Meaning On Pattangal
பட்டங்களில் அறிந்தவை, கற்றவை, பெற்றவை
பட்டம் கொண்ட கள்ளர் குல மறவனுக்கு மரணம் இல்லை
ஆறானால் என்ன! நூறானால் என்ன! இறப்பு என்றேனும் ஒருநாள் உன்னைத் தேடித்தான் வரப்போகிறது. எதுவரை வாழ்ந்தாய் என்பது முக்கியமல்ல.எதற்காக வாழ்ந்தாய் என்பதே முக்கியம். நீ எந்த உயர்ந்த குறிக்கோழுடன் வாழ்ந்தாய்? உன்னால் அதை அடைய முடிந்ததா? அடைந்திருந்தால்
நீ நிச்சயமாக மரணமடைய மாட்டாய்.
உன்னைப் பற்றி ஒருவன் தினமும் எழுதிக்கொண்டிருப்பான்,
ஒருவன் பேசிக்கொண்டிருப்பான்,
ஒருவன் நினைத்துக்கொண்டிருப்பான்.
நீ அடைந்த உயர்ந்த சிந்தனை பொருந்திய குறிக்கோல் உலக வரலாற்றில் இடம் பிடித்திருக்கும்.உனக்கு மரணம் என்பது இல்லை. நீ பெற்றிருக்கும் உன் குல பட்டமே இதற்கு சாட்சி. உன் மூதாதையர் கொண்ட லட்சியங்களும், கொள்கைகளும், வெற்றிகளும் உன் குருதியில் கலந்து உன்னை இயக்குகின்றது, உனக்கு மரணமில்லை.
கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.
மானிடர்கள் அவரவர் செய்த அருஞ்செயல்களால் வரும் சிறப்பே பெருமைக் குறியதாகும். சங்ககாலம் தொட்டு மன்னர் முதல் பலதரப்பினரும் இத்தகைய சிறப்பினை பெற்று இருந்தனர். இதனை மாராயம் பெற்றவர்கள் என்று தொல்காப்பியம் உணர்த்துகிறது. இதன் மூலம் மாரயம் என்பது சான்றோர்களாலும், அரசர்களாலும் அளிக்கப்படும் ஒரு சிறப்புப் பெயர் என்றும், அதனைப்பற்றி உலகோரின் பாராட்டுரை நெடுமொழி என்றும் வழங்கப்பட்டது. வேந்தனால் சிறப்பெய்தியோர் வேண்டும் இடங்களில் தம் சிறப்பை தாமே எடுத்துக் கூறுல் அவர்களுக்கு நிலைத்த புகழைத்தந்தது. வேந்தனால் வழங்கப்பட்ட இப் பட்டம் (மாராயம்) தம் பெயருடன் சேர்த்துக் கூறிக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது.
சங்ககால வேந்தர்கள் அறிவு வலிமை, சான்றோமை, வீரவலிமை பெற்ற தம் குடிமக்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தமை சங்ககாலத்திற்கு பின்பும் இச் சிறப்புப் பெயர் மரபு தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக கள்ளர் குலம் இப் பட்டங்களை தங்களின் உயிர் காக்கும் கேடயமாக உணர்ந்து பாதுகாத்து வருகின்றனர். செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியதற்காக சுமார் ஈராயிரம் பட்டங்களை சுமந்துள்ள கள்ளர் மரபு வரலாறு, உலக வரலாற்றில் ஒரு வரலாகும்.
சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன.இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது.
1. பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே
சூடிக்கொண்ட பட்டங்கள்.
இராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.
2. பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம் உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள்.
கடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.
3. பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள்.
காலிங்கராயன், சேதிராயன், மழவராயன்,நாடாள்வான் போன்றவை.
4. பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம் சார்பற்ற) வழங்கிய பட்டங்கள்.
கற்றளிப்பிச்சன். தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.
கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.
அ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
அரசன், அரசுடையான், அரசுக்குடையான், அரசுக்குழைச்சான், அரச்சுக்குழைச்சான்,
அரசாண்டான், அரசாளன், அரசாளி, அரசாட்சி, அரசப்பிரியன், அரசுகொண்டான்
அரசதேவன்,
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் அரசதேவன், அரசபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அரசரிற் சிறந்தவன் என்று போற்றப்பட்டவன். இவன் அரசாண்டான், அரசுக்குடையான் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டான். அரசிலி, அரநெறி, அரதைப்பெரும்பாழி என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதலங்களையும், அரசூர், அரசங்குளம், அரங்குளம், அரசமங்கலம், அரசங்குடி என்ற ஊர்களையும் உண்டாக்கி ஆட்சிபுரிந்தான்.இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
அச்சான்டான்
அங்கராயன்
அச்சுதன், அச்சுதபண்டாரம், அச்சுததேவன், அச்சுத்ேத்வன். அச்சுதராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அச்சுதன். அச்சுதபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அச்சுதராயன், அச்சுததேவன் எனவும் வழங்கப்பட்டது. அச்சுதங்குடி, அச்சுதமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் அச்சுதன், அச்சுதபண்டாரம், அச்சுததேவன், அச்சுத்ேத்வன்.என்ற பட்டங்களை பெற்றனர்.
அத்திரியன், அத்திரியாக்கி, அத்திரிமாக்கி, அத்திப்பிரியன், அத்திகொண்டான், அத்தியாண்டான், அத்தியாளி, அத்தியுடையான்
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அத்திசோழன். அத்திக்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அத்திகொண்டான், அத்தியாண்டான், அத்திப்பிரியன், அத்தியாளி, அத்தியுடையான் எனவும் வழங்கும். அத்தங்குடி, (அதங்குடி) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தையும், அத்திப்புலியூர் என்னும் சிவதலத்தையும், அத்திக்கரை, அத்திப்பட்டு எனும் திருப்புகள் பெற்ற சுப்பிரமணிய தலங்களையும், அத்திசோழமங்கலம், அத்திக்கடை, அத்திப்பேட்டை, அத்தியூர், அத்திப்பாக்கம், அத்திவெட்டி, அத்திக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினருக்கு அத்திப்பிரியன், அத்திரியன், அத்திரிமாக்கி என்னும் பட்டங்கள் வழங்குகின்றது. அத்திரி என்பது கோவேறு கழுதையை குறிக்கும். பெருங்குடி மக்கள் அத்திரியை பயன்படுத்தி பிரயானம் செய்தனர். பெருங்குடி வணிகனாகிய கோவலன் அத்திரியில் சென்றதை சிலம்பு குறிப்பிடுகிறது. சங்க காலங்களில் தலைவன் கோவேறு கழுதையில் பயனித்ததை சங்க பாடல்கள் செப்புகின்றன. இதன் மூலம் இப்பட்டங்கள் சங்ககாலம் முதல் வழக்கத்தில் உள்ளது என்பது தெரிய வருகிறது.இப்பட்டமுடையோர் அதிகமாக வாழும் ஊர்கள் தெரியவில்லை.
அரியதன், அரிப்பிரியன், அரியப்பிள்ளை,
பஞ்சநதிசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி அரியசந்திரசோழன். அரிசந்திரபுரம் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அரியதன், அரிப்பிரியன் அன்வும் வழங்கும். காவிரி ஆற்றிலிருந்து அரிசிலாறு என்னும் பேராற்ரையும், முள்ளியாற்றிலிருந்து அரியசந்திர நதியையும் உருவாக்கினான். அரியலூர், அரியமங்கை, அரியக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் அரியதன், அரிப்பிரியன்,அரியப்பிள்ளை என்னும்பட்டங்களை கொண்டனர்.
அண்டங்கொண்டான், அண்ணுண்டான், அண்டப்பிரியன், அண்ணுப்பிரியன், அண்ணுத்திப்பிரியன், அண்ணமாண்டான், அண்டமாளியன்,
பஞ்சநதிசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி. அண்டபுரம் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அண்டங்கொண்டான், அண்டமாண்டான், அண்டப்பிரியன், அண்டமாளி எனவும் வழங்கலாயிற்று. அண்ணாமலை என்னும் தேவார சிவ தலத்தையும்,அண்டக்குடி(அண்ணுகுடி) அண்டக்குளம், அண்டத்துறை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். சுவர்க்கம், அந்தரம், பூமி என்னும் உலகங்களையும் வென்றவன் என புகழப்பட்டவன்.
மேலனைத்துலகு மிவ்வகில லோகமெலாம் வென்றுகொண்டவனு மென்றிவர்கள் கொண்ட விறலும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது.இவன் மரபோர் அண்டங்கொண்டான், அண்ணுண்டான், அண்டப்பிரியன், அண்ணுப்பிரியன், அண்ணுத்திப்பிரியன், அண்ணமாண்டான், அண்டமாளியன் என்னும் பட்டங்களை கொண்டனர். இப்பட்டங்கள் சங்ககாலத்தில் வழங்கப்பட்டவை என உறுதி செய்யப்படுகிறது.
அம்பராண்டான், அமரண்டான், அமராண்டான், அம்பர்த்தேவன், அம்மலத்தேவன், அம்மானைத்தேவன், அம்பானைத்தேவன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அம்பன். அம்பர்,அம்பர்மாகாளம் என்னும் இரண்டு சிவதலமுடைய அம்பர் என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் அம்பராயன், அம்பராண்டான், அம்பர்த்தேவன் எனவும் வழங்கும். அம்பராயன்பேட்டை (அம்பராசன்பேட்டை) அம்பத்தூர்(அம்பகரத்தூர்) அம்புக்கோவில் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் அம்பராண்டான், அமரண்டான், அமராண்டான், அம்பர்த்தேவன், அம்மலத்தேவன், அம்மானைத்தேவன், அம்பானைத்தேவன் எனும் பட்டங்களை கொண்டனர்
அம்மையத்தரையன், அசையாத்துரையன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அம்மையன். அம்மையபுரம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அம்மையப்பன், அம்மளூர் என்னும் ஊர்களையும், அம்மணியாறு என்னும் பேராற்றையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் அம்மையத்தரையன், அசையாத்துரையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
அருண்மொழித்தேவன்
அருமொழித்தேவன்
அருவாத்தலைவன்
அருவாத்தலையன்
அருவாநாடன்
அருமைநாடன்
அருமடான்
அருவாநாட்டான்
அருமநாட்டான்
அடைக்கப்பட்டான், அடைவளைந்தான், அடவளைந்தான், அடைவளஞ்சான், அண்டம்வளைந்தான்.
அண்டசோழன் மரபில் வந்த மன்னன் அடைவளைசோழன். அடைக்கப்பட்டு என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அடைக்கப்பட்டான், அடைவளைந்தான் எனவும் வழங்கும். அடைப்பாறு என்னும் ஆற்றையும் உருவாக்கி அரசாண்டவன். அடை என்பது நிலம் என்றும், வளைவதாவது சுற்றி வருவது என்றும் பொருள்படும். இதன் மூலம் இவர்கள் நிலத்தை சுற்றி அதன் எல்லைகளை வகுத்து மானியமாக நிலங்களை அளித்தவர்கள் (தினந்தோறும் திருக் கோவில்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு மற்றும் பூசனப்பொருட்களை வழங்குபவர்களுக்கு) என்றும் அறியப்படுகிறது. அடைக்கப்பட்டான், அடைவளைந்தான், அடவளைந்தான், அடைவளஞ்சான், அண்டம்வளைந்தான் என்னும் பட்டமுடைய கள்ளர்கள் திருவையாறு வட்டம் திருச்சினம்பூண்டி, திருச்சி மாவட்டம் கிளியூர் ஆகிய இடங்க்களில் அதிகமாக வாழுகின்றனர்.
அன்னவாயில்ராயன், அன்னவாசல்ராயன்,
அன்னசோழன், அன்னவாயில் என்னும் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அன்னவாயில்ராயன் எனவும்வழங்கும். சோற்றுத்துறை எனும் தேவார சிவ தலத்தையும், அன்னப்பன்பேட்டை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் அன்னவாயில்ராயன், அன்னவாசல்ராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
அதியமான்
அதிகமான்
ஆ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஆச்சன், ஆச்சாப்பிரியன், ஆட்சிப்பிரியன்
முசுகுந்தன் மரபில் வந்தவன். ஆச்சாபுரம் (பெருமணநல்லூர்) என்னும் தேவார சிவதல நகரை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன்.ஆதிசைவர்களுக்கும், கம்மியர்களுக்கும் ஆச்சாரி என்று பட்டம் கொடுத்தவன். இவன் பெயர் ஆச்சாப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது.ஆதிச்சபுரம், ஆச்சமங்கலம், ஆச்சனூர், ஆச்சங்குடி, ஆச்சான்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன். இவன் மரபினர் ஆச்சாப்பிரியன், ஆட்சிப்பிரியன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
ஆச்சராயன்
ஆச்சுடையன்
ஆச்சாளன்
ஆச்சாளி
ஆச்சாப்பிரியன், ஆட்சிப்பிரியன்.
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் ஆச்சன், ஆச்சாபுரம் (பெருமணநல்லூர்) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். ஆதிசைவர்களுக்கும், கம்மியர்களுக்கும் ஆச்சாரி என்று பட்டம் வழங்கி சிறப்பித்தவன். ஆச்சாப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். ஆச்சாபுரம் (ஆதிச்சபுரம்), ஆச்சாமங்கலம், ஆச்சனூர், ஆச்சங்குடி, ஆச்சான்பட்டி எனும் ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
ஆச்சங்கொண்டான்
ஆச்சதேவன்
ஆய்ப்பிரியன், ஆளற்பிரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஆய். ஆய்க்கோட்டை, ஆய்ப்பாடி என்னும் நகரங்களை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆய்ப்பிரியன் எனவும் வழங்கும். ஆய்மூர் என்ற தேவார சிவதலத்தையும், ஆய்மழை, ஆய்மங்கலம், ஆய்ப்பட்டி, ஆய்க்குடி, ஆய்ங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் ஆய்ப்பிரியன், ஆளற்பிரியன் என்ற பட்டங்களை
பெற்றனர்.
ஆரம்பூண்டான், ஆர்சுத்தி, ஆரஞ்சுற்றி, ஆரமுண்டான், ஆரக்கண்ணியன், மாலையிட்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஆத்திமன். ஆத்திக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் ஆரம்பூண்டான்,ஆரஞ்சுற்றி,மாலையிட்டான் என்வும் வழங்கலாயிற்று. இவன் காலத்தில் தான் மருத்துவ குணமிக்க ஆத்திமாலை அணியும் வழக்கம் ஏற்பட்டது. ஆத்தூர், ஆத்தமங்கலம், ஆரம்பூண்டான்பட்டி, ஆத்தங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் ஆரம்பூண்டான், ஆர்சுத்தி, ஆரஞ்சுற்றி, ஆரமுண்டான், ஆரக்கண்ணியன், மாலையிட்டான் என்ற பட்டங்களையும் பெற்றனர்.
ஆக்காட்டரையன், ஆக்காட்டியன்.
அழிசிசோழன், ஆக்காடு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் ஆக்காட்டுராயன், ஆக்காட்டரையன், ஆக்காடுகொண்டான், ஆக்காடாண்டான், ஆக்காடுடையான், ஆக்காட்டுப்பிரியன், ஆக்காடாளி என்வும் வழங்கலாயிற்று. சிறந்த வீரமும் கொடையுமுடையவன். நக்கண்ணையார் முதலிய புலவர்களால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல்கள் நற்றிணையில் 87,169ம் பாடல்களாக உள்ளன. ஆக்கூர் என்னும் தேவார சிவ தலத்தையும்,ஆக்குடி என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டான்.இவன் மரபோர் ஆக்காட்டரையன், ஆக்காட்டியன். என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஆதனழிசியன், ஆதாழியன்
ஆதனழிசிசோழன், ஆதனக்கோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் நன்பன். (பூதப்பாண்டியன் பாடிய புறநானூறு 71ம் பாடல் ஆதனழிசி பற்றி கூறுகிறது, புறநானூறு மூலமும் பழைய உரையும் பக்கம் 63, உ.வே. சாமிநாத ஐயர்) ஆதனக்குடி, ஆதமங்கலம், ஆதமழை, ஆதனப்பேட்டை, ஆதனூர் எனும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் ஆதனழிசியன், ஆதாழியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
ஆலத்தரையன், ஆவத்தயன், ஆவத்தியான், ஆவாத்தியான்,ஆலங்கொண்டான், ஆலத்தொண்டான், ஆலத்தொண்டமான், ஆலம்பிரியன், ஆளம்பிரியன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான்.
ஆலசோழன், ஆலங்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆலத்தரையன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான், ஆலம்பிரியன், ஆலமாளி எனவும் வழங்கலாயிற்று. ஆலந்துறை, ஆலம்பொழில், ஆலங்குடி, ஆலங்காடு என்னும் தேவார சிவ தலங்களையும், ஆலத்தம்பாடி,ஆலத்தூர், ஆலத்தாங்குடி, ஆலங்காடு, ஆலம்பாக்கம், ஆலம்பள்ளம், ஆலம்பாடி, ஆலக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன்.இவன் மரபினர் ஆலத்தரையன், ஆவத்தயன், ஆவத்தியான், ஆவாத்தியான்,ஆலங்கொண்டான், ஆலத்தொண்டான், ஆலத்தொண்டமான், ஆலம்பிரியன், ஆளம்பிரியன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
இ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
இராயாண்டான், இராயாளன், இராயன், இராங்கியன்,இராயங்கொண்டான், இராயமுண்டான், இராயாளி, இராசாளி, இராயப்பிரியன், இராசப்பிரியன், இராங்கிப்பிலியன்.
முசுகுந்த மரபில் வந்த மன்னன் இராயன், இராயபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் இராயங்கொண்டான், இராயாளி, இராயப்பிரியன் என்றும அழைக்கப்பட்டான். இராயநல்லூர் (இராயந்தூர்), இராயன்பேட்டை, இராயமங்கலம், இராயங்குடி, இராயன்பட்டி (இராங்கியன்பட்டி) எனும் ஊர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மேற்கண்ட பட்டங்களை கொண்டனர்.
இராயத்தேவன்
இளங்கொண்டான், இளமுண்டான்.
இளஞ்சேட்சென்னிசோழன், இளநகர் என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியகக் கொண்டவன். இவன் பெயர் இளங்கொண்டான், இளமுண்டான், இளம்பிரியன், இளமுடையவன், இளமாளி, இளநாடன் என்வும் வழங்கலாயிற்று. இளமர்( இளமதுக்கூர்) இளங்கடம்பனூர் என்னும் தேவார சிவதலங்களையும், இளமங்கலம், இளங்கார்குடி,இளங்காடு, இளவனூர்,இளையான்குடி என்னுமூர்கலையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இரபோரைப் பாதுகாத்தலையே நோன்பாகக் கொண்டவன். சேரனுடைய பாமுளூரை வெற்றி கொண்டு அதன் பக்கத்தில் இருந்த குன்றில் புலிக்கொடியை நாட்டி அதற்குச் சென்னிமலை என்றும் பெயரிட்டான். ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் இவனை புகழ்ந்து பாடியவை புறநானூற்றில் 10,2003ம் பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இவன் மரபோர் இளங்கொண்டான், இளமுண்டான் என்னும் பட்டங்கள் பெற்றனர்.
இருங்களன்
இருங்கள்ளன்
இடங்காப்பிறந்தான்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இடைமன். இடங்கான் கோட்டை என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். முல்லைநில மக்களுக்கு இடையர் என்னும் பட்டம் வழங்கியவன். இவன் இடங்காப்பிறந்தான் என்றும் அழைக்கப்பட்டான். முல்லை நில மக்களுக்கு இடையர் என்ற பட்டத்தை அளித்தவனும் இவனே.இடைமருதூர், இடைவாய் (விடைவாய்) இடைக்குளம், இடைப்பள்ளி என்னும் தேவார சிவதலங்களையும், இடையாத்திமங்கலம், இடைக்கோரை, இடையூர், இடையகாடு, இடைக்குடி என்ற நகரங்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன்.இவன் வழி வந்தவர்கள் இடங்காப்பிறந்தான் என்ற பட்டம் பெற்றனர்.
இறையாண்டான், இராரண்டான், இராயாண்டான். இராசாண்டான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இறையமன். இறையூர் (மாறன்பாடி) என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் இறையாண்டான் எனவும் வழங்கும். இறையனூர், இறையன்சேரி என்னும் தேவார சிவதல நகரங்களையும், இறையாங்குடி, இறைமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் இறையாண்டான், இராரண்டான், இராயாண்டான் எனும் பட்டங்களை கொண்டனர்.
ஈ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஈழத்தரையன், ஈழங்கொண்டான், ஈச்சங்கொண்டான், ஈங்கொண்டான், ஈங்கொண்டான்
ஈசசோழன் ஈங்கை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் ஈங்கொண்டான், ஈங்காண்டான் என்வும் வழங்கும். ஈங்கோய்மலை என்னும் தேவார சிவ தலத்தையும் ஈங்கூர், ஈஞ்சூர், ஈசனூர், ஈசனக்குடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் ஈங்கொண்டான் பட்டத்தை பெற்றனர். மேலும் இப் பட்டம் ஈழநாட்டிற்கும், ஈழத்துரையன், ஈழமுண்டான் ஈழம்கொண்டான் என்ற பட்டங்களுக்கும் தொடர் கொண்டவை எனவும் அறியப்படுகிறது.
உ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
உறந்தைராயன், உறந்தையுடையன், உறந்தையாண்டான், உறந்தையாளன்
உறந்தையாளி, உறந்தையாட்சி, உறந்தைப்பிரியன், உறந்தைகொண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் உறந்தைமன். உறையூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் உறந்தைராயன், உறந்தைகொண்டான், உறந்தைபிரியன் எனவும் வழங்கும். உறந்தூர் என்னும் ஊரையும் உருவாக்கியவன் இவன். இவன் வழிவந்தவர்கள் உறந்தைராயன்,
உறந்தையுடையன், உறந்தையாண்டான், உறந்தையாளன், உறந்தையாளி,
உறந்தையாட்சி, உறந்தைப்பிரியன், உறந்தைகொண்டான் என்னும் பட்டம் சுமந்தனர்.
உழுவுடையான்
உழுவாண்டான்
உழுவண்டான்
உழுவாளன்
உழுவாளி
உழுவாட்சி
உழுப்பிரியன்
உழுக்கொண்டான்
உய்யக்கொண்டான்
உத்தமாண்டான்
உத்தமண்டான்
உத்தமங்கொண்டான்
உத்தமுண்டான்
உத்தமப்பிரியன்
உலகுடையன், உலகுடையான், உலகங்காத்தான், உலகுகாத்தான், உலகாண்டான், உலயன், உலகுய்யன்.
உலகநாதசோழன், உலகுண்டம்(உலயக்குண்டம்) என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் உலகாண்டான், உலகங்கொண்டான், உலகுடையான், உலகங்காத்தான் எனவும் வழங்கும். உலகங்காத்தான்பட்டி என்ற ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் உலகுடையன்,உலகுடையான், உலகங்காத்தான், உலகுகாத்தான், உலகாண்டான், உலயன், உலகுய்யன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஊ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஊமத்தரையன்
ஊமத்தயன்
ஊரத்தியன்
ஊமைப்பிரியன்
ஊரான்பிலியன்
ஊமத்தநாடன்
ஊரத்திநாடன்
எ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
எத்திப்பிரியன்
என்னாட்டுப்பிரியன்
ஏ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன், ஏனாதிநாட்டுப்பிரியன், ஏத்திப்பிரியன்
ஏனாதி திருக்கிள்ளிசோழன், ஏனாதி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஏனாதிகொண்டான், ஏனாதியாண்டான், ஏனாதிப்பிரியன், ஏனாதியுடையான், ஏனாதியாளி எனவும் வழங்கும்.சிறந்த வீரமும் கொடையுமுடையவன். ஏனாதிமங்கலம், ஏனங்குடி, ஏனனூர், ஏனாதிகுடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இச் சோழ மன்னன் கோனாட்டு எறிச்சிலூர் மாடவன் மதுரைக்குமரனார் என்னும் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல் புறநானூற்றில் 167ம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இவன் மரபினர் ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன், என்னும் பட்டங்களை பெற்றனர். மேலும் இப்பட்டங்கள் படைத் தலைவர்களுக்கு உரியதாக கருதப்பட்டுள்ளது.சங்க காலத்தில் ஏனாதி பட்டம் என்பது அரசன் தன் படைத்தலைவன் மீது கொண்ட நன்மதிப்பினை உணர்த்த வேண்டி தன் பெயர் பொறித்த கணையாளி ஒன்றை அளிப்பதாகும். சங்ககாலத்தில் மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்குட்டுவன் ஆகியோர் ஏனாதிபட்டம் பெற்ற அரசர்களாவார்கள். ஏனாதி சாத்தஞ் சாத்தனார் ஏனாதி பட்டம் பெற்ற புலவராவார். இதன் மூலம் இப் பட்டங்கள் சங்ககாலம் முதல் வழங்கிய பட்டங்கள் என்று அறியமுடிகிறது.
ஐ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஐரைப்பிரியன், ஐயப்பிரியன், (அயிரப்பிரியன், அய்யப்பிரியன்)
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் ஐவசோழன் (அய்வசோழன்) ஐயனாபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஐயப்பிரியன்
ஐயங்கொண்டான், ஐயாண்டான், ஐயுடையன், ஐயாளி எனவும் வழங்கப்பட்டது. ஐவூர், ஐயூர், ஐவனல்லூர், ஐயன்பேட்டை (அய்யம்பேட்டை) என்னும் ஊர்களையும் உருவாக்கியரசாண்டவன். ஐயனாறு, ஐயவையனாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கியவன். இவன் மரபோர் ஐரைப்பிரியன், ஐயப்பிரியன் (அயிரப்பிரியன் அய்யப்பிரியன்) என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஒ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஒளியுடையான், ஒளியாண்டான், ஒளியாளன், ஒளியாளி, ஒளியாட்சி, ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் (ஒண்டிப்பிளியன்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஒளிமன். ஒளிகோட்டை (உள்ளிக்கோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அறிவிலும், புகழிலும், கொடையிலும் மிகச்சிறந்தவன். இவன் ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். ஒளியூர், ஒளிமங்கலம், ஒளிக்குடி, ஒளிக்கடை (உள்ளிக்கடை) ஒளிமதி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் (ஒண்டிப்பிளியன்) எனும் பட்டங்களை பெற்றனர்.
ஒமசையன்
ஒசையன்
ஒற்றையன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஒற்றைமன். ஒற்றியூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.ஒற்றகுடி, ஒற்றன்காடு, ஒற்றனூர், ஒற்றமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் ஒற்றையன் எனும் பட்டம் கொண்டனர்.
ஓ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஓனாயன்
ஓமாமுடையன்
ஓடம்போகி, ஓட்டம்பிடுங்கி, ஓட்டம்பிடுக்கி, ஓட்டம்பிடிக்கி.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் ஓடம்போகிசோழன். ஓடம்போகி என்னுமாற்றையும், ஓடாசசேரி, ஓட்டப்பிடாகை, ஓட்டக்குடி, ஓட்டத்தட்டை,ஓட்டப்பிடாரம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் ஓடம்போகி, ஓட்டம்பிடுங்கி, ஓட்டம்பிடுக்கி, ஓட்டம்பிடிக்கி என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஓமாமரையன், ஓமசையன், ஓமனாயன், ஓமாந்தரையன், ஓந்தரையன்,ஓந்திரியன், ஓமாம்பிரியன், ஓயாம்பிலியன்.
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் ஓமாம்புலிமன், ஓமாம்புலியூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் ஓமாந்தரையன், ஓமாமரையன், ஓமாம்பிரியன், ஓமாமுடையான் என்றும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் மேற்கண்ட பட்டங்களை பெற்றனர்.
ஓரி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஓரி.வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். ஓத்தூர் என்னும் தேவார சிவதலத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். ஓரியூர், ஓரிக்குடி, ஓரிமங்கலம், ஓரிச்சேரி எனும் ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன்.இவன் மரபினர்
ஓரி எனும் பட்டம் கொண்டனர்.
க வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கருவுடையான், கருவாண்டான், கருவாளன், கருவாளி, கருவாட்சி, கருப்பிரியன்,
கருக்கொண்டான், கருப்பூண்டான் கருப்பையன், கருப்பட்டியன், கருவூரான் கருப்பூரான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கருப்பைமன். கருவூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கருவூரான், கருக்கொண்டான் எனவும் வழங்கப்பட்டது. கருங்குலம், கருவாக்குரிச்சி, கருப்பூர், கருப்புக்களர், கருவிலி, கருப்பறியலூர், கருக்குடி, கருகாவூர், கருப்பட்டிமூலை, கருங்கண்ணி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் கருப்பூண்டான், கருப்பட்டியன், கருப்பூரான் எனும் பட்டங்களை பெற்றனர்.
கஞ்சராயன், கஞ்சன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கஞ்சமன். கஞ்சனூர் என்னும் தேவார சிவதல நகரையுண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கஞ்சராயன் எனவும் வழங்கப்பட்டது. இவன் மரபோர் கஞ்சராயன், கஞ்சன் எனும் பட்டங்களை பெற்றனர்.
கரும்பூரான்
கரும்புடையான்
கரும்பாண்டான்
கரும்பாளன்
கரும்பாளி
கரும்பாட்சி
கரும்புகொண்டான்
கன்னாண்டான், கன்னாளன், கன்னாளி, கன்னாட்சி, கன்னப்பிரியன், கன்னகொண்டான், கன்னதேவன், கன்னமுடையன், கன்னப்படையன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கன்னன். கன்னபுரம் என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். கன்ணாண்டான், கன்னகொண்டான், கன்னமுடையான், கன்னப்பிரியன், கன்னாளி எனும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். கன்றாப்பூர் (கன்னாப்பூர்) கன்னாரப்பேட்டை, கன்னந்தகுடி,கன்னக்கொடையான் எனும் ஊர்களையும், கன்னாறு என்னும் காட்டாற்றையும் உருவாக்கி ஆட்சி புரிந்தான். இவன் மரபு வம்சத்தினர் கன்னமுடையன், கன்னப்படையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
கலயன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சாய்மன். சாயக்கோட்டை (கலயநல்லூர்) என்னும் தேவார சிவதலத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். மேலும் சாய்க்காடு, சாய்க்களூர் என்னும் சிவதலங்களையும் உருவாக்கியவன். இவன் மரபு வம்சத்தினர் கலயன் என்ற பட்டம் பெற்றனர்.
கரம்பையன், கரம்பைகொண்டான், கரமுண்டார்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன்.கரம்பைக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். கரவீரம், கரபுரம் என்னும் தேவாரசிவ தலங்களையும் கரம்பை, கரம்பையம், கரம்பைகுடி, கரஞ்சிப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கரம்பையன், கரம்பைகொண்டான், கரமுண்டார் எனும் பட்டங்களை சுமந்தனர்.
கத்தூரியன், கத்தரிகொண்டான், கத்தூரிமுண்டான், கத்தரியன், கத்தூரியன், கத்தரிநாடன், கத்திநாடன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கத்தரிமன். கத்தரி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் கத்தரிகொண்டான், கத்தரிநாடன் எனவும் வழங்கும். கத்தரிமங்கலம், கத்தரிக்குடி, கத்தரிக்காடு, கத்தரிப்புலம், கத்தரிக்கொல்லை என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் கத்தரிகொண்டான், கத்தூரிமுண்டான், கத்தரியன், கத்தூரியன், கத்தரிநாடன், கத்திநாடன்.என்ற பட்டங்களை பெற்றனர்.
களன்
களாவன்
களத்துவென்றான்
கலியன், கலியாட்சி, கலிச்சி, கலிச்சியன், கலிக்கொண்டார், கலிப்பிரியர், கலியனான், கலியராயன், கலியரையன், கலியாளியன், கலிவுடையான், கலிராயன்
கலிகாமசோழன் கலியாணபுரம் என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் கலியன், கலிராயன், கலியரையன், கலியாண்டான், கலிகொண்டான், கலிப்பிரியன், கலியுடையான்,கலியாளி,கலியாட்சி எனவும் வழங்கலாயிற்று. எதிரிகளுக்கு துன்பம் விளைவிக்கும் ஆற்றல் பெற்றவன், கலிக்காமூர் என்னும் தேவார சிவ தலத்தையும் கலியாணோடை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் பலகாலம் தன்னை கலியன் என்று அழைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. துன்பம் நிறைந்த காலத்தை கலிகாலம், கலியுகம் என்பதும் தெறிந்ததே.கலிகாமசோழன் மரபோர் கலியன், கலியாட்சி, கலிச்சி, கலிச்சியன், கலிக்கொண்டார், கலிப்பிரியர், கலியனான், கலியராயன், கலியரையன், கலியாளியன், கலிவுடையானென்னும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டமுடையோர் தஞ்சை மாவட்ட நீடாமங்கலம், சித்தமல்லி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலியராயன்பட்டி, கரம்பக்குடி, கீரனூர், இலந்தைவாடி, பிலாவிடுதி, குலத்திரான்பட்டுஎன்னுமூர்களில் அதிகமாக வாழுகின்றனர்.
கடம்பன், கடம்பையன், கடம்பராயன், கடம்பரான், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையான், கடம்பையாளியான்,
கடம்பசோழன், பெருங்கடம்பனூர் என்னும் தேவார சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் கடம்பன், கடம்பராயன், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையவன், கடம்பையாளி என்வும் வழங்கலாயிற்று. குழித்தண்டலை, கடம்பன்துறை, கடம்பூர், கடவூர், கடவூர்மயானம் என்னும் தேவார சிவ தலங்களையும், கடம்பர்வாழ்க்கை, கடம்பன்குடி, கடலங்குடி என்னும் ஊர்களையும், கடலாழி என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் கடம்பன், கடம்பையன், கடம்பராயன், கடம்பரான், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையான், கடம்பையாளியான் எனும் பட்டங்களை பெற்றனர்.
கருடி
கரடி
கண்டன், கண்டராயன், கண்டவராயன், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி, கண்டப்பிரியன், கண்டர்பிரியன், கண்டப்பிள்ளை, கடாப்பிள்ளை.
கண்டர்கிள்ளி சோழன், கண்டர்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கண்டன், கண்டராயன், கண்டப்பிரியன் எனவும் வழங்கலாயிற்று. கண்டதேவி என்னும் தேவார சிவ தலத்தையும் கண்டமங்கலம், கண்டர்மாணிக்கம், கண்டனூர், கண்டராயன்பட்டி, கண்டர்குடி (கண்ணுகுடி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் கண்டன், கண்டராயன், கண்டவராயன், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி, கண்டப்பிரியன், கண்டப்பிள்ளை, கடாப்பிள்ளை.என்னும் பட்டங்களை பெற்றனர்.
கங்கன்
கங்கராயன்
கங்கைநாடன்
கங்கநாடான்
களப்பாளன்
களப்பளான்
களப்பாளி
களப்பாடி
களந்தையாண்டான்
களந்தண்டான்
களமுடையன்
களக்குடையன்
கக்குடையன்
களக்கடையன்
கன்னகுச்சிராயன்
கலிங்கராயன்
கச்சிராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கச்சிமன். கச்சி தேவார சிவதல நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கச்சிராயன் எனவும் வழங்கும். கச்சூர், கச்சியூர், கச்சையூர் என்னும் தேவார சிவதலங்களையும், கச்சிக்குடி, கச்சிமங்கலம் (கச்சமங்கலம்) காஞ்சிப்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கச்சிராயன் எனும் பட்டத்தையும் சுமந்தனர்.
கண்டியன், இராசகண்டியன், கண்டியர்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கண்டியன். கண்டியூர் என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். சின்னக்கண்டியூர், கண்டியன் காடு, கண்டியன்பட்டு (கண்டிதன்பட்டு) கண்டியன்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கண்டியன், இராசகண்டியன், கண்டியர்.எனும் பட்டங்களை கொண்டனர்.
கா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கார்யோகன்
கார்யோகராயன்
காருடையன்
காராண்டான்
காராளன்
காராட்சி
காரையாட்சி, காரைக்காச்சி
மாந்தாதா மரபில் வந்த மன்னன் கார்மன், காரைக்கோட்டை எனும் நகரத்தை இராசதானியாகக் கொண்டவன். காரைவாயில் (காராயில்), காரைமேடு(கழிப்பாழை), காரைக்காடு, காரைக்கால், காரைப்பாக்கம், காரைபட்டு, காரைப்பட்டி, காரைக்குடி, காரைப்பள்ளம், காரப்பன்காடு, காரைமங்கலம், என்ற ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
கார்ப்பிரியன்
கார்கொண்டான்
காசிராயன், காசிநாடான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காசிமன். காசாங்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். தென்காசி, சிவகாசி என்னும் பிரபலமான சிவதலங்களையும், காசாங்காடு என்னும் ஊர்களையும் உண்டு பண்ணி அரசாண்டவன்.இவன் மரபினர் காசிராயன், காசிநாடான் எனும் பட்டங்களை பெற்றனர்.
காவலக்குடியன், காலாக்குடியன், காவாளி, காவாலி, காவாடி, காலாடி.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காவலன். காவலகுடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் காவலகுடியன், காவாளி எனவும் வழங்கும். காலம் (கைச்சினம்) என்னும் தேவார சிவதல நகரத்தையும், காவளூர், கானூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் காவலக்குடியன், காலாக்குடியன், காவாளி, காவாலி, காவாடி, காலாடி எனும் பட்டங்களை கொண்டனர்.
