பது சிறிய குகைக்கோயில்தான். அதுவும் ஒனறுதான்.
இருக்கும் ஓவியங்களும் அழிந்து வருகின்றன. இருப்பவையும் பக்கத்தில் நடைபெற்றுவரும் கல்குவாரிகளால் நாளுக்கு நாள் உதிர்கின்றன. சமண சமயத்திற்கு என்று நமக்கு இருக்கும் ஒரே இடம் இதுதான்.
அம்மதத்தைச் சேர்ந்த அல்லது சேராத அமைப்புகளோ தனி மனிதர்களோ, சற்று கவனம் எடுத்து சித்தன்னவாசலைக் காப்பாற்றினால் மட்டுமே நமது சந்ததியினருக்கு சித்தன்னவாசல் ஓவியத்தைக் காட்டலாம்.
வெற்றிடமே!அதுமட்டுமில்லாமல் ஆள் அரவமற்ற இடமாக இருப்பதால், நம் ஊருக்கென உள்ள அலங்கோலங்களும் நடைபெறும். தக்க துணையுடனும் ஏற்பாடுகளுடனும் செல்லுதல் உகந்தது.
குடுமியான்மலை
குடுமியான்மலை - புதுக்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் மற்றும் ஒரு அதிசயம், சிற்ப கலையின் மணி மகுடம் என்றே சொல்லலாம்.
குடுமியான்மலை புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ தொலைவில்
உள்ள ஒரு அழகான மற்றும் பல அதிசயங்களை கொண்ட கலை நயம் கொண்ட ஊர் என்றால் மிகை அல்ல.
இங்குள்ள கோயில் மூலவரின் பெயர் சிகாநாதசாமி. இந்த ஊருக்கான பெயர்காரணமும் இவரையே சார்ந்துள்ளது . அதற்க்கான வரலாறு
இதோ உங்களுக்கு,
" முன்னொரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்குவந்த தனது ஆசைநாயகிக்கு கொடுத்துவிட்டார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் மன்னர் கோயிலுக்கு வந்துவிட, மன்னரைக் கண்டதும் செய்வதறியாது தவித்த அர்ச்சகர் தனது ஆசைநாயகியின் தலையிலிருந்த பூவை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தி, அதைப் பிரசாதமாக மன்னருக்கு அளிக்க அதில் தலைமுடி ஒட்டியிருந்ததைக் கண்ட மன்னர் அதன் காரணத்தை அர்ச்சகரிடம் வினவினார்.
அர்ச்சகர் சமயோதிதமாக கோயிலில் குடி கொண்டிருக்கும் மூலவருக்கு குடுமியுள்ளது என்று சொல்லிவிட்டார். வியப்பு மேலிட்ட மன்னர் இறைவனின் குடுமியைக் காட்டும்படி கேட்க, தனது பக்தனான அர்ச்சகரைக் காப்பாற்ற இறைவனும் லிங்கத்தில் குடுமியுடன் காட்சியளித்தார். "
இதுதான் மூலவரின் பெயருக்கும் , ஊரின் பெயருக்கும் உள்ள பெயர்காரணம். சற்றே விளக்கமாக ,
"கோயில் மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு குடுமியான் மலை என்று அழைக்கப்படுகிறது."
"சிகா என்பது குடுமி என்னும் பொருளில் குடுமியுள்ள இறைவன்
என்று வரும்"
மேலும் , இக்கோயிலில் குடுகொண்டுள்ள லிங்கத்திற்கு குடுமியிருப்பதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத்தின் குடுமி - முடிச்சு போன்ற பகுதி இருப்பதை பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.
அக்காலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் குன்றைச் சுற்றிலும் வீடுகள் அமைந்திருந்தன. குன்றின் மீது ஏறிச் செல்லும் போது ஒரு இயற்கைக் குகையினைக் காண்கிறோம். இது கற்கால மனிதர்களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். குன்றின் உச்சியில் குன்றுதோரோடும் குமரன்கோயில் உள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோயில் உள்ளது.
புதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய செய்திகளை குடுமியான்மலையிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இங்குள்ள மேலக்கோயில் என்னும் குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள கர்நாடக சங்கீதம் பற்றிய கல்வெட்டு ஒன்று உள்ளது.
