1918-ஆம் ஆண்டு கல்வெட்டுத் துறையினர் படி எடுத்த "திருவிடைவாயில்' கோயில் தேவாரக் கல்வெட்டு - தற்போது இக்கல்வெட்டு அழிக்கப்பட்டுவிட்டது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய பாடல்களை "தேவாரம்' என அழைப்பது வழக்கம். மூவர் முதலிகள் இப்பனுவல்களைப் பாடிய காலத்தும், பின்பு அவற்றை சோழப் பெருவேந்தர்கள் கண்ணெனக் காத்த காலத்தும் "தேவாரம்' என்ற சொல்லால் அதனைக் குறிக்கும் வழக்கம் இல்லை. திருப்பதிகம், திருப்பதியம், என்றே குறிக்கும் மரபு இருந்துள்ளது.
திருக்கோளிலி (திருக்குவளை) என்னும் சோழநாட்டுத் தேவாரத்தலத்தில் காணப்படும் சடையவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியனின் கல்வெட்டில்தான் முதன் முதலில் திருஞானசம்பந்தரின் பதிகத்தை, "தேவாரம்' என்ற சொல்லால் குறிக்கும் நெறியைக் காணமுடிகிறது. அக் கல்வெட்டோ கி.பி.1286-ஆம் ஆண்டில் பொறிக்கப் பட்டதாகும்.
மாமன்னன் இராஜராஜசோழன் காலத்தில் தேவாரப்பனுவல் பாடும் மரபு வழக்கில் இல்லாமல் மறைந்ததாகவும், பின்பு அவன் திருநாறையூர் பொல்லாப்பிள்ளையார் அருளாலும், நம்பியாண்டார் நம்பியின் உதவியாலும் தில்லைக் கோயிலில் மூடப்பட்டிருந்த அறையிலிருந்து செல்லரித்த நிலையில் இருந்த தேவார ஏட்டுச்சுவடிகளை மீட்டு, திருமுறைகளைத் தொகுக்கச் செய்ததாகவும் உமாபதிசிவம் என்பவரால் எழுதப்பட்ட "திருமுறைகண்ட புராணம்' என்ற கி.பி.15-16-ஆம் நூற்றாண்டு நூலொன்று கூறுகிறது.
தமிழக வரலாற்றைப் பொருத்தவரை கி.பி. 5-6-ஆம் நூற்றாண்டு காலகட்டமான களப்பிரர் ஆட்சியை "இருண்ட காலம்' எனக் கூறுவர். அது தவறு. களப்பிரர் கால வரலாற்றுச் சான்றுகள் அண்மையில் வெளிப்படலாயின. அவற்றை நோக்கும்போது மொழி அடிப்படையில் சில தாக்கங்கள் ஏற்பட்டனவேயொழிய பெரிய அழிவுகள் ஏற்படவில்லை. ஆனால், கி.பி.14-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த படையெடுப்புகளாலும், அக்கொடியோர்களின் தாக்குதல்களாலும், அடக்குமுறைகளாலும் தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டு நெறிகளுக்கும் ஊனம் ஏற்பட்டன.
ஏறத்தாழ 80 ஆண்டு காலம் கோயில்கள் சூறையாடல்களுக்கு ஆட்பட்டதோடு, தேவாரம், பிரபந்தம் போன்ற பனுவல்கள் பாடுதல், இசை, நாட்டியம், சிற்பம் ஆகியவை எழுச்சி பெறுதல் ஆகியவை தடைப்பட்டன. அக்கடுமையான காலம் மாறியபின் மரபுப் பெருமைகள் மீட்டுருவாக்கம் பெறலாயின. அத்தகைய காலகட்டத்தில் தேவார மரபைத் தூக்கி நிறுத்தவும், சைவ உலகத்திற்கு அறிவுறுத்தவும் முதன் முதலில் உதித்ததே உமாபதிசிவம் இயற்றிய " திருமுறைகண்ட புராணம்' என்னும் அரிய நூலாகும்.
சோழர் காலத்தில் (கி.பி.1100-இல்) முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவனாக விளங்கிய அரும்பாக்கிழான் மணவிற்கூத்தன் என்பான் மூவர் திருப்பதிகங்களையும் செப்பேடுகளில் எழுதி, தில்லைக்கோயிலில் வைத்ததை அங்குள்ள கல்வெட்டுப்பாடல் இனிதே உரைக்கிறது. இதுபோன்றே குலசேகரபாண்டியன் காலத்தில் (கி.பி.1206-இல்) அம்மன்னவனின் உயர்நிலை அலுவலரான பிள்ளை பஞ்சவன் பிரமாதிராஜன் என்பவர் திருமுறைகளைச் செப்பேடுகளில் எழுதிக் காத்தமையால், "திருமுறைகண்ட பெருமாள்' என்ற சிறப்புப் பட்டத்தைப் பாண்டியனிடமிருந்து பெற்றார் என்பதைத் தென்பாண்டி நாட்டு ஆற்றூர் கல்வெட்டு எடுத்துரைக்கிறது. செம்பில் எழுதப்பட்ட இவ்வரிய படைப்புகள் இன்று தமிழகத்தில் காணப்படவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவிடைவாசல் என்றோர் ஊர் (கொரடாச்சேரி மன்னார்குடி சாலையில்) உள்ளது. 1912-ஆம் ஆண்டில் திருக்களர் சுவாமிநாத மாதவராயர் என்ற பெரியவர் திருவிடைவாயில் சிவாலயத்துத் தென்புறச்சுவரில் சோழர் காலக் கல்வெட்டாக அத்திருக்கோயிலில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதனை உலகுக்கு அறிவித்தார். அதுவரை இப்படி ஒரு தேவாரத்தலம் இருந்தது யாருக்கும் தெரியாது. பின்னர் 1918-ஆம் ஆண்டு இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறையினர் அக்கோயிலுக்கு வந்து இத்தேவார கல்வெட்டைப் படி எடுத்து பதிவு செய்ததோடு, அக்கோயிலில் கங்கைகொண்ட இராஜேந்திரசோழன் காலத்திலிருந்து தொடர்ந்து பல அரசர்களால் வெட்டப்பட்ட 25 கல்வெட்டுச் சாசனங்களையும் படி எடுத்து பதிவு செய்தனர். பின்பே தேவார அச்சு நூல்களில் இப்பதிகம் இடம்பெறலாயிற்று.
""ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர்ஆம்
மாறுஇல் பெருஞ்செல்வம் மலி விடைவாயை
நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன்
கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றாரே''
என்ற பதினோராம் பாடலாகிய திருக்கடைக்காப்புடன் திகழ்ந்த கிடைத்தற்கரிய இத்தமிழ்ச் செல்வத்தைக் காண இன்று நாம் அத்திருக்கோயிலுக்குச் செல்வோமாயின், மகா மண்டபத்துத் தென்புறச் சுவரில் ஒரு பெரிய கல்வெட்டுப் பகுதியைச் சுற்றி நீல வண்ணத்தில் கோடிட்டு மேலாக, ""திருஞானசம்பந்தரின் இப்பதிகக் கல்வெட்டுகளே இத்தலத்தைப் புலப்படுத்தின (கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1912)'' என்று எழுதிவைத்துள்ளனர்.
தமிழுக்குக் கிடைத்த அரும் செல்வம் என்ற நோக்கோடு ஆர்வமாக அக்கல்வெட்டைப் படிக்க முற்படுவோமாயின், அத்தலத்தின் முதற்பாடல் மட்டுமே அங்கு கல்வெட்டாகக் காணப்படும். அடுத்து, தொடர்ந்து படிப்போமாயின் தொடர்பே இல்லாதவாறு அக்கோயிலில் இருந்த கல்வெட்டுக்களின் பகுதிகள் மாறிமாறி இருப்பதைக் காணலாம். அவை நிலக்கொடை பற்றியும் விளக்கு தானம் பற்றியும் குறிப்பிடும் பகுதிகளாகும். 1935-க்குப் பிறகு அக்கோயிலைத் திருப்பணி செய்ய முனைந்தவர்கள் அங்குள்ள அனைத்து கல்வெட்டுக் கற்களையும் பிரித்து இடம் மாற்றியதோடு, தேவாரக் கல்வெட்டின் பிற பகுதிகளைக் கட்டடத்துள் பொதித்தும், தலைகீழாகத் தரையில் பாவுகற்களாகப் பதித்தும் அழித்துவிட்டனர். இதனைச் செய்தவர்கள் தமிழர்களே என்பதுதான் வேதனைக்குரிய செய்தியாகும்.
1918-இல் திருவிடைவாயிலில் எடுக்கப்பட்ட கல்வெட்டின் மைப்படி இன்று மைசூர் நகரத்தில் உள்ள கல்வெட்டுப் பதிப்புத்துறை அலுவலகத்தின் காப்பு அறையில் உறங்கிக்கொண்டிருக்கிறது. நம் தலைமுறையில் கிடைத்த தேவார தமிழ்ச் செல்வத்தை அழித்துவிட்டோமே, இது நியாயமா?
**********************************************
திருக்களர் மு.சுவாமிநாத மாதவராயர்.... 1.28 A.M (1st Part)
கல்வியும் தொழிலும்
கல்வி கேள்விகளிற் சிறந்த சான்றோராய் விளங்கிய திரு. மாதவராயர் பல நூல்களை ஆக்கியதோடு களப்பாள் ஆதியப்பப் புலவர் இயற்றிய திருக்களர்ப் புராணம் என்னும் நூலையும் பதிப்பித்துள்ளார். திரு. மாதவராயர் பின்னத்தூர் ப்ரஹ்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயரவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தாம் சேகரித்த பிரதிகளில், கல்வெட்டுகளில், செப்பேடுகளில் தமக்கு ஐயம் ஏற்படும்பொழுதெல்லாம் அவற்றைப் போக்க, திரு ஐயரவர்களையே நாடியுள்ளார். இந்த மகானின் அறிவுச்சுடரின் தூண்டு கோலாக திரு. ஐயரவர்கள் திகழ்ந்தார்கள். (இதை அவரே ஓரிடத்தில் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்) திருக்களர்ப் புராணம் என்னும் நூலைப் பதிப்பித்ததோடு (1912) அதற்குக் கதாசாரங்கள், குறிப்புகள், கர்ண பரம்பரைக் கதைகள் முதலியவற்றோடு உரையும் வகுத்துள்ளார்.