காங்கயன், காங்கியன், காங்கேயன்.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த காங்கமசோழ சக்ரவர்த்தி. காங்கயம் (காங்கயன்பட்டி) என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் காங்கயன் எனவும் வழங்கும். காலனுக்கு இது வழக்கென்று போதித்தவன் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்) இவன் மரபோர் காங்கயன், காங்கியன், காங்கேயன் எனும் பட்டங்கள் கொண்டனர். வீரசோழப் பெரிய காங்கேயன் என்பவன் சோழ வல்லரசில் பெரும் வீரனாக விளங்கியுள்ளான். இவன் பெரியகுலத் தலைவன், கங்கை முதல்வன் எனவும் அழைக்கப்பட்டுள்ளான். இவன் கொங்குசோழ மன்னர்களின் முதல்வனும் ஆவான். இவன் குடியோறிய இடம் காங்கேயம் எனவும் அழைக்கப்படுகிறது. நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் கோயில் கல்வெட்டு ஒன்றில் ஆதி சண்டிகேசுவரர் கோயிலுக்கு நிலம் விற்றுக்கொடுத்த தகவலும் அதில் கையெழுத்திட்டுள்ள அதிகாரிகளுள் ஒருவனாக காங்கேயன் இடம் பெற்றுள்ளான். இவன் வழி வந்தோர் சோழர் படைதலைவராகவும், அதிகாரியாகவும் கொங்குநாட்டில் பணியாற்றி உள்ளனர். இப்படம் முடையோர் தஞ்சை மாவட்ட காங்கேயன்பட்டியில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
காவிரிவெட்டி
காவிரிநாடன், காவிரிவெட்டி
சங்ககால சோழர்களுள் மிகவும் புகழ்பெற்றவன் கரிகால் சோழன். இவனது காலம் கி.மு 60 முதல் கி.மு 10 வரை என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சங்ககால இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் இடம்பெறும் பட்டினைப்பாலை, பொருநாற்றுப்படை ஆகிய இரண்டும் கரிகாலனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டவை. இச்சிறப்பினை வேறு சோழ அரசர்கள் எவரும் பெற்றதில்லை. வெள்ளப்பெருக்கால் ஏற்படும் சேதங்களைத் தவிர்கவும் வேளாண்மையை பெருக்கவும், நீர்பாசன வசதிகளை செய்து தரும் பொருட்டு தன்னுடன் போரிட்டு தோற்றுப்போன இலங்கை வேந்தனின் 12000 படை வீரர்களை பயன்படுத்தி திருச்சி திருவரங்கத்திற்கு மேற்கே காவிரி ஆற்றுக்கிடையே 1080 அடி நீளமும், 40 முதல் 60 அடிவரை அகலமும் கொண்ட கல்லணையும் கட்டி காவிரியின் கரைகளை உயர்த்திய பெருமையும் பெற்றவன் கரிகாலன். இச்செய்தியை பிற்கால இலங்கை நூள்களும், கலிங்கத்துப்பரணியும்,சிலப்பதிகாரமும்,தெலுங்குச் சோழன் புன்னியகுமாரனின் மேலப்பாடு கல்வெட்டும் குறிப்பிடுகின்றன.வேறு சங்ககால அரசர்கள் எவரும் வேளாண் விரிவாக்கத்திற்கு அணை கட்டியதாக சான்றுகள் இல்லை. வட இந்திய அரசுகளின் மீது போர் தொடுத்து மகத, வச்சிர, அவந்தி நாட்டு வேந்தர்களையும் வென்று இமயத்தில் புலிக்கொடியை பறக்கவிட்டு பின்பு வாகைப் பறந்தலையில் ஒன்பது வேளிர்குல அரசர்களையும், நாகப்படினம் பகுதியை சார்ந்த நாகர்களின் பன்றி நாட்டையும், பெண்ணை ஆற்றுக்கரை குறும்பர்களையும், ஆயர்தலைவன் இளங்கோ மற்றும் தொண்டை நாட்டையும் வென்று காடுகளை அழித்து வேளான் நிலங்களாகவும் மாற்றிய பெருமை உடையவன் கரிகால் சோழன். இவனது ஆட்சிக்காலத்தில் சோழ அரசு வடக்கே வடபெண்ணை, தெற்கே குமரிவரை பரவியிருந்தது. இதனால் இவன் கரிகால் பெருவளத்தான், காவிரிநாடன் எனும் சிறப்புப் பெயர்களை பெற்றிருந்தான். கள்ளர் குலத்தில் காவிரிநாடன் எனும் பட்டப்பெயர் இவன் சந்ததியினருக்கு வழங்கிவருவதையும் அறியமுடிகிறது. இப்பட்டம் தான் கள்ளர் குல பட்டங்களில் மிகவும் பழமை வாய்ந்தது என்று அறியவும் முடிகிறது.
காவெட்டி
காடுவெட்டி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காடுவெட்டி. காடுகளை வெட்டி அழித்து நகரங்களை உருவாக்கியவன். காட்டூர், மேலக்காட்டுப்பள்ளி, கீழைக்காட்டுப்பள்ளி என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் மரபினர் காடுவெட்டி எனும் பட்டம் கொண்டனர். காடவராயன் என்ற பட்டத்துடன் தொடர்புடைய பட்டம் காடுவெட்டி என்றும், காடுவெட்டி என்பது பல்லவரது பெயராக சாசனங்களிலும் வருகிறது. கங்கவேந்தர்களின் செப்பேடுகள் காஞ்சி மாநகரத்தை காடுவெட்டிகள் ஆண்டதாக கூறுகின்றன. காடுவெட்டி பேரரையன், காடுவெட்டி தமிழ் பேரரையன், விடேல் விடுகு காடுபட்டித் தமிழ் பேரரையன் என்போர் பல்லவ பெரு வேந்தர்களின் கீழிருந்த பல்லவ சிற்ரசர்கள், தலைவர்களென்றும் சுட்டுகின்றன. பழைய திருவிளையாடல் புரானத்தில் பல்லவ குல காடுவெட்டி என்பவனின் பெருமையும் அவனது பக்திச் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. காடுவெட்டி பட்டமுடையோர் புதுக்கோட்டை அம்மாவட்டத்தில் காடுவெட்டிவிடுதி, பாலக்குடிப்பட்டி, உஞ்சைவிடுதி, அரிமளம் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். காடுவெட்டிகள் சோழர் மற்றும் பல்லவர் மரபினர் என்றும் அறிய முடிகிறது.
காடவராயன்
பல்லவ மரபு வழி வந்தவர்கள். தொண்டை மண்டலத்தில் காடுகளை அழித்து நாடு, நகரங்களை உருவாக்கி அரசாண்டவர்கள். சங்க இலக்கிய சான்றுகளால் அறியப்படும் முதல் காடவன் ஐயடிகள் என்னும் சைவ அடிகளாவார். இவரை சுந்தரமூர்த்தி நாயனார் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகிறார். நம்பியாண்டார் நம்பி இவரை பக்திக்கடல் ஐயடிகளாகின்ற நம்பல்லவனே என்று கூறுகிறார். சேக்கிழார் இவரை பல்லவர் தம்குலமரபின் வழித்தோன்றல் என்றும் கூறுகின்றனர். பிற்கால சோழர் அரசியலில் காடவச் சிற்றரசர்களின் பங்கு மிகப்பெரியதாக இருந்துள்ளது. எழிசை மோகன் ஆட்கொல்லியான குலோத்துங்கச் சோழக் காடவராயன் (கி.பி 1129), கடலூர் ஆளப்பிறந்தான் மோகனாகிய இராசராச காடவராயன் (1136), செஞ்சியர்கோன் காடவன் (1152) என்போர் அதிகாரிகளாகவும்,சிற்றரசர்களாகவும் சோழர் ஆட்சியில் பணிபுரிந்துள்ளனர். காடவராயர் என்ற பட்டம் எவ்வித திரிபும் இன்றி இன்றும் வழங்கிவருவது குறிப்பிடத் தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் காடவராயன்பட்டி, நமல்பட்டி, தஞ்சை மாவட்டம் பஞ்சநதிக்கோட்டை, கருக்காக்கோட்டை, ஈச்சங்கோட்டை, ஆழிவாய்க்கால், சாமிப்பட்டி, மருங்குளம், புதுவூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்,
கடாரத்தலைவன்.
கடாத்தலைவன்
கடாந்தாங்கி
காலிங்கராயன்
காரி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காரி. வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன்.காரிக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். காரிக்கரை என்னும் தேவார சிவதலத்தையும் உண்டு பண்ணியவன். காரியூர், காரிபட்டி, காரிமங்கலம், காரிகுடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் காரி எனும் பட்டம் கொண்டனர்.
கி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கிளாக்கடையன்
கிளாக்கட்டையன்
கிள்ளி, கிள்ளியான், கிளாக்கன், கிள்ளிராயன், கிளிராயன், கிள்ளிகொண்டான், கிள்ளியாளி, கிளியிநார், கிளிகண்டான், கிள்ளியாண்டான், கிளியாண்டான்,
கிள்ளிசோழன், கிள்ளிகோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கிள்ளிராயன்,கிள்ளிகொண்டான், கிள்ளியாண்டான், கிள்ளிப்பிரியன், கிள்ளியாளி எனவும் வழங்கலாயிற்று. நிலத்தை கிள்ளி உழுதமையால் இவன் காலம் முதல் சோழர்களுக்கு கிள்ளி என்னும் பெயர் வழங்கலாயிற்று. கிள்ளிக்குடி என்னும் தேவார சிவ தலத்தையும் கிள்ளியனூர் (கிளியனூர்) கிள்ளியூர்(கிளியூர்) கிள்ளிபட்டி(கிளிப்பட்டி) கிள்ளிமங்கலம்(கிளிமங்கலம்) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். புறநானூறு கிள்ளி என்னும் பெயர்களுடைய ஏழு சோழ மன்னர்களை குறிப்பிடுகிறது.1. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, 2. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், 3. சோழன் நலங்கிள்ளி, 4. சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற்கிள்ளி, 5. சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி, 6. சோழன் நெடுங்கிள்ளி, 7. சோழன் நெடுமுடிக்கிள்ளி. இவர்களின் வழி வந்தோர் கிள்ளி, கிள்ளியான், கிளாக்கன், கிள்ளிராயன், கிளிராயன், கிள்ளிகொண்டான், கிள்ளியாளி, கிளியிநார், கிளிகண்டான், கிள்ளியாண்டான், கிளியாண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டங்கள் சங்க காலத்தவை என்பதும் புலனாகிறது
கீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கீழையன், கீழண்டான், கீழாளன், கீழாட்சி, கீழப்பிரியன், கீழ்க்கொண்டான்
கீழாண்டான், கிழண்டன், கீழுடையான், கீழாளி.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கீழைமன் கீழக்கோட்டை என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவனை கீழ்கொண்டான், கீழுடையான், கீழ்ப்பிரியன், கீழாளி, கீழாண்டான் என்றும் அழைத்தனர். வேளாளரில் ஒரு வகுப்பாருக்கு கிழார் என்ற பட்டமும் கொடுத்தவன். கீழையிலான், கீழையூர், கீழைவழி, கீழையம் என்னும் தேவார சிவதலங்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் வழி வந்தவர்கள் கீழாண்டான், கிழண்டன், கீழுடையான், கீழாளி என்ற பட்டங்களை பெற்றனர்.
கீரமுடையன்,கீருடையன், கீரரையன், கீரையன்,கீரைக்கட்டயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கீரமன். கீரநகரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் கீரங்கொண்டான், கீரமுடையன், கீரரையன் என்வும் வழங்கலாயிற்று. கீரக்களூர் என்னும் சிவதலத்தையும் கீரமங்கலம், கீரனூர், கீரங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கீரமுடையன்,கீருடையன், கீரரையன், கீரையன், கீரைக்கட்டயன் என்ற பட்டங்களை பெற்றனர்.
கு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
குறுக்கையன், குறுக்குடையான், குறுகாளன், குறுக்காளி, குறுக்காட்சி
குறுக்கைப்பிரியன், குறுகொண்டான், குறுக்கையாண்டான், குறுக்கண்டான், குறுக்கையர்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குறுக்கைமன். குறுக்கை, குறுமானிக்குடி என்ற இரு சிவதலங்களை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வேளாளரில் ஒரு பிரிவினர்க்கு குறுக்கையர் என்னும் பட்டம் கொடுத்தவன். குறுக்கையாண்டான் என்ற பெயரும் பெற்றவன். குறுங்குடி, குறும்பூர், குறுங்களம், குறுங்குளம் என்னுமூர்களை உண்டாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபோர் குறுக்கையாண்டான், குறுக்கண்டான், குறுக்கையர் எனும் பட்டங்களை பெற்றனர்.
குண்டையன், கொன்றையன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குண்டையன். குண்டையூர், குண்டூர், குண்டாகோயில், குண்ணூர், குண்ணலூர், குண்ணுவாரத்தி என்னும் நகரங்களை உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் குண்டையன், கொன்றையன் எனும் பட்டங்களை கொண்டனர்.
குழந்தைராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குழைமன். குழகு (குழகர்கோயில்) தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். குழையூர் என்னும் சிவதலத்தையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் குழந்தைராயன் எனும் பட்டம் பெற்றனர்.
குமாராண்டான், குமரண்டான்
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குமாரசோழன். குமாரபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் குமாராண்டான் என்வும் வழங்கப்பட்டது. குமாரமங்கலம், குமாரங்குடி, குமாரனூர் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் குமாராண்டான், குமரண்டான் என்ற பட்டங்களை கொண்டனர்.
குளந்தைராயன், கொழுந்தைராயன்.
கிள்ளிவளவ சோழன், உறையூரை இராசதானியாகக் கொண்டவன். குளத்தூர் என்னும் சிவ தலத்தையும், குளமங்கலம், குளக்குடி, குளப்பாடு, குளப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். வீரமும் கொடையுமுடையவன்.கருவூரை முற்றுகையிட்டு சேரனை தூங்கெயிலெறிந்து வென்றவன். அழகிய சோலை சூழ்ந்த குளத்தருகிள் துயின்ற காரணத்தினால் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் என்று பெயர் பெற்றவன். கவி பாடுவதிலும் வல்லவன். இவன் பாடிய பாடல்கள் புறநானூற்றில் 173ம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஆலந்தூர்கிழார், ஆவூர்மூலங்கிழார், கோவூர்கிழார், வேள்ளைக்குடி நாகனார், இடைக்காடனார், எருக்காட்டூர் தாயங்கண்ணனார், நல்லிறையனார், மானொக்கத்துநப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறைமாசாத்தனார், சல்லியங்குமரனார் என்னும் புலவர் பெருமக்கள் புகழ்ந்தும் இறந்தபின் வருந்தியும் பாடப்பெற்றவன். இப் பாடல்கள் புறநானூற்றில் 34,35,36,37,38,39,40,41,42,46,69, 70, 226, 227, 386,393, 397ம் பாடல்களாகவும்,நற்றினையில் 141ம் பாடலாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. இவன் மரபோர் குளந்தைராயன், கொழுந்தைராயன் என்ற பட்டங்களை பெற்றனர்.
குச்சிராயன்
கூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கூழையன், கூழாக்கி, மண்வெட்டிக்கூழ்வாங்கி, மண்வெட்டியில்கூழ்வாங்கி.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கூழைமன். பூமியில் மண்ணை வெட்டி, ஆராய்ந்து பொன்மணலைக் கண்டறிந்து உருக்கிப் பொற்கட்டி (பொற்பாளம்) செய்தவன். இவன் காலமுதல் பூமியில் சுரங்கம் அமைத்து தங்கம் எடுக்கும் வழக்கம் உண்டாயிற்று. மண்வெட்டி மூலம் பொன்மணலை அள்ளியதால் மண்வெட்டியில் கூழ்வாங்கி என்ற பட்டம் பெற்றான். (கூழ் என்றால் பொன் என்று அர்த்தம் உண்டு) இவன் மணலை அள்ளியதால் கூழையாறு என்ற ஒரு சிற்றாரும் உருவாயிற்று. மேலும் இவன் கூழையூர், கூழைக்குடி, கூழைமங்கலம், கூழைப்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கூழையன், கூழாக்கி, மண்வெட்டிக்கூழ்வாங்கி, மண்வெட்டியில்கூழ்வாங்கி என்ற பட்டங்களை பெற்றனர்.
கூராயன், கூர்சான், கூராட்சி, கூராண்டான், கூரப்பிரியன், கூராளி, கூரையன்.
பெரும்பற்றசோழன் மரபில் வந்த கூரசோழன். கூராட்சிகோட்டை (கூப்பாச்சிகோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் கூரப்பிரியன், கூராளி, கூராயன், கூராண்டான், கூராட்சி எனவும் வழங்கப்பட்டது. கூரூர் என்ற தேவார சிவதலத்தையும், கூரயாறு(கோரையாறு) என்னும் பேராற்றையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் கூராயன், கூர்சான், கூராட்சி, கூராண்டான், கூரப்பிரியன், கூராளி, கூரையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
கூரராசன்
கூச்சான்
கூத்தப்பராயன், கொத்தப்பராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கூத்தமன். இவன் பெயர் கூத்தப்பராயன் எனவும் வழங்கும். கூத்தூர், கூத்தனூர், கூத்தன்குடி, கூத்தமங்கலம் கூத்தானல்லூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கூத்தப்பராயன், கொத்தப்பராயன் எனும் பட்டங்களை கொண்டனர்.
கெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கை வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கைராயன்
கொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கொற்றரையன், கொற்றுடையன், கொற்றாண்டான், கொற்றாளன், கொற்றாளி,
கொற்றாட்சி, கொன்றையன், கொற்றங்கொண்டான், கொன்னமுண்டான், கொற்றப்பிரியன், கொத்தப்பிரியன்,
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கொற்றமன். கொற்றங்குடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அறிவிலும், புகழிலும், கொடையிலும், வீரத்திலும், வெற்றியிலும் மிகச்சிறந்தவன். இவன் கொற்றங்கொண்டான், கொற்றப்பிரியன் எனவும் அழைக்கப்பெற்றான். கொற்றமங்கலம் (கொத்தமங்கலம்) கொற்றங்குடி (கொத்தங்குடி) கொற்றூர் (கொத்தூர்) எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் கொன்னமுண்டான், கொத்தப்பிரியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
கொங்கணன்
கொடிகொண்டான்
கொடிக்கமுண்டான்
கொடிராயன்
கொடிக்கிராயன்
கொடிக்கவிராயன்
கொடியாளன்
கொடிபாலன்
கொல்லத்தரையன், கொங்கரையன், கொல்லமுண்டார்.
கொல்லம் என்பது சேரநட்டின் ஒரு பகுதியாகும். இராசராச சோழன் படை எடுத்து கொல்லத்தை வென்றான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய மரபினர்களுக்கு அளித்த பட்டமே கொல்லத்தரையன், கொல்லமுண்டார் என்பதாகும். இராசமகேந்திரசோழன் கொல்லத்தரையன் என்னும் சிறப்புப் பட்டத்தை பெற்றிருந்தான் என்று கல்வெட்டுகள் உரைக்கிறன. இப் பட்டமுடைய கள்ளர்கள் திருவையாறு திருசென்னம்பூண்டி, தஞ்சை மாவட்டம் உஜ்ஜினி, உடுமலைப்பேட்டை காரத்தொழுவு முதலிய ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்
கொன்னமுண்டான்
கொடும்பன்
கொடும்பையன்
கொடும்பைராயன்
கொடும்பையரையன்
கொடும்பைப்பிரியன்
கொடும்புலியன்
கொடுப்புலியன்
கொடும்பிரியன்
கொத்தப்பராயன்
கோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கோபாலன்
கோனேரிகொண்டான்
கோனேரிப்பிரியன்
கோதண்டப்பிரியன்
கோட்டைசுருட்டி
கோட்டைமீட்டான்
கோழியன், கோழயன்.
அண்டசோழன் மரபில் வந்த மன்னன் வீரவாதித்த சோழன். உறையூரை இராசதானியாகக் கொண்டவன். இவன் திருவுலாப் போகும் போது தான் ஏறியிருந்த யானையை தெய்வத்தன்மை பொருந்திய ஒரு கோழி போர் செய்து வென்ற காரணத்தினால் இவனுக்கு கோழியர்கோன், கோழிவேந்தன், கோழியன் என்ற பெயர்களும், அந்நகருக்கு கோழியூர், கோழிநகர் என்னும் பெயர்களும், அந்நகர திருக்கோயிலுக்கு குக்குடேசரம், முக்கீச்சரம் என்னும் பெயர்களும் வழங்கலாயிற்று. இவன் காலம் முதல் சோழர்களுக்கு கோழியன், கோழியர்கோன், கோழிவேந்தன் என்னும்பெயர்களும் வழ்ங்கின. இவ்வரசன் காலமுதல் சோழர்களின் நாணயங்களில் கோழியின் உருவம் பொரிக்கப்பட்டது.இவன் மரபோர் கோழியன், கோழயன் என்ற பட்டங்களை பெற்றனர்.
கோட்டரையன், கோட்டையாண்டான், கொட்டையாண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கோட்டமன். கோட்டைபட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கோட்டைராயன், கோட்டரையன், கோட்டைப்பிரியன், கோட்டையாண்டான், கோட்டைகொண்டான் எனவும்வழங்கப்பட்டது. கோட்டூர், கோட்டாறு என்னும் தேவார சிவதலங்களையும், கோட்டுக்காடு, கோட்டைப்பத்து, கோட்டுக்கா, கோட்டுச்சேரி, கோட்டாக்குடி என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் கோட்டரையன், கோட்டையாண்டான், கொட்டையாண்டான் என்னும் பட்டங்கள் பெற்றனர்.
ச வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சக்கரநாட்டான், சக்கரன், சக்கரை, சக்கரராயன், சக்கராயன், சக்கரநாடன், சக்கரையப்பநாடாள்வான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சக்கரமன். சக்கரப்பள்ளி என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சக்கரராயன், சக்கரநாடன் எனவும் வழங்கும். சகரப்பேட்டை, சக்கரமங்கலம், சக்கரக்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் சக்கரன், சக்கரை, சக்கரராயன், சக்கராயன், சக்கரநாடன், சக்கரையப்பநாடாள்வான் எனும் பட்டங்களை கொண்டனர்.
சந்திரங்கொண்டான், சந்திரதேவன், சம்பிரதேவன், சந்திரப்பிரியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் சந்திரசோழன். சந்திரப்பாடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சந்திரங்கொண்டான், சந்திரதேவன், சந்திரப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. சந்திரலோக்கைப் பெருந்துறை (செந்தலை) என்னும் சிவதலத்தையும், சந்திரநதி என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் சந்திரங்கொண்டான், சந்திரதேவன், சம்பிரதேவன், சந்திரப்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
சம்பிரதி
சங்கரன்
சங்கராசன்
சங்கரதேவன்
சங்கத்தியன்
சயங்கொண்டான்
சனகராயன்
சமயன், சமயதேவன், சமயாளி, சவுளி, சவுட்டி, சமட்டி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சமயன். சமயபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். சமயனூர், சமயன் குடிகாடு என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் சமயன், சமயதேவன், சமயாளி, சவுளி, சவுட்டி, சமட்டி எனும் பட்டங்களை கொண்டனர்.
சா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சாத்தயன், சாதகன், சாத்தரையன், சாமுத்தரையன், சாமுத்திரியன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சாத்தமன். இவன் பெயர் சாத்தயன், சாத்தரையன் எனவும் வழங்கும். சாத்தமங்கை (சாத்தமங்கலம்) என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். சாத்தனூர், சாத்தூர்,சாத்தங்குடி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் சாத்தயன், சாதகன், சாத்தரையன், சாமுத்தரையன், சாமுத்திரியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
சாணன்
சாணரையன்
சாணை
சாளுக்கியன்
சாளுவன், சாளுவராயன்.
சோழ மரபில் வந்த மன்னன் சாளுவசோழன். சாளுக்கிய வம்சத்தவராகவும் இருத்தல் கூடும். விஜயநகர அரசர்களின் காலத்தில் தென்நாட்டில் அவர்களின் பிரதிநிதியாக திருமலைராயர் சாளுவர் என்பார் இருந்தார் என்று சீரங்கத்தில் கிடைத்த சிலாசானம் குறிப்பிடுகிறது (இலக்கிய வரலாறுபாகம் 2 பக்கம் 369.கா.சு.பிள்ளை) சாளுவநாயக்கன் பட்டினம் சோழநாட்டு துறைமுகங்களுள் ஒன்றாகும். சாளுவன் பேட்டை, சாளுவனாறு என்பன இப்பட்டங்களின் அடிப்படையில் தோன்றியதாகும்.
சி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சித்தாட்சி, சிற்றாட்சி, சிட்டாச்சி.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் சித்தசோழன். சித்தலபாடிஎன்னும்நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சித்தாட்சி எனவும் வழங்கும். சித்தாறு என்னும் சிற்றாற்றையும், சித்தாமூர் (சித்தாம்பூர்) என்னும் விநாயக தலத்தையும், சித்தூர், சித்தாற்றூர், சித்தலூர்,சித்தரகுடி, சித்தகாடு, சித்தபத்து என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் சித்தாட்சி, சிற்றாட்சி, சிட்டாச்சி என்னும் பட்டங்களை கொண்டனர்.
சிந்துராயன்
சிங்களராயன்
சிங்களான்
சிங்களப்பிரியன்
சிங்களப்பிலியன்
சிங்கப்பிலியன்
சிங்களாளி
சிங்காரிக்கன்
சிறுராயன், சிறுநாட்டுராயன், சிறுநாடன், சிறுமாடன், சிறுப்பிரியன், சிலுப்பி, சிலம்பன், சிலுப்பன், செருமாடன், சிலுக்கியன்,
சிறுகிள்ளிசோழன், சிறுகோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சிறுராயன், சிருநாடன், சிறுப்பிரியன் எனவும் வழங்கலாயிற்று. சிறுகுடி, சிற்றேமம் என்னும் தேவார சிவ தலங்களையும், சிற்றம்பலம் என்னும் சிவ தலத்தையும், சிறுமங்கலம்,சிறுபாமணி, சிறுகளத்தூர், சிறுவயல், சிறுவனூர், சிறுவளூர் என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் சிறுராயன், சிறுநாட்டுராயன், சிறுநாடன், சிறுமாடன், சிறுப்பிரியன், சிலுப்பி, சிலம்பன், சிலுப்பன், செருமாடன், சிலுக்கியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
சீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சீனத்தரையன்
சு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சுந்தரராயன்
சுந்தன்
சுன்றையன்
சுக்கிரன்
சூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சூரியன்
சூரக்கோட்டையன், சுரக்குடையன், சுரக்குடியான், சூரக்குடையன், சூரக்கொடையன், சூரப்பிலியன், சூரப்பிரியன், சுரப்பிடுங்கியன், சுரைப்பிடுங்கியான்,
சூரவாதித்தசோழன், சூரக்கோட்டை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியகக் கொண்டவன். இவன் பெயர் சூரக்கோட்டையன், சூரங்கொண்டான், சூரமாண்டான், சூரப்பிரியன், சூரமுடையான், சூரமாளி எனவும் வழங்கும். சூரமங்கலம், சூரக்குடி (சுரக்குடி) சூரனூர், சூரயூர், சூரப்பள்ளம், என்னும் ஊர்களையும், கோளாலி என்னும் சிவ தலத்தையும், சூரனார்கோவில் என்னும் நவக்கிரக தலத்தையும் உருவாக்கி அரசு புரிந்தவன். ஆதிசேடன் மகள் காந்திமதியை மணந்தவன். தளவழிக்குகையி னிற்பொழி பிலத்த்ன்வழியே தனிந்ந்துரகர் த்ங்கண்மனி கொண்டவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. இவன் மரபோர் சூரக்கோட்டையன், சுரக்குடையன், சுரக்குடியான், சூரக்குடையன், சூரக்கொடையன், சூரப்பிலியன், சூரப்பிரியன்,சுரப்பிடுங்கியன், சுரைப்பிடுங்கியான், என்னும் பட்டங்கள் பெற்றன
சூரப்பிரியன்
செ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
செம்மைக்காரன்
செய்ஞலாளி
செம்மைகொண்டான்
செட்டி
செம்பியன், செம்பன், செம்பியரையன், செம்பரையன், செம்படையன், செம்பியத்தரையன், செம்பியமுத்தரையன், செம்பியமுத்தரசு, செம்பியமுத்திரியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த சிபி சக்ரவர்த்தி. செம்பியபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். முதல் ஏழு வள்ளல்களில் ஒருவன். புறாவுக்காக பருந்துக்கு தன் சதையை கொடுத்தவன். கலிங்கத்துப் பரணியிலும், அகநானூறிலும் பாடப் பெற்றவன். செம்பியரையன், செம்பியத்தரையன் எனவும் அழைக்கப் பட்டவன். செம்பியன்பள்ளி (செம்பொன்பள்ளி), செம்பியங்குடி (செம்பன்குடி) என்னும் தேவார சிவதலங்களையும், செம்பியன்மங்கலம், செம்பியங்களர் எனும் ஊர்களையும் உருவாக்கி சம நீதி தர்மத்துடன் ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் செம்பியன், செம்பன், செம்பியரையன், செம்பரையன், செம்படையன், செம்பியத்தரையன், செம்பியமுத்தரையன், செம்பியமுத்தரசு, செம்பியமுத்திரியன்
எனும் பட்டங்களை சுமந்தனர்.
செனவராயன்
சென்னண்டான்
சென்னாடான்
சே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சேய்ஞலாண்டான், சேய்ஞலாளன், சேய்ஞலாளி, சேய்ஞலாட்சி, சேய்ப்பிளன்
சேய்ஞற்கொண்டான் (செம்மைகொண்டான்) சேய்ஞலரையன் (செம்மைக்காரன்) சேய்ஞற்பிரியன் (சேப்பிளன்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சேய்ஞன். சேய்ஞலூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சேய்ஞற்கொண்டான், சேய்ஞலரையன், சேய்ஞற்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. சேயாறு என்ற ஆற்றையும், சேய்குடி, சேயூர், சேய்மங்கலம் என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் செம்மைகொண்டான், செம்மைக்காரன், சேப்பிளன் எனும் பட்டங்களை பெற்றனர்.
சேணன், சேண்டப்பிரியன், சேண்ராயன், செனவராயன், சேணரையன், சன்னவராயன், சனகராயன், சாணரையன், சாணன், சாணையன், சேண்கொண்டான், சேணாடன், சேனக்கொண்டான், சேனைகொண்டான், சேணாண்டான், சேனைநாடன், சேனைநாட்டான், சேண்பிரியன், சேனைகொண்டான், சென்னாடான். சென்னண்டான், சாணூரான்.
நலங்கிள்ளி சேட்சென்னி சோழன், சேண்டாகோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சேண்ராயன், சேணரையன், சேண்கொண்டான்,சேணாண்டான், சேண்பிரியன், சேணாடன் எனவும் வழங்கும். மிக்க வீரமும் கொடையுமுடையவன், நீர்வாவி சூழ்ந்த சோலையில் துயின்ற காரணத்தினால் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளிசேட் சென்னி என்று பெயர் பெற்றவன். இவன் காலமுதல் சோழர்களுக்கு சென்னி என்ற பெயரும், சோழநாட்டிற்கு சென்னிநாடு என்னும் பெயரும் வழங்கலாயிற்று. இச் சோழ மன்னன் கோனாட்டு எறிச்சிலூர் மாடவன் மதுரைக்குமரனார் என்னும் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல் புறநானூற்றில் 61ம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இவன் மரபோர் சேண்ராயன், செனவராயன், சேணரையன், சன்னவராயன், சனகராயன், சாணரையன், சாணன், சாணையன், சேண்கொண்டான், சேனக்கொண்டான், சேனைகொண்டான், சேணாண்டான், சேணாடன், சேனைநாடன், சேனைநாட்டான், சேண்பிரியன், சேனைகொண்டான், சென்னாடான். சென்னண்டான், சாணூரான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
சேந்தராயன், சிந்துராயன்
சேந்தசோழன் அழிசிசோழனின் மகன், உறையூரை இராசதானியாகக் கொண்டவன். அழகிலும், வீரத்திலும்,கொடையிலும் சிறந்து விளங்கியபடியால் உருவப்பேரிளஞ்சேட் சென்னி என்று பெயர் கொண்டவன்.அழுந்தூர் வேளிர்குல மகளை மணந்தவன். கரிகால் பெருவளத்தான் சோழன் இவன் மகனாவான். பாணர், பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர் பெருமக்கள் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப் பாடல்கள் புறநானூற்றில் 4, 261ம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன.இவன் மரபோர் சேந்தராயன், சிந்துராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
சேந்தமுடையான்
சேந்தமடையான்
சேங்கொண்டான்
சேதிராயன்
சேதிரான்
சேதுரான்
சேதிநாடன்
சேதுநாடன்
சேனைத்தலைவன்
சேனைத்தலையன்
சேனாதிபதி
சேனாபதி
சேனாதி
சேனாதிபன்
சொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சொக்கராயன்
சோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சோணையன், சோணாடுகொண்டான், சோணாருண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சோணைமன். சோணாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சோணையன், சோணாடுகொண்டான் எனவும் வழங்கப்பட்டது. இவன் மரபினர் சோணையன், சோணாடுகொண்டான், சோணாருண்டாண் எனும் பட்டங்களை பெற்றனர்.
சோழன், சோழவன், சோழரையன், சோழராசன், சோதிரையன், சோமராசன், சோழநாயகன், சோமநாயக்கன், சோமணநாயக்கன், சோழாட்சி, சோமாசி,
சோழங்கொண்டான், சோழபாண்டியன், சோழகங்கன், சோழங்கன், சோழகங்கதேவன்
சோழங்கதேவன், சோழகங்கநாடன், சோழகங்கநாடான், சோழகனகராசன்
சோழதரையன், சோழதிரியன், சோநாயகன், சோழதேவன், சோமதேவன், சோழகோன், சோழகன், சோழப்பிரியன், சோழநாடன், சோமநாடான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த சக்ரவர்த்தி சுராதிராசசோழன். சோழபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். தன்னுடைய ஆளுகையில் அடங்கிய பூமிக்கு சோழ மண்டலம் என்று பெயரிட்டவன். பிராமணர், வேளாளர், இடையர் போன்ற சில வகுப்பினர்களுக்கு சோழியர் என்ற பட்டத்தையும் வழங்கியவன். தன் மூத்த மகனுக்கு இராசகேசரி என்றும் இளைய மகனுக்கு பரகேசரி எனவும் பெயரிட்டவன். இதன் பின் அரியாசனம் ஏறிய சோழ மன்னர்கள் மாறிமாறி இராசகேசரி, பரகேசரி என்னும் பட்டந்தரித்தனர். (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது) சோழமங்கலம், சோழனூர், சோழன்பேட்டை, சோழன்பட்டி, சோழங்குடி, சோழன் குடிகாடு, சோழாட்சி(சோமாசி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டான். இவன் மரபினர் சோழன், சோழவன், சோழரையன், சோழதரையன்,சோழதிரியன்,சோதிரையன், சோழராசன், சோமராசன், சோநாயகன், சோழாட்சி, சோமாசி, சோழதேவன், சோமதேவன், சோழகோன், சோழகன், சோழப்பிரியன், சோழநாடன், சோமநாடான் என்ற பட்டங்களை பெற்றனர்.
ஞ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஞா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
த வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தலையன், தலைராயன், தனராயன், தலைசைராயன், தனசைராயன்.
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் தலைமன், தலையாலங்காடு, தலைச்சங்காடு, தலைஞாயிறு, தலைக்காடு, தலையூர், தலைக்குடி, தலைச்சேரி, தலையமங்கலம், முதலிகுத்தே போன்ற நகர்களை உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் மேற் கூரிய பட்டங்களை கொண்டனர்.
தளியன்
தளிராயன்
தளியுடையான்
தளியாண்டான்
தளியாளன்
தளியாளி
தளியாட்சி
தளிப்பிரியன்
தளிகொண்டான்
தளிநாடன்
தக்கோலன், தக்கோலாக்கியன், தாக்கலக்கி,
தக்கோலசோழன், தக்கோலம் என்னும் தேவார சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன்.தக்களூர், தகட்டூர் என்னும் தேவார சிவ தலங்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் தக்கோலன், தக்கோலாக்கியன்,தாக்கலக்கி, என்னும் பட்டங்ககளை கொண்டனர்.
தஞ்சைராயன்
தஞ்சிராயன்
தண்டநாயகன்
தண்டத்தலைவன்
தண்டத்தலையன்
தா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தாளியன்
தாளிதியன்
தானைத்தலைவன்
தானைத்தலையன்
தானாதிபதி
தானாபதி
தானாதி
தானாதிபன்
தாக்கலக்கி
தி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
திருப்பூட்சி
தின்னாப்பிரியன்
திண்ணாப்பிரியன்
திராணி
திருக்கட்டியன்
திருக்காட்டியன்
தில்லைராயன், தில்லையாண்டான், தில்லைபிரியன், தில்லையாளி,தில்லைகொண்டான்.
செம்பியன் சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் தில்லைமன். தில்லை (சிதம்பரம்) என்னும் தேவார சிவதல நகரையுண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். தில்லைவிடங்கன், தில்லையாளிநல்லூர், தில்லைவளகம், தில்லையம்பூர் எனும் ஊர்களையும் உண்டாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபோர் தில்லைராயன், தில்லையாண்டான், தில்லைபிரியன், தில்லையாளி,தில்லைகொண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.
து வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
துறையாண்டான், துறவாண்டான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் துறைமன். துறைக்கோட்டை, துறையாண்டான்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் துறையாண்டான் எனவும் வழங்கும். துறையூர் என்ற தேவார சிவதலத்தையும், துறைப்பூண்டி எனும் சிவதலத்தையும் துறைமங்கலம், துறைக்குடி, துறைப்பட்டி, துறைக்குரிச்சி (துவரைக்குரிச்சி) துறையாண்டான்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் துறையாண்டான், துறவாண்டான் என்ற பட்டங்களை பெற்றனர்.
துண்டராயன், துண்டுராயன், துண்டயன், தொண்டயன், துண்டன், தொண்டன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் துண்டீரன். துண்டுராயன்பாடி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் துண்டராயன், துண்டயன், துண்டன் எனவும் வழங்கும். துண்டுராயன்பட்டு, துண்டுராயன்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் துண்டராயன், துண்டுராயன், துண்டயன், தொண்டயன், துண்டன், தொண்டன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
தெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தென்னவராயன், தென்னரையன், தென்னன், தென்கொண்டன், தெங்கொண்டான், தெங்கண்டான், தெங்கிண்டான், தென்னப்பிரியன், தின்னாப்பிரியன், திண்ணாப்பிரியன், தென்னன்
செம்பியன் மரபில் வந்த செங்கண் சோழன், சோழ மன்னன் சுபதேவனுக்கும் கமலவதி என்பாளுக்கும் பிறந்தவன். கமலவதி பிரசவ வேதனை கண்டபோது சோதிட வல்லுனர்கள் இன்னும் ஒரு நாளிகை கழித்து குழந்தை பிறக்குமானால் மூவுலகத்தையும் ஆளக்கூடிய மன்னனாவான் என்று கூறிய படியால் தன்னை கால் மேலாகவும் தலை கீழாகவும் இருக்கும்படி கட்டி ஒரு நாளிகை கடந்தபினர் கட்டை அவிழ்த்து விடும்படிகூறி குழந்தையை மாசி மாதம் சதய நட்சத்திரத்தில் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்த போது கண்கள் சிவந்து பிறந்தபடியால் செங்கணானென்று பெயரும் இட்டு தாய் மடிந்தாள். இக்குழ்ந்தையே பெயர் பெற்ற கோச்செங்கணாவான்.இவன் சங்ககால சோழ அரசர்களில் ஒருவன். கிள்ளி வளவனுக்கு பின்னர் ஆண்ட மன்னர்களில் மக்கள் மனதில் அழியா இடம்பெற்றவன்.