பல்லவராயர்கள் இக்கோயிலின் பராமரிப்பிற்கு கொடைகள் அளித்த செய்தியை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பல்லவராயர்களைத் தொடர்ந்து தொண்டைமான்களின் ஆட்சியில் இக்கோயில் சிறப்புடன் விளங்கியது. காலத்தால் முற்பட்ட தொண்டைமான் மன்னர்கள் இந்தக் கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார்கள். ரகுநாதராயத் தொண்டைமான்(1686 - 1730) குகைக் கோயிலின் முன் உள்ள மண்டபத்தைக் கட்டியிருக்கிறார். 1730ல் ராஜா விஜயரகுநாத ராயத் தொண்டைமான் இக்கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார். அம்மன் கோயிலிலுள்ள 1872ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் இக்கோயிலின் திருக்குடமுழுக்குத் திருவிழா நடைபெற்ற செய்தியைத் தெரிவிக்கிறது
இம்மண்டபத்தின் முகப்புத் தூண்களில் அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன. மேலும், ஆனைவெட்டு மண்டபத்தில் மிகவும் கலைநயம் வாய்ந்த சிற்பங்களை காண முடியும்.
"உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதாரக் காட்சியினை நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் காணலாம் "
"உலகத்து அழகையெல்லாம் தன்வயப்படுத்திக் கொண்டு காட்சியளிக்கும் மோகினி(மோகினி உருவில் விஷ்ணு)"
"வினை தீர்க்கும் விநாயகர்,பத்துத் தலையுடன் கூடிய இராவணன்,அகோர வீரபத்திரர் என பல சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன"
நாயக்கர் மண்டபத்தில் காணப்படும் வியாகரபாதர்(மனித உருவம் புலியின் கால்கள்) பதஞ்சலி(மனித உடலும் பாம்பு கால்கள் போன்றும்) சிற்பங்கள் காணத்தக்கவையாகும்.
ரகுநாதராயத் தொண்டைமான் குகைக்கோயிலுக்கு முன்னால் ஒரு மண்டபத்தைக் கட்ட உயரமான இந்த மண்டபத்திற்கு விஜரகுநாதராய தொண்டைமான் 1730 - 1769 படிக்கட்டுகள் அமைத்தார் என்றும் செய்திகள் அறியப்படுகிறது.
இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
குடுமியான்மலை புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ தொலைவில்
உள்ள ஒரு அழகான மற்றும் பல அதிசயங்களை கொண்ட கலை நயம் கொண்ட ஊர் என்றால் மிகை அல்ல.
இங்குள்ள கோயில் மூலவரின் பெயர் சிகாநாதசாமி. இந்த ஊருக்கான பெயர்காரணமும் இவரையே சார்ந்துள்ளது . அதற்க்கான வரலாறு
இதோ உங்களுக்கு,
" முன்னொரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்குவந்த தனது ஆசைநாயகிக்கு கொடுத்துவிட்டார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் மன்னர் கோயிலுக்கு வந்துவிட, மன்னரைக் கண்டதும் செய்வதறியாது தவித்த அர்ச்சகர் தனது ஆசைநாயகியின் தலையிலிருந்த பூவை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தி, அதைப் பிரசாதமாக மன்னருக்கு அளிக்க அதில் தலைமுடி ஒட்டியிருந்ததைக் கண்ட மன்னர் அதன் காரணத்தை அர்ச்சகரிடம் வினவினார்.
அர்ச்சகர் சமயோதிதமாக கோயிலில் குடி கொண்டிருக்கும் மூலவருக்கு குடுமியுள்ளது என்று சொல்லிவிட்டார். வியப்பு மேலிட்ட மன்னர் இறைவனின் குடுமியைக் காட்டும்படி கேட்க, தனது பக்தனான அர்ச்சகரைக் காப்பாற்ற இறைவனும் லிங்கத்தில் குடுமியுடன் காட்சியளித்தார். "
இதுதான் மூலவரின் பெயருக்கும் , ஊரின் பெயருக்கும் உள்ள பெயர்காரணம். சற்றே விளக்கமாக ,
"கோயில் மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு குடுமியான் மலை என்று அழைக்கப்படுகிறது."
"சிகா என்பது குடுமி என்னும் பொருளில் குடுமியுள்ள இறைவன்
என்று வரும்"
மேலும் , இக்கோயிலில் குடுகொண்டுள்ள லிங்கத்திற்கு குடுமியிருப்பதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத்தின் குடுமி - முடிச்சு போன்ற பகுதி இருப்பதை பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.
அக்காலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் குன்றைச் சுற்றிலும் வீடுகள் அமைந்திருந்தன. குன்றின் மீது ஏறிச் செல்லும் போது ஒரு இயற்கைக் குகையினைக் காண்கிறோம். இது கற்கால மனிதர்களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். குன்றின் உச்சியில் குன்றுதோரோடும் குமரன்கோயில் உள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோயில் உள்ளது.
புதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய செய்திகளை குடுமியான்மலையிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இங்குள்ள மேலக்கோயில் என்னும் குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள கர்நாடக சங்கீதம் பற்றிய கல்வெட்டு ஒன்று உள்ளது.
பல்லவராயர்கள் இக்கோயிலின் பராமரிப்பிற்கு கொடைகள் அளித்த செய்தியை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பல்லவராயர்களைத் தொடர்ந்து தொண்டைமான்களின் ஆட்சியில் இக்கோயில் சிறப்புடன் விளங்கியது. காலத்தால் முற்பட்ட தொண்டைமான் மன்னர்கள் இந்தக் கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார்கள். ரகுநாதராயத் தொண்டைமான்(1686 - 1730) குகைக் கோயிலின் முன் உள்ள மண்டபத்தைக் கட்டியிருக்கிறார். 1730ல் ராஜா விஜயரகுநாத ராயத் தொண்டைமான் இக்கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார். அம்மன் கோயிலிலுள்ள 1872ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் இக்கோயிலின் திருக்குடமுழுக்குத் திருவிழா நடைபெற்ற செய்தியைத் தெரிவிக்கிறது
இம்மண்டபத்தின் முகப்புத் தூண்களில் அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன. மேலும், ஆனைவெட்டு மண்டபத்தில் மிகவும் கலைநயம் வாய்ந்த சிற்பங்களை காண முடியும்.
"உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதாரக் காட்சியினை நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் காணலாம் "
"உலகத்து அழகையெல்லாம் தன்வயப்படுத்திக் கொண்டு காட்சியளிக்கும் மோகினி(மோகினி உருவில் விஷ்ணு)"
"வினை தீர்க்கும் விநாயகர்,பத்துத் தலையுடன் கூடிய இராவணன்,அகோர வீரபத்திரர் என பல சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன"
நாயக்கர் மண்டபத்தில் காணப்படும் வியாகரபாதர்(மனித உருவம் புலியின் கால்கள்) பதஞ்சலி(மனித உடலும் பாம்பு கால்கள் போன்றும்) சிற்பங்கள் காணத்தக்கவையாகும்.
ரகுநாதராயத் தொண்டைமான் குகைக்கோயிலுக்கு முன்னால் ஒரு மண்டபத்தைக் கட்ட உயரமான இந்த மண்டபத்திற்கு விஜரகுநாதராய தொண்டைமான் 1730 - 1769 படிக்கட்டுகள் அமைத்தார் என்றும் செய்திகள் அறியப்படுகிறது.
இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.
திருவரங்குளம்
ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் என்ற கிராமத்தின் வரலாற்றுப்
பின்னணியும் , திருவரங்குளம் ஊரின் வரலாறும் , பெயர்காரணமும்.
மண்ணுக்கு அடியில் 3000 பொற்பனம்பழம்
திருவரங்குளம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. அந்தக் காட்டில் வேடன் ஓருவன் தன் மனைவியுடன் வசித்து வந்தான். ஒருமுறை உணவு தேடச் சென்ற அந்த வேடுவச்சியைக் காணவில்லை. நீண்டதூரம் சென்றும் உணவு கிடைக்காத அவள், திரும்பி வரும் வழியை அறிய முடியாமல் தவித்தாள்.
அவளை ஒரு முனிவர் கண்டார். பத்திரமாக அவளை வேடனிடம் ஒப்படைத்தார். அவர்களது வறுமை நிலையைக் கண்ட அவர் ஒரு பனைமரத்தை அவர்கள் அறியாமலே படைத்து விட்டு சென்று விட்டார்.
அந்த மரத்திலிருந்து தினமும் ஒரு பொற்பனம்பழம் கீழே விழுந்தது. இதை எடுத்த வேடன், ஊருக்குள் வந்து ஒரு வணிகரிடம் கொடுப்பான். அதன் உண்மை மதிப்பை அறியாத அவனிடம், வணிகர் ஏதோ சிறிதளவு பொருளை மட்டும் கொடுப்பார். அதைக் கொண்டு உணவு சமைத்து அவன் காலத்தை ஓட்டி வந்தான்.
இப்படியே 4420 பழங்களை விற்று விட்டான். வணிகரோ பெரும் பணக்காரராகி விட்டார். வணிகரின் அபரிமிதமான வளர்ச்சி கண்ட வேடனுக்கு சந்தேகம் ஏற்பட்டு சிலரிடம் விசாரிக்க, பல்லாயிரம் பணம் மதிப்புள்ள பொற்பனம்பழங்களை, வெறும் உணவுக்கு விற்றது கண்டு வருந்தினான். வணிகரிடம் தனக்குரிய பங்கைக் கேட்டான். அவர் மறுத்து விட்டார்.