திருக்களர் தேவஸ்தான விவகாரத்தில் சூழ்ந்து வந்த பகையை எதிர்த்து வென்றவர். அஞ்சா நெஞ்சத்துடன் தாம் யார் என்பதை அப்பகைவர்களுக்குக் கூறுவதைக் கேட்போம். பாரினிற் சிறந்த பருதியின் குலத்திலே இராதிரானென்னஞ் சோழன் மரபிலே மாதயபட்டினம் என்னும் திரு நகரத்தை இராசதானியாகக் கொண்ட மாதவராயன் என்னும் அரசன் கால் வழியிலே ஏணாட்டிய புகழ் சோணாட்டிடையிலே எந்நதிகளினுஞ் சிறந்த பொன்னி நதிப்பரப்பிலே அறந்திறம்பாத புறங்கரம்பை நாட்டிலே, பிறந்தோர். இறந்தோர். தரிசித்தோர். நினைந்தோர் என்னும் நால்வகையோருக்கும் நற்கதியளிக்கும் மருக்கிளர் பொழில் சூழ் திருக்களர் பதியிலே, முருக மாதவராயருக்கு, பொதியம்மையார் திருவயிற்றிலே பிறந்தவரும், திருத்தில்லைச் சிற்றம்பலத்திலே கல்வி பயின்றவரும், இரயில். சால்ட், போலீசு, என்னும் மூன்று டிபார்ட்மெண்டில் வேலை பார்த்தவரும், நாற்பது வருடங்களாக உத்தமத் தொழிலாகிய உபாத்திமைத் தொழில் நடத்தி வருகின்றவரும் ஔவையார், தாயுமானவர், திருமூலர், பட்டினத்தடிகள், வள்ளலார் ஆகிய ஆன்றோர்கள் அருளிச் செய்திருப்பதற்கிணங்கப் புலால் உண்ணுதலைத் துறந்தும், செல்வம் நிலையாமை, ஆக்கை நிலையாமை ஆகியவற்றை நன்குணர்ந்திருப்பதாகவும், தன் கொள்கையை எடுத்துக் காட்டுகின்றார். இதற்கு மேலும் அவர் பெருமையாகக் கருதும் ஒன்றிணையும் குறிப்பிட்டுள்ளார், இதோ அவ்வரிகள், சபாநாயகப் பெருமானையே வழிபடு கடவுளாகக் கொண்டவரும். திருமூலர் பரம்பரையில் சிவராச யோகேந்திர ஞானானந்தப் பெருவாரி தியாய், விருப்பு வெறுப்பற்ற சமரச சுவாநுபூதிக் கிருபா சமுத்திரமாய் கருப்புக்களர் கிராமத்திலே சமாதியுற்று விளங்கும் ஒரிச்சேரி சுவாமிகள் என்னும் திருவருள். சுப்பைய சுவாமிகளிடம் அனுக்கிரகம் பெற்றவரும் ஆகிய மு.சுவாமிநாத உபாத்தியாயர் என்பவர் என்று தன்னைப் பற்றிக் கூறுவது முற்றிலும் உண்மை என்றே அவர் தம் மாணவர்கள் உரைக்கின்றனர்.
திருக்களர் மு.சுவாமிநாத..... 1.29 AM (2nd Part)
சிவத்தொண்டு
திருக்களர் தேவஸ்தானம் பாவிகள் வசம் இருந்ததைக் கண்டு புழுங்கிய இந்த மகான் ஆலய நிர்வாகத்தைச் சீரமைத்துத் திருப்பணி செய்யப் பெரிதும் முயன்றார். களவு, காமம் முதலியவற்றின் இருப்பிடமாகக் கோயில் இருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். கையில் ஒரு காசு கூட இல்லாது, இறைவன் திருவருளை மட்டுமே துணையாகக் கொண்டு கோயில் திருப்பணி முயற்சிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் உயிருக்கு நேர்ந்த காலத்துங்கூட அவர் கலங்கவில்லை. கோயில் திருப்பணிக்காக அவர் சந்தித்த துன்பங்களும். தொல்லைகளும் கொஞ்சமல்ல. அதைப் பற்றி அவரே கூறுகின்றார். 1898-ஆம் வருடம் முதல் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியாரவர்களுக்கு ஓய்வின்றி எண்ணிறந்த மகசர், மனுக்கள் எழுதினார். நீலலோசனி, யார்த்தவசனி, என்னும் பத்திரிக்கைகளின் வாயிலாக இடைவிடாமல் கதறினார். இத்தல சம்பந்தமாகவுள்ள வைகளையெல்லாம் ஒரே புத்தகமாகத் திரட்டியும், 1902-ம் வருடத்தில் அச்சிற் பதிப்பித்துக் கொண்டு போய், இரயில் மோட்டார், இல்லாத அக்காலத்தில் தேவகோட்டை, காரைக்குடி வகையறாத் தொண்ணுற்றாறு நகரங்களிலும் பரப்பினார். காரைக்குடிக்கடுத்த கோவிலூர் மடாலயத்தில் ஐந்தாங்குருமார்தமாயெழுந்தருளியிருந்த வீரசேகர மகாமுனிவர், திருச்சன்னிதானத்தில் சமர்ப்பித்து வணங்கி விண்ணப்பஞ் செய்தார். இந்த நிலைமையில் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியில் கிருபாநிதியாகிய பி.ஆர்.நடேச ஐயரவர்கள் புதிதாகத் தலைமைப் பதவி வகித்ததை மேற்படி மு.சுவாமிநாத உபாத்தியாயர் கேள்விப்பட்டு, காரைக்குடியிலிருந்தபடியே தஞ்சாவூருக்குப் போய் மேற்படி பி.ஆர்.நடேச ஐயரவர்களுடைய காலில் விழுந்து இரண்டு கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரக்கூடியவர் களைப் பஞ்சாய்தார்களாக நியமித்திருக்கிறதாக வாக்களித்தால் கால்களை விடுவேன் இல்லையேல் உயிரை விடுவேன் என்று அழுது அரற்றினார். மேற்படி பி.ஆர். நடேச ஐயரவர்கள், கே. திருவேங்கட முதலியாரவர்கள், வி.அப்பாசாமி வாண்டையாரவர்கள், சாம்பமூர்த்திராயரவர்கள் இந்நான்கு கனவான்களும் திருக்களர்க்கோவிலை நல்ல நிலைமைக்குக் கொண்டு வரத் திருவுளங் கொண்டும், மேற்படி மு. சுவாமிநாத உபாத்தியாயருடைய துக்கத்தை நிவர்த்தி செய்தும் வைத்தனர்.