தென்னூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். கடைச்சங்கால இறுதியில் வாழ்ந்தவன், அறுபத்துமூன்று நாயன் மார்களில் ஒருவனாவான். ஈசனுக்கு 70 மாடக்கோயில்களை காவிரிகரை ஓரத்தில் கட்டி அரசாண்டதாக திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.
இவன் கட்டிய ஆனைபுகாக்(மாட) கோயில்களிள் ஆனைக்கா, பெண்ணாகடம், சாய்க்காடு,மண்ணிப்படிக்கரை, செம்பிருப்பு, செம்பொன்பள்ளி, வடதலைச்சங்காடு, தெந்தலைச்சங்காடு, ஆக்கூர், பெருமுளை, தேரழுந்தூர், வைகல், நரையூர் (மணிமாடம்) துற்காட்சி, நாலூர், ஆவூர், பசுபதிமங்கை, மாத்தூர், குடவயில், இங்கண், மருகல்,அம்பர், நன்னிலம், பாம்புரம், மாதூர், கீழ்வேளூர், தேவூர், சிக்கல், களப்பாள், இராசசேரிபுரம், கீழைவழி, தண்டலை, நீணேறி, வலிவலம், கீழையிலரன், பழையாறுவடதளி, பழையாறுதென்றளி, பழையாறுகீழ்த்தளி, பெருவேளூர், நாகைமலையீச்சரம், இராமனதீச்சரம், பெரும்கடம்பனூர், சேய்ஞலூர், நாகை மேலைக்காயரோகணம், வீழிமிழலை, பனையூர், என்னும் 47 கோயில்கள் புலப்பட்டன. மற்ற 23 கோயில்கள் புலப்படவில்லை.
இவனுக்கு நல்லடிக்கோன் என்ற மகனும் இருந்தான். புறநானூறு, களவழிநாற்பது என்ற சங்கனூல்களிலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், திருமங்கை ஆழ்வார் ஆகியோறாலும் பாடப்பற்றவன் செங்கணான்
சேரமன்னன் கணைக்கால் இருபொறையைச் சிறைபிடித்துக் குடவாயில் கோட்டத்து சிறையில் வைத்தான், பின்பு பொய்கையார் என்னும் புலவர் பாடிய களவழிநாற்பது படலைக் கேட்டு சேரமன்னன் சிறை நீக்கி அரசுரிமை அளித்தான்
கோச்செங்கனானுக்கு தென்னவராயன், தென்னரையன்,தென்கொண்டான், தென்னாண்டான்,தென்னப்பிரியன், தென்னுடையான், தென்னாளி, என்ற பெயர்களும் உண்டு. இவன் தென்னவராய நல்லூர், தென்னவநாடு, தென்னங்குடி, தென்னம்புலம், தென்குடி, தென்பரை, தென்பாதி, தென்னங்குளம், தென்னவராயன் பேட்டை என்னும் ஊர்களை உருவாக்கி ஆட்சிபுரிந்தவன்
இவன் பெயர் தென்னவராயன், தென்னரையன், தென்கொண்டான், தென்னாண்டான், தென்னப்பிரியன், தென்னுடையன், தென்னாளி, எனவும் வழங்கலாயிற்று.
இவன் மரபினர் தென்னவராயன்,தென்கொண்டான், தென்னரையன், தென்னன், தென்னப்பிரியன், தென்னுடையான், தென்னாளி, தெங்கிண்டான், தின்னாப்பிரியன், தெங்கண்டான், என்னும் பட்டங்களை கொண்டனர்.
தெத்துவெண்டான்
தெலிங்கராயன், தெலிங்கதேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் தெலிங்கமன். தெலிங்காபுரி என்னும்நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் தெலிங்கராயன், தெலிங்கதேவன் என்வும் வழங்கழாயிற்று. இவன் மரபோர் தெலிங்கராயன், தெலிங்கதேவன் எனும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டங்கள் இராசராச சோழனுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இராசராசனின் தெலுங்க வெற்றியை சிறப்பிக்கும் வகையில் தெலுங்க குலகாலன் என்ற பட்டமும் வழங்கிவந்தது. இப்பட்டமுடையோர் ஒரத்தநாடு,தெலுங்கன்குடிகாடு முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.
தே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தேவராயன், தேசிராயன், தேவாண்டான், தேவண்டன், தேவன்
மனுசக்ரவர்தியின் மகனாகிய இக்குவாகு தேவூரெனும் (தேவாரம் பெற்ற சிவம் நகரத்தை உருவாக்கி அரசு புரிந்தான். இதன் மூலம் இவனை தேவராயன், தேவாண்டான், தேவன் என்றும் அழைக்கப்பட்டான். இவன் உருவாக்கிய ஊர்கள் தேவன்குடி, தேவனூர், தேமங்கலம், தேவராயன் பேட்டை, தேவராயநல்லூர், தேவதானமென்பனவாகும். இக்குவாகு மரபு வழி வந்தோர் மேற்கூரிய
தேவராயன், தேசிராயன், தேவாண்டான், தேவண்டன், தேவன் என்ற
பட்டங்களை கொண்டனர்.
தேவாளன்
தேவாளி
தேவாட்சி
தேவப்பிரியன்
தேவுடையன்
தேவுகொண்டான்
தொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தொண்டைமான், தொண்டையன், தொண்டைப்பிரியன், தொண்டாப்பிரியன், தொண்டமார், தொண்டாயன், தொண்டைமான் கிளையர், தொண்டையன், தொண்டன்
கரிகால் சோழன் வழி வந்தவன் கிள்ளிவளவன். இவனுக்கு நெடுமுடிகிள்ளி, மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி என்ற பெயர்களும் உண்டு. கிள்ளிவளவன் த்ன் இளமைக்காலத்தில் கடல் கடந்து நாகர்களின் நாடாகிய நாகர் நாட்டை அடைந்தான். நாகர் நாட்டு மன்னன் வளைவணன் மகளாகிய பீலிவளை என்னும் இளவரசி நாக கன்னிகையை மணம் புரிந்தான். நாகர் மகளுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் பிறந்த இளம்குமரன் தொண்டை கொடியை அடையாளமாக அணிந்து கடலில் மிதந்து சோழநாட்டின் கிழக்கு கரையை அடைகிறான். சோழ ராஜ புத்திரனை கடலின் திரை (அலைகள்) கொண்டு வந்தமையால் திரையன் என்று பெயரிடப்படுகிறான். மேலும் தொண்டைக் கொடியை அடையாளமாக அணிந்து வந்தமையால் தொண்டைமான் இளந்திரையன் என்று அழைக்கப்பட்டான். சோழ இளவரசனாக மகுடம் சூடியபின்னர் சோழநாடு இரண்டாகப்பிரிக்கப் பட்டு கிழக்கே கடலும்,மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கடமும் தெற்கே பெண்ணையாற்றையும் எல்லைகளாக கொண்டு தொண்டை மண்டலம் உருவாக்கப்பட்டு காஞ்சிமாநகரை தலைநகராக கொண்டு தொண்டைமான் இளந்திரையன் அரசுபுரிந்தான். சிறந்த வீரமும் கொடைநலமும் உடையவன். கவி பாடுவதிலும் வல்லவன் இளந்திரையம் எனும் நூலையும் இயற்றியுள்ளான். இவன் பாடிய பாடல்கள் பல புறநானூற்றிலும், நற்றிணையிலும் கானப்படுகின்றன. சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படை இவனைப் பற்றி புலவர் கடிலூர் உருத்திரங் கண்ணனார் பாடியதாகும். குறும்பர்களின் கொட்டத்தை அடக்கி, காடுகளை வெட்டி, நிலத்தை திருத்தி, வளம் பெருக்கி தொண்டை நாட்டை வலிமைமிக்க நாடாக்கினான். இவன் ஆட்சியில் தொண்டைநாடு சான்றோருடைத்து என்று ஔவையால் புகழப்பட்டது. இளந்திரையன் நாகநாட்டில் இருந்து சோழநாட்டு கிழக்குக்கரையில் ஒதுங்கிய இடமே நாகர்பட்டினம் என்றழைக்கப்பட்டு இந்நாளில் நாகப்படினம் என்றழைக்கப்படுகிறது. தொண்டைமான் இளந்திரையன் பின் நாளில் ஆத்தொண்டை சக்கரவர்த்தி என்றும் அழைக்கப்பட்டான். இவன் வழி வந்தவர்களே தொண்டைமான், தொண்டையன், தொண்டைப்பிரியன், தொண்டாப்பிரியன், தொண்டமார், தொண்டாயன், தொண்டைமான் கிளையர், தொண்டையன், தொண்டன் என்னும் பட்டங்களை கொண்ட கள்ளர் குலத்தவராவர். இப்பட்டம் கி.பி முதல் நூற்றாண்டில் இருந்து வழக்கத்தில் வருவதும் ஒரு வரலாராகும். காஞ்சி மாநகரம் (இன்றைய காஞ்சிப்புரம்) 181 பெரும் திருக்கோயில்களை கொண்டு மாமதிற்கச்சி எனவும் கோயில் மலிந்த காஞ்சி எனவும் அழைக்கப்ப்டுவதும் வரலாராகும்.
தோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ந வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நன்னியன், நயினியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நன்னிமன். நன்னிபள்ளி என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் நன்னியன் என்றும் அழைக்கப்பட்டான். நன்னிலம் என்னும் தேவார சிவதலத்தையும், நன்னிமங்கலம், நன்னிகுடி, நன்னி (நயினான்)என்னும் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் நன்னியன், நயினியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
நள்ளிப்பிரியன், நல்லிப்பிரியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நல்லி. நள்ளிக்கோட்டை (நல்லிக்கோட்டை) என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். நள்ளாறு என்னும் தேவார சிவதலத்தையும், நள்ளி என்னும் ஊரையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபு வம்சத்தினர் நள்ளிப்பிரியன், நல்லிப்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
நரசிங்கன், நரங்கியன், நரசிங்கப்பிரியன், நரங்கிப்பிலியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நரசிங்கன். நரசிங்கபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். நரசிங்கமங்கலம், நரசிங்கம்பேட்டை என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் நரசிங்கன், நரங்கியன், நரசிங்கப்பிரியன், நரங்கிப்பிலியன் எனும் பட்டங்களை சுமந்தனர்.
நந்தியன், நந்தியர், நந்தன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நந்தியன். நந்திபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். நந்திமாகுடி, நந்தனூர், நந்திமங்கலம், நந்திவனம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் நந்தியன், நந்தன் என்ற பட்டங்களை பெற்றனர்.இவர்கள் பல்லவ குலத்தினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் அறியப்படுகிறது. பல்லவரின் இலச்சினை நந்தியாகும், பல்லவர் கொடிகளிலும், காசுகளிலும் நந்தியின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. பல்லவ அரசர்களும் முதலாம் நந்திவர்மன், இரண்டாம் நந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் என்ற பெயர்களில அழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இப்பட்டமுடையார் சோழர் மற்றும் பல்லவர் மரபினரென்றும் அறிய முடிகிறது. இப்பட்டமுடையோர் பொன்னாப்பூர், தும்பத்திக்கோட்டை, தென்னமநாடு, காட்டுக்குறிச்சி, தலையாமங்கலம், பட்டவெளி, கண்டகிரயம், நல்லிச்சேரி முதலிய ஊர்களில் மிகுதியாக வாழுகின்றனர்.
நா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நாகன்
நாயக்கன்
நாகராயன்
நாகுடையான்
நாகாண்டான்
நாகாளன்
நாக்காடி, நாவிளங்கி, நாகாளி.
மாந்தாதா மரபில் வந்த மன்னன் நாகமன், நாகபட்டினம் என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நாகாளி என்றும் வழங்கப்பட்டான். சிவராத்திரி முதல் யாமத்தில் திருக்குடந்தையிலும், இரண்டாம் யாமத்தில் திருநாகேச்சரத்திலும், மூன்றாம் யாமத்தில் திருப்பாப்புரத்திலும், நான்காம் யாமத்தில் திருநாகூரிலும் திருக்கோயிலமைத்து சிவலிங்கபூசை செய்த பெருமை படைத்தவன். நாகேச்சுரம், நாகன்பாடி, நாகன்குடி, நாகலூர், நாகலாபுரம், நாகமங்கலம், நாகபட்டினம், நாகளூர், நாகன்பேட்டை என்ற நகரங்களையும் ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
நாகாட்சி
நாகப்பிரியன்
நாகங்கொண்டான்
நாகநாடன்
நாகதேவன்
நாணசேவன், நாணசிவன்,ஞானசெவன்,ஞானியர், நானசேவர்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நாணசேவன். நாணலூர், நாணமங்கலம் (நாரணமங்கலம்) முதலிய ஊர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் நாணசேவன், நாணசிவன்,ஞானசெவன்,ஞானியர், நானசேவர் என்ற பட்டங்களையும் பெற்றனர்.
நார்த்தேவன், நார்த்தவான், நாரத்ேத்வன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நார்த்தேவன். நாரையூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நார்த்தேவன்குடி (நார்த்தாங்குடி) நார்த்தேவன்மங்கலம் (நாரமங்கலம்) என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் நார்த்தேவன், நார்த்தவான் எனும் பட்டங்களை கொண்டனர்.
நாடன்
நாடான்
நாடாள்வான்
நாட்டரையன்
நாட்டரசன்
நாட்டான்
நீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நிலங்கொண்டான், நெறிமுண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நீலமன். நீலப்பாடி நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நீலப்பிரியன், நீலங்கொண்டான் எனவும் அழைக்கப்பட்டவன். நீலக்குடி என்னும் தேவார சிவதலத்தையும், நீலவெளி என்னும் சிவதலத்தையும், நீலநல்லூர் (நீலத்தநல்லூர்) நீலமங்கலம் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் நிலங்கொண்டான், நெறிமுண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.
நெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நெல்லியன், நெல்லிராயன், நெல்லியுடையான், நெல்லியாண்டான், நெல்லியாளன்,
நெல்லியாளி, நெல்லியாட்சி, நெல்லிப்பிரியன், நெல்லிகொண்டான், நெல்லிதேவன்
நல்லிப்பிரியன்.
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் நெல்லிமன். நெல்லிக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.நெல்மலி, நெல்லூர், நெல்லி, நெல்லிச்சேரி, மற்றும் தேவாரத் தலங்கள் நெல்வாயில் (சிவபுரி) நெல்வாயிலாத்துறை, நெல்வெண்ணெய், நெல்லிக்கா மற்றும் மேலநெல்வேலி (மீனவல்லி) என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் நெல்லிப்பிரியன், நல்லிப்பிரியன். எனும் பட்டங்களை பெற்றனர்.
நெடுவாண்டான், நெடுவண்டான், நெடுங்கொண்டான், நெறிமுண்டான், நெடுவாளி, நெடுங்காளி, நெடுந்தரையன், நெடுத்தார், நெடுமுண்டான்
நெடுங்கிள்ளிசோழன், நெடுவாக்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் நெடுவாண்டான், நெடுங்கொண்டான், நெடும்பிரியன், நெடுவாளி, நெடுந்தரையன் என்வும் வழங்கும். நெடுங்களம், நெடுவாயில் என்னும் தேவார சிவ தலங்களையும், நெடுங்காடு, நெடுங்குளம் என்னும் சிவ தலங்களையும், நெடுவூர், நெடுங்குடி, நெடுமங்கலம், நெடும்புலம், நெடுங்கரை, நெடுவயல், நெடும்பட்டி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் நெடுவாண்டான், நெடுவண்டான், நெடுங்கொண்டான், நெறிமுண்டான், நெடுவாளி, நெடுங்காளி, நெடுந்தரையன், நெடுத்தார் என்னும் பட்டங்களை பெற்றனர்.இப் பட்டங்கள் கொண்ட கள்ளர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நெடுவாக்கோட்டையில் பெருமளவில் உள்ளார்கள்.
ப வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பத்தாளன், பத்தாட்சி, பெத்தாச்சி, பத்தாண்டான், பத்தாளி, பத்துடையான், பத்துகொண்டான்.
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் பத்தாளன். பத்தாளன்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பத்தூரென்னும் தேவார சிவதலத்தையும் பத்தமங்கலம், பத்தகுடி, பத்தாளன்பட்டி என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் பத்தாளன், பத்தாட்சி, பெத்தாச்சி பத்தாண்டான், பத்தாளி, பத்துடையான், பத்துகொண்டான்.
எனும் பட்டங்களை பெற்றனர்.
பனையன், பன்னையன், பனைகொண்டான், பன்னிகொண்டான், பன்னைராயன்,
பண்ணிகொண்டான், பன்றிகொண்டான், பண்ணிமுண்டான், பணிகொண்டான், பணிபூண்டான், பனையுடையான், பனையாண்டான், பனையாளன், பனையாளி,
பனையாட்சி, பனைநாடன், பனையதேவன், பனைப்பிரியன், தாளியன், தாளிதியன்,
முசுகுந்த சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பனையமன், பனையக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் தாளியன், பனை கொண்டான் என்றும் வழங்கப்பட்டான். பனந்தாள், பனங்காடு, பனங்காட்டூர், பனையூர் என்னும் சிவ தலங்களையும், பனையப்பட்டி, பனங்காடி, பனம்பாக்கம், பனங்குளம், பனமங்கலம்,பனம்பட்டி என்ற ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
பருதியன், பருதிராயன், பருதியுடையான், பருதியாண்டான், பருதியாளன், பருதியாளி
பருதியாட்சி, பருதிப்பிரியன், பருதிகொண்டான், பருத்திகொண்டான், பருதிநாடன்
பருதிதேவர்,
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் பருதிமன், பருதி(பருத்தி) கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பருதிகொண்டான், பருதியாண்டான், பருதிப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். பருதீச்சரம் (பருதியப்பர் கோவில்),மிகைச்சூர் எனும் சிவ தலங்களையும், பருத்திக்கோட்டை, பருத்திகுடி, பருத்தியூர், பருத்திச்சேரி, பருத்திமங்கலம், பருத்திப்பள்ளம் என்னும் ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூறிய பட்டங்களை பெற்றனர்.
பழையாற்றரையன், பழைசையுடையன், பழைசையாண்டான், பழைசையாளன், பழைசையாளி, பழைசையாட்சி, பழைசைப்பிரியன், பழைசைகொண்டான், பழைசைநாடன், பழையாறுகொண்டான், பழையாற்றான், பழந்தான், மாம்பழத்தான், பழங்கொண்டான், பழங்கண்டான், பழையாறுகொண்டான், பழையாற்றான், பழந்தான், மாம்பழத்தான், பழங்கொண்டான், பழங்கண்டான், பழையாற்றரையன்.
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் பழையன், பழையாறு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பழையாறு கொண்டான், பழையாற்றரையன் என்றும் இவன் அழைக்கப்பட்டான். பழையாற்றுவடதளி, பழையாற்றுத்தென்றளி, பழையாற்றுமேற்றழி, பழையாற்றுக்கீழ்த்தளி, பழையங்குடி, பழனம், பழையபுரம், பழையவலம், பழையாறு, பழையனூர், பழமங்கலம், பழங்களத்தூர், பழவனக்குடி எனும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய பட்டங்களை கொண்டனர்.
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் பழையன், பழையாறு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பழையாறு கொண்டான், பழையாற்றரையன் என்றும் இவன் அழைக்கப்பட்டான். பழையாற்றுவடதளி, பழையாற்றுத்தென்றளி, பழையாற்றுமேற்றழி, பழையாற்றுக்கீழ்த்தளி, பழையங்குடி, பழனம், பழையபுரம், பழையவலம், பழையாறு, பழையனூர், பழமங்கலம், பழங்களத்தூர், பழவனக்குடி எனும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய பட்டங்களை கொண்டனர்.
பழங்கொண்டான்
பழனங்கொண்டான்
பட்டுராயன், பவட்டுரான், பட்டுகொண்டான், பட்டுப்பிரியன், பட்டாட்சி, பட்டாளி, பட்டாளன், பட்டாண்டான், பட்டுடையன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பட்டிமன். பட்டுக்கோட்டை எனும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பட்டீச்சரம் என்னும் தேவார சிவதலத்தையும் பட்டம், பட்டவெளி, பட்டுராயன்பட்டி, பவட்டுரான்பட்டி, பட்டிமங்கலம் போன்ற நகரங்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். பட்டுகொண்டான், பட்டாண்டான், பட்டுராயன், பட்டாளி, பட்டுப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். இவன் வழி வந்தவர்கள் பட்டுராயன், பவட்டுரான் என்ற பட்டங்களை பெற்றனர்.
பசுபதி, பசும்படி, பசும்பிடி.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் பசுபோகசோழன். ஆவூர் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பசுபதி என்றும் வழங்கலாயிற்று. ஆவடுதுறை, ஆப்பாடி, பசுபதிமங்கை (பசுபதிகோயில்) என்னுமூர்களையும், பசுபோக ஆறுஎன்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசு புரிந்தான். இவன் மரபினர் பசுபதி, பசும்படி, பசும்பிடி என்னும் பட்டங்களை கொண்டனர்.
பரங்கிலிராயன், பரங்கிராயன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பரங்கிமன். பரகலக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பரங்கிராயன் என்வும் வழங்கலாயிற்று. பரங்கிமலை, பரங்கிப்பேட்டை, பரங்கிவெட்டிகாடு, பரம்பைக்குடி, பரமந்தூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பரங்கிராயன் எனும் பட்டம் கொண்டனர்.
பயற்றுராயன், பதுங்கரான், பதுங்கிரான், பதுங்கியான், பதங்கன், பைதுங்கன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பயற்றமன். பயிற்றூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பயற்றங்குடி, பயற்றஞ்சேரி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பயற்றுராயன், பதுங்கரான், பதுங்கிரான், பதுங்கியான், பதங்கன், பைதுங்கன் எனும்
பட்டங்களை கொண்டனர்.
பஞ்சநதரையன், பஞ்சரையன், காவிரிவெட்டி, காவெட்டி
காங்கமசோழ சக்ரவர்த்தி மரபில் வந்த பஞ்சநதிசோழ சக்ரவர்த்தி. பஞ்சநதிக்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். காவிரி, கபிலை,பவானி, நொய்யல்,ஆன்பொருனை என்னும் ஐந்து ஆறுகளையும் ஒன்று சேர்த்து புகார் பட்டினத்தில் கடலிற் சேர்த்து பொன்னி என்று பெயரிட்டவன் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்) இவன் பெயர் காவிரிச்சோழன், காவிரிகண்டசோழன், காவிரி வெட்டியசோழன், பஞ்சநதரையன், பஞ்சநதிகொண்டான், பஞ்சநதியாண்டான், பஞ்சநதிபிரியன், பஞ்சநதியாளி எனவும் வழங்கிற்று. இவன் காலமுதல் சோழநாடு காவிரி நாடு, பொன்னிநாடு, புனனாடு என்னும் பெயர்களும், காவிரியின் வடபுறமுள்ள சோழ நாடு வடகரைநாடு என்றும் தென் புறமுள்ள சோழநாடு தென் கரைநாடு என்றும் பெயர் பெற்றது. சோழர்களுக்கு காவிரிநாடன், பொன்னிநாடன், பொன்னித்துறைவன், புனனாடன் என்னும்பெயர்களும் வழங்கழாயிற்று. ஐயாறு(பஞ்சநதீச்சரம்) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தையும், பஞ்சநதிக்குளம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசுபுரிந்தான்.இவன் மரபோருக்கு பஞ்சநதரையன், பஞ்சரையன், காவிரிவெட்டி, காவெட்டி என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டது.
பம்பாளி, பாம்பாளி, வம்பாளி,
பெரும்பற்றசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி பாம்பசோழன். பாம்புரம் என்ற தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாம்பு கொண்டான், பாம்பாண்டான், பாம்புடையன், பாம்புப்பிரியன், பாம்பாளி எனவும் வழங்கப்பட்டது. சோழ நாட்டிற்கும் சிங்களதீவுக்கும் கப்பல் வணிகம் நடைபெரும் பொருட்டு பாம்பன் கால்வாய் அமைத்து வங்காளக் குடாக்கடலையும் இனைத்து அதன் கரையில் பாம்பன் என்னும் நகரத்தையும் உண்டு பன்னியவன் இவன். புணரியொன்றிடை யொன்றுபுக விட்டவவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. பாம்புணியாறு என்னும் பேராற்றையும், பாம்பாறு என்னும் காட்டாறையும், பாம்புணி, பாம்பணி என்னும் தேவார சிவ தலங்களையும், பாம்பூர் முதலிய ஊர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபோர் பாம்பாளி, பம்பாளி, வம்பாளி என்ற பட்டங்களை பெற்றனர்.
பல்லவர், பல்லவராயர், பல்லவரையர், பல்லவாண்டார், பல்லவவாண்டார். பல்லமடையார்.
பல்லவ சக்ரவர்திகளின் மரபினர். பல்லவர் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 9ஆம் நூற்றாண்டு வரையில் காஞ்சியை தலைநகரமாக கொண்டு தமிழகத்தை அரசாண்டவர்கள். இவர்களின் பூர்வீகம் இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவ தீவு (காரைத்தீவு) என்றும், மணி பல்லவமுடையார் என்ற பட்டம் திரிந்து பல்லமடையார் என்று ஆகி பின்பு பல்லவர் என்று வழங்கலாயிற்று என்று கூறுவதுண்டு. புகழ் பெற்ற மாமல்லபுரம் (மகாபலிபுரம்) சிற்பங்களையும், சித்தன்னவாசல் ஓவியங்களையும் உருவாக்கியவர்கள் பல்லவர்களே. பல்லவராயன் என்ற பட்டமுடைய குறுநில மன்னர்களும் அரசியலதிகாரிகளும் பிற்கால சோழப் பேரரசில் பெரும்புகளோடு விளங்கியுள்ளனர். ஈராயிரவன் பல்லவரையன் ஆகிய மும்முடிச்சோழபோசான், இவன் அரசூரில் வாழ்ந்தவன், இராசராச சோழனின் பெருந்தரத்து அதிகாரிகளிள் ஒருவன். இராசராசனுக்கு திருமந்திர ஓலை நாயகமாகவும் இருந்துள்ளான். இராஜேந்திர சோழன் காலத்திலும் பெரும் பதவிகளை வகித்துள்ளான். தண்டநாயகன் வெண்காடன் சங்கரனாகிய இராசாதிராசப் பல்லவராயன், இவன் உத்தம சோழ நல்லூரைச் சேர்ந்தவன். இராசாதிராசனின் படைத்தலைவன். கருணாகர சுந்தரத் தோளுடையயான் ஆகிய வளவன் பல்லவதரையன், இவன் விக்கிரம சோழனால் வளவன் பல்லவராயன் என்ற பட்டம் பெற்ற அதிகாரியாவான். பல்லவராயர்களில் கோனேரிப் பல்லவராயன், மஞ்சோலை பல்லவராயன், அச்சுத்ப்ப பல்லவராயன், இளையபெருமாள் பல்லவராயன், ஆவுடையப்ப பல்லவராயன், கந்தப்பப் பல்லவராயன், மல்லப்ப பல்லவராயன், சிவந்தெழுந்த பல்லவராயன் என்ற கிளைகளும் காணப்படுகின்றன. பல்லவராயர்கள் புதுக்கோட்டை பிலாவிடுதி, மருதன் கோவில் விடுதி, காயம்பட்டி (திருமயம்) தஞ்சாவூர் மாவட்டம் சின்ன பொன்னாப்பூர், கண்ணுகுடி, தென்னமநாடு, மூவாநல்லூர், செயங்கொண்டசோழபுரம், ரெங்கநாதபுரம் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர். பல்லவாண்டான் என்னும் பட்டமுடைய தலைவர்கள் இடைக்கால சோழர் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர். பல்லவர் என்னும் பட்டங்களின் ஒற்றுமை கண்டு இவர்கள் பல்லவர்களின் வழித் தோன்றல்கள் எனக்கொள்ள முடிகிறது.
படைத்தலைவன்
படைத்தலையன்
படையாட்சி
படையெழுச்சி
பருங்கைராயன்
பா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பார்புரட்டியார், பாப்பரையன், பாப்படையன், பாப்பிரியன், பாப்புவெட்டி, பாப்புரெட்டி.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பாப்பனசோழன். பாப்புநகரம் என்ற நகரத்தை உருவாக்கி தெற்குக்கோட்டை, வடக்குக்கோட்டை என்று இரு பகுதிகளாக பிரித்து இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பார்புரட்டியான், பாப்பரையன், பாப்புடையன், பாப்பிரியன், பாப்புவெட்டி எனவும் வழங்கும். பாப்புமங்கலம், பாப்பனசேரி, பாப்பாகோயில், பாப்பாகுடி, பாப்பூர், பாப்பரையன்பட்டி, பாப்புடையன்பட்டி, என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் பாப்பரையன், பாப்படையன், பாப்பிரியன், பாப்புவெட்டி, பாப்புரெட்டி என்னும் பட்டங்களை பெற்றனர். வேலூருக்கு அருகில் உள்ள பாப்புரெட்டிப்பட்டி, தருமபுரிக்கு அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊர்கள் இப்பட்டங்களின் அடியாகத் தோன்றியவைகளாகும்.இவர்களின் பட்டங்கள் பார்புரட்டியார் என்ற பட்டபெயரில் இருந்து திரிந்து பல்வேறு திரிபு பெயர்களை கொண்டுள்ளது. பார்புரட்டியார் என்றால் தம் வீரத்தால் பகைவரை தலைகீழாக புரட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்று பொருள் படும். இப்பட்டம் உடையவர்கள் திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, இளங்காடு, வானரங்குடி, திருச்சி, தஞ்சாவூர் முதலிய ஊர்களில் வாழுகின்றனர்.
பாச்சிலாளி, பிச்சாடி, பிச்சாளி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பாச்சில்மன். பாச்சிற்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். பாச்சிலாச்சிராமம், பாசூர் (பாச்சூர்) என்னும் தேவார சிவதலங்களையும்உண்டு பண்ணி அரசாண்டவன். இவன் பாச்சிலாண்டான், பாச்சிற்பிரியன், பாச்சிலாளி, பிச்சாளி என்னும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் பாச்சிலாளி, பிச்சாடி எனும் பட்டங்களை கொண்டனர்.
பாண்டராயன். பாண்டுராயன். பாண்டுரார்
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் பாண்டுசோழன். பஞ்சநதிகோட்டயை இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாண்டராயன் என்று வழங்கழாயிற்று. பாண்டவாய் என்னும் ஆற்றையும், பாண்டூர் என்னும் சிவதலத்தையும், பாண்டுகுடி, பாண்டுமங்கலம் (பாண்டமங்கலம்) பாண்டராயன்பட்டி என்னும் ஊர்களையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் பாண்டுராயன், பாண்டாராயன், பாண்டுரார் என்னும் பட்டங்களில் அழைக்கப்படுகிறனர்.
பாலையன்
பாலியன்
பாலையுடையான்
பாலுடையன்
பாலையன், பாலியன், பாலைராயன், பால்ராயன்,பாலையாண்டான், பாலாண்டான், பாலையுடையன், பாலுடையான், பாவுடையான், பாலைநாடன், பானாடன், பாலைநாட்டான், பானாட்டான். பாலையுடையான், பாலுடையன்
பாலையசோழன், பாலையக்கோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாலையன், பாலைராயன், பாலையாண்டான், பாலைகொண்டான், பலையுடையவன், பாலைப்பிரியன், பாலைநாடன், பாலைநாட்டான், பாலையாளி என்வும் வழங்கலாயிற்று. பழைய பாலாறு, பாலாறு என்னும் பேராறுகளையும், பாலைத்துறை, பாற்றுறை (பால்துறை) எனும் தேவார சிவ தலங்களையும், பாலையூர்,பாலைக்குடி, பாலைக்குரிச்சி, பாலைக்காடு, பாலைப்பட்டி, பாலைப்பட்டு, பாலாகுடி, பாலைவாய்,பாலாண்டான்பட்டி என்னும் ஊர்கலை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் பாலையன், பாலியன், பாலைராயன், பால்ராயன்,பாலையாண்டான், பாலாண்டான், பாலையுடையன், பாலுடையான், பாவுடையான், பாலைநாடன், பானாடன், பாலைநாட்டான், பானாட்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
பாண்டியன், பாண்டியராயன்
சோழ மன்னர்களுக்கும் பாண்டியமன்னர்களுக்கும் சோழப் பேரரசு தொடக்கம் முதல் இறுதி வரை பகைமை இருந்து கொண்டே இருந்தது. பாண்டியர்களோடு போரிடாத சோழ மன்னர்களே இல்லை என்ற அளவிற்கு அடிக்கடி போர் நடந்துள்ளது. இராசராச சோழன் தனது ஆட்சியில் படையெடுத்து பாண்டிய மன்னன் அமரபுயங்கனை வென்று பாண்டிய நாட்டை தன் ஆட்சிக்குட்படுத்தி தனக்கு பாண்டியன் என்ற பட்ட்த்தையும் சூட்டிக்கொண்டான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய மரபினர்களுக்கு அளித்த பட்டமே பாண்டியன்,பாண்டியராயன் என்பதாகும். இப் பட்டங்கள் பாண்டிய நாட்டு வெற்றி தொடர்புடையன. இப் பட்டங்களை உடைய கள்ளர்கள் தஞ்சையிலும், சித்தமல்லி, புதுக்கோட்டை வடவாளம், இராயப்பட்டி, கும்பகுடி, அவ்வையார்பட்டி, திருச்சி அல்லூர் முதலிய ஊர்களிலும் உள்ளனர்.
பி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பிசலண்டான்
பிசலுண்டான்
பிச்சயன்
பிச்சாளி
பிரமன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பிரமன். பிரமபுரம் (சீகாழி) என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். பிரம்பில் என்னும் தேவார சிவதல நகரத்தையும், பிரம்பூர் என்னும் சுப்ரமணிய தலத்தையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பிரமன் எனும் பட்டம் கொண்டனர்.
பிலிமுண்டான்
பின்னுண்டான்
பு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான்.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் புத்திகழிச்சசோழன்( அறிவு மிகுந்தசோழன்) புத்திகழிச்சான்கோட்டை என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் புத்திகழிந்தான் எனவும் வழங்கும். புத்தூர் என்னும் தேவார சிவ தலத்தையும், புத்தபுரம், புத்தகுடி, புத்தமங்கலம், புத்தங்கோட்டம் என்னும் ஊர்களையும் புத்தாறு என்னும் சிற்றாற்றையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான் என்னும் பட்டங்களை கொண்டனர்.
புலிராயன், புலிகொண்டான், பிலிமுண்டான், பிலிராயன், புலிக்கொடியன், புலிக்குட்டியன். புலிக்கொடியோன்
அண்டசோழன் மரபில் வந்த பெரும்பற்றசோழ சக்ரவர்த்தி. பெரும்பற்ற புலியூர் (சிதம்பரம்) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இந்திரனை தன் கொடியில் புலி என்று வைத்தவன். இதன் மூலம் புலிராயன், புலிக்கொடியன், புலிகொண்டான் என்வும் வழங்கப்பட்டான். இவன் கால முதல் சோழர்களுக்கு புலிக்கொடியும், புலிக்கொடியோன் என்ற பெயருமுண்டாயிற்று. பெரும்புலியூர், புலிவலம், புலிவனம் என்னும் தேவார சிவ தலங்களையும், புலிமங்கலம், புலிகுடி என்னுமூர்களையும் உண்டாக்கி அரசாண்டான். இன்றைய சித்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியும், கர்நாடகத்தின் ஒரு பகுதியும் இணைந்த புலி நாட்டையும் வெற்றி கொண்டு அரசாண்ட மன்னனும் இவனே.
புலியெனக்கொடியி லிந்திரனை வைத்தவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. இவன் மரபோர் புலிராயன், புலிகொண்டான், பிலிமுண்டான், பிலிராயன், புலிக்கொடியன், புலிக்குட்டியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
புன்னைகொண்டான், புன்னாகன், புண்ணாக்கன், புன்னையன்,புனையன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் புன்னாகமன். புன்னையூர் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் புன்னையன் எனவும் வழங்கப்பட்டது. புன்கூர் என்னும் தேவார சிவதல நகரத்தையும், புன்னைவாயில், புன்னைத்தூர், புன்னையூர், புன்னைக்குடி, புன்னாக்கன்குடி, புன்னைமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் புன்னாகன், புண்ணாக்கன், புன்னையன், புனையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
புள்ளராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் புள்ளமன். புள்ளன்பாடி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். புள்ளராயன் எனவும் அழைக்கப் பட்டவன். புள்ளமங்கை என்னும் தேவார சிவதலத்தையும், புள்ளமங்கலம், புள்ளங்குடி, புள்ளம்பட்டி, புள்ளராயன்பட்டி, புள்ளராயன் குடிகாடு என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் புள்ளராயன் எனும் பட்டத்தையும் சுமந்தனர். போருக்குச் செல்லும்முன் வெற்றி தோல்வியை அறிவதற்காக புள் சகுனம் பார்த்து செல்வதுண்டு. இச் செயலுக்கு புள்ளுவம் என்ற பெயருண்டு. புள்ளுவம் பார்பதில் வல்லமை கொண்டவர்கள் இப் பட்டங்களுக்கு உரிமை உடையவர்கள். இப்படம் உடையவர்கள் புள்ளவராயன்குடிகாடு, நெடுவாக்கோட்டை, காரக்கோட்டை, வடுவூர், ஒரத்தநாடு, தென்னமநாடு முதலிய ஊர்களில் அதிகமாக வாழுகின்றனர்.