வேடன் மன்னரிடம் புகார் செய்தான். பொற்பனை பற்றி கேள்விப்பட்ட மன்னன் தன் ஏவலர்களை அனுப்பி அம்மரத்தை பார்த்து வர ஆணையிட்டான். அங்கோ மரமே இல்லை. அதற்கு பதிலாக ஒரு லிங்கம் காணப் பட்டது.
இவ்விடத்தில் ஒரு கோயில் கட்ட தீர் மானித்தான். இதைக் கேள்விப் பட்ட வணிகரும், இறைவனால் இப்பொருள் வேடனுக்கு அருளப் பட்டது என்பதையறிந்து அவனிடமிருந்து பெற்ற பொற்பனம் பழங்களில் 1420 ஐ விற்று ஒரு கோயில் எழுப்பினார். மீதி 3000 பழங்களை கோயில் அறை ஒன்றில் பூட்டி வைத்தார்.
அப்பழங்கள் இவ்வூரிலேயே புதைந்து கிடக்கும் என இவ்வூர் மக்கள் இப்போதும் நம்புகின்றனர்.
இக் கோயிலில் மூலவர் அரங்குளநாதர் எனப்படுகிறார்.. மூலவரின் பெயரை கொண்டு ஊரின் பெயர் வந்திருக்கலாம் என்பது எனது கருத்து.
இவ்வூரைச் சேர்ந்த பெண்மணியே தெய்வமான கதை
இவ்வூரைச் சேர்ந்த பெண்மணியான பெரியநாயகி என்பவர் இறைவன் மீது அதீத அன்பு பூண்டிருந்தார். ஒருமுறை தன் பெற்றோருடன் கோயிலுக்கு வந்தார். சற்றுநேரத்தில் மறைந்து விட்டார். பின்பு அசரீரி தோன்றி, அப்பெண்மணி சிவனுடன் ஐக்கியமாகி விட்ட தகவலை தெரிவித்தது.
நகரத்தார் சமுதாயத்தினர் அவரை அம்மனாகக் கருதி, "பிரகதாம்பாள்' என பெயர் சூட்டி தனி சன்னதி எழுப்பினர். இது காலத்தால் பிற்பட்ட சன்னதி என்பது பார்த்தாலே புரியவரும்.
சிறப்பு வாய்ந்த நடராஜர் சிலை
இக்கோயில் நடராஜர் சிலை சிறப்பு வாய்ந்த ஒன்று. இதன் படிமம் டில்லியிலுள்ள தேசிய மியூசியத்தில் உள்ளது. சுவாமி அரங்குளநாதர் சுயம்புவாக அருள் தருகிறார். பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட ராஜகோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும்.
இங்குள்ள திருச்சிற்றம்பலம் உடையாரை தரிசித்தால் காசி விஸ்வநாதரை தரிசித்த பலன் கிடைக்கும். 12 ராசிகளும் அதற்குரிய அதிதேவதைகளுடன் மூலிகை ஓவியமாக வசந்த மண்டபத்தின் உச்சியில் வரையப்பட்டுள்ளது.
பிரகாரத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் கையில் வீணை இருக்கிறது. பிரகாரத்தை நூற்றுக்கால் மண்டபம் என்கிறார்கள். ஒரு குதிரை வீரனின் சிற்பம் கல்பலகை ஒன்றில் வடிக்கப்பட்டுள்ளது. இது இப்பகுதியில் வாழ்ந்த வீரனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
பின்னணியும் , திருவரங்குளம் ஊரின் வரலாறும் , பெயர்காரணமும்.
மண்ணுக்கு அடியில் 3000 பொற்பனம்பழம்
திருவரங்குளம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. அந்தக் காட்டில் வேடன் ஓருவன் தன் மனைவியுடன் வசித்து வந்தான். ஒருமுறை உணவு தேடச் சென்ற அந்த வேடுவச்சியைக் காணவில்லை. நீண்டதூரம் சென்றும் உணவு கிடைக்காத அவள், திரும்பி வரும் வழியை அறிய முடியாமல் தவித்தாள்.
அவளை ஒரு முனிவர் கண்டார். பத்திரமாக அவளை வேடனிடம் ஒப்படைத்தார். அவர்களது வறுமை நிலையைக் கண்ட அவர் ஒரு பனைமரத்தை அவர்கள் அறியாமலே படைத்து விட்டு சென்று விட்டார்.