இப்பெருமகனின் பெருமுயற்சியால் காடு மூடிக்கிடந்த திருக்களர் பெரிய கோவில் புதுப் பொலிவு பெற்றது. கோவிலூர் ஸ்ரீமத் வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் திருவுளப்படி மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து திருக்களர் கோவிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கலி ஐயாயிரத்துப் பன்னிரண்டுக்குச் சரியான (கி.பி.1911) விரோதிகிருது வருடம். சித்திரை மாசம் குருவாரம் புனர்பூச நட்சத்திரங் கூடிய நற்றினத்தில் அட்டபந்தன மகாகும்பாபிடேகம் நடைபெற்றுக் கோவில் நன்னிலைக்குத் திரும்பியது. திரு. மாதவராயருடைய பெருமுயற்சியால் சிவன் விரும்பி உறையும் திருத்தலங்களுள் திருக்களரும் ஒன்றானது.
திருக்களர் மு.சுவாமிநாத..... 1.32 AM ( 3rd Part)
கல்வியும் தொழிலும்
கல்வி கேள்விகளிற் சிறந்த சான்றோராய் விளங்கிய திரு. மாதவராயர் பல நூல்களை ஆக்கியதோடு களப்பாள் ஆதியப்பப் புலவர் இயற்றிய திருக்களர்ப் புராணம் என்னும் நூலையும் பதிப்பித்துள்ளார். திரு. மாதவராயர் பின்னத்தூர் ப்ரஹ்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயரவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தாம் சேகரித்த பிரதிகளில், கல்வெட்டுகளில், செப்பேடுகளில் தமக்கு ஐயம் ஏற்படும்பொழுதெல்லாம் அவற்றைப் போக்க, திரு ஐயரவர்களையே நாடியுள்ளார். இந்த மகானின் அறிவுச்சுடரின் தூண்டு கோலாக திரு. ஐயரவர்கள் திகழ்ந்தார்கள். (இதை அவரே ஓரிடத்தில் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்) திருக்களர்ப் புராணம் என்னும் நூலைப் பதிப்பித்ததோடு (1912) அதற்குக் கதாசாரங்கள், குறிப்புகள், கர்ண பரம்பரைக் கதைகள் முதலியவற்றோடு உரையும் வகுத்துள்ளார்.
திருக்களர் தேவஸ்தான விவகாரத்தில் சூழ்ந்து வந்த பகையை எதிர்த்து வென்றவர். அஞ்சா நெஞ்சத்துடன் தாம் யார் என்பதை அப்பகைவர்களுக்குக் கூறுவதைக் கேட்போம். பாரினிற் சிறந்த பருதியின் குலத்திலே இராதிரானென்னஞ் சோழன் மரபிலே மாதயபட்டினம் என்னும் திரு நகரத்தை இராசதானியாகக் கொண்ட மாதவராயன் என்னும் அரசன் கால் வழியிலே ஏணாட்டிய புகழ் சோணாட்டிடையிலே எந்நதிகளினுஞ் சிறந்த பொன்னி நதிப்பரப்பிலே அறந்திறம்பாத புறங்கரம்பை நாட்டிலே, பிறந்தோர். இறந்தோர். தரிசித்தோர். நினைந்தோர் என்னும் நால்வகையோருக்கும் நற்கதியளிக்கும் மருக்கிளர் பொழில் சூழ் திருக்களர் பதியிலே, முருக மாதவராயருக்கு, பொதியம்மையார் திருவயிற்றிலே பிறந்தவரும், திருத்தில்லைச் சிற்றம்பலத்திலே கல்வி பயின்றவரும், இரயில். சால்ட், போலீசு, என்னும் மூன்று டிபார்ட்மெண்டில் வேலை பார்த்தவரும், நாற்பது வருடங்களாக உத்தமத் தொழிலாகிய உபாத்திமைத் தொழில் நடத்தி வருகின்றவரும் ஔவையார், தாயுமானவர், திருமூலர், பட்டினத்தடிகள், வள்ளலார் ஆகிய ஆன்றோர்கள் அருளிச் செய்திருப்பதற்கிணங்கப் புலால் உண்ணுதலைத் துறந்தும், செல்வம் நிலையாமை, ஆக்கை நிலையாமை ஆகியவற்றை நன்குணர்ந்திருப்பதாகவும், தன் கொள்கையை எடுத்துக் காட்டுகின்றார். இதற்கு மேலும் அவர் பெருமையாகக் கருதும் ஒன்றிணையும் குறிப்பிட்டுள்ளார், இதோ அவ்வரிகள், சபாநாயகப் பெருமானையே வழிபடு கடவுளாகக் கொண்டவரும். திருமூலர் பரம்பரையில் சிவராச யோகேந்திர ஞானானந்தப் பெருவாரி தியாய், விருப்பு வெறுப்பற்ற சமரச சுவாநுபூதிக் கிருபா சமுத்திரமாய் கருப்புக்களர் கிராமத்திலே சமாதியுற்று விளங்கும் ஒரிச்சேரி சுவாமிகள் என்னும் திருவருள். சுப்பைய சுவாமிகளிடம் அனுக்கிரகம் பெற்றவரும் ஆகிய மு.சுவாமிநாத உபாத்தியாயர் என்பவர் என்று தன்னைப் பற்றிக் கூறுவது முற்றிலும் உண்மை என்றே அவர் தம் மாணவர்கள் உரைக்கின்றனர்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய பாடல்களை "தேவாரம்' என அழைப்பது வழக்கம். மூவர் முதலிகள் இப்பனுவல்களைப் பாடிய காலத்தும், பின்பு அவற்றை சோழப் பெருவேந்தர்கள் கண்ணெனக் காத்த காலத்தும் "தேவாரம்' என்ற சொல்லால் அதனைக் குறிக்கும் வழக்கம் இல்லை. திருப்பதிகம், திருப்பதியம், என்றே குறிக்கும் மரபு இருந்துள்ளது.