புறம்பயன், புறம்பயத்தான், புறம்பயாண்டான், புறம்பயாளன், புறம்பயாளி, புறம்பயாட்சி
புறம்பயபிரியன், புற்ம்பயமுடையான், புறம்பயங்கொன்டான், பொறைபொறுத்தான், பொய்ந்தான், புறம்பயங்கொண்டான், பொய்கொண்டான், பொறையன்,
புறஞ்சயன் சக்ரவர்த்தி, நல்லுத்தரனின் மகன், புறம்பயம் எனும் தேவாரம் பாடப்பட்ட சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். புறம்பயந்தான், புறம்பயங்கொண்டான், புறம்பயன் எனும் பட்டங்களையும் பெற்றவன். புறவம் (சீர்காழி) புறக்குடி எனும் சிவ தலங்களையும், புறவநதி எனும் சிற்றாற்றையும், புறவச்சேரி, புறங்கரம்பை, புறமங்கலம் என்ற ஊர்களையும் உருவாக்கியவன். இவன் மரபோர் மேற்கூரிய பட்டங்களை கொண்டனர். (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்)
பூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பூதரையன், போதரையன், போரையன், பூதராயன், பூதகொண்டான், பூதாண்டான், பூதப்பிரியன், பூதாளி
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் பூதசோழன். பூதலூர் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பூதரையன், பூதராயன், பூதகொண்டான், பூதாண்டான், பூதப்பிரியன், பூதாளி எனவும் வழங்கலாயிற்று. பூதாறு என்னும் சிற்றாறை கூத்தாநல்லூருக்கருகில் முள்ளியாற்றில் பிரித்து அரிச்சந்திர நதியில் சேர்த்தவன். கூரயாற்றில் தட்டான் கோவிலுக்கருகில் இரண்டுகிளைகள் பிரித்து வடகிளையைஅரிச்சந்திர நதியிலும் தெங்கிளையை முள்ளியாற்றிலும் சேர்த்து கூத்தாந்ல்லூருக்கும் வெண்டுறைக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபத்தை சிதைத்தவன். பூதமங்கலம், பூதங்குடி, பூதனூர், பூதராயநல்லூர் என்னும் ஊர்களையும் உருவாக்கி அர்சுபுரிந்தவன். இவன் மரபினர் பூதரையன், போதரையன், போரையன், பூதராயன், பூதகொண்டான், பூதாண்டான், பூதப்பிரியன், பூதாளி என்னும் பட்டங்களை பெற்றனர்.
பூக்கட்டி
பூழியர்பிரான்
பூழியூரான்
பூமிராயன்
பூமிநாடன்
பூமிநாடான்
பூனையன்
பூவாட்சி, பூட்சி, திருப்பூட்சி, பூப்பிரியன், பூக்கொண்டான், பூவுடையான், பூவாண்டான், பூவாளன், பூவாளி, பூவன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பூமன். பூவாளூர் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பூவாட்சி என்றும் அழைக்கப்பட்டான். பூந்துருத்தி, பூவானூர் என்னும் தேவார சிவதலங்களையும், பூங்குடி, பூங்குளம், பூண்டி, பூந்தோட்டம், பூவத்தூர், பூவத்தகுடி, பூவலூர் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் பூவாட்சி, பூட்சி, திருப்பூட்சி எனும் பட்டங்களை பெற்றனர்.
பெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பெத்தாச்சி
பெரியாட்சி, பெரிச்சி, பெரிச்சியன், பெரிச்சியான், பெரிச்சிக்கணக்கன்,
பெரியசோழன், பெரியகோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பெரியாட்சி, பெரியாண்டானென்வும் வழங்கும். பெரியகுடி,பெரியலூர் என்னுமூர்களையும் உருவாக்கியரசு புரிந்தவன். இவன் மரபோர் பெரியாட்சி, பெரிச்சி, பெரிச்சியன், பெரிச்சியான், பெரிச்சிக்கணக்கன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
பே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பேரரையன், பேதரையன்.
பேர்சோழன், பேரையூர் என்னும் சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் பேரரையன் என்வும் வழங்கும். பேரூர், பேராவூர், பேரெயில் எனும் தேவார சிவ தலங்களையும், பேராவூரணி எனும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் பேரரையன், பேதரையன் எனும் பட்டங்களை பெற்றனர்.
பொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பொய்கொண்டான்
பொறையன்
பொறைபொறுத்தான்
பொய்ந்தான்
பொன்னங்கொண்டான், பொன்னமுண்டான், பொன்னாண்டான், பொன்னாரம் பூண்டான், பொன்னாப்பூண்டான், பொன்னாளியன், பொன்னானியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் பொன்ன சோழன். பொன்னவராயன்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பொன்னங்கொண்டான், பொன்னாண்டான், பொன்னப்பிரியன், பொன்னுடையான், பொன்னாளி எனவும் வழங்கும். பொன்னூர் என்னும் தேவார சிவதலத்தையும், பொன்னிறை, பொன்பற்றி, பொன்னக்குடி, பொன்னாப்பூர், பொன்னமங்கலம், பொன்னேரி என்னுமூர்களையும், பொன்னுகொண்டான், பொன்னாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கினான். தில்லை என்னும் தேவார சிவதலத்தில் சபாநாயகப் பெருமானுக்கு பொன்னம்பலம் என்னும் திருக்கோயிலும் உண்டாக்கியவன். இவன் மரபோர் பொன்னங்கொண்டான், பொன்னமுண்டான், பொன்னாண்டான், பொன்னாரம் பூண்டான், பொன்னாப்பூண்டான், பொன்னாளியன், பொன்னானியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
பொரிப்பொறுக்கி
போ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
போதரையன்
போரிற்கொளுத்தி
போரைக்கொளுத்தி
போரிற்பொறுக்கி
போரிற்சுற்றி
போரைச்சுற்றி
போர்க்கட்டியன்
போர்காட்டி
போர்முட்டி
ம வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மங்கலன், மங்கலராயன், மங்கலாண்டான், மங்கலாளன், மங்கலாளி, மங்கலாட்சி,
மங்கலப்பிரியன், மங்கல்கொண்டான், மங்கலதேவன், மங்கதேவன், மங்கலநாடன்
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் மங்கலன். திருமங்கலக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மங்கலக்குடி என்னும் தேவார சிவதலத்தையும் மங்கநல்லூர், மங்கலூர், மங்கலம் என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் மங்கலன், மங்கலதேவன், மங்கதேவன் எனும் பட்டங்களை பெற்றனர்.
மழவன், மழவாளி, மழநாடன், மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மழவன். மழவன்கோட்டை (மகழன்கோட்டை) என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மழவராயன், மழுவாளி, எனவும் வழங்கப்பட்டது. மழபாடி என்னும் தேவார சிவதல நகரத்தையும், மழவராயநல்லூர், மழவராயன்காடு, மழவரயன்குடிக்காடு, மழவராயன்பட்டி, மழவங்காடு (மழவனிக்காடு) மழவராயன்பேட்டை என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி என்ற பட்டங்களை பெற்றனர். மழவரென்ற சொல்லுக்கு வீரர், இளையோர் எனப் பொருள். மழவும் குழவும் இளமைப் பொருள என்பது தொல்காப்பியம். மழவர் சிலர் சேர அரசர்களுக்கும், அதியமாங்களுக்கும் பிற அரசர்களுக்கும் மெய்காப்பாளராக இருந்துள்ளனர். சேரமன்னன் மழவர் மெய்ம்மறை என அழைக்கப்ப்டுகிறான். எந்த அரசனின் ஆணைக்கும் அடங்கி நடக்கமுடியாத மழவர் தமிழ்நாட்டின் திருவேங்கடமலை வரை சுற்றி திரிந்தனர். பின்பு அமைதியடைந்து சோழ நாட்டில் தங்கி வாழத் தலைப்பட்டனர். இவர்கள் நிலையாக தங்கி வாழந்த பகுதி மழநாடு(மழபாடி) எனப்பட்டது. மழவராயர் என்னும் பட்டம்
வீரர்களுக்கு அரசர் அல்லது தலைவர் என்று பொருள்படும். இவர்கள் சோழகளுக்குப் பெண் கொடுக்கும் உரிமை கொண்டிருந்தனர். சோழர்களின் படைத் தலைவர்களாக இருந்து பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.
பழுவேட்டரையன் கண்டன் மழவன் என்பான் இராசராசசோழன் காலத்தில் அவன் கீழ் ஆண்ட குறுநில மன்னர்களில் முதன்மையானவன். இவன் பேரரசர் போன்று பெருந்தரம் அதிகாரிகளை நியமிக்கும் உரிமைபெற்றிருந்தான். கொல்லி மழவன் ஒற்றியூரன் பிருதிகண்டவர்மன் என்பான் இராசராசசோழனுக்கு கீழிருந்த குறுநில மன்னர்களில் ஒருவன். இவன் தந்தை இராசரரசசோழனின் தந்தை பராந்தகச் சோழனுடன் பங்கேற்று ஈழப்போரில் உயிர் துறந்தான்.
மும்முடிச் சோழன் பரமன் மழபாடியார். இவன் இராசராசசோழனுக்கு படைத்தலைவனாக சீத்புலி, பாகி நாடுகளை வென்று வெற்றியைத் தந்தவன்
உதயதிவாகரன் கூத்தாடியான வீரராசேந்திர மழவராயன். இவன் இரண்டாம் இராசேந்திரசோழனின் அரசியல் அதிகாரியாவான். இவன் அரச ஆணைகளில் கையெழுத்திட்ட ஆவனங்களையும் அறியமுடிகிறது.
கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் மகளாவார்.
உத்தம சோழனின் மனைவி கிழானடிகள் மழவராயர் மகளாவார்.
இராசராச சோழனின் மனைவியரில் பஞ்சவன் மாதேவி மழவராயர் மகளாவார்.
மேற்கண்ட சான்றுகளால் பழமையான மழவர் குடியினர் சோழ மாமன்னர்களின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமானவர்களாக விளங்கினார்கள் என்றும் இன்று வாழும் மழவராயர்கள் இப் பெருமக்களின் வழித்தோன்றல்கள் என்றும் அறிய முடிகிறது. மன்னார்குடி வட்டத்தில் மழவராயர் நல்லூர் என்ற ஊரும், பாண்டியநாட்டில் மழவராயன் ஏந்தல் என்ற ஊரும் உள்ளது. பாண்டியநாட்டின் அரியனைக்கு மழவராயன் என்ற பெயரும் உண்டு.
மழவராயர் பட்டம் தாங்கிய குடியினர் ஒரத்தநாடு வட்டம் நெல்லுப்பட்டு, பஞ்சநதிக்கோட்டை, தெக்கூர், காட்டுக்குறிச்சி, செல்லம்பட்டி, பொய்யுண்டார்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் கிள்ளுக்கோட்டை, மழவராயன்பட்டி, கீரனூர், முதுகுளம், அரையன்பட்டி, மற்றும் தஞ்சை மாவட்டத்தில் கல்விராயன்பேட்டை, பீமன்பட்டி, புங்கனூர், தத்தனூர், சீதாப்பட்டி, கண்டலூர், களமாவூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்
மண்ணிராயன், மணிக்கராயன், மண்ணியன், மண்ணையன், மணியன்.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் மண்ணிசோழன். இவன் பெயர் மண்ணிராயன், மண்ணியன் என்வும் வழங்கலாயிற்று. மண்ணி எனும் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். மண்ணிப்படிக்கரை என்னும் தேவார சிவ தலத்தையும், மண்ணியாறுஎன்னும் ஆற்றையும், மண்ணிப்பள்ளம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மண்ணிராயன், மணிக்கராயன், மண்ணியன், மண்ணையன், மணியன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
மன்னயன், மன்னியன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மன்னயன். மன்னிப்பள்ளி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மன்னியன் எனவும் வழங்கப்பட்டது. முல்லை நில மக்களில் ஒரு வகுப்பாருக்கு மன்னாரிடையர் என்னும் பட்டம் வழங்கியவன். மன்னார்குடி, மன்னனூர், மன்னகோட்டம், மன்னங்காடு, மன்னகுடி, மன்னமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மன்னயன், மன்னியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
மயிலாண்டான், மயிலண்டான்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் மயிலாடுசோழன். முன்னர் மயிலாடுகோட்டை என்னும் நகரத்தையும், பின்னர் திருமயில்கோட்டை என்னும்சிவ தல நகரையும் உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மயிலாண்டான் எனவும் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை, மயிலாப்பூர் என்னும் தேவார சிவ தலங்களையும், மயிலாடி என்னும் சிவ தலத்தையும், மயிலம் என்னும் திருப்புகழ் பெற்ற சுப்பிரமணிய தலத்தையும், மயிலடிபுரம், மயின்மங்கலம், முதலிய ஊர்களையும் உண்டாக்கி அரசு புரிந்தவன். பைங்கா நாட்டின் தென்புறமுள்ள திருமயிலேறி (திருமேரி) இவனால் உண்டாக்கப்பட்டது. இவன் மரபினர் மயிலாண்டான், மயிலண்டான் என்ற பட்டங்களை பெற்றனர்.
மணவாளன்
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் மணவாளன், மணவை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன், மணஞ்சேரி, மணற்கால் எனும் சிவ தலங்களையும் மணக்குடி, மணலி, மணப்பாறை, மணமேற்குடி, மணவாளன்பேட்டை, மணமங்கலம், மணவூர், மணங்காடு, மணவயல், மணம்பூண்டி, மணக்கரம்பை, மணக்கரை போன்ற பல ஊர்களையும் நகரங்களையும் உண்டாக்கி சிறப்பாக ஆட்சி புரிந்தவன். இவன் மரபு வழி வந்தவர்கள் மணவாளனெனும் பட்டத்தை கொண்டனர்.
மண்டலராயன், மண்டராயன், மண்கொண்டான், மங்கொண்டான், மங்கண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மண்டலன். மண்டலக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். மண்டளி என்னும் தேவார சிவதலத்தையும் மண்கொண்டான் என்னும் ஊரையும் உண்டு பண்ணி அரசாண்டவன். இவன் பெயர் மண்டலராயன், மண்கொண்டான் என்வும் வழங்கழாயிற்று. இவன் மரபினர் மண்டலராயன், மண்டராயன், மண்கொண்டான், மங்கொண்டான், மங்கண்டான்எனும் பட்டங்களை சுமந்தனர்.
மலைராயன், மலையரான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மலையன் சக்ரவர்த்தி. திருமலைராயன் பட்டினம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். மலையரையன், மலைராயன்,வரைராயன்,வரையன்,வரையரையன், வெற்பரையன்,பொருப்பரையன், இமவான், வெற்பரசு, கல்லரையன் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப் பட்டவன். பார்வதிதேவியை மகளாக பெற்று சிவபெருமானுக்கு தேவார சிவதலமாகிய திருமணஞ்சேரியில் திருமணம் செய்து கொடுத்தவன் என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரமும், திருநாவுக்கரசுநாயனார் தேவாரமும், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரமும், மணிக்கவாசக சுவாமிகள் திருவாசகமும் கூறுகின்றன. மலைமங்கலம், மலைக்குடி, மலைப்பட்டி, மலையன்குத்து, மலையனூர் என்னுமூர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தான். இவன் மரபினர் மலைராயன், மலையரான் எனும் பட்டங்களை கொண்டனர்
மல்லிகொண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மல்லியன். மல்லிப்பட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மல்லிகொண்டான் எனவும் வழங்கப்பட்டது. மல்லியம் எனும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் மல்லிகொண்டான் எனும் பட்டம் பெற்றனர்.
மருங்கராயன், பருங்கைராயன், கைராயன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மருங்கமன். மருங்காபுரி நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மருங்கராயன் எனவும் வழங்கப்பட்டது. மருதூர், மருகல், மருத்துவக்குடி என்னும் தேவார சிவதலங்களையும், மருதவனம், மருதங்குடி, மருதங்காவளி, மருதம்பட்டி, மருவூர், மருங்கூர், மருங்குப்பள்ளம் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் மருங்கராயன், பருங்கைராயன், கைராயன்.எனும் பட்டங்களை பெற்றனர்.
மா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மாங்காடன், மாங்காட்டான்
மாந்தாதா சக்ரவர்த்தி, புறஞ்சயன் மகன், மாங்கோட்டை (மாங்காடு) எனும் ஊரை ஒருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மானும், புலியும் ஒரு துறையில் நீர் அருந்தும்படி செங்கோல் சிறக்க ஆட்சி புரிந்தவன். மாவூர், மாகுடி, மாம்பட்டி, மாங்குடி எனும் ஊர்களையும் உருவாக்கியவன்.இவன் மரபு வழி வந்தோர் மாங்காட்டான் என்ற பட்டம் பெற்றனர் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்)
மாவாண்டான்
மாவாளன்
மாவாளி
மாவாட்சி
மாப்பிரியன்
மாம்பழத்தான்
மாவுடையான்
மாகொண்டான்
மாநாடன்
மாலையிட்டான்
மாதரயன், மாதுராயன், மாத்துராயன், மாதயன்,மாதயாண்டான், மாதவராயன், மாத்துராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மாதையன். மாதையபட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மாதராயன், மாதயாண்டான் எனவும் வழங்கும். மாத்தூர் என்னும் தேவார சிவதலத்தையும், மாதூர் என்னும் மாடக்கோயில் சிவதலத்தையும், மாதரையன் புதுக்கோட்டை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் மாதரயன், மாதுராயன், மாத்துராயன், மாதயன்,மாதயாண்டான்.என்னும் பட்டங்களை கொண்டனர்.
மாந்தையரையன், மாந்தரையன், மாந்தராயன். மாந்தையாளி, மாந்தைப்பிரியன், மாந்தையுண்டான், மாந்தைகொண்டான்
மாந்தைசோழன், மாந்தை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மாந்தைகொண்டான், மாந்தையரையன், மாந்தையாண்டான், மாந்தைப்பிரியன், மாந்தையுண்டான், மாந்தையாளி எனவும் வழங்கும். கீழைமாந்துறை, மேழைமாந்துறை என்னும் தேவார சிவ தலங்களையும், மாந்துறை என்னும் சிவ தலத்தையும், மாந்தைகுடி என்னும் ஊரையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் மாந்தையரையன், மாந்தரையன், மாந்தராயன் மாந்தையாளி, மாந்தைப்பிரியன், மாந்தையுண்டான், மாந்தைகொண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்
மாவெற்றி
மாவெட்டி
மாவலி
மாளிகைசுற்றி
மாளிகைசுத்தி
மான்சுத்தி
மாலையிட்டான்
மானங்காத்தான்,மானத்தரையன், மானமுத்திரையன், மானம்விழுங்கி, மானமுழுங்கி.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மானங்காத்தமன். பெண்மானத்தை காத்தவன். மானகாத்தான் கோட்டம், மானலூர், மானூர் முதலிய ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மானங்காத்தான், மானத்தரையன், மானமுத்திரையன், மானம்விழுங்கி, மானமுழுங்கி.எனும் பட்டங்களை சுமந்தனர்.
மால்
மி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மின்கொண்டான், மின்னாளி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மின்னொளிமன். மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மின்கொண்டான், மின்னாளி எனவும் வழங்கும். மின்னூர், மின்னாத்தூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மின்கொண்டான், மின்னாளி எனும் பட்டங்களை கொண்டனர்.
மு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
முனையரையன்
முனைதரையன்
முனையதரையன்
முனைதிரியன்
முனைகொண்டான்
முண்டான்
முனையாளி
முனுக்காட்டி
முடியைக்கொண்டான்
முதலி
மூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மூவரையன்
மூரியன்
மூங்கிலியன்
மே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மேனாடன், மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மொட்டத்தேவன், மேனாடன், மெனக்கடன், மேல்கொண்டான், மேற்கொண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மேலைமன். மேலைக்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மேனாடன், மேல்கொண்டான்.எனவும் வழங்கப்பட்டது. மேனாங்குடி, மேல்கொண்டவெளி, மேலைவாயில், மேலைநத்தம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மொட்டத்தேவன், மேனாடன், மெனக்கடன், மேல்கொண்டான், மேற்கொண்டான். என்னும் பட்டங்கள் பெற்றனர்.
மெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மெனக்கடன்
மொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மொட்டத்தேவன்
வ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வயிராயன்
வயிரவன்
வங்கன், வங்கணன், வங்கராயன், அங்கராயன், அங்கரான், வங்கத்தரையன், வங்காரமுத்தரையன், வங்காரமுத்திரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வங்காரமன். வங்கநகர் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வங்கன், வங்கராயன், வங்கத்தரையன் என்வும் வழங்கப்பட்டது. அதிகமான பொன்னையுடையவன் என்றும் வழங்கப்பட்டான். வங்கத்தான்குடி, வங்கமங்கலம், வங்காரம்பேட்டை, வங்காரம் பேரையூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வங்கன், வங்கணன், வங்கராயன், அங்கராயன், அங்கரான், வங்கத்தரையன், வங்காரமுத்தரையன், வங்காரமுத்திரியன் எனும் பட்டங்களை கொண்டனர்.
வண்டன், வண்டயன், வாண்டயன், வாண்டையான், வண்டதேவன், வண்டப்பிரியன், வாண்டப்பிரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வண்டமன். வண்டைநகரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. வண்டூர், வண்டக்குடி, வண்டமங்கலம், வண்டுவாஞ்சேரி, வண்டலூர், வண்டைக்காடு என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வண்டன், வண்டயன், வாண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன், வாண்டப்பிரியன்.என்ற பட்டங்களை பெற்றனர். இப்பட்டமுடையோர் வாண்டையார் குடியிருப்பு, கீரனூர், மேலக்கரும் பிரான்கோட்டை, ஆற்றங்கரைப்பட்டி (புதுக்கோட்டை) வாண்டையாரிருப்பு (தஞ்சாவூர்) கண்ணுகுடி, மேல உழுவூர், புதுப்பட்டி, பட்டுக்கோட்டை, மேடைக்கொல்லை, கறம்பயம், மன்னார்குடி, பஞ்சவாடி, குன்னூர், இடையூர், அரிச்சயபுரம், மறவாக்காடு, செம்பியன்மாதேவி, சாந்தமாணிக்கம், சோலைக்குளம், பைங்காநாடு, காரக்கோட்டை, பேரையூர், பெருகவாழ்ந்தான், திருக்களர், திருமங்கலக்கோட்டை, பாபநாசம், பூண்டி,கோனூர், திருபுவனம், வலங்கைமான், சின்னகரம், சாத்தனூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.
வடுகராயன், வடுராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வடுகமன். வடுகூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வடுராயன் எனவும் வழங்கப்பட்டது. வடுகக்குடி, வடுகச்சேரி, வடுகத்தெருமேடு, வடுகமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வடுகராயன், வடுராயன்.என்ற பட்டங்களை பெற்றனர்.
வளவன், வளம்பன்,
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் வளவசோழன். வளவனாறு என்னும் சிற்றாற்றையும், வளவனூர், வளவநல்லூர், வளவன்பட்டி, வளத்தாமங்கலம், என்னுமூர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் கால முதல் சோழர்களுக்கு வளவன் என்னும் பெயரும் சோழநாட்டிற்கு வளநாடு என்றும் பெயர் வழங்கலாயிற்று. இவன் மரபினர் வளவன், வளம்பன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வன்னியன், வன்னிகொண்டான், வன்னிமுண்டான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வன்னிமன். வன்னி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வன்னியூர், புகலூர் என்னும் தேவார சிவதலங்களையும், வன்னிமங்கலம், வன்னிகுடி, வன்னிபட்டு, வன்னியன்குடிகாடு, வன்னிப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் வழி வந்தோர் வன்னியன், வன்னிகொண்டான், வன்னிமுண்டான் என்னும் பட்டங்களை கொண்டனர்.
வல்லத்தரையன், வல்லாளதேவன், வல்லமாண்டான், வல்லாண்டான், வல்லாளி, வல்லாடி, வல்லடி, வல்லண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வல்லபன். வல்லம் என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வல்லத்தரையன், வல்லமாண்டான், வல்லாளதேவன், வல்லாளி எனவும் அழைக்கப்பட்டது. வல்லூர், வல்லம்பாடு, வல்லம்படுகை என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் வல்லத்தரையன், வல்லாளதேவன், வல்லமாண்டான், வல்லாண்டான், வல்லாளி, வல்லாடி, வல்லடி எனும் பட்டங்களை பெற்றனர்.
வம்பாள
வழுவாளி, வழுவாடி.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வழுவைமன். வழுவூர் என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வழுத்தூர் என்னும் ஊரையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வழுவாளி, வழுவாடி எனும் பட்டங்களை கொண்டனர்
வா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வாளமரன்
வாள்ராயன்
வாளுடையான்
வாளாண்டான்
வாளாளன்
வாளாளி
வாளாட்சி
வாட்பிரியன்
வாட்கொண்டான்
வாளால்வெட்டி, வாள்வெட்டி
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் வாளமரன், வாளமரன்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வாட் போரில் சிறந்தவன், மிகுந்த வீரமுடையவன். இவன் பெயர் வாளால்வெட்டி எனவும் புகழ் பெற்றது. வாட்போக்கி, வாள் கொளிபுத்தூர் என்னும் தேவாரம் பெற்ற தலங்களையும், வாள்மங்கலம், வாளையங்கண்ணி என்ற ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
வாவுடையன், வாயாண்டான், வாயாளன், வாயாட்சி, வாப்பிரியன், வாப்பிலியன், வாயாளி, வாயாடி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாமன். வாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் வாகொண்டான், வாயாண்டான், வாப்பிரியன், வாயாளி என்னும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். இவன் மரபு வம்சத்தினர் வாப்பிரியன், வாப்பிலியன், வாயாளி, வாயாடி என்ற பட்டங்களை பெற்றனர்
வாண்டையான்
வாண்டாப்பிரியன்
வாஞ்சிராயன், வஞ்சிராயன், விஞ்சிராயன், விஞ்சிரான், விஞ்சைராயன்
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் வாஞ்சிசோழன். வாஞ்சியம் என்ற தேவார சிவதலநகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன்பெயர் வாஞ்சிராயன் எனவும் வழங்கலாயிறு. வாஞ்சியாறு என்ற சிற்றாற்றையும், வாஞ்சியூர், வாஞ்சிகுடி, வாஞ்சிமங்கலம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். வீரத்திலும், விவேகத்திலும்,வேகத்திலும் மன்னையும் வின்னையும் மிஞ்சியவன் என்று புகழப்பட்டவன். இவன் மரபோர் வாஞ்சிராயன், வஞ்சிராயன், விஞ்சிராயன், விஞ்சிரான், விஞ்சைராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வாட்டாட்சி, வாட்டாச்சி, வட்சி, வாச்சான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாட்டமன். வாட்டாட்சிகோட்டை (வாவாசி) என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வாட்டாட்சி எனவும் வழங்கும். வாட்டாகுடி,வாட்டார் என்னும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய வாட்டாட்சி,வாட்டாச்சி,வட்சி, வாச்சான் என்னும் பட்டங்களை கொண்டனர்.
வாணரையன், வாணதரையன், வாணதிரியன், வீணதிரியன், வீணதரையன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாணன். வாணரையன் பட்டினம் (வாணதரையன் பட்டினம்) வாணன்பாடி (வாணியன்பாடி) என்னும் நகரங்களை உண்டு பண்ணி இராசதானிகளாகக் கொண்டவன். இவன் பெயர் வாணராயன்,வாணரையன் எனவும் வழங்கும். வாணாதரை என்னும் சிவதலத்தையும், வாணதரையன் குடிக்காடு என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தேர் வாணரையன், வாணதரையன், வாணதிரியன், வீணதிரியன், வீணதரையன் என்னும் பட்டங்கள் பெற்றனர்.
வாலிராயன், வாலியன்,
வாலிசோழன், வாலிகொண்டபுரம் என்னும் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் குரக்கரையன், குரக்கிராயன், வாலிராயன், வாலிகொண்டான், வாலியாண்டான், வாலிப்பிரியன், வாலியுடையவன், வாலியாளி எனவும் வழங்கலாயிற்று. குரங்காடுதுறை, குரக்குக்கா, குரங்கணின்முட்டம் என்னும் தேவார சிவ தலங்களையும், வாலீச்சரம் என்னும் சிவ தலத்தையும், வாலிப்பட்டி, வாலியுடை, வாலிகுடி (லாலிகுடி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன் இவன் மரபினர் வாலிராயன், வாலியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
விசலன், விசலராயன், விசலுடையான், விசலாளன், விசலாட்சி, விசலப்பிரியன்,
விசலுண்டான், விசல்நாடன், விசல்தேவன், விசல்கொண்டான், விசலுண்டான், விசலாண்டான், விசலண்டான், பிசலண்டான், பிசலுண்டான், வீசண்டான், விசலாளி, விச்சாடி
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் விசலமன், விசலூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் விசலாண்டான், விசல்கொண்டான், விசலாளி என்றும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
விசயராயன், விசுவராயன், விசயதேவன், விசாதேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விசயன். விசயபுரம் என்னும்நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் விசயராயன், விசயதேவன் எனவும் வழங்கும். விசயமங்கை என்னும் தேவார சிவதலத்தையும், விசயமங்கலம் எனும் சிவதலத்தையும், விசயநகரம் என்ற பட்டினத்தையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வம்சத்தினர் விசயராயன், விசுவராயன், விசயதேவன், விசாதேவன் என்ற பட்டங்களை பெற்றனர். முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் இந்துமாக் கடலில் இருந்த ஸ்ரீவிசயம் (இன்றைய சுமத்திரா) என்ற நாட்டை சோழ கடல் படையினர் வெற்றி கண்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்து சோழ மண்டலத்துடன் இனைத்துக் கொண்டனர். இந்த வெற்றிக்கு பலம் சேர்தவர்கள் என்ற பெருமை விசயராயன், விசயதேவனென்ற பட்டம் சுமந்தோராவர். எனவே இப்பட்டங்கள் ஸ்ரீவிசய வெற்றியோடு தொடர்புடையதாகவும் உள்ளது. இப்பட்டமுடைய கள்ளர் இன மக்கள் பஞ்சந்திக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, விளார், வலங்கைமான், முனியூர், அவளிநல்லூர், மன்னார்குடி, சேரங்குளம், புதுக்கோட்டை மாவட்ட திருக்களம்பூர், வாண்டாக்கோட்டை முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர். இப்பட்டங்கள் விசுவராயர், விஜயதேவர் என்றும் திரிந்துள்ளது
விளப்பன், விற்பனன்
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் விளப்பசோழன். விளநகர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். விளப்பாறு என்னும் ஆற்றையும், விளமர், விளத்தூர், விளத்தொட்டி என்னும் தேவார சிவதலங்களையும், விளக்குடி, விளாங்குடி, விளார்,விளாங்குளம், விளமங்கலம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் விளப்பன், விற்பனன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
விக்கிரமத்தான்
விக்கிரமத்தரையன்
விருதராசபயங்கரன்
விருதலான்
வில்லவராயன், வில்வராயன், வில்லன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விலிமன். விற்குடி, விற்கோலம் என்னும் தேவார சிவதல நகரங்களையும் உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வில்லியனூர், வில்லிபாக்கம், வில்லிமங்கலம், விலியநல்லூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வில்லவராயன், வில்வராயன், வில்லன்.எனும் பட்டங்களை கொண்டனர்.
விஞ்சிராயன்
விட்டுணன், விற்பனன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விட்டுணுமன். விட்டுணுபுரம் என்னும் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மாற்பேறு தேவார சிவதல நகரத்தையும், விட்டுணம்பேட்டை என்னும் ஊரை உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் விட்டுணன், விற்பனன் எனும் பட்டங்களை கொண்டனர்.
வீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வீணாதரையன்
வீணாதிரியன்
வீரங்கொண்டான், வீரமுண்டான், வீரப்பிரியன், வீரப்பிலியன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வீரபோகன். வீரையன்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வீரங்கொண்டான், வீரப்பிரியன் எனவும் வழங்கும். வீரபோகம் என்னும் தேவார சிவதலத்தையும் வீரபுரம், வீரமங்கலம், வீரனூர், வீரக்குடி, வீரக்குரிச்சி, வீராக்கி, வீரப்பட்டி, வீரமாங்குடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் வீரங்கொண்டான், வீரமுண்டான், வீரப்பிரியன், வீரப்பிலியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வீசண்டான்
வை வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வைகைராயன், வயிராயன், வயிரவன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வைகைமன். வைகாவூர் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வைகல் என்னும் தேவார சிவதலத்தையும் வைகளத்தூர், வைகைச்சேரி, வைகம்பட்டி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் வைகைராயன், வயிராயன், வயிரவன் எனும் பட்டங்களை பெற்றனர்.
வெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வெள்ளங்கொண்டான்
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் நீலசோழன். வெள்ளம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வெள்ளைராயன், வெள்ளப்பிரியன், வெள்ளாண்டான், வெள்ளுடையான், வெள்ளங்கொண்டான், வெள்ளரையன், வெள்ளாளி எனவும் வழங்கும். வெள்ளாம் பிரம்பூர் என்னும் சிவதலத்தையும்,வெள்ளைக்குடி,வெள்ளுகுடி, வெள்ளூர், வெள்ளங்கால், வெள்ளமங்கலமென்னும் ஊர்களையும், நீவாநதி என்னும் ஆற்றையும், வடவெள்ளாற்றையும், தென்வெள்ளாற்றையும், வெள்ளையாறு(வள்ளையாறு) என்னும் சிற்றாற்றையும் உருவாக்கி அரசுபுரிந்தான். இவன் மரபினர் வெள்ளங்கொண்டான் என்ற பட்டம் கொண்டனர்.
வெட்டுவராயன், வெட்டுவன், வெட்டுவான்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் வெட்டுவசோழன். வெட்டுவகோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வெட்டுவராயன், வெட்டுவாகொண்டான், வெட்டுவாண்டான், வெட்டுவாப்பிரியன், வெட்டுவாளி எனவும் வழங்கப்பட்டது. வெட்டாறு என்னும் பேராற்றை வெண்ணியாறின் ஒரு கிளையாக தென்பிரம்பூருக்கருகில் பிரித்து வேதகுடிக்கருகில் முள்ளியாற்றில் சேர்த்து கொரடாச்சேரிக்க்ருகில் கிழக்கே திருப்பி நாகூருக்கருகில் கடலில் சேர்தவன்.
( வெட்டாற்றை முள்ளியாறு என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 896ம் பாடல் கூறுகிறது.) பூந்துருத்திக்கும் வேதிகுடிக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபமும், கொரடாச்சேரிக்கும் வெண்ணிவாயிலுக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபமும் மறைந்து போயின. இவன் மரபோர் வெட்டுவராயன், வெட்டுவன், வெட்டுவான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வெண்டன், வெண்டான், வென்றான்,
வெண்டசோழன்,வெண்டாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் வெண்டன் எனவும்வழங்கும். வெண்காடு, வெண்டுறை, வெண்பாக்கம் எனும் தேவார சிவ தலங்களையும், உருவாக்கி அரசாண்டவன். போர்கலம் புகுந்து வெற்றி வாகை சூடிய இவன் மரபோர் வெண்டன், வெண்டான், வென்றானெனும் பட்டங்களை பெற்றனர்.
வே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வேள், வேள்ராயன், வேளூரன், வேளூரான், வேளூடையான், வேளூடையன்,
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் வேள், பெருவேளூர் எனும் தேவாரம் பாடப்பெற்ற சிவதல நகரை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். மருத நில மக்களுக்கு வேளாளர் எனும் பட்டத்தை வழங்கியவன். இதனால் இவன் வேளூரன், வேளூடையான் என்றும் அழைக்கப்பட்டான். வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) கீழ்வேளூர், வேட்களம், வேள்விக்குடி, வேளாங்கண்ணி போன்ற நகரங்களையும் உருவாக்கியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் மேற் கூரிய பட்டங்களை பெற்றனர்.
வேளாண்டான், வேளாளன், வேளாளி, வேளாட்சி, வேட்பிரியன், வேட்கொண்டான்
வேணாடன். வேலாளி, வேல்ராயன், வேலாண்டான், வேற்கொண்டான், வேற்பிரியன்,
செம்பியன் சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வேலமன். வேலூர் என்னும் திருப்புகழ் பெற்ற முருகதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வேற்காடு எனும் தேவார சிவதல நகரையும், வேலங்குடி, வேலங்காடு, வேற்குடி எனும் ஊர்களையும் உண்டாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் வழி வந்தவர்கள் வேலாளி, வேல்ராயன், வேலாண்டான், வேற்கொண்டான், வேற்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
வேங்கைராயன், வேங்கிராயன், வேங்கைகொண்டான், உழுவாண்டான், உழுவண்டான்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வேங்கைமன். வேங்கை (உழுவூர்) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் வேங்கைராயன், உழுவாண்டான் எனும் பெயர்களிலும் அழைக்கப்பட்டான். வேங்கூர் என்னும் தேவார சிவதல நகரையும், உழுவூர், உழுமங்கலம், உழுந்தூர்பேட்டை என்ற நகர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தான்.இவன் மரபு வழி வந்தவர்கள் வேங்கைராயன், வேங்கிராயன், வேங்கைகொண்டான், உழுவாண்டான், உழுவண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.
வேணுடையன்
பிரமன் மன்னன் மரபில் வந்த மன்னன் வேணு. இவன் காலம் முதல் பிரமபுரம் வேணுபுர என வழங்கலாயிற்று. இவன் பெயர் வேணுடையன் எனவும் வழங்கும். இவன் மரபினர் வேணுடையன் எனும் பட்டம் கொண்டனர்.
வேம்பன்
வொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பட்டங்களில் அறிந்தவை, கற்றவை, பெற்றவை
பட்டம் கொண்ட கள்ளர் குல மறவனுக்கு மரணம் இல்லை
ஆறானால் என்ன! நூறானால் என்ன! இறப்பு என்றேனும் ஒருநாள் உன்னைத் தேடித்தான் வரப்போகிறது. எதுவரை வாழ்ந்தாய் என்பது முக்கியமல்ல.எதற்காக வாழ்ந்தாய் என்பதே முக்கியம். நீ எந்த உயர்ந்த குறிக்கோழுடன் வாழ்ந்தாய்? உன்னால் அதை அடைய முடிந்ததா? அடைந்திருந்தால்
நீ நிச்சயமாக மரணமடைய மாட்டாய்.
உன்னைப் பற்றி ஒருவன் தினமும் எழுதிக்கொண்டிருப்பான்,
ஒருவன் பேசிக்கொண்டிருப்பான்,
ஒருவன் நினைத்துக்கொண்டிருப்பான்.
நீ அடைந்த உயர்ந்த சிந்தனை பொருந்திய குறிக்கோல் உலக வரலாற்றில் இடம் பிடித்திருக்கும்.உனக்கு மரணம் என்பது இல்லை. நீ பெற்றிருக்கும் உன் குல பட்டமே இதற்கு சாட்சி. உன் மூதாதையர் கொண்ட லட்சியங்களும், கொள்கைகளும், வெற்றிகளும் உன் குருதியில் கலந்து உன்னை இயக்குகின்றது, உனக்கு மரணமில்லை.
கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.
மானிடர்கள் அவரவர் செய்த அருஞ்செயல்களால் வரும் சிறப்பே பெருமைக் குறியதாகும். சங்ககாலம் தொட்டு மன்னர் முதல் பலதரப்பினரும் இத்தகைய சிறப்பினை பெற்று இருந்தனர். இதனை மாராயம் பெற்றவர்கள் என்று தொல்காப்பியம் உணர்த்துகிறது. இதன் மூலம் மாரயம் என்பது சான்றோர்களாலும், அரசர்களாலும் அளிக்கப்படும் ஒரு சிறப்புப் பெயர் என்றும், அதனைப்பற்றி உலகோரின் பாராட்டுரை நெடுமொழி என்றும் வழங்கப்பட்டது. வேந்தனால் சிறப்பெய்தியோர் வேண்டும் இடங்களில் தம் சிறப்பை தாமே எடுத்துக் கூறுல் அவர்களுக்கு நிலைத்த புகழைத்தந்தது. வேந்தனால் வழங்கப்பட்ட இப் பட்டம் (மாராயம்) தம் பெயருடன் சேர்த்துக் கூறிக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது.