அந்த மரத்திலிருந்து தினமும் ஒரு பொற்பனம்பழம் கீழே விழுந்தது. இதை எடுத்த வேடன், ஊருக்குள் வந்து ஒரு வணிகரிடம் கொடுப்பான். அதன் உண்மை மதிப்பை அறியாத அவனிடம், வணிகர் ஏதோ சிறிதளவு பொருளை மட்டும் கொடுப்பார். அதைக் கொண்டு உணவு சமைத்து அவன் காலத்தை ஓட்டி வந்தான்.
இப்படியே 4420 பழங்களை விற்று விட்டான். வணிகரோ பெரும் பணக்காரராகி விட்டார். வணிகரின் அபரிமிதமான வளர்ச்சி கண்ட வேடனுக்கு சந்தேகம் ஏற்பட்டு சிலரிடம் விசாரிக்க, பல்லாயிரம் பணம் மதிப்புள்ள பொற்பனம்பழங்களை, வெறும் உணவுக்கு விற்றது கண்டு வருந்தினான். வணிகரிடம் தனக்குரிய பங்கைக் கேட்டான். அவர் மறுத்து விட்டார்.
வேடன் மன்னரிடம் புகார் செய்தான். பொற்பனை பற்றி கேள்விப்பட்ட மன்னன் தன் ஏவலர்களை அனுப்பி அம்மரத்தை பார்த்து வர ஆணையிட்டான். அங்கோ மரமே இல்லை. அதற்கு பதிலாக ஒரு லிங்கம் காணப் பட்டது.
இவ்விடத்தில் ஒரு கோயில் கட்ட தீர் மானித்தான். இதைக் கேள்விப் பட்ட வணிகரும், இறைவனால் இப்பொருள் வேடனுக்கு அருளப் பட்டது என்பதையறிந்து அவனிடமிருந்து பெற்ற பொற்பனம் பழங்களில் 1420 ஐ விற்று ஒரு கோயில் எழுப்பினார். மீதி 3000 பழங்களை கோயில் அறை ஒன்றில் பூட்டி வைத்தார்.
அப்பழங்கள் இவ்வூரிலேயே புதைந்து கிடக்கும் என இவ்வூர் மக்கள் இப்போதும் நம்புகின்றனர்.
இக் கோயிலில் மூலவர் அரங்குளநாதர் எனப்படுகிறார்.. மூலவரின் பெயரை கொண்டு ஊரின் பெயர் வந்திருக்கலாம் என்பது எனது கருத்து.
இவ்வூரைச் சேர்ந்த பெண்மணியே தெய்வமான கதை
இவ்வூரைச் சேர்ந்த பெண்மணியான பெரியநாயகி என்பவர் இறைவன் மீது அதீத அன்பு பூண்டிருந்தார். ஒருமுறை தன் பெற்றோருடன் கோயிலுக்கு வந்தார். சற்றுநேரத்தில் மறைந்து விட்டார். பின்பு அசரீரி தோன்றி, அப்பெண்மணி சிவனுடன் ஐக்கியமாகி விட்ட தகவலை தெரிவித்தது.
நகரத்தார் சமுதாயத்தினர் அவரை அம்மனாகக் கருதி, "பிரகதாம்பாள்' என பெயர் சூட்டி தனி சன்னதி எழுப்பினர். இது காலத்தால் பிற்பட்ட சன்னதி என்பது பார்த்தாலே புரியவரும்.
சிறப்பு வாய்ந்த நடராஜர் சிலை
இக்கோயில் நடராஜர் சிலை சிறப்பு வாய்ந்த ஒன்று. இதன் படிமம் டில்லியிலுள்ள தேசிய மியூசியத்தில் உள்ளது. சுவாமி அரங்குளநாதர் சுயம்புவாக அருள் தருகிறார். பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட ராஜகோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும்.
இங்குள்ள திருச்சிற்றம்பலம் உடையாரை தரிசித்தால் காசி விஸ்வநாதரை தரிசித்த பலன் கிடைக்கும். 12 ராசிகளும் அதற்குரிய அதிதேவதைகளுடன் மூலிகை ஓவியமாக வசந்த மண்டபத்தின் உச்சியில் வரையப்பட்டுள்ளது.
பிரகாரத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் கையில் வீணை இருக்கிறது. பிரகாரத்தை நூற்றுக்கால் மண்டபம் என்கிறார்கள். ஒரு குதிரை வீரனின் சிற்பம் கல்பலகை ஒன்றில் வடிக்கப்பட்டுள்ளது. இது இப்பகுதியில் வாழ்ந்த வீரனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.