திருக்கோளிலி (திருக்குவளை) என்னும் சோழநாட்டுத் தேவாரத்தலத்தில் காணப்படும் சடையவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியனின் கல்வெட்டில்தான் முதன் முதலில் திருஞானசம்பந்தரின் பதிகத்தை, "தேவாரம்' என்ற சொல்லால் குறிக்கும் நெறியைக் காணமுடிகிறது. அக் கல்வெட்டோ கி.பி.1286-ஆம் ஆண்டில் பொறிக்கப் பட்டதாகும்.
மாமன்னன் இராஜராஜசோழன் காலத்தில் தேவாரப்பனுவல் பாடும் மரபு வழக்கில் இல்லாமல் மறைந்ததாகவும், பின்பு அவன் திருநாறையூர் பொல்லாப்பிள்ளையார் அருளாலும், நம்பியாண்டார் நம்பியின் உதவியாலும் தில்லைக் கோயிலில் மூடப்பட்டிருந்த அறையிலிருந்து செல்லரித்த நிலையில் இருந்த தேவார ஏட்டுச்சுவடிகளை மீட்டு, திருமுறைகளைத் தொகுக்கச் செய்ததாகவும் உமாபதிசிவம் என்பவரால் எழுதப்பட்ட "திருமுறைகண்ட புராணம்' என்ற கி.பி.15-16-ஆம் நூற்றாண்டு நூலொன்று கூறுகிறது.
தமிழக வரலாற்றைப் பொருத்தவரை கி.பி. 5-6-ஆம் நூற்றாண்டு காலகட்டமான களப்பிரர் ஆட்சியை "இருண்ட காலம்' எனக் கூறுவர். அது தவறு. களப்பிரர் கால வரலாற்றுச் சான்றுகள் அண்மையில் வெளிப்படலாயின. அவற்றை நோக்கும்போது மொழி அடிப்படையில் சில தாக்கங்கள் ஏற்பட்டனவேயொழிய பெரிய அழிவுகள் ஏற்படவில்லை. ஆனால், கி.பி.14-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த படையெடுப்புகளாலும், அக்கொடியோர்களின் தாக்குதல்களாலும், அடக்குமுறைகளாலும் தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டு நெறிகளுக்கும் ஊனம் ஏற்பட்டன.
ஏறத்தாழ 80 ஆண்டு காலம் கோயில்கள் சூறையாடல்களுக்கு ஆட்பட்டதோடு, தேவாரம், பிரபந்தம் போன்ற பனுவல்கள் பாடுதல், இசை, நாட்டியம், சிற்பம் ஆகியவை எழுச்சி பெறுதல் ஆகியவை தடைப்பட்டன. அக்கடுமையான காலம் மாறியபின் மரபுப் பெருமைகள் மீட்டுருவாக்கம் பெறலாயின. அத்தகைய காலகட்டத்தில் தேவார மரபைத் தூக்கி நிறுத்தவும், சைவ உலகத்திற்கு அறிவுறுத்தவும் முதன் முதலில் உதித்ததே உமாபதிசிவம் இயற்றிய " திருமுறைகண்ட புராணம்' என்னும் அரிய நூலாகும்.
சோழர் காலத்தில் (கி.பி.1100-இல்) முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவனாக விளங்கிய அரும்பாக்கிழான் மணவிற்கூத்தன் என்பான் மூவர் திருப்பதிகங்களையும் செப்பேடுகளில் எழுதி, தில்லைக்கோயிலில் வைத்ததை அங்குள்ள கல்வெட்டுப்பாடல் இனிதே உரைக்கிறது. இதுபோன்றே குலசேகரபாண்டியன் காலத்தில் (கி.பி.1206-இல்) அம்மன்னவனின் உயர்நிலை அலுவலரான பிள்ளை பஞ்சவன் பிரமாதிராஜன் என்பவர் திருமுறைகளைச் செப்பேடுகளில் எழுதிக் காத்தமையால், "திருமுறைகண்ட பெருமாள்' என்ற சிறப்புப் பட்டத்தைப் பாண்டியனிடமிருந்து பெற்றார் என்பதைத் தென்பாண்டி நாட்டு ஆற்றூர் கல்வெட்டு எடுத்துரைக்கிறது. செம்பில் எழுதப்பட்ட இவ்வரிய படைப்புகள் இன்று தமிழகத்தில் காணப்படவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவிடைவாசல் என்றோர் ஊர் (கொரடாச்சேரி மன்னார்குடி சாலையில்) உள்ளது. 1912-ஆம் ஆண்டில் திருக்களர் சுவாமிநாத மாதவராயர் என்ற பெரியவர் திருவிடைவாயில் சிவாலயத்துத் தென்புறச்சுவரில் சோழர் காலக் கல்வெட்டாக அத்திருக்கோயிலில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதனை உலகுக்கு அறிவித்தார். அதுவரை இப்படி ஒரு தேவாரத்தலம் இருந்தது யாருக்கும் தெரியாது. பின்னர் 1918-ஆம் ஆண்டு இந்திய கல்வெட்டு ஆய்வுத்துறையினர் அக்கோயிலுக்கு வந்து இத்தேவார கல்வெட்டைப் படி எடுத்து பதிவு செய்ததோடு, அக்கோயிலில் கங்கைகொண்ட இராஜேந்திரசோழன் காலத்திலிருந்து தொடர்ந்து பல அரசர்களால் வெட்டப்பட்ட 25 கல்வெட்டுச் சாசனங்களையும் படி எடுத்து பதிவு செய்தனர். பின்பே தேவார அச்சு நூல்களில் இப்பதிகம் இடம்பெறலாயிற்று.
""ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர்ஆம்
மாறுஇல் பெருஞ்செல்வம் மலி விடைவாயை
நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன்
கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றாரே''
என்ற பதினோராம் பாடலாகிய திருக்கடைக்காப்புடன் திகழ்ந்த கிடைத்தற்கரிய இத்தமிழ்ச் செல்வத்தைக் காண இன்று நாம் அத்திருக்கோயிலுக்குச் செல்வோமாயின், மகா மண்டபத்துத் தென்புறச் சுவரில் ஒரு பெரிய கல்வெட்டுப் பகுதியைச் சுற்றி நீல வண்ணத்தில் கோடிட்டு மேலாக, ""திருஞானசம்பந்தரின் இப்பதிகக் கல்வெட்டுகளே இத்தலத்தைப் புலப்படுத்தின (கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1912)'' என்று எழுதிவைத்துள்ளனர்.
தமிழுக்குக் கிடைத்த அரும் செல்வம் என்ற நோக்கோடு ஆர்வமாக அக்கல்வெட்டைப் படிக்க முற்படுவோமாயின், அத்தலத்தின் முதற்பாடல் மட்டுமே அங்கு கல்வெட்டாகக் காணப்படும். அடுத்து, தொடர்ந்து படிப்போமாயின் தொடர்பே இல்லாதவாறு அக்கோயிலில் இருந்த கல்வெட்டுக்களின் பகுதிகள் மாறிமாறி இருப்பதைக் காணலாம். அவை நிலக்கொடை பற்றியும் விளக்கு தானம் பற்றியும் குறிப்பிடும் பகுதிகளாகும். 1935-க்குப் பிறகு அக்கோயிலைத் திருப்பணி செய்ய முனைந்தவர்கள் அங்குள்ள அனைத்து கல்வெட்டுக் கற்களையும் பிரித்து இடம் மாற்றியதோடு, தேவாரக் கல்வெட்டின் பிற பகுதிகளைக் கட்டடத்துள் பொதித்தும், தலைகீழாகத் தரையில் பாவுகற்களாகப் பதித்தும் அழித்துவிட்டனர். இதனைச் செய்தவர்கள் தமிழர்களே என்பதுதான் வேதனைக்குரிய செய்தியாகும்.
1918-இல் திருவிடைவாயிலில் எடுக்கப்பட்ட கல்வெட்டின் மைப்படி இன்று மைசூர் நகரத்தில் உள்ள கல்வெட்டுப் பதிப்புத்துறை அலுவலகத்தின் காப்பு அறையில் உறங்கிக்கொண்டிருக்கிறது. நம் தலைமுறையில் கிடைத்த தேவார தமிழ்ச் செல்வத்தை அழித்துவிட்டோமே, இது நியாயமா?
**********************************************
திருக்களர் மு.சுவாமிநாத மாதவராயர்.... 1.28 A.M (1st Part)
கல்வியும் தொழிலும்
கல்வி கேள்விகளிற் சிறந்த சான்றோராய் விளங்கிய திரு. மாதவராயர் பல நூல்களை ஆக்கியதோடு களப்பாள் ஆதியப்பப் புலவர் இயற்றிய திருக்களர்ப் புராணம் என்னும் நூலையும் பதிப்பித்துள்ளார். திரு. மாதவராயர் பின்னத்தூர் ப்ரஹ்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயரவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தாம் சேகரித்த பிரதிகளில், கல்வெட்டுகளில், செப்பேடுகளில் தமக்கு ஐயம் ஏற்படும்பொழுதெல்லாம் அவற்றைப் போக்க, திரு ஐயரவர்களையே நாடியுள்ளார். இந்த மகானின் அறிவுச்சுடரின் தூண்டு கோலாக திரு. ஐயரவர்கள் திகழ்ந்தார்கள். (இதை அவரே ஓரிடத்தில் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்) திருக்களர்ப் புராணம் என்னும் நூலைப் பதிப்பித்ததோடு (1912) அதற்குக் கதாசாரங்கள், குறிப்புகள், கர்ண பரம்பரைக் கதைகள் முதலியவற்றோடு உரையும் வகுத்துள்ளார்.