சங்ககால வேந்தர்கள் அறிவு வலிமை, சான்றோமை, வீரவலிமை பெற்ற தம் குடிமக்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தமை சங்ககாலத்திற்கு பின்பும் இச் சிறப்புப் பெயர் மரபு தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக கள்ளர் குலம் இப் பட்டங்களை தங்களின் உயிர் காக்கும் கேடயமாக உணர்ந்து பாதுகாத்து வருகின்றனர். செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியதற்காக சுமார் ஈராயிரம் பட்டங்களை சுமந்துள்ள கள்ளர் மரபு வரலாறு, உலக வரலாற்றில் ஒரு வரலாகும்.
சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன.இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது.
1. பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே
சூடிக்கொண்ட பட்டங்கள்.
இராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.
2. பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம் உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள்.
கடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.
3. பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள்.
காலிங்கராயன், சேதிராயன், மழவராயன்,நாடாள்வான் போன்றவை.
4. பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம் சார்பற்ற) வழங்கிய பட்டங்கள்.
கற்றளிப்பிச்சன். தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.
கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.
அ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
அரசன், அரசுடையான், அரசுக்குடையான், அரசுக்குழைச்சான், அரச்சுக்குழைச்சான்,
அரசாண்டான், அரசாளன், அரசாளி, அரசாட்சி, அரசப்பிரியன், அரசுகொண்டான்
அரசதேவன்,
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் அரசதேவன், அரசபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அரசரிற் சிறந்தவன் என்று போற்றப்பட்டவன். இவன் அரசாண்டான், அரசுக்குடையான் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டான். அரசிலி, அரநெறி, அரதைப்பெரும்பாழி என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதலங்களையும், அரசூர், அரசங்குளம், அரங்குளம், அரசமங்கலம், அரசங்குடி என்ற ஊர்களையும் உண்டாக்கி ஆட்சிபுரிந்தான்.இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
அச்சான்டான்
அங்கராயன்
அச்சுதன், அச்சுதபண்டாரம், அச்சுததேவன், அச்சுத்ேத்வன். அச்சுதராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அச்சுதன். அச்சுதபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அச்சுதராயன், அச்சுததேவன் எனவும் வழங்கப்பட்டது. அச்சுதங்குடி, அச்சுதமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் அச்சுதன், அச்சுதபண்டாரம், அச்சுததேவன், அச்சுத்ேத்வன்.என்ற பட்டங்களை பெற்றனர்.
அத்திரியன், அத்திரியாக்கி, அத்திரிமாக்கி, அத்திப்பிரியன், அத்திகொண்டான், அத்தியாண்டான், அத்தியாளி, அத்தியுடையான்
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அத்திசோழன். அத்திக்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அத்திகொண்டான், அத்தியாண்டான், அத்திப்பிரியன், அத்தியாளி, அத்தியுடையான் எனவும் வழங்கும். அத்தங்குடி, (அதங்குடி) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தையும், அத்திப்புலியூர் என்னும் சிவதலத்தையும், அத்திக்கரை, அத்திப்பட்டு எனும் திருப்புகள் பெற்ற சுப்பிரமணிய தலங்களையும், அத்திசோழமங்கலம், அத்திக்கடை, அத்திப்பேட்டை, அத்தியூர், அத்திப்பாக்கம், அத்திவெட்டி, அத்திக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினருக்கு அத்திப்பிரியன், அத்திரியன், அத்திரிமாக்கி என்னும் பட்டங்கள் வழங்குகின்றது. அத்திரி என்பது கோவேறு கழுதையை குறிக்கும். பெருங்குடி மக்கள் அத்திரியை பயன்படுத்தி பிரயானம் செய்தனர். பெருங்குடி வணிகனாகிய கோவலன் அத்திரியில் சென்றதை சிலம்பு குறிப்பிடுகிறது. சங்க காலங்களில் தலைவன் கோவேறு கழுதையில் பயனித்ததை சங்க பாடல்கள் செப்புகின்றன. இதன் மூலம் இப்பட்டங்கள் சங்ககாலம் முதல் வழக்கத்தில் உள்ளது என்பது தெரிய வருகிறது.இப்பட்டமுடையோர் அதிகமாக வாழும் ஊர்கள் தெரியவில்லை.
அரியதன், அரிப்பிரியன், அரியப்பிள்ளை,
பஞ்சநதிசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி அரியசந்திரசோழன். அரிசந்திரபுரம் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அரியதன், அரிப்பிரியன் அன்வும் வழங்கும். காவிரி ஆற்றிலிருந்து அரிசிலாறு என்னும் பேராற்ரையும், முள்ளியாற்றிலிருந்து அரியசந்திர நதியையும் உருவாக்கினான். அரியலூர், அரியமங்கை, அரியக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் அரியதன், அரிப்பிரியன்,அரியப்பிள்ளை என்னும்பட்டங்களை கொண்டனர்.
அண்டங்கொண்டான், அண்ணுண்டான், அண்டப்பிரியன், அண்ணுப்பிரியன், அண்ணுத்திப்பிரியன், அண்ணமாண்டான், அண்டமாளியன்,
பஞ்சநதிசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி. அண்டபுரம் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அண்டங்கொண்டான், அண்டமாண்டான், அண்டப்பிரியன், அண்டமாளி எனவும் வழங்கலாயிற்று. அண்ணாமலை என்னும் தேவார சிவ தலத்தையும்,அண்டக்குடி(அண்ணுகுடி) அண்டக்குளம், அண்டத்துறை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். சுவர்க்கம், அந்தரம், பூமி என்னும் உலகங்களையும் வென்றவன் என புகழப்பட்டவன்.
மேலனைத்துலகு மிவ்வகில லோகமெலாம் வென்றுகொண்டவனு மென்றிவர்கள் கொண்ட விறலும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது.இவன் மரபோர் அண்டங்கொண்டான், அண்ணுண்டான், அண்டப்பிரியன், அண்ணுப்பிரியன், அண்ணுத்திப்பிரியன், அண்ணமாண்டான், அண்டமாளியன் என்னும் பட்டங்களை கொண்டனர். இப்பட்டங்கள் சங்ககாலத்தில் வழங்கப்பட்டவை என உறுதி செய்யப்படுகிறது.
அம்பராண்டான், அமரண்டான், அமராண்டான், அம்பர்த்தேவன், அம்மலத்தேவன், அம்மானைத்தேவன், அம்பானைத்தேவன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அம்பன். அம்பர்,அம்பர்மாகாளம் என்னும் இரண்டு சிவதலமுடைய அம்பர் என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் அம்பராயன், அம்பராண்டான், அம்பர்த்தேவன் எனவும் வழங்கும். அம்பராயன்பேட்டை (அம்பராசன்பேட்டை) அம்பத்தூர்(அம்பகரத்தூர்) அம்புக்கோவில் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் அம்பராண்டான், அமரண்டான், அமராண்டான், அம்பர்த்தேவன், அம்மலத்தேவன், அம்மானைத்தேவன், அம்பானைத்தேவன் எனும் பட்டங்களை கொண்டனர்
அம்மையத்தரையன், அசையாத்துரையன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் அம்மையன். அம்மையபுரம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அம்மையப்பன், அம்மளூர் என்னும் ஊர்களையும், அம்மணியாறு என்னும் பேராற்றையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் அம்மையத்தரையன், அசையாத்துரையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
அருண்மொழித்தேவன்
அருமொழித்தேவன்
அருவாத்தலைவன்
அருவாத்தலையன்
அருவாநாடன்
அருமைநாடன்
அருமடான்
அருவாநாட்டான்
அருமநாட்டான்
அடைக்கப்பட்டான், அடைவளைந்தான், அடவளைந்தான், அடைவளஞ்சான், அண்டம்வளைந்தான்.
அண்டசோழன் மரபில் வந்த மன்னன் அடைவளைசோழன். அடைக்கப்பட்டு என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அடைக்கப்பட்டான், அடைவளைந்தான் எனவும் வழங்கும். அடைப்பாறு என்னும் ஆற்றையும் உருவாக்கி அரசாண்டவன். அடை என்பது நிலம் என்றும், வளைவதாவது சுற்றி வருவது என்றும் பொருள்படும். இதன் மூலம் இவர்கள் நிலத்தை சுற்றி அதன் எல்லைகளை வகுத்து மானியமாக நிலங்களை அளித்தவர்கள் (தினந்தோறும் திருக் கோவில்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு மற்றும் பூசனப்பொருட்களை வழங்குபவர்களுக்கு) என்றும் அறியப்படுகிறது. அடைக்கப்பட்டான், அடைவளைந்தான், அடவளைந்தான், அடைவளஞ்சான், அண்டம்வளைந்தான் என்னும் பட்டமுடைய கள்ளர்கள் திருவையாறு வட்டம் திருச்சினம்பூண்டி, திருச்சி மாவட்டம் கிளியூர் ஆகிய இடங்க்களில் அதிகமாக வாழுகின்றனர்.
அன்னவாயில்ராயன், அன்னவாசல்ராயன்,
அன்னசோழன், அன்னவாயில் என்னும் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் அன்னவாயில்ராயன் எனவும்வழங்கும். சோற்றுத்துறை எனும் தேவார சிவ தலத்தையும், அன்னப்பன்பேட்டை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் அன்னவாயில்ராயன், அன்னவாசல்ராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
அதியமான்
அதிகமான்
ஆ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஆச்சன், ஆச்சாப்பிரியன், ஆட்சிப்பிரியன்
முசுகுந்தன் மரபில் வந்தவன். ஆச்சாபுரம் (பெருமணநல்லூர்) என்னும் தேவார சிவதல நகரை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன்.ஆதிசைவர்களுக்கும், கம்மியர்களுக்கும் ஆச்சாரி என்று பட்டம் கொடுத்தவன். இவன் பெயர் ஆச்சாப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது.ஆதிச்சபுரம், ஆச்சமங்கலம், ஆச்சனூர், ஆச்சங்குடி, ஆச்சான்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி நல்லாட்சி புரிந்தவன். இவன் மரபினர் ஆச்சாப்பிரியன், ஆட்சிப்பிரியன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
ஆச்சராயன்
ஆச்சுடையன்
ஆச்சாளன்
ஆச்சாளி
ஆச்சாப்பிரியன், ஆட்சிப்பிரியன்.
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் ஆச்சன், ஆச்சாபுரம் (பெருமணநல்லூர்) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். ஆதிசைவர்களுக்கும், கம்மியர்களுக்கும் ஆச்சாரி என்று பட்டம் வழங்கி சிறப்பித்தவன். ஆச்சாப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். ஆச்சாபுரம் (ஆதிச்சபுரம்), ஆச்சாமங்கலம், ஆச்சனூர், ஆச்சங்குடி, ஆச்சான்பட்டி எனும் ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
ஆச்சங்கொண்டான்
ஆச்சதேவன்
ஆய்ப்பிரியன், ஆளற்பிரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஆய். ஆய்க்கோட்டை, ஆய்ப்பாடி என்னும் நகரங்களை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆய்ப்பிரியன் எனவும் வழங்கும். ஆய்மூர் என்ற தேவார சிவதலத்தையும், ஆய்மழை, ஆய்மங்கலம், ஆய்ப்பட்டி, ஆய்க்குடி, ஆய்ங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் ஆய்ப்பிரியன், ஆளற்பிரியன் என்ற பட்டங்களை
பெற்றனர்.
ஆரம்பூண்டான், ஆர்சுத்தி, ஆரஞ்சுற்றி, ஆரமுண்டான், ஆரக்கண்ணியன், மாலையிட்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஆத்திமன். ஆத்திக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் ஆரம்பூண்டான்,ஆரஞ்சுற்றி,மாலையிட்டான் என்வும் வழங்கலாயிற்று. இவன் காலத்தில் தான் மருத்துவ குணமிக்க ஆத்திமாலை அணியும் வழக்கம் ஏற்பட்டது. ஆத்தூர், ஆத்தமங்கலம், ஆரம்பூண்டான்பட்டி, ஆத்தங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் ஆரம்பூண்டான், ஆர்சுத்தி, ஆரஞ்சுற்றி, ஆரமுண்டான், ஆரக்கண்ணியன், மாலையிட்டான் என்ற பட்டங்களையும் பெற்றனர்.
ஆக்காட்டரையன், ஆக்காட்டியன்.
அழிசிசோழன், ஆக்காடு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் ஆக்காட்டுராயன், ஆக்காட்டரையன், ஆக்காடுகொண்டான், ஆக்காடாண்டான், ஆக்காடுடையான், ஆக்காட்டுப்பிரியன், ஆக்காடாளி என்வும் வழங்கலாயிற்று. சிறந்த வீரமும் கொடையுமுடையவன். நக்கண்ணையார் முதலிய புலவர்களால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல்கள் நற்றிணையில் 87,169ம் பாடல்களாக உள்ளன. ஆக்கூர் என்னும் தேவார சிவ தலத்தையும்,ஆக்குடி என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டான்.இவன் மரபோர் ஆக்காட்டரையன், ஆக்காட்டியன். என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஆதனழிசியன், ஆதாழியன்
ஆதனழிசிசோழன், ஆதனக்கோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் நன்பன். (பூதப்பாண்டியன் பாடிய புறநானூறு 71ம் பாடல் ஆதனழிசி பற்றி கூறுகிறது, புறநானூறு மூலமும் பழைய உரையும் பக்கம் 63, உ.வே. சாமிநாத ஐயர்) ஆதனக்குடி, ஆதமங்கலம், ஆதமழை, ஆதனப்பேட்டை, ஆதனூர் எனும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் ஆதனழிசியன், ஆதாழியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
ஆலத்தரையன், ஆவத்தயன், ஆவத்தியான், ஆவாத்தியான்,ஆலங்கொண்டான், ஆலத்தொண்டான், ஆலத்தொண்டமான், ஆலம்பிரியன், ஆளம்பிரியன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான்.
ஆலசோழன், ஆலங்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஆலத்தரையன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான், ஆலம்பிரியன், ஆலமாளி எனவும் வழங்கலாயிற்று. ஆலந்துறை, ஆலம்பொழில், ஆலங்குடி, ஆலங்காடு என்னும் தேவார சிவ தலங்களையும், ஆலத்தம்பாடி,ஆலத்தூர், ஆலத்தாங்குடி, ஆலங்காடு, ஆலம்பாக்கம், ஆலம்பள்ளம், ஆலம்பாடி, ஆலக்குடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன்.இவன் மரபினர் ஆலத்தரையன், ஆவத்தயன், ஆவத்தியான், ஆவாத்தியான்,ஆலங்கொண்டான், ஆலத்தொண்டான், ஆலத்தொண்டமான், ஆலம்பிரியன், ஆளம்பிரியன், ஆலங்கொண்டான், ஆலமாண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
இ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
இராயாண்டான், இராயாளன், இராயன், இராங்கியன்,இராயங்கொண்டான், இராயமுண்டான், இராயாளி, இராசாளி, இராயப்பிரியன், இராசப்பிரியன், இராங்கிப்பிலியன்.
முசுகுந்த மரபில் வந்த மன்னன் இராயன், இராயபுரம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் இராயங்கொண்டான், இராயாளி, இராயப்பிரியன் என்றும அழைக்கப்பட்டான். இராயநல்லூர் (இராயந்தூர்), இராயன்பேட்டை, இராயமங்கலம், இராயங்குடி, இராயன்பட்டி (இராங்கியன்பட்டி) எனும் ஊர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மேற்கண்ட பட்டங்களை கொண்டனர்.
இராயத்தேவன்
இளங்கொண்டான், இளமுண்டான்.
இளஞ்சேட்சென்னிசோழன், இளநகர் என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியகக் கொண்டவன். இவன் பெயர் இளங்கொண்டான், இளமுண்டான், இளம்பிரியன், இளமுடையவன், இளமாளி, இளநாடன் என்வும் வழங்கலாயிற்று. இளமர்( இளமதுக்கூர்) இளங்கடம்பனூர் என்னும் தேவார சிவதலங்களையும், இளமங்கலம், இளங்கார்குடி,இளங்காடு, இளவனூர்,இளையான்குடி என்னுமூர்கலையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இரபோரைப் பாதுகாத்தலையே நோன்பாகக் கொண்டவன். சேரனுடைய பாமுளூரை வெற்றி கொண்டு அதன் பக்கத்தில் இருந்த குன்றில் புலிக்கொடியை நாட்டி அதற்குச் சென்னிமலை என்றும் பெயரிட்டான். ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் இவனை புகழ்ந்து பாடியவை புறநானூற்றில் 10,2003ம் பாடல்களாக இடம் பெற்றுள்ளன. இவன் மரபோர் இளங்கொண்டான், இளமுண்டான் என்னும் பட்டங்கள் பெற்றனர்.
இருங்களன்
இருங்கள்ளன்
இடங்காப்பிறந்தான்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இடைமன். இடங்கான் கோட்டை என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். முல்லைநில மக்களுக்கு இடையர் என்னும் பட்டம் வழங்கியவன். இவன் இடங்காப்பிறந்தான் என்றும் அழைக்கப்பட்டான். முல்லை நில மக்களுக்கு இடையர் என்ற பட்டத்தை அளித்தவனும் இவனே.இடைமருதூர், இடைவாய் (விடைவாய்) இடைக்குளம், இடைப்பள்ளி என்னும் தேவார சிவதலங்களையும், இடையாத்திமங்கலம், இடைக்கோரை, இடையூர், இடையகாடு, இடைக்குடி என்ற நகரங்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன்.இவன் வழி வந்தவர்கள் இடங்காப்பிறந்தான் என்ற பட்டம் பெற்றனர்.
இறையாண்டான், இராரண்டான், இராயாண்டான். இராசாண்டான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் இறையமன். இறையூர் (மாறன்பாடி) என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் இறையாண்டான் எனவும் வழங்கும். இறையனூர், இறையன்சேரி என்னும் தேவார சிவதல நகரங்களையும், இறையாங்குடி, இறைமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் இறையாண்டான், இராரண்டான், இராயாண்டான் எனும் பட்டங்களை கொண்டனர்.
ஈ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஈழத்தரையன், ஈழங்கொண்டான், ஈச்சங்கொண்டான், ஈங்கொண்டான், ஈங்கொண்டான்
ஈசசோழன் ஈங்கை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் ஈங்கொண்டான், ஈங்காண்டான் என்வும் வழங்கும். ஈங்கோய்மலை என்னும் தேவார சிவ தலத்தையும் ஈங்கூர், ஈஞ்சூர், ஈசனூர், ஈசனக்குடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் ஈங்கொண்டான் பட்டத்தை பெற்றனர். மேலும் இப் பட்டம் ஈழநாட்டிற்கும், ஈழத்துரையன், ஈழமுண்டான் ஈழம்கொண்டான் என்ற பட்டங்களுக்கும் தொடர் கொண்டவை எனவும் அறியப்படுகிறது.
உ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
உறந்தைராயன், உறந்தையுடையன், உறந்தையாண்டான், உறந்தையாளன்
உறந்தையாளி, உறந்தையாட்சி, உறந்தைப்பிரியன், உறந்தைகொண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் உறந்தைமன். உறையூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் உறந்தைராயன், உறந்தைகொண்டான், உறந்தைபிரியன் எனவும் வழங்கும். உறந்தூர் என்னும் ஊரையும் உருவாக்கியவன் இவன். இவன் வழிவந்தவர்கள் உறந்தைராயன்,
உறந்தையுடையன், உறந்தையாண்டான், உறந்தையாளன், உறந்தையாளி,
உறந்தையாட்சி, உறந்தைப்பிரியன், உறந்தைகொண்டான் என்னும் பட்டம் சுமந்தனர்.
உழுவுடையான்
உழுவாண்டான்
உழுவண்டான்
உழுவாளன்
உழுவாளி
உழுவாட்சி
உழுப்பிரியன்
உழுக்கொண்டான்
உய்யக்கொண்டான்
உத்தமாண்டான்
உத்தமண்டான்
உத்தமங்கொண்டான்
உத்தமுண்டான்
உத்தமப்பிரியன்
உலகுடையன், உலகுடையான், உலகங்காத்தான், உலகுகாத்தான், உலகாண்டான், உலயன், உலகுய்யன்.
உலகநாதசோழன், உலகுண்டம்(உலயக்குண்டம்) என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் உலகாண்டான், உலகங்கொண்டான், உலகுடையான், உலகங்காத்தான் எனவும் வழங்கும். உலகங்காத்தான்பட்டி என்ற ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் உலகுடையன்,உலகுடையான், உலகங்காத்தான், உலகுகாத்தான், உலகாண்டான், உலயன், உலகுய்யன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஊ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஊமத்தரையன்
ஊமத்தயன்
ஊரத்தியன்
ஊமைப்பிரியன்
ஊரான்பிலியன்
ஊமத்தநாடன்
ஊரத்திநாடன்
எ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
எத்திப்பிரியன்
என்னாட்டுப்பிரியன்
ஏ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன், ஏனாதிநாட்டுப்பிரியன், ஏத்திப்பிரியன்
ஏனாதி திருக்கிள்ளிசோழன், ஏனாதி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஏனாதிகொண்டான், ஏனாதியாண்டான், ஏனாதிப்பிரியன், ஏனாதியுடையான், ஏனாதியாளி எனவும் வழங்கும்.சிறந்த வீரமும் கொடையுமுடையவன். ஏனாதிமங்கலம், ஏனங்குடி, ஏனனூர், ஏனாதிகுடி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இச் சோழ மன்னன் கோனாட்டு எறிச்சிலூர் மாடவன் மதுரைக்குமரனார் என்னும் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல் புறநானூற்றில் 167ம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இவன் மரபினர் ஏனாதிகொண்டான், எத்தொண்டான், ஏத்தொண்டான், ஏனாதியான், ஏனாதிபிரியன், ஏனாட்டுப்பிரியன், என்னாட்டுப்பிரியன், எத்திரிப்பிரியன், எத்தியபிரியன், எத்திரியப்பிரியன், என்னும் பட்டங்களை பெற்றனர். மேலும் இப்பட்டங்கள் படைத் தலைவர்களுக்கு உரியதாக கருதப்பட்டுள்ளது.சங்க காலத்தில் ஏனாதி பட்டம் என்பது அரசன் தன் படைத்தலைவன் மீது கொண்ட நன்மதிப்பினை உணர்த்த வேண்டி தன் பெயர் பொறித்த கணையாளி ஒன்றை அளிப்பதாகும். சங்ககாலத்தில் மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்குட்டுவன் ஆகியோர் ஏனாதிபட்டம் பெற்ற அரசர்களாவார்கள். ஏனாதி சாத்தஞ் சாத்தனார் ஏனாதி பட்டம் பெற்ற புலவராவார். இதன் மூலம் இப் பட்டங்கள் சங்ககாலம் முதல் வழங்கிய பட்டங்கள் என்று அறியமுடிகிறது.
ஐ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஐரைப்பிரியன், ஐயப்பிரியன், (அயிரப்பிரியன், அய்யப்பிரியன்)
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் ஐவசோழன் (அய்வசோழன்) ஐயனாபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் ஐயப்பிரியன்
ஐயங்கொண்டான், ஐயாண்டான், ஐயுடையன், ஐயாளி எனவும் வழங்கப்பட்டது. ஐவூர், ஐயூர், ஐவனல்லூர், ஐயன்பேட்டை (அய்யம்பேட்டை) என்னும் ஊர்களையும் உருவாக்கியரசாண்டவன். ஐயனாறு, ஐயவையனாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கியவன். இவன் மரபோர் ஐரைப்பிரியன், ஐயப்பிரியன் (அயிரப்பிரியன் அய்யப்பிரியன்) என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஒ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஒளியுடையான், ஒளியாண்டான், ஒளியாளன், ஒளியாளி, ஒளியாட்சி, ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் (ஒண்டிப்பிளியன்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஒளிமன். ஒளிகோட்டை (உள்ளிக்கோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அறிவிலும், புகழிலும், கொடையிலும் மிகச்சிறந்தவன். இவன் ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். ஒளியூர், ஒளிமங்கலம், ஒளிக்குடி, ஒளிக்கடை (உள்ளிக்கடை) ஒளிமதி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் ஒளிராயன், ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் (ஒண்டிப்பிளியன்) எனும் பட்டங்களை பெற்றனர்.
ஒமசையன்
ஒசையன்
ஒற்றையன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஒற்றைமன். ஒற்றியூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.ஒற்றகுடி, ஒற்றன்காடு, ஒற்றனூர், ஒற்றமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் ஒற்றையன் எனும் பட்டம் கொண்டனர்.
ஓ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஓனாயன்
ஓமாமுடையன்
ஓடம்போகி, ஓட்டம்பிடுங்கி, ஓட்டம்பிடுக்கி, ஓட்டம்பிடிக்கி.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் ஓடம்போகிசோழன். ஓடம்போகி என்னுமாற்றையும், ஓடாசசேரி, ஓட்டப்பிடாகை, ஓட்டக்குடி, ஓட்டத்தட்டை,ஓட்டப்பிடாரம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் ஓடம்போகி, ஓட்டம்பிடுங்கி, ஓட்டம்பிடுக்கி, ஓட்டம்பிடிக்கி என்னும் பட்டங்களை பெற்றனர்.
ஓமாமரையன், ஓமசையன், ஓமனாயன், ஓமாந்தரையன், ஓந்தரையன்,ஓந்திரியன், ஓமாம்பிரியன், ஓயாம்பிலியன்.
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் ஓமாம்புலிமன், ஓமாம்புலியூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் ஓமாந்தரையன், ஓமாமரையன், ஓமாம்பிரியன், ஓமாமுடையான் என்றும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் மேற்கண்ட பட்டங்களை பெற்றனர்.
ஓரி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஓரி.வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். ஓத்தூர் என்னும் தேவார சிவதலத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். ஓரியூர், ஓரிக்குடி, ஓரிமங்கலம், ஓரிச்சேரி எனும் ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன்.இவன் மரபினர்
ஓரி எனும் பட்டம் கொண்டனர்.
க வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கருவுடையான், கருவாண்டான், கருவாளன், கருவாளி, கருவாட்சி, கருப்பிரியன்,
கருக்கொண்டான், கருப்பூண்டான் கருப்பையன், கருப்பட்டியன், கருவூரான் கருப்பூரான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கருப்பைமன். கருவூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கருவூரான், கருக்கொண்டான் எனவும் வழங்கப்பட்டது. கருங்குலம், கருவாக்குரிச்சி, கருப்பூர், கருப்புக்களர், கருவிலி, கருப்பறியலூர், கருக்குடி, கருகாவூர், கருப்பட்டிமூலை, கருங்கண்ணி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் கருப்பூண்டான், கருப்பட்டியன், கருப்பூரான் எனும் பட்டங்களை பெற்றனர்.
கஞ்சராயன், கஞ்சன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கஞ்சமன். கஞ்சனூர் என்னும் தேவார சிவதல நகரையுண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கஞ்சராயன் எனவும் வழங்கப்பட்டது. இவன் மரபோர் கஞ்சராயன், கஞ்சன் எனும் பட்டங்களை பெற்றனர்.
கரும்பூரான்
கரும்புடையான்
கரும்பாண்டான்
கரும்பாளன்
கரும்பாளி
கரும்பாட்சி
கரும்புகொண்டான்
கன்னாண்டான், கன்னாளன், கன்னாளி, கன்னாட்சி, கன்னப்பிரியன், கன்னகொண்டான், கன்னதேவன், கன்னமுடையன், கன்னப்படையன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கன்னன். கன்னபுரம் என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். கன்ணாண்டான், கன்னகொண்டான், கன்னமுடையான், கன்னப்பிரியன், கன்னாளி எனும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். கன்றாப்பூர் (கன்னாப்பூர்) கன்னாரப்பேட்டை, கன்னந்தகுடி,கன்னக்கொடையான் எனும் ஊர்களையும், கன்னாறு என்னும் காட்டாற்றையும் உருவாக்கி ஆட்சி புரிந்தான். இவன் மரபு வம்சத்தினர் கன்னமுடையன், கன்னப்படையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
கலயன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சாய்மன். சாயக்கோட்டை (கலயநல்லூர்) என்னும் தேவார சிவதலத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். மேலும் சாய்க்காடு, சாய்க்களூர் என்னும் சிவதலங்களையும் உருவாக்கியவன். இவன் மரபு வம்சத்தினர் கலயன் என்ற பட்டம் பெற்றனர்.
கரம்பையன், கரம்பைகொண்டான், கரமுண்டார்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன்.கரம்பைக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். கரவீரம், கரபுரம் என்னும் தேவாரசிவ தலங்களையும் கரம்பை, கரம்பையம், கரம்பைகுடி, கரஞ்சிப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கரம்பையன், கரம்பைகொண்டான், கரமுண்டார் எனும் பட்டங்களை சுமந்தனர்.
கத்தூரியன், கத்தரிகொண்டான், கத்தூரிமுண்டான், கத்தரியன், கத்தூரியன், கத்தரிநாடன், கத்திநாடன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கத்தரிமன். கத்தரி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் கத்தரிகொண்டான், கத்தரிநாடன் எனவும் வழங்கும். கத்தரிமங்கலம், கத்தரிக்குடி, கத்தரிக்காடு, கத்தரிப்புலம், கத்தரிக்கொல்லை என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் கத்தரிகொண்டான், கத்தூரிமுண்டான், கத்தரியன், கத்தூரியன், கத்தரிநாடன், கத்திநாடன்.என்ற பட்டங்களை பெற்றனர்.
களன்
களாவன்
களத்துவென்றான்
கலியன், கலியாட்சி, கலிச்சி, கலிச்சியன், கலிக்கொண்டார், கலிப்பிரியர், கலியனான், கலியராயன், கலியரையன், கலியாளியன், கலிவுடையான், கலிராயன்
கலிகாமசோழன் கலியாணபுரம் என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் கலியன், கலிராயன், கலியரையன், கலியாண்டான், கலிகொண்டான், கலிப்பிரியன், கலியுடையான்,கலியாளி,கலியாட்சி எனவும் வழங்கலாயிற்று. எதிரிகளுக்கு துன்பம் விளைவிக்கும் ஆற்றல் பெற்றவன், கலிக்காமூர் என்னும் தேவார சிவ தலத்தையும் கலியாணோடை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் பலகாலம் தன்னை கலியன் என்று அழைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. துன்பம் நிறைந்த காலத்தை கலிகாலம், கலியுகம் என்பதும் தெறிந்ததே.கலிகாமசோழன் மரபோர் கலியன், கலியாட்சி, கலிச்சி, கலிச்சியன், கலிக்கொண்டார், கலிப்பிரியர், கலியனான், கலியராயன், கலியரையன், கலியாளியன், கலிவுடையானென்னும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டமுடையோர் தஞ்சை மாவட்ட நீடாமங்கலம், சித்தமல்லி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலியராயன்பட்டி, கரம்பக்குடி, கீரனூர், இலந்தைவாடி, பிலாவிடுதி, குலத்திரான்பட்டுஎன்னுமூர்களில் அதிகமாக வாழுகின்றனர்.
கடம்பன், கடம்பையன், கடம்பராயன், கடம்பரான், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையான், கடம்பையாளியான்,
கடம்பசோழன், பெருங்கடம்பனூர் என்னும் தேவார சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் கடம்பன், கடம்பராயன், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையவன், கடம்பையாளி என்வும் வழங்கலாயிற்று. குழித்தண்டலை, கடம்பன்துறை, கடம்பூர், கடவூர், கடவூர்மயானம் என்னும் தேவார சிவ தலங்களையும், கடம்பர்வாழ்க்கை, கடம்பன்குடி, கடலங்குடி என்னும் ஊர்களையும், கடலாழி என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் கடம்பன், கடம்பையன், கடம்பராயன், கடம்பரான், கடம்பையாண்டான், கடம்பைகொண்டான், கடம்பைப்பிரியன், கடம்பையுடையான், கடம்பையாளியான் எனும் பட்டங்களை பெற்றனர்.
கருடி
கரடி
கண்டன், கண்டராயன், கண்டவராயன், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி, கண்டப்பிரியன், கண்டர்பிரியன், கண்டப்பிள்ளை, கடாப்பிள்ளை.
கண்டர்கிள்ளி சோழன், கண்டர்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கண்டன், கண்டராயன், கண்டப்பிரியன் எனவும் வழங்கலாயிற்று. கண்டதேவி என்னும் தேவார சிவ தலத்தையும் கண்டமங்கலம், கண்டர்மாணிக்கம், கண்டனூர், கண்டராயன்பட்டி, கண்டர்குடி (கண்ணுகுடி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் கண்டன், கண்டராயன், கண்டவராயன், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி, கண்டப்பிரியன், கண்டப்பிள்ளை, கடாப்பிள்ளை.என்னும் பட்டங்களை பெற்றனர்.
கங்கன்
கங்கராயன்
கங்கைநாடன்
கங்கநாடான்
களப்பாளன்
களப்பளான்
களப்பாளி
களப்பாடி
களந்தையாண்டான்
களந்தண்டான்
களமுடையன்
களக்குடையன்
கக்குடையன்
களக்கடையன்
கன்னகுச்சிராயன்
கலிங்கராயன்
கச்சிராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கச்சிமன். கச்சி தேவார சிவதல நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கச்சிராயன் எனவும் வழங்கும். கச்சூர், கச்சியூர், கச்சையூர் என்னும் தேவார சிவதலங்களையும், கச்சிக்குடி, கச்சிமங்கலம் (கச்சமங்கலம்) காஞ்சிப்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கச்சிராயன் எனும் பட்டத்தையும் சுமந்தனர்.
கண்டியன், இராசகண்டியன், கண்டியர்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கண்டியன். கண்டியூர் என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். சின்னக்கண்டியூர், கண்டியன் காடு, கண்டியன்பட்டு (கண்டிதன்பட்டு) கண்டியன்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கண்டியன், இராசகண்டியன், கண்டியர்.எனும் பட்டங்களை கொண்டனர்.
கா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கார்யோகன்
கார்யோகராயன்
காருடையன்
காராண்டான்
காராளன்
காராட்சி
காரையாட்சி, காரைக்காச்சி
மாந்தாதா மரபில் வந்த மன்னன் கார்மன், காரைக்கோட்டை எனும் நகரத்தை இராசதானியாகக் கொண்டவன். காரைவாயில் (காராயில்), காரைமேடு(கழிப்பாழை), காரைக்காடு, காரைக்கால், காரைப்பாக்கம், காரைபட்டு, காரைப்பட்டி, காரைக்குடி, காரைப்பள்ளம், காரப்பன்காடு, காரைமங்கலம், என்ற ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
கார்ப்பிரியன்
கார்கொண்டான்
காசிராயன், காசிநாடான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காசிமன். காசாங்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். தென்காசி, சிவகாசி என்னும் பிரபலமான சிவதலங்களையும், காசாங்காடு என்னும் ஊர்களையும் உண்டு பண்ணி அரசாண்டவன்.இவன் மரபினர் காசிராயன், காசிநாடான் எனும் பட்டங்களை பெற்றனர்.
காவலக்குடியன், காலாக்குடியன், காவாளி, காவாலி, காவாடி, காலாடி.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காவலன். காவலகுடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் காவலகுடியன், காவாளி எனவும் வழங்கும். காலம் (கைச்சினம்) என்னும் தேவார சிவதல நகரத்தையும், காவளூர், கானூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் காவலக்குடியன், காலாக்குடியன், காவாளி, காவாலி, காவாடி, காலாடி எனும் பட்டங்களை கொண்டனர்.
காங்கயன், காங்கியன், காங்கேயன்.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த காங்கமசோழ சக்ரவர்த்தி. காங்கயம் (காங்கயன்பட்டி) என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் காங்கயன் எனவும் வழங்கும். காலனுக்கு இது வழக்கென்று போதித்தவன் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்) இவன் மரபோர் காங்கயன், காங்கியன், காங்கேயன் எனும் பட்டங்கள் கொண்டனர். வீரசோழப் பெரிய காங்கேயன் என்பவன் சோழ வல்லரசில் பெரும் வீரனாக விளங்கியுள்ளான். இவன் பெரியகுலத் தலைவன், கங்கை முதல்வன் எனவும் அழைக்கப்பட்டுள்ளான். இவன் கொங்குசோழ மன்னர்களின் முதல்வனும் ஆவான். இவன் குடியோறிய இடம் காங்கேயம் எனவும் அழைக்கப்படுகிறது. நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் கோயில் கல்வெட்டு ஒன்றில் ஆதி சண்டிகேசுவரர் கோயிலுக்கு நிலம் விற்றுக்கொடுத்த தகவலும் அதில் கையெழுத்திட்டுள்ள அதிகாரிகளுள் ஒருவனாக காங்கேயன் இடம் பெற்றுள்ளான். இவன் வழி வந்தோர் சோழர் படைதலைவராகவும், அதிகாரியாகவும் கொங்குநாட்டில் பணியாற்றி உள்ளனர். இப்படம் முடையோர் தஞ்சை மாவட்ட காங்கேயன்பட்டியில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
காவிரிவெட்டி
காவிரிநாடன், காவிரிவெட்டி
சங்ககால சோழர்களுள் மிகவும் புகழ்பெற்றவன் கரிகால் சோழன். இவனது காலம் கி.மு 60 முதல் கி.மு 10 வரை என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சங்ககால இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் இடம்பெறும் பட்டினைப்பாலை, பொருநாற்றுப்படை ஆகிய இரண்டும் கரிகாலனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டவை. இச்சிறப்பினை வேறு சோழ அரசர்கள் எவரும் பெற்றதில்லை. வெள்ளப்பெருக்கால் ஏற்படும் சேதங்களைத் தவிர்கவும் வேளாண்மையை பெருக்கவும், நீர்பாசன வசதிகளை செய்து தரும் பொருட்டு தன்னுடன் போரிட்டு தோற்றுப்போன இலங்கை வேந்தனின் 12000 படை வீரர்களை பயன்படுத்தி திருச்சி திருவரங்கத்திற்கு மேற்கே காவிரி ஆற்றுக்கிடையே 1080 அடி நீளமும், 40 முதல் 60 அடிவரை அகலமும் கொண்ட கல்லணையும் கட்டி காவிரியின் கரைகளை உயர்த்திய பெருமையும் பெற்றவன் கரிகாலன். இச்செய்தியை பிற்கால இலங்கை நூள்களும், கலிங்கத்துப்பரணியும்,சிலப்பதிகாரமும்,தெலுங்குச் சோழன் புன்னியகுமாரனின் மேலப்பாடு கல்வெட்டும் குறிப்பிடுகின்றன.வேறு சங்ககால அரசர்கள் எவரும் வேளாண் விரிவாக்கத்திற்கு அணை கட்டியதாக சான்றுகள் இல்லை. வட இந்திய அரசுகளின் மீது போர் தொடுத்து மகத, வச்சிர, அவந்தி நாட்டு வேந்தர்களையும் வென்று இமயத்தில் புலிக்கொடியை பறக்கவிட்டு பின்பு வாகைப் பறந்தலையில் ஒன்பது வேளிர்குல அரசர்களையும், நாகப்படினம் பகுதியை சார்ந்த நாகர்களின் பன்றி நாட்டையும், பெண்ணை ஆற்றுக்கரை குறும்பர்களையும், ஆயர்தலைவன் இளங்கோ மற்றும் தொண்டை நாட்டையும் வென்று காடுகளை அழித்து வேளான் நிலங்களாகவும் மாற்றிய பெருமை உடையவன் கரிகால் சோழன். இவனது ஆட்சிக்காலத்தில் சோழ அரசு வடக்கே வடபெண்ணை, தெற்கே குமரிவரை பரவியிருந்தது. இதனால் இவன் கரிகால் பெருவளத்தான், காவிரிநாடன் எனும் சிறப்புப் பெயர்களை பெற்றிருந்தான். கள்ளர் குலத்தில் காவிரிநாடன் எனும் பட்டப்பெயர் இவன் சந்ததியினருக்கு வழங்கிவருவதையும் அறியமுடிகிறது. இப்பட்டம் தான் கள்ளர் குல பட்டங்களில் மிகவும் பழமை வாய்ந்தது என்று அறியவும் முடிகிறது.
காவெட்டி
காடுவெட்டி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காடுவெட்டி. காடுகளை வெட்டி அழித்து நகரங்களை உருவாக்கியவன். காட்டூர், மேலக்காட்டுப்பள்ளி, கீழைக்காட்டுப்பள்ளி என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் மரபினர் காடுவெட்டி எனும் பட்டம் கொண்டனர். காடவராயன் என்ற பட்டத்துடன் தொடர்புடைய பட்டம் காடுவெட்டி என்றும், காடுவெட்டி என்பது பல்லவரது பெயராக சாசனங்களிலும் வருகிறது. கங்கவேந்தர்களின் செப்பேடுகள் காஞ்சி மாநகரத்தை காடுவெட்டிகள் ஆண்டதாக கூறுகின்றன. காடுவெட்டி பேரரையன், காடுவெட்டி தமிழ் பேரரையன், விடேல் விடுகு காடுபட்டித் தமிழ் பேரரையன் என்போர் பல்லவ பெரு வேந்தர்களின் கீழிருந்த பல்லவ சிற்ரசர்கள், தலைவர்களென்றும் சுட்டுகின்றன. பழைய திருவிளையாடல் புரானத்தில் பல்லவ குல காடுவெட்டி என்பவனின் பெருமையும் அவனது பக்திச் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. காடுவெட்டி பட்டமுடையோர் புதுக்கோட்டை அம்மாவட்டத்தில் காடுவெட்டிவிடுதி, பாலக்குடிப்பட்டி, உஞ்சைவிடுதி, அரிமளம் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். காடுவெட்டிகள் சோழர் மற்றும் பல்லவர் மரபினர் என்றும் அறிய முடிகிறது.
காடவராயன்
பல்லவ மரபு வழி வந்தவர்கள். தொண்டை மண்டலத்தில் காடுகளை அழித்து நாடு, நகரங்களை உருவாக்கி அரசாண்டவர்கள். சங்க இலக்கிய சான்றுகளால் அறியப்படும் முதல் காடவன் ஐயடிகள் என்னும் சைவ அடிகளாவார். இவரை சுந்தரமூர்த்தி நாயனார் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகிறார். நம்பியாண்டார் நம்பி இவரை பக்திக்கடல் ஐயடிகளாகின்ற நம்பல்லவனே என்று கூறுகிறார். சேக்கிழார் இவரை பல்லவர் தம்குலமரபின் வழித்தோன்றல் என்றும் கூறுகின்றனர். பிற்கால சோழர் அரசியலில் காடவச் சிற்றரசர்களின் பங்கு மிகப்பெரியதாக இருந்துள்ளது. எழிசை மோகன் ஆட்கொல்லியான குலோத்துங்கச் சோழக் காடவராயன் (கி.பி 1129), கடலூர் ஆளப்பிறந்தான் மோகனாகிய இராசராச காடவராயன் (1136), செஞ்சியர்கோன் காடவன் (1152) என்போர் அதிகாரிகளாகவும்,சிற்றரசர்களாகவும் சோழர் ஆட்சியில் பணிபுரிந்துள்ளனர். காடவராயர் என்ற பட்டம் எவ்வித திரிபும் இன்றி இன்றும் வழங்கிவருவது குறிப்பிடத் தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் காடவராயன்பட்டி, நமல்பட்டி, தஞ்சை மாவட்டம் பஞ்சநதிக்கோட்டை, கருக்காக்கோட்டை, ஈச்சங்கோட்டை, ஆழிவாய்க்கால், சாமிப்பட்டி, மருங்குளம், புதுவூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்,
கடாரத்தலைவன்.
கடாத்தலைவன்
கடாந்தாங்கி
காலிங்கராயன்
காரி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் காரி. வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன்.காரிக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். காரிக்கரை என்னும் தேவார சிவதலத்தையும் உண்டு பண்ணியவன். காரியூர், காரிபட்டி, காரிமங்கலம், காரிகுடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் காரி எனும் பட்டம் கொண்டனர்.
கி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கிளாக்கடையன்
கிளாக்கட்டையன்
கிள்ளி, கிள்ளியான், கிளாக்கன், கிள்ளிராயன், கிளிராயன், கிள்ளிகொண்டான், கிள்ளியாளி, கிளியிநார், கிளிகண்டான், கிள்ளியாண்டான், கிளியாண்டான்,
கிள்ளிசோழன், கிள்ளிகோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கிள்ளிராயன்,கிள்ளிகொண்டான், கிள்ளியாண்டான், கிள்ளிப்பிரியன், கிள்ளியாளி எனவும் வழங்கலாயிற்று. நிலத்தை கிள்ளி உழுதமையால் இவன் காலம் முதல் சோழர்களுக்கு கிள்ளி என்னும் பெயர் வழங்கலாயிற்று. கிள்ளிக்குடி என்னும் தேவார சிவ தலத்தையும் கிள்ளியனூர் (கிளியனூர்) கிள்ளியூர்(கிளியூர்) கிள்ளிபட்டி(கிளிப்பட்டி) கிள்ளிமங்கலம்(கிளிமங்கலம்) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். புறநானூறு கிள்ளி என்னும் பெயர்களுடைய ஏழு சோழ மன்னர்களை குறிப்பிடுகிறது.1. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, 2. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், 3. சோழன் நலங்கிள்ளி, 4. சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற்கிள்ளி, 5. சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி, 6. சோழன் நெடுங்கிள்ளி, 7. சோழன் நெடுமுடிக்கிள்ளி. இவர்களின் வழி வந்தோர் கிள்ளி, கிள்ளியான், கிளாக்கன், கிள்ளிராயன், கிளிராயன், கிள்ளிகொண்டான், கிள்ளியாளி, கிளியிநார், கிளிகண்டான், கிள்ளியாண்டான், கிளியாண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டங்கள் சங்க காலத்தவை என்பதும் புலனாகிறது
கீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கீழையன், கீழண்டான், கீழாளன், கீழாட்சி, கீழப்பிரியன், கீழ்க்கொண்டான்
கீழாண்டான், கிழண்டன், கீழுடையான், கீழாளி.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கீழைமன் கீழக்கோட்டை என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவனை கீழ்கொண்டான், கீழுடையான், கீழ்ப்பிரியன், கீழாளி, கீழாண்டான் என்றும் அழைத்தனர். வேளாளரில் ஒரு வகுப்பாருக்கு கிழார் என்ற பட்டமும் கொடுத்தவன். கீழையிலான், கீழையூர், கீழைவழி, கீழையம் என்னும் தேவார சிவதலங்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் வழி வந்தவர்கள் கீழாண்டான், கிழண்டன், கீழுடையான், கீழாளி என்ற பட்டங்களை பெற்றனர்.
கீரமுடையன்,கீருடையன், கீரரையன், கீரையன்,கீரைக்கட்டயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கீரமன். கீரநகரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் கீரங்கொண்டான், கீரமுடையன், கீரரையன் என்வும் வழங்கலாயிற்று. கீரக்களூர் என்னும் சிவதலத்தையும் கீரமங்கலம், கீரனூர், கீரங்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கீரமுடையன்,கீருடையன், கீரரையன், கீரையன், கீரைக்கட்டயன் என்ற பட்டங்களை பெற்றனர்.
கு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
குறுக்கையன், குறுக்குடையான், குறுகாளன், குறுக்காளி, குறுக்காட்சி
குறுக்கைப்பிரியன், குறுகொண்டான், குறுக்கையாண்டான், குறுக்கண்டான், குறுக்கையர்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குறுக்கைமன். குறுக்கை, குறுமானிக்குடி என்ற இரு சிவதலங்களை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வேளாளரில் ஒரு பிரிவினர்க்கு குறுக்கையர் என்னும் பட்டம் கொடுத்தவன். குறுக்கையாண்டான் என்ற பெயரும் பெற்றவன். குறுங்குடி, குறும்பூர், குறுங்களம், குறுங்குளம் என்னுமூர்களை உண்டாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபோர் குறுக்கையாண்டான், குறுக்கண்டான், குறுக்கையர் எனும் பட்டங்களை பெற்றனர்.
குண்டையன், கொன்றையன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குண்டையன். குண்டையூர், குண்டூர், குண்டாகோயில், குண்ணூர், குண்ணலூர், குண்ணுவாரத்தி என்னும் நகரங்களை உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் குண்டையன், கொன்றையன் எனும் பட்டங்களை கொண்டனர்.
குழந்தைராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குழைமன். குழகு (குழகர்கோயில்) தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். குழையூர் என்னும் சிவதலத்தையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் குழந்தைராயன் எனும் பட்டம் பெற்றனர்.
குமாராண்டான், குமரண்டான்
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் குமாரசோழன். குமாரபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் குமாராண்டான் என்வும் வழங்கப்பட்டது. குமாரமங்கலம், குமாரங்குடி, குமாரனூர் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் குமாராண்டான், குமரண்டான் என்ற பட்டங்களை கொண்டனர்.
குளந்தைராயன், கொழுந்தைராயன்.
கிள்ளிவளவ சோழன், உறையூரை இராசதானியாகக் கொண்டவன். குளத்தூர் என்னும் சிவ தலத்தையும், குளமங்கலம், குளக்குடி, குளப்பாடு, குளப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். வீரமும் கொடையுமுடையவன்.கருவூரை முற்றுகையிட்டு சேரனை தூங்கெயிலெறிந்து வென்றவன். அழகிய சோலை சூழ்ந்த குளத்தருகிள் துயின்ற காரணத்தினால் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் என்று பெயர் பெற்றவன். கவி பாடுவதிலும் வல்லவன். இவன் பாடிய பாடல்கள் புறநானூற்றில் 173ம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஆலந்தூர்கிழார், ஆவூர்மூலங்கிழார், கோவூர்கிழார், வேள்ளைக்குடி நாகனார், இடைக்காடனார், எருக்காட்டூர் தாயங்கண்ணனார், நல்லிறையனார், மானொக்கத்துநப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறைமாசாத்தனார், சல்லியங்குமரனார் என்னும் புலவர் பெருமக்கள் புகழ்ந்தும் இறந்தபின் வருந்தியும் பாடப்பெற்றவன். இப் பாடல்கள் புறநானூற்றில் 34,35,36,37,38,39,40,41,42,46,69, 70, 226, 227, 386,393, 397ம் பாடல்களாகவும்,நற்றினையில் 141ம் பாடலாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. இவன் மரபோர் குளந்தைராயன், கொழுந்தைராயன் என்ற பட்டங்களை பெற்றனர்.
குச்சிராயன்
கூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கூழையன், கூழாக்கி, மண்வெட்டிக்கூழ்வாங்கி, மண்வெட்டியில்கூழ்வாங்கி.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கூழைமன். பூமியில் மண்ணை வெட்டி, ஆராய்ந்து பொன்மணலைக் கண்டறிந்து உருக்கிப் பொற்கட்டி (பொற்பாளம்) செய்தவன். இவன் காலமுதல் பூமியில் சுரங்கம் அமைத்து தங்கம் எடுக்கும் வழக்கம் உண்டாயிற்று. மண்வெட்டி மூலம் பொன்மணலை அள்ளியதால் மண்வெட்டியில் கூழ்வாங்கி என்ற பட்டம் பெற்றான். (கூழ் என்றால் பொன் என்று அர்த்தம் உண்டு) இவன் மணலை அள்ளியதால் கூழையாறு என்ற ஒரு சிற்றாரும் உருவாயிற்று. மேலும் இவன் கூழையூர், கூழைக்குடி, கூழைமங்கலம், கூழைப்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கூழையன், கூழாக்கி, மண்வெட்டிக்கூழ்வாங்கி, மண்வெட்டியில்கூழ்வாங்கி என்ற பட்டங்களை பெற்றனர்.
கூராயன், கூர்சான், கூராட்சி, கூராண்டான், கூரப்பிரியன், கூராளி, கூரையன்.
பெரும்பற்றசோழன் மரபில் வந்த கூரசோழன். கூராட்சிகோட்டை (கூப்பாச்சிகோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் கூரப்பிரியன், கூராளி, கூராயன், கூராண்டான், கூராட்சி எனவும் வழங்கப்பட்டது. கூரூர் என்ற தேவார சிவதலத்தையும், கூரயாறு(கோரையாறு) என்னும் பேராற்றையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் கூராயன், கூர்சான், கூராட்சி, கூராண்டான், கூரப்பிரியன், கூராளி, கூரையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
கூரராசன்
கூச்சான்
கூத்தப்பராயன், கொத்தப்பராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கூத்தமன். இவன் பெயர் கூத்தப்பராயன் எனவும் வழங்கும். கூத்தூர், கூத்தனூர், கூத்தன்குடி, கூத்தமங்கலம் கூத்தானல்லூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் கூத்தப்பராயன், கொத்தப்பராயன் எனும் பட்டங்களை கொண்டனர்.
கெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கை வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கைராயன்
கொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கொற்றரையன், கொற்றுடையன், கொற்றாண்டான், கொற்றாளன், கொற்றாளி,
கொற்றாட்சி, கொன்றையன், கொற்றங்கொண்டான், கொன்னமுண்டான், கொற்றப்பிரியன், கொத்தப்பிரியன்,
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கொற்றமன். கொற்றங்குடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அறிவிலும், புகழிலும், கொடையிலும், வீரத்திலும், வெற்றியிலும் மிகச்சிறந்தவன். இவன் கொற்றங்கொண்டான், கொற்றப்பிரியன் எனவும் அழைக்கப்பெற்றான். கொற்றமங்கலம் (கொத்தமங்கலம்) கொற்றங்குடி (கொத்தங்குடி) கொற்றூர் (கொத்தூர்) எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் கொன்னமுண்டான், கொத்தப்பிரியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
கொங்கணன்
கொடிகொண்டான்
கொடிக்கமுண்டான்
கொடிராயன்
கொடிக்கிராயன்
கொடிக்கவிராயன்
கொடியாளன்
கொடிபாலன்
கொல்லத்தரையன், கொங்கரையன், கொல்லமுண்டார்.
கொல்லம் என்பது சேரநட்டின் ஒரு பகுதியாகும். இராசராச சோழன் படை எடுத்து கொல்லத்தை வென்றான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய மரபினர்களுக்கு அளித்த பட்டமே கொல்லத்தரையன், கொல்லமுண்டார் என்பதாகும். இராசமகேந்திரசோழன் கொல்லத்தரையன் என்னும் சிறப்புப் பட்டத்தை பெற்றிருந்தான் என்று கல்வெட்டுகள் உரைக்கிறன. இப் பட்டமுடைய கள்ளர்கள் திருவையாறு திருசென்னம்பூண்டி, தஞ்சை மாவட்டம் உஜ்ஜினி, உடுமலைப்பேட்டை காரத்தொழுவு முதலிய ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்
கொன்னமுண்டான்
கொடும்பன்
கொடும்பையன்
கொடும்பைராயன்
கொடும்பையரையன்
கொடும்பைப்பிரியன்
கொடும்புலியன்
கொடுப்புலியன்
கொடும்பிரியன்
கொத்தப்பராயன்
கோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
கோபாலன்
கோனேரிகொண்டான்
கோனேரிப்பிரியன்
கோதண்டப்பிரியன்
கோட்டைசுருட்டி
கோட்டைமீட்டான்
கோழியன், கோழயன்.
அண்டசோழன் மரபில் வந்த மன்னன் வீரவாதித்த சோழன். உறையூரை இராசதானியாகக் கொண்டவன். இவன் திருவுலாப் போகும் போது தான் ஏறியிருந்த யானையை தெய்வத்தன்மை பொருந்திய ஒரு கோழி போர் செய்து வென்ற காரணத்தினால் இவனுக்கு கோழியர்கோன், கோழிவேந்தன், கோழியன் என்ற பெயர்களும், அந்நகருக்கு கோழியூர், கோழிநகர் என்னும் பெயர்களும், அந்நகர திருக்கோயிலுக்கு குக்குடேசரம், முக்கீச்சரம் என்னும் பெயர்களும் வழங்கலாயிற்று. இவன் காலம் முதல் சோழர்களுக்கு கோழியன், கோழியர்கோன், கோழிவேந்தன் என்னும்பெயர்களும் வழ்ங்கின. இவ்வரசன் காலமுதல் சோழர்களின் நாணயங்களில் கோழியின் உருவம் பொரிக்கப்பட்டது.இவன் மரபோர் கோழியன், கோழயன் என்ற பட்டங்களை பெற்றனர்.
கோட்டரையன், கோட்டையாண்டான், கொட்டையாண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் கோட்டமன். கோட்டைபட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் கோட்டைராயன், கோட்டரையன், கோட்டைப்பிரியன், கோட்டையாண்டான், கோட்டைகொண்டான் எனவும்வழங்கப்பட்டது. கோட்டூர், கோட்டாறு என்னும் தேவார சிவதலங்களையும், கோட்டுக்காடு, கோட்டைப்பத்து, கோட்டுக்கா, கோட்டுச்சேரி, கோட்டாக்குடி என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் கோட்டரையன், கோட்டையாண்டான், கொட்டையாண்டான் என்னும் பட்டங்கள் பெற்றனர்.
ச வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சக்கரநாட்டான், சக்கரன், சக்கரை, சக்கரராயன், சக்கராயன், சக்கரநாடன், சக்கரையப்பநாடாள்வான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சக்கரமன். சக்கரப்பள்ளி என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சக்கரராயன், சக்கரநாடன் எனவும் வழங்கும். சகரப்பேட்டை, சக்கரமங்கலம், சக்கரக்குடி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் சக்கரன், சக்கரை, சக்கரராயன், சக்கராயன், சக்கரநாடன், சக்கரையப்பநாடாள்வான் எனும் பட்டங்களை கொண்டனர்.
சந்திரங்கொண்டான், சந்திரதேவன், சம்பிரதேவன், சந்திரப்பிரியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் சந்திரசோழன். சந்திரப்பாடி என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சந்திரங்கொண்டான், சந்திரதேவன், சந்திரப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. சந்திரலோக்கைப் பெருந்துறை (செந்தலை) என்னும் சிவதலத்தையும், சந்திரநதி என்னும் சிற்றாற்றையும் உண்டாக்கியவன். இவன் மரபோர் சந்திரங்கொண்டான், சந்திரதேவன், சம்பிரதேவன், சந்திரப்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
சம்பிரதி
சங்கரன்
சங்கராசன்
சங்கரதேவன்
சங்கத்தியன்
சயங்கொண்டான்
சனகராயன்
சமயன், சமயதேவன், சமயாளி, சவுளி, சவுட்டி, சமட்டி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சமயன். சமயபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். சமயனூர், சமயன் குடிகாடு என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் சமயன், சமயதேவன், சமயாளி, சவுளி, சவுட்டி, சமட்டி எனும் பட்டங்களை கொண்டனர்.
சா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சாத்தயன், சாதகன், சாத்தரையன், சாமுத்தரையன், சாமுத்திரியன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சாத்தமன். இவன் பெயர் சாத்தயன், சாத்தரையன் எனவும் வழங்கும். சாத்தமங்கை (சாத்தமங்கலம்) என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். சாத்தனூர், சாத்தூர்,சாத்தங்குடி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் சாத்தயன், சாதகன், சாத்தரையன், சாமுத்தரையன், சாமுத்திரியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
சாணன்
சாணரையன்
சாணை
சாளுக்கியன்
சாளுவன், சாளுவராயன்.
சோழ மரபில் வந்த மன்னன் சாளுவசோழன். சாளுக்கிய வம்சத்தவராகவும் இருத்தல் கூடும். விஜயநகர அரசர்களின் காலத்தில் தென்நாட்டில் அவர்களின் பிரதிநிதியாக திருமலைராயர் சாளுவர் என்பார் இருந்தார் என்று சீரங்கத்தில் கிடைத்த சிலாசானம் குறிப்பிடுகிறது (இலக்கிய வரலாறுபாகம் 2 பக்கம் 369.கா.சு.பிள்ளை) சாளுவநாயக்கன் பட்டினம் சோழநாட்டு துறைமுகங்களுள் ஒன்றாகும். சாளுவன் பேட்டை, சாளுவனாறு என்பன இப்பட்டங்களின் அடிப்படையில் தோன்றியதாகும்.
சி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சித்தாட்சி, சிற்றாட்சி, சிட்டாச்சி.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் சித்தசோழன். சித்தலபாடிஎன்னும்நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சித்தாட்சி எனவும் வழங்கும். சித்தாறு என்னும் சிற்றாற்றையும், சித்தாமூர் (சித்தாம்பூர்) என்னும் விநாயக தலத்தையும், சித்தூர், சித்தாற்றூர், சித்தலூர்,சித்தரகுடி, சித்தகாடு, சித்தபத்து என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் சித்தாட்சி, சிற்றாட்சி, சிட்டாச்சி என்னும் பட்டங்களை கொண்டனர்.
சிந்துராயன்
சிங்களராயன்
சிங்களான்
சிங்களப்பிரியன்
சிங்களப்பிலியன்
சிங்கப்பிலியன்
சிங்களாளி
சிங்காரிக்கன்
சிறுராயன், சிறுநாட்டுராயன், சிறுநாடன், சிறுமாடன், சிறுப்பிரியன், சிலுப்பி, சிலம்பன், சிலுப்பன், செருமாடன், சிலுக்கியன்,
சிறுகிள்ளிசோழன், சிறுகோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சிறுராயன், சிருநாடன், சிறுப்பிரியன் எனவும் வழங்கலாயிற்று. சிறுகுடி, சிற்றேமம் என்னும் தேவார சிவ தலங்களையும், சிற்றம்பலம் என்னும் சிவ தலத்தையும், சிறுமங்கலம்,சிறுபாமணி, சிறுகளத்தூர், சிறுவயல், சிறுவனூர், சிறுவளூர் என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் சிறுராயன், சிறுநாட்டுராயன், சிறுநாடன், சிறுமாடன், சிறுப்பிரியன், சிலுப்பி, சிலம்பன், சிலுப்பன், செருமாடன், சிலுக்கியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
சீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சீனத்தரையன்
சு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சுந்தரராயன்
சுந்தன்
சுன்றையன்
சுக்கிரன்
சூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சூரியன்
சூரக்கோட்டையன், சுரக்குடையன், சுரக்குடியான், சூரக்குடையன், சூரக்கொடையன், சூரப்பிலியன், சூரப்பிரியன், சுரப்பிடுங்கியன், சுரைப்பிடுங்கியான்,
சூரவாதித்தசோழன், சூரக்கோட்டை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியகக் கொண்டவன். இவன் பெயர் சூரக்கோட்டையன், சூரங்கொண்டான், சூரமாண்டான், சூரப்பிரியன், சூரமுடையான், சூரமாளி எனவும் வழங்கும். சூரமங்கலம், சூரக்குடி (சுரக்குடி) சூரனூர், சூரயூர், சூரப்பள்ளம், என்னும் ஊர்களையும், கோளாலி என்னும் சிவ தலத்தையும், சூரனார்கோவில் என்னும் நவக்கிரக தலத்தையும் உருவாக்கி அரசு புரிந்தவன். ஆதிசேடன் மகள் காந்திமதியை மணந்தவன். தளவழிக்குகையி னிற்பொழி பிலத்த்ன்வழியே தனிந்ந்துரகர் த்ங்கண்மனி கொண்டவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. இவன் மரபோர் சூரக்கோட்டையன், சுரக்குடையன், சுரக்குடியான், சூரக்குடையன், சூரக்கொடையன், சூரப்பிலியன், சூரப்பிரியன்,சுரப்பிடுங்கியன், சுரைப்பிடுங்கியான், என்னும் பட்டங்கள் பெற்றன
சூரப்பிரியன்
செ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
செம்மைக்காரன்
செய்ஞலாளி
செம்மைகொண்டான்
செட்டி
செம்பியன், செம்பன், செம்பியரையன், செம்பரையன், செம்படையன், செம்பியத்தரையன், செம்பியமுத்தரையன், செம்பியமுத்தரசு, செம்பியமுத்திரியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த சிபி சக்ரவர்த்தி. செம்பியபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். முதல் ஏழு வள்ளல்களில் ஒருவன். புறாவுக்காக பருந்துக்கு தன் சதையை கொடுத்தவன். கலிங்கத்துப் பரணியிலும், அகநானூறிலும் பாடப் பெற்றவன். செம்பியரையன், செம்பியத்தரையன் எனவும் அழைக்கப் பட்டவன். செம்பியன்பள்ளி (செம்பொன்பள்ளி), செம்பியங்குடி (செம்பன்குடி) என்னும் தேவார சிவதலங்களையும், செம்பியன்மங்கலம், செம்பியங்களர் எனும் ஊர்களையும் உருவாக்கி சம நீதி தர்மத்துடன் ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் செம்பியன், செம்பன், செம்பியரையன், செம்பரையன், செம்படையன், செம்பியத்தரையன், செம்பியமுத்தரையன், செம்பியமுத்தரசு, செம்பியமுத்திரியன்
எனும் பட்டங்களை சுமந்தனர்.
செனவராயன்
சென்னண்டான்
சென்னாடான்
சே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சேய்ஞலாண்டான், சேய்ஞலாளன், சேய்ஞலாளி, சேய்ஞலாட்சி, சேய்ப்பிளன்
சேய்ஞற்கொண்டான் (செம்மைகொண்டான்) சேய்ஞலரையன் (செம்மைக்காரன்) சேய்ஞற்பிரியன் (சேப்பிளன்)
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சேய்ஞன். சேய்ஞலூர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சேய்ஞற்கொண்டான், சேய்ஞலரையன், சேய்ஞற்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. சேயாறு என்ற ஆற்றையும், சேய்குடி, சேயூர், சேய்மங்கலம் என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் செம்மைகொண்டான், செம்மைக்காரன், சேப்பிளன் எனும் பட்டங்களை பெற்றனர்.
சேணன், சேண்டப்பிரியன், சேண்ராயன், செனவராயன், சேணரையன், சன்னவராயன், சனகராயன், சாணரையன், சாணன், சாணையன், சேண்கொண்டான், சேணாடன், சேனக்கொண்டான், சேனைகொண்டான், சேணாண்டான், சேனைநாடன், சேனைநாட்டான், சேண்பிரியன், சேனைகொண்டான், சென்னாடான். சென்னண்டான், சாணூரான்.
நலங்கிள்ளி சேட்சென்னி சோழன், சேண்டாகோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சேண்ராயன், சேணரையன், சேண்கொண்டான்,சேணாண்டான், சேண்பிரியன், சேணாடன் எனவும் வழங்கும். மிக்க வீரமும் கொடையுமுடையவன், நீர்வாவி சூழ்ந்த சோலையில் துயின்ற காரணத்தினால் இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளிசேட் சென்னி என்று பெயர் பெற்றவன். இவன் காலமுதல் சோழர்களுக்கு சென்னி என்ற பெயரும், சோழநாட்டிற்கு சென்னிநாடு என்னும் பெயரும் வழங்கலாயிற்று. இச் சோழ மன்னன் கோனாட்டு எறிச்சிலூர் மாடவன் மதுரைக்குமரனார் என்னும் புலவரால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல் புறநானூற்றில் 61ம் பாடலாக இடம் பெற்றுள்ளது. இவன் மரபோர் சேண்ராயன், செனவராயன், சேணரையன், சன்னவராயன், சனகராயன், சாணரையன், சாணன், சாணையன், சேண்கொண்டான், சேனக்கொண்டான், சேனைகொண்டான், சேணாண்டான், சேணாடன், சேனைநாடன், சேனைநாட்டான், சேண்பிரியன், சேனைகொண்டான், சென்னாடான். சென்னண்டான், சாணூரான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
சேந்தராயன், சிந்துராயன்
சேந்தசோழன் அழிசிசோழனின் மகன், உறையூரை இராசதானியாகக் கொண்டவன். அழகிலும், வீரத்திலும்,கொடையிலும் சிறந்து விளங்கியபடியால் உருவப்பேரிளஞ்சேட் சென்னி என்று பெயர் கொண்டவன்.அழுந்தூர் வேளிர்குல மகளை மணந்தவன். கரிகால் பெருவளத்தான் சோழன் இவன் மகனாவான். பாணர், பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர் பெருமக்கள் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப் பாடல்கள் புறநானூற்றில் 4, 261ம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன.இவன் மரபோர் சேந்தராயன், சிந்துராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
சேந்தமுடையான்
சேந்தமடையான்
சேங்கொண்டான்
சேதிராயன்
சேதிரான்
சேதுரான்
சேதிநாடன்
சேதுநாடன்
சேனைத்தலைவன்
சேனைத்தலையன்
சேனாதிபதி
சேனாபதி
சேனாதி
சேனாதிபன்
சொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சொக்கராயன்
சோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
சோணையன், சோணாடுகொண்டான், சோணாருண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் சோணைமன். சோணாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் சோணையன், சோணாடுகொண்டான் எனவும் வழங்கப்பட்டது. இவன் மரபினர் சோணையன், சோணாடுகொண்டான், சோணாருண்டாண் எனும் பட்டங்களை பெற்றனர்.
சோழன், சோழவன், சோழரையன், சோழராசன், சோதிரையன், சோமராசன், சோழநாயகன், சோமநாயக்கன், சோமணநாயக்கன், சோழாட்சி, சோமாசி,
சோழங்கொண்டான், சோழபாண்டியன், சோழகங்கன், சோழங்கன், சோழகங்கதேவன்
சோழங்கதேவன், சோழகங்கநாடன், சோழகங்கநாடான், சோழகனகராசன்
சோழதரையன், சோழதிரியன், சோநாயகன், சோழதேவன், சோமதேவன், சோழகோன், சோழகன், சோழப்பிரியன், சோழநாடன், சோமநாடான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த சக்ரவர்த்தி சுராதிராசசோழன். சோழபுரம் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். தன்னுடைய ஆளுகையில் அடங்கிய பூமிக்கு சோழ மண்டலம் என்று பெயரிட்டவன். பிராமணர், வேளாளர், இடையர் போன்ற சில வகுப்பினர்களுக்கு சோழியர் என்ற பட்டத்தையும் வழங்கியவன். தன் மூத்த மகனுக்கு இராசகேசரி என்றும் இளைய மகனுக்கு பரகேசரி எனவும் பெயரிட்டவன். இதன் பின் அரியாசனம் ஏறிய சோழ மன்னர்கள் மாறிமாறி இராசகேசரி, பரகேசரி என்னும் பட்டந்தரித்தனர். (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது) சோழமங்கலம், சோழனூர், சோழன்பேட்டை, சோழன்பட்டி, சோழங்குடி, சோழன் குடிகாடு, சோழாட்சி(சோமாசி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டான். இவன் மரபினர் சோழன், சோழவன், சோழரையன், சோழதரையன்,சோழதிரியன்,சோதிரையன், சோழராசன், சோமராசன், சோநாயகன், சோழாட்சி, சோமாசி, சோழதேவன், சோமதேவன், சோழகோன், சோழகன், சோழப்பிரியன், சோழநாடன், சோமநாடான் என்ற பட்டங்களை பெற்றனர்.
ஞ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ஞா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
த வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தலையன், தலைராயன், தனராயன், தலைசைராயன், தனசைராயன்.
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் தலைமன், தலையாலங்காடு, தலைச்சங்காடு, தலைஞாயிறு, தலைக்காடு, தலையூர், தலைக்குடி, தலைச்சேரி, தலையமங்கலம், முதலிகுத்தே போன்ற நகர்களை உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் மேற் கூரிய பட்டங்களை கொண்டனர்.
தளியன்
தளிராயன்
தளியுடையான்
தளியாண்டான்
தளியாளன்
தளியாளி
தளியாட்சி
தளிப்பிரியன்
தளிகொண்டான்
தளிநாடன்
தக்கோலன், தக்கோலாக்கியன், தாக்கலக்கி,
தக்கோலசோழன், தக்கோலம் என்னும் தேவார சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன்.தக்களூர், தகட்டூர் என்னும் தேவார சிவ தலங்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் தக்கோலன், தக்கோலாக்கியன்,தாக்கலக்கி, என்னும் பட்டங்ககளை கொண்டனர்.
தஞ்சைராயன்
தஞ்சிராயன்
தண்டநாயகன்
தண்டத்தலைவன்
தண்டத்தலையன்
தா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தாளியன்
தாளிதியன்
தானைத்தலைவன்
தானைத்தலையன்
தானாதிபதி
தானாபதி
தானாதி
தானாதிபன்
தாக்கலக்கி
தி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
திருப்பூட்சி
தின்னாப்பிரியன்
திண்ணாப்பிரியன்
திராணி
திருக்கட்டியன்
திருக்காட்டியன்
தில்லைராயன், தில்லையாண்டான், தில்லைபிரியன், தில்லையாளி,தில்லைகொண்டான்.
செம்பியன் சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் தில்லைமன். தில்லை (சிதம்பரம்) என்னும் தேவார சிவதல நகரையுண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். தில்லைவிடங்கன், தில்லையாளிநல்லூர், தில்லைவளகம், தில்லையம்பூர் எனும் ஊர்களையும் உண்டாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபோர் தில்லைராயன், தில்லையாண்டான், தில்லைபிரியன், தில்லையாளி,தில்லைகொண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.
து வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
துறையாண்டான், துறவாண்டான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் துறைமன். துறைக்கோட்டை, துறையாண்டான்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் துறையாண்டான் எனவும் வழங்கும். துறையூர் என்ற தேவார சிவதலத்தையும், துறைப்பூண்டி எனும் சிவதலத்தையும் துறைமங்கலம், துறைக்குடி, துறைப்பட்டி, துறைக்குரிச்சி (துவரைக்குரிச்சி) துறையாண்டான்பட்டி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் துறையாண்டான், துறவாண்டான் என்ற பட்டங்களை பெற்றனர்.
துண்டராயன், துண்டுராயன், துண்டயன், தொண்டயன், துண்டன், தொண்டன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் துண்டீரன். துண்டுராயன்பாடி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் துண்டராயன், துண்டயன், துண்டன் எனவும் வழங்கும். துண்டுராயன்பட்டு, துண்டுராயன்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் துண்டராயன், துண்டுராயன், துண்டயன், தொண்டயன், துண்டன், தொண்டன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
தெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தென்னவராயன், தென்னரையன், தென்னன், தென்கொண்டன், தெங்கொண்டான், தெங்கண்டான், தெங்கிண்டான், தென்னப்பிரியன், தின்னாப்பிரியன், திண்ணாப்பிரியன், தென்னன்
செம்பியன் மரபில் வந்த செங்கண் சோழன், சோழ மன்னன் சுபதேவனுக்கும் கமலவதி என்பாளுக்கும் பிறந்தவன். கமலவதி பிரசவ வேதனை கண்டபோது சோதிட வல்லுனர்கள் இன்னும் ஒரு நாளிகை கழித்து குழந்தை பிறக்குமானால் மூவுலகத்தையும் ஆளக்கூடிய மன்னனாவான் என்று கூறிய படியால் தன்னை கால் மேலாகவும் தலை கீழாகவும் இருக்கும்படி கட்டி ஒரு நாளிகை கடந்தபினர் கட்டை அவிழ்த்து விடும்படிகூறி குழந்தையை மாசி மாதம் சதய நட்சத்திரத்தில் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்த போது கண்கள் சிவந்து பிறந்தபடியால் செங்கணானென்று பெயரும் இட்டு தாய் மடிந்தாள். இக்குழ்ந்தையே பெயர் பெற்ற கோச்செங்கணாவான்.இவன் சங்ககால சோழ அரசர்களில் ஒருவன். கிள்ளி வளவனுக்கு பின்னர் ஆண்ட மன்னர்களில் மக்கள் மனதில் அழியா இடம்பெற்றவன்.
தென்னூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். கடைச்சங்கால இறுதியில் வாழ்ந்தவன், அறுபத்துமூன்று நாயன் மார்களில் ஒருவனாவான். ஈசனுக்கு 70 மாடக்கோயில்களை காவிரிகரை ஓரத்தில் கட்டி அரசாண்டதாக திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.
இவன் கட்டிய ஆனைபுகாக்(மாட) கோயில்களிள் ஆனைக்கா, பெண்ணாகடம், சாய்க்காடு,மண்ணிப்படிக்கரை, செம்பிருப்பு, செம்பொன்பள்ளி, வடதலைச்சங்காடு, தெந்தலைச்சங்காடு, ஆக்கூர், பெருமுளை, தேரழுந்தூர், வைகல், நரையூர் (மணிமாடம்) துற்காட்சி, நாலூர், ஆவூர், பசுபதிமங்கை, மாத்தூர், குடவயில், இங்கண், மருகல்,அம்பர், நன்னிலம், பாம்புரம், மாதூர், கீழ்வேளூர், தேவூர், சிக்கல், களப்பாள், இராசசேரிபுரம், கீழைவழி, தண்டலை, நீணேறி, வலிவலம், கீழையிலரன், பழையாறுவடதளி, பழையாறுதென்றளி, பழையாறுகீழ்த்தளி, பெருவேளூர், நாகைமலையீச்சரம், இராமனதீச்சரம், பெரும்கடம்பனூர், சேய்ஞலூர், நாகை மேலைக்காயரோகணம், வீழிமிழலை, பனையூர், என்னும் 47 கோயில்கள் புலப்பட்டன. மற்ற 23 கோயில்கள் புலப்படவில்லை.