திருக்களர் தேவஸ்தான விவகாரத்தில் சூழ்ந்து வந்த பகையை எதிர்த்து வென்றவர். அஞ்சா நெஞ்சத்துடன் தாம் யார் என்பதை அப்பகைவர்களுக்குக் கூறுவதைக் கேட்போம். பாரினிற் சிறந்த பருதியின் குலத்திலே இராதிரானென்னஞ் சோழன் மரபிலே மாதயபட்டினம் என்னும் திரு நகரத்தை இராசதானியாகக் கொண்ட மாதவராயன் என்னும் அரசன் கால் வழியிலே ஏணாட்டிய புகழ் சோணாட்டிடையிலே எந்நதிகளினுஞ் சிறந்த பொன்னி நதிப்பரப்பிலே அறந்திறம்பாத புறங்கரம்பை நாட்டிலே, பிறந்தோர். இறந்தோர். தரிசித்தோர். நினைந்தோர் என்னும் நால்வகையோருக்கும் நற்கதியளிக்கும் மருக்கிளர் பொழில் சூழ் திருக்களர் பதியிலே, முருக மாதவராயருக்கு, பொதியம்மையார் திருவயிற்றிலே பிறந்தவரும், திருத்தில்லைச் சிற்றம்பலத்திலே கல்வி பயின்றவரும், இரயில். சால்ட், போலீசு, என்னும் மூன்று டிபார்ட்மெண்டில் வேலை பார்த்தவரும், நாற்பது வருடங்களாக உத்தமத் தொழிலாகிய உபாத்திமைத் தொழில் நடத்தி வருகின்றவரும் ஔவையார், தாயுமானவர், திருமூலர், பட்டினத்தடிகள், வள்ளலார் ஆகிய ஆன்றோர்கள் அருளிச் செய்திருப்பதற்கிணங்கப் புலால் உண்ணுதலைத் துறந்தும், செல்வம் நிலையாமை, ஆக்கை நிலையாமை ஆகியவற்றை நன்குணர்ந்திருப்பதாகவும், தன் கொள்கையை எடுத்துக் காட்டுகின்றார். இதற்கு மேலும் அவர் பெருமையாகக் கருதும் ஒன்றிணையும் குறிப்பிட்டுள்ளார், இதோ அவ்வரிகள், சபாநாயகப் பெருமானையே வழிபடு கடவுளாகக் கொண்டவரும். திருமூலர் பரம்பரையில் சிவராச யோகேந்திர ஞானானந்தப் பெருவாரி தியாய், விருப்பு வெறுப்பற்ற சமரச சுவாநுபூதிக் கிருபா சமுத்திரமாய் கருப்புக்களர் கிராமத்திலே சமாதியுற்று விளங்கும் ஒரிச்சேரி சுவாமிகள் என்னும் திருவருள். சுப்பைய சுவாமிகளிடம் அனுக்கிரகம் பெற்றவரும் ஆகிய மு.சுவாமிநாத உபாத்தியாயர் என்பவர் என்று தன்னைப் பற்றிக் கூறுவது முற்றிலும் உண்மை என்றே அவர் தம் மாணவர்கள் உரைக்கின்றனர்.
திருக்களர் மு.சுவாமிநாத..... 1.29 AM (2nd Part)
சிவத்தொண்டு
திருக்களர் தேவஸ்தானம் பாவிகள் வசம் இருந்ததைக் கண்டு புழுங்கிய இந்த மகான் ஆலய நிர்வாகத்தைச் சீரமைத்துத் திருப்பணி செய்யப் பெரிதும் முயன்றார். களவு, காமம் முதலியவற்றின் இருப்பிடமாகக் கோயில் இருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். கையில் ஒரு காசு கூட இல்லாது, இறைவன் திருவருளை மட்டுமே துணையாகக் கொண்டு கோயில் திருப்பணி முயற்சிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் உயிருக்கு நேர்ந்த காலத்துங்கூட அவர் கலங்கவில்லை. கோயில் திருப்பணிக்காக அவர் சந்தித்த துன்பங்களும். தொல்லைகளும் கொஞ்சமல்ல. அதைப் பற்றி அவரே கூறுகின்றார். 1898-ஆம் வருடம் முதல் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியாரவர்களுக்கு ஓய்வின்றி எண்ணிறந்த மகசர், மனுக்கள் எழுதினார். நீலலோசனி, யார்த்தவசனி, என்னும் பத்திரிக்கைகளின் வாயிலாக இடைவிடாமல் கதறினார். இத்தல சம்பந்தமாகவுள்ள வைகளையெல்லாம் ஒரே புத்தகமாகத் திரட்டியும், 1902-ம் வருடத்தில் அச்சிற் பதிப்பித்துக் கொண்டு போய், இரயில் மோட்டார், இல்லாத அக்காலத்தில் தேவகோட்டை, காரைக்குடி வகையறாத் தொண்ணுற்றாறு நகரங்களிலும் பரப்பினார். காரைக்குடிக்கடுத்த கோவிலூர் மடாலயத்தில் ஐந்தாங்குருமார்தமாயெழுந்தருளியிருந்த வீரசேகர மகாமுனிவர், திருச்சன்னிதானத்தில் சமர்ப்பித்து வணங்கி விண்ணப்பஞ் செய்தார். இந்த நிலைமையில் தஞ்சாவூர் சர்க்கிள் தேவத்தானங் கமிட்டியில் கிருபாநிதியாகிய பி.ஆர்.நடேச ஐயரவர்கள் புதிதாகத் தலைமைப் பதவி வகித்ததை மேற்படி மு.சுவாமிநாத உபாத்தியாயர் கேள்விப்பட்டு, காரைக்குடியிலிருந்தபடியே தஞ்சாவூருக்குப் போய் மேற்படி பி.ஆர்.நடேச ஐயரவர்களுடைய காலில் விழுந்து இரண்டு கால்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரக்கூடியவர் களைப் பஞ்சாய்தார்களாக நியமித்திருக்கிறதாக வாக்களித்தால் கால்களை விடுவேன் இல்லையேல் உயிரை விடுவேன் என்று அழுது அரற்றினார். மேற்படி பி.ஆர். நடேச ஐயரவர்கள், கே. திருவேங்கட முதலியாரவர்கள், வி.அப்பாசாமி வாண்டையாரவர்கள், சாம்பமூர்த்திராயரவர்கள் இந்நான்கு கனவான்களும் திருக்களர்க்கோவிலை நல்ல நிலைமைக்குக் கொண்டு வரத் திருவுளங் கொண்டும், மேற்படி மு. சுவாமிநாத உபாத்தியாயருடைய துக்கத்தை நிவர்த்தி செய்தும் வைத்தனர்.