இவனுக்கு நல்லடிக்கோன் என்ற மகனும் இருந்தான். புறநானூறு, களவழிநாற்பது என்ற சங்கனூல்களிலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், திருமங்கை ஆழ்வார் ஆகியோறாலும் பாடப்பற்றவன் செங்கணான்
சேரமன்னன் கணைக்கால் இருபொறையைச் சிறைபிடித்துக் குடவாயில் கோட்டத்து சிறையில் வைத்தான், பின்பு பொய்கையார் என்னும் புலவர் பாடிய களவழிநாற்பது படலைக் கேட்டு சேரமன்னன் சிறை நீக்கி அரசுரிமை அளித்தான்
கோச்செங்கனானுக்கு தென்னவராயன், தென்னரையன்,தென்கொண்டான், தென்னாண்டான்,தென்னப்பிரியன், தென்னுடையான், தென்னாளி, என்ற பெயர்களும் உண்டு. இவன் தென்னவராய நல்லூர், தென்னவநாடு, தென்னங்குடி, தென்னம்புலம், தென்குடி, தென்பரை, தென்பாதி, தென்னங்குளம், தென்னவராயன் பேட்டை என்னும் ஊர்களை உருவாக்கி ஆட்சிபுரிந்தவன்
இவன் பெயர் தென்னவராயன், தென்னரையன், தென்கொண்டான், தென்னாண்டான், தென்னப்பிரியன், தென்னுடையன், தென்னாளி, எனவும் வழங்கலாயிற்று.
இவன் மரபினர் தென்னவராயன்,தென்கொண்டான், தென்னரையன், தென்னன், தென்னப்பிரியன், தென்னுடையான், தென்னாளி, தெங்கிண்டான், தின்னாப்பிரியன், தெங்கண்டான், என்னும் பட்டங்களை கொண்டனர்.
தெத்துவெண்டான்
தெலிங்கராயன், தெலிங்கதேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் தெலிங்கமன். தெலிங்காபுரி என்னும்நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் தெலிங்கராயன், தெலிங்கதேவன் என்வும் வழங்கழாயிற்று. இவன் மரபோர் தெலிங்கராயன், தெலிங்கதேவன் எனும் பட்டங்களை பெற்றனர். இப்பட்டங்கள் இராசராச சோழனுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இராசராசனின் தெலுங்க வெற்றியை சிறப்பிக்கும் வகையில் தெலுங்க குலகாலன் என்ற பட்டமும் வழங்கிவந்தது. இப்பட்டமுடையோர் ஒரத்தநாடு,தெலுங்கன்குடிகாடு முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.
தே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தேவராயன், தேசிராயன், தேவாண்டான், தேவண்டன், தேவன்
மனுசக்ரவர்தியின் மகனாகிய இக்குவாகு தேவூரெனும் (தேவாரம் பெற்ற சிவம் நகரத்தை உருவாக்கி அரசு புரிந்தான். இதன் மூலம் இவனை தேவராயன், தேவாண்டான், தேவன் என்றும் அழைக்கப்பட்டான். இவன் உருவாக்கிய ஊர்கள் தேவன்குடி, தேவனூர், தேமங்கலம், தேவராயன் பேட்டை, தேவராயநல்லூர், தேவதானமென்பனவாகும். இக்குவாகு மரபு வழி வந்தோர் மேற்கூரிய
தேவராயன், தேசிராயன், தேவாண்டான், தேவண்டன், தேவன் என்ற
பட்டங்களை கொண்டனர்.
தேவாளன்
தேவாளி
தேவாட்சி
தேவப்பிரியன்
தேவுடையன்
தேவுகொண்டான்
தொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
தொண்டைமான், தொண்டையன், தொண்டைப்பிரியன், தொண்டாப்பிரியன், தொண்டமார், தொண்டாயன், தொண்டைமான் கிளையர், தொண்டையன், தொண்டன்
கரிகால் சோழன் வழி வந்தவன் கிள்ளிவளவன். இவனுக்கு நெடுமுடிகிள்ளி, மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி என்ற பெயர்களும் உண்டு. கிள்ளிவளவன் த்ன் இளமைக்காலத்தில் கடல் கடந்து நாகர்களின் நாடாகிய நாகர் நாட்டை அடைந்தான். நாகர் நாட்டு மன்னன் வளைவணன் மகளாகிய பீலிவளை என்னும் இளவரசி நாக கன்னிகையை மணம் புரிந்தான். நாகர் மகளுக்கும் சோழன் கிள்ளிவளவனுக்கும் பிறந்த இளம்குமரன் தொண்டை கொடியை அடையாளமாக அணிந்து கடலில் மிதந்து சோழநாட்டின் கிழக்கு கரையை அடைகிறான். சோழ ராஜ புத்திரனை கடலின் திரை (அலைகள்) கொண்டு வந்தமையால் திரையன் என்று பெயரிடப்படுகிறான். மேலும் தொண்டைக் கொடியை அடையாளமாக அணிந்து வந்தமையால் தொண்டைமான் இளந்திரையன் என்று அழைக்கப்பட்டான். சோழ இளவரசனாக மகுடம் சூடியபின்னர் சோழநாடு இரண்டாகப்பிரிக்கப் பட்டு கிழக்கே கடலும்,மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கடமும் தெற்கே பெண்ணையாற்றையும் எல்லைகளாக கொண்டு தொண்டை மண்டலம் உருவாக்கப்பட்டு காஞ்சிமாநகரை தலைநகராக கொண்டு தொண்டைமான் இளந்திரையன் அரசுபுரிந்தான். சிறந்த வீரமும் கொடைநலமும் உடையவன். கவி பாடுவதிலும் வல்லவன் இளந்திரையம் எனும் நூலையும் இயற்றியுள்ளான். இவன் பாடிய பாடல்கள் பல புறநானூற்றிலும், நற்றிணையிலும் கானப்படுகின்றன. சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படை இவனைப் பற்றி புலவர் கடிலூர் உருத்திரங் கண்ணனார் பாடியதாகும். குறும்பர்களின் கொட்டத்தை அடக்கி, காடுகளை வெட்டி, நிலத்தை திருத்தி, வளம் பெருக்கி தொண்டை நாட்டை வலிமைமிக்க நாடாக்கினான். இவன் ஆட்சியில் தொண்டைநாடு சான்றோருடைத்து என்று ஔவையால் புகழப்பட்டது. இளந்திரையன் நாகநாட்டில் இருந்து சோழநாட்டு கிழக்குக்கரையில் ஒதுங்கிய இடமே நாகர்பட்டினம் என்றழைக்கப்பட்டு இந்நாளில் நாகப்படினம் என்றழைக்கப்படுகிறது. தொண்டைமான் இளந்திரையன் பின் நாளில் ஆத்தொண்டை சக்கரவர்த்தி என்றும் அழைக்கப்பட்டான். இவன் வழி வந்தவர்களே தொண்டைமான், தொண்டையன், தொண்டைப்பிரியன், தொண்டாப்பிரியன், தொண்டமார், தொண்டாயன், தொண்டைமான் கிளையர், தொண்டையன், தொண்டன் என்னும் பட்டங்களை கொண்ட கள்ளர் குலத்தவராவர். இப்பட்டம் கி.பி முதல் நூற்றாண்டில் இருந்து வழக்கத்தில் வருவதும் ஒரு வரலாராகும். காஞ்சி மாநகரம் (இன்றைய காஞ்சிப்புரம்) 181 பெரும் திருக்கோயில்களை கொண்டு மாமதிற்கச்சி எனவும் கோயில் மலிந்த காஞ்சி எனவும் அழைக்கப்ப்டுவதும் வரலாராகும்.
தோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
ந வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நன்னியன், நயினியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நன்னிமன். நன்னிபள்ளி என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் நன்னியன் என்றும் அழைக்கப்பட்டான். நன்னிலம் என்னும் தேவார சிவதலத்தையும், நன்னிமங்கலம், நன்னிகுடி, நன்னி (நயினான்)என்னும் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் நன்னியன், நயினியன் எனும் பட்டங்களை பெற்றனர்.
நள்ளிப்பிரியன், நல்லிப்பிரியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நல்லி. நள்ளிக்கோட்டை (நல்லிக்கோட்டை) என்னும்நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாகக் கொண்டவன். வரையாது கொடுத்த இடையெழு வள்ளல்களில் ஒருவன். நள்ளாறு என்னும் தேவார சிவதலத்தையும், நள்ளி என்னும் ஊரையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபு வம்சத்தினர் நள்ளிப்பிரியன், நல்லிப்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
நரசிங்கன், நரங்கியன், நரசிங்கப்பிரியன், நரங்கிப்பிலியன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நரசிங்கன். நரசிங்கபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். நரசிங்கமங்கலம், நரசிங்கம்பேட்டை என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் நரசிங்கன், நரங்கியன், நரசிங்கப்பிரியன், நரங்கிப்பிலியன் எனும் பட்டங்களை சுமந்தனர்.
நந்தியன், நந்தியர், நந்தன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நந்தியன். நந்திபுரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். நந்திமாகுடி, நந்தனூர், நந்திமங்கலம், நந்திவனம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் நந்தியன், நந்தன் என்ற பட்டங்களை பெற்றனர்.இவர்கள் பல்லவ குலத்தினருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் அறியப்படுகிறது. பல்லவரின் இலச்சினை நந்தியாகும், பல்லவர் கொடிகளிலும், காசுகளிலும் நந்தியின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. பல்லவ அரசர்களும் முதலாம் நந்திவர்மன், இரண்டாம் நந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் என்ற பெயர்களில அழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இப்பட்டமுடையார் சோழர் மற்றும் பல்லவர் மரபினரென்றும் அறிய முடிகிறது. இப்பட்டமுடையோர் பொன்னாப்பூர், தும்பத்திக்கோட்டை, தென்னமநாடு, காட்டுக்குறிச்சி, தலையாமங்கலம், பட்டவெளி, கண்டகிரயம், நல்லிச்சேரி முதலிய ஊர்களில் மிகுதியாக வாழுகின்றனர்.
நா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நாகன்
நாயக்கன்
நாகராயன்
நாகுடையான்
நாகாண்டான்
நாகாளன்
நாக்காடி, நாவிளங்கி, நாகாளி.
மாந்தாதா மரபில் வந்த மன்னன் நாகமன், நாகபட்டினம் என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நாகாளி என்றும் வழங்கப்பட்டான். சிவராத்திரி முதல் யாமத்தில் திருக்குடந்தையிலும், இரண்டாம் யாமத்தில் திருநாகேச்சரத்திலும், மூன்றாம் யாமத்தில் திருப்பாப்புரத்திலும், நான்காம் யாமத்தில் திருநாகூரிலும் திருக்கோயிலமைத்து சிவலிங்கபூசை செய்த பெருமை படைத்தவன். நாகேச்சுரம், நாகன்பாடி, நாகன்குடி, நாகலூர், நாகலாபுரம், நாகமங்கலம், நாகபட்டினம், நாகளூர், நாகன்பேட்டை என்ற நகரங்களையும் ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
நாகாட்சி
நாகப்பிரியன்
நாகங்கொண்டான்
நாகநாடன்
நாகதேவன்
நாணசேவன், நாணசிவன்,ஞானசெவன்,ஞானியர், நானசேவர்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நாணசேவன். நாணலூர், நாணமங்கலம் (நாரணமங்கலம்) முதலிய ஊர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் நாணசேவன், நாணசிவன்,ஞானசெவன்,ஞானியர், நானசேவர் என்ற பட்டங்களையும் பெற்றனர்.
நார்த்தேவன், நார்த்தவான், நாரத்ேத்வன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நார்த்தேவன். நாரையூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நார்த்தேவன்குடி (நார்த்தாங்குடி) நார்த்தேவன்மங்கலம் (நாரமங்கலம்) என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் நார்த்தேவன், நார்த்தவான் எனும் பட்டங்களை கொண்டனர்.
நாடன்
நாடான்
நாடாள்வான்
நாட்டரையன்
நாட்டரசன்
நாட்டான்
நீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நிலங்கொண்டான், நெறிமுண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் நீலமன். நீலப்பாடி நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நீலப்பிரியன், நீலங்கொண்டான் எனவும் அழைக்கப்பட்டவன். நீலக்குடி என்னும் தேவார சிவதலத்தையும், நீலவெளி என்னும் சிவதலத்தையும், நீலநல்லூர் (நீலத்தநல்லூர்) நீலமங்கலம் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் நிலங்கொண்டான், நெறிமுண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.
நெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
நெல்லியன், நெல்லிராயன், நெல்லியுடையான், நெல்லியாண்டான், நெல்லியாளன்,
நெல்லியாளி, நெல்லியாட்சி, நெல்லிப்பிரியன், நெல்லிகொண்டான், நெல்லிதேவன்
நல்லிப்பிரியன்.
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் நெல்லிமன். நெல்லிக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.நெல்மலி, நெல்லூர், நெல்லி, நெல்லிச்சேரி, மற்றும் தேவாரத் தலங்கள் நெல்வாயில் (சிவபுரி) நெல்வாயிலாத்துறை, நெல்வெண்ணெய், நெல்லிக்கா மற்றும் மேலநெல்வேலி (மீனவல்லி) என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் நெல்லிப்பிரியன், நல்லிப்பிரியன். எனும் பட்டங்களை பெற்றனர்.
நெடுவாண்டான், நெடுவண்டான், நெடுங்கொண்டான், நெறிமுண்டான், நெடுவாளி, நெடுங்காளி, நெடுந்தரையன், நெடுத்தார், நெடுமுண்டான்
நெடுங்கிள்ளிசோழன், நெடுவாக்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் நெடுவாண்டான், நெடுங்கொண்டான், நெடும்பிரியன், நெடுவாளி, நெடுந்தரையன் என்வும் வழங்கும். நெடுங்களம், நெடுவாயில் என்னும் தேவார சிவ தலங்களையும், நெடுங்காடு, நெடுங்குளம் என்னும் சிவ தலங்களையும், நெடுவூர், நெடுங்குடி, நெடுமங்கலம், நெடும்புலம், நெடுங்கரை, நெடுவயல், நெடும்பட்டி என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபினர் நெடுவாண்டான், நெடுவண்டான், நெடுங்கொண்டான், நெறிமுண்டான், நெடுவாளி, நெடுங்காளி, நெடுந்தரையன், நெடுத்தார் என்னும் பட்டங்களை பெற்றனர்.இப் பட்டங்கள் கொண்ட கள்ளர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நெடுவாக்கோட்டையில் பெருமளவில் உள்ளார்கள்.
ப வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பத்தாளன், பத்தாட்சி, பெத்தாச்சி, பத்தாண்டான், பத்தாளி, பத்துடையான், பத்துகொண்டான்.
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் பத்தாளன். பத்தாளன்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பத்தூரென்னும் தேவார சிவதலத்தையும் பத்தமங்கலம், பத்தகுடி, பத்தாளன்பட்டி என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் பத்தாளன், பத்தாட்சி, பெத்தாச்சி பத்தாண்டான், பத்தாளி, பத்துடையான், பத்துகொண்டான்.
எனும் பட்டங்களை பெற்றனர்.
பனையன், பன்னையன், பனைகொண்டான், பன்னிகொண்டான், பன்னைராயன்,
பண்ணிகொண்டான், பன்றிகொண்டான், பண்ணிமுண்டான், பணிகொண்டான், பணிபூண்டான், பனையுடையான், பனையாண்டான், பனையாளன், பனையாளி,
பனையாட்சி, பனைநாடன், பனையதேவன், பனைப்பிரியன், தாளியன், தாளிதியன்,
முசுகுந்த சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பனையமன், பனையக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் தாளியன், பனை கொண்டான் என்றும் வழங்கப்பட்டான். பனந்தாள், பனங்காடு, பனங்காட்டூர், பனையூர் என்னும் சிவ தலங்களையும், பனையப்பட்டி, பனங்காடி, பனம்பாக்கம், பனங்குளம், பனமங்கலம்,பனம்பட்டி என்ற ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
பருதியன், பருதிராயன், பருதியுடையான், பருதியாண்டான், பருதியாளன், பருதியாளி
பருதியாட்சி, பருதிப்பிரியன், பருதிகொண்டான், பருத்திகொண்டான், பருதிநாடன்
பருதிதேவர்,
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் பருதிமன், பருதி(பருத்தி) கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பருதிகொண்டான், பருதியாண்டான், பருதிப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். பருதீச்சரம் (பருதியப்பர் கோவில்),மிகைச்சூர் எனும் சிவ தலங்களையும், பருத்திக்கோட்டை, பருத்திகுடி, பருத்தியூர், பருத்திச்சேரி, பருத்திமங்கலம், பருத்திப்பள்ளம் என்னும் ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மேற்கூறிய பட்டங்களை பெற்றனர்.
பழையாற்றரையன், பழைசையுடையன், பழைசையாண்டான், பழைசையாளன், பழைசையாளி, பழைசையாட்சி, பழைசைப்பிரியன், பழைசைகொண்டான், பழைசைநாடன், பழையாறுகொண்டான், பழையாற்றான், பழந்தான், மாம்பழத்தான், பழங்கொண்டான், பழங்கண்டான், பழையாறுகொண்டான், பழையாற்றான், பழந்தான், மாம்பழத்தான், பழங்கொண்டான், பழங்கண்டான், பழையாற்றரையன்.
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் பழையன், பழையாறு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பழையாறு கொண்டான், பழையாற்றரையன் என்றும் இவன் அழைக்கப்பட்டான். பழையாற்றுவடதளி, பழையாற்றுத்தென்றளி, பழையாற்றுமேற்றழி, பழையாற்றுக்கீழ்த்தளி, பழையங்குடி, பழனம், பழையபுரம், பழையவலம், பழையாறு, பழையனூர், பழமங்கலம், பழங்களத்தூர், பழவனக்குடி எனும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய பட்டங்களை கொண்டனர்.
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் பழையன், பழையாறு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பழையாறு கொண்டான், பழையாற்றரையன் என்றும் இவன் அழைக்கப்பட்டான். பழையாற்றுவடதளி, பழையாற்றுத்தென்றளி, பழையாற்றுமேற்றழி, பழையாற்றுக்கீழ்த்தளி, பழையங்குடி, பழனம், பழையபுரம், பழையவலம், பழையாறு, பழையனூர், பழமங்கலம், பழங்களத்தூர், பழவனக்குடி எனும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய பட்டங்களை கொண்டனர்.
பழங்கொண்டான்
பழனங்கொண்டான்
பட்டுராயன், பவட்டுரான், பட்டுகொண்டான், பட்டுப்பிரியன், பட்டாட்சி, பட்டாளி, பட்டாளன், பட்டாண்டான், பட்டுடையன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பட்டிமன். பட்டுக்கோட்டை எனும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பட்டீச்சரம் என்னும் தேவார சிவதலத்தையும் பட்டம், பட்டவெளி, பட்டுராயன்பட்டி, பவட்டுரான்பட்டி, பட்டிமங்கலம் போன்ற நகரங்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். பட்டுகொண்டான், பட்டாண்டான், பட்டுராயன், பட்டாளி, பட்டுப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான். இவன் வழி வந்தவர்கள் பட்டுராயன், பவட்டுரான் என்ற பட்டங்களை பெற்றனர்.
பசுபதி, பசும்படி, பசும்பிடி.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் பசுபோகசோழன். ஆவூர் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பசுபதி என்றும் வழங்கலாயிற்று. ஆவடுதுறை, ஆப்பாடி, பசுபதிமங்கை (பசுபதிகோயில்) என்னுமூர்களையும், பசுபோக ஆறுஎன்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசு புரிந்தான். இவன் மரபினர் பசுபதி, பசும்படி, பசும்பிடி என்னும் பட்டங்களை கொண்டனர்.
பரங்கிலிராயன், பரங்கிராயன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பரங்கிமன். பரகலக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பரங்கிராயன் என்வும் வழங்கலாயிற்று. பரங்கிமலை, பரங்கிப்பேட்டை, பரங்கிவெட்டிகாடு, பரம்பைக்குடி, பரமந்தூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பரங்கிராயன் எனும் பட்டம் கொண்டனர்.
பயற்றுராயன், பதுங்கரான், பதுங்கிரான், பதுங்கியான், பதங்கன், பைதுங்கன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பயற்றமன். பயிற்றூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பயற்றங்குடி, பயற்றஞ்சேரி என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பயற்றுராயன், பதுங்கரான், பதுங்கிரான், பதுங்கியான், பதங்கன், பைதுங்கன் எனும்
பட்டங்களை கொண்டனர்.
பஞ்சநதரையன், பஞ்சரையன், காவிரிவெட்டி, காவெட்டி
காங்கமசோழ சக்ரவர்த்தி மரபில் வந்த பஞ்சநதிசோழ சக்ரவர்த்தி. பஞ்சநதிக்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். காவிரி, கபிலை,பவானி, நொய்யல்,ஆன்பொருனை என்னும் ஐந்து ஆறுகளையும் ஒன்று சேர்த்து புகார் பட்டினத்தில் கடலிற் சேர்த்து பொன்னி என்று பெயரிட்டவன் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்) இவன் பெயர் காவிரிச்சோழன், காவிரிகண்டசோழன், காவிரி வெட்டியசோழன், பஞ்சநதரையன், பஞ்சநதிகொண்டான், பஞ்சநதியாண்டான், பஞ்சநதிபிரியன், பஞ்சநதியாளி எனவும் வழங்கிற்று. இவன் காலமுதல் சோழநாடு காவிரி நாடு, பொன்னிநாடு, புனனாடு என்னும் பெயர்களும், காவிரியின் வடபுறமுள்ள சோழ நாடு வடகரைநாடு என்றும் தென் புறமுள்ள சோழநாடு தென் கரைநாடு என்றும் பெயர் பெற்றது. சோழர்களுக்கு காவிரிநாடன், பொன்னிநாடன், பொன்னித்துறைவன், புனனாடன் என்னும்பெயர்களும் வழங்கழாயிற்று. ஐயாறு(பஞ்சநதீச்சரம்) என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தையும், பஞ்சநதிக்குளம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசுபுரிந்தான்.இவன் மரபோருக்கு பஞ்சநதரையன், பஞ்சரையன், காவிரிவெட்டி, காவெட்டி என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டது.
பம்பாளி, பாம்பாளி, வம்பாளி,
பெரும்பற்றசோழன் மரபில் வந்த சக்ரவர்த்தி பாம்பசோழன். பாம்புரம் என்ற தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாம்பு கொண்டான், பாம்பாண்டான், பாம்புடையன், பாம்புப்பிரியன், பாம்பாளி எனவும் வழங்கப்பட்டது. சோழ நாட்டிற்கும் சிங்களதீவுக்கும் கப்பல் வணிகம் நடைபெரும் பொருட்டு பாம்பன் கால்வாய் அமைத்து வங்காளக் குடாக்கடலையும் இனைத்து அதன் கரையில் பாம்பன் என்னும் நகரத்தையும் உண்டு பன்னியவன் இவன். புணரியொன்றிடை யொன்றுபுக விட்டவவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. பாம்புணியாறு என்னும் பேராற்றையும், பாம்பாறு என்னும் காட்டாறையும், பாம்புணி, பாம்பணி என்னும் தேவார சிவ தலங்களையும், பாம்பூர் முதலிய ஊர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன். இவன் மரபோர் பாம்பாளி, பம்பாளி, வம்பாளி என்ற பட்டங்களை பெற்றனர்.
பல்லவர், பல்லவராயர், பல்லவரையர், பல்லவாண்டார், பல்லவவாண்டார். பல்லமடையார்.
பல்லவ சக்ரவர்திகளின் மரபினர். பல்லவர் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 9ஆம் நூற்றாண்டு வரையில் காஞ்சியை தலைநகரமாக கொண்டு தமிழகத்தை அரசாண்டவர்கள். இவர்களின் பூர்வீகம் இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவ தீவு (காரைத்தீவு) என்றும், மணி பல்லவமுடையார் என்ற பட்டம் திரிந்து பல்லமடையார் என்று ஆகி பின்பு பல்லவர் என்று வழங்கலாயிற்று என்று கூறுவதுண்டு. புகழ் பெற்ற மாமல்லபுரம் (மகாபலிபுரம்) சிற்பங்களையும், சித்தன்னவாசல் ஓவியங்களையும் உருவாக்கியவர்கள் பல்லவர்களே. பல்லவராயன் என்ற பட்டமுடைய குறுநில மன்னர்களும் அரசியலதிகாரிகளும் பிற்கால சோழப் பேரரசில் பெரும்புகளோடு விளங்கியுள்ளனர். ஈராயிரவன் பல்லவரையன் ஆகிய மும்முடிச்சோழபோசான், இவன் அரசூரில் வாழ்ந்தவன், இராசராச சோழனின் பெருந்தரத்து அதிகாரிகளிள் ஒருவன். இராசராசனுக்கு திருமந்திர ஓலை நாயகமாகவும் இருந்துள்ளான். இராஜேந்திர சோழன் காலத்திலும் பெரும் பதவிகளை வகித்துள்ளான். தண்டநாயகன் வெண்காடன் சங்கரனாகிய இராசாதிராசப் பல்லவராயன், இவன் உத்தம சோழ நல்லூரைச் சேர்ந்தவன். இராசாதிராசனின் படைத்தலைவன். கருணாகர சுந்தரத் தோளுடையயான் ஆகிய வளவன் பல்லவதரையன், இவன் விக்கிரம சோழனால் வளவன் பல்லவராயன் என்ற பட்டம் பெற்ற அதிகாரியாவான். பல்லவராயர்களில் கோனேரிப் பல்லவராயன், மஞ்சோலை பல்லவராயன், அச்சுத்ப்ப பல்லவராயன், இளையபெருமாள் பல்லவராயன், ஆவுடையப்ப பல்லவராயன், கந்தப்பப் பல்லவராயன், மல்லப்ப பல்லவராயன், சிவந்தெழுந்த பல்லவராயன் என்ற கிளைகளும் காணப்படுகின்றன. பல்லவராயர்கள் புதுக்கோட்டை பிலாவிடுதி, மருதன் கோவில் விடுதி, காயம்பட்டி (திருமயம்) தஞ்சாவூர் மாவட்டம் சின்ன பொன்னாப்பூர், கண்ணுகுடி, தென்னமநாடு, மூவாநல்லூர், செயங்கொண்டசோழபுரம், ரெங்கநாதபுரம் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர். பல்லவாண்டான் என்னும் பட்டமுடைய தலைவர்கள் இடைக்கால சோழர் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர். பல்லவர் என்னும் பட்டங்களின் ஒற்றுமை கண்டு இவர்கள் பல்லவர்களின் வழித் தோன்றல்கள் எனக்கொள்ள முடிகிறது.
படைத்தலைவன்
படைத்தலையன்
படையாட்சி
படையெழுச்சி
பருங்கைராயன்
பா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பார்புரட்டியார், பாப்பரையன், பாப்படையன், பாப்பிரியன், பாப்புவெட்டி, பாப்புரெட்டி.
சுராதிராச சோழ சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பாப்பனசோழன். பாப்புநகரம் என்ற நகரத்தை உருவாக்கி தெற்குக்கோட்டை, வடக்குக்கோட்டை என்று இரு பகுதிகளாக பிரித்து இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பார்புரட்டியான், பாப்பரையன், பாப்புடையன், பாப்பிரியன், பாப்புவெட்டி எனவும் வழங்கும். பாப்புமங்கலம், பாப்பனசேரி, பாப்பாகோயில், பாப்பாகுடி, பாப்பூர், பாப்பரையன்பட்டி, பாப்புடையன்பட்டி, என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் பாப்பரையன், பாப்படையன், பாப்பிரியன், பாப்புவெட்டி, பாப்புரெட்டி என்னும் பட்டங்களை பெற்றனர். வேலூருக்கு அருகில் உள்ள பாப்புரெட்டிப்பட்டி, தருமபுரிக்கு அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊர்கள் இப்பட்டங்களின் அடியாகத் தோன்றியவைகளாகும்.இவர்களின் பட்டங்கள் பார்புரட்டியார் என்ற பட்டபெயரில் இருந்து திரிந்து பல்வேறு திரிபு பெயர்களை கொண்டுள்ளது. பார்புரட்டியார் என்றால் தம் வீரத்தால் பகைவரை தலைகீழாக புரட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்று பொருள் படும். இப்பட்டம் உடையவர்கள் திருவையாறு, திருச்சின்னம்பூண்டி, இளங்காடு, வானரங்குடி, திருச்சி, தஞ்சாவூர் முதலிய ஊர்களில் வாழுகின்றனர்.
பாச்சிலாளி, பிச்சாடி, பிச்சாளி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பாச்சில்மன். பாச்சிற்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். பாச்சிலாச்சிராமம், பாசூர் (பாச்சூர்) என்னும் தேவார சிவதலங்களையும்உண்டு பண்ணி அரசாண்டவன். இவன் பாச்சிலாண்டான், பாச்சிற்பிரியன், பாச்சிலாளி, பிச்சாளி என்னும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் பாச்சிலாளி, பிச்சாடி எனும் பட்டங்களை கொண்டனர்.
பாண்டராயன். பாண்டுராயன். பாண்டுரார்
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் பாண்டுசோழன். பஞ்சநதிகோட்டயை இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாண்டராயன் என்று வழங்கழாயிற்று. பாண்டவாய் என்னும் ஆற்றையும், பாண்டூர் என்னும் சிவதலத்தையும், பாண்டுகுடி, பாண்டுமங்கலம் (பாண்டமங்கலம்) பாண்டராயன்பட்டி என்னும் ஊர்களையும் உண்டாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் பாண்டுராயன், பாண்டாராயன், பாண்டுரார் என்னும் பட்டங்களில் அழைக்கப்படுகிறனர்.
பாலையன்
பாலியன்
பாலையுடையான்
பாலுடையன்
பாலையன், பாலியன், பாலைராயன், பால்ராயன்,பாலையாண்டான், பாலாண்டான், பாலையுடையன், பாலுடையான், பாவுடையான், பாலைநாடன், பானாடன், பாலைநாட்டான், பானாட்டான். பாலையுடையான், பாலுடையன்
பாலையசோழன், பாலையக்கோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பாலையன், பாலைராயன், பாலையாண்டான், பாலைகொண்டான், பலையுடையவன், பாலைப்பிரியன், பாலைநாடன், பாலைநாட்டான், பாலையாளி என்வும் வழங்கலாயிற்று. பழைய பாலாறு, பாலாறு என்னும் பேராறுகளையும், பாலைத்துறை, பாற்றுறை (பால்துறை) எனும் தேவார சிவ தலங்களையும், பாலையூர்,பாலைக்குடி, பாலைக்குரிச்சி, பாலைக்காடு, பாலைப்பட்டி, பாலைப்பட்டு, பாலாகுடி, பாலைவாய்,பாலாண்டான்பட்டி என்னும் ஊர்கலை உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் பாலையன், பாலியன், பாலைராயன், பால்ராயன்,பாலையாண்டான், பாலாண்டான், பாலையுடையன், பாலுடையான், பாவுடையான், பாலைநாடன், பானாடன், பாலைநாட்டான், பானாட்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
பாண்டியன், பாண்டியராயன்
சோழ மன்னர்களுக்கும் பாண்டியமன்னர்களுக்கும் சோழப் பேரரசு தொடக்கம் முதல் இறுதி வரை பகைமை இருந்து கொண்டே இருந்தது. பாண்டியர்களோடு போரிடாத சோழ மன்னர்களே இல்லை என்ற அளவிற்கு அடிக்கடி போர் நடந்துள்ளது. இராசராச சோழன் தனது ஆட்சியில் படையெடுத்து பாண்டிய மன்னன் அமரபுயங்கனை வென்று பாண்டிய நாட்டை தன் ஆட்சிக்குட்படுத்தி தனக்கு பாண்டியன் என்ற பட்ட்த்தையும் சூட்டிக்கொண்டான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய மரபினர்களுக்கு அளித்த பட்டமே பாண்டியன்,பாண்டியராயன் என்பதாகும். இப் பட்டங்கள் பாண்டிய நாட்டு வெற்றி தொடர்புடையன. இப் பட்டங்களை உடைய கள்ளர்கள் தஞ்சையிலும், சித்தமல்லி, புதுக்கோட்டை வடவாளம், இராயப்பட்டி, கும்பகுடி, அவ்வையார்பட்டி, திருச்சி அல்லூர் முதலிய ஊர்களிலும் உள்ளனர்.
பி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பிசலண்டான்
பிசலுண்டான்
பிச்சயன்
பிச்சாளி
பிரமன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பிரமன். பிரமபுரம் (சீகாழி) என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். பிரம்பில் என்னும் தேவார சிவதல நகரத்தையும், பிரம்பூர் என்னும் சுப்ரமணிய தலத்தையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் பிரமன் எனும் பட்டம் கொண்டனர்.
பிலிமுண்டான்
பின்னுண்டான்
பு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான்.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் புத்திகழிச்சசோழன்( அறிவு மிகுந்தசோழன்) புத்திகழிச்சான்கோட்டை என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் புத்திகழிந்தான் எனவும் வழங்கும். புத்தூர் என்னும் தேவார சிவ தலத்தையும், புத்தபுரம், புத்தகுடி, புத்தமங்கலம், புத்தங்கோட்டம் என்னும் ஊர்களையும் புத்தாறு என்னும் சிற்றாற்றையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் புத்திகழிந்தான், புற்றில்கழிந்தான் என்னும் பட்டங்களை கொண்டனர்.
புலிராயன், புலிகொண்டான், பிலிமுண்டான், பிலிராயன், புலிக்கொடியன், புலிக்குட்டியன். புலிக்கொடியோன்
அண்டசோழன் மரபில் வந்த பெரும்பற்றசோழ சக்ரவர்த்தி. பெரும்பற்ற புலியூர் (சிதம்பரம்) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இந்திரனை தன் கொடியில் புலி என்று வைத்தவன். இதன் மூலம் புலிராயன், புலிக்கொடியன், புலிகொண்டான் என்வும் வழங்கப்பட்டான். இவன் கால முதல் சோழர்களுக்கு புலிக்கொடியும், புலிக்கொடியோன் என்ற பெயருமுண்டாயிற்று. பெரும்புலியூர், புலிவலம், புலிவனம் என்னும் தேவார சிவ தலங்களையும், புலிமங்கலம், புலிகுடி என்னுமூர்களையும் உண்டாக்கி அரசாண்டான். இன்றைய சித்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியும், கர்நாடகத்தின் ஒரு பகுதியும் இணைந்த புலி நாட்டையும் வெற்றி கொண்டு அரசாண்ட மன்னனும் இவனே.
புலியெனக்கொடியி லிந்திரனை வைத்தவனும் என்று கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம் கூறுகிறது. இவன் மரபோர் புலிராயன், புலிகொண்டான், பிலிமுண்டான், பிலிராயன், புலிக்கொடியன், புலிக்குட்டியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
புன்னைகொண்டான், புன்னாகன், புண்ணாக்கன், புன்னையன்,புனையன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் புன்னாகமன். புன்னையூர் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் புன்னையன் எனவும் வழங்கப்பட்டது. புன்கூர் என்னும் தேவார சிவதல நகரத்தையும், புன்னைவாயில், புன்னைத்தூர், புன்னையூர், புன்னைக்குடி, புன்னாக்கன்குடி, புன்னைமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் புன்னாகன், புண்ணாக்கன், புன்னையன், புனையன் என்ற பட்டங்களை பெற்றனர்.
புள்ளராயன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் புள்ளமன். புள்ளன்பாடி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். புள்ளராயன் எனவும் அழைக்கப் பட்டவன். புள்ளமங்கை என்னும் தேவார சிவதலத்தையும், புள்ளமங்கலம், புள்ளங்குடி, புள்ளம்பட்டி, புள்ளராயன்பட்டி, புள்ளராயன் குடிகாடு என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் புள்ளராயன் எனும் பட்டத்தையும் சுமந்தனர். போருக்குச் செல்லும்முன் வெற்றி தோல்வியை அறிவதற்காக புள் சகுனம் பார்த்து செல்வதுண்டு. இச் செயலுக்கு புள்ளுவம் என்ற பெயருண்டு. புள்ளுவம் பார்பதில் வல்லமை கொண்டவர்கள் இப் பட்டங்களுக்கு உரிமை உடையவர்கள். இப்படம் உடையவர்கள் புள்ளவராயன்குடிகாடு, நெடுவாக்கோட்டை, காரக்கோட்டை, வடுவூர், ஒரத்தநாடு, தென்னமநாடு முதலிய ஊர்களில் அதிகமாக வாழுகின்றனர்.
புறம்பயன், புறம்பயத்தான், புறம்பயாண்டான், புறம்பயாளன், புறம்பயாளி, புறம்பயாட்சி
புறம்பயபிரியன், புற்ம்பயமுடையான், புறம்பயங்கொன்டான், பொறைபொறுத்தான், பொய்ந்தான், புறம்பயங்கொண்டான், பொய்கொண்டான், பொறையன்,
புறஞ்சயன் சக்ரவர்த்தி, நல்லுத்தரனின் மகன், புறம்பயம் எனும் தேவாரம் பாடப்பட்ட சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். புறம்பயந்தான், புறம்பயங்கொண்டான், புறம்பயன் எனும் பட்டங்களையும் பெற்றவன். புறவம் (சீர்காழி) புறக்குடி எனும் சிவ தலங்களையும், புறவநதி எனும் சிற்றாற்றையும், புறவச்சேரி, புறங்கரம்பை, புறமங்கலம் என்ற ஊர்களையும் உருவாக்கியவன். இவன் மரபோர் மேற்கூரிய பட்டங்களை கொண்டனர். (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்)
பூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பூதரையன், போதரையன், போரையன், பூதராயன், பூதகொண்டான், பூதாண்டான், பூதப்பிரியன், பூதாளி
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் பூதசோழன். பூதலூர் என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பூதரையன், பூதராயன், பூதகொண்டான், பூதாண்டான், பூதப்பிரியன், பூதாளி எனவும் வழங்கலாயிற்று. பூதாறு என்னும் சிற்றாறை கூத்தாநல்லூருக்கருகில் முள்ளியாற்றில் பிரித்து அரிச்சந்திர நதியில் சேர்த்தவன். கூரயாற்றில் தட்டான் கோவிலுக்கருகில் இரண்டுகிளைகள் பிரித்து வடகிளையைஅரிச்சந்திர நதியிலும் தெங்கிளையை முள்ளியாற்றிலும் சேர்த்து கூத்தாந்ல்லூருக்கும் வெண்டுறைக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபத்தை சிதைத்தவன். பூதமங்கலம், பூதங்குடி, பூதனூர், பூதராயநல்லூர் என்னும் ஊர்களையும் உருவாக்கி அர்சுபுரிந்தவன். இவன் மரபினர் பூதரையன், போதரையன், போரையன், பூதராயன், பூதகொண்டான், பூதாண்டான், பூதப்பிரியன், பூதாளி என்னும் பட்டங்களை பெற்றனர்.
பூக்கட்டி
பூழியர்பிரான்
பூழியூரான்
பூமிராயன்
பூமிநாடன்
பூமிநாடான்
பூனையன்
பூவாட்சி, பூட்சி, திருப்பூட்சி, பூப்பிரியன், பூக்கொண்டான், பூவுடையான், பூவாண்டான், பூவாளன், பூவாளி, பூவன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் பூமன். பூவாளூர் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். பூவாட்சி என்றும் அழைக்கப்பட்டான். பூந்துருத்தி, பூவானூர் என்னும் தேவார சிவதலங்களையும், பூங்குடி, பூங்குளம், பூண்டி, பூந்தோட்டம், பூவத்தூர், பூவத்தகுடி, பூவலூர் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் பூவாட்சி, பூட்சி, திருப்பூட்சி எனும் பட்டங்களை பெற்றனர்.
பெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பெத்தாச்சி
பெரியாட்சி, பெரிச்சி, பெரிச்சியன், பெரிச்சியான், பெரிச்சிக்கணக்கன்,
பெரியசோழன், பெரியகோட்டை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பெரியாட்சி, பெரியாண்டானென்வும் வழங்கும். பெரியகுடி,பெரியலூர் என்னுமூர்களையும் உருவாக்கியரசு புரிந்தவன். இவன் மரபோர் பெரியாட்சி, பெரிச்சி, பெரிச்சியன், பெரிச்சியான், பெரிச்சிக்கணக்கன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
பே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பேரரையன், பேதரையன்.
பேர்சோழன், பேரையூர் என்னும் சிவ தலத்தை உருவாக்கி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் பேரரையன் என்வும் வழங்கும். பேரூர், பேராவூர், பேரெயில் எனும் தேவார சிவ தலங்களையும், பேராவூரணி எனும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் பேரரையன், பேதரையன் எனும் பட்டங்களை பெற்றனர்.
பொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
பொய்கொண்டான்
பொறையன்
பொறைபொறுத்தான்
பொய்ந்தான்
பொன்னங்கொண்டான், பொன்னமுண்டான், பொன்னாண்டான், பொன்னாரம் பூண்டான், பொன்னாப்பூண்டான், பொன்னாளியன், பொன்னானியன்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் பொன்ன சோழன். பொன்னவராயன்கோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பொன்னங்கொண்டான், பொன்னாண்டான், பொன்னப்பிரியன், பொன்னுடையான், பொன்னாளி எனவும் வழங்கும். பொன்னூர் என்னும் தேவார சிவதலத்தையும், பொன்னிறை, பொன்பற்றி, பொன்னக்குடி, பொன்னாப்பூர், பொன்னமங்கலம், பொன்னேரி என்னுமூர்களையும், பொன்னுகொண்டான், பொன்னாறு என்னும் சிற்றாறுகளையும் உருவாக்கினான். தில்லை என்னும் தேவார சிவதலத்தில் சபாநாயகப் பெருமானுக்கு பொன்னம்பலம் என்னும் திருக்கோயிலும் உண்டாக்கியவன். இவன் மரபோர் பொன்னங்கொண்டான், பொன்னமுண்டான், பொன்னாண்டான், பொன்னாரம் பூண்டான், பொன்னாப்பூண்டான், பொன்னாளியன், பொன்னானியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
பொரிப்பொறுக்கி
போ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
போதரையன்
போரிற்கொளுத்தி
போரைக்கொளுத்தி
போரிற்பொறுக்கி
போரிற்சுற்றி
போரைச்சுற்றி
போர்க்கட்டியன்
போர்காட்டி
போர்முட்டி
ம வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மங்கலன், மங்கலராயன், மங்கலாண்டான், மங்கலாளன், மங்கலாளி, மங்கலாட்சி,
மங்கலப்பிரியன், மங்கல்கொண்டான், மங்கலதேவன், மங்கதேவன், மங்கலநாடன்
முசுக்குந்தன் மரபில் வந்த மன்னன் மங்கலன். திருமங்கலக்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மங்கலக்குடி என்னும் தேவார சிவதலத்தையும் மங்கநல்லூர், மங்கலூர், மங்கலம் என்னும் நாகரங்களையும் உண்டாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் மங்கலன், மங்கலதேவன், மங்கதேவன் எனும் பட்டங்களை பெற்றனர்.
மழவன், மழவாளி, மழநாடன், மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மழவன். மழவன்கோட்டை (மகழன்கோட்டை) என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மழவராயன், மழுவாளி, எனவும் வழங்கப்பட்டது. மழபாடி என்னும் தேவார சிவதல நகரத்தையும், மழவராயநல்லூர், மழவராயன்காடு, மழவரயன்குடிக்காடு, மழவராயன்பட்டி, மழவங்காடு (மழவனிக்காடு) மழவராயன்பேட்டை என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மழவராயன், மழவன், மழுவாளி, மழுவாடி என்ற பட்டங்களை பெற்றனர். மழவரென்ற சொல்லுக்கு வீரர், இளையோர் எனப் பொருள். மழவும் குழவும் இளமைப் பொருள என்பது தொல்காப்பியம். மழவர் சிலர் சேர அரசர்களுக்கும், அதியமாங்களுக்கும் பிற அரசர்களுக்கும் மெய்காப்பாளராக இருந்துள்ளனர். சேரமன்னன் மழவர் மெய்ம்மறை என அழைக்கப்ப்டுகிறான். எந்த அரசனின் ஆணைக்கும் அடங்கி நடக்கமுடியாத மழவர் தமிழ்நாட்டின் திருவேங்கடமலை வரை சுற்றி திரிந்தனர். பின்பு அமைதியடைந்து சோழ நாட்டில் தங்கி வாழத் தலைப்பட்டனர். இவர்கள் நிலையாக தங்கி வாழந்த பகுதி மழநாடு(மழபாடி) எனப்பட்டது. மழவராயர் என்னும் பட்டம்
வீரர்களுக்கு அரசர் அல்லது தலைவர் என்று பொருள்படும். இவர்கள் சோழகளுக்குப் பெண் கொடுக்கும் உரிமை கொண்டிருந்தனர். சோழர்களின் படைத் தலைவர்களாக இருந்து பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.
பழுவேட்டரையன் கண்டன் மழவன் என்பான் இராசராசசோழன் காலத்தில் அவன் கீழ் ஆண்ட குறுநில மன்னர்களில் முதன்மையானவன். இவன் பேரரசர் போன்று பெருந்தரம் அதிகாரிகளை நியமிக்கும் உரிமைபெற்றிருந்தான். கொல்லி மழவன் ஒற்றியூரன் பிருதிகண்டவர்மன் என்பான் இராசராசசோழனுக்கு கீழிருந்த குறுநில மன்னர்களில் ஒருவன். இவன் தந்தை இராசரரசசோழனின் தந்தை பராந்தகச் சோழனுடன் பங்கேற்று ஈழப்போரில் உயிர் துறந்தான்.
மும்முடிச் சோழன் பரமன் மழபாடியார். இவன் இராசராசசோழனுக்கு படைத்தலைவனாக சீத்புலி, பாகி நாடுகளை வென்று வெற்றியைத் தந்தவன்
உதயதிவாகரன் கூத்தாடியான வீரராசேந்திர மழவராயன். இவன் இரண்டாம் இராசேந்திரசோழனின் அரசியல் அதிகாரியாவான். இவன் அரச ஆணைகளில் கையெழுத்திட்ட ஆவனங்களையும் அறியமுடிகிறது.
கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் மகளாவார்.
உத்தம சோழனின் மனைவி கிழானடிகள் மழவராயர் மகளாவார்.
இராசராச சோழனின் மனைவியரில் பஞ்சவன் மாதேவி மழவராயர் மகளாவார்.
மேற்கண்ட சான்றுகளால் பழமையான மழவர் குடியினர் சோழ மாமன்னர்களின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமானவர்களாக விளங்கினார்கள் என்றும் இன்று வாழும் மழவராயர்கள் இப் பெருமக்களின் வழித்தோன்றல்கள் என்றும் அறிய முடிகிறது. மன்னார்குடி வட்டத்தில் மழவராயர் நல்லூர் என்ற ஊரும், பாண்டியநாட்டில் மழவராயன் ஏந்தல் என்ற ஊரும் உள்ளது. பாண்டியநாட்டின் அரியனைக்கு மழவராயன் என்ற பெயரும் உண்டு.
மழவராயர் பட்டம் தாங்கிய குடியினர் ஒரத்தநாடு வட்டம் நெல்லுப்பட்டு, பஞ்சநதிக்கோட்டை, தெக்கூர், காட்டுக்குறிச்சி, செல்லம்பட்டி, பொய்யுண்டார்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் கிள்ளுக்கோட்டை, மழவராயன்பட்டி, கீரனூர், முதுகுளம், அரையன்பட்டி, மற்றும் தஞ்சை மாவட்டத்தில் கல்விராயன்பேட்டை, பீமன்பட்டி, புங்கனூர், தத்தனூர், சீதாப்பட்டி, கண்டலூர், களமாவூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்
மண்ணிராயன், மணிக்கராயன், மண்ணியன், மண்ணையன், மணியன்.
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் மண்ணிசோழன். இவன் பெயர் மண்ணிராயன், மண்ணியன் என்வும் வழங்கலாயிற்று. மண்ணி எனும் என்னும் நகரத்தை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். மண்ணிப்படிக்கரை என்னும் தேவார சிவ தலத்தையும், மண்ணியாறுஎன்னும் ஆற்றையும், மண்ணிப்பள்ளம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மண்ணிராயன், மணிக்கராயன், மண்ணியன், மண்ணையன், மணியன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
மன்னயன், மன்னியன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மன்னயன். மன்னிப்பள்ளி என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மன்னியன் எனவும் வழங்கப்பட்டது. முல்லை நில மக்களில் ஒரு வகுப்பாருக்கு மன்னாரிடையர் என்னும் பட்டம் வழங்கியவன். மன்னார்குடி, மன்னனூர், மன்னகோட்டம், மன்னங்காடு, மன்னகுடி, மன்னமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மன்னயன், மன்னியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
மயிலாண்டான், மயிலண்டான்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் மயிலாடுசோழன். முன்னர் மயிலாடுகோட்டை என்னும் நகரத்தையும், பின்னர் திருமயில்கோட்டை என்னும்சிவ தல நகரையும் உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மயிலாண்டான் எனவும் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை, மயிலாப்பூர் என்னும் தேவார சிவ தலங்களையும், மயிலாடி என்னும் சிவ தலத்தையும், மயிலம் என்னும் திருப்புகழ் பெற்ற சுப்பிரமணிய தலத்தையும், மயிலடிபுரம், மயின்மங்கலம், முதலிய ஊர்களையும் உண்டாக்கி அரசு புரிந்தவன். பைங்கா நாட்டின் தென்புறமுள்ள திருமயிலேறி (திருமேரி) இவனால் உண்டாக்கப்பட்டது. இவன் மரபினர் மயிலாண்டான், மயிலண்டான் என்ற பட்டங்களை பெற்றனர்.
மணவாளன்
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் மணவாளன், மணவை நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன், மணஞ்சேரி, மணற்கால் எனும் சிவ தலங்களையும் மணக்குடி, மணலி, மணப்பாறை, மணமேற்குடி, மணவாளன்பேட்டை, மணமங்கலம், மணவூர், மணங்காடு, மணவயல், மணம்பூண்டி, மணக்கரம்பை, மணக்கரை போன்ற பல ஊர்களையும் நகரங்களையும் உண்டாக்கி சிறப்பாக ஆட்சி புரிந்தவன். இவன் மரபு வழி வந்தவர்கள் மணவாளனெனும் பட்டத்தை கொண்டனர்.
மண்டலராயன், மண்டராயன், மண்கொண்டான், மங்கொண்டான், மங்கண்டான்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மண்டலன். மண்டலக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். மண்டளி என்னும் தேவார சிவதலத்தையும் மண்கொண்டான் என்னும் ஊரையும் உண்டு பண்ணி அரசாண்டவன். இவன் பெயர் மண்டலராயன், மண்கொண்டான் என்வும் வழங்கழாயிற்று. இவன் மரபினர் மண்டலராயன், மண்டராயன், மண்கொண்டான், மங்கொண்டான், மங்கண்டான்எனும் பட்டங்களை சுமந்தனர்.
மலைராயன், மலையரான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மலையன் சக்ரவர்த்தி. திருமலைராயன் பட்டினம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். மலையரையன், மலைராயன்,வரைராயன்,வரையன்,வரையரையன், வெற்பரையன்,பொருப்பரையன், இமவான், வெற்பரசு, கல்லரையன் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப் பட்டவன். பார்வதிதேவியை மகளாக பெற்று சிவபெருமானுக்கு தேவார சிவதலமாகிய திருமணஞ்சேரியில் திருமணம் செய்து கொடுத்தவன் என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரமும், திருநாவுக்கரசுநாயனார் தேவாரமும், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரமும், மணிக்கவாசக சுவாமிகள் திருவாசகமும் கூறுகின்றன. மலைமங்கலம், மலைக்குடி, மலைப்பட்டி, மலையன்குத்து, மலையனூர் என்னுமூர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தான். இவன் மரபினர் மலைராயன், மலையரான் எனும் பட்டங்களை கொண்டனர்
மல்லிகொண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மல்லியன். மல்லிப்பட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மல்லிகொண்டான் எனவும் வழங்கப்பட்டது. மல்லியம் எனும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் மல்லிகொண்டான் எனும் பட்டம் பெற்றனர்.
மருங்கராயன், பருங்கைராயன், கைராயன்.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மருங்கமன். மருங்காபுரி நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மருங்கராயன் எனவும் வழங்கப்பட்டது. மருதூர், மருகல், மருத்துவக்குடி என்னும் தேவார சிவதலங்களையும், மருதவனம், மருதங்குடி, மருதங்காவளி, மருதம்பட்டி, மருவூர், மருங்கூர், மருங்குப்பள்ளம் எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் மருங்கராயன், பருங்கைராயன், கைராயன்.எனும் பட்டங்களை பெற்றனர்.
மா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மாங்காடன், மாங்காட்டான்
மாந்தாதா சக்ரவர்த்தி, புறஞ்சயன் மகன், மாங்கோட்டை (மாங்காடு) எனும் ஊரை ஒருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மானும், புலியும் ஒரு துறையில் நீர் அருந்தும்படி செங்கோல் சிறக்க ஆட்சி புரிந்தவன். மாவூர், மாகுடி, மாம்பட்டி, மாங்குடி எனும் ஊர்களையும் உருவாக்கியவன்.இவன் மரபு வழி வந்தோர் மாங்காட்டான் என்ற பட்டம் பெற்றனர் (கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியம்)
மாவாண்டான்
மாவாளன்
மாவாளி
மாவாட்சி
மாப்பிரியன்
மாம்பழத்தான்
மாவுடையான்
மாகொண்டான்
மாநாடன்
மாலையிட்டான்
மாதரயன், மாதுராயன், மாத்துராயன், மாதயன்,மாதயாண்டான், மாதவராயன், மாத்துராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மாதையன். மாதையபட்டினம் என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மாதராயன், மாதயாண்டான் எனவும் வழங்கும். மாத்தூர் என்னும் தேவார சிவதலத்தையும், மாதூர் என்னும் மாடக்கோயில் சிவதலத்தையும், மாதரையன் புதுக்கோட்டை என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் மாதரயன், மாதுராயன், மாத்துராயன், மாதயன்,மாதயாண்டான்.என்னும் பட்டங்களை கொண்டனர்.
மாந்தையரையன், மாந்தரையன், மாந்தராயன். மாந்தையாளி, மாந்தைப்பிரியன், மாந்தையுண்டான், மாந்தைகொண்டான்
மாந்தைசோழன், மாந்தை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மாந்தைகொண்டான், மாந்தையரையன், மாந்தையாண்டான், மாந்தைப்பிரியன், மாந்தையுண்டான், மாந்தையாளி எனவும் வழங்கும். கீழைமாந்துறை, மேழைமாந்துறை என்னும் தேவார சிவ தலங்களையும், மாந்துறை என்னும் சிவ தலத்தையும், மாந்தைகுடி என்னும் ஊரையுமுருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் மாந்தையரையன், மாந்தரையன், மாந்தராயன் மாந்தையாளி, மாந்தைப்பிரியன், மாந்தையுண்டான், மாந்தைகொண்டான் என்னும் பட்டங்களை பெற்றனர்
மாவெற்றி
மாவெட்டி
மாவலி
மாளிகைசுற்றி
மாளிகைசுத்தி
மான்சுத்தி
மாலையிட்டான்
மானங்காத்தான்,மானத்தரையன், மானமுத்திரையன், மானம்விழுங்கி, மானமுழுங்கி.
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மானங்காத்தமன். பெண்மானத்தை காத்தவன். மானகாத்தான் கோட்டம், மானலூர், மானூர் முதலிய ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மானங்காத்தான், மானத்தரையன், மானமுத்திரையன், மானம்விழுங்கி, மானமுழுங்கி.எனும் பட்டங்களை சுமந்தனர்.
மால்
மி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மின்கொண்டான், மின்னாளி
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மின்னொளிமன். மின்னொளிக்கோட்டை (மின்னாளிக்கோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் மின்கொண்டான், மின்னாளி எனவும் வழங்கும். மின்னூர், மின்னாத்தூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் மின்கொண்டான், மின்னாளி எனும் பட்டங்களை கொண்டனர்.
மு வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
முனையரையன்
முனைதரையன்
முனையதரையன்
முனைதிரியன்
முனைகொண்டான்
முண்டான்
முனையாளி
முனுக்காட்டி
முடியைக்கொண்டான்
முதலி
மூ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மூவரையன்
மூரியன்
மூங்கிலியன்
மே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மேனாடன், மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மொட்டத்தேவன், மேனாடன், மெனக்கடன், மேல்கொண்டான், மேற்கொண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் மேலைமன். மேலைக்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மேனாடன், மேல்கொண்டான்.எனவும் வழங்கப்பட்டது. மேனாங்குடி, மேல்கொண்டவெளி, மேலைவாயில், மேலைநத்தம் என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தோர் மேனாட்டரையன், மேனாட்டுராயன், மேனாட்டுத்தேவன், மொட்டத்தேவன், மேனாடன், மெனக்கடன், மேல்கொண்டான், மேற்கொண்டான். என்னும் பட்டங்கள் பெற்றனர்.
மெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மெனக்கடன்
மொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
மொட்டத்தேவன்
வ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வயிராயன்
வயிரவன்
வங்கன், வங்கணன், வங்கராயன், அங்கராயன், அங்கரான், வங்கத்தரையன், வங்காரமுத்தரையன், வங்காரமுத்திரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வங்காரமன். வங்கநகர் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வங்கன், வங்கராயன், வங்கத்தரையன் என்வும் வழங்கப்பட்டது. அதிகமான பொன்னையுடையவன் என்றும் வழங்கப்பட்டான். வங்கத்தான்குடி, வங்கமங்கலம், வங்காரம்பேட்டை, வங்காரம் பேரையூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வங்கன், வங்கணன், வங்கராயன், அங்கராயன், அங்கரான், வங்கத்தரையன், வங்காரமுத்தரையன், வங்காரமுத்திரியன் எனும் பட்டங்களை கொண்டனர்.
வண்டன், வண்டயன், வாண்டயன், வாண்டையான், வண்டதேவன், வண்டப்பிரியன், வாண்டப்பிரியன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வண்டமன். வண்டைநகரம் என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன் எனவும் வழங்கப்பட்டது. வண்டூர், வண்டக்குடி, வண்டமங்கலம், வண்டுவாஞ்சேரி, வண்டலூர், வண்டைக்காடு என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வண்டன், வண்டயன், வாண்டயன், வண்டதேவன், வண்டப்பிரியன், வாண்டப்பிரியன்.என்ற பட்டங்களை பெற்றனர். இப்பட்டமுடையோர் வாண்டையார் குடியிருப்பு, கீரனூர், மேலக்கரும் பிரான்கோட்டை, ஆற்றங்கரைப்பட்டி (புதுக்கோட்டை) வாண்டையாரிருப்பு (தஞ்சாவூர்) கண்ணுகுடி, மேல உழுவூர், புதுப்பட்டி, பட்டுக்கோட்டை, மேடைக்கொல்லை, கறம்பயம், மன்னார்குடி, பஞ்சவாடி, குன்னூர், இடையூர், அரிச்சயபுரம், மறவாக்காடு, செம்பியன்மாதேவி, சாந்தமாணிக்கம், சோலைக்குளம், பைங்காநாடு, காரக்கோட்டை, பேரையூர், பெருகவாழ்ந்தான், திருக்களர், திருமங்கலக்கோட்டை, பாபநாசம், பூண்டி,கோனூர், திருபுவனம், வலங்கைமான், சின்னகரம், சாத்தனூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.
வடுகராயன், வடுராயன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வடுகமன். வடுகூர் என்னும் தேவார சிவதல நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் வடுராயன் எனவும் வழங்கப்பட்டது. வடுகக்குடி, வடுகச்சேரி, வடுகத்தெருமேடு, வடுகமங்கலம் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வடுகராயன், வடுராயன்.என்ற பட்டங்களை பெற்றனர்.
வளவன், வளம்பன்,
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் வளவசோழன். வளவனாறு என்னும் சிற்றாற்றையும், வளவனூர், வளவநல்லூர், வளவன்பட்டி, வளத்தாமங்கலம், என்னுமூர்களை உருவாக்கி அரசாண்டவன். இவன் கால முதல் சோழர்களுக்கு வளவன் என்னும் பெயரும் சோழநாட்டிற்கு வளநாடு என்றும் பெயர் வழங்கலாயிற்று. இவன் மரபினர் வளவன், வளம்பன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வன்னியன், வன்னிகொண்டான், வன்னிமுண்டான்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வன்னிமன். வன்னி என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வன்னியூர், புகலூர் என்னும் தேவார சிவதலங்களையும், வன்னிமங்கலம், வன்னிகுடி, வன்னிபட்டு, வன்னியன்குடிகாடு, வன்னிப்பட்டி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் வழி வந்தோர் வன்னியன், வன்னிகொண்டான், வன்னிமுண்டான் என்னும் பட்டங்களை கொண்டனர்.
வல்லத்தரையன், வல்லாளதேவன், வல்லமாண்டான், வல்லாண்டான், வல்லாளி, வல்லாடி, வல்லடி, வல்லண்டான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வல்லபன். வல்லம் என்னும் தேவார சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வல்லத்தரையன், வல்லமாண்டான், வல்லாளதேவன், வல்லாளி எனவும் அழைக்கப்பட்டது. வல்லூர், வல்லம்பாடு, வல்லம்படுகை என்னுமூர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் வல்லத்தரையன், வல்லாளதேவன், வல்லமாண்டான், வல்லாண்டான், வல்லாளி, வல்லாடி, வல்லடி எனும் பட்டங்களை பெற்றனர்.
வம்பாள
வழுவாளி, வழுவாடி.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வழுவைமன். வழுவூர் என்னும் தேவாரம் பாடப்பட்ட சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வழுத்தூர் என்னும் ஊரையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வழுவாளி, வழுவாடி எனும் பட்டங்களை கொண்டனர்
வா வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வாளமரன்
வாள்ராயன்
வாளுடையான்
வாளாண்டான்
வாளாளன்
வாளாளி
வாளாட்சி
வாட்பிரியன்
வாட்கொண்டான்
வாளால்வெட்டி, வாள்வெட்டி
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் வாளமரன், வாளமரன்கோட்டை என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வாட் போரில் சிறந்தவன், மிகுந்த வீரமுடையவன். இவன் பெயர் வாளால்வெட்டி எனவும் புகழ் பெற்றது. வாட்போக்கி, வாள் கொளிபுத்தூர் என்னும் தேவாரம் பெற்ற தலங்களையும், வாள்மங்கலம், வாளையங்கண்ணி என்ற ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
வாவுடையன், வாயாண்டான், வாயாளன், வாயாட்சி, வாப்பிரியன், வாப்பிலியன், வாயாளி, வாயாடி
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாமன். வாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டு பண்ணி இராசதானியாகக் கொண்டவன். இவன் வாகொண்டான், வாயாண்டான், வாப்பிரியன், வாயாளி என்னும் பெயர்களிளும் அழைக்கப்பட்டான். இவன் மரபு வம்சத்தினர் வாப்பிரியன், வாப்பிலியன், வாயாளி, வாயாடி என்ற பட்டங்களை பெற்றனர்
வாண்டையான்
வாண்டாப்பிரியன்
வாஞ்சிராயன், வஞ்சிராயன், விஞ்சிராயன், விஞ்சிரான், விஞ்சைராயன்
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் வாஞ்சிசோழன். வாஞ்சியம் என்ற தேவார சிவதலநகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன்பெயர் வாஞ்சிராயன் எனவும் வழங்கலாயிறு. வாஞ்சியாறு என்ற சிற்றாற்றையும், வாஞ்சியூர், வாஞ்சிகுடி, வாஞ்சிமங்கலம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். வீரத்திலும், விவேகத்திலும்,வேகத்திலும் மன்னையும் வின்னையும் மிஞ்சியவன் என்று புகழப்பட்டவன். இவன் மரபோர் வாஞ்சிராயன், வஞ்சிராயன், விஞ்சிராயன், விஞ்சிரான், விஞ்சைராயன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வாட்டாட்சி, வாட்டாச்சி, வட்சி, வாச்சான்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாட்டமன். வாட்டாட்சிகோட்டை (வாவாசி) என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வாட்டாட்சி எனவும் வழங்கும். வாட்டாகுடி,வாட்டார் என்னும் பல ஊர்களையும் உருவாக்கியரசு புரிந்தான். இவன் மரபினர் மேற் கூரிய வாட்டாட்சி,வாட்டாச்சி,வட்சி, வாச்சான் என்னும் பட்டங்களை கொண்டனர்.
வாணரையன், வாணதரையன், வாணதிரியன், வீணதிரியன், வீணதரையன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வாணன். வாணரையன் பட்டினம் (வாணதரையன் பட்டினம்) வாணன்பாடி (வாணியன்பாடி) என்னும் நகரங்களை உண்டு பண்ணி இராசதானிகளாகக் கொண்டவன். இவன் பெயர் வாணராயன்,வாணரையன் எனவும் வழங்கும். வாணாதரை என்னும் சிவதலத்தையும், வாணதரையன் குடிக்காடு என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வழி வந்தேர் வாணரையன், வாணதரையன், வாணதிரியன், வீணதிரியன், வீணதரையன் என்னும் பட்டங்கள் பெற்றனர்.
வாலிராயன், வாலியன்,
வாலிசோழன், வாலிகொண்டபுரம் என்னும் சிவதல நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் குரக்கரையன், குரக்கிராயன், வாலிராயன், வாலிகொண்டான், வாலியாண்டான், வாலிப்பிரியன், வாலியுடையவன், வாலியாளி எனவும் வழங்கலாயிற்று. குரங்காடுதுறை, குரக்குக்கா, குரங்கணின்முட்டம் என்னும் தேவார சிவ தலங்களையும், வாலீச்சரம் என்னும் சிவ தலத்தையும், வாலிப்பட்டி, வாலியுடை, வாலிகுடி (லாலிகுடி) என்னுமூர்களையும் உருவாக்கி அரசு புரிந்தவன் இவன் மரபினர் வாலிராயன், வாலியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வி வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
விசலன், விசலராயன், விசலுடையான், விசலாளன், விசலாட்சி, விசலப்பிரியன்,
விசலுண்டான், விசல்நாடன், விசல்தேவன், விசல்கொண்டான், விசலுண்டான், விசலாண்டான், விசலண்டான், பிசலண்டான், பிசலுண்டான், வீசண்டான், விசலாளி, விச்சாடி
முசுகுந்தன் மரபில் வந்த மன்னன் விசலமன், விசலூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் விசலாண்டான், விசல்கொண்டான், விசலாளி என்றும் அழைக்கப்பட்டான். இவன் மரபினர் மேற்கூரிய பட்டங்களை பெற்றனர்.
விசயராயன், விசுவராயன், விசயதேவன், விசாதேவன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விசயன். விசயபுரம் என்னும்நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் விசயராயன், விசயதேவன் எனவும் வழங்கும். விசயமங்கை என்னும் தேவார சிவதலத்தையும், விசயமங்கலம் எனும் சிவதலத்தையும், விசயநகரம் என்ற பட்டினத்தையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் வம்சத்தினர் விசயராயன், விசுவராயன், விசயதேவன், விசாதேவன் என்ற பட்டங்களை பெற்றனர். முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் இந்துமாக் கடலில் இருந்த ஸ்ரீவிசயம் (இன்றைய சுமத்திரா) என்ற நாட்டை சோழ கடல் படையினர் வெற்றி கண்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்து சோழ மண்டலத்துடன் இனைத்துக் கொண்டனர். இந்த வெற்றிக்கு பலம் சேர்தவர்கள் என்ற பெருமை விசயராயன், விசயதேவனென்ற பட்டம் சுமந்தோராவர். எனவே இப்பட்டங்கள் ஸ்ரீவிசய வெற்றியோடு தொடர்புடையதாகவும் உள்ளது. இப்பட்டமுடைய கள்ளர் இன மக்கள் பஞ்சந்திக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, விளார், வலங்கைமான், முனியூர், அவளிநல்லூர், மன்னார்குடி, சேரங்குளம், புதுக்கோட்டை மாவட்ட திருக்களம்பூர், வாண்டாக்கோட்டை முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர். இப்பட்டங்கள் விசுவராயர், விஜயதேவர் என்றும் திரிந்துள்ளது
விளப்பன், விற்பனன்
பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் விளப்பசோழன். விளநகர் என்னும் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். விளப்பாறு என்னும் ஆற்றையும், விளமர், விளத்தூர், விளத்தொட்டி என்னும் தேவார சிவதலங்களையும், விளக்குடி, விளாங்குடி, விளார்,விளாங்குளம், விளமங்கலம் என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தவன். இவன் மரபினர் விளப்பன், விற்பனன் என்னும் பட்டங்களை கொண்டனர்.
விக்கிரமத்தான்
விக்கிரமத்தரையன்
விருதராசபயங்கரன்
விருதலான்
வில்லவராயன், வில்வராயன், வில்லன்.
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விலிமன். விற்குடி, விற்கோலம் என்னும் தேவார சிவதல நகரங்களையும் உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வில்லியனூர், வில்லிபாக்கம், வில்லிமங்கலம், விலியநல்லூர் என்னும் ஊர்களையுமுருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் வில்லவராயன், வில்வராயன், வில்லன்.எனும் பட்டங்களை கொண்டனர்.
விஞ்சிராயன்
விட்டுணன், விற்பனன்
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் விட்டுணுமன். விட்டுணுபுரம் என்னும் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். மாற்பேறு தேவார சிவதல நகரத்தையும், விட்டுணம்பேட்டை என்னும் ஊரை உருவாக்கி அரசாண்டவன்.இவன் மரபினர் விட்டுணன், விற்பனன் எனும் பட்டங்களை கொண்டனர்.
வீ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வீணாதரையன்
வீணாதிரியன்
வீரங்கொண்டான், வீரமுண்டான், வீரப்பிரியன், வீரப்பிலியன்,
செம்பிய சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வீரபோகன். வீரையன்கோட்டை என்னும் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வீரங்கொண்டான், வீரப்பிரியன் எனவும் வழங்கும். வீரபோகம் என்னும் தேவார சிவதலத்தையும் வீரபுரம், வீரமங்கலம், வீரனூர், வீரக்குடி, வீரக்குரிச்சி, வீராக்கி, வீரப்பட்டி, வீரமாங்குடி என்னும் ஊர்களையும் உருவாக்கி அரசாண்டவன். இவன் மரபோர் வீரங்கொண்டான், வீரமுண்டான், வீரப்பிரியன், வீரப்பிலியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வீசண்டான்
வை வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வைகைராயன், வயிராயன், வயிரவன்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வைகைமன். வைகாவூர் நகரை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வைகல் என்னும் தேவார சிவதலத்தையும் வைகளத்தூர், வைகைச்சேரி, வைகம்பட்டி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் வைகைராயன், வயிராயன், வயிரவன் எனும் பட்டங்களை பெற்றனர்.
வெ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வெள்ளங்கொண்டான்
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் நீலசோழன். வெள்ளம் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வெள்ளைராயன், வெள்ளப்பிரியன், வெள்ளாண்டான், வெள்ளுடையான், வெள்ளங்கொண்டான், வெள்ளரையன், வெள்ளாளி எனவும் வழங்கும். வெள்ளாம் பிரம்பூர் என்னும் சிவதலத்தையும்,வெள்ளைக்குடி,வெள்ளுகுடி, வெள்ளூர், வெள்ளங்கால், வெள்ளமங்கலமென்னும் ஊர்களையும், நீவாநதி என்னும் ஆற்றையும், வடவெள்ளாற்றையும், தென்வெள்ளாற்றையும், வெள்ளையாறு(வள்ளையாறு) என்னும் சிற்றாற்றையும் உருவாக்கி அரசுபுரிந்தான். இவன் மரபினர் வெள்ளங்கொண்டான் என்ற பட்டம் கொண்டனர்.
வெட்டுவராயன், வெட்டுவன், வெட்டுவான்.
பாம்பசோழன் மரபில் வந்த மன்னன் வெட்டுவசோழன். வெட்டுவகோட்டை என்ற நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் வெட்டுவராயன், வெட்டுவாகொண்டான், வெட்டுவாண்டான், வெட்டுவாப்பிரியன், வெட்டுவாளி எனவும் வழங்கப்பட்டது. வெட்டாறு என்னும் பேராற்றை வெண்ணியாறின் ஒரு கிளையாக தென்பிரம்பூருக்கருகில் பிரித்து வேதகுடிக்கருகில் முள்ளியாற்றில் சேர்த்து கொரடாச்சேரிக்க்ருகில் கிழக்கே திருப்பி நாகூருக்கருகில் கடலில் சேர்தவன்.
( வெட்டாற்றை முள்ளியாறு என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 896ம் பாடல் கூறுகிறது.) பூந்துருத்திக்கும் வேதிகுடிக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபமும், கொரடாச்சேரிக்கும் வெண்ணிவாயிலுக்குமிடையிலிருந்த முள்ளியாற்றின் சொரூபமும் மறைந்து போயின. இவன் மரபோர் வெட்டுவராயன், வெட்டுவன், வெட்டுவான் என்னும் பட்டங்களை பெற்றனர்.
வெண்டன், வெண்டான், வென்றான்,
வெண்டசோழன்,வெண்டாக்கோட்டை என்னும் நகரத்தை உண்டுபண்ணி இராசதானியாக கொண்டவன். இவன் பெயர் வெண்டன் எனவும்வழங்கும். வெண்காடு, வெண்டுறை, வெண்பாக்கம் எனும் தேவார சிவ தலங்களையும், உருவாக்கி அரசாண்டவன். போர்கலம் புகுந்து வெற்றி வாகை சூடிய இவன் மரபோர் வெண்டன், வெண்டான், வென்றானெனும் பட்டங்களை பெற்றனர்.
வே வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வேள், வேள்ராயன், வேளூரன், வேளூரான், வேளூடையான், வேளூடையன்,
மாந்தாதா மரபு வழி வந்த மன்னன் வேள், பெருவேளூர் எனும் தேவாரம் பாடப்பெற்ற சிவதல நகரை உண்டாக்கி இராசதானியாகக் கொண்டவன். மருத நில மக்களுக்கு வேளாளர் எனும் பட்டத்தை வழங்கியவன். இதனால் இவன் வேளூரன், வேளூடையான் என்றும் அழைக்கப்பட்டான். வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) கீழ்வேளூர், வேட்களம், வேள்விக்குடி, வேளாங்கண்ணி போன்ற நகரங்களையும் உருவாக்கியவன்.இவன் மரபு வழி வந்தவர்கள் மேற் கூரிய பட்டங்களை பெற்றனர்.
வேளாண்டான், வேளாளன், வேளாளி, வேளாட்சி, வேட்பிரியன், வேட்கொண்டான்
வேணாடன். வேலாளி, வேல்ராயன், வேலாண்டான், வேற்கொண்டான், வேற்பிரியன்,
செம்பியன் சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வேலமன். வேலூர் என்னும் திருப்புகழ் பெற்ற முருகதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். வேற்காடு எனும் தேவார சிவதல நகரையும், வேலங்குடி, வேலங்காடு, வேற்குடி எனும் ஊர்களையும் உண்டாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் வழி வந்தவர்கள் வேலாளி, வேல்ராயன், வேலாண்டான், வேற்கொண்டான், வேற்பிரியன் என்ற பட்டங்களை பெற்றனர்.
வேங்கைராயன், வேங்கிராயன், வேங்கைகொண்டான், உழுவாண்டான், உழுவண்டான்
நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் வேங்கைமன். வேங்கை (உழுவூர்) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் வேங்கைராயன், உழுவாண்டான் எனும் பெயர்களிலும் அழைக்கப்பட்டான். வேங்கூர் என்னும் தேவார சிவதல நகரையும், உழுவூர், உழுமங்கலம், உழுந்தூர்பேட்டை என்ற நகர்களையும் உருவாக்கி அரசுபுரிந்தான்.இவன் மரபு வழி வந்தவர்கள் வேங்கைராயன், வேங்கிராயன், வேங்கைகொண்டான், உழுவாண்டான், உழுவண்டான் எனும் பட்டங்களை பெற்றனர்.
வேணுடையன்
பிரமன் மன்னன் மரபில் வந்த மன்னன் வேணு. இவன் காலம் முதல் பிரமபுரம் வேணுபுர என வழங்கலாயிற்று. இவன் பெயர் வேணுடையன் எனவும் வழங்கும். இவன் மரபினர் வேணுடையன் எனும் பட்டம் கொண்டனர்.
வேம்பன்
வொ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்
வோ வரிசையில் கள்ளர் குல பட்டங்கள்