இப்பெருமகனின் பெருமுயற்சியால் காடு மூடிக்கிடந்த திருக்களர் பெரிய கோவில் புதுப் பொலிவு பெற்றது. கோவிலூர் ஸ்ரீமத் வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் திருவுளப்படி மூன்று லட்ச ரூபாய் செலவு செய்து திருக்களர் கோவிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கலி ஐயாயிரத்துப் பன்னிரண்டுக்குச் சரியான (கி.பி.1911) விரோதிகிருது வருடம். சித்திரை மாசம் குருவாரம் புனர்பூச நட்சத்திரங் கூடிய நற்றினத்தில் அட்டபந்தன மகாகும்பாபிடேகம் நடைபெற்றுக் கோவில் நன்னிலைக்குத் திரும்பியது. திரு. மாதவராயருடைய பெருமுயற்சியால் சிவன் விரும்பி உறையும் திருத்தலங்களுள் திருக்களரும் ஒன்றானது.
திருக்களர் மு.சுவாமிநாத..... 1.32 AM ( 3rd Part)
கல்வியும் தொழிலும்
கல்வி கேள்விகளிற் சிறந்த சான்றோராய் விளங்கிய திரு. மாதவராயர் பல நூல்களை ஆக்கியதோடு களப்பாள் ஆதியப்பப் புலவர் இயற்றிய திருக்களர்ப் புராணம் என்னும் நூலையும் பதிப்பித்துள்ளார். திரு. மாதவராயர் பின்னத்தூர் ப்ரஹ்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயரவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தாம் சேகரித்த பிரதிகளில், கல்வெட்டுகளில், செப்பேடுகளில் தமக்கு ஐயம் ஏற்படும்பொழுதெல்லாம் அவற்றைப் போக்க, திரு ஐயரவர்களையே நாடியுள்ளார். இந்த மகானின் அறிவுச்சுடரின் தூண்டு கோலாக திரு. ஐயரவர்கள் திகழ்ந்தார்கள். (இதை அவரே ஓரிடத்தில் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்) திருக்களர்ப் புராணம் என்னும் நூலைப் பதிப்பித்ததோடு (1912) அதற்குக் கதாசாரங்கள், குறிப்புகள், கர்ண பரம்பரைக் கதைகள் முதலியவற்றோடு உரையும் வகுத்துள்ளார்.
திருக்களர் தேவஸ்தான விவகாரத்தில் சூழ்ந்து வந்த பகையை எதிர்த்து வென்றவர். அஞ்சா நெஞ்சத்துடன் தாம் யார் என்பதை அப்பகைவர்களுக்குக் கூறுவதைக் கேட்போம். பாரினிற் சிறந்த பருதியின் குலத்திலே இராதிரானென்னஞ் சோழன் மரபிலே மாதயபட்டினம் என்னும் திரு நகரத்தை இராசதானியாகக் கொண்ட மாதவராயன் என்னும் அரசன் கால் வழியிலே ஏணாட்டிய புகழ் சோணாட்டிடையிலே எந்நதிகளினுஞ் சிறந்த பொன்னி நதிப்பரப்பிலே அறந்திறம்பாத புறங்கரம்பை நாட்டிலே, பிறந்தோர். இறந்தோர். தரிசித்தோர். நினைந்தோர் என்னும் நால்வகையோருக்கும் நற்கதியளிக்கும் மருக்கிளர் பொழில் சூழ் திருக்களர் பதியிலே, முருக மாதவராயருக்கு, பொதியம்மையார் திருவயிற்றிலே பிறந்தவரும், திருத்தில்லைச் சிற்றம்பலத்திலே கல்வி பயின்றவரும், இரயில். சால்ட், போலீசு, என்னும் மூன்று டிபார்ட்மெண்டில் வேலை பார்த்தவரும், நாற்பது வருடங்களாக உத்தமத் தொழிலாகிய உபாத்திமைத் தொழில் நடத்தி வருகின்றவரும் ஔவையார், தாயுமானவர், திருமூலர், பட்டினத்தடிகள், வள்ளலார் ஆகிய ஆன்றோர்கள் அருளிச் செய்திருப்பதற்கிணங்கப் புலால் உண்ணுதலைத் துறந்தும், செல்வம் நிலையாமை, ஆக்கை நிலையாமை ஆகியவற்றை நன்குணர்ந்திருப்பதாகவும், தன் கொள்கையை எடுத்துக் காட்டுகின்றார். இதற்கு மேலும் அவர் பெருமையாகக் கருதும் ஒன்றிணையும் குறிப்பிட்டுள்ளார், இதோ அவ்வரிகள், சபாநாயகப் பெருமானையே வழிபடு கடவுளாகக் கொண்டவரும். திருமூலர் பரம்பரையில் சிவராச யோகேந்திர ஞானானந்தப் பெருவாரி தியாய், விருப்பு வெறுப்பற்ற சமரச சுவாநுபூதிக் கிருபா சமுத்திரமாய் கருப்புக்களர் கிராமத்திலே சமாதியுற்று விளங்கும் ஒரிச்சேரி சுவாமிகள் என்னும் திருவருள். சுப்பைய சுவாமிகளிடம் அனுக்கிரகம் பெற்றவரும் ஆகிய மு.சுவாமிநாத உபாத்தியாயர் என்பவர் என்று தன்னைப் பற்றிக் கூறுவது முற்றிலும் உண்மை என்றே அவர் தம் மாணவர்கள் உரைக்கின்றனர